பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
அவசரம்: தமிழ் ஊடகங்கள் எப்போ திருந்தப் போகுதுகள்? "A pro-rebel website reported that two Tiger boats successfully went ashore and militants carried out rocket-propelled grenade attacks against the harbour while the suicide bombing was underway." http://news.yahoo.com/s/afp/20061019/ts_af...ck_061019073303 சிறீலங்கா படைத்துறை பேச்சாளர்கள், சிறீலங்கா காவல்துறையினர், சிறீலங்கா அமைச்சர்கள் தான் இதுவரை 5 படகில் வந்தார்கள், 15 பேர் இருந்தார்கள், அவற்றில் 2...3 படகுகள் மோதி வெடித்த தற்கொலைப்படகுகள் என்று சம்பவம் நடந்த சொற்ப மணத்தியாலங்களிற்குள்ளே கதை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். பிபிசி போன்ற ஊடகங்களில் வந்த சில பொதுமக்களின் சாட்சியங்களான படகுகள் வெடித்து சிதறுவதை…
-
- 1 reply
- 2.1k views
-
-
இழப்பு கணவன் / மனைவி இழந்த பின் வாழ்கை எப்படி இருக்கும் ? https://www.youtube.com/watch?v=_BgJoaS04qU
-
- 5 replies
- 2.1k views
-
-
துருக்கியில் 20 வயதான பல்கலைக் கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகவிருந்து தப்பித்து, பின்னர் கொலையான சம்பவம் நாட்டில் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தில் பங்கேற்ற துருக்கியப் பெண்கொல்லப்பட்ட பெண்ணின் பெயரைக் கொண்ட ட்விட்டர் ஹேஷ்டாக்குகள் முப்பத்தி மூன்று லட்சம் முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. பலர், இந்த சமயத்தில் தாம் சந்தித்த பாலியல் வல்லுறவு போன்ற பாலியல் துஷ்பிரயோகங்களை சமூக வலைதளங்களின் வழியாக பகிர்ந்து கொண்டு வருகின்றனர். பாலியல் சீண்டல்கள், பாலியல் தாக்குதல்கள் போன்றவற்றுக்கு எதிராக துருக்கியப் பெண்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ள நிலையில், பாலியல் வல்லுறவைச் செ…
-
- 7 replies
- 2.1k views
-
-
இதனைப் பார்க்க.... உங்களுக்கு, என்ன தோன்றுகின்றது. படம்: அஸ்ஸாஞ், தமிழ்நாடு ரோக்.
-
- 16 replies
- 2.1k views
-
-
சிந்து சமவெளி குறியீடுகள் உள்ள புதிய கற்காலக் கற்கோடரியும் பாசிசமும் வீ. அரசு மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூரில் புதிய கற்கால கற்கோடரி கிடைத்துள்ளது. இவ்வூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் திரு. வி. சண்முகநாதன், தனது வீட்டுத் தோட்டத்தில் வாழைக் கன்றுகளை நடுவதற்காகக் குழி தோண்டியபோது, இக்கற்கோடரி கிடைத்துள்ளது. 125 கிராம் எடை, 6.5 செ.மீ. X 2.5 செ.மீ. 3.6 செ.மீ. X 4 செ.மீ அளவிலான இக்கற்கோடரி, இரும்பு பரவலாகப் புழக்கத்திற்கு வருவதற்கு முன் மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட கருவியாகும். இவ்வகையான கோடரிகள் தமிழகத்தில் பல இடங்களில் கிடைத்துள்ளன. பல்லாவரம் பகுதியில் மனிதர்கள் பயன்படுத்திய இவ்வகையான பல கற்கருவிகளைக் கண்டுபிடித்த ராபர் புரூஸ் ஃபூட் ‘சென்னை கோடரி’ என…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஓரினச்சேர்க்கை: மாபெரும் மாற்றம்! பாலியல் விருப்பத்தின் அடிப்படையில் மனிதர்களிடையே வேறுபாடுகள் காலம்காலமாக இருந்து வருகின்றன. இத்தகைய மாறுபட்ட விருப்பங்களை - பெண்ணை விரும்பும் பெண், ஆணை விரும்பும் ஆண், இருபால் உறவை விரும்புவோர், திருநங்கைகள் (lesbian, gay, bisexual, and transgender) என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றனர். இதனைப் பொதுவாக LGBT என்று அழைக்கின்றனர். இத்தகைய மாறுபட்ட பாலியல் விருப்பம் இயல்பானதுதான், காலம்காலமாக இருப்பதுதான் என்பது அறிவியல் ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், இன்னமும் ஒதுக்குதலும், மனித உரிமை மீறல்களும் தொடரவே செய்கின்றன. இந்த அநீதியை எதிர்த்து இந்திய அளவில் துணிச்சலாக குரல் கொடுத்த ஒரே அ…
-
- 2 replies
- 2.1k views
-
-
நண்பர்களே, நேசமா எனக்கு ஒண்ணு புரியல....... திருக்குறள் ஒரு நரம்பியல் நூல் என்று ஒரு வலைப்பதிவு செய்தேன்.... நாளைய உலகில் நரம்பியல் ஆய்வு அறிஞர்கள் திருக்குறளை ஏற்கவேண்டும் என்பது சாதாரண செய்தி அல்ல..... எவ்வளவு முக்கிய பதிவு அது...... யாரும் கண்டுகொள்ளவில்லை..... அக்கா டார்லிங் என்று ஒரு வலைப்பதிவை துவங்கி ஒரே நாளில் 1019 பார்வைகள் கிட்டியுள்ளது. என்ன செய்ய....... சற்று முன்னர் மேலும் 360 வார்த்தைகள் சேர, அக்கா வீறு நடை போடுகிறாள்.... நான் உருவாக்கிய கற்பனை கதாப்பாத்திரம் - அக்கா டார்லிங்.... அவளே என்னை பார்த்து நக்கலாகச்சிரிப்பது போல எனக்கு தோன்றுகிறது.... எனது கற்பனையே என்னை சிந்திக்க வைப்பது...... விசித்திரமான …
-
- 3 replies
- 2.1k views
-
-
சுயஇன்பம் பற்றிய கட்டுக்கதைகளும் துரத்தும் பயங்களும்! சுய இன்பம் என்பது எக்காலத்திலும் பேசுவதற்குத் தயங்கும் ஒரு விவகாரமாகவே இருந்து வருகிறது. மிகவும் நெருக்கமான காதல் உறவுகளில் கூட, இதைப் பற்றிப் பேசுவதற்குப் பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயமுள்ளது. பூட்டப்பட்ட அறைக்குள்ளோ அல்லது மிகவும் நெருக்கமான தோழமைகளுடன் கிசுகிசுக்கும் அளவுக்கோ, இது பற்றி விவாதிக்கும் சூழல் இன்றும் தொடர்கிறது. திருமணமாகாத ஆண்களுக்கோ, பெண்களுக்கோ, அது தனியொரு மனிதரின் பிரச்சினை மட்டுமே. திருமணமான ஜோடிகளுக்கு இடையே இந்த பிரச்சினை ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக அதிகம். வழக்கம்போல செக்ஸ் நடந்தாலும் கூட, கணவர் சுய இன்பத்தை நாடுகிறார் என்பது சம்பந்தப்பட்டவரின் மனைவிக்கு அமைதியின்மையைய…
-
- 0 replies
- 2.1k views
-
-
அப்பாபோல நானும் பெரியவனாகி... என்றுஅக்காவிடம் ஆரம்பித்தவன், அப்பாவைப் பார்த்ததும் வார்த்தைகளை ஒளித்துக்கொண்டான்... அருகழைத்துக் கேட்டார் அப்பா... நீயும் அப்பா போல, வாத்தியார் ஆவியா? .... புல்லட் பைக் ஓட்டுவியா? ..... வேஷ்டி சட்டை போட்டுப்பியா? .... சொல்லுடா என் செல்லமகனே... 'அம்மாவை அடிச்சு அழ வைக்கமாட்டேன் ' என்றபடி, அழுதபடி நகர்ந்துபோனான் மகன். kurinjimalargal.blogspot.com
-
- 1 reply
- 2k views
-
-
விளக்கு மட்டுமா சிவப்பு ? கேட்கிறார் முன்னாள் பாலியல் தொழிலாளி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னாள் பாலியல் தொழிலாளியான சப்ரீனா வைலிஸ் இன்னாள் பெண்ணுரிமைப் போராளி. நியூசிலாந்தில் பாலியல் தொழில் குற்றப்பட்டியலில் இருந்து நீக்கப்படவேண்டும் என்று போராடியவர் சப்ரீனா. படத்தின் காப்புரிமைSABRINNA VALISCE Image captionசப்ரீனா விளம்பரம் ஆனால் அவரது கோரிக்கை நிறை…
-
- 10 replies
- 2k views
-
-
பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, பதினைந்தாம் நூற்றாண்டு வரைக்குமான காலகட்டத்தில் இஸ்லாம் தென்-கிழக்கு ஆசியாவில் பரவியது. அந்த நேரத்தில் தென்-கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மூன்று வலிமையுள்ள அரசாங்கங்கள் ஆண்டு கொண்டிருந்தன. மலேசியாவில் ஸ்ரீவிஜயர்களும், இந்தோனேஷியாவில் மஜாபஹித்களும், தாய்லந்தை சயாமிய அரசர்களும் ஆண்டு கொண்டிருந்தார்கள். அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் பொதுவாக இந்து, பவுத்த மற்றும் பழங்குடி நம்பிக்கைகள் கொண்டவர்கள். காலிஃபா ஒத்மான் (656) காலத்தில் சீனாவுடன் வணிகம் செய்யச் சென்ற இஸ்லாமியர்கள் வழியிலிருந்த இந்தோனேஷியாவுடன் முதன் முதலாக தொடர்பு கொள்ள ஆரம்பித்தார்கள். அதற்கு பல வருடங்களுக்குப் பின்னர் ஸ்ரீவிஜய அரசர்களுடன் தொடர்பு கொண்ட முஸ்லிம் வணிகர்கள் சுமத்…
-
- 2 replies
- 2k views
-
-
மனிதரின் மூட நம்பிக்கைகள் பலவிதம். ஒவொன்றும் ஒரு விதம். படிப்பறிவு இல்லாவிடில் இந்த மூட நம்பிக்கையை வைத்து பயம் காட்டி பிழைக்கும் ஒரு கூட்டம் உலகெங்கும் உள்ளது. சென்னையில் முன்பு ஒரு மோசடிக் கும்பல் உலாவுவார்கள் . மண்டை ஓட்டினை வைத்து ஏதோ வித்தை செய்வார்கள். மக்கள் விடுப்பு பார்க்க கூடுவார்கள். தீடீரென அவர்களது ஆட்களில் ஒருவர் கிளம்புவார். அதோ சைத்தூண் கைலே துட்டு வைக்காம போறன், ரத்தம் கக்கி விழுவான் பாரு என்பார், வித்தை காட்டுபவர். அவரும் பெரு நடிப்பு நடித்து ரத்தம் கக்கி விழுவார். தீடிரென எழுந்து வந்து, 100 ரூபா நோட்டினை வைத்தவுடன், மந்திரக் கோலை தலையில் வைத்து ஏதோ மந்திரம் சொல்லி, இப்ப சைத்தான் சந்தோசம். உனக்கு ஒன்னும் இல்லை. போ என்றவுடனும் அவரும் சிரித்த வாறே …
-
- 5 replies
- 2k views
-
-
... பல புகைப்படங்கள் பார்த்து இரசிக்க முடிந்தாலும்/முடியாவிட்டாலும், சில புகைப்படங்களை ஏன் எடுக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது! அவ்வாறான சில ...
-
- 11 replies
- 1.9k views
-
-
நான் அண்மையில் பார்த்த பயனுள்ள பதிவு இதன் எதிர்விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை என்னால் கருத்துகளத்தில் சொல்லமுடியாதுள்ளது இதற்கு தொடர்ந்து வரும் கருத்துக்களே இது பயனுள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் ஆனால் இதில் சொல்லப்பட்டுள்ள விடையங்கள் ஆராயப்படவேண்டியவையே. **************************************************************************************************** காதலும் காமமும் கலவியும் ஒன்றும் இப்பொழுதுதான் புதிதாக தோன்றியதல்லவே. எமது பழந்தமிழ் இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும்கூட இவை இடம்பிடித்திடுக்கின்றனவே. எனது பெரியப்பா ஐம்பது அறுபது வருடங்களிற்கு முன்பே வேற்றுமத பெண்ணைக் காதலித்து மணந்துகொண்டார். நானும் செல்லம்மாவும்கூட காதலித்து கல்யாணம் செய்துகொண்டோம். …
-
- 5 replies
- 1.9k views
-
-
மாதவிடாய் மன அழுத்தம்: கணவர்களுக்கும் காதலர்களுக்கும் ஓர் எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ''திருமணமான புதிதில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சினிமாவுக்கு செல்வோம். ஆனால் அலுவலகத்தில் வேலை இருந்ததால் அன்று திரைப்படத்திற்கு போகமுடியாது என்று மனைவியிடம் சொன்னதும், அவருக்கு வந்த கோபத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன்.'' இதைச் சொலிவிட்ட…
-
- 2 replies
- 1.9k views
-
-
கத்னா ஷோபாசக்தி உரையாடல்: இலங்கையில் கிளிட்டோரிஸ் துண்டிப்பு எங்கோ சோமாலியாவிலும் சில ஆபிரிக்கப் பழங்குடிகளிடமும் மட்டுமே இருப்பதாகப் பொதுவாக அறியப்படும் ‘கிளிட்டோரிஸ் துண்டிப்பு’ இலங்கையிலும் முஸ்லீம் சமூகத்திடையே இரகசியமாக நீண்டகாலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பெண்ணுறுப்பில் பாலியல் உணர்ச்சி நரம்புகளின் குவியமான ‘கிளிட்டோரிஸ்’ எனும் பகுதியை குழந்தைகளுக்குத் துண்டித்துவிடும் அல்லது சிதைத்துவிடும் இச் சடங்கு ‘கத்னா’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இச் சடங்கில் கிளிட்டோரிஸை வெட்டித் துண்டிக்கும் அல்லது சிதைத்துவிடும் பெண்மணி ‘ஒஸ்தா மாமி’ என அழைக்கப்படுகிறார். இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்பு குறித்து ரேணுகா சேனநாயக்கா…
-
- 4 replies
- 1.9k views
-
-
வன்புணர்ச்சி, மரணதண்டனை, காயடிப்பு - அ. மார்க்ஸ் - இரண்டு நாள் முன்னால் கூட (ஜனவரி 3) டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்பாட்டம் நடந்தது. இரு வாரங்களுக்கு முன் (டிசம்பர் 16 இரவு) அந்த முகமும் பெயரும் தெரியாத பெண்ணின் மீது கொடும் வன்முறையை மேற்கொண்ட ஆறு பேர் மீதான விசாரணையை விரைந்து முடித்து உடனடியாகத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது கோரிக்கை. அரசும் வழக்கமில்லா வழக்கமாக விரைந்துதான் செயல்படுகிறது. சம்பவம் நடந்து இருபது நாட்களுக்குள் - அந்தப் பெண் உயிர் துறந்து ஐந்து நட்களுக்குள் - டெல்லி போலிஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விட்டது. பத்து அல்லது பதினைந்து அமர்வுகளுக்குள் விசாரணை முடிக்கப்பட்டு ஆறு குற்றவாளிகள…
-
- 8 replies
- 1.9k views
-
-
தோலின் நிறத்தை வைத்து வெள்ளை, கறுப்பு , மஞ்சள், பிரவுண் (கபிலம் ) இப்படி மனிதர்களை பிரிப்பதும், அது சார்பாக ஒருவரை மேலானவர்/நல்லவர் அல்லது கிழானவர் / கேட்டவர் என ஒருவரின் நடை, உடை, பழக்க வழக்கம் , தொழில் பற்றி தெரியாமலே எம்முள் சிறுவயதில் இருந்து விதைக்கப்பட்ட எண்ணக்கருக்கள் வீறுகொண்டெழுந்து மனிதரை பற்றி முன் முடிவுகள் எடுப்பதிலும் முடிகிறது. இங்கும் யாழ் களத்திலும் மக்களின் நிறம் / தோற்றத்தை வைத்து ஒவ்வொரு இன குழுமத்தையும் தரங்குறைந்த பெயர்களால் சர்வ சாதரணமாக அழைப்பதை பார்த்திருக்கிறேன். ஊரில் முன்னர் அழகு சாதன பொருளகள் கிடைக்காத தன்மை/ அல்லது வசதியீனம் காரணமாக பெண்கள் பூசு மஞ்சளை முகம் முழுக்க பூசி, அழகு பார்ப்பது வழக்கம் (20- 25 வருடம் முன்) . இப்போது அது போய் , fa…
-
- 0 replies
- 1.9k views
-
-
மனிதர்கள் முத்தமிடுவது ஏன்? எல்லோருமே தங்கள் முதல் முத்தத்தை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த முத்தம் சங்கடமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி, மிக மகிழ்ச்சிகரமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி. மனிதர்களைப் பொறுத்தவரை புதிய உறவுகளில் முத்தம் முக்கியப் பங்கை வகிக்கிறது.மேலைச் சமூகங்களில் வசிக்கும் மக்களைப் பொறுத்தவரை, உதட்டோடு உதட்டைச் சேர்த்து காதலுடன் முத்தமிடுதல் என்பது உலகளாவிய ஒரு பழக்கம் என்று கருதுகின்றனர். ஆனால், உலகில் பாதிக்கும் குறைவான சமூகங்களே அம்மாதிரி முத்தமிடுகின்றன. மிருகங்களைப் பொறுத்தவரை முத்தமிடுதல் என்பது மிக மிக அரிது. அப்படியானால், இந்தப் பழக்கத்திற்கு என்ன பின்னணி? முத்தமிடுதல் என்பது பயனுள்ளதாக இருக்குமென்றால் எல்லா மிருகங்களும் மனிதர்களு…
-
- 12 replies
- 1.9k views
-
-
``செக்ஸ் ஆரம்பித்த 2 நிமிடங்களில் இவர்களுக்கு விந்து வெளியேறிவிடுகிறது. ஆனால், அந்த 2 நிமிடங்களுக்குள் ஆண் உச்சக்கட்டம் அடைந்துவிடுவான். அப்படியென்றால், ஏன் ஆண்கள் இதுபற்றி கவலைப்பட வேண்டும் என்று சிலருக்குத் தோன்றலாம். அதற்கான பதில்...'' இது தகவல்களின் காலம். ஜஸ்ட் `கறிவேப்பிலை' என்று டைப் செய்து கூகுளில் தேடினால், கறிவேப்பிலை தொடர்பாக எக்கச்சக்க தகவல்கள் வந்து விழும். ஆனால், அவற்றில் எந்தத் தகவல் சரி, எது தவறு என்பதை எல்லோராலும் கண்டுபிடித்துவிட முடியாது. கண்டுபிடிக்கத் தெரிந்தவர்களோ கூகுளில் கறிவேப்பிலை பற்றித் தேடப் போவதில்லை. கறிவேப்பிலையைப் பற்றி எதுவும் அறியாமல் தேடுபவர்கள் அதுபற்றிய தவறான தகவல்களை நம்பிவிட்டால், கறிவேப்பிலையால் கிடைக்கிற நல்ல பல…
-
- 10 replies
- 1.9k views
- 2 followers
-
-
10 வகையான கனவுகளும்... அவற்றிற்கான அர்த்தங்களும்... ஒரு இரவில் 90 நிமிடங்கள் முதல் 2 மணி நேரங்கள் வரையில் அல்லது அதற்கும் மேலான நேரத்திற்கு மனிதர்கள் உறக்கத்தில் கனவு காணுகிறார்கள். சில நேரங்களில், இந்த கனவுகளின் அர்த்தம் கனவு காண்பவருக்கு நேரடியாக புரியும். நெடுநாளைய நண்பர் மீண்டும் தெரிதல், ஒரு கடற்கரையின் ரம்மியமான காட்சி அல்லது லாட்டரியில் ஜாக்பாட் அடித்தல் என கனவுகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால், கனவுகள் எப்பொழுதும் கதைகள் சொல்வதில்லை. வேறு வேறு வகையான கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளை கொண்டவர்களுக்கு ஒரே மாதிரியான கனவுகள் வரும் வேளைகளில், கனவுலக ஆராய்ச்சிக்கு புதிய வடிவம் கிடைக்கிறது. இந்த கட்டுரையில், சில வகையான பொதுவான கனவுகளும், அவற்றின் அர்த்தங்களும…
-
- 0 replies
- 1.9k views
-
-
அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர் ஜெஃப்ரி லாங், நோயாளிகளின் சுமார் 5000 மரண அனுபவங்களை ஆய்வு செய்துள்ளார். அவர் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார். ஜெஃப்ரி லாங் ஒரு புற்றுநோயியல் நிபுணரும், நியர்-டெத் எக்ஸ்பீரியன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் நிறுவனரும் ஆவார். ஜெஃப்ரி லாங் தனது பணியின் போது நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது என்று உறுதியாகக் கூறியுள்ளார். ஜெஃப்ரி லாங் கூறுகையில், மரணத்திற்குபின் ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து அலைந்து திரிந்தது , பின்னர் ஆன்மா வேறொரு உலகத்தில் நுழைந்து ஒரு சுரங்கப்பாதை வழியாக நடந்து…
-
- 18 replies
- 1.8k views
- 1 follower
-
-
மாற்றுப்பாலினத்தவர் தொடர்பான சமுகப்புரிதல் – பவானி தம்பிராசா LGBTQ என்றால் Lesbian, Gay, Bisexual ,Transgender & Queer. பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளை, சமூக பார்வையோடு அணுகி, அனைவருக்கும் இது குறித்த விழிப்புணர்வினை உ ருவாக்குவதே LGBTQ இன் நோக்கமாகும். Genders-க்கும் Sexuality-க்கும் உள்ள வேறுபாடு; பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படிக் கருதிக் கொள்கிறீர்கள் என்பதே. Sexuality என்பது யாரிடம் அல்லது எந்த பாலினத்தவரிடம் நீங்கள் பாலியல் நாட்டம் கொள்கிறீர்கள் அல்லது கவரப்படுகிறீர்கள், யாருடன் உங்கள் பாலியல் எண்ணங்கள் உள்ளது என்பது. Gender differs from sexuality, Gender orientation differs from Sexual orientation. Gender எ…
-
- 5 replies
- 1.8k views
-
-
பாலியல் கல்வி எனும் தேவையுள்ள ஆணி . . . . . . . . . . . ! உடலியல் March 6, 2019March 5, 2019 ஆசிரியர்குழு மாற்று பாலியல் கல்வி (Sex Education) என்ற வார்த்தையை பார்த்தவுடன் பலருக்கும் ‘உவாக்’ என்றும் ‘இது தேவை இல்லாத ஆணி’ என்றும் நினைக்கத் தோன்றும். ஆனால் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை இந்த ஆணியைப் பற்றிய விவாதங்களையும் உள்ளடக்கியது தான் என்று கருதுகின்றேன். பாலியல் கல்வி என்றாலே ‘பலான விஷயங்களை’ எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க என்றொரு பொதுபுத்தி நம் மனங்களில் பதியப்பட்டிருக்கிறது. அப்படி நினைக்கவேண்டியதில்லை. அது நம்முடைய அறியாமையே. நான் பள்ளி பருவத்தைத் தொட்டு மாணவர் சங்கத்தோடு பயணித்த போது தான் வெளிவாசிப்பின் (out of syllabus) தேவைகளை உணர்ந்த…
-
- 1 reply
- 1.8k views
- 1 follower
-
-
பாலியல் தொழிலுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம்: “இவங்களுக்கு காசு கொடுக்கத் தேவையில்லைதானே.” தலைநகரத்தின் வீதிகளில் பயணிக்கின்ற நாம் நிச்சயம் தெருவோரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க காத்துக்கொண்டிருப்பவர்களை நிச்சயம் கடந்திருப்போம். ஏன் இன்னும் சொல்லப்போனால் அவர்களது அதீத அலங்காரங்களையோ உடைகளையோ நகப்பூச்சு நிறங்களையோ பார்த்துக் கிண்டலடித்திருப்போம். குறைந்தபட்சம் நம்முடன் வருபவர்கள் அல்லது நண்பர்களிடம் அங்கே பாரு ஒரு …… நிற்கிறது என்று கூறியிருப்போம். சில வேளைகளில் சிலர் இப்படி எம்மிடம் சொல்லுவதையாவது கேட்டுமிருப்போம். தொழில்களை சாதியாக்கி அதனை சண்டைகள் வரை கொண்டு சென்ற நமக்கு அன்றிலிருந்தே பாலியல் தேவைக்கென குறிப்பிட்ட பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்தார்க…
-
- 12 replies
- 1.8k views
-