Jump to content

சரீஆ சட்டப்படி மகளுக்கு வழங்கிய தீர்ப்பை முழுமையாக ஏற்கிறேன்: ரிசானாவின் தாய்


Recommended Posts

'எனது மகள் ரிசானாவை அல்லாஹ் தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான். இதுதான் என் உறுதியான நம்பிக்கை' என்று சுவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கின் தயார் ரஸீனா நபீக் தெரிவித்தார்.

 

ரிசானா நபீக் மரண தண்டனைக்கு உள்ளானதன் பின்பு அவர் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,


'சரீஆ சட்டப்படி என மகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை நான் முழுயாக மதிக்கின்றேன். அதனை ஏற்றுக் கொள்ளுகின்றேன். சரீஆ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் அது எத்தகையதாக இருந்தபோதும் நிரந்தரமான மறுமையில் ரிசானாவிற்கு உயர்ந்த பேறு கிடைக்கும். அவர் இப்போது சுவனத்திற்குச் சென்றுள்ளதாகவே உணர்கின்றேன்.

 

உலகெங்கும் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் எனது மகளை அவர்களது சொந்த சகோதரியாகக் கருதி 'துஆ' பிரார்த்தனையில் ஈடுபட்டதானது இதனையே மேலும் உறுதிப்படுத்துகின்றது. இதனால் ரிசானாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றி வேறு எதுவும் என்னால் கூறமுடியாது. எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.


இதேவேளை ரிசானாவுக்கு மன்னிப்பை பெற்றுக்கொடுப்பதற்கு பல்வேறு வழிகளிலும் இறுதிவரை  முயற்சித்து வந்த அனைத்து உள்ளங்களுக்கும் ஊடகங்களுக்கும் மனித உரிமை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மொத்தத்தில் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அல்லாஹுதஆலா அனைவருக்கும் பேரருள் புரியவேண்டுமென பிரார்த்திக்கின்றேன்' என்றார்.

 

R02(36).jpg

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/56781-2013-01-12-09-05-59.html

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

போதுமான கல்வி அறிவு இல்லாத சமூகங்களிலும் வறுமை உள்ள சமுதாயங்களிலும் பகுத்தறிவு பற்றாக்குறையாகவே உள்ளது.

 

அதனை வைத்து மத தலைவர்களும் அரசியல்வாதிகளும் பிழைத்துக்கொள்ளுகிறார்கள்.

Link to comment
Share on other sites

'எனது மகள் ரிசானாவை அல்லாஹ் தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான்.

 

அதேபோல் உங்களுக்குத் தந்த வறுமையையும் எடுத்துவிடுவார். :rolleyes:

Link to comment
Share on other sites

ஒன்றை கவனித்தீர்களா, எல்லோறும் கறுப்பு நிறத்தில் உடல் முழுவதியும் மூடி பர்தா அணிந்து உள்ளார்கள், சைவமும் தமிழும் இருந்த ஊரில் இன்று இஸ்லாம், என்ன கொடுமை இது,நான் நினைக்கிறேன், 2020ம் ஆண்டவில் ஈழப் பகுதியில் சைவ மதம் இஸ்லாம் மத்த்தால் முற்றாக ஒழிக்கப்ட்டு இருக்கும், இது கிழக்குப் பகுதிக்கு மட்டும் அல்ல, யாழ்ப்பாணம் வன்னியையும் சேர்த்துத் தான்.

போதுமான கல்வி அறிவு இல்லாத சமூகங்களிலும் வறுமை உள்ள சமுதாயங்களிலும் பகுத்தறிவு பற்றாக்குறையாகவே உள்ளது.

 

அதனை வைத்து மத தலைவர்களும் அரசியல்வாதிகளும் பிழைத்துக்கொள்ளுகிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம் இந்த திராவிட./ராமசாமி குரங்குகள் ஒண்டும் சொல்லாதுகள்,ஆனால் சைவ மதத்தவர் ஒரு வழிபாடு செய்தால் உடனே மூட நம்பிக்கை எண்டு சொல்லுதுகள்

அதேபோல் உங்களுக்குத் தந்த வறுமையையும் எடுத்துவிடுவார். :rolleyes:

இவர்களை எல்லாம் மதம் மாற்றும் பொழுது அப்படி சொல்லித்தான் மதம் மாத்தி இருப்பாங்கள், இவர்களின் முகங்களை பார்க்கும் பொழுதே தெரியவில்லையா, இவர்கள் எல்லம் அண்மை காலத்தில் மதம் மாறியவ்ர்கள் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அதேபோல் உங்களுக்குத் தந்த வறுமையையும் எடுத்துவிடுவார். :rolleyes:

 

அதுதான் அல்கா ஹிஸ்புல்லா வடிவில்.. போய்.. சவுதி தனவந்தரிடம் காசு வாங்கி வீடு கட்டிக் கொடுக்கப் போறாரில்ல. மகள் இருந்திருந்தால் கூட இது நடந்திருக்குமா என்ன..!

 

இவர்களைப் பொறுத்தவரை பிள்ளைகள் என்பது அல்கா தங்களைக் காப்பாற்ற அனுப்பி வைத்த பிணங்கள். அது செத்தால் என்ன வாழ்ந்தால் என்ன தாங்கள் நல்லா வாழ்ந்து அல்காவிடம் ஓடோடிப் போயிடனும். பிறகு ஏன் தான் அல்காவை விட்டிட்டு பூமிக்கு வந்து துலையுங்களோ..???!

 

இதுகளை எல்லாம் ஒன்றாச் சேர்த்து ஒரு அணுகுண்டைப் போட்டு நேரா அல்காட்டா அனுப்பிட்டா ஒரு கரைச்சலும் இல்ல..! அங்க வைச்சு அல்கா எல்லாத்தையும் பார்த்துக்குவான்.

 

அறியாமையிலும்.. வறுமையிலும்.. இவர்கள் அல்காவை நம்பிக்கிட்டு இருக்காங்க. இதே இடத்தில்..  பணக்கார முஸ்லீம்கள் அல்காவை விட்டு அப்பால் போய்கிட்டு இருக்காங்க..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதம் என்ற மாயை ஒரு மனிதனை எந்த அளவுக்கு முட்டாளாக்கி விடுகின்றது என்பதற்கு இந்தத் தாய் ஓர் எடுத்துக்காட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிசானாவே தப்பை ஏற்றுக்கொள்ளாதவிடத்து இது எப்படி!

Link to comment
Share on other sites

தனக்கு கிடைக்க உள்ள பணம்/வீடு, உறுதியளிக்கப்பட்ட சவூதி பணக்காரரின் வேண்டுகோளுக்கு அமையவும் இவ்வாறு இந்த தாய் கூறி இருக்கலாம் :rolleyes:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தனக்கு கிடைக்க உள்ள பணம்/வீடு, உறுதியளிக்கப்பட்ட சவூதி பணக்காரரின் வேண்டுகோளுக்கு அமையவும் இவ்வாறு இந்த தாய் கூறி இருக்கலாம் :rolleyes:  

 

அதுமட்டும் காரணமல்ல, அகூதா!

 

வெறும் ஆணாதிக்கத்தில் ஊறிப்போன மதத்தில் பிறந்ததன் விளைவு!

 

வேறு வழியில்லை, இந்தத் தாய்க்கு!

Link to comment
Share on other sites

சுதந்திர கட்சி சிராணி தன்னை காப்பாற்றேலாமல் தவிக்கிறா. இந்த ஏழை மனிசியை போய்குறை சொல்லி என்ன. 

 

ஹிஸ்புல்லாதான் வீட்டுக்கு வந்த கண்கண்ட "அல்லா".

 

இலங்கையில்  முஸ்லீம் பெண்கள் மொட்டாக்கு போட்டு அடையாள அட்டை படம் எடுக்க கூடாதென்றவர் இல்லையா கோத்தா.

 

தனது பெண்ணை அல்லாதான் கொண்டு போனார் என்றணிந்த பெண்ணை பேசவைத்து சவுதியில் இருக்கும் ஷரியா சட்டங்களா அல்லது சிராணியை பதவி நீக்கியிருக்கும் இலங்கை சட்டங்களா?

 

சரிதான், உடலை கொண்டுவரத்தன்னும் ஷரியா சட்டமா இடம்கொடுக்க மறுத்தது? இன்று அந்த பெண்ணுக்கு இலவச வீடுகட்டிக்கொடுக்கவரும் சவுதி தனவந்தர் (பெயர் சொல்ல வெக்கப்படும் ஹிஸ்புல்லாவும் இலங்கை அரசும்) அன்று இந்த பணத்தை போட்டு அப்பீல் எடுக்க ஷரியா சட்டம் மறுத்ததா?

 

அப்பன் ஆரொ பெண்ணொடு இதயம் போட்டு என்று கட்டிபிடிச்சுகொண்டு பட்டுத்திருக்கிறானாம். இந்த அவலத்திற்குள் வந்து பங்கெடுத்தால் அவனுக்கு இதயம் வலிக்குமாம்.

 

இந்த பெண்ணுக்கு இனி தேவையான இறைச்சி கிடக்கும் போலை. இதில் புத்தம் என்ன, சைவம் என்ன, முகமதியம் என்ன, பெரியார் என்ன? "ஏழைகள் வாழ்வது கண்ணிரிலே" என்று கூறிக்கொண்டு நினைவு வந்து தொண்டைக்குள் விக்கும் போது ஒரு துளி கண்ணீரை உகுத்திவிட்டு ஒவ்வொரு துண்ட்டாக ஒவ்வொரு நாளும் காச்சி சாப்பிடட்டும். 

 

அது சரியாதான என்று அல்லா பார்த்துகொள்ளட்டும்.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

எனது மகள் ரிசானாவை அல்லாஹ் தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான்.

 

அந்த குழந்தையின் உயிரையும் அல்லா தான் எடுத்தான் என்று சொல்லி விட்டு ரிசானாவுக்கு மன்னிப்பு வழங்கியிருக்கலாம் தானே. முஸ்லிம் நாடான சவூதியே அவ்வாறு நினைக்காத போது இலங்கை முஸ்லிம்கள் இவ்வாறு மூட நம்பிக்கையுடன் உள்ளார்களே.

கடவுளை நம்பலாம். ஆனால் கடவுளை பைத்தியக்காரத்தனமாக இப்படி நம்ப கூடாது.

மதம் என்ற மாயை ஒரு மனிதனை எந்த அளவுக்கு முட்டாளாக்கி விடுகின்றது என்பதற்கு இந்தத் தாய் ஓர் எடுத்துக்காட்டு.

 

உண்மை தான் அண்ணா.

Link to comment
Share on other sites

திராவிட கண்மணிகளே எங்கே போய் விட்டீர்கள், வந்து உங்கட பகுத்தறிவை காட்டுங்கோவன், இல்லை அவர்களை இஸ்லாம் மதம் ஒஇன்பற்றும் தமிழர்கள் என்று மன்னித்த் விட்டீர்களா????/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த குழந்தையின் உயிரையும் அல்லா தான் எடுத்தான் என்று சொல்லி விட்டு ரிசானாவுக்கு மன்னிப்பு வழங்கியிருக்கலாம் தானே. முஸ்லிம் நாடான சவூதியே அவ்வாறு நினைக்காத போது இலங்கை முஸ்லிம்கள் இவ்வாறு மூட நம்பிக்கையுடன் உள்ளார்களே.

கடவுளை நம்பலாம். ஆனால் கடவுளை பைத்தியக்காரத்தனமாக இப்படி நம்ப கூடாது.

 

உண்மை தான் அண்ணா.

 

கேட்டாளே , ஒரு கேள்வி? :icon_idea:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
http://www.yarl.com/forum3/index.php?showtopic=114805#entry848364 இந்த கட்டுரையில் உள்ள விடயங்கள் பல உண்மைகளை சொல்லுகின்றன....
Link to comment
Share on other sites

ஷரிய சட்டங்கள் மனிதனை திருத்துவதுக்கு எண்று ஒரு இந்திய (குஜராத்தி) இஸ்லாமியர் விளங்கப்படுத்தினார் ...   

 

அப்படியானால்  ஆயிரக்கணக்கான வருடங்களாக சவுதி அராவிபியாவில் ,களவுகளும்,  பாலியல் குற்றங்களும் , கொலைகளும் குறைந்து எல்லாரும் நல்லவர்களாக இருக்க வேண்டுமே அங்கு குற்றங்களே இல்லையா எண்று கேடேன்..  அவர் பதில் ஒண்றும் சொல்லவில்லை...  வேறு யாரும் முடிந்தால் சொல்லுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையைக் கொன்றாலும் தாயைக் கொன்றாலும் மதம் என்ற போர்வைக்குள்

முஸ்லீம்கள் எப்போதும் ஒன்றாகவே இருக்கின்றார்கள்.

 

ஷரி ஆ வறுமையில் வாடும் முஸ்லீம்களுக்கு மட்டும் தான்

பணக்கார அரேபியர்களுக்கு அது செல்லாது

Link to comment
Share on other sites

சுதந்திர கட்சி சிராணி தன்னை காப்பாற்றேலாமல் தவிக்கிறா. இந்த ஏழை மனிசியை போய்குறை சொல்லி என்ன. 

 

 

ரிசானாவின் கதியே சிராணிக்கும் நேர்ந்துள்ளது -மனோ கணேசன்

 
 

page2.jpgரிசானா நாபீக்கிற்கு நேர்ந்த கதியே பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கும் நேர்ந்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புதிதாக பிரதம நீதியரசர் ஒருவரை நியமித்தால் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சட்டத்தரணிகளும் நீதவான்களும் அறிவித்துள்ளனர்.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை காரணமாக நாடாளுமன்றின் உன்னத தன்மைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டமை கண்டிக்கப்பட வேண்டியது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

http://nerudal.com/nerudal.54442.html

Link to comment
Share on other sites

ஷரிய சட்டங்கள் மனிதனை திருத்துவதுக்கு எண்று ஒரு இந்திய (குஜராத்தி) இஸ்லாமியர் விளங்கப்படுத்தினார் ...   

 

அப்படியானால்  ஆயிரக்கணக்கான வருடங்களாக சவுதி அராவிபியாவில் ,களவுகளும்,  பாலியல் குற்றங்களும் , கொலைகளும் குறைந்து எல்லாரும் நல்லவர்களாக இருக்க வேண்டுமே அங்கு குற்றங்களே இல்லையா எண்று கேடேன்..  அவர் பதில் ஒண்றும் சொல்லவில்லை...  வேறு யாரும் முடிந்தால் சொல்லுங்கள்...

 

சவூதி அராபியாவில் அந்த நாட்டு குடிமக்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதில்லை.  அங்கு நாட்டு குடிமக்கள் மிகவும் சிறுபான்மையாகவும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு துறைகளிலும் வேலை செய்ய வந்தவர்கள் பெரும்பான்மையாகவும் இருக்கிறார்கள். சவூதி மக்கள் செல்வந்தர்களாக இருப்பதால் சாதாரண குற்றச்செயல்களில் ஈடுபடும் தேவை அவர்களுக்கு இல்லை.

Link to comment
Share on other sites

 சவூதி மக்கள் செல்வந்தர்களாக இருப்பதால் சாதாரண குற்றச்செயல்களில் ஈடுபடும் தேவை அவர்களுக்கு இல்லை.

 

சவுதிதான் சரியான அரசு. வாற போறவைக்காக ஷரியா சட்டம் போட்டு கழுத்து வெட்டுது. <_<

 

கொலையை தாய் தான் செய்தார என்பதும், அதனால்த்தால் அவர் பிரேத பரிசோதனையை, மரணவிசாரணையை முடக்கினார என்பதும் கலைஞன் எழுப்பியிருக்கும் சந்தேகம். அந்த கருத்துக்கும் பதில் அளிக்க முடியுமா?

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114413#entry846083

 

அந்த குடும்பம் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு,   குழந்தையின் தாயார் கொடுமைப்படுத்தியதால் அந்த கோபத்திற்காக சிறுமி,குழந்தையை திருகிக் கொன்றாள் என்பதாகும்.சவுதி நாடு செல்வந்தர்கள் செய்வது சாதாரண குற்றங்களல்ல என்ற நிலைப்பாட்டில் இருந்து இறங்க மறுப்பதால்  ரிசானாவின் பெற்றார்களுக்கு பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய தாய் மீது வழக்கு தொடர்ந்து நட்ட ஈடு பெற ஒரு வழியுமில்லை. 

Link to comment
Share on other sites

சவூதி அராபியாவில் அந்த நாட்டு குடிமக்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதில்லை.  அங்கு நாட்டு குடிமக்கள் மிகவும் சிறுபான்மையாகவும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு துறைகளிலும் வேலை செய்ய வந்தவர்கள் பெரும்பான்மையாகவும் இருக்கிறார்கள். சவூதி மக்கள் செல்வந்தர்களாக இருப்பதால் சாதாரண குற்றச்செயல்களில் ஈடுபடும் தேவை அவர்களுக்கு இல்லை.

 

உண்மையில் சவூதிக்கு வேலைக்கு செல்பவர்களை தான் அங்குள்ள மக்கள் பலவிதமாக கொடுமைப்படுத்துவதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சவூதி அரசாங்கமே இப்படி நடக்கும் போது அங்குள்ள மக்கள் நிச்சயம் வன்முறை உணர்வு கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

சவுதிதான் சரியான அரசு. வாற போறவைக்காக ஷரியா சட்டம் போட்டு கழுத்து வெட்டுது. <_<

 

கொலையை தாய் தான் செய்தார என்பதும், அதனால்த்தால் அவர் பிரேத பரிசோதனையை, மரணவிசாரணையை முடக்கினார என்பதும் கலைஞன் எழுப்பியிருக்கும் சந்தேகம். அந்த கருத்துக்கும் பதில் அளிக்க முடியுமா?

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114413#entry846083

 

கொலையை தாய் தான் செய்தார் என்று கலைஞன் அண்ணா குறிப்பிடவில்லை.

 

பிரேத பரிசோதனை செய்யப்படாததால் ரிசானா குழந்தையை கொலை செய்தார் என்று நிரூபிக்கப்படவில்லை. எனவே ரிசானா குழந்தைக்கு பால் பருக்கும் போது தவறுதலாக மரணம் சம்பவித்திருக்க சந்தர்ப்பம் உள்ளது என்ற அர்த்தத்தில் கலைஞன் அண்ணா கூறியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவூதி அராபியாவில் அந்த நாட்டு குடிமக்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதில்லை.  அங்கு நாட்டு குடிமக்கள் மிகவும் சிறுபான்மையாகவும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு துறைகளிலும் வேலை செய்ய வந்தவர்கள் பெரும்பான்மையாகவும் இருக்கிறார்கள். சவூதி மக்கள் செல்வந்தர்களாக இருப்பதால் சாதாரண குற்றச்செயல்களில் ஈடுபடும் தேவை அவர்களுக்கு இல்லை.

தவறான தகவல் அங்கு உள்ளவர்கள் எல்லாம் செல்வந்தர்கள் அல்ல .வறுமைகொட்டுக்கு கீழ் உள்ள மக்கள் அதிகம்..முக்கியமாக சியா முஸ்லிம்கள் மிகவும் வறுமையில் உள்ளார்கள்..

Link to comment
Share on other sites

தீர்ப்பை முழுமையாக ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் தாயின் சுயவிருப்பு, வெறுப்பு. ஆனால், இங்கு விடயம் என்ன என்றால் பல்லாயிரம் மக்களும் மனித உரிமை அமைப்புக்களும் இவ்விடயமாக குரல் கொடுத்தது மனிதநேயத்திற்காகவும், நீதி நியாயத்திற்காகவுமே என்பதை நாம் நினைத்துக்கொள்ளவேண்டும். நாளை இன்னோர் அப்பாவிப்பெண்ணிற்கு இப்படியானதோர் நிலமை தொடர்ந்தும் சவூதி அரேபியாவில் தொடரக்கூடாது. அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது. குற்றம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளிற்கு வழங்கப்படும் தண்டனை சர்வதேசட்டதிட்டங்களிற்கு கட்டுப்பட்டதாய் அமையவேண்டும். தான்தோன்றித்தனமாக தலைவெட்டி எறிவதற்கு மனிதசமுதாயம் மண்ணோடு மண்ணாக ஊர்ந்து வாழும் புழுக்களோ பாம்போ அல்ல. நவீன தொழில்நுட்ப, விஞ்ஞான யுகத்தில் அனைத்து விஞ்ஞான, தொழில்நுட்ட செளகரியங்களையும் அனுபவித்துக்கொண்டு வெறும் ஐந்தாம் நூற்றாண்டு வியாக்கியானங்களின் அடிப்படையில் மட்டும் சட்டங்களை கதைப்பதும், பிரயோகிப்பதும் முட்டாள்தனமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை இன்னோர் அப்பாவிப்பெண்ணிற்கு இப்படியானதோர் நிலமை தொடர்ந்தும் சவூதி அரேபியாவில் தொடரக்கூடாது. அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது. குற்றம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளிற்கு வழங்கப்படும் தண்டனை சர்வதேசட்டதிட்டங்களிற்கு கட்டுப்பட்டதாய் அமையவேண்டும். தான்தோன்றித்தனமாக தலைவெட்டி எறிவதற்கு மனிதசமுதாயம் மண்ணோடு மண்ணாக ஊர்ந்து வாழும் புழுக்களோ பாம்போ அல்ல. நவீன தொழில்நுட்ப, விஞ்ஞான யுகத்தில் அனைத்து விஞ்ஞான, தொழில்நுட்ட செளகரியங்களையும் அனுபவித்துக்கொண்டு வெறும் ஐந்தாம் நூற்றாண்டு வியாக்கியானங்களின் அடிப்படையில் மட்டும் சட்டங்களை கதைப்பதும், பிரயோகிப்பதும் முட்டாள்தனமானது.

இது தொடரும் கலைஞன்.இந்த சட்டம் ஒரு தனிமனிதனால் நிறை வெற்றப்படவில்லை...இஸ்லாமிய சட்டம் ஆகவே இப்படியான சட்டங்கள் வேறு நாடுகளிலும் வெகுவிரைவில் அமுல்படுத்த இஸ்லாமியர் முயற்சி செய்யக்கூடும்.....

Link to comment
Share on other sites

கொலையை தாய் தான் செய்தார் என்று கலைஞன் அண்ணா குறிப்பிடவில்லை.

நானும் கலைஞன் அதைதான் சொன்னார் என்று சொல்லவில்லை. கலைஞன் சிறுமிதான் கொலை செய்தார் என்பதில் இருக்கும் சந்தேகத்தை பெற்றோர் பிரேத பரிசோதனை செய்ய மறுத்ததில் வைத்து எழுப்பியிருக்கிறார். இது பெற்றோர் குழந்தையை என்ன நிலைமையில் சிறுமியிடம் கையளித்தனர் என்ற கேள்வியை எழுப்பும்.  சாதரண சிறுவர் இருமல் மருந்தையே குழந்தை ஒன்றுக்கு அதிகளவு பருக்கிவிட்டு அதை சிறுது நேரத்தில் இன்னொருவர் கையில் கொடுத்து பாலைப் பருக்கு என்று கட்டளை இட்டால், பால் பருக்குபவர் நியாமான ஆபத்தில் அகப்பட சந்தர்ப்பம் இருக்கிறது. பிரேத பரிசோதனையில் Overdose நிரூபிக்கப்படும் வரை பால் பருக்கியவருக்கு தன் மீதே சந்தேகம் வர நிறைய சந்தர்ப்பம் இருக்கிறது. 

 

வெளியாகி இருக்கும் அறிக்கைகளில் இருப்பவை குரோத மலையாளத்தவர் மொழி பெயர்த்தவை. மலையாளி அந்த வழக்கு உலக பிரசித்தி பெற்ற பின்னரும் தன்னை வெளியேகாட்ட முயவில்லை. சிறுமி வீட்டில் வைத்து அடிக்கப்பட்டும், பொலிஸ்ரேசனின் வைத்து அடிக்கப்பட்டும் குற்றம் ஒத்துக்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறாள். பிள்ளையை பொறுப்பேற்றவுடன் தாயும், பொலிசும் குழந்தை இறந்தாக முடிவுக்கு வராமல் கொலை செய்யப்பட்டதாக முடிவெடுத்திருந்தார்கள். இதை கலைஞன், அவர்களின் பழிவாங்கும் இயல்பை சுட்டிக்காட்டி வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அதுவே கூட சரியா என்பதுதான் சந்தேகம்.

 

உடனடி ஆவேசம் தீர்ந்து ஏழு வருடங்களின் பின்னரும், நல்ல மொழி பெயர்ப்பாளர்கள் கிடைத்து நடந்தவையாக கூறப்பட்டதை பெற்றார் நன்கு விளங்கிக்கொண்ட பின்னரும், அந்த பெண்ணும் விபரம் தெரியாத சிறுமியாயினும் அந்தவயதில் குடும்பத்தை காப்பாற்ற பொய்சொல்லி தான் தொழில் தேடி வந்தாள் என்ற பரிதாப உண்மை தெரிந்த பின்னரும், கெட்டு நொந்த உருவமுடைய தாய் தந்தையர் நேரில் சென்று மன்றாடிய பின்னரும், தொண்டர் நிறுவனங்கள் கொலையாக இருந்தாலும் மன்னிப்பு கொடுக்கலாம் என்று மனித தன்மையை விளங்கப்படுத்திய பின்னரும், கொலைக்கு பணத்தை ஏற்று அந்த பிள்ளையும் வாழவிடலாம் என்பதை சிந்திக்க முடியாமல் போனவர்கள்,கலைஞ்ஞன்பேழுப்பிய சந்தேகமான  ஊணுக்கு ஊண் தான் கேட்டார்கள் என்பது நம்ப முடியாததொன்று 

 

மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவருடத்தின் பின்னர்தான் சீரான ஆரம்ப விசாரணைகளே தொடங்கியிருக்கிறது. பலநாடுகளில் கொலைக்கு மரண தண்டனை உண்டு. கொலை நிரூபிக்கப்பட்டதாயின், அதில் ஷரியா தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற புது விவாதம் தேவையானது போல் இல்லை. 

 

பால் கொடுத்தபோது விக்கி,புரக்கடித்து குழந்தை திணறியதாக சிறுமி எழுதிய தபாலில் இல்லை. பால் வெளியே வழிந்ததாகத்தான் இருக்கிறது. வெளியே போய் வந்த தாய், வெளியே போகும்போது பொறுப்பாக பாலைக் கொடுத்துவிட்டுப்போயிருந்தால் அதன் பின்னர் 6-7 மணித்தியாலங்களுக்கு பால் கொடுத்திருக்க வேண்டிய தேவை வராது.

 

சிறுது நேரத்தில் திரும்பி வந்த தாய் உடனே பிள்ளையைப் பார்க்கவில்லை. ஏதாவது சதி செய்த்துவைத்துவிட்டு சென்றுவிட்டு வந்து வேலைக்காரியை அடித்தாவா என்பது கேள்வி. கோட்டில் மலையாளி செய்த மொழி பெயர்பை மறுக்க சிறுமிக்கு  பிற்காலம் சந்தர்ப்பம் இருக்கவில்லை.  மறுப்பு தெரிவிக்கத்தக்கவற்றை தெரிந்தெடுத்தவர்கள் சமூக ஆர்வலர்களே. அவர்களின் நோக்கம் மன்னிப்பு கேட்டு தண்டணையை குறைத்து தலையை காப்பாற்றுவதே அல்லாமல் எதிர்த்துவாதாடி வழக்கை வெல்வதல்ல.(இதுதான் பல அமெரிக்க வழக்குகளில் நடந்தவை. பொலிசால் சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து வழக்கு சோடிக்கப்பட்டுவிட்டால், குற்றத்தை ஒப்புகொள்ளும் படி பலதடவைகள் வழக்கறிஞ்ஞர்கள் ஆலோசனை வழங்கி தண்டனையை குறைத்து சிறை வாங்கி கொடுத்திருக்கிறார்கள். ஒருவர் 40 ஆண்டுகளின் பின்னர் DNA பரிசோதனை மூலம் வெளியே வந்து தனக்கும் தனது வழக்கறிஞ்ஞருக்கும் இடையில் நடந்த சம்பாஷ்னைகளயும், தான் ஏன் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்பதையும் கூறியிருந்தார்)  குழந்தையை தான் பொறுப்பேற்கும் போது குழந்தை சுகநல வெளிப்பாடுகளை காட்டியிருந்தது என்பது சிறுமியிடம் செய்யப்பட்ட குறுக்கு விசாரணைகளில் கண்டறியப்பட்டிருந்ததா? சிறுமிக்கு குழந்தையின் சுக நலவெளிப்பாடுகளை அளக்கத்தக்க ஆற்றல் இருந்ததா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.