துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
641 topics in this forum
-
பதிவு ஒன்று: அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு - அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர். புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை. இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை ந…
-
- 2 replies
- 9.3k views
-
-
அப்துல் கலாமின் இறப்பும், தகர டப்பாக்களின் சப்தமும் / மு. கோபி சரபோஜி ( சிங்கப்பூர் ) கடந்த 27.07.2015 ல் அப்துல் கலாம் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி எட்டியதும் தங்கள் வீட்டுத் துயரமாக நினைத்து பகிரப்பட்ட துக்க நினைவுகளோடு விமர்சனம் என்ற பெயரில் சில தகர டப்பாக்கள் போட்ட சப்தங்கள் அவர்கள் நினைத்ததைப் போல ஒன்றையும் புரட்டிப் போட வில்லை. அவர்கள் பாசையிலேயே சொன்னால் ஒரு மயிரையும் புடுங்கவில்லை. இறந்த ஒருவரை ஏன் விமர்சனம் செய்யக் கூடாது? இறந்தவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? அவரின் செயல்பாடுகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன? இந்த மூன்று கேள்விகளை மட்டுமே முன் வைத்து எழுதப்பட்ட பெரும்பாலான விமர்சன வாந்திகளை எடுத்தவர்கள் தங்களைச் செல்வாக்கு மிக்கவர்களாக, தங்களின…
-
- 0 replies
- 603 views
-
-
அமிர்தலிங்கத்தின் மூத்த புதல்வர் காண்டீபன் லண்டனில் காலமானார். On Nov 14, 2022 தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் , தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும், இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்கட்சித்தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மூத்த புதல்வர் அமிர்தலிங்கம் காண்டீபன் லண்டனில் இன்று (13) காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டது மட்டுமல்ல தமிழீழ இராணுவம் என்ற அமைப்பையும் இவர் கட்டமைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்தார். ஈரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று இயற்கை எய்தியதாக தமிழீழ விடுதலைக் கூட்டணி நண்பர்கள் தெரிவித்தனர்.…
-
- 2 replies
- 1.1k views
-
-
கண்ணீர் அஞ்சலி! அமரர் செ.க.சிவப்பிரகாசம் ( சிற்பக்கலாநிதி) யாழ். மத்திய கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியர் இன்று இறைவனடி சேர்ந்தார். இவர் திருமதி. அன்னலட்சுமி ( முன்னைநாள் ஆசிரியை, யாழ். மத்திய கல்லூரி) அன்புக்கணவரும் துசியந்தன்(யேர்மன்) Dr. அனுசியந்தன் அவர்களின் தந்தையுமாவார்.இலங்கையில் மிகப்பிரத்தி பெற்ற கலைஞரான இவரது சிற்பங்களில் ஒன்றாக சங்கிலியன் சிலைய்யுள்ளது. எமது நிறுவுனர் அதிபர் வண.ஜேம்ஸ் லின்ச் அவர்களின் சிலையும் இவராலேயே செய்யப்பட்டது. அண்மையில் யாழ். மணிக்௬ட்டு கோபுரத்தை சுற்றி நிறுவப்பட்ட தமிழ் மன்னர்களின் சிலைகளையும் இவரே உருவாக்கினார்.யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் , பழைய மாணவர்கள் சார்பில் எங்கள் கண்ணீர் அஞ்சலிகள். …
-
- 7 replies
- 690 views
-
-
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் கணவர் பிள்ளைகள் உற்றார் உறவுகளோடு ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்துகொள்கின்றோம்:
-
- 17 replies
- 1.3k views
-
-
அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் புதிய புகைப்படங்கள். வல்வை ஒன்றியம் வல்வெட்டித்துறையில் இருந்து இன்று அனுப்பியுள்ள புதிய புகைப்படங்கள். மனோகரன் வேலுப்பிள்ளை டென்மார்க். தொலைபேசி 0045 75325654 எனது தந்தை அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவிற்கு இரங்கல் தெரிவித்தவர்கள், நேரில் கலந்து கொண்டவர்கள், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோர் உட்பட அனைவருக்கும் எமது குடும்பத்தினரின் சார்பில் நன்றிகளை தெரிவிக்கிறேன். இவ்வண்ணம் மனோகரன் வேலுப்பிள்ளை டென்மார்க். தொலைபேசி 0045 75325654 அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக் கிரியைகள் நேற்று வல்வை ஊறணி மயானத்தில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது. சுமார் 4000 ற்கும் மேற்பட்ட மக்க…
-
- 0 replies
- 730 views
-
-
இலங்கையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவர், சுட்டுக் கொல்லப்பட்ட அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 93வது ஜனன தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்படி வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு இன்று காலை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://newuthayan.com/அமிர்தலிங்கத்தின்-93வது-ஜ/
-
- 0 replies
- 491 views
-
-
அமுதுப்புலவருக்கு எமது அஞ்சலி செவாலியர் இளவாலை அமுதுப் புலவர் அமுதுப்புலவர் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட அமுதசாகரன் அடைக்கலமுத்து அவர்கள் இன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்துவிட்டார். தமிழ் ஈழம் நெடுந்தீவில் 15.09.1920 ஆம் ஆண்டு பிறந்த இவர் இளவாலையை வாழ்விடமாகக் கொண்டவர். வித்துவானாக, ஆசிரியராக, அதிபராகத் தனது பணியினைத் தொடர்ந்தவர் எழுத்துத் துறையில் ஓர் ஆதவனாகப் பிரகாசித்தார். பல நூற்றாண்டு மலர்களின் ஆசிரியராகவும், வீரகேசரி, காவலன், தினகரன், ஈழநாடு போன்ற தினசரிப் பத்திரிகைகளிலும் தனது ஆக்கங்களை எழுதிக் குவித்தார். இவரது படைப்புக்கள் பல இலங்கை அரசினால் தமிழ்ப் பாடத்திட்டத்திலும் இணைக்கப்பட்டிருந்தன. இலண்டனில் வாழ்ந்து வந்தபோதிலும் அடிக்கடி ஐ…
-
- 19 replies
- 5k views
-
-
அஞ்சா நெஞ்சன் சதாமுக்கு கண்ணீர் அஞ்சலிகள்
-
- 2 replies
- 1.7k views
-
-
21 ஜனவரி 2014 அண்மையில் அகால மரணமடைந்த யாழ்ப்பல்கலைக்கழக மாணவியான வித்தியா(அம்முக்குட்டி) அவர்களின் நினைவாக எழுத்தாளர் சோபாசக்தி எழுதிய குறிப்பிது. இளம் வயதில் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிற படைப்பாளிகளின் உணர்வுகளின் போராட்டமும் மரணத்தை நோக்கிய அவர்களின் நகர்வுக்கான காரணங்களும் அவர்களுக்கு மட்டுமே தெரியும். ஓவியர் பாடகர் கவிஞர் எனப்பலபரிமாணங்களைக் கொண்ட வித்தியாவின் மரணம் சிவரமணியின் மரணத்தை நினைவூட்டுகிறது. சமூக உளவியல் பற்றியும் தனிமனித உளவியல் பற்றியும் மன வடுக்கள் பற்றியும் ஆழமான அறிவும் பிரக்ஞையும் வளர்த்தெடுக்கப்படும் போது இத்தகைய இளவயது மரணங்களை குறிப்பாக மனிதர்களின் தற்கொலை முனைப்புணர்வுகளைப் (Suicidal ideation) பற்றிப் புரிந்து கொள்வது சாத…
-
- 1 reply
- 1.4k views
-
-
அரங்க ஆளுமை ”பிரான்சிஸ் ஜெனம் ” காலமானார் ஈழத்து நாடக வரலாற்றில் தனக்கென முத்திரை பதித்துக் கொண்ட அ .பிரான்சிஸ் ஜெனம் [ வயது 75] நேற்று கொழும்பில் காலமானார். யாழ்ப்பாணம் சில்லாலையைப் ,பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் , கொண்ட இவர் தனது இறுதிக்கு காலங்களில் கொழும்பில் வசித்து வந்தார். நாடக அரங்கக் கல்லூரியின் உருவாக்கத்தில் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவராக குழந்தை ம .சண்முகலிங்கத்துடன் செயற்பட்ட இவர் தொடர்ந்து திருமறைக் கலாமன்றத்துடன் இணைந்து செயற்பட்டதுடன் நாடக நடிகனாகவும் , ,நெறியாளராகவும் அரங்கப் பயிற்சியாளனாகவும் இயங்கினார் . ”நாராய் நாராய் ” என்ற வெளிநாடுகளுக்கான அரங்கப் பயணத்தின் போது பலராலும் பாராட்டும் பெற்றவர் .பொற…
-
- 0 replies
- 723 views
-
-
யாழ்ப்பாணம், ஒக்.17 யாழ்ப்பாணம், அரியாலை, நெடுங்குளம் பகுதியில் ஏ9 பாதையில் நேற்றுக்காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத் தில் "உதயன்' வெளிவாரி விநியோகப் பிரிவைச் சேர்ந்த பணியாளர் மரணமானார். யாழ்ப்பாணம், வெள்ளாந்தெருவைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஜெயபாலன் (வயது 32) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே மரணமானவரா வார். "உதயன்' பத்திரிகையை ஒப்பந்த அடிப்படையில் தென்மராட்சிப் பகுதிக்கு விநியோகம் செய்துவந்த அவர் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றிருந் தார். விநியோகப் பணியை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போதே அவர் விபத்தில் சிக்கினார். அரியாலை, நெடுங்குளம் பகுதியில் ஜெயபாரதி வாசிகசாலைக்கு முன்பாக அவர் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த பஸ்…
-
- 4 replies
- 726 views
-
-
http://www.kallarai.com/ta/obituary-20180207217471.html?ref=lankasrinews நல்லதொரு நண்பன் குடும்ப நண்பன் அயலவன் எல்லோராலும் யோகா என்று அழைக்ப்படும் யோகலிங்கம் என்பவர் நேற்று இரவு 8 மணியளவில் காரில் மோதுண்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.மேலதிக விபரங்கள் வெகு விரைவில். A 64-year-old man was trying to cross the Little Neck Pkwy at 83rd Ave. when a black car hit and killed him in Bellerose, Queens. (GOOGLE MAPS STREET VIEW) A man was struck and killed by a car as he tried to cross a busy Queens highway Friday night, cops said. The 64-year-old victim was walking across Little Neck Pkwy. at 83rd Ave. in Bellerose when…
-
- 20 replies
- 2.5k views
-
-
அருள்மொழி அரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன் காலமானார். ஈழத்தின் பிரபல சமய இலக்கியச்சொற்பொழிவாளரும் மூத்த சைவத்தமிழறிஞருமான திருமதி வசந்தா வைத்தியநாதன் தனது 81 ஆவது வயதில் நேற்று (13.03.2018) காலை காலமானார். கொழும்பு விவேகானந்த சபை, அகில இலங்கைக் கம்பன் கழகம் போன்ற அமைப்புகளின் ஸ்தாபக உறுப்பினரான அம்மையார் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசகராகவும் செயற்பட்டார். ஈழத்திலும் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் ஆயிரக்கணக்கான ஆலய மற்றும் மாநாட்டு சொற்பொழிவுகளை ஆற்றி இம்மண்ணிற்கு பெருமைசேர்த்தவராவார். ஆலயத் திருவிழாக்களை நேர்முக வர்ணனை செய்வதில் தனித்துவம் வாய்ந்தவராகச் செயற்பட்டார். தமிழ்நாடு மயிலாடு…
-
- 0 replies
- 563 views
-
-
அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி :: 50 ஆண்டுகளாக தமிழுக்கு உழைத்த ரஷ்ய தமிழறிஞர் மரணம்.! ரஷ்ய நாட்டு தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி, மாஸ்கோவில் கொரோனாவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. இவர் கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ் பணியாற்றி வந்தார். ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி காலமானார். அவர் உயிரிழந்த தகவலை சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் கலாசார மையத்தின் நிர்வாகிகளும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். 1941-ல் பிறந்த அலெக்ஸாண்டர் டுபியான்ஸ்கி, மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் புலமை பெற்றவர் துப்யான்ஸ்கி. தமிழைச் ச…
-
- 5 replies
- 883 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய து tcc பொறுப்பாளரும் முன்னால் ஓசானியா கண்ட tcc பொறுப்பாளருமான ஜெயக்குமார் அண்ணா மாரடைப்பின் காரணமாக காலமாகியுள்ளார். சிறந்த நிர்வாகியான அவர் காலமாகியது போராட்டத்துக்கு பெரும் பின்னடைவே. அவுஸ்திரேலியாவிலும் நியுஸிலாந்திலும் சிறந்த நிவாகத்தை நடத்தி அனைவரின் மனங்களிலும் இடம்பிடித்த அவ் நல்ல மனிதருக்கு யாழ்களம் சார்பாகவும் ஓசானியா கண்ட தமிழர்கள் சார்பாகவும் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்து கொள்ளுகின்றோம் அன்னாரின் பிரிவால் துயரும் அன்னாரின் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெடுத்து கொள்ளுகின்றோம்
-
- 23 replies
- 4.6k views
-
-
மூதூர் வன்செயலில் கொல்லப்பட்ட அனைத்து ஜீவன்களினதும் ஆத்மாக்கள் சாந்தியடையப் பிராத்திப்போம். :cry: :cry:
-
- 6 replies
- 1.8k views
-
-
சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார். தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபி சாந்தா. பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரை…
-
- 20 replies
- 5.8k views
-
-
ஆரம்ப கால பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளரும் முன்னாள் சர்வதேச பொறுப்பாளருமான மனோ அண்ணாவின் துணைவியார் மனோ அண்ணி இன்று 13.03.2021 சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்து விட்டார் என்று அறியப்படுகிறது. பொது வாழ்வில் உள்ள தலைவர் ஒருவரின் துணைவிகளில் துணைவரின் பொதுவாழ்வுக்கு உறுதுணையாகவும் …
-
- 10 replies
- 709 views
- 1 follower
-
-
சுனாமியால் உயிர்களை துறந்த அனைத்து மக்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலி அவர்களை ஆறாம் ஆண்டில் நினைவு கூறுகிறோம்.
-
- 2 replies
- 4.1k views
-
-
வணக்கம், கீழுள்ள செய்தியை நான் சீ.எம்.ஆர் வலைத்தளத்தில் தற்செயலாக கண்ணுற்றேன். எனக்கு இவரின் பெயர் தெரியாது. ஆனால், நீண்ட காலமாக இவரது நடிப்பை ரசித்து வந்து இருக்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்கள்! +++ நடிகர் கொச்சின் ஹனீபா இன்று சென்னையில் மரணமடைந்தார். மலையாளம் மற்றும் தமிழில் பிரபலமான நடிகர் கொச்சின் ஹனீபா எனப்படும் வி.எம்.சி. ஹனீபா உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 59. மனைவி, இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களும் இரட்டைக் குழந்தைகள் ஆவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹனீபாவுக்கு கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மால…
-
- 9 replies
- 11.6k views
-
-
இ.தொ.கா. முன்னாள் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமி காலமானார் August 1, 2020 இ.தொ.காவின் முன்னாள் பொதுச் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமி இன்று கொழும்பில் காலமானார். மரணமடையும் போது அவருக்கு வயது 95. சுகவீனமடைந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக படுக்கையிலிருந்த அவர் வீட்டிலேயே இன்று நண்பகல் அளவில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். http://thinakkural.lk/article/59421
-
- 0 replies
- 447 views
-
-
இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்… October 15, 2018 எழுத்தாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் இன்று காலை காலமாகினார். உள்ளம், வெளிச்சம், ஆதாரம், நமது ஈழநாடு, ஈழநாடு, தளவாசல் ஆகியவற்றின் ஆசிரிய பீடங்களில் இருந்தவர். முள்முடி மன்னர்கள், இருள் இரவில் அல்ல, மருத்தவர்களின் மரணம், என்றாவது ஒருநாள், என்னுடையதும் அம்மாவினுடையதும் உள்பட பல நூல்களை எழுதியவர். நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக எழுத்திலும் இலக்கியச் செயற்பாடுகளிலும் இயங்கி வந்தவர். தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இலக்கியம், எழுத்து, பிற செயற்பாடுகளின் வழியாகப் பங்களிப்புகளைச் செய்து வந்தவர்.. நிர்வாக உத்தியோகத்தராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றியவர…
-
- 8 replies
- 1.8k views
-
-
இந்திய இராணுவத்திடம் இருந்து நூல்களைக் காப்பாற்றிய நூலகர் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் (30.04.1940- 27.04.2022) May 22, 2022 — என்.செல்வராஜா, நூலியலாளர், லண்டன் — யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தை வளர்த்தெடுத்த நூலகர்களின் வரிசையில் ஆர்.எஸ். தம்பையா, சிற்றம்பலம் முருகவேள், வரிசையில் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் மூன்றாமவராவார். யாழ்ப்பாணத்தில், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தின் நூலகராகப் பணியாற்றிவந்த வேளையில், திருமதி ரோ.பரராஜசிங்கம் அவர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டிருந்தது. அவ்வேளையில் அவர் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகப் பணியாற்றிவந்தார். நூலகவியல் சஞ்சிகையை நான் வெளியிட்டு வந்த வேளையில் அதன் ஆசிரியர் குழுவில் திரு சி.…
-
- 0 replies
- 385 views
-
-
எந்தவிதமான பயங்கரவாதியும் மதிப்பளிக்கும் இடம் வைத்தியசாலை ஆனால் 21/10/2007 அன்று அகிம்சை தேசத்தின் அமைதிகாக்கும் படைகள் என்ற பெயரில் அட்டூழியம் செய்த படைகளால் வைத்தியர் தாதியர் நோயாளர் பெண்கள் குழந்தைகள் வயோதிபர் என எந்த பாகுபாடு காட்டாமல் சன்னங்களால் துளைத்து பலியெடுத்த 20 ஆண்டு நாள் இன்று அன்று ராஜீவ் காந்தியின் பயங்கரவாதத்தால் தம் உயிரை துறந்த எம் உறவுகளுக்கு 20வது ஆண்டு நினைவஞ்சலிகளை மிக்க வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றேன்
-
- 2 replies
- 1.7k views
-