ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143590 topics in this forum
-
மகிந்த ராஜபக்ஷவின் இனக்கொலையை சரியெண்டு வாதிடும் சோ என்கிற பார்ப்பணன் !!!!! அண்மையில் தமிழ்நாட்டில் இந்தப் பாம்பு கலந்துகொண்ட நிகழ்வொன்றில் அவன் கக்கிய விசமும் அதற்கு பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் கரகொலி ஆதரவையும் பாருங்கள். பார்க்கவே இதயம் கொதிக்கும் அளவிற்கு அவன் பேசுகிற பேச்சு...... யாம் பெற்ற இன்பம் பெற இவ் வைய்யகம் .............
-
- 6 replies
- 2k views
-
-
[size=4]மலேசியா,சிங்கப்பூர், ஹொங்கொங் அகிய நாடுகளில் உள்ளது போன்று சிறிலங்காவிலும் சைனா ரவுண் [China Town] என்ற பெயரில் இரவுச்சந்தை ஆரம்பிக்கப்படவுள்ளது. அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள இந்த சைனா ரவுண் சந்தை, காலை 9 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை – இரவு பகலாக செயற்படவுள்ளதாக சிறிலங்காவின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த சைனா ரவுண் சந்தையில் வர்த்தகத்தை மேற்கொள்ள ஆயிரம் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்தால விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், உத்தேச தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் இந்தச் சந்தையால் அதிகம் …
-
- 6 replies
- 802 views
-
-
இவ்வாண்டு தைத் திங்கள் 4ம் நாள் முரசுமோட்டைச் சண்டையில் காயமடைந்து விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டிருக்கும் சிங்கள இராணுவச் சிப்பாயான Lance Corporal H.M.Saman Puspakumar க்கு தலையில் காயமேற்பட்டுள்ளதால் அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவ வசதிகளை செய்து தரும் படி கிளிநொச்சி வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரியுள்ளனர். போரின் போது இடம்பெயர்ந்து செல்லும் மக்களை குண்டு வீசியும்.. கைது செய்து படுகொலை செய்தும்.. பாதுகாப்புக் கருதி.. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் மக்களை சுட்டும்... கைது செய்தும்.. முகாம்களில் அடைத்து வைத்தும் சித்திரவதை செய்யும் சிங்கள அரசின் மனிதாபிமானம் எங்கே..??! தமிழர்கள் தாம் வாழா விட்டாலும் …
-
- 6 replies
- 2.6k views
-
-
முஸ்லிம் மக்களும் மஹிந்த அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்! – சுரேஷ் பிரேமச்சந்திரன் கடந்த வருடம் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவந்தவேளை அதைக் கண்டித்துப் பெரும் எடுப்பில் இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை நடத்திய முஸ்லிம் மக்கள் இந்த வருடம் அமைதியாக இருக்கின்றார்கள். தமிழ் மக்கள் மட்டுமல்ல, முஸ்லிம் மக்களும் மஹிந்த அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பதையே இது காட்டுகிறது.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இலங்கையில் பள்ளிவாசல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் 'ஹலால்' தொடர்பில் மஹிந்த அரசின் அடிவருடிகளால் விடுக்கப்படும் மிரட்டல்களால் முஸ்லிம் மக்க…
-
- 6 replies
- 651 views
-
-
நாட்டின் பிரதான மதங்கள் இழிவுபடுத்தப்படுவதனை தடுப்பதற்கு பௌத்த சாசன அமைச்சு புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அச்சு ஊடகங்களிலும் இணையத்தின் வழியாகவும் பிரதான மதங்களின் கற்பிதங்களுக்கு புறம்பான வகையிலோ அல்லது மதக் கொள்கைகள் கோட்பாடுகளை இழிவுபடுத்தும் வகையிலோ தகவல்களை வெளியிட தடை விதிக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக பௌத்த மதத்தை இழிவுபடுத்துவதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் வரைவுச் சட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தையோ அதன் கொள்கைகள் கோட்பாடுகளையோ இழிவு படுத்தக் கூடிய அச்சு மற்றும் இணைப் பிரசூரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர், பௌத்த சாசன ஆணையாளர் மற்றும் நான்கு பீடங்களின் பீடாதிபதிகளினால…
-
- 6 replies
- 346 views
-
-
எனது தாயும் தந்தையும் மக்களுக்குச் சேவை செய்வதற்காக என்னை இன்று முதல் மக்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்று மகிந்தவின் புதல்வர் தெரிவித்துள்ளார். தனது அரசியல் வாழ்க்கையை இன்று முதல் ஆரம்பிப்பதாகக் கூறிய நாமல் தங்காலை ஹனேகடுவ விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்ட பின் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்தார் நாமல் றாஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து பொதுத் தேர்தலில் போட்டியிட இருப்பது தெரிந்ததே. (அப்பாவும் சித்தப்பாமாரும் பண்ணும் 'சேவையே' தாங்க முடியல... இதிலை நீயுமா.......) Source: http://www.eelamweb.com/
-
- 6 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதியாக... பதவியேற்க தயாராகிறார் ரணில்? – சமூக ஊடகங்கள்... சில மணி நேரங்களுக்கு முடக்கப்படும் வாய்ப்பு? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலில் இருந்து இராஜினாமாவை இன்று(வியாழக்கிழமை) அறிவித்தால், இன்றிரவு பிரதம நீதியரசர் முன்னிலையில் ஜனாதிபதியாக பதவியேற்க ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலைமையில் குழப்பங்கள் வரலாம் என கருதியே கொழும்பில் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் இந்த ஊரடங்கு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் பிரதமராக டலஸ், சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்தன ஆகியோரில் ஒருவரை நியமிக்க இரகசிய பேச்சுக்கள் முன்னெடுக்…
-
- 6 replies
- 506 views
-
-
பரபரப்பை ஏற்படுத்திய பிரபாகரனின் சுவரொட்டிகள் பாறுக் ஷிஹான் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைத்துப்பாக்கியுடன் 1990 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி என்று பொறிக்கப்பட்ட அநாமதேய சுவரொட்டி ஒன்று பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. இச்சுவரொட்டி இன்று ஒட்டப்பட்டுள்ளதுடன் கருப்பு ஆகஸ்ட் 11 என்ற தொனியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பகுதியில் விடுதலை புலிகளால் கொடூரமாக படுகொலை …
-
- 6 replies
- 712 views
-
-
கனடா நாட்டில் மார்க்கம் மாநகர சபையில் பொங்கல் விழாவில் ராதிகா எம்.பி. தமிழர் திருநாளான தைப் பொங்கல் திருநாள் முதன் முதலாக கனடா நாட்டில் மார்க்கம் மாநகர சபையில் இன்று உத்தியோக பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் மாத்திரமன்றி பல்லின மக்கள் ஒன்றிணைந்து வாழும் மார்க்கம் மாநகர சபை மண்டபத்தில் மார்க்கம் நகர சபையின் முதலாவது தமிழ் அங்கத்தவரான திரு. லோகன் கணபதியின் பாரியார் இராஜேஸ்வரி, கனடா வின் முதலாவது தமிழ் எம்.பி.செல்வி ராதிகா சிற்சபைஈசன் மார்ககம் பாடசாலை அறங்காவலர் யுவனிதா நாதன் ஆகியோர் பொங்கல் பொங்கினார்கள். தமிழர் திருநாளான தைப்பொங்கலையும் புது வருடத் தினத்தையும் தமிழர்களின் பாரம்பரிய தினமாக மார்க்கம் மாநகர சபையினால் பிரகடனப் படுத்த திரு.லோகன் கணபதி கடந்த …
-
- 6 replies
- 1.2k views
-
-
ஐதேகவில் நான்கு அதிபர் வேட்பாளர்கள் வரும் அதிபர் தேர்தலில் ஐதேகவின் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் என்று கருதப்படுவோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. ஐதேகவின் அதிபர் வேட்பாளராக போட்டியிடக் கூடும் என்று ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோர் எதிர்பார்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு சார்பான அணிகளும் ஐதேகவுக்குள் உருவாகியுள்ளது. இந்த நிலையில், நான்காவதாக, இன்னொருவரும் ஐதேகவின் வேட்பாளர் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே. அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடியவர்களின் பட்டியலில் இருப்பதாக அலரி மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பி…
-
- 6 replies
- 1k views
-
-
2009 ஆண்டு வரை வரவு செலவுகள் இல்லாமல் கொண்டாடப்பட்ட மாவீரர் பிரித்தானியா மாவீரர் தினத்தின் கணக்குகள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தச் செலவு அண்ணளவாக ஒரு லட்சம் பவுண்ஸ்கள். இலங்கைப் பேரினவாத அரசினால் தெருவில் விடப்பட்டு சமூகத்தால் வெறுத்து தனிமைப்படுத்தப்பட்ட போராளிகளின் சுய பொருளாதாரத் திட்டத்தை உருவாக்க இத் தொகை போதுமானது, கடந்த ஆறு வருடங்களை இத் தொகைக்கு அண்ணளவாகக் கணக்குப் போட்டால் அரை மில்லியன் பவுண்ஸ்களுக்கும் அதிகமானது. இத் தொகை மாதிரிக் கிராமம் ஒன்றை அமைப்பதற்குப் போதுமானது. இத் தொகையில் பெரும் பகுதி அவலத்தில் வாழும் மக்களுக்குச் சென்றடையவில்லை. அது நமது போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆவணப்படுத்தலுக்குப் பயன்படவில்லை. போராட்டத்தின் நி…
-
- 6 replies
- 1.7k views
-
-
கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழர்களின் இருப்பை, இழந்தது போக இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்தற்காகவும், அமையப் போகின்ற அரசுடன் சோரம் போகாமல் பேரம் பேசும் சக்தியாக பலமடைவதற்காகவுமே தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். நான்கு கட்சிகள் இணைந்து புதிதாக தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கினர் இது தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று திங்கட்கிழமை (24) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவத்வாறு தெரிவித்து…
-
- 6 replies
- 1k views
-
-
ஒற்றையாட்சி பொருத்தமற்றது என்றுதான் இடைக்கால அறிக்கை கூறுகிறது! -சுமந்திரன் [Saturday 2017-12-30 19:00] தீர்ப்பு எழுதி பதின்நான்கு வருடங்கள் ஆகியதால் மறதி வந்து விட்டதாகவும் காங்கிரஸின் கொள்கை காற்றில் பறந்துவிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்திலிங்கம்தலைமையில் நகரசபை மண்டபத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடா்பான விளக்கமளிக்கும் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், ஒற்றையாட்சிக்கு தமிழ் தேசிய …
-
- 6 replies
- 599 views
-
-
சற்கின்ட சிங்கள நாளிதழின் செய்தியாளர் சம்பத் லக்மல் இன்று காலை இனந்தெரியாத நபர்களினால் தெகிவளையில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் இராணுவ அரசியற் கட்டுரைகளை மேற்குறித்த பத்திரிகையில் எழுதிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பத்திரிகையாளர்கள் கொல்லப்படும்போது பார்த்துக்கொண்டிருந்த அரசு இனி என்ன செய்கிறது என்று பார்ப்போம்.
-
- 6 replies
- 1.9k views
-
-
தாமதிக்கும் ஒவ்வொரு கணங்களும் ........ "யுத்த நிறுத்தம்" எனும் சர்வதேச சதி வலைப்பின்னல் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக பின்னப்பட்டு ஐந்தாண்டுகள் முடிவுற்ற நிலையில், தமிழர் தரப்பு யுத்தம் நடைபெற்ற காலத்தில் சந்தித்த அழிவுகளைப் போல் இன்றும் அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. யுத்த நிறுத்தம் எனும் பெயரில், சர்வதேசத்தால் புலிகளின் கைகள் கூடியளவு கட்டப்பட்ட நிலையில், சர்வதேசம், சிறிலங்கா சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பிற்கு மறைமுகமாக முழு ஆதரவையும் வழங்கி வருவதையே, இன்றைய கள நிலவரங்கள் புலப்படுத்துகின்றன. தமிழின அழிப்பிற்கு மவுனமாக இருக்கும் சர்வதேசம், புலிகள் தாக்கியவுடன் மட்டும், யுத்த நிறுத்ததை இரு பகுதியினரும் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் …
-
- 6 replies
- 3k views
-
-
யாழில் மார்ச் மாதத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளனர் 12 சடலங்கள் மீட்பு:- யாழ்ப்பாண மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதத்தில் 50 பேர் வரை காணாமல் போயுள்ளதாக காவற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்களின் 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். திட்டமிட்ட குழுவொன்றினால் இந்த ஆட்கடத்தல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அரசாங்கமும், காவற்துறையினரும் கூறுகின்றனர். சுமார் 6 லட்சத்து, 70 ஆயிரம் மக்கள் வாழும் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புக்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 13 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு ப…
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
Monday, June 6, 2011, 22:58சிறீலங்கா விடுதலைப்புலிகள் தற்போது தமது ஆயுத நடவடிக்கைகளை கைவிட்டுள்ளனர் எனவே அவர்கள் மீது தொடரப்படும் தடை அவசியமற்றது என அம்ஸ்ரடாம் நாட்டை தளமாகக் கொண்ட போகெல் சட்டவாளர் குழுவின் சட்டவாளர் விக்டர் கோப் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தமிழ் மக்கள் சார்பில் விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை எதிர்த்து கடந்த வியாழக்கிழமை (02) அவர் மேற்கொண்ட வாதத்தின் போதே இந்த கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார். முள்ளிவாய்க்காலின் பின்னர் விடுதலைப்புலிகள் தமது ஆயுதச் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசியல் வழிகளிலும், வன்முறைகள் அற்ற போராட்டங்களிலுமே அவர்கள் ஈடுபடுகின்றன…
-
- 6 replies
- 1.1k views
-
-
எதிர்வரும் யூலை 09 ஆம் நாள் தென் சூடான் குடியரசு என்ற ஒரு புதிய நாடு பிறக்கவுள்ளது. இலடச்சக்கணக்கான தென் சூடானிய மக்கள் அதன் பிறப்பைக் கொண்டாட இருக்கிறார்கள். தென் சூடானின் தலைநகரம் யுபா (Juba) விழாக் கோலம் பூண்டுள்ளது.eelamwebsite.com
-
- 6 replies
- 1.6k views
-
-
சனல் 4 வீடியோக்களுக்கு நல்லிணக்க ஆணைக்குழு முக்கியத்துவம் வழங்காது இலங்கையில் நடந்ததாக கூறப்படும் யுத்த குற்றம் தொடர்பில் சனல் 4 அலைவரிசையின் மூன்றாவது வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டுள்ள நிலைமையில், பலரும் நினைப்பது போல சனல் 4 இன் வீடியோக்களுக்கு தனது அறிக்கையில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படமாட்டாது என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு கூறியுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வந்த பின்னர் யுத்தக் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து தீர்மானிக்கும் என அரசாங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எமது அறிக்கை, வழங்கப்பட்ட ஆணைக்குள் அமையும் விடயங்களில்தான் முக்கிய கவனத்தை செலுத்தும். எமது அறிக்கை இந்த பிர…
-
- 6 replies
- 373 views
-
-
பசில் ராஜபக்ச நாளை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுகிறார் சிறீலங்கா அரச அதிபரின் ஆலோசரும் சகோதரருமான பசில் ராஜபக்ச நாளை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார். நாளை புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இவர் அரச அதிபர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவுள்ளார். இதற்கான அறிவித்தல் அரச வர்த்தமானி மூலம் வெளியிடப்படவுள்ளது. இவர் சாவடைந்த பிரதி நீர்ப்பாசன அமைச்சர் அன்வர் இஸ்மாயிலின் வெற்றிடத்திற்கு தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர ஜக்கிய முன்னியின் செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார். இதனை தேர்தல் ஆணையாளரும் பசில் ராஜபக்சவின் பெயரை ஏற்றுக்க…
-
- 6 replies
- 1.4k views
-
-
வியாழன் 20-12-2007 18:07 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] இந்தியா,சிறீலங்கா கூட்டு விமானப்பயிற்சி இந்திய விமானப்படையும் சிறீலங்கா விமானப்படையும் இணைந்து கூட்டு விமானப்பயிற்சியில் இறங்கப்போவதாக ’டெய்லி மிரர்’ பத்திரிகைச் செய்தி தெரிவிக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப்படையை எதிர்கொள்வதற்கான பயிற்சியை சிறீலங்கா விமானப்படைக்கு வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக மேலும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றத
-
- 6 replies
- 1.6k views
-
-
மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.5k views
-
-
சேதுவை எதிர்ப்பவர்கள் இலங்கையின் ஆதரவாளர்கள்-கருணாநிதி வெள்ளிக்கிழமை, ஜனவரி 9, 2009, 12:04 [iST] சென்னை: இலங்கை அரசுக்கு சாதகமாக இருக்கிற சில கட்சிகள் தான் சேது சமுத்திர திட்டத்துக்கு தடையை ஏற்படுத்தி வருவதாக முதல்வர் கருணாநிதி கூறினார். இவர்கள் கூட தமிழ்நாட்டில் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றார். சென்னை துறைமுகத்தையும், மதுரவாயல் சந்திப்பையும் இணைக்கும் இந்தியாவிலேயே மிக நீளமான மேம்பால சாலைப் பணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அடிக்கல் நாட்டினார். இதில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், 2006ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடிக்குப் பெரிதும் உள்ளாகியுள்ள பகு…
-
- 6 replies
- 2k views
-
-
தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரம் 10 ந்திகதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Midlefield & Finch சந்திப்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பின் சில காட்சிகள். மிகுந்த குளிருடன் கூடிய மழையில் நனைந்தவாறு தாயகத்தில் நாளாந்தம் சாவின் விளிம்பில் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்காக இப்பகுத…
-
- 6 replies
- 993 views
-
-
வவுனியாவில் உறவுகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது ; ஆதரவாக தமிழ் அரசியல் கைதிகளும் போராட்டத்தில் குதிப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக்கோரியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா தபால் நிலையம் அருகே இன்றைய தினம் 3 ஆவது நாளாக உண்ணாவிர போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடுமுழுவதும் உள்ள தமிழ் அரசியல் கைதிகள்அனைவரும் நாளை வியாழக்கிழைமை ஒருநாள் அடையாள உண்ணவிரத போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து 5 முக்கிய அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கட்கிழ…
-
- 6 replies
- 669 views
-