Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றிய இளைஞனின் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் அவுஸ்திரேலியா, சிறிலங்கா இரு அணிகளுக்கும் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு நாங்கள் தமிழர்கள் நாங்கள் தமிழீழத்தைத் சேர்ந்தவர்கள் என்பதை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் துணிவுடனும் பெறுமையோடும் துணிந்து போராடுவோம் என்று சொல்வதற்காக எங்களுடைய தமிழீழத் தேசியக் கொடியை பறக்கவிட்டேன்.

பல ஊடகங்களில் எமது கொடியை கவால்துறையினர் பறித்ததாக வெளியிடப்பட்டடுள்ளது. ஆனால் அங்கு அவ்வாறு நடைபெறவில்லை பல ஆயிரக்கணக்கான சிங்களவர்களின் மத்தியில் தேசியக்கொடியை பறக்கவிட்டேன். கொடியை பார்த்த சிங்களவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர்.

பின்பு காவல்துறை என்னிடம் கூறியது துடுப்பாட்டத்தை பார்வையிடுவதென்றால் கொடியை தம்மிடம் தரலாம் இல்லை என்றால் தம்முடன் பேசுமாறு கேட்டுகொண்டனர். பின்பு எமது தமிழீழ அழிப்பை பற்றி காவல்துறையிடம் கூறினேன் அதற்கு காவல்துறை எங்களை பாராட்டியது. ஆனால் பல ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் மத்தியில் நாங்கள் தேசியக்கொடியை பறக்கவிடுவதால் பிரச்சனைகள் வரலாம் என்று கூறினார்.

நாங்கள் இங்கு பிரச்சணைகளை ஏற்படுத்த வரவில்லை எங்களது போராட்டத்தை எடுத்து சொல்வதற்காகவே இங்கு வந்தோம் எடுத்தும் காட்டிவிட்டுடோம். ஆனால் எங்களுடைய கொடியை நாங்கள் யாரிடமும் கொடுப்பதற்கு தயார் இல்லை நாங்களாகவே வெளியேருகின்றோம் என்று காவல்துறையினருக்கு தெரிவித்தோம்.

எமது நாட்டில் 60 வருடங்களுக்கு மேல் சிறிலங்கா இராணுவம் தமிழின அழிப்பை செய்து கொண்டு வருகின்றான். ஆனால் உலக நாடுகளை ஏமாற்றி தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்கின்றான். துடுப்பாட்ட போட்டியில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றுதான் என்று சுட்டிக்காட்டுகின்றான். ஆனால் நான் சிறிலங்கன் இல்லை நான் தமிழன்.

பல இலட்சக் காணக்கான தமிழ் மக்களை கொன்று இனஅழிப்பு செய்த சிறிலங்காவுக்கு நாங்கள் ஒரு போதும் ஆதரவு கொடுக்க மாட்டோம்.

தமிழீழத்தில் எமது தேசியக் கொடியை பறக்கவிடவில்லை என்றாலும் புலத்தில் தமிழர்கள் வாழ்கின்ற எல்லா இடங்களிலும் பறக்கும், அதே போல ஒரு நாள் ஐநாவிலும் தமிழீழத் தேசியக் கொடி பறக்கத்தான் போகிறது.

நான் எல்லா இளைஞர்களுக்கும் கூறவிரும்புகின்றேன். சிறிலங்கா அரசாங்கம் எந்த சதித் திட்டங்களை கொண்டுவந்தாலும் எந்த விதத்திலும் எதிர்த்தாலும் நாங்கள் தமிழர்கள் என்று சொல்வதற்கோ எமது தேசியக் கொடியை பறக்க விடுவதற்கோ ஒரு போதும் தயங்கக் கூடாது.

“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா”

IMG_3511-300x224.jpg

IMG_1219-225x300.jpg

IMG_4445-225x300.jpg

- eelampress

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க இந்த இளைஞர்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வு பூர்வமான உங்களின் இந்த செயலுக்கு பாராட்டுகள் !

இப்படி வாழ்த்தி பாராட்டிக் கொண்டிருங்கோ.... நீங்கள் மட்டும் ஒரு கல்லை கூட தொடாதையுங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி வாழ்த்தி பாராட்டிக் கொண்டிருங்கோ.... நீங்கள் மட்டும் ஒரு கல்லை கூட தொடாதையுங்கோ..

இது வன்முறையான எதிர்ப்பு அல்லவே...சும்மா சிங்களகொடியை தூக்கி கொண்டு திரியாமல் இருக்கிறோமல்ல.....

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி வாழ்த்தி பாராட்டிக் கொண்டிருங்கோ.... நீங்கள் மட்டும் ஒரு கல்லை கூட தொடாதையுங்கோ..

கல்லை நான் தொடமாட்டேன்..! வன்முறை எனக்குப் பிடிக்காது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கல்லை நான் தொடமாட்டேன்..! வன்முறை எனக்குப் பிடிக்காது..! :lol:

வைச்சா குடும்பி...சிரச்சா மொட்டை இது தான் எம் கொள்கை..அதி உச்ச வன்முறையை நாங்கள் பாவித்தோம்(ஒரு காலத்தில்) இனி பாவிக்கமாட்டோம்

வைச்சா குடும்பி...சிரச்சா மொட்டை இது தான் எம் கொள்கை..அதி உச்ச வன்முறையை நாங்கள் பாவித்தோம்(ஒரு காலத்தில்) இனி பாவிக்கமாட்டோம்

அதிஉச்ச வன்முறையை எவ்வளவு பேர் பாவித்தார்கள்?? ஒரு வீதம் வருமா?

பாராட்டுக்கள் அந்த இளைஞனுக்கு.....

கந்தப்பு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு செய்தியை மூன்று இடத்தில் பதிந்திருக்கிறார், பாராட்டுக்கள் கந்தப்புவிற்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

அதிஉச்ச வன்முறையை எவ்வளவு பேர் பாவித்தார்கள்?? ஒரு வீதம் வருமா?

அந்த வீதம் வன்முறையை பாவிக்கும் பொழுது மிச்சம் இருந்தவன் சும்மா இருக்கவில்லை தங்களுக்கு எழுமான வகையில் உதவிகள் செய்தான்....

  • கருத்துக்கள உறவுகள்

அதிஉச்ச வன்முறையை எவ்வளவு பேர் பாவித்தார்கள்?? ஒரு வீதம் வருமா?

சும்மா நீங்கள் குந்தி இருந்தாலும் பாதிப்பு அனைவருக்கும் ஒன்றுதான் என்ற தெளிவு எங்களிடம் அப்போதே இருந்தது.

இதில் தெளிவின்றி இருந்தவர்கள்தான் இப்போ எல்லாம் முடிஞ்சுது முடிஞ்சுது என்று பதறுகிறார்கள்.

இன்னும் தொடருதே தொடருதே? எனும் நிலையில் நாம் அன்று இருந்தோம்.

கல்லை நான் தொடமாட்டேன்..! வன்முறை எனக்குப் பிடிக்காது..! :lol:

ஒரு சின்ன டியூன் சேங் (tune change).........

அப்படியே கையில கொஞ்சம் சினக் (snack) எடுத்துக்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி வாழ்த்தி பாராட்டிக் கொண்டிருங்கோ.... நீங்கள் மட்டும் ஒரு கல்லை கூட தொடாதையுங்கோ..

பாராட்டுதல் பிடிக்கவில்லையா? இல்லை பாராட்டுபவரின் தகுதி இன்மை பிடிக்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

தோற்க வேண்டும் என்ற சிறிலங்கா அணியினை இப்படி கொடி ஏற்றி- அவர்களை உசுப்பேற்றியே வெல்ல வைத்து- போனசாக ஒரு புள்ளியை வாங்கிக் கொடுத்து கொடி காட்டிய (காத்த) குமரனே உனது துணிச்சலை எந்தப் பொன் ஏட்டில் பதியப் போகின்றார்களோ தெரியவில்லை.

இங்கே கருத்துக்களை பதிவேற்றும் கந்தப்புவே முன்னரைப் போல பொது நிகழ்வுகளில் பங்கேற்காது தலைமறைவாக நிற்பதாக அறிந்தேன். இப்படியான கொடி காட்டுகின்ற வேலையைப் போல பல வேலைகளை கந்தப்பு நீங்களும் செய்யலாமே. இவர் இன்று ஞாயிறு பதிவு செய்ய மாட்டார். நாளை திங்கள் தான் பதிவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோற்க வேண்டும் என்ற சிறிலங்கா அணியினை இப்படி கொடி ஏற்றி- அவர்களை உசுப்பேற்றியே வெல்ல வைத்து- போனசாக ஒரு புள்ளியை வாங்கிக் கொடுத்து கொடி காட்டிய (காத்த) குமரனே உனது துணிச்சலை எந்தப் பொன் ஏட்டில் பதியப் போகின்றார்களோ தெரியவில்லை.

தக்கதை தகார் பரிந்துரைபதும் பெருமை இல்லாதது!

வீர இளைஞரின் உணர்வுகளுக்கும், செயல்களுக்கும் நன்றிகள் பல.

நல்லவற்றை செய்யும் போது சேறு வீசும் ஒருசில கயவர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தெருவில் செல்பவர்களைப் பார்த்து சொறிபிடித்த தெருxx காரணமின்றி குரைப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் தேவையின் நிமித்தம் உறுதியோடு நடந்து செல்பவர்கள் தமது கருமத்தில் கண்ணாயிருப்பார். சொறிபிடித்த தெருxxகளைப் பொருட்படுத்துவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கருத்துக்களை பதிவேற்றும் கந்தப்புவே முன்னரைப் போல பொது நிகழ்வுகளில் பங்கேற்காது தலைமறைவாக நிற்பதாக அறிந்தேன். இப்படியான கொடி காட்டுகின்ற வேலையைப் போல பல வேலைகளை கந்தப்பு நீங்களும் செய்யலாமே. இவர் இன்று ஞாயிறு பதிவு செய்ய மாட்டார். நாளை திங்கள் தான் பதிவார்.

சிட்னியில் கந்தப்பு செய்யும் வேலைகள் கனடாவில் இருக்கும் உங்களுக்கு தெரியவாய்பில்லை...கந்தப்புவை நேற்றும் ஒரு பொது நிகழ்வில் கண்டேன்...வாழ்க கந்தப்புவின் வீரம் ....கந்தப்புவையும் உசுப்பேத்துவோம் அப்பதான் அவர் நல்ல செய்திகளை தருவார்

Edited by putthan

அதிஉச்ச வன்முறையை எவ்வளவு பேர் பாவித்தார்கள்?? ஒரு வீதம் வருமா?

அதி உச்ச வன்முறை என்றால் என்ன?

சிங்கள, இந்திய அரச பயங்கரவாதிகளிடம் ஒட்டிக்கொண்டு தமிழர்களைக் கடத்துவது, கப்பம் வசூலிப்பது, கொலை செய்வது, கொள்ளையடிப்பது, பெண்களைக் கொடுமைப் படுத்துவது, .... இத்தியாதிகளைத் தானே சொல்கிறீர்கள்.

தோற்க வேண்டும் என்ற சிறிலங்கா அணியினை இப்படி கொடி ஏற்றி- அவர்களை உசுப்பேற்றியே வெல்ல வைத்து- போனசாக ஒரு புள்ளியை வாங்கிக் கொடுத்து கொடி காட்டிய (காத்த) குமரனே உனது துணிச்சலை எந்தப் பொன் ஏட்டில் பதியப் போகின்றார்களோ தெரியவில்லை.

இங்கே கருத்துக்களை பதிவேற்றும் கந்தப்புவே முன்னரைப் போல பொது நிகழ்வுகளில் பங்கேற்காது தலைமறைவாக நிற்பதாக அறிந்தேன். இப்படியான கொடி காட்டுகின்ற வேலையைப் போல பல வேலைகளை கந்தப்பு நீங்களும் செய்யலாமே. இவர் இன்று ஞாயிறு பதிவு செய்ய மாட்டார். நாளை திங்கள் தான் பதிவார்.

கந்தப்பு வேலைக்கு லீவு போட்டு பகல் 12 மணிக்கே கிறிக்கற் மைதானத்திற்கு போட்டார். புலிக்கொடி பிடித்ததே கந்தப்புவோயென நினைத்தோம். நிர்மலன் உங்களுக்கு யாரோ பிழையான தகவலை தந்துள்ளார்கள்.. தயவு செய்து நல்ல புலனாய்வாளரை வேலைக்கு அமர்த்தவும்.

அதி உச்ச வன்முறை என்றால் என்ன?

சிங்கள, இந்திய அரச பயங்கரவாதிகளிடம் ஒட்டிக்கொண்டு தமிழர்களைக் கடத்துவது, கப்பம் வசூலிப்பது, கொலை செய்வது, கொள்ளையடிப்பது, பெண்களைக் கொடுமைப் படுத்துவது, .... இத்தியாதிகளைத் தானே சொல்கிறீர்கள்.  

முதலில் புத்தனின் கருத்தை படியுங்கள்.நீங்கள் குறிப்பிட்டவற்றையாவது செய்திருந்தால் தமிழர்களை முழுதாக அழித்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர இளைஞரின் உணர்வுகளுக்கும், செயல்களுக்கும் நன்றிகள் பல.

போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவுதரச்சொல்லி ஆசியிடமும் ,

போர் முடிந்தும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன என்று உலகிடமும் ,

நாங்கள் உங்கள் கிரிக்கெட்டிற்கு எதிரானவர்களல்ல உங்கள் இனத்துவேச அரசிற்கே எதிரானவர்கள் என்று இலங்கை அணிக்கும், செய்திகளை சொல்வது போல் பாதைகளுடன்

குறைந்தது பத்துபேராவது கறுப்பு உடையுடன் வாயில் கறுப்பு துணியையும் கட்டி நின்றால் உண்மையான ஒரு கவனயீர்ப்பாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம் .

புலிக்கொடியை காட்டுவது திருவிழா பார்க்கும் மக்கள் காலுக்குள் வெடியை கொளுத்திபோடுவதுபோலாகும். ஒரு சின்ன சலசலப்பு மட்டுமே எஞ்சும் .

எழுபதுகளிலேயே கிருஷ்ணன் கொடியுடன் லண்டனில் இறங்கிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவுதரச்சொல்லி ஆசியிடமும் ,

போர் முடிந்தும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன என்று உலகிடமும் ,

நாங்கள் உங்கள் கிரிக்கெட்டிற்கு எதிரானவர்களல்ல உங்கள் இனத்துவேச அரசிற்கே எதிரானவர்கள் என்று இலங்கை அணிக்கும், செய்திகளை சொல்வது போல் பாதைகளுடன்

குறைந்தது பத்துபேராவது கறுப்பு உடையுடன் வாயில் கறுப்பு துணியையும் கட்டி நின்றால் உண்மையான ஒரு கவனயீர்ப்பாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம் .

புலிக்கொடியை காட்டுவது திருவிழா பார்க்கும் மக்கள் காலுக்குள் வெடியை கொளுத்திபோடுவதுபோலாகும். ஒரு சின்ன சலசலப்பு மட்டுமே எஞ்சும் .

எழுபதுகளிலேயே கிருஷ்ணன் கொடியுடன் லண்டனில் இறங்கிவிட்டார்.

தற்போதைய தேவையும் இதுவாக தான் இருக்க வேண்டும் என்பது எனது அவா.உலகம் சிறிதளவாவது எமக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் போது உலகின் வழியில் நாம் செல்ல வேண்டும். சிறிலங்கா அரசு இதை தான் இவ்வளவு காலமும் செய்து கொண்டிருந்தது.இன்று எமக்கு கிடைத்திருக்கும் சாதகமான சூழ்நிலையை சமயோசிதமாக பாவிப்பது தான் இறந்த எமது மக்களுக்கும் போராளிக்களுக்கும் செய்யும் வரலாற்று கடமையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவுதரச்சொல்லி ஆசியிடமும் ,

போர் முடிந்தும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன என்று உலகிடமும் ,

நாங்கள் உங்கள் கிரிக்கெட்டிற்கு எதிரானவர்களல்ல உங்கள் இனத்துவேச அரசிற்கே எதிரானவர்கள் என்று இலங்கை அணிக்கும், செய்திகளை சொல்வது போல் பாதைகளுடன்

குறைந்தது பத்துபேராவது கறுப்பு உடையுடன் வாயில் கறுப்பு துணியையும் கட்டி நின்றால் உண்மையான ஒரு கவனயீர்ப்பாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம் .

புலிக்கொடியை காட்டுவது  திருவிழா பார்க்கும் மக்கள் காலுக்குள் வெடியை கொளுத்திபோடுவதுபோலாகும். ஒரு சின்ன சலசலப்பு மட்டுமே எஞ்சும் .

எழுபதுகளிலேயே கிருஷ்ணன் கொடியுடன் லண்டனில் இறங்கிவிட்டார்.

இது பிழையான கண் ஓட்டமோ தப்பான அபிபிராயபோ இல்லை.அதே நேரம் எழுபதுகளிலேயே கொடியோடு இறங்கு முன்னரே பதாதைகளுடனும் இறங்கியாச்சு. முடிவு என்பது எதற்கும் இல்லாது போனதுதான் உண்மை.எந்த தீவிரவாதமும் இல்லாத தாலை லாமாவின் போராட்டம் அவர் சாகும் வரை இருக்கலாம் ஆனால் விடிவு இல்லை என்பதே உண்மை.எமது போர் என்பது சிங்கள அரசுக்கு எதிரானதாக இருக்கவேண்டும். சர்வதேசத்துடன் சமரசம் செய்ய போய்தான் சரணாகதி நிலை வந்தது.கொடியுடன் ஆனா செய்தி சிங்களவர்களுக்கு ஆனது. நாம் இன்னும் வீழவில்லை என்பதே அந்த செய்தி.கொடியை இனி எந்த சந்தர்பத்திலும் விட முடியாது. யார் போராடுகிறார்கள் என்பதற்கான அடையாள முகவரி அது.

  • கருத்துக்கள உறவுகள்

கொடியுடன் நின்ற இளைஞனின் செயலுக்கும் துணிவிற்கும் மதிப்பளிக்கும்வேளை....வடிவங்கள் மாற்றி போராட வேண்டிய தேவை அதிகம் உள்ளது அதை இளைய சமுதாயம் புரிந்து கொள்ளவேண்டும். திட்டமிட்ட அழிப்புக்களே எம்மினத்தின் மீது நிகழ்த்தப்பட்டது. அதை வெளியுலகிற்குத் தெரியாது என்று எவரும் சொல்லமுடியாது..ஆனால் எல்லாப்பக்கமும் மௌனமாகவே இருந்தன. அநேகமாக புலிகள் அழிக்கப்படவேண்டும் என்பதை அனைத்துத்தரப்பும் ரகசியமாக ஆதரித்தன. நாங்கள் செய்யவேண்டியது புலிகள் மீதான தடைகளை அகற்றுவது அந்தத் தடையை அகற்ற நாம் எந்த வழியில் பயணிப்பது என்பதை இளைய சமுதாயம் நன்கு புரிந்து செயற்படவேண்டும். புலிகள் மீதான தடை என்பது ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழினத்தின் மீதான தடைக்கு ஒப்பானதாகவே உள்ளது என்பதை உணர்த்தவேண்டும்.

போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவுதரச்சொல்லி ஆசியிடமும் ,

போர் முடிந்தும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன என்று உலகிடமும் ,

நாங்கள் உங்கள் கிரிக்கெட்டிற்கு எதிரானவர்களல்ல உங்கள் இனத்துவேச அரசிற்கே எதிரானவர்கள் என்று இலங்கை அணிக்கும், செய்திகளை சொல்வது போல் பாதைகளுடன்

குறைந்தது பத்துபேராவது கறுப்பு உடையுடன் வாயில் கறுப்பு துணியையும் கட்டி நின்றால் உண்மையான ஒரு கவனயீர்ப்பாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம் .

புலிக்கொடியை காட்டுவது திருவிழா பார்க்கும் மக்கள் காலுக்குள் வெடியை கொளுத்திபோடுவதுபோலாகும். ஒரு சின்ன சலசலப்பு மட்டுமே எஞ்சும் .

எழுபதுகளிலேயே கிருஷ்ணன் கொடியுடன் லண்டனில் இறங்கிவிட்டார்.

அர்யூன்

பல இடங்களில் உங்கள் கருத்துக்கள் புலிகள் மீதான வெறுப்பை உமிழ்வதாக இருந்தாலும் சில இடங்களில் ஒரு சில சமயங்களில் நீங்கள் எடுத்துவரும் கருத்து ஏற்புடையதாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

போர் என்பது ஒருமுகத்தன்மை கொண்டதாகவும், போராட்டம் என்பது பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்..!

சிலர் போரில் ஜனநாயகம் தேடினார்கள்..! இருக்கும் குறைந்த அளவு வளங்களைப் பங்கிட்டு அதில் பெரும்பங்கு கையாலாகாதவரிடம் சென்றுவிட்டால் நிலைமை என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும்..!

இந்த இளைஞன் செய்தது போரல்ல.. மாறாக இது ஒரு போராட்ட வடிவம்..! எமது பிரச்சினையைத் தக்கவைக்கச் செய்யப்பட்ட ஊக்கமுள்ள நடவடிக்கை..! இந்த ஒரு இளைஞனால் எமது போராட்டம் பின் தங்கிவிடும் என்பது ஏற்புடையதல்ல..!

இறுதிப்போரின்போது ஆயிரக்கணக்கில் கொடியைத்தான் உயர்த்திப் பிடித்தோம்..! இன்று எமக்கொரு அடையாளம் இருக்கிறது..! காட்சிகள் மாறும்போது எல்லாம் சாதகமாக முடியும்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.