Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்12Points19667Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்10Points20348Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points88812Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்9Points46969Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/24/24 in Posts
-
"நானே வருவேன்"
3 points"நானே வருவேன்" உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, 'நானே வருவேன்!’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லி இருக்கிறார் என்று என் அம்மா சொன்னது ஞாபகம் வருகிறது ஆனால் இவை எல்லாம் புராணத்தில் தான் காண்கிறோம். இந்த புராணங்கள் வாய் மொழிமூலம் சில நூற்றாண்டுகள் புழக்கத்தில் இருந்து, கி பி இரண்டாம் ஆண்டளவில் அல்லது அதற்குப் பின் எழுத்தில் எழுதப் பட்டவையாகும். நான் ஒரு கிழமைக்கு முன் தான் திருமணம் செய்து, என் மனைவியை, அவளின் சொந்த கிராமத்தில் இருந்து வெளியே, தலை நகரத்துக்கு கூட்டி வந்துள்ளேன். இங்கு, கொழும்பையும் உள்ளடக்கிய மேல் மாகாணத்தில், தமிழ் பேசும் மக்கள் மொத்தமாக [தமிழர் + தமிழ் பேசும் முஸ்லீம்] 15 % தான் வரும். ஆனால் கொழும்பு என்று மட்டும் எடுத்தால் 50 % அல்லது சற்றுக் கூட தமிழ் பேசும் மக்களாக இருப்பார்கள். எனவே கொழும்பில் வாழ்வது பெரிதாக வித்தியாசம் தெரியாது. நான் 2019 /04 /21 ஞாயிறு காலை, சில முக்கிய விடயங்களாக, வேலைத் தளத்துக்கு போகவேண்டி இருந்தது. எனவே அப்பொழுது, 'பயப்பட வேண்டாம் ... தனியே இருக்கிறேன் என்று .. தொலைக்காட்சி பெட்டி இருக்குது .. தொலைபேசி இருக்குது .. நீ அதை பாவிக்கலாம் .. நீ என்னில் நல்ல காதல் பக்தி கொண்டு இருப்பதால் .. உனக்கு ஒரு சங்கடமோ .. தேவையோ ஏற்பட்டால், 'நானே வருவேன்' [ஒரு பகிடியாக] மற்றது பொன்னம்பலவாணேசுவரர் கோயில் மற்றும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் .. இங்கிருந்து சொற்ப தூரத்திலேயே .. ஒரு 15 அல்லது 20 நிமிட நடக்கும் தூரத்திலேயே ... இரண்டும் அருஅருகே இருக்கு .. நீ விரும்பினால் போய் பார்த்தும் வரலாம்', என்று அன்பாக அவள் கையை பிடித்து அணைத்துக்கொண்டு கூறி விடை பெற்றேன். முதன் முதல் பள்ளிக்கு குழந்தையை அனுப்பும் பெற்றோர் சொல்லும் பயப்படாதே என்ற உபதேசம் – முரட்டு சிறுவர்களோ, சிறுமியோ, உன்னை துன்புறுத்தினால் பயப்படாதே, டீச்சரிடம் சொல்லு என்று சொல்லுவது போலத் தான் - அவளிடம் சொல்லி விட்டு, கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுத்துவிட்டு, பேரூந்து தரிப்பு நிலையத்துக்கு போனேன். ஏன் என்றால் அவள் கொழும்புக்கு புதிது என்பதால்! நான் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் (St. Anthony's Shrine) அருகில் பேரூந்தில் ஏறி வேலைக்கு போனேன். நான் பொதுவாக எந்த ஆலயமும் போய் கடவுள் / தூதுவர் இப்படி எவரையும் வணங்குவதில்லை. 'நானே வருவேன்' என்றவர் வந்தபின்பு வணங்குவோம் என்று அதை பொருட் படுத்துவதில்லை. பேரூந்தில் இருக்கும் பொழுது கொஞ்சம் என் அறிவுக்கு எட்டியவரை யோசித்தேன். அதற்குப் பின்பு, ஆயிரம் அல்லது ஆயிரத்தி இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக, எந்த பெரும்பான்மையான மதங்களின் தூதுவர்களோ இல்லை கடவுளோ 'நானே வருவேன்' என்று வந்ததாக எந்த பிற்கால புராணமும் வரலாறும் இல்லை! நான் என் வேலையில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்த தருவாயில், திடீரென என் சக நண்பர் வந்து ஒரு அதிர்ச்சி தகவல் கூறினார். 'இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் சுமார் 290 க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும், அதிலும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலேயே பெரும் உயிர் சேதம் என்றும் கூறினார். நான் உடனடியாக என் மனைவிக்கு தொலை பேசி எடுத்தேன். ஆனால், அவரின் தொலைபேசி பதில் இல்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. உடனடியாக வாடகை மோட்டார் [Taxi] எடுத்துக்கொண்டு வீடு போனேன். வீடு பூட்டி இருந்தது. எனவே தேவாலயத்தைச் நோக்கி நடக்க தொடங்கினேன். அப்ப அந்த வழியில் இருந்த, நான் வழமையாக போகும் பலசரக்கு கடைக்காரர் , என்னைக் கண்டதும், ஓடி அருகில் வந்து, உங்க மனைவி, மெழுகுதிரியும், அர்ச்சனை சாமான்களும் வாங்க்கிக்கொண்டு, தான் தேவாலயத்துக்கும் சிவன் கோயிலுக்கும் போவதாக கூறிச் சென்றதாக கூறினார். அது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது, தேவாலயம் சுற்றி ஒரே ராணுவம். கிட்ட போக எவரையும் விடவில்லை. இன்னும் அங்கிருந்து இறந்தவர்களையும் காயப்பட்டவர்களையும் , தேவையான முதல் உதவி செய்து வைத்தியசாலைக்கு அவசரம் அவசரமாக கொண்டு போய்க்கொண்டு இருந்தார்கள். எனவே நான் முதலில் பக்கத்தில் இருந்த சிவன் கோவில் போனேன். நான் பதறிக்கொண்டு வருவதைக் கண்ட குருக்கள், கிட்ட வந்து, நான் உங்களை, சிலவேளை பேரூந்து தரிப்பில் நிற்கும் பொழுது கண்டுள்ளேன், ஆலயத்தில் ஒரு நாளும் காணவில்லை, என்ன நடந்தது என்று ஆறுதலாக அமைதியாகக் கேட்டார். நான் என் தொலைபேசியில் இருக்கும் மனைவியின் படத்தை காட்டி, இவர் என் மனைவி, இவர் கிட்டடியில் தான் என்னை திருமணம் செய்து கொழும்பு வந்தவர், ஆலயம் அர்ச்சனை செய்ய வந்ததாக அறிந்தேன், இவரை பார்த்தீர்களா என்று கவலையாகக் கேட்டேன். குருக்கள் என் முதுகை தட்டிக் கொடுத்துக் கொண்டு, பயப்பட வேண்டாம், அவளுக்கு ஒன்றும் நிகழவில்லை. நல்ல காலம் அவர் என்னுடன் ஆலய வரலாறு, பெருமைகளை, கடைசி நேரத்தில் கேட்டுக் கொண்டு இருந்ததால், குண்டு வெடிக்கும் பொழுது இங்கு தான் நின்றார். எனினும் அந்த சத்தம், அதிர்வு அவரைப் பயப்படுத்தி, அதனால் மயங்கி விழுந்து விட்டார், நான் நோயாளர் ஊர்தியில் (Ambulance) பக்கத்தில் இருந்த சர்வதேச மருத்துவ - அறக்கட்டளை தனியார் வைத்திய சாலையில் [International Medi-Trust (Pvt) Ltd] சேர்த்துள்ளேன் என்று கூறினார். மேலும் அவர் உண்மையில் அவள் கொஞ்சம் முந்தியே தேவாலயம் போய் இருக்கவேண்டும். இன்றைக்கு என்று எம் ஆலய மணியில் ஏற்பட்ட திடீர் கோளாறால், கொஞ்சம் சுணங்கிவிட்டது. உங்க மனைவியின் கடவுள் பக்தி, ஆண்டவனை குளிர்ச்சிப்படுத்தி, அவரை அந்த விபத்தில் இருந்து காப்பாற்ற, இப்படி செய்திருக்கலாம் என்று ஒரு போடும் போட்டுவைத்தார். எனக்கு இப்ப அவரின் 'கடவுள் நம்பினாரை விடமாட்டார் 'நான் வருவேன்' என்று சரியான நேரத்தில், எதோ ஒரு வழியில் காப்பாறுவார்' என்ற கூற்றை எதிர்த்து வாதாட விரும்பவில்லை. என்ன இருந்தாலும் என் மனைவியை கதையினால் தாமதித்ததே அவர்தானே! ஆனால் என் மனம் 'தேவாலயத்தில் இறந்தவர்கள் காயப்பட்டவர்கள் அநேகமானோர் தமிழரே, அதிலும் சிலர் சைவரே! அப்படி என்றால் ஏன் அவர்களை காப்பாற்றவில்லை. உயிர்களில் ஆண்டவனுக்கு வேறுபாடு இல்லையே!' என்று அலட்டிக்கொண்டு இருந்தது. நான் உடனடியாக வாடகை மோட்டாரில் அந்த குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு போனேன். நானும் அவருக்கு அருகில், அவர் இருந்த அறைக்குள் போக, அவரும், கண் துறக்க நேரம் சரியாக இருந்தது. 'நான் வருவேன் , என் செல்லத்துக்கு பக்கத்தில் எப்பவும்' என்று ஒரு நம்பிக்கைக்காக, தெம்பு கொடுப்பதற்காக சொல்லிக் கொண்டு அணைத்து ஒரு முத்தம் கொடுத்தேன்! அவள் தான் அந்த குருக்களிடம் முதலில் ஆசீர்வாதம் பெற்று, அங்கு சிவனை வழிபட்டு பூசை செய்தபின்பே வீடுபோவோம் என்று என்னிடம் உருக்கமாக கெஞ்சி கேட்டார். அந்த நேரம் அதற்கு ஆமா போடுவதைவிட எனக்கு வேறுவழி தெரியவில்லை? 'நான் வருவேன்' என்று அவரை காப்பாற்றியது கடவுளா ? குருக்களா? இல்லை தற்செயலான ஒன்றா ? இதைத்தான் பாக்கியம் [அதிர்ஷ்டம்] என்பதா? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]3 points
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
ஏதேது….சும்மா புட்டு….புட்டு வைக்கிறீர்களே🤣. நட்பு வட்டமோ 🤣 (பகிடிக்குத்தான்). நீங்கள் சொல்வது சரியே என்றாலும் ஆடிய காலும் களவெடுத்த கையும் சும்மா இராது கண்டியளே🤣. இப்படியாகொத்த கள்ளர் பலர் இலங்கையில் இப்படி பணத்தை வைப்பில் இட்டு வைத்துள்ளார்கள். பின்னர் தேவைப்படும் போது உண்டியல் மூலம் எடுப்பது. கணக்கில் காட்டாமல் கலியாணம், சாமத்திய சடங்கில் கைக்காசாக செலவழிப்பது. வெளித்தோற்றத்துக்கு கனவான் வேசம் போட்டாலும் - தொழில் எப்போதும் களவுதான்🤣. அதேபோல் இப்போ மட்டும் அல்ல, எப்போதும் சோசல் களவு செய்வோர் காட்டில் மழைதான்🤣. ஆனால் இப்படி களவு செய்வோர் வாழ்க்கை வேற மாரி - என்னதான் பண வரவு இருந்தாலும் அது தரித்தரிரம் பிடிச்ச வாழ்க்கை. பிள்ளையள் கூட என்றால் நல்ல பெரிய வீடு கிடைக்கும் ஆனால் சொந்தமா வீடு வாங்கேலாது. அதிஸ்டம் என்றால் ரைட் டு பை மூலம் கிடைக்கலாம். கையில் காசுக்கு வேலையும் செய்து காசும் பார்க்கலாம்தான் ஆனால் வேலை தாறவன் யார்? நான் மேலே சொன்ன வரி ஏய்க்கும் கள்ள முதலாளிகள் - அவர்கள் இவர்களை தெரு நாயை போல நடத்துவார்கள். என்ன ஆபீஸ் வேலையா தரப்போகிறார்கள், பெட்டியை கிழித்து அடுக்கும் வேலைதான். சக்கையாக பிழிந்து விடுவார்கள். இப்படி வாழும் பலரை பார்த்தீர்களானல் அவர்கள் முகத்தில் ஒரு செந்தழிப்பு இருக்காது - வறுமை என நடித்தாலும் - அதுவும் ஒரு தரித்திரம்தான். இவர்கள் இலங்கை போனாலும் அங்கே இப்போ பலர் இவை பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்துள்ளார்கள் - சில கேள்விகளிலேயே பிடித்து விடுவார்கள். தவிரவும் அங்கேயும் போய், கால் முதல் தலைவரை டிசைனைர் உடுப்பு போட்டு கொண்டு, 80 ரூபாய் வடைக்கு எட்டு தரம் விலை பேசுவார்கள்🤣. முன்னர் நாம் கொழும்பில் இருக்கும் போது இப்படியானவர்களை “ஓமான்” என அழைப்பார்கள். இப்போ “இலண்டன்” என அழைக்கிறார்கள். இப்படி தினுசு…தினுசா…இருக்கிறார்கள் புலம்பெயர் தமிழர்கள். ஆனால் பொதுவெளியில் கதைக்க விட்டால், ரொமேனியன் கள்ளன், சிங்களவன் கள்ளன் என நீட்டி முழக்குவார்கள் - தங்கள் சீத்துவம் மற்றையவர்களுக்கு தெரியாது என நினைத்தபடி.3 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஜனாதிபதி சிங்களத்தில் பேசியதை இடை மறித்து நான் மொழிபெயர்கட்டுமா என கேட்டுவிட்டு, சிங்களத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்த அதிகாரி 🤣🤣🤣2 points
-
கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கனேடிய பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர்
இது, கனடா பொலிஸ் அதிகாரி துரையப்பாவின் தனிப்பட்ட விஜயம் என்றால்.... கனடா பொலிஸ் சீருடையுடன் கலந்து கொண்டதும், இலங்கையின் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதும் தவறு என்றே கருதுகின்றேன். பொறுப்பு வாய்ந்த கனடா பொலிஸ் அதிகாரி இதன் பின் விளைவுகளை யோசிக்காமல் செய்தது... ஆச்சரியம் அளிக்கின்றது. சிங்களவனுக்கு... முட்டுக் கொடுக்கப் போய், தான் முட்டுப் பட்டு நிற்கிறார். 😂2 points
-
அப்பா உடனே வாங்கோ.
2 pointsசித்திரை 27 இல் மகனுக்கு ஒரு மகன் பிறப்பதாக இருந்தது.ஏற்கனவே திகதிகள் தெரிந்தபடியால் 13ம் திகதி வட கரோலினா போவதற்கு விமான சீட்டுகளும் எடுத்து வைத்திருந்தோம். அதற்கிடையில் மனைவியும் நானும் பார்க்க வேண்டிய வைத்தியர்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். 10ம் திகதி Cardiologist இடம் பகல் 10;30 க்கு பார்க்க வேண்டும்.(6 மாதத்துக்கொரு தடவை வழமையாக பார்ப்பது தான்). 10 மணி போல வைத்தியரைப் பார்க்க போய்க் கொண்டிருந்த போது மகனிடமிருந்து தொலைபேசி அலறுகிறது.மணிக்கூட்டைப் பார்க்க மகன் தான் எடுக்கிறான் என்று தெரிகிறது.சட்டைப் பையில் இருந்து உடனடியாக எடுக்க முடியவில்லை. வண்டியை ஓரம்கட்டி விட்டு என்னடா வேலைக்கு போகலையா? வீட்டிலிருந்து வேலையா? என்றேன். இல்லை இல்லை ஆஸ்பத்திரியில் நிற்கிறேன்.இன்றிரவு அல்லது காலை பிள்ளை பிறக்க போகுது.உடனடியாக ரிக்கற்றை போட்டுட்டு வாங்கோ. ஏனடா ஏதாவது பிரச்சனையோ? ஒன்றுமில்லை.இப்ப டாக்ரரைப் பார்க்க வேண்டாம் கான்சல் பண்ணிப் போட்டு போய் வாற அலுவலைப் பாருங்கோ.பிற்பகல் 4-4;30க்கு மற்றவங்கள் பாடசாலையால் வர முதல் இங்கே நிற்க வேண்டும்.இப்ப டாக்ரர்மாரை 24 மணிநேரத்துக்கு முன் கான்சல் பண்ணலை என்றால் 50 டாலர்கள் தண்டம்.சரி சரி நாங்கள் வாறம் பிரச்சனை இல்லை. உடனே மனைவிக்கு விடயத்தைச் சொல்லி நான் டாக்ரரைப் பார்த்துவிட்டு வருகிறேன் உடுப்புகளை அடுக்கி போற அலுவலை பார்.டாக்ரரின் அலுவலகத்தில் சிறிய பிரச்சனை அவசரம் போக வேண்டும் கனநேரம் செல்லுமா என இல்லை அடுத்தது நீ தான். அன்று எனது நல்லகாலம் வழமையை விட நேரத்துக்கே முடித்து வீடு வந்து விமான பயணத்துக்கு ஆராய தொடங்கினேன்.உடனே போவதென்றால் பல மடங்கு கூடுதலாக கொடுக்க வேண்டும்.சில விமானங்கள் குறைவாக இருந்தாலும் புத்தக பையைத் தவிர வேறு எது கொண்டு போனாலும் கூடுதாக பணம் செலுத்த வேண்டும். பிற்பகல் மூன்று மணிக்கே விமானம்.திடீரென்று புறப்படுவதால் எதைஎதை எப்படி செய்வதென்றில்லாமல் செய்து முடிந்து வீட்டிலிருந்து புறப்படும் போது மணி 2 ஆகிவிட்டது.3;10 க்கு விமானம். விமானநிலையம் போய்ச் சேர 2;20 ஆகிவிட்டது.வடகரோலினாவில் இருந்து சன்பிரான்சிஸ்கோ போவதால் ஒரு பெரிய பெட்டியும் கொண்டுவந்தோம்.சரி நீ போய் வரிசையில் நில் வெளியே உள்ள மெசினில் பெட்டியைப் போடுவதற்கு துண்டுகளை எடுத்துக் கொண்டு வாறன் என்று அதையும் ஓடிஓடி முடித்தோம். அடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்வதால் குளோபல் என்ரி எடுத்து வைத்திருக்கிறோம்.அதனால் வழமையான பாதையால் போகாமல் விசேடமாக பாஸ் வைத்திருப்பவர்களுக்கான பாதையால் போய் கையில் கொண்டு போன சிறிய பொதிகளையும் சோதனை முடிந்து எமது கதவுக்கு போனால் எல்லோரும் விமானத்தில் ஏறிவிட்டார்கள்.கடைசி ஓரிருவர் நின்றார்கள்.அப்பாடா என்று ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் விமானத்தில் ஏறினோம். ஆனாலும் 5 மணிக்கு வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு வீடு போய் சேர 6 மணியாகிவிடும்.மகனுக்கு விடயத்தை சொன்னேன்.பிரச்சனை இல்லை நண்பர் குடும்பம் ஒன்றை ஒழுங்கு பண்ணியுள்ளேன்.நீங்கள் வரும்வரை அவர்கள் வீட்டில் நின்று பார்ப்பார்கள். மகனின் வீடுவந்து சேர 6;15 ஆகிவிட்டது.பிள்ளைகளுக்கு ஒரே சந்தோசம்.நின்றவர்களுக்கு நன்றி சொல்விட்டு பிள்ளைகளின் அலுவல் களைப் பார்த்து உறங்கிவிட்டோம். காலை பிள்ளைகளை பாடசாலை அனுப்புவதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த போது 8 மணிபோல மகன் கதைத்தான். காலை 7;33க்கு மகன் சுகமாக பிறந்துள்ளான்.அனேகமாக நாளைக்குத் தான் விடுவார்கள்.மனதுக்கு பெரியதொரு நிம்மதியாக இருந்தது.2 points
-
மைத்திரிபால இராஜினாமா?
2 pointsஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தோவியங்களை வரைந்து தள்ளுகிறார்கள். சிங்களம் மட்டுமே சட்டத்தை கொண்டு வந்து இலங்கையில் ஓற்றுமையாக இருந்த இனம் மீது, விஷ விதையை விதைத்து... சிங்கப்பூர் மாதிரி இருக்க வேண்டிய நாட்டை குட்டிச் சுவராக்கியதன் பலனை அந்தக் கட்சி அனுபவிக்கின்றது.2 points
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
பகிடி, நீங்கள் கேட்ட கேள்வியை நான் சரியாக விளங்கி கொண்டுள்ளேன் எனில், இலங்கை பிரஜாஉரிமை இல்லாமல் எப்படி ஒரு கனேடியன் சிட்டிசனாக இந்த காணியை உங்க பெயருக்கு மாற்ற முடியும் என்பதா? அப்படி எனில், short answer is முடியாது. இலங்கையில் வெளிநாட்டு பிரசைகள் காணியின் freehold ஐ வாங்க முடியாது. இதைத்தான் உங்கள் இலங்கை வக்கீலும் கூறியுள்ளார். ஆனால் பின்வரும் நடைமுறைகள் மூலம் இதை வளைய வரலாம் (circumvent). 1. காணியின் freehold ஐ அம்மா, அப்பாவிடமே விட்டு விட்டு, அதற்கு ஒரு 99 வருட லீஸ் ஹோல்டை எடுத்தல். அவர்களிற்கு பின் freehold ற்கு என்ன நடக்கும் ? புள்ளி 3 ஐ பார்க்கவும். 2. ஒரு கம்பெனியை தாபித்து அதன் பெயரில் freehold ஐ மாற்றி விட்டு, கம்பெனியிடம் இருந்து நீங்கள் லீஸ் ஹோல்டை பெறல் - வெளி நாட்டினராக நீங்கள் 49% கம்பெனி பங்குகளை மட்டுமே வைத்திருக்கலாம். ஆனால் கம்பெனி உருவாக்கும் போது, உங்கள் அனுமதியின்றி சொத்துக்களை எதுவும் செய்ய முடியாது என சரத்துகளை உருவாக்கி உங்கள் உரிமையை பாதுகாக்கலாம். 3. இதை உங்கள் வக்கீலிடம் கதைத்து பாருங்கள். இலங்கை சட்டத்தில் ஒரு loophole உள்ளதாக சொல்லப்படுகிறது. வெளி நாட்டினர் காணியை வாங்க முடியாது, ஆனால் பெற்றாரின் சொத்து அவர்களின் வாரிசுகளுக்குத்தான் செல்லும். இங்கே வாரிசுகள் வெளி நாட்டு பிரசைகள் என்றால் சொத்துக்கு என்னாகும்? என்ற கேள்வி தெளிவில்லாமல் உள்ளதாம். ஆகவே பெற்றாரின் காலத்தின் பின் - “வாங்குதல்” என இல்லாமல் சொத்து சந்ததி மாறல் என்ற வகையில் நீங்கள் இதை அடையக்கூடும். ஆனால் இது தெளிவில்லாததும், ரிஸ்க் அதி கூடியதுமாகும். 4. மிக பாதுகாப்பானது- சிக்கல் அறவே இல்லாதது - நீங்கள் மீள இலங்கை இரட்டை குடியுரிமையை எடுப்பது. பிள்ளைகளிற்கும் எடுத்து வைக்கலாம். சொத்துரிமை சந்ததிகளிற்கு பாதுகாக்கப்படும். ஒரே சிக்கல் - சில வேலைகள் வெளிநாட்டில் அந்த நாட்டு பிரசை/இரெட்டை குடியுரிமை இருந்தால் தரமாட்டார்கள். இது பிள்ளைகளை பின்னாளில் பாதிக்கலாம். ஆனால் அப்படி ஒரு நிலை வந்தால் - அவர்கள் காணியை விற்று விட்டு, இலங்கை குடியுரிமையை உதறலாம். பிகு 3வது ஆப்சன் பற்றி மேலதிகமாக அறிந்தால் இங்கே பகிரவும். ஒரு condominium அடுக்கு மடியில் 4ம் மாடி அல்லது அதற்கு மேல், அல்லது எந்த சொத்திலும் லீஸ் ஹோல்ட் மட்டுமே வைத்திருக்கலாம். 4ம் மாடிக்கு குறைந்த அல்லது காணியாக freehold ஐ வெளிநாட்டினர் வைத்திருக்க சட்டம் அனுமதிக்கவில்லை.2 points
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
எனக்கு இவர்கள் மீது கோபம் வரக் காரணம் இவர்கள் தான் தாயக மக்களுக்கு தவறான தமது நடத்தைகள் மூலம் வெளிநாட்டு மோகத்தை அந்த மக்களுக்கு புகுத்தி விடுகிறார்கள். இவற்றை நம்பி இங்கே வந்து சீரழிந்த சீரழியப்போகும் மக்கள் பலர்.2 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வணக்கம் அப்பன்! நான் வேடிக்கை பார்க்க வரவில்லை. போட்டியில் கலந்து கொள்ளும் அளவிற்கு நேரகாலமும் இல்லை. மன நிலையும் இல்லை. ஆனால் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது ஒரு சிலரின் வேட்டியை உருவ பின் நிற்க போவதும் இல்லை. 😂2 points
-
அப்பா உடனே வாங்கோ.
2 pointsபேரனுக்கு ஆர்நவ் (Arnaav)என்று பெயர் வைத்துள்ளார்கள். வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி.2 points
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
1) காணி உங்கள் பெற்றோரின் பெயரில் இருப்பதால் அவர்கள் சார்பாக இலங்கையில் ஒருவருக்கு Power of Attorney கொடுக்கப்பட வேண்டும். (அந்த Power of At. காணியை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக மட்டுமே என கொடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியம் 😉) 2) உங்கள் சார்பாக அங்கே செயற்படுவதற்கு நீங்களும் அங்கே ஒருவருக்கு Power of Attorney கொடுக்க வேண்டும். (கொடுக்கப்படும் Power of At. எதற்காக என்பதில் அதிக கவனம் எடுக்கவும்)😎 3) அங்கே ஒரு சட்டத்தரணியை தெரிவு செய்து அவரது ஆலோசனையுடன் அவரைக் கொண்டே Power of Attorney ஐ ஆயத்தம் செய்து உங்களிடம் அனுப்பி வைக்க கூறுங்கள். அதில் சரி பிழை பார்த்தபின்னர், இறுதி document ல் அண்மையில் உள்ள ஒரு Lawyer இடம் கொண்டு சென்று அவர் முன்னிலையில் Power of Attorney யில் கையொப்பம் இடவும். (இரு சாட்சிகள் தேவை. அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களைக் கொண்டுசெல்ல வேண்டும் )🥷 4) Scan செய்யப்பட்ட ஒரு பிரதியை email மூலம் உங்கள் பிரதிநிதிக்கு அனுப்பவும்.✈️ 5) Original மூலப்பிரதியை கூரியர் மூலம் அனுப்பவும் . இதையடுத்து, உங்கள் லாயர் 😩 அதைப் காணிக் கந்தோரில் பதிவு செய்வார். அதன் பின்னர் உறுதி உங்கள் பெயருக்கு மாற்றி எழுதும் செயற்பாடு இடம்பெறும். 👏 6) முத்திரை வரி; இலங்கைப் பிரசைக்கு காணியின் பெறுமதியில் 4% 👌 வெளிநாட்டுப் பிரசைக்கு; 100% 🥶 7) எழுத்துக் கூலி ; சராசரியாக காணியின் பெறுமதியில் 1% 😳 குறிப்பு: காணியின் பெறுமதியைக் மிகவும் அதிகமாகக் குறைத்துக் காட்டினால் உங்கள் பிரதேச காணிக் கந்தோரால் உங்கள் காணியின் பெறுமதியை மீண்டும் Appraisal செய்து தண்டனையுடன்(10%) கூடிய வரிவிதிப்பு வரும் சந்தர்பம் அதிகம் உண்டு. 😁 Power of Attorney ஐ கொடுக்கும்போது குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டும் (Limited) கொடுப்பது பாதுகாப்பானது. 🤣 எழுத்து வேலையெல்லாம் செய்து காணியின் புதிய உறுதி வருவதற்கு 1-2 மாதங்கள் வரை ஆகலாம். 😴 காணிக்கந்தோர்களிடையே ஒரு சீரான நடைமுறை இன்னும் கடைப்பிடிக்கப்படவில்லை. இடத்திற்கு இடம் சில வேறுபாடுகள் உண்டு. 🤨 (Power of At. எழுதுவதற்கு Rs. 25000 வரை அறவிடுகிறார்கள். 🤦🏼♂️) அம்புட்டுதே. 😁2 points
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
கப்பித்தான் கூறியுள்ள இலக்கம் 1 இலக்கம் 2 அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டதாக கட்டாயம் இருக்கவேண்டும், ஒருவர் பொதுவான அதிகாரம் ஒன்றினை வழங்கியுள்ளார் அங்குள்ளவர் அவரது காணியினை சுயமாக விற்றுவிட்டதாக ஒரு வதந்தி உலவுகிறது அது அதன் உரிமையாளருக்கே தெரியாது என்பதாக. POWER OF ATTORNEY REVOCATION DOCUMENT Principal's Information: Name: [Your Full Name] Address: [Your Address] Contact Information: [Your Phone Number and Email Address] Attorney-in-Fact's Information: Name: [Attorney-in-Fact's Full Name] Address: [Attorney-in-Fact's Address] Contact Information: [Attorney-in-Fact's Phone Number and Email Address] Original Power of Attorney Details: Date of Execution: [Date the Original Power of Attorney was Signed] Place of Execution: [Place where the Power of Attorney was executed] Revocation Statement: I, [Your Full Name], hereby revoke, cancel, and annul all powers and authority granted to [Attorney-in-Fact's Full Name] under the power of attorney executed on [Original Date of Execution], effective immediately. This revocation applies to all acts, whether financial, legal, or otherwise, that were authorized under the aforementioned power of attorney document. Reason for Revocation (Optional): [Briefly state any reasons for the revocation, if you wish to disclose them] Notification: A copy of this revocation will be provided to [Attorney-in-Fact's Full Name] and all third parties with whom the power of attorney may have been previously shared or registered, including [list any banks, financial institutions, government agencies, etc.]. Signature: Signed on this ___ day of [Month], [Year]. [Your Full Name, as Principal] Witnesses (If required by law): Witness Name: __________________________ Address: ________________________________ Signature: ______________________________ Date: __________________________________ Witness Name: __________________________ Address: ________________________________ Signature: ______________________________ Date: __________________________________ Notarization (If required by law): On this ___ day of [Month], [Year], before me, a notary public, personally appeared [Your Full Name], known to me (or satisfactorily proven) to be the person whose name is subscribed to the within the instrument and acknowledged that they executed the same for the purposes therein contained. In witness whereof, I hereunto set my hand and official seal. [Notary Public's Signature] [Notary's Printed Name] My Commission Expires: ___________________ Instructions: Make sure to fill in all brackets ([ ]) with the relevant information. Check if your state or country requires the revocation to be witnessed or notarized. Distribute copies as described in the "Notification" section to ensure all relevant parties are informed of the revocation. This document template should help you formally cancel the power of attorney. For complex situations or legal advice, consult with a qualified attorney. மேலே இணத்துள்ள ஆவணம் ஒரு முழுமையான சட்ட ஆவணம் அல்ல, ஒரு மாதிரி ஆவணம் மட்டுமே, மேலே குறிப்பிட்டது போல யாராவது முழு அதிகாரம் வழங்கியிருப்பின் அதனை இரத்து செய்வதற்கான மாதிரி வடிவம் மட்டுமே.1 point
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
காப்பாற்றாமல் விட்டதிற்கே இவ்வளவு தினாவெட்டு என்றால்.....!?!?!?!?!?!? காப்பாற்றி இருந்திருந்தால்........?1 point
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
தமிழர் வேண்டாத தெய்வங்களும் இல்லை. வாங்காத அடிகளும் இல்லை.🙂1 point
-
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
நீங்கள் வேற....... நாணய நிதியத்துக்கு நாணயம் பற்றாகுறை போல அதுதான் ரஸ்யாவை பப்பாவில ஏற்றுது........! 😴1 point
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
மினக்கெட்டு உக்கிரேனுக்கு போய் கொல்லுற தெய்வம் பாதிக்கப்பட்ட தமிழரைக் காப்பாற்றி உதவி செய்திருக்கலாலாம். காப்பாறுவதை விட கொல்லுறது தெய்வத்துக்கு சுகமான வேலை போல இருக்கு அல்லது தமிழர் வழிபடுற தெய்வமும் தமிழரை போல் மொக்கு தெய்வம் போல இருக்கு. 😂1 point
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
அண்ணை கடலை போட்டது கணக்கில் வருமே? வந்தால் நான் கனக்க ஓவர் டைம் மற்றும் நைற் யூட்டி செய்திருக்கிறேன்😜1 point
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.1 point
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
13,14,15,16,17,18,19 வயது பருவங்களிலை சம்பளமில்லாத வேலையும் செய்யேல்லையோ? 😎 மதகுல.....தேத்தண்ணி கடைக்கு முன்னால நிண்டு சேக்கஸ் காட்டினதெல்லாம் கணக்கில எடுபட மாட்டாது. 🤣1 point
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
ஐயோ... ஈழப்பிரியன் நான் சங்கி இல்லை. 😂 நானும் உங்கள் கட்சிதான். எங்கள் பரம்பரையே... நாம் தமிழர் கட்சிக்குதான் ஓட்டு போடுறது. எனக்கும் நாம் தமிழர் வெல்ல வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் கள நிலைமை இன்னும் கனிந்து வரவில்லை என நினைக்கின்றேன்.1 point
-
"நானே வருவேன்"
1 pointஅன்று நீங்கள் பதறிப் போய் இருந்தாலும் இன்று நினைக்கையில் ஒரு ருசிகரமான நிகழ்வாகத்தான் இருக்கும் இல்லையா.......! 😁 நன்றி தில்லை.......!1 point
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
மேலே உள்ள திரியில் இலங்கையில் உள்ள பென்சன் பற்றிய சில தரவுகள் உள்ளன. இலங்கை ஒன்றும் G7 நாடு அல்ல. ஆனால் அங்கும் வேலையில் இருப்போருக்கு EPF இருக்கிறது. இலங்கையில் வேலை செய்த உங்களுக்கும் அநேகமாக இது இருக்கும். இந்த EPF சேமலாபம் ஓய்வுதியத்தின் போது ஒரு lump sum ஆக கொடுக்கப்படும். அதை வங்கியில் இட்டு, அதில் வரும் வட்டி, கீழ் வரம்புக்கு மேலே போவோருக்கு வரி என்பது எனக்கு நியாயமாகவே படுகிறது. இதை விட அரச ஊழியருக்கு மாதாந்த பென்சன். இத்தோடு 70+ வயதினர், மாதம் 3,000 கீழ் வருமானம் எனில், 2000 கொடுக்கப்படுகிறது. அதே போலவே மருத்துவமும் இலவசம். அமெரிக்காவில் தனியார் காப்புறுதி இல்லாவிடில் - கான்சர் வந்தால் சாவுதான் என கேள்வி பட்டுள்ளேன். ஆனால் இலங்கையில் முடிந்தளவு அரசு செலவில் வைத்தியம் பார்ப்பார்கள். எனக்கு தெரியும் பல புலம்பெயர் தமிழர் பெற்றாரின் கணக்கில் பணத்தை வைப்பிட்டு, வயது முதிர்வால் அவர்களுக்கு கிடைக்கும் வரி சலுகை, வட்டி வீதங்களை அனுபவித்தனர். நான் மேலே எழுதியது போல் - நாடு வங்குரோத்தானமைக்கு இப்படியான loopholes உம் காரணம். அதை இப்போ அடைக்கிறார்கள். கிரிஸ் வங்குரோத்தான போதும் இது நடந்தது. https://www.oecd-ilibrary.org/sites/51b9c616-en/index.html?itemId=/content/component/51b9c616-en#:~:text=For comparison with other countries,on sex-specific mortality rates.&text=Senior Citizens over 70 years,payment of LKR 2 000.1 point
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 3ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 3ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 4ம் இடம். 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 2ம் இடம். 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 1ம் இடம். 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)1ம் இடம். 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 1ம் இடம். 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 3ம் இடம். 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 3ம் இடம். 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம். 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 3ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 4ம் இடம். 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம். 19)எல் முருகன் (பிஜேபி) 4ம் இடம். 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 2ம் இடம். 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 1ம் இடம். 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம். 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 4ம் இடம். 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 4 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 00 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 10 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?4 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 3 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 02 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 22 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 14 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 4 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 6 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 01 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 00.1 point
-
"நானே வருவேன்"
1 pointகடவுள் நம்பிக்கை இருந்தால், எந்த வடிவமும் கடவுளே. இவ்வளவு விஞ்ஞான மேற்கு சமூகத்திலும், god help us, நாங்கள் அப்பனே முருகனே, சிவனே, சண்முகனே என்பது போல , அவர்கள் அழைப்பது Jesus (என்று சற்று சத்தமாக) ஆய்வுக்கு அப்பால் என்பதை விஞ்ஞான சமூகம் ஏற்றுக்கொள்கிறது.1 point
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
இவை செய்யப்படணும். அதற்கு அதிக வருமானம் பெறுபவர்கள் வரி கட்ட வேண்டும். பிரான்சில் அவ்வாறு தான். நன்றி அண்ணா1 point
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
விசுகு நீங்கள் சொல்வது சரி.இளமையில் உழைத்து வரிகட்டினார்கள்.வயது போக அவர்களின் வட்டியில் வரி எடுக்குறார்கள். ஆனால் வயது போனபின் அவர்களை பராமரிக்க எத்தனையோ திட்டங்கள் உள்ளது. இளைப்பாறும் வயதை 62 இல் இருந்து 65 ஆக மாற்ற முனைய என்ன நடந்தது?முழு பிரான்சையும் முடக்கினார்கள். இலங்கையில் இளமையிலும் முதுமையிலும் சாகும்வரை அரசுக்கு உழைத்துக் கொடுத்துக் கொண்டே தான் இருக்க வேண்டுமா? பதிலுக்கு வயது போனவர்களுக்கு குறைந்த பட்சம் மெடிக்கல் காப்புறுதியாவது கொடுக்க வேண்டாமா?1 point
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இப்ப தெரியுதா ஈழ தமிழர்கள் யார் பக்கம் நிக்கினம் என்று உங்களால் மற்றவர்களின் உறுதியான கொள்கையில் நிப்பவர்களை மாற்றம் செய்ய முடியாது....................... சீமாம் 2013ம் ஆண்டு ஈழதமிழர்களின் கடும் எதிர்ப்புக்கு ஆள் ஆகினவர் ஈழ தமிழர்கள் சீமானை ஆதரிச்சாலும் அவர் விடும் பிழைகளை சுட்டி காட்டி இருக்கினம் ஆன படியால் நீங்கள் பாடம் எடுக்க தேவை இல்லை கோஷான்............................................................ அங்கை இவரின் பருப்பு வேகது யாழில் ஆவது இவரின் கருத்துக்கு விருப்ப புள்ளி இட ஒரு சில அப்பாவிகள் இருக்கினம் ஹா ஹா😁...........................................1 point
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
அப்படி காட்டமான விமர்சனங்கள் வைக்கப்படும் அந்த பொதுவெளி ஊடகங்களுக்கு போய் உங்கள் வீரத்தை காட்டலாமே?அதை விட்டுட்டு சும்மா யாழ்களத்திற்குள் நின்று சின்னப்பொடியளுடன் புடுங்குப்பட்டுக்கொண்டு....😂 முடிந்தால் x சென்று உங்கள் நியாயத்தை வீரத்தை காட்டுங்கள் பார்க்கலாம் 🤣1 point
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
முதலில் பெறத் தெரியவில்லை, பெறத் தெரியவில்லை என்று கூறுவதன் மூலம், சிங்களவர்கள் நல்லவர்கள், கேட்கிற மாதிரிக் கேட்டால்த் தருவார்கள், எமக்குத்தான் கேட்கத் தெரியவில்லை, எம்மில்த்தான் பிழை என்று கூறுவதை நிறுத்துங்கள். ஏனென்றால், நீங்கள் எப்படிக் கேட்டாலும் அவர்கள் தரப்போவதில்லை. இணக்க அரசியலால் உந்தப்பட்டு கருத்தெழுதும் உங்களிடமிருந்து இதனைத்தவிர வேறு எதனைத்தான் எதிர்பார்க்க முடியும்? இதை எப்படிச் செய்வதாக உத்தேசம்? அரசுடன் இணைந்தா? இதுவரை அரசுடன் இணைந்த தமிழ் அரசியல்வாதிகளைக் காட்டிலும் பெரிதாக வேறு எதனைச் சாதித்து விடப்போகிறீர்கள்? இதற்கும் தமிழ் மக்கள் தமது இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்கும் இடையே இருக்கும் தொடர்பென்ன? கல்வி, வேலைவாய்ப்பு, தொழிநுட்பம், பொருளாதாரத்தில் தமிழ் மக்கள் சோபிக்கவில்லை என்று நினைக்கிறீர்கள் போல. எப்போதும்போலத் தமிழர்கள் இந்த விடயங்களில் நன்றாகவே செயற்படுகிறார்கள். காலத்திற்குக் காலம் கல்வியில், தொழிவாய்ப்பில் ஏற்ற இறக்கங்கள் வரலாம், ஆனால் நிரந்தரமாக வீழ்ந்ததில்லை. ஆனால், தமிழரின் பொருளாதாரமும், கல்வியும், வேலைவாய்ப்பும், தொழிநுட்பமும் அவர்களின் இருப்பைத் தக்கவைக்கப் போவதில்லை. ஏனென்றால், இவற்றிற்கும், அவர்களின் இருப்பிற்கும் தொடர்பில்லை. 1983 இலேயே தமிழர்களின் வாழ்க்கைத்தரம் கொழும்பிலும் பிற இடங்களிலும் எப்படி இருந்ததென்பதும், அவற்றினால்க்கூட அவர்களை கறுப்பு யூலையில் இருந்து காப்பாற்ற முடியாமற்போனதென்பதையும் நீங்கள் மறக்கமாட்டீர்கள். யுத்த காலத்திலும் வடமாகாணமும், பிற்காலத்தில் கிழக்கு மாகாணமும் எப்படியிருந்தன என்பது நாம் தெரியாதது அல்ல. இன்று புலம்பெயர் தமிழரிடையே இருக்கும் செல்வமும், அறிவும், தொழிநுட்பமும் தமிழரின் இருப்பை இலங்கையில் தக்கவைக்கப் போதுமானவையாகத் தெரியவில்லை. கோடீஸ்வரனனான சுபாஷ்கரன் கூட பிக்குகளின் காலில் வீழ்ந்தே வியாபாரம் செய்யவேண்டியிருக்கிறது. அவரால்க் கூட இருப்பைத் தக்கவைக்க முடியாது. தமிழர் மீதான கலவரங்களில் சிங்களம் முதலில் இலக்குவைப்பது அவர்களது பொறுளாதாரத்தை. பின்னர் கல்வி, வேலைவாய்ப்பு என்று தொடரும். இவை தமிழரின் இருப்பைத் தக்கவைக்கப் போதுமானவை அல்ல. வேண்டுமானால் தனி மனிதர்களாக, அடையாளத் துறப்பின் ஊடாக தமிழர்கள் சொந்த நலன்களைக் காத்துக்கொள்ளலாம். கதிர்காமரைப் போல, நீலனைப் போல. ஆனால், ஒரு இனமாக அவர்களால் முடியாது. தமது தொகுதிகளில் சில விடயங்களைச் செய்யலாம் என்பதற்காகவே அப்படி கூறினேன். ஆனால், எனது தெரிவு பாராளுமன்றப் பகிஷ்கரிப்புத்தான். இதன்மூலமே தமிழ் இனம் இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் தனக்கான உரிமைகளைப் பெறவோ, நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளவோ முடியாது என்கிற பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியும். இலங்கையின் ஒற்றையாட்சியியையும் பாராளுமன்றத்தையும் முற்றாகப் பகிஷ்கரிப்பதனூடாக தமிழர்கள் இன்று நடக்கும் அரசிடமிருந்து தம்மை அந்நியப்படுத்தியவர்களாக காண்பிக்க வேண்டும். தொடர்ச்சியான மக்களின் நடவடிக்கைகளே ஈற்றில் சர்வதேசத்தின் கண்களை ஈர்க்கும். ஆனால், இன்றிருக்கும் இணக்க அரசியல் செய்யும் நபர்களும், சலுகைகளின் பின்னால் திரியும் அவர்களின் ஆதரவாளர்களும், உணர்விழந்த மக்களும் இதனைச் செய்வார்களா என்பது கேள்விக்குறிதான். இறுதியாக, உணர்ச்சியற்றவை என்று எதுவும் இல்லை. நாம் இனமாக காக்கப்பட வேண்டும் என்பதும், இருப்பிற்காகப் போராடவேண்டும் என்பதும் கூட ஒரு உணர்வுதான். உணர்வற்றவர்கள் ஜடங்கள் என்று அழைக்கப்படுவர், நீங்கள் எப்பிடி?1 point
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
அந்த வெய்யில் வெக்கைக்கு வேர்த்து ஒழுக கோட் சூட் போட்டுக்கொண்டு கழுத்தை இறுக்கி ரையும் கட்டிக்கொண்டு திரியேலும்....ஆனால் குளிருக்கை வேட்டி கட்டேலாதாம்.😂1 point
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
புலம்பெயர் தமிழர்கள் குளிருக்குள் இருந்து கஷ்ட்டப்பட்டு உழைத்த பணத்தை இனவாத சிங்கள அரசு நடாத்தும் வங்கிகள் ஏமாற்றி வாங்கி விட்டு இப்போ 1லட்ஷத்துக்கு வரி கட்டணும் என்கிறார்கள். அது சரியா ? @colomban நீங்கள் கலாநிதி எம்.கணேசமூர்த்தியை விட அதிகம் படித்து விட்டிர்கள் ஆக்கும் ? புலிகள் இல்லையென்றால் பாலும் தேனும் ஓடும் என்றவர்களை தேடிக்கொண்டு இருக்கிறேன். இதை சொல்வதுக்கு ஒரு தகுதி வேணும் பத்து வருடத்துக்கு ஒரு முறை சென்று பார்த்து விட்டு இலங்கையில் பாலும் தேனும் ஓடுவது போல் இங்கு கதையளக்க கூடாது முடிந்தால் அங்கு இருப்பவர்கள் எழுதட்டும் பார்க்கலாம் உங்களால் அங்கு இருக்க முடியாது எனவே ..........................1 point
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
இந்த வடைப் பிரச்சினை இன்னும் தீரவில்லையா. 😂 🤣1 point
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointசிங்கத்தின் ராஜதந்திரங்கள் அதன் கோட்டையிலேயே தகர்ந்தது ஏன்? புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே எங்கே? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐபிஎல் போட்டி நடக்கும் அனைத்து மைதானங்களிலும் அதிக சத்தம் எழுப்பக்கூடிய மைதானத்தில் முதலிடமாக இருப்பது சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தின் ரசிகர்கள்தான். அதிலும் குறிப்பாக சிஎஸ்கே ஆட்டமாக இருந்தால், அதிலும் தோனி களமிறங்கினால், ரசிகர்களின் விசில் சத்தம், கரவொலி செவிப்பறையை கிழித்துவிடும் அளவுக்கு இருக்கும். ஆனால், இவை எல்லாமே நேற்றைய போட்டியின்போது கடைசி சில ஓவர்களில் காணாமல் போய்விட்டன. ஏனென்றால், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் பேட்டர் ஸ்டாய்னிஸ் ஒட்டுமொத்த சேப்பாக்கம் ரசிகர்களையும் தனது ஆட்டத்தால் மவுனமாக்கிவிட்டார். லக்னெளவில் வைத்து மட்டுமல்ல, சிங்கத்தை அதன் கோட்டையிலேயே சந்தித்து, வீழ்த்துவோம் என்று சொல்லாமல் சொல்லி சிஎஸ்கே அணியை வீழ்த்தி கடினமான வெற்றியை பெற்றுள்ளது லக்னெள அணி. சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே அணியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இங்கு வந்து சிஎஸ்கே அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதானது அல்ல என்பது கடந்த கால போட்டியின் புள்ளிவிவரங்கள் மூலம் அறியலாம். இந்த சீசனில் சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் சந்தித்த முதல் தோல்வியாகும். அது மட்டுமல்லாமல் கடந்த 5 நாட்களுக்குள் லக்னெள அணியிடம் 2வது முறையாக சிஎஸ்கே அணி தோற்றுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 39-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்தது. 211 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னௌ அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம் மைதானத்தில் லக்னெள அணியின் அதிகபட்ச சேஸிங் என்ற சாதனைய பதிவு செய்தது. புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே சரிவு இந்த வெற்றியின் மூலம் லக்னெள அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட் 0.148ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தோல்வியால் 4வது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி 5வது இடத்துக்கு சரிந்துள்ளது. 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் சிஎஸ்கே, உள்ளது. தோற்றாலும், அதன் நிகரரன்ரேட் பெரிதாகக் குறையாமல், 0.415 என்ற ரீதியில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்டாய்னிஸின் அதிரடி லக்னெள அணியின் வெற்றிக்கு முதல் முக்கியக் காரணம் ஸ்டாய்னிஸின் அற்புதமான பேட்டிங் மட்டும்தான். 63 பந்துகளைச்சந்தித்த ஸ்டாய்னிஷ் ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை நிறைவு செய்து 124 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் 56 பந்துகளில் சதம் அடித்ததற்குப் போட்டியாக ஸ்டாய்னிஸும் 56 பந்துகளில் சதம் கண்டார். எந்த ராஜதந்திரமும் பலிக்கவில்லை இந்த சீசனில் லக்னெள அணிக்காக 3வது வீரராகக் களமிறங்கிய ஸ்டாய்னிஸ் தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்யத் தொடங்கி அதன்பின் களத்தில் நங்கூரமிட்டு, சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக மாறிவிட்டார். ஸ்டாய்னிஸை வெளியேற்ற பல உத்திகளை கேப்டன் கெய்க்வாட்டும், தோனியும் பயன்படுத்தியும் அவரை அசைக்கக் கூட முடியவில்லை. கடைசி 5 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 74 ரன்கள் தேவைப்பட்டது. சிஎஸ்கே போன்ற வலிமையான பந்துவீச்சு வைத்திருக்கும் அணிகள், தோனியை அணியில் வைத்திருக்கும்போது, பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி எதிரணியை வீழ்த்திவிடும் என எதிர்பார்க்கப்பட்டது, எளிதாக டிபெண்ட் செய்துவிடும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், சிஎஸ்கேயின் அனைத்து திட்டங்களையும் நிகோலஸ் பூரன் மற்றும் தீபக் ஹூடாவின் உதவியால் ஸ்டாய்னிஸ் உடைத்து எறிந்து சேப்பாக்கத்தை நிசப்தமாக்கிவிட்டார். பூரனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 70 ரன்களும், ஹூடாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 65 ரன்களும் சேர்த்து ஸ்டாய்னிஷ் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டம் எங்கு திரும்பியது? ஷர்துல் தாக்கூர் வீசிய 16-வது ஓவரில் இருந்துதான் ஆட்டம் லக்னெள அணி கரங்களுக்குத் திரும்பியது. அதுவரை சிஎஸ்கே அணி களத்தில் ஆதிக்கம் செய்து, தங்களுக்குத்தான் வெற்றி என மிதந்து கொண்டிருந்தனர். ஆனால், இந்த ஓவரில் இருந்துதான் ஆட்டம் மெல்ல சிஎஸ்கே கரங்களில் இருந்து நழுவியது. கடைசி 5ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 74 ரன்கள் தேவைப்பட்டது. ஷர்துல் தாக்கூர் 16-வது ஓவரை வீசினார். களத்தில் ஸ்டாய்னிஷ், பூரன் இருந்தனர். ஸ்ட்ரைக்கில் இருந்த பூரன், ஷர்துல் ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 20 ரன்கள் சேர்த்தார். பதிரணா வீசிய 17-வது ஓவரில் பூரன் க்ளீன் போல்டாகி 34 ரன்களில் வெளியேற ஆட்டம் பரபரப்பானது. அந்த ஓவரில் லக்னெள அணிக்கு 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி 3 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. முஸ்தபிசுர் வீசிய 18-வது ஓவரில் ஹூடா ஒரு சிக்ஸரும், ஸ்டாய்னிஸ் ஒரு பவுண்டரி உள்பட 15 ரன்களை லக்னெள அணி சேர்த்தது. கடைசி 12 பந்துகளில் லக்னெள வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. 19-ஆவது ஓவரை பதிரணா வீசிய நிலையில் அந்த ஓவரில் ஹூடா 3 பவுண்டரி உள்பட 15 ரன்கள் சேர்த்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES 3 பந்துகளில் 15 ரன்கள் கடைசி 6 பந்துகளில் லக்னெள வெற்றிக்கு 17ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை முஸ்தபிசுர் வீச, ஸ்ட்ரைக்கில் ஸ்டாய்னிஷ் இருந்தார். முஸ்தபிசுர் வீசிய முதல் பந்தில் லாங்ஆன் திசையில் ஸ்டாய்னிஷ் சிக்ஸர் விளாசி ரசிகர்களை அமைதியாக்கினார். 2வது பந்தில் ஸ்டாய்னிஸ் பவுண்டரி அடிக்க சேப்பாக்கமே அதிர்ச்சியில் உறைந்தது. கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. 3-ஆவது பந்து ஸ்டாய்னிஷ் பேட்டில் பட்டு தேர்டுமேன் திசையில் பவுண்டரியானது. அந்த பந்தையும் முஸ்தபிசுர் நோபாலாக வீசவே 5 ரன்கள் லக்னெளவுக்கு கிடைத்தது. கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு லக்னெள வெற்றிக்கு 2 ரன்கள் தேவை. ஸ்டாய்னிஷ் பைன்லெக் திசையில் பவுண்டரி அடித்து லக்னெள அணிக்கு நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை பரிசளித்தார். சிஎஸ்கே அணிக்கு எதிராக சேஸிங்கில் கடைசி ஓவரில் 17 ரன்களை அடித்த செய்த 2ஆவது அணியாக லக்னெள மாறியது. இதற்கு முன் 2020ம் ஆண்டில் சிஎஸ்கே அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் கடைசி ஓவரில் 17 ரன்களை சேஸிங் செய்திருந்தது. லக்னோ அணி கடைசி 8 ஓவர்களில் மட்டும 113 ரன்கள் சேர்த்தது. சேஸிங்கின்போது 13 முதல் 20 ஓவர்களில் 113 ரன்களை இதற்குமுன் மும்பை அணி மட்டும்தான் 2021ல் சிஎஸ்கே அணிக்கு எதிராகச் சேர்த்திருந்தது. அதன்பின் தற்போது லக்னெள அணி சேர்த்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு எதிராக சேஸிங்கில் ஸ்டாய்னிஸ் அடித்த 124 ரன்கள்தான் ஐபிஎல் தொடரில் தனிநபர் பேட்டரின் அதிகபட்ச ஸ்கோராகும்.இதற்கு முன் 2011ல் மொஹாலில் பஞ்சாப் வீரர் பால் வால்தாட்டி 120 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 211 ரன்கள் சேஸிங்தான் அதிகபட்சமாகும். இதற்கு முன் 2012ல் ஆர்சிபிக்கு எதிராக 206 ரன்களை சிஎஸ்கே சேஸ் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது அதை லக்னெள முறியடித்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்டாய்னிஸ் வெற்றியை சாத்தியமாக்கியது எப்படி? லக்னெள அணி ஐபிஎல் தொடர் முழுவதும் 3-ஆவது இடத்தில் சரியான பேட்டர் கிடைக்காமல் தடுமாறி வந்தது. பலமுறை தீபக் ஹூடாவை களமிறக்கியும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இந்த ஆட்டத்தில் டீகாக் விரைவாக ஆட்டமிழக்கவே, ஆங்கர் ரோலுக்காக 3வது இடத்தில் ஸ்டாய்னிஷை களமிறக்கியது லக்னெள அணி. இந்தப் போட்டிக்கு முன்புவரை லக்னெள அணியின் 3வது வரிசை பேட்டரின் சராசரி ரன் 9.33, ஸ்ட்ரைக் ரேட் 101 ஆக மட்டுமே ஐபிஎல் தொடரில் இருந்தது. ஆனால், ஸ்டாய்னிஷ் 3வது வீரராகக் களமிறங்கினாலும், டீகாக் விரைவாக ஆட்டமிழந்ததால், தொடக்க ஆட்டக்காரர் போல் மாறி செயல்பட வேண்டியதிருந்தது. லக்னெள அணிக்காக 3வது வரிசை பேட்டராக ஸ்டாய்னிஷ் முதல்முறைாயக இந்த ஆட்டத்தில் களமிறங்கினார். இந்த வரிசையில் ஸ்டாய்னிஸ் களமிறங்கி சற்றுகூட தடுமாறாமல், மிகவும் நேர்த்தியாக ஷாட்களை ஆடினார். நிதானமான ஆட்டத்தை கையில் எடுத்து, நேரம் செல்லச் செல்ல அதிரடிக்கு மாறினார். ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் டி20 தொடரில் மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணிக்காக ஸ்டாய்னிஷ் பலமுறை 3-ஆவது வீரராகக் களமிறங்கி விளையாடிய அனுபவம், டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்தபோது, 3வது வீரராகக் களமிறங்கிய அனுபவம் அவருக்குக் கை கொடுத்தது. தொடக்கத்தில் நிதானமாக ஆடிய ஸ்டாய்னிஷ் 16 பந்துகளில் 11 ரன்கள் என்றுதான் இருந்தார். ஆனால், அணியின் ஸ்கோர், ரன்ரேட்டைப் பார்த்து, அதிரடியாக ஆடிய ஸ்டாய்னிஷ் 26 பந்துகளில் அரைசதத்தையும், அடுத்த 30 பந்துகளில் 50 ரன்கள் என 56 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார். இந்தப் போட்டிக்கு முன்புவரை பதிரணா ஓவரை ஒருமுறை மட்டுமே ஸ்டாய்னிஸ் எதிர்கொண்டிருந்தார். இதனால் பதிரணாவின் பந்துவீச்சு ஆக்சன், பந்து ரிலீஸ் ஆகும் ஸ்டெயில் ஆகியவற்றை கணித்து ஆடுவதில் ஸ்டாய்னிஸுக்கு தொடக்கத்தில் சற்று குழப்பம் இருந்தது. ஆனால் பதீராணா ஓவரை பின்னர் சமாளித்து ஆடி 12 பந்துகளில் 15 ரன்களை ஸ்டாய்னிஷ் சேர்த்தார். தோல்விக்குப் பிறகு கெய்க்வாட் கூறியது என்ன? தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில் “ இந்த தோல்வியை ஜீரணிக்கவே கடினமாக இருக்கிறது. லக்னெள அணியினர் கடைசியில் சிறப்பாக ஆடினர். 13-ஆவது ஓவர்வரை எங்கள் கரங்களில் ஆட்டம் இருந்தது, ஆனால் ஸ்டாய்னிஷ் அதை பறித்துக்கொண்டார். பனிப்பொழிவும் சேர்ந்து எங்களுக்கு பாதகமாக மாறியது. கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே சறுக்கியது எங்கே? சிஎஸ்கே அணியின் 210 ரன்கள் ஸ்கோர் உயர்வுக்கு இரு பேட்டர்கள் மட்டும்தான் காரணம். முதலாவதாக கேப்டன் கெய்க்வாட் அடித்த 60 பந்துகளில் (108), 2வதாக ஷிவம் துபேயின் 66 ரன்கள்(27பந்துகள்) ஆகியவைதான். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இருவரும் ஜோடி சேர்ந்த பின்புதான் சிஎஸ்கே ஸ்கோர் உயரத் தொடங்கியது. மற்ற பேட்டர்களான ரஹானே(1), டேரல் மிட்ஷெல்(11), ஜடேஜா(16) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கெய்க்வாட் இதுவரை சதம் அடித்த 4 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ஜடேஜாவை மீண்டும் 4-ஆவது வரிசையில் களமிறக்கி சிஎஸ்கே கையை சுட்டுக்கொண்டது. ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட டேரல் மிட்ஷெல் இதுவரை ஒரு போட்டியில்கூட பெரிதாக ஸ்கோர் செய்யாதது சிஎஸ்கேவுக்கு பெரிய ஷாக். சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் பெரிதாக நெருக்கடி தரும் வகையில் பந்துவீசவில்லை. தீபக் சஹர் 2 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட் வீழ்த்தினார். அதன்பின் அவருக்கு ஓவர்கள் வழங்கப்படவில்லை. மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும், ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்துள்ளனர். அதிகபட்சமாக முஸ்தபிசுர், ஷர்துல் இருவரும் ஓவருக்கு 14 ரன்களை வாரி வழங்கினர். சுழற்பந்துவீச்சிலும் ஜடேஜா, மொயின் அலி ஓரளவுக்குபந்துவீசிய நிலையிலும் அவர்களுக்கு 2 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டது. சேஸிங்கின்போது, பனிப்பொழிவு லேசாக இருந்தது ஆடுகளத்தை லக்னெள பேட்டர்களுக்கு இன்னும் இலகுவாக மாற்றியது. பந்துகள் பேட்டர்களின் பேட்டுக்கு எளிதாக வரத் தொடங்கியது சேஸிங்கை எளிதாக்கியது. அது மட்டுமல்லாமல் பனிப்பொழிவால் பந்துவீச்சாளர்கள் பந்தை இறுக்கமாகப் பிடித்து பந்துவீசுவதும் கடினமாக இருந்தது. https://www.bbc.com/tamil/articles/cd137wdkpn1o1 point
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
யாழ் களத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் போட்டியில் கலந்து கொள்ள தயக்கம் காட்டுவதால்… @nilmini ஐ போட்டியில் கலந்து சிறப்பிக்கும்படி அழைப்பு விடுக்கின்றேன். 🙂1 point
-
ஏமாற வேண்டாம்! 8 நிறுவனங்களின் பட்டியல் வெளியானது!
பிரமிட் திட்டம் என்றால்…. தமிழில் எழுத பஞ்சியாக உள்ளது. இந்த விக்கி இணைப்பில் விளக்கம் உள்ளது. சுருக்கமாக: ஒரு போலியான முதலீட்டு கூம்பகம் (பிரமிட்). இதில் ஒவ்வொருவரும் மேலும் மேலும் ஆட்களை முதலிட வைத்து அதன் மூலம் தாம் பிரமிட்டின் முதல் படிக்கு போய் பெருந்தொகை பணத்தை ஈட்டல். நிகழ்தகவின் படி இந்த பிரமிட்டில் ஆரம்பத்தில் இருப்போர் மட்டுமே இலாபம் ஈட்டுவர். பெரும்பாலான முதலீட்டாளர் மேலே போகும் அளவுக்கு புதிய முதலீட்டாளர்கள் சேர மாட்டார்கள். ஆகவே ஆரம்பித்த சிலரை தவிர மீதம் ஆட்கள் நட்டம் அடைவர். https://en.m.wikipedia.org/wiki/Pyramid_scheme முன்னர் இலங்கையில் பல வகைகளில் இந்த களவு நடந்தது. இப்போ கிரிப்டோ புது டிரெண்ட் என்பதால் அதையும் வைத்து கிளம்பியுள்ளார்கள்.1 point
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1 point
-
"சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"
1 point
-
அப்பா உடனே வாங்கோ.
1 pointநன்றி அல்வாயன். சன்பிரான்சிஸ்கோவில் இன்னுமொரு பேரனும் பேத்தியும் இருக்கிறார்கள்.1 point
-
"சாதனைகள் தூரத்திலில்லை"
1 pointஇதில் கற்பனைகள் பரவி இருந்தாலும் சாதாரண வகுப்பு, உயர் வகுப்பு, ஆசிரியர் சிவசேகரம் போன்றவற்றில் சில உண்மைகள் அடங்கித்தான் உள்ளன. அது மறுப்பதற்கு இல்லை இந்த ஆசிரியரை நான் மறக்கவே முடியாது. என்றாலும் பத்தாவது உலகத் தமிழ் மகாநாட்டில் பார்வையாளராக ஜூலை 2019 இல் நான் பங்குபற்றிய போது, சிவசேகரம் ஆசிரியரின் தங்கையை அங்கே கண்டேன். அவர் தான் தன் அண்ணா இறந்துவிட்டார் என்ற செய்தியை எனக்கு கூறினார். அதன் பின் தான் இந்த கதை அண்மையில் எழுதினேன் , பல கற்பனைகளையும் சேர்த்து நன்றி1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்று சென்னையில் CSK அணி 210 ஓட்டங்கள் எடுத்தும் LSG இடம் தோற்றுவிட்டது. மார்கஸ் ஸ்ரொயின்ஸ் 124 ஓட்டங்களை விளாசித்தள்ளியிருந்தார். 14 ஆவது கேள்வியில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் எடுப்பவர் விராட் கோலி என்று பதிலளித்தவர்களுக்கு மைனஸில் புள்ளிகள் போகலம்!😱 விராட் 124க்கு மேல் அடிக்கவேண்டும் எனது லெமூரியன் முதல்தாதையை வேண்டுகின்றேன்🫥1 point
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
கனடா மற்றும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவின் சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையானவை. நான் 2001 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தபோது இங்குள்ள சட்டதிட்டங்கள் மிகவும் கடினமானவையாக தெரிந்தது. என்ன செய்தாலும் களவு களவுதான். பிழை பிழைதான். எனது மகனின் பாடசாலை அதிபர்இ மிகவும் பணக்காரி. Best Buy (Opelika) என்னும் கடையில் பெறுமதியான வயரை எடுத்து CCTV இல் பார்த்ததோடு Security Guard உம் பிடித்து விட்டான். உடனே போலீஸ் வந்து கைது விட்டார்கள். பத்திரிகை இணையதளம் எல்லாம் கைது செய்த படத்தை (Mugshot) போட்டுவிட்டார்கள். வேலையும் இல்லாமல் போயிவிட்டது. ஆனால் அவ வெள்ளைக்காரி. அத்துடன் மிகவும் செல்வாக்கு உள்ள குடும்பம். அதனால் எதோ ஒரு விதமாக மன்னிப்பு கிடைத்து இப்ப அதே ஊரில் நான் படித்த யுனிவர்சிட்டியில் இல் வேலை செய்கிறா. அமெரிக்காவின் சட்ட திட்டங்கள் கடுமையானவை என்றாலும்இ இப்படியான சலுகைகளும் பணக்கார மற்றும் செல்வாக்கு உள்ள ஆக்களுக்கு வேறுவிதமான சலுகைகள் கிடைக்கும். சில வருடங்களுக்கு முன்பு கனடாவில் ஒரு தமிழ் போலீஸ் ஒரு கறுப்பின இளைஞன் நேர்முகத்தேர்வுக்கு போவதற்காக உடுப்பு திருடியதை மன்னித்து அதற்கான பணத்தை அவரே செலுத்தி இளைஞனை கைது செய்யாமல் விட்டார். அப்போதுதான் எனக்கு தெரியும் போலீஸ் காரர்களுக்கு இப்படி செய்ய அதிகாரம் இருக்கு என்று.1 point
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
வட்டி என்பது பணப்பெறுமதியிழப்பிற்கான பரிகாரம் ஆகும்.1 point
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
நன்றி 5 பரப்புக் காணி ( அம்மம்மாவின் தாயாரின் காணி ) 20 வருசத்துக்கு முன் வெறும் 30 லட்ஷத்துக்கு வந்தது, நான் வெளிநாட்டில் படித்துக்கொண்டு இருந்ததால் அம்மாவால் அதை வாங்க முடியவில்லை. பின்னர் போன வருடம் பரப்பு 27 லட்ஷம் படி கிட்டத்தட்ட மொத்தம் ஒண்டரை கோடி என்று விலைக்கு திடீர் என்று வந்தது. இங்கு எனக்கு படிப்பு, exam வேலை என்று பல நெருக்கடிகளுக்கு இடையில் இருக்கிற காசை எல்லாம் போட்டு அதை வாங்கினேன். வாங்கினதும் அம்மம்மா சந்தோசமாக என்னுடன் அந்தக் காணியில் தான் வாழ்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து மூத்த பேரன் அதை வாங்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அடுத்த கிழமை தனது 94 ம் வயதில் இறந்தும் போனார். அவர் இறந்த அதே நாள் எனக்கு மகனும் பிறந்தான்.1 point
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
இலங்கைக்கு பணம் அனுப்புவதில் புலம் பெயர் தமிழர்களின் திடீர் முடிவு #udaruppu1 point
-
இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
1 point
- இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.1 point- ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
வெள்ளைக்காரன் ஆசியாவுக்கு வந்து இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்க மிகவும் கஸ்டப்பட்டவனாம்..லெவ்ட்,ரைட் பயிற்றுவிக்கவே பெரிய கஸ்டப்பட்டவனாம்...பிறகு ஒரு காலுக்கு லெஞ்சியை(சீலை துணியை) கட்டிவிட்டு....லெஞ்சி கக்குள்ள,நிக்காங் கக்குள்ள என பயிற்சி வழங்கி தங்களது பயிற்சியை வழங்கினார்கள் என் சொல்வார்கள்... வெடி வைக்க ஏன் மொழி ?டாங்கிக்கு பக்கத்தில போ முன்னுக்கு யார் வந்தாலும் டிரிகரை அமுக்கு என கை பாசையில் சொல்லி கொடுத்தா சரி தானே .1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
சீமேந்துத் தொழிற்சாலை அமையக் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராடுவது அரசியல் விடயமா? எப்படி? ஒரு சீமேந்துத் தொழிற்சாலை அமைவதால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அறிந்திருக்கிறீர்களா? இல்லையென்றால், காங்கேசந்துறைத் தொழிற்சாலையைச் சுற்றியிருந்த பல நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் ஏன் இன்று தரிசாகக் கிடக்கின்றன என்று சென்று பாருங்கள். அப்பகுதிகளில் காணப்படும் பாரிய அகழிகளால் ஏற்பட்டிருக்கும் சூழல் நாசத்தைச் சென்று பாருங்கள். குறுகிய கால வேலைவாய்ப்பிற்காகவும், வருமானத்திற்காகவும் ஒரு பிரதேசத்தினை நாசமாக்குவதைத் தடுக்க அப்பிரதேச மக்கள் போராடுவதை அரசியல் என்று கொச்சைப்படுத்த வேண்டாம்.1 point- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
1 pointபாடல்: நான் ரொம்ப பிசி படம்: வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க இசை: டி.இமான் பாடியவர்கள்: சந்தோஸ் கரிகரன். நீற்றி மோகன், சரண்யா கோபிநாத் வரிகள்: நா. முத்துகுமார், சிநேகிதா சந்திரா Subscriber not reachable at the moment மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி ஸ்கய்ப்ல தான் வந்தாலும் எஸ்கெப் ஆற மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி Fபேஸ்புக் லொகின் பண்ண எனகில்ல நேரம் வட்சப்பில் சட்டிங் பண்ண வரமாடேன் நானும் Fபுல் ரைமா லவ் பணுறன் டிஸ்ரர்ப் பண்ண வேணாம் ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீசப்ல் ஆட் த மொமென்ட் மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி ஸ்கய்ப் ல தான் வந்தாலும் எஸ்கெப் ஆற மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி யொஉ Cஅன் றுன் ஆநய் ஈ Gஒட் யொஉ Bஅcக் Gஒட் Jஉச்ட் ளொவெ Yஒஉ ஸொ Cஅன்ட் ளெட் Yஒஉ Gஒ நான் எத்தன தடவ சொன்னாலும் நீ சுத்தம காதுல வாங்கிகல நா சொலுரது உனக்கு கேக்குதா இல்ல கேட்டும் கேட்காம தான் இருக்கியா டெடி பியர் இல்லாம தினம் தூங்க மாட்டேனே நான் கொஞ்சம் நீ வந்து மாடிகிட்ட மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி ஸ்ட்ரொங் பீரு இல்லாம கிக் ஏறி போனேனே தமிழ் நாடில் இங்கிலிஸ் கிஸ் அடிபோமே மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி கன்னதில் முத்தம் தானா பத்து செக்கன்ட் தாரேன் கடிச்சு வெச்சுபுட்ட கோர்ட்டுக்கு தான் போவ கார்டுக்குள்ள யெல்லா காட்டு பேபி ஓ பேபி நான் சந்தோசம வாரென் ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீச்சப்ல் ஆட் த மொமென்ட் மச்சி ஸ்க்ய்பெ ல தான் வந்தாலும் எஸ்கெப் ஆற மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி இதய அறையை திறந்து நுழைந்து திருட நினைக்கும் மன்னவா இரவும் பகலும் எனது இதழில் விருந்து இருக்கு உண்ண வா மனதை மயக்கும் மாய வா வா வா வா ஏன் வயதை நீயும் வெல்ல வா Fபிரென்ட்ஸ் ஓட பேசாம பாருகும் போகாம ஹச் டொக்க போல உன்ன சுத்தி வரென் மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி புல்ல்டோசெர் இல்லாம JCB வெக்காம என் நெஞ்ச தூள் தூள ஒடச்சிபுட்டா மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி றயிற்று றயிற்று இப்ப போலாம் விடு ஜூட்டு லிப்டில் கிஸ் அடிக்க போடதடி கேற்று கட்டு கட்டு தாலி கட்டு பேபி ஓ பேபி நான் என்ன அள்ளி தாறென் ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீச்சப்லெ ஆட் த மொமென்ட் மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி ஸ்கய்ப்ல தான் வந்தாலும் எஸ்கெப் ஆற மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி Fபேஸ்புக் லொகின் பண்ண எனகில்ல நேரம் வட்சப்பில் சட்டிங் பண்ண வர மாடஎன் நானும் Fபுல் ரைமா லவ் பன்ரன் டிச்டுர்ப் பண்ண வெணாம் Fபுல் ரைமா லவ் பணுறன் டிஸ்ரர்ப் பண்ண வெணாம் நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி1 point - இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
Important Information
By using this site, you agree to our Terms of Use.