கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஒரு பிடி ................................வேண்டும் தலைவனின் மண்மீட்பில் ஒரு பிடி மண் வேண்டும் மண்கொண்ட அன்னையின் நினைவாக ஒரு பிடி முத்து மண்ணில் நான் போட்ட கோல மண் முன் வீட்டு மாமியின் வேலிக்கும் ஒரு பிடி மாமர நிழாலில் மண் வீடு கட்டிய என் தோழி மலர்விழி மண் மீட்பில் மாண்டு விட்டா மாமா வின் கடைசி மண் மீட்க போய்விட்டான் நான் நட்ட மாங்கன்று கிளை விட்டு பழ்ம் கொடுத்து என் பிள்ளை ருசிபார்த்து ,பசியாற மண் வேண்டும் கோமத்யின் இரு நாள் பசுகன்று பார்க்க வேண்டும் கோழியும் குஞ்சுமாக ஒரு கூட்டம் காணவேண்டும் கோவில் மணி ஒலி என் துயில் எழுப்ப வேண்டும் . வயல் வரம்பில் காலரா நடை பயில வேண்டும் விளைந்துநிட்கும் நெற்கதிர் அளைந்து வரவே…
-
- 4 replies
- 1.7k views
-
-
சில்லென்ற காற்று மார்புக்குள் நுழைந்து.. சில்மிஸம் செய்ய.. ஈரமண்ணில் கால்கள்.. ஆழப்பதிந்து.. நடையைத் தடை செய்ய.. உள்ளேறிய போதை ஜிவ்வென்று... பறக்கச்செய்ய... கடலலைகளின் பேரிரைச்சல்.. குழந்தைகளின் கூச்சல்.. சுண்டல்காரன்..கத்தல் எல்லாம் காதுக்குள் நுழைந்து..இதயச் சுவருனுள்..எதிரொலி செய்ய.. தள்ளாடி நடந்த கால்கள்.. கல்லில் மோதி..கீழே விழுந்து..மெல்லத் தவழ்ந்து.. கரையேற்றி விட்ட படகோடு சாய்ந்து.. வயிற்றுக்குள் குமட்ட.. எடுத்த வாந்தியோ.. சட்டையெல்லாம்... தொத்திக்கொள்ள.. நாற்றம் மீன்.. நாற்றத்தை தூக்கி சாப்பிட...தலைசுற்ற.. இருட்டும் கடல்.. நிலவோடு ஏளனம் செய்ய.. பக்கத்தில் யாரோ.. "இந்த அலையும்.. நீயும்..ஒ…
-
- 16 replies
- 1.7k views
-
-
என் பேரு விடலை நிற்கிறதோ படலை - பெண்களை கண்டா போடுவேன் கடலை அண்டு பார்த்தன் ஒரு பிகரை கொடுத்தேன் என் உயிரை எழுதினேன் ஒரு மடலை அவளோ அதத் தொடலை பார்த்திட்டான் அவளண்ணன் முனி அண்டு பிடிச்சுது எனக்கு சனி படிச்ாான் என் மடலை உருவினான் என் குடலை அனுப்பினான் சுடலை என் பேரு விடலை இருப்பது சுடலை போடுவேன் மோகினிகள கண்டா கடலை ( குசா மட்டும் தான் கவிதை எழுதுவாரா நாமளும் பிச்சு உதறுவமில்்ல )
-
- 13 replies
- 1.7k views
-
-
தமிழீழம் மலர்ந்து விடும்......!!! கோட்டை பகை கோட்டைக்குள்ளே கொடியேறும்..... புலி கொடியேற்றி ஆளும் ஒரு காலம் வரும்.... பலம் கொண்ட படையாகி பாய்ந்து வரும்.... பாரெல்லாம் மக்கள் ஆடி பாடும் காலம் வரும்.... பகை பிச்சை கேட்டு உலகெல்லாம் ஏறி ஓடும்.... பிணமாகி பகை உடல்கள் அங்கு விழும்... ஜந்தாண்டு முடிவிற்குள்ளே அவை நடக்கும்..... ஜந்தாயிரம் படைகள் அங்கு அழிநதொழியும்..;... அவலத்திலே தென்னிலங்கை மூழ்கியெழும்... ஆத்திரத்தில் அந்த மக்கள் பொங்கியெழும்... அதை ஆக்கிவித்த ஆட்சிகளை கலைத்தெறியும்... வேண்டமது யுத்தமென்று வேண்டியழும்.... தானக வந்துயதே தானே த…
-
- 11 replies
- 1.7k views
-
-
நீ எப்படி.. அவன் என்றும் இவன் என்றும் அடுத்தார் வாழ்வை எடை போடும் மனிதா நீ எப்படி-உன் வாழ்வெப்படி.. அடுக்கடுக்காய் ஊர்வம்பை அளக்கின்ற போது.. ஆனந்தம் கடலாய் அலைமோதுகிறதோ.. அழ்மனத்து சகதியை வெண்திரை மூடுகின்றதோ.. உன்னைத்திருத்திக் கொள் உலகம் திருந்துமென்றார்... உண்மை அது மெய்..- நீ உன் வாயை உளறவிட்டு ஊர் வாயை அலறவிட்டாய்.. ஊரார் வம்பை ஊட்டி வளர்த்து தன் வம்பை தானே வளர்ததாய்.. வந்த நாள் நல்ல நாள் வாழும் நாள் கொஞ்ச நாள்-அதற்குள் ஆயிரம் பேர் தலையை உருட்ட நினைக்கும் அபூர்வ சிந்தாமணியே.. துன்பத்தில் வீழ்ந்தோரை வம்புக்குள் இழுத்து இன்பத்தைக் காண்பதுமேன்.. பிறர் துன்பத்தில் இன்பத்தை கண்டு களித்து வாழ்வுக் க…
-
- 14 replies
- 1.7k views
-
-
வசந்தத்தைத் தருவாயா காலக் களத்தினிலே கடுங்காயம் பட்டவனாய் உடலெல்லாம் புண்ணாகி உயிர்போகக் கிடந்தவனை பத்திரமாய் அணைத்தெடுத்துப் பாச மருந்திட்டுக் காதற் துணிகொண்டு காயத்தைக் களைந்தவளே அழகிழந்த சித்திரமாய் அடிவளவில் கிடந்தவனை கனிவுடனே கரமெடுத்துக் கறையானைத் தட்டி அன்பு நீர்கொண்டு அழுக்கெல்லாம் களைந்தகற்றி அழகாய் முன்னறையில் அமர்ந்திருக்கச் செய்தவளே வாழ்க்கைப் படகிழுக்க வழியெதுவும் தெரியாமல் துன்பப் பெருங்கடலில் துடுப்பிழந்து நின்றவனை மூர்ச்சித்து மெல்லமெல்ல மூச்சிழந்து போனவனை கைப்பற்றி மெல்லமெல்ல கரையிழுத்து வந்தவளே வெறுமைக் கோடையெனும் வெந்தணலில் சிக்கியதால் வெந்து தினங்கருகி வெளிறிப் போகையிலே நட்பென்னும் ந…
-
- 7 replies
- 1.7k views
-
-
கரை தேடும் கட்டெறும்பாக வாழ்கைக் கடல் மீது நம்பிக்கையோடு கரைசேர நான் மிதக்க இடையில்... அலை மீது துரும்பாக எனைக்காக்கும் கப்பலாக நீ வந்தாய். காதல் எனும் கயிறு போட்டு தொற்றிக் கொண்டேன் உன்னிடத்தில். நீயோ... பத்திரமாய் எனை கரை சேர்ப்பாய் என்றிருக்க காதல் கசந்ததென்று.. நடுக்கடலில் தள்ளிவிட்டாய். பரிதவித்தே போனேனடி. நம்பிக்கை தகர்ந்து..!! ஈவிரக்கம் இல்லாதவளே உன்னை ஓர் நாள் கடல் நடுவே திமிங்கலம் ஒன்று கவிழ்க்குமடி... அப்போதும் கட்டெறும்பாய் நான்.. அலை மீது உனக்கு உதவிடுவேன் நிச்சயம் பழிவாங்கேன்..! அது உன்னுடன் காதலுக்காய் அல்ல என்னுடன் உள்ள ஜீவகாருணியத்திற்காய்..! (படத்துக்காய் ஓர் வரி.)
-
- 21 replies
- 1.7k views
-
-
பதுங்குகுழி ஓடிப்போன மகிந்தவுக்கு.... முடிச்சுப் போட்டமெண்டு மாத்தையா மூச்சுவிட முன்னம் அடிச்சுப் போட்டுது வான் புலி. அலரி மாளிகை அந்தப்புரம் அடிச்சு விழுந்து பங்கருக்கை துடிச்சுப் பதைச்சுப் போயிருக்காம். தமிழர் தினமும் இப்பிடித்தான் துடிச்சுப் பதைச்சு ஓடுதுகள். குடும்பமாகத் தனியனாக குழந்தை குட்டி இளசு பழசு எந்தப் பிரிவும் மிச்சமின்றி செத்து செத்து வீழுறதை எந்தச் சிங்களவன் பார்த்திருப்பான்...? கொழும்பும் இனிமேல் பயம்கொள்ளும் கோட்டைக் கனவில் உள்ளவரின் கொழுப்படக்கும் நாளுமினி கொஞ்சத் தூரம் சொல்லி வைப்போம். தமிழன் நிலமும் தமிழன் கடலும் தனக்குச் சொந்தம் என்றவனை தமிழர் படை வென்று வரும் தரணியெங்கும் சென்று வ…
-
- 0 replies
- 1.7k views
-
-
படித்ததில் மனதுக்கு பிடித்திருந்துச்சு, இணைத்துவிட்டேன் எங்கோ பிறந்தோம்! எங்கோ வளர்ந்தோம்! அனைவரும் இங்கே! சந்தித்துக் கொண்டோம்! இதயத்தை நட்பால சிந்தித்துக கொண்டோம்! முகங்களைப் பற்றி யோசித்ததுமில்லை! இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை! எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை! ஏமாற்றங்கள் சிறிதுமில்லை! அவரவர் கருத்துக்களை இடம் மாற்றிக்க கொள்வோம்! பாரட்டுக்களை பரிமாறிக்க கொள்வோம் ! சின்ன சின்ன சண்டைகள் இடுவோம் சீக்கிரத்திலேயே சமாதானத்திற்கு வருவோம்! கவலைகளை கிள்ளி எறிவோம்! இலட்சியஙகளை சொல்லி மகிழ்வோம்! நன்மைகள் வளர முயற்சிப்போம்! நட்பால் உயர்ந்து சாதிப்போம்! நன்றி - adhikesan.blogspot.com
-
- 14 replies
- 1.7k views
-
-
கண்டதும் காதல் கொண்டு கொண்டது கோலம் என்று கோதையர் மேல் காதல் கொண்டால் காயும் நிலைதான் காளையர்க்கு கொடியிடை வேண்டுமென்றும் கொள்ளை அழகு வேண்டுமென்றும் குருடராகிக் குனிந்து நின்றால் கோட்டான் கூட உமைக் குதறிடும் நல்லதும் கெட்டதும் நாலுவிதம் நம்மெதிரே உள்ளவைதான் நகல் நிகர்த்து நல்லது காண் நன்மை நீயும் பெற்றிடுவாய் கண் காணும் கவர்வின்றி உண்மைக் காதல் தான் வேண்டுமென்றால் கால்களில் வீழாது காதல் செய்வீர் கம்பீரமாய் நின்று காதல் செய்வீர் உள்ளளகைக் கண்டு காதல் செய்வீர் உத்தமி ஒருத்தி வந்திடுவாள் உண்மைக் காதல் தந்திடுவாள் உம்மை உய்யவும் வைத்திடுவாள் உணர்ந்து காதல் செய்திடுவீர் உண்மை அன்பைப் பெற்றிடுவீர் உன்மத்தராய் ஆகாமல் உயிர் ஒன்றி வாழ்ந்திடுவீர்
-
- 19 replies
- 1.7k views
-
-
-
- 5 replies
- 1.7k views
-
-
கையில்லாச் சட்டை! தணிக்கையில்லாத் தொடை! சாயச் சிவப்பில் சமாதியாகிப் போன உதடுகள்! புருவ மேட்டில் கருமேகக் குவியல்! இரவு உடையில் வீதி உலா! தேரொன்று நடப்பதாய் எம்மவர் கண்கள் இமையா(து) தவம் இயற்றும்! தடுக்கி விழும் இதயம் எடுக்கி அணைத்தால்(ள்) சொர்க்கத்தில் பயணம்! இளமை வெட்டி ஒட்டிய 'லேபிள்கள்' உற்றுப் பார்த்தால் எல்லாம் போலிகள்! உதடு பிரிந்தால் வார்த்தைகளுக்கு வலிப்பு எடுக்கும்! ஆங்கிலம் நிர்வாணம் ஆகும்! மூலையில் தமிழ் முக்காட்டுடன் மெல்ல விசும்பும்! பார்வை வண்டுகள் சிறகடிக்கும் ரோஜாவென யோசித்து மயங்கும்! குதிக்கால் உபயத்தில் உயர்ந்து விடுவார்கள்! …
-
- 2 replies
- 1.7k views
-
-
வேண்டாம்... - கவிதை கவிதை: லிவிங் ஸ்மைல் வித்யா, ஓவியம்: ரமணன் சிற்றாறு எதிரிலிருக்க, காம்பௌண்ட் சுவருக்குள், தோட்டமும், தோட்டத்திற்கு நடுவேயான பாரம்பர்யமான உங்கள் வீட்டில், தலைவாழை விருந்துக்கு என்னை அழைக்க வேண்டாம்... நகரின் மையமான பகுதியில், ஆடம்பர அப்பார்ட்மென்ட்டில் ``கம் ஓவர், லெட்ஸ் ஹேவ் எ பியர்’’ என்றும் அழைக்க வேண்டாம்... கருங்கற்களால் வேய்த, செவ்வண்ணம் பூசிய, சிறிதும், பெரிதுமாய் டெரகோட்டாக்கள் நிரம்பிய, கலைவண்ணமான உங்கள் இல்லத்திற்கு கவிதை விவாதிக்க அழைப்பு விடுக்க வேண்டாம்... ``வாங்க, எங்கூருக்கு, நம்ம தோப்பு எளநிக்கும், அம்மா வக்கிற நாட்டுக்கோழி வறுவலுக்கும் ஈடே கிடையாது’’ எனத் தூண்டில் ப…
-
- 0 replies
- 1.7k views
-
-
எத்தனை எத்தனையோ பிறந்தநாள் பாடல்கள் வந்திருக்கு... சரி நம்ம பாட்டையும் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால் உங்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் விழவாவிலும் போட்டு எங்கள் செல்ல மழலைகளை ஆடவிடுங்கள். http://vaseeharan.blogspot.com/ பல்லவி பிறந்த நாளைக் கொண்டாடும் பிஞ்சு மழலைகளே இந்த வீட்டின் சந்தோஷத்தை கொண்டு வந்தவர்களே அம்மாவின் அன்புபிள்ளை அப்பாவின் நல்ல பிள்ளை ஆண்டவனின் செல்லப் பிள்ளையாய் நல்ல நல்ல பாட்டைக் கேட்டு தன்னாலே ஆட்டம் போடுங்க நல்லாய் படிச்சு பட்டம் முடிச்சு உலகை நீங்கள் வெல்லுங்க சரணம்-1 தரணியெங்கும் சென்று நீயும் தமிழைப் பரப்பிட வேண்டும் நெஞ்சை நிமிர்த்தி நின்று நீயும் தமிழில் கதைத்திட வேண்டும் உன்தன் மூ…
-
- 7 replies
- 1.7k views
-
-
கனவினிலே நீ ஏன் வந்தாய் கன்னி இளம் புள்ளிமானே என் நெஞ்சினிலே குடிகொண்ட பூங்கோதை எனும் பெண் பூவே தேடிவந்த என்னை நீயும் கவிபாடவைத்தாய் உன் அன்பு என்னும் மதுக்கிண்னத்தில் என்னை நியும் விழ வைத்தாய் தாயைப்போல என்னை அன்பு செய்து என்னை வென்று போட்டாய் உன் பார்வையாலே என்னை நீயும் சிறைப்படுத்திவிட்டாய்
-
- 9 replies
- 1.7k views
-
-
புதிய கிளிநொச்சி அழகு தேசமே எழில் கொஞ்சும் பேரழகே-உன் இறக்கை ஒடிந்து இயற்கை வற்றி இடிந்து போனதேனோ உறக்கம் அறியா-எங்கள் ஊர்களின் மெளனம் தான் என்ன..? பட்டுப் போய் கிடக்கும்-என் பழைய ஊரே கிளிநொச்சி மண்ணே-நீ கிலி கொண்டு இருப்பதேனோ...? உன்னில் கொட்டுண்டு கிடக்கும் அத்தனை அழகும் எங்கே...? சாலையோரம் உயர்ந்து நின்ற கட்டடங்களே........... டிப்போ பேருந்து தரிப்பிடமே... யாருக்கு ஏது செய்தீர் தெருவின் ஓரம் சிரித்து நின்ற சந்திரன் பூங்காவே உன்மீதும் புதியதோர் சிலையா..? சிங்கள வெறியன் நினைவுத் தூபியா நீ அதிர்ந்தாவது வீழ்த்திடமாட்டாயா..? இதமிதமாய் குளிரவைத்த சேரன் பாண்டியன் சுவையூற்றுக்களே உங்கள் அத்திவாரங்கள் எங்கே...? நீதி …
-
- 5 replies
- 1.7k views
-
-
எனக்குள் ஒருத்தி அரபி மூலம்: நிசார் கப்பானி தமிழில்: அ. ஜாகிர் ஹுசைன் எனது கோப்பையை வாசிப்பவர்கள் நீதான் என் காதலி என்பதைப் புரிந்துகொள்வார்கள் எனது கைரேகையைப் படிப்பவர்கள் உனது பெயரின் நான்கு எழுத்துக்களையும் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள் காதலியின் வாசனையைத் தவிர எல்லாவற்றையும் நாம் பொய்யாக்கிவிடலாம் நமக்குள் நடமாடும் காதலியின் அசைவுகளைத் தவிர எல்லாவற்றையும் நாம் மறைத்துவிடலாம் உன் காதலியின் பெண்மையைத் தவிர எல்லாவற்றையும் நீ விவாதப் பொருளாக ஆக்கலாம் காதலியே! உன்னை நான் எங்கே மறைத்துவைப்பேன்? நாம் இருவரும்…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழீழம் கிடைத்தது போல் ஈழமண் துள்ளியது! எமதீழம் வந்து குந்தி... இந்தியமும் சொல்லியது! அமைதி என்று வந்ததற்காய், கொஞ்சக் காலம்... சொந்தங் கொஞ்சித்தான்... கோலம் போட்டார்கள்!!! சில காலை விடிவதற்குள்... கோலங் கலைந்து, அலங்கோலமான காலங்களில்... அரி மிஞ்சிய அசிங்கங்களை அரங்கேற்ற ஆரம்பித்த பாரதம், பாதகம் தனைமட்டும் பதறாமல் தொடங்கியது!!! பஞ்ச வேண்டுதலோடு பட்டினி கிடந்து போராடி... நலிந்து குறுகி, பார்த்தீபன் மடிந்த போதுதான்... உணர்ந்திருப்பார் மகாத்மா, கோட்சேயின் துப்பாக்கிக் குண்டில்... தான் சாகவில்லையென்று! வீணர்கள் பார்த்து ரசிக்க ...வீணாகிப் போனதோர் தியாகம்!!! பாரத தேசத்தின் பாதகங்கள்... புலி தரித்த ஆயுதங்களையும், பறித்து விட்டல்லோ தொடங்கியத…
-
- 14 replies
- 1.7k views
-
-
பல்லிக்கு வால் பிடிப்பது - பிடிக்காது ....வால் அறுந்தாலும் வாழும் ...வால் பிடிக்காதே மனிதா ...!!!^^^ஓடி ஓடி உழைக்கணும்...முகிலைப்போல் ....ஊருக்கே கொடுக்கணும் ...முகிலைப்போல்.....!!!^^^கெட்டிக்காரமகனையும் ....கெட்டு போன மகனையும் ....ஒன்றாகவே பார்க்கும் குணம் ....அம்மா ........!!!^^^தண்ணீருக்காக போராடினோம் ....கண்ணீர் வருமளவுக்கு தண்ணீர் ...வெள்ள காடு ....!!!^^^தனியே வாழ்ந்தபோது ...தன் அறையை கூட்டாதவன் ...கல்யாணம் செய்தபின் ...வீடு கூட்டுவான் ....!!!&.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை..................கவி நாட்டியரசர்..........................கவிப்புயல் இனியவன்............... ...............யாழ்ப்பாணம்......................
-
- 9 replies
- 1.7k views
-
-
நேசித்து பாருங்கள் முடியவில்லை என்றால் பிறர் நேசிப்பதை யோசித்து பாருங்கள் அன்பு உங்களை அடிமையாக்கி விடும்...
-
- 0 replies
- 1.7k views
-
-
தூங்காதே கண்மணியே-நீயும் தூங்காதே..... தூக்கம் வந்தாலும்-நீயும் தூங்காதே..... தமிழுக்கு நாடுவரும்-வரை தூங்காதே..... பகைவனும் வந்திடுவான்-அன்பே தூங்காதே..... பச்சைப்பிள்ளை என்றும்-பாரான் தூங்காதே..... உறவுகள் இழப்புக் கண்டும்-நீயும் வெதும்பாதே..... அவர்கள் உதிரம் எழுதும்-எம் தாய் நாடே..... பெற்ற அன்னை அவளும்-அன்பே நான்தானே..... என்காயங்கள் மாறுது-கண்ணே உன்வரவாலே..... களம் சென்ற தந்தைவரும்-வரை தூங்காதே..... வீரனின் புதல்வனும்-அன்பே நீதானே..... விரைவில் வளர்ந்துவா-காப்போம் நம்நாடே.....
-
- 11 replies
- 1.7k views
-
-
சிறகு முளைக்கும் முன்னரே..., இறக்கை விரிக்க வைத்த நாள்! பொத்திப் பொத்திப்.., பிள்ளை வளர்த்தவர்கள்..., பெற்ற மனசுகளை இறுக்கிய நாள் ! எங்கு போனாலும் பரவாயில்லை.., இங்கு மட்டும் வேண்டாம் ராசாக்கள் ...! எங்காவது தூர தேசம் போய் விடுங்கள் ! நாங்கள் உயிரோடு இருந்தால்.... நாளைக்கு எங்களுக்கு..., கொள்ளி போட வந்து விடுங்கள்! காணியை விற்றார்கள், கழுத்தில் கிடந்ததை விற்றார்கள்! கைகளில் கிடந்ததை விற்றார்கள்! காதுகளில் கிடந்ததையும் விற்றார்கள்! நாளைய நம்பிக்கைகளை, எஜன்சிகளிடம் கையளித்தார்கள்! உலகப் படத்தையே காணாதவர்கள்.., சில நாட்களுக்குள்..., உலகம் …
-
- 5 replies
- 1.7k views
-
-
இலக்கியமே நீ தூங்கு இழப்புக்கள் எமக்குப் புதிதல்ல இருந்தும் இம் மாவீரனின் இழப்பறிந்து ஏனோ? ஏங்கோ? வலிக்கிறதே ஏன் என்று தெரிகிறதா? மத்தாப் பூவாக மனங்களிலே மலர்ந்திருக்கும் சித்திரச் சிரிப்பொன்று நித்திரையாகியதா? வரலாற்றில் நிலைத்திட்ட வண்ணத் தமிழ் காவியமே மரணத்தை வென்றிட்ட மாவீர மன்னவனே சித்தமெல்லாம் தமிழீழக் கனவோடு உறவாடி வித்தாகி விதையான சத்தியனே நீ தூங்கு காற்றைவிட வேகமாய் கடுகிவரும் வேகமெங்கே? களத்தினில் புயலாக புகுந்திடும் தீரமெங்கே? சீற்றமுறும் சிறுத்தையாய் சினந்தெழும் வீரமெங்கே? மாபெரும் சபைகளில தோள் சேர்ந்த மாலையெங்கே? இலட்சியத்தின் வேட்கையுடன் இறுதிவரை போராடும் இலக்கணங்கள் இங்குண்டு இலக்கியமே …
-
- 7 replies
- 1.7k views
-
-
Mohamed Nizous 80களின் தொடக்கத்தில் இருந்த தொடர்பு முறை தம்பிமார் அறிந்தால் நம்ப மாட்டார்கள். கட்டாரில் வேலை செய்ய கடல் தாண்டிப் போனமகன் ஆபத்து ஏதுமின்றி அங்கு போய்ச் சேர்ந்தாரென்று செய்தி தபாலில் வர செல்லும் ரெண்டு வாரம். ஓரத்தில் கலர் கலராய் உள்ள எயார் மெய்லை ஊருக்குள் கொண்டு வரும் ஆரைப் பற்றை போஸ்ட்மேனை தூரத்தில் கண்டதுமே துள்ளி ஓடிச் சென்று எம்புள்ள கடிதம் இருக்காப்பா எனக் கேட்டு அன்புள்ள தாய்மார்கள் ஆதங்கப் படுவார்கள் ஊரு விட்டு ஊரு சென்று உழைக்கின்ற வாப்பாமார் சேருகின்ற பணத்தை செல்லங்களுக்கு அனுப்ப போஸ்ட் ஒபிஸ் சென்று போர்ம் நிரப்பி பணம் கொடுப்பார். மணி ஓடர் கொண்டு வரும் மணி ஓசை கேட்டு குடும்பத்தில் சந…
-
- 5 replies
- 1.7k views
-
-
உன் உயிர் தந்து எமை கொன்றாய்....... கவிதை - இளங்கவி உன் உயிர் தந்து எமை கொன்றாய்....... கவிதை - இளங்கவி நீர் உமது உயிரைப் போக்க எங்கள் இதயத்தின் மூலையில் நம் குருதிகள் உறையும்...... நீர் உமது லட்சியம் அடைய நம் காதுகளில் உங்கள் இறுதி மூச்சொலி கேட்கும்..... கடலில் தொலைந்த உமது உடலையும்...... நிலத்திலே கருகிய உமது உடலையும்.... தேடித் தேடி நம் கண்கள் தூக்கத்தை தொலைக்கும்..... கணவனுக்கு தன் மனைவியின் அணைப்பு பிடிக்காது அவள் நெருப்பாய் சுடுவாள்...... மனைவிக்கு கணவனின் அணைப்பு விறைத்த உடலுக்கு விருந்துபோல் உணர்வாள்...... காதலனுக்கு இனிக்கும் காதலி அன்று மருந்தாய் கசப்பாள்.... காதலிக்கோ காதலனின் தொடுகை …
-
- 13 replies
- 1.7k views
-