Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. வரலாறாகிவிட்ட ஆப்ரகாம் லிங்கன் February 12, 2016 - பி.தயாளன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்றை வீம்ஸ் (Weems) என்பவர் எழுதியிருப்பதாகக் கேள்விப்பட்டான் அச்சிறுவன். அந்த வரலாற்று நூலைப் படிப்பதற்காகத் தேடி அலைந்தபோது, அது ‘கிராஃபோர்டு’ என்கிற விவசாயிடம் இருப்பதாக அறிந்தான். பன்னிரெண்டு மைல் தூரம் நடந்துபோய், ‘கிராஃபோர்டைச்’ சந்தித்தான். அவரிடம்? “வீம்ஸ் எழுதின ‘ஜார்ஜ் வாஷிங்டன்’ வாழ்க்கை வரலாற்று நூலைக் கொடுங்கள்; படித்துவிட்டுத் தருகிறேன்” என்று மன்றாடிக் கேட்டு வாங்கி வந்தான். வீட்டிற்கு வந்து அடுப்பு வெளிச்சத்தில் ஆர்வத்தோடு அந்நூலைப் படித்து முடித்தான். பின்னர் சுவரின் இடுக்கில் நூலைச் சொருகி வைத்துவிட்டுத் தூ…

  2. பிரபல மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்! சிரேஷ்ட ஊடகவியலாளரும்,ஞாயிறு தினக்குரல், தினக்குரல் இணையம் ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியருமான இராஜநாயகம் பாரதிஉடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். கடந்த சில வாரங்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று யாழில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினக்குரல்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றய அன்னார் அரசியல் ஆய்வு மற்றும் கலை செயற்பாடுகளில் மிகுந்த ஆளுமை உள்ளவராக காணப்பட்டிருந்தார். மேலும் அண்மையில் வீரகேசரியின் சிரேஷ்ட ஊடகவியலாளராக யாழ் காரியாலயத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் கடமை ஆற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அன்னாரது…

  3. மூத்த பத்திரிகையாளர் கானமயில்நாதன் காலமானார் மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிக்கை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்று திங்கட்கிழமை தனது 79 ஆவது வயதில் காலமானார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ம.வ. கானமயில்நாதன் 1942 ஆம் ஆண்டு யூலை மாதம் 25 ஆம் திகதி பிறந்தார். உதயன் பத்திரிகை 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட முதல் தனது வாழ்வின் இறுதிக்காலம் வரையிலான 36 வருடங்கள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். நெருக்கடியான கால கட்டத்தில் தாயகத்தில் இருந்து ஊடகப்பணியாற்றிய மிக சொற்ப அளவிலான மூத்த ஊடகவியலாளர்களுக்குள் கானமயில்நாதனும் ஒருவர். பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி எல்லை…

  4. தெய்வ மகனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! ஆண்டொன்று ஆனதையா அறிவுடைத் தந்தாய் அவனியைப் பிரிந்துநீவீர் ஆண்டவன் பாதம் வேண்டித்தான் சென்றீரே விலையில் மாண்பே விடிவெமக்குத் தூரமில்லை விதியை நொந்தோம் தாண்டிநாமும் செல்கின்றோம் தடைகள் நீக்கி சார்புநெறி வகுத்திங்கு இயங்கு காலை தூண்டிநிற்கும் நல்லறிவினைத் துணையாய்க்; கொண்டு தூயதிரு வடிபோற்றிப் புனைந்தேன் பாடல். கலைமகளாம் எம்தெய்வம் கல்விக்கரசி யென்றும் களிப்புடனே வீணையிற் கவிமழை பொழிந்திட அலைமகளாள் நிலம்நோக்கி அகம்குளிர்ந்து நீரடித்து ஆர்ப்பரிப்பிற் றிளைத்து அணைத்து மகிழ்ந்திட மலைமகளாள் மங்கலக் குங்குமமும் மனையும் மாண்புடைத் திடமும் மேன்மையும் அளித்திட விலையிலா வீரத்தின் விளைநில…

  5. எழுத்தாளர், வானொலி, நாடக, திரைப்பட நடிகர், ஆய்வாளர் என பல்துறையிலும் தன்னை ஈடுபடுத்திய கலைஞர் ‘மாருதி’ சிசு நாகேந்திரன் அவர்கள் 10.02.2020இல் காலமானார்

  6. மந்துவிலில் 106 வயது வரை வாழ்ந்த மூதாட்டி மரணம்! தென்மராட்சி – மந்துவில் பகுதியில் 106 வயது வரை ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்ந்த மூதாட்டி ஒருவர் நேற்று (09) இரவு மரணமடைந்துள்ளார். மந்துவில் கிழக்கு கொடிகாமப் பகுதியில் வசித்து வந்த சின்னத்தம்பி வள்ளி என்ற குறித்த மூதாட்டி 80 வயதுவரை கூலி வேலை செய்து வந்ததாகவும் தெரியவருகிறது. மூதாட்டியின் கணவர் 1998ம் ஆண்டு மரணமடைந்துள்ளார். இவருக்கு ஒரு மகளும் இரு பேரப்பிள்ளைகளும் மூன்று பூட்டப்பிள்ளைகளும் இருக்கின்றனர். https://newuthayan.com/மந்துவிலில்-106-வயது-வரை-வாழ/

  7. பிரிகேடியர் பால்ராஜ் - முதலாம் ஆண்டு நினைவில்

    • 1 reply
    • 757 views
  8. கொழும்பு கொட்டாஞ்சேனை அருள் கல்வி வட்டத்தின் ஊடாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் இதயத்தை வென்ற ஆசானும் அரசின் உயர் அதிகாரியுமான கல்விமான் வே.சிவஞானஜோதி காலமானார். இவரது மரணம் நாட்டிற்கு மட்டுமல்ல அவரிடம கற்ற அனைத்து மாணவர்களுக்கும் பேரிழப்பாகும். கணக்கியல் ஆசிரியரான இவரிடம் கற்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இன்று உயர் தொழிலில் இருந்து வருவது குறிப்பிடதக்கது யாழ்.சண்டிலிப்பாயை பிறப்பிடமாக கொண்ட வே.சிவஞானசோதி ஐயா பல அமைச்சுக்களின் செயலாளராக திறன்பட பணியாற்றி இருந்தார். குறிப்பாக இந்து கலாச்சார அமைச்சு, பாரம்பரிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, வடக்கு மாகாண ஜனாதிபதி செயலணி, நல்லிணக்க அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார். …

    • 0 replies
    • 751 views
  9. எஸ். சுகிர்தராஜன் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் வீரகேச வார வெளியீடுகள், மெட்ரோ நியூஸ் ஆகியவற்றின் பிராந்திய பத்திகையாளரான எஸ். சுகிர்தராஜன் (எஸ். எஸ். ஆர்.) சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. திருகோணமலையில் நடைபெற்ற பல செய்திகளை ஆதாரங்களுடன் வெளியிட்ட இவரை இனந்தெரியாத சிலர் சுட்டுக் கொலை செய்தனர். நான்கு வருடங்கள் கழிந்தும் கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. மட்டக்களப்பு குருமன்வெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட சுகிர்தராஜன் சிறிது காலம் அளவையியல் ஆசியராகக் கடமையாற்றினார். இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் கலைப்பூ கதிர் கழகத்தை உருவாக்கி காலாண்டு இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டு இலங்க…

  10. யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவானந்தன் அவர்கள் 22-06-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

    • 3 replies
    • 738 views
  11. 29 DEC, 2024 | 11:11 AM ஈழத்தின் மூத்த எழுத்தாளர், படைப்பாளி நா. யோகேந்திரநாதன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை காலமானார். கனடாவில் வசித்துவந்த இவர், யாழ்ப்பாணம் கரம்பொன் தெற்குப் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். யோகேந்திரநாதன் எழுதிய “34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு” நாவல் அண்மையில் வெளியாகி மிகவும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202436

  12. அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் புதிய புகைப்படங்கள். வல்வை ஒன்றியம் வல்வெட்டித்துறையில் இருந்து இன்று அனுப்பியுள்ள புதிய புகைப்படங்கள். மனோகரன் வேலுப்பிள்ளை டென்மார்க். தொலைபேசி 0045 75325654 எனது தந்தை அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவிற்கு இரங்கல் தெரிவித்தவர்கள், நேரில் கலந்து கொண்டவர்கள், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோர் உட்பட அனைவருக்கும் எமது குடும்பத்தினரின் சார்பில் நன்றிகளை தெரிவிக்கிறேன். இவ்வண்ணம் மனோகரன் வேலுப்பிள்ளை டென்மார்க். தொலைபேசி 0045 75325654 அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக் கிரியைகள் நேற்று வல்வை ஊறணி மயானத்தில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது. சுமார் 4000 ற்கும் மேற்பட்ட மக்க…

    • 0 replies
    • 731 views
  13. எழுத்தாளர் கோவை ஞானி காலமானார் கா.சு.வேலாயுதன் மார்க்சிய அறிஞரும் எழுத்தாளருமான கோவை ஞானி இன்று காலமானார். அவருக்கு வயது 86. கோவை, துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு, விஆர்வி நகரில் வசித்துவந்த கோவை ஞானிக்கு இன்று மதியம் 12.45 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அச்சமயம் அவர் மகன் பாரிவள்ளல் அருகில் இருந்துள்ளார். ‘மார்க்சிய அழகியல்’, ‘கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை?' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை கோவை ஞானி எழுதியுள்ளார். ‘நிகழ்’, ‘தமிழ்நேயம்’ உள்ளிட்ட சிற்றிதழ்களையும் நடத்தினார். கோவை ஞானியின் இயற்பெயர் கி.பழனிசாமி ஆகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றவர். கோவைய…

  14. யாழ்ப்பாணம், ஒக்.17 யாழ்ப்பாணம், அரியாலை, நெடுங்குளம் பகுதியில் ஏ9 பாதையில் நேற்றுக்காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத் தில் "உதயன்' வெளிவாரி விநியோகப் பிரிவைச் சேர்ந்த பணியாளர் மரணமானார். யாழ்ப்பாணம், வெள்ளாந்தெருவைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஜெயபாலன் (வயது 32) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே மரணமானவரா வார். "உதயன்' பத்திரிகையை ஒப்பந்த அடிப்படையில் தென்மராட்சிப் பகுதிக்கு விநியோகம் செய்துவந்த அவர் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றிருந் தார். விநியோகப் பணியை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போதே அவர் விபத்தில் சிக்கினார். அரியாலை, நெடுங்குளம் பகுதியில் ஜெயபாரதி வாசிகசாலைக்கு முன்பாக அவர் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த பஸ்…

  15. இலங்கை இரசாயனவியல் பட்டையக் கல்வியகத்தின் முதன்மையாளராகவும்.. கொழும்பு.. யாழ்.. றுகுணு.. திறந்த பல்கலைக்கழகம்.. பேராதனை.. சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய இரசாயனவியல் பேராசிரியர்.. Prof. J.N.O Fernando புற்றுநோய் காரணமாக அண்மையில்.. இயற்கை எய்தியுள்ளார். இவர் பப்புனிகினியாவிலும் கல்வி கற்பித்துள்ளார். இவர் கொழும்பு பல்கலைக்கழகம்.. மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி பழைய மாணவராவார். குறுகிய காலம்.. இவரின் ஆசிரிய சேவையில் கல்வி பெற்றவன் என்ற வகையில்.. கண்ணீரஞ்சலிகள். மிகவும் அமைதியான குணம் கொண்ட நல்லதொரு ஆசான். (RIP)

  16. ஈழப் பேராசிரியர் தமிழ் மொழியின் தூதர் தனிநாயகம் அடிகளாரின் பிறந்த தினம் இன்று: சேவியர் தனிநாயகம் அடிகள் எனப்படும் தமிழ் மொழியின் தலைமகனின் பிறந்தநாள் இன்று. இலங்கையில் உள்ள இலங்கையில் உள்ள காம்பொன் ஊரில் ஹென்றி ஸ்ரனிஸ்லால், சிசில் இராசம்மா வஸ்தியா பிள்ளை தம்பதிக்கு முதல் பிள்ளையாக நூற்றியொரு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார். கல்லூரிக்கல்வியை ஆங்கில வழியில் படித்து முடித்த அவர். இவரின் இயற்பெயர் ஸ்டானிஸ்லஸ் சேவியர் என்றாலும் பின்னர் தமிழ் மீது கொண்ட பற்றால் சேவியர் தனிநாயகம் என்று மாற்றிக்கொண்டார். இலங்கையில் இருந்த திருச்சபை அவரை இத்தாலி போய் படிக்க அனுமதிக்காமையால் மலங்காரச் திருச்சபையில் இணைந்து தி…

  17. மதுரை சிந்தாமணி இழப்பு! மதுரை: மதுரை மக்களின் ஒரு முக்கிய அடையாளம் சினிமா ரசனை. சினிமாவை ரசிக்காத, ரசிக்க முடியாத மக்களை மதுரையில் பார்ப்பது அரிது. அப்படிப்பட்ட மதுரையில் சினிமா தியேட்டர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும்.? மதுரையில் உள்ள ஒவ்வொரு தியேட்டருக்கும் ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கும். ஒவ்வொரு தியேட்டர் குறித்தும் பக்கம் பக்கமாக பேசிச் சிலாகிக்கக் கூடிய அளவுக்கு கதைகள் இருக்கும். அப்படிப்பட்ட தியேட்டர்களில் ஒன்றுதான் சிந்தாமணி. 'அம்சவல்லி பவனி'ல் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, சிந்தாமணிக்குப் போய் செகண்ட் ஷோ பார்க்காத மதுரைக்காரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட சிந்தாமணி தியேட்டர் தற்போது உடைபட்டுக் கொண்டிருக்கிறது. மது…

  18. சரிநிகர் பத்திரிகையில் தனது ஊடக பணியை ஆரம்பித்து, பின்னர் தினக்குரல் பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றிய ஊடகவியளாளரான ஆரையம்பதி பரமகுட்டி மகேந்திரராஜா என்ற ரவிவர்மன் அமரத்துவம் அடைந்துள்ளார். நண்பர் ரவிவர்மன் கலைத்துவமான பல படைப்புகளையும், செய்தி ஆக்கங்களையும், கட்டுரைகளையும் தந்த நல்லதொரு படைப்பாளியாய் எம்முடன் பயனித்தவர். 1980களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழத்தில் (புளொட்), மது என்ற பெயரில் உறுப்பினராக இருந்த றவிவர்மன் பின்நாளில் ஊடகத் துறையில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரது மெய்யுடல் நாளை (2013.10.07) மாலை 6.00 மணி வரை கொழும்பில் அவர் வசித்த இல்லத்தில் வைக்கப்படும் என்றும் அதன் பின் அவரது பிறப்பிடமான ஆரையம்பதிக்கு கொண்டு செல்லப்படும் எனவும் க…

  19. அரங்க ஆளுமை ”பிரான்சிஸ் ஜெனம் ” காலமானார் ஈழத்து நாடக வரலாற்றில் தனக்கென முத்திரை பதித்துக் கொண்ட அ .பிரான்சிஸ் ஜெனம் [ வயது 75] நேற்று கொழும்பில் காலமானார். யாழ்ப்பாணம் சில்லாலையைப் ,பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் , கொண்ட இவர் தனது இறுதிக்கு காலங்களில் கொழும்பில் வசித்து வந்தார். நாடக அரங்கக் கல்லூரியின் உருவாக்கத்தில் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவராக குழந்தை ம .சண்முகலிங்கத்துடன் செயற்பட்ட இவர் தொடர்ந்து திருமறைக் கலாமன்றத்துடன் இணைந்து செயற்பட்டதுடன் நாடக நடிகனாகவும் , ,நெறியாளராகவும் அரங்கப் பயிற்சியாளனாகவும் இயங்கினார் . ”நாராய் நாராய் ” என்ற வெளிநாடுகளுக்கான அரங்கப் பயணத்தின் போது பலராலும் பாராட்டும் பெற்றவர் .பொற…

  20. நடந்தால் இரண்டடி .. இருந்தால் நான்கடி.. படுத்தால் ஆறடி போதும் இந்த நிலமும் அந்த வானமும் அது எல்லோர்க்கும் சொந்தம் கண்ணீர் அஞ்சலிகள் 💐💐

  21. ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார். மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தையின் பணி நிமிர்த்தம் யாழ்ப்பாணம் மண்டதீவில் வசித்து தனது ஆரம்பம் முதலான கல்வியைத் தொடர்ந்தார். யாழ். இந்துக்கல்லூரி மாணவரான அவர் மாணவப் பருவத்தில் இருந்தே எழுதும் பணியினை மேற்கொண்டு வந்த அவர் 1995 இன் பின்னர் யாழ்.…

    • 0 replies
    • 713 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.