ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் வீரமணி அவர்கள் தமிழினம் அறிந்த தலைவர். தந்தை பெரியார் அவர்களுக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக பணியாற்றி வருபவர். ஆரம்பம் தொட்டு இன்று வரை ஈழத் தமிழர்களின் விடிவுக்காக குரல் கொடுத்து வருபவர். சென்ற 29 டிசம்பர் அன்று சென்னையில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டை நடத்தி மீண்டும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் ஆதரவு நிலை வருவதற்கு வழிவகுத்தவர். இனவிடுதலையும் பகுத்தறிவும் இரு கண்கள் என வாழும் தலைவர் வீரமணி அவர்களை பேட்டி காண வெப்ஈழம் விரும்பியது. தன்னுடைய வேலைப்பளுக்களின் மத்தியிலும் வெப்ஈழம் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு தன்னுடைய பதிலை வீரமணி அவர்கள் தந்திருக்கிறார். முகம் சுளிக்கக்கூடிய கேள்விகள் என்று கருதப்பட்டவைகளுக்கும் வீரமணி அவர…
-
- 1 reply
- 1.3k views
-
-
அரேபியனாக்கத்தை நிறுத்துங்கள் | மஹிந்த ராஜபக்ச வேண்டுகோள் ‘சிறீலங்கா முஸ்லிம்கள் தமது கலாச்சாரத்தை அரேபியனாக்கம் செய்வதை நிறுத்திவிட்டு சாதாரண இலங்கை முஸ்லிம் கலாச்சாரத்துக்குத் திரும்ப வேண்டும்’ என எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டார். ஆப்ரல் 21 குண்டுவெடிப்புச் சம்பவங்களின் தொடர்பில் பதவி விலகிய 9 முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்தபோது ராஜபக்ச அவர்களிடம் இந்த வேண்டுகோளை முன்வைத்தார். “சிறீசேன-விக்கிரமசிங்க அரசு அப்பாவி முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறியுள்ள போதும் முஸ்லிம் மக்கள் ஒரு சமூகமாகத் தம் மேல் ஏனிந்தப் பழி சுமத்தப்படுகிறது என உள்ளார்ந்த பரிசோதனைகளையும் செய்ய வேண்டும்” என அவர் அச் சந்திப்பின்போது கேட்டுக்…
-
- 3 replies
- 1.3k views
-
-
பிள்ளைக்கறி சமைத்துவிட்டுக் கோயிலுக்குப் போய்க் கும்பிடுவதா? - கவிஞர் வைரமுத்து சர்வதேசச் சமூகத்தின் கண்ணீர் மீண்டும் ஒருமுறை இலங்கையில் விழுகிறது. வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் 12 வயது பாலசந்திரன் தோட்டாக்களால் துளைத்தெடுக்கப்பட்ட சாட்சியங்களைக் காணும் போது இருதயம் ஒரு கணம் நின்று விட்டது; என்னையறியாமல் கண்ணீர் பெருகிவிட்டது. பால்வடியும் முகம்; பளபளக்கும் மேனி; கனவுகளின் ஈரம் காயாத கண்கள். மிருகம் கூட அவனைக் கண்டு ஒதுங்கிப் போயிருக்குமே எப்படித்தான் கொல்ல மனம் வந்ததோ இதயமற்ற இலங்கை ராணுவத்திற்கு? மரணம் நெருங்கும் போது என்னதான் நினைத்திருக்குமோ அந்தக் கொலைக்களத்துக் குலக்கொழுந்து ? தொட்டுவிடும் தூரத்தில் இருந்த துப்பாக்கி முனையால் அவன் தொடர்ந்து சுடப்பட்டிருக…
-
- 5 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாண குடாநாடு கடலில் மூழ்கக்கூடிய அபாயம் ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 18 டிசம்பர் 2015 யாழ்ப்பாண குடாநாடு கடலில் மூழ்கக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக வட மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உலகம் வெப்பமயமாகுதலினால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் யாழ்ப்பாண குடாநாட்டை நீரில் மூழ்கச் செய்யும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில் ஒரு மணித்தியாலயத்தில் 40,000 பேரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகவும், அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பிலிருந்து முழுமையாக இன்னமும் மீளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனர்த்தம் இடம்பெற்ற டிசம்பர் மாதம்…
-
- 8 replies
- 1.3k views
-
-
சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியும், ஆத்ம சாந்திப் பூசையும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (ஏப்ரல் 21-2019) மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்காக 31ஆம் நாள் அஞ்சலியும், திருப்பலியும் ஆத்ம சாந்திப் பூசையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான த. சிவநாதன் அறிவித்துள்ளார். ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வுகளில் உயிர்நீத்த உறவுகளின் குடும்பத்தார்கள், அன்பர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) காலை 10.00 மணியளவில்…
-
- 8 replies
- 1.3k views
-
-
ஆவா குழு தலைவரின், பிறந்த நாளுக்கு... கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்கள் கைது ஆவா குழு தலைவரின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் வைத்து இன்று (15) மாலை, ஆவா குழு தலைவர் என கூறப்படும் சன்னாவின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/ஆவா-குழு-தலைவரின்-பிறந்த/
-
- 2 replies
- 1.3k views
-
-
சீஷெல்ஸ் நாட்டின் தீவு ஒன்றையே விலைக்கு வாங்கினார் மகிந்த! [saturday, 2014-03-22 17:16:07] சீஷெல்ஸ் நாட்டிலுள்ள தீவு ஒன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விலைக்கு வாங்கியுள்ளதாக சிங்கள இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. சீஷெல்ஸ் நாட்டில் எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படாத 100க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அவற்றை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு நபர்களுக்கு நிறுவனங்களுக்கும் வழங்க அந்நாடு தீர்மானித்துள்ளது. அவற்றில் ஒன்றையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த தீவு கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன.இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவுகள், ஆப்பிரிக்க கண்டத்திற்குரிய நாடாகும். …
-
- 4 replies
- 1.3k views
-
-
வெளித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள யாழ்.வன்னிக்கு இந்தியாவிலிருந்து அவசர, அத்தியாவசியப் பொருள்கள்? கோரிக்கை விடுக்க தொண்டர் அமைப்புகள் நடவடிக்கை கடந்த ஒரு வார காலத்துக்கு மேலாக வெளி இடங்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ். குடாநாட்டிலும் வன்னிப் பகுதியிலும் சிக்கியிருக்கும் அப்பாவிப் பொதுமக்களுக் குத் தேவையான அவசர, அத்தியாவசியப் பொருள்கள், உணவு வகைகள், மருத்துவப்பொருள்கள் போன்றவற்றை இந்தியாவிலிருந்து நேரடியாக அனுப்பி வைக்கும் முயற்சி ஒன்றை சில சர்வதேசத் தொண்டர் அமைப்புகள் ஆரம்பித்திருக்கின்றன எனத் தெரியவருகின்றது. இது தொடர்பாக இந்தியாவில் சில தரப்புகளுடன் இந்த அமைப்புகள் பூர்வாங்கத் தொடர்பாடல்களை ஆரம்பித்துள்ளன என்றும் கூறப்படுகின்றது. கட…
-
- 1 reply
- 1.3k views
-
-
சுயநலமிக்க உலக நடைமுறைக்குள் எமது இனத்தின் விடுதலை முடக்கப்பட்டிருக்கின்ற இன்றைய நிலைமையில், அதிலிருந்து உடனடியாக மீளவேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கின்றது. உலக வரலாற்றில் எந்தவொரு தேசத்தின் விடுதலையும் மிக இலகுவாக கிடைத்ததாக சரித்திரம் இல்லை. அனைத்து விடுதலைப் போராட்டங்களும் பல தியாகங்களையும், சோதனைகளையும், சவால்களையும் தாண்டியே வெற்றி பெற்றன. சவால்களையும், சோதனைகளையும் தாண்டமுடியாத பல விடுதலைப்போராட்டங்கள் தோற்றுப்போன வரலாறுகளும் உண்டு. இதுவரை நமது தமிழீழ விடுதலைக்காக நாம் இழந்தவை அதிகம். விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் பன்மடங்கு வரலாம். ஆனால், இறுதிவரை நம் விடுதலை உணர்வினைமட்டும் சிறிதளவேனும் இழக்கக் கூடாது. சவால்களை எதிர்கொண்டு, இழப்புக்களையும் வலிகளையும் தாங…
-
- 1 reply
- 1.3k views
-
-
இந்தியாவில் நடைபெறவிருக்கும் பரவசி மாநாட்டிலும் செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளுமாறு மலேசியா, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழைப்புகளை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டார். “ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த இந்தியாவின் பரவசி மாநாட்டையும் கருணாநிதியின் செம்மொழி மாநாட்டையும் நான் புறக்கணிக்கின்றேன்”, என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கூறினார். ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்கு இந்தியா இதர நாடுகளுடன் சேர்ந்துகொண்டு செய்த துரோகத்தை எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான். “தமிழீழ போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒன்றாக இணைந்து இந்தியா மாப…
-
- 9 replies
- 1.3k views
-
-
கனடாவில் நடைபெற்ற முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலையின் ஈராண்டு நினைவேந்தலில்
-
- 11 replies
- 1.3k views
-
-
தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாம் மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில், இங்குள்ள 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதுமுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில், இங்குள்ள 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதுமுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். …
-
- 9 replies
- 1.3k views
-
-
கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித்தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதடியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் (வயது 65) என்பவரே தனது வயது முதிர்ந்த தாயாரான கனகசபை பரமேஸ்வரி (வயது95) என்பவரை 20 வருடங்கள் கழித்துக் கண்டுகொண்டமையால் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.இரு தசாப்தத்துக்குப் பின்னர் தனது மகனைக் கண்டு தாயாரும் தனது வயது முதிர்ச்சி மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் கைதடி முதியோர் …
-
- 9 replies
- 1.3k views
-
-
ஜெனிவா - படம் பார் பாடம் படி - நிலாந்தன் 18 பெப்ரவரி 2013 யுத்தம் முடிந்த பின் வந்த மூன்றாவது சுதந்திர தினம் திருகோணமலையில் கொண்டாடப்பட்டது. இதில் அரசுத் தலைவர் ஆற்றிய உரையை தீவிர தமிழ்த் தேசிய சக்திகள் ஒன்றில் நிராகரித்தன அல்லது பொருட்படுத்தாது விட்டன. ஆனால், இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் அந்த உரைக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியத்துவம் கவனிப்பிற்குரியது. குறிப்பாக, இந்திய மற்றும் மேற்கத்தேய நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆபிப்பிராயத்தை உருவாக்கவல்ல தரப்பினரை பிரதிபலிக்கும் ஊடகங்கள் மேற்படி உரைக்கு வழங்கிய முக்கியத்துவத்தைப் பார்த்தால் அந்த உரை யாரை சென்றடையவேண்டுமோ அவர்களைச் சென்றடைந்தது என்றே பொருள்படும். தீவிர தமிழ்த் தேசிய சக்திகள் அந்த உரையில் புதி…
-
- 7 replies
- 1.3k views
-
-
யாழிற்கு... புதிய, இந்திய துணைத் தூதுவர் நியமனம்! யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன், சுரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான இந்தியத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றிவரும் நிலையில் விரைவில் யாழ்ப்பாணத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். https://athavannews.com/2021/1230095
-
- 3 replies
- 1.3k views
-
-
விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பெறும் பெரும் திட்டத்துடன் மகிந்தா இந்தியா பயணம் இந்தியா சென்றிருக்கும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லியில் ஆரம்பமாகியுள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்ளும் பெரும் திட்டத்துடனேயே இந்தியா சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. மிகின் ஏயார் விமான மூலம் புதுடெல்லி சென்ற மகிந்த ராஜபக்சவை இந்திய, இலங்கை தூதுவராலய அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். http://www.pathivu.com/
-
- 2 replies
- 1.3k views
-
-
இது பிரபல்யமான வாசிங்க்டன் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் கருத்துப்பகுதி. வாசகர் கருத்துப்பகுதியை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது. அதாவது சிங்கள சிரி லங்கா அரசு வன்னிக்கு பத்திரிகையாளர்களி செல்லாமல் தடை செய்த்தற்கும் இதற்கும் விதியாசம் இல்லை http://www.washingtontimes.com/news/2009/a.../tigers-at-bay/
-
- 3 replies
- 1.3k views
-
-
பிள்ளையான் போன்றோரை முதலமைச்சராக மாற்றி அதன் மூலம் முதலமைச்சர் பதவி கேவலப்படுத்தப்பட்டுள்ளதாகப
-
- 1 reply
- 1.3k views
-
-
பழ.நெடுமாறன் தலைமையில் சீமான் திருமணம்: மாஜி அமைச்சர் காளிமுத்து மகள் கயல்விழி மணமகள்! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை அவர் மணக்கிறார். திருமணம் சென்னையில் செப்டம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மணமகள் எம்.ஏ. பட்டம் பெற்றவர். இவர்களது திருமணம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் செப்டம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. சீமான் - கயல்விழி திருமணத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி நடத்திவைக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு முன்னிலை வகிக்கிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வருகின…
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கையில் இராணுவப் புரட்சி நடைபெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறி மகிந்த ராஜபக்ச இந்திய அரசின் உதவியைக் கோரியதைத் தொடர்ந்து இந்திய இராணுவம் உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது என்ற சரத் பொன்சேக்காவின் கூற்று ஆதாரமற்றது என இந்திய அமைச்சர் சசி தரூர் கருத்து வெளியிட்டிருக்கிறார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவிப்பது அவசியமற்றது எனக் குறிப்பிட்ட அவர் எனினும் இந்திய இராணுவம் உசார் நிலையில் இருந்தது என்ற கருத்து முழுக்க முழுக்க தவறானது என்பதை மட்டும் தன்னால் உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்தார் http://www.tamilstar.org
-
- 0 replies
- 1.3k views
-
-
போலீஸாரின் தொந்தரவால் ஈழ ஏதிலிப் பெண் தீக்குளிப்பு தமிழகத்தில் கரூர் ஈழ ஏதிலிகள் முகாமிலுள்ள பெண் ஒருவர் தமிழக காவல்துறையினர் கொடுத்த தொல்லை காரணமாக தீக்குளித்துள்ளார். ராயலூர் முகாமில் சுமார் 1000 ஈழ ஏதிலிகள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இங்கு உள்ள மூவரை சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் கைதி செய்து , முன்று வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் அவர்களை தொடர்பு படுத்தி கொலை குற்றவாளிகளாக ஒப்புக்கொள்ளும்படி மிரட்டி உள்ளனர். அவர்கள் மறுத்த நிலையில், அந்த முன்று ஏதிலிகளில் ஒருவரின் மனைவியை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து சென்று தன் கணவனை கொலை குற்றத்தை ஒப்புகொள்ள சொல்லும் மாறு அந்த பெண் துன்புறுத்தப்பட்டு உயிருக்கு அச்சுறுத…
-
- 9 replies
- 1.3k views
-
-
இந்திய மருத்துவ குழு இலங்கைக்கு பயணம் இலங்கைக்கு உடனடியாக முழு அளவிலான அவசரகால மருத்துவ உதவி குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக செயலாளர் விஷ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு உடனடியாக முழு அளவிலான அவசரகால மருத்துவ உதவி குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது. மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், தேவையான மருத்துவ உபகரணங்களுடன் இந்த குழு இலங்கை செல்கிறது. இந்தக் குழுவுக்கு தேவையான உதவிப் பொருட்களும் உடனுக்குடன் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுநிர்மாணம் செய்யவு…
-
- 6 replies
- 1.3k views
-
-
வடகொரியா, சிரியா, ஈரான் வரிசையில் இணைய விரும்புகிறதா இலங்கை? - அமெரிக்க அதிகாரி கேள்வி [Tuesday, 2014-06-24 09:51:30] ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவை நிராகரிப்பதாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக. ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் துணை பிரதி ராஜாங்கச் செயலாளர் அடுல் காசியப் தெரிவித்துள்ளார். ஈரான், வடகொரியா, சிரியா போன்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளை திட்டவட்டமாக நிராகரித்திருந்தன. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். நீண்ட கால ஜனநாயக வரலாற்றைக் கொண்ட இலங்கை, பாரிய மனித …
-
- 6 replies
- 1.3k views
-
-
வடக்கில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி வடக்கின் இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை காக்கப்படும் என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நஞ்சுண்டான் குலத்தை புனரமைக்க கோரிய அனுமதியை நான் வழங்கியுள்ளேன். ஏப்ரல் மாதமே அதற்கான அனுமதி வழக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு அபிவிருத்து குறித்த ஜனாதிபதியின் கூட்டத்திலும் நடவ…
-
- 8 replies
- 1.3k views
-
-
அநுராவின் வெற்றிடத்துக்குச் சரண அநுரா பண்டாரநாயக்க காலமானமாகையால் வெற்றிடமாகியுள்ள கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் பதவிக்கு சரண குணவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். கூட்டமைப்பின் விருப்பு வாக்குப் பட்டியலில் அநுராவுக்கு அடுத்து அதிக விருப்பு வாக்குகைள சரண குணவர்த்தனவே பெற்றுள்ளார் http://www.sudaroli.com/pages/news/today/16.htm
-
- 0 replies
- 1.3k views
-