ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
2016 பிறேசிலில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கட்டப்படும் சூரியவெளிச்சத்தினால் இயங்கப்படும் கோபுரங்களின் படங்கள்.
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழனின் தொடர்கதைகள் தொடர்ந்தே செல்லுமா? சேரன், சோழன், பாண்டியன் கிரேக்கத்திலிருந்து அவுஸ்த்திரேலியா வரை உள்ள கரையோரத்தை ஆண்டார்கள் என்பது அழிந்தொழிந்த எங்சியுள்ள வரலாறுகள் மூலமும் புவி சார்ந்த கொள்கையாலும் விளங்கமுடிகின்றது, இவர்களுக்கிடையில் போர் புரிந்து அழிந்தார்கள். அத்துடன் குமரிக்கண்டமான பாண்டிய நாடு பேரலை போன்ற அனர்த்தத்தில் மூழ்கி ஏராளமான தமிழர்கள் மாண்டு போக ஏஞ்சிய தமிழர்கள் ஆங்காங்கே மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, அந்தமான் இலங்கை போன்ற இடங்களில் விடப்பட்டார்கள். பின்னர் அந்நியரின் வியாபாரப்படையெடுப்பால் ஒல்லாந்தர், போத்துக்கீசர், ஆங்கிலேயர் வந்து போரிட்டபோது தமிழ் மன்னர்கள் எதிர்த்துப்போரிட்டனர். காட்டிக்கொடுக்கும் தமிழர்களால் அவர்கள் போரில் வ…
-
- 2 replies
- 1.3k views
-
-
அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்! எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். மருத்துவர் அர்ச்சுனா கடந்த ஐனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் மாறி மாறி ஆதரவு தெரிவித்ததுடன் இறுதி நேரத்தில் அனுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்! (newuthayan.com)
-
-
- 11 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் போர்முனையில் படை நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையிலேயே முதற்கட்டமாக ஈடுபட்டு வருகின்றனர். என்று தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், அடுத்த கட்டமாக தாயகப் பிரதேசங்கள் மீட்கப்படும் என்று 'கேசரி" வார இதழுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்குப் பேச்சு வார்த்தை குறித்த எண்ணம் இருக்குமானால் அதனை நேர்வே ஊடாக தெரிவிக்கலாம். நோர்வேயின் மத்தியஸ்தத்தின் கீழ் அமைதிப் பேச்சு வார்ததைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்றும் தாயார் என்றும் கூறியுள்ளார் பா. நடேசன். சர்வதேச ஆவணமாக கருதப்படும் போர் நிறுத்த உடன்பாட்டை விடுதலைப் புலிகள் கிழித்தெறிய விரும்பவில்லை. ஒ…
-
- 0 replies
- 1.3k views
-
-
நீதி மறுக்கப்பட்டு 50வருட தண்டனை பெற்ற மகசீன் சிறைச்சாலையில் வாடும் சிங்கராசா என்ற இளைஞர் தனது அம்மாவுக்கு உதவிகோரியுள்ளார். சிங்கராசாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினைக் கேள்வியுற்று இவரது தந்தையார் மரணத்தைத் தழுவினார். 18ஆண்டுகளுக்கு மேலான சிறைவாழ்வின் துயரம் எல்லாவற்றுக்கும் மேலாக வயதான அம்மாவுக்கும் யுத்தத்தில் கணவரை இழந்த அக்காவுக்கான வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க புலம்பெயர் உறவுகளிடமிருந்து ஆதரவினை வேண்டி கண்ணீரால் எழுதிய கடிதம் இது. ஈரமுள்ள இதயங்களே இந்த இளைஞனின் குடும்பத்திற்கு ஆதரவு தாருங்கள். நேசக்கரம் கொடுக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரம் வருமாறு :- Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany Shanth…
-
- 0 replies
- 1.3k views
-
-
வெகு விரைவில் மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையில் 37 லட்சம் ரூபா பெறுமதியில் தீயாகி அறக்கட்டளை அமைப்பால் உருவாக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சுமார் 50 அல்லது 60 வருடங்களுக்கு முன்னர் ஒரு ஆங்கில சஞ்சிகையில் வாசித்த ஞாபகம் இன்னுமொரு 60 இல்லது 70 வருடங்களில் நீர் பற்றாக்குறை உலகத்தை பாதிக்கும். மாசடைந்த நீரால் மக்களுக்கு மருத்தவ சிகிச்சையளிக்க வேண்டிய கடப்பாட்டை உண்டாக்கும். நீரற்ற நிலை ஒரு புறம். நீரிருந்தும் மாசுற்ற நில…
-
- 14 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெற இருக்கும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளும் படி சோனியா காந்தி, மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரை நேரில் சென்று அழைப்பதற்காக டெல்லி செல்வதற்கு கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்லி செல்லும் கருணாநிதி சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரதீபா பட்டீல் ஆகியோரிடம் அழைப்பிதழ்களை நேரிடையாகக் கையளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும் ஏனைய முக்கிய விடயங்களின் போதும் கடிதம் எழுதியே தனது கவலையை வெளியிட்டு வரும் கருணாநிதி தனது புகழ் பரப்பும் இந்த ஆடம்பர விழாவிற்காக டெல்லி வரை சென்று வர இருப்பது குறிப்பிடத்தக்கது. source: http://www.eelamweb.com/
-
- 16 replies
- 1.3k views
-
-
உலகக் கிண்ண போட்டிகளின் அரங்குகளுக்கான செலவு அதிகரித்ததால், தான் 250 கோடி ரூபா கடனில் இருப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (இலங்கை கிரிக்கெட் சபை) தெரிவித்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக இரு அரங்குகளை புதிதாக நிர்மாணிக்கவும் மற்றொரு அரங்கை புனரமைக்கவும் பெருந்தொகை பணத்தை நாம் செய்ததாகவும் உலகக் கிண்ணப் போட்டிகளால் எமக்கு கோடி ரூபா (சுமார் 22.6 மில்லியன் டொலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மேற்படி 3 அரங்களுக்காக சுமார் 500 கோடி ரூபாவை நாம் செலவிட்டதாகவும் கூறியுள்ளார். . எதிர்வரும் சுற்றுப் போட்டிகளுக்கான வருமானத்துடன் புதிய அரங்குகளை நிர்மாணிப்பதற்கு ஐ.சி.சி. தம்மை நிர்பந்தித்தது என அமைச்சர் முறை…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஜெனீவா, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை எதிர்த்து இந்தியா வாக்களிக்காவிடின் அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாவிட்டால் இலங்கை சீனாவை நோக்கி நகரும் என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்தார். ஜெனீவாவில் இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்கள் என்ற தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கிலேயே கோமின் தயாசிறி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும் வெற்றிபெறப்பட்டாலும் இலங்கை தண்டனை பெறும் வரை மேற்கு நாடுகள்…
-
- 4 replies
- 1.3k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற் குழுவின் இணைப்பாளரும், அமெரிக்கச் சட்டவாளருமான விசுவநாதன் உருத்திரகுமாரனை அமெரிக்காவின் உதவியுடன் கைது செய்வதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணித்துத் திரும்பிய தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ரொபேட் பிளேக் உருத்திரகுமாரனைக் கைது செய்வதற்கு உதவுவார் எனக் கொழும்பு எதிர்பார்த்திருந்தது. ஆனால், உருத்திரகுமாரனைக் கைது செய்வதற்குப் பதிலாக மீண்டும் பேச்சுக்களைத் தொடங்குவது குறித்து அவருடன் கலந்துரையாடுமாறு சிறிலங்கா அதிகாரிகளுக்கு பிளேக் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஏற்கெனவே - மாவீரர்…
-
- 3 replies
- 1.3k views
-
-
சனிக்கிழமை , அக்டோபர் 30, 2010 யாழ் பல்கலைக்கழகம் கூடாதவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதில் தான் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் நிலையில் இப்பல்கலைக்கழகம் தவறானவர்களது கரங்களில் சிக்கி விடக்கூடாது என்பதில் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் இவ்வாறு டக்ளஸ்ஆலோசனை கூறியுள்ளார். நேற்று பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில் இவ்வாறு கூறியுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு சிலர் தவறான வழிவகைகளில் தளமமைத்து செயற்பட எத்தணிக்கக் கூடும் என்பதை இங்கு சுட்டிக் காட்டிய டக்ளஸ் அவ்வாறு தவறான வழிவகைகளுக்குள் இப்பல்கலைக்கழகத்தை தள்ளி விடாமல் எமது பண்பாட்டு கலாசார விழுமியங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமாம். பல்கலைக்கழக மாணவர்களின் கடத்தல்கள் மற்றும் வளாகத்திற்க…
-
- 7 replies
- 1.3k views
-
-
புலிகளுடன் தமிழ் தலைமைகள் செய்து கொண்ட டீலின் விளைவே TNA…. December 25, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது தமிழீழ விடுதலை புலிகளுடன் தமிழ் அரசியல் தலைமைகள் செய்து கொண்ட டீலின் ஊடானதே என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே. சயந்தன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற “சொல்விற்பனம்” எனும் விவாத அரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னரான நிகழ்வுகளை தொடர்ச்சியாக பார்த்தால் ஜனநாயக ரீதியான தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் சுட்டுப்படுகொலை செய்யபப்ட்டனர். அந்த வரிசையில் இறு…
-
- 7 replies
- 1.3k views
-
-
போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட ருத்ரகுமாரனுக்கு அமெரிக்க அரசாங்கம் அடைக்கலம் வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரனினால் மேற்கொள்ளப்பட்ட பல போர்க்குற்றச் செயல்களுடன் ருத்ரகுமாரனுக்கு தொடர்பு காணப்படுகின்றது. ருத்ரகுமாரன் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் காணப்படுகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் ருத்ரகுமாரன் ஐந்து தடைவகள் இலங்கைக்கு விஜயம் செய்து, பிரபாகரனுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிரபாகரனின் சட்ட ஆலோசகராகவும் ருத்ரகுமாரன் கடமையாற்றியுள்ளார் என திவயி http://www.seithy.co...&language=tamil
-
- 5 replies
- 1.3k views
-
-
கனடாவில் இருந்து அனுப்பிய பொருட்களை அரசு இன்றுவரை முடக்கி வைத்துள்ளமைக்கு காரணம் என்ன PLOTE கேள்வி 12 மார்ச் 2011 தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் கனேடிய பிரதிநிதிகளுக்கும் ரொறன்ரோ துணை தூதரகத்;தின் தூதுவர் திரு.கருணாரட்னா பரணவிதாரண அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.03.2011) மாலை ரொறன்ரோவில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பில் துணை தூதரகத்தின் தூதுவர் கருணாரட்ண மற்றும் புளொட் அமைப்பின் சர்வதேச செயலகத்தின் கனேடிய பிரதிநிதிகளும், கனேடிய கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். சுமார் 3மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு, வடகிழக்கில் மீள்குடியேற்றம், தமிழர் வதிவிடங்கள் அபகரிக்கப்படுதல் உட…
-
- 3 replies
- 1.3k views
-
-
வடக்கில் 5 இலட்சம் மரக்கன்றுகளை கார்த்திகையில் நடுவதற்குத் திட்டம் வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை மாதம் முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டம் இடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (22.10.2015) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அதன்போதே இதனைத் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கில் மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு மிகப்பொருத்தமான மாதமாகக் கார்த்திகை மாதமே உள்ளது. கார் என்பது மழையைக் குறிக்கும். அந்தவகையில், மழ…
-
- 4 replies
- 1.3k views
-
-
இலங்கையை விளையாட்டு மைதானமாக நினைக்கக் கூடாது - ஜயநாத் கொலம்பகே. இலங்கை பூகோள அரசியல் சக்திகளுக்கான உதைபந்தாட்ட மைதானமாக விளங்க முடியாது என வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடத்தை கருத்தில் கொண்டு பூகோள அரசியல் சக்திகள் அதனை விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கு அனுமதிக்கமுடியாது. அந்த போட்டியில் ஆகக்குறைந்தது நாங்கள் நடுவராகவாவது இருக்கவேண்டும். இந்த விளையாட்டில் சர்வதேசஅளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளை உள்வாங்கவேண்டிய தேவையுள்ளது. தேசிய நலன்களை அ…
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
நாச்சிக்குடா- புத்துவெட்டுவான் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 47 படையினர் பலி- 87 பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 08:13 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] நாச்சிக்குடா தொடக்கம் புத்துவெட்டுவான் வரையிலான களமுனைகளில் சிறிலங்கா படையினர் பாரியளவில் மேற்கொண்ட நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 47 படையினர் கொல்லப்பட்டனர். 87 பேர் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா படையினர் செறிவான ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதல்களையும் கனரக சுடுகலன் தாக்குதல்களையும் நடத்தியவாறு நாச்சிக்குடா, வன்னேரி, அக்கராயன், புத்துவெட்டுவான் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இவற்றினை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இவற்றில் படைத்தரப்புக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
நல்லூரில் ஆறு வீடுகளில் கொள்ளை வாள்களுடன் வந்த கும்பல் அட்டகாசம் பணம், நகை தர மறுத்தோருக்கு வாள்வெட்டு நல்லூரில் சட்டநாதர் வீதி, சங்கிலியன் வீதிப்பகுதிகளில் நேற்று அதிகாலை கொள் ளைக்கோஷ்டி ஒன்று பல வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்ததுடன் தங்க நகை, பணம் மற்றும் பொருள்களையும் கொள்ளை யிட்டிருக்கின்றது. முகத்தைக் கறுப்புத்துணியால் மறைத் துக் கட்டிக்கொண்டு வாள்கள், கிறிஸ் கத்திக ளுடன் காணப்பட்ட கொள்ளையர்கள் வீடு களை அடித்து நொறுக்கி உள்நுழைந்து அங் கிருந்தவர்களைப் பயமுறுத்தி, மிரட்டிகொள் ளையில் ஈடுபட்டிருக்கின்றனர். சுமார் இரு பது இருபத்தைதந்து பேர் அடங்கிய கொள் ளைக் கும்பல் ஒன்றே இவ்வாறு பெரும் அடாவடித்தனமான செயலில் ஈடுபட்டிருப் பது தெரியவந்துள்ளது. நேற்று…
-
- 2 replies
- 1.3k views
-
-
அடேல் பாலசிங்கமும், ருத்திரகுமாரனும் புலிகளின் வன்முறைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும்! - சிறிலங்கா வலியுறுத்தல்!! வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் முப்பதாண்டு கால வன்முறைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்திடம் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித்த ஹொகன்னவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த பிரதிநிதிகளை நியூயோர்க்கில் சந்தித்த போதே இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர். இதன்போது, வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதி கட்ட வன்முறைகள் தொடர்பிலேயே மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் கரிசன…
-
- 1 reply
- 1.3k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 இருந்து 255 ஆக அதிகரிக்க இணக்கம் - விகிதா சார முறை இரத்து? எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் விகிதாசார முறை இரத்துச் செய்யப்பட்டு தொகுதி வாரியாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. தொகுதி வாரியாக 160 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 22 மாவட்டங்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் 70 உறுப்பினர்களும் தேசிய பட்டியல் மூலமாக 20 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட உள்ளனர். 20 தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 பெண்களை நியமிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த தேர்தல் முறை மாற்றத்தை 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்க திட்டமிடப…
-
- 23 replies
- 1.3k views
-
-
மக்கள் விரோதிகளும் தேசவிரோதிகளுமே இன்று அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர் - சோமவன்ச அமரசிங்க [Friday February 02 2007 12:03:16 AM GMT] [யாழ் வாணன்] நாட்டில் பயங்கரவாதத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு மக்கள் ஆணை வழங்கினர். அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும் மஹிந்த சிந்தனைக்கு விரோதமாகவும் செயற்பட்டால் அதற்கெதிராக ஜே.வி.பி. போராடும் என்று அக்கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். மக்கள் விரோதிகளும் தேசவிரோதிகளுமே இன்றுஅரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இணைந்தால் ஜே.வி.பி. நியாயமான எதிர்க்கட்சியாக…
-
- 3 replies
- 1.3k views
-
-
வவுனியாவில் கருணாவின் நடமாட்டம் உள்ளதாகவும் கண்காணிப்புக்குழு தெரிவிப்பு வடக்கில் தொடரும் தாக்குதல்களுக்கு புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றோரே காரணம் வவுனியாவில் கருணாவின் நடமாட்டம் உள்ளதாகவும் கண்காணிப்புக்குழு தெரிவிப்பு வடக்கில் தொடரும் தாக்குதல்களுக்கும் ஆத்திரமூட்டும் செயல்களுக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் அதிலிருந்து பிரிந்து சென்று இயங்குபவர்களுமே காரணம் போன்று தோன்றுகின்றது. அரசபடையினர் இதனை மறுத்துரைத்துவரும் போதிலும் இந்தக்குழுவினருக்கு பின்புலமாக நின்று படையினர் உதவிவருகின்றனர் என்று கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. கண்காணிப்புக்குழுவின் வவுனியா மாவட்ட தலைவர் “ஜொய்னி சுனினென்னை ஆதாரம் காட்டி ராய்ட்டர் இந்தச் செய்தியைவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வாரம் ஒரு கேள்வி பதில் பகுதிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ” போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தை ஏற்கனவே ஜனாதிபதியுடன் சேர்ந்து பலரும் கூறிவிட்டார்கள். ‘எமது படையினர் தப்பேதும் செய்யவில்லை. அவர்கள் எந்த வித நீதிமுறைத் தண்டனைக்கும் உள்ளாவதற்கு நாங்கள் விடமாட்டோம்’ என்று ஜனாதிபதியே கூறியுள்ளார். அதன் அர்த்தம் என்ன? ‘எமது படையினர்’ என்பதைக் கவனிக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் பலர் படையினருள் உ…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். இதில் சங்கரத்தையைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு கடந்த 21 ஆம் திகதி சுகயீனம் அடைந்ததை அடுத்து மறுநாள் சங்கானைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். குறித்த நபருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். உடற்கூற்றுப் பரிசோதனையில் எலிக் காய்ச்சலின் காரணமாக மரணம் சம்பவித்துள்ளமை உறுதிப்படுத்த…
-
-
- 2 replies
- 1.3k views
- 2 followers
-
-
http://www.yarl.com/videoclips/view_video....4c4cf38708677c4
-
- 0 replies
- 1.3k views
-