Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்19Points88806Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்12Points20348Posts -
putthan
கருத்துக்கள உறவுகள்11Points14707Posts -
நிழலி
கருத்துக்கள பொறுப்பாளர்கள்7Points15819Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/17/24 in Posts
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
ரில்வினின் கட்சி, தமிழர்களுக்கு அரசியல் தீர்வாக எதையும் தருவோம் என்று ஒரு போதும் சொன்னது இல்லை. அத்துடன் அது அதிகாரபரவலாக்கத்துக்கு என்றுமே எதிர்ப்பை காட்டிக் கொள்ளும் கட்சி, எனவே ரில்வினின் இந்த பேச்சு ஒன்றும் அதிசயமும் இல்லை, அதிர்ச்சிக்குரியதும் இல்லை. ஆனால் ரில்வின் கூறிய வடக்கைப் பற்றிய விடயங்கள் முற்றிலும் உண்மையானவை. இங்கு எவராலும் அவற்றை மறுக்க முடியாது. ஏ9 வீதியின் ஒரு பக்கங்களையும் கடந்து உள்ளே சென்றால் பார்க்க முடியும் வடக்கின் வறுமையை. அதே போன்று யாழ்பாணத்தில் நாகர்கோவில் மற்றும் அதை அண்டிய பகுதிகளில் கரும்பலகைகள் கூட இல்லாத பாடசாலைகளை காண முடியும். இந்த 15 வருடங்களில் தமிழ் கட்சிகள் இந்த பிரதேசங்களின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்திருக்கவில்லை. வெறுமனே தமிழ் தேசியம், சுய நிர்ணயம், தாயகம் என்று தேர்தல் வேளைகளிலும், பத்திரிகை பேட்டிகளிலும் வாய் உளைய உரக்க பேசி மக்களை முட்டாள்களாக ஆக்கியதை தவிர வேறு எதையும் இவர்கள் செய்ய எத்தனித்ததும் இல்லை. புலம்பெயர் தமிழ் தேசிய அமைப்புகளுக்கும் இது பற்றிய எந்த அக்கறையும் இல்லை. தம்மை பிரமுகர்களாக காட்டிக் கொள்வதற்கும், தம்மை முன்னிலைப்படுத்துவதற்கும் மட்டுமே இவ் அமைப்புகள் உள்ளன. ரில்வினும் அவர் கட்சியும், ஆட்சியும் அவர் குறிப்பிட்ட பிரதேசங்களின், சமூகங்களின் பொருளாதார நிலையை மாற்ற ஏதேனும் முயற்சிகள் செய்து இப் பகுதி மக்களை முன்னேறினால் மிக்க மகிழ்ச்சி.6 points
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
சந்திரகாசன் பற்றி யாருக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் அவரது மகன்பற்றி இதுவரை வெளஜவந்ததாக தெரியவில்லை. வரும்போது தெரிந்து கொள்வோம். சிறி தானாக எதுவும் எழுதலையே. செய்திகளாக வருவதை இணைக்கிறார்.5 points
-
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
உண்மைதான் ...படிச்ச வரி செலுத்தாமல் சுழிச்சு ஒடி போய்யிருந்து சகல வசதிகலையும் அனுபவித்து போட்டு இப்ப அனுரா அலைக்கு முண்டு கொடுக்கினம் ...புலம் பெயர்ந்த பட்டதாரிகள் யாவரும் பல்கலைகழக்த்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்த வேணும் என்று சொன்னால் ஒரு டமிழ்ஸும் தாயக் பக்கம் திரும்பியும்படுக்க மாட்டான்3 points
-
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
சில புலம் பெயர் பென்சனியர் சொல்லுயினம் இவ்வளவு நாளும் சிங்களவர்களுடன் பழகவில்லை..."உங்களது யூ டியுப்பை பார்த்து போய் பழகினேன் அவர்களை போல தேவலோக மனிதர்கள் பூமியில் இல்லை" என செர்டிவிக்கேட் கொடுக்கினம் (இளனீர்,கவுன்கொண்டை ,இடியப்ப ஜோதி எல்லாம் கொடுத்தவையலாம்.. அப்படியே அவர் இன்னுமோரு டயலக் விட்டார்...சிறிலங்காவில் தமிழர் என்ற தனித்துவத்துடன் வாழ நினைக்க கூடாதாம் ...அப்படி நினைத்தால் தமிழர்கள் அழிந்து விடுவார்களாம்... இதிலிருந்து அவரின் கருத்துருவாக்க மையம் யாருடையது என்பது புரிகின்றதல்லவா? இன்னும் சில புலம்பெயர்ஸ்...(மருத்துவர்கள்,பொரியியளாலர்கள்...சிலர் மட்டுமே)இவ்வளவு காலமும் அரசியல் பேசாமல் இப்ப அவர்களது வட்சப் குறூப்பில் சிங்கள தோழர்கள் அனுப்பும் கிளிப்புக்களை வொர்ட்பண்ணி கொண்டிருக்கினம் ....(முக்கியமாக தமிழ் தேசிய விரோத கருத்துக்களை)2 points
-
அரசியல்வாதியின் பெயரிலுள்ள பாடசாலையின் பெயரை உடனடியாக நீக்குமாறு உத்தரவு
https://samugammedia.com/planned-destruction-of-the-identity-of-the-tamil-school-in-kilinochchihow-is-this-injustice-responsible-lawyer-sukash-athangamsamugammedia-1702276648 கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 1955களில் திரு.சின்னத்தம்பி ஆசிரியர் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. தற்சமயம் 55% தமிழ் மாணவர்களும் 45% முஸ்லீம் மாணவர்களும் கற்று வருகின்றனர்...இது யுத்த காலம்வரை குறித்த பெயரிலேயே இயங்கி வந்துள்ளது. ஆனால் அதன் பின் சில பிரகிருதிகளால் அ.த.மு.க (அரசினர் தமிழ் முஸ்லீம் கலவன்) பாடசாலை என்றும் தற்சமயம் அ.மு.க (அரசினர் முஸ்லீம் கலவன்) பாடசாலை என்றும் மோசடியாகப் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுத் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது - மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இற்றைவரை குறித்த பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயர் கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையே ஆகும். இதற்கு ஆதாரமாக இம்முறை வெளியாகிய க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேற்றில் பாடசாலையின் பெயர் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே பாடசாலையில் திட்டமிட்டுக் கடந்த சில ஆண்டுகளாக #மோசடியாகப் பெயர்ப்பலகை வைத்துத் தமிழின அடையாளங்களை அழித்து வருபவர்கள் யார்? இந்தச் சதிக்கு உடந்தையாக இருந்தோர் - இருப்போர் யாவர்? உடனடியாகப் பாடசாலையின் பெயர்ப்பலகையை கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை (அ.த.க) என்று மாற்றுமாறு கோருகின்றோம்! உங்கள் தமிழின அழிப்பிற்கு அப்பாவித் தமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் பலிக்கடா ஆக்காதீர்கள்! உண்மை நிலைநாட்டப்படாவிட்டால் #சதிக்கு உடந்தையாக இருந்த அத்தனை நபர்களின் விபரங்களும் வெளியிடப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதோ நம்மால முடிந்தது.2 points
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
"தோழர்" பாலன் வழமை போல "பெட்டிக்கு வெளியே இருந்து" யோசித்திருக்கிறார். "ஒரு அமைப்பு இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு உதவுகிறது, எனவே அவர்கள் அகதிகளாக இருப்பதை ஊக்குவிக்கிறது" என்ற நவீன யோசனை "பெட்டிக்கு வெளியே" இருந்து யோசித்தால் மட்டும் தான் ஒருவருக்கு வரும்😂!2 points
-
"கல்லூரிக் காதல்"
2 points"கல்லூரிக் காதல்" யாழ்ப்பாணம், இலங்கை மிக நீண்ட வரலாற்று பாரம்பரியமுள்ள ஒரு பிரதேசமாகும். குறிப்பாக, இப் பிரதேசப் பாரம்பரிய பண்பாட்டம்சங்கள் மிக நீண்ட வரலாற்றை உடையதுடன் தனித்துவமானவையாகவும் காணப்படுகிறது. உதாரணம் மொழி, மதம், சடங்கு சம்பிரதாயங்கள், விவசாயம் தொழில்நுட்ப முறைகள், நாட்டுப்புற இலக்கியங்கள், கட்டிடஅமைப்பு முறை, மடம் , சுமைதாங்கி, ஆவுரஞ்சி, ஆலயங்கள் போன்றற்றை குறிப்பிடலாம். அது மட்டும் அல்ல எதிர்பாராத அன்பின் ஒரு இடமாகவும் கூறலாம். அப்படியான இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 2000 களின் நடுப்பகுதியில், உள்நாட்டு உரிமைப் போரின் காயங்கள் இன்னும் பசுமையாக, மறக்கமுடியாமல் வடுக்களுடன் இருந்த அந்த காலத்தில் நகரம் மெதுவாக மீண்டும் தன்னைக் கட்டியெழுப்ப முயன்றுகொண்டு இருந்தது. அப்படி இன்று எதிர்கொள்ளும் பல சவால்களுக்கு மத்தியில், இந்த பழமைவாத சமூகத்தில் உள்ள இளம் இதயங்கள் பெரும்பாலும் அன்பின் சிக்கல்களுடன் போராடுவது பெரும்பாலும் வழமையாகிவிட்டது. "யாழ் தேவி ரெயில் ஏறி வருவேனே உனை தேடி பெண்ணே உன் முகம் காணவே சுன்னாக மின்சாரம் கள்ளுறும் உன் கன்னம் அதில் ஊர்வேன் ஏறும்பாகவே முல்லை பூக்காரி என் கை சேர வா நீ காங்கேசன்துறை பக்கம் போவோமடி அங்க பனந்தோப்புக்குள்ள ஒடியல் கூழ் காய்ச்சி அத ஒன்றாக ஊத்தி நீ தாடி பிள்ள நீ தாவணி சோலை கிளி இந்த மச்சானின் மல்லி கொடி காரை நகரில் மாலை வயலில் கண்ணாம் புச்சி விளையாடினோமே சாரல் மழையில் வாழை இலையை குடையாய் பிடித்து நனைந்தோமடி உன் கூந்தல் துளி போதும் என் வாழ்வின் தாகம் தீரும் உன் சேலை நுனி போதும் என் ஜீவன் கரை சேரும் கொடிகாமம் மாந்தோட்டம் போவோமடி அங்க தோள் சாய்ந்து புளி மாங்காய் தின்போமடி நீ வாய் பேசும் வெள்ளி சிலை உன் அழகிற்கு இல்லை விலை வல்லை வெளியில் பிள்ளை வயதில் துள்ளி முயலாய் திரிந்தோமடி ஈச்சம் காட்டில் கூச்சம் தொலைத்து லட்சம் முத்தம் பகிர்வோமடி உன் ஒற்றை மொழி போதும்என் நெஞ்சில் பூக்கள் உன் கத்தி விழி போதும்என் ஆயுள் ரேகை நீளும் உன் காதல் என்ற சிறையில்நான் ஆயுள் கைதி ஆனேன் உன் சுவாசம் நீங்கும் வரையில் நான் சுவாசம் கொண்டூ வாழ்வேன் நாம் ஊர்விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும் யாழ் மண் வாசம் மனம் விட்டு போகாதே யாழ் தேவி ரெயில் ஏறுவோம் எங்கள்இதயத்தின் மொழி பேசுவோம்" [-சதீஸ்] யாழ்.பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு இலக்கிய மாணவியான சாந்தினி, புத்திசாலித்தனத்திற்கும் அழகுக்கும் பெயர் பெற்றவள். அவள் அவளைப் பற்றி ஒரு தீவிரத்தன்மை தன்னகத்தே கொண்டிருந்தாள். அவளுடைய குடும்பம், அந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலானவர்களைப் போலவே, கண்டிப்பான மற்றும் தமிழ் பாரம்பரியமாக இருந்தது. அத்துடன் அவள் படிப்புக்கு முன்னுரிமை கொடுத்து குழந்தைப் பிள்ளையில் இருந்து வளர்க்கப்பட்டாள், காதல் அல்லது காதல் பற்றிய எண்ணங்கள் அவளின் குடும்பத்தில் என்றும் ஊக்குவிக்கப்படவில்லை. தன் வாழ்க்கையில், சாந்தினி இவ்வளவு சீக்கிரமாக குறிப்பாக தன் கல்வி அழுத்தங்களுக்கு மத்தியில், யாரிடமும் விழுந்துவிடுவாள் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை. ஆனால் அப்படி ஒன்று விரைவில் நடந்தது! மறுபுறம் அருள் இரண்டாம் ஆண்டு மருத்துவபீட மாணவன். அவன் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருந்தான் - வசீகரமாகவும், நகைச்சுவையாகவும், எப்போதும் மற்றவர்களின் கவனத்தின் மையமாகவும் இருந்தான். அவன் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்து வந்தவன், அவன் வடக்கு கிழக்கு போரின் போது, ஒரு தமிழ் இளைஞனாக பல துன்பங்களைக் கண்டவன், ஆனால் பெண்களைக் பொறுத்தவரையில், அவனிடம் மிகவும் மென்மையாக இருந்ததுடன் அவனது ஆளுமை மற்றும் கம்பீரமான பேச்சும் மிடுக்கான நடையும் அவர்களுக்கு காந்தமாக இருந்தது, எனவே கொஞ்சம் தூரத்தில் இருந்து பெண்கள் அவனை அடிக்கடி பாராட்டுவது ரசிப்பது ஒன்றும் புதினம் இல்லை. என்றாலும் அருள் அதைப் பெரிதாக என்றும் எடுத்துக் கொள்ளவில்லை. அவன் தன் படிப்பிலும் குடும்பத்திற்கு உதவுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தினான். ஒரு நாள், அவர்களின் விதி தலையிட்டது. இது பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இடைநிலைக் கல்லூரி விழாவிற்கான முதல் நாள் ஏற்பாட்டில் தான் நடந்தது, அனைத்து பீடங்களிலிருந்தும் மாணவர்கள் ஒன்று கூடிய கலகலப்பான நிகழ்வு அது. சாந்தினி தயக்கத்துடன், தன் பாடங்கள் முடிய, அடுத்தநாள் நிகழ்விற்காக ஒழுங்கு செய்யும் ஏற்பாட்டிற்கு உதவ முன்வந்தார், அதே நேரத்தில் அருள் எப்போதும் போல முன்னணியில் கம்பீரமாக ஒழுங்குபடுத்திக் கொண்டு இருந்தான். அவனின் அழகில் மிடுக்கில் கவனம் செலுத்தினவள், ஆனால் படியை பார்க்க மறந்து விட்டாள். தடுமாறி விழுந்தேவிட்டாள். அவன் உடனே கை கொடுத்து தூக்கினான். அந்த நேரம் இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் நோக்கின. இதைத் தான் விதி என்றனரோ? “ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையல் ஆகும் சீதையின் நடையை நூக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான் மாதவள் தானும் அங்கு வந்து நீர் உண்டு மீளும் போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் செய்தாள் ” அன்னத்தின் நடையை சாந்தினியின் ஒய்யார நடையுடன் ஒப்பிட்டு அருள் சிரிக்க, கம்பீரமாக நடக்கும் யானையின் நடையைத் தன் மனத்தைக் குழப்பிய அருளின் நடையுடன் ஒப்பிட்டு அவளும் மகிழ்ந்தாள். காதல் வாழ்வில் அவனில் அவளும், அவளுள் அவனும் கலந்து கரைகின்ற தன்மை ஒன்றும் புதிதல்ல! அந்தக்கணமே 'செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே!!' அன்று மாலை, ஒரு கவியரங்கத்தின் போது, மேடையில் அருளின் வசீகர பேச்சிலும் அவனின் பாணியிலும் சாந்தினி தன்னை அறியாமலே மீண்டும் மயங்கினாள். அவனது குரல் பார்வையாளர்களை வசீகரிக்கும் விதத்தைக் கொண்டிருந்தது, மேலும் அவள் இதயத்தில் ஒரு படபடப்புடன் தனது வாழ்க்கையில் முதல்முறையாக, சாந்தினி தன்னால் விவரிக்க முடியாத ஒன்றை, அவள் உள்ளத்தே தோன்றி, வெளியே புலப்படுத்த முடியாத ஒரு உணர்வை, இன்பத்தைக் உணர்ந்தாள். நிகழ்ச்சிக்குப் பிறகு, நிகழ்ச்சியை மேடைக்குப் பின்னால் நிர்வகிப்பதற்குப் பொறுப்பான சாந்தினி, அருளுடன் அவனது அடுத்த நிகழ்ச்சி நிரலின் நேரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. அவர்களின் கண்கள் மீண்டும் மிக அருகில் சந்தித்தபோது, மறுக்க முடியாத ஒரு தீப்பொறி அதில், அந்த பார்வைகளில் இருந்தது. அருளின் எளிதான புன்னகை அவளை நிராயுதபாணியாக்கியது, அந்தச் கணப்பொழுதில், ஒரு இணைப்பு இருவருக்கும் இடையில் மீண்டும் உருவானது. இது நுட்பமானது, ஆனால் அது அவர்களின் வாழ்க்கையின் போக்கை இனி மாற்ற போதுமானதாக இருந்தது. இருண்ட கூந்தலையும் மையுண்ட கண்களையும் உடையைவளுமான சாந்தினியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அருளும், சாந்தினியும் அடுத்த சில வாரங்களில், பல்கலைக்கழக வளாகத்தில் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர். தொடக்கத்தில் தயக்கத்துடன் ஆரம்பித்த சந்திப்பு, விரைவில் நீண்ட சந்திப்பாக மாறியது. கவிதை, மருத்துவம், யாழ்ப்பாணத்தின் வரலாறு, அவர்களது குடும்பங்கள் மற்றும் எதிர்காலத்திற்கான அவர்களின் கனவுகள் போன்ற அனைத்தையும் பற்றி வெளிப்படையாகப் பேசினர். சாந்தினியின் புத்திசாலித்தனம் மற்றும் காதலால் அருள் ஈர்க்கப்பட்டார், அதே நேரத்தில் சாந்தினி அருளின் வாழ்க்கை ஆர்வத்தையும் அவளை மகிழ்வாக்கும் அவனின் திறனையும் பாராட்டினார். அவர்களின் ஒருவர் மேல் ஒருவரின் நம்பிக்கை, புரிந்துணர்வு, அன்பு பெருகினாலும், அவர்களின் உறவு, பல தடைகளை அல்லது படிகளை தாண்டுவது சிரமம் நிறைந்தது என்பதை இருவரும் அறிந்திருந்தனர். யாழ்ப்பாணத்தின் பழமைவாத சமூகத்தில், ஒரு காதல் உறவு, குறிப்பாக வெவ்வேறு சமூக மட்டங்களைச் சேர்ந்த இரண்டு பேர்களுக்கு இடையிலான உறவு கடினமாகவே இருந்தது. மேலும், சாந்தினியின் குடும்பத்தினர் ஏற்கனவே அவளது எதிர்காலத்தைப் பற்றி, திருமணத்தைப் பற்றி பேசத் தொடங்கி விட்டனர், அருளையும் தனது படிப்பிலும் தொழிலிலும் மட்டுமே கவனம் செலுத்தும்படி , அவனின் குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்தனர். என்றாலும் அவர்களின் காதல் பெற்றோர்களின் கட்டுப்பாட்டை தெரிந்தோ தெரியாமலோ அங்கொன்றும் இங்கொன்றுமாக மீறிக்கொண்டு இருந்தது. பல்கலைக்கழக நூலகத்தின் அமைதியான மூலைகளிலும், பண்ணைக் கடல் காற்று அவர்களுடன் முட்டி மோதி அவர்களின் ரகசியங்களை கிசுகிசுக்கும் பாறைக்கற்களிலும், ஒரு சிறிய ஓடையைக் கடக்கும் வளாகப் பாலத்திற்கு அருகிலுள்ள பழைய ஆலமரத்தடியிலும் அவர்கள் ரகசியமாக தன்னந்தனியாக சந்திக்கத் தொடங்கினர். இங்கே, அவர்களின் காதல், நட்பு நெருக்கமாக மேலும் மேலும் உண்மையிலேயே மலர்ந்தது. ஒரு அமைதியான மாலை நேரத்தில், ஆலமரத்தடியில், சூரியன் மறையத் தொடங்கியதும், சாந்தினியும் அருளும் ஒருவருக்கொருவர் நெருங்கி அருகில் அமர்ந்தனர், இலைகளின் மெல்லிய சலசலப்பு மட்டுமே காற்றில் ஒலித்தது. உரையாடல் மெதுவாக அவர்கள் இருவரது மனதையும் பெரிதும் எடைபோடும் விடயத்திற்கு மாறியது - உள்நாட்டுப் உரிமைப் போர் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் அதன் நீடித்த தாக்கம் அவர்களின் உரையாடலின் கருவாக இருந்தது. சாந்தினி: "போர் நடக்காமல் இருந்திருந்தால் எங்கள் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?" அருள்: பெருமூச்சுடன் "ஒவ்வொரு நாளும், இப்போது நினைத்தால் உண்மையில் வினோதமாக இருக்கிறது - எங்கள் குழந்தைப் பருவம் எப்படி சோதனைச் சாவடிகள், பயம் மற்றும் தலைக்கு மேலான ஹெலிகாப்டர்களின் சத்தம் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. என் பெற்றோர்கள் பலவற்றை இழந்தார்கள், ஆனால் அவர்கள் அதைப்பற்றி அந்த நேரம் ஒன்றும் பேசவில்லை, அவர்களின் எண்ணம் முழுவதும் தங்கள் பிள்ளைகளும், எப்படி பாதுகாப்பாக நாளைய நாளை கழிப்பதும் என்பதே. வலியை எங்கோ ஆழத்தில் புதைத்து வைத்தது போல, முகத்தில் எந்த பயத்தையும் எமக்கு காட்டிட மாட்டார்கள் " சாந்தினி: "எனக்குத் தெரியும்... எங்க குடும்பத்தை காப்பாறுவதற்காக என் அப்பா ரொம்ப பாடுபட்டார். அதனால் சில சமயம் அவங்க கடினமாகவும் இருந்தார்கள். எப்படி இதுக்குள்ளால் தப்பி பிழைப்பது மட்டுமே அவர்களின் எண்ணமும் கனவுமாக இருந்தது. அம்மாவும் கூட .. என்மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருப்பதாக அடிக்கடி சொல்லுவார், ஆனால் இப்போது ... பாரம்பரியங்களைப் பின்பற்றுவது, குடும்ப பெருமையை பேணுவது, அயலில், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மரியாதைக்கும் உடன்பட்டு இருப்பது ... என்பதிலே கூடிய கவனமாக இருக்கிறார். அருள்: "நானும் அப்படித்தான் உணர்கிறேன். நம் பெற்றோர்கள் நம்மைப் தீங்கு அல்லது ஆபத்திலிருந்து பாதுகாப்பாகப் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் நமக்கென்ன கிடைத்தது ? நம் கண்ணியம், கனவுகள் பற்றி மாற்றம் வந்ததா ? போர் முடிந்திருக்கலாம், ஆனால் உண்மையில் எங்களுக்கு ஏதாவது மாறியதா? நமது உரிமைகள், சுதந்திரமாக வாழும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எதையும் சாதித்துவிட்டோம் என்று நினைக்கிறீர்களா?" சாந்தினி: மேலே மேகத்தை உற்றுப் பார்த்து "உண்மையில் இல்லை. நாங்கள் நேரடி மோதலில் இருந்து சற்று விடுபட்டுள்ளோம், ஆனால் ... நாங்கள் இன்னும் உரிமை பெறாமல் கட்டுண்டு இருக்கிறோம். அதே பழைய எதிர்பார்ப்புகளும் தீர்வும் இல்லாமல் அப்படியே இருக்கிறது . அது போகட்டும், இத்தனை அடிபாடுகளுக்குப் பிறகும், தமிழரான எமக்குள் ஒற்றுமை இல்லை. அதுமட்டும் இல்லை, இன்னும் பழைமைவாதம் அப்படியே இருக்கிறது. அதிலும் குறிப்பாக என்னைப் போன்ற பெண்களுக்கு - நாங்கள் இன்னும் பெற்றோர் யாரைத் தேர்ந்தெடுப்பார்களோ அவர்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும், அப்படி இப்படி என்று இன்னும் பெற்றோரின் எதிர்பார்ப்பில் மாற்றம் இல்லை அருள்: "என்னைப் போன்ற ஆண்களுக்கு எல்லாமே பொறுப்புதான். உழைப்பது, சம்பாதிப்பது, குடும்பத்தை காப்பாற்றுவது, தலைமைவகிப்பது என நீண்டுகொண்டு போகிறது. எனக்கு ஆறுதலுக்கும் அன்புக்கும் - சாந்தினி, நீ தான் வேண்டும் நான் ஒரு மருத்துவராக மட்டுமே இருக்க விரும்பவில்லை. மாற்றங்களை விரும்புபவனாகவும் இருக்க விரும்புகிறேன். பழைமைவாதம் எங்கள் காலத்துக்கு ஏற்றவாறு மாற்றப்படவேண்டும் அப்பத்தான் நாம் மனிதர்களாக வாழ முடியும். ஆனால் போர்… இருந்ததையும் பறித்துவிட்டது சாந்தினி அருளின் மார்பின் மீது தன் தலையை சாய்த்து அவன் கைகளை அழுத்தமாக பிடித்தாள், அவர்களுக்கிடையேயான காதல் உணர்வு குளிர்ந்த காற்றையும் சூடாகியது. தங்கள் தலைமுறை கடந்த காலத்தின் வடுக்களை இன்னும் மறக்கவில்லை என்பதை அவர்கள் இருவரும் அறிந்திருந்தனர், மேலும் உடல்ரீதியான வன்முறைகள் இன்று முடிவுக்கு வந்தாலும், சமூக வேறுபாடும் மற்றும் சம உரிமைப் போர்களும் அப்படியே இருந்தன. சாந்தினி: "நம்முடைய காதல் எம் நாட்டைப் போன்றது என்று நினைக்கிறன். நாம் விரும்புவதற்கும் பெற்றோர் எதிர்பார்ப்பதற்கும் இடையில் கிழிந்துவிட்டது. நாம் எப்போதாவது, இந்த பழமைவாதத்தில் இருந்து சுதந்திரமாக இருப்போம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? - நாம் சுதந்திரமாக விரும்பியபடி வாழ, விரும்பியவரை நேசிக்க?? அருள்: "எனக்குத் தெரியாது. நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று நான் நினைக்க விரும்புகிறேன். ஆனால் அது மெதுவாகத்தான் இருக்கிறது. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது, ஆனால் சமத்துவமும் கண்ணியமும்... நம்மில் பலருக்கு இன்னும் தொலைதூரக் கனவுகள். இங்கே, யாழ்ப்பாணத்தில், சம உரிமைக்கான போராட்டம் இன்னும் தொடர்கிறது, ஆனால் ... சாந்தினி: "இது வருத்தமாக இருக்கிறது, இல்லையா? எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் இன்னும் போராடுகிறோம். அங்கீகாரத்திற்காகவும், அமைதிக்காகவும், அடிப்படை மனித உரிமைகளுக்காகவும். இங்கே நாங்கள் ... காதலிக்கும் உரிமைக்காகவும் போராடுகிறோம்." அருள்: "அதனால்தான் நாம் ஒருவருக்கொருவர் வலுவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் நம்மிடமிருந்து எல்லாவற்றையும் பறிக்க அனுமதிக்க முடியாது. நம் கண்ணியம், நம் கனவுகள், இப்போது நம் அன்பு... ஒருவேளை நம்மால் உலகத்தை உடனடியாக மாற்ற முடியாது, ஆனால் நம்மிடம் இருப்பதைப் இழக்காமல் பற்றிக்கொள்ளலாம்?" யுத்தம் அவர்கள் இருவருக்கும் கண்ணுக்குத் தெரியாத வடுக்களை ஏற்படுத்தியது, உலகில் இன்று அவர்களின் இடத்தை மட்டுமல்ல, அவர்களின் எதிர்காலத்தையும் ஒன்றாகக் கேள்விக் குள்ளாக்கியது. ஒரு நாள் மாலை, வகுப்பு முடிந்து சாந்தினியும் அருளும் யாழ்ப்பாண கோட்டைக்கு அருகே நடந்து கொண்டிருந்தபோது, குடும்பத்தின் பெண் உறவினர் ஒருவர் அவர்களைக் கண்டார். வார்த்தை விரைவாக பரவியது. "சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகில் பெண்டிர் அம்பல் தூற்றச் சிறுபோல் வலந்தனள்" சாந்தினி உயர்ந்த குடியில் பிறந்தவள். ஆகையால் நேரடியாகப் பழிக்க அச்சமுற்ற அயல் பெண்கள், கடைக்கண் சார்த்தியும், மூக்கு நுனியில் விரலைச் சேர்த்தியும் தமக்குள் மறைவாகப் பேசியபடி அலர் உரைத்தனர். அது எப்படியோ அவளின் பெற்றோருக்கு எட்டிவிட்டது. தாயும் தன் மகள் மீது ஐயம் கொண்டு அவளை கட்டுப்படுத்தினாள் என்பதை விட, பிறர் சுட்டிக்கூறும் அளவிற்கு நடந்து, பிறந்த குடிக்கு இழிவைத் தந்துவிட்டாளே என்ற எண்ணத்திலேயே அப்படி செய்ததுடன் தந்தைக்கும் தெரியப் படுத்தினாள். அவளுடைய தந்தை, ஒரு கண்டிப்பான மனிதர், பாரம்பரிய விழுமியங்களை கடைப்பிடிப்பவர், கோபமடைந்தார். மீண்டும் அருளைப் பார்க்கக் கூடாது என்று தடை விதித்து, அவள் படிப்பில் கவனம் செலுத்தி, பெற்றோர் பார்க்கும் பொருத்தமான திருமணத்திற்குத் தயார் ஆக வேண்டும் என்று கட்டளையிட்டார். சாந்தினி அந்தக் கணமே மனம் உடைந்து போனாள், ஆனால் எதிர்த்து ஒன்றும் பேசவில்லை. மௌனமாக தன் அறைக்குள் போய் கதவைப் பூட்டினாள். கட்டிலில் கிடந்தபடி, தன் தொலைபேசியில் அருளின் படத்தைப் பார்த்தபடி ஏதேதோ தனக்குள் முணுமுணுத்தாள். தன் குடும்பத்திற்க்கும் அருள் மீதான காதலுக்கும் இடையில், கண்ணீருடன் மனதில் போராடினாள். சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் பெற்றோரின் பாசமும் அவள் மனதின் மீது அதிக எடையைக் கொடுத்தன. மேலும் அவளுடைய குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராகச் செல்வது அவமானத்தைத் தரும் என்பதை அவள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. அதேநேரம் அருளும் சாந்தினியின் முடியாத சூழ்நிலையின் கனத்தை உணர்ந்தான். அவன் சாந்தினியை ஆழமாக நேசித்தாலும் அவன், தன்னால் சாந்தினி தனது குடும்பத்திலிருந்து விலகுவதற்கு காரணமாக இருக்க விரும்பவில்லை. நாட்கள் வாரங்களாக மாறியது, அவர்களுக்கிடையான தூரம், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதை நிறுத்தியதால் அதிகரித்தது. ஒரு காலத்தில் துடிப்பான இணைப்பு இப்போது வறண்டு, கோடைக்காலம் போல தோன்றியது. சாந்தினியின் பெற்றோர்கள் இதனால் நிம்மதியடைந்தாலும் மற்றும் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதாக அவர்கள் நினைத்தாலும், உண்மையில் சாந்தினி மற்றும் அருள் இருவரும் மௌனமாகவே தவித்துக் கொண்டிருந்தனர் என்பதே உண்மை. மாதங்கள் கடந்தன, அருளின் இறுதி ஆண்டு படிப்பை நெருங்கியது. ஒரு நாள், அருளுக்கு மதிப்புமிக்க இன்டர்ன்ஷிப்பிற்காக [ஒரு தொழில்முறை கற்றல் அனுபவத்துக்கு ] கொழும்பு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவன் யாழ்ப்பாணத்தின் கட்டுப்பாடுகளிலிருந்தும், அனுபவித்த மனவேதனைகளிலிருந்தும் விலகி, ஒரு அமைதியை, சாந்தினியை இழந்த வேதனையில் இருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பாக, இதைக் கருதினான். கொழும்பிற்குப் புறப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, அருள் பாலத்தின் அருகே உள்ள பழைய ஆலமரத்தைக் கடைசியாகப் பார்க்க முடிவு செய்தான். அவன் அங்கே நின்று, தனது மனது திருடப்பட்ட தருணங்களை நினைவு கூர்ந்தபோது, அவனுக்குப் பின்னால் ஒரு பழக்கப்பட்ட குரல் கேட்டது. அது சாந்தினி. அவள் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது. அவன் புறப்பட்டதைக் கேள்விப்பட்டு விடைபெற வந்திருந்தாள். அவர்கள் ஒரு கணம் மௌனமாக நின்றார்கள், அவர்களுக்கிடையில் தொங்கிக் கொண்டிருந்த எல்லா வேதனையும் பாரமும் கண்களில் தெரிந்தன. சாந்தினி இறுதியாகப் பேசினாள்: “உண்மையைச் சொல்லாமல் உன்னை அம்மோ என்று விட்டுவிட முடியாது. நான் உன்னை முழுதாக நேசிக்கிறேன், அருள். என்னிடம் எப்போதும் உன்மேல் காதல் இருக்கிறது, நான் என்றும் உன்னை மறக்க மாட்டேன். அருள் திடுக்கிட்டான். அவள் தன்னை மறந்துவிட்டாள், குடும்பத்தின் முடிவை ஏற்றுக்கொண்டாள், என்று நினைத்தவன், இப்ப இதோ அவள் அவன் முன் நின்று, தன் இதயத்தை முழுமையாக கொட்டிக்கொண்டு இருந்தாள். சிறிது நேரம், எல்லாம் சரியாகிவிடும் என்று தோன்றியது. ஆனால் யதார்த்தம் தலைகீழாக மாறியது. காதல் இருந்தபோதிலும், அவர்கள் ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது என்று அருளுக்குத் தெரியும். அவன், சாந்தினியின் இரு கையையும் பிடித்து, தனது கனத்த இதயத்துடன், இருவரையும் உடைத்து பிரிக்கும் வார்த்தைகளை அவளிடம் சொன்னான்: “நானும் உன்னை நேசிக்கிறேன், சாந்தினி. ஆனால் நம்மால் இணைய முடியாது. இங்கே இல்லை, எப்போதும் இல்லை." அவர்கள் ஒன்றாக இருக்கும் கடைசித் தருணம் என்பதை அறிந்து ஆலமரத்தடியில் இருவரும் கட்டித்தழுவினர். அருள் பாலத்தைக் கடந்து, நடந்து செல்வதை, இரவில் மறைவதை சாந்தினி பார்த்துக்கொண்டே இருந்தாள். அவ்வளவுதான் - அவர்களின் காதல் காலப்போக்கில் மனதில் இருந்து கரைந்து கரைந்து போனாலும் ஒரு மூலையில் ஒழிந்து இருந்தது, உண்மையில் ஒருபோதும் சந்திக்க முடியாத இரண்டு நிலங்களை இணைக்கும் ஓடையின் மேல் பாலம் போல, அவர்களின் இதயங்களை இன்னும் இணைத்துக் கொண்டே இருக்கிறது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]2 points
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
உண்மையை எழுதும் போது நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும் ??2 points
-
கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!
என்ர வீட்டுக்கு பக்கத்தில ஒரு மானிப்பாய் குடும்பம் இருக்கு...😂 இனி கடைக்கண் பார்வை ஒண்டு வைக்கத்தான் கிடக்கு....😎2 points
-
Doctor Ramanathan Archchuna முன்னிறுத்தியிருக்கிற குழுவில....
தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: Doctor Ramanathan Archchuna முன்னிறுத்தியிருக்கிற குழுவில 3 பேர தான் எனக்கு தெரியும்…. ஆனால் அந்த மூண்டு பேரிலும் எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்குது…. ஆனால் என்ட இந்த அபிப்பிராயம் vote ஆ மாறாது…. Because என்ட சொந்த இடம் யாழ்ப்பாணமா இருந்தாலும் கூட, என்ட வாக்காளர் தொகுதி திருகோணமலை….. ஆகவே உண்மையாவே கள நிலவரம் என்ன எண்டு தெரிஞ்சுகொள்ள ஒரு சாவகச்சேரி தங்கச்சியோட கதைச்சன்….. தன்னுடைய வீட்டில எல்லா வோட்டும் அர்ச்சுனாவுக்குத்தான்…. அதோட, Kowshalya Naren அக்காவும் தெரிவில இருக்கிறா எண்டு சொல்லிச்சுது…. அப்ப நான் கேட்ட கேள்வி…. அர்ச்சுனா அண்ணா இவ்வளவு கதைச்ச பிறகும் கூட உங்கட ஊரில ஆதரவு கனக்க இருக்குதா???? அதுக்கு அந்த பிள்ளை சொன்ன கதை….. “இந்த இளவட்டம் தான் அண்ணா fb, YouTube எல்லாம் கனக்க பாவிக்கிறது…. நம்மட அம்மா அப்பா தரவளி ஆக்கள் இத எல்லாம் பாவிக்கிறேல…. அவங்களுக்கு அர்ச்சுனா அண்ணா செயலில செஞ்சது தான் கண்ணுக்குள்ள நிக்குது…. ஏன் அவ்வளவு ஆக்கள் போய் அண்டைக்கு அந்த ஆளுக்கு பின்னால நிண்டிச்சினம் எண்டா, எல்லாருக்கும் பிரச்சினை இருக்குது…. அத இதுவரைக்கும் எந்த அரசியல்வாதியும் கேக்கேல…. நாங்க இவ்வளவு நாளா vote போட்ட எந்த நாயும் எங்களுக்காக களத்தில வந்து நிக்கேல…. ஆனா நாங்கள் ஒண்டுமே செய்யாமலேயே அந்த மனுசன் வந்து எங்களுக்காக நிண்டிச்சுது…. அந்த செயல் தான் அண்ணா எங்கட கண்ணுக்குள்ள நிக்குது” இவ்வளவு தான் மக்களே விஷயம்…… உலகின் தலைசிறந்த சொல் எது தெரியுமா??? “செயல்” அந்த ஆள் செஞ்சது எல்லாம் உங்களுக்கு மறந்து போச்சுது….. இண்டைக்கு அந்த வைத்தியசாலை மக்களுக்காக இயங்கிக்கொண்டு இருக்குது எண்டா அது யாரால???? இண்டைக்கு தவறான வைத்தியர்கள் எல்லாம் , தப்பு செய்ய முதல் ஒருக்கா யோசிக்கினம் எண்டா அது யாரால????? இதெல்லாம் உங்களுக்கு பெரிசா தெரியல…. அந்த ஆள் fb ல போட்ட 10 post தான் உண்ட பிரச்சனை என்ன??? அப்ப உண்ட உலகம் fb மட்டும் தானா??????? அந்த ஆள் போன மாசம் ரெண்டாம் திகதி என்ன post போட்டிச்சுது எண்டு, பாக்காம யாராச்சும் ஒருத்தன் ஆச்சும் சொல்லுங்கடா பாப்பம்??? உங்களால ஏலாது…. Bcz ஞாபகம் இருக்காது…. ஆனா நித்திரையால தட்டி எழுப்பி கேட்டாலும், சாவகச்சேரில 4 மாசத்துக்கு முன்னால என்ன நடந்தது எண்டு எல்லாராலையும் சொல்ல ஏலும்….. ஏனெண்டா…. உலகின் தலைசிறந்த சொல் , “செயல்” இவ்வளவும் அந்த மனுசன் உங்களுக்கு ஏன் செஞ்சிச்சுது???? நீ அவருக்கு என்ன செஞ்சாய் எண்டு சொல்லி இதயெல்லாம் அவர் உங்களுக்காக செஞ்சார்??? நீங்க ஒண்டுமே செய்யாமலேயே அவர் உனக்காக இவ்வளவு பிரச்சினைகள வாங்கிக்கொண்டு போராடினாரே…..நீ மட்டும் வோட்டும் போட்டாய் எண்டா எவ்வளவு செய்வினம்???? கொஞ்சம் யோசியுங்கோ♥️ அந்த தங்கச்சி கடைசியா ஒண்டு சொன்னாள்…. அரசியல் ரீதியான தெளிவுக்கு உங்கட post தான் அண்ணா பாக்கிறனான்…. உங்கட post பாத்து தான் AKD க்கும் போட்டன்…. இந்த முறை அர்ச்சுனா அண்ணாட கூட்டணிக்கும் போட போறன் எண்டாள்….. இது எனக்குள் ஒரு சமூகப் பொறுப்பை உணர்த்துகின்றது….. இனிவரும் காலங்களில் இன்னும் கவனமாகவும், சரியாகவும், உண்மைத்தன்மையை தெளிவாக ஆராய்ந்தும் பதிவிடுவதில் தெளிவாக இருப்பேன்….. பிழையா உங்களுக்கு வழி காட்டிட மாட்டன்🥹♥️ நான் எந்தவொரு நபருக்கும் ஆதரவானவன் இல்லை…. அவர்களின் கருத்துக்களுக்கும், செயலுக்கும் மட்டுமே ஆதரவானவன்✨ https://www.facebook.com/share/p/pnrfph2p9Aa7DGHz/1 point
-
கட்டபொம்மன் ஒரு தெலுங்கர், கொள்ளைக்காரர் என்கிற வாதங்கள் சரியா? வரலாற்று திரிபுகளும் உண்மைகளும்
1 pointபடக்குறிப்பு, ஊட்டி வெலிங்டன் ராணுவ மையத்தில் கட்டபொம்மன் சிலை கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 16 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் (கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த கட்டுரை மீண்டும் பகிரப்படுகிறது) இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என அழைக்கப்படும் 1857 சிப்பாய் கலகத்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர்களில் முதன்மையானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த மாலிக்கபூர், 612 யானைகளையும், 20,000 குதிரைகளையும், 96000 மணங்கு பொன்னும், முத்தும், அணிகலன்களும் அடங்கிய பெட்டிகளையும் மதுரையிலிருந்து கொள்ளையடித்து சென்றார் என்று வரலாறு கூறுகிறது. "அப்படிப்பட்ட மாலிக்கபூரைக் கூட “கொள்ளைக்காரன் மாலிக்கபூர்” என யாரும் எழுதுவதில்லை, ஆனால் வெள்ளையர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி, ஆங்கிலேயர்கள் நடத்திய இறுதி விசாரணையில் கூட எவ்வித கொள்ளைக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத, வீரபாண்டிய கட்டபொம்மனை “கொள்ளைக்காரன்” என்று பழி சுமத்துகிறார்கள்”, என வேதனைப்படுகிறார் எழுத்தாளர் வே. மாணிக்கம். தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சி எனும் ஒரு சிறிய பாளையத்தை ஆண்ட பாளையக்காரர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன், ஆனால் இந்த சிறிய பாளையத்தை பல கட்ட போர்களுக்கு பிறகு தான் ஆங்கிலேய அரசால் முழுமையாக கைப்பற்ற முடிந்தது. ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு, அக்டோபர் 16, 1799 அன்று கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன். படக்குறிப்பு, தூக்கிலிடப்படுவதற்கு முன்பு கட்டபொம்மன் இருந்த சிறைச்சாலை கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது ஏன்? “ஆங்கிலேய அரசுக்கு வரி கட்ட மறுத்தது, தனது படைவீரர்கள் உதவியோடு ஆங்கிலேய அரசுக்கு எதிராக புரட்சி செய்து பல ஆங்கிலேய சிப்பாய்களை கொன்றது, மற்ற பாளையக்காரர்களையும் அரசுக்கு எதிராக புரட்சி செய்ய தூண்டியது உட்பட பல காரணங்களுக்காக வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் கயத்தாரின் பழைய கோட்டைக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் மேஜர் பானர்மேன் மற்றும் பாளையக்காரர்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்”, என 1881-இல் மதராஸ் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட, ராபர்ட் கால்டுவெல் எழுதிய 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கூட வீரபாண்டிய கட்டபொம்மன் சுதந்திரத்திற்காக போராடியவர் அல்ல, அவர் ஒரு கொள்ளைக்காரர் என சிலர் சொல்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இதைக் குறித்து அவ்வப்போது சர்ச்சைகளும் எழுவதும் உண்டு. இது குறித்து சில நூல்களும் தமிழில் வெளிவந்துள்ளன. இவ்வாறு சொல்லப்படுவதன் பின்னணி என்ன, வீரபாண்டிய கட்டபொம்மன் என்பவர் உண்மையில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியதால் தான் தூக்கிலிடப்பட்டாரா என தெரிந்து கொள்ள நெல்லையைச் சேர்ந்த எழுத்தாளர் வே. மாணிக்கத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். வே. மாணிக்கம், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கட்டபொம்மன் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். கட்டபொம்மன் கும்மிப்பாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் விவாத மேடை, வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு, தானாபதிப் பிள்ளை வரலாறு, கட்டபொம்மன் வரலாற்று உண்மைகள், ஊமத்துரை வரலாறு, போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். படக்குறிப்பு, கட்டபொம்மன் வழிபட்ட விக்ரகங்கள் கட்டபொம்மன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்னென்ன? கட்டபொம்மன் மீதான இறுதி விசாரணையின் போது வெள்ளையரால் நான்கு குற்றங்கள் சுமத்தப்பட்டன, வரி ஒழுங்காகக் கட்டவில்லை கலெக்டர் அழைத்த போது சந்திக்க மறுத்தார் சிவகிரியாரின் மகனுக்கு ஆதரவாகப் படைகள் அனுப்பினார் பானர்மேன் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டுச் சரணடையாமல் எதிர்த்து போரிட்டார். "அவர் மீது கொள்ளையடித்தார் என எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. ஆனாலும் கூட சிலர் வீரபாண்டிய கட்டபொம்மன் மீது தவறான குற்றச்சாட்டுகளை ஆதாரங்கள் ஏதுமின்றி முன் வைக்கிறார்கள்” எனக் கூறுகிறார் வே.மாணிக்கம். அவர் தொடர்ந்து பேசியது, “ஆங்கிலேய அதிகாரி மாக்ஸ்வெல் நில அளவை எனும் பெயரில் தன் பகுதிகளை எட்டையபுரத்தாருக்கு கொடுத்ததைக் கட்டபொம்மன் ஏற்கவில்லை. தன் தந்தையைப் போலவே வெள்ளையரை எதிர்த்து பல செயல்களில் ஈடுபட்டார், வரி கட்ட மறுத்தார். கலெக்டர் ஜாக்சன் பலமுறை கடிதம் எழுதியும் கட்டபொம்மன் அவரை சென்று பார்க்கவில்லை. இதனால் கோபமடைந்த ஜாக்சன், கட்டபொம்மனை கைது செய்ய உடனே படை அனுப்புமாறு கவர்னருக்கு கடிதம் எழுதினார். ஆனால் கவர்னரோ, கட்டபொம்மனை அழைத்து பேசுமாறு ஜாக்சனுக்கு ஆலோசனை வழங்கினார். எனவே சமரசம் பேச 15 நாட்களுக்குள் இராமநாதபுரம் வருமாறு கட்டபொம்மனுக்கு கடிதம் அனுப்பிவிட்டு குற்றாலம் சென்று விட்டார் கலெக்டர் ஜாக்ஸன். கடிதம் கண்டு தன்னைக் காண வரும் கட்டபொம்மனை ஆத்திரமூட்டி, ஊர் ஊராக அலைக்கழித்துச் சந்திக்க விடாமல் செய்துவிட்டால் அதையே காரணம் காட்டி பாளையக்காரர் பதவியிலிருந்து அவரை நீக்கிவிடலாம் என்பதே ஜாக்சன் திட்டம். இவ்வாறு குற்றாலம், சொக்கம்பட்டி, சிவகிரி, சேத்தூர் என ஒவ்வொரு ஊராக அலைக்கழிக்கப்பட்ட கட்டபொம்மன் இறுதியாக ஜாக்சனை இராமநாதபுரத்தில் சந்தித்தார்” என்றார். படக்குறிப்பு, பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே ஆங்கிலேய படை கட்டபொம்மன் ஜாக்சனை சந்தித்த போது நடந்த கலவரம் தொடர்ந்து பேசிய வே.மாணிக்கம், “இராமநாதபுரம் பேட்டி கட்டபொம்மனின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு. ஜாக்சனை சந்திக்க கட்டபொம்மன் சென்ற போது, அவர் மட்டுமே கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டார். அவரது தம்பிமார், மாப்பிள்ளைமார், மாமனார், மற்றும் படைகள் வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர். மூன்று மணிநேரம் தண்ணீர் கூட தராமல் அவரை காக்க வைக்கிறார்கள். மேலும் நிர்வாகத்தின் உத்தரவு வரும் வரை கோட்டைக்குள்ளேயே கட்டபொம்மன் தங்கியிருக்க வேண்டுமென சொல்லப்பட்டது. தன்னை சிறைப்படுத்த முயற்சி நடக்கிறது என்பதை உணர்ந்த கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறுகிறார். அப்போது அங்கு ஒரு கலவரம் நடைபெறுகிறது, அதில் லெப்டினன்ட் கிளார்க் எனும் ஆங்கிலேய அதிகாரி கட்டபொம்மனால் கொல்லப்படுகிறார்” எனக் குறிப்பிடுகிறார். இந்த நிகழ்வுகளுக்கு ஆதாரமாக கட்டபொம்மனின் இரு கடிதங்கள், ஆங்கிலேய அதிகாரி டேவிட்சனின் கடிதம், ஆங்கிலேய அரசு அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை ஆகியவை உள்ளன. இராமநாதபுரம் பேட்டியில் ஜாக்சன் நடந்து கொண்டது தவறு என கண்டுகொண்ட ஆங்கிலேய நிர்வாகம் அவரை பதவி நீக்கம் செய்து, லூசிங்டன் என்பவரை கலெக்டராக நியமித்தது. ('திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', 1881, ராபர்ட் கால்டுவெல், பக்கம்: 177-178). படக்குறிப்பு, பாஞ்சாலங்குறிச்சி போரில் இறந்த ஆங்கிலேய வீரர்களின் கல்லறைகள் இராமநாதபுர கடை வீதியை கொள்ளையிட்டாரா கட்டபொம்மன்? வே.மாணிக்கம் தொடர்ந்து பேசும்போது, “இராமநாதபுர பேட்டியில் நடந்த கலவரத்தோடு சேர்த்து, அதற்கு முன்னும் பின்னும் நடந்த விஷயங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். கலெக்டர் ஜாக்சனை சந்திக்க புறப்பட்டு வந்த கட்டபொம்மனும் அவரது வீரர்களும், பலநாட்கள் அலைக்கழிக்கப்பட்டு, இறுதியில் கட்டபொம்மன் அவமதிக்கப்படுகிறார். அவரது தம்பிமாரும், மாப்பிள்ளைமாரும் பேட்டி நடக்கும் முன்பே தாக்கப்பட்டனர். அவர்களது உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவை ஆங்கில வீரர்களால் ஏலம் போடப்பட்டன. அங்கு நடந்த மோதலில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் பலர் உயிர் துறந்தனர். முற்றுகையை உடைத்து வெளியே வந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கட்டபொம்மனின் படை வீரர்கள் கொதித்துப்போய் இருந்தனர். எனவே திரும்பி செல்லும் வழியில் இருந்த இராமநாதபுர கடை வீதியை படைவீரர்கள் அழித்தனர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான ஒரு செயலாகவே இதைப் பார்க்க வேண்டும்” எனக் கூறினார். இந்த சம்பவத்திற்கு பிறகு, ஆங்கிலேய அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, “இந்த கலகத்தில் கட்டபொம்மனை குறை சொல்வதற்கில்லை. தன்மான கௌரவத்திற்கு பங்கமேற்படும் போது, கோழையைப் போல அவர் நடந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறாகும். மேலும், தன் தலைவனுக்கு ஆபத்து ஏற்பட இருக்கும் சமயம் அவனுக்கு கட்டுப்பட்டு இருக்கும் பரிவாரங்கள் கைக்கட்டிச் சும்மா இருக்காது. உணர்ச்சி வசப்படத்தான் செய்யும்” என்று அறிக்கை கொடுத்தது. ('திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', 1881, ராபர்ட் கால்டுவெல், பக்கம்: 173-177). “இதே போல அருங்குளம், சுப்பலாபுரம் என எட்டயபுரத்தை சேர்ந்த இரண்டு கிராமங்கள் மற்றும் ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம் போன்ற இடங்களில் கட்டபொம்மன் கொள்ளையிட்டார் என கூறுகிறார்கள். ஆனால், நில அளவை என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் அந்த பகுதிகளை கட்டபொம்மனிடமிருந்து பறித்தனர், சினம் கொண்ட கட்டபொம்மன் அந்த பகுதிகளில் தனது ஆட்களைக் கொண்டு உழுது பயிரிட்டார். இவ்வாறு உழுது பயிரிட்டதை கொள்ளையடித்தார் என சிலர் திரித்து எழுதினார்கள்”. படக்குறிப்பு, ஊமைத்துரை மற்றும் படை வீரர்கள் இருந்த சிறை கட்டபொம்மன் ஒரு தெலுங்கர் எனும் வாதம் ஏன் எழுகிறது? “கட்டபொம்மனை தெலுங்கன் என்று கூறி நம்மிடமிருந்து பிரிக்கிறார்கள். அவரது முன்னோர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் தான், ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் நம் தமிழ் மண்ணில் பிறந்தவர்” என்றும் வே. மாணிக்கம் கூறுகிறார். “அப்போதிருந்த தமிழ்நாட்டின் பாளையக்காரர்கள் பலர் இவரது தலைமையின் கீழ் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராட விரும்பினார்கள். கட்டபொம்மன், இனம், மொழி, சாதி வேறுபாடு பார்க்காத ஒரு பாளையக்காரராக இருந்ததால் தான் இது சாத்தியமானது. வீரபாண்டிய கட்டபொம்மனின் அவைப்புலவராக சங்கர மூர்த்தி எனும் தமிழ்ப்புலவரே இருந்துள்ளார். கட்டபொம்மன் குறித்து பல்வேறு கதைப்பாடல்கள் ஏட்டுச்சுவடிகளில் உள்ளன. கட்டபொம்மனுடனான பாஞ்சாலங்குறிச்சி போரில் கடுமையான சேதங்களை சந்தித்த மேஜர் பானர்மேன் கூட கட்டபொம்மனை “அஞ்சா நெஞ்சத்துடன் விளங்கினார்” என பாராட்டினார் (மேஜர் பானர்மேன் கவர்னருக்கு எழுதிய கடிதம்). எதிரிகளே வியந்து பாராட்டிய ஒரு மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன், அவரைப் பற்றிய பொய்க் குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளிவிட்டு, உண்மையான வரலாற்றை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்” எனக் கூறுகிறார் எழுத்தாளர் வே.மாணிக்கம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cd178e2pwlko1 point
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
இலங்கை பொருளாதார பிரச்சினையும், சிறுபான்மைஇனரின் பிரச்சினையும் இரண்டும் வேறு வேறாக இருந்தாலும் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளது. இலங்கை பொருளாதார பிரச்சினை மட்டுமல்ல எந்த நாட்டிலும் ஒரு நாட்டில் பொருளாதாரத்தில் தளம்பல் ஏற்படும் போது அது உடனடியாக நேரிடையாக அடித்தட்டு மக்க்ளையே பாதிப்பிற்குள்ளாக்குகிறது. ஆனால் சிறுபான்மையினரின் பிரச்சினைக்குக்காரணம் பொருளாதார பிரச்சினைதான் என கூறுவதும் வடக்கினை மட்டும் நிலவுவதாக கூறுவதும் ஒரு திட்டமிட்ட முயற்சியாக தெரிகிறது. இலங்கை பொருளாதார பிரச்சினைக்கு சிறுபான்மையினரின் மீதான அடக்குமுறையின் நேரடி பிரதி விளைவாகவும் ஊழல் அரசியல்வாதிகளாலும் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் இடது சாரிகளின் கோட்பாடான் சமூக சமத்துவம் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் ஆனால் இவர்கள் தற்போது கூறிவரும் அரசியல் சீர்திருத்தம் இல்லை எனும் கருதுகோளினூடாக வழமையான இலங்கை பேரினவாத அரசியலைமைப்பினூடாக சிறுபான்மையினரின் உயிட் உடமைக்கு உத்தரவாதமற்ற அதே இலங்கை ஆட்சிமுறைமையினையே நடாத்த விளைகின்றனர். அரசுகளால் அடிப்படைக்கட்டுமான மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் நிலையினை மாற்ற முற்படலாம், ஊழல் அரசியல்வாதிகள், அரச திணைக்களங்களில் நடவடிக்கை எடுத்தல் என்பவற்றினூடாக மாற்றங்களை ஏற்படுத்தலாம் ஆனால் அரசு அடிப்படை கட்டுமான மாற்றங்கள் தொடர்பாக எந்த மாற்றமும் ஏற்படுத்த உள்ளது என்பதனை கூட கூறாத நிலையில் வெறும் திறமையற்ற ஊழல்நிறைந்த தமிழ் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுவதனூடாக எமது மக்களின் வறுமையை காரணம் காட்டி அதனை தமது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துகிற நிலையே காணப்படுகிறது. பொருளாதார ரீதியாக ஒவ்வொரு அரசும் சிறுபான்மையினரை இரண்டாம் பட்சமாகவே அணுகிறார்கள், இந்த அரசு எந்த விதத்தில் இதிலிருந்து வித்தியாசமாக உள்ளது, அவ்வாறாயின் அது என்ன என்பதாவது யாருக்காவது தெரியுமா? (அத்துடன் தமிழர்களின் பொருளாதார நிலையினை பாதிக்க செய்வதில் கடந்த காலத்தில் இருந்த ஒவ்வொரு அரசிற்கும் பங்கிருந்தது) எதற்காக சிங்களவர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்? (விடயத்தினை உணர்பூர்வமாக அணுகுகிறீர்கள் என கருதுகிறேன்) சிறுபான்மையினர் உரிமைகளை மறுப்பதாலேயே கிளர்ச்சிகள் உருவானது, ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் சமம் எனவே சட்ட ரீதியாக கூறப்படுகிறது, நீங்கள் கூறுவது இந்தியா போன்ற நாடுகளில் சிலவேளை சரியாக இருக்கலாம், அங்கே தான் திருமண உறவில் இருக்கும் துணையினை வல்லுறவில் ஈடுபடுவது சட்ட அங்கீகாரம் உள்ள விடயம், இவ்வாறான சட்டத்தினை இயற்றுபவர்கள் படித்தவர்களாக இருப்பது இன்னும் ஆச்சரியமழிக்கிறது. உங்களது பார்வை உங்களுக்கு சரியாக இருக்கும், பெரும்பாலானோருக்கு சரியாக இருக்கலாம் அதில் தவறில்லை ஆனால் மற்றவர்களுக்கு வித்தியாசமாக தோன்றலாம். உரிமைகளை மறுப்பவர்கள் தாமாக உரிமைகளை கொடுக்க மாட்டார்கள், இப்படி ஏதாவது செய்துதான் பிடுங்கி எடுக்க வேண்டும். உங்களது கருத்திற்கு எதிராக கருத்து வைக்கவேண்டும் என்பதற்காக எழுதவில்லை, ஆனால் உங்கள் அடிப்படை நிலையினை என்னால் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கிறது, சிலவேளை எமது புரிதல்கள் வித்தியாசமாக இருக்கலாம். நாலைந்து வருடங்களுக்கு முன்னர் எனது உறவினர் ஒருவரின் திருமண பந்தத்தில் சிக்கல் உருவானது, மணமகனில் பெரும்பாலும் தவறு இருந்தது, மணமகன் எனக்கு நெருங்கிய உறவு சிறிய வயதில் நல்ல தொடர்பிருந்தது பின்னர் தொடர்பில்லை, அந்த விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன் என கூறினாலும் வலுக்கட்டாயமாக என்னை இணைத்து விட்டார்கள் வாக்கு வாதம் நடந்து கொண்டிருந்தது அதில் தலையிடாமல் எதுவும் பேசாமல் இருந்துவிட்டேன், மணமகள் கேட்டது மணமகன் மன்னிப்பு கோரவேண்டும் என இதற்கு ஏன் பெரிதாக மணமகனின் சகோதரர்கள் கொல்லுப்படுகிறார்கள் என மணமகனின் சகோதரனிடம் தனிமையில் கேட்டேன் அதற்கு அவர் கூறினார் " யாராவது தவறே செய்திருந்தாலும் பொம்பிளையளிட்ட மன்னிப்பு கேட்பார்களா?" என கேட்டார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் மன்னிப்பு கோருவது சரியென நான் நினைப்பது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதனால் எனது கருத்து தவறாக இருக்கலாம்.1 point
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இந்தியா கிரிக்கெட்டில் சாதித்துக் கொண்டிருக்கின்றது என்ற தலைப்பில் ஒரு கட்டுரை போன வாரம் அல்லது அதற்கு முதல் ஏதோ ஒரு பக்கத்தில் இருந்தது. ம்ம்ம்...........இதுவும் ஒரு சாதனை தான்....... மழை பெய்து முதல் நாள் குழம்பி போட்டி தடைப்பட்டுப் போனால், அடுத்த நாள் துடுப்பாட்டத்தை தெரிவு செய்யவே கூடாது என்ற புள்ளிவிபரத்தை இன்று விலாவாரியாக உதாரணங்களுடன் எழுதுகின்றார்கள். இதையே ஒரு நாளுக்கு முன்னால் இந்திய அணிக்கு சொல்வதற்கு ஒரு ஆள் கூட இல்லாமல் போய் விட்டது இந்தப் பெரிய இந்தியாவில்..........🫣.1 point
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
அவர்கள் எப்படி வென்றார்கள் என்பது ஊங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். இந்தியா என்ற நயவஞசக நாட்டின் உதவி இல்லாமல் அவர்களால் ஒன்றும் புடுங்கியிருக்க முடியாது. அதுவும் போர் அறத்தை மீறிய வெற்றி. ஆனால் இப்போது படு தொல்வியடைந்த உலகில் உள்ளார்கள். வெற்றி என்பது போர்வெற்றியை பொருளாதார வெற்றியாக மாற்றுவது என் அவர்களால் முடியவில்லை. அவர்களுக்கு உதவி செய்தவர்கள் எல்லாம் இப்போது அவர்களையே பொருளாதார அடிமைநாடாக ஆக்கி விட்டார்கள்.1 point
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
நீங்கள் என்று எழுதுங்கள் ஒருவரும் என்று எழுதுவது தவறு.1 point
-
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
அதுதான் ஏ.கே. டியும் கட்ட பொம்மன் வசனம் பேசுகிறார்..அதுவும் சிவாஜி படத்தில் வேசம் போட்டதுபோலதான்.. நாட்டின் நிலமை அதள பாதாளத்தில் இருக்கிறது..இவர் அதுக்கு முன் நின்றுதான் வீர வசனம் பேசுகிறார்...தேர்தல் நெருங்க நெருங்க...இவரின் வெற்றி வாய்ப்பு தன்மையும் சுருங்குகிறத் என்பதுதான் உண்மை...தமிழ் யூ டியூபர்களும் ...கனடா பென்சனியர்களும்..யாழிலும் ஒரு 10 பேர் ..ஏ.கே டி யை ஊதி பெருப்பிக்கினம்...மற்ரும்படி அணில் தான் ...அப்பம் பிட்ட குரங்குபோல அதிர்ச்டத்தில் மீளவும் ஆட்ட்சியைப் பிடிக்கும்போல் இருக்கிறது...1 point
-
அரசியல்வாதியின் பெயரிலுள்ள பாடசாலையின் பெயரை உடனடியாக நீக்குமாறு உத்தரவு
முழுமையான செய்தி இணைப்பிற்கு நன்றி ஏராளன்.1 point
-
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
ஆம் விசுகு. அதுகும்... இவரின் கொலைக்காக கருணாவும், புளொட்டும் கைகோர்த்தது என்றால், தமிழருக்கு பலன் கொடுக்கக் கூடிய எப்படியான ஆளுமை அவர் என்பதை புரிந்து கொள்ளலாம். தமிழன் நன்மை பெறுவதை இந்தத் தீய சக்திகள் விரும்பவில்லை.1 point
-
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
கருத்து முரண்பாடுகள் இருந்தபோதும் தூர நோக்கோடு புலிகள் இவரை அரவணைத்துக்கொள்ள மற்றவர்கள் அனைவரும் இதற்காக மட்டும் ஒன்று சேர்ந்து அவரை போட முடிவெடுத்தார்கள் என்றால் சிவராமின் ஆளுமையை நாம் உணரலாம். சரியான உதாரணம்.1 point
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
நன்றி நொச்சி. சில விடயங்களை வாசிக்க தந்தை செல்வாவிற்கு இப்படி வாரிசுகளா… என்ற ஆச்சரியமும், கவலையும் ஏற்படத்தான் செய்தது.1 point
-
அரசியல்வாதியின் பெயரிலுள்ள பாடசாலையின் பெயரை உடனடியாக நீக்குமாறு உத்தரவு
நன்றி ஈழப்பிரியன் அண்ணா. என் நண்பர் ஒருவர் தேசிய மக்கள் கட்சிக்கு தீயாக வேலை செய்கின்றார். அவருக்கு இதனை அனுப்பியுள்ளேன். உங்கள் இணைப்பில் இருந்து அறிய முடிந்தது என்னவென்றால், பாடசாலையின் பெயர் உத்தியோக பூர்வமாக மாற்றப்படவில்லை. ஆனால் பெயர்ப்பலகையை மாற்றியுள்ளனர். இதே மாதிரி கிழக்கில் (நான் நினைக்கின்றேன் கல்முனையில் என) வீதியின் பெயரை முஸ்லிம் பெயராக மாற்றி பெயர் பலகை வைத்து பிரச்சினையானது என.1 point
-
அரசியல்வாதியின் பெயரிலுள்ள பாடசாலையின் பெயரை உடனடியாக நீக்குமாறு உத்தரவு
உண்மை. சிலருக்கு…. எதிர் கருத்தாட வேண்டும் என்பதற்காக, தங்களின் மனதில் உள்ள வக்கிரகங்களை சகட்டுமேனிக்கு அள்ளித் தெளிப்பது காலம் காலமாக உள்ள வியாதிதான். இதனை மாற்றுவது கடினம். இதை கணக்கில் எடுக்காமல் வழமை போல் கடந்து போவது சிறந்த மருந்து.1 point
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் போக விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராட்டப்பட முடியாது அவர்கள் ஓய்வெடுத்தாலே பாராட்டலாம். எதுவும் செய்யாமல் ஏன் மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் போக வேண்டும் ஒதுங்கி இருந்து புதியவர்களுக்கு இடம் கொடுத்தால் திறமைசாலிகளை இனம் காணலாம் இன்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுயநலவாதிகள். சேவை மனப்பான்மை அற்றவர்கள். குறிப்பு,....இங்கே சமயத்தை கிறித்தவ சமயத்தை வலு கட்டாயமாக. செருகுவர்களின் நோக்கம் பிழைகளை. இயேசு மன்னிப்பார். எனவே… நாங்கள் பிழை விடலாம் என்பது தான் 🙏🙏 ஆனால் நாங்கள் இங்கு சமயம் பற்றி கதைக்கவில்லை அரசியல்வாதிகள் பற்றி கதைக்கிறோம். அவர்களின் சமயம் எதுவாகவும் இருக்கலாம்1 point
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
ஈழப்பிரியன்… நீங்கள், கண்ணை மூடிக் கொண்டு சுமந்திரனின் எல்லாச் செயலையும் போற்ற வேண்டும் என்றால், உங்கள் மூளையை கழட்டி ஓரமாக வைத்து விட்டு அவரின் செம்பாகவோ, அல்லக்கையாகவோ…. மாற வேண்டும். 😂 அப்பிடி ஒரு பிழைப்பு பிழைக்க வேண்டிய அவசியம்… மற்றவர்களுக்கு இருக்கலாம், ஆனால் உங்களுக்கு இல்லை என்று எனக்கு நன்கு தெரியும். 🤣1 point
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
உங்களுக்கு உண்மை நிலவரம் தெரியும், புரியும். ஆனாலும் சிறியருக்கு வலிக்கும் என்பதால் பட்டும் படாமலும் சொல்கிறீர்கள். புரிந்துகொள்கிறேன். கந்ஸ், உங்கள் எழுத்துக்களை இங்கே ஒருவரும் ஒரு கருத்தாகவே கருதுவதில்லை. ஆதலால் இதனையும் கடந்து போகிறேன். ✋1 point
-
ரணில் விசேட உரை
1 pointபுதியவர்கள். அனுபவம் இல்லாதவர்கள் நாடாளுமன்றம் வரக்கூடாத??? அனுபவம் உள்ளவர்களுக்கு தான் எங்கெங்கே எப்படி அமுக்குவது என்பது தெரியும்.1 point
-
இளையோரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் - மணிவண்ணன்
விக்கி அய்யா விக்கி அய்யா என்று பட்டாசு கோஷ்டி விதந்தோற்றிய விக்கி, பல பார்களின் உரிமையாளரான அபலைப் பெண்ணின் வாழ்வாதாரத்துக்காக சிபாரிசு கடிதம் கொடுத்திராவிட்டால் இப்ப அவர்தான் முதன்மை வேட்பாளர்!😂1 point
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
சரித்திரத்தை எல்லோரும் அறிய உங்கள் முயற்சி தொடரட்டும்.பாராட்டுக்கள் ரஞ்சித்.1 point
-
AKD தீர்வு தருவார்?????
1 pointஇணைப்புக்கு நன்றி விசுகு. பிள்ளை பாடமாக்கி சொன்னாலும் உண்மையைத் தானே சொல்லியிருக்கு.1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!
விடயம் மிக இலகுவானது. உங்கள் காணி தொடர்பான விபரங்களை உங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் கொடுத்து உங்கள் பிரதேசத்திற்குரிய Land Registry யில் தேடும்படு (Search) கூறுங்கள். காணி தொடர்பான விபரங்கள் உங்களிடம் இல்லையெனில், உங்கள் காணியைச் சுற்றியுள்ள காணிகளின் விபரங்களைக் கொடுத்தால் தேடுவது இலகுவாக இருக்கும். சட்டத்தரணிகளின் ஒத்துழைப்பின்றி எதுவும் செய்ய முடியாது. எனவே சாட்சாத் சட்டத்தரணிகளே ஊழல் / மோசடிகளின் அச்சாணிகள்.1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!
சரி சரி விதானை வீட்டில் போய் ஒழித்த கதை தான்.1 point- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
தமிழ் சிறியின் முழுநேரத் தொழிலே சேறடித்தல் என்றாகிவிட்டது கவலைக்குரியது. தேடித் தேடிச் சேறடிக்கிறார்,...... ☹️1 point- ஓய்வூதியதாரர்களுக்கான அரசாங்கத்தின் நற்செய்தி
1 point- வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
தலைவா அவர்களுக்கு பொருளாதரா பிரச்சனையும் இல்லை .....யூ டியுப் பிரச்சனை தான் இருக்கு ...ஒரு டிரோன் மட்டும் இருந்தால் போதும் ...பிரிச்சு மேய்ந்து கொண்டு திரிவாங்கள் .1 point- வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
சிங்களவர்கள் பாணுக்காககவும் எரபொருளுக்காகவும் போராடினார்கள். ஆனால் தமிழர்கள் இது போன்ற தடைகளைத்தாண்டி வந்தவர்கள் அவர்கள் தமிழத் தேசியத்திற்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடினார்கள். ரில்வின் சில்வா அதை வசதியாக மறைைத்து விட்டார். எந்தச் சிங்கள மீடபராலும் தமழர் பிரச்சினைக்குத் தீர்வு தரமுடியாது.1 point- விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
[இப்போ பெரும்பாலான கட்சிகள் மொத்தக்கட்சிகளும் அனுராவோடு கூட்டிணைவதற்கு ஏங்கிக்கொண்டிருக்கின்றன. எல்லோரும் ஊழலோடு சம்பந்தப்பட்டவர்கள் அவர்களை வழிக்கு கொண்டுவந்து அடக்குவதற்கே அவர் முன்னெச்சரிக்கையாக சில அதிரடிகளை ஆரம்பித்தார். சில சவாலான இடங்களில் தனது சிறந்த வேட்ப்பாளர்களை களமிறக்கினார். மகிந்த குடும்பத்தின் ஊழல் விசாரணை என்கிற செய்தி. அதனால் சிலர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கினர். ஒவ்வொரு கட்சியின் நகர்வையும் கூர்ந்து கவனித்து களத்தில்இருந்து தடுத்து நிறுத்த துல்லியமாக நிதானமாக காய் நகர்த்தி அவர்களாகவே வாயடைக்கவும் விலகவும் செய்கிறார்.] அநுரகுமார திசநாயக்கவுக்கு அதிகரிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவு என்று தமிழ் யுரியுப்பர்கள் சொல்வது உண்மை போல தான் இருக்கின்றது. இலங்கை புதிய ஜனாதிபதிக்கு பிரசாரமே நடத்தபடுகின்றது இங்கே 🤣 உண்மை 👍1 point- விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
அண்ணை, வன்னிக்குள் மாட்டுப்பட்ட சில ஆயிரம் மக்களை போராட விட்டு விட்டு வெளியால ஒடி வேற யாரை குறை சொல்ல முடியும்? புலம்பெயர் மக்கள் தங்கட மகனயோ/மகளயொ முன் லைனில ஆயுதத்தொட விட ஆயத்தமா?1 point- டின் மீன் வடிவில் வந்த கொலைகாரன்
1 point- டின் மீன் வடிவில் வந்த கொலைகாரன்
1 point- வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
எழுத நினைத்தேன் எழுதிவிட்டீர்கள், சிங்களவர்களுக்குள் கொள்கைகள் கட்சிகளுக்குள் பல வேறுபாடுகள் முரண்பாடுகள் கொள்கைகள் உண்டு, ஆனால் தமிழர் விவகாரம் என்று வந்துவிட்டால் அத்தனைபேரும் ஒன்றாகவே நிப்பார்கள், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இனிவரும் காலங்களிலும். தமிழர்களுக்குள்ளும் கொள்கைகள் கட்சிகளுக்குள் பல வேறுபாடுகள் முரண்பாடுகள் கொள்கைகள் உண்டு, ஆனால் சிங்களவர்களுக்கெதிரான அரசியலில் என்றைக்காவது எல்லோரும் ஒன்றாக நின்றிருக்கோமா? இந்த லட்சணத்தில் சிங்களவன் சரியில்லை என்கிறோம், உணர்ச்சிவசபடாது உற்று நோக்கினால் சிங்களவன் எப்போதும் தமிழர் விவகாரத்தில் தன் பக்க வாதத்தில் சரியாகத்தான் இருக்கிறான், நாம்தான் ஆளுக்காள் ,கட்சிக்கு கட்சி, மாகாணத்துக்கு மாகாணம், தமிழர் விவகாரத்தில் தரமற்று நிக்கிறோம். ஏற்கனவே குறிப்பிட்டதுதான் இருந்தாலும் சொல்ல நினைக்கிறான், அடிப்படை பொருளாதார வசதிகள் அங்கேயே உழைத்து அங்கேயே செலவு செய்யும் அளவிற்கு பொக்கRறில் வங்கி அட்டைகளும் உயர்தர வாகனங்களும் எல்லோருக்கும் வந்து பார்ட்டி கொண்டாட்டம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா எனும் நிலை வந்தால் நிச்சயமாக இளைய சமுதாயம் சிங்களவனுடன் முட்டி மோதுவதை தவிர்த்து, இந்த சிங்கள தலைவன் சொன்ன திசைக்கே செல்லும். அந்த பெருமையெல்லாம் எம் பிரச்சனைகளை வைத்து தமது பிரச்சனையை மட்டும் கவனித்துக்கொண்ட தமிழ்கட்சிகளையே சாரும். நாம் என்ன செய்தோம் செய்கிறோம் என்பதை முதலில் கவனிப்போம், மீனை மூடி வைப்பதுதான் நம் முதல் கடமை பூனைக்கு புத்திமதி சொல்வதல்ல. வெறுமனே புலம்பெயர்ந்தவர்கள் மட்டும் கூவி தற்கால இலங்கை அரசியலில் பொழுது ஒருபோதும் விடியாது.1 point- தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்
நானா...நாமளும் நம்ம வழியிலை போகணுமல்லே...கோச்சுக்காதே...1 point- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் என்னும் கிறிஸ்தவரை சைவசமய மக்கள் தந்தை என்ற செல்லப் பெயர் வைத்து அவர் இறக்கும் வரை உயரிய மரியாதை கொடுத்தே வந்துள்ளார்கள். அவரை கிறிஸ்தவர் என்று ஒதுக்கி வைத்ததே இல்லை. இங்கு @Justin, @Kapithan இருவருக்கு மட்டும் …. ஆபிரகாம் சுமந்திரன் என்றவுடன் இல்லாத ஒன்றை கற்பனை பண்ணி மதப் பிரிவினைக்கு தூபம் போட முனைகிறார்கள். இவர்களின் உள் நோக்கம் என்னவென்று பலரும் அறிந்தே வைத்துள்ளார்கள். சுமந்திரனின் சுத்துமாத்துக்களை அம்பலப் படுத்த வெளிக்கிட்டால்… அதற்கு மதச்சாயம் பூசி பிரச்சினையை திசை திருப்பி வெள்ளை அடிக்க முனையும் தந்திரம் இனியும் பலிக்காது. ஆனபடியால்… இவர்களின் “பருப்பு” இங்கே அவியாது.1 point- AKD தீர்வு தருவார்?????
1 point- ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்! -உதயகம்மன்பில-
இவரும் எங்களை போல இணைய போராளி போலகிடக்கு 😅1 point- கிளிநொச்சியில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
அரசியல் வாதிகளை தம்வசம் எடுக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு...இராணுவத்தில் பணிபுரிபவரை தங்கள் பக்கம் வைத்திருக்க சொல்லியா கொடுக்க வேணும்...1 point- கிளிநொச்சியில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
இரண்டு வீடுகளை கட்டி கொடுத்து போட்டு இவ்வளவு படம் காட்டல்...புலம் பெயர் உறவுகள் பல வீடுகளை கட்டி கொடுத்துள்ளனர் ஆனால் விளம்பரமின்றி .. பயணாளி இராணுவத்தில் பணி புரிவதால் சில சமயம் அவருக்கு குவாட்டர்ஸ் மாதிரி கட்டி கொடுத்திருக்கலாம் ...எதுவாக இருந்தாலும் தமிழர் பயனடையட்டும்...1 point- ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்! -உதயகம்மன்பில-
ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.1 point- விண்ணைத் தொடும் தேங்காய் விலை
1 pointமுட்டை விலை அதிகரிப்பு நல்ல விடயம் தானே??? நம்ம சனம் போத்தல் விலை எவ்வளவு கூடினாலும் சத்தமே வராது. ஆனால் உள்ளூர் முட்டை என்றால் காட்டுக்கத்தல்.1 point - கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.