ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
"தம்பி' படத்தில் மாதவனின் சமூகக் கோபத்தையும், சீற்றத்தையும் பார்த்தவர்கள் மிரண்டு போய்தான் இருப்பார்கள். ஈழத் தமிழர் பிரச்சினையில் அப்படத்தின் இயக்குனர் சீமானின் கோபமும் அப்படித்தான் இருக்கிறது. ஈழத்தை "எங்கள் தேசம்' என்றும், இந்தியாவை "நீ...', "உன் தேசம்' என்றும் அழைப்பதிலிருந்தே ஈழப் பிரச்சினை அவரை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இயலாமையும், ஏக்கமும், சினமும், சீற்றமுமாய் வெளிப்பட்ட சீமானின் விரிவான பேட்டி:- ஈழப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலை பற்றிய உங்கள் விமர்சனம் என்ன? விமர்சனமே வேண்டியதில்லை. இப்போது வந்துள்ள நிலைப்பாட்டுக்கு எல்லா அரசியல் கட்சிகளுமே வரவேண்டும் என்பதே என் போன்றவர்களின் விருப்பம். அதுக்காக…
-
- 12 replies
- 1.9k views
-
-
சிறீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சிறீலங்காவின் தலைநகரில் நடந்து வரும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இன்று கெத்தாராம பிரேமதாச விளையாட்டரங்களில்... களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய வீரர் சர்மா மீது இனந்தெரியாத பொருள் ஒன்று வீசப்பட்டதால் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு.. மீண்டும் பலத்த பாதுகாப்புக்களின் பின் தொடர்ந்ததாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. சிறீலங்காவில் சிங்களவர்களே இவ்வாறான கிரிக்கெட் போட்டிகளை அதிகம் நேரில் கண்டுகளிக்கப் போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழனை அழிக்க இந்தியாவை அரவணைக்கும் சிங்களம்.. உண்மையில் இந்தியா மீது ஆழ்மன வெறுப்பில் இருக்கிறது என்பதையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. play temporarily suspended.…
-
- 12 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 23, 2011 ஈழநாதம் சிங்கள ஆட்சியாளர்கள் மற்றும் சிங்கள பேரினவாதிகள், புத்திஜீவிகள் ஆகியோர்கள் இலங்கையினை ஓர் சிங்கள பெளத்த நாடாக மட்டும் அதாவது 100 விழுக்காடு சிங்கள பெளத்த நாடாக மாற்றும் நடவடிக்கையில் கடந்த 2000 வருடங்களாக திட்டமிட்டு முயற்சி செய்தே வருகின்றனர். ஆனால் இதனை வெளிப்படையாக ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியின் பின்னர், மஹிந்த இராஜபக்ஷவும் கூட்டணி அரசும் சிறிலங்கா ஓர் பெளத்த பேரினவாத நாடு எனவும் , மஹிந்த சிந்தனையின்படி நாட்டை வழி நடத்த போவதாகவும் கூறிவருகின்றனர். விடுதலைப்புலிகளின் காலத்தில் இவற்றை வெளிப்படையாக கூறினால் அவர்களது பிரிவினைவாதத்திற்கு ஆதரவு பெருக கூடும் என்பதே அட்சியாளர்களின் கணிப்பீடு. ஆனால்…
-
- 12 replies
- 2.7k views
-
-
தமிழக மீனவர்கள் எல்லைக் கடந்து வந்தால் அவர்களை சுடுவதாக ரணில் விக்ரமசிங்க நகைச்சுவையாகவே கூறியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்கவும் இந்திய ஊடகம் ஒன்றிடமே இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். தமது வீட்டுக்குள் அத்துமீறி நுழைபவரை சுட்டுக் கொல்வதற்கு உரிமை இருப்பதாக ரணில் கூறி இருந்தார். ஊடகவியலாளர் தொடர்ச்சியாக கேட்ட கேள்விகளால் அலுப்படைந்த ரணில், இவ்வாறு பகடி செய்த போதும், ஊடகங்கள் அதனை பெரிதுப்படுத்தி இருப்பதாக சந்திரிக்கா கூறியுள்ளார். http://www.pathivu.com/news/39297/57//d,article_full.aspx
-
- 12 replies
- 820 views
-
-
வலிகாமம் வடக்கில் 273 குடும்பங்களுக்கு தலா இரண்டு பரப்பு வீதம் இன்று அரசகாணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு ஜே.254 கிராம சேவகர் பிரிவிலுள்ள அன்ரனிபுரம் பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பலாலி வடக்கு அன்ரனிபுரத்தைச் சேர்ந்த 144 குடும்பங்களுக்கும், பலாலி வடக்கில் மீள்குடியமர்வுக்குப் பதிவுசெய்த காணியற்ற 129 குடும்பங்களுக்கும் தலா 2 பரப்புக்காணி வீதம் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு ஜே. 254 பகுதியிலுள்ள அன்ரனிபுரம…
-
- 12 replies
- 445 views
-
-
ஜ.நா அமைப்பின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு முடிவு பிரசுரித்த திகதி : 01 May 2009 ஜ.நா செய்மதியூடாக முல்லைத்தீவை சுமார் ஒரு மாதகாலம் புகைப்படம் எடுத்திருந்தது அது இன்டர்சிட்டி பிரஸ் மூலமாக கசிந்த செய்திகளை முதன் முதலாக தமிழில் அதிர்வு இணையத்தளம் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து ஏனைய தமிழ் ஊடகங்களும் இச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில், தமிழ் நெட் இணையத்தளமும் ஆங்கிலத்தில் இச் செய்தியை பிரசுரித்தது. பாதுகாப்பு வலயத்தில் தாம் தாக்குதல் நடத்தவில்லை என கூறிவந்த இலங்கை அரசாங்கத்தை இச் செய்தி பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளதால் இலங்கை அரசு கடும் விசனமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜ.நா வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க…
-
- 12 replies
- 2k views
- 1 follower
-
-
தமிழர் தாயகத்தின் 31 ஆசனங்களுக்காக 1867 வேட்பாளர்கள் போட்டி: சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும்? [ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி 2010, 17:47 GMT ] [ கார்வண்ணன் ] எதிர்வரும் ஏப்ரல் 8ம் திகதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், சிறிலங்காவின் தேர்தல் வரலாற்றில் அதிகளவு கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக அமைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 836 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுவே மாவட்டம் ஒன்றில் அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்கிய தேர்தலாகும். இங்கு 22 அரசியல் கட்சிகளும், 16 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 38 அணிகள் மோதுகின்றன. அம்பாறை மாவட்டம் அதிகளவு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் …
-
- 12 replies
- 811 views
-
-
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் செல்லவேண்டுமென வலியுறுத்தியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கமும் இராணுவ நடவடிக்கைகளைக் கைவிடவேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் சிறுவர்களைப் படையில் இணைப்பதை நிறுத்தவேண்டுமெனவும், ஆயுதங்களைக் கைவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு தயாரித்திருக்கும் இறுதியறிக்கை இவ்வார இறுதியில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்த அறிக்கையில் மேற்கண்ட விடயங்கள் க…
-
- 12 replies
- 3.4k views
-
-
உகண்டா கிரிக்கெட் வீரர்களுக்கு இலங்கை முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மூலம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உகண்டாவில் கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்த உதவுமாறு உகண்டா கிரிக்கெட் விளையாட்டுக் கழகம் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே ஜனாதிபதி இந்த உறுதி மொழியை வழங்கினார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளார். அக்குழுவினரின் விளையாட்டுத் திறமைகளை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி அவர்களுடன் சினேகபூர்வமாக உரையாடியதுடன் கிரிக்கெட் வீரர்களுக்கு சீருடைகளையும் வழங்கிவைத்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/67168-2013-05-14-11-18-41.html
-
- 12 replies
- 973 views
-
-
முழு நாடும் சிங்களவர்களுக்கே சொந்தம்! - விமல் “இந்த நாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பௌத்த மதத்துக்கும் – சிங்கள இனத்துக்கும் உரியவை என்பதைத் தமிழர்களும் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ள உறுப்பினர்களும் கவனத்தில்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத் தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இது பௌத்த சிங்கள நாடு. இப்படி இருக்கும் போது நாட்டின் எந்தப் பகுதியும் தமிழருக்கு…
-
- 12 replies
- 1.1k views
-
-
வல்வெட்டித்துறை சந்தியில் கத்தோலிக்க தேவாலயத்துக்கு முன்பாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட புத்தர் சிலை அமைக்கும் முயற்சி இன்று கைவிடப்பட்டுள்ளது. இன்று பகல் குறிப்பிட்ட இடத்துக்கு வந்த இராணுவத்தினர் அங்கு புத்தர் சிலை அமைப்பதற்காக அரைகுறையாக அமைக்கப்பட்டிருந்த கட்டுமாணத்தை முற்றாக உடைத்துச் சென்றனர் என வல்வெட்டித்துறை பிரதேச சபை உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் சற்று நேரத்துக்கு முன்னர் எமக்குத் தெரிவித்தார். http://www.eeladhesa...ndex.php?option
-
- 12 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசிய நாடாளுமன்றத்திற்கு மக்களின் ஆதரவு இல்லாமல் தேர்வு செய்யப்பட்ட திரு.சுமந்திரன் தொடர்ந்தும் தமிழர்களுக்கு எதிரான செயற்பாட்டினை செய்து வருகின்றார். ஏற்கனவே இலண்டனில் நடந்த கூட்டத்தில் புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளை மோசமாக விமர்சித்து புலம்பெயர் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர், இப்போது பேரினவாதியோடு மட்டையாட்டம் ஆடி தமிழர்களின் இரத்தத்தை பேரினவாதி மகிந்தவுடன் பகிர்ந்துள்ளார். உலகம் முழுவதும் இளையோர்கள் சிங்கள அணியின் மட்டையாட்டத்தை புறக்கணிக்க இவர் அவர்களுடன் ஆடியது உலகத் தமிழர்களை பெரும் அவமானத்திற்குள் தள்ளியுள்ளது. திரு.சுமந்திரன் பொறுப்போடு தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும், இல்லாவிட்டால் த.தே.கூட்டமைப்பு அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். …
-
- 12 replies
- 3.4k views
-
-
கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை சத்தியப்பிரமாணம் புதிதாக அமைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைக்கு புதிய அமைச்சரவை நியமனம் செய்யப்பட்டு, அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். இதன்போது கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம். எஸ். உதுமாலெவ்வை, சுதந்திரக் கட்சி உறுப்பினர் விமலவீர திசாநாயக்க ஆகியோர் தாம் முன்னர் வகித்த அமைச்சு பதவிகளுக்கு மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். எம். எஸ். உதுமாலெவ்வை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண, மின்சார, நீர் வழங்கல் அமைச்சராகவும், விமலவீர திஸாநாயக்க மீண்டும் கல்வி மற்றும் காணி அமைச்சராகவும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான, ஹாபிஸ் நஸீர்…
-
- 12 replies
- 1.3k views
-
-
'அரசு புனர்வாழ்வு என்று கூறுவது எதுவென எமக்குத் தெரியவில்லை. தடுத்துவைக்கப்பட்டிருந்த நாட்களில் எமக்கு சிங்களமொழியையே கற்பித்தது அரசு.' இவ்வாறு வெலிக்கந்தை முகாமில் தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த் தெரிவித்தார். யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் எம்மைப் பற்றி ஊடகங்களுக்குத் தவறான செய்திகளை வழங்கியுள்ளார்கள். வெளிநாட்டில் இருக்கும் புலிகளுடன் தொடர்புள்ளது அல்லது இந்தியாவுக்குச் சென்று பயிற்சி எடுத்தோம் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் சி.ஐ.டியினரிடம் தெரிவிக்கவில்லை. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி சி.ஐ.டியின…
-
- 12 replies
- 1.6k views
-
-
வெள்ளவத்தையில் சற்றுமுன் குண்டொன்று வெடித்துள்ளதாகத் தெரியவருகிறது. மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. Blast in Wellawatte Blast in Wellawatte...Await details Three injured in explosion At least three people were injured following a minor explosion along the Galle road in Wellawatte a short while ago. Initial reports suggest the blast was caused by a hand grenade. ஆதாரம் Dailymirror
-
- 12 replies
- 2.8k views
-
-
ஒலி பெருக்கி கட்டுப்பாடு குறித்து ஆலயங்களுக்கு அறிவிப்பு -எஸ்.அரசரட்ணம் வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் ஆலயங்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கியின் சத்தத்தைக் கட்டுப்படுத்த முன்வந்துள்ளதாக தெரிவித்த பிரதேச செயலாளர், சம்பந்தப்பட்டவர்களால் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைவாக ஒலிபெருக்கியை பயன்படுத்துமாறு ஆலய நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆலயங்களில் திருவிழாக் காலங்களிலும் ஏனைய நாட்களிலும் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால் சுற்றாடலுக்கு இடையூறு ஏற்படுவதுடன், மாணவர்களின் கல்வியும் நோயாளரின் ஆரோக்கியமும் பாதிப்படைகின்றது. இந்நிலை குறித்து பிரதேச செயலாளருக்கு சுட்டிக்காட்டிய மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகம், …
-
- 12 replies
- 1.6k views
-
-
வீரகேசரி நாளேடு 3/25/2009 10:50:48 PM - விடுதலைப்புலிகள் பலமாக இருந்த ஓர் அமைப்பு என்பதனால் அவர்களை உடனடியாக அழிப்பது என்பது கடினமான காரியமாகும். புலிகளை முற்றாக அழிப்பதற்கு சில காலம் எடுக்கும் அவர்களை அழித்ததன் பின்னரே இந்நாட்டில் முழுமையான அமைதியை ஏற்படுத்த முடியும் அது வரையிலும் சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என்று அமைச்சர் விநாகய மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். பழமைகளை மறந்து புதுமையை பற்றி செல்லவேண்டும் அதன் மூலமாகவே ஏற்பட்டிருக்கும் கசப்புணர்வை இல்லாதொழிக்க முடியும். இந்நிலையில் தமிழ் மக்களின் நலனில் கூட்டமைப்பு விருப்பம் கொண்டிருக்குமாயின் கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் இன்று பு…
-
- 12 replies
- 2.1k views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கக் கூடும்: "ரொய்ட்டர்'' திகதி: 26.12.2009 // தமிழீழம் சிறுபான்மை இனத்தவர்களுக்கு நெருக்கமான ஐக்கிய தேசியக் கட்சி, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஆதரிப்பதால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கக் கூடும் என ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி "ரொய்ட்டர்' செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தத்திற்குப் பிந்திய தேசிய நல்லிணக்கம் குறித்து இரு பிரதான வேட்பாளர்ளும் இதுவரை எதனையும் தெரிவிக்காத போதிலும், அரசியல் தீர்வொன்றை முன் வைப்பதற்கான சாதகமான தன்மை சரத் பொன்சேகாவிடம் உள்ளதாக "ரொய்ட்டர்" தெரிவித்துள்ளது "ரொய்ட்டரில்', மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: முன்னர் விடுத…
-
- 12 replies
- 868 views
-
-
பிரபாகரன்கள் சாதிப்பார்கள் - மதன். இவ்வளவு நாள் போராடியும் பிரபாகரனால் சாதிக்க முடியவில்லையே - இதைக் காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாமா? என்று வாசகர் அனுப்பிய கேளிவிக்கு ஆனந்த விகடன் வாரஇதழில் பதிலளிக்கையிலேயே மதன் இக்கருத்தினை தெரிவித்துள்ளார். காலத்தின் கட்டாயம் அல்ல - துரோகம். எத்தனையோ போராளிகள் தங்கள் லட்சியத்தை அடைவதற்கு முன்பே கொல்லப்பட்டார்கள். பிற்பாடு இன்னொரு தலைமுறை கிளம்பி அவர்களது லட்சியத்தை நிறைவேற்றி இருக்கின்றது. அந்தப் புரட்சித் தீயை விதைத்தவர்கள் அந்தப் போராளிகள்தான். ரோம் நாட்டில் அடிமைகளின் சுதந்திரத்திற்காக வாள் எடுத்துப் போராடிய அடிமைகளின் தலைவன் ஸ்பார்ட்டகஸ் கொடூரமாகக் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டான். பிற்காலத்தில் அடிமைத்த…
-
- 12 replies
- 2.5k views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகளின் இலக்கு முழு இலங்கைத்தீவையும் கைப்பற்றி முழு சிங்கள இனத்தையும் அழிப்பதே என்றும் அதனை தடுப்பதற்காகவே சிறீலங்கா படைகள் போராடி வருவதாக, சிறீலங்கா தரைப்படை தளபதி வியாக்கியானமளித்துள்ளார். கொழும்பில் உள்ள சிறீலங்கா தரைப்படை தலைமையத்தில், நேற்று திங்கட்கிழமை லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும், AFP, AP, BBC, JNW, ரொய்டேர்ஸ், சிங்குவா, த ஹிந்து, நியூ இந்தியா பிரஸ், இந்தியா ருடே, ஹந்துஸ்தான் ரைம்ஸ் ஆகிய பன்னாட்டு ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கும் மத்தியில், சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்பொழுது கருத்துரைத்த சிறீலங்கா தரைப்படை தளபதி, மரபுவழி ஆற்றலை கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, காட்டுப்பு…
-
- 12 replies
- 1.9k views
-
-
மஹர சிறைச்சாலை கலவரத்தால் 8 பேர் உயிரிழப்பு! முடுக்கி விடப்பட்டுள்ள விசாரணை இரண்டாம் இணைப்பு மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கைதிகள் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 35 காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. முதலாம் இணைப்பு மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்பத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹர சிறைச்சாலையில் மேலும் கைதியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து, க…
-
- 12 replies
- 1.7k views
-
-
ஜி.எஸ்.பி. வரிசலுகைக்கு சமனான தொகை புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து கிடைக்கின்றது. - அரசாங்கம் கொழும்பு நிருபர் ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010 2009 இல் வெளி நாட்டில் வதிவோர் இலங்கைக்கு அனுப்பிய தொகை 3.5 பில்லியன் டொலர் என அரசாங்கம் கூறியுள்ளது. இந்த தொகை 2008 ஆம் ஆண்டினை விட 14 விழுக்காடு அதிகம் என கூறியுள்ளது இலங்கை அன்னிய செலவாணி கட்டுப்பாட்டு திணைக்களம். இலங்கைக்கு வருமானத்தினை ஈட்டித்தரும் பெரும் பொருளாதார அலகாக புலம்பெயர் வருமானம் மாறியுள்ளதாக கூறப்படுகின்றது. 2009 இல் கிடைத்த இந்த தொகையனது ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி சலுகையினால் கிடைத்த தொகைக்கு சமமாகும். http://www.eelanatham.net/story/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%…
-
- 12 replies
- 1.4k views
-
-
டீசல் 31 ரூபாவினால் அதிகரிப்பு; பெற்றோல் 12 , மண்ணெண்ணை 35 ரூபாவினால் கூடும் பெற்றோல் விலை லீற்றருக்கு 12 ரூபாவினாலும் டீசல் விலை லீற்றருக்கு 31 ரூபாவினாலும் மண்ணெண்ணை விலை லீற்றருக்கு 35 ரூபாவினாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பெற்றோலியத் துறை அமைச்சு அறிவித்துள்ளது. இவ்விலை அதிகரிப்பையடுத்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (சி.பிசி.) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு லீற்றர் 90 ஒக்டேன் பெற்றோல் விலை 149 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் விலை 167 ரூபாவாகவும், ஒரு லீற்றர் டீசல் வீலை 115 ரூபாவாகவும், மண்ணெண்ணை விலை லீற்றருக்கு 106 ரூபாவாகவும் இருக்கும். லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலையை லீற்றருக்கு 12 ரூபாவி…
-
- 12 replies
- 1.7k views
-
-
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகையை வட இலங்கையில், வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடியிருக்கின்றார்கள். [size=3][size=4]காலையில் ஆலயங்களுக்குச் சென்று பலரும் தீபாவளிக்கான சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார்கள்.[/size][/size] [size=3][size=4]இளைஞர்களும் சிறுவர்களும் பட்டாசுகளைக் கொளுத்தியும் மகிழ்ந்தனர்.[/size][/size] [size=3][size=4]சினிமாவுக்குச் சென்றும் பலர் பொழுதைக் கழித்தனர்.[/size][/size] [size=4] [/size] [size=4]வவுனியா சினிமா கொட்டகை ஒன்றில் ரசிகர்கள் [/size] [size=4]டிக்கெட் வாங்க முண்டியடித்தனர்.[/size] [size=4]வன்னியில் தீபாவளி பிரகாசிக்கவில்லை[/size] [size=…
-
- 12 replies
- 1.8k views
-
-
இலங்கை தமிழர் விடயத்தில் நேரடியாக தலையிடாது இந்தியா இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடப் போவதில்லை. கடந்த 30 வருட கால அனுபவத்தில் நாம் கற்றுக்கொண்ட பாடம் அதிகமாகும் என இந்தியாவின் பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வுக்கான நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தெரிவித்தனர். இலங்கையின் உள்ளக விடயத்தில் மாத்திரமின்றி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திலும் நேரடியாக இந்தியா தலையிடாது எனவும் அந்த நிபுணர்கள் குறிப்பிட்டனர். இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்றுள்ள ஊடகவியலாளர் குழுவை நேற்று (திங்கட்கிழமை) புதுடெல்லியில் அமைந்துள்ள பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வுக்கான மையத்துள் சந்த…
-
- 12 replies
- 823 views
-