கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கடற்கரையில் நாம் நடந்த சுவடுகளை கடலலை அழிக்கும்! கண்ணே நீ என் இதயத்தில் நடந்த சுவடுகளை யாரழிப்பார்? *********** மனசுக்குள் மத்தாப்புக் கொளுத்தியவள்... மனசையே கொளுத்துவாள் என்று யார் அறிவார்? *********** வீணை அங்கே விரல்கள் இங்கே இராகத்தை மட்டும் ஏனடி திருடிக் கொண்டாய்? *********** என் இதயச் சுவற்றில் உன் ஞாபகச் சிலுவைகள்! எப்போதடி உயிர்த்தெழும்?
-
- 16 replies
- 6.5k views
-
-
ஈரமான ரோஜாவே மலரே! தென்றல் தேடிய முகவரி நீ. முகவரி மாறிய தென்றலின் முதல் வரியும் நீ. தென்றல் தீண்டிட நீ மலர்ந்தாய் தென்றல் உன்னைத் தொட்ட போது நீ நிலை தடுமாறினாய் தென்றல் சுமந்த நீரால் நீ நனைந்தாய். தென்றல் உன்னை அணைத்தபோதும் நீ ஏனோ தலை குனிந்தாய். மழை கழுவிய மலரே உன் வாசம் போனதாய் வருந்தாதே வாழ்வு முடிந்ததாய் புலம்பாதே மலர் தழுவிய என்னில் சுவாசமாய் உன் வாசம் இன்று நான் மண்னோடு உன் வாசம் மீண்டும் காற்றோடு நாளை நீ என்னோடு உன் வாசம் அதே காற்றோடு கலங்காதே உனக்கும் எனக்கும் மட்டுமல்ல உலகிற்கே இதுதான் நியதி
-
- 19 replies
- 6.5k views
-
-
உலகே உனக்கு கண் இல்லையா? என் இனமே நாம் போராடினால் தோற்றுபோகோம்.துரோகிகளின் துரோகத்தினால் அல்லவா எம் இனம் அழிந்துகொண்டிருக்கிறது. வீரபாண்டிய கட்டபோமனுகே ஒரு எட்டப்பன் இருக்கும் போது பதவிக்கும் பணத்துக்கும் விலை போகாத நம் தேசிய தலைவனுக்கு ஆயிரம் எட்டபர்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. யேசுவிற்கு கூட ஒரு யூதாஸ் துரோகிகளே இல்லாத வரலாறே இருக்காதா? கூட இருப்பவர்கள் தானே குழி பறிகிறார்கள் இறைவா இன்னுமா இவர்களை நீ பார்த்துக்கொண்டு இருக்கிறாய்? அழித்துவிடு அழிந்துகொண்டிருக்கும் எம் இனத்தை இவர்கள் இன்னமும் அழித்துக்கொண்டு இருக்கும் எம் இனத்தை அழிபவர்களை அழித்துவிடு எங்கள் போராளிகளே உங்கள் மனத்துணிவும் ஆற்றலும் எமக்க எம் சந்ததிக்காக நீங்கள் சிந்திய ஒவொரு து…
-
- 0 replies
- 6.5k views
-
-
நல்ல உச்சி வெய்யில்.. நடந்து வந்த கிழவிக்கோ பெரும் களைப்பு.... அங்கிருந்த திண்ணையில் ஓய்வாக அமர்கிறார்... பசி.... தாகம்.... அங்கும் இங்கும் பார்க்கிறார்.... கண் அயர்ந்து விட்டார். அப்போது அவ்வழியே வந்த மனிதர் அவரை இனம் கண்டு கொண்டார். பசி, தாகம்.... பார்த்தவுடன் புரிந்தது. பாட்டி.... எனது வீட்டுக்கு வாருங்கள்.... உண்டு களைப்பாறி செல்லலாம் என்கிறார். பாட்டியும் புறப்படுகிறார். அவனது மனைவியோ.... ஒரு அரக்கி.... அவனுக்கே சமைத்து உணவு கொடுக்க மாடடாள். இன்று இந்த கிழவி வேறா? நம்பிக்கையில் அழைத்துச் சென்றான். திண்ணையில் இருக்க வைத்து உள்ளே செல்கிறான். மனைவியை மகிழ வைத்து.... அதன் பின்னர் சமைக்க வைக்க வேண்டுமே... பெரும் பிரயத்த…
-
- 0 replies
- 6.5k views
-
-
மறக்கத்தெரியவில்லை ........ உயிரே உயிரே ஏன் மறந்தாய் எனை ? உறவுகள்தான் சொந்தமில்லை நீயும் இல்லையா எனக்கு? உன்னுடன் பேசாவிட்டால் நான் ஊமையடி உன்னை பார்க்காத கண்களும் குருடே எனக்கு ஆலையில் இட்டவை அழியாமல் வந்திடுமோ ? காதலில் விழுந்த மனம் காயமில்லாமல் போய்விடுமோ ? காவியக் காதலது காதலே கேட்டது கண்டதும் காதலது அனுபவித்துப் பார்த்தது என் உயிரது மூச்சினிலே இருக்குமென்றால் மூச்சது உன் பேச்சினிலே இருக்குதடி மௌனம்தான் உன் பதிலா எனக்கு மரணமே அதற்கு பரிசு எனக்கு உன் பேச்சு கூட்டியது என் ஆயுளை இப்போது உன் மௌனம் கொல்கிறது என் ஆயுளை போகின்றாயே எனை விட்டு நெடுந்தூரம் போய்விட்டது என் மனம் அத்தூரம் பிடிவாதம் மறைக்கின்றதா உன் கண்ணை பிடி…
-
- 42 replies
- 6.5k views
-
-
சின்ன சின்ன ......ஆசை வானத்து நிலவை பிடித்துவிட ஆசை முகில் மீது சவாரி செய்ய ஆசை பூங் காற்று போல உலகம் சுத்தும் ஆசை மழைத்துளியை மாறி தாகம் தீர்க்க ஆசை சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை ...... தமிழ் ஈழ மண்ணில் பிறந்து விட ஆசை வானத்தில் சிட்டாய் பறந்துவர ஆசை அன்னையின் மடியில் தூங்கி விட ஆசை முற்றத்து மண்ணில் விளையாட ஆசை துள்ளிவரும் மானை பிடித்து விட ஆசை சவர்க்கார குமிழி பிடித்து வர ஆசை நீலக்கடல் நீரில் நீந்தி குளிக்க ஆசை படித்த பள்ளி எண்ணி நினனவு மீட்க ஆசை பனைமர நுங்கும் ,பழமும்தின்ன ஆசை மாமரம் ஏறி காய் பறிக்க ஆசை முக்கனியும் சுவைக்க மீளவும் ஆசை ........... ************ தலைவனின் மண்ணை முத்தமிட ஆசை ****…
-
- 7 replies
- 6.4k views
-
-
விடைபெறும்வேளை விடைபெறும்வேளை நெருங்கிவிட்டதா எமக்கு என் கண்ணீர் உன் கண்களில் உன் கண்ணீர் என் கண்களில் இடம் மாறப்போகின்றோம் இதயங்கள் பரிமாறாமலே இப்படி இதய தேசத்தில் உன் நினைவுகள் நிறைய இருந்தாலும் எல்லாம் சொல்லபோவதில்லை உனக்கு இக் கவிதை இதுபோல இக் கவிதை சுமக்காத பல நிகழ்வுகள் உன்னுள்ளும்.......... என்னுள்ளும்........... என்ன தான் நான் எழுத உனக்கு என்னையே எழுதி கொடுக்க நினைத்த பின் எனக்கு உன்னிடம் இருந்து நினைவு பரிசு எதற்கு உன் நினவுகளே நீ எனக்கு தந்திருக்கும் பரிசு தானே பிரிவதற்கு துடிக்கும் உன்னை விட எனகென்றும் நிரந்தரம் பிரியமான உன் பிரியாத நினைவுகளே அன்பே சேர்ந்திருந்த பல பொழுதுகளில் ந…
-
- 48 replies
- 6.4k views
-
-
பணத்திற்காய் சீதனச் சந்தையில் உனது வாழ்க்கையை பொருளுக்காய் விற்கும் ஆண் ஜாதியே- நாம் உனக்காய் குரல் கொடுக்கவா? இந்த கோழைகளுக்காக குரல் கொடுப்போம் சீதனம் என்னும் கொடிய அரக்கனை கொன்றொழித்திடுவோம்... பெண்ணே விழித்தெழு! பேரம் பேசி தனது வாழ்க்கையை விற்கும் நிலையில் இந்த ஆண்மகனா? அவமானம்..... அவமானம்.... கேவலம் கேவலம் உன் நிலை கேவலம் பணத்திற்காய் விலைபோகிறவள் விபச்சாரி பணத்திற்காய் வாழ்க்கையை விற்பவன் நீ மட்டும் எந்த வர்க்கம்? நீங்கள் விலைக்கு வாங்கி விளையாட நாங்கள் பொம்மைகள் அல்ல -நாங்கள் மானமுள்ள, உணர்வுகொண்ட மாதர்கள் பணம் செலுத்தி,பல் இளித்து பஞ்சனை நாங்கள் தேடவில்லை மானம் உள்ள ,எங்களுக்கேற்ற மகராஜனைத் தேடுகின்றோம்.…
-
- 34 replies
- 6.4k views
-
-
காவியக் கவிஞ்ஞன் நான் என் எழுத்துக்கள் ஆயிரம் பேரைப் போராளியாக்கியது அவகளை உலகம் பயங்கரவாதியாக்கியது.. என் உணர்ச்சிப் பாடல்கள் ஆயிரமாயிரம் பேரைப் போர்க்களமேவச் செய்தது - மாவீரராக்கி அவர்தம் குடும்பத்தை அநாதையாக்கியது.. என் சிந்தனைச் சிதறல்கள் குஞ்சு குருமனையெல்லாம் அழித்து எம் குலப்பெண்டிரைக் கைம்பெண்ணாக்கியது எஞ்சியவர்களை அகதியாக்கியது.. மாபெரும் வீரனை முருகனாய் பாவனை செய்து முள்ளிவாய்க்காலில் கோம(வ)ணக் கடவுளாக்கினேன்.. இன்று???????? அவன் அவதாரம் எடுப்பான் என் வயிற்றுப் பிழைப்பு நடக்க அவன் வருவான்.. வரவேண்டும் .!! சூரியத்தேவனாய் சுடர் விட்டழிக்க அவன் வரவேண்டும்...!!!
-
- 54 replies
- 6.4k views
-
-
தமிழா! நீ பேசுவது தமிழா? அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்... அழகுக் குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்... என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்... இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்... தமிழா! நீ பேசுவது தமிழா? உறவை 'லவ்' என்றாய் உதவாத சேர்க்கை... 'ஒய்ப்' என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை... இரவை 'நைட்' என்றாய் விடியாதுன் வாழ்க்கை இனிப்பை 'ஸ்வீட்' என்றாய் அறுத்தெறி நாக்கை... தமிழா! நீ பேசுவது தமிழா? வண்டிக்காரன் கேட்டான் 'லெப்ட்டா? ரைட்டா?' வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி 'பைட்டா?' துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் 'லேட்டா?' தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா? தம…
-
- 2 replies
- 6.4k views
-
-
<span style='font-size:30pt;line-height:100%'>காவியத் தூது கிளியினைத் தூது விட்டால்.. கிறுக்காய் ஆகுமென்றாய்! கிள்ளை மொழியினைத் தூது விட்டால்.. கிளர்ச்சியைத் தூண்டுமென்றாய்! நிலவினைத் தூது விட்டால்.. களங்கம் நிறையுமென்றாய்! நீள்கடலினைத் தூது விட்டால்.. ஆழமோ புரியாதென்றாய்! மலரினைத் தூது விட்டால்.. மதுவினைச் சொரியுமென்றாய்! மானினைத் தூது விட்டால்.. மருட்சியைப் பெருக்குமென்றாய்! முகிலினைத் தூது விட்டால்.. முனகலே மிஞ்சுமென்றாய்! சகியினைத் தூதுவிட்டால்.. சச்சரவு ஆகுமென்றாய்! தென்றலைத் தூது விட்டால்.. திசை மாறிப் போகுமென்றாய்! திரு மடலினைத் தூது விட்டால்.. அந்தரெக்ஸைக் காவுமென்றாய்! தொலைபேசித் தூ…
-
- 43 replies
- 6.4k views
-
-
1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் ராஜிவ்காந்திக்கு இடப்பட்ட சாபம் இது அவர் அறம் பாடியது போலவே ராஜிவ்காந்தி உடல் சிதறி இறந்தார். 'இட்ட சாபம் முட்டுக' என்ற பாடலை இங்கே இணைக்கிறேன். இப்பாடல் ராஜீவ் காந்தி கொலைசெய்யப்படுவதற்கு சுமார் மூன்று ஆணடுகளுக்கு முன்பே, ராஜீவ் அவர்களின் சாவு இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சினத்துடன் பாவலரேறு அவர்களால் அறம் பாடப்பட்டது என்பதைக் கவனிக்க. மே 21, 1991 அன்று இன்றைக்குச் சரியாக இதே நாளில் ராஜீவ் கொலை நடைபெற்றது. வரலாறுகள் என்றும் மறப்பதற்கு அல்ல. சிங்களக் கொலைஞன் செயவர்த்தனன் எனும் வெங்கணன் விரித்த வலையினில் விழுந்து செந்தமிழ் இனத்தைச் சீரழித்திடவே முந்து 'இரா சீவ்' எனும் முன்டையின…
-
- 39 replies
- 6.3k views
-
-
அப்பா எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா… முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை… அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என… கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..? சிறுவயதில் என் கை…
-
- 14 replies
- 6.3k views
-
-
வஞ்சிக்கொடியே வாஞ்சையுடன் என்னோடு கொஞ்சிப் பேசிப் பேசி கொள்ளை கொண்டவளே எனக்கே தெரியாமல் என்னுள் புகுந்து என்னையே கேட்காமல் எண்ணில்லா முத்தங்கள் தந்து என்னை கோபப்படுத்தினாய் என்னை செல்லமாக அழவைத்தாய் என்னுள் உனைத் தேடிக்கொண்டே உன்னில் எனை தேட வைத்தாய் கண்டேன் எனை உன்கண்ணில் கொண்டேன் அளவில்லா இன்பம் மீண்டும் எனை நீங்கி சென்றாய் உன் இருப்பிடம் சற்றேனும் எதிர்பாராபோது சினுங்கிய தொலைபேசியில் உன் அன்பான குரல் கேட்டு என் கையில் இருந்த லொலிபொப் புளிச்சது ஏன்?
-
- 51 replies
- 6.3k views
-
-
எழு! எழு! பெண்ணே!! எழு! எழு! எழு! எழு! பெண்ணே!! எழு! எழு! எதிரிகள் மனபலம் உன்னடி விழ விழ எழு! எழு! பெண்ணே!! எழு! எழு! காப்பினைத் தந்திடா... உலகமும் விழிக்கட்டும்! தூக்கிய பொருளினால் துயர் துடை! களங்களில் நின்று கலிகளை வெல்! வெல்! புதுப்பலம் படைத்துப் பெண்சினம் சொல்! சொல்! வெஞ்சினம் கண்டு வேற்றுவர் ஓட... பிஞ்சுகள் பிய்த்தவர் பிணமாய் வீழ... நஞ்சினை அணிந்தவர் வாகை சூட... வஞ்சியர் வீரம் வான்வரை ஆள... எழு! எழு! பெண்ணே!! எழு! எழு! எதிரிகள் மனபலம் உன்னடி விழ விழ எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!! கனல் விழி வீசு! கவிஞனின் கோல்கள் கர்வம் ஏற்றி எழுதட்டும்! புனலாய்க் கிடந்தவள் கனலாய்ச் சிவந்திட காலம் காட்…
-
- 26 replies
- 6.3k views
-
-
{சோழன் ஆண்ட தமிழன் வாழ்ந்த பூமியில் கப்பலேறி குடியேற வரும் அரபுத் திமிர்கள்.. பேரீச்சை மரங்கள். ஈழத்தின் கிழக்கின் காத்தான்குடி என்ற ஊர் இன்று முழு முஸ்லீம் கிராமமாகி அரபு வடிவம் எடுக்கிறது} அரபிய மணற்படுக்கையின் அற்புதங்களே ஈச்சை மரத்து வேர்களே.. கூலிகளாய் நாம் அங்கு சிந்திய வியர்வை சிதறிய நீரில் வளர்ந்து பெருத்த திமிர்களே..! எட்ட வளர்ந்து கனி தரும் போது ஒட்டகமாய் தாங்கி நின்று பறித்துப் பெட்டியில் அடைத்து ஏற்றி விட்டு நாம் கூனி விட்டோம்..! எஜமானர்களின் எண்ணெய் காசில் நீரோ நிமிர்ந்து நின்று மினுமினுக்கிறீர்..! விமானம் ஏறி ஆசை கொண்டு அரபுலோகம் வர தங்கை மீது பழிமுடித்து அவள் தலை கொய்தீர்..! நீரோ.. வேரூன்ற கப்பலேறி தமிழீழம் வருகிற…
-
- 82 replies
- 6.3k views
-
-
யாழ்க்கள உறவுகளே! இது ஒரு ஆரம்பம். வாருங்கள் எதிர்ப்பாட்டு எடுக்கலாம். ஏற்கனவே இத்தகைய பாடல்கள் இங்கு உலா வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு உங்களுக்குப் புரியும் வகையில் சில ஆக்கங்களை இங்கு இடுகின்றேன். இந் நிகழ்வு கவிதை அந்தாதி போன்று விரும்பியவர்கள் எழுதலாம். உதாரணம்1 ஆதி, காப்பாய் வெண்ணிலா கடம்பவன புூங்கொடியே பார்ப்பாய் பாவியேன் படும்பாட்டை பரிதவிக்கும் நிலைப்பாட்டை கேட்பாய் என் அழுங்குரலை கிடந்து உழலும் யாழ்க்களத்து வால்களின் வலியிருந்து தண்நிலவே ஆதியின் உயிர் காப்பாய். சுயிந்தன், காக்காய் வெண்ணிலவே காக்காய் பிடித்திடினும் பார்க்காய் பாவியரை பகடைக்காய் ஆக்கிடுவார் கேட்காய் அழுங்குரலைக் கேள்வியிலே காய்த்திடுவார் வால்வலியே வாழ்வாகட்டும்…
-
- 45 replies
- 6.3k views
-
-
காற்று வந்து காது துடைத்து கலைத்துப் போகும் பஞ்சு மேகம்...!! விண்ணில் கோடி விதைகள் கொண்டு விதைத்த பருத்தி பஞ்சு மேகம்...!! நட்சத்திர மழலை கண்ணாமூச்சி ஆட வைக்கும் பிஞ்சு பஞ்சு மேகம்..!! நனைந்த நிலவு நுதல் முற்றும் சுற்றிக் கொள்ளும் பஞ்சு மேகம்...!! பகலவன் கொஞ்சம் இளைப்பாறிச் செல்லும் சொகுசு பக்கணம் பஞ்சு மேகம்...!! கடலோடு மணம் கொண்டு கருவாகி மழை ஈன்று பஞ்சரிக்கும் பஞ்சு மேகம்...!! வானத்தோடு மின்னல் சண்டை அமைதித் தூது வெளிர் பஞ்சு மேகம்...!! அண்டையோடு சண்டையிட்டும் அன்பு குழகி ஆர்ப்பரிக்கும் தரணி மெச்சும் பஞ்சு மேகம்...!! அர்த்தங்கள்: பஞ்சரித்தல் - கொஞ்சிப் பேசுதல்…
-
- 27 replies
- 6.3k views
-
-
ஒருவருட காதல் வருடப்பிறப்பு அன்று கோயிலில் திருவிழாக் கால மக்கள் திரளுள் கருவிழியாள் உன் பார்வையால் அரும்பியது என்னுள் காதல் தைப்பொங்கல் வரும்வரையில் தையலுன் பின்னால் தினமும் அலைந்த என் காதலுள் தொலைத்தாய் உன் இதயத்தை மாசி வந்ததும் நாமிருவரும் பேசி பேசி காதல் செய்தோம் பங்குனி மாதத்தில் உன் சங்கு கழுத்தில் முத்தமிட்டேன் சித்திரை மாதம் வந்ததும் நித்திரையின்றி புரண்டேன் வைகாசி பூத்ததும் நாமிருவரும் கைராசி பார்த்து சந்தோசப்பட்டு ஆனி வந்ததும் உல்லாசமாக தேனீக்கள்போல பறந்து திரிந்து ஆடி வந்ததும் இருவரும் பாடி மகிழ்ந்தோம் ஒருவருக்கொருவர் ஆவணி உதித்ததும் உனக்கு நான் தாவணி வாங்கி தந்து அழகுபார்க்கையில் புரட்டாதியு…
-
- 30 replies
- 6.2k views
-
-
உறவு உணர்வுகளை புரிந்துகொள்ளும் உன்னதமான மொழி இது பிறப்பு முதலாக நட்பு முடிவாக பல பரிமாணம் கொண்ட பன்முகக் கண்ணாடி இது தாயுடன் சேய் கொண்ட உறவும் உள்ளத்துடன் நீ கொண்ட உறவும் உயிருடன் உடல் கொண்ட உறவும் இயற்கையின் படைப்பினில் இமயமாய் நிற்பவை ஆனால் இன்று இயற்கையுடனான உறவு இயந்திரமானது இயந்திரதுடன் உறவு இயல்பானது மனிதனுடனான உறவு மறந்து போனது மனிதம் இங்கே மரத்துப்போனது உலகம் சுருங்கலாம் ஆனால் உறவுகள்??? உழைப்பின் உதவியை நாடினால் வாழ்வின் வாசல் வசப்படும் உறவுப் பூவை முகர்ந்தால் வாழ்வின் வாசம் புலப்படும் மானிடா..... உறவுகள் வாழ்வின் வேர்கள் உலகுடன் நீ கொண்ட உறவு முதல் மண்ணுடன் நீ கொண்ட உறவ…
-
- 3 replies
- 6.2k views
-
-
இரண்டடிக்குள் இரண்டரை கோடி! நேற்றுத்தான் அவன் வீடு கட்ட கண்டேன்..... குடும்பத்தோடு வந்து இன்று குடிபுகுந்து விட்டான்! அவனும் கறுப்பு ..அவளும் கறுப்பு.. மகனும் கறுப்பு..மகளும் கறுப்பு... ஆடம்பரம் ஏதுமற்ற வீடு... அருகில் நடப்பதை பற்றி எந்த அக்கறையும் அங்கில்லை... மின்சாரம் இல்லையென்ற கவலை இல்லை.. மேதாவி தனமான பேச்சுகளும் அங்கில்லை... பசி என்று வந்துவிட்டால்- காதலுடன்.. அவன் இதழால் அவளுக்கு ஊட்டிவிட.. தான் பெற்றதை பிஞ்சுகளுக்கும்- இதழாலேயே பரிமாற ஒரு அள்ளு உணவுக்குள் நான்கு உயிர்கள் பசியாறுமா? அழகில்லைத்தான்..அசிங்கம்தான் .. ஒளித்திருந்து பிறர் வாழ்வை பார்ப்பது.. உதவாத பழக்கம் தான்... இருந்தும் மனம் ஏங்கியது........... …
-
- 39 replies
- 6.2k views
-
-
படித்ததில் பிடித்துப் போய் பகிர விரும்பும் ஒரு கவிதை இது விகடன் இணையத்தில் உலாவரும் போது கண்ணில் பட்ட ஒரு கவிதை. நானே கேள்வி நானே பதில் பகுதியில் இடம்பெற்று இருந்தது. ''ராஜபக்ஷே...'' ''சமீபத்தில் 'காக்கைச் சிறகினிலே’ என்கிற சிற்றிதழில் படித்த ஸீர்கோ பெகாஸின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது... 'வான்வெளியில் கொல்லப்பட்டன அந்தப் பறவைகள் கொலைகாரர்களுக்கு எதிராக நட்சத்திரங்களும் மேகங்களும் காற்றும் கதிரவனும் சாட்சி கூறவில்லை என்றாலும் அடிவானம் அதுபற்றிக் கேட்க விரும்பவில்லை என்றாலும் மலைகளும் ஆறுகளும் அவற்றை மறந்துபோய்விட்டாலும் ஏதேனும் ஒரு மரம் அந்தக் கொடுஞ்செயலைப் பார்த்துத்தானிருக்கும் தன் வேர்களில் அக்கொடியோனின் பெயரை எழுதிவைக்கத…
-
- 16 replies
- 6.2k views
-
-
உன் பார்வை கல்லைக் கரைக்கும்-நான் கள்வன் இல்லையடி.... நீ காதல் முல்லையடி.... உன் விரல்கள் வீணை இசைக்கும்-நான் கலைஞன் இல்லையடி.... நீ அன்புக் கிள்ளையடி... ஊரும் பேரும் நாலும் சொல்வார்.. நீதானன்பே எந்தனுயிரே.. ஜென்மங்கள் தோறும் கைகள் இணைவோம்.. காதல் வந்து சேரும் வழி கண்களல்லவா... நம்போல் காதலர்கள் பேசும் மொழி மௌனமல்லவா... கனவுகள் நாளும் வந்து.. கவிதைகள் தருமே... கண்மனியுனை நினைக்க குளிருது மனமே.. இதழ்களில் தேன் குடிக்க இன்றேன் சொல் தாமதமே.. இரவுகள் தனித்திருக்க நிலா உலா போய் வருமே... மெத்தை மடி தந்தவளே மெல்லத்தூங்கவா....நீ நிம்மதியில் புன்னகைத்தால் காதில் பேசவா... கருவிழி பார்த்துத்தான்.. …
-
- 43 replies
- 6.1k views
-
-
வாழ்க்கையின் வெறுமை என் இளமைப்புத்தகத்தின் இரவுப்பக்கங்கள் வெறுமையாய் கிடக்கின்றன இன்னும் எழுதப்படாத ஓர் கவிதையை எண்ணி.... எனது வானம்... இருள் மூடிக்கிடக்கிறது இதுவரை காணாத அந்தப் பௌர்ணமிக்காக... மெல்ல மெல்ல காலத்திருடனிடம் களவு போகின்றன-என் நந்தவனப் பூக்களின் நறுமணமும்-நான் சேர்த்துவைத்த கனவுகளின் ஒளிநிறமும்.... நிசப்தம் விழுங்கிய நீண்ட இரவொன்றில்... நிமிர்ந்து பார்க்கிறேன் மழை இருள்மூடிய காரிருள் வானில் பளிச்செனத் தெரிந்தது தனிமை மூடிய-எனது வாழ்க்கையின் வெறுமை. -ஈழநேசன்- கள உறவான ஈழநேசனின் கவிதையை களைகள் களைந்து அவர் கேட்டுக்கொண்டதன்படி இங்கே களமேற்றியிருக்கிறேன்.
-
- 16 replies
- 6.1k views
-
-
அழகாயிருப்பேனா..? காயாத ரணங்கள் கொண்ட மனது கஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால் கவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும் அழகில் நான் கறுப்பி ஆகிவிட்டதால் நிலைக்கண்ணாடியும் என் நிறத்தின் நிஜமாய் நிதர்சனமாய் சொல்கிறதே அழகின் வரைவிலக்கணம் எது என்று அறியவில்லை இதுவரை சிலந்திவலையை கொண்டு விண்மினை பிடிப்பது போல் இருக்கின்றது வாழ்க்கை இறந்த பிறகாவது நான் அழகாயிருப்பேனா..?
-
- 35 replies
- 6.1k views
-