துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
641 topics in this forum
-
உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி சிதம்பரநாதன் சாவடைந்தார்! AdminSeptember 4, 2021 உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி சிதம்பரநாதன் நேற்றுக் (03-09-2021) காலமானார். அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நாதஸ்வர வித்துவான் சிதம்பரநாதன், தவிற்காரர் செல்லத்துரையின் மகனாவார். இவர் தமது நாதஸ்வரக் கலையைக் கும்பழாவளை ஆலயத்தில் இளமைப்பருவத்திலேயே ஆரம்பித்தார். இவருடைய தந்தையாரும் கும்பழாவளை ஆலயத்தில் தவிற்கலையில் ஈடுபட்டிருந்தவர். தந்தையாருடன் இணைந்து கலைத்தொண்டு பேணிய இவர் நாதஸ்வரக் கலையில் மிக நாட்டங் கொண்டவராக விளங்கினார். அக் காலத்தில் பிரபல நாதஸ்வரக் கலைஞராகவிருந்த மாவிட்டபுரம் இராசாவிடம் சாஸ்திர ரீதியில் நாதஸ்வரம் பயின்றார். அதன் மேல் இந்தியாவுக்க…
-
- 0 replies
- 331 views
-
-
தேன்கூடு வலைத்திரட்டிகளின் நிறுவனர் சாகரன் அகால மரணமடைந்திருக்கிறார். அவருக்கு வயது 28. சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது அவருடன் நேரிடையான பழக்கம் ஏற்பட்டது. வெகுநாள் நண்பனைப் போல தோளில் கைபோட்டு பழகுவது அவரது சிறப்பு. வலைத்திரட்டிகளின் வளர்ச்சி மற்றும் பரிமாணங்கள் குறித்து ஒரு நாள் அரைமணி நேரம் தொலைபேசியில் பேசினோம். சமீபத்தில் மெயில் அனுப்பி உங்களிடம் ஒரு உதவி கோரப்போகிறேன் என்று சொல்லியிருந்தார். பெரும் சாதனைகள் படைக்க இருந்த ஒரு தமிழனை, இளைஞனை காலம் நம்மிடையே இருந்து பறித்துக் கொண்டது. அவருக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு குழைந்தையும் இருக்கிறதாம். அன்னாரின் குடும்பத்தாருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!!!
-
- 17 replies
- 4.8k views
-
-
ஆனந்தியக்காவின் கணவர் இயற்கையெய்தினார் முன்னை நாள் பி பி சி தமிழோசையின் செய்தி பணிப்பாளர் ஆனந்தி அக்கா அவர்களின் கணவர் சூரியப்பிரகாசம் அவர்கள் இறைவடி சேர்ந்தார். அவரது ஆன்மா சாந்திக்காக பிராத்திப்பதோடு ஆனந்தியக்காவின் குடும்பத்தின் துயரிலும் பங்கெடுத்து கொள்கிறேன். இறுதி கிரியைகள் வரும் ஞாயிற்று கிழைமை நடைபெறவுள்ளது விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். திரு. சூரியப்பிரகாசம் அவர்களது இறுதிக் கிரியைகள் பற்றிய அறிவித்தல், கடந்த ஞாயிறன்று (ஒக்ரோபர் 2ம்திகதி) காலமான திரு. சிவசாமி சூரியப்பிரகாசம் அவர்களது இறுதிச் சடங்குகள் ஒக்ரோபர் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் அவரது குடும்பத்தினர் தெரிவித்த தகவல்களை ஊடக நண்பர்களுக்கும், உறவினர…
-
- 26 replies
- 2.3k views
-
-
எஸ். சுகிர்தராஜன் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் வீரகேச வார வெளியீடுகள், மெட்ரோ நியூஸ் ஆகியவற்றின் பிராந்திய பத்திகையாளரான எஸ். சுகிர்தராஜன் (எஸ். எஸ். ஆர்.) சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. திருகோணமலையில் நடைபெற்ற பல செய்திகளை ஆதாரங்களுடன் வெளியிட்ட இவரை இனந்தெரியாத சிலர் சுட்டுக் கொலை செய்தனர். நான்கு வருடங்கள் கழிந்தும் கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. மட்டக்களப்பு குருமன்வெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட சுகிர்தராஜன் சிறிது காலம் அளவையியல் ஆசியராகக் கடமையாற்றினார். இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் கலைப்பூ கதிர் கழகத்தை உருவாக்கி காலாண்டு இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டு இலங்க…
-
- 1 reply
- 747 views
-
-
இந்திய இராணுவத்திடம் இருந்து நூல்களைக் காப்பாற்றிய நூலகர் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் (30.04.1940- 27.04.2022) May 22, 2022 — என்.செல்வராஜா, நூலியலாளர், லண்டன் — யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தை வளர்த்தெடுத்த நூலகர்களின் வரிசையில் ஆர்.எஸ். தம்பையா, சிற்றம்பலம் முருகவேள், வரிசையில் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் மூன்றாமவராவார். யாழ்ப்பாணத்தில், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தின் நூலகராகப் பணியாற்றிவந்த வேளையில், திருமதி ரோ.பரராஜசிங்கம் அவர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டிருந்தது. அவ்வேளையில் அவர் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகப் பணியாற்றிவந்தார். நூலகவியல் சஞ்சிகையை நான் வெளியிட்டு வந்த வேளையில் அதன் ஆசிரியர் குழுவில் திரு சி.…
-
- 0 replies
- 385 views
-
-
தொழில்நுட்ப கல்வியை வளர்த்த அருட்தந்தை மரணம்! இலங்கையில் தகவல் தொழில்நுட்ப கல்விக்கு பெரும் பங்காற்றிய அருட்தந்தை ரைமன்ட் ஏர்னஸ்ட் அலெக்ஸ்சான்டர் போருதொட்ட இன்று (16) தனது 88வது வயதில் காலமானார். நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார். https://newuthayan.com/தொழில்நுட்ப-கல்வியை-வளர்/
-
- 0 replies
- 617 views
-
-
மோகன் அண்ணாவின் (யாழ் இணையப் பொறுப்பாளர்) மைத்துனர் (தங்கையின் துணைவர்) சுரேஸ் வீரச்சாவு. நேற்று நடைபெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். ஏற்கனவே (சமாதான காலத்துக்கு முன்னர்) நடந்த சமரில் ஒரு காலை இழந்திருந்தார். நேற்றைய சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட போராளி சுரேசுக்கும், ஏனைய போராளிகளுக்கும் வீரவணக்கம்.
-
- 63 replies
- 7.8k views
-
-
கண்ணீர் அஞ்சலி
-
-
- 13 replies
- 1.8k views
- 1 follower
-
-
பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார் பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். #Balakumaran சென்னை: இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். பிரபல மாத, வார பத்திரிக்கைகளையும், சிறுகதைகளையும் எழுதி மக்களிடையே நன்கு பரிட்சையமான அவர், கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்…
-
- 21 replies
- 5.3k views
-
-
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்த மகேந்திரன்...மறக்க முடியுமா அந்த சிலிர்ப்பான பதிவை... 2002 ஓஸ்லோ அமைதிப் பேச்சு காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை சந்தித்துத் திரும்பிய சிலிர்ப்பான அனுபவத்தை ’குமுதம்’ இதழில் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மகேந்திரன். எப்போது எத்தனை முறை படித்தாலும் திகட்டாத பதிவு இதோ...மகேந்திரனின் வார்த்தைகளில்... திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த சாசனத்தின்இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா பற்றிச் சொல்லி, ஒரு படமும் தயாரித்துத் தரவேண்டும். வரமுடியுமா? என்று கேட்டார்கள். மறுவார்த்தையாக மறுப்புச்சொல்லாமல் சம்மதித்தேன். அருமையான …
-
- 3 replies
- 1.7k views
-
-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 34 வது நினைவு தினம் இன்று! AdminDecember 24, 2021 எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் ஆராதிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், மெத்தப் படித்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் அல்ல; உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்! மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் திகதி மரணமடைந்தார். அவர் மரணமடைந்து இன்றுடன் 31 வருடங்கள் ஆகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் எம்.ஜிஆர். பக்தர்கள், அதிமுகவினர் எம்.ஜி.ஆர்…
-
- 0 replies
- 468 views
-
-
ஈழத்தாய்க்காக முழக்கமிட்ட ஒரு மாமனிதர் இன்று கண்னைமூடி விட்டார்,தோல்வியின் எல்லையில் நிற்கும் சிங்களம் தன் கூலிப்படைகளை ஏவி அன்னாரின் உயிரை குடித்துவிட்டதே ரவிராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் அன்னாரின் பிரிவால் துயருரும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ஈழவன் :cry: :cry:
-
- 27 replies
- 4.5k views
-
-
முன்னாள் போராளி மாரடைப்பால் மரணம் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் போராளியான சிவநாதன் அருந்ததி ( இன்று அதிகாலை சாவடைந்துள்ளார். கடற்கரை வீதி சத்துருக்கொன்டானை சொந்த முகவரியாக கொன்ட இவர் கடந்த 03.02.1999. அன்று மாங்குளம் பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது ஷெல் வீச்சு காரணமாக விழுப்புண் அடைந்தார். நீண்ட காலமாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது வாழ்க்கையினை சக்கர நாற்காலியுடனே வாழ்ந்து வந்தவர். இவருடைய கணவரும் ஒரு முன்னாள் போராளி என்பதும் குறிப்பிடத்தக்கது (இவரும் மாற்று திறனாளிகள் ) இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் உண்டு. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளி ஒருவர் …
-
- 0 replies
- 475 views
-
-
யாழ்கள உறவான, பாஞ்ச் அண்ணாவின் மாமியார்... இலங்கையில் காலமானார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும், பாஞ்ச் அண்ணாவிற்கும், அவர் மனைவிக்கும், குடும்பத்தினருக்கும்.... எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரி ன் ஆத்ம சாந்திக்காக, இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
-
- 43 replies
- 4.7k views
- 1 follower
-
-
குமார் ரூபசிங்க - (1943 – 2022) - இடதுசாரித்தனத்திலிருந்து NGO த்தனம் வரை... - என்.சரவணன் குமார் ரூபசிங்க ஞாயிறன்று (20) கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் காலமாகிவிட்ட என்கிற செய்தியை அறிந்தேன். SWRD பண்டாரநாயக்கவின் மூத்த மகளான சுனேத்திராவை 1972 இல் மணந்து கொண்டார். சுனேத்திராவின் இளைய தங்கை சந்திரிகா குமாரணதுங்க, இளைய சகோதரன் அனுரா பண்டாரநாயக்க என்பதை நீங்கள் அறிவீர்கள். குமார் ரூபசிங்கவும் சுனேத்திராவும் சில ஆண்டுகளின் பின்னர் விவாகரத்தாகி வேறு திருமணம் செய்துகொண்டனர். ஒரு காலத்தில் குமார் தீவிரமான சமூக, அரசியல் செயற்பாட்டாளர். அவருக்கு பல தமிழ் நண்பர்கள் இருந்தார்கள். 1958 கலவரம் அவரை மிகவும் பாதித்திருந்தது. அவரின் நெருங்கிய தமிழ் நண்பரும் குடு…
-
- 0 replies
- 593 views
-
-
14.02.1987 அன்று கைதடியில் காவியமாகிய லெப்.கெணல் பொன்னம்மான், மேஜர் கேடீல்ஸ், கப்டன் வாசு மற்றும் 7வேங்கைகளின் 18 வது நினைவு நாள் இன்று. அவர்களுக்கு எமது வீர வணக்கம்
-
- 11 replies
- 2.8k views
-
-
29.08.1993 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவு நாள்(29.08.2010) இன்றாகும்.
-
- 5 replies
- 1.7k views
-
-
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட அன்புறவு கேதீசுக்கும் எனது கண்ணீர் வணக்கங்கள்.
-
- 10 replies
- 3k views
-
-
தாயகக் கடலில் இறைமையை நிலைநாட்டுவதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த 5 புலிகளுக்கும் என் வீரவணக்கம் :cry: ஈழவன்
-
- 1 reply
- 1.1k views
-
-
நாச்சிமார் கோவிலடி வில்லுப்பாட்டு இராஜன் (இராசு) தம்பையா இராஜன் அவர்கள் இன்று (18.11.2025) காலமானார். இவர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, பின்னர் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ்சிலும் வசித்துள்ளார். இவர் நாடகங்களை இயக்கியுள்ளார். இந்திரா பார்த்தசாரதியின் 'மழை' மற்றும் கே. பாலச்சந்தரின் 'மூன்று முடிச்சு' போன்ற நாடகங்களை இயக்கி மேடையேற்றியுள்ளார். யாழ் களமூடாக அறிமுகமான ஒருவர். ஒரு காலத்தில் ஈழத்திலும், ஐரோப்பா எங்கும் வில்லுப்பாட்டு நிகழ்வினூடாக கோலோச்சியவர். „மறுபக்கம்” என 2003 களில் நான் எழுதிய சிறுகதை ஒன்றை தொலைக்காட்சி நிகழ்வுக்காக வில்லுப்பாட்டாக செய்தவர். நினைவுகளில் என்றும் நிலைத்து நிற்பார். Inuvaijur Mayuran ########################################## ஆழ்ந்த அனுதாப…
-
- 24 replies
- 1.4k views
- 2 followers
-
-
இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 10 வீரமறவர்களின் வீரவணக்க நாள் . 13.05.95 அன்று வன்னி செட்டிமலையில் நடந்த இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் .தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். கப்டன் வேங்கையன் . இராசையா – திவாகரன் . யாழ்ப்பாணம் . லெப்டினன் ஜெயந்தன் மகாலிங்கம் – விக்னேஸ்வரன் திருமலை. லெப்டினன் கருங்கதிர் ஏகாம்பரம் – முத்துலிங்கம் மட்டக்களப்பு. லெப்டினன் யுகந்தன் கந்தசாமி – கரிகரன் கிளிநொச்சி . லெப்டினன் சுமணன் தம்பிபிள்ளை – முரளி மட்டக்களப்பு . லெப்டினன் தர்மராசா முத்துக்குமார் – சிவகுரு வவ…
-
- 0 replies
- 518 views
-
-
ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் கலாபூஷணம் சிவமகாலிங்கம் காலமானார் ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் கலாபூஷணம் சிவமகாலிங்கம் தனது 70 ஆவது வயதில் கோண்டாவில் பொற்பதி வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பணியாற்றிய இவர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளராகவும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளராகவும் பணியாற்றியிருந்தார். கந்தபுராணம், திருமந்திரம் போன்றவற்றுக்குப் பொழிப்புரைகளையும் இவர் எழுதியிருந்தார். இவர் பல ஆன்மீக நூல்களையும் எழுதி சாதனை படைத்துள்ளார். திருமந்திரத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவரின் சமய சொற்பொழிவுகள் தனித்துவமானவையாகும். http://ww…
-
- 6 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைக்காய் இன்னுயிரை ஈர்த்த அன்பு குஞ்சுகளுக்கு இங்கு வரும் பாடல்கள் சமர்ப்பணம்.அன்பின் மாவீர குஞ்சுகள் நீங்கள் மண்ணின் மைந்தர்கள்.நீங்கள் தமிழ்மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்வீர்கள். ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 8 replies
- 3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தமிழீழ காவல்துறை உறுப்பினர் ஒருவர் மண் ஏற்றச் சென்ற பொழுது பரிதாபமாக உயிரிழந்த சம்பம் ஒன்று கிளிநொச்சி உருத்திரபுரத்தில் இடம்பெற்றுள்ளது. ஜீவானந்தம் என்னும் முன்னாள் தமிழீழ காவல்துறை உறுப்பினரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். தடுப்புமுகாமிலிருந்து அண்மையில் விடுதலையாகி வந்த இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். கிளிநொச்சி உருத்திரபுரத்தில் மீளக்குடியேறிய இவர் வறுமை காரணமாக மணல் ஏற்றும் வேலைக்குச் சென்றுள்ளார். களி மண்படைக்குக் கீழாகச் சென்று மணல் அகழும் பொழுது மேல் களிமண்படை அவருக்கு மேலாக சரிந்து பரிதாபகரமாக சம்வப இடத்திலேயே மரணமடைந்தார். இவர் தமீழக் காவல்துறையில் பிரதேசப் பொறுப்பதிகாரியாக இருந்தவர். பிரேதப்…
-
- 17 replies
- 1.2k views
- 1 follower
-
-
யாழ்.கள உறவு கந்தையா அண்ணையின் அம்மாவிற்கு, ஆழ்ந்த அஞ்சலிகள். 🙏 அவரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார். உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். 🙏
-
- 30 replies
- 1.7k views
- 3 followers
-