Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    29
    Points
    87990
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    3054
    Posts
  3. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    9308
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/22/24 in all areas

  1. 👍.......... என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம்.......... இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை............🤣. ஆனாலும் அங்கு படிக்கும் நாட்களில் ஒருநாள் எங்கள் வகுப்பில் இருவருக்கு கன்னத்தை பொத்தி விழுந்ததும் நல்லாவே ஞாபகத்தில் இருக்குது...............🫢.
  2. இது புலம்பெயர்ஸ்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி. புலம்பெயர்ஸ் இனியாவது நிலத்தில் உள்ள மக்களின் மனநிலையறிந்து தேவையறிந்து செயற்பட வேண்டும். தற்போதும் காலம் கடந்துவிடவில்லை.
  3. புலம்பெயர் புண்ணியவான்கள் கம்மெண்டு இருந்தாலே போதுமானது. தாயகத்து மக்கள் தமது அரசியலைத் தகவமைத்துக்கொள்ளுவார்கள்!
  4. அரியநேந்திரனுக்கு வடக்கில் (யாழ்ப்பாணம் - வன்னி தேர்தல் தொகுதிகளில்) கிடைத்த வாக்குகளாக ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 65 வாக்குகளை பெற்றிருக்கிறார்... இவருக்கு எதிர்த்தரப்பில் போட்டியிட்ட சிங்களக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கியுள்ள வாக்குகள் 4 லட்சத்து இரண்டாயிரத்து 228… தமிழ் பொதுவேட்பாளருக்கு வழங்கிய வாக்குகளைவிட தமிழ் மக்கள் சிங்களக் கட்சியினருக்கு வழங்கியுள்ள வாக்குகள் கிட்டத்தட்ட முன்று மடங்கு அதிகம்… கிளிநொச்சியில் (யாழ்ப்பாணத்தில்தான் கொஞ்ச முஸ்லீம் சிங்கள மக்கள் இருக்கிறார்கள் ஆனால் கிளிநொச்சியில் தூய தமிழ் ஏரியா) தமிழ்ப் பொது வேட்பாளரைவிட (20348) சிங்களக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகள் இரண்டு மடங்கு அதிகம் (40558).. ஒவ்வொரு தொகுதியிலும் இதுதான் நிலமை… அவ்வளவு பந்தி எழுத்துக்கள் இணைய பத்திரிகை பிரச்சாரங்கள் புலம்பெயர்ஸ் பலரின் ஆதரவு நிதிபங்களிப்பு பிரச்சாரம், பெரிய தமிழ் அரசியல்கட்சிகள் பலவற்றின் அங்கத்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மற்றும் பிரச்சாரம் இவற்றுடன் வலம் வந்து அரியம் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுகையில் எந்தப் பிரச்சாரமும் செய்யாத - யாருமே ஆதரவளிக்காத - சிவாஜிலிங்கம் 2019 தேர்தலில் பெற்ற வாக்குகள் 12 ஆயிரத்துச் சொச்சம்... வடக்கு கிழக்கிலுள்ள 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் வாக்குகளில் அரைவாசிக்கு மேலாவது எடுத்திருக்கவேண்டாமா அரியம்? இவரைவிட சிவாஜி பெற்றவாக்குகள் 12 ஆயிரத்துச் சொச்சம் வாக்குகள் தர்மப்படி அதிகம்.. பொதுவேட்பாளர் கோமாளிகள் இல்லாவிட்டால் அனுராவின் வெற்றி கடினமாகி இருந்திருக்கும்.. அனுரா தரப்பு யுத்தத்துடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படாதது.. யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பையும் அரசியலில் இருந்து அகற்றியாச்சு.. இனிமேல் ஆட்சியில் இருப்பவர்களை போரின் பங்காளிகளாக விரல்காட்டி நீதிகோரும் அழுத்தங்களை வழங்கமுடியாது… சிங்களத் தரப்பினர் தமிழர்கள் விடயம் உட்பட சகலதிலும் புதிய அணுகுமுறையோடு களத்திற்கு வந்திருக்கிறார்கள்… யுத்தமும் அதன் பின் நீண்ட ஒன்றரை சகாப்தமும் முடிந்து இப்பொழுது சிங்களதேசம் கடந்தகால யுத்தங்களை, வெற்றிகளை பேசி உசிப்பேத்த முடியாத( ஏனெனில் அதில் பங்கெடுக்காத படியால்) ஒருதரப்பை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறது.. இவர்களுக்கும் கடந்தகால போருக்கும் போர்க்குற்றங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சர்வதேசத்துக்கும் தெரியும்.. ஆக இன்று பெரும் இக்கட்டில் மாட்டியிருப்பது தமிழர் தரப்பு… மாட்டவைத்ததில் பொதுவேட்பாளர் கோமாளிகளின் பங்கும் உண்டு.. தமிழ் தேசியத்தின் வீழ்ச்சிக்கான முதல் ஆணியை பொதுவேட்பாளர் கூட்டம் அடிச்சு விட்டிருக்கு.. அது இருக்க இங்கு யாழில் பொதுவேட்பாளருக்கு முட்டுக்கொடுப்பவர்கள் இவர்கள் பொதுவேட்பாளர்கள் தரப்பு சந்திக்கப்போகும் சர்வதேசம் யார் என்று சொல்லிட்டு போங்க… யார் யார் அந்த செய்தியை கொண்டு போகப்போறாங்க..? இந்த பொதுவேட்பாளர் கூட்டே இந்த தேர்தலுக்கு மட்டுமே ஒப்பந்தம் போட்டு சேர்ந்த கூட்டு.. இன்றுடன் அந்த ஒப்பந்தங்களும் காலாவதியாகின்றன.. இனிமே இந்த பொதுவேட்பாளர் கூட்டில் யார் இருப்பார்கள்..? அதன் எதிர்காலம்..??
  5. பொது வேட்பாளர் என்பது இன்றைய தமிழரின் அபிலாசைகளை கருதி பிறந்த குழந்தை. அது உடனேயே ஓட்டப்போட்டியில் வெற்றி பெறவேண்டுமென நாம் நினைத்தால்; அது நமது தவறு. அதுவும் இரண்டுபட்ட தமிழரசுக்கட்சியை வைத்துக்கொண்டு எதிர்பார்ப்பது நமது அனுபவக்குறைவேயல்லாமல் வேறொன்றுமில்லை. அவர் வெற்றி பெறாததால் ஒன்றும் குடிமுழுக்கப்பபோவதில்லை. எமது தேவைகளை, அபிலாசைகளை முன்னிறுத்தியுள்ளது. அது சிங்களத்துக்கும் புரியும். அனுரா அதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய பாதையில் பயணிப்பது முதலில் சிரமமாகத்தான் இருக்கும், போகப்போக அதன் ஏற்ற இறக்கங்கள் புரியும்.
  6. சிங்களம் தமிழரின் சகவாழ்வு குறித்துச் சிந்திக்கும் என இத்தனை அழிவுகள் அதன் பின்வந்த 15 ஆண்டுகால சிங்களத்தின் நகர்வுகள், அதற்குச் சான்றாகத் தமிழர் தெருக்கள் தோறும் பௌத்த அடையாளங்களை நிறுவுதல் என்று சிஙகள அரசு செய்துவருகின்றது. இதனை எதிர்த்து ம.வி.மு எங்காவது ஒருவார்த்தை கூறியுள்ளதா? இந்த (அவ)லட்சணத்தில் அநுரா வந்தால் தேனும் பாலும் தெற்கிலிருந்து வட-கிழக்கு நோக்கிப்பாயப்போகுதாம் என்று நம்புவோரை நினைத்து... நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  7. நீங்கள் நித்திரை கொள்ளப் போகின்றேன் என்று போய் விட்டீர்கள்............. நாங்கள் இப்படியே இது இழுபடுவதை பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்............🤣.
  8. தாங்களும் ஒரு பிரதேச வல்லரசு, அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் உலக வல்லரசு ஆகி விடுவோம் என்ற ஒரு ஆசை தான்..................🤣. சுற்றிவர இருக்கும் நாடுகளில் பூட்டானைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் வேறு பக்கம் சாய்ந்துவிட்டன. ஷேக் ஹசீனா ஓடியவுடன் பங்களாதேஷும் 'ரசாக்கள்' ஆகிவிட்டனர். இலங்கை இன்றுடன் 'மாவோ நமோ நமோ.....' என்று அந்தப் பக்கமும் சரியும். நேபாளும், மாலதீவும் ஏற்கனவே போய்விட்டன. அதானியின் மன்னார் காற்றாலையை காப்பாத்துவதே வல்லரசு இப்ப செய்ய வேண்டியது...........🤣.
  9. யதீந்திராதான் எழுதிய வித்துவான்! https://www.facebook.com/share/JXanQwQr5LuWsQiY/?mibextid=WC7FNe
  10. இன்னும் மூன்று வரிசத்தில் இந்த மனிசனை மீண்டும் தேடிப் பிடித்து ஆட்சி அமைக்க சொல்லும் நிலை வராவிடின் மகிழ்ச்சி. பார்ப்பம் 69 இலட்சம் பேரின் தெரிவு பாணுக்கும் பருப்புக்குன் லைனில் நிற்க வைத்தது இப்ப 56 இலட்சம் பேரின் தெரிவு என்னாகும் என்று.
  11. மற்றைய ஜனாதிபதிகள் போல் ஒரு பக்க சார்பாக நடக்காமல், தமிழ் இனத்தின் கோரிக்கைகளையும் செவிமடுத்து, புதிய பாதையில் அரசமைக்க…. அனுரவிற்கு வாழ்த்துக்கள்.
  12. அனுராவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். வாழு வாழவிடு. இரு இனங்களும் மனசு வைச்சால் இலங்கை சொர்க்க பூமியாகும்.
  13. அனுராவிற்கும் சஜித்திற்கும் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசம். அரியம் எடுத்தது 2 லட்சம் மட்டுமே. அவரின் முழு வாக்குகளும் சஜித்திற்கு விழுந்தாலும் சஜித் முன்னுக்கு வந்திருக்க முடியாது. அண்ண கணக்கில கொஞ்சம் வீக் போல இருக்கு. அதுசரி கூட்டமைப்போ, தமிழரசுக்கட்சியோ ஆதரித்த எந்த வேட்பாளர் ஜனாதிபதியாக வந்துள்ளார்? முதலில் வெல்லப்போகும் குதிரையில் பந்தயம் கட்டவேண்டும் இல்லையா மூடிக்கொண்டு ஓரமா படுக்கவேண்டும்.
  14. நிலாந்தன், யதீந்திரா, சோதிலிங்கம், தமிழரசு என்றொரு வரிசையை நான் கண்டேன் அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல இன்று நானும் ஏமாந்தேன்!😂
  15. @ரசோதரன் அண்ணை உங்க ஆசை நிறைவேறிவிட்டது!! இரண்டாம் சுற்று எண்ணப்படுகிறது.....
  16. அத்துடன்... அரியநேத்திரன் தமிழர் அரசியலில் பிரபலமான ஆளும் இல்லை. தமிழ் அடையாளத்துக்காக நிறுத்தப் பட்ட ஆளே... மிகவும் எளிய முறையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் மூலம் இலங்கையின் நாலாவது இடத்தைப் பிடித்தது வெற்றிதான். 💪 அதை ஜீரணிக்க இங்குள்ள சிலருக்கு கஸ்ரமாக இருக்குது. அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது. புலம்பிப் போட்டு.. குப்புற படுக்க வேண்டியதுதான். 😂 🤣
  17. NPP ANURA KUMARA DISSANAYAKE 2,459,99339.44% SJB SAJITH PREMADASA 2,124,29834.06% IND16 RANIL WICKREMESINGHE 1,094,42617.55% IND9 ARIYANETHIRAN PAKKIYASELVAM 210,3793.37% SLPP NAMAL RAJAPAKSA 142,5892.29% அரியநேத்திரன் அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்திலும், நாமல் ராஜபக்சவை பின்தள்ளி, முன்னுக்கும் உள்ளார்.
  18. கந்தையா அண்ணை, இன்றைக்கு உங்களோட பேச்சுவார்த்தை கிடையாது. நீங்கள் கேட்கப் போகின்ற கேள்விகளில் இந்த தேர்தலில் யார் யார் நின்றார்கள் என்பதே மறந்து போய்விடும்...........🤣.
  19. இங்கு தமிழ் பொது வேட்பாளரை மக்கள் முழுமையாக ஒதுக்கவில்லை என்றாலும், தமிழ் மக்கள் ஒரு செய்தியினை சொல்லிவிட்டார்கள், இது ஒரு வகையில் தெளிவான செய்திதான் அனைத்து மக்களும் இலங்கையராக பயணிக்க கூடிய ஒரு சூழ்நிலை உருவானால் தமிழ் மக்களும் எந்த் வித தய்க்கமுமின்றி இணைந்து பயணிக்க தயாரக உள்ளார்கள் என்பதே, இது ஒட்டு மொத்த இலங்கைக்கும் கூறப்பட்டுள்ள செய்திதானே? இந்த பொது வேட்பாளரால் ஏற்பட்ட நன்மை எனக்கொள்ளலாம் (பொது வேட்பாலரை ஆதரித்தவர்களில் நானும் ஒருவன்). மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதனை புரிந்து புலம்பெயர் தமிழர்களும் செயற்படுவார்கள்தானே?
  20. ரசோதரன்…. மகிந்த கோஷ்டிக்கு இந்தத் தேர்தலில் தோற்போம் என்று தெரியும். ஆனால் அவர்களின் கோட்டையே தகர்ந்து போகும் அளவிற்கு… இந்தளவு மரண அடி விழும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 😁 போரை வென்ற வெற்றி நாயகன் என்ற விம்பம் எல்லாம் தவிடு பொடியாகி விட்டது. இனி…. சிங்களவர் யாரும், ஈழப் போரை வைத்து அரசியல் செய்ய முடியாது என நினைக்கின்றேன். சரத் பொன்சேகா எத்தனை வீத வாக்கு எடுத்தார் என்று அறிய ஆவலாக உள்ளது. 😂
  21. நாமல் மிக நிதானமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றார்............... 2.2% இலிருந்து 2.9% இற்கு வந்துள்ளார்.........
  22. சுமந்திரன் எந்தப் பக்கம் இனி போவார்? அது அவருக்கே தெரியாதாம்.😀
  23. பொதுவான Bottom trawling எனக் கூறப்படும் கடலடி இழுவைப் படகு மீன்பிடி முறை என்பது கடலின் நில மட்டம் வரை வலையைப் போட்டு இழுக்கப்படும் முறையைக் குறிக்கும். இங்கே கடல் அடித்தளத்தில் இருந்து வலைகள் மேலெழாதபடி இருப்பதற்காக பாரமான இரும்பு போன்ற உலோகப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாக்கு நீரிணைப் பகுதி ஓர் ஆழமற்ற கடர்பகுதியாக இருப்பதால் சூரிய வெளிச்சம் கடலின் அடிப்பகுதிவரை சென்று கடற்தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதனால் இங்கே கடல் உயிரினங்கள் தமது இனப்பெருக்கத்திற்காக இந்து சமுத்திரத்திலிருந்து இங்கே வருகின்றன. அப்படியாக வரும் கடல் உயிரினங்களில் இறால் மிகவும் முக்கியமான ஒன்று. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இறால் ஒரு மண்ணினுள் புதைந்து வாழும் உயிரினம். இந்த இறாலைப் பிடிக்க வேண்டும் என்றால் மண்ணின் அடிப்பாகத்தைக் கிளற வேண்டும். எனவே, இந்திய மீனவர்கள் தங்களது அதிக சக்திவாய்ந்த இழுவைப்படகுகளால் கடலடித் தளத்தை கிளறுகிறார்கள். அப்போது மண்ணிலிருந்தெ மேலெலும் இறால் நண்டு, கடற் சங்கு போன்ற கடலுயிர்கள் வலையினுள் அகப்படுகின்றன. இவர்கள் கடலின் அடித்தளத்தை உழுகிறார்கள் என்பதே உண்மை. கற்பனை செய்து பாருங்கள் ; 500 இந்திய இழுவைப்படகுகள் கூட்டமாக மன்னார் தீவுப்பகுதியில் இருந்து வடக்கு நோக்கி கச்சதீவு வரை ஒரு 50 KM தூரத்திற்குப் கூட்டமாக கடலடித் தளத்தை உழுதுகொண்டே செல்கிறார்கள். இப்போது அவர்கள் உழுதுகொண்டு போன பாதையில் எது மீதமாக இருக்கும்? இந்த மீனவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை என்பது, அவர்கள் ஒவ்வொரு முறை கடலில் இறங்கும்போதும் நடுக்கத்தை உண்டுபண்ண வேண்டும். 😡
  24. வாட்ஸப்பில் கண்டது.. எழுதிய வித்துவானைத் தெரியாது.. —- அனுரவின் வெற்றியும் தமிழரசுக் கட்சி ஆதரித்த சஜித்தின் தோல்வியும். அனுரகுமாரவின் வெற்றி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இதில் குத்திமுறிய ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே அனுர வெற்றிபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில், தமிழ் பொது வேட்பாளருக்கான திருகோணமலை கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன். அது நடந்திருக்கின்றது. ஆனால் நாங்கள் கணித்தது போன்றே அனுரகுமார திசாநாயக்க ஜம்பது விகித ஆதரவில்லாமல் வெற்றிபெற்றிருக்கின்றார். இந்த அடிப்படையில், ஜனநாயக நெறிமுறைகளுக்கு அமைவாக அனுர பெரும்பாண்மையான மக்களின் ஆதரவை பெற்ற ஒருவரல்ல. ஒரு தோல்வியடைந்த வேட்பாளராகவே அவர் ஜனாதிபதியாகியிருக்கின்றார். எனவே அவரால் அதிகம் எதனையும் செய்துவிட முடியாது. முக்கியமாக அவர் தமிழ் மக்கள் விடயத்தில் எந்தவொரு அதிசயத்தையும் நிகழ்த்தப்போவதில்லை. ஒரு வேளை சஜித் வென்றிருந்தாலும் இதே நிலைமைதான். தமிழ் தேசிய நிலைப்பாடு, தேசமாக சிந்தித்தல் என்னும் நிலைப்பாட்டின் கீழ் நோக்கினால், தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு திருப்திகரமானதல்ல. சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குகளை கூட்டினால் தமிழ் நிலைப்பாடு என்று, நாங்கள் குறிப்பிடும் விடயங்களுக்கு வெளியில்தான் அதிக மக்கள் இருக்கின்றனர். உண்மைகளை புறம்தள்ளி எப்போதும் சிந்திக்கக் கூடாது. ஆனால் பல்வேறு உள் எதிர்ப்புக்கள், உட் சதிகளுக்கு மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் பெற்றிருக்கும் வாக்குகள் திருப்தியை தருகின்றது. அனைத்து தமிழ்த் தேசிய தரப்புக்களும் ஒன்றிணைந்து, ஒரு இலக்கில் செயற்பட்டிருந்தால், நான்கு லட்சத்திற்கு மேலான வாக்குகளை தொட்டிருக்க முடியும். ஆனால் இது ஒரு படிப்பினை. அதே வேளை, இவ்வாறானதொரு அணுகுமுறை சாத்தியம் என்பதை, செயலால் நிரூபித்திருக்கின்றோம். ஆரம்பத்தில் எங்களுடைய முயற்சியை ஏளனமாக நோக்கிய ராஜதந்திர தரப்புக்களுக்கும் ஒரு செய்தி சொல்லப்பட்டிக்கின்றது. சஜித் பிரேமதாசவை ஆதரிக்கச் சொன்னவர்கள் மோசமான தோல்வியை சந்தித்திருக்கின்றனர். ஏனெனில் தமிழ் பொது வேட்பாளரை தோற்கடிப்பதாக கூறிய சுமந்திரன் தரப்பு, இறுதியில் தென்னிலங்கையில் தோல்வியடையப் போகும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கூறியதில் என்ன புத்திசாலித்தனம் உண்டு? ஒரு கொள்கை நிலைப்பாட்டுக்காக வாக்குகளை தருமாறு கோரிய பொது வேட்பாளரரை நிராகரித்து, தோல்விடையும் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்ததில் என்ன பெருமையுண்டு. தமிழ் மக்கள் தொடர்ந்தும் முட்டாள்தனமாகத்தான் சிந்திப்பார்கள் என்பதைக் காண்பித்ததை தவிர வேறு என்ன நடந்திருக்கின்றது? தமிழரசு கடச்சியின் மத்திய குழுத் தீர்மானம் முட்டாள்தனமானது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இதில் குகதாசனுக்கு பங்கில்லை என்றால், அதனை பொது வெளிகளில் குறிப்பிடும் வல்லமையை காண்பிக்க வேண்டும். பொது வேட்பாளர் கணக்கிலெடுக்கப்படாத ஒருவராக இருப்பார் - இருக்க வேண்டும் என்று கூறியவர்கள் இனி எதைச் சொல்வார்கள்? அதே போன்று, முட்டாள்தனமாக சிந்திப்பதில் பிரபல்யமான கஜாக்களின் அணியான சைக்கிள் அணியினரின் தமிழ்த் தேசியமும் புஸ்வானமாகிவிட்டது. சஜித் பிரேமதாசவை ஆதரித்ததில் என்ன நன்மையுண்டு? பகிஸ்கரிப்புக் கதையில் என்ன நன்மையுண்டு? சஜித்திற்கு வாக்களித்த தமிழ் மக்கள் ஒரு வேளை, சஜித்தான் வெற்றிபெறப் போகின்றார் என்னும் எண்ணத்தில் வாக்களித்திருக்கலாம் ஆனால் ஒரு தோல்வியாளருக்கு வாக்களித்ததன் மூலம் மீண்டும் தமிழ் மக்களின் வாக்குகள் பெறுமதியற்றுப் போயிருக்கின்றது. அந்த வாக்குகளை தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்திருந்தால், அந்த வாக்குகளுக்கு ஒரு பெறுமதியிருந்திருக்கும். சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் அரசியல் விழிப்பு தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. விடுதலைப் புலிகளை அழித்ததாக மார்தட்டிக் கொண்டிருந்த ராஜபக்ச குடும்பத்தை, சிங்கள மக்கள் இப்போது எந்த இடத்தில் நிறுத்தியிருக்கின்றனர்? தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய இடம் இதுதான். கட்சி மற்றும் தனிநபர்களை புறம்தள்ளி தமிழ் மக்கள் தங்களின் சொந்தப் புத்தியில் இயங்க வேண்டும். இந்தத் தேர்தல் முடிவுகள் எதனை உணர்த்துகின்றது? சிங்கள பெரும்பாண்மைக்குள் எழுச்சி ஏற்பட்டால் தமிழ் மக்களின் வாக்குகள் தேவையற்றது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. 2019இலும் இது நிரூபிக்கப்பட்டது. மீண்டும் 2024இல் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அனுரகுமார ஜம்பது விகிதத்தை பெறாத போதிலும் கூட, சிங்கள மக்களின் தனி ஆதரவில் வெற்றிபெற்றிருக்கின்றார். தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற சஜித்திற்கும் அனுரவிற்கும் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசம். தமிழ் மக்கள் பொதுச் சபை மற்றும் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்பது சர்வலோக நிவாரணியல்ல – அனைத்தும் குறைபாடுகள் உள்ள அமைப்புக்கள்தான். யுத்தத்திற்கு பின்னர் தோற்றம் பெற்ற அனைத்து அமைப்புக்களும் குறைபாடுகள் உள்ளவைதான். முன்னர் இருந்தவையும் புனித அமைப்புக்கள் அல்ல. அங்கும்குறைபாடுகள் ஏராளம். ஆனால் முடிந்தவரையில் ஒரு விடயத்தை செய்வதற்காக ஒன்றுபடுதல் என்பதிலிருந்துதான் முன்னேற்றங்களை நோக்க வேண்டும். செயலால்தான் குறைபாடுகளை சரிசெய்ய முடியும். மனிதர்களால் உருவாக்கப்படும் அனைத்திலும் மனிதர்களின் பலவீனங்களின் நிழல் தொடரும்தான். அனுரவை ஆதரித்த சிங்கள மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துத்தான் திரண்டிருக்கின்றனர். இப்படித்தான 2019இலும் திரண்டனர் இறுதியில் ஏமாற்றமடைந்தனர். அந்த ஏமாற்றம் அவர்களுக்கு மீண்டும் கிடைக்குமா? அனுரவின் இலங்கைகையும் பார்ப்போம். அறகலயவில் கொடிபிடிப்பது இலகுவானது ஆனால் நாட்டை கொண்டு நடத்துவது?
  25. சீனா என்ற குதிரை லாயத்தில் தான் இவர் பதுங்கி யிருக்கிறார் என்பது கூட தெரியாத நம்ம இந்தியாவை நினைக்க பாவமாக இருக்கின்றது
  26. சீனா என்ன வெள்ளி பாத்துக்கொண்டிருக்கும் எண்டுறியளோ? 😂
  27. வாங்கோ வாங்கோ ! உங்களுக்கு தொப்பி புரட்டுவது ஒன்றும் புதிதல்லவே. காலாகாலமாக அதைத்தானே செய்துகொண்டிருக்கிறீர்கள். அனுராவின் பக்கம் நீங்கள் போனாலே செருப்படிதான் விழும் .
  28. மக்களை கவனித்தால் அவர்களை உங்கள் சார்பாக ஈர்க்க முடியும். ஆனால் எத்தனை பேரை உங்களால் கவனிக்க முடியும். போட்டியில் வெற்றி பெறுவதற்கு ஆகும் செலவை ஈடுசெய்ய முடியுமா? நான் ஆட்டோ ஒன்றில் ஒரு அலுவலாக சென்றசமயம் ஓட்டுனருடன் நாட்டு நிலவரம் பற்றி பேச்சு கொடுத்தேன். அவர் ஒரு முன்னாள் போலிஸ் கமாண்டோ. சிறப்புப்பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர் அநுர குமா வெற்றி பெறுவார் என கூறினார். அநுர குமாரவிற்கு இயல்பான ஆதரவு கிடைத்தது. நாமல் போன்றோர் ஆட்களுக்கு வாகனம் விட்டு ஏற்றி இறக்கி, உணவு, இதர வசதிகள் கொடுத்து கவனித்து, காசும் கொடுத்து கூட்டங்களுக்கு கூப்பிடப்படுவதாய் சொன்னார். இல்லாவிட்டால் அவர்கள் கூட்டங்களுக்கு ஆட்கள் செல்ல மாட்டார்கள் என கூறினார். பசி வந்தால் பத்தும் பறந்து போகும். அது சிங்களம், தமிழ், முஸ்லீம் என வேறுபாடு பார்ப்பது இல்லை. நாட்டு நிலவரம் அப்படி.
  29. தேர்தல் இறுதி முடிவுகள் அண்ணை பிறகென்ன யாழிலையும் புதிய ஜனாதிபதியின் வகுப்புத் தோழன் இருக்கிறார் என நாங்களும் எழுதுவமெல்லோ!!
  30. // நான் இல்லை என்றாலும் இந்தத் தேசத்தில் அரசியல் என்றாலே கசப்பாக இருக்கும் ஒரு தருணத்தில், எனது ஜே.வி.பி. சகோதரர் ஒருவர் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றுவார். அவர் பிறப்பில் செல்வந்தராகவோ, பணக்காரராகவோ இருக்க மாட்டார். // - ரோஹன விஜேவீர.- எப்படிப் பட்ட ஒரு தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இன்று நிஜமாகி உள்ளது.
  31. வெய்ட் பண்ணுங்க அண்ணை, நிலாந்தன் மாஸ்டர் ஆய்வு எழுதிக்கொண்டிருக்கிறாராம்! உங்கட பீலிங்ஸுக்கெல்லாம் பதில் தருவார்!🤣
  32. Presidential Election-2024 Preferential vote Result SAJITH PREMADASA SJB 44.05% 4,363,035 + 137,025 Votes 4,500,060 Total Votes ANURA KUMARA DISSANAYAKE NPP 55.95% 5,634,915 + 80,066 Votes 5,714,981 Total Vote https://election.virakesari.lk/
  33. "தமிழ் தேசிய அரசியலையும் உணர்வையும் மேலும் நீர்த்து போகச் செய்வது எவ்வாறு"
  34. அநுர குமார வென்றதில் மகிழ்ச்சி! இலங்கையில் ஏற்படும் மாற்றம் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பங்களிப்பில்லாமல் நிகழவேண்டும் என்பது எனது விருப்பம். இப்ப சஜித் வென்றிருந்தால் அவர்கள் 5 இற்கு மேற்பட்ட அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருப்பர்கள். அடுத்தது ரணிலின் படுதோல்வி! 2002 இல் சமாதான காலத்தில் நரித்தனமாக புலிகள் அமைப்பை பிளவுபடுத்தாமல் இருந்திருந்தால். இவரின் சனாதிபதிக் கனவு 2005 இலேயே நனவாகியிருக்கும். இப்ப தானும் அழிந்து கட்சியையும் அழித்து, சுதந்திரக் கட்சியையும் அழித்து கேவலப்பட்டு நிற்கின்றார். இவர் எப்போதும் பின்கதவால் வந்த சனாதிபதியாகவே இலங்கை வரலாற்றில் பார்கப்படுவார். அடுத்து பப்பாவில் ஏறிய அரியம். வடக்கு கிழக்கு தமிழர் சங்கை அழகாக எடுத்து இனிமையாக ஊதியிருக்கிறார்கள். 😂
  35. வயிற்றெரிச்சலால் சம்பந்தமில்லாமல் ஏதோ புலம்புகிறார் அவர், அவருக்கு நம் இழப்புகள், தேவைகள் தெரிவதுமில்லை, கவலையுமில்லை, இன உணர்வுமில்லை. விழுந்து போன தன் இனத்தை பார்த்து தோல்வியை எள்ளி நகையாடுபவர் அந்த இனத்துக்கு வேண்டியவருமில்லை. விடுங்கள் அவரை, அவர்பாட்டில் களைத்ததும் ஓய்ந்து விடுவார்.
  36. ஒற்றுமை மற்றும் ஒன்றாதல் என்பது உங்கள் போன்றவர்களால் இல்லாமல் ஆக்கப்பட்டு முடிவுக்கு வந்தாச்சு. அதன் கடைசி முயற்சிதான் முடிந்துள்ளது. மற்றும்படி நீங்கள் சொல்வது போல் 1000 ஆண்டுகளுக்கு பின்னர் டமில் என்று ஒரு இனமும் இருக்க வாய்ப்பில்லை. அதையும் புலம்பெயர் தேசத்தில் அறுத்து விடாமல் நீங்கள் சாகப்போவதில்லை.
  37. அடுத்த 1000 வருடங்களுக்கு டமில் பொது வேட்பாளர் என யாரை நிறுத்தினாலும் அவர் தோல்வியடைவார் என்பது உறுதி. ஏனென்றால் அதன் கருவிலேயே சங்கு ஊதப்பட்டுள்ளது.
  38. அனுரவின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக தயார் செய்யப்பட்ட கேக்குகளுக்கு வேலை இல்லாமல் போய் விடுமோ... 😲 இருக்காது. தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணி... கைகாட்டின ஆள் வெல்ல சந்தர்ப்பமே இல்லை. 😂
  39. அநுரா 1968 இல் பிறந்தவர். எனவே 1983 இல் இவரின் வயதொத்தவர்களின் காடைத்தனம் தான் இனக் கலவரம். அதை நேரில் பார்த்தவன் நான். இதுவரை ஜேவிபி அது சார்ந்து எந்த மன உளைச்சலையும் வெளியிட்டதில்லை. அதை செய்திருந்தால் அவர்கள் இந்த இலக்கை அடைவதற்கு அது தடையானது என்ற புரிதல் அவர்களுக்கு என்றுமே நினைவில் உண்டு. எம்மையும் அழித்து விட்டு இனக்கலவரத்தையும் தானே தூண்டி நின்று நடாத்தி விட்டு அதைக் காட்டி சர்வதேசத்திடம் பணமும் பார்க்க வல்லது சிங்களம். வரலாறு முக்கியம்.
  40. இது பற்றி பேசுவது என்றால் கனக்க எழுதவேண்டும். எழுதிக் கொண்டே இருக்கலாம். என் பேரப்பிள்ளைகள் சார்ந்த கேள்விகளுக்கு பதில் தந்தால் நிறம் அதற்குள் வந்து நின்றுவிடும். அப்படியானால் இந்த உலகம் உங்கள் கடைசி வரி போல் எல்லோரும் சாதாரண மனிதர்கள் என்ற நிலை வரணும். அவ்வாறு வந்தால் நான் தமிழன் நீ பிரெஞ்சுக்காரன் என்பதும் இருக்கமுடியாது அல்லவா?
  41. சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் பல வேட்பாளர்களை தெரிவுசெய்து வாக்களிப்பதற்கு வாக்களர்களுக்கு அனுமதியுண்டுதானே.
  42. புத்தன்… இது தபால் மூலம் வாக்களிக்கப் பட்ட அரச ஊழியர்களின் வாக்குகள்.
  43. தரவுகள் நிறைந்த சிறப்பான கருத்து.
  44. சீலரத்ன தேரர் வேட்புமனு தாக்கல் செய்ய கட்டுப்பணத்தை மறந்து போன அந்த நாளிலிருந்து நம்மாள் ஆகிவிட்டார்........... 🤣. கட்டிய ஐம்பதினாயிரம் ரூபாய்க்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்தோ பத்தோ என்று வாக்குகள் கிடைக்குது........... 28 தான் தேரரின் highest score ஆக வரும் போல................
  45. எந்த முட்டாள் மோசன் மட்டி மடையன் மூஞ்சியுடன் இதை நீவீர் இங்கே எழுதுகிறீர்??? அவரது தோல்விக்காக உழைத்ததை தவிர வேறு எதை கிழித்தீர்????? முழு முட்டாள் பிசாசே. ..
  46. டக்ளஸ் தேவானந்தாவும், செந்தில் தொண்டமானும்…. அனுரவின் கட்சிக்கு போக பிளான் போட்டிருப்பார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.