கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
மூவேந்தர் அரியணையில் முந்து தமிழ் கலையரங்கே நாவேந்தர் மடி தவிழ்ந்த நானிலத்து திருமகளே பாவேந்தர் குலமகளே பாரதியின் பைந்தமிழே தாய் தவழ்ந்த மண்ணே என் சரித்திரத்தின் பொன்நாடே தூயதமிழ் அனங்கின் துயர்துடைக்க காவியமாய் போய்விட்ட மாவீரர் குருதிச் சுவட்டில் நாளை விடியலுக்காய் நம் இளைஞர் வேள்விக்கணைத் தொடுப்பார் இன்று ஈழத்தின் வரலாற்றில் மாதலைவன் வழியினிலே திரண்டெழுந்து ஆக்கி வைப்போம் தமிழீழமே தாய் கொதித்தாள் தமிழ் அழுதது தமிழர் நெஞ்சிலே உரம் பிறந்தது பேய் சிரித்தது பிணம் விழுந்தது பிஞ்சு நெஞ்சிலே தீ எழுந்தது வேர் அறுத்தொரு பகை முடித்திட வேள்விக்கணை தொடந்தது பலகோடித் தமிழர்கள் உயிர் வாழினும் பாராள அவர்க்கு நாடில்லையே இன் நிலை போக்க ஈழத்தில் புலியானார் நம் …
-
- 1 reply
- 486 views
-
-
மீள் நினைவு கொள்வோம். Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Wednesday, July 11, 2012 கால விதிகளின் கட்டறுத்தெறிந்த வீரத்தின் விலாசங்களோடு வனவாசம் போனவர்களுடன் ஆழுமையின் வீச்சாய் அடையாளம் காட்டப்பட்டவள் நீ. பெண் விதியின் முழுமைகளை நீ பேசிய மேடைகள் பதிவு செய்து கொண்டதோடு நீயொரு பெண்ணியவாதியாய் பெருமை கொள்ளப்பட்டவள். உன்னையும் உனது ஆழுமைகளையும் உச்சத்தில் ஏற்றி எழுதியோரும் உன் குரலில் பதிவு செய்தோரும் எண்ணிலடங்காதவவை.... எழுச்சியின் காலங்களை இப்படித்தான் காலம் கௌரவப்படுத்துவது வரலாறு. வீழ்ச்சியின் பின்னரே யாவும் விழித்துக் கொள்கிறது. அதுவே உனக்கும் உன்போன்றோருக்கெல்லாம் நிகழ்ந்தது. 000 2009 மே, காலச் சூரி…
-
- 4 replies
- 1.4k views
-
-
வந்தது கடிதம் முத்தான எழுத்துக்கள் கொண்டு முத்தங்கள் பல இட்டு சுருக்கமாக நீ எழுதிய மடல் சுணக்கமாக கிடைத்தது இன்று விரித்து வாசித்த வேளை சிரித்தது என் உதடு சின்ன சின்ன சொல்லெடுத்து செதுக்கிய அழகிய காதலை உன் கடிதத்தில் கண்டதும் கண்கள் சந்தோசமாக கண்ணீரை உதிர்த்து நன்றி சொன்னேன் மனசுக்குள் நான் உனக்கு எத்தனை தடவைகள் அன்பான உன் மடலை வாசித்தேனோ நானறியேன்... என் மென்மையான நெஞ்சத்தில் அவ்வரிகள் ஆழமாக பதிந்தன "அன்பே என் நிலா உன் காதல் விண்ணப்பத்தை இன்று நான் ஏற்றுக்கொண்ட்டென் உன்னையே என் இதயவீட்டில் குடியேற்றிவிட்டேன் ஆதலால் ஓடி வா என்னிடம் நீ.. முத்தங்கள் பல தந்து முடிக்கின்றேன் இம்மடலை. என்றும் உன்னவன் ...........…
-
- 24 replies
- 4.4k views
-
-
ஒருமுறை .... கண்ணுக்குள் .... வந்துவிடு உன்னை .... கண்ணுக்குள் புதைத்து .... வைத்திருக்கிறேன் .....!!! என்னால் உனக்கு ... கண்ணீர் வந்தால் ... உனக்கும் சேர்த்து நானே .... அழுதுவிடுகிறேன் .....!!! சிலவேளை கண்ணில் வெளியேற .... நீ விரும்பினால் .... கண்களை குருடாக்கி .... சென்றுவிடு - உன்னை தவிர ... நான் யாரையும் பார்க்க ,,, விருமவில்லை ....!!! & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்
-
- 8 replies
- 54.3k views
-
-
அம்மா நீ எங்கன இருக்கா? *************************************** எனே,... அம்மா எங்கன இருக்கிறா? கையில் ஒரு பூக்கூடை பையில் ஒரு படையல் என முந்தி மாதம் தவறா உன் விழி மழையின் வீழ்ச்சியில் குளிப்பாட்டி மகிழ்வித்து முத்தம் தந்து குளிர்விப்பவளே நீ எங்கன இருக்கிறா? நீ அறிவியான நான் சாகா வரம் பெற்றவன் யார் சொன்னார் என்னை இறந்ததென்று? மண்ணின் சுவாசத்துக்காக மண்ணில் வாசகம் செய்கிறேன். சாவுக்குள் கண்மூடி உறங்கி உயிர்த்தெழுகிறேன் திக்கெட்டும் தேடுகிறேன் என் உயிர் உறவுகளின் தாயை தேடும் ஓலம் மட்டும் காதில் ஒலிக்கிறதே உன்னை மட்டும் காணவில்லை நீ எங்கன இருக்கிறா? கைகள் மரத்து போய் விறகு விற்று நீ ஊட்…
-
- 2 replies
- 1.2k views
-
-
நானிங்கு காத்திருப்பது காதலனுக்காக அல்ல கவிஞரே... கடலலை மெல்ல கால் நனைக்கும் சுகத்திற்காக... மரணித்து விளையாடுதல் பற்றி எங்கேனும் அறிந்ததுண்டா கவிஞரே? பாரும் கடலலையை மரணம் அதற்கு விளையாட்டு! அருகில் நெருங்கி வாரும் கவிஞரே இப்படி அமர்ந்து பேசலாம்... உப்புக் கலந்த காற்று... அலையடிக்கும் கடல்... காலுக்கு இதம் தரும் கடற்கரை மணல்... சும்மா இராமல் கடலுக்குள் விழுந்தெழும்பும் சூரியன்... என கண்முன் விரியும் இயற்கையை கொண்டாடாமல் ஏதோ வாழ்கின்றோம்! இந்த உலகம் பரபரப்புக்குள் சிக்கி இதயங்களை இளைப்பாற விடுவதில்லை... மெல்லிய உணர்வுகளின் மகத்துவமும் புரிவதில்லை... என்ன கவிஞரே அப்படி…
-
- 6 replies
- 1.5k views
-
-
காதலித்து கெட்டு போ.அதிகம் பேசுஆதி ஆப்பிள் தேடுமூளை கழற்றி வைமுட்டாளாய் பிறப்பெடுகடிகாரம் உடைகாத்திருந்து காண்நாய்க்குட்டி கொஞ்சுநண்பனாலும் நகர்ந்து செல்கடிதமெழுத கற்றுக்கொள்வித,விதமாய் பொய் சொல்விழி ஆற்றில் விழுபூப்பறித்து கொடுமேகமென கலைமோகம் வளர்த்து மிதமதி கெட்டு மாய்கவிதைகள் கிறுக்குகால்கொலுசில் இசை உணர்தாடி வளர்த்து தவிஎடை குறைந்து சிதைஉளறல் வரும் குடிஊர் எதிர்த்தால் உதைஆராய்ந்து அழிந்து போமெல்ல செத்து மீண்டு வாதிகட்ட,திகட்ட காதலி..~ முனைவர் டாக்டர் நா.முத்துக்குமார்----------------------------------------------------------------------------------------------------------------------------------------------நா.முத்துக்குமார் "" துளிப்பாக்கள் ""உள்ளாடைக் கடைகளில்அளவு கு…
-
- 0 replies
- 154.3k views
-
-
கடல் சீறி எழுவது போல் நீயும் சீறிய் எழுந்துடு தமிழா.... தமிழ் இனத்தவரின் சீற்றத்தை கண்டு உலக நாடுகள் அஞ்சி நடுங்கட்டும் நம்மை கண்டு சிங்கள வெறியர்கள்.. நாடு விட்டு நாடு செல்லட்டும் எழுந்து வா தமிழா..... களத்தில் போராடும் நம்ம சாகோதரர் சாகோதரிக்கு தோள் கொடுப்போம் எழுந்து வா தமிழா.... நம் இனத்தவரை அழிக்கும்... சிங்கள வெறியர்களை நாம் கூண்டோடு அழித்து நம் தழிழ் ஈழத்தை நாமே கட்டி எழுப்புவோம்.. நம் வீரத்தை கண்டு மகிந்த அரசு பயந்து நடுங்கி காடு காடாய் இரவோடு இராவாய் முட்டை முடிச்சுகளுடன் நாடு விட்டு நாடு செல்லட்டும் தமிழனின் வீரத்தை உலகம் எங்கும் பறை சாற்றி தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா என்று பெயர் கே…
-
- 0 replies
- 1.4k views
-
-
தலைவனது துணையிவர்கள்… பெரும் வெடியோடு ஆரம்பம்.. பேரிடியாக ஆனதுவே-நெல்லியடி மில்லரடி பகைக்கு நெற்றியடி ஆனதங்கே…! கந்தக வண்டி நிரப்பி-மில்லர் காற்றோடு கலந்த சேதி வீச்சோடு பாய்ந்துவர-சிங்களம் தோற்றோடிப் போனதங்கே…! எம் தலைவன் தொடக்கிவைத்த கந்தகவெடியதுவே.. கயவன் களம் பலவும் வென்றுதர பாதையொன்றுபுதிதாய் பிறப்பெடுத்ததன்று.. மில்லர் தடம் தொடர்ந்த பலவீரர் கதையுண்டு போர்க்கண்ணாவெடிசுமந்து புலிக்கொடிநாட்டினான் மாங்குளத்தில் அன்று தலைமன்னார் சிலாபத்தில் டாம்போவெடியாகி வெற்றியைஎமதாக்க பலநூறுவீரர்கள் படைமுகாம்கள் தகர்த்தெறிந்தார்… தரைதாண்டிகடலேறி காந்தரூபன் கொலின்சுடன் வினோத்தும் இணைந்துகொள்ள அலைமீதுவெடியதிர்வு எதிரிபடகோடு தகர்த்தெறிந்தார்…. அலையடித்துஓயவில்லை அங்கயற்கன்னிஅனலாகி அதி…
-
- 3 replies
- 585 views
-
-
மனிக் ஃபாம்... இளங்கவி - கவிதை.... மரணத்தின் பிடியிலிருந்து மீண்ட நம் உயிர்களுக்கு மனிக் ஃபாம் என்ற மரண வலயத்தில் இலவச உணவாம்...!.இல்லை..! இலவச உடையாம்.....! அதுவுமிலை...! நிம்மதி தூக்கமாம்...! சுத்தப் பொய்....! தமிழன் வாழ்க்கையில் இளமையிலும் மரணம் தரும் ஓர் இருண்ட நிலமது....! ஆம்...! பூமியில் எமன் அமைத்த மகிந்தரின் புனித பூமி அது....! எமனின் முகவர்கள் எகத்தாளமிடும் பூமி.... சிறுமி முதல் குமரிவரை சுவைத்திடுவான் ஆமி.... வன்னியிலே.. மழை வந்தால் ஆடிய மயக்கிட்ட மயில்களும்..... மனம் விட்டுப் பாடிய தேனிசைக் குயிகளும்...... கால்களும் ஒடிக்கபட்டு..... குரல்வளையும் நசுக்கப்பட்டு..... கட்டிய கூடாரத்தினுள் ஒட்டுண்…
-
- 15 replies
- 1.6k views
-
-
பாலைவன ரோஜா...... கவிதை - இளங்கவி நம் வாழ்விழந்த சோகத்தில் வாயடைத்து நின்றேன்...... அழியும் நம் இனத்துக்காய் நடு வீதிக்கு சென்றேன்..... அந்த தருணங்கள் என் வாழ்வின் ரணங்களாய்..... எப்போதும் சுட்டெரிக்கும் பாலை வனங்களாய்........ அந்தப் பாலைவனத்தினிலே சோககீதம் பாடும் ஓர் சோலைக் குயிலாக..... திசையேதும் தெரியாமல் திசைமாறிப் பறக்கின்றேன்.... அந்த நெருப்பு மண்தரையில் பட்டுவண்ண ரோஜாவொன்று..... நட்பெனும் நிழல் தேடி நான் பறக்கும் திசை நோக்கி நட்புடன் சிரிக்கிறது.... சுட்டெரிக்கும் சூரியன் விட்டெறியும் கதிர்களினால்.... தொட்டாலே தீப்பற்றும் சுட்டெரிக்கும் மண் தரையில்...... வேரூன்றித் தவிக்கும் அந்த அழகான பூச்செடிக்கு..…
-
- 6 replies
- 3.8k views
-
-
-
கண்ணீர் யுகத்தின் தாய்! குழந்தைகள் அலைய பூமியில் வெளிச்சம் அணைந்த பொழுது ஒரு யுகத்தின் தாய் இறந்திருந்தாள் பூமி பேரதிர்ச்சியில் நடுங்கியது தாய்மாருக்காய் அழுதழுது கண்ணீர் விடும் குழந்தைகள் வாழும் யுகத்தில் கனத்தன வீடுகள் குழந்தைகளுக்காய் அழுதழுது கண்ணீர் விடும் தாய்மார்கள் வாழும் யுகத்தில் கனமடைகிறது பூமி தாய் கட்டிய சுவர்களில் கனவின் காட்சிகள் நெளிந்தன நிலம் மெழுகும் தாயின் விரல்களில் சிக்காத புதல்வர்களின் பதச்சுவடுகள் தொலை தூரத்தில் தவித்தன அடுப்பில் பொங்கியது துயரம் இலட்சம் குழந்தைகள்தாய்மாரை இழக்க இலட்சம் தாய்மார் கு…
-
- 1 reply
- 627 views
-
-
ஏய் மனிதா நில்லு உலகம் படைச்சது எதற்காக நீ... உலோகம் கொண்டு எல்லையிடவா..??! ஏய் மனிதா சொல்லு இவள் பிறந்தது எதற்காக நீ.. கம்பி வேலியிட்டு அடைத்து வைக்கவா..??! ஏய் மனிதா சொல்லு ஒற்றை மலலாவுக்கு குண்டடி என்றதும் பதறுவது எதற்காக.. நீ இவளை முட்கம்பியால் கட்டி வைக்கவா...??! ஏய் மனிதா சொல்லு உன் குழந்தைக்கு ஐபாட்டும்.. ரெடிபெயரும் எதற்காக நீ இவள் போல் எண்ணற்ற குஞ்சுகளை வதைப்பதை மறைக்கவா..??! ஏய் மனிதா சொல்லு யுனிசெப் என்ற ஒன்று எதற்காக.. நீ உள்வீட்டுப் பிரச்சனைகளில் உளவு பார்க்கவா..??! ஏய் மனிதா சொல்லு மனித உரிமைகள் யாருக்காக.. நீ வெள்ளைத்தோலால் உலகை ஆள்வதற்கா..??! ஏய் மனிதா சொல்லு.. இந்த வேசங்கள் எதற்காக நீ அழிவைத் தேடிச் செல்வதால…
-
- 8 replies
- 1.1k views
-
-
கடவுளைத்தேடி நீ ஆலைய கருவறைக்குள் அமைதியாய் போய்விட்டாய், அம்மா என்ற கடவுள் என்னோடு இருப்பதால் உன்னைத்தேடியே ஆலயம் வந்தேன். முகம் கொடுத்து பேச முடியாதவனாய்-உன் பாதணிகளுக்குள் மலர் வைத்துப்போனேன். நீ கடைக்கண்ணால் கண்டதையும் நான் கண்டேன், வீதியோர குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு நீ சென்றபோது மலருக்கு தெரியாது உன்னக்கு என்னை பிடிக்காதென்று இப்போதெல்லாம் நான் வெளியே போவதில்லை. உன்பிம்பம் விழுந்த என் வீட்டுக்கண்ணாடியை சமையலறையில் மாட்டிவிட்டேன். உன் நினைவுகள் என்னை தீண்டும்போது சமயலறைக்கு ஓடிவிடுவேன், உன்பிம்பம் பட்ட கண்ணாடி முன்னே கண்ணீர் வடிக்க, அம்மா கண்டுவிடுவாள் என்று வெங்காயம் உரித்த படி நான்......
-
- 2 replies
- 607 views
-
-
சுதந்திரம் நோக்கிப் பயணித்து சூனியத்தை அடைந்த சூட்சுமத்தில் தான் இன்னும் எமது வெட்கம்கெட்ட இறுமாப்பு உயிர்வாழ்கின்றது முகங்கள் தொலைந்த உருவங்களில் என்னும் அழுகை சிரிப்பு சத்தங்கள் அதைவிட மேலான கோபங்கள் ஆவேசங்கள் வெறியோடு நெஞ்சு மயிரைப் புடுங்கி அண்ணாந்து ஊதியபோதும் முகத்தை உணரமுடியவில்லை நாம் தொலைந்து போனோம் எம்முடன் எடுத்துவந்த சாப மூட்டைகளில் தலையை சாய்த்து புலம்பிக்கொண்டிருக்கின்றோம் சாப மூட்டையுடன் தலைமுறை தலைமுறையாக நடந்து ஒருவழியாக மயானத்தை அடைந்துவிட்டோம் சுடலைஞானம் தனக்கு தனக்குதான் பிறந்துவிட்டது என்று அங்கேயும் குத்துப்பாடு நடக்கின்றது விசும்பலும் வெளிப்படும் கண்ணீரும் பிரசவ வலிகளும் நாதியற்றுப்போனது …
-
- 12 replies
- 1.6k views
-
-
நோயினை சொல்லுவார் நொடிகளை விரையமாக்குவர் நோக்கமின்றியே -பலர் ஊக்கத்தை கெடுப்பார்கள் வாதிடு என்பார் போதுமினி என்கண்டாய் என்பர் மேடையின் எறி முழக்கம் மடமையில் பல உளறல்கள் வாடையில் கூட இல்லை அவர் வாயில் வாய்மை எழு எழு என்றார் எழுந்த பின் மறைந்தார் மானத்தமிழராம் இவர்கள் மக்கள் தொண்டராம் இவர்கள் மண்ணுக்காய் மக்களுக்காய் மாய்த்திட தம் சொகுது மறுத்தே நிற்கும் ம(ா)ன தமிழர்கள் ஆனையிறவை மீட்க அதை வைத்து ஓடி வந்தார் அடுத்த முகாம் பிடிக்க அடுத்தடுத்து வந்தார் ஆனாலும் தடை கண்டு அடுப்படி சென்றார்.. ஆகுதியான வீராரின் நமத்தை சுமந்து அடிக்கடி வந்தார் தடைச் செய்தி கேட்டு தம் சுய நலத்திற்காய் தியாகச்சுடர்களை மறந்தா…
-
- 13 replies
- 1.6k views
-
-
பாடியவர்: 'தேனிசை" செல்லப்பா இசைத்தட்டு: காலம் எதிர்பார்த்த காலம் பாடலை கேட்க :arrow: சிங்களவன் குண்டுவீச்சிலே சிட்டுக் குருவிக்கூட்டில் மூச்சுப்பேச்சில்லை.. சிங்களவன் குண்டு வீச்சிலே சிட்டுக் குருவிக்கூட்டில் மூச்சுப்பேச்சில்ல.. எங்கள் காட்டில் ஒரு குருவி - அதன் கூட்டில் கண்ணீர் அருவி (2) (சிங்களவன் குண்டு வீச்சிலே) குச்சிகளும் சிறகுகளும் கொண்டு செய்த கூடு குருவிக்கல்லோ தெரியும் அதை கட்டப்பட்ட பாடு.. நாலுபக்கம் எரியுதம்மா நெருப்பு நெருப்பின் நடுவில் அல்லோ குருவிகளின் இருப்பு! (சிங்களவன் குண்டு வீச்சிலே) இன்னும் குஞ்சு பொரிக்கவில்லை இரண்டு மூன்று முட்டை.. இறக்கை கொட்டி ஏங்கி ஏங்கி துடிக்குது பார் பெட்டை..!…
-
- 6 replies
- 2.8k views
-
-
ஒத்தையா பிறந்தவனே பாசமா வளந்தவனே கத்ததை கண்டறிஞ்சு பேர்வாங்கி நடப்பாயா சொத்தையா போனபிள்ளை ஊரிலே பல இருக்கு மந்தையா வளத்தாரே அவர் பெத்தவரா செத்தவரா பதினெட்டு ஆயாச்சு பயிற்சிக்கும் அழைச்சாச்சு மினக்கெட்டு போயிப்போ ஒருவருசம் கழிஞ்சாச்சு தாய்நாடு காப்பதற்கு உன்போல மைந்தர்கள்-அதைத் தொட்டவனின் தலையெடுப்பர் அவரெல்லோ வீரர்கள். அமைதிப் படையாக ஈராக்கு சென்றுவர ஆசையாய் கேட்டாய்நீ பயந்துநான் போனேனே அமெரிக்கன் தனக்காக பலத்தோட ஆக்கிவைச்ச அரசியல் பலிக்களந்தான் பிறர்ஆவி போக்கிவைக்க அவனுக்கு ஒயில் வேணும் கால்மிதிச்சா நிலம்வேணும் சிவனுக்கும் மேலாலை புஸ்சுக்கு பவர்வேணும் கணக்குக்கு சொல்லிவைக்க வானளவு பணம் இருக்கு பிணக்கொன்றை தீர்ப்பதற்கு பிணக்குவியல் த…
-
- 4 replies
- 1.2k views
-
-
முகம் தேடும் முகவரிகள். ஈழத்தின் வாசலே இந்தியத் தாய் மண்ணே! உயிரிங்கு உருகி நிற்கும் என் வணக்கம் உந்தனுக்கு! உறவுகளும் தோழருமாய் மகிழ்ந்திருந்த என் பூமி மயான பூமியான செய்தி நீ அறிந்திருப்பாய்! ஐந்தாட்டுத் திட்டம் என போட்டுவைத்த போர் நிறுத்தம் கடந்து இரண்டு நாட்கள் காற்றோடு போயாச்சு! ஐந்தாண்டும் நாம்பட்ட இன்னல் ரணம் அறியாயோ? தமிழ் உயிர்கள் மலிந்த நிலை தமிழகமே அறியாயோ? வியர்வை சிந்தி உழைத்த மண்ணில் தமிழ் இரத்தம் சிந்திக் கிடக்கிறது!. பயிர்கள் விளைந்த பூமியெங்கும் தமிழ் உயிர் விதைத்துக் கிடக்கிறது! தமிழரின் வாசல் எங்கும் "கண்ணி'வெடிக் கோலங்கள் எங்களின் வீதியெங்கும் கண்ணீரின் ஓலங்கள்! ஒரே…
-
- 1 reply
- 858 views
-
-
காலாறத்துடிக்கும் மீட்பர்களும்...கண்டுகொள்ளாத மந்தைகளும்.... காலையும் மாலையுமாய்க் கனவுபோல முடிந்துபோன நாட்களில் முடிவின்றிப் பயணித்தன விடுதலைக்காய் அவர்கள் கால்கள் சுதந்திரத்திற்கான கனவுகளைச் சுமந்துகொண்டு எப்போதும் நிழலைப்போலக் கூடவே தூப்பாக்கிகளைச் சுமந்தன அவர்கள் தோள்கள் மாதங்களையும் ஆண்டுகளையும் மறந்துவிட்டு வயதுகளைத் தியாகம் செய்தவாறு போர்க்களத்தில் கரைந்துபோயின அவர்கள் வாழ்க்கை எல்லாச் சிலுவைகளையும் எங்களுக்காய்ச் சுமந்துவர்கள் இன்று ஆயிரம் ஆயிரம் இயேசுநாதர்களாய் அறையப்படுகின்றனர் தடுப்புமுகாம்களில் கனவுகளையும் இளமையையும் தொலைத்தவர்கள் காலநதியின் நீள ஓட்டத்தில் …
-
- 0 replies
- 867 views
-
-
எட்டாவது அதிசயமே என் தலைவா !! எவர் கைகளுக்கும் நீ எட்டாத அதிசய -த்தை அறிவதற்கு-சில வல்லசருகள் வேவுபார்க்கிறது-விஞ்ஞானமே வியப் -படையும் மெஞ்ஞானம் கொண்ட உனை சிறைப்பிடிக்க எலிப்படைகள் அலைகிறது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, வலுவற்ற விஞ்ஞானம் விழிபிதுங்கி கிடக்கிறது-தன்மானத்தலைமகனே!!! உனை மண்டியிடச்செல்லிக்கெண்டு சில மடையர் கூட்டம் அலைகிறது -ஒரு வெற்றுடலை காண்பித்து அது உன் வித் -துடல் என்றார்கள் அக்கினிபுத்திரனே உனை நெருங்கவும் முடியாத கோழைகள் கூடிநின்று -பெருமி -தம் கொள்கிறனர்-மூடுபனி கூடிநின்று கொட்டாட்டம் போடுறது-சுட்டெரிக்கும் சுரியனே உனை தடுக்க சிங்களப்பனி உறை -ந்து எம் நிலத்தினில் கிடக்கிறது ,,,,,,,,,,,,,,,, வான் சிவ…
-
- 9 replies
- 2.1k views
-
-
நீ கவனமாக இரு……… போராட்டம் வீண் போகாது.” Posted by: on Jul 24, 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் உலகம் முழுமையும் விழுது பரப்பி நிற்க்கும் பெரு விருட்ச்சம். குருவிச்சைகளும் மாயமான்களும் மாவீரர் தடம் பற்றி ஒருபோதும் தலைதூக்க முடியாது. எவரேனும் ஆணிவேரை அழிக்க நினைத்தால் விழுதுகள் வீரியம் கொடுக்கும ; கறுப்பு யூலைகளும் சிவந்த மேய்களும் உலகின் மனச்சாட்சியை தட்டத் தொடங்கிவிட்டது சாட்சியங்களை ஒப்புவிப்போம். அன்று சிங்களத்தின் சிறைக்கூண்டில் - குட்டிமணி நெஞ்சை நிமிர்த்தி சொன்ன வார்த்தைகள் எங்கோ ஒரு மூலையில் உள்ளுணர்வாய்…. ”ஒரு குட்டிமணியைக் கொல்வீர்களனால் பல்லாயிரம் குட்டிமணிகள் தோற்றம் பெறுவார்கள.;” நான் ஓர் விடுதலைப் போராளி இறுதியா…
-
- 0 replies
- 920 views
-
-
அழகான குக் கிராமம் .... கூப்பிடு தூரத்தில் ஆங்காங்கே .... குடிசைவீடுகள் இடையிடையே ... வேற்று காணிகள் ,முற்பற்றைகள் .... முற்பற்றைகள் நடுவே மண் புற்றுகள் ... எந்தபுற்றில் பாம்பு வசிக்கிறதோ .... அந்த புற்று கோயிலாக மாறும் ...!!! வீடுகள் என்னவோ குடிசைகள் ... பாம்பு புற்றுகள் செங்கல் மாடங்கள் ... பல கால நித்திய பூசை , பால் அபிஷேகம்... ஏட்டிக்கு போட்டியாக புற்றுக்கள் .... கோயிலாக மாறும் போட்டியாக ... விதம் விதமான பூசைகள் .... பக்தர்களுக்கு திண்டாட்டம் .....!!! ஊரில் குறி சொல்பவரே நீதிபதி .... ஊரின் நீதிபதி சொன்னால் இறுதி ... யாரும் திருப்பி பேசமாட்டார்கள் ... பேசினால் நாகதோஷம் பற்றிவிடும் .... அவருக்கு வரும் கனவுகள் ... காலபோக்கில் கோயிலாய் மாறிவிடும் .... அயல் கிராமத்தவரும்…
-
- 2 replies
- 2.3k views
-
-
தேடிப் பார்த்தது கிடைக்கவில்லை! பேசி முடித்ததில் திருப்தியில்லை! "கண்டவன்" என பெற்றவர் சொன்னதை, "வந்தவன்" கொண்டதாய் இல்லை! வாழ்ந்து கொண்டவரை... தொல்லை!!! வாழும் காலம் முழுதும், அவன் வாழ்வதைப் பார்த்து... கண்களைக் கசக்கியபடியே... கசக்கிய விழிகளிலும், "அவன்" என்பவனே வந்து நிற்கின்றான்!!! என்னவென்று சொல்லியழ முடியாமலும், "ஓ"வென்று கதறியழ இயலாமலும், இதயத்தின் நான்கறைகளுக்குள்ளும்... நசுங்கிப் போகின்றது - தேவதைகள் கசக்கி எறிந்த காதல்கள்!!! அதைப் பொறுக்கியெடுத்து... பொக்கிஷமாய் பாதுகாக்கும், தேவைகளின் தேவர்களுக்கு... தேவதைகளின் அழுகுரல்கள், என்றைக்கும் கேட்பதில்லை!!! தேவதைகளின் இரவுகள்... முதல் இரவிலிருந்தே தொடர் கதைதான்…
-
- 7 replies
- 2.1k views
-