Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by kulir,

    நான் வாழ்ந்த மண்னை நினைதத்துப் பார்த்தேன் . சுடும் வெயிலில். நடைசெய்தாலும் மரநிலலின் காற்றின் குளிர்மை. நெடும் துரம் நடை செய்தாலும் அந் கால் பட்டமண்ணின் ஒருசுகம். வியர்வை சிந்த சிந்த . தாகத்தை தேடி போனேன் தரைகளில் இருந்த மரத்தின் கனிகளை உண்டேன். தண்ணீரே தேவை இல்லை . திரும்ப வீடு வந்தேன். சுவையுடன் சமைத்துக்கிடந்த உணவை சுவையாகவே உண்டேன்: மாமரகிளையில் ஊஞ்சல் கட்டி கால் மேல் கால் போட்டு விசுகின்ற காற்றின் ஒளியில் நித்திரை செய்த நாள் அந்தநாள். இன்று என்மண்ணையும் உறவுகளையும் நினைத்து நினைத்து உள்ளம் வருகி உருகிபோகிற மொளுகு திரி போல் என் மனம் உருகிறதம்மா . நான் வாழ்ந்த மண்ணின் வாழ்க்கை . திரும்ப வருமா திரும்ப வருமா

  2. படுவான்கரைக் குறிப்புகள் – (நீள்கவிதை)-கருணாகரன் (Remarks Of Paduvankarai) கைவிடப்பட்ட போராளியின் குறிப்பு (01) முள் குத்திய கால் சிந்திய ரத்தத்தில் படுவான்கரைப் புழுதி சிந்திய ரத்தம் மட்டுமல்ல, எழுந்த அழுகையொலியும் படுவான்கரையின் காய்ந்த குரல்தான். அங்கிருந்து நானூற்றுக்கு மேல் சின்னப்பெடியனுவள் வடக்கு நோக்கி நடந்தம். அது விடுதலைப்பயணம் என்றார்கள் எந்த நட்சத்திரமும் வழிகாட்டவில்லை கூடிப் பழகியவரும் கூட்டிச் சென்றவரும் பிறத்தியாராகினர் அறிந்திராத திசையில் விரும்பிச் செல்லாத பயணத்திற்கு வழிகாட்டிகள் உண்டென்றார். நிகழ்ந்த பயணத்தில் வழிநடத்தும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்த தலைகளின் கீழ் இதயம் மறுத்துரைத்தது அதுவல்லத் திசை அதுவல்ல வழியென்று. காலடியில் நாறிக்கிட…

  3. தமிழகத்தின் எழுச்சிகண்டு....... கவிதை...... தைப்பொங்கலுக்கு மகிழும் தரணியின் சூரியன் போல் உங்கள் பொங்கும் உணர்வு கண்டு இலங்கையில் சூரியர் நாம் மகிழ்ந்து விட்டோம்........ எங்களின் அழுகை நீக்க உங்களின் எழுச்சியின்னும் போதாது...! போதாது....! பொங்கி எழுந்திடுங்கள்....... பிள்ளையின் கதறல் கேட்டு பெற்றவளாய் நீர் இன்று பொங்கி எழுந்ததற்காய் பிள்ளைகளாய் மனம் குளிர்ந்து விட்டோம் துடித்து எழுங்கள் உங்களின் கிளர்ச்சியின்னும் போதாது..! போதாது...! பொங்கி எழுந்திடுங்கள்....... இலங்கைத் தமிழனின் பூகோளச் சரித்திரத்தை தன் வைர வரிகளிலே சொன்ன வைர மு(மூ)த்தண்ணன் கொதிக்கும் அவன் சொல் விதை(த்)யில் …

  4. காதல் அழுகிறது ... என்னை காதலித்த என் உயிர் ... தேவதாஸை காணவில்லையே ....? அவன் காதலியை விரும்பியதை .... காட்டிலும் என்னையே (காதல் ).... காதலித்தான் .......!!! கையிலே ஒரு காதலி ..... கைபேசியில் ஒரு காதலி .... கைவிட்டு காதல் போனால் .... கைகுலுக்கும் காதலர்கள் ..... இதை காதல் என்று சொல்லும் .... காதலர்களே - தேவதாஸை கேவல படுத்தாதீர் .....!!! காதலில் தோற்றால் ... நாங்கள் தேவதாஸ் இல்லை .... காலத்துக்கு ஏற்றால் போல் காதல் ... செய்கிறோம் என்று கூறும் .... காதலர்களே ..... காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை .... காமத்தை காதலாக கருதாதீர் .... காதல் என்றும் காதல் தான் ....!!!

  5. ஆகுதிகளுக்கு விளக்கெரிக்க... ஆலயங்களில் மணியொலிக்க ஆகுதிகளுக்கு விளக்கெரிக்க தாமாகவே கண்பனிக்க தரணியில் மீண்டுமோர் கார்த்திகை கார்த்திகை செல்வங்களான கண்மணிகளே மாவீரர்களே பார்தனில் தேடுகின்றோம் பாசங்களே உங்கள் கோவில் கோவிலதை உடைத்துப்பகை கோலவிழாக்கள் கொண்டாடினர் பாவியர்க்கு சந்தோசமாம் பாழாக்கி விட்டனராம் துயிலுமில்லங்களை துயிலுமில்லங்களைத் துடைத்தாலும் துடைபடுமோ உங்கள்நினைவு விழிகளில் வழிகின்றநீர் விபரத்தை விளம்பித்தான் நிற்காதோ நிற்கின்றவிக் கார்த்திகையில்நினைவெல்லாம் நீங்கள்தானே காற்றென வந்தவரே கனலென நின்ற கற்பூரங்களே கற்பூரங்களுக்கு விளக்குவைப்போம் கார்த்திகையில் விழாஎடுப்போம் தமிழராய் ஒன்றுபடுவோம் தரணியில் தமிழரசு அமைப்போம…

  6. குறிப்பு இப்பாடலின் முதல் நான்கு வரிகளும் ஓர் கிறீஸ்தவ துதிப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டவை. உன் நாமம் சொல்லச் சொல்ல என்னுள்ளம் மகிழுமையா என் வாழ்வில் மெல்ல மெல்ல பேரின்பம் பெருகுமையா - உன் மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும் உனக்கது ஈடாகுமா? உலகமே வந்தாலும் உணர்வுகள் நின்றாலும் உனக்கது ஈடாகுமா (2) -உன் நாாம்.. தமிழ் மானம் தமிழ் வீரம் தமிழனுக்குத் தமிழீழம் என்றது நீதானையா தரணியிலே தமிழீழம் தலை நிமிர்ந்த வரலாறும் படைத்தது நீதானையா (2) தரை வழியாய் க்டல் வழியாய் வான் வழியாய் படை நடத்தி சரித் திரம் படைத்தாயையா தாரணியின் வரை படத்தில் தமிழீழ வரை படைத்தை நிலைக்க நீ வைத்தாயையா -உன் நாமம்... நீ கொண்ட மெளனத்தால் நித்திலமே இன்றெம்மை எள்ளி நகை யாடு தையா …

  7. ஒவ்வொன்றாய் மலர்கள் பூக்கும் அதத்தனையும் மண்ணில் கவிதையாகும்; வாசம் வானம் துளைக்கும் – அதைக் கடந்தும் தமிழ் இலக்கியமாய் காலத்தில் நிலைக்கும்; பாசமற உள்ளம் சேரும் பாட்டில் பாடம் தேடும் காடு கனக்கும் பொழுதில் – தமிழே நின்று தலைமேல் வாழும்; யாரும் பாடும் ராகம் எங்கும் ஒளிரும் தீபம் வாழ்வின் நகரும் தருணம் நாளை தமிழில் வரலாறாகும்; பேசும் உலகம் பேசும் மறந்து மறைந்துப் பேசும் கூசும் நாக்கை அறுக்கா துணிவில் தலையை ஆட்டும்; துடைத்த இனத்தின் மீதம் துளியேனும் நிலைக்க எழுவோம் துடித்து அழுத வலியை இனி திருப்பித் திருப்பித் தருவோம்; தடுக்க இயலா வேகம் – தமிழர் மரபிலிருக்கு அறிவோம்; திரட்டி திரட்டி சேர்த்து – நம் ஒற்றுமை பலத்தை உ…

    • 0 replies
    • 676 views
  8. Started by nedukkalapoovan,

    எழுத்தில் நிலைக்க முன் படத்தில் பதிய முன் எழுந்த வேகத்தில் கரைந்திடும் மன அலைகளே..! கலியாணம் கட்டி காண வேண்டியதை கண நேரத்தில் காட்டி மறைகிறீர்.. மனததை தவிக்க விடுகிறீர்..! காதலிக்க நினைப்பவரை கட்டியணைக்க வைக்கிறீர் மீண்டும் தவிக்கையில் தலையணையை தருகிறீர்...! நடந்ததை மறந்தாலும் நினைவுக் கிடங்கதை கிண்டிக் கிளறி விடுகிறீர் நன்றும் தீதும் இரட்டையராய் தருகிறீர்..! கலரா.. கறுப்பு வெள்ளையா வகை வகையாய் போகாத காட்டிலும் போக விடுகிறீர் ராக்கெட் இல்லாமலே எட்டாத வெளியிலும் பறக்க விடுகிறீர் விழுந்து சாகவும் செய்கிறீர்..!! அலறி அடிக்கும் கணங்கள் போக அடித்து வீழ்த்த நினைக்கும் எதிரியை அடிக்க வைக்கிறீர் அலைகள் கடந்து நடுக்கடலில் நிறுத்தியும்…

  9. மனதில் மறையாத பனித்துளிகள்..... காதலர் தினக்கவிதை - இளங்கவி சூரியன் திசை நோக்கும் சூரியகாந்தி போல இந்தக் சூரியன் போகும் திசையையும் நோக்கியது ஒர் சூரியகாந்திப் பூ.... ஆம்.. அவளும் ஓர் பூதான் அவள் பெயர் செவ்வந்தி..... அவளின் தரிசனத்துக்காய் காத்து நிற்கும் இடம் வண்ணங்களால் மனதைத வருடும் காகிதப்பூச் சோலையொன்று...... செவ்வந்தி வருகைக்காய் காத்து நிற்கும் ஒவ்வொரு கணங்களும் காகிதப் பூக்களைப் பார்த்து வண்ணங்கள் இருந்தென்ன என்னவள் போல உங்களுக்கு வாசமில்லையே என்று சொல்லிச் சிரிப்பதுண்டு...... காகிதப் பூக்களுக்கு என்னில் கோபமிருந்தாலும் என்னவள் வருகையறிந்தவுடன் சிறு சலசலப்புக் காட்டிவிட்டு தானாகவே மறுபக்கம…

  10. தாய்மானம் காத்த தங்கத் தனயர்களே! தமிழ்த் தாயின் தன்மானம் காக்கவெனத் தம்முயி ரீய்ந்த சான்று தனயர்களே! அமிழ்தினு மினிய அன்புச் செல்வங்களே! ஆற்ற வியலாத் துன்பக் கடலிலெமை அமிழ்த்தி மறைந்த இன்னுயிர் மறவரே! ஆணி வேரென உறுதியிற் றிளைத்துக் கமழும் தமிழினத்தின் மணத்தை நன்றே காசினியிற் காட்டிச் சென்றகன வான்களே! முள்ளி வாய்காற் களமுனை தனிலே முடிவாகிப் போனீரென முழங்கி மகிழ்ந்து அள்ளி இனிப்பினை அளித்துச் சிரித்து ஆன்றவெம் மினத்தின் மானம் பறித்து எள்ளி நகையாடி ஏதிலிக ளாக்கி எக்காள மிட்டு இன்புற் றோர்அழியத் துள்ளி யெழுந்து தூக்கம் கலைந்து துண்டெனத் தலைகள் சிதறிடச் செய்வீர்! சாவென்பது உமக்கில்லை ச…

  11. [size=5]கவிதையின் கவிதைகள் .[/size] http://puradsi.com/wp-content/uploads/2012/08/Sivanthan030812-UK_004.jpg சொந்த மண் சிவந்தபோது சிதறிப்போனோம்! மண்விட்டு முதலடி வைத்தபோதே அகதியானோம்! அவதிப்பட்ட அகதிகளாய்... அநியாயமாய் விரட்டப்பட்டோம்! வாழ்மனை முற்றம் சுற்றம் சொந்தமண் எல்லாமே தூரவிட்டு, அல்லாடும் வாழ்வோடு தூரதேசங்களில் அடைக்கலமான... அவதிதேசத்தின் அகதிகள் நாம்! சொந்தமண்ணோடு எம்மூர் நினைவுகளும், ஊர்த்தெருவின் புழுதிமண் வாசனையும் பெய்தமழையில் எம் கண்ணீரில் கரைந்துபோக... பழைய நினைவுகளாய் அடங்கிப் போகிறது! மீண்டும் மீண்டும் துளிர்க்கும் நினைவுகள் ஊர் ஞாபகங்களை மீள மீள உயிர்ப்பித்தாலும், இன்றைய செய்தித்தாளின் சேதிகளும் ஊர்க்கத…

  12. Started by nunavilan,

    Theepachelvan Pratheepan இன்றைய ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த கவிதை. காந்தள் மலர்கள் வானம் பார்த்திருந்து மழையை தாகத்தோடு அருந்தி கிழங்குகள் வேரோடி நிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறது காந்தள்க் கொடி. எதற்காக இந்தப் பூக்கள் வருடம் தோறும் கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றன? ஒரு சொட்டு கண்ணீர் விடவும் ஒரு விளக்கு ஏற்றவும் மறுக்கப்படுகையில் எதுவும் இல்லையென எல்லாமும் அழிக்கப்பட்டாகிற்றென்கையில் அனல் கனக்கும் தாயின் கருப்பையை ஈரமாகிக்கின்றன காந்தள் மலர்கள் தாயின் கனவு வண்ணமாய் தாகத்தோடு பூக்கும் காந்தள் மலர்களை யாரால் தடுக்க இயலும்? தீபச்செல்வன்

  13. தேயிலை மலைகளின் பாடல். - வ.ஐ.ச.ஜெயபாலன் * மரகத மணிகளின் நடுவே சித்தெறும்புகளாய் யானைகள் ஊரும் பசும்மலை நாடே. ஏழைகளோடு நிலத்தை பகிர்ந்த சமூக நீதியின் தாய்த் திருமண்ணே . * ”செல்விருந்து ஓம்பி வருவிருந்து” நெய்வடியும் செஞ் சோற்றில் கறிமீன் நீந்த உபசரிக்கும் அன்பின் மலையாளிகளே வாழிய. * உலகை இயற்றிய கவிஞன் தனக்கென நூல் பிசகாத நுட்பமாய் அளந்து மலையும் ஆறும் வயலும் காயலும் நீலக் கடலுக்கு நீழ மணல் பூக்கரையும் தைத்த கடவுளின் தேசத்து மக்களே வாழிய; * உன் தேயிலை மலைகளில் ஏலக்காய் குன்றுகளில் கறிக்கோழிக் கூடுபோல் சேரி வீடுகளில் மண்சரிகிற மழைக்கால இரவுகள்தோறும் மதுரையில் இருந்து வந்த கண்ணகி இன்னும் அழுகிற ஓலம் கேட்க்குதே தோழா. காற்ற…

  14. Started by Ahasthiyan,

    உனக்கு எப்பொழுதும் அடுத்தவர் துன்பத்தில் ஆனந்தம் அதுவும் தமிழர்கள் பிணங்களை எண்ணுவது பேரானந்தம் நீ செய்ய நினைத்ததை அவன் செய்தான் - ஆதலால் அவன் ரகு வம்சம் நாம் அரக்கர்கள் ஆனோம். தூது போக அனுமார்கள் தேவையில்லை இருக்கிறார்களே எம்மூர் விபீசணன் மார் அரசியல் எமக்கு தெரியாது - ஆனால் காலம் காலமாக அண்டிப் பிழைக்கிற ஆக்களை அடையாளம் காணத் தெரியும் மகா பாரதம் உனக்கு பொருந்துதோ? இல்லையோ ? எம் தர்மம் ஒரு நாள் வெல்லும்

  15. காங்கேசன் துறைவீதியில் இணுவைப்பதியின் எல்லையை இரு கூறாய் சமமாய்ப் பிரித்தால் ஊரின் நடுவில் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த மரம். புதிதாய் எங்கள் ஊர் வருபவர்களுக்கு புரியும்படி சொல்லி வைக்கும் அடையாளம். சீனிப் புளியடி பெயர் சொல்லும்போதே நா இனிக்கும் . எங்கள் பள்ளி கூட புளியடிப் பள்ளியென்றுதான் புவி எங்கும் அறிமுகம் குடை போல விரிந்த மரம் குளிரோடு தந்த நிழலில்தான் இடைவேளையில் அம்மா கட்டித் தந்த இடியப்பமும் முட்டைப் பொரியலும் கவளமாய் களம் இறங்கும். வகுப்பறையில் வராத சங்கீதம் - இந்த மர நிழலில் வரும் என்று லேகா ரீச்சர் எங்களோடு தொண்டை தண்ணி வத்த ச ப சொல்லித் தந்தும் அங்குதான். கண்ணன் பாட்டுக்கு அபிநயம் பழகியதும் அங்குதான் உடற்பயிற்சி வேளை முடிய உற்சாகம் த…

    • 8 replies
    • 674 views
  16. இன்று காலை புகையிரதத்துள் ஆங்கிலத்தில் எனக்குத் தோன்றியதொன்றைப் பகிர்கிறேன். தமிழாக்கம் கீளே உள்ளது. சொந்தமாய் எழுதியதைக் கூட மொழி பெயர்ப்பது எத்தனை சிரமாய் இருக்கிறது... If stuck in the depth of a jungle, without a compass anywhere in the jumble, one needs to walk, even if it’s dark, regardless of the hour shown on the clock. But…, you ask, how one gets to the depth of the jungle, without a compass in their jumble? Is this moment truly our own? Does this trail have a beginning dot? Where is that dot? Can I trace it? Who drew the line? Compass my ass! There is no plan! Only the terrain and I am commanded to walk. Humbug! Farce! Cheap! Lame! Lazy…

    • 4 replies
    • 674 views
  17. சலனம் இன்றி மெதுவா பாயும் நீர் .. பாலைவனத்தையும் பசும் சோலையாக்கும் .. நீ என்னை கடந்து போகும் தருணம் அதுபோல் .. திரும்பி பார்க்கும் நேரத்தில் என் மனவெளி ... உன் நினைவில் பூத்து குலுங்குவது இவ்வாறே .. சோகங்கள் இழையோட கண்களில் நீர் நிரம்பி .. வழி எங்கும் என்னை பார்த்திருக்கும் நேரத்தை .. நீ சொல்ல வரமுன் உன் கண்கள் சொல்லிவிடும் .. காதலை நேசித்த வித்தை தெரிந்தவள் அதனால் .. என்னை உன் விழி வளையத்துள் வைத்து .. கண்காணிக்கும் உன் காதலை மட்டும் .. நான் காதலிக்கிறேன் காதலே .

  18. Started by pakee,

    உன்னைக் காட்டிலும் ரோஜா செடி பரவாயில்லை , நீ என்னை மறந்த போதிலும் எனக்காக தினம் தினம் மலர்தூவிக்கொண்டிருக்கிறது அந்த அன்பு ரோஜாச்செடி...

    • 0 replies
    • 673 views
  19. தமிழர் இழந்த உரிமையைத் தரணி அதிர கேப்பவனே! தமிழர் தங்கள் வரலாற்றைத் தமிழர் அறியச் செய்தவனே! தமிழர் என்று சொல்வதிலே தனக்குப் பெருமை என்றவனே! தமிழை உலக அரங்கத்தில் தாங்கி நிற்கும் தலைமகனே! ஈழம் என்னும் தமிழ்ச்சொல்லை ஈன்றாய் எனக்குத் தமிழானாய்! வேழம் உனக்கு நிகரில்லை! வேங்கை குலத்து முதல்பிள்ளை! சோழ புலியின் அடையாளம் சூடும் தமிழர் அடையாளம்! வாழும் நாளில் மானத்தை மறவா நீயே மலையாகும்! பிறப்போம் இறப்போம் என்பதற்கே பிறப்போர் பலபேர்! இவ்வுலகில், பிறக்கும் போதே புலிபோலப் பிறந்த பின்னே உன்போலே இறவா திருக்கும்…

  20. எங்கள் தேசத்தில் கறுப்புக்கொடி! உங்கள் விடுதலைக்கும் உழைத்தோம் எங்களை அடிமையாக்கினீர்கள் எங்களை பல்லக்குகளில் சுமந்தபோது ஒன்றாய் வாழ்தல் இனிது என்று கனவு கண்டோம். எங்கள் மெழியை புறகண்ணித்தீர்கள் எங்கள் அடையாளங்களை அழித்தீர்கள் எங்கள் உரிமையை பறித்தீர்கள் துரத்தினீர்கள் உங்கள் நிலத்திலிருந்து வேட்டையாடீனீர்கள் உங்கள் நகரங்களில் வைத்து ஒடுக்கி உரிமை மறுத்தபோது நாங்களொரு கனவு வளர்த்தோம். எங்களை நீங்கள் அடிமை செய்தபோதும் உங்களை நாங்கள் ஏதும் செய்யவில்லை எங்களை நாங்கள் ஆழ்கிறோம் எங்கள் மண்ணில் கண்ணீர் வேண்டாம் எங்கள் மண்ணில் துயரம் வேண்டாம் எங்கள் மண்ணில் இரத்தம் வேண்டாம் எங்களை நீங்கள் கொல்ல வேண்டாம் சிங்கள தேசத்தில் சிங்கக்கொடி தமிழர் தேசத்தில் கறுப்பு…

  21. 1 எங்கள் தேசத்தின் குரல் ஓய்ந்திடவில்லை ஆண்டுகள் ஏழு ஓடி மறைந்ததா?- எங்கள் தேசத்தின் குரல் ஓய்வெடுத்து ஆண்டுகள் ஏழானதா? அன்பே மூலதானமாக அடக்கமே ஆளுமையாக அறிவே ஆயுதமாக தமிழினத்தின் குரலை தரணிக்கு எடுத்துக் கூறிய எங்கள் அன்பு பாலா அண்ணா உலகத்தைவிட்டு பறந்தோடி ஆண்டுகள் ஏழு ஆனதோ? உண்மையுள் உண்மையாய் உண்மையே உணர;வாய் உண்மையே இவராய் உண்மையாய் வாழ்ந்த உயரிய மகன்-இன்று எம்மைவிட்டு சென்றதை இன்னும் நம்ப மனம் மறுக்கின்றது உலகின் பார;வையில் இவரின் உறக்கம் மரணம் எனப் பெயர;பெறும் ஆனால், உலகத்தமிழர; உளங்களில்- இவர; என்றும் சீவித்திருக்கும் மனிதன். தமிழின விடிவுக்காகவே இறுதிவரை உழைத்த உறுதியான போராளி இவர;. பாழும் நோய் வந்து பாடையேறும் நாளை இரக்கமின்றி தெரிவித்தபோது பதட்டமின…

  22. சமீபத்தில் நடந்த பேஸ்புக் சந்த வசந்தக் குழுமத்தின் காணொளிக் கவியரங்கத்தில் இடம்பெற்ற கவிதை.

    • 0 replies
    • 672 views
  23. நொண்டி சாக்கும்.. நொள்ளக் கண்ணும்..! [size=1] அவரவர் விளக்கம் [/size][size=1] அவரவருக்கு [/size] [size=1] சாந்த சொரூபியாக [/size][size=1] இருந்து கொண்டால் [/size][size=1] எல்லாம் சாதிக்கலாம் [/size] [size=1] அல்லது தற்பொழுத நிலையை [/size][size=1] தற்காத்துக் கொள்ளலாம் [/size] [size=1] பொழிப்புரை சொல்ல[/size][size=1] கிளம்பி விட்டார்கள் [/size] [size=1] தொல்காப்பியம் [/size][size=1] ஐந்திணை [/size][size=1] மற்றும் சில [/size] [size=1] ஏன் சுற்றி வளைத்து [/size][size=1] சொல்வானேன்..?[/size] [size=1] மந்திரி சபை விரிவாக்கம் [/size][size=1] என்ன செய்யப் போகின்றன [/size] [size=1] என்று உங்களால் [/size][size=1] உத்திரவாதம் தர …

  24. தென்னாபிரிக்காவின் சேரிக் குடிசைகளின், கறள் படிந்த கூரைத் தகரங்களின் கீழும், சூரிய ஒளி நுழைய இயலாத, செம்மண் குடிசைகளின் இருட்டுக்களிலும், பெரு வீதிகள் குவிகின்ற, கூடார வளைவுகளின் கீழ்த்தளங்களிலும், தினமும் பசித்திருக்கின்ற, மனிதர்களின் வெற்று வயிறுகளிலும், உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்! ரொபின் தீவின் கரை தொடுகின்ற, கடலலைகள் எழுப்பும் அழுகுரலிலும், சுண்ணாம்புக் கற்களில் சம்மட்டிகள், செதுக்கிய துவாரங்களில் புகுந்து, வெளியில் வருகின்ற அனல்காற்று, எழுப்புகின்ற அவலம் கலந்த ஓசையிலும், ஆருமற்று அனாதைகளாய் இறந்து. புதைந்து போன சிறைக் கைதிகளின், உக்கிப்போன எலும்புக்கூடுகளிலும், உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்! காவலர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, கடல் வெளிக…

    • 4 replies
    • 672 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.