Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்வாரி வலிசுமந்த எம் மீட்பரே...! மறுமுறையும் எம் மண்மீது வருவீரோ...?

Featured Replies

கல்வாரி வலிசுமந்த எம் மீட்பரே...!

மறுமுறையும் எம் மண்மீது வருவீரோ...?

எம் தமிழ் கருவறைகள் உமக்காய்க் காத்திருக்கின்றன...!

யாருமில்லையாம் இனிமேல்...எமக்காய்!!

உள்ளம் பதைக்கிறது.... எதிர்காலம் என்றொன்று,

இல்லாத காலத்தை நினைத்து!!!

ஏக்கங்கள் மட்டும் எம்மை வாட்டுகின்றதே!

ஏமாற்றங்கள் மட்டும் எம்மைத் துரத்துகின்றதே!!

எங்கு ஒளித்துவைத்தீர்... எம் விடுதலையை?

உங்கள் புதிர்கள் இன்னும் புரியாத...

பதர்களாய்த்தான் ... இன்னும் நாங்கள்!!

மீட்பர் வருவார்... உயிர்த்தெழுவார்...

இதெல்லாம் வெறும் நம்பிக்கையாய்ப் போய்விடலாம்... பரவாயில்லை!

ஆனால் உம் உன்னத தியாகங்கள் தோற்றதாய்...

வரலாறு எழுதத் துடிக்கின்ற பாவிகளுக்கும் மேலாய் நாம்!

'இயலாமை' என்றொன்று எம் வருங்காலத்தை நெருக்கும் முன்னமே,

வெட்கம்விட்டு... மானம்விட்டு... சூடு சுரணையற்று...

சொந்தமாய்ப் போராட திராணியற்ற பாவிகளாய்,

சுயநலத்தோடு கேட்கின்றோம்..............................

கல்வாரி வலிசுமந்த எம் மீட்பரே...!

மறுமுறையும் எம் மண்மீது வருவீரோ...?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடலும் அதற்க்கு நீங்கள் எழுதிய அருமையான கவிதையும்...கவனமாகக் கேளுங்கள்..எங்கள் போராட்டங்களை அப்படியே மறைமுகமாக காவிவருகிறது பாடல்....இப்பொழுது உணர்ச்சிப் போராட்டங்களே மிச்சமாகி இருக்கின்றது எமக்கு...

< எம் தமிழ் கருவறைகள் உமக்காய்க் காத்திருக்கின்றன...!

யாருமில்லையாம் இனிமேல்...எமக்காய்!!

உள்ளம் பதைக்கிறது.... எதிர்காலம் என்றொன்று,

இல்லாத காலத்தை நினைத்து!!! >

:)3 :):)

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போல நல்ல ஒரு அருமையான கவிதை!

ஏக்கம் நன்றாகவே கவிதையில் பிரதிபலிக்கின்றது!

ஆனால் ஒன்று, கவிதை!

வெற்றிடங்கள் என்றும் வெறுமையாகவே இருப்பதில்லை!

இதுவே இயற்கையினதும், பிரபஞ்சத்தினதும் அடிப்படை நியதியாகும்!

ஆறுதல் அடைவோம்! நடப்பவை நல்லவையாக நடக்கட்டும்!!! >>>>>

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றி பகிர்வுக்கு, காலம் மாறும் ஒருநாள், நம்பிக்கையுடன் இரு(ற)ப்போம்

Edited by உடையார்

ஏக்கங்கள் மட்டும் எம்மை வாட்டுகின்றதே!

ஏமாற்றங்கள் மட்டும் எம்மைத் துரத்துகின்றதே!!

எங்கு ஒளித்துவைத்தீர்... எம் விடுதலையை?

உங்கள் புதிர்கள் இன்னும் புரியாத...

பதர்களாய்த்தான் ... இன்னும் நாங்கள்!!

கவிதை.. அருமை....

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாதவர்களை அமைதியாக இருக்கவிட்டு

இருப்பவர்களை அமைதியாக எழ வைக்க வேண்டும்

கவிதைக்கு நன்றி கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பாடல் தேடலுக்கும் கவிதைப் பகிர்வுக்கும் ........நன்றி .

கவிக்கு தான் தேடலின் சுவை ......புரியும். எல்லோர் மனத்திலும் விதைக்கப்பட்ட ஒரு வலி .

  • கருத்துக்கள உறவுகள்

மீட்பர் வந்தாலும் இந்த சுய நலமிக்க மக்களுக்காக போராடி என்ன பலன் என்று வெட்கித் தலைகுனிவார்

முள்முடி சுமந்தவர் பட்ட துன்பங்களும் , அதனை வெளிப்படுத்தியபடி அமைந்த பாடல் வரிகளும் மனதைப் பிசைகின்றன.

"மீட்பர் வருவார்... உயிர்த்தெழுவார்...

இதெல்லாம் வெறும் நம்பிக்கையாய்ப் போய்விடலாம்... பரவாயில்லை!

ஆனால் உம் உன்னத தியாகங்கள் தோற்றதாய்...

வரலாறு எழுதத் துடிக்கின்ற பாவிகளுக்கும் மேலாய் நாம்!"

ஏக்கத்துடன் தாங்கள் வடித்த கவிதை படிப்போர் கண்களையும் கலங்கச் செய்து விட்டது.

வரலாறு எழுதி வீழ்ந்த நம் மீட்பர்கள் உயிர்த்தெழும் அற்புதம் நிகழுமாக இருந்தால் என்று ஒரு நிமிடம் சிந்தித்துப்பார்த்த அந்த நிமிடத்தில் மனம் நொறுங்கிப் போனது.

அவர்கள் தியாகங்கள் தோற்காது என்ற நம்பிக்கை என்றுமுண்டு.

மிக அற்புதமான கவிதைக்கு மிக்க நன்றிகள்.

  • தொடங்கியவர்

நல்ல பாடலும் அதற்க்கு நீங்கள் எழுதிய அருமையான கவிதையும்...கவனமாகக் கேளுங்கள்..எங்கள் போராட்டங்களை அப்படியே மறைமுகமாக காவிவருகிறது பாடல்....இப்பொழுது உணர்ச்சிப் போராட்டங்களே மிச்சமாகி இருக்கின்றது எமக்கு...

நன்றி சுபேஸ்...!

இந்தப் பாடலை நான் பார்த்த கணத்தில்... விம்மியழ மட்டுந்தான் என்னால் முடிந்தது. அதில் நான் இறைவனின் திருமகனை காணவில்லை.... எம் தமிழ் திருமகனையே கண்டேன்! எம் இனம் பட்ட வலிகளையே உணர்ந்தேன்! :(

அதன் மூலமாக வந்த... என் எண்ணத்தின் வரிகள்தான் இந்தக் கவிதை.

புரிதலுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பனே!

Edited by கவிதை

  • தொடங்கியவர்

< எம் தமிழ் கருவறைகள் உமக்காய்க் காத்திருக்கின்றன...!

யாருமில்லையாம் இனிமேல்...எமக்காய்!!

உள்ளம் பதைக்கிறது.... எதிர்காலம் என்றொன்று,

இல்லாத காலத்தை நினைத்து!!! >

:)3 :) :)

இதுக்கும் ... "சிரிக்கும் முகக்குறிகள்" மட்டுந்தானா..... கோ????!!!

அப்படியானால் அந்த பாடலை நீங்கள் இன்னும் பார்க்கவில்லையா??? :(

அந்த பாடலில் வரும் காட்சிகளை விட... இறைமகன் யேசு சுமந்த சிலுவை வலிகளைவிட.... எமக்காய் எம் மாவீரர் சுமந்த வலிகள் அதிகம்!!!

அதனை நாம் இப்பொழுதும் சாதாரணமான ஒன்றாக நினைத்து ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

அதுதான் எமது இன்றைய நிலைக்குக் காரணம்!

எம் இனத்தின் தியாகங்களின் பெறுமதிகளை

என்றைக்கு நாம் உணர்கின்றோமோ... அன்றைக்குத்தான், எம் விடுதலைக்கான அறிகுறிகள் மீண்டும் தெரியும்!

தங்களின் "கருத்துக்கும் நேரத்துக்கும் மிக்க நன்றிகள்" கோ! :)

Edited by கவிதை

  • தொடங்கியவர்

உடையார்

(Posted 07 February 2012 - 03:29 PM)

கவிதை நன்றி பகிர்வுக்கு, காலம் மாறும் ஒருநாள், நம்பிக்கையுடன் இரு(ற)ப்போம்

மிகவும் நன்றி உடையார்!

நாம் உயிருடன் இருக்கும்போதே... எம் இனத்தின் விடியலையும் பார்த்துவிட வேண்டுமென்று பிரியப்படுகின்றேன்! பார்க்கலாம்...!

காலம் என்ன சொல்கின்றது என்று!!!

Edited by கவிதை

இதுக்கும் ... "சிரிக்கும் முகக்குறிகள்" மட்டுந்தானா..... கோ????!!!

அப்படியானால் அந்த பாடலை நீங்கள் இன்னும் பார்க்கவில்லையா??? :(

அந்த பாடலில் வரும் காட்சிகளை விட... இறைமகன் யேசு சுமந்த சிலுவை வலிகளைவிட.... எமக்காய் எம் மாவீரர் சுமந்த வலிகள் அதிகம்!!!

அதனை நாம் இப்பொழுதும் சாதாரணமான ஒன்றாக நினைத்து ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

அதுதான் எமது இன்றைய நிலைக்குக் காரணம்!

எம் இனத்தின் தியாகங்களின் பெறுமதிகலை என்ரைக்கு நாம் உணர்கின்றோமோ... அன்றைக்குட்த்தான் எம் விடுதலைக்கான அறிகுறிகள் மீண்டும் தெரியும்!

தங்களின் "கருத்துக்கும் நேரத்துக்கும் மிக்க நன்றிகள்" கோ!

நான் வேலைக்குப் போகின்ற அவசரத்தில் , உங்கள் கவி வரிகள் என்னை ஈர்த்ததால் குவாட் செய்து விட்டுப் போய்விட்டேன் . இன்று தான் நேரங் கிடைத்தது . உங்கள் கவியைத்தான் பிரதானமாக நோக்கினேனே ஒழிய , நீங்கள் இணைத்த பாடல்களை கவனிக்கவில்லை என்பது உண்மைதான் . சிலவேளைகளில் எனது மனம் கவலைப் பட்டாலும் சிரித்து விடுவேன் தப்பாக எடுக்காதீர்கள் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

வழக்கம் போல நல்ல ஒரு அருமையான கவிதை!

ஏக்கம் நன்றாகவே கவிதையில் பிரதிபலிக்கின்றது!

ஆனால் ஒன்று, கவிதை!

வெற்றிடங்கள் என்றும் வெறுமையாகவே இருப்பதில்லை!

இதுவே இயற்கையினதும், பிரபஞ்சத்தினதும் அடிப்படை நியதியாகும்!

ஆறுதல் அடைவோம்! நடப்பவை நல்லவையாக நடக்கட்டும்!!! >>>>>

புங்கையூரன்!

ஒரு வழியையும் காணவில்லையே.. என்ற ஏக்கங்கள் எம்மை துரத்தினாலும்..........

நீங்கள் சொல்லும் வெற்றிடம் என்பது இத்த்னை காலமாக போராடி சாதிக்க இயலாத பல விடயங்களினை சாதித்திருக்கின்றது.

தற்காலிக வெற்றிடங்கள் கூட நல்லதையே செய்வதாய் நம்புவோம்!

அதனையும் தெரிந்துதான் அவர்களும் மெளனித்துப்போய் இருக்கின்றார்களோ என்னவோ?

வெற்றிடங்கள் என்றும் வெறுமையாய் இருப்பதில்லையே.

இருந்தாலும் அழுத்தங்கள் அழுத்திக்கொண்டுதானே இருக்கும்.

ஒருநாள் புயலாய்த்தன்னும் கிளம்பும்!

நன்றிகள் பல!

Edited by கவிதை

  • தொடங்கியவர்

நான் வேலைக்குப் போகின்ற அவசரத்தில் , உங்கள் கவி வரிகள் என்னை ஈர்த்ததால் குவாட் செய்து விட்டுப் போய்விட்டேன் . இன்று தான் நேரங் கிடைத்தது . உங்கள் கவியைத்தான் பிரதானமாக நோக்கினேனே ஒழிய , நீங்கள் இணைத்த பாடல்களை கவனிக்கவில்லை என்பது உண்மைதான் . சிலவேளைகளில் எனது மனம் கவலைப் பட்டாலும் சிரித்து விடுவேன் தப்பாக எடுக்காதீர்கள் .

பரவாயில்லை கோ. சிரிப்பதில் தப்பில்லை. சூழ்நிலைகளையும் கருத்திற்கொள்ள வேண்டுமல்லவா?

முழுமையாக தெரிந்தபின்... அதிலும் கவிதைகள் என்று வரும்போது அதனை முழுமையாக உணரவேண்டும். அதன்பின்னர்தான் அதற்கான பதிலிடுதல் என்பது சரியாக அமையும்.

அதனால்தான் சொன்னேன்.

என்னையும் தப்பாக எடுக்காதீர்கள்.

நன்றி கோ! :)

  • தொடங்கியவர்

ஏக்கங்கள் மட்டும் எம்மை வாட்டுகின்றதே!

ஏமாற்றங்கள் மட்டும் எம்மைத் துரத்துகின்றதே!!

எங்கு ஒளித்துவைத்தீர்... எம் விடுதலையை?

உங்கள் புதிர்கள் இன்னும் புரியாத...

பதர்களாய்த்தான் ... இன்னும் நாங்கள்!!

கவிதை.. அருமை....

மிகவும் நன்றி செம்பகன்!

என்றுதான் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளப் போகின்றோமோ தெரியவில்லை!? :(

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை,

இன்னும் சுயநலத்தோடு மீட்பர்களின் வருகையை எதிர்பார்த்து எழுதப்பட்டிருக்கும் கவிதையை உண்மையிலேயே வாசிக்கப்பிடிக்கவில்லை. மீட்பர்களின் மௌனம் விலகுவதற்கு இனி வாய்ப்பில்லை என்று உணர்ந்தபின்னும் மீட்பர்களை நோக்கி எழுதப்படும் படிமங்கள் கூற விளைவது என்ன? மீட்பரின் மௌனமே ஒவ்வொருவரும் மீட்பர்களாக உருவாகவேண்டும் என்பதுதானே... இதைப் புதிர்களாக நினைப்பதும் புரியாத பதர்களாக எம்மை ஒரு வட்டத்திற்குள் புகுத்தி நாம் தப்பிக் கொள்ள எத்தனிப்பதுந்தான் இந்தக் கவிதையின் மூலம் என்னால் உணர முடிகிறது. மாறவேண்டும் ஆண்டவர் உள்ளார், மீட்பர் வருவார் என்று எதிர்பார்ப்பில் காலமோட்டும் மனநிலை மாறவேண்டும்.

  • தொடங்கியவர்

இல்லாதவர்களை அமைதியாக இருக்கவிட்டு

இருப்பவர்களை அமைதியாக எழ வைக்க வேண்டும்

கவிதைக்கு நன்றி கவிதை

உண்மைதான் வாத்தியார்! அதைத்தான் இங்கு மறைமுகமாக சொல்லியுள்ளேன்.

அவர்கள் பட்ட வலி வேதனைகள் போதும். இனி எமக்கான சிலுவைகளை நாமே சுமந்தாக வேண்டும்!

மிகவும் நன்றி வாத்தியார்! :)

  • தொடங்கியவர்

உங்கள் பாடல் தேடலுக்கும் கவிதைப் பகிர்வுக்கும் ........நன்றி .

கவிக்கு தான் தேடலின் சுவை ......புரியும். எல்லோர் மனத்திலும் விதைக்கப்பட்ட ஒரு வலி .

எல்லோர் மனதிலும் இது வலியாய் இருக்கின்றது என சொல்வதைவிட ஒரு குற்றவுணர்வாய்த்தான் இப்பொழுது இருக்கின்றது எனலாம்.

எமக்காக நாம் போராடத் துணிந்தால்தான் இனிமேல் எமக்கு விடிவு பிறக்கும்!

மிக்க நன்றி நிலாக்கா!

  • தொடங்கியவர்

மீட்பர் வந்தாலும் இந்த சுய நலமிக்க மக்களுக்காக போராடி என்ன பலன் என்று வெட்கித் தலைகுனிவார்

நிச்சயமாக இல்லை ரதி அக்கா.

அவர் எங்கள் மக்களை நன்கு படித்திருந்தார். அவருக்கு எம் இனத்தின் எல்லாக் குணமும் தெரியும். அதனால்தான் அவரையும் பிடிக்காத பலபேர் எம் இனத்துக்குள்ளேயே இருக்கின்றனர்.

ஆனால் நீங்கள் கூறுவது ஒருவகையில் சரிதான். எங்கட சனத்துக்கு சிங்களவங்கள்தான் சரி கட்டியாள.

எம் தலைவர் செய்தது போதும். இனிமேல் அவர்கள் அனைவரது பொறுப்பும் நம் கையில்.

  • தொடங்கியவர்

முள்முடி சுமந்தவர் பட்ட துன்பங்களும் , அதனை வெளிப்படுத்தியபடி அமைந்த பாடல் வரிகளும் மனதைப் பிசைகின்றன.

"மீட்பர் வருவார்... உயிர்த்தெழுவார்...

இதெல்லாம் வெறும் நம்பிக்கையாய்ப் போய்விடலாம்... பரவாயில்லை!

ஆனால் உம் உன்னத தியாகங்கள் தோற்றதாய்...

வரலாறு எழுதத் துடிக்கின்ற பாவிகளுக்கும் மேலாய் நாம்!"

ஏக்கத்துடன் தாங்கள் வடித்த கவிதை படிப்போர் கண்களையும் கலங்கச் செய்து விட்டது.

வரலாறு எழுதி வீழ்ந்த நம் மீட்பர்கள் உயிர்த்தெழும் அற்புதம் நிகழுமாக இருந்தால் என்று ஒரு நிமிடம் சிந்தித்துப்பார்த்த அந்த நிமிடத்தில் மனம் நொறுங்கிப் போனது.

அவர்கள் தியாகங்கள் தோற்காது என்ற நம்பிக்கை என்றுமுண்டு.

மிக அற்புதமான கவிதைக்கு மிக்க நன்றிகள்.

எம் மாவீரர்களின் தியாகங்கள்தான் இன்றும் எம்மை போராட்டத்தின்பால் இழுத்து வைத்திருக்கின்றது. அவர்களின் உன்னத தியாகங்கள் தோற்றுப்போக என்றைக்கும் எம் தலைமுறை இடமளியாது. வெல்வோம். நிச்சயமாக அவர்களின் கனவினை நனவாக்குவோம்!

மிகவும் நன்றி கல்கி தங்கள் கருத்துக்கு!

  • தொடங்கியவர்

கவிதை,

இன்னும் சுயநலத்தோடு மீட்பர்களின் வருகையை எதிர்பார்த்து எழுதப்பட்டிருக்கும் கவிதையை உண்மையிலேயே வாசிக்கப்பிடிக்கவில்லை. மீட்பர்களின் மௌனம் விலகுவதற்கு இனி வாய்ப்பில்லை என்று உணர்ந்தபின்னும் மீட்பர்களை நோக்கி எழுதப்படும் படிமங்கள் கூற விளைவது என்ன? மீட்பரின் மௌனமே ஒவ்வொருவரும் மீட்பர்களாக உருவாகவேண்டும் என்பதுதானே... இதைப் புதிர்களாக நினைப்பதும் புரியாத பதர்களாக எம்மை ஒரு வட்டத்திற்குள் புகுத்தி நாம் தப்பிக் கொள்ள எத்தனிப்பதுந்தான் இந்தக் கவிதையின் மூலம் என்னால் உணர முடிகிறது. மாறவேண்டும் ஆண்டவர் உள்ளார், மீட்பர் வருவார் என்று எதிர்பார்ப்பில் காலமோட்டும் மனநிலை மாறவேண்டும்.

ஒரு கவிதை என்பது நேரடியாக அது சொல்லவரும் விடயத்தினை சொல்லவேண்டும் என்பதில்லை.

இந்தக் கவிதை எதிர்மறைக் கருத்துக்களை.... அதாவது, கவிதை நேரடியாகக் குறிக்கும் கருத்தின் எதிர்மாறான கருத்தினைத்தான் சொல்ல வருகின்றது.

அதை உண்மையான உணர்வுடன் படித்தால்........... நிச்சயம் அது தங்களுக்கும் புரியும்.

மாவீரரே! நீங்கள் பட்ட வலிகள் போதும்...!! ஆனால், நாங்கள் இன்னும் போராட தைரியமில்லாதவர்களாக துணிவற்று, பிரிவினைப்பட்டு நிற்கின்றோம்!

இனிமேலாவது "நீங்கள் மீண்டும் வருவீர்கள்"என்ற சுயநலமான எதிர்பார்ப்பினை விட்டுத் தொலைத்துவிட்டு தன்மானமுள்ள தமிழராக சுயமாக போராட முயற்சிப்போம்! அதுதான் எமக்கு விடுதலையைப் பெற்றுத்தரும்!

இதை நாம் என்றுதான் புரிந்துகொள்ளப் போகின்றோமோ?

என்ற ஏக்கத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கவிதை வரிகளின் உள்ளார்ந்த அர்த்தம்.

பல சிறந்த கவிகளின் சொந்தக்காரியான சகாறா அக்காவினால்....... இந்தக் கவிதையின் உண்மையான உள்ளார்ந்த அர்த்தத்தினை புரிந்து கொள்ள முடியாமல் போனதையிட்டு எனக்கு ஏமாற்றமே!!!

(என் வார்த்தைப் பிரயோகங்களில் ஏதாவது மயக்கம் ஏற்பட்டிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் அக்கா!)

ஆனாலும் பரவாயில்லை அக்கா. தங்களின் மனதில் தோன்றிய விமர்சனங்களை அப்படியே இட்டமைக்கு. இவ்வாறான விமர்சனங்கள்தான் நான் எதிர்பார்ப்பதும்கூட.

பலவற்றை புரிந்து.. தெளிந்து... திருந்த... எமக்கு வழிகாட்டுபவை இப்படியான வெளிப்படையான விமர்சனங்களே.

மிக்க நன்றி அக்கா! :)

  • 1 year later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீட்பர் வருவார்... உயிர்த்தெழுவார்...
இதெல்லாம் வெறும் நம்பிக்கையாய்ப் போய்விடலாம்... பரவாயில்லை!
ஆனால் உம் உன்னத தியாகங்கள் தோற்றதாய்...
வரலாறு எழுதத் துடிக்கின்ற பாவிகளுக்கும் மேலாய் நாம்!

 

 

உங்கடை கவிதைக்கு என்ன சொல்லிறது எண்டு தெரியேலை தம்பி . எல்லாற்ரை தியாகங்களுக்கும் ஒருநாள் மறுமொழி சொல்லித்தான் ஆகவேணும் .  இப்பிடி நீங்கள் கனக்க எழுதவேணும் .

உங்கள் கவிதைகள் மேலும் வெற்றிக்கொடி கட்ட எனது வாழ்த்துக்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.