ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
Jan 3, 2011 / பகுதி: செய்தி / பாடசாலைகளில் தினமும் பிரித் ஓதவேண்டும் - சிறீலங்கா அரசின் புதிய சட்டம் சிறீலங்காவில் உள்ள எல்லா பாடசாலைகளிலும் காலை வேளையில் பௌத்த மதத்தின் பிரித் ஓதப்படவேண்டும் என சிறீலங்காவின் கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. பாடசாலைகள் தினமும் தமது செயற்பாட்டை ஆரம்பிக்கும் முன்னர் பிரித்த ஓதப்படவேண்டும். அதற்காக 20 நிமிடங்கள் தினமும் ஒதுக்கப்படும். 2600 ஆவது சம்புத்தா ஜெயந்தியை முன்னிட்டு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அது தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. சிறீலங்கா முழுவதையும் பௌத்த நாடாக மாற்றும் சிறீலங்கா அரசின் திட்டத்தில் இது அடுத்த கட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. pathivu
-
- 6 replies
- 941 views
-
-
26 AUG, 2023 | 07:38 PM ஆர்.ராம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் ட்ரக்கினால் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கு முன்னதாக ஒழுங்கமைப்புக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஜெனிவாவில் நடைபெறவுள்ளதோடு, இம்முறை நடைபெறும் ஜெனிவா அமர்வின்போது இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51 கீழ் 1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களின் அமுலாக்க அடைவு மட்டம் சம்பந்தமான மதிப்பீடும் வெளிப்படுத்தப்படவுள்ளது. …
-
- 6 replies
- 810 views
- 1 follower
-
-
10 வருடங்களில் பிறப்பு எண்ணிக்கை 25 வீதத்தால் வீழ்ச்சி கடந்த 10 வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 வீதத்தால் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிறப்புப் பதிவேட்டின் மூலம் தெரியவருகிறது. குறித்த அறிக்கையின்படி, 2013 இல் இலங்கையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 365,762 ஆகவும், 2022 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கை 275,321 ஆகவும் காணப்படுகின்றது. 2021 ஆம் ஆண்டில் 284,848 பிறப்புகள் பதிவாகியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/285005
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
[size=4]தமிழகத்தின் கர்நாடக இசைக்கலைஞரும் திரையிசை பின்னணிப்பாடகருமான உன்னி கிருஸ்ணன் அண்மையில் நல்லூர்திருவிழாவை முன்னிட்டு இந்தியத்துணைத் தூதரகத்தின் அதிகாரி மகாலிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கேணல் கிட்டு நினைவுப் பூங்கா முன்னர் அமைந்திருந்த இடத்தில் காணப்பட்ட பூங்காவின் எச்சங்கள் அழிக்கப்பட்டு உன்னி கிருஸ்ணனின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது.[/size] [size=4]நிகழ்வினை இராணுவ துணைக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவைப் பிரநிதித்துவப்படுத்தும் ஈபிடிபி நிர்வகிக்கும் யாழ்.மாநகர சபை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வின் போது முதன்மை விருந்தினராக கலந்துகொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா உரை ந…
-
- 6 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்-திரளும் புதுக் கூட்டணி!- தட்ஸ் தமிழ் சென்னை: ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரியும், அவர்கள் மீதான ராணுவ அடக்குமுறையைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பையும், பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. தேரத்ல் நெருங்க நெருங்க தமிழக அரசியலில் என்னென்ன கூட்டணிகள், எப்படி எப்படி உருவாகப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே போகிறது. டீக் கடை, சலூன் கடை, பஸ் ஸ்டாப், அலுவலகங்கள் என எங்கு பார்த்தாலும் இதுகுறித்த அலசல்களில் வாக்காளப் பெருமக்கள் படு மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விஜயகாந்த்துடன் யார் சேருவார்கள், பாமக என்ன ஆகும், கம்யூனிஸ்டுகளை யார் சேர்த்துக் கொள்வா…
-
- 6 replies
- 2.9k views
-
-
இலங்கை விவகாரத்தில் தன்னை அனைத்துத் தரப்பினரும் குறை கூறுவதால் மன வருத்தம் அடைந்த முதல்வர் கருணாநிதி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து மூத்த திமுக தலைவர்களும் அமைச்சர்களும் கோட்டைக்கு விரைந்து அவரை சமாதானப்படுத்தினர். முதல்வர் இராஜினாமா செய்தியால் நேற்று கோட்டையில் பெரும் பரபரப்பு நிலவியது. இராஜினாமா கடிதத்தை அவர் எழுதிவிட்டதாக தகவல் வந்ததையடுத்து திமுக அமைச்சர்கள் பலரும் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கோட்டைக்கு ஓடி வந்தனர். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கட்சிகள் ஒன்று திரள மறுப்பதோடு, தன்னையே குறை கூறி வருவதால் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட…
-
- 6 replies
- 2.4k views
-
-
Sri Lankan protest on Boxing Day Sri Lankan Socialist Party activists demonstrate in Colombo on Monday, the first anniversary of the disappearance of two of their colleagues in the northern district of Jaffna. Normalcy is yet to return to the north more than three years after the civil war ended. Photo: AFP ORGANISERS of a campaign for a boycott of Sri Lanka's cricket matches expect about 1000 people to protest outside the MCG on Boxing Day but have promised they won't disrupt the biggest day on the Australian cricket calendar. The Tamil Refugee Council says it is determined to draw attention to the Sri Lankan government's human rights record by holding …
-
- 6 replies
- 907 views
-
-
கல்லடிப் பாலத்தில் ஆபத்து ; மக்கள் அவதானம் (காணொளி இணைப்பு) (சசி) மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் சிறிய உடைவொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அதில் பயணிக்கும் மக்கள் அவதானமாக செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கல்லடிப் பாலம் அல்லது லேடி மெனிங் பாலம் எனப்படுவது பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த பாலத்தின் ஒரு சிறிய பகுதி உடைந்து விழுந்துள்ளது. இது மட்டக்களப்பின் வட, தென் பகுதிகளை இணைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறைமாவட்டத்திற்கு செல்ல இப்பாலமே முக்கிய பங்காற்றுகிறது. கிழக்கு மாகாணத்தில் ஒர் முக்கிய பாலமான இது, இலங்கையின் நீளமான பாலங்களில் ஒன்றாக வ…
-
- 6 replies
- 713 views
-
-
அம்பாறை, திருக்கோவில் பகுதியில் இறந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான கால்நடைகளை நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் திருக்கோவில் பிரதேச பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். பண்ணையாளர்கள் ஏதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்து றூபஸ் குள பகுதிக்கு இன்று சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், திருக்கோவில் பிரதேச மேய்ச்சல் தரை விடயம் தொடர்பாக அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க அவர்களை சந்தித்து பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியபோது விரைவில் தீர்வை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார். காலாகாலமாக ஜீவனோபாய தொழிலாக கால்நடை வளர்ப்பினை மேற்கொண்டு வரும் வாழ்வாதாரத்தை இழந…
-
- 6 replies
- 1k views
-
-
(ஆர்.யசி) இராணுவ அணிவகுப்புகள், போர் வெற்றியை பறைசாற்றுகின்ற கோஷங்களுடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்க மண்டப வளாகத்தில் நடைபெற்று முடிந்தது. பிரதமர், அமைச்சர்கள், முப்படை பிரதானிகள், சர்வதேச இராஜதந்திரிகள் என பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர். தேசிய கொடிகளை குறைத்து பெளத்த சிங்கள கொடிகளுடனும், இராணுவ கொடிகளுடனும் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று காலை 7.15 மணிக்கு தேசபிதா டி.எஸ்.சேனாநாயகவின் உருவச்சிலைக்கு முன்னாள் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிதிகளின் …
-
- 6 replies
- 871 views
-
-
. சிவாஜி-ஸ்ரீகாந்தா இணைந்தால் நாடளாவிய ரீதியில் போட்டி : புதிய இடதுசாரி முன்னணி முடிவு வீரகேசரி இணையம் 2/16/2010 11:47:36 AM - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரைக் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கவில்லை என்றும் அவ்வாறு அவர்கள் இணைந்து கொள்வார்களாயின் நாடு முழுவதிலும் வேட்பாளர்களை நிறுத்த ஏற்பாடு செய்வதாகவும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன எமது இணையத் தளத்துக்குத் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய இடதுசாரி முன்னணியினர் வடக்கு கிழக்கில் போட்டியிடுவது தொடர்பாகg கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். "சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் எமது கட்சிய…
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு இலங் கைக்கு ஆதரவான நாடுகள் உட்பட பன்னாட்டு சமூகம் ஒரு வரைய றைக்கு அப்பால் இலங்கைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என வும் இந்தியா, சீனா உட்பட இலங்கைக்கு நெருக்கமான நாடுகளும் மேற்குலகைப் பகைக்காமல் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் சாத்தியக் கூறுகளே காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு முடிபெடுத்திருப்பது தொடர்பில் இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அணிசேரா நா…
-
- 6 replies
- 1.5k views
-
-
"சிங்கள தம்மசதகனீப்பகரண" நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. தேரவாத பௌத்தத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கவும் அதனை சர்வதேச மட்டத்தில் வியாபிக்கவும் அவசியமான அனைத்து அரச அனுசரணையையும் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். "சிங்கள தம்மசதகனீப்பகரண" நூல் வெளியீட்டு விழா நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். புத்தசாசன அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ள திரிபீடகச் சுருக்கத் தொகுப்புப் பேரவையின் 28ஆவது நூலாக ‘சிங்கள தம்ம…
-
- 6 replies
- 690 views
-
-
வடக்கு, கிழக்குத் தமிழர்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமது வாக்குரிமையை முழு அளவில் பிரயோகிக்கும்படி வலியுறுத்தி வேண்டுவது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கின்றது. எனினும் யாருக்குத் தமது வாக்குகளை அளிப்பது என்பது பற்றிய முடிவை பின்னர் தீர்மானித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவது என்றும் கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கான கூட்டம் இன்று வியாழக்கிழமை பிற்பகலில் சுன்னாகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. அப்போதே மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன…
-
- 6 replies
- 934 views
-
-
புலிகளை இராணுவ ரீதியாக ஒடுக்குவதற்கு அமெரிக்காவின் ஆதரவு தேவை :கோத்தபாய ராஜபக்ஷ - பண்டார வன்னியன் ஆழனெயலஇ 12 ஆயசஉh 2007 09:56 விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்று, சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக படை நடவடிக்கைகளை கைவிடவேண்டிய நிர்ப்பந்தம் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுவரும் கருத்துக்களை மறுத்திருக்கும் அவர், கிழக்கில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகளின் நிலைகளைக் கைப்பற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதால், படை நடவடிக்கைகள் தீர்க்கமான கட்டத்தை எட்டியிருப்பதாகவும…
-
- 6 replies
- 1.9k views
-
-
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தான் வளர்த்து வந்த யானைக்குட்டிகள் இரண்டையும் மீள ஒப்படைத்து விட்டதாக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார். இந்த இரண்டு யானைக்குட்டிகளும் பின்னவல சரணாலத்துக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த இரண்டு யானைக்குட்டிகளையும் கோத்தபாய ராஜபக்ச சட்ட ரீதியாகவே வளர்த்து வந்துள்ளார். எனினும் இவ்விரண்டு யானைக்குட்டிகளையும் தம்மால் பராமரிக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் தன்னிடம் தெரிவித்ததாக பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த யானைக்குட்டிகளுக்கு சரித்த, சாரிகா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் இதில் சாரிகா என்ற யான…
-
- 6 replies
- 702 views
-
-
மட்டக்களப்பு பூநொச்சிமுனையில் சுமார் 9.5மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முகைதீன் ஜும் ஆ பள்ளிவாயலின் புதிய கட்டடம் நேற்று செவ்வாய்க்கிழமை (28) மாலை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் ஸ்ரீ லங்கா ஹிறாபவுண்டேனசன் நிறுவனத்தின் உதவியுடன் சவூதி அரேபிய நாட்டு தனவந்தரின் நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த வைபவத்தில் காத்தான்குடி காதி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி, மற்றும் ஸ்ரீ லங்கா ஹிறாபவுண்டேனசன் நிறுவனத்தின் செயலாளர் மௌலவி ஏ.எல்.மும்தாஸ் மதனீ, காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ…
-
- 6 replies
- 1.9k views
-
-
அரசு எங்களைப் புறந்தள்ளி நடந்தால் புலிகளை அழித்து ஒடுக்க முடியாது தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்திருப்போம் என்கிறார் கருணா [sunday July 22 2007 05:50:38 AM GMT] [சூரியன்] கிழக்கு மாகாணத்தில் எமக்கு மக்கள் ஆதரவு பரந்தளவில் இருக்கிறது. எங்களிடம் ஆலோசனை பெறாமல் கிழக்கு மாகா ணத்தில் ஏதாவது திட்டங்களை அரசு மேற் கொள்ளுமாக இருந்தால். விடுதலைப்புலி களை முற்றாக அழிப்பதில் அரசு பின்ன டைவையே சந்திக்கும். இவ்வாறு தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா தெரிவிக்கின்றார். நேற்று பி.பி.ஸி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது கிழக்கு மாகாணத்தில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் எங்களுடைய அரசியல் அலுவலகங்களைத் திறந…
-
- 6 replies
- 1.5k views
-
-
பிரித்தானியப் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸ் இலங்கை சென்றபோது பாதுகாப்பு அமைச்சுக்குச் சம்பந்தமில்லாத வெரிட்டி என்பவர் அவருடன் பயணம் செய்து, இலங்கை அரசுப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வரிட்டி தமது நண்பர் எனவும் அவரை பத்துக்கும் மேற்பட்ட முறைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் தான் சந்தித்திருப்பதாகவும், பிரித்தானிய அரசு நிமித்தமாக அல்லாது தனிப்பட்ட முறையிலேய அவரைச் சந்தித்தாகவும் பொக்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். லியாம் பொக்கஸ் இலங்கை சென்ற ஒரு தருணத்தில் வெரிட்டியும் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மனைவியும் சேரந்து எற்பாடு செய்த ஒரு தனிப்பட்ட நிகழ்வில் தாம் கலந்து கொண்டதாகவும் அது அர…
-
- 6 replies
- 2.1k views
-
-
Published By: DIGITAL DESK 3 21 FEB, 2024 | 05:17 PM நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையின் காரணமாக சூரிய ஒளியில் அதிகமாக இருப்பதை தவிர்க்குமாறும், அடிக்கடி நீராகாரங்களை எடுத்து கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளதாவது, செயற்கை குளிர்பானங்களை பருகுவதை தவிர்த்து, நீர், இளநீர் போன்ற இயற்கை குளிர்பானங்களை பருகுவதன் மூலம் உடலில் நீர்வற்றிப் போகாமல் பாதுகாக்கலாம். அதிகம் வெப்பத்தினால் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் உடலில் நீர்வற்றும் அபாயத்தில் உள்ளனர்…
-
- 6 replies
- 593 views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் கடந்த ஒரு வார காலமாகவே தன்னெழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களில் இன்று மேலும் ஒரு உச்சநிலையாக, பிரித்தானி தமிழர் பேரவை விடுத்த அழைப்பை ஏற்று சுமார் இரண்டுலட்சம் தமிழ்மக்கள் பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் அணிதிரண்டனர். இன்று இலண்டன நேரம் பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமான ஊர்வலம் சுமார் ஆறு மைல்களுக்கமதிகமான நீளமாக நீண்டிருந்தது. காலை 10.00 மணிமுதலே பேரணி ஆரம்பமாகுமிடத்தில் மக்கள் குழுமத் தொடங்கிவிட்டார்கள். இலண்டனில், ஈராக் யுத்தத்திற்கு எதிராக நடைபெற்ற பேரணியே இலண்டனில் இதுவரையில் அதிகளவு மக்கள் கலந்து கொண்ட பேரணியாக இருந்தது. இன்று இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் இணைந்து சிறிலங்கா அரசு முன்னெடுத்திருக்…
-
- 6 replies
- 1.7k views
-
-
உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைப்பது குறித்து ஆராய்வு 66 Views கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கவுள்ளமை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் தமிழரின் பூர்வீக நிலங்களை அபகரிக்க சிறீலங்கா அரசு மிகவும் திட்டமிட்டு, தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்திலும் சில ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தன. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்ப…
-
- 6 replies
- 902 views
- 1 follower
-
-
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதலமைச்சர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்தார். இச்சந்திப்பிற்கு பின் வெளியே வந்த சிதம்பரம், ’’நாட்டிலே உள்ள பாதுகாப்பு நிலை, இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே நாம் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - இலங்கையிலே உள்ள இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கக் கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வகையிலே உதவிகளை செய்வது, எந்த வகையிலே மறுவாழ்வு அளிப்பது, அடுத்து அவர்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வில் என்ன செய்வது என்பதைப் பற்றி முதலமைச்சரிடம் யோசனை கேட்டேன். அமைச்சரவை கூட்டத்திலும், குழு கூட்டத்திலும் இந்தப் பொருள்கள் விவாதத்திற்கு வரும்போது முதலமைச்சர் கூறிய யோசனைகளை நான் அங்கே எடுத்து தெரிவ…
-
- 6 replies
- 1.2k views
-
-
வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது! October 23, 2021 இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த , வீ.நிமலதாஸ் மற்றும் த. கஜீபன் ஆகிய இரு மீனவர்களையும் நேற்றைய தினம் இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். இரு மீனவர்களும் கடந்த 21ஆம் திகதி மீன் பிடிப்பதற்காக வல்வெட்டித்துறையில் இருந்து சென்ற நிலையில் , இந்திய கோடியக்கரைக்கு கிழக்கே 16.5 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை தாம் கைது செய்ததாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.…
-
- 6 replies
- 500 views
-
-
உலகநாடுகளிடம் புகார் அளிக்க த.தே.கூட்டமைப்பு முடிவு காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பல்வேறு நாட்டு பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து புகார் தெரிவிக்க உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, காமன்வெல்த் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்று கூறினார். அதேசமயம் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதால் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு நிலவி வருகிறது. http://www.puthiyathalaim…
-
- 6 replies
- 740 views
-