ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143690 topics in this forum
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை சாவகச்சேரி காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். நாவற்குழியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய சாவகச்சேரி காவல் நிலைய உப காவல்துறைப் பரிசோதகர் இ.சேந்தன் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதோடு வளர்க்கப்பட்ட கஞ்சா செடியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இக்கைதினைத் தொடர்ந்து நாவற்குழிப்பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா செடி வளர்க…
-
- 4 replies
- 768 views
- 1 follower
-
-
இலங்கை அரச படைகளின் மற்றொரு காட்டுமிராண்டித்தனம் வன்னியின் முல்லைதீவு பகுதியில் அரங்கேறியுள்ளது. வன்னியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளது முக்கிய மாவீரர் துயிலுமில்லமான முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லப் பகுதி படைத்தரப்பினால் கனரக வாகனங்கள் சகிதம் நேற்று உழுது நாசமாக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த மாவீரர்களது கல்லறைகள் கிளறப்பட்டு எலும்புக்கூடுகள் கூட வெளியே எடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் தமிழ் மக்களிடையெ மீண்டுமொரு முறை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வன்னி இராணுவ நடவடிக்கைகளையடுத்து முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல பகுதி படைத்தரப்பினால் இடித்தழிககப்பட்டிருந்ததுடன் கல்லறைகள்உள்ளிட்ட அனைத்தும் அப்பறுபபடுததப்பட்டுமிருந்தது…
-
- 4 replies
- 1k views
-
-
08 Apr, 2025 | 03:23 PM "கலிப்சோ" எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட தொடருந்து சேவையானது நானுஓயா மற்றும் தெமோதரை புகையிரத நிலையங்களுக்கு இடையே இன்று (08) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த தொடருந்து அதன் பயணத்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 8.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு நானுஓயா புகையிரத நிலைய வளாகத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நானுஓயாவிலிருந்து தெமோதரை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியிடமிருந்தும் 10 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படுவதுடன் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் …
-
- 4 replies
- 307 views
-
-
அரசியல்தீர்வை அரசு முன்வைக்காவிடில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்கள் புலிகளையே ஆதரிப்பர்: பிளேக் [ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 06:50.03 AM GMT +05:30 ] விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. ஆனால் இதர தமிழ்த் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினால் விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி விடலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது; விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது கடினம் என்பதில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. அவர்களை ஆயுதங்களைக் கீழே போடுவது பேச்சுவார்த்தையால் வேண்டுமெனில் சாத்தியம். அவர்களை முழுமையாக இராணுவ ரீதியாக தோற்க…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
ரிஷாத்தின் சகோதரர் விடுவிக்கப்பட்டதன் பின்னணி அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தமா ? - மெல்கம் ரஞ்சித் (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் தற்போது திடீரென விடுதலை செய்யப்பட்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்பினை தெரிவிப்பதாகக் கூறிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இதன் பின்னணி அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் கூறினார். விடுதலை செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பில் ஆரம்பத்தில் கூறப்பட்ட விடயங்களுக்கும் தற்போது கூறப்படும் விடயங்களுக்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன. இவர் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறிய தகவல்கள் எம்மிடம் உள்ளன. குற்றப்புலனாய்வு பிர…
-
- 4 replies
- 853 views
-
-
அதிகரித்துவரும் 13வது திருத்தச் சட்டத்தின் மீதான கரிசனை! யதீந்திரா ஜெனிவா தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், பிறிதொரு விடயமும் மெதுவாக மேலெழுந்திருக்கிறது. ஜெனிவா பற்றிய விவாதங்களுக்கு நடுவே இது தெரிவதால், பெரியளவில் எவரது கவனத்தையும் பெற்றிருக்கவில்லை. அந்த விடயம் - இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டம் தொடர்பானதாகும். ஜெனிவா பற்றிய விவாதங்களுக்கு நடுவே இது ஏன் குறிப்பாக வெளித்தெரிகிறது. இதற்கும் அமெரிக்கா ஜெனிவாவில் கொண்டுவரவுள்ள பிரேரணைக்கும் உள்ள தொடர்பு என்ன? சில தினங்களுக்கு முன்னர் இது அமெரிக்க நாடாளுமன்றத்திலும் ஒலித்திருக்கிறது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பி…
-
- 4 replies
- 2.4k views
-
-
கச்சதீவை அடுத்துள்ள இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் விரட்டியதோடு அவர்களது வலைகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரி விக்கப்படுகிறது. நேற்று மாலை 3000இற்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்தியக் கரையோரப் பட்டணத்திலிருந்து 641 இயந்திரப் படகுகளில் கச்சதீவையொட்டிய இலங்கை கடற்ப்பரப்பில் மீன்பிடிக்க முயன்றபோதே குறித்த மீனவர்கள் விரட்டப்பட்டுள்ளனர். இதேவேளை 30 படகுகளை மட்டும் சுற்றி வளைத்த கடற்படையினர் வலைகளைத் திருப்பித் தருமாறு தெரிவிக்கும் முன்னர் அவற்றை வெட்டியுள்ளனர் என புதுச்சேரி மீனவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.போஸ் தெரிவித்துள்ளார். …
-
- 4 replies
- 334 views
- 1 follower
-
-
சிறிலங்காவிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை வாங்கியதாக வெளியான செய்திகளை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய நிராகரித்துள்ளார். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அன்ரனி நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் முப்படைகளுக்காக, ரஸ்யா, இஸ்ரேல், பிரித்தானியா, அமெரிக்கா, சுலோவாக்கியா, போலந்து, பின்லாந்து, சிறிலங்கா ஆகிய நாடுகளில் இருந்து 23.5 பில்லியன் ரூபா பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் பிரிஐ செய்தி நிறுவனம் மற்றும், ஊடகங்கள் பலவும் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தன. இது பொய்ச்செய்தி என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஒருபோதும் இந…
-
- 4 replies
- 511 views
-
-
போலி வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் யாழில் இருவர் கைது யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை போலி கனேடிய நாணயத்தாள்களுடன் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த இருவரிடமிருந்து சுமார் 13 இலட்சம் ரூபா பெறுமதியான கனேடிய நாணயத் தாள்களையும் 2 கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த போலி கனேடிய நாணயத்தாள்கள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/24748
-
- 4 replies
- 547 views
-
-
அரசியல் கைதிகள் மீது யாழ் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் நீதித்துறையில் பெரும் அதிர்ச்சி‐ யாழில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 05 May 10 06:25 pm (BST) அரசியல் கைதிகள் மீது யாழ் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் நீதித்துறையிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளாக உள்ள 8 பேர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் கடந்த 30ம் திகதி தாக்குதல் ஒன்றை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையின் ஒரு பக்கமாக உள்ள கம்பி ஒன்று கழற்றப்பட்டிருந்ததாகவும் இதனால் அங்கிருந்து இவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டதாகக் கூறி சுமார் 10க்கு மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த 8 பேர் மீதும் பல மணி நேரமா…
-
- 4 replies
- 907 views
-
-
இலங்கையில் ரூ.1,500 விலையில் கிடைத்த யூரியா ரூ.42,500 ஆனது: நெல் விளைச்சல் என்ன ஆகும்? யூ.எல்.மப்ரூக் பிபிசி தமிழுக்காக 26 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ள நிலையில், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் அதனை வழிமொழிந்துள்ளதோடு, அந்த நிலையை எதிர்கொள்ளத் தயாராகுமாறு மக்களை உஷார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் சிறுபோகத்தில் அறுவடை செய்யப்பட்ட மொத்த நெல் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவானதே - தற்போதைய சிறுபோகத்தில் கிடைக்கும் என, விவசாய திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதனால் மக்களின் பிரதான உணவுப…
-
- 4 replies
- 807 views
- 1 follower
-
-
மத்திய அரசு எமது செயற்பாடுகளை முடக்குவதற்கு பலவித நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதால் கூட்டுறவே அத்தடைகளை உடைத்தெறிந்து முன்னேற வழிவகுக்கும் என்று தெரிவித்திருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாண சபையின் கீழான கூட்டுறவு சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் இன்று காலை முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று காலை முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும்போது முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:- மத்திய அரசாங்கத்திற்கும் எமக்கும் சில விடயங்களில் ஒருங்கிணைந்த அதிகாரங்கள் இருப்பினும் உள்ளூராட்சி, கூட்டுறவு பற்றிய விடயங்களில் எமக்குப் போதிய அளவு அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன என்பதை நாம் மறத்தலாகாது. போரினால் பாத…
-
- 4 replies
- 563 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த அமைச்சரவை உபகுழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த சபையின் உறுப்பினர்களாக பிரதமர் தினேஷ் குணவர்தன, நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர் தமிழர்களின் பிரச்சினைகள், தமிழ் கட்சிகள் மற்றும் நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த…
-
- 4 replies
- 636 views
- 1 follower
-
-
இலங்கை அரசின் பாதுகாப்பு அமச்சின் இணையத்தில் இந்தப்படத்தை பார்த்தேன்.யாழ் மக்களின் பரிதாபநிலையை இப்படி போட்டு அவமானப்பாடுத்துகிறார்கள் எப்போ இவர்களுக்கு விடிவு
-
- 4 replies
- 1.4k views
-
-
புலம்பெயர் தமிழ் மக்கள் தமது செயற்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் – லண்டனில் சுமந்திரன்! (Video in)) Monday, July 25, 2011, 6:48உலகம், காணொளி, தமிழீழம் லண்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தேசியப் பட்டியல் மூலம் நுழைந்த சுமந்திரன் உரையாற்றினார். புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை தான் பிரித்தானியாவிலும் வேறு இடங்களிலும் சந்தித்த இராஜதந்திரிகள் விமர்சித்ததாகவும், புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை தாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என இராஜதந்திரிகள் தெரிவித்ததாக சுமந்திரன் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கையில்…
-
- 4 replies
- 1.4k views
-
-
இலங்கையில் பாரிய அளவில் போராட்டம் ஒன்று வெடிக்கக்கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பிலான மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு தேர்தல்கள் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சவால்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் மீண்டும் சமூக அமைதியின்மை மற்றும் போராட்டங்கள் வெடிக்க கூடிய சாத்தியங்கள் அதிக அளவில் காணப்படுவதாக சுட்டிக்…
-
- 4 replies
- 447 views
-
-
நான் எவரையும் குற்றம் சுமத்தவில்லை ; பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை இருக்க வேண்டுமென நினைப்பவள் - ஒஸ்லோ பிரதி மேயர் கம்ஷாயினி என்னைப் பெறுத்தவரையில் எந்தவொரு தேசத்திற்குப் போனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை இருக்க வேண்டுமென்றுதான் நான் நினைப்பது. அந்தவகையிலேயே நான் அனைத்து விடயங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆனால் நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லையென நோர்வேயின் ஒஸ்லோ மாநாகரின் பிரதி மேயர் கம்ஷாயினி குணரட்ணம் தெரிவித்தார். இதேவேளை, நாங்கள் தமிழர்கள். எங்கு போனாலும் அமைப்புகள் , சங்கங்கள் உள்ளன அங்கும் பெண்களுக்கு சம பங்கு வழங்க வேண்டுமென்றே கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார். நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரின…
-
- 4 replies
- 912 views
-
-
யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகள், எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு செம்டெம்பருக்குள் நிறைவடையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் இணங்கப்போவதில்லை என்று ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் தான் திட்டவட்டமாகக் கூறியதாகவும் அவரும் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி கூறினார். இலங்கையின் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களுடனான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை (20) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, …
-
- 4 replies
- 487 views
-
-
த நேசன் பத்திரிகை அதனது கடந்த ஞயிற்றுக் கிழமை பாதுகாப்பு விவகாரங்கள் பற்றிய பத்தியில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் எவ்வாறு திட்டமிட்டு சிறீலங்காவால் படுகொலை செய்யப்பட்டார் என்பதை விபரங்களுடன் விளக்குகிறது. சுப தமிழ்செல்வன் மீது முன்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவை என்பனபற்றியும் பட்டியல் இட்டிருக்கிறது. 2002 சமாதான உடன்படிக்கை குழப்புவதற்காக தமிழ்ச்செல்வனை கொலைசெய்வதற்கு ஆழ ஊடுருவும் அணியினர் 2 முறை முயற்சித்து தோல்விகண்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் கருணா குழு என்ற அரச துணை ஆயுதக் குழு உருவாக்கப்பட்ட பின்னர் சுப தமிழ்ச்செல்வன் ஜெனிவாவிற்கு பேச்சுவார்த்தைகளிற்கு செல்லும் சமயம் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கருணா குழுவின்…
-
- 4 replies
- 3.4k views
-
-
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால், பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 56 தூதுவர்கள், இராஜதந்திரிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வடக்கில் போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கவே இவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டனர். யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் வடமாகாண ஆளுனர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மீள்குடியேற்றம், மிதிவெடி, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வீதி அபிவிருத்தி, நீர் விநியோகம், தொடருந்துசேவை, விவசாயத்து…
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை சிறிலங்கா அரசாங்கம் கைது செய்யும் என்பதனை தான் நம்பவில்லை என்று சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தொலைக்காட்சி ஒன்றின் வர்த்தக நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.2k views
-
-
இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் தி.மு.க.வும் விலகியுள்ளது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். லோக்சபா பி.ஜே.பி. தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான, 15 எம்.பி.,க்கள் அடங்கிய குழு, நாளை ஐந்து நாள் பயணமாக இலங்கை செல்ல இருந்தது. இந்நிலையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை செல்ல உள்ள எம்.பி.க்கள் குழுவில் தி.மு.க.வும் இடம் பெறாது என்று கூறியுள்ளார். முன்னதாக அ.தி.மு.க. எம்.பி.கள் இலங்கை செல்லமாட்டார்கள் என முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://news.vikatan.com/?nid=7536
-
- 4 replies
- 579 views
-
-
அமெரிக்க டொலர் ஒன்றின் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 189.87 ரூபாயாக இன்று பதிவாகியுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/இலஙக-ரபயன-பறமத-வழசச/175-247301
-
- 4 replies
- 1k views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அவரது கும்பலுக்கு விரைவில் நிரந்தர ஓய்வு கிடைக்கும் என மட்டக்களப்பு கல்குடா தொகுதியின் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் திலீப்குமார் தெரிவித்துள்ளார். அநுர அரசுக்கு ஆரம்பத்தில் வாக்களித்த மக்கள் இன்று பிழையானவர்களைத் தெரிவு செய்துவிட்டோம் என வருத்தப்படுவதாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இட்ட முகநூல் பதிவிலேயே திலீப்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த முகநூல் பதிவில் மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இனிக் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியில்லா வாகன இறக்குமதி அனுமதி பத்திரம் கிடையாது. நிரந்தர அரசியல் ஓய்வு சிங்கள பௌத்த பேரினவாத அரசியலை அநுர அரசு செய்வதில்லை என்பத…
-
- 4 replies
- 396 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> -நண்றி தமிழ்நாதம்-
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-