கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை ..... அவர்கள் என்னை விட எம்மை விட .... இரக்கமானவர்கள்.......!!! உணர்ச்சிவசப்பட்டும் எழுதவில்லை ..... அவர்கள் உணர்ச்சிகளை அடக்குவதில் .... என்னை விட எம்மை விட ..... உன்னதமானவர்கள் ......!!! தியாக உணர்விலும் எழுதவில்லை ..... அவர்கள் என்னை விட எம்மை விட .... தியாகத்தின் உச்சமானவர்கள் .......!!! காதல் வயப்பட்டும் எழுதவில்லை .... அவர்கள் என்னை விட எம்மை விட .... காதல் உள்ளம் நிறைந்தவர்கள் .....!!! உடன் பிறப்புகளோடு பிறந்து ..... உண்மையான இரக்கத்தை பகிர்ந்து ..... பருவவயது வரும்போது உடலில் .... பருவமாற்றம் சிறிது மாறும்போது .... தாம் விரும்பும் பருவத்தை விரும்பி .... வாழமுடியாமல் தவிர்க்கும் .... உணர்வுகளை உணர்ச்சிகளை ..... அடக்கி அடக்கி வாழும் ...…
-
- 2 replies
- 521 views
-
-
உலகம் வியந்த உன்னதத் தலைவன் உதித்தநாள். உலகம் வியந்த உன்னதத் தலைவன் உதித்தநாள்,, ஈழத்தின் மண் உயிர் நிலை பெற்றநாள். மேதகு தலைவனின் பிறந்தநாள் போற்றுவோம் வீரியம் புகழ்பட ஆண்டுகள் நீண்டிடும் ஈன்றவள் பார்வதி பாதம் பணிகிறோம்- திரை மீண்டிடும் நாள்வரும் மாயைகள் விலகிடும். தோன்றிய இடரெலாம் தூசாய் மறைந்திடும் 61 வது ஆண்டுகள் தொடர்ந்திடும். தலைவனின் பிறப்பது உலகத்தின் அதிசயம் சத்தியம் உண்மையில் அவர் ஒரு மெல்லினம் நிறமதில் கறந்தபால் போன்றதோர் மனதிடை நிமிர்ந்தவர் சினங்கொள்ள வைத்தது சிங்களம். தமிழனின் சிறுமையை கண்டவர் பொங்கினார் தம்பியாய் சிரிப்பினில் நெஞ்சினில் தங்கினார். தமிழனின் உதிரத்தில் உணர்வின வி…
-
- 0 replies
- 858 views
-
-
குர்து மலைகள்பெண் கொரில்லாக்கள்ஏந்தியிருக்கும் கொடியில்புன்னகைக்கும் சூரியனின் ஒளி அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க ஜூடி மலையிலிருந்து மிக நெருக்கமாகவே கேட்கிறது சுதந்திரத்தை அறிவிக்கும் குர்துச் சிறுவனின் குரல் போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக யூப்ரட் நதியிருகே ஒலிவ் மரம்போல் காத்திருக்கும் பெண் ஒருத்தி இனி அவன் கல்லறைக்கு கண்ணீருடன் செல்லாள் ஓய்வற்ற இக்ரிஸ் நதிபோல தலைமுறை தோறும் விடுதலை கனவை சுமந்து சுதந்திரத்தை வென்ற உம் இருதயங்களில் பூத்திருக்கும் பிரிட்டில்லா மலர்களின் வாசனையை நான் நுகர்கிறேன். குருதி ஊறிய குர்து மலைகளே உமது தேசம் போல் எமது தேசமும் ஒர்நாள் விடியும் எமது கைகளிலும் கொடி அசையும் கோணமலையிலிருந்து உமக்குக் கே…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=5]மழைச்சத்தம் [/size] [size=5]தர்மினி[/size] முன்னொரு காலம் மழை சத்தமிடுவதைக் கேட்டேன். ஓலைக் குடிசையொன்று மூடக்கதவில்லை சன்னல்களற்றுச் சுற்றிவரச் செத்தைகள் அதிலே குறைச்சுருட்டு, பாதிப்புழுக்கொடியல், பற்பொடிப்பைக்கற் சொருகிக்கிடப்பன. சாரைப்பாம்பும் சரசரக்கும். ஓலைக் கூரையில் மழைக்குதியோசை. நடுக்கூரை மழையொழுக டப்…தொப்…டப்…தொப் சட்டியிலும் சத்தம் . தாழ்வாரம் குந்திக் கை நனைக்க முற்றத்தில் குமிழ்கள் ஓடி வெடிக்கும் என் முகத்திலடிக்கும் சாரல். மழைச்சத்தம் காதுகளில் குளிர்ந்து இறங்கி கிணறு தழும்ப நெல்லி முறிந்து முருங்கை சரியும் மாம்பிஞ்சுகள் உதிர்ந்து பரவ பள்ளத்து வெள்ளங்களில் தவளைகள் கத்தும் சற்று நேரத்தில…
-
- 3 replies
- 630 views
-
-
நொண்டி சாக்கும்.. நொள்ளக் கண்ணும்..! [size=1] அவரவர் விளக்கம் [/size][size=1] அவரவருக்கு [/size] [size=1] சாந்த சொரூபியாக [/size][size=1] இருந்து கொண்டால் [/size][size=1] எல்லாம் சாதிக்கலாம் [/size] [size=1] அல்லது தற்பொழுத நிலையை [/size][size=1] தற்காத்துக் கொள்ளலாம் [/size] [size=1] பொழிப்புரை சொல்ல[/size][size=1] கிளம்பி விட்டார்கள் [/size] [size=1] தொல்காப்பியம் [/size][size=1] ஐந்திணை [/size][size=1] மற்றும் சில [/size] [size=1] ஏன் சுற்றி வளைத்து [/size][size=1] சொல்வானேன்..?[/size] [size=1] மந்திரி சபை விரிவாக்கம் [/size][size=1] என்ன செய்யப் போகின்றன [/size] [size=1] என்று உங்களால் [/size][size=1] உத்திரவாதம் தர …
-
- 1 reply
- 673 views
-
-
கார்த்திகை முன்னிரவு -2012 - நிலாந்தன் 27 நவம்பர் 2012 மழைக் குருவியின் குளிர்ந்த பாரமற்ற குரல் வீரர்களைப் புதைத்த காட்டில் சலித்தலைகிறது. ஈமத்தாழியுட் கார்த்திகை நிலவு ஒழியூறிக்கிடக்கிறது. வழிபாடில்லை வணக்கப்பாடலும் இல்லை நாயகர் இல்லை பேருரை இல்லை நனைந்த காற்றில் உருகிக் கரையும் தீச்சுடர் வாசமும் இல்லை. பெயர்க்கப்பட்டது நடுகல் துயிலாதலைகிறது பெருங்கனவு. இரும்பு வணிகர் உலவும் காட்டில் பூத்திருக்கிறது கார்த்திகைப்பூ. நிலாந்தன் கார்த்திகை -2012 www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/art…
-
- 1 reply
- 505 views
-
-
விண்மலர் பூத்தது பூமியிலே.... மண்ணுலகில் பார்புகழும் மன்னவனை வரவேற்க விண்ணதிலே விடிவெள்ளி வேந்தருக்கு வழிகாட்ட தண்மதியோ வெண்சுடராய் கண்விழித்துக் காத்திருக்க மண்ணகத்தில் மன்னவனாய் மரிமகனும் அவதரித்தார் பாவிகளாய் நாமிருக்க பாவமற்ற செம்மறியாய் பூமிதனில் புதுமலராய் புண்ணியனாய் வந்துதித்த தேவனவன் செய்வீக ஜோதிமயமாய் ஜொலிக்க ஆயர்கள் பாடியிலே அன்பு மகன் அவதரித்தார் மாசற்ற மாமரியோ மலர்ந்த மகன் மாதவனின் நேசத்தில்தான் நெகிழ்ந்து நெஞ்சத்தில்தான் வியந்து பாசத்தில் தாவீது குலத்துதித்த சூசையுடன் பூசித்து புதுப் பொலிவாய் பொன்மகனை வரவேற்றார் தேவனின் தூதர்களோ தெய்வீக ஒளியுடனே வானகமும் வையகமும் வாழ்த்தியே ஒலியிசைக்க ஆதவன் வருகை கண்டு அலர்ந்திடும் தாமரைபோல் கானங்கள் பல இச…
-
- 8 replies
- 1.4k views
-
-
தமிழனின் விஸ்வரூபம் திருவள்ளுவர்; தமிழரின் விஸ்வரூபம் தந்தை பெரியார்! ... ஈழத்தின் விஸ்வரூபம் பிரபாகரன்; ஈகத்தின் விஸ்வரூபம் திலீபன்! ... சோற்று வயிறின் விஸ்வரூபம் தோழர் ஜீவானந்தம்; ஆற்று மணலின் விஸ்வரூபம் தோழர் நல்லகண்ணு! ... தரையுலகம் விடுத்து திரையுலகம் பார்ப்போமாயின்… கொடையின் விஸ்வரூபம் கண்டி; கொள்கையின் விஸ்வரூபம் காஞ்சி; நடிப்பின் விஸ்வரூபம் விழுப்புரம்; வசனத்தின் விஸ்வரூபம் திருவாரூர்; ... இசையின் விஸ்வரூபம் பண்ணைப்புரம்; இயக்கத்தின் விஸ்வரூபம் அல்லி நகரம்; பாடலின் விஸ்வரூபம் சிறுகூடல்பட்டி; தேடலின் விஸ்வரூபம் பரமக்குடி; .... ஆம்; ஆழிசூழ் உலக நாயகனாம் - கமல் எனும் கலைஞன்… பரமக்குடியில்; ஒரு பார்ப்பனக் குடியில் - கதர…
-
- 1 reply
- 401 views
-
-
சத்தியம் செய்வோம் இந்த நாளிலே! ------------------------------------------------------ சுக்குநூறாக வெடித்துப் பறக்கும் இதயங்களான எம் தமிழ் உறவே துயரம் நிறைந்த இந்த நாட்களை எப்படி மறப்போம் எங்கே தீர்ப்போம்! மனிதாபிமானம் பேசிடும் உலகோ மனித அழிவுக்கு மகிழ்வு பகிருது தமிழர் குருதியில் கைகளை நனைத்து விருந்தினையுண்டு சிரித்து மகிழுது ! சிறுமை நிறைந்த சீரற்ற உலகை நம்பியதாலே எம் தாயகமிழந்தோம் தாயகம் வாழ்ந்த உறவுகளிழந்தோம் உலகை நம்புதல் நன்மையல்லவே என்பதையல்லவா உலகு சொன்னது எம்மை நம்புவோம் தாயகம் மீட்க தாயமல்லவோ நாம் செய்யும் காணிக்கை மண்ணுள் புதைந்தோர் வேண்டுதல் அதுவே ! கண்ணீர் துடைத்து நாம் கைகளைக் கோர்த்து சத்தியம் செய்வோம் இந்த நாளிலே !…
-
- 3 replies
- 1.1k views
-
-
என் தேசத்து உறவுகளே நாசமாகி கொண்டிருக்கும் -ஒரு நகரத்தின் குரல் இது இப்போ பேரம் பேசப் படுவது - அங்கே உயிர்களும் உடல்களும் நாடு விட்டு நாடு வந்து கூடு இழந்தவர் நாம் -பெரும் பாடு பட்டு நாம் வளர்த்த -நல் தேசியத்தில் பிறந்தவர் நாம் காடு வெட்டி களனி ஆக்கி -நெற் சுடு அடித்து வாழ்ந்தவர் நாம் -இப்போ அநாதியற்று இப்புமியிலே அனாதைகளாகி விட்டோம் - நம் தேசம் ஒன்றின் விடிவிக்காய் பாசங்களை தொலைத்தவர் நாம் கூடு இழந்த குருவிகள் போல் - இத் தெரு கோடியிலே கதறுகிறோம் காப்பரும் ஒபாமாவும் என்ன மகிந்கவின் கைப் பொம்மைகளா...? சிங்களவன் மகிந்கனுக்கு சின்ன வீடா எங்கள் மண் அடிக்கடி அங்கு வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு வாயிருந்தும் கண்ணிருந்தும் -…
-
- 0 replies
- 766 views
-
-
முள்ளிவாய்க்கால் பாலைமரக் கிளிகளே! பாசமுடன் பாடும் பறவைகளே ! சோலையதை விட்டெங்கே சென்றீர்கள்? பாவியரின் 'பொமபரினால்' . பாலைமரம்..வீரைமரம் எல்லாம் வேரோடு சாய்ந்து விழுந்தன..! தாவியதில் ஏறும் மந்தியினம் கூவிவந்த குண்டுகளால் அழிந்தன..! பாட மறந்தன குயில்கள். ஆட மறந்தன மயில்கள் ஓட மறந்தன மான்கள் காடுதரும் சுகத்தில் களித்திருந்த காடைகளும்..சேவல்களும் பாடையிலே ஏறி பறந்தன! தேன்தேடும் வண்டினம் வான்கூவி வந்த 'பொஸ் பரசால்' தாம் கூடும் கானகத்து மரக்கிளையில் எரிந்தன ! கூழைக் கடாக்கள் .... கட்டிய கூடுகளில்... சிறகு முளைக்காத சிறுகுஞ்சுகள் பாவியர்.. கொட்டிய …
-
- 1 reply
- 592 views
-
-
கார்த்திகைத் தீபங்கள். (ஹைக்கூக்கள் 26) வீரத்தின் விழுதுகள் வித்தான முத்துக்கள் விழிக்கும் காந்தள் கார்த்திகையில் உறவாக அழுகையிலும் உணர்வாக எழுகின்றது உங்கள் ஈகம் வாழ்வை தந்தவர்கள் வரலாற்று நாயகர்கள் வருகின்றனர் வழியில் மலர்கின்றது காந்தள் இடிக்கப்பட்டு இயல்புநிலை மாற்றப்பட்டது இடியாமல் 'இன்னும்' பசுமையாய் இன்றும் மனங்களில் மாவீரர்கள் நஞ்சு மாலை சுமந்தவருக்கு மாலையிட்டு மலர்தூவுகின்றோம் - கார்த்திகையில் நெஞ்சில் அவரைச் சுமந்து. துயிலுமில்ல தூயவர்க்காய் துரிதமாக துளிர்க்கிறது தூயதாய்க் கார்த்திகை பூ கனக்கின்ற இதயங்கள் இதமாக பூக்கின்றது கார்த்திகையில் காந்தள் உறங்கும் உறுதிகள் உணர்சிகளின் உண்மை வடிவம் …
-
- 5 replies
- 1.3k views
-
-
எழுகவே !!!!!!!!!!! ஒரு பேப்பருக்காக கோமகன் எழுகவே எழுகவே எட்டுத்திக்கும் எழுகவே !! பட்டி தொட்டி எங்கிலும் போர்பரணி , எழுகவே எழுகவே எழுக எழுக எழுகவே !! கட்டுச் செட்டு என்று வாழ்திருந்த எங்களை பட்டு பட்டு என்று எம்மை நீங்கள் சுட்டு விட்ட போதிலும் , கந்தகமும் பொஸ்பரசும் எம்மை எரித்து விட்ட போதிலும் , எழுகவே எழுகவே எழுக எழுக எழுகவே !!! கொத்துக் கொத்தாய் எம்மை நீங்கள் கொத்திக் குதறி எடுத்தாலும் , வீறுகொண்டு வீரியமாய் நாங்கள், எழுகவே எழுகவே எழுக எழுக எழுகவே !!! ஊனை உருக்கி உதிரம் பாச்சி வளர்த்த எங்கள் தேசமடா….. காட்டு நரியும் கூட்டு ஓநாயும் கூடிக் கொக்கரிக்க விட்டு விடுவோமா சொல்லடா ?? எழுகவே எழுகவே எழுக எழுக எழுகவே !!!!!!! கொண…
-
- 8 replies
- 1.1k views
-
-
கிட்டு உன் பெயர் சொன்னபோதே சட்டென வாயெடுத்து மாமா என்று சொல்லும்-உன் இறப்பின் பின் பிறப்பெடுத்த மழலைகளும். நீ மரணித்துப்போன மனித பிறப்பல்ல, மண்டியிடாத மனிதராய் விடுதலை வாழ்வை வாழ கற்றுக்கொடுத்த வரலாற்று பிறவி, வரலாறுகளை வாரி வாரி கற்றுக்கொண்டாய்-உன் வாழ்வை எமக்கு வரலாறாய் வழி காட்டிவிட்டாய். எங்கள் விடுதலை போருக்கு நீ ஒற்றை பனைமரம். காற்றை கிழித்த சன்னங்கள் சொல்லும்-உன் களங்களின் வீரத்தை, கழுத்தில் தொங்கிய புகைப்பட கருவி சொல்லும்-உன் கலைகளின் காவியத்தை, போரியல் மரபுகளுள் போராடிய போர்மகனே எதிரி சொல்வான்-உன் அன்பான அரவணைப்பை, கிட்டண்ணா கிட்டண்ணா என்று சொல்லி கட்டப்பொம்மனையே மறந்து போனோம், மண்ட…
-
- 0 replies
- 379 views
-
-
கவிதை வேண்டும்! (கருவுற்றிருக்கும் தமிழ்ப்பெண்ணின் தாகங்கள்,) கவிதை ஒன்று வேண்டும் - தமிழ்க் .......... கவிதை ஒன்று வேண்டும் - நான் செவிமடுத்து மனம் சிலிர்க்கும் வண்ணமொரு .......... சின்ன கவிதை வேண்டும்! சோலை ஒன்று வேண்டும் - அங்கு .......... தூய தென்றல் வேண்டும் - இளங் காலை தோறும் தமிழ்ப் பண் வழங்கி எனைக் .......... கருணை செய்ய வேண்டும்! இசை ஒலிக்க வேண்டும் - தமிழ் .......... எனை மயக்க வேண்டும் - புது விசைபடர்ந்ததென அழகு தமிழ் வரிகள் .......... வெறி கொடுக்க வேண்டும்! பாட்டுச் சொல்ல வேண்டும் - இசை .......... பாய்ந்து செல்ல வேண்டும் - அதைக் கேட்ட படியெனது கருவில் வளர்மழலை .......... கிறக்கம் கொள்ள வேண்டும்! வாத்தியங…
-
- 2 replies
- 1.3k views
-
-
பரந்த வெளியிலே ஒற்றை மரமாய் தனித்து நின்றாலும் இரைதேடும் பட்சிகளுக்கு தங்குமிடமாகிறது மேற்கே மறையும் சூரியனும் தெளிந்த நீரோடையும் மெல்லென் தழுவிச் செல்லும் காற்றும் நீரிலே தோன்றும் சூரிய ஒளியும் இரவை நோக்கி நகர்ந்து சென்று உனக்கும் எனக்குமாய் நாளை எனும் உதயம் ஆழ்ந்த் நம்பிக்கையோடு விடிவு பிறக்கும்.
-
- 3 replies
- 925 views
-
-
எழுதாத பக்கமொன்று எனக்காக வைத்திரு! வசந்தத்தைத் தேடும் குயிலே! - உன் வாசல் வருவேன். பாலையை குயிலொன்று வசந்தமென்று அழைப்பது.... அமிழ்த மொழிக்கு எப்படிச் சாத்தியமாயிற்று? குளிர்ச்சி தரும் தென்றல் நான் பேசும் பொழுதில் மட்டும், அனல் கொட்டித் தழுவுவதை - உன் காற்றாடி வேகத்தால் காதிற்குள் கேட்டுள்ளேன். உன் நெஞ்சறை யாகத்தில் தீய்ந்த மணம் உண்மைதான், இருப்பினும் பல பீனீக்ஸ் சிறகடிப்பின் புழுதியைத்தானே நாசி உணர்கிறது. நெருஞ்சியை நொறுக்கி சிரிக்கின்ற பூக்கள் உனக்கானது... உணர்கின்றேன். என்றோ ஒருநாள்...... உனைக்காண வருவேன். எனக்காக......., இதயத்தில் எழுதாத பக்கமொன்று வைத்திரு. பனித்துருகும் விழிக்குளத்தில் குளித்தெ…
-
- 8 replies
- 2.3k views
-
-
எல்லா இடங்களிலிலும் மனிதர்கள் மனிதர்களை கொல்கின்றனர் நகரங்கள், பள்ளிகள், கிராமங்கள் எல்லா இடங்களிலும் மனிதர்கள் மனிதர்களை கொல்கின்றனர் எல்லா இடங்களிலும் போர்களை நடத்துகின்றனர் குழந்தைகளை கொல்கின்றனர் சிறுவர்களை கொல்கின்றனர் பிறக்க இருக்கும் சிசுக்களைக் கொல்கின்றனர் குழந்தைகளின் தாய்மார்களை கொல்கின்றனர் கதறும் அப்பாக்களை கொல்கின்றனர் ஓடி ஒழியும் அப்பாவிகளைக் கொல்கின்றனர் அவர்கள் கூடிக் கூடிக் கதைக்கின்றனர் போர்களை நிறுத்துவதற்கு கூடுகின்றனர் பின் மீண்டும் போர்களை எப்படி திறமையாக நடத்துவது என்று கதைக்கின்றனர் போரால் சிதையும் மனிதர்கள் பற்றி கதைக்கின்றனர் பின் சிதையாது மிச்சமிருப்பவர்களை கொல்வது எப்படி என்று கதைக்கின்றனர் ஒருவர் இறப்பத…
-
- 13 replies
- 1.1k views
-
-
யுத்த மேகங்கள் கலைந்து-வானில் குண்டு மழைகள் ஓய்ந்து-அடங்கி மரணத்தின் ஓலங்கள் மறைந்து-ஓடி இரத்ததின் ஆறுகள் இமைகள்- மூடி நரபலி மனிதனின் பற்கள்-விழுந்து புரையோடிய மக்கள் கொள்கைகள்-மாறி இன்றுதான் பிறந்தோம் என்று-கூறி பறவைகள் வானில் இனியகானம்-பாடி பொன்மணி நெற்கள் கொழித்து-விளைந்து பிறந்த் பூமியில் உறவுகள்-கூடி இனிமையாகும் அந்நாள்-எந்நாள்
-
- 4 replies
- 1.2k views
-
-
தில்லைநடராஜன் வாசற் திருப்படியில் தொல்லையம்பலங்கள் ஆடுகிறார் திருக்கூத்து எல்லைகடந்துவிட்ட பித்து நிலைபோலும் கல்லைக் கடவுளென்று தம் தேகத்தையாட்டுகிறார். பாலைக்குடித்த பிள்ளை யாரென்று மாலையெதிர்பார்த்து மேடையிலே நின்றமகன் சால்வை போனவிடம் தானுமறியாமல் சதுர்கூத்து ஆடிவிட்டான்; சிவனடியானாகிவிட்டான். கனியாக் காதலுக்கு அடிக்கின்ற புகையிதுவோ? கடவுள் வரமருளி ஆடுகின்ற கூத்திதுவோ? செப்படி வித்தைக்கு சிவனில்லம் சத்திரமோ ? மூளைப்பிசகுக்கு கலையாட்டம் மருத்துவமோ? - தயா ஜிப்ரான் -
-
- 1 reply
- 1.2k views
-
-
குண்டு மழை பொழிந்து குருதி ஆறு காணும் ஈழம் ஈன்றெடுத்த என் இனிய சிநேகிதியே உறவு தேடி வந்தாயா இல்லை உதவி தேடி வந்தாயா நம் மொழி பேசிய மக்கள் நம்மொடு இல்லையடி அமெரிக்க ஆங்கிலம் அழகாகப் பேசுவேன் தாய் மொழி கேட்டால் பேய் விழி விழிப்பேன் மென்பொருள் உறவில் மெய்ப்பொருள் மறந்து வீறுநடை போடும் சீறுடைப் பிணமடி நான் அடுக்குமாடி குடியிருப்பின் அங்கமாய் ஆறு மாத குழந்தை அப்பா என் முகம் பார்ப்பது தப்பாது இரவு பத்து மணி அவள் அம்மாவை பார்ப்பது அரை மணி நேரம் முன்னதாக அச்சடித்த காகிதத்தின் அவசர தேவைக்கு அகுறிணை யாகிப்போன உயர் திணையடி நான் திரைப்படம் இல்லையென்றால் திகட்டாது என் வாழ்க்கை நாளொரு "தினம்" கொண்டாட வேண்டும் …
-
- 9 replies
- 1.6k views
-
-
கண்ணீர் நொடிகள் - என்.சுரேஷ். சென்னை கல்யாணி கவரிங் கல்யாணி கவரிங் என்ற விளம்பரம் கேட்டு கவரிங் நகை வாங்கச் செல்லும் ஏழை கல்யாணி நிஜ நகைகளுக்காக ஏங்கிக் கலங்கும் நொடிகள்! விதவையாகிப்போன அந்த பூக்காரி அக்காவின் நினைவுகளும் கனவுகளும் மனதை குத்தும் நொடிகள்! காதலனும் காதலியும் பிரிந்த பின் சந்திக்க அவர்தம் கணவனுக்கும் மனைவிக்கும் முன் ஒருவருக்கொருவர் அறியாதவர்கள் போல் நடித்துத் துடித்த தவிப்பின் நொடிகள்! சொந்த இனத்தின் அழிவக் கண்டும் சட்டத்தால் வாய்ப்பூட்டிடப்பட்டும் அமைதியின் வேடத்தில் தவமிருக்கும் வீரத்தின் எழுச்சி எரிமலை கண்ணீரால் துடிக்கும் நொடிகள்! பட்டியலிட்டால் அடங்கா எத்தனை எத்தனை கண்ணீர…
-
- 4 replies
- 1.1k views
-
-
FACEBOOK பாவித்துப்பார்... உன்னை சுற்றி REQUEST தோன்றும்... நட்பு அர்த்தப்படும்...... நாளிகையின் நீளம் குறையும்.... உனக்கும் கவிதை வரும்... டைப்பிங்க் வேகமாகும்... INTERNET தெய்வமாகும்... உன் கைவிரல் பட்டே KEYBOARDS உடையும்... கண்ணிரண்டும் கமெண்ட் ஐ தேடும்... FACEBOOK பாவித்துப்பார்... நித்திரை மறப்பாய்... 6 முறை LOG I...N பண்ணுவாய்... LOG OUT பண்ணினால் நிமிசங்கள் வருஷங்கள் என்பாய்... LOG IN பண்ணினால் வருஷங்கள் நிமிசம் என்பாய்... காக்கை கூட உன்னை கவனிக்கும்... ஆனால் யாருமே உன்னை கண்டுகொள்ளவில்லை என் உணர்வாய்... உனக்கும் நண்பருக்கும் இடையில் இனந்தெரியாத உறவொன்று உருவாகக் காண்பாய்... இந்த போஸ்ட், இந்த கமெண்ட், இந்த லைக், எல்லாம் FACEBOOKஐ கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்... F…
-
- 1 reply
- 1k views
-
-
கனவான உறக்கங்கள் கலைவதெப்போ? எழுதுங்கள் எம் இதயதாபம் எங்கும் எரிகிறது விடுதலையின் தீபம் எம் இனத்திற்கு யாரிட்டார் சாபம் நாம் ஏதிலிகளாய் அலையும் காலம் நீல வானத்தில் நிர்மலமாய் அமைதி அங்கு கானங்கள் பாடுது பார் குருவி இச் சிலுவைகளோ அடையாளச் சுருதி இங்கு சிந்துதுபார் செந்தமிழன் குருதி எம் காதாரம் ரீங்காரம் பாடும் சில் வண்டுகளின் ஓங்கார ஓசை அங்கு தூரத்தில் கேட்கும் வெடியோசை எம் துடிக்கின்ற வீரத்தின் பாசை தணலாகக் கொதிக்கிறது நிலவும் தீக் கனலாகச் சுடுகிறது தென்றல் அதி காலையிலே சிந்தும் பனித் தூறல் எம் கல்லறைக்கு அதிகாலை பூசை எம் கனவான உறக்கங்கள் கூட விரைவில் கலைந்து விடும் செய்திவரும் காலை இது கணநேரம் ஓய்வெடுக்கும் வேளை ஈழ…
-
- 2 replies
- 1.3k views
-
-
" பசி " ... என் பசி யாரென்று தெரியுமா...? உங்களுக்கு...? பசி என், " அழையா விருந்தாளி "... சாதி,மதம்,இனம்,சமயம் பார்க்காத சமத்துவ விருந்தாளிதான், ஆனால், இவன் என் வீட்டில் மட்டுமே இலைப்பார ஆசைப்படுகிறான், இவனுக்கு நான் என்ன விருந்து படைக்க..? ஒட்டு துணியில் மானம் காக்கும் என்னைபோன்றோர்.. ஒட்டு மொத்தமாய் வயிறு நிறைந்ததே இல்லை...! எங்கள் வீட்டு கதவை மட்டும் தட்டும் இந்த விருந்தாளி, கல்லாய் கிடக்கும் கடவுள்களை சீண்டி கூட பார்க்காதோ..? சாமிக்கு படைத்துவிட்டு நீங்கள் வாங்கும் ஒரு உருண்டை பிரசாதத்தில் சிறு உருண்டை கொடுத்து இருந்தாலும் பசி போக்கி இருப்பேனோ..? அப்போது " பசியாற்றுதல் " என்ற…
-
- 6 replies
- 1.2k views
-