கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
கோத்தருக்கு ஒரு விருந்து ............. ஈனப்பிறவியே கோத்தபாய ....... தமிழ் ஈழ பெண்கள் உன் கூலிகளுக்கு விருந்தா .. நாக் கூசவில்லை உனக்கு ..... .சூடு சுரணை இருக்க உனக்கு ..... .மானமுள்ள தமிழ் பெண் கடலில் விழுந்து சாவளே தவிற உன் கூலிகளுக்கு முந்தானை விரிக்க மாடாள் .இருந்து பார் அண்ணர் பிரபா ,ஒரு பாடம்புகடுவார் அப்போது உன் வாய் கொழுப்பு அடங்கும் . .உலகெலாம் பறை சாற்றும் உன் ஈனத்தனத்தை உலகம் பார்த்து சிரிக்கிறது உன் வாயும் உன் நினைப்பும் ........ என் செய்வது உங்கள் ஆணவம் உலக நாடுகளின் ஆதரவு உங்களை இப்படி பேசவைக்கிறது தர்மம் ஒன்று இருந்தால் அது வாய் திறக்கும் அப்போது உன்னயும் உன் கூலிபடையையும் உன் ஜால்ராக்களையும் விழுங்…
-
- 2 replies
- 1.3k views
-
-
உண்மை ஒளி குன்றா உறவின் பெருங்கொடியே! கருணைப் பெருங்கடலே! கன்னல் சுவையூறும் தமிழ் பூத்த திருநாடே! உண்மை ஒளி குன்றா உறவின் பெருங்கொடியே! திண்மை கொண்டெழுந்த உங்கள் திடல் தோளில் சிறிது சாய்ந்து இளைப்பாறிக் கொள்கிறோம். தாயின் மடியில் தமிழ்ப் பாலுண்ட கோடி நெருப்பொன்றாய் தகிக்கக் கண்டோம். வீசும் தமிழ் காற்றும், உணர்வின் அலையும் தீய்ந்து கருகும் எங்கள் வாழ்வை ஆற்றும். உக்கித் தனிமரமாய் துயர் சுமந்த எங்களுக்கு உயிர்ப்பின் கொடி பிடித்து அரவணைக்கும் உறவுகளே! தெக்கும் உணர்விடையே உயிர்ப்பூ கசிகிறது. தேம்பும் விம்மலொலி சிறிதடங்கிக் கிடக்கிறது. பால் வாசம் வீசும் மார்பிடையே அணைத்தவளே! பனித்த விழிகளால் பாசத்தைப் பொழிபவளே! மனித்த…
-
- 5 replies
- 1.3k views
-
-
உயிரடங்கிய சிறு பறவை - நல்ல சமாரியனின் நாட்குறிப்பு - கவிதைகள் உயிரடங்கிய சிறு பறவை கவிதை: பாப்பனப்பட்டு வ.முருகன், ஓவியங்கள்: ரமணன் அதிகாலை நடைப்பயிற்சியில் நெடுஞ்சாலையோரம் காணக்கிடைத்தது விரைந்த வாகனம் மோதி விழுந்துகிடந்த சிறு பறவையொன்று. இதயம் படபடக்க இரு கைகளிலும் அதை ஏந்திக்கொண்டேன். அதற்காகவே காத்திருந்ததைப்போல் அடங்கிப்போனது அதன் உயிர். கனத்த மனதோடு கைவிரல்களால் மண்பறித்து போதுமான அளவில் அகழ்ந்தெடுத்த குழிக்குள் அதைப் புதைத்துவிட்டு வீடு திரும்பினேன். செந்நிறப் பிசுபிசுப்புப் போக கைகளை நீரால் அலசிய பின் மென்சோகத்தையும் நுண்வலியையும் கடந்து வரவென்று சிவப்பு மசிப் பேனாவால் கவிதையொன்றை எழுதி முட…
-
- 0 replies
- 1.3k views
-
-
இன்னும் இருக்கிறது காதல் கடிதம் காதல் ......................!!! *********** முன்னிரவுகளில் தூவிய நட்சத்திரங்களை அடித்து சென்றுவிட்டது ஆதவக்கரங்கள். ********* மெல்லியதாய் எங்கோ ஒலிக்கிறது சோகப்பாடல், சோர்ந்து போய் உச்சரிக்கிறது உதடு. ************ இதே நிலா அன்று, நீயும் நானும். அதோ நிலா .................!!! *********** மலர்தாவிய வண்டை திட்டினாய். வியந்தேன்............. மனம் மாறி திட்டினாய். சிதைந்தேன். ******* உன்னை சந்திக்கும் அந்த நேரம் கடக்கையில் நரகம் தெரிகிறது. கடந்தபின்....... மரணம் புரிகிறது. *********** கைதவறி பட்டபோது தடுமாறிய மனது நீ கரம்பற்றிப்போனபோது அனாதையாய் போனது ............ ************* உன்னை பார்த்தத…
-
- 10 replies
- 1.3k views
-
-
"""" ஏய் சிங்களா ஏனழுதாய்.??? எங்கே இப்போ சிரி....."""" ஏய் சிங்களா இப்போ நீ சிரி ஏன் அழுதாய்...??? உன் நெஞ்சில் என்ன வலி..?? இது யார் போட்ட பழி...??? எத்தனை நாள் நாம் அழுதோம் எம் விழிகள் யார் துடைத்தார்...??? கண்ணீர் கொட்டி நாமன்று கதறியன்று அழுகையிலே கை தட்டி நீ சிரித்தாய்.... தெருக்கிளிலே எம் இனங்கள் பிணங்களாகி வீழ்கையிலே கை தட்டி நீ சிரித்தாய்... எங்கே இப்போ நீ சிரி ஏன் அழுகிpறாய்...??? உன்னவரை நீ ஏவி உறவு உயிர் பறிக்கையிலே எங்கள் நெஞ்சம் பதைத்தடா விழிகளது நனைந்ததடா... வெய்யிலில் எரிந்து மழையில் விறைத்து மர நிழலில் நாமன்று வாழையிலே உன் விழிகள் கலங்கலயே உன்…
-
- 5 replies
- 1.3k views
-
-
உந்தப் பழைய பேப்பரை வைச்சு என்ன செய்யப்போறியள்? இது எங்கட சொந்த வீடேயப்பா? வீடு மாறேக்கை பிறகு எல்லாத்தையும் கொண்டு திரியேலாது................ என்றதும் ஒருமுறை வெள்ளம் கெல்லருக்குள்(நிலவறைக்குள்) புகுந்ததில் நனைந்தவை போக மிகுதியாக இருந்த எரிமலை, விடுதலைப்புலிகள் போன்றனவற்றைத் தட்டிப் பார்த்தேன். மனம் கனமானது. எப்போது எரிமலை, விடுதலைப்புலிகள் வரும் என்று எதிர்பார்த்திருந்த காலமொன்று இருந்தது. ஆனால் இன்று.......... அவற்றில் காலம் கடந்தாலும் இன்றைய காட்சிகளோடு அப்படியே பொருந்துகிறது. உலைக்களத்திலே வியாசனவர்களால் 2003 இல் எமுதப்பட்ட கவிதையான " கை தவறிப் போகிறது எம் காலம்" ஆம்! இப்போதும் அதே நிலமைதான்.............. படித்துப்பாருங்கள் யாழ்க் கள உறவுகளே! …
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
எந்தத் தூய கோவிலுள்ளும்தூசு நுழையும்ஆயினும் உள்ளெரியும் தீபம்பேசாதுஅதன் ஒளிர்வில் உள் நுழையும் தூசே தானொளிர்ந்து பேசும்...
-
- 1 reply
- 1.3k views
-
-
கொற்றவைத்தமிழே! நற்றுணை பொங்கு! என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே! புன்னகை அழகே! பொதிகையின் அரசே! விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே! நின்னடி பணிந்தேன்... தாயே!... என்னுளம் நுழைக! கங்குல் கரைய, அதிகாலை வெளிக்க, செங்கதிர் வீசும் சூரியன் சிரிக்க, தங்களர் வலுவில் தமிழ்மண் துளிர்க்க தாம் தீம் தோமென தமிழே பொங்கு! எங்கனும் தமிழின் ஓசை சிறக்க, ஏதிலி எனும் பேர் காற்றினில் பறக்க, வங்கப் பரப்பதில் வரிப்புலி சிரிக்க வண்தமிழ்கொடியே! வனப்புடன் பொங்கு! மங்கல ஒலியில் மண்மகள் குளிர, சிங்களச் சேனைகள் செருக்களம் சரிய, அங்கையற்கண்ணிகள் அரியணை செய்ய அன்னைத் தமிழே! அமிழ்தெனப் பொங்கு! வான் புலிச் சிறகுகள் வல்லமை வகுக்க, தேன்கவிராயர்கள் தீந…
-
- 10 replies
- 1.3k views
-
-
'' போராட புறப்பட்டது பிழையா....???'' கட்டிவைத்த என் வீட்டை கயவன் வந்து இடிக்கின்றான்.... அவனை தட்டிகேட்க துணிவின்றி கை கட்டி நிற்கின்றேன்... துப்பாக்கி முன் நிற்க துணிவு வரும் எப்படி....??? தட்டி கேட்க நிற்பேனா...?? தப்பிக்க நிற்பேனா....??? முரண்டு பிடித்தால் முண்டமாய் நான் கிடப்பேன்.... அடங்கித்தானே போக வேண்டும் சிறு பாண்மை என்ன செய்யும்....??? சீற வா முடியும்..?? சினக்கவா முடியும்..??? இன்றிங்கு இப்படித்தான் நடக்கிறது.... யார் தட்டி கேட்டார்...?? யாரால் முடியும்....??? தட்டி கேட்டால் பதில் என்ன வரும் - நீ பலியாய் போவாய்.... இது என்ன...?? இது தானே அடக்கு முறை... இப்போ சொல் உலகே ந…
-
- 3 replies
- 1.3k views
-
-
நீ நாட்டை ஆழலாமோ...??? குருதி நீரினிலே குளியல் செய்கின்ற மடையன் மகிந்தாவிற்க்கு மக்களாட்சியேன்...??? சினை கொண்ட சமரசத்தை சிதைக்க நினைக்கின்ற வெறி பிடித்த மடையனுக்கு வெள்ளை மாளிகையேன்...??? பிண பூவால் மாலைகட்டி தினம்தோறும் போடுமவன் நாட்டதிபனாகி நாடதனை ஆழலாமோ....??? சுதந்திரத்தை பறித்தின்று சுடுகாட்டில் புதை;துவிட்டு மக்களை பிடித்தின்று மயாணத்திற்கனுப்புகின்ற மாபாவியிவன் நாடதனை ஆழலாமோ...?? ஒளி கொடுத்த உதயத்தை சிறையிலே அடைத்து விட்டு விடியலை பேசுகின்ற வீணாண மனிதனிவன் நாட்டதிபரென்று நாடேறியாழலாமோ...??? - வன்னி மைந்தன் -
-
- 6 replies
- 1.3k views
-
-
எங்கே போனீர்கள் எம்மோடு நின்று எதிரியை துரோகியை எதிர்த்து எழுத்தாணியால் பகை விரட்டுவீர் என்று நாம் கணித்திருக்க எங்கே போனீர்கள்......... புலி அடிக்கையிலே புலி வெல்கையிலே புகழ்ந்து புனிதரின் புகழ் பாடியோர் தோல்வி என்றதும் எங்கே போனீர்கள்......... பகைவரும் பதுங்கியிருந்தோரும் புரளியில் புகழ் தேடுவோரும் புது வரலாற்றை எழுத புனிதரின் சாட்சிகள் எங்கே போனீர்கள்......... புலிகள் வெடிக்கையிலே புலிகள் எரிகையிலே நானும் வருவேன் உம்மை மறவோம் என சத்தியம் செய்தீர்களே எங்கே போனீர்கள்......... சிலரைக்கண்டோம் வேறு பெயரில் வேறு அணியில் நடுநிலை என்ற பித்தலாட்டத்தில் இவர்கள் இப்படித்தான் மாற்றத்தை அடைப்போர் என்ற அறிவுக்கொழுந்தாய் எங்கே போன…
-
- 13 replies
- 1.3k views
-
-
விரிந்து கிடக்கும் பூக்களில் தேன் குடிக்கும் வண்டினைப்போல்... திறந்து வைத்த ஜன்னலோரத்தில் நான்!!! அதிசயம் ஆனால் உண்மை...! பக்கத்து வீட்டில்தான் பால்நிலா வசிக்கிறது!!! நிலவுக்கும் எனக்குமான சில அடி தூரங்களும் பலகோடி ஒளியாண்டு இடைவெளியாய்த் தெரிகிறதே!!! இத்தனை நாளாய்ப் பார்க்காமல் எத்தனை அமாவாசைகளை கடந்திருப்பேன்!!! ஏய் நிலவே...!!! பறந்து போகும் என் எண்ணங்களுக்கு சிறகுகளை இலவசமாய்... நீதான் கொடுத்தாயோ??? மொத்தமாய் மறந்துபோகிறேன் என்னை நானே..!!! வீசுகின்ற பருவக் காற்றை நீதான் அனுப்பி வைத்தாயோ??? மெதுவாய் என் பக்கம் வந்து உன் பருவத்தின் வாசனையை பக்குவமாய்ச் சொல்லுதடி!!! அங்கே நீ எட்டிப் பார்த்துச் சிரிக்கையிலே இங்கே கூடுவிட்டு நழுவுதடி எ…
-
- 16 replies
- 1.3k views
-
-
சுஜீத்ஜியின் முதல் கிப்பொப் இசைப் பேழை SINGLES (2005) இப்பொழுது இணையத்தில் தரவிறக்கக்கூடிய வாய்ப்புடன் வொய்ஸ் ரமிலில்!!! http://www.voicetamil.com/index.php?option...view&id=131
-
- 4 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
சேர் , உங்கள் zoom அழைப்பு கிடைத்தது ஆனால் passcode தான் கிடைக்கவில்லை. பணம் கட்டினால் தான் அது கிடைக்குமாமே, பகலுணவுக்கு வழியில்லை பாதை வியாபாரம் செய்யும் அப்பா பாதுகாவலனுக்கும் பயந்து பயந்து மறைந்து மறைந்து செய்யும் வியாபாரம் ஒரு வேளை உணவுக்கே போதாதாம் சேர். ஆயிரம் ரூபா தேட பாதையில் பல பாயிரம் ஓத வேண்டுமாம். ஒரு நாளில் அதை உங்களுக்கு வைப்பிலிட ஒரு கிழமை எமது அடுப்புக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமே சேர். நான்கு சகோதரர்கள் நாம் டேட்டா போடுவதற்கே எமது அப்பாவின் பல பாட்டாக்க…
-
- 12 replies
- 1.3k views
-
-
கொதிக்கும் பாலைத்திங்கள் சொல்ல முடியாத சொல்லுக்குள் அடங்காத வில்லங்க வேதனைகள் வீதியுலா வந்ததெல்லாம் 83 இன் யுூலைக்கே தெரியும்! தென்னிலங்கையில் தமிழன் தோலை உரித்துத் தொங்க விட்ட வேளைகளைச் சுமந்த பாலைத் திங்களிது! கோர நினைவுகள், கொடுமைச் சாவுகள், அப்பப்பா!.......... . ஈர மனங்களைத் தீப்பிழம்பாய் ஆக்கிய அன்றைய நாட்கள்! தமிழச்சி என்பதனால் கொங்கைகள் அறுத்தும், கொப்பழிக்கும் தாரினுள் எம் பிஞ்சுகளை முக்கி எடுத்தும், செங்களங்கள் ஆடாத சிறுமைக் காடையர்கள் செந்தமிழர் உயிர்க்குலையில் வெந்தணலை இட்டதெல்லாம் நேற்றைய நாட்கனவாக நினைவுக்கிப் போய் விடுமா? அழியாத வடுக்கள், ஆறாத ரணங்கள், இழிவான நிலைகள், இதயத்துச் சு…
-
- 8 replies
- 1.3k views
-
-
துரத்துகிறேன்...என்னைத்தான்* நிஜத்தைத் தொட நிழலின் வாலைப் பிடிக்கிறேன். நான் திருப்பித் தீண்டிட நிழலும் திருப்பிக்கொள்கிறதே? கற்பனைக்கு எல்லை குறிக்கிறேன் - அது என்னை மீறி எங்கோ சஞ்சரிக்கிறது... சுடும் நெருப்பை அறிந்த பிறகும் - அதுவே சுகமென - என் சுட்டு விரலை கரித்துக்கொள்கிறேன். கொடுங்காயங்கள் நிச்சயமென அறிந்தும், விபரீதத்தோடு - நான் விளையாடுகிறேன்! ஆற்றுபெறா ரணங்கள் பெற்றுத் தந்த பாடங்களை புரிந்து கொள்ள - நான் துரத்துகிறேன்... விடாது... என்னைத்தான். - சூர்யா
-
- 2 replies
- 1.3k views
-
-
என் அன்புக் கவிஞன் சே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ”புலவனும் வறுமையும் பிரிக்க முடியாதவை” என்று சொன்னதாக கனடா சென்றிருந்தபோது விஜயன் சொன்னான். இது ஆயிரம் ஆயிரம் வருடங்களாக ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கவிஞர்கள் கலைஞர்களால் சொல்லப் பட்டு வருகிற வார்த்தைதான். சில நாட்க்களின் முன்னம் பாவைக்கூத்து கவிதையை எழுதி முடித்தபோது எனக்கும் அப்படித்தான் தோன்றியது. கவிதையை எழுதியபின்னர் என்னை துக்கம் சூழ்ந்தது. என் அப்பா அம்மா இருவருக்குமே கவிதைப் பைத்தியம் பிடித்திருந்தது. இரு துருவங்களான அவர்களைக் கவிதை மட்டும்தான் சேர்த்து வைத்திருந்தது. நான் பிறந்தபோது ஜாதகம் எழுதிய அப்பாவின் நண்பர் சிறீபதி மாஸ்ட்டர் என் பெற்றோரை மகிழ்விக்கவோ என்னவோ . இவர் கவிஞராவார் என எழுதி வைத்திருந்தார்.…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஈழத்து அன்னை மடியில் அழகழாய் பூத்த பூக்கள் தேசத்து மண்ணைக் காக்க செங்குருதி குளித்த பூக்கள் கார்த்திகைப் பூக்களே -எங்கள் மா வீரர்களே! கல்லறையில் உறங்கும் எங்கள் கார்த்திகைத் தீபங்களே! கையில் பூக்கள் கொண்டு வந்து கல்லறையில் பணிகின்றோம் கண்ணீரில் கவிவடித்து காவியங்கள் பாடுகின்றோம் கல்லறையில் முகம் புதைத்து கதறிக் கதறி அழுகின்றோம் கரிகாலன் பிள்ளைகளே கண்திறந்து பாருங்களேன்! உங்களுக்கு மட்டும் தானா இப்படியோர் மனத்துணிவு மரணத்தைக் கூட இங்கு மண்டியிட்டு அழைப்பதற்கு! உம்மைப் பெற்ற அன்னை முகமோ இறுதிவரை பார்க்கவும் இல்லை உம்மைப் பெற்ற அன்னை மடியில் இறுதி மூச்சும் போனதில்லை அண்ணன் வழி சென்றவரே அடிமை விலங்கை அறுத்தவரே…
-
- 3 replies
- 1.3k views
-
-
என்ன பாவம் செய்தமோ ...? ஈழ தமிழார் என்றால் ... துன்பம் ஒரு தொடர் கதை ....!!! அதோ தெரிகிறது வெளிச்சம் .... இதோ வருகிறது விடிவு .... என்று நினைக்கும் போது.... வெளிச்சத்துக்கு முடிவு .... வந்துகொண்டே இருக்கிறது ...!!! கொடியது கொடியது ... மனிதபிறவி கொடியது ... அதனிலும் கொடியது ..... தமிழனாய் பிறப்பது கொடியது .... அதனிலும் கொடியது .... ஈழத்தில் பிறந்தது கொடியது ... அதனிலும் கொடியது .... ஈழத்தில் பெண்ணாய் பிறந்தது ... கொடியது .....!!! + வலிக்கும் கவிதைகள் ஈழ கவிதை
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்று உலகெலாம் காதலர் தினத்தை கொண்டாடுகிறது. உங்களில் பலர் காதலை உணர்ந்திருக்கக் கூடும். என்னுடன் சேர்ந்து கவிதையை அனுபவிப்பீர்கள் என நினைக்கிறேன். காதல் என்ற மூன்றெழுத்தை கண்டு சொன்ன கடவுள் யார்? மந்திர வித்தை கொண்டிந்த சொல்லை செய்த சிற்பி யார்? சீறும் புலியாய் இருந்தவர்கள் பெட்டிப்பாம்பாய் போன கதையென்ன ! கையால் எழுதா, காதால் கேளா வாயால் பேசா மொழி இதுவே இரு இதயம் மட்டும் பேசுகின்ற கடவுள் தந்த அன்பு மொழி ஒன்றை ஒன்று விட்டகலா ஈர் உயிர்கள் சேர்ந்து கட்டுகின்ற அன்பு என்னும் ஆலயத்தின் அர்ச்சனை மந்திரம் காதல் மொழி எத்தனை ஆண்டு, எத்தனை தூரம் எத்தனை ஜென்மம் பிரிந்திருந்தும் அத்தனை நாளும் என்னிதயம் உன்னை நினை…
-
- 9 replies
- 1.3k views
-
-
மனதில் தளம்பல் ஈடு செய்யாமுடியா இழப்பின் தடுமாற்றம் இனி என்ன செய்வது எவர் இவர் போல் எம்மை தாங்குவார் அந்த கட்டளைச்சொல்லை எந்த வாய் சொன்னாலும் இனி........ எதிரி ஒருபுறம் துரோகிகள் மறுபுறம் இரண்டையும் தாண்டி வலை இணைப்பாளர் இன்னொரு புறம் புறம் பேசுதலே குண்டுகளாக பாய....... இனி இவருடன்...................... இடத்தை சோர்வுடன் அண்மிக்கின்றேன் புக வழி இல்லை தம்பிமார் அஞ்சலி செலுத்த வழி தரமுடியுமே கொஞ்சம் பொறுங்கள் இருக்கும் சனம் வெளியில் வரட்டும்......... மனதில் ஒரு கீறல் இதற்கிடையில் நிரம்பிவிட்டதா.... மெதுமெதுவாக கொஞ்சம் நகர்ந்தால் மண்டபத்தை சுத்தி மலையென மக்கள் வெள்ளம் மண்டபத்தினுள் கால் வைக்கின…
-
- 11 replies
- 1.3k views
-
-
மே 17 இன் பின்னரான முடிவில் எங்காவது ஒமு முகாமில் நீ அடைந்திருப்பாய் ஆராவது கொண்டு வரும் மொபைலில் தொடர்பு கொள்வாய் இருக்கிறேன்……, என்ற செய்தி வரும் சந்திப்போம் மீண்டுமெனக் காத்திருந்த காத்திருப்பு காலாவதியாகிறது தோழா….. நீண்டநாளின் பின்னர் நேற்றிரவு வந்த அழைப்பில் உன் அக்கா பேசினாள்……. ‚‘அவனைப்பற்றி ஏதும் அறிஞ்சியளோ…..? எங்கினையும் இருந்தா என்ர தம்பி தொடர்பு கொண்டிருப்பான்…. எங்கையிருக்கிறானோ‘‘…..? ஏதாவது தெரியுமோ….? அவளது இனிமைக்குமாறான கதையிலிருந்தும் அம்மாவின் வளமைக்கு மாறான பேச்சிலிருந்தும் நான் புரிந்து கொள்வது….. இல்லையோ நீயென்று அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நம்பத் தொடங்குகிறார்கள்…… அதிகம் கவலையுறுகின்றார்கள் …
-
- 4 replies
- 1.3k views
-
-
நண்பர்களே - கவிதை ஒன்று அன்புக்கு என்றும் பஞ்சமில்லை!! வாருங்கள் - என்னிடம் நீங்கள் எதிர்பார்த்ததை விட நிறையவே கிடைக்கும்!! ஆனால் ஒன்று அதற்கான தொகையை சரியாக செலுத்திவிட வேண்டும் - என்னிடம் பணமாக!!! அன்புக்கும் விலை பேசும் சில மனிதர்கள்!!! என் செய்வது??? என்னுடைய ஆற்றாமை இது. உங்கள் கருத்து எதுவாயினும் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
-
- 4 replies
- 1.3k views
-
-
புரிந்து கொள்ளவில்லையே மழையே ஏன் உன்னைக் கண்டால் சில பெண்கள் தலை தெறிக்க பீதியுடன் ஓடுகின்றனர்....?????? ஏன் தானோ வெளியே வர மறுத்து விட்டு வீட்டிற்குள்ளேயே ஒதுங்குகின்றனர்???? ஏன் தானோ உன்னைத் தாண்டிப் போவதற்கு தம் முகங்களிற்கு நீ தொடா வண்ணம் உனைத் தடுக்கும் அணியை அணிந்து செல்கின்றனர்...?????? நீ என்ன எதிரியா அவர்களுக்கு??????? அல்லது உன்னிடம் எதாவது கடன் வாங்கி விட்டார்களா...???? புரிந்துவிட்டது..புரிந்துவிட
-
- 4 replies
- 1.3k views
-