ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
மூலம் பதிவில் இருந்து: http://www.pathivu.com/news/6159/54/.aspx மாத்தறை மாவட்டதின் தவளம பிர தேச செயலகத்திற்குட்பட்ட வீரபாண கிரா மத்தில் கணிசமான தோட்டத்தொழிலா ளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றபோதும் அங்கு ஒரு தமிழ்ப்பாடசாலை இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக இங்குள்ள சுமார் 50 மாணவர்கள் வீரபாண கனிஷ்ட வித்தியா லயமான சிங்களப் பாடசாலையில் சிங் கள மொழியிலேயே கல்விகற்றுவருகின்ற னர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 450 சிங்களக் குடும்பங்களும், 100 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களும் வாழும் இப்பகுதியில் உள்ள இந்த ஒரே ஒரு சிங்களப் படசாலையான இப்பாடசா லையிலும் போதிய வசதிகளின்றி மாண வர்களின் கல்வியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் விசனிக்கப்படுக…
-
- 15 replies
- 1.7k views
-
-
தென்னை மரத்திலேறி களவாக 'கள்' குடித்த இருவர் உள்ளாடையுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்ற விநோதமான சம்பவமொன்று பெந்தர கங்கைக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் இடம்பெற்றுள்ளது. தென்னை மரத்திலேறி களவாக 'கள்' குடிப்போர் தொடர்பில் வீட்டு சொந்தக்கார் அவதானமாக இருந்துவந்தார். இந்நிலையில் நேற்றிரவு இருவர் அவருடைய தோட்டத்திற்குள் நுழைந்து தங்களுடைய உடையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு தென்னை மரத்திலேறியுள்ளனர். இதனை அவதானித்த வீட்டுசொந்தக்காரர் கழற்றிவைக்கப்பட்ட உடைகளை வீட்டுக்கு எடுத்துசென்றுவிட்டார். 'கள்' குடித்துவிட்டு மரத்திலிருந்து இறங்கியவர்கள் தங்களுடைய உடைகள் காணாமல் போனதையிடுட்டு அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் வேறு வழியின்றி உள்ளாடைகளுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்றுவிட்டனர். விட்டு…
-
- 15 replies
- 1.3k views
-
-
Published By பெரியார்தளம் On Wednesday, June 6th 2012. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள் அனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. இன்றைய நிலையில் சமுதாயத்தில் நிலவும் ஏராளமான சிக்கல்கள் உரிய அளவுக்கு கவனிக்கப் படாமலும், கவனத்துக்கு வந்தாலும் அதைத் தீர்ப் பதற்கான உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படாமலும் உள்ளன. சமூக தளத்தில் சாதிய அடக்குமுறைகள்; தீண்டாமை வன்கொடுமைகள்; அரசுத் திட்டங்களே சாதிய ஆதிக்கத்திற்கு சாதகமாக தீட்டப்படுதல்; தேர்ந்தெடுக…
-
- 15 replies
- 1.8k views
-
-
ஐநாவில் சிறிலங்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்த இந்திய அரசைக்கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் ஐநாவில் சிறிலங்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்ததற்காகவும் பெரியார் திக பொதுச்செயலாளர் கோவை கு.இரமகிருட்டிணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த இந்திய அரசைக்கண்டித்தும் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இன்று(28.05.2009) மாலை 5.30 மணியளவில் தூத்துக்குடி 1 ஆம் நுழைவு வாயில் காந்திசிலை அருகில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன் முன்னிலையில் ஆதித்தமிழர் பேரவையின் சு.க.சங்கர் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தினை தொடங்கிவைத்தார். புரட்சிகர இளைஞ…
-
- 15 replies
- 1.8k views
-
-
மாற்றுக்கருத்துகளுக்கும் மதிப்பளிக்கக் கோருகிறார் முன்னாள் அமைச்சர் மக்களின் கருத்தறியும் உரிமையை பாதுகாக்க தமிழ் ஊடகங்கள் எதிர்காலத்தில் மாற்றுக்கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நேற்று இடம்பெற்றது. அமர்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் , வாக்களித்துள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நாம் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். எமது மக்களின் முன்னுரிமைக்குரிய கோரிக்கை…
-
- 15 replies
- 785 views
-
-
-ரொமேஸ் மதுசங்க இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள், இன்று புதன்கிழமை (02) தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறினர். முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இவ்வாறு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட இந்த யுவதிகள், இராணுவ பெண்கள் படைப்பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் குறித்த 30 தமிழ் யுவதிகளும் இராணுவத்தில் சேர்த்துகொள்ளப்பட்டதுடன் மூன்று மாத பயிற்சிகளின் பின்னர் இன்று இவர்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 15 replies
- 910 views
-
-
மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பது துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பாகி விடும்-பொ. ஐங்கரநேசன் November 16, 2021 மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பதும், எல்லோருக்குமான பொதுவான நினைவுநாளாகக் கடைப்பிடிப்பதும் மக்கள் மனங்களில் எஞ்சியுள்ள நினைவுகளையும் துடைத்தழிக்கும் வரலாற்றுத் திரிபுபடுத்திகளாக அமைந்துவிடும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் போரால் உயிரிழந்தவர்களுக்கான நினைவுநாளாக நவம்பர், 3ஆவது சனிக்கிழமையைக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேல…
-
- 15 replies
- 959 views
-
-
பத்து தமிழக எம்.பிக்களின் யாழ்.வருகை வெறும் பம்மாத்துத் தானா?.. "எல்லோரும் வந்து பார்வையிட்டுச் செல்வதற்கு இலங்கையில் உள்ள நலன்புரி நிலையங்கள் மிருகக்காட்சிச் சாலைகள் அல்ல" என்று இந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியது தமிழகத்திலிருந்து இந்தியத் தூதுக்குழுவினரைப் பொறுத்தவரை சரியானதாகவே தோன்றுகின்றது. ஏனெனில் நலன்புரி நிலையங்களைப் பார்வையிட்டு மக்களின் அவலங்களை நேரில் கண்டுணர்ந்து அந்த அவலங்களைப் போக்குவதற்கான எண்ணத்தோடு வந்தவர்கள் போல அவர்களின் செயற்பாடுகள் அமையவில்லை.ஒரு சுற்றுலாப் பயணக் குழுவைப் போலவே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப்பேரின் நிகழ்ச்சிநிரலும் அமைந்துள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த மக்களின் நம்பிக்கைகள் எல்லா…
-
- 15 replies
- 953 views
-
-
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம்! யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நினைவஞ்சலி நடத்தப்பட்டது. இதன்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் பொது மக்களை கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினர். 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் விருந்துபசார வைபவத்தின் போது வன்முறைக் கும்பலொன்றினால் நடத்தப்பட்…
-
- 15 replies
- 943 views
- 1 follower
-
-
கனகராயன்குளத்தில் இராணுவம் வைத்த புத்தசிலை உடைப்பு! தமிழினப் பற்றாளர்கள் என்ற அமைப்பு உரிமை கோரியது! வன்னியின் கனகராயன்குளத்தில் சைவ ஆலயம் ஒன்றின் அருகே அமைக்கப்பட்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளத்தின் குறிசுட்ட குளத்தின் அருகே உள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் இலங்கை இராணுவத்தால் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் குறித்த புத்தர் சிலை உடைத்து தகர்கப்பட்டுள்ளது. இதேவேளை, கனகராயன்குளத்தில் உள்ள தமிழ் மக்களின் குடியிருப்பு வீதியின் பாரம்பரிய பெயரொன்று இராணுவ அதிகாரி ஒருவரின் சிங்களப் பெயருக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அதனையும் குறித்த அமைப்பு அண்மையில் தாக்கியிருந்தது. சி…
-
- 15 replies
- 931 views
-
-
China’s 18th launch of 2012 sees Long March 3B loft ChinaSat-12 அமெரிக்க விண்வெளி செய்தித்தளமான "நாசா ஸ்பேஸ் பிளைட்", இலங்கையின் செய்மதி புளுகின் அடிப்படையை அவிழ்த்திருக்கிறது. இந்த செய்தித்தளம் வெளிவிட்டிருக்கும் ஒரு அறிக்கையின் படி இலங்கையின் அதிபர் மகிந்தா ராசபக்சாவின் மகன் ரோகித ராசபக்சாவினால் இலங்கைக்காக ஒரு தொலை தொடர்பு செய்மதி அனுப்பிவைக்கபட்டிருக்கிறது என்ற கதை அடிப்படை அற்றதாக செய்யப்பட்டிருக்கிறது. இந்த செய்மதி சீனாவினால் ஏவப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் நாசாவின் அறிக்கையின் படி இதில் இலங்கைக்கு எந்த உரிமமும் இல்லை எனப்துதான் இப்போது தெரிய வரும் புதிய செய்தி. சீனாவால் பங்குனியில் ஏவப்பட இருந்த அப்ஸ்டார்-7 என்ற செய்மதிக்கு…
-
- 15 replies
- 3.9k views
-
-
குருந்தூர்மலை விவகாரம் : யாழில் சிவசேனை – தேரர்கள் இரகசிய சந்திப்பு! குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாக விகாரையில் இன்று காலை மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். மேலும் குறித்த கலந்துரையாடல் ஊடகங்கள் அனுமதிக்கப்படாமல், இரகசியமாக நடைபெற்றது. குருந்தூர் மலையில் நாளை வெள்ளிக்கிழமை பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http…
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
12 APR, 2024 | 09:41 PM யாழ். செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டார். யாழ்ப்பாணத்தை வரவேற்கும் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ள நிலையில் அதற்கான அனுமதியை கோரி யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு திட்டமுன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையிலேயே குறித்த பகுதியை அமைச்சர் நேரல் சென்று பார்வையிட்டுள்ளார். …
-
-
- 15 replies
- 873 views
- 1 follower
-
-
Published By: VISHNU 05 NOV, 2023 | 04:57 PM (நா.தனுஜா) இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இலங்கை விஜயம் குறித்த தகவல்கள் 'நாம் 200' நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் இரகசியமாக பேணப்பட்டமையினால், அவருடனான சந்திப்புக்கு அனுமதி கோருவதற்கு தமக்கு போதுமான கால அவகாசம் இருக்கவில்லை என இலங்கைத் தமிழரசு கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'நாம் 200' நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொள்வதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த இந்திய மத்திய நிதியமைச்ச…
-
- 15 replies
- 1.3k views
- 2 followers
-
-
அன்புள்ள பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களே, மக்களின் விடுதலைக்காகப் போராடி உயிரையே ஈகம் செய்த உன்னதமான விடுதலைவீரர்களை மாவீரர்களாகப் போற்றி வழிபடும் உயரிய பண்பாட்டினை செலுமையூட்டி – அதனை அரசியல், சமூக, பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக்கியவர்கள் தமிழீழ மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமுமாகும். எமது தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்தப் பாரம்பரியம் காலஓட்டத்தில் விரிவடைந்து முழு மக்கள் திரளையும் ஒன்றிணைக்கும் உணர்வும் - உயிரும் கொண்ட நிகழ்வாகியுள்ளது. இந்த நிகழ்வு 2009ல் தமிழீழ விடுதலைப் போரட்டமும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் எதிர்கொண்ட நெருக்கடிகளினால் பலவித சிக்கல்களை எதிர்கொண்டது. முழு மக்களின் நிகழ்வு - தமிழீழ விடுதலை இலட…
-
- 15 replies
- 1.7k views
-
-
அரசாங்க ஊழியர்களின் மே மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குமாறு வேண்டுகோள்.! ஜனாதிபதியின் செயலாளர் திரு. ஜெயசுந்தேரா அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு தனிப்பட்ட வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையின் சில உள்ளடக்கங்கள் இங்கே.. நாட்டின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையையும் நாடுகளின் கடன் நிர்வாகத்தையும் குறைக்கும் முயற்சியில், மே மாதத்திற்கான சம்பளத்தை அல்லது அதன் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்குமாறு அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை செலுத்த அரசாங்கத்திற்கு குறைந்தது ரூ .100 பில்லியன் தேவைப்படுகிறது,” வெளிநா…
-
- 15 replies
- 1.9k views
-
-
ஜப்பானின் சீனி தொழிற்சாலை வவுனியாவில் (எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவ்வருடம் பல்வேறு முதலீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்பிரகாரம் ஐப்பான் முதலீட்டின் பயனாக இவ்வருடம் வவுனியாவில் சீனி தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார். கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பல்வேறு முதலீடுகளுக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளன. இதன…
-
- 15 replies
- 3k views
-
-
பாதுகாப்புப் படையினர் மடு தேவாலயப் பகுதிக்குள் பிரவேசித்துள்ள போதிலும் இன்று மாலை ஜனாதிபதி இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை தகவல்களை வெளியிடுவதில்லை என பாதுகாப்பு அமைச்சுத் தீர்மானித்துள்ளது. 572ஆவது படையணியின் ஏழாவது தரைப்படை மற்றும் 7ஆவது சிங்கப் படையணி என்பன இணைந்து நேற்று நண்பகல் அளவில் மடு தேவாலயப் பிரதேசத்தை கைப்பற்றியதாக இராணுவ உயர் அதிகாரியொருவர் எமது இணையதளத்திற்கு தெரிவித்தார். தற்போது அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த எவரும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், மடு தேவாலயம் கைப்பற்றப்பட்ட விடயம் தொடர்பாக ராவய பத்திரிகை இராணுவப் பேச்சாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது இன்னமும் படையினர் தேவாலயத்திலிருந்து 50…
-
- 15 replies
- 3.9k views
-
-
தமிழீழம் இந்தியாவுக்கு எதிரானது - டெசோ மாநாடு அறிவிப்புக்குப் பின் மத்திய அரசு அறிவிப்பு டெல்லி: இந்தியாவுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தொடருவது என்பது இந்திய குடிமக்களின் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் அந்த இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் இந்திய குடிமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழ் பிரிவினைவாத குழுக்…
-
- 15 replies
- 2k views
-
-
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு! ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பொதுமக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தினத்தில் வன்முறைகள் மற்றும் சட்டமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. https://athavannews.com/2024/1400368
-
-
- 14 replies
- 726 views
-
-
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலுள்ள ஹோட்டலொன்றின் மீது வழக்குத் தொடுப்பதற்கு ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தீர்மானித்துள்ளார் என கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. நான்கு மாதங்களுக்கு முன்னர் மேற்படி ஹோட்டலில் தங்கியிருந்தபோது தான் கீழே விழுந்து காயமுற்றமை தொடர்பாகவே அவர் வழக்குத் தொடரவுள்ளார். அமைச்சர் கெஹலிய அவுஸ்திரேலியாவிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை இலங்கைக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=60709&category=TamilNews&language=tamil
-
- 14 replies
- 1.2k views
-
-
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ளார். இதன்போது அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசின் முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக இலங்கை வரும் அஜித் டோவல், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக தமிழர் தரப்பு அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/139387/hhhh.jpg இதேவேளை கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாகவும் பேச்சுக்கள் நடைபெறும் என்றும் எதிர்…
-
- 14 replies
- 1.9k views
-
-
சனல் 4 தொலைக் காட்சியில் ஸ்ரீ லங்காவின் கொலைக் களம் (Sri Lanka's Killing Fields ) என்ற ஒரு மணித்தியால திரைப்படம் ஜூன் 14 காண்பிக்கப் பட உள்ளதாக அறிவித்துள்ளர்கள். அதற்கு முன் ஜெனீவாவில் உள்ள U .N அலுவலகத்தில் இத் திரைப்படம் ஜூன் 3 , 11 .00 மணிக்கு திரையிடப்படும். மேலும் வாசிக்க http://www.channel4.com/info/press/news/un-premiere-for-sri-lanka-war-crimes-film
-
- 14 replies
- 2.4k views
- 1 follower
-
-
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ஆகிய கட்சிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியுள்ளது. இனப்பிரச்சினைக்குப் பொதுவான தீர்வொன்றை எட்டுவது தொடர்பாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ஜனநாயக தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் தாம் ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா கொழும்பு வாரப் பத்திரிகையொன்றிடம் தெரிவித்தார். எனினும், வடபகுதியில் நடைபெறவிருக்கும…
-
- 14 replies
- 2.7k views
-
-
கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்று வந்த யுத்தத்தினை முடிவு செய்து தமிழ் மக்கள் குறிப்பாக குடா நாட்டு மக்கள் தற்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கும் அமைதியை நேசிப்பதற்கும் வழியமைத்துக் கொடுத்த அதியுத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவை பாராட்டுகின்றோம் என்று யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி வருகை தருகின்ற அமைச்சர்கள் வாயார புகழ்ந்து நெஞ்சார வாழ்த்துத் தெரிவித்துச் செல் கிறார்கள். "யுத்தம் முடிவடைந்துள்ளது இனி மேல் எந்தத் தமிழ் மகனும் துப்பாக்கி யால் சாகமாட்டான்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்ததும் இந் தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூரப்பட வேண்டும். ஆனால் கள நிலைமைகள் அப்படி யில்லை.தற்போது குடாநாட்டில் மீண்டும் துப்பாக்கி முனைகள் நீட்டப் பட்டு உயிர் களைத் துவம்சம் செ…
-
- 14 replies
- 1.5k views
-