காலை வணக்கங்கள்
எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.
வாழ்க வளமுடன்🙏
எல்லாமே நீதான்! வல்லோனே அல்லாஹ்
கவிஞர் நாகூர் காதர் ஒலியின்
இன்றைய பதிவு:
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
🛑கடந்த 9.10.20 அன்று இந்த தகவலை மட்டும் பதிந்தேன். அதை பார்த்து பலரும் அவருடைய பாடல்களை தனக்கு அனுப்பும் படி வேண்டினர். அனுப்பியும் வைத்தேன்.இன்று ஒரு பாடலை இணைத்து பதிந்துள்ளேன். தொடர்ந்து மற்ற பாடல்களையும் பதிய இருக்கிறேன்......
🛑இஸ்லாமிய பாடகர் வடகரை( மாயவரம்) A.M. தாலிப்..
🛑 இந்த பாடகரைப் பற்றி சிலருக்கு தெரியும், பலருக்கு தெரியாது. ஆனால் இவர் பாடிய பாடல்களை இசைத்தட்டு மூலமும், கேசட்கள் மூலமும் அனைவரும் கேட்டு மகிழ்ந்து உள்ளத்தில் பதிய வைத்து இருக்கலாம்.இந்தப் பதிவை வாசிக்கும்போது அவரைப் பற்றியும், அவர் பாடிய பாடலின் வரிகளும் உங்கள் நினைவில் நிச்சயமாக மலரும்.
🛑 1970 காலக்கட்டங்களில் தமிழ் வானொலி நிலையங்களில் ஒலிப்பரப்பாகும் இசுலாமிய பாடல்களில் அதிகமாக இசைமுரசு, S M A காதர், இசைமணி யூசுப், மதுரை ஹுசைன்தீன், மொஹிதீன் பேக் ஆகியோரின் பாடல்களைதான் கேட்க முடியும். இதில் இசைமுரசு பாடல்கள் தான் அதிகமாக இருக்கும்.இலங்கை வானொலியில் அழகிய வர்ணனையோடு ஒலிப்பரப்பாகும்.k அந்த நாளையில் வானொலியில் கேட்ட பாடல்கள் அனைத்தும் வற்றாத வெள்ளமாய் எங்கள் நினைவலைகளில் இன்றளவும் பொங்கி பாய்கிறது.
🛑அந்த நேரத்தில் தான் இந்த A.M. தாலிப் அவர்களின் பாடல்கள் வானொலி வழியாக பலரது செவிகளையும், சிந்தைகளையும் ஈர்க்கிறது.இனிமையான குரல், அருமையான வரிகள், புதுமையான இசையமைப்பு எல்லோரையும் கவர்ந்திழுக்கிறது.யார் இந்த பாடகர், யார் இந்த யார் பாடகர் என்ற கேள்விகளுடன் புருவங்கள் நெளிங்கின்றன.ரொம்ப ரொம்ப நல்லா இருக்கே என்ற பாராட்டு விமர்ச்சனங்களும் குவிகின்றன.o சவுண்டு சர்விஸ்க்காரர்கள் இவர் பாடிய பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகளை போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குகின்றனர்.முஸ்லிம்கள் வீட்டு அனைத்து இனிய நிகழ்ச்சிகளிலும், கல்யாணங்களிலும், தர்காக்கள் நிகழ்ச்சி, இசுலாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி அனைத்திலும் இவரது பாடல்கள் இடம் பிடிக்க தொடங்கின.இசைமுரசு பாடலுக்கு அடுத்த இடத்தை அந்நாளில் இவரது பாடல்கள் தக்க வைத்துக் கொண்டன..
🛑இவ்வளவுக்கும் இவரை மேடை பாடகர் என சொல்லி விட முடியாது.அந்த முத்திரையையும் அவர் தமிழ்நாட்டில் பெறவில்லை. அதிக பேர் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.அப்படி இருக்க இவரது பாடல்கள் எப்படி ஹிட்டானது.அதுதான் மக்கள் விரும்பும் மாற்றம். இந்த புதிய குரலைக் கேட்டதும் உள்ளத்தில் ஒருவிதமான ஆனந்தம்.உற்சாகம்.
🛑 70 களில் ஒரே நேரத்தில் இவர் பாடிய 8 பாடல்கள் இசைத்தட்டு வாயிலாக வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எட்டு பாடல்களில் சில பாடல்கள் கவிஞர் நாகூர் சலிம் அண்ணன் எழுதியது என நினைக்கிறேன்.m சரியாக ஞாபகமில்லை. குறிப்பாக தென்னகத்தின் திருவிளக்கு தெய்வம் தந்த ஒரு விளக்கு, நன்னாகூர் புகழ் விளக்கு, நானிலத்தின் பொது விளக்கு என்ற பாடல் சலிம் அண்ணனின் வரிகள்.
இது அந்நாளில் ஏதோ ஒரு பத்திரிக்கையில் கவிதையாக வெளியானது. அந்த கவிதையை பாடகர் மெட்டமைத்து பாடலாக பாட விரும்பியதால் கவிஞர் அவர்களின் அனுமதிப் பெற்று அதை பாடினார். இச்செய்தி கவிஞர் அவர்கள் என்னிடம் நேரில் சொன்னது.
🛑மீண்டும் 1975 ,80க்குள் இன்னுமொரு இசைத்தட்டில் 4 பாடல்களை பாடி வெளியிட்டார்.அந்த 4 பாடல்களும் கவிஞர் நாகூர் சலிம் அண்ணன் அவர்கள் எழுதியது.k ஒரு பாடல் பற்றி மட்டும் குறிப்பிடுகிறேன்.ஏன்டி முத்தம்மா ,ஏது புன்னகை என்னென்ன எண்ணங்கள் என்ற தலைப்பில் இசையமைப்பாளர் பாடிய திரைப்படப் பாடல்( படத்தின் பெயர் ஆறு புஷ்பங்கள்) அந்த மெட்டில் *ஏங்கி நிற்கின்றேன் ஏந்தல் வாசலில்* என ஒரு பாடலை கவிஞர் அவர்கள் எழுதினார்கள். இப்பாடலை நண்பர் கலைமாமணி குல்முஹம்மது, மற்றும் பல பாடகர்கள் மேடை நிகழ்ச்சியில் பாடி இருக்கின்றனர். தாலிப் அவர்கள் இசைத்தட்டில் பாட போகும்போது திரைப்பட பாடல் மெட்டை மாற்றி சொந்த மெட்டமைத்து பாடினார்.இசைத்தட்டில் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.. (12 பாடல்கள் தான் குறிப்பில் உள்ளது. மேலும் பல பாடல்கள் பாடி இருக்கலாம்) தாலிப் அவர்களுடன் சேர்ந்து பாடியிருப்பவர் பாடகி S. சரளா அவர்கள்...
🛑பாடகரின் சொந்த ஊர் வடகரை(மாயவரம்) என்ற போதிலும், அவர் வாழ்ந்தது, தொழில் புரிந்தது எல்லாமே மலேசியாவில்தான்.அதனால் தமிழ்நாட்டில் பலருக்கு தெரியவில்லை.. அவர் பாடுவதை தொழிலாக கொள்ளாத காரணத்தால் மேடைகளில் ஒளி வீசவில்லை..1982 ல் ஒரே ஒருமுறை அவரை நாகூரில் சந்தித்து இருக்கிறேன்.. அவரிடமிருந்து சில தகவல்கள் அப்போது பெற்றேன்.. அதன் பிறகு தொடர்பு கொண்டதில்லை..2010ல் இறைவனடி சேர்ந்தார்.
அவர் மறைந்து விட்டாலும் அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் மனதில் நிறைந்து வாழும்..o
அவர் இசைத்தட்டில் பாடிய 12 பாடல்களின் விபரம்.....
🔻1, இன்ஷா அல்லாஹ், இன்ஷா அல்லாஹ்
ஏகன் அல்லா கட்டளை ஏற்று, 🔻2,எத்தனை ஆயிரம் நபிகள் வந்தனர் இப்புவிமீதிலே, 🔻3, தென்னகத்தின் திருவிளக்கு, 🔻4, அருளான அன்பான அல்லாஹூவே, 🔻5, அல்லா அல்லா எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் நீதானே, 🔻6, வானில் உதித்த வெண்மதிபோல் தீனில் உதித்த ஜோதியே, 🔻7, இருள் சூழ்ந்த நேரம்( நபிமணியே எங்கள் நாயகமே), 🔻8, வான்மேவும் வல்லோனின் புகழ் பாடுவோம், 🔻9, அல்லாவை தவிர யாரிடமும் கையேந்தி விடாதீர்கள், 🔻10,ஏங்கி நிற்கின்றேன் ( எஜமானே எங்கள் நாகூரா), 🔻11, அல்லாவின் தூதே அருள் தீபமே எங்கள் யாநபி, 🔻12, செல்வோம் செல்வோம் செம்மல் நபியை கண்டு வருவோம். சிந்தைத் திகழ் மதினா......
என்ன நண்பர்களே இப்போது இந்த பாடல்கள் உங்கள் இதய வானொலியில் ஒலிக்க தொடங்கி இருக்குமே.உங்கள் எண்ணச் சுடரை பதியுங்கள்...
+++++++++++++++++++
கவிஞர் நாகூர் காதர்ஒலி