Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [ புதன்கிழமை, 19 ஓகஸ்ட் 2015, 12:38.54 AM GMT ] வட – கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எப்பொழுதும் நாம் காப்பாற்றுவோம். நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளோம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு பெற்றுள்ள வெற்றி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்; வடக்கு கிழக்கு மக்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையை மீண்டும் உலகம் அறிய நிரூபித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் கடமைப்பட்டவர்கள். அவர்களின் நம்பிக்கையை எப்பொழுதும் நாம் காப்பாற்…

  2. 99 வீதமான யுத்தம் முடிந்துவிட்டது – கெகலிய ஞாயிறு, 25 ஜனவரி 2009, 04:49 மணி தமிழீழம் [ஈழமைந்தன்] புலிகளுக்கெதிரான யுத்தத்தில் 99 வீதம் முடிந்துவிட்டது அவர்களின் கட்டுப்பாட்டு பிராந்தியத்தை சதுரகிலோமீற்றர்களில் அல்ல சதுரமீற்றர்களிலேயே இனிச்சொல்லாம் என்று சிறீலங்காவின் பாதுகாப்பு பேச்சாளர் கெகலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். இவ் யுத்தத்தின் வெற்றியின் இரகசியம் ஜனாதிபதி மகிந்தவின் மிகக்கூர்மையான திட்டமிடலே என்றும் குறிப்பிட்ட அமைச்சர் இன்னும் சிலதினங்களில் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வரும் என்றும் அறிவித்தார். நன்றி - பதிவு

    • 7 replies
    • 2.4k views
  3. முஸ்லிம் மாணவிகள் முகத்தை மூடும் வகையில் நிகாப் அணிவதை மொறட்டுவ பல்கலைக்கழகம் தடை செய்துள்ளது. எனினும் உடலின் ஏனைய பகுதிகளை முழுமையாக மறைப்பதில் ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைப்பதனை மட்டும் அனுமதிக்க முடியாது என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஏ.கே.டப்ளியூ. ஜெயவர்தன தெரிவித்துள்ளார். முதன் முறையாக இரண்டு முஸ்லிம் மாணவிகள் கண்கள் மட்டும் தெரியும் வகையில் முகத்தை மூடிக்கொள்ள அனுமதி கோரியிருந்தனர். எனினும் பாதுகாப்பு விடயங்கள் இருப்பதால் அதற்கு அனுமதி வழங்க முடியாது என மாணவிகளுக்கு அறிவிக்கப்பட்டது. முகத்தை மூடிக் கொண்டு குற்றவாளிகள் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கக் கூடும் என்பதால் அதற்கு அதற்கு அனுமதி மற…

    • 32 replies
    • 2.4k views
  4. இலங்கை கடற்படையினரின் காட்டுமிராண்டித்தனமான செயலை கடுமையாக கண்டிப்பதாக தமிழக முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழத்தின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு இப்போதுதான் கண் தெரிகிறதா!!! தமிழக அரசு விதித்த 45 நாள் தடைக்குப் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக தமிழக மீனவர்கள் ஏராளமான படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூன் 2-ம் தேதியன்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனனர். இதில் சந்தியாகு என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இலங்கை கடற்படையினரின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல…

    • 4 replies
    • 2.4k views
  5. தள்ளாடியை நோக்கிப் புலிகள் சனி இரவு கடும் ஷெல் தாக்குதல் [Monday March 03 2008 06:48:22 AM GMT] [யாழினி] மன்னார், தள்ளாடிப் படைமுகாம் மற்றும் முருங்கன் பொலிஸ் காவலரண் ஆகியவற்றின்மீது நேற்றுமுன்தினம் இரவு 9.15 மணியிலிருந்து விடுதலைப் புலிகள், கடும் ஷெல் தாக்குதல்களை நடத்தினர். மன்னார், மாந்தை தோப்புப் பகுதியிலிருந்தே இந்தத் தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டனர் என்று கூறப்படுகின்றது. இந்தத் தாக்குதல்களை அடுத்து நேற்றுக்காலை 7.15 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை தலைமன்னார் மதவாச்சி இடையிலான போக்குவரத்துகள் முற்றாகத் தடைப்பட்டிருந்தன. இதேசமயம், மன்னார் மூர் வீதி மற்றும் மன்னார் பொதுவைத்தியசாலைப் பிரதான வீதி ஆகிய இடங்களில் படையினர் மற்றும் பொலிஸா…

    • 1 reply
    • 2.4k views
  6. Started by Nellaiyan,

    மனிதநேய செயற்பாட்டளாரின் கைதும் கே. பியின் தலையீடும் பிரித்தானியாவில் மனித நேய நடவடிக்கைகள் பலவற்றில் ஈடுபட்டு வந்தவரான திருமதி. வாசுகி கருணாநிதி என்பவர் அவசரத் தேவை நிமித்தம் இலங்கைக்கு தனது மகளுடன் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வர முற்பட்ட வேளையில் ஒகஸ்ட 6ம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குப் பெயர் போன கொழும்பு 4-ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வாசுகி பிரித்தானியக் குடியுரிமை பெற்றவர் என்பதால் இவரது கைது தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதித் தூதுவர் இலங்கை வெளிநாட்டமைச்சருடன் தொடர்பு கொண்டிருந்தார். ஐந்து நாட்களில் இவர் விடுதலை செய்யப்படுவார் என இலங்கை…

  7. முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்கு மட்டுமல்லாமல், இதுவரை உயிரிழந்த அனைவருக்குமான நினைவுத்தூபியையே யாழ் மாநகரசபை அமைக்க வேண்டுமென ஈ.பி.டி.பி வலியுறுத்தியுள்ளது. யாழ் மாநகரசபை அமர்வில் இன்று, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முடிவினை முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவிக்கையில், இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து உரிமைக்காக போராடிய அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒரு பொதுவான நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு. அந்தவகையில் யாழ் பல்கலைக்களக மாணவன் விஜிதரன் படுகொலை மற்றும் அவருக்கு நீீதி கேட்டு போராட…

  8. கொழும்பிடம் மீண்டும் பாடம் படிக்கத் தயாராகும் இந்தியா -உதயன் இருபது வருடத்துக்கு முந்திய அரசமைப்பின் பதின்மூன் றாவது திருத்தத்தை மஹிந்தரின் அரசு இப்போது தூக்கிப் பிடித்துத் தலையில் வைத்துக் கொண்டாடுவதன் பின்ன ணியில், நமது அயல் வல்லாதிக்க நாடான இந்தியாவின் நேரடி யான பங்களிப்பும், தலையீடும், செல்வாக்கும் காரணமாக உள்ளனவா என்று கேள்வி எழுப்பியுள்ள ஜே.வி.பியின் தலை வர் சோமவன்ஸ அமரசிங்க, இது குறித்து புதுடில்லி தெளிவு படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். "இந்தோ ஆசிய செய்திச் சேவை' என்ற இந்திய ஊடகம் ஒன் றுக்கு அளித்த செவ்வியிலேயே இந்தக் கேள்வியை அவர் எழுப்பி, பதிலைக் கோரியிருக்கின்றார். 1987 இல் தனது அழுத்தம் மூலம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கொழும்…

    • 6 replies
    • 2.4k views
  9. குடும்பிமலைப் பகுதியில் கடும் சமர்- 6 இராணுவத்தினர் பலி: பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க [வெள்ளிக்கிழமை, 6 யூலை 2007, 14:53 ஈழம்] [கொழும்பு நிருபர்] மட்டக்களப்பு மாவட்டம் குடும்பிமலையை (தொப்பிக்கல) நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் இன்று காலை மேற்கொண்ட சிறப்பு இராணுவ நடவடிக்கையில் மேஐர் தர அதிகாரி ஒருவர் உட்பட 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: இன்று காலை மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர். அப்பகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. முன்னேறிச்செல்ல முயன…

  10. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு" பிரபாகரன் படத்தினைப் பார்த்தால் சாவுபயம் வராது திருமாவின் கல்யாணமும்... பிரபாகரனின் கனவும்...! நொந்தே இறந்த தொல்காப்பியன்! ''உன்னை பெத்ததுக்காக எல்லா விதத்திலயும் பூரிச்சுப் போயிட்டேன். உன் மூலமா ஒரு பேரப் புள்ளைய பார்க்காதது மட்டும்தான் பாரமா இருக்கு. நீ மாலையும் கழுத்துமா நிக்கிறதைப் பார்த்திட்டா, நிம்மதியா கண்ணை மூடிடுவேன்...'' மரணத்தை தன் தலைமாட்டில் நிறுத்தி வைத்திருந்த முதியவர் தொல்காப்பியன், கால் மாட்டில் கலங்கி நின்ற மகன் திருமாவளவனிடம் கலங்கிச் சொன்ன கடைசி வார்த்தைகள் இவை. கடந்த சில வருடங்களாகவே பெற்றோர் இதை வற்புறுத்தி வந்தபோதும், 'பொது வாழ்க்கையில் இத்தனை தூரம் வந்துவிட்ட பிறகு, இனி திர…

    • 0 replies
    • 2.4k views
  11. 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் சுழிபுரம் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: வட்டுக்கோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே குறித்த இருவரும் கல்வி கற்று வருகின்றனர். அவர்கள் இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.சம்பவதினம் குறித்த மாணவி பாடசாலையால் வீடு திரும்பி தனியாக இருந்த வேளையிலேயே மாணவன் அவரை வன்புணர் வுக்கு உட்படுத்தியுள்ளார். மாணவி சத்தமிட்ட போதும் மாணவன் வாயினுள் துணியைத் திணித்துவிட்டு வன்புணர்வு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி தற்போது யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருக…

    • 11 replies
    • 2.4k views
  12. "ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான தேசிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஆக்கபூர்வமான சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன'' - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடைகின்றது. இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் தேசிய அரசு அமையப்பெற்று நூறு நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு …

  13. வன்னியில் முன்னெடுக்கப்படுகின்ற படை நடவடிக்கைள் காரணமாக இடம் பெயரும் மக்களுக்கு எவ்விதமான குறைபாடுகளும் இல்லை. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் அரசு அதியுச்ச கட்டமான கரிசனையை செலுத்திவருகிறது என்று மனித உரிமைகள் மற்றும் அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். வன்னியில் இடம் பெயர்வால் அவல வாழ்க்கையை வாழ்வதாக சர்வதேசத்தின் முன் பிரசாரம் மேற்கொண்டு படைநடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் சர்வதேச இராணுவத்தை வரவழைப்பதற்கும் சூழ்சிசிகள் மேற்கொள்ளப்படு:கின்றன. இடம் பெயர்பவர்களுக்கு சாவதேச நிறுவனங்கள் உதவுவதாயின் எம்முடன் கைகோர்த்துக் கொள்ளலாம்' என்றும் அவர் சொன்னார். இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் கேட்போர் கூடத்…

  14. STF, புலனாய்வுப் பிரிவினர் மற்றுத் தமது ஆதரவாளர்கள் சகிதம் முன்னாள் போராளிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடைய வீடுகளுக்குச் சென்று சுமந்திரன் அவர்களுக்கு மிரட்டல்கள் விடுத்து வருவதாக பிரபல சர்வதேச மனித உரிமை ஆர்வலர் ச.வி. கிருபாகரன் தெரிவித்துள்ளார். ஐ.பீ.சி தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இந்த தகவலைத் தெரிவித்திருந்தார்: கிருபாகரன் வெளியிட்ட தகவலை உறுதி செய்வதற்காக நாங்கள் சுமந்திரனை தொர்புகொள்ள முற்பட்டபோதும், அவர் எமது தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/election/01/251503?ref=rightsidebar

  15. [size=3][size=4]ஈழக் கோரிக்கையை கைவிடுமாறு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், மத்திய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.[/size] [size=4]கருணாநிதியின் தமிழீழ கோரிக்கைக்கு இந்திய மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.[/size] [size=4]எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கருணாநிதி தலைமையிலான டெசோஅமைப்பின் மாநாட்டில் தமிழீழம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. சென்னையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.[/size] [size=4]நேற்றைய தினம் அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் டொசோ மாநாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.[/size] [size=4]தமிழகத்தில் தமிழீழ கோரிக்கை n;தாடர்பான நட…

  16. இது விடுதலைப்புலிகளின் இறுதி விமானத் தாக்குதல் அல்ல புலிகளின் இறுதி விமானத் தாக்குதலா? விடுதலைப் புலிகளின் விமானங்கள் இனிமேல் கொழும்புக்கு வரவே வராது என்றும் அவர்களின் அனைத்து விமான ஓடுபாதைகளும் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும் படைத்தரப்பு கூறியிருந்தது. ஆனால் இது முற்றிலும் தவறானது என்பதை புலிகளின் விமானங்கள் நேற்றுமுன்தினம் இரவு நிரூபித்திருக்கின்றன. நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் புதுக்குடியிருப்புக்கு சற்று வடக்காக உள்ள இரணைப்பாலைப் பகுதியில் இருந்து புறப்பட்ட புலிகளின் இரண்டு இலகு ரக விமானங்கள் மாங்குளம் பகுதியில் ஏ9 வீதியைக் கடந்து மடு, சிலாவத்துறை ஊடாக மேற்கு கடற்பிரதேசத்துக்குள் பிரவேசித்தன. அங்கிருந்து கற்பிட்டி வ…

    • 0 replies
    • 2.4k views
  17. http://www.bbc.co.uk/news/uk-politics-24952042 இங்குள்ள காணொளியை காணுங்கள். புதிய பிபிசி காணொளி.

    • 39 replies
    • 2.4k views
  18. கடற்புலி சூசையின் இறுதி தொலைப்பேசி உரையாடல் - "நாம் தமிழர் அழகூடாது, தைரியமாய் போராடத்தை முன்னெடுத்து செல்லுங்கள்" http://www.youtube.com/watch?v=YP9wMp2pLXg http://vanakkammalaysia.com/index.php/permalink/3293.html

  19. விரைவில் தமிழீழமக்களுக்கு வெற்றிச்செய்தி கிட்டும், அது தமிழீழ விடுதலைப்புலிகளின் படையணிகளால்த்தான் கிடைக்கும் எனவும், அதற்காக தமிழீழமக்களுடன், தமிழிழ விடுதலைப்புலிகளின் படையணிகளும் முழு மூச்சில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் கா.வே.பாலகுமார் அவர்கள் இன்று மேஜர் குட்டிசிறி நினைவு தினத்தில் இவ்வாறு கூறியுள்ளார். தகவல் ஐபிசி.. :idea:

    • 11 replies
    • 2.4k views
  20. விடுதலைப் புலிகளை அழிக்க உதவிய 5 நாடுகள்- இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- இரா.சம்பந்தன்!! இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகைளை 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தன. அதன் காரணத்தாலேயே இலங்கை அரசு வெற்றி பெற்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு முதலசமைச்சர் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பாக நீதியரசர் பேசுகிறார் எனும் நூல் வெளியீடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், …

  21. முகமாலையில் வைக்கப்பட்ட பொறி -அருஸ் (வேல்ஸ்)- விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மறைவு உலகத் தமிழினத்தை ஓர் அணியில் கொண்டு வந்து விட்டிருக்கிறது. தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலை அமைதி வழிக்கும், அரசியல் தீர்வுக்கும் வீழ்ந்த அடியாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர். அதனை மறுக்கவும் முடியாது. ஏனெனில் தாக்குதலுக்கு உள்ளாகிய இடம் அரசியல் போராளிகளின் செயற்பாடுகள் நடைபெறும் பகுதி. முழுக்க முழுக்க அரசியல் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயமே மிக்-27 ரக விமானத்தின் குண்டுவீச்சுக்கு அவர் இலக்காகி உள்ளார். போரின் உக்கிரம் உணர்ந்து பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் பூநகரி பகுதிக்கான கட்டளைத்தளபதி பொறுப்பை ஏற்றுக்கொண்ட போதும், தனது அரச…

  22. இரு விமானங்கள் வீட்டுக்கு மேலாக சென்று முகாம் மீது இரு தீப்பந்தங்களை போட்டன நேரில் கண்ட பெண் கூறுகிறார். ஜ புதன்கிழமைஇ 24 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இதுவரை கேட்டறியாத சத்தத்துடன் வந்த இரண்டு விமானங்கள் எமது வீட்டுக்கு மேலாக சென்று விமானப்படை தளம் மீது இரண்டு தீப்பந்தங்களை போன்ற பொருளை போட்டன. சிறிது நேரத்தில் பெரும் சத்தங்கள் கேட்டன என்று அநுராதபுரம் விமானப்படைத் தளத்துக்கு அருகில் உள்ள வீட்டில் வசித்துவரும் குடும்பப் பெண்ணான தமயந்தி என்பவர் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் நெலும்குளம் பகுதியைச் சேர்ந்த இவர் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து மேலும் தெரிவித்ததாவது, நானும் எனது இரண்டு குழந்தைகளும் வீட்டில் நித்திரையில் இருந்தவேளையில், எமது வீட்டுக்கு மேலாக சில …

  23. இலங்கையின் அமெரிக்க தூதரகத்திற்கு குண்டுதாக்குதல் நடத்தப்போவதாக தொலைமடல் அனுப்பிய ஜே.வி.பி உறுப்பினர் கைது. அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த போவதாக தொலைமடல் அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை கல்கிஸ்சை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்சை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ஷர் விலி அபயநாயக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது குண்டுதாக்குதல் நடத்தப்போவதாக தெஹிவளையிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து இச் சந்தேகநபர் நேற்று பகல் இத் தொலை மடலை அனுப்பிவைத்தார். 52 வயதுடைய இச்சந்தேகநபர் அனுப்பிய மடலையடுத்து அமெரிக்க தூதகரத்திலுள்ள அதிகாரியொருவர் கல்கிஸ்சை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்தே இச் சந்தேக நபர் பொலிஸ…

  24. கடந்த வாரம் எழுதிய இந்தக் கட்டுரைக்கு பலரிடம் இருந்தும் ஆதரவுகளும், அச்சுறுத்தல்களும் வந்ததாக ஈழமுரசு நிர்வாகத்தினர் சொன்னார்கள். தலைவர் இருக்கின்றாரா..? இல்லையா..? என்ற விவாதத்தை இந்தக் கட்டுரை எழுப்பவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். தலைவர் இல்லை என்று சொல்கின்றவர்களிடமும் இருக்கின்றார் என்று நம்பிக்கை கொள்கின்றவர்களிடமும் அதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை.ஆனால், எங்கள் தலைவருக்கு என்றைக்குமே சாவு இல்லை என்பதே என்னுடைய வாதம். மக்களை வழி நடத்துகின்ற ஒரு தலைவருக்கு, மக்களால் நேசிக்கப்படுகின்ற ஒரு தலைவருக்கு மரணம் என்பது எப்போதும் வருவதில்லை. காலம் காலமாக - வரலாறு வரலாறாக அவர்கள் அந்த நேசிக்கப்படுகின்ற மக்களிடம் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். அவரை அந்த ம…

    • 14 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.