Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு... கடன் வழங்குவதில், சீனாவைவிட... இந்தியா முன்னிலையில் உள்ளதாக, தெரிவிப்பு. இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி இந்த வருடத்தின் நான்கு மாதங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய கடன் தொகை 968 மில்லியன் டொலர்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் இலங்கைக்கு சீனா 947 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. https://athavannews.com/2022/1299787

    • 25 replies
    • 1.4k views
  2. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை மூட வேண்டும் Report us Steephen 3 hours ago தினமும் நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நாட்டுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதாகவும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7 ஆயிரம் ஊழியர்களுக்கு இழப்பீடுகளை வழங்கி நிறுவனத்தை மூடி விடுவது சிறந்தது எனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலத்தில் 18 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நஷ்டத்தையும் மிஹன் லங்கா ஆயிரத்து 900 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களின் நஷ்டம் என்பது 20 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு போன்…

    • 9 replies
    • 1.4k views
  3. திங்கட்கிழமை, டிசம்பர் 27, 2010 நேற்று இடம்பெற்றது ஒரு களியாட்டவிழா, அவ்விழாவிற்கு செல்லும் மனநிலையில் நாங்கள் இல்லை, ஏனெனில் இன்றும் யுத்தத்தின் தாக்கத்தால் பல மக்கள் இன்றும் இறந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நாம் அவர்களுடன் இணைந்து செத்தவீட்டை கொண்டாடுவதா? களியாட்ட விழாவை கொண்டாடுவதா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தினத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் - தேசிய கீதத்தினை தமிழிலா, சிங்களத்திலா, ஹிந்தியிலா அல்லது ஒப்பாரியாக பாடுவதா என்ற கேள்வி தான் தமிழ் மக்களின் மனதில் எ…

  4. காவற்துறைக்கு யாழ்ப்பாணம் இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் நேற்று ஆரம்பம் காவல்துறை திணைக்களத்தினால் யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளை காவல்துறைக்கு இணைத்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் நேற்று ஆரம்பமாகின. நேர்முகப்பரீட்சைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் இணைத்துக்கொள்ளும் இந்த நேர்முகப் பரீட்சையில் ஆயிரக் கணக்கான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டதாக காவல்துறைமா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளை காவல்துறைப் பணிகளில் இணைத்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் அந்த மாவட்டத்தின் ஐந்து இடங்களில்…

    • 9 replies
    • 1.4k views
  5. Published on May 19, 2015-11:24 am · No Comments தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வல்வெட்டித்துறை நகரசபையின் முள்ளாள் தலைவர் அனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இடத்தில் நேற்றுமாலை நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் பெற்ரோர், உறவினரை இழந்த பிள்ளைகள் வாழும் ஒரு இல்லத்தில் அவர்களுடன் சேர்ந்து இறுதிப் போரில் உயிர் நீத்த அனைவருக்கும் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வு தனியே முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி என்ற செய்தியை மட்டுமல்ல எதிர்கால அரசியல் செய்தி ஒன்றையும் சொல்கிறது. எதிர்வரும் பொதுத்தேர…

    • 7 replies
    • 1.4k views
  6. தமிழீழ விடுதலைப் போராட்டம் தீவிர ஆயுத போராட்டமாக பரவிய அதே ஆண்டுதான் (1983) சூடான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கிறிஸ்தவப் பெரும்பான்மை மக்கள் அந்நாட்டின் இஸ்லாமிய அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தில் இறங்கினார்கள். சூடான் அரசு தம்மை இஸ்லாமிய மேலாதிக்கத்துக்கும் இஸ்லாமிய சட்டங்களுக்கும் உட்படுத்தி நசுக்கப் பார்க்கிறது என்பதே தென் சூடான் போராட்டக் குழுக்களின் நிலைப்பாடாக இருந்தது. இதில் உண்மை இருக்கின்றது ஆனால் இந்த உண்மையினை பெரிதாக்கி தமது நலன்களை அதற்குள் புகுத்தி தம் நலனை அடைய சர்வதேசம் முயற்சித்தது என்பதும் பேருண்மையானது. இது ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிட்டு இந்தியா எவ்வாறு தமது நலன்களை பெற முயற்சித்ததோ அதே போல சூடானிலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தமது…

  7. மகாகவி பாரதியாரின் பிறந்த நாளில் யாழ்ப்பாணத்தில் கலை நிகழ்வுகள் புரட்சிக்கவி மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 135 ஆவது பிறந்த தின கலை நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துர்க்காதேவி மணி மண்டபத்தில் இன்று (11) மாலை இடம்பெற்றன. யாழ்ப்பாணம் இந்திய உதவி உயர்ஸ்தானிகரகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு துணைத் தூதுவர் ஏ.நடராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். பாரதியார் புகழ்பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ் இந்திய உதவி உயர்ஸ்தானிகரகத்தால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் சான்றி…

  8. மிதிவெடி பூமி: பளையில் எஜமானைக் காப்பாற்றிய நாய் 11 செப்டம்பர் 2014 மிதிவெடியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தனது எஜமானின் உயிரை சமயோசிதமாகச் செயற்பட்டுக் காப்பாற்றியுள்ளது ஒரு நாய். உடனே எங்கோ வெளிநாட்டில் நடந்த சம்பவம் என்று எண்ணிவிடாதீகள். இந்தச் சம்பவம் பளை, இத்தாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மிதிவெடியில் இத்தாவில் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய சு.செல்வராஜா தனது வளர்ப்பு நாயுடன் கடந்த திங்கட்கிழமை மதியம் முயல் வேட்டைக்குக் கிளம்பியுள்ளார். முன்னால் சென்ற அவரது நாய் முயல் ஒன்றைக் கண்டுவிட்டு, அதனைத் துரத்தத் தொடங்கியது. செல்வராஜாவும் நாயின் பின்னால் ஓடியுள்ளார். முயலைத் துரத்திக் கொண்டு செல்வராஜாவும் அவரது நாயும் வள்ளிமனை தோட்டப் பகுதிக்கு …

  9. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாராளமாக நாட்டுக்குத் திரும்பி வரலாம். அவர்கள் இங்கு முதலீடுகளையோ வியாபாரத்தையோ மேற்கொள்வதுடன் சுதந்திரமாக வாழமுடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள், மற்றும் பிரதானிகளை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் முதன்முறையாக ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள், மற்றும் பிரதானிகளை சந்தித்த அவர் இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- நான் பிரித்தானியாவிற்கு சென்றபோது அங்கு ஈழம் கோருகின்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் 300 பேரளவில் ஆர்ப்பாட்டம் செ…

    • 19 replies
    • 1.4k views
  10. இந்திய உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்க இராமாயணத்தை பயன்படுத்தும் இலங்கை [20 - December - 2007] இந்திய உல்லாசப் பயணிகளை பாரியளவில் கவர்ந்திழுப்பதற்காக இலங்கை அரசாங்கம் இந்துக்களின் இதிகாசமான இராமாயணத்தை அதிக அளவில் பயன்படுத்தவுள்ளது. இதனடிப்படையில் இராமாயணத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட இலங்கையிலுள்ள 34 இற்கும் அதிகமான இடங்களைத் தெரிவு செய்து அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை தயாரிக்க குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் எஸ்.கலைச்செல்வம் தெரிவித்ததாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை நேற்று புதன்கிழமை குறிப்பிட்டுள்ளது. `விரைவில் இத்திட்டத்தை ஆரம்பிக்க விரும்புகிறோம்' என்று கலைச்செல்வம் கூறியுள்ளார். இராமாயணத்…

    • 2 replies
    • 1.4k views
  11. பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் , ஆவாஸ்.கொம் என்னும் பிரபலமான சர்வதேச தொண்டு நிறுவனத்தின் இணையத்தில் ஏற்றப்படிருக்கும் கொமன்வெல்த்தைப் பகீஸ்கரிக்கக் கோரும் கோரிக்கையில் தயவு செய்து கை எழுத்திடவும். ஒரு குறிப்பட்ட தொகையினர் கை எழுத்திட்டால், உலகெங்கும் இருக்கும் பல லட்சம் மக்களுக்கு இந்தக் கோரிக்கை ஆவாஸ் இணையத்தினூடாகச் செல்லும். இதனைச் செய்ய ஒரு சில நிமிடங்களே ஆகும்.உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் மின்னன்சல்,முகப்புப் பக்கம் ,டுவிட்டர் மூலம் அறிமுகம் செய்து விளக்கவும். http://www.avaaz.org/en/petition/Boycott_Commonwealth_Summit_CHOGM_Nov_2013_in_Sri_Lanka_is_due_to_be_held_in_a_country_where_a_brutal_tyrannical_regi/?clXXHab We, the undersigned are disappo…

  12. ஜேர்மனியில் மாவீரர் படங்கள், நினைவு கல்லறைகள் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு தீவைப்பு! Published on November 26, 2011-11:34 am · No Comments ஜேர்மனியில் விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயலக மாவீரர் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு மாவீரர்நாள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக செய்யப்பட்ட கல்லறைகள், மற்றும் மாவீரர் படங்கள், துயிலும் இல்ல முகப்பு, தமிழீழ வரைபடம், மற்றும் சோடனைகள் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு கடந்த இரவு சில விஷமிகள் தீவைத்துள்ளனர் என காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஜேர்மனி ரெட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. முன்சன்கிளப் பார்க் ( கொமர்சியல் பார்க்) என்ற இடத்திலேயே விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலக மாவீரர்நாள் நிகழ்ச்சிகள் நடைபெற இருந்தன. …

  13. சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான போர் தற்போது களமுனை நகர்வுகளை விட இரஜதந்திர நகர்வுகளில் அதிகம் சிக்கி கொண்டுள்ளது. சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான போர் தற்போது களமுனை நகர்வுகளை விட இரஜதந்திர நகர்வுகளில் அதிகம் சிக்கி கொண்டுள்ளது. உலகின் இந்த நகர்வுகளில் சிக்கிக்கொள்ளாமல் விரைவாக போரை நிறைவு செய்து விடவே சிறீலங்கா அரசும், இந்திரா காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசும் கடும் முயற்சிகளை கடந்த வாரமும் இந்த வாரத்தின் ஆரம்பத்திலும் மேற்கொண்டிருந்தன. எனினும் விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதல்கள், அனைத்துலகத்தில் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் காரணமாக அவர்களின் இந்த திட்டம் கைகூடவில்லை. பாதுகாப்பு வலையத்தின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத…

  14. ஈழத் தமிழர் அரசியலில் மக்கள் தலைவனாக தடம் பதித்தவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மறைந்து இன்று ஜூலை 13 ஆம் திகதியுடன் 20 வருடங்கள் நிறைவுறுகின்றன. ஈழத்தமிழர் உரிமைக்காக போராடிய அதேவேளை, அப்போராட்டத்தின் நியாயங்களை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் எடுத்துச் சொன்ன ஒரு மிதவாதியின் மறைவினால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடம் 20 வருடங்கள் கடந்த நிலையில் இன்று தமிழ்மக்களை அவரின் வழித்தடங்களை திரும்பிப் பார்க்க வைக்கின்றது. "தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று இப்போது அதனைக் கொண்டு நடத்தும் அமிர்தலிங்கத்திடம் நான் காணும் சிறப்பியல்பு அவருடைய அஞ்சாமையாகும். மிகப்பலம் வாய்ந்த எமது எதிரியாக…

  15. (எம்.நியூட்டன்) யாழ். ஈச்சமோட்டை மறவர்குள புனரமைப்பு பணிகள் இன்று புதன்கிழமை யாழ். மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய நகரம்" திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் மறவன்குளம் துரித அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. காலை 10 மணியளவில் யாழ். மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்குளத்தின் மாதிரி திட்ட வரைபும் மக்கள் பார்வைக்காக வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், மாநகர பிரதி முதல்வர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் து.ஈசன், மாநகர ஆணையாளர் ஜெயசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் அடிக்கல் நாட்டி வைத்த…

  16. http://edition.cnn.com/video/#/video/world/2011/04/26/roth.un.sri.lanka.war.crimes.cnn

    • 0 replies
    • 1.4k views
  17. புதன் 18-04-2007 03:24 மணி தமிழீழம் [தாயகன்] கடற்றொழிலாளர் மீதான தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிப்பு வன்னியில் பூநகரிக் கடற் பரப்பில் கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற் படையினர் மேற்கொள்ளத் திட்டமிட்ட பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்று, விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. யாழ் குருநகர், பாசையூர், மற்றும் நாவாந்துறை கடற்றொழிலாளர்கள் நேற்று காலை கடலுக்குச் சென்றபோது, அவர்களுடன் கடற்றொழிலாளர்கள் போன்று 3 படகுகளில் 18 கடற் படையினர் சென்றிருந்தனர். வன்னி கடற் பரப்பை அண்டிய பகுதிகளில், வன்னியில் இருந்து சென்று தொழில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்குடன் சிறீலங்காப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். சிறீலங்காப் பட…

  18. இலங்கையில் ஆபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையிலான முனைப்புகளை மேற்கொள்ளுங்கள் ‐ ஓப்ரா வின்பெரியிடம் மாயா கோரிக்கை: இலங்கையில் ஆபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையிலான முனைப்புகளை மேற்கொள்ளுமாறு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானியாவைச் சேர்ந்த ஆங்கிலப் பாடகியான மாயா அருள்பிரகாஷம், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குனரான ஓப்ரா வின்பெரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில்; இந்த கோரிக்கையை மாயா விடுத்துள்ளார். இலங்கை விமானப்படையினர் இந்த வாரத்தில் தமிழர்களின் வீடுகள், முகாம்கள் மீது குண்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த மாயா, ஒப்ராவின் கைகளை இறுக்கப் பற்றி பிடித்துவாறு இந்தக் கோரிக்கை விடுத்த…

    • 9 replies
    • 1.4k views
  19. [ வியாழக்கிழமை, 22 செப்ரெம்பர் 2011, 00:12 GMT ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்த நிபுணர்குழுவின் அறிக்கையை குறைந்தபட்சமாக ஒரு தகவல் ஆவணமாகக் கூட எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கோரும் கடிதம் ஒன்றில் சிறிலங்கா சில நாடுகளிடம் இருந்த கையொப்பங்களைத் திரட்டியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடிதம் ஐ.நா மனிதஉரமைகள் பேரவையின் தற்போதைய தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் எந்தவொரு சபையினதும் முறைப்படியான அங்கீகாரத்தைப் பெறாத நிபுணர் குழுவின் அறிக்கையை, குறைந்தபட்சம் ஒரு தகவல் ஆவணமாகக் கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இந்தக் கடித்ததில…

  20. பிரபாகரன் திரைப்படத்தை அதன் தயாரிப்பாளரிடம் ஒப்படைத்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். பிரபாகரன் திரைப்பட இயக்குனர் மீதான தாக்குதலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பான அமைப்புக்களின் செயற்பாடுகளினால் தமிழ் மக்களுக்கு அவமானம் ஏற்பட இடமளிக்க முடியாது என தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுப்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் பிரபாகரன் திரைப்படத்தை மீள ஒப்படைக்காததன் மூலம் தூரதிஸ்டவசமான சம்பவங்கள் நிகழக்கூடிய அபாயம் இருப்பதாக சங்கரி தமிழ…

    • 3 replies
    • 1.4k views
  21. [Thursday, 2011-06-16 11:33:10] பிரித்தானிய தொலைக்காட்சியான செனல்-4 ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தினை ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பார்க்கவில்லை என செயயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டீன் நெசர்க்கி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையிடமிருந்து சாதகமான கருத்து வெளியாகும் போது தான் இறுதிகட்ட யுத்தம் தொடர்பில் சுயாதீன விசாரணையை மேற்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=44943&category=TamilNews&language=tamil

  22. இருப்பாய் தமிழா நெருப்பாய் நிகழ்வில் கலந்துகொள்ள இயக்குநர் செந்தமிழன் சீமான் ரொறன்ரோ சென்றடைந்தார் திகதி: 24.11.2009 // தமிழீழம் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று கனடாவின் ரொறன்ரோ நகரை சென்றடைந்துள்ளார். ஈழமுரசு வருடம் தோறும் நடத்தும் தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை விழாவில் கலந்துகொள்வதற்காக ரொறன்ரோ நகரை சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. எதிர்வரும் 26ம் திகதி வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ரொறன்ரோ நகரிலும், 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியல் நகரிலும் நடைபெறவுள்ள தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 55 எழுச்சி நிகழ்வான இருப்பாய் தமிழா நெருப்பாய் நிகழ்வில் பங்குபற்றவுள்ளார் எனத…

  23. வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம் சார்பாக பங்கேற்ற அணியினருக்கு அவர்கள் வாழும் நாடுகளில் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.உலகளாவிய தமிழ் இளையேர் அவையின் ஏற்பாட்டில், சர்வதேச அரங்கில் இடம்பெறும் இந்த காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணியும் பங்கு பற்றி விளையாடி இருந்தது. குருதிஸ்தானில் (வட இராக்) இடம்பெற்ற இந்த உலகக்கிண்ணப் போட்டியில், தமிழீழம் அணி சார்பாக கனடா, சுவிற்சர்லாந்து, மற்றும் பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழ் விளையாட்டு வீரர்கள் விளையாடி இருந்தனர். இவ்வாறு தமிழீழ அணிக்காக பிரித்தானியாவில் இருந்து சென்று விளையாடிய வீரர்கள் இரவு (10-06-2012) லண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்திற்கு வந்தபோது, அங்கு வரவேற்பு அளிக்கப்பட…

  24. இன்று காலை 6.30 மணியளவில் உரும்பிராய் ஞான வைரவர் கோவில் அருகில் அளவுக்கதிகமான மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். வீதி அகலிப்பு வேலைகளுக்காக அளவுக்கதிகமான மணலை ஏற்றிக் கொண்டு வந்த மேற்படி டிப்பர் வாகனம் வீதியின் குறுக்கே மோட்டார் சைக்கிள் வந்ததில் தடுமாறி மரத்தில் மோதியதாகத் தெரியவருகின்றது. வீதி அகலிப்பு வேலை செய்யும் நிறுவனங்கள் இது தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும் எனவும் இவ்வாறு அளவுக்கதிகமான மண் ஏற்றி வருவதால் தெருவினால் போவோர் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. thx http://newjaffna.com/index.php

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.