Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிவில்லாத பயணங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2396791958_138219f80c.jpg

அதிகாலைப் பொழுதின்,

இருள் பிரியாத நேரத்தில்,

ஆயிரம் பயணங்களில்,

அதுவும் ஒரு பயணமாகியது!

அப்பாவின் பனித்த கண்களும்,

அம்மாவின் அன்புத் தழுவலும்,

அந்தத் தேங்காய் உடைத்தலில்,

அமிழ்ந்து போனது!

கலட்டிப் பிள்ளையாரின்,

கடவாயின் தந்தங்கள்,

கொஞ்சமாய் அசைந்த பிரமையில்,

சஞ்சலப் பட்டது மனம்!

விரியும் கனவுகளில்,

வருங்காலக் கேள்விக்குறி,

விரிந்து வளைந்து,

பெருங் கோடாகியது!

தூரத்தில் தெரிந்த நீரலைகள்,

கானல் நீரின் கோடுகளாய்,

ஈரம் காய்ந்து போயின!

கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும்,

காற்றாடியாகியது பயணம்!

புலம்பெயரும் புள்ளினங்களே!,

போன பயணம் முடித்ததும்,

போய் வரக் கூடிருக்கும் உங்களுக்கு!

போகுமிடமெல்லாம் கூடு கட்டும்,

பயணமாகியது, எனது பயணம்!

உற்றார்கள், பெற்றார்கள்,

உடன் பிறந்த சொந்தங்கள்,

சுற்றித் திரிந்த குறுந் தெருக்கள்,

சுகம் தந்த காற்றின் வருடல்கள்,

விடிகாலை வேளையின் சிலிர்ப்புகள்!

வானத்தில் பறக்கும் பறவையின்,

விழிகளில் தெரியும் வடிவங்களாக,

விரைந்து தொடர்கிறது ,பயணம்!

தொடுகையில் கிடைக்கும் சுகங்களும்,

நுகர்தலில் கிடைக்கும் வாசனைகளும்,

படங்களில் மட்டுமே கிடைக்கும்,

பாக்கியமாகப் பயணம் தொடர்கின்றது!

இராமாயணத்தின் அஞ்ஞாத வாசமாய்,

இரவும் பகலுமில்லாத, பெருவெளியில்,

திசை மாறிய பறவையாகித்,

தொடர்ந்து செல்கின்றது, பயணம்!

முடிவில்லாத பயணமாகி,

முற்றுப் புள்ளியைத் தேடுகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு சுமைதனை

நெருப்பேற்றும் வரிகள்

காலம் போகுது

வயதும் ஓடுது

கரை தெரியல

கண்ணுக்கெட்டிய தூரம்வரை

கானல் நீர் மட்டுமே

தொலைத்தது

நட்டாற்றில் விட்டது

எம்மை மட்டுமல்ல என் பரம்பரையையும் சேர்த்து.....

.

அழவச்சிட்டீங்க பூங்கையூரன், விசுகு அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...ஞாபகங்கள் :o ...நல்லதொரு கவிதை தந்த புங்கையூரானுக்கும்,வி.அண்ணாவிற்கும் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

2396791958_138219f80c.jpg

அதிகாலைப் பொழுதின்,

இருள் பிரியாத நேரத்தில்,

ஆயிரம் பயணங்களில்,

அதுவும் ஒரு பயணமாகியது!

அப்பாவின் பனித்த கண்களும்,

அம்மாவின் அன்புத் தழுவலும்,

அந்தத் தேங்காய் உடைத்தலில்,

அமிழ்ந்து போனது!

கலட்டிப் பிள்ளையாரின்,

கடவாயின் தந்தங்கள்,

கொஞ்சமாய் அசைந்த பிரமையில்,

சஞ்சலப் பட்டது மனம்!

விரியும் கனவுகளில்,

வருங்காலக் கேள்விக்குறி,

விரிந்து வளைந்து,

பெருங் கோடாகியது!

தூரத்தில் தெரிந்த நீரலைகள்,

கானல் நீரின் கோடுகளாய்,

ஈரம் காய்ந்து போயின!

கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும்,

காற்றாடியாகியது பயணம்!

புலம்பெயரும் புள்ளினங்களே!,

போன பயணம் முடித்ததும்,

போய் வரக் கூடிருக்கும் உங்களுக்கு!

போகுமிடமெல்லாம் கூடு கட்டும்,

பயணமாகியது, எனது பயணம்!

உற்றார்கள், பெற்றார்கள்,

உடன் பிறந்த சொந்தங்கள்,

சுற்றித் திரிந்த குறுந் தெருக்கள்,

சுகம் தந்த காற்றின் வருடல்கள்,

விடிகாலை வேளையின் சிலிர்ப்புகள்!

வானத்தில் பறக்கும் பறவையின்,

விழிகளில் தெரியும் வடிவங்களாக,

விரைந்து தொடர்கிறது ,பயணம்!

தொடுகையில் கிடைக்கும் சுகங்களும்,

நுகர்தலில் கிடைக்கும் வாசனைகளும்,

படங்களில் மட்டுமே கிடைக்கும்,

பாக்கியமாகப் பயணம் தொடர்கின்றது!

இராமாயணத்தின் அஞ்ஞாத வாசமாய்,

இரவும் பகலுமில்லாத, பெருவெளியில்,

திசை மாறிய பறவையாகித்,

தொடர்ந்து செல்கின்றது, பயணம்!

முடிவில்லாத பயணமாகி,

முற்றுப் புள்ளியைத் தேடுகின்றது!

வாசிக்கையில் சிலிர்த்துப் போகிறது மனது...பின்னோக்கி விரைகின்றன நினைவுகள்....என் அண்ணை மண்ணே உன்னை முத்தமிட்டுப் பிரிந்ததில் இருந்து எவ்வளவு காலங்கள் ஓடிப் பறந்துவிட்டன..உங்கள் கவிதையைப் போலவே தொலைத்து விட்டவற்றை நினைவூட்டும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலிதாங்க முடியாமல் மறந்து தொலைக்க வேணும் என்ற வேகத்தில் இன்னும் இன்னும் மோசாமாக இந்தப் புலம்பெயர் வாழ்க்கைக்குள் என்னை அமிழ்த்தி தொலைந்து போகிறேன்... :( :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கிறது புங்கையூறான்

நன்றிகள் பகிர்விற்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு சுமைதனை

நெருப்பேற்றும் வரிகள்

காலம் போகுது

வயதும் ஓடுது

கரை தெரியல

கண்ணுக்கெட்டிய தூரம்வரை

கானல் நீர் மட்டுமே

தொலைத்தது

நட்டாற்றில் விட்டது

எம்மை மட்டுமல்ல என் பரம்பரையையும் சேர்த்து.....

காலம் எமக்காகக் காத்திருக்கப் போவதில்லை, விசுகர்!

அதைக் கனிய வைக்கும், பொறுப்பும் எம்மிடமே!

கருத்துக்கு நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன், விசுகு மனதைத் தொட்ட கவிதைகள்.

நான் வெளிக்கிடும் போது... என்னை வழியனுப்பிய உறவுகள் பலர் இன்று உயிருடன் இல்லை என்னும் போது... மனது இன்னும் கனக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

அழவச்சிட்டீங்க பூங்கையூரன், விசுகு அண்ணா.

கருத்துக்கு நன்றிகள், ஈசன்!

இரை தேடிய பருந்தொன்று, வயிறு நிரம்பியபின் திரும்பிப் பார்க்கையில், வெறுமை மட்டுமே பெரிதாகத் தெரிவது போலத் தான், நமது நிலை!

வயிற்றை நிரப்புவது, மட்டும் தானா வாழ்க்கை?

ஊரில் சைக்கிளில் போகும் போது, ஒருவர் உங்களைப் பார்த்துத், தலையசைத்து விட்டுச் செல்லும் போது, ஒரு சின்னச் சந்தோசம் வருமே!

அதைத் தான் தேடுகின்றேன்!

ஆயிரம் ஆயிரம் இளைஞர் யுவதிகளின் ஏக்கங்களைப் பிரதிபலித்துள்ளீர்கள் புங்கையூரான். வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...ஞாபகங்கள் :o ...நல்லதொரு கவிதை தந்த புங்கையூரானுக்கும்,வி.அண்ணாவிற்கும் பாராட்டுக்கள்

கருத்துக்கு நன்றிகள், ரதி!

மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கையில் சிலிர்த்துப் போகிறது மனது...பின்னோக்கி விரைகின்றன நினைவுகள்....என் அண்ணை மண்ணே உன்னை முத்தமிட்டுப் பிரிந்ததில் இருந்து எவ்வளவு காலங்கள் ஓடிப் பறந்துவிட்டன..உங்கள் கவிதையைப் போலவே தொலைத்து விட்டவற்றை நினைவூட்டும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலிதாங்க முடியாமல் மறந்து தொலைக்க வேணும் என்ற வேகத்தில் இன்னும் இன்னும் மோசாமாக இந்தப் புலம்பெயர் வாழ்க்கைக்குள் என்னை அமிழ்த்தி தொலைந்து போகிறேன்... :( :(

உங்கள் மனநிலையில் தான், நாங்களும் காலங்களைக் கரைத்தோம்!

ஆனால், எங்களுக்கென ஒரு விடி வெள்ளியொன்று, மின்னி மின்னி நம்பிக்கை தந்து கொண்டிருந்ததது! என்றாவது விடியும் என்றொரு, வெள்ளாப்புத் தெரிந்தது!

;நம்பிக்கை; தான் வாழ்க்கை என்பதன் முழுமையான அர்த்தத்தை நான் உணர்ந்த காலம் அது! உங்கள் கடைசி வசனம் என்னை, மீண்டும் சிந்திக்க வைக்கின்றது!

ஏறத்தாள, ஒரு குடிகாரனின் நிலையில் நாங்கள்?

கவலைகளில் இருந்து விடுபடுவதற்காக,மேலும், மேலும், இந்தச் சேற்றுக்குள் எம்மை புதைத்துக் கொள்கின்றோம்!

வயதில் சிறியவனின் வாயில் இருந்து விழுந்தாலும், வார்த்தைகளின் அர்த்தம் மிகவும் ஆழமானது! கருத்துக்கு நன்றிகள், சுபேஸ்!

நன்றாக இருக்கிறது புங்கையூறான்

நன்றிகள் பகிர்விற்கு

தங்கள், கருத்துக்கு நன்றிகள், லியோ!

தொடர்ந்தும் எழுதுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயணத்தின் அஞ்ஞாத வாசமாய்,

இரவும் பகலுமில்லாத, பெருவெளியில்,

திசை மாறிய பறவையாகித்,

தொடர்ந்து செல்கின்றது, பயணம்!

முடிவில்லாத பயணமாகி,

முற்றுப் புள்ளியைத் தேடுகின்றது!

பாண்டவர்களுக்கும் சரி , இராமனுக்கும் சரி அஞ்ஞாதவாசத்திற்கு முடிவிருந்தது...எங்களுக்கு எங்கள் வாழ்நாட்களுக்குள் முடியும் சாத்தியம் ஏற்பட்டால் அதுவே எங்கள் பிறவிபலனாக மகிழ்வளிக்கும்..அல்லாவிட்டால் உத்தரிக்கிற தலத்து ஆத்மாக்களாக தூல உடல் நீத்தபின்னும் அலைவோம். :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த, தங்கை ரதிக்கும், தம்பிகள் சுபேஸ், லியோ ஆகியோருக்கும், மிக்க நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பச்சை குத்தியுள்ளேன் புங்கையூரான்.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]புங்கையூரன் கவிதை அருமை [/size][size=1]

[size=4]பகிர்வுக்கு நன்றி [/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாண்டவர்களுக்கும் சரி , இராமனுக்கும் சரி அஞ்ஞாதவாசத்திற்கு முடிவிருந்தது...எங்களுக்கு எங்கள் வாழ்நாட்களுக்குள் முடியும் சாத்தியம் ஏற்பட்டால் அதுவே எங்கள் பிறவிபலனாக மகிழ்வளிக்கும்..அல்லாவிட்டால் உத்தரிக்கிற தலத்து ஆத்மாக்களாக தூல உடல் நீத்தபின்னும் அலைவோம். :(

பாண்டவர்களின் 'அஞ்ஞாதவாசம்' பற்றிய கவலையை விடவும், வல்வையின் அஞ்ஞாத வாசமே, எனக்கு அதிக வருத்தத்தைத் தருகின்றது!

ஒளிரும் காண்டீபத்தில் , நாதமெழுப்பியபடி, தன்னை வெளிக்காட்டிய அர்ச்சுனனின் அகங்கார எக்களிப்போடு, அஞ்ஞாதவாசம் முடித்து, தங்கள் வீட்டுக் கட்டுத்தறியையாவது, கவி பாட விடுங்கள், சகோதரி!

கருத்துக்கு, நன்றிகள்!

[size=4]புங்கையூரன் கவிதை அருமை [/size]

[size=1][size=4]பகிர்வுக்கு நன்றி [/size][/size]

கருத்துக்கு நாங்கள், பகீ!

கொஞ்ச நாட்களாகக் காணவில்லை?

தொடுகையில் கிடைக்கும் சுகங்களும்,

நுகர்தலில் கிடைக்கும் வாசனைகளும்,

படங்களில் மட்டுமே கிடைக்கும்,

பாக்கியமாகப் பயணம் தொடர்கின்றது!

உணர்வு பூர்வமான வரிகள் புங்கை !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.