Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துலைக்கோ போறியள்?

Featured Replies

நீண்டு வளைந்து திரும்பி பாம்பு மாதிரி செல்லுகின்ற அந்த மெயின் ரோட் பிரபல சந்தியில் முடிவடைகிறது. காலை ஏழு ஏழரை ஆனதும் பரபரப்பு அடையும்.தெரு ஒன்பது மணியானதும் அடங்கி விடும். மீண்டும் இதே பரபரப்புடன் மாலை ஆனவுடன் தோற்றம் அளிக்கும்.200 யார் ஒரு இடைவெளிக்கு பஸ்தரிப்பிடம் .பஸ்தரிப்பிடம் என்றதுக்கான அறிவுப்பலகையோ அடையாளமோ இல்லை. அது தான் என்று வழக்கமாக்கி கொண்டார்கள்.அங்கு கூட்டமாக நிற்கும் வெள்ளை உடை அணிந்த பள்ளி மாணவிகள் ஸ்கூல் பஸ்க்காக காத்திருப்பது ஒரு புறம். சந்தியில் சென்று டவுன் பஸ் பிடித்து அலுவலக வேலை செல்பவர் மறு புறம் சைக்கிளிலும் கால் நடையாகவும் அறக்க பறக்க சென்று கொண்டிருக்கிறார்கள்

http://sinnakuddy.blogspot.com/2007/07/blog-post_17.html

சின்னகுட்டி நல்ல இருந்தது உங்க பதிவு ஆனாலும் எனக்கு துலைக்கு என்ற சொல் விளங்கவில்லை அப்படி என்றால் என்ன?

:D

  • கருத்துக்கள உறவுகள்

கதை எழுதிய விதம் நன்றாக இருக்கிறது சின்னக்குட்டி. பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
சின்னகுட்டி நல்ல இருந்தது உங்க பதிவு ஆனாலும் எனக்கு துலைக்கு என்ற சொல் விளங்கவில்லை அப்படி என்றால் என்ன? :D
வணக்கம் ஜமுனா.. பதிவை பார்வையிட்டு கருத்து கூறியதுக்கு மிக்க நன்றி.ஒருவரை வழியில் தற்சயலாக கண்டால் துலைக்கோ என்று குசலம் விசாரிப்பார்கள்.தொலைக்கோ என்ற சொல் ..துலைக்கோ என்று கால போக்கில் மாறி இருக்கலாம்.தொலைக்கோ என்பது தொலை தூரத்தோக்கோ என்று பொருள்படும்.
கதை எழுதிய விதம் நன்றாக இருக்கிறது சின்னக்குட்டி. பாராட்டுக்கள்.
வணக்கம் கந்தப்பு.. பதிவை பார்வை இட்டு பாராட்டி உற்சாகபடுத்தியதுக்கு மிக்க நன்றிகள் :lol:
  • கருத்துக்கள உறவுகள்

கறுத்து கோட்டு போட்டு அங்கு திரியும் அப்புக்காத்து மாரும் தான் . கறுப்பு கோட்டிற்குள் இருந்து கொண்டு கோட்டில் கொலை வழக்கில் றேப்பிங் வழக்கில் கை எப்படி வைச்சிருந்தனி கால்களை எப்படி வைச்சிருந்தனி என்று சாட்சிகளை மிரட்டும் விண்ணரும் உவை தான். வெளியிலை வந்து வெள்ளை வேட்டி கட்டி கொண்டு வீராப்பாக நடிச்சு தமிழருக்கு விடுதலை வேண்டி தாறன் என்று பூச்சாட்டி காட்டுகிற தன்மான தானை தமிழின தலைவர்களும் உவை தான்

இப்படியான அப்புகாத்துமாரை புகழ்ந்து பாராட்டி விவாதிக்கும் சாதாரண மக்கள் பலபேர்,அவையளுக்கு புகழாரம் போடுபவர்கள் ஏராளம்,வாத திறமையை தான் பெரிதா பேசுவார்கள் ஆனால் பாதிக்கபாட்டவர்களை பற்றி சிந்திக்க மாட்டார்கள்,நான் கேள்விபட்ட வழக்கொன்றில் பிரபல சட்டதரணி பாதிக்கபட்ட பெண்ணிடம் நூலை கொடுத்து வக்கீல் ஊசியை கையில் வைத்திருந்தாராம் பெண்ணிடம் ஊசியை கோக்கும்படி கொரினாராம் அதே நேரம் அவர் ஊசியை ஆட்டி கொண்டு இருந்தாராம் அந்த பெண்ணுக்கு கோக்க முடியாம போய்விட்டதாம்,அவர் உடனே சொன்னார் நீ இடம் கொடுத்தபடியால் தான் பாதிக்கபட்டுள்ளாய் இல்லாவிட்டால் பாதிக்கபடிருக்கமாட்டாய் என்று தனது வாத திறமையால் அந்த வழக்கை வென்றார்.இப்படியான அப்புகாத்துமார் தான் நம்மன்ட தலைவராக இருந்திருக்கீனம் அந்த காலத்தில.

சின்னகுட்டி உங்கள் கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது வாழ்த்துகள்........

யாராவது வெளிய போனா எங்க போறிங்கள் என்று கேட்டா வீட்ட பெரியவங்கள் பேசிவினம் அப்படி கேட்க்ககூடாது துலைக்க போறிங்கள் என்று தான் கேட்க்கனும் என்று , அது ஏன் என்று இன்னும் எனக்கு புரியல

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது வெளிய போனா எங்க போறிங்கள் என்று கேட்டா வீட்ட பெரியவங்கள் பேசிவினம் அப்படி கேட்க்ககூடாது துலைக்க போறிங்கள் என்று தான் கேட்க்கனும் என்று , அது ஏன் என்று இன்னும் எனக்கு புரியல

எங்க வீட்டிலும் இப்பிரச்சனை இருந்தது.நாங்க தப்பித்தவறி கேட்டு போன விசயம் பிழைத்துப் போய்வந்தால் அன்று சாத்துப்படிக்கு சொல்லத் தேவை இல்லை.

நன்றி சின்னகுட்டி

  • தொடங்கியவர்
,நான் கேள்விபட்ட வழக்கொன்றில் பிரபல சட்டதரணி பாதிக்கபட்ட பெண்ணிடம் நூலை கொடுத்து வக்கீல் ஊசியை கையில் வைத்திருந்தாராம் பெண்ணிடம் ஊசியை கோக்கும்படி கொரினாராம் அதே நேரம் அவர் ஊசியை ஆட்டி கொண்டு இருந்தாராம் அந்த பெண்ணுக்கு கோக்க முடியாம போய்விட்டதாம்,அவர் உடனே சொன்னார் நீ இடம் கொடுத்தபடியால் தான் பாதிக்கபட்டுள்ளாய் இல்லாவிட்டால் பாதிக்கபடிருக்கமாட்டாய் என்று தனது வாத திறமையால் அந்த வழக்கை வென்றார்.இப்படியான அப்புகாத்துமார் தான் நம்மன்ட தலைவராக இருந்திருக்கீனம் அந்த காலத்தில.சின்னகுட்டி உங்கள் கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது வாழ்த்துகள்........
வணக்கம் புத்தன்.. பதிவை வாசித்து பாராட்டி, பதிவோடை ஒட்டிய மேலதிக கருத்துக்கள் விபரமாய் சொன்னதுக்கு மிக்க நன்றிகள்.புத்தன்..நீங்களும் சரியான விண்ணர் தான் ..சரியாய் கண்டுபிடிச்சிட்டியள்.. அந்த பொன்னான விண்ணரை.. :D:huh:
எங்க வீட்டிலும் இப்பிரச்சனை இருந்தது.நாங்க தப்பித்தவறி கேட்டு போன விசயம் பிழைத்துப் போய்வந்தால் அன்று சாத்துப்படிக்கு சொல்லத் தேவை இல்லை.நன்றி சின்னகுட்டி
வணக்கம் ஈழப்பிரியன் பதிவை பார்த்து கருத்து பரிமாறியதுக்கு நன்றிகள்
யாராவது வெளிய போனா எங்க போறிங்கள் என்று கேட்டா வீட்ட பெரியவங்கள் பேசிவினம் அப்படி கேட்க்ககூடாது துலைக்க போறிங்கள் என்று தான் கேட்க்கனும் என்று , அது ஏன் என்று இன்னும் எனக்கு புரியல
வணக்கம் செவ்வந்தி பதிவை பார்த்து கருத்து பரிமாறியதுக்கு நன்றிகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்வாசனைகளை அடிக்கடி நுகரவைக்கும் சின்னக்குட்டியாருக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.உங்களைப்போன்

Edited by குமாரசாமி

பதிவு அருமையாக இருந்தது சின்னக்குட்டி

நன்றாக எழுதியிருக்கின்றீர்கல் சின்னக்குட்டி. உங்களுடைய எழுத்து நடை எனக்கு பிடித்திருக்கின்றது.

கதை இன்னும் முடிவடையவில்லை போலிருக்குது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சின்னக்குட்டி

நீண்ட நாட்களின் பின்னர் சந்திக்கிறேன். உங்கள் 'துலைக்கோ போறியள்?" மிகவும் அருமையாக இருக்கின்றது. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தால் இன்னமும் சுவையாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. ஊரை, தரகர் கந்தையாவை மண்வாசனை கெடாமல் வர்ணித்த விதம் சிறப்பாக உள்ளது.

நான் பொதுவாக ஒன்றைக் கூற அனுமதிப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அதிகமானோர் எழுதும்போது விடுகின்ற தவறுகள்: உயிரெழுத்துக்களுக்கு முன்னால் கட்டாயம் 'ஓர்" என்று வரவேண்டும். 'ற்" 'க்" இரண்டும் அடுத்தடுத்து வரக்கூடாது. ஒரு கதையை எழுதிவிட்டு குறைந்தது இரண்டு அல்லது மூன்று தடவைகள் வாசித்தால் எழுத்துப்பிழைகள் இருந்தால் தவிர்க்கலாம், எங்கெங்கே மாற்றங்கள் செய்தால் இனிப்பாக இருக்கும் என்பதும் எழுதுபவர் மனத்தில் எழலாம்.

கதை எழுதுபவர்களும், கருத்தெழுதுபவர்களும் இதனைக் கவனிக்கும்படி மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்.

Edited by Selvamuthu

உயிரெழுத்துக்களுக்கு முன்னால் கட்டாயம் 'ஓர்" என்று வரவேண்டும்.

இது எனக்கு புரியவில்லை. விளக்கமாக சொல்ல முடியுமா?

Edited by Mathan

  • தொடங்கியவர்
மண்வாசனைகளை அடிக்கடி நுகரவைக்கும் சின்னக்குட்டியாருக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.உங்களைப்போன்
  • தொடங்கியவர்

பதிவு அருமையாக இருந்தது சின்னக்குட்டி

மாப்ளே.. வணக்கம் . பதிவை பாராட்டியதுக்கு மிக்க நன்றி. முதற்கண் இந்த சின்னகுட்டியின் மனமார்ந்த திருமண வாழ்த்துகள் உங்களுக்கு

நான் பதிவு போட தொடங்கிய காலத்தில் உற்சாக படுத்தியவருள் உங்கள் துணைவியார் ரசிகையும் ஒருவர். இத்தருணத்தில் நினைவு படுத்தி கொள்ள விரும்புகிறேன். நன்றி

  • தொடங்கியவர்

நன்றாக எழுதியிருக்கின்றீர்கல் சின்னக்குட்டி. உங்களுடைய எழுத்து நடை எனக்கு பிடித்திருக்கின்றது.

கதை இன்னும் முடிவடையவில்லை போலிருக்குது?

மோனை மதன்..பாராட்டினதுக்கு நன்றிகள் ராசா .

மதன். வேல்ஸ் கோயில் கதிர்காமம் பார்த்தாச்சு.. இப்ப கனடாவுக்கு போறீங்களாக்கும்.. அங்கையும் எங்கடை ஆக்கள் மூலைக்கு மூலை கோயில் திறந்து வைச்சிருக்கினம் பிரச்சனை இல்லை உங்களுக்கு :huh::lol:

  • தொடங்கியவர்
வணக்கம் சின்னக்குட்டிநீண்ட நாட்களின் பின்னர் சந்திக்கிறேன். உங்கள் 'துலைக்கோ போறியள்?" மிகவும் அருமையாக இருக்கின்றது. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தால் இன்னமும் சுவையாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. ஊரை, தரகர் கந்தையாவை மண்வாசனை கெடாமல் வர்ணித்த விதம் சிறப்பாக உள்ளது. நான் பொதுவாக ஒன்றைக் கூற அனுமதிப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அதிகமானோர் எழுதும்போது விடுகின்ற தவறுகள்: உயிரெழுத்துக்களுக்கு முன்னால் கட்டாயம் 'ஓர்" என்று வரவேண்டும். 'ற்" 'க்" இரண்டும் அடுத்தடுத்து வரக்கூடாது. ஒரு கதையை எழுதிவிட்டு குறைந்தது இரண்டு அல்லது மூன்று தடவைகள் வாசித்தால் எழுத்துப்பிழைகள் இருந்தால் தவிர்க்கலாம், எங்கெங்கே மாற்றங்கள் செய்தால் இனிப்பாக இருக்கும் என்பதும் எழுதுபவர் மனத்தில் எழலாம். கதை எழுதுபவர்களும், கருத்தெழுதுபவர்களும் இதனைக் கவனிக்கும்படி மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்.
வணக்கம் செல்வமுத்து அய்யா அவர்கட்கு. பதிவை வாசித்து பார்வையிட்டு கருத்து கூறியதுக்கு மிக்க நன்றிகள். எனது பதிவுகளில் எழுத்து சொல் இலக்கண பிழைகள் சில இடத்தில் இருக்கிறது என ஒரு அளவு அறிவேன். இந்த வேக உலகில் தமிழ் தட்டச்சு செய்யும் சிக்கலாலும் பதிவை விரைவில் போட வேண்டும் என்ற ஆவலாலும் மற்றும் நீங்கள் சொன்ன காரணங்களிலாலும் தவறுகள் நிகழ்ந்திருக்கலாம்.ஆலோசனைக்?ு விமர்சனத்துக்கும் நன்றி ஜயா. எதிர்காலத்தில் கவனம் எடுக்கிறேன் நன்றிகள்..
இது எனக்கு புரியவில்லை. விளக்கமாக சொல்ல முடியுமா?
எனக்கும் புரியவில்லை..தெளிவு படுத்தினால் உதவியாய் இருக்கும்.

Edited by sinnakuddy

:huh: ஆகா சின்னக்குட்டி அங்கிள்..நன்றாக எழுதி இருக்கீங்கள்..

அப்படியே ஊர் வாசம் வர வைச்சிடீங்க... அருமை...

  • தொடங்கியவர்

:huh: ஆகா சின்னக்குட்டி அங்கிள்..நன்றாக எழுதி இருக்கீங்கள்..

அப்படியே ஊர் வாசம் வர வைச்சிடீங்க... அருமை...

வணக்கம் பிரியசகி... பதிவை பார்த்து கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றிகள்.

மருமகள்.. நீங்களும் நல்லாய் எழுதிறியள்..டபிள் சந்தோசம். நன்றிகள்

உங்கள் எழுத்துக்கள் மக்களின் இயல்பான பேச்சு வழக்கத்தில் நகர்கின்றது அருமை. ஊரில் ஒரு நாய் குரைக்க முழு நாயும் குரைக்கும் என்ற வரிகளை படித்த போது ஒரு காட்சி விரிகின்றது அது பழைய ஞாபகங்கள் ஊடாக ஊருக்கே அழைத்து செல்கின்றது. அப்பு காத்து என்று அப்பா அம்மா அவர்கள் பேச்சு வழக்கில் கதைப்பினம். அந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றது.

உங்கள் எழுத்துக்கள் தொடர வேண்டும். உங்கள் அடுத்த கதையை எதிர்பார்திருக்கின்றேன்

அன்புடன்

சுகன்

சின்னக்குட்டியின் ஆக்கங்களை நான் விரும்பிப் படிப்பது வழக்கம். அவருடைய பெரும்பாலான ஆக்கங்கள் 70,80 களில் யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவங்களைத் தழுவி இருப்பதினால் எங்களை மீண்டும் பழைய காலத்தினை நினைக்கத் தூண்டுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் வணக்கம்

நான் உயிரெழுத்துக்களுக்கு முன்னால் ''ஓர்" என்று கட்டாயம் வரவேண்டும் என்பது உயிரெழுத்துக்களான ''அ" தொடக்கம் ''ஒள" வரையிலான சொற்களில் ஆரம்பிக்கும் சொற்களின் முன்னால் ''ஓர்" என்று வரவேண்டும் என்பது எமது இணக்கண விதிகளில் ஒன்று. மற்றைய எழுத்துக்களில் அதாவது நான் குறிப்பிட்ட உயிரெழுத்துகள் தவிர்ந்த எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்களின் முன்னால் ''ஒரு அல்லாது ஓர்" என்று வரலாம்.

உதாரணமாக: ஓர் அழகிய பெண். இதனை ஒரு அழகிய பெண் என்று எழுதக்கூடாது.

ஓர் ஊரில் என்றுதான் ஆரம்பிக்க வேண்டும். ஒரு ஊரில் என்று

ஆரம்பிக்கக் கூடாது.

இதேபோல்தான் மிகுதி எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு

முன்னாலும் வரவேண்டும்.

நாம் எப்படியாக ஆங்கிலத்தில் a e i o u என்பவற்றிற்கு முன்னால் an என்று எழுதுகின்றோமோ அப்படித்தான் தமிழிலும் 'ஒர்" என்று நினைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

மற்றொன்று: வசனங்கள் ஒருமை - பன்மையில் சரியாக எழுத, பேசவும் வேண்டும்.

உதராணம்: ''இராணுவத் தாக்குதல்களால் பல வீடுகள் நாசமாகின." என்று பன்மையில் வரவேண்டும். ஆனால் நாசமாகியது என்று ஒருமையில் முடிப்பார்கள். இது தவறு.

அதிகமானோர் எழுதும்போதும், முக்கியமாக எமது தமிழ் வானொலி, தொலைக்காட்சிகளில் செய்திகள் வாசிக்கும்போதும், உரையாடும்போதும் இன்றிலிருந்து எத்தனை முறை தவறாகப் பேசுகின்றார்கள், எழுதுகிறார்கள் என்று கவனித்துப்பாருங்கள். பிறருடைய மொழிகளைப் பேசும்போதும், எழுதும்போதும் எதுவித பிழைகளும் விடமாட்டார்கள் ஆனால் எமது தாய்மொழியில் தவறுகள் விடுவதைப் பார்க்கும்போது இரத்தம் கொதிக்கும். அதற்காகத்தான் எனது கருத்தை எழுதும்போது அப்படி எழுதினேன்.

கவனித்துப்பாருங்கள்.

மூன்றாவதாக ''ற் க்" இரண்டும் அடுத்தடுத்து வரக்கூடாது.

உதாரணம்: ஒரு திருக்குறளைப் பாருங்கள். ''கற்க கசடறக் கற்பவை கற்றபின் ..." என்று வருகிறது. இதுதான் சரி. இனிமேல் இத்தவறுகளையும், வேறும் தவறுகளையும் இதனைப் படிக்கவர்களாவது விடமாட்டார்கள் என்று நம்புகிறேன். உங்கள் பொறுமைக்கு எனது நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமாக: ஓர் அழகிய பெண். இதனை ஒரு அழகிய பெண் என்று எழுதக்கூடாது.

விளக்கத்திற்கு நன்றி ஐயா

பன்மையாக அமையும்பட்சத்தில் இவ்விதி பொருந்துமா? உதாரணத்திற்கு அழகிய பெண்கள் என்று வந்தால் முன்னுக்கு எப்படி ஓர் போட முடியும்?

Edited by தூயவன்

அருமையான பதிவு...:unsure:

  • தொடங்கியவர்

வணக்கம்.சுகன் பதிவை பார்த்து பாராட்டி எழுதிய விமர்சனத்துக்கு நன்றி.

வணக்கம் அரவிந்தன்.. பதிவை நான் போட தொடங்கிய காலத்திருந்து பதிவுகளோடு ஒட்டிய மேலதிக விபரங்களை எழுதி உற்சாக படுத்தியிருந்தீர்கள். இந்த பதிவை பார்த்தும் கருத்து சொன்னதுக்கு நன்றிகள்.

வணக்கம் செல்வமுத்து அய்யா உங்கள் விளக்கத்துக்கு மிகக நன்றிகள்.

வணக்கம் தூயா.. நன்றிகள்.

நல்ல பதிவா அப்படியா

அங்கையும் வந்து சொல்லுறது :unsure: .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.