Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. பிரிகேடியர் தீபன் மற்றும் லெப். கேணல் கில்மன் ஆகிய மாவீரர்களின் தந்தையார் சாவடைந்தார்! AdminDecember 9, 2022 தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர்முனை கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் லெப். கேணல் கில்மன் அவர்களின் தந்தை கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் நேற்று (08.12.2022) காலமானார். யாழ்.தென்மராட்சி, கொடிகாமம் வரணிப் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட அவர் சுகயீனம் காரணமாக நேற்றுக் காலமானார். http://www.errimalai.com/?p=79992

  2. பிரிகேடியர் பால்ராஜ் - முதலாம் ஆண்டு நினைவில்

    • 1 reply
    • 749 views
  3. எமது களஉறவாகிய N.SENTHIL இன் தந்தையாரான திரு. நாகரத்தினம் (அகவை 61) அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று மாலை சொந்த ஊரான திண்டுக்கலில் நடைபெறுகின்றது என்பதை யாழ்கள உறவுகளிற்கு கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த கவலைகளையும் தெரிவித்துகொள்கின்றோம்.

    • 37 replies
    • 6.7k views
  4. புகழ்பூத்த பொறியியல் பேராசிரியர் எஸ்.மஹாலிங்கம் யாழ்ப்பாணத்தில் காலமானார்:- "தனது திறமையால் தனக்கு கிடைக்க இருந்த பெரும் அன்பளிப்பை ஜெற் இன்ஜினாக வாங்கி தனது பல்கலைக்கழகத்திற்கு வழங்கிய மாமேதை" குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- முன்னணி பொறியியலாளரும், தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியருமான மஹாலிங்கம் நேற்று காலை யாழ்ப்பாண வைத்தியசாலையில் காலமானார். எஸ்.மஹாலிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறிமுறைமை பொறியியற் பீடத்தின் பேராசிரியராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மஹாலிங்கம் லண்டன் பல்கலைக் கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். 1970களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக அவர் கடமையாற்றத் தொடங்கினார். யாழ்ப்பாணம் அ…

  5. புகழ்பெற்ற... இலக்கியத் திறனாய்வாளரும், ஊடகத்துறையில் பன்முக ஆளுமை மிக்கவருமான... கே.எஸ்.சிவகுமாரன் காலமானார்! புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் பன்முக ஆளுமை மிக்கவருமான கே.எஸ்.சிவகுமாரன் நேற்று(வியாழக்கிழமை) இரவு காலமானார். இலங்கையின் மூத்த அறிவிப்பாளர், இலக்கியவாதி, விமர்சகர், எழுத்தாளர், திறனாய்வாளராக தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சியும் தெளிவும் கே.எஸ். சிவகுமாரன் பெற்றிருந்தார். https://athavannews.com/2022/1299374

  6. தாயகத்தின் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.10 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் அவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை இன்று காலை இவர் இறந்து விட்டதாக வதந்திகள் வெளிவந்தவண்ணமிருந்தன. ஆனாலும் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இவர் இறந்ததாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தி…

    • 7 replies
    • 1.1k views
  7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 34 வது நினைவு தினம் இன்று! AdminDecember 24, 2021 எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் ஆராதிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், மெத்தப் படித்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் அல்ல; உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்! மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் திகதி மரணமடைந்தார். அவர் மரணமடைந்து இன்றுடன் 31 வருடங்கள் ஆகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் எம்.ஜிஆர். பக்தர்கள், அதிமுகவினர் எம்.ஜி.ஆர்…

  8. வன்னியின் மனிதாபிமான நிலவரங்களை நல்லதொரு கண்ணோட்டத்தில வெளியுலகிற்கு கொண்டுவ வர உதவிய மயில்வாகனம் 24.01.2009 காலமாகிவிட்டார். புலம்பெயர்ந்து பின்னர் தாயகத்திற்கு சேவை செய்ய திரும்பி சென்றிருந்தார். அந்தவகையில் போராட்டம் இன்று மற்றும் எதிர்வரும் காலங்களில் எதிர்கொள்ள இருக்கும் பாரிய சவால்களை பொறுத்தவரை புலம்பெயர்ந்தவர்களிற்கு ஒரு சிறந்த வழிகாட்டி. Mr. K. Mylwaganam,who had been contributing many articles to Sangam.org during the last few years, with the very latest on August 28, 2008, passed away in his sleep in Puthukudiyirruppu hospital on 24-01-2009 all alone. He leaves behind his wife, sons and daughters far away from home. Our sympathies to them. Maybe,…

    • 5 replies
    • 1.1k views
  9. யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவானந்தன் அவர்கள் 22-06-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

    • 3 replies
    • 731 views
  10. புலிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் சுரேந்திரன் சாவடைந்தார்! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் சுகயீனம் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) தமிழகத்தில் சாவடைந்தார். நடராஜா சுரேந்திரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண வட்டவைக்கு உட்பட்ட பகுதிகளில் ”புலிகளின் குரல்” என்று அழைக்கப்பட்டு பின்னர் ”உறுமல்” என்று பெயர்மாற்றம் பெற்று யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திகளில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கரும்பலகைகளில், அன்றைய யுத்தகாலச் செய்திகளை எழுதும் பொறுப்பை ஏற்று கடமையாற்றியவர். இதேவேளை இவரது ஆங்கில புலமையையும், எழுத்தாற்…

    • 6 replies
    • 1.4k views
  11. புலிகளின் குரல் வானொலியின் அறிவிப்பாளர் மரணம் July 15, 2025 11:36 am தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ‘புலிகளின் குரல்’ வானொலியின் பிரபல அறிவிப்பாளராகச் செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகியபோது “புலிகளின்குரல் – செய்திகள் வாசிப்பவர் சத்தியா” என்று செய்தி வாசித்தவர் அவர், புலிகளின் குரல் வானொலியில் செய்தி ஆசிரியராகவும், செய்தி வாசிப்பாளராகவும் 2003 ஆம் ஆண்டு வரையில் அவர் செயற்பட்டிருந்தார். அவருடைய செய்தி வாசிப்புப் பாணியை வைத்து செய்தியின் கனதி தொடர்பில் மக்கள் உணரக்கூடிய அளவுக்கு அவருடைய அறிவிப்பு தனித்துவம் பெற்றிருந்தது. நிதர்சனம் நிறுவனத்தில் மாதாந்தம் வெளியாகிய ஒள…

  12. புல்லாங்குழல் மேதையும் மருத்துவருமாகிய டாக்டர் தியாகராஜா கெங்காதரன் காலமானார் . தியாகராஜா சுகிர்தம் தம்பதியரின் மூத்தமகனாக 1929 ஆம் ஆண்டில் பிறந்த கெங்காதரன் கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவர் ஆவார். பள்ளிப் படிப்பில் தேறி மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவாகி 1953இல் மருத்துவராக அரச சேவையில் இணைந்தார். பத்தாண்டுகள் அரச சேவையில் பணியாற்றி பின்னர் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். தொடர்ந்து மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை, மானிப்பாய் கீறீன் ஞாபகார்த்த வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளில் யாழ். மக்களுக்காகத் தனது சேவையை வழங்கினார். வண்ணார்பண்ணையில் தனது வைத்திய நிலையம் ஒன்றை நிறுவியும் சேவை நல்கினார். . 1995 இ…

    • 21 replies
    • 1.7k views
  13. துயர் பகிர்வோம் ———————— திருமதி பாக்கியம் பூபாலசிங்கம் அவர்கள் காலமானார். யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை நிறுவனர் அமரர் ஆர்.ஆர்.பூபாலசிங்கம் அவர்களின் மனைவி திருமதி பாக்கியம் பூபாலசிங்கம் அவர்கள் 26.05.2023 வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார் என்பதை துயரத்துடன் அறியத்தருகிறோம். இவர், யாழ்ப்பாணம்,கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கிவரும் பூபாலசிங்கம் புத்தகசாலை நிலையங்களை இயக்கிவரும் ஶ்ரீதரசிங்,ராஜன்,காலமார்க்ஸ் ஆகியோரின் அன்புத் தாயார் ஆவார். https://www.facebook.com/poobalasingham202

  14. மட்டக்களப்பு பெரியபுல்லுமலை பகுதியில் விசேட அதிரடிப்படையினருடனா சண்டையில் வீரச்சாவடைந்த 11 போராளிகளுக்கும் என் வீரவணக்கம் ஈழவன்

  15. பேபி சுப்பிரமணியத்தைப் பெற்றெடுத்த வீரத்தாயின் மறைவுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கின்றேன்: வைகோ பேபி சுப்பிரமணியம் தாயார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் : ’’தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய முழு நம்பிக்கைக்கும் உரியவரான பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன் அவர்களின் அன்புத்தாயார் செல்வநாயகி நடராஜா, கடந்த 19 ஆம் தேதியன்று இரவில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து தாங்க முடியாத வேதனை அடைந்தேன். ஆருயிர்ச் சகோதரர் பேபி சுப்பிரமணியத்தைத் தமிழகத்தில் உள்ள ஈழத்து உணர்வாளர்கள் அனைவருமே நன்கு அறிவார்கள். கசங்கிய அழுக்குச் சட்டையும், ஒரு நான்கு முழ வேட்டிய…

    • 9 replies
    • 1.9k views
  16. இலங்கை இரசாயனவியல் பட்டையக் கல்வியகத்தின் முதன்மையாளராகவும்.. கொழும்பு.. யாழ்.. றுகுணு.. திறந்த பல்கலைக்கழகம்.. பேராதனை.. சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய இரசாயனவியல் பேராசிரியர்.. Prof. J.N.O Fernando புற்றுநோய் காரணமாக அண்மையில்.. இயற்கை எய்தியுள்ளார். இவர் பப்புனிகினியாவிலும் கல்வி கற்பித்துள்ளார். இவர் கொழும்பு பல்கலைக்கழகம்.. மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி பழைய மாணவராவார். குறுகிய காலம்.. இவரின் ஆசிரிய சேவையில் கல்வி பெற்றவன் என்ற வகையில்.. கண்ணீரஞ்சலிகள். மிகவும் அமைதியான குணம் கொண்ட நல்லதொரு ஆசான். (RIP)

  17. பேராசான் அமரர் திரு க.சிவராமலிங்கம் அவர்களுக்கு கனடாவில் நினைவஞ்சலி விபரங்களுக்கு http://jaffnahindu.org/php/forum/viewtopic.php?t=108

  18. 01 FEB, 2025 | 05:02 PM பேராசிரியர் அம்பலம் புஸ்பநாதன் 1964 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை அல்வாய் நகரில் உள்ள வதிரிக் கிராமத்தில் பிறந்தார். யா.தேவரையாளி இந்துக்கல்லூரியில் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை தனது பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்தார். 1989இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக இளங்கலைப் பட்டத்தையும், 1996 இல் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் படிப்பாக முகாமைத்துவத்தில் டிப்ளோமாவையும், 2008இல் சீனாவின் சியாமென் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். 2006 இல் சீனாவின் சியாமென் பல்கலைக்கழகத்தில் சிறந்த சர்வதேச மாணவ…

  19. பேராசிரியர் கா.சிவத்தம்பி: புதிய வார்த்தை அ.முத்துலிங்கம் எம். ஏ. நுஃமானிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இன்று வந்தது. பேராசிரியர் கா. சிவத்தம்பி காலமானார். கடந்த 25 வருடங்களாக நான் அவரைக் காணவில்லை. அவருடன் தொலைபேசியில் உரையாடி 15 வருடங்கள் ஓடிவிட்டன. கடைசிக் கடிதம் எழுதி 10 வருடம் இருக்கும். ஒரு காலத்தில் எவ்வளவு அணுக்கமாக அவருடன் இருந்தேன் என்பதை நினைத்தபோது மனம் கனத்தது. காலை ஆறு மணி இருக்கும். ஒடுக்கமான மாடிப்படிகளில் ஏறி ஓர் அறையின் கதவைத் தள்ளுகிறான் இளைஞன். அவனுக்கு 19, 20 வயதிருக்கும். வழக்கம்போல கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. திறந்து உள்ளே சென்றால் அங்கே இரண்டு கட்டில்களில் இரண்டு பேர் தூங்குகிறார்கள். இளைஞன் அங்கேயிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்து கொள்க…

  20. [Wednesday, 2011-07-06 21:51:16] பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இன்று இரவு 8.20 அளவில் காலமானார் என்பதனை மனத்துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.சுகவீனமுற்றிருந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி இன்று இரவு 8.20 அளவில் காலமானார். ஓய்வு பெற்ற பேராசிரியரான அவர், தமிழ் மொழி தொடர்பில் பல்வேறு சேவைகளை ஆற்றிய பெருமைக்குரியவராவார்.

  21. தலைசிறந்த தமிழ் அறிஞரும், இலக்கிய விமர்சகரும், திறனாய்வாளருமான பேராசிரியர் கார்திகேசு விவத்தம்பி அவர்களின் மறைவு தமிழர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும், முழு நாட்டு மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் வெளியி்ட்டுள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தழிழ் அறிஞரும், கடல் கடந்த நாடுகளிலும் கூட புகழ் பூத்தவருமான மறைந்த பேராசிரியர் சிவத்தம்பியை நான் நன்கறிவேன். அவரது எளிமையான, பணிவான தோற்றம் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இலக்கிய ஆய்வரங்குகளில் அவர் கலந்து கொண்ட பல சந்தர்ப்பங்களில் குறுகிய நேரமே …

  22. -எஸ்.நிதர்ஷன் ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரனின் 70ஆவது பிறந்த தினம், இன்று நினைவுகூரப்பட்டது. சிவகுமரன் நினைவுதின ஏற்பாட்டுக் குமுவினரின் ஏற்பாட்டில், இன்று காலை 8.30 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. ஏற்பாட்டு குழுவில் உறுப்பினர் செந்தூரன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் சிவகுமாரனின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பன-சவகமரனன-ஜனன-தனம/71-254843

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.