ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
எதிர்வரும் 16 ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளராக களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் கடந்த 993 ஆவது நாட்களாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக அவர்கள் தொடர்சியான போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்றையதினம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தனர். மேலும் தெரிவித்த அவர்கள், தமிழ் மக்களை காணாமல் ஆக்கிவிட்டு இங்கே சிங்கள வேட்பாளர்கள் என்ன முகத்துடன் ஓட்டு கேட்டுவருகிறார்கள் அவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க கூடாது எனவும் மீன் சின்னத்தி…
-
- 31 replies
- 3.5k views
-
-
-
- 31 replies
- 2.5k views
-
-
அநுராதபுரத்தில் கிளைமோர் வெடித்து 13 பேர் பலி 13 killed in Kebithigollawa claymore explosion At least 15 people were killed and over 30 injured in a claymor attack targetting a bus in Kebithigollawa in the Anuradhapura district at around 8.00pm. The explosion had taken place in Abimanapura in Kebithigollawa, police said. டெய்லி மிரர்
-
- 31 replies
- 9k views
-
-
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குளிர்ந்த நீரை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர் தொடர்பில் முறை தவறிய வார்த்தைகளை பாவித்தமையினாலேயே அப்படி செய்ததாக மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சம்பவம் குறித்த அவரது பேஸ்புக் பக்கத்தின் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு, பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் போது தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பில் பொது வெளியில் பயன்படுத்த கூடாத வார்த்தையை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பயன்படுத்தினார். அதை நான் கண்டித்த போது மீண்டும், மீண்டும் சத்தம் போட முனைந்த அதாவுல்லா மீத…
-
- 31 replies
- 4.3k views
- 1 follower
-
-
அரசு - கூட்டமைப்பு இரண்டாம் கட்டப் பேச்சு வெற்றி! வியாழன், 03 பெப்ரவரி 2011 23:48 .அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றன. இவை மிகவும் நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்தன. முதலாம் கட்டப் பேச்சின்போது கூட்டமைப்பினரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசுத் தரப்பால் இன்று பதில்கள் வழங்கப்பட்டன என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மீள்குடியேற்றம், இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயம், அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியன சம்பந்தமாக முன்பு கூட்டமைப்பினரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசுத் தரப்பினரால் பதில்கள் கூறப்பட்டன. குறிப்பாக தமிழ் அர…
-
- 31 replies
- 2.7k views
-
-
தனி ஈழம் கோரிக்கை-ஜெயலலிதா திடீர் ஆதரவுதிங்கள்கிழமை, மார்ச் 9, 2009, 13:25 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற சென்னை: இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற 'தமிழர் நாடு' வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஜெயலலிதா பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் பேசுகையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த உண்ணாவிரதத்தை நடத்துகிறோம். கடந்த ஆண்டு இந்திய அரசு ராணுவ உதவி செய்வதாகவும், ஆயுதங்கள் வழங்கி வருவதாகவும் செய்திகள் வந்தன. இதை மத்திய அரசு மறுக்கவில்லை. இந்திய பாதுகாப்புதுறை உயர் அதிகாரிகளு…
-
- 31 replies
- 3.4k views
- 1 follower
-
-
சீமான் விவரிக்கும் தமிழீழத்தேசியத்தலைவருடனான சிலிர்ப்பான சந்திப்பு இயக்குநர் சீமான் அவர்கள் தமிழீழத்தில் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களை சந்தித்ததைப்பற்றி ஆனந்த விகடன் இதழுக்கு வழங்கிய பேட்டி. சீமான்-முள்வேலிக்குள் மூன்று லட்சம் தமிழர் படும் துயரம் பற்றிப் பேசும்போது கூடியிருப்போரைக் கலங்கி அழ வைக்கிறார். ‘பிரபாகரன் விரைவில் வருவார்!’ என்று அடித்துச் சொல்லி மிரளவைக்கிறார். என்ன பேசினாலும், எது கேட்டாலும் படபட பட்டாசு பொறிதான். மதுரை, தூத்துக்குடியில் முழங்கிவிட்டு திருப்பூர் ஆரவாரத்துக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறார். சீமானின் ‘நாம் தமிழர் இயக்கம்’ அடுத்த மே மாதம் மாநில மாநாட்டை அரங்கேற்றுவதற்கான முனைப்பில் இருக்கிறது. ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் அறிய செ…
-
- 31 replies
- 5.8k views
-
-
கிழக்கு மக்களுக்கு பயனுள்ள வரவு செலவுத் திட்டம்-விநாயகமூர்த்தி முரளிதரன் வீரகேசரி இணையம் - பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் கிழக்கு மாகாணத்துக்கு மிகவும் பயனுள்ள ஒரு வரவு செலவுத் திட்டமாகும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். அரசாங்கத்தின் 4ஆவது வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்ட அமர்வு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி. இவ்வாறு கூறினார். மீன்பிடி மற்றும் விவசாயம் போன்ற துறைகளுக்கு இவ்வரவு செலவுத் திட்டத்த…
-
- 31 replies
- 3.5k views
-
-
சிறிலங்காவில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு எதிராக், வெற்றி அல்லது வீரமரணம் என்ற முழக்கத்துடன தோழர் தியாகு அவர்கள் தமிழகத்தில் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சுதந்திர தமிழீழத்தினை தாகமாக கொண்டு விடுதலைப்பசிக்கு தன்னுயிரை கொடுத்த தியாகி திலீபனை தமிழினம் நினைவேந்திய நாட்களில், தோழர் தியாகு அவர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாநிலைப் போராட்டமானது தமிழீழத்துக்கான போராட்ட தடத்தில் தமிழகத்தின் வகிபாகத்தினை மீண்டும் உணர்த்தி நிற்கின்றது. தமிழகத்தின் சமூக…
-
- 31 replies
- 2.4k views
-
-
இலங்கையர் பாகிஸ்தானில் கும்பலால் அடித்துக்கொலை – உடலையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவர் பாகிஸ்தானில் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த நபரை கும்பலொன்று அடித்துக்கொலை செய்த பின்னர் உடலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன. பாகிஸ்தானின் சியால்கோட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனியார் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் தொழிற்சாலையின் ஏற்றுமதி முகாமையாளரை அடித்துக்கொலை செய்த பின்னர் உடலை தீயிட்டுக்கொளுத்தினார்கள் என தகவல்கள் வெளியா…
-
- 31 replies
- 2.8k views
- 1 follower
-
-
5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி மரணித்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஸ்டிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி வவுனியா பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக இருந்து நல்லூர் வரையில் பேரணியொன்றினை நடத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் வவுனியா நகரசபை உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளருமான ஜானுஜன் பொலிஸில் அனுமதி பெற முற்பட்ட நிலையில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தினை உறுதிப்படுத்திய நகரசபை உறுப்பினர் ஜானுஜன் இவ்…
-
- 30 replies
- 2.6k views
-
-
இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள் – சுமந்திரன் இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அளுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிருஷ்டவசமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி இன்று தமது அமைச்சு, பிரதி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்ததாக 9 முஸ்லிம் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத் தக்கத…
-
- 30 replies
- 3.1k views
-
-
புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம். இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது. உலகதமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை நீக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/133487?fbclid=IwAR0BlNvSchaz2DpfXZ0wQ02QbjM6vj0iuIpB5q6jD6vVobVGxukdp2m28dc
-
- 30 replies
- 1.8k views
- 2 followers
-
-
வாள் வெட்டுக்குழு என நினைத்தே சுட்டோம் என்கிறது பொலிஸ் தரப்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் வாள் வெட்டுக்குழு என நினைத்து பொலிசார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். என யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரேனிஸ்லாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்துமாறு சைகை காட்டிய போது அவர்கள் நிறுத்தவில்லை. அதனால் வாள் வெட்டுக்குழு என நினைத்து பொலிசார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். நிறுத்துமாறு பொலிசார் சைகை காட்டிய போது நிறுத்தி இருந்தால் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்க மாட்டார்கள். வ…
-
- 30 replies
- 2.9k views
-
-
மகிந்த வரவில்லை: வீணாகின நீலச்சேலைகள் வடக்குக்கு பயணம் செய்யவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து சில பாடசாலைகளின் ஆசிரியைகள் கட்டாயம் நீலநிற சேலைகள் அணிந்தே வர வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் சேலைகளையும் ஆசிரியைகளின் பணத்தில் கொள்வனவு செய்தனர். எனினும் யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் பாடசாலை ஒன்றிலும் ஜனாதிபதி மகிந்தோதய ஆய்வு கூடத்தை திறந்து வைப்பார் என்று கூறப்பட்டது.அதையடுத்து அங்குள்ள ஆசிரியைகளும் கட்டாயம் நீலச் சேலைதான் அணிய வேண்டும் என்று பணிக்கப்பட்டது. ஆசிரியைகளின் சொந்தப் பணத்தில் சேலையை வாங்க வேண்டும் என்றும் அதுவும் 2,500ரூபா பெறுமதியான நீலச்சேலைகளைத் தான் வாங்க வேண்டும…
-
- 30 replies
- 2.3k views
-
-
Man dies at Sydney immigration centre A Sri Lankan has man died at a Sydney immigration centre. The Department of Immigration said the man was discovered in distress at his accommodation in the Sydney Immigration Residential Housing complex early on Wednesday. An ambulance was called and CPR done but the man died shortly after midnight. A department spokesman said police would investigate the circumstances of the man's death. He expected it would also be subject to a coronial inquest. The dead man's family are overseas and the department is seeking to inform them of the event. Refugee Action Coalition spokesman Ian Rintoul said the decea…
-
- 30 replies
- 2.2k views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டின் இறையான்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் பாரதூரமான அச்சுறுத்தலாக அமையும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது என்று நான்கு பௌத்த மகா பீடங்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளன. கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) வியாழக்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். இதன் போதே மல்வத்து பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், அமரபுர பீடத்தின் மகாநாயக்க …
-
- 30 replies
- 2.3k views
- 1 follower
-
-
கணக்கறிக்கை (யூன், யூலை, ஓகஸ்ட்)
-
- 30 replies
- 3k views
-
-
முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்கவே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் நடைபெற்ற விபத்தொன்றை அடிப்படையாககொண்டடே, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பிரகாரமே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71337
-
- 30 replies
- 3.2k views
-
-
கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை January 2, 2022 கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நசீர் அகமட் எம்.பிக்கு பதில் !! கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தொலைக்காட்சி நிகழ்வொன்றில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நசீ…
-
- 30 replies
- 1.5k views
- 1 follower
-
-
*வடகிழக்கில் 654,531 மேலதிக வாக்குகள் மைத்திரிக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.. அந்த வகையில் மைத்திரியின் வெற்றியை சிறுபான்மையினரே தீர்மானித்திருக்கிறார்கள்.. . யாழ் - 176,120 வன்னி- 107,040 மட்டகளப்பு- 167,811 அம்பாறை- 112,333 திருகோணமலை- 88,227 http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115345/language/ta-IN/article.aspx
-
- 30 replies
- 1.5k views
-
-
Saturday, 30 April 2011 02:21 வி.புலிகள் அனைத்துலக விசாரணைக்கு தயார்: ரெஜி தெரிவிக்கிறார் ! ஐ.நா நிபுணர்கள் குழு தெரிவித்துள்ள பரிந்துரைகளில், சர்வதேச விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இவ்வறிக்கையை இலங்கை அரசு முற்று முழுதாக மறுத்துள்ளது. எந்த ஒரு விசாரணைக்கும் தாம் முகம் கொடுக்கத் தயார் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் அனைத்துலக விசாரணைக்கு தயாராக இருப்பதாக பிரேம் ரெஜி என்று அழைக்கப்படும் ரெஜி அவர்கள் தெரிவித்துள்ளார். ரெஜி அவர்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். இவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள்…
-
- 30 replies
- 3.4k views
-
-
அதிகாரப் பகிர்வினை அர்த்தமாக்கும் செயற்பாடுகளில் வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே செயற்படும் நிலையில், அதற்குப் பாதகமாக யாரையும் கருத்துக்கள் எதனையும் வெளியிடவேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரின் அபிவிருத்தி தொடர்பில் இன்று ஆளுநர் அலுவலகத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினை தமிழரசுக் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் புறக்கணித்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. கூட்டம் நிறைவடைந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், உலகவங்கியால் முக்கிய நகரங்களை அபிவிருத்திசெய்யும் திட்டத்தில் யாழ் நகரமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளத…
-
- 30 replies
- 1.1k views
-
-
யாழ்.குடா நாட்டில் பெண்கள் இரவு 12 மணிக்கும் சுதந்திரமாக நடமாடும் காலம் வரும் வரையில் எனது நடவடிக்கைகள் தொடரும்- நீதிபதி இளஞ்செழியன் (பாறுக் ஷிஹான்) யாழ்.மாவட்டத்தில் சட்ட ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயம் உருவாக வேண்டும். அந்த கட்டமைப்பை உருவாக்குவதற்கு தான் இங்குள்ள நீதிக்கட்டமைப்பு மற்றும் பொலிஸ் கட்டமைப்பு இயங்கி வருகின்றன. குற்றம் செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவதன் மூலமே தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் சமூகம் ஒன்றிணைந் திருத்த முடியும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். சமூக சே…
-
- 30 replies
- 2k views
-
-
18 MAY, 2025 | 07:20 AM முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (18.05.2025) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனினால், நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய…
-
-
- 30 replies
- 1.2k views
- 1 follower
-