Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேட்சை குழு ஒற்று போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்ம குமார குருக்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை 10.30 மணியளவில் இந்து குருமார் பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர் கால அரசியல் நிலவரம் தொடர்பாகவும் இந்து மக்களை  அழைத்து ஆராய்ந்த போது மக்கள் சில ஆணைகளை எமக்கு வழங்கி உள்ளார்கள். எதிர் வருகின்ற பாராளுமன்ற பொது…

    • 36 replies
    • 2.1k views
  2. வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக பொங்கல் பானை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், தனது பொங்கல் வாழ்த்துடன் விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகம் வாழ் எனது இனிய தமிழ் உறவுகளுக்கு பொங்கல் பானை சார்பில் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை உழவர் திருநாளாம் இன்று மதம், குலம், நாடு கடந்து சகல தமிழ்ப் பேசும் உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். பொங்கல் பானை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் என்பதை நான் சொல்லி எனது இனிய உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என அவர் மேலும் தெ…

    • 36 replies
    • 3.7k views
  3. புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள் – 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றவர்களை அம்பலப்படுத்திய அமைச்சர் December 11, 20206:29 am இந்த செய்தியை பகிருங்கள்! இறுதி கட்ட யுத்தம் நடைபெற்றபோது நாடாளுமன்றத்திலிருந்த போலி தமிழ் தேசியவாதிகள் புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்றே விரும்பியிருந்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், பேரினவாத தீயிற்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசியவாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர். சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை …

  4. எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இலங்கை மனித உரிமை பிரச்சினை தொடர்பான குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய தவறினால் சர்வதேச ரீதியான ஒரு சுயாதீன விசாரணை நடத்தப்படுவதை தவிர்க்க முடியாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) செய்தியாளர்களிடம் பேசிய பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இதனைக் குறிப்பிட்டார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்திற்கு முன்னர் இலங்கை மேலும் முன்னேற்றமான முனைப்புகளை மேற்கொள்ளும் என நம்புகிறேன். அடிப்படையான விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மேற்கொண்டுள்ள இந்த பணிகள் பராட்டத்தக்கது. இலங்கை மீதான சர்வதேசத்தின் கவனத்தை திரும்பும் நோக்கில் நான் கொழும்புக்கு வந்தேன். …

  5. எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்.ஸ்ரீகாந்தா ஆகியோர் உட்பட முக்கியமான சிலருக்கு இத்தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்படா மாட்டாது என திட்டவட்டமாக முடிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சிவாஜிலிங்கம்,ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு எதிராக கூட்டமைப்பு சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் மாறாக ரெலோ கட்சியே சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5…

  6. உயிரோடு இருக்கிறரா க.வே.பாலகுமாரன்? இன்று ளுசi டுயமெய புரயசனயைn பத்திரிகை திரு.க.வே.பாலகுமாரன் அவர்கள் 17 மே 2009 அன்று இராணுவத்திடம் வெள்ளைக் கொடியுடனும் மேலும் சில உயர்நிலைத் தலைவர்களுடனும் சரணடைந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. இராணுவத்தினரின் பகுதிக்குள் தனது மகனுடன் சரணடைந்த நிலையில் எடுக்கப்பட்ட பிரத்தியேகப் புகைப்படத்தினை வெளியிட்டள்ளது. இராணுவத்திற்குள் இருக்கும் தங்களது தகவல் பிரிவிடமிருந்து பெறப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படம் இதுவெனத் தெரிவித்துள்ளனர். இப்புகைப்படத்தின் பின்புலத்தில் இராணுவத்தினரின் நடமாட்டம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் யுத்தத்தின் போது கொல்லப்பட்டதாக அமைச்சர் ஒருவரால் தெரிவிக்கப்பட்ட செய்தி இதன்மூலம்…

  7. ஒற்றுமையுடன் போராடி இருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்: கருணாநிதி ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கருப்பு உடையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அனைத்து கட்சிகளின் எதிர்ப்புகளுக்கும் இடையே இலங்கை அதிபர் ராஜபக்சே, இன்று மாலை திருப்பதி வருகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெசோ அமைப்பு சார்பில் வள்ளூவர் கோட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. திமுக பொருளாளர் ஸ்டாலின், திக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கனிமொழி எம்.பி., சுப.வீரபாண்டியன் மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட தலைவர்கள் கல…

    • 36 replies
    • 1.8k views
  8. அரிசிக்குத் தட்டுப்பாடா? மரவள்ளியை சாப்பிடுங்கள்! சமல் ராஜபக்சவின் ஆலோசனை இது! நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது, கடந்த காலங்களில் கிராமங்களில் மரவள்ளிக்கிழங்கு, பாசிப்பயறு போன்றவற்றை உண்டனர் என்று நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற பூஜை ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேலும் தெரிவிக்கையில், பாண் சாப்பிடுவதைவிட மரவள்ளிக் கிழங்கு, பாசிப் பயறு சாப்பிடுவதில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும் மரவள்ளி கிழங்கு புற்று நோய்க்கு சிறந்த மருந்து எனவும் அவர் தெரிவித்தார். எமது நிலங்களில் மரவள்ளி கிழங்கு சிறப்பாக வளரும். 60க்கும் மேற்பட்ட தேசிய கிழங்கு வகைகள் இருக்கின்றன. பாசி…

  9. Published By: DIGITAL DESK 3 16 SEP, 2024 | 11:00 AM "சுமந்திரம்" எனும் பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் பிரச்சார கூட்டத்தில் குறித்த பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பத்திரிகையை அறிமுகம் செய்ததுடன், கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும் பத்திரிகை இலவசமாக விநியோகிக்கப்பட்டது. குறித்த பத்திரிகையில் சஜித்தை ஏன் தமிழரசு கட்சி ஆதரிக்கிறது, ரணிலை ஏன் விழுத்த வேண்டும், தமிழ் பொது வேட்பாளர் அரசியல் தற்கொலை என சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. …

  10. ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை – வாக்கெடுப்பு இன்று! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த பிரேரணைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது. விவாதத்தின் நடுவில், சில நாடுகள் தலையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரேரணை மீதான வாக்கெடுப்பு பெரும்பாலும் நாளை இடம்பெற வாய்ப்புள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணையை பிரித்தானியா தலைமையிலான ஜேர்மனி, கனடா, வட…

  11. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஜெயலலிதா ஆதரவு [ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2008, 06:42 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அகில இந்திய கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்வரும் வியாழக்கிழமை (02.10.08) நடத்தவுள்ள போராட்டத்துக்கு தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளர் தா.பாண்டியனுக்கு நேற்று சனிக்கிழமை (27.09.08) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: இலங்கைத் தமிழர்களின் பல்வேறு பிரச்சி…

    • 36 replies
    • 4.2k views
  12. பிரபாகரனின் தொடர் தோல்விகளின் பின்னணியில் அமெரிக்க எவ்.பி.ஐ.! விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் சர்வதேச ஆயுதக் கொள்வனவுகள், கடத்தல்கள் சம்பந்தப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவின் எவ்.பி.ஐ. எனப்படும் சமஷ்டிப் புலனாய்வுக் குழுவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எடுத்த நடவடிக்கைகளும் பிரபாகரனின் தாக்குதல் திட்டங்களுக்குப் பாரதூரமான பின்னடைவையும் தோல்வியையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் புலிகள் அமைப்பு மேற்கொண்ட தாக்குதல் திட்டங்கள், செயற்பாடுகள் பற்றி ஆராய்ந்து பார்த்தால் அவ்வாண்டில் பிரபாகரனின் அனைத்து நடவடிக்கைகளிலும் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்விகளை அடைந்திருப்பதாகக் கருத முடியும். இந்த வகையில் கடந்த …

  13. ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையான தமிழீழத்தினை கைவிட்டு விட்டதாக உலகத் தமிழர் பேரவை சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் அந்த அமைப்பின் மீதான சிறிலங்காவின் தடை விலக்கப்படலாம் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்குள் பரந்துபட்ட அதிகார பகரிர்வுடன் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வதற்கு தாம் தயாரென சமீபத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகள் மற்றும் அந்த அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள் தெரிவித்திருந்தனர். சமீபத்தில் கிளிநொச்சி பயணத்தின் போது தனி ஈழத்தினை கைவிட்டு விட்டு வாருங்கள் என தமிழ் அரசியல் தலைமைகளுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பும் விடுத்திருந்தார். இந்நிலையில் உலகத் தமிழர் பேரவை தம…

  14. மன்னார் எருக்கலம்பிட்டியில் அமைந்துள்ள இராணுவத்தினரது முகாம் விடுதலைப் புலிகளின் ஈரூடகப்பிரிவினால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. பல கனரக ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது. அதிகாலை 02:08 அளவில் மின்னல் வேக தாக்குதலை ஆரம்பித்த ஈருடகப் படையினர் 10 நிமிடத்தில் முகாமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். சுமார் 2 மணித்தியாலங்கள் வரை முகாமை கட்டுப்பாட்டில் வைத்திருந்த புலிகள், 03:45 மணி அளவில் முகாமை தகர்த்துவிட்டு வெற்றிகரமாக தமது கட்டுப்பாடு பிரதேசத்திற்கு திரும்பினார்கள். இத்தாக்குதலில் 3 புலி வீரர்கள் வீரச்சாவு அடைந்துள்ளார்கள். -www.tamilnet.com

    • 36 replies
    • 6.1k views
  15. 26 ஜூன் 2011 வணக்கம், வணக்கம் கொஞ்ச நாளா உங்களோட கதைக்கேலாமல் போட்டுது. வன்னியில் என்ர பங்குக் காணியும் ஆமி விடுவிச்சிட்டுது. பற்றை வெட்டுறது, வேலிக்கு கதியால் போடுறதெண்டு நாள் போட்டுது. ஊருக்கு திரும்பினால் நடக்கிறதுகளப்பார்த்தால், நெஞ்சு பொறுக்குதில்லை. பழையபடி ஆமிப்பதிவு, தொடங்கியிட்டுது. வீட்டுக்கு வாறவங்கள் கேக்கிற கேள்விகள் தலைய சுத்தவைக்குது. வீட்டுக்குப்பையளை எங்க கொட்டுறனியள், கிணறு கிடக்கே, மலசலகூடம் கிடக்கே எண்டு ஆயிரத்தெட்டு கேள்வியள். ஆனாலும் அவங்கள் தெளிவா, பிளான் போட்டுஎல்லாத்தையும் செய்யுறாங்கள். தனிச் சிங்களத்தில அச்சிட்ட படிவங்களோட தான் அவங்கள் வாறாங்கள். ஆனால் அதை எங்கட கையில தாறாங்களில்லை. வீட்டை வந்த ஆமிக்காரங்களுக்கு தலைமை தாங்கினவன…

  16. http://www.youtube.com/watch?v=DrzOtL-jdrc அவுஸ்திரெலியாவில் சிங்கள அணி விளையாடும் போது விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று சிங்களத்துக்கு வாக்காளத்து வாங்கும் தமிழர்களுக்காக(???????) இங்கே நான் இணைத்திருக்கிறேன்.

    • 36 replies
    • 3k views
  17. இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐநா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சில திருத்தங்களுடன் ஆதரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்று தரும் நெருக்கடிகள், அமெரிக்காவே நேரடியாக ஆதரவு கோரி நிற்கும் சூழல், தீர்மானத்தின் நெகிழ்வுத்தன்மை கொண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கைக்கு எதிரான தீர்மான விஷயத்தில், இந்தியாவின் நிலை கண்டு கொதித்துப் போய், “எட்டுகோடி இந்தியத் தமிழர்கள் முக்கியமா… இனப்படுகொலை செய்த சிங்களர்கள் முக்கியமா? போரை நடத்த துணைநின்ற பாவத்தை இந்திய அரசு எப்படி தீர்க்கப் போகிறது,” என்ற கேள்விகளை பாராளுமன்றத்த…

  18. இரவோடு இரவாக உடைத்தெறியப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ! பெரும் பதற்றம் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை ஆறு மணியளவில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கபட்டிருந்தது. இந்த நிலையில் பொலிஸார், இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் இணைந்து நினைவுக்கல் நடுகை செய்யமுடியாது என தடை ஏற்படுத்தியிருந்தனர். இதனை தொடர்ந்து இரவோடு இரவாக அப்பகுதி இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிர…

  19. மன்னாரில் எம் அய் - 17 கெலி சேதம்- படைமுகாமுக்குள் அவசரமாகத் தரை இறக்கம். டெய்லிமிரொர்

  20. இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலுள்ள மக்களை இராணுவத்தினரின் முன்னரங்கப் பகுதிகளுக்கு வருமாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார், வவுனியா, மணலாறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் மோதல்களில் இராணுவத்தினர் வெற்றிகரமாக முன்னேறிவரும் நிலையில், விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் மக்கள் வெளியேறுவதற்கு இந்த மோதல்கள் உதவும் எனவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் கூறியிருந்தார். இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருக்கும் மக்களை, இராணுவத்தினரின் முன்னரங்கப் பகுதிகளுக்கு வருமாறு கோரிக்கை விடுத்திருக்கும் இராணுவத் தளபதி, தமது கட்டுப்பாட்டின்கீழிலிருந்த

  21. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மாதிவெலயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பின்னர் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/72515 ரஞ்சன் வீட்டில் பொலிஸார் சோதனை முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் பொலிஸார் சோதனை செய்துவருகிறார்கள். தனது வீட்டை சோதனையிடுவதற்கான அனுமதியோடு பொலிஸார் தனது வீட்டுக்கு வந்திருப்பதாக டுவிட் செய்துள்ள முன்னாள் பிரதி அமைச்சர், தான் எந்தவொருக் குற்றச்செயல்…

  22. கூட்டமைப்புக்குள் இருக்கும் புலி எதிர்ப்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்; செல்வம் அதிரடி June 28, 2020 கிழக்கு மாகாணத்தில் தமிழ் எம்.பி.க்களின் மனைவி, பிள்ளைகளை கடத்தி வைத்து அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றுக்கு ஆதரவளிக்க வேண்டும் என மிரட்டியவர் கருணா என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில் தெரிவித்ததாவது; “தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல தியாகங்கள…

    • 36 replies
    • 2.2k views
  23. பிரிகேடியர் ரமேஸ் – விடுதலைப்போராளிகள் பதித்துச்சென்ற தியாகங்களின் மற்றுமொரு வடிவம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கடந்த வாரம் ஒரு முக்கிய திருப்பத்தை தந்துள்ளது. சிறீலங்கா அரச தலைவரின் பிரித்தானியா பயணம், அவரை கைதுசெய்வதற்கு முயன்ற பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ், புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு கைகொடுத்த பிரித்தானியா ஊடகங்கள், தமிழ் மக்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகம் என்பன பல செய்திகளை எமக்கு கூறிச் சென்றுள்ளன. சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், அங்கு மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்குலக…

  24. வன்னியில் நடைபெற்று வரும் சமரில் 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார். சேட்டன் என அழைக்கப்படும் கேணல் இளங்கீரன் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலம் இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றியவர். நிறையச் சமர்க்களங்களைச் சந்தித்தவர். லெப்.கேணல் அக்பரின் தலைமையில் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணி செயற்பட்ட காலத்தில் அவ்வணியின் தாக்குதற் தளபதிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர். ஓயாத அலைகள் - 3 இன்போது குடாரப்பில் தரையிறங்கிய புலியணிகள் இத்தாவிலில் பிரிகேடியர் பால்றாச்சின் தலைமையில் சண்டையிட்டபோது விக்ரர் கவச எதிர்ப்பு அணியையும் சமர்க்களத்தின் ஒரு பகுதியையும் வழிநடத்தியவர் இளங்கீரன். -நன்றி புலிக…

  25. இலங்கை போக இனி விசா தேவை... Sri Lanka to introduce online prior approval for visa 29 September 2011, 12:19 am Department of Government Information, Sri Lanka (Embedded image moved to file: pic31196.jpg)Sri Lankan Immigration authorities are to introduce a system called “Electronic Travel Authorization – ETA” in order to grant prior approval for visa via online for foreign nationals instead of the presently implemented ‘on arrival visa’ at the ports of entry.. The new system will be introduced on September 30, under the auspices of Defence Secretary Gotabhaya Rajapaksa with the participation of several distinguished guests includi…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.