கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
ஊனுடலை விட்டு உயிர் பிரிந்தாலும், - தமிழர் உணர்வெல்லாம் நிறைந்தோரே! மாவீரரே...!! பேரினவாதம் எனும் கொடிய மிருகம் ஒன்று கர்ச்சிக்கும் பலமாக தமிழர் உரிமைகளைக் கொன்று. தமிழர் தம் துயரத்தை துடைத்திட வேண்டும் என்று, கிளம்பிய வீரர்கள் நீங்கள் தியாக தீபங்கள் அன்றோ! அன்னையின் அரவணைப்பு, தந்தையரின் ஆதரவு, உடன் பிறந்து உறவாடிய சகோதரரின் பாசம், வாழ்வில் உயர்ச்சிகாண நீர் தொடர்ந்த கல்வி, இத்தனையும் துறந்திட்டீர்; வீரவேங்கைகளாய் புறப்படீர். தாய்மண்ணின் மீட்பிற்காய் உம் உயிரையும் ஈந்துவிட்டீர். மாவீரரே..! ஈழத்தமிழர் வீரத்தின் சின்னங்களே...! நிகரற்ற தியாகிகளே...! உமை என்றும் நினைவு கூர்வோம். ஈழத்தமிழர் விடுதலைக்காய் நீர் வீறுடன் செய்த பயணம், உம் வழிவந்…
-
- 1 reply
- 722 views
-
-
1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உயிர்த்தெழுந்த நாட்கள் -வ.ஐ.ச.ஜெயபாலன் அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம் துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல. மீண்டும் காற்றில் மண் வ…
-
- 2 replies
- 722 views
-
-
அம்மாவுக்கு வயசாகிவிட்டது மறதியும் வந்துவிட்டது ஆனால் அவள் நான் எப்ப போனாலும் சாப்பிட்டியா என்று கேட்கவும் பின் போகும் போது பத்திரம் பார்த்து போ என்று சொல்வதையும் ஏன் இன்னும் மறக்காமல் இருக்கிறாள் என்பது மட்டும் தெரியவில்லை. பா.உதயன்
-
- 5 replies
- 722 views
-
-
[size=3] நாட்கள் வாரங்களாய் மாதங்கள் வருடங்களாய் கடந்து கொண்டு இருக்கிறது[/size] [size=3] அறிவியல் யுகத்தில் மனிதனின் சாம்ராஜ்ஜியம் கணினியும் செல்போனும் சட்டைப் பையில் சங்கமிக்கின்றன பெண்களை பற்றிய மதிப்பீடுகளோ குப்பைத் தொட்டியில்[/size][size=3] [/size][size=3] கணவன் சின்ன வீட்டிற்கு சென்ற போது கண்டுகொள்ளாத கண்ணகி பரத்தையர் வீட்டிற்கு கணவனைத் தூக்கி சென்ற நளாயினி நெருப்பில் குதித்து- கற்பை நிலை நிறுத்திய சீதாப்பிராட்டி இவர்கள் தான் பெண் குலத்துக்கு தெய்வங்களாம். சீச்சீ….வெட்கக்கேடு[/size][size=3] வாருங்கள் ஆண்களே அன்பைப் பகிர்ந்து கொள்வோம் புதியதோர் உலகம் செய்ய இருவரும் இணைந்தே செயல்படுவோம் இதில் ஏது ஏற்றத்தாழ்வு?[/s…
-
- 0 replies
- 722 views
-
-
நாள்கள் நெருங்கிறது .. நினைவெல்லாம் நாட்டை நோக்கி .. சிறகுகள் இருந்தும் பறக்க முடியா .. பறவைகள் எல்லாம் கூட்டில் .. அமைதியா வேடிக்கை பார்க்கிறது .. தன் எஞ்சிய குஞ்சுகளை காப்பதா ... இல்லை இழந்த குஞ்சுக்கு ஒளி ஏற்றவா .. சிறகுடைந்த குஞ்சுக்கு உணவு தேடவா .. என்ன செய்வேன் சிறு கூட்டில் நான் ... உணவு தேடி போன என்னவன் வரும்வரை .. கொஞ்சம் கீச்சிட்டாலும் பக்கத்தில் உள்ளவர் ... கூண்டோடு பிடிங்கி எறிவர் அல்லவா ... எனக்கு ஏது நிரந்தர கூடு இவ்மண்ணில் .. பாலையில் ...வீரையில் ..பனையில் என்று ... மாறி மாறி தங்கிய களைப்பு இன்னும் போகவில்லை .. மீண்டும் ஒரு கூடு பின்னும் எண்ண இல்லை .. இருக்கும் கூண்டில் இருப்பவரை வளர்த்து விட்டால் .. தனிமரத்தில் நான் மட்டும் உற…
-
- 0 replies
- 722 views
-
-
எங்கள் அன்னை மண்ணை மீட்க ஆயுதம் ஏந்தி மரணித்த நீங்கள், கல்லறை தெய்வங்களாய் எம் தேசமெங்கும் காவல் காத்தீர்கள். மரணித்த உங்களைக்கூட மன்னிக்க தெரியாத மானங்கெட்ட சிங்கள காடையர்கள் எங்கள் காவல் தெய்வங்களின் கல்லறைகளை அழித்து உங்களையும் வென்றுவிட்டதாக எண்ணி மார்தட்டிக்கொள்கின்றார்கள். மானங்கெட்ட சிங்களவன், யார் இந்த சிங்களவன்? கல்லறைகளைக்கூட மன்னிக்க தெரியாத இவர்கள் புத்தர் வழி வந்த புண்ணியர்களா? யார் அந்த புத்தன்? இவனும் ஒரு அரக்கர்கூட்ட தலைவனா? அல்லது நல்வழி காட்டிய நல்லவனா? விடை தெரியாமல் பாவப்பட்ட தமிழர் நாம் இன்று இவர்கள் பிடியில். இவர்களுக்கு உங்கள் கல்லறைகளை மட்டும் தான் அழிக்க முடியும். எங்கள் இதய அறைகளில் இருந்து உங்கள் நினைவுகளை ஒரு துரும்ப…
-
- 0 replies
- 721 views
-
-
மணலிலும் காற்றிலும் கடலிலும் ஒன்றாக சங்கமித்து இன்றும் விடுதலைக்காக காத்திருப்பவர்கள் எங்கள் மாவீரர்கள் விடுதலைக்காக போராடியவர்கள் இன்று விடுதலைக்காக காத்திருப்பதை சிந்திக்காமல் அவர் நினைவு கொண்டாடுவதில் பிரித்து போராடுபவர்களை நினைத்தால் என் நெஞ்சு வெடிக்கிறது நீங்கள் எழுங்கள் ஏனெனில் உங்கள் நினைவுகள் கொண்டாடுவதில் போட்டீ போட்டு உங்கள் நினைவுகளை அழிப்பவர்கள் ஏன் உங்கள் இலடச்சியங்களை சிதைக்காமல் இருப்பார்களா! ஆகையினால் எழுந்து விரைவாக வாருங்கள் உங்கள் நினைவு தினத்தை வைத்து சொத்து சேர்ப்போரும் ஒரு தொகுதியினர் இன்னொரு தொகுதியினர் பணத்திற்க்காக உங்கள் நினைவுகளை சிதைப்பவர்களும் அதுதான் அவர்கள் நோக்கமெனில் கைவிடுங்கள் நிலையற்ற வெறும் மாயைக்கு…
-
- 1 reply
- 721 views
-
-
பாடலற்ற நிலம் .. நாங்கள் கனவழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் வாழ்வு அழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் நாடழிக்கப்பட்ட மக்கள் இப்பொழுது நாங்கள் கொடியும் பாடலும் அற்ற மக்கள். எங்களுக்கு ஒரு கனவு இருந்தது எங்களுக்கு ஒரு வாழ்வு இருந்தது எங்களுக்கு ஒரு நாடு இருந்தது அப்பொழுது எங்களுக்கு ஒரு கொடியும் பாடலும் இருந்தது. இன்று எங்கள் நகரத்தில் அந்நியக் கொடி பறக்கிறது எங்கள் நிலத்தில் அந்நியப் பாடல் ஒலிக்கிறது அன்று எங்கள் நகரத்தில் எங்கள் கொடிகள் பறந்தன எங்கள் நிலத்தில் எங்கள் பாடல் ஒலித்தது. அன்று எங்களுக்கு காவல் இருந்தது இன்று நாங்கள் காவல் இழந்திருக்கிறோம் அன்று எங்களுக்கொரு தலைவன் இருந்தான் இன்று எங்களுக்கு யாருமில்லை! தீபச்செல்வன் …
-
- 1 reply
- 721 views
-
-
உயிர்த்தெழுவோம் அள்ளி அணைத்து உறவெல்லாம் ஆரத்தழுவும் மெல்ல மலர்ந்து ஒரு முல்லை சிரிக்கும் சின்னக் குழந்தையாய் அதன் உள்ளம் இருக்கும் நல்ல தமிழாய் அதன் வார்த்தை இனிக்கும் வண்ணக் கனவுகள் நின்று நிறைக்கும் வார்த்தைக்கு வார்த்தை அண்ணனை கதைக்கும் அப்போது இன்னும் சில நிமிடமே இருக்கும் இனி சொல்ல வார்த்தையின்றி தவிக்கும் அப்போதும் அந்த முகம் சிரிக்கும் சின்னக் கை அசைத்து விடை பெறும் ஒரு வண்ணம் ஓவியமாய் உயிர்பெறும் நல்ல காவியமாய் தேசப்புயல் கடக்கும் ஆம் ஒரு கரும்புலி கந்தகம் சுமந்து நடக்கும் பெரும் பகை மோதி வெடி வெடிக்கும் ஒரு உன்னத மனிதன் உயிர் விட ஒரே உன்னத இ…
-
- 1 reply
- 721 views
-
-
எனக்கொரு தேசம் எடுத்திட வேண்டும். முடியாட்சி அதிகாரதில் முடங்கிய நான் குடியாட்சிக் காலத்தில் குதூகலமடைந்தேன் ஆதிக்க வெறியர் அதிகாரம் ஓங்க ஆளுமையிழந்து அவதிப்பட்டேன். நாடுகள் தோறும் புரட்சிகள் ஓங்க நானும் அங்கே மறுபிறவி எடுத்தேன் விடுதலை என்று நாமம் சூட்டி விருப்புடன் என்னை வளர்த்தனர் மக்கள். இலங்கைக்கு வந்த அன்னியர் பிடிக்க இழுபட்டுத் தவித்தேன் பல காலம் இனத்துவேசிகளிடம் அவர் விட்டுச் செல்ல இன்னல்கள் பட்டேன் சில காலம் சுயநலம் காத்து அரசியல் பேசியோர் சுதந்திரமென்று கோசமிட்டார்கள் தமிழீழம் என்று பெயரை வைத்து தரணியிலே அவர்தம் புகழ் சேர்த்தார். உணர்வுள்ள தொண்டர்கள் ஒருசிலர் சேர்ந்து உணர்ச்சியுடன் என்னைத் தத்தெடுத்தார்கள் த…
-
- 0 replies
- 721 views
-
-
அமைதியின் நிழல் மரணம் கொன்றடக்கப்படும் ஆயுதமாகும் பொழுது யார் யாரோ போராடத் தொடங்குகிறார்கள் சனங்கள் அமைதியின் நிழலை இப்பூமியில் என்றாவது ஒரு நாள் மீளவும் உருவாக்குவார்கள் இருள் கவிழந்த பொழுதில் இந்த வார்த்தைகளை எழுதி வைக்கிறேன் உனது போரைத் துடைத்து அதிகார நிழலை அடித்து விரட்டுகையில் இப்பூமியில் வெளிச்சம் படரும் இரத்தமும் காயமும் இல்லாத பூக்கள் பூத்துக் கொட்டும் அமைதியின் நிழலைப் பார்க்காது முடிக்கிறது இந்தக் காலம் அது எவ்வளவு அழகாயிருக்கும்? http://deebam.blogspot.in/2011/10/blog-post_05.html
-
- 4 replies
- 720 views
-
-
ஒற்றைப் பேச்சில் ஒடிந்தே போனான்..! இனத்துக்காய் வீழ்ந்தோரை தூற்ற நீ யார்..??! கேள்விகள் கேட்க யாருமற்ற நேரத்தில் அவனுக்குள் ஆயிரம் கேள்விகள்..! அகோரமாய் தேசத்தில் நடந்ததை தரிசித்தவனுக்கு... ஊமையாகித் துணை நின்று அழித்தவனின் செயல் பாராட்டி சாகடித்துப் பின்... மனித உயிர்க்கான உரிமைகள் தேடும் "உண்மையை"க் கண்டறிவோரின் வேடங்கள் அவனுக்குப் புரியவில்லை..! வெகுண்டு எழுந்தவன் வேதனையில் துடித்தான்...! தன்னின மக்களுக்காய் குண்டு சுமந்த மண்டேலாவுக்கு ஒரு நீதி..!!! "உலக அமைதிக்கென்று" பசப்பி உலகை அடிமையாக்க.. ஊரூராய் குண்டு போடும் ஒபாமாவுக்கு நோபல் பரிசு..! சொந்த மண்ணில் இன அழிப்பை தடுத்து நின்றவனுக்கு "பயங்கரவாதிப்" பட்டம்...! அந்தப் பட்டம் அவ…
-
- 5 replies
- 720 views
-
-
-
- 0 replies
- 720 views
-
-
-
- 0 replies
- 720 views
-
-
அங்கே மழை பெய்கிறது! எங்கோ ஒரு நிலத்தில் புதைக்கப்பட்ட பிணங்கள் புரண்டு படுக்கின்றன அப்பிணங்களைத் தீண்டுகிறது நிலத்தில் இறங்கிய மழையின் நீர்க்கால் ஒன்று புதையுடல்கள் துயில் கலைந்தனபோல் உடல் முறித்து எழ முயல்கின்றன அவற்றின் உதடுகளில் இன்னும் பதியப்படாத சொற்களும் உலக மனசாட்சியின் மீது வாள்செருகும் வினாக்களும் தொற்றியிருக்கின்றன தாம் சவமாகும் முன்பே புதைபட்டதைத் தம்மைக் கடந்திறங்கும் வேர்த்தளிர்களிடம் கூறியிருக்கின்றன அவை தாம் இறக்கவில்லை தலை பிளந்து கொல்லப்பட்டோம் என்பதை மண்புழுக்களிடம் தெரிவித்திருக்கின்றன மழைத்துளியிடம் எமது மைந்தர்கள் மீது இதே குளுமையுடனும் கருணையுடனும் பருவந்தவறாது பயின்றிடு என்று மன்றாடுகின்றன ! -- மகுடேசுவரன்
-
- 1 reply
- 720 views
-
-
Tribute to the profound personality who created Ariviyalnagar University Complex - தமிழை ஏந்திய திருமகனார் - தடங்களை வரிக்கும் பெருங்கவிதை! ******-*****-******-******-******-*****-****** தாயகத்துப் பயணத்திலே வழித்துணையாய் வாழ்ந்தவன் தலைமகனுக்கோர் அண்ணனாகி தனித்துவனாய் நின்றவன்!. கருத்தினிலே கண்ணியத்தை குருத்தினிலே கண்டதனால் உருத்துடனே உத்தமனின் உறவுமாகிக் கொண்டவன்! பெருத்தவோர் வங்கியை அழுத்தமாய் ஆண்டதால் பொருத்தமாய்ப் பொறுப்பினை விருத்தமாய்ப் பெற்றவன்! நிதித்துறை என்றவோர் நிகருயர் அலகினை மதிப்புடன் ஆண்டிடும் பொறுப்பினைப் பெற்றவன்!. இரண்டு பவுண் தங்கத்தினால் திரண்டு வந்த பங்களிப்பால் இருண்ட எங்கள் கிழக்கினுக்கோ…
-
- 0 replies
- 720 views
-
-
நான் ஆசையோடு வளர்த்து வரும் என் செல்லச் சேவல் அதிகாலையில் குhவிட பறவைகளின் இதமான இசை என்னை மெய் மறக்க வைக்க கண்களை இதமாக கசக்கிய படி முற்ரத்தில் அம்மா விளக்கு மாற்றினால் குhட்டிய அழகான அடையாளத்தில் கால் பதித்து கிணற்றடி மட்டும் போய் அருகில் நிற்கும் வேப்ப மரத்து குச்சி பிடுங்கி பல் துலக்கி பின் ஐpல் என்ற குளிர் நீரில் முகம் கழுவி வேலி ஓரத்தில் கொத்துக் கொத்தாக புhத்துக் குலுங்கி நிற்கும் நந்தியா வட்டை புhப் பறித்து இன்றய நாள் நல்ல நாளாக இருக்க கடவுளை வணங்கி தொழுவத்தில் கட்டி நிற்கும் பசுவில் அப்பா கறந்த பாலில் அம்மா அன்போடு தந்த சுடு சுடு தேனீரை குடித்து விட்டு என் சைக்கிளை எடுத்து என் கிராமத்து தெரு வெல்லாம் சுதந்திரமாக நான் ஓடி மகிழும் …
-
- 2 replies
- 720 views
-
-
நான் போட்ட உடுப்பு இடுப்பைத் தொடும் தலைமயிருடனும் அதில் , சின்னஞ் சிறு அலரிப் பூவுடனும் மிடியுடனும் புறொக்குடனும் இல்லாவிட்டால் , ஹாஃப் சாறிடனும் பஞ்ஞாபியுடனும் வளைய வந்த எனது பெண்களில் , நான் கொஞ்சம் வித்தியாசமானவள் !!!! நான் அணிந்த உடைகள் நான் விரும்பி அணிந்த உடைகள் !!!! இந்த உடைகள் என்னைப் போன்ற பல பெண்களின் அடிமை வாழ்வை உடைத்தெறியும் ....... அதில் , எனது நாடி நரம்பெலாம் ஓடி நிக்கும் எனது சொந்த மண்ணும் ஒருநாள் விடுதலை பெறும் ... அதுவரை , நித்திரை என் அகராதியில் இல்லை .... மைத்திரேயி 13 கார்த்திகை 2013
-
- 2 replies
- 720 views
-
-
அந்தோ பரிதாபம் ..! யப்பான்,சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, தென் கொரியா... இந்த நாடுகள் எல்லாம் என்ன செய்யப் போகின்றனர்..? மூன்றாம் உலகப் போர்..? அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது நண்பரே..? ஆனால் ஒன்று தெரியுமா.. உங்களுக்கு..? உலக பாட்டாளிகளின் முன்னணிப் படை இலங்கை தமிழர்கள் என்று..! உலகப் பாட்டாளிகள் வசம் இழப்பதற்கு ஏதுமில்லை.. ஆனால் ஈழத் தமிழர்கள் இழப்பதற்கு உயிரை மிகப் பத்திரமாக வைத்துள்ளார்கள். பாட்டாளிகளை மிஞ்சிய ஈழத் தமிழர்கள் ஒரு கேலிப் பொருளாக மாற்றப்பட்டு விட்டார்களோ..? ஒரு மூன்று ஆண்டு காலமாக சங்கிலிக்கருப்பு
-
- 0 replies
- 719 views
-
-
நீண்ட நெடு மரங்களிநூடு நிதானமாய் நடக்கிறேன் நான் மழைத்தூறல் முகம் நனைக்க மகிழ்வாக மழையில் நனைந்த நாள் மனதில் வருகிறது. மனதின் ஓரங்களில் என்றும் ஒட்டிக்கொண்டே இருக்கும் காய்ந்துபோன சிலதும் பழுப்பாகிக் கொண்டிருக்கும் சில நினைவுகளுடனும் கவலையும் மகிழ்வுமாய் மனம் பயணிக்கிறது காததூரம் வந்துவிட்டோம் மீண்டும் வர முடியாத அந்த நாட்களின் நினைவுகளுடன் மட்டுமாய் என்பது மனம் கனக்க மாற்ற முடியாததான நாட்களின் வலுவிழந்த இறந்த காலத்தின் வரிகள் மட்டுமே நினைவில் எல்லாமும் எப்போதும் என் நினைவில் இல்லை சிறுபராயத்து சிதிலமடைந்த நினைவுகளில் சில மட்டும் செருக்கடையா மனதின் சிலும்பல்களாய் வந்துபோக மீட்டல் செய்ய முடியாத மறந்து போனவைகளுக்காக வருந்த மட்டுமே முடிகிறது
-
- 6 replies
- 719 views
-
-
தியாக தீபமே தமிழ் மக்களுக்காய உண்ணாநோன்பிருந்து (15-09-1987 தொடக்கம் 26-09- ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதையை மீள்பிரசுரம் செய்கிறேன்.... தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில் தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில் அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும் ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும் ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான் ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன் கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான் தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால் மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன் இளைத்துமே சாய்ந்தனன் நல்லையூர் மண்ணிலே சுந்தரப் பெண்களைச் சுதந்திரப் பெண்களாய் கண்டிடும் பணியிலே…
-
- 5 replies
- 719 views
-
-
குருதியோடிச் சேறாகி வறண்டுபோய் வெடித்துக் கிடக்கிறது எங்களின் நிலம், முளைகருகிச் சருகாகி புல்பூண்டுகளும், மக்கி மண்னேறி மண்டையோடுகளும் இன்னபிற அவயத்துண்டுகளும் கறைபடிந்த துணிகளும் ஆங்காங்கே சிதைந்து கிடக்கின்றன, ஆந்தைகளும் ஆட்காட்டிகுருவிகளும் கூட இடம்தேடி எங்கோ போய்விட்டன, கடந்தவைகளை மறந்து அடங்கிக்கொண்டிருக்கிறது தேசம். தழுவல்களும் கண்ணீரும் ஒப்பாரிகளும்-என் சிறுதேசத்தில் மாற்றங்களை நிகழ்த்த முயன்று தோற்றுப்போகின்றன, இழவு முடிந்த எங்களின் வீட்டு சுவர்களிலும் தூண்களிலும் தங்களின் கழிவுகளை கொட்டிவிடும் வன்மத்தோடுதான் வாசல்களில் மேடை போடுகிறார்கள் கௌதம புத்தரின் வழிப்பிள்ளைகள். அவர்களுக்காக, சாம்பல் மேடுகள்மீது செங்கம்பளம் விரித்து சாமரையோடு காத்திருக்கிறார்கள்…
-
- 5 replies
- 719 views
-
-
ஈகத்தின் சுடரே! மக்களுக்காக எரிதனலேந்தி மண்ணிலே சாய்ந்த மைந்தனே முருகா துன்பமே சூழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வினை மாற்ற தீயினைச் சூடிப் போரினைத் தொடுத்து பொன்னெழுத்துகள் சூடி மண்ணிலே சாய்ந்தாய்! தாய் மண்ணிலே இன்றும் துன்பங்கள் சூழத் துயரங்கள் ஆளத் துடிக்கிறார் மக்கள் வடிக்கிறார் உதிரம் உதிரத்தால் உறைந்த உயிரெனும் தாய்நிலம் அடிமையாய் இன்னும் அழிகின்ற நிலையாய் தொடர்வதும் ஏனோ! ஈகங்களாலே ஈன்ற எம் தேசம் வேடங்களாலே வேற்றவராள மாற்றான் போன்று மகுடிக்கு ஆடும் பாம்புகளான தலைமைகளாலே விடையென்று வருமென்று வானகம் இருந்தே முருகதாசனோ தவிக்கின்றான்! ஈகத்தின் சுடரே தலைகுனிகிறோம் தம்பி அங்கிங்கொன்றாய் எழுகின்ற தமிழனம் …
-
- 1 reply
- 718 views
-
-
விளக்கெரியும் பொழுது எப்பாடலுமற்று யாரும் வாய்திறக்கா நள்ளிரவுகளின் காலத்தில் இருண்ட தேசத்தில் சூரியனுக்காய் காத்திருக்க சிதை மண்ணிலிருந்து கற்கள் முளைக்க கைகளால் மூட முடியாத மழை இடியோடு பெய்கிறது. வீழும் பொழுது அழுது மீளும் பொழுது தொழுது கனவுகள் முட்டும் கல்லறைகள் பெருகிய தேசத்தில் தாய்மார்களின் அடி வயிறுகளில் கார்த்திகைப் பூக்கள் மலர்கின்றன. வீட்டு மூலையில் விளக்கெரியும் கார்த்திகை மாலைப் பொழுதில் விளக்குகளை தூக்கி வந்து மழையில் நீர் சொட்டும் தென்னங் கீற்றுக்களில் ஒளிரும் உங்கள் முகங்கள் கண்போம். மூட முடியா மழை கொல்ல முடியா மரங்களில் பெய்ய அழியா முகங்கள் மனங்களில் தெரியும் அணைக்க முடியா விளக்குகள் தேசத்தை நிரப்பியெரியும் அப்பொழுது. * * *…
-
- 0 replies
- 718 views
-
-
By ஃபெய்ஸ் அஹ்மத் ஃபெய்ஸ் - சுதந்திர விடியல் இதுவல்ல கரை படிந்த வெளிச்சம் இரவு குதறித் துப்பிய விடியல் இதுவல்ல எனது தோழர்கள் தாகங்கொண்டு தேடியரைந்த தெளிந்த விடியல் இதுவல்ல பரந்து விரிந்த வானத்தின் கால்வெளியில் தாரகை நிரைத்து நிற்கும் இலக்கொன்று இருக்கும்! பொங்கிப் பெருகும் இரவின் அலைகள் அமைதி கொண்டு கழுவிச் செல்லும் கரையொன்று இருக்கும் இதயச் சுமையை ஏற்றிவரும் ஓடம் தங்கி இளைப்பாறும் துறையொன்றிருக்கும் என்று எனது தோழர்கள் தாகங்கொண்டு தேடியலைந்த தெளிந்த விடியல் இதுவல்ல! புரியாத புதிராய் வாலிப ரத்தம் தழுவத் தூண்டும் கரங்கள் கிரங்கிப்போன பார்வைகள் அன்பும் அழகும் தொட்டும் தொலைவில்.... இருந்தும் காவு கொடுத்த காதல்கள் எத்தனை? விடியலின் சுடர்மிகு…
-
- 3 replies
- 718 views
-