Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகள் தலைவரின் வல்வெட்டித்துறை வீடு சிறிலங்கா இராணுவத்தினரால் இடித்து சேதம் [வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2008, 04:57 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] யாழ். வடமராட்சி வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு நேற்று முன்நாள் நண்பகல் சிறிலங்கா இராணுவத்தினரால் இடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் தனக்கு அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டுக்கு நேற்று முன்நாள் புதன்கிழமை நண்பகல் சென்ற சிறிலங்கா இராணுவ அணியொன்றே வீ…

  2. ராமேஸ்வரம்: தனுஷ்கோடிக்கு வந்த தமிழ் அகதிகளுடன் சேர்ந்து சிங்கள காதல் ஜோடி ஒன்றும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனுஷ்கோடிக்கு நேற்று படகு மூலம் 21 பேர் அரிச்சமுனைப் பகுதியில் வந்திறங்கினர். அவர்களை கியூ பிரிவு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 19 பேர் தமிழர்கள் என்று தெரிய வந்தது. மற்ற இருவரும் காதல் ஜோடிகள், சிங்களர்கள். இதனால் குழம்பிய போலீஸார் அவர்களை தனியாகப் பிரித்து இலங்கைத் தமிழர்களின் உதவியுடன் விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலரின் பெயர் துஸ்ரா சந்தனா, பெண்ணின் பெயர் சாருகா தில்கானி எனத் தெரிய வந்தது. இருவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள். கடுவத்தை பகுதியில், வசித்து வந்தவர் சாருகா. துஸ்ரா, கொழும்பில் உள்ள ஒரு டாக்டரின் வீட்டில் டிரைவ…

  3. யாழ் .துரையப்பா விளையாட்டரங்கு நாளை திறந்துவைப்பு. யாழ் .துரையப்பா விளையாட்டரங்கு நாளை திறந்துவைப்பு. வடக்கின் மாபெரும் விளையாட்டு மைதானமான யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு நாளை முதல் வழமைக்கு திரும்புகிறது. இந்திய அரசாங்கம் வழங்கிய 145 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கு, நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தின் பிரதான மற்றும் இரண்டாம் நிலை பார்வையாளர் மண்டபங்கள் தவிர, உடற்பயிற்சி நிலையமொன்றும் இந்த விளையாட்டரங்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் இரவில் விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான உயரமான மின்னொளி கம்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாளையத…

    • 14 replies
    • 1.8k views
  4. சிறீலங்காவில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 8 ஆம் நாள் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் யாழ் மற்றும் திருமலை மாவட்டங்களில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனி போட்டியிடுகின்றது. தேசியத்தை வலுவாக ஆதரித்ததற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ திரு. செல்வராஜா கஜேந்திரன்இ திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரினால் உருவாக்கப்பட்ட இந்த முன்னனியில் போட்டியிடும் யாழ்மாவட்ட முதன்மை வேட்பாளர் திரு சி. வரதராஜனுடன் ஈழம் இ நியூஸ் (றறற.நநடயஅநநெறள.உழஅ) தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக சிறப்பு நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தது. அதனை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்…

    • 14 replies
    • 1.1k views
  5. [Monday, 2011-09-26 09:34:43] அடுத்த வருடம் ஆரம்பப் பகுதியில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில், 80 களில் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான வரதராஜப் பெருமாளை ஆளுந்தரப்பு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி காரியம் சாதிக்க சிறிலங்கா அரசு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் இறுதியாக இலங்கை வந்திருந்த போது ஆளுந்தரப்பைச் சேர்ந்த சில சிரேஷ்ட அமைச்சர்களும் முக்கியஸ்தர்களும் அவரைச் சந்தித்து வளிக்குக்கொண்டுவருவதற்காக கலந்துரையாடினர் எனவும் தற்போது இந்தியாவில் தங்கியிருக்கும் வரதராஜப் பெருமாள் விரைவில் இலங்கை வரவுள்ளார் என்றும் மீண்டும் அவருடன் அரச தரப்பு பேசவுள்ளதாகவு…

  6. கிணற்று நீரைக் குடிக்கலாமா? குடிக்கக்கூடாதா? : மக்கள் ஆர்ப்பாட்டம் யாழ் மாவட்டத்தில் சுன்னாகம் பகுதி கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பால் பாதிப்படைந்த குடி நீரை குடிக்கலாமா? குடிக்கக் கூடாதா? மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களே பதில் கூறுங்கள் எனக்கோரி யாழ்.சுன்னாகம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று நடத்தினர். சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புகளின் ஒழுங்கமைப்பில் குறித்த கவனயீர்ப்பு சுன்னாகம் முனியப்பர் கோவில் முன்றலில் இடம்பெற்றது. வடமாகாண நீர்வழங்கல் அமைச்சு நிபுணர்குழு ஒன்றை உருவாக்கி குறித்த நிபுணர்கள் குழு இறுதி அறிக்கையினை அண்மையில் சமர்ப்பித்திருந்தது. இந்த …

  7. கொழும்பு மாநகர புதிய மேஜர் பதவியேற்பும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பும் ஒளிப்பதிவில்... Click here to watch Sri-lanka-Political நன்றி சக்தி டிவி

    • 14 replies
    • 4.5k views
  8. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் நாள் நடைபெற உள்ள சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திரதின விழாவில் இந்தியப் பிரதமர் பங்கேற்க மாட்டார் என இந்தியா அதிகாரபூர்வமாக சிறிலங்காப் பிரதமருக்கு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  9. பட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது : அனந்தி எச்சரிக்கை..! இலங்கையில் தற்போதைய நிலைமை தொடருமானால் கொரோனா உயிரிழப்பை விட பல மடங்கு பட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகை மிகவும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களை நோயாளர்களாகவும் 60ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களையும் காவு வாங்கியுள்ளது. இலங்கையிலும் கிட்டத்தட்ட 176 ற்கும் மேற்பட்ட மக்கள் இந்நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் அதேவேளை 5 உயிர்களையும் காவுவாங்கியுள்ளது. நோயாளர்கள் நாளுக்குநாள…

    • 14 replies
    • 1k views
  10. இலங்கைப் பிரச்சனை சம்பந்தமாக ஊடகவியாபாரி சோவின் கேள்வி பதில் பகுதி கேள்வி பதில் :- இரா. சாந்தகுமார், சென்னை49 கே : ஈழத் தமிழர்கள் ஆதரவின்றி, விடுதலைப் புலிகள் எப்படி இலங்கை ராணுவத்தை இத்தனை ஆண்டுகள் எதிர்த்து வர இயலும்? ப : "சிறுவர்கள், விடுதலைப் புலி இயக்கத்தில் சேர்ந்து, அவர்களுடைய கேடயங்களாகப் பயன்படுகிறார்கள் என்பது, ஈழத் தமிழர்கள் ஆதரவில்லாமல் நடக்குமா?' என்று கூடக் கேட்கலாம். "தமிழர்களின் மிதவாத, தீவிரவாதத் தலைவர்கள் பலர், கொல்லப்பட்டது பற்றி, ஈழத் தமிழர்கள் கொதித்தெழவில்லை என்பதிலிருந்தே, அவர்கள் விடுதலைப் புலிகள் செயல்பாட்டை ஆதரிக்கிறார்கள் என்பது தெரியவில்லையா?' என்றும் கேட்கலாம். துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பெறப்படுகிற ஒப்புதல், ஆதரவாகிவி…

  11. வடக்கு மாகாணசபை தேர்தலின் முக்கிய திருப்பு முனைதர்சானந் யாக பலம் வாய்ந்த மூன்றாவது அணியொன்று சுயேட்சையாக களமிறங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் ஊடகவியலாளர் ந.வித்தியாதரனை முன்னிறுத்தி கூட்டமைப்பினில் நிராகரிக்கப்பட்ட தரப்புக்கள் ஒன்றிணைந்து இத்தேர்;தலில் சுயேட்சையாக களமிறங்கவே முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது. கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு தொடர்பினில் அதிருப்தி அடைந்திருக்கும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் உதயன் பத்திரிகை குறித்த சுயேட்சைக்குழுவிற்கு முழுமையான ஆதரவை வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையினில் வித்தியாதரன அவசர அவசரமாக சந்திப்புக்களை நடத்த கொழும்பு சென்றுள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …

    • 14 replies
    • 1.5k views
  12. அன்பார்ந்த எங்கள் தமிழீழ மக்களே !! நான் உங்களிடம் சில துரோகிகளால் மறைக்கப்பட்டுவரும் சில முக்கியமான விடயங்களை பற்றி சொல்லுவதற்காக இந்த இரத்தம் தோய்ந்த வரலாற்றின் சிதறிய மனதை உங்களுக்கு தருகின்றேன் இதனை நான் உங்களுக்கு சொல்லுவதால் எனக்கு எந்தவித தனிப்பட்ட இலாபங்களும் இல்லை.நீங்கள் இன்னும் ஏமாளிகளாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்திற்காகவே உங்களுக்கு சகோதரன் கவிஞர் இராஜேந்திரகுமார் மூலமாக உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன் .இராஜேந்திரகுமார் கருத்தாடு களம் தொடர்ந்து பார்த்துவருகின்றேன்.நிச்சயம் எந்த ஒளிவு மறைவின்றி நான் அனுப்பியதை உங்கள் முன் பிரசுரிப்பார் என்ற நன்பிக்கையில் அனுப்பி வைக்கின்றேன். அதற்கு முன் நான் யார் என்பதை பாதுகாப்புகாரணமாக சுருக்கமாக சொல்லுகிறேன்!!! ந…

    • 14 replies
    • 2.9k views
  13. Quiet Efforts of Jaffna University Vice-Chancellor Succeed in Two Undergrads Being Released After “Rehabilitation” By D.B.S.Jeyaraj Prof. (Ms.) V. Arasaratnam Two of the four Jaffna University undergraduates held at the Protective Accommodation and rehabilitation Center(PARC) at Welikanda have been released on Tuesday January 22nd 2013. Rehabilitation Commissioner-General Brigadier Tharshana Hettiarachchi confirmed to the media that the two students — Jaffna University Student Council President V.Bavananthan and Science Faculty third year student and union member S.Solomon were released today 22nd. They were released after undergoing “rehabilitation” at Weli…

  14. முல்லைத்தீவு கேப்பாபிலவு பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்களுக்காக இராணுவத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 101 வீடுகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (03) இடம்பெற்றது.(படங்கள்:ரொமேஷ் மதுசங்க) http://tamil.dailymirror.lk/--main/105712-2014-04-03-15-43-09.html

  15. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் மறைந்த ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கத்தை இந்த வருடம் மலையகத்தைச் சேர்ந்த மாணவி முனியப்பன் துலாபரணி பெற்றுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா இன்றும் நாளையும் நடைபெறுகின்றது. இன்று நடைபெற்ற அமர்வின்போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவியான மாத்தளை மாவட்டத்தின் சுதுகங்கை எனும் ஊரைச் சேர்ந்த சேர்ந்த செல்வி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆ…

    • 14 replies
    • 970 views
  16. 75ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன குறிப்பாக பெப்ரவரி நான்காம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. அதற்கு பின்னராக பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்ற கலாச்சார மத்திய நிலையத்தில் அதனுடைய ஒரு முழுமையான செயல்பாட்டு நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப…

    • 14 replies
    • 1.3k views
  17. தமிழ் - முஸ்லிம் கூட்டு அரசியல் தீர்வுகள் சாத்தியமா? அரசாங்கம், புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதேவேளை, தமிழர்களின் பிரதான அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களின் பிரதான கட்சியாகக் கருதப்படும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்த விடயத்தில் கூட்டாகச் செயற்படுவதற்காக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன. இந்த முயற்சிகள் எந்தளவு நடைமுறை சாத்தியமானவை என்பதை சற்று ஆராய்வது பொருத்தமாகும். புதிய அரசியலமைப்பொன்றை முன்வைப்பதற்கான அரசாங்கத்தின் இந்த முயற்சியோடு, கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலத்தின் இரண்டாவது ஆண்டு,…

  18. மன்னாரில்... அந்தோனியார் சிலையை அகற்றி, பிள்ளையார் சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை. மன்னார், மடு – பரப்புக்கடந்தான் வீதியில் அகற்றப்பட்ட பிள்ளையார் சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரப்புக்கடந்தான் பகுதியில் இருந்த பிள்ளையார் சிலை ஒரே இரவில் சிதைக்கப்பட்டு, அப்பகுதியில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். அதன்பின்னர், குறித்த பகுதியில் வைக்கப்பட்ட அந்தோனியார் சிலையை அகற்றிய பொலிஸார், மடு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மடு – பரப்புக்கடந்தான் வீதியில்,…

  19. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு... மரணச் சான்றிதழுடன் 100,000 ரூபாய் இழப்பீடு: ராஜபக்ஷ அரசாங்கம் அறிவிப்பு! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ், 100,000 ரூபாய் இழப்பீடு மற்றும் காணி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஐ.நா. கூட்டத்தொடரின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமக்கு உண்மையும் நீதியும் மட்டுமே வேண்டும் என்றும் இழப்பீடும் தேவையில்லை என்றும் தெரிவித்தே அவர்கள் தொடர்ந்தும் பல வருடங்களாக போராடி வருகின்றனர். https://athavannews.com/2022/1271959

    • 14 replies
    • 671 views
  20. இலங்கை அமைதி ஒப்பந்தம்: கைவிட அரசு முடிவு?!- மீண்டும் முழு போர் மூளும் அபாயம் மே 07, 2007 கொழும்பு: புலிகளுடன் நார்வே மத்தியஸ்தில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் முழுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சரும், பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளருமான ககிலிய ரம்புகெவெல்லா நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் அமைதி உடன்பாட்டை மதிக்கிறோம். ஆனால், இந்த உடன்பாடு தொடர்ந்து மீறப்பட்டு வருவதைப் பார்த்தால் அதை தொடர்ந்து அமலாக்குவதா அல்லது அதை கைவிடுவதா என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இது குறித்து புலிகளுடன் பேச வேண்டியது நார்வேயின் வேலை. அமை…

    • 14 replies
    • 3.3k views
  21. அநுராதபுரம் விமானப்படைத் தளத் தாக்குதலை ஒட்டி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் திட்டிக் கடிதம் ஒன்றை அனுப்பி வைததிருக்கிறார். வீ. ஆனந்த சங்கரி. த.விகூட்டணியின் கடிதத் தலைப்பில் 'அன்புள்ள பிரபாகரன்' என விளித்து, கொலைகளை நிறுத்தி பேச்சுக்குச் செல்லவும் என தலைப்பிபட்ட அந்தக்கடித்தில் ஆனந்தசங்கரி தெரிவித்திருக்கின்ற விடயங்கள் வருமாரு :- அநுராதபுரத்தில் உம்மால் மேற்கொள்ப்பட்ட நடவடிக்கையை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன.; இந்தச் சம்பவம் யாரும் மகிழ்ச்சியடையக் கூடிய நிகழ்ச்சியல்ல. நியாயாமாகச் சிந்திக்கும ஒவ்வொருவரும் உமது கொடூரமான இச் செயலுக்கு உம்மைத் திட்டத்தான் செய்வார்கள். இருப்பினும் மனைவி மக்களுடன் பாதுகாப்பாக வாழ்கின்ற ஒரு சிலர் உமது…

    • 14 replies
    • 4.6k views
  22. 'பிரபாகரன் ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்ததில் எந்த பெருமையும் கிடையாது'- வரதராஜ பெருமாள் ரன்ஜன் அருண் பிரசாத்கொழும்பில் இருந்து, பிபிசி தமிழுக்காக 23 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரினாலேயே இலங்கை அரசியலமைப்பின் 13ஆவத…

  23. [size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பிக்கு எதிராக சாட்சியங்கள் எதுவும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. முறைப்பாடுகளோ அல்லது சாட்சியங்களோ இன்றி குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்hளார். குமரன் பத்மநாதனுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே …

  24. முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன் முஸ்லீம்கள் மீது இடம்பெற்ற சம்பவம் ஒரு இனச்சுத்திகரிப்பு அல்ல. அதற்கு பின்னால் ஒரு வரலாறு உள்ளது. சட்டத்தரணி சுவஸ்திகா போன்றோர் புதுப்புது அர்த்தங்களை கூறி போராட்டத்தை கொச்சைப்படுத்தக்கூடாது என முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தமிழர்களின் ஒரு நீண்டகால அரசியல் ஆயுதபோராட்டம் முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டத்தை அடைந்தது. தமிழ் இளைஞர்களிடம் வலிந்து ஆயுதங்களை திணித்தது அரசுகளே. மக்கள் மீதான பாரிய இனப்படுகொலைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு பின்னாலே ஈழ விடுதலை போராட்டம் முளைகொண்டு எழுந்தது. த…

      • Like
      • Haha
      • Thanks
    • 14 replies
    • 773 views
  25. மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவருடன் காதல் கொண்டிருந்த முஸ்லீம் ஆசிரியர் ஒருவருக்கு இன்று இந்துமத முறைப்படி ஊரவர்களால் திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான்(28வயது) என்ற முஸ்லீம் ஆசிரியருக்கும் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி(23வயது) என்ற பெண்னுக்கும் இன்று ஏறாவூர் 4ம் குறிச்சி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த முஸ்லீம் ஆசிரியர் இந்துமதத்தை தழுவிக்கொண்டதோடு அவர் தனது பெயரை சிவக்காந்தன் எனவும் மாற்றிக்கொண்டுள்ளார். இவருக்கு செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் அவர்களின் தலமையில் பதிவாளர் திருமதி.கமலேஸ்வரி தம்பிராஜா அவர்களினால் பதிவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.