ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யுனிசெஃப் அமைப்பானது நிதியுதவி வழங்கி வருவதாக ஜே.வி.பியின் நாடளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.4k views
-
-
புலிகளை ஆதரிக்கும் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுத்தால் அழகிரி மீதும் நடவடிக்கை எடுக்க நேரிடும் - ஜெயலலிதா குற்றச்சாட்டு 2/21/2008 5:20:04 PM வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுத்தால் தனது மகன் அழகிரியின் மீதும் நடவடிக்கை எடுக்க நேரிடு÷மா என்று முதலமைச்சர் கருணாநிதி அஞ்சுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தனது மகன் அழகிரியின் பிறந்த நாளையொட்டி மதுரையிலும் தென் மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இராணுவ உடையில் அழகிரியின் தலையை ஒட்டி களப்போராளி என்ற டிஜிட்டல் பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.இக்கார…
-
- 4 replies
- 2.5k views
-
-
மக்களின் வாக்குக்களை பெற்றுக்கொள்ளவதற்காக இரண்டு பிரதான கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றன. வடக்குக்கு வருகின்ற மகிந்த ராஜபக்சவும் சஜித்தும் வேறு தெற்குக்கு செல்கின்ற மகிந்தராஜபக்ச சஜித்தும் வேறு, அவ்வாறே கிழக்கிற்கு செல்கின்ற மகிந்தவும் சஜித்தும் வேறு இவர்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றை பேசிவருகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று 12-11-2019 கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள், பறங்கியர் என அனைவரும் சமத்துவமாக வாழ…
-
- 4 replies
- 517 views
-
-
Published By: DIGITAL DESK 7 16 FEB, 2025 | 09:11 AM அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியமைப்பை உருவாக்குவது எமது பொறுப்பாகும். நாட்டினுள் அனைவருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கவும் அவர்களின் தனித்துவ அடையாளங்கள் பேணவும் வழிசமைப்போம் என்று பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டையில் நேற்று சனிக்கிழமை (15) நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் வெற்றிபெற்ற பிரதிநிதித்துவங்களுடன் அரசாங்கத்தினை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி என்ற தனியொரு கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 76வருடங்களாக முன்னெடு…
-
-
- 4 replies
- 377 views
- 1 follower
-
-
சமஸ்டி மறுக்கப்பட்டால் தனிநாட்டு கோரிக்கை வலுப்பெறும் ; பொது அமைப்புக்கள் எச்சரிக்கை! புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு சமஸ்டி உரிமை மறுக்கப்பட்டால் தனிநாட்டையே தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது. இதன்போது கருத்துக்களை முன்வைத்த பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களே இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு வழக்கப்படும் தனிநாடு தமிழீழமாக அமைய வேண்டும் இதற்க…
-
- 4 replies
- 687 views
-
-
-
- 4 replies
- 476 views
-
-
கடல் புலிகளுக்கு அதிநவீன படகுகளை வழங்க இணங்கினோம் என பசில் என்னிடம் தெரிவித்தார் - சரத் பொன்சேகா அதிரடி கருத்து (ஆர்.யசி) விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் போராடிக்கொண்டு இருந்த வேளையில் ராஜபக் ஷக்கள் புலிகளுடன் உடன்படிக்கை செய்து அரசியல் பேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.தமிழர்களின் வாக்குகளை நிறுத்தியதற்காக கடல் புலிகளுக்கு அதி நவீன படகுகள் வழங்கப்பட்டதாக பசில் ராஜபக் ஷ என்னிடம் கூறினார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற வேட்பாளர் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று வத்தளை பலகல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர…
-
- 4 replies
- 1k views
-
-
துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு மரண தண்டனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. - See more at: http://www.tamilmirror.lk/181441/த-ம-ந-த-ச-ல-வ-உள-ள-ட-ட-ப-ர-க-க-மரண-தண-டன-#sthash.fgzbXQLg.dpuf
-
- 4 replies
- 716 views
-
-
பௌத்த தத்துவத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கு புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் பௌத்த மக்களுக்கு போன்றே பௌத்த தத்துவம் குறித்து ஆர்வம் கொண்ட பிற மதத்தவர்களுக்கும் அறிவை பெற்றுக்கொள்வதற்கு களனி ரஜமஹா விகாரையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஆதாரமாக விளங்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை), களனி ரஜமஹா விகாரையின் www.kelaniyatemple.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தபோதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார். பௌத்த தத்துவம் தொடர்பிலும், பிக்குமார்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும், தீர்வு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு செயற்பா…
-
- 4 replies
- 727 views
-
-
சிங்கள மக்களின் உறவு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் என்பதே இல்லையென்று அமைச்சர் டியூ குணசேகர உறுதியாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்தது வரவேற்கத்தக்கதென்று தெரிவித்த அவர் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இந்தியாவையும் சங்கடப்பட வைத்துள்ளதென்றும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனமாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது ஒரு தேர்தல் விஞ்ஞாபனம் அல்ல. மாறாக அது ஒரு அரசியல் அறிக்கை. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமாக உள்ள அரசியல் அறிக்கை இந்திய அரசாங்கத்தையும் …
-
- 4 replies
- 1.8k views
-
-
இந்திய தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மகிந்த உதவி செய்திருந்தார்: வீரதுங்கா கடந்த வருடம் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சா இந்திய காங்கிரஸ் கட்சிக்கு உதவிகளை மேற்கொண்டிருந்தார் என சிறீலங்கா அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இணையத்தளம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த வருடம் மே மாதம் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது வன்னியில் நடைபெற்ற போரில் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற அறிவித்தலை விடுத்து மகிந்த ராஜபக்சா இந்திய காங்கிரஸ் கட்சிக்கு உதவி புரிந்திருந்தார். தேர்தல் காலத்தில் போரை நிறுத்தும் படி இந்தியா சிறீலங்காவை கேட்டிரு…
-
- 4 replies
- 874 views
-
-
தனிக் கட்சி அமைக்கும் பொன்சேகா – கூட்டணி அமைக்கும் டலஸ்! ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனிக் கட்சியொன்றை அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஏற்கனவே ஜனநாயக கட்சியை அமைத்திருந்த நிலையில், பின்னர் அவர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டு அந்தக் கட்சியை கலைத்தார். பின்னர் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பாராளுமன்றம் வந்தார். இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சிக்குள் நிலவும் அதிருப்திகள் காரணமாக அவர் தனிக் கட்சியை அமைக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஶ்…
-
- 4 replies
- 452 views
-
-
தன்மானம்,சுயமரியாதையை விட்டு பட்ஜட்டுக்கு ஆதரவளித்துள்ளோம் சபையில் கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீதரன் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்பதற்காக எமது தலைவர் சம்பந்தன் ஐயாவின் கோரிக்கைக்கு அமைவாக எமது தன்மனாத்தையும் சுயமரியாதையும் விட்டு வரவு செலவுத்திட்டத்திற்கு வாக்களித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிமை 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் கல்வி, விளையாட்டுத்துறை, உள்ளக அலுவல்கள், வடமேல்,கலாசார அலுவல்கள் ஆகிய அமைச்சுக்களுக…
-
- 4 replies
- 452 views
- 1 follower
-
-
பிணை முறிக்கான கட்டணங்களை செலுத்தாமையால் இலங்கைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வங்கியொன்று வழக்குத் தாக்கல் பிணை முறிக்கான கட்டணங்களை செலுத்தாமையால் இலங்கைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வங்கியொன்று வழக்குத் தாக்கல் செய்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியை தடுப்பதற்காக இலங்கை முதல் தடவை தனது வெளிநாட்டு கடன்களை செலுத்த தவறியுள்ள நிலையிலேயே ஹமில்டன் ரிசேர்வ் வங்கி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இலங்கையின் சர்வதேச பிணைமுறியில் 250 மில்லியன் டொலர்களைக் கொண்டுள்ள ஹமில்டல் ரிசேர்வ் வங்கி 25 ஆம் திகதி வட்டி உட்பட முழுமையான தொகையை இலங்கை செலுத்த வேண்டும் என கோரி நேற்று வழக்குதாக்கல் செய்துள்ளது. செயின்ட் கிட்ஸ் நெவிசினை தலைமையகமாக க…
-
- 4 replies
- 334 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக் காவலர்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இன்று மாலை கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் வைத்து சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும் சிறைக்காவலர்களது சீருடையில் இருந்த இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர் . குறித்த சம்பவம் தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கையில் கரடிப்போக்கு சந்தியில் இன்று மாலை சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் சிறு காயங்களுடன் உயிர்தப்பியதாகவும் குறித்த விபத்து துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனின் தவறு என தெரிவித்து உண…
-
- 4 replies
- 403 views
-
-
உள்ளூர் சந்தையில் திடீரென காய்கறி விலை அதிகரித்துள்ளது இதனால் ஏற்கனவே விலை அதிகரிப்பால் அதிருப்தியில் இருந்த மக்களை மேலும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மரக்கறி ஓர் அத்தியவசியப்பொருள் என்பதனால் அனைத்து தரப்பினரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். இதனால் மஹிந்தவிற்கு வருகின்ற உள்ளூராட்சி தேர்தல்களில் பாதிப்பு ஏற்படலாம். இதனைப்போக்குவதற்கு இராணுவத்தினரை மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடுமாறு மஹிந்த பணித்துள்ளார். இதன்படி இராணுவம் கிராமங்களில் மரக்கறிகளை குரைந்த விலைக்கு பெற்று (பறிமுதலும் செய்யலாம்) அதனை கொழும்பு சந்தைகளில் நேரடியாக விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாதன முத்தாவின் திட்டத்தினால் மரக்கறி வியாபாரிகள், விவசாயிகள் மனம் நோகலாம் இது எதிரணிக்கு நல்லதோர…
-
- 4 replies
- 1.4k views
-
-
மகா ஓயா வாவியில் படகு கவிழ்ந்து இரு படையினர் பலி - பண்டார வன்னியன்- அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான மகா ஓயா பிரதேச வாவி ஒன்றில் மூழ்கி இரு சிறிலங்கா படையினர் பலியாகியுள்ளதாக அம்பாறைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த இருவரில் ஒருவர் விசேட அதிரடிப் படையைச்சேர்ந்தவர் என்றும் மற்றையவர் ஊர்காவல்படையினைச்சேர்ந்தவர
-
- 4 replies
- 1.4k views
-
-
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு முற்றாக எதிர்க்கிறது. இந்தத் தீர்மானத்தை நடை முறைப்படுத்துவதற்கு எத்தகைய புதிய வழி முறைகளையும் அரசு ஏற்படுத்தாது. தொடர்ந்தும் தனது வழியிலேயே அரசு பயணிக்கும். சர்வதேச அழுத்தங்கள் அரசை ஒருபோதும் எந்த விதத்திலும் எந்தவேளையிலும் கட்டுப்படுத்த மாட்டா. எமது நாட்டு விடயங்களுக்குள் யாரும் எமது அனுமதி இன்றித் தலையிட முடியாது. அது ஐ.நா. ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கும் பொருந்தும். அனைத்தையும் கையாளும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு. எனவே ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் யாரும் பயப்படத்தேவையில்லை. இவ்வாறு ஜெனிவாத் தீர்மானம் தொடர்பான தனது நிலைப் பாட்டைத் தெளிவாக அறிவித்தது இலங்க…
-
- 4 replies
- 773 views
-
-
கைதடி, கோப்பாய் வீதியில் அமைந்துள்ள பாலத்தில் வைத்து தமிழ் இராணுவ வீரர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி குறித்த இராணுவ வீரர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது கைதடி பாலத்தில் வைத்து இடைமறித்த இனந்தெரியாத குழுவினர் அவரை கொட்டன்களால் தாங்கியுள்ளனர். காங்கேசன்துறை இராணுவ முகாமில் பணியாற்றும் மறவன்புலவைச் சேர்ந்த சிவராசா சிவதாஸ் என்பவரே தாக்குதலுக்கு உள்ளாகினார். காயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்ச…
-
- 4 replies
- 483 views
-
-
கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்களா? – சிவமோகன் கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்களா? என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது என வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (13) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த கேள்வியை எழுப்பியுள்ள அவர், தமிழர் ஒற்றுமையை சீர் குலைக்க நினைக்கும் பலர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், “தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து கட்சிகளாக பிரிந்தும் சுயேட்சைக்குழுக்களாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களுக்கு தமிழ் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். அவர்கள்…
-
- 4 replies
- 556 views
-
-
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து ஏமாற்றும் இவர்கள் பற்றிய தகவல் தந்து உதவுமாறு கோருகிறோம். [Tuesday, 2012-12-18 17:12:29] கடந்த பல வருடங்களாக சட்டவிரோத ஆட்கடத்தல் ஏஜென்டுகளாக செயற்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து பலரை ஏமாற்றியுள்ள சூரியகுமார் மற்றும் சோபா கும்பல் பற்றிய மேலுமொரு வேதனைக்குரிய மோசடிச் சம்பவம் அம்பலமாகிறது. கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் மன்னார் போன்ற பகுதிகளிலிருந்து இழைஞர் யுவதிகளை கென்யா நாட்டிற்கு அழைத்துவந்து பணத்தைப் பெற்றபின்னர் பலரை திட்டமிட்டு ஏமாற்றியுள்ள மோசடிக்காரர்களிடம் பாதிக்கபட்ட மேலுமொரு விதவைப் பெண்ணொருவர் கண்ணீர் சிந்தி தனது நிலையை எம்மிடம் தெரிவித்துள்ளார். 2011ம் …
-
- 4 replies
- 2.7k views
-
-
மீண்டும் வருவோம் : விட்டுச் செல்ல இல்லை எடுத்துச் செல்ல மீண்டும் வருவோம் : கொழும்பில் மஹிந்த நாங்கள் மீண்டும் வருவோம். விட்டுச் செல்வதற்காக அல்ல எடுத்து செல்வதற்காக மீண்டும் வருவோம். அதற்காகவே மக்களை ஆயத்தப்படுத்துகின்றோம். பாதயாத்திரை என்றால் என்ன, எதிர்க் கட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும். போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்து முடிக்க வேண்டும் என இவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் எல்லோரும் தயாராக உள்ளோம். நீங்கள் தயார் என்றால் மீண்டும் நாம் வருவதற்கு தயாராக உள்ளோம். நீங்கள் கேட்பது எதுவோ அதை பெற்றுகொடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசுக்கு எதிராக பேராதனையில் கடந்த வியாழக்கிழமை (28)…
-
- 4 replies
- 590 views
-
-
கொரோனா பாதிப்பு – சர்வதேச ரீதியில் 112 ஆவது இடத்திற்கு முன்னேறிய இலங்கை உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 112ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் மக்களை அச்சுறுத்திவரும் நிலையில், இலங்கையிலும் அதன் பாதிப்பு தற்போதைய காலங்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணி காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் மாத்திரம் பதிவாகியுள்ள மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா …
-
- 4 replies
- 903 views
-
-
சிங்களத்தில் முக்கிய இதிகாசமான குருந்தி இதிகாசம் குருந்தனூர் மலையில் வைத்தே எழுதப்பட்டது : மெதகொட அபயதிஸ்ஸ தேரர் சிங்களத்திலுள்ள முக்கிய இதிகாசங்களில் ஒன்றான குருந்தி இதிகாசம், முல்லைத்தீவு குருந்தனூர் மலையில் வைத்தே எழுதப்பட்டுள்ளதாக ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பௌத்தபீட விரிவுரையாளர் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் அகழ்வு ஆராச்சி பணிகள் முன்னெடுக்கப்படும் குருந்தூர் மலைக்கு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்கள் படை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் (30) மாலை சென்று பார்வையிட்டுள்ளனர். பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அபயதிஸ்ஸ தேரர், மகாவம்சம் மற்றும் எமது இதிகாசங்களில் சொல்லப்பட்ட…
-
- 4 replies
- 679 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் 16 ஆயிரத்து 394 பேர் மீளக்குடியேறியுள்ளனர் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஏ-ஜி சந்திரசிறி தெரிவித்துள்ளார். 20 கிராமசேவையாளர் பிரிவு கொண்ட துணுக்காய் பகுதியில் 4415 குடும்பங்களும், மல்லாவியில் 1575 குடும்பங்களும் நிவாரண கிராமங்களிலிருந்து மீளக்குடியேறியுள்ளனர். மீள்குடியேறிய மக்களுடைய தேவைகள் குறித்த கலந்துரையாடலில்போது மேற்கண்டவாறு ஆளுநர் தெரிவித்துள்ளார். 65 வது படை பிரிவு இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் முல்லைத்தீவு அரச அதிபர், தேசத்தை கட்டி எழுப்பும் அமைச்சின் செயலாளர் மற்றும் சிரேஸ்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். மீள்குடியேறிய மக்களுடைய பாவனைக்கு இரண்டு பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவும…
-
- 4 replies
- 719 views
-