Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் ஒரு இலட்சம் படையினர் சமாதானம் எவ்வாறு மலரும்? வடமாகாணத்தில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான படையினர் உள்ள நிலையில், சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். வடமாகாண மக்களின் காணிகள் பலவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள நிலையில், மக்களது வளங்கள், வாழ்வாதாரங்கள் சூறையாடப்பட்டு வருவதாக, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியான ஜோடி கறஸ்கோ முனோஸிற்கு, முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். ஐரோப்பிய ஒன்றிய, நாடுகளின் சமாதானமான ஸ்தீரன நிலையை உருவாக்குவதற்கு தடையாகவுள்ள காரணிகளை ஆராய்ந்து அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள…

    • 5 replies
    • 831 views
  2. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், லசந்தா மகள், அகிம்ஸா எழுதிய. கொழும்பை நெளிய, வைத்துள்ள கடிதம். 2007ம் ஆண்டு, இலங்கையின் சுயாதீன ஊடகவியலாளர்களில் ஒருவரான எனது தந்தை லசந்தா விக்ரமதுங்கே, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்சே அரசாங்க நிதியில் 10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த ஆயுத ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தினார். அவதூறு குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜபக்சே அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். அதன்பிறகு, எனது தந்தை தலைமை ஆசிரியராக இருந்த, சண்டே லீடரின் அச்சகம், நள்ளிரவில் முகமூடி அணிந்த கும்பலால் தாக்கப்பட்டது. ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்டனர், பத்திரிகைகளுக்கு தீ வைக்கப்பட்டது. ஜனவரி 8, 2009 அன்று, ஊழல் நிறைந்த ஆயுத ஒப்பந்தம் குறித்து எனது த…

    • 5 replies
    • 1.3k views
  3. அரசதுறையில் பணியாற்றும் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புடையவர்களை கண்டறிய விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். அனைத்து அரச நிறுவனங்களிலும் புலிகளுக்கு தகவல்களை வழங்குவோர் இருப்பதாக கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் விடுதலைப்புலிகளின் தலைமைத்துவம் கொலை செய்யப்பட்ட பின்னர், வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. கொழும்பில் செயற்பட்ட புலிகளின் வலையமைப்புடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வலயமைப்பை சேர்ந்த மேலும் மூவர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்: மூலம் - GTN

    • 5 replies
    • 1.8k views
  4. வடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்க இந்தியா இணக்கம் சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உலகத் தரம்வாய்ந்த வீதி உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நடத்திய பேச்சுக்களின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுக்களின் போது, மூன்று பிரதான வீதி அமைப்புகளை அபிவிருத்தி செய்து தருமாறு இந்திய அரசாங்கத்திடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்ததாக,…

  5. கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மத்தியில் வாரத்திற்கொருமுறை புலிகள் இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இடைத்தங்கல் முகாம்களில் ஒவ்வொரு வாரமும் 15 முதல் 20 புலிப் பயங்கரவாதிகள் கைது செய்யப்படுகிறார்கள். எனவே அங்குள் மக்களை அப்பாவிகள் எனக் கூறி விட முடியாது. இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்கள் 20 வருடங்களாக நாட்டின் சட்டத்தை அறிந்திராத பயங்கரவாதிகளின் சட்டத்தின் பிரகாரம் வாழ்ந்த ஒரு பகுதியினராவர். எனவே முகாம்களில் வாழும் சகலரும் எந்தவித பாவமும் அறியாதவர்கள் எனக் கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார். கே.பி கைது செய்யப்பட்ட…

  6. ‘அந்த இரண்டிலும் பங்கேற்க மாட்டோம்’.... இரா.சம்பந்தன் 70 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் தாம் கலந்துக்கொள்ளப்போவதில்லை என, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் பிரசார நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு எதிர்வரும் தினங்களை ஒதுக்கியிருப்பதன் காரணமாக, இந்நிகழ்வில் பங்குபற்ற முடியாதென அவர் அறிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள பிணைமுறி மோசடி அறிக்கை மீதான விவாதத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துக்கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளது. …

  7. சீதுவை விகாராதிபதியின் கொலை : டுபாய் செல்ல முயன்ற இளம் பிக்கு விமான நிலையத்தில் வைத்து கைது By T YUWARAJ 15 SEP, 2022 | 06:25 PM ( எம்.எப்.எம்.பஸீர்) சீதுவை பகுதியின் விகாரை ஒன்றிலிருந்து, விகாராதிபதி தேரர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே விகாரையில் தங்கியிருந்த 19 வயதான பிக்கு ஒருவரே, டுபாய் நோக்கி செல்ல முற்பட்ட போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே. 649 எனும் விமானத்தில் டுபாய் நோக்கி செல்ல, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த போது இன்று ( …

  8. ஒரு வாரத்திற்குள் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவேன்-மேர்வின் சில்வா! தனக்கு சந்தர்ப்பம் வழங்கும் பட்சத்தில் நாட்டில் டெங்கு நோய் பரவலை ஒரு வாரத்திற்குள் கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை தாம் ஆட்சிக்கு வந்தால் டெங்கு ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகாரிகளுடனும் சுகாதார அமைச்சுடனும் பேச்சுவார்த்தை நடத்துவன் என்றும் தெரிவித்துள்ளார். இப்போது அரசியல்வாதிகள் இந்த திட்டத்தில் ஈடுபடவில்லை, என்றும் தற்போதைய சுகாதார அமைச்சர் எனது நண்பர், அவருக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.என்றும் அவர் கூறினார். அத்துடன் அமைச்சர் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு தேவையான பொருட்களை வழங்க வேண்டும…

    • 5 replies
    • 262 views
  9. வவுனியா நிருபர் புதன்கிழமை, யூன் 29, 2011 அண்மையில் இரஷ்யாவிற்கு கண்காட்சி ஒன்றிற்காக மஹிந்த பரிவாரம் சென்றது. மஹிந்த உட்பட அனைவரும் இரஷ்ய அரசாங்கத்தின் விருந்தினராக செல்வதாக வெளிக்காட்டிக்கொண்டது. ஆனால் குறித்த கண்காட்சிக்கு இரஷ்யா உத்தியோகபூர்வமாக அழைக்கவில்லை என்றும் மஹிந்த உட்பட அனைவரும் தலைக்கு 3000 டொலர்கள் கட்டி அனுமதிச்சீட்டு பெற்றுக்கொண்டே சென்றதாக கூறப்படுகின்றது. இதன்படி குறித்த கண்காட்சி நிறுவனம் இவர்களை தனி நபர் விருந்தாளிகள் போலவே நடாத்தியது. அத்துடம் மஹிந்த மேற்கொண்ட சந்திப்புக்களும் கண்காட்சியில் கலந்துகொண்டோர்கள் கலந்து கொண்ட தே நீர் விருந்திலேயே நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் சிங்கள ஊடகங்களோ மஹிந்த இரஷ்யா, சீனா அதிபர்களின் அழைப்பின் பேரில் கலந்…

  10. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இடம்பெறும் விசேட தேவையுடைய மாணவருக்கான ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் பயிலும் மாணவர்கள் மூன்று போர் கலந்து கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணத்தில் விசேட தேவையுடையவர்களுக்கான பாடசாலையான சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை சர்வதேச விசேட தேவையுடைய மாணவர்களின் ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது தடவையாகவும் தமது மாணவர்களை பங்குபெற்றச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இம் மாணவர்களுக்கான போக்குவரத்துச் செலவில் ஒரு மாணவனது செலவை யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரி பழைய மாணவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். குறித்த மூன்று மாணவர்களும் தேசிய ரீதியல் நடாத்தப்பட்ட போட்டிகளில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலமே விசேட தே…

    • 5 replies
    • 499 views
  11. இந்தியாவின் நிலைப்பாடு ஜெனீவா சம்பந்தமாக எப்படி அமையும் என்பது தமிழர்களின் நீண்ட துன்பியல் வரலாற்றில் ஏதாவது மாற்றத்தை கொண்டு வர உதவுமா என பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்ட சனல் நாலில் முன்னை நாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் அவரின் பிரதி செயலாராக இருந்த மேனன், இன்றைய பாதுகாப்பு ஆலோசகரும் காட்டப்படுகிறார்கள். இந்தியா பற்றி நேரடியாக எதுவும் கூறாவிட்டாலும் மறைமுகமாக அவர்கள் பங்கு கூறப்படுகின்றது. அந்தவகையில் சனல் நாலு அந்த போர்குற்ற ஆவணம் இந்திய மக்களை சென்றடைவது எமது மக்களின் அரசியலில் விடிவுக்கு முக்கியமானதாகின்றது. நாளை இரவு 10 மணிக்கு தமிழகத்தில் ஒளிபரப்பாகும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனல் – 4 வெளியிட்ட கொலைக்களம் பகுதி -…

    • 5 replies
    • 1.4k views
  12. http://www.bbc.co.uk/tamil/meta/dps/2009/0...i_vox_au_nb.asx தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரின் கருத்து.. http://www.bbc.co.uk/tamil/meta/dps/2009/0...ction_au_nb.asx

  13. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 2ஆம் திகதி இலண்டனில் அமைந்துள்ள சிறிலங்காத் தூதரகத்தில் நடத்திய கூட்டத்தில் இடம்பெற்ற விவகாரங்கள் குறித்த செய்திகள் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விரிவான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந் நிலையில், பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதுவர் நிஹால் ஜெயசிங்க கம்போடியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வேளையில், சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ் விவகாரம் தொடர்பிலான விரிவான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இவ் விசாரணைகளை பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதரகத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்ற படை உயரதிகாரி ஒருவர் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிய வருக…

  14. தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 4 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் அன்ரன் பாலசிங்கம்: வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர்ஐரோப்பாவிலிருந்து விடுபட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விரல் விட்டு எண்ணக்கூடிய குடிப்பரம்பலைக் கொண்ட ஒரு சிறு தீவிலிருந்து மழையும் புயலும் அடித்து ஓய்ந்து போன ஒரு நாளின் பின்னிரவில் இதை எழுத நேரிடுகிறது. வானத்திலிருந்து கொட்டிய தண்ணீர் முழுவதையும் உள்வாங்கியிருந்த கடல் அவற்றை வெளியேற்ற எத்தனிப்பது போல் கடல் அலைகள் மூர்க்கமாக கரையை நோக்கி வந்து மோதிக்கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களாக இழுபறிப்பட்டு அன்றுதான் வந்த பணி முடிந்து ஆள் அரவமற்ற அத்தீவை விட்டு வெளியே போகும் சந்தோசத்தில் சக நண்பர்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். …

  15. 'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணக் காணொளி தொடர்பான என்.டி.பி. கட்சி மற்றும் கனடியத் தமிழர் பேரவையின் கனடியப் பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர் மாநாடு - [ கனடியத் தமிழர் பேரவை ] யூன் திங்கள் 14ஆம் நாள் புதன்கிழமையன்று கனடியப் பாராளுமன்றத்தில் என்.டி.பி. கட்சியும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து ஓர் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினர். கனடாவின் முன்னணித் தேசிய ஊடகங்கள் பல கலந்துகொண்ட இம் மாநாட்டில் என்.டி.பி. கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசன் அவர்களும் கனடியத் தமிழர் பேரவை சார்பில் யோர்க் பிராந்தியக் கல்விச் சபை உறுப்பினரும் கனடியத் தமிழர் பேரவையின் உபதலைவருமான செல்வி வனிதா நாதன் அவர்களும் கனடியத் தமிழர் பேரவையின் தேசியப் பேச்சாளர் திரு டேவ…

  16. க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 51 வீதமான மாணவர்கள் சித்தியடையவில்லை. இலங்கையில் இறுதியாக நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 51 வீதமான மாணவர்கள் சித்தியடையவில்லை என்று சிறிலங்காவின் கல்விப் பொதுப் பரீட்சைகள் ஆணையாளர் அனுரா எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 2,98,358 பாடசாலை மாணவர்கள் உட்பட 5,25,000 மாணவர்கள் இந்த பரீட்சையில் தோற்றி இருந்தனர். இதில் 48.7 வீதமான மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்திற்கு தெரிவாகி உள்ளனர். பரீட்சைக்கு தோற்றியவர்களில் 21,813 மாணவர்கள் ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை. இதில் 4,128 பேர் கொழும்பு மாவட்டம், 3,564 பேர் மத்திய மாகாணம், 3,404 பேர் தென் மாகாணம், 2,668 …

    • 5 replies
    • 1.9k views
  17. 14 மாவட்டங்களை உள்ளடக்கி அதன் கரையோரப் பகுதிகளில் இன்று (20) சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் 4.30 மணிவரை இந்த சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளன. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, திருக்கோணமலை, அம்பாறை, காலி முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், அம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்ட கரையோர பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளது. குறித்த மாவட்டங்களில் வசிக்கும் மக்களை தெளிவூட்டும் வகையில் இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்த ஒத்திகை நடவட…

  18. [ புதன்கிழமை, 09 செப்ரெம்பர் 2015, 02:08.20 PM GMT ] நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று காலை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, அங்கு மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களின் ஆலோசனைக்கு அமைய நாடாளுமன்ற பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் படகு ஒன்றில், எடுத்துச் செல்லப்பட்ட பாம்பு தியவன்ன ஓயாவுக்கு அந்த கரையில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டுள்ளது. இந்த மலைப்பாம்பு சுமார் 4 அடி நீளமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்த பூச்சாடிக்குள் மாபிலா பாம்பு ஒன்று காணப்பட்டமை குறித்த செய்த…

  19. கோழி வியாபாரியும் கொழும்பில் கடத்தல் தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிங்கள வியாபாரியொருவர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதான அமரதுங்க ஆராச்சிலாகே அஜித்குமார என்ற கோழி இறைச்சி வியாபாரியேய வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் குறிப்பிட்டனர். தெஹிவளை புகையிரத வீதியில் கோழி இறைச்சி வியாபாரம் öசூதுவரும் குறித்த நபர் நேற்று முன்தினம் தமது வியாபார நடவடிக்கைகளை முடித்துவிட்டு இரவு 8.15 மணியளவில் வீடு திரும்புவதற்காக தனது காரில் ஏறமுற்பட்டபோது வெள்ளை வேனில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www…

  20. ஃபேஸ்புக் பரண் பச்சிளம் பன்னிரெண்டு வயது பாலகன் பாலசந்திரன் என்ன செய்தான் ..?? 5 குண்ட மார்ல வாங்குற அளவுக்கு என்ன பாவ்ம் செய்தான் ..?? தமிழன் டா.. நின்னு குண்ட நேரா வாங்கியிருக்கான் டா வீரன் டா வீரனுக்குப் பொறந்த வீரன் டா... இவன பாக்குறச்ச ஒங்க வூட்டுப் புள்ள உங்களுக்கு நினைவுக்கு வரல..?? டேய்..ஓ.....ளா.. நல்ல சாவு கெடைக்குமா ஒங்களுக்கு அத்தன சாவையும் தமிழன் என்கிற ஒரே காரணத்துக்காக பாத்துக்கிட்டு சும்மா திரியுதுகளே இந்த வட இந்திய ஊடக.......ய்ங்க.. மனசாட்சிய கழட்டி வச்சிட்டு பத்திரிக்க தர்மம பத்தி பேசுறீங்களா நீங்க .. பேனாவ விட பெருசான கத்தி வேறொண்ணில்லன்னு சொல்ற எழுத்து விபச்சாரிங்களா.. ஐஸ்வர்யா கல்யாணத்தன்னிக்கு …

    • 5 replies
    • 1.9k views
  21. த.ம.விடுதலைப்புலிகளின் மேதினம்... தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்பாடுசெய்திருந்த மேதின நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு நகர் வரை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு முன்பாக மாபெரும் மேதினக்கூட்டம் நடைபெற்றது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உபதலைவர் கே.யோகவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான திரவியம் மற்றும் மகளிர் அணித்தலைவர …

    • 5 replies
    • 621 views
  22. தமிழ் மக்களின் காணிகளில் இராணுவத்தையும் தென்பகுதி மக்களையும் குடியேற்ற அனுமதியோம்! – சுமந்திரன் யாழ். வலி. வடக்கில் தமிழ் மக்களது 6 ஆயிரத்து 400 ஏக்கர் காணிகளைச் சுவீகரித்து, இராணுவக் குடும்பங்களையும் தென்பகுதி மக்களையும் குடியேற்ற இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனைத் வன்மையாகக் கண்டிப்பதுடன் இதற்கெதிராக தொடர் போராட்டங்களையும் நடத்துவோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இராணுவத்தினர் வடக்கில் அபகரிக்கும் காணிகளில், இராணுவக் குடும்பங்களையும் தென்பகுதி மக்களையும் குடியேற்ற நாம் இடமளிக்க மாட்டோம். இந்தக் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெ…

  23. வன்னியில் இன்று குறுகிய நிலப்பரப்பில் குற்றுயிராய் கிடக்கும் தமிழனின் வாயிலிருந்து இறுதி மூச்சாகவும்.. அதனைக்கண்டு பொறுக்கமுடியாத தமிழகத்து உறவுகளிடமிருந்து ஆதங்கமாகவும்..ஆத்திரமாகவும்.. உலகெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்து ஆவேசமாகவும் ஒலித்துக்கொண்டிலுக்கும் வேண்டு கோள்கள் என்னவெனில்..இந்தியாஅரசே இலங்கையில் நடக்கும் யுத்தத்தினை நிறுத்து....தமிழர் படுகொலையை நிறுத்து.. சிறீலங்கா அரசிற்கு ஆயுத உதவியை நிறுத்து... இவைதான்.. ஆனால் உண்மையிலேயே இந்திய அரசு நினைத்தாலும் கூட இப்பொழுது யுத்தத்தினை நிறுத்தமுடியாது... காரணம் இந்தியாவும் இலங்கையும் சுதந்திரமடைந்த காலத்தின் பின்னர் வரலாற்றினை சிறிது பின்நோக்கி புரட்டினால்..காலங்காலமாகவே குட்டிசிறீலங்கா என்கிற தீவின் அகங்காரம…

    • 5 replies
    • 1.9k views
  24. ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை இலங்கைக்கு கொண்டுவருவது பற்றி பிரித்தானிய பொலிஸாருடன் பேசிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே சி.ஐ.டியினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் குறித்த சந்தேகநபரை மான்செஸ்டர் பொலிஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவானிடம் அண்மையில் தெரிவித்திருந்தனர். சந்தேகநபரான லோகேஸ்வர்ன மணிமாறன் இன்னும் கைது செய்யப்படாது ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.