Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    29
    Points
    88827
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    3127
    Posts
  3. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    9308
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    35001
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/22/24 in all areas

  1. 👍.......... என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம்.......... இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை............🤣. ஆனாலும் அங்கு படிக்கும் நாட்களில் ஒருநாள் எங்கள் வகுப்பில் இருவருக்கு கன்னத்தை பொத்தி விழுந்ததும் நல்லாவே ஞாபகத்தில் இருக்குது...............🫢.
  2. இது புலம்பெயர்ஸ்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி. புலம்பெயர்ஸ் இனியாவது நிலத்தில் உள்ள மக்களின் மனநிலையறிந்து தேவையறிந்து செயற்பட வேண்டும். தற்போதும் காலம் கடந்துவிடவில்லை.
  3. புலம்பெயர் புண்ணியவான்கள் கம்மெண்டு இருந்தாலே போதுமானது. தாயகத்து மக்கள் தமது அரசியலைத் தகவமைத்துக்கொள்ளுவார்கள்!
  4. அரியநேந்திரனுக்கு வடக்கில் (யாழ்ப்பாணம் - வன்னி தேர்தல் தொகுதிகளில்) கிடைத்த வாக்குகளாக ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 65 வாக்குகளை பெற்றிருக்கிறார்... இவருக்கு எதிர்த்தரப்பில் போட்டியிட்ட சிங்களக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கியுள்ள வாக்குகள் 4 லட்சத்து இரண்டாயிரத்து 228… தமிழ் பொதுவேட்பாளருக்கு வழங்கிய வாக்குகளைவிட தமிழ் மக்கள் சிங்களக் கட்சியினருக்கு வழங்கியுள்ள வாக்குகள் கிட்டத்தட்ட முன்று மடங்கு அதிகம்… கிளிநொச்சியில் (யாழ்ப்பாணத்தில்தான் கொஞ்ச முஸ்லீம் சிங்கள மக்கள் இருக்கிறார்கள் ஆனால் கிளிநொச்சியில் தூய தமிழ் ஏரியா) தமிழ்ப் பொது வேட்பாளரைவிட (20348) சிங்களக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகள் இரண்டு மடங்கு அதிகம் (40558).. ஒவ்வொரு தொகுதியிலும் இதுதான் நிலமை… அவ்வளவு பந்தி எழுத்துக்கள் இணைய பத்திரிகை பிரச்சாரங்கள் புலம்பெயர்ஸ் பலரின் ஆதரவு நிதிபங்களிப்பு பிரச்சாரம், பெரிய தமிழ் அரசியல்கட்சிகள் பலவற்றின் அங்கத்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மற்றும் பிரச்சாரம் இவற்றுடன் வலம் வந்து அரியம் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுகையில் எந்தப் பிரச்சாரமும் செய்யாத - யாருமே ஆதரவளிக்காத - சிவாஜிலிங்கம் 2019 தேர்தலில் பெற்ற வாக்குகள் 12 ஆயிரத்துச் சொச்சம்... வடக்கு கிழக்கிலுள்ள 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் வாக்குகளில் அரைவாசிக்கு மேலாவது எடுத்திருக்கவேண்டாமா அரியம்? இவரைவிட சிவாஜி பெற்றவாக்குகள் 12 ஆயிரத்துச் சொச்சம் வாக்குகள் தர்மப்படி அதிகம்.. பொதுவேட்பாளர் கோமாளிகள் இல்லாவிட்டால் அனுராவின் வெற்றி கடினமாகி இருந்திருக்கும்.. அனுரா தரப்பு யுத்தத்துடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படாதது.. யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பையும் அரசியலில் இருந்து அகற்றியாச்சு.. இனிமேல் ஆட்சியில் இருப்பவர்களை போரின் பங்காளிகளாக விரல்காட்டி நீதிகோரும் அழுத்தங்களை வழங்கமுடியாது… சிங்களத் தரப்பினர் தமிழர்கள் விடயம் உட்பட சகலதிலும் புதிய அணுகுமுறையோடு களத்திற்கு வந்திருக்கிறார்கள்… யுத்தமும் அதன் பின் நீண்ட ஒன்றரை சகாப்தமும் முடிந்து இப்பொழுது சிங்களதேசம் கடந்தகால யுத்தங்களை, வெற்றிகளை பேசி உசிப்பேத்த முடியாத( ஏனெனில் அதில் பங்கெடுக்காத படியால்) ஒருதரப்பை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறது.. இவர்களுக்கும் கடந்தகால போருக்கும் போர்க்குற்றங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சர்வதேசத்துக்கும் தெரியும்.. ஆக இன்று பெரும் இக்கட்டில் மாட்டியிருப்பது தமிழர் தரப்பு… மாட்டவைத்ததில் பொதுவேட்பாளர் கோமாளிகளின் பங்கும் உண்டு.. தமிழ் தேசியத்தின் வீழ்ச்சிக்கான முதல் ஆணியை பொதுவேட்பாளர் கூட்டம் அடிச்சு விட்டிருக்கு.. அது இருக்க இங்கு யாழில் பொதுவேட்பாளருக்கு முட்டுக்கொடுப்பவர்கள் இவர்கள் பொதுவேட்பாளர்கள் தரப்பு சந்திக்கப்போகும் சர்வதேசம் யார் என்று சொல்லிட்டு போங்க… யார் யார் அந்த செய்தியை கொண்டு போகப்போறாங்க..? இந்த பொதுவேட்பாளர் கூட்டே இந்த தேர்தலுக்கு மட்டுமே ஒப்பந்தம் போட்டு சேர்ந்த கூட்டு.. இன்றுடன் அந்த ஒப்பந்தங்களும் காலாவதியாகின்றன.. இனிமே இந்த பொதுவேட்பாளர் கூட்டில் யார் இருப்பார்கள்..? அதன் எதிர்காலம்..??
  5. பொது வேட்பாளர் என்பது இன்றைய தமிழரின் அபிலாசைகளை கருதி பிறந்த குழந்தை. அது உடனேயே ஓட்டப்போட்டியில் வெற்றி பெறவேண்டுமென நாம் நினைத்தால்; அது நமது தவறு. அதுவும் இரண்டுபட்ட தமிழரசுக்கட்சியை வைத்துக்கொண்டு எதிர்பார்ப்பது நமது அனுபவக்குறைவேயல்லாமல் வேறொன்றுமில்லை. அவர் வெற்றி பெறாததால் ஒன்றும் குடிமுழுக்கப்பபோவதில்லை. எமது தேவைகளை, அபிலாசைகளை முன்னிறுத்தியுள்ளது. அது சிங்களத்துக்கும் புரியும். அனுரா அதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய பாதையில் பயணிப்பது முதலில் சிரமமாகத்தான் இருக்கும், போகப்போக அதன் ஏற்ற இறக்கங்கள் புரியும்.
  6. சிங்களம் தமிழரின் சகவாழ்வு குறித்துச் சிந்திக்கும் என இத்தனை அழிவுகள் அதன் பின்வந்த 15 ஆண்டுகால சிங்களத்தின் நகர்வுகள், அதற்குச் சான்றாகத் தமிழர் தெருக்கள் தோறும் பௌத்த அடையாளங்களை நிறுவுதல் என்று சிஙகள அரசு செய்துவருகின்றது. இதனை எதிர்த்து ம.வி.மு எங்காவது ஒருவார்த்தை கூறியுள்ளதா? இந்த (அவ)லட்சணத்தில் அநுரா வந்தால் தேனும் பாலும் தெற்கிலிருந்து வட-கிழக்கு நோக்கிப்பாயப்போகுதாம் என்று நம்புவோரை நினைத்து... நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  7. நீங்கள் நித்திரை கொள்ளப் போகின்றேன் என்று போய் விட்டீர்கள்............. நாங்கள் இப்படியே இது இழுபடுவதை பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்............🤣.
  8. தாங்களும் ஒரு பிரதேச வல்லரசு, அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் உலக வல்லரசு ஆகி விடுவோம் என்ற ஒரு ஆசை தான்..................🤣. சுற்றிவர இருக்கும் நாடுகளில் பூட்டானைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் வேறு பக்கம் சாய்ந்துவிட்டன. ஷேக் ஹசீனா ஓடியவுடன் பங்களாதேஷும் 'ரசாக்கள்' ஆகிவிட்டனர். இலங்கை இன்றுடன் 'மாவோ நமோ நமோ.....' என்று அந்தப் பக்கமும் சரியும். நேபாளும், மாலதீவும் ஏற்கனவே போய்விட்டன. அதானியின் மன்னார் காற்றாலையை காப்பாத்துவதே வல்லரசு இப்ப செய்ய வேண்டியது...........🤣.
  9. யதீந்திராதான் எழுதிய வித்துவான்! https://www.facebook.com/share/JXanQwQr5LuWsQiY/?mibextid=WC7FNe
  10. இன்னும் மூன்று வரிசத்தில் இந்த மனிசனை மீண்டும் தேடிப் பிடித்து ஆட்சி அமைக்க சொல்லும் நிலை வராவிடின் மகிழ்ச்சி. பார்ப்பம் 69 இலட்சம் பேரின் தெரிவு பாணுக்கும் பருப்புக்குன் லைனில் நிற்க வைத்தது இப்ப 56 இலட்சம் பேரின் தெரிவு என்னாகும் என்று.
  11. மற்றைய ஜனாதிபதிகள் போல் ஒரு பக்க சார்பாக நடக்காமல், தமிழ் இனத்தின் கோரிக்கைகளையும் செவிமடுத்து, புதிய பாதையில் அரசமைக்க…. அனுரவிற்கு வாழ்த்துக்கள்.
  12. அனுராவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். வாழு வாழவிடு. இரு இனங்களும் மனசு வைச்சால் இலங்கை சொர்க்க பூமியாகும்.
  13. அனுராவிற்கும் சஜித்திற்கும் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசம். அரியம் எடுத்தது 2 லட்சம் மட்டுமே. அவரின் முழு வாக்குகளும் சஜித்திற்கு விழுந்தாலும் சஜித் முன்னுக்கு வந்திருக்க முடியாது. அண்ண கணக்கில கொஞ்சம் வீக் போல இருக்கு. அதுசரி கூட்டமைப்போ, தமிழரசுக்கட்சியோ ஆதரித்த எந்த வேட்பாளர் ஜனாதிபதியாக வந்துள்ளார்? முதலில் வெல்லப்போகும் குதிரையில் பந்தயம் கட்டவேண்டும் இல்லையா மூடிக்கொண்டு ஓரமா படுக்கவேண்டும்.
  14. நிலாந்தன், யதீந்திரா, சோதிலிங்கம், தமிழரசு என்றொரு வரிசையை நான் கண்டேன் அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல இன்று நானும் ஏமாந்தேன்!😂
  15. @ரசோதரன் அண்ணை உங்க ஆசை நிறைவேறிவிட்டது!! இரண்டாம் சுற்று எண்ணப்படுகிறது.....
  16. அத்துடன்... அரியநேத்திரன் தமிழர் அரசியலில் பிரபலமான ஆளும் இல்லை. தமிழ் அடையாளத்துக்காக நிறுத்தப் பட்ட ஆளே... மிகவும் எளிய முறையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் மூலம் இலங்கையின் நாலாவது இடத்தைப் பிடித்தது வெற்றிதான். 💪 அதை ஜீரணிக்க இங்குள்ள சிலருக்கு கஸ்ரமாக இருக்குது. அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது. புலம்பிப் போட்டு.. குப்புற படுக்க வேண்டியதுதான். 😂 🤣
  17. NPP ANURA KUMARA DISSANAYAKE 2,459,99339.44% SJB SAJITH PREMADASA 2,124,29834.06% IND16 RANIL WICKREMESINGHE 1,094,42617.55% IND9 ARIYANETHIRAN PAKKIYASELVAM 210,3793.37% SLPP NAMAL RAJAPAKSA 142,5892.29% அரியநேத்திரன் அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்திலும், நாமல் ராஜபக்சவை பின்தள்ளி, முன்னுக்கும் உள்ளார்.
  18. கந்தையா அண்ணை, இன்றைக்கு உங்களோட பேச்சுவார்த்தை கிடையாது. நீங்கள் கேட்கப் போகின்ற கேள்விகளில் இந்த தேர்தலில் யார் யார் நின்றார்கள் என்பதே மறந்து போய்விடும்...........🤣.
  19. இங்கு தமிழ் பொது வேட்பாளரை மக்கள் முழுமையாக ஒதுக்கவில்லை என்றாலும், தமிழ் மக்கள் ஒரு செய்தியினை சொல்லிவிட்டார்கள், இது ஒரு வகையில் தெளிவான செய்திதான் அனைத்து மக்களும் இலங்கையராக பயணிக்க கூடிய ஒரு சூழ்நிலை உருவானால் தமிழ் மக்களும் எந்த் வித தய்க்கமுமின்றி இணைந்து பயணிக்க தயாரக உள்ளார்கள் என்பதே, இது ஒட்டு மொத்த இலங்கைக்கும் கூறப்பட்டுள்ள செய்திதானே? இந்த பொது வேட்பாளரால் ஏற்பட்ட நன்மை எனக்கொள்ளலாம் (பொது வேட்பாலரை ஆதரித்தவர்களில் நானும் ஒருவன்). மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதனை புரிந்து புலம்பெயர் தமிழர்களும் செயற்படுவார்கள்தானே?
  20. ரசோதரன்…. மகிந்த கோஷ்டிக்கு இந்தத் தேர்தலில் தோற்போம் என்று தெரியும். ஆனால் அவர்களின் கோட்டையே தகர்ந்து போகும் அளவிற்கு… இந்தளவு மரண அடி விழும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 😁 போரை வென்ற வெற்றி நாயகன் என்ற விம்பம் எல்லாம் தவிடு பொடியாகி விட்டது. இனி…. சிங்களவர் யாரும், ஈழப் போரை வைத்து அரசியல் செய்ய முடியாது என நினைக்கின்றேன். சரத் பொன்சேகா எத்தனை வீத வாக்கு எடுத்தார் என்று அறிய ஆவலாக உள்ளது. 😂
  21. நாமல் மிக நிதானமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றார்............... 2.2% இலிருந்து 2.9% இற்கு வந்துள்ளார்.........
  22. சுமந்திரன் எந்தப் பக்கம் இனி போவார்? அது அவருக்கே தெரியாதாம்.😀
  23. பொதுவான Bottom trawling எனக் கூறப்படும் கடலடி இழுவைப் படகு மீன்பிடி முறை என்பது கடலின் நில மட்டம் வரை வலையைப் போட்டு இழுக்கப்படும் முறையைக் குறிக்கும். இங்கே கடல் அடித்தளத்தில் இருந்து வலைகள் மேலெழாதபடி இருப்பதற்காக பாரமான இரும்பு போன்ற உலோகப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாக்கு நீரிணைப் பகுதி ஓர் ஆழமற்ற கடர்பகுதியாக இருப்பதால் சூரிய வெளிச்சம் கடலின் அடிப்பகுதிவரை சென்று கடற்தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதனால் இங்கே கடல் உயிரினங்கள் தமது இனப்பெருக்கத்திற்காக இந்து சமுத்திரத்திலிருந்து இங்கே வருகின்றன. அப்படியாக வரும் கடல் உயிரினங்களில் இறால் மிகவும் முக்கியமான ஒன்று. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இறால் ஒரு மண்ணினுள் புதைந்து வாழும் உயிரினம். இந்த இறாலைப் பிடிக்க வேண்டும் என்றால் மண்ணின் அடிப்பாகத்தைக் கிளற வேண்டும். எனவே, இந்திய மீனவர்கள் தங்களது அதிக சக்திவாய்ந்த இழுவைப்படகுகளால் கடலடித் தளத்தை கிளறுகிறார்கள். அப்போது மண்ணிலிருந்தெ மேலெலும் இறால் நண்டு, கடற் சங்கு போன்ற கடலுயிர்கள் வலையினுள் அகப்படுகின்றன. இவர்கள் கடலின் அடித்தளத்தை உழுகிறார்கள் என்பதே உண்மை. கற்பனை செய்து பாருங்கள் ; 500 இந்திய இழுவைப்படகுகள் கூட்டமாக மன்னார் தீவுப்பகுதியில் இருந்து வடக்கு நோக்கி கச்சதீவு வரை ஒரு 50 KM தூரத்திற்குப் கூட்டமாக கடலடித் தளத்தை உழுதுகொண்டே செல்கிறார்கள். இப்போது அவர்கள் உழுதுகொண்டு போன பாதையில் எது மீதமாக இருக்கும்? இந்த மீனவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை என்பது, அவர்கள் ஒவ்வொரு முறை கடலில் இறங்கும்போதும் நடுக்கத்தை உண்டுபண்ண வேண்டும். 😡
  24. மொழித்திறன் கவிதை ] / "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] & "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு] "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] "அன்பின் பரிசில் காதலியைப் பொறித்து அழகாக மலர்களால் வடிவு அமைத்து அருகில் அணுகி கட்டி அணைத்து அகவைத் தின வாழ்த்து கூறாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ...................................................................... "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு] "பொட்டு வெளிச்சம் இல்லாத இரவில் பொட்டு வழியாகப் புகுந்து வந்தான் மட்டு மரியாதை நன்கு தெரிந்தவன் பொட்டு இட்டு என்னை அணைத்தான் பட்டு மேனியைத் தொட்டுப் பார்த்தான் கட்டு உடல் கொண்ட அழகன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பொட்டு - (அளவுகுறித்து வரும்போது) சிறிது; துளி பொட்டு - வேலியில் இருக்கும் சிறிய திறப்பு [இலங்கைத் தமிழ் வழக்கு]
  25. உங்களின் இந்த இரண்டு கருத்துக்களும் முரணாக உள்ளதே? பொதுவேட்பாளர் தோற்றதால் இனி Jvp ஒன்றும் தராது எனும் நீங்கள் 50% எடுத்தாலும் பயன் இல்லை என்கிறீர்கள்? Jvp தமிழர்களுக்கு எதுவும் செய்வதாக உறுதியளிக்கவில்லை…
  26. வடக்கு கிழக்கு வாக்காளர் எண்ணிக்கை: 2, 220, 311 செலுத்திய வாக்குகள் எண்ணிக்கை: 1, 626, 457 நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை: 55994 செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை: 1,570,463 அரியத்துக்கு கிடைத்தது: 218,479 சத விகிதம்:9.84
  27. யாழ் கள டமில் தீவீர டமில் தேசியவாதிகளே இந்தப் பக்கத்தை பார்ப்பதில்லை போல கிடக்குது,..😁
  28. நீங்கள் கூறுவதுபோல் நன்றியுரை புல்லரிப்பதுபோல் உள்ளது. ஆனால் அரசியல் சட்டமாக்கப்பட்டுள்ள பௌத்திற்கான முன்னுரிமை, பிராந்திய அரசியல், அனைத்துலக அரசியல், பொருளாதார நெருக்கடி, மதவாத பௌத்த பீடங்கள் என்பவற்றைக் கடந்து இனவாதத்தைக் களைந்து சமாதானத்தை உருவாக்கி ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவாரா? கட்டியெழுப்புவார் என்று நம்புகின்றீர்களா? தேர்தல் ஆணையாளர் முடிவுகளை அறித்து வெற்றிக்கான ஆவணத்தைக் கையளிக்குமுன் கட்சியரசியலுக்கப்பாலான அனைத்து இலங்கையருக்குமான சனாதிபதியாக இருக்கு வாழ்த்துகின்றேன் என்று கூறிவிட்டே கையளித்தார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி மேற்குறித்த வார்த்தைகளில் பொதிந்துள்ள கருத்துகள் அவதானிப்பிற்குரியனவாகும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  29. அநுர குமார வென்றதில் மகிழ்ச்சி! இலங்கையில் ஏற்படும் மாற்றம் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பங்களிப்பில்லாமல் நிகழவேண்டும் என்பது எனது விருப்பம். இப்ப சஜித் வென்றிருந்தால் அவர்கள் 5 இற்கு மேற்பட்ட அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருப்பர்கள். அடுத்தது ரணிலின் படுதோல்வி! 2002 இல் சமாதான காலத்தில் நரித்தனமாக புலிகள் அமைப்பை பிளவுபடுத்தாமல் இருந்திருந்தால். இவரின் சனாதிபதிக் கனவு 2005 இலேயே நனவாகியிருக்கும். இப்ப தானும் அழிந்து கட்சியையும் அழித்து, சுதந்திரக் கட்சியையும் அழித்து கேவலப்பட்டு நிற்கின்றார். இவர் எப்போதும் பின்கதவால் வந்த சனாதிபதியாகவே இலங்கை வரலாற்றில் பார்கப்படுவார். அடுத்து பப்பாவில் ஏறிய அரியம். வடக்கு கிழக்கு தமிழர் சங்கை அழகாக எடுத்து இனிமையாக ஊதியிருக்கிறார்கள். 😂
  30. முட்டாள்தனமான முடிவுகளுக்கு தலையாட்டாவிட்டால் துரோகி என்று கூறுவது வழமையான செயற்பாடுதானே விசுகர். நீங்கள் அரியத்தாருக்கு கண்ணுக்குப் புலப்படாத விலையுயர்ந்த ஆடையை அணிவித்து, நகர்வலம் வருவீர்கள். நான் அதைப் பார்த்து சிரிக்கிறேன். அது உங்களைக் கோபப்படுத்துகிறது. மக்கள் நிராகரித்த பின்னரும் அதை ஏற்க மறுப்பது பாஸிசமாகும்.
  31. ஒற்றுமை மற்றும் ஒன்றாதல் என்பது உங்கள் போன்றவர்களால் இல்லாமல் ஆக்கப்பட்டு முடிவுக்கு வந்தாச்சு. அதன் கடைசி முயற்சிதான் முடிந்துள்ளது. மற்றும்படி நீங்கள் சொல்வது போல் 1000 ஆண்டுகளுக்கு பின்னர் டமில் என்று ஒரு இனமும் இருக்க வாய்ப்பில்லை. அதையும் புலம்பெயர் தேசத்தில் அறுத்து விடாமல் நீங்கள் சாகப்போவதில்லை.
  32. அடுத்த 1000 வருடங்களுக்கு டமில் பொது வேட்பாளர் என யாரை நிறுத்தினாலும் அவர் தோல்வியடைவார் என்பது உறுதி. ஏனென்றால் அதன் கருவிலேயே சங்கு ஊதப்பட்டுள்ளது.
  33. தமிழ் மக்களை பொது வேட்பாளர், உலகத்துக்கு செய்தி சொல்லுதல் என்று தவறான concept மற்றும் எந்த பிரயோசனத்தையும் தராத அழிவுகளை மட்டுமே கொடுத்த உசுப்பேற்றல்கள் தோல்வி அடைந்தது மிக்க மகிழ்சசியே.
  34. இது பற்றி பேசுவது என்றால் கனக்க எழுதவேண்டும். எழுதிக் கொண்டே இருக்கலாம். என் பேரப்பிள்ளைகள் சார்ந்த கேள்விகளுக்கு பதில் தந்தால் நிறம் அதற்குள் வந்து நின்றுவிடும். அப்படியானால் இந்த உலகம் உங்கள் கடைசி வரி போல் எல்லோரும் சாதாரண மனிதர்கள் என்ற நிலை வரணும். அவ்வாறு வந்தால் நான் தமிழன் நீ பிரெஞ்சுக்காரன் என்பதும் இருக்கமுடியாது அல்லவா?
  35. வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : மலரே மௌனமா மௌனமே வேதமா பெண் : மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே ஆண் : பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ பெண் : மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ ஆண் : ஏதோ சுகம் உள்ளூறுதே பெண் : ஏனோ மனம் தள்ளாடுதே ஆண் : விரல்கள் தொடவா பெண் : விருந்தை பெறவா ஆண் : மார்போடு கண்கள் மூடவா பெண் : கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் ஆண் : காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன் பெண் : காற்றே என்னைக் கில்லாதிரு ஆண் : பூவே என்னைத் தள்ளாதிரு பெண் : உறவே உறவே ஆண் : உயிரின் உயிரே பெண் : புது வாழ்க்கை தந்த வள்ளலே........! --- மலரே மௌனமா ---
  36. தெரியாத தேவதையை விட தெரிந்த பேயே பரவாயில்லை என்று நினைத்திருப்பார்களோ என்னவோ? என்ன கந்தையர் தூக்க கலக்கமோ? அனுரா இன்னும் ஜனாதிபதியாகக்கூட பொறுப்பேற்கவில்லை அதற்குள் பாராளுமன்றத்தேர்தல் தேர்தல் பற்றி கவலைப்படுகிறீர்கள். தேர்தலில் நிற்கும் எண்ணம் உண்டோ?
  37. சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் பல வேட்பாளர்களை தெரிவுசெய்து வாக்களிப்பதற்கு வாக்களர்களுக்கு அனுமதியுண்டுதானே.
  38. மரத்தின் பெறுமதி தெரிந்தவர்களால் மட்டுமே... இப்படி செய்ய முடியும்.
  39. சுமந்திரனின் குலுமாசு: "இலங்கை வாக்காளர், தேர்தல் மேடைகளில் நான் கொடுத்த சைகையை சரியாக பயன்படுத்தி, எனது கருத்துக்களைப் கேட்ட பின்னரே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்ததாக நான் நம்புகிறேன், அதை நீங்களும் முன்னைய தேர்தலில் அவதானித்திருப்பீர்கள், இது எங்களின் ராஜதந்திரம்." "இதை தாங்கள் கவனத்தில் எடுத்து எனக்கு பதவியளித்தால், அதை நீங்கள் எனக்களிக்கும் கெளரவமாகக் கருதுகிறேன்." கண்டிப்பாக இப்பவே வாழ்த்து என்கிற பெயரில் அழைப்பெடுத்து கோரிக்கை விடுத்து காத்திருப்பார்கள், இனி அனுராவை புகழ்ந்தே பேசுவார்கள், ஆனால் இந்த வௌவால் கூட்டத்தை அனுரா சேர்த்துக்கொண்டால் மற்றவர்களைப்போலவே இவரின் ஆட்சியும் குப்பையாக மாறும். இவரின் கொள்கை மாற்றமடையும், இவருக்கு கிடைத்த இந்த அருமையான வாய்ப்பை இவர் தவற விட்டால் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படாது என்பதை அவர் அறிவார். ஆகவே கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். பின்னர், எங்களின் கொள்கை சரியானது அதை நிறைவேற்ற மக்கள் எங்களுக்கு ஆணை (சந்தர்ப்பம்) தரவில்லை என்று பின்னாளில் புலம்புவதில் பயனில்லை. சொல்லும் செயலும் ஒன்றானதா என்பதை இவர்களின் அமைச்சரவையிலிருந்து புரிந்து கொள்ளலாம். ராஜா பக்க்ஷக்களுக்கு எதிராக தொடங்கிய அரகலியாவை அடக்கி அதை தன் தோளில் சுமந்து அவர்களை காப்பாற்றியவர் ரணில். அதன் எதிரொலிதான் இந்த தேர்தல் பெறுபேறுகள்! அது நாமலின் தவறு.. இவர்கள் வேண்டாமென்றுதானே மக்கள் இவர்களை விரட்டியடித்தாகள், அந்த வெறுப்பு ஆறுமுன், எனக்கு வாக்கு போடுங்கள் என்று வெட்கமில்லாமல் மேடையேறியது யார் தவறு? அந்த இடத்தில் மஹிந்த இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். இது அவருக்கு பெருத்த அவமானமாக இருந்திருக்கும். அவர் தப்பித்துக்கொண்டிருந்தார். தமிழரை அழித்த கையோடு, அதை விழாவாக எடுத்து எக்காளம் ஊதிக்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களிடம், தப்பித்து துயரை தாங்கமுடியாது தவித்தவர்களிடம் வெட்கமேயில்லாமல் வாக்கு கேட்டவரின் புதல்வாராயிற்றே நாமல்! நுணலும் தன் வாயாற் கெடும். இவர்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளல்லர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இவர்கள் அரசியலில் இருந்து வெளியேறுவது இவர்களுக்கு நல்லது. இல்லையேல், பாராளுமன்றத்தேர்தலில் தகுந்த பாடம் அளிக்கப்படும். இவர்களின் வழமையான போலி வாக்குறுதிகளும் நாடகங்களும் இனியும் எடுபடாது. இவர்கள் தமிழரை வைத்து நகைச்சுவை செய்திருக்கிறார்கள் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருப்பது எவ்வளவு முட்டாள்தனம். இந்த இனவாத அரசியல் வாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும், நாட்டின் பொருளாதாரமுந்தான் ஏப்பமிடப்படுள்ளது எனும் உண்மையை புரிந்து கொண்டுள்ளார்கள். ஏங்கோ! சிங்களத்துக்கு எழுபத்தைந்து வருடங்களாக வாக்குப்போட்டு நம்பிக்கையோடு இருந்த மூஞ்சிக்கு என்ன நடந்தது? அந்த மூஞ்சியில் கரியைப்பூசி அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார்? இது கூடத் தெரியாதா? சொல்கிறேன் கேளுங்கள்! தமிழர் இனியும் இவர்களை நம்பி இவர்கள் பின்னால் இவர்களுக்கு வாக்களிக்கத் தயாரில்லை என்கிற தரப்புக்குள் வரும்! இனவாதம் பேசுவோரை விரட்டியடிக்க தொடங்கியதோடு புதிய கொள்கைக்கு இடம் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். அனுரா அதை சரியாக பயன்படுத்தினால் சரி, இல்லையென்றால் அவருக்கும் இதே கதிதான். இந்த நாட்டை கட்டியெழுப்புவது, ஊழலை ஒழிப்பது சாதாரண விடயமல்ல, விடவும் மாட்டார்கள். அவர்களின் சும்மா இருந்து பணம் உழைக்கும் வழி இது. தமது ஊழலையும் சிறை வாழ்வையும் தக்க வைக்க எந்த நிலைக்கும் போவார்கள். எழுபத்தைந்து வருடங்களாக வாக்குபோட்டுப்பழகிய பழக்க தோஷம், செம்மறிகூட்டங்களாக கேள்வி கேட்காமல் தலையாட்டிய கூட்டம், உடனடியாக புது பாதையை தெரிவது கொஞ்சம் சிரமம். ஆனாலும் முதல் தரத்திலேயே மக்கள் ஏற்றுக்கொண்டது பெரும் சாதகமே! இது தொடர்ந்து மக்களோடு பயணித்தால்; வெற்றியடையலாம். நரி, ஆபத்து நேரமெல்லாம் மஹிந்த கொம்பனிக்கு கை கொடுத்து ஒற்றையாட்சி கொள்கையை காப்பாற்றியதன் விளைவு; தன் வாலை இழந்து நிக்குது. இனி இந்த கிழட்டு நரி அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்லது. அனுரா கட்சிக்கு அரகலியா ஏற்படுத்திக்கொடுத்த அரிய வரப்பிரசாதம். இது கடைசியும் முதலுமானது, இதை இவர் சரியாக பயன்படுத்திக்கொண்டால் இனவாதிகளையும் அவர்களின் அரசியலையும் முற்றாக ஒழித்து நாட்டை முன்னேற்றலாம். இவர் சரியாக தமிழரை அணுகினால் முதலீடுகளை பெறலாம். இல்லையேல் இந்தக் கட்சிக்காக உயிரை தியாகம் செய்த இளைஞரை அவமதிப்பதோடு எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக ஒருபோதும் அரசியல் செய்ய இடமளிக்கப்படாது.
  40. நிச்சயமாக அதுகும் ஒரு காரணம். பெற்றோலுக்கும், குழந்தையின் பால் மாவுக்கும், பாணுக்கும் தெருத்தெருவாக அலைய விட்ட மகிந்த கோஷ்டியை… ரணில் காப்பாற்றி வைத்து இருந்ததை சிங்கள மக்கள் மன்னிக்கத் தயார் இல்லை.
  41. மிகவும் நன்றி, 👆 விசுகரின் கோபம் நியாயம் அற்றது. இப்படித்தான் அரியத்தாரின் தேர்தல் முடிவு இருக்கும் எனப் பலராலும் எதிர்வுகூறப்பட்டது. அதன்படியே முடிவு வந்திருக்கிறது. அரியத்தாரின் இந்தத் தேர்தல் தோல்வியின் வியாக்கியானம் எப்படி எப்படியெல்லாம் காட்டப்படப்போகிறது என்பதுதான் பலரது பயம். அரியத்தாரின் தோல்வி தமிழ்த்தேசியம் இறந்துவிட்டதாக அர்த்தப்படுத்தப்பட்டால் யார் அதற்குப் பொறுப்பு? விசுகர் உட்பட அரியத்தாருக்கு வரிந்துகட்டிக்கொண்டு வந்தவர்களிடம் பதில் இருக்கிறதா?
  42. புத்தன்… இது தபால் மூலம் வாக்களிக்கப் பட்ட அரச ஊழியர்களின் வாக்குகள்.
  43. சீலரத்ன தேரர் வேட்புமனு தாக்கல் செய்ய கட்டுப்பணத்தை மறந்து போன அந்த நாளிலிருந்து நம்மாள் ஆகிவிட்டார்........... 🤣. கட்டிய ஐம்பதினாயிரம் ரூபாய்க்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்தோ பத்தோ என்று வாக்குகள் கிடைக்குது........... 28 தான் தேரரின் highest score ஆக வரும் போல................
  44. எவ்வளவு தான் வெளுவெளென்று வெளுத்தாலும் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களே. இதுவும் சாதனை தான்.
  45. எந்த முட்டாள் மோசன் மட்டி மடையன் மூஞ்சியுடன் இதை நீவீர் இங்கே எழுதுகிறீர்??? அவரது தோல்விக்காக உழைத்ததை தவிர வேறு எதை கிழித்தீர்????? முழு முட்டாள் பிசாசே. ..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.