Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88831
    Posts
  2. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    12791
    Posts
  3. valavan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1582
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20359
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/18/24 in Posts

  1. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) 28) வன்னி 29) மட்டக்களப்பு) 30)திருமலை 31)அம்பாறை 32)நுவரெலியா 33)அம்பாந்தோட்டை 34)கொழும்பு 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் 39) உடுப்பிட்டி 40) ஊர்காவற்றுறை 41) கிளிநொச்சி 42) மன்னர் 43) முல்லைத்தீவு 44) வவுனியா 45) மட்டக்களப்பு 46) பட்டிருப்பு 47) திருகோணமலை 48) அம்பாறை 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 54)தமிழரசு கட்சி 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்
  2. போட்டியை நடத்தும் கந்தப்புவுக்கு நன்றி பல🙏🏽 தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி உள்ள அறிவும், தரவும் இலங்கை அரசியலைப் பற்றி இல்லை! அதிலும் குறிப்பாக மக்களின் நாடிப்பிடிப்பை உணர்த்தும் நம்பகமான கருத்துக்கணிப்பு இல்லை. ஆனாலும் போட்டியில் கட்டாயம் கலந்துகொள்வேன்😀 யாழ் களப் போட்டியில் நான் வெல்வது சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வெல்வது மாதிரித்தான் இருக்கும்😆
  3. இலங்கையின் பொருளாதாரப் பிரச்சனை இனப்பிரச்சனையின் இன்னொரு விளைவு என்பதை மறுப்பதற்கில்லை. போர்க் காலத்தில் போருக்கான செலவும் இராணுவத்தினருக்கான செலவும் வருடாந்த அரச செலவீனத்தில் மிகப் பெரும் பங்கை எடுத்துக் கொண்டு இருந்தமையும், இன்றும் பெருந்தொகையான இராணுவத்தினரை தொடர்ந்து பேண (அரச உத்தியோகர்த்தர்களில் 40 வீதமானோர் அரச படையினர்) அதிக பணம் செலவிடுவதையும் காண முடிகின்றது. ஆனால் இனப்பிரச்சனை மட்டுமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்துவதற்கான ஒற்றைக் காரணி அல்ல. பங்களாதேசில் அண்மையில் நிகழ்ந்தது, ஸ்பெயினில் சில ஆண்டுகளுக்கு முன் (2008 - 2014) நிகழ்ந்தவை அவற்றுக்கான உதாரணங்கள். இலங்கையில் அதே நிலைதான். இனப்பிரச்சனையும், மகிந்த கும்பலின் அடாவடித்தனமான ஊழலும், மித மிஞ்சிய கடனும் இன்றைய நிலைக்கு உதாரணங்கள். இதைத் தான் தேசிய மக்கள் கட்சி கையில் எடுத்து இருக்கின்றது. எப்படி எனில், பொருளாதாரப் பிரச்சனையின் அடிப்படைக் காரணங்களில் ஒன்றான இனப்பிரச்சனை என்பது இப்போது இல்லை. அதாவது போர் முடிவுக்கு வந்து விட்டது. சிங்களத்தை பொறுத்தவரைக்கும் இனப்பிரச்சினை என்பது அறவே இல்லை என்பதுதான் அவர்களின் முடிவு. ஆகவே இப்போது இருக்கும், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை ஊழல் தான். அதை நாம் தீர்த்து வைப்போம் என்கின்றது. இதனை யாருக்கு முதலில் சொல்லியது? சிங்கள மக்களுக்கு. இப்போது அதையே தமிழ் மக்களுக்கும் சொல்ல தொடங்கியுள்ளது. அதை தமிழ் மக்களும் நம்பத் தொடங்கியுள்ளனர் என்பது தான் எம் தமிழ் தேசிய அரசியலின் மிக மோசமான தோல்வி. இந்த தோல்வி யாரால் ஏற்படுத்தப்பட்டது? தமிழ் தேசியம் என்று வெறுமனே மேடைகளில் முழங்கி, பேட்டிகளில் உரத்து கதைத்து விட்டு, எதையும் செய்ய வக்கில்லாத, திறமையில்லாத, மோசமான தமிழ் தேசிய கட்சிகளாலும் அதன் தலைவர்களாலும். அவர்களை உசுப்பேற்றி தம் குறுகிய நலங்களை பேணுகின்ற புலம்பெயர் தமிழ் தேசிக்காய் அமைப்புகளாலும்.
  4. அப்படி தென் கிழக்காசியர்கள்தான் சொல்லுவோம், வெள்ளைக்காரர்கள் அப்படி சொல்வதில்லை. I hurt myself என்று தன்னோட தவறை ஒப்புக்கொள்வார்கள் ஈழபிரியன் அண்ணாவுக்கு தெரியாததா என்ன, நாம் எம்மோட தவறை ஒப்புக்கொள்வது குறைவு அல்லது அடுத்தவன் தலைமேல் போடுவது அதிகம் என்பதால் அப்படி சொல்கிறோம் போலும்,
  5. நீங்கள் வேறை நான் ரணிலுடன் எண்டல்லே வாசிச்சனான்
  6. ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பு பாராளுமன்றம் சென்று ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியப்பிரமாணம் செய்ய அனைத்து தீவிர தமிழர தேசியவாதிகளுக்கிடையில் கடும் போட்டி. தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இரு தேசம் கோஷ்டிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஒற்றையாட்சிக்கு விசுவாசம் தெரிவிக்க இவ்வளவு ஆவலாக இருக்கிறார்கள் என்று பார்ததால் புலம் பெயர் தேசிய வியாபாரம. செய்யும் கும்பலும் தமது விசுவாசிகளை ஒற்றையாட்சிக்கு விசுவாசம் தெரிவிக்க அனுப்ப கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். 😂😂
  7. இந்த போரில் கிள்ளி பார்த்தாலும் ஆச்சரியம் தீராதது இஸ்ரேலின் உளவுதுறைதான். எப்படி இவர்களால் இதெல்லாம் முடியுது என்பது பிரமிக்கவைப்பது. கமாஸ் ஹிஸ்புல்லாஹ் தலைமையை அழிப்போம் என்று அறிவித்தார்கள் சொல்லி ஒரு சிலமாதங்களிலேயே ஒட்டுமொத்தமாக காலி பண்ணுகிறார்கள், ஏனையவர்களுக்கு இதெல்லாம் பாகிஸ்தான் பார்டருக்கு போய் தீவிரவாதிகளை அழித்து அதன் தலைவரை தமிழ்நாட்டுக்கு பிடித்துவரும் விஜயகாந்த் படங்களில் மட்டுமே சாத்தியம் ஆனானப்பட்ட அமெரிக்காவே உலகமெங்கும் அவர்களின் படைகளை கொண்டு கடைவிரித்தும், தன்னால் தேடப்படுகிறவர்களாக அறிவித்தவர்களை பல வருடங்களின் பின்னரே வேட்டையாட முடிகிறது, அதிலும் அமெரிக்காவால் தேடி களைத்துபோன ஒருசிலரை இஸ்ரேலே இந்தபோரில் தேடி போட்டு தள்ளியிருக்கிறது. இத்தனைக்கும் அவர்களெல்லாம் நிலத்தடியிலும் பாதுகாப்பான நாடுகளிலும் அடிக்கடி இடத்தை மாற்றி, தொடர்பாடல் முறையை மாற்றி பதுங்கியிருந்தவர்கள், இஸ்ரேலின் இந்த சாகசங்களுக்கு அவர்களின் ஏஐ தொழில்நுட்பம் பாதி காரணமென்றாலும் மீதிகாரணம் இஸ்ரேலுக்கு உளவுதகவல் சொல்லி கூட இருந்து குழி பறிக்கும் அங்குள்ள முஸ்லீம்களே. தொழில்நுட்பம் முகங்களை குரல்களைதான் தேடி கண்டு பிடிக்கும், இந்த கட்டிடத்துக்கு இத்தனை மணிக்கு ஒன்றுகூட வருகிறார்கள் என்றெல்லாமா சொல்லும்?
  8. நீங்கள் என்று எழுதுங்கள் ஒருவரும் என்று எழுதுவது தவறு.
  9. ஈழப்பிரியன்… நீங்கள், கண்ணை மூடிக் கொண்டு சுமந்திரனின் எல்லாச் செயலையும் போற்ற வேண்டும் என்றால், உங்கள் மூளையை கழட்டி ஓரமாக வைத்து விட்டு அவரின் செம்பாகவோ, அல்லக்கையாகவோ…. மாற வேண்டும். 😂 அப்பிடி ஒரு பிழைப்பு பிழைக்க வேண்டிய அவசியம்… மற்றவர்களுக்கு இருக்கலாம், ஆனால் உங்களுக்கு இல்லை என்று எனக்கு நன்கு தெரியும். 🤣
  10. அத்துடன் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளாத எமது கடந்த கால தவறுகளாலும் தான் என்பதை கூறினால் இங்கு பலருக்கு பிடிப்பதில்லை. இருப்பினும் அந்த கசப்பான வரலாற்றை ஏற்றுக்கொண்டு பயணிப்பதே எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும். War at biiter end என்று வந்த இறுதி அறிக்கையின் உட்பொருளை புலம் பெயர் செயற்பாட்டாளர்களில் சிலராவது புரிந்து கொண்டிருந்தால், அல்லது பாலகுமார், யோகி, கலைக்கோன் மாஸ்ரர் போன்ற உன்னதமான போராளிகள் இறுதியில் உயிர் தப்பி தாயகத்திலோ வெளி நாட்டிலோ செயற்படு நிலையில் இருந்திருந்தால் இன்றைய நிலை முன்னேற்றகரமாக இருந்திருக்கும் என்பது எனது கணிப்பு. ஏனெனில் ஒரு அரசியல் போராட்டத்தில் நடைமுறை மாற்றங்களை எப்படி உள்வாங்கி, பழைய தவறுகளை திருத்தி எவ்வாறு பயணிக்கவேண்டும் என்ற தெளிவு இவர்களுக்கு உள்ளது.
  11. தமிழ்த்தேசியம் என்பது தமிழரின் உயிர் நாடி. அதனை கேலி செய்யும் எவரும் தமிழ் மண்ணிலோ அல்லது தமிழருக்கோ பிறந்திருக்க வாய்ப்பில்லை.
  12. 1)அதில அதிகமானவர்கள் அரசியலே பேசாதவர்கள்/தெரியாதவர்கள் ...விடுமுறைக்கு சிறிலன்கா சென்றால் கதிர்காமம்,தென்னிலங்கை கடற்கரை என சுற்றுலா செல்பவர்கள் அந்த அழகையும் ,அங்கு ஹொட்டல்களில் சிப்பந்திகள் இவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை பார்த்து மயங்கி ஐயோ சிறிலங்கா மக்கள் புனிதமானவர்கள் என்ற மாயை ... கொட்டியும் சிங்கள அரசியல்வாதியும் தான் நாட்டை குட்டிசுவராக்கியவர்கள் என பிரச்சாரம் செய்தால் அதை நம்புபவர்கள் 2)"சிங்களவர்கள் அதிகமாக இந்த நாட்டில் வாழ்கின்றனர் அவர்கள் விருப்பிய்படி தமிழர்கள் வாழ்வதுதானே நியாயம்....புலம் பெயர்ந்த நாடுகளில் அப்படி தானே நீங்கள் வாழ்கின்றீர்கள் அவர்களுடைய மொழியை படிக்கிறீங்கள் அவர்களுடன் இரண்டர கலந்து அந்த நாட்டவர்களாக மாறிவிட்டிர்கள் தானே ஏன் சிரிலங்கனாக மாறமாட்டீர்கள் என அடம் பிடிக்கின்றீர்கள்" என சிங்களவ்ர்கள் பாடம் எடுத்தவுடன் இந்த புலம்பெயர்ஸ் அதையும் நம்பி "ஆமால்ல" என்பார்கள் 3)3) புது ரென்ட் புலம் பெயர் நாடுகளில் ஏசியன்(இந்து,இந்தியன்,சிறிலங்கன்) என்ற அடையாளத்துடன் வாழ வேணும் என்ற‌ ஒர் நப்பாசை வந்திருக்கு சில ஈழத்தமிழருக்கு
  13. இனி வ‌ரும் நாட்க‌ளில் ம‌ழை என்று தான் கூக்கில் வெத‌ர் காட்டு...............நாளை போட்டி ந‌ட‌க்குமானு தெரிய‌ல‌ 46ர‌ன்ஸ்சுக்கு ச‌க‌ல‌ வீர‌ர்க‌ளும் அவுட்...................உண்மையில் இதை யாரும் ஏற்க்க‌ மாட்டின‌ம் இந்திய‌ அணியா இப்ப‌டி விளையாடின‌து என்று ஒன்றில் ம‌ழை குறுக்கிட்டு விளையாட்டை ச‌ம‌ நிலையில் முடிக்கும் ம‌ழை பெய்யாம‌ இருந்தால் சிறு வெற்றி வாய்ப்பு நியுசிலாந்துக்கு தான்...................பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ள் போல் இந்திய‌ வீர‌ர்க‌ள் முத‌ல் இனிங்சில் செய‌ல் ப‌ட்டார்க‌ள்😁................................
  14. 🤣.......... இப்போதைக்கு பாலனிடம் மாட்டுப்பட்டிருப்பது இவர் என்று எடுத்துக் கொண்டு, பின்னர் பாலனின் எழுத்தை வாசித்து சிரிக்க வேண்டும்....... நட்சத்திரன் செவ்விந்தியனும் இப்படியான அரசியல் ஆராய்ச்சிகளை, கருத்துகளை எழுதினால், அது இதைவிட இன்னும் சுவாரசியம் ஆகவும், சூடாகவும் இருக்கும். எவர் மீதும் எவரும் குற்றம் குறைகள் கண்டுபிடிக்கலாம், சொல்லலாம் என்ற ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விதிவிலக்கே இல்லை. ஆனாலும் மக்கள் திரள் இந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், கடுமையான மாற்றுத் தரப்புகள், அறிவுக்கூர்மையுள்ளவர்கள் போல தோன்றுபவர்கள் போன்ற இடங்களில் இருந்து வரும் கருத்துகளை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே வாசிக்கின்றனர் போல. அவர்களின் முடிவு இவைகளால் மாற்றப்படுவதில்லை. சுஜாதாவின் கதைகளை வாசிப்பது போல, பட்டுக்கோட்டை பிரபாகரின் கதைகளை வாசிப்பது போல, இவைகளும் ஒரு ஜனரஞ்சக வாசிப்புகள் மட்டுமே. எனக்கும் தந்தை செல்வாவின் பேரன் என்று இப்படி ஒருவர் இருக்கின்றார் என்றே தெரியாது. அவர் ஒரு வேட்பாளர் என்றவுடன் எரிச்சல் தான் வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள சில அகதி முகாம்களுடன் எனக்கு ஓரளவு பரிச்சயம் இருக்கின்றது. சிலவற்றுக்கு போய் இருக்கின்றேன், அங்கே தங்கியும் இருக்கின்றேன். இப்படி ஒரு அமைப்பு அங்கே எதுவும் செய்வதாக கேள்விப்பட்டதில்லை. இங்கு வாழும் எமது மக்கள் வேறு ஒரு நிஜத்திற்கு போய்விட்டார்கள். பாலன் போன்றவர்கள் முந்தைய தலைமுறையில் இருந்து கொண்டு 'இங்கு வா, அங்கு போ.......' என்று பழைய கதையையே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
  15. மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் போக விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராட்டப்பட முடியாது அவர்கள் ஓய்வெடுத்தாலே பாராட்டலாம். எதுவும் செய்யாமல் ஏன் மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் போக வேண்டும் ஒதுங்கி இருந்து புதியவர்களுக்கு இடம் கொடுத்தால் திறமைசாலிகளை இனம் காணலாம் இன்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுயநலவாதிகள். சேவை மனப்பான்மை அற்றவர்கள். குறிப்பு,....இங்கே சமயத்தை கிறித்தவ சமயத்தை வலு கட்டாயமாக. செருகுவர்களின் நோக்கம் பிழைகளை. இயேசு மன்னிப்பார். எனவே… நாங்கள் பிழை விடலாம் என்பது தான் 🙏🙏 ஆனால் நாங்கள் இங்கு சமயம் பற்றி கதைக்கவில்லை அரசியல்வாதிகள் பற்றி கதைக்கிறோம். அவர்களின் சமயம் எதுவாகவும் இருக்கலாம்
  16. இவ்வாறு நாம் அவர்களை தொடர்ந்து மட்டம் தட்டிக் கொண்டு சுய திருப்தி அடைய வேண்டியது தான். சிங்களவர்கள் வெறுமனே பாணுக்காகவும் எரிபொருட்களுக்காகவும் மட்டும் போராடவில்லை. உலகில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பெரும் இயக்கத்துக்கு எதிராக, தம் நாட்டை பிரித்துக் கேட்கின்றனர் என்பதற்காக அதை எதிர்த்து போராடி, அதில் வெற்றியும் பெற்றார்கள் என்பதை வசதியாக மறந்து விட்டீர்கள். அவர்களின் வெற்றி கொடூரமானதாகவும், அறத்துக்கு எதிரானதாகவும், தடை செய்யப்பட்ட போர் முறைகளை பாவித்தும் பெற்றதாக இருப்பினும், அவர்கள் வெற்றி பெற்றவர்களாகவும், தம் அநீதியான வழிகளுக்கு எதிரான சர்வதேச எதிர்ப்பை இன்று வரைக்கும் சமாளித்து உலக நாடுகளின் கடனுதவியை தொடர்ந்து பெறுகின்றவர்களாகவும் உள்ளனர். அத்துடன் எம் பலவீனமான அரசியல்வாதிகள் மூலமாகவும், சுயநலம் பிடித்த புலம்பெயர் தமிழ் தேசிக்காய் அமைப்புகள் மூலமாகவும் மேலும் மேலும் எம் பலத்தை ஒடுக்கி, ஈற்றில் அவர்களின் கரங்களை பற்றி முன்னேற வேண்டிய நிலைக்கும் எம்மை தள்ளி விட்டுள்ளனர். ஆனால் நாம் சிங்களவர்களை தொடர்ந்து மட்டம் தட்டிக் கொண்டு இருப்போம். அப்படி செய்தால் தான் எம்மை நாம் திருப்திப் படுத்திக் கொண்டு இருக்க முடியும்.
  17. "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 29 சிந்து சம வெளி இடுபாடுகளுக் கிடையில் கண்டு எடுக்கப்பட்ட சிவலிங்கத்தின் முந்தைய வடிவத்துடன் இன்னும் ஒரு முக்கியமான தெய்வம் பொறிக்கப்பட்ட முத்திரையும் கண்டு எடுத்தார்கள். சொற்குறியிடு "ஆ,மு,வான்". இந்த பழமையான தெய்வத்தை வரையறுகிறது. ஆகவே இந்த தெய்வத்தை "ஆமுவான்" என பரிந்துரைத்தார்கள். சிந்து சம வெளி வில்லையில் இந்த இறைவனுக்கு நீண்ட மனிதவுரு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் தலையில் மூன்று கொம்பு உள்ளது. மேலும் இந்த கடவுள், "ஆமுவான் / Ahmuvan" முருகனை ஒத்த வடிவத்தை கொண்டுள்ளார். மேலும் 'ஆ; என்ற தமிழ் எழுத்து முன்னைய தமிழ் வட்டெழுத்துவில் இருந்து உருமாற்று பெற்றது. ஆனால் இந்த வட்டெழுத்தோ 'டிராகன் விண்மீன் குழு'வை [Draco constellation] குறிக்கும் சிந்து வெளி எழுத்தில் இருந்து, முதலாம் படத்தில் காட்டியவாறு பிறந்தது என்கிறார்கள் அறிஞர்கள் [படம்:1]. ஆகவே இது தமிழ் -சிந்து வெளி தொடர்பை மீண்டும் எடுத்து கூறுகிறது. மேலும் சிந்து வெளி எழுத்துக்கள் வலது பக்கம் இருந்து இடது பக்கமாக எழுதப்பட்டவை என்பதையும் கவனிக்க. முதலாவது இந்திய எழுத்து கி மு 2600 ஆண்டளவில் சிந்து சம வெளியில் மலர்ச்சியுற்றது, எனினும் இவ் வரிவடிவம் இன்னும் முழுமையாக பொருள் கண்டு பிடிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம்: [1] இவ் வரி வடிவங்களைப் பயன் படுத்திய மொழியைப்பற்றி சரியாக இன்னும் தெரியாதது. [2] கிடைத்த முத்திரைகளில் எழுதப்பட்டு இருப்பவை பெரும்பாலும் "5" அல்லது "6" குறியீடுகளைக் கொண்டவையாகவே உள்ளன. நீளமான விவரணங்கள் எதுவும் அங்கு இல்லை. [3] அறியப்பட்ட வேறு வரிவடிவங்களைக் கொண்ட இருமொழிக் குறிப்பு [bilingual texts like a Rosetta Stone] எதுவும் கிடைக்காததும் ஆகும். அதனால் எம்மிடம் வாசித்து அறியக்கூடிய அவர்களின் நம்பிக்கை, சரித்திரம், ஆட்சியாளர் அல்லது இலக்கியம் பற்றிய குறிப்புகள் ஒன்றும், இன்னும் சரியாக இல்லை. இது 200 அடிப்படை குறியீடுகளை கொண்டிருந்தாலும், அங்கு சுமார் மொத்தமாக 400 வெவ்வேறான குறியீடுகள் அல்லது அடையாளம் காணப்பட்டு உள்ளன. ஆதிமனிதன் தன்மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றைய மனிதர்களுடன் சைகையால் பரிமாறிக் கொண்டான். அதனால் சைகைமொழி பிறந்தது. சைகை மொழியும் புரியாதவர்களுக்கு, தனது எண்ணக் கருத்துக்களை விளக்குவதற்கு, உருவங்களைக் கீறியே புரிய வைத்தான். அதனால் உலகிலுள்ள பண்டைய மொழிகளின் எழுத்துக்கள் யாவையுமே உருவங்களால் கீறிய படங்களிலிருந்தே முகிழ்ந்த வையாகும். பண்டைய தமிழரும் தமது எண்ணங்களை உருவங்களாகவே எழுதினர். பழங் கால தமிழகத்தில் ஏற்றுமதியாளர்கள் பண்டப் பொதிகளின் மீது சரக்கின் பெயரையும், அளவையும் படமாக வரைந்தனுப்பிய செய்தி சிலப்பதி காரத்தில், "வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயிலும்" [இந்திர விழா ஊர் எடுத்த காதை,வரி.111-113.] என உள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அல்லது புதியோர் தங்களுடைய பொருள்களை, பல பொதிகளாகக் கொண்டு வந்திருந்தார்கள். அந்தப் பொதிகள் ஒவ்வொன்றிலும் அவர்களுடைய அடையாள எழுத்தினை இலச்சினையாக பதிக்கப்பட்டிருந்தது, பல எண்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தப் பொதிகள் அனைத்தும் அந்த ஊர்ப் பண்டசாலையில் குவிந்திருந்தன என்கிறது இந்த வரிகள். இவ்வாறு அடையாளம் காட்டி எழுதப்படுவது கண்ணெழுத்து அல்லது “சித்திர எழுத்துக்கள் / pictorial writing" எனப்படுகிறது. இவ்வாறு ஒரு பொருளை ஓவியமாக பிரதி நிதித்துவம் படுத்தி பல குறியீடுகள், எழுத்து வடிவம் ஆரம்பித்த தொடக்க காலத்தில், உண்டாகின. அவை அந்த மொழியின் சொற்களை வர்ணித்தன. எழுத்து உருவாக்கலில், மூல சொற்களின் அல்லது எண்ணங்களின் ஒத்த சத்தம் உள்ள சொற்களை பண்டைய எழுத்தாளர்கள் பாவித்தார்கள். உதாரணமாக ஆங்கிலத்தில் "leave" என்ற சொல்லை குறிக்க "leaf" இன் படத்தை பாவித்தார்கள். இதை ஓவிய ஒலியெழுத்துப் புதிர் [rebus writing / வரைபட மொழி] என அழைத்தார்கள். அது மட்டும் அல்ல முன்னைய எழுத்து உருவாக்கலில், இது பொது மாதிரியாக இருந்தது. அப்படியே "relief", என்ற ஆங்கில எழுத்தை குறிக்க "leaf" என்ற குறியீட்டுடன் அதன் முன் "re" என்றதன் சத்தத்தை குறிக்கக்கூடிய ஒரு குறியீட்டை பாவித்தார்கள். மேலும் ஹரப்பான் இலக்கங்கள் / எண்குறிகள் செங்குத்தான கோடுகளால் குறிக்கப்பட்டன. ஆனால் அது 7 வரை மட்டுமே போகிறது. மேலும் 4 குறியீடுகளை இந்த கட்டமைப்புக்குள், எண் குறிகளாக பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. ஆகவே அவை "7" க்கு மேற்பட்ட இலக்கங்களை அதிகமாக குறிக்கலாம் என கருதலாம். "8" என்ற இலக்கத்தை குறிக்க செங்குத்தான கோடுகள் இல்லாததால், ஹரப்பான் இலக்கங்கள் எட்டை [8] அடிப்படையாக கொண்ட இலக்கங்களாக [Octal] இருக்கலாம் என தொல் பொருள் ஆய்வாளார், வால்டர் ஃபேர் சர்விஸ் [Walter Fairservice] மற்றும் பலரும் நம்புகிறார்கள். உதாரணமாக நாம் இன்று பாவிக்கும் அராபிக் இலக்கங்கள் [Arabic numerals or Indo-Arabic numerals] அல்லது இந்தோ-அராபிக் இலக்கங்கள், தசம இலக்கங்கள் ஆகும். இது உண்மையில் இந்தியாவில் கி பி 500 ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்பட்டு இந்து இலக்கம் ["Hindu numerals"] என அழைக்கப்பட்டது. எனினும் இதை பின் இந்தியாவுடனான வர்த்தகம் மூலம் கற்றுக் கொண்ட அரபு வர்த்தகர்கள், இந்த தசம இலக்க முறையை ஐரோப்பியாவிற்கு அறிமுகப்படுத்தியதால், அராபிக் இலக்கம் என பின் ஐரோப்பியர்களால் வழங்கப்பட்டு அது நிரந்தரமாக நிலைத்து விட்டது. இது 0 தொடக்கம் 9 வரையான குறியீடுகளை கொண்டுள்ளது. பத்து [10] என்பதை எழுத நாம் ஒன்றையும் [1] பூச்சியத்தையும் [0] ஒருங்கிணைக்க வேண்டும். அது அராபிக் இலக்கங்கள் பத்தை [10] அடிப்படையாக கொண்டவை என அடையாளம் காட்டுகிறது. எட்டை அடிப்படையாக கொண்ட எண்கள் உலகில் மிகவும் அரிது. என்றாலும் முன்னைய திராவிடர்கள் எட்டை அடிப்படையாக பாவித்து பின் பத்தை அடிப்படையாக இந்தோ ஐரோப்பியன் செல்வாக்கால் மாற்றினார்கள். உதாரணமாக எட்டை அடியாக கொண்ட இலக்கத்தில், பத்தை அடியாக கொண்ட 75 ஐ எழுதுவது என்றால் அதை நாம் "113" என எழுத வேண்டி வரும். அதாவது 8X8,1X8, 3 [எட்டு எட்டு,ஒன்று எட்டு,அலகு 3] ஆகும். எது எப்படி ஆயினும், இந்த சிந்து சம வெளி முத்திரையில் பொறிக்கப் பட்ட எழுத்துகளை சரியாக எம்மால் வாசிக்க முடியுமா? என்ற ஒரு கேள்வி எழுவது இயற்கையே.இதை விளக்கு வதற்கு, நாம் பட எழுத்து ஒன்றை [ படம்:7 அல்லது படம்:3:1] இப்படி ஆரம்பிக்கலாம். பல அறிஞர்கள் [க்நோரோசாவ், பார்போலா, மகாதேவன்/ Knorozov, Parpola, Mahadevan] இந்த குறியீடை "மீன்" என காண்கிறார்கள். மேலும் [விண்] மீன் என்பது நட்சத்திரத்தையும் குறிக்கிறது. மொகெஞ்ச தாரோவில் கண்டு பிடிக்கப் பட்ட பல பண்டங்களில் மீன், நட்சத்திரம் இரண்டும் ஒன்றாக வரையப்பட்டுள்ளன. அது மீன், நட்சத்திரம் இவைகளுக்கு இடையே உள்ள பிணைப்பை உறுதிப்படுத்துகிறது. கிழே உள்ள இன்னும் ஒரு பட எழுத்தில் [படம்:8 அல்லது படம்:3:7] இலக்கம் ஆறு [6] அதாவது ஆறு கோடுகள் மீன் சின்னத்திற்கு முன் அல்லது அருகில் காணப்படுகிறது. இதை ஆறு நட்சத்திரம் அல்லது அறு மீன் என மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இது கார்த்திகை நட்சத்திரம் / கார்த்திகை மீன் ஆகும். மீன் வடிவத்தின் தலைமேல் ஒரு கூரை போன்ற தலைகீழ் வடிவத்தைக் கண்டு [படம்:6 அல்லது படம்:3:2] மைமீன் என்று பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா [Asco Parpola] படித்துக் காட்டுகிறார். கூரை வேய்தலை வேய்தல் என்பார்கள்.அது மேய்தல் என்றும் திரியும். மேய்தல் வெறும் மேய் என நிற்கும். அது மை எனத் திரிந்து கரு நிறத்தைக் குறிக்கும். மை மீன் என்று கரிய மீனாகிய சனிக்கோளைக் குறிக்கும் என்கிறார். "மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும் தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்", -- என புறநானுறு 117 கூறுவதை காண்க. இங்கு மைம்மீன் = சனியைக் குறிக்கிறது. சனிக் கிரகம் புகை போல மங்கிக் காணப்படினும், வால் நட்சத்திரம் (தூம கேது) தோன்றினும், வெள்ளி கிரகம் தென் திசை நோக்கிச் சென்றாலும் என்கிறது. என்றாலும் இந்த மீன் வாசிப்பு எல்லோராலும் ஏற்கப்படவில்லை. ஆகவே ஏற்றுக் கொள்ளப்பட்ட சிந்து சம வெளி சொற்பொருள் தொகுதி / அகராதி என்று ஒன்றும் இன்னும் இல்லை. மேலும் சில சிந்து சம வெளி ஓவிய எழுத்தின் [உரல், ஜாடி, உரலுக்குள் உலக்கை,ஈட்டி [வேல்], மீன், ஒரு கண் மீன், வெட்டிய [சீவிய] மீன், மூடிய மீன், கொம்பு மீன், கொழுத்த நண்டு ] விளக்கம் படம் 4 இல் தரப்பட்டுள்ளது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 30 தொடரும்
  18. வணக்கம் ரஞ்சித்! இஸ்ரேல் அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் பலஸ்தீன் குடியிருப்புகளில் செய்யும் அட்டூளியங்கள் எல்லாம் சரியென சொல்ல வருகின்றீர்களா? ஹமாஸ் இயக்கம் ஆரம்பிக்க முதலே இஸ்ரேல் பலஸ்தீனிய மண்ணில் செய்த அஜாரகங்கள் உங்களுக்கு நினைவில்லையா? அல்லது அப்படி ஒன்றும் நடக்கவில்லை என சொல்லப்போகின்றீர்களா? இதுவொன்றும் கோபதாபங்களில்லை.. விவாதங்கள் மட்டுமே. 🙂
  19. நீங்கள் சொல்வது உண்மைதான் யானைகள் நடமாடும் இடத்தில் மிக குறைந்த வேகத்தில் செல்லவேண்டுமென்று சட்டம் சமிஞ்ஞை எல்லாம் இருந்திருக்கும், ஆனால் இலங்கையில் அதையெல்லாம் யார் மதிக்கிறார்கள். பல யானைகள் படுகாயம் இறப்பு என்று ஆகுமளவிற்கு கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் சென்றிருக்கிறார், அல்லது தூக்க கலக்கம். அதுவும் எரிபொருளுடன் , நல்லவேளை வெடிக்கல. ஆபத்தான மலையக ரயில் பாதைகளில் பயணிகள் பெட்டிகளுடன் எரிபொருள் தாங்கிகளையும் இணைத்து ரயிலை ஓட்டி செல்வதை கவனித்திருக்கிறேன். ரயில்களுக்கு வக்காலத்து வாங்கியே ஆகவேண்டும் ஓட்டுறவன் சரியில்லையென்றால் அது என்ன செய்யும் பாவம்? நான் குறிப்பிட்டது யாதெனில் சட்டென தன் பாதையை மாற்றிக்கொள்ள முடியாத வாகனங்களுடன் மோதினால் ந்ம்மை மோதியதல்ல நாம் மோதியது என்ற சொற்றொடர்தான் சரியானது என்பதே. விமானங்களும் பறவைகளும் முட்டிக்கொண்டால் விமானத்துடன் மோதிய பறவைகள் என்றே சொல்வார்கள், பறவைகளை மோதிய விமானம் என்று யாரும் சொல்வதில்லை.
  20. இப்படியான மடைமாற்றும் பதிவுகளுக்கு நான் பொதுவாக பதிலளிப்பதில்லை. விடுதலைப்புலிகளை இடையில் வந்து செருகி தம் கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் ****** பதிவு இது! மடைமாற்றிவிட்டால் பிறகென்ன பட்டாசு குழு காட்சில ஒரே அடைமழை தான். புலிகள் இன்னொரு இனத்தின் தாயக நிலப்பரப்பை தமது தாயகம் என்று சொல்லிப் போராடவில்லை. புலிகள் சிங்கள தேசமொன்று உலக வரைபடத்தில் இருக்கக்கூடாது என்று போராடவில்லை. புலிகள் சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவுசெய்ததில்லை புலிகள் சிங்கள மக்கள் கூடும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நிகழ்த்துவது இல்லை (ஒருசில தவறுகள் நடந்தது என்பது உண்மை ஆனால் தாக்குதலின் நோக்கம் சிங்கள மக்களைக் கொல்வது அல்ல. வேறு சில இலக்குகள் தாக்கப்படும்போது மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர்). இங்கு இவையனைத்தையும் செய்யும் ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளை புலிகள் இயக்கத்துக்கு ஒப்பாக நினைத்து கருத்தெழுதுவது என்பது அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயம் எல்லாம் பிசாசு என்ற கதைதான். அதாவது இவர்கள் தத்தமது மனக்களுக்குள் புலிகளை பயங்கரவாதிகளாகவே உருவகப்படுத்திக்கொண்டுள்ளனர்.
  21. ஆயிரத்தில் ஒருவன்! இவ்வளவையும் வாசித்து தாங்கிப்பிடித்து வாக்களிக்கும் மக்கள் மயங்கி விழப்போகிறார்கள். தேர்தல் திணைக்களம் முடிவுகளை அறிவிப்பதில் குழப்பம் அடையப்போகிறது. ஒருமித்து மக்களுக்குகாக போராடி உயிரை விட்ட மண்ணில், இத்தனை கட்சிகள் முளைத்திருக்கின்ற.
  22. கந்தப்பு ரொம்ப பாராட்டுக்கள். கடுமையான பரீட்சை என்றாலும் எல்லோருடனும் சேர்ந்து கலந்து கொள்வேன். யாரை? அப்போ நீங்க தான் வெற்றியாளர்.
  23. யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி ஆரம்பித்து விட்டது. எமது விளம்பர அனுசரணையாளர் @வீரப் பையன்26 அவர்களை உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 😂
  24. விசுகர், கனவு காண்பதற்கும் ஒரு நியாயம் வேண்டாமோ.... சுமந்திரன் பாரளுமன்றம் போறதுக்கே பெரிய இழுபறியாய் கிடக்கு, இதுக்குள்ளை... 15 விளக்குமாத்தையும் காவிக் கொண்டு போற பிளான் இருக்குதாம்.
  25. சிறி அண்ணா,தமிழ்நாட்டுத்தேர்தல் போட்டியில்நான் கலந்துகொள்ளவில்லை. இந்த முறை கலந்து கொள்ளுறம் தட்டுறம் தூக்குறம்
  26. கந்தையா அண்ணை... இவ்வளவு நாட்டு நடப்புகளை தெரிந்த நீங்கள் பயப்படலாமா? ஒரு கணிப்புத்தானே, எவ்வளவு தூரம் சரியாக கணித்திருக்கின்றோம் என்று எம்மை நாமே.. சோதித்துப் பார்க்க நல்ல ஒரு சந்தர்ப்பம். தவற விடாதீர்கள். துணிந்து போட்டியில் இறங்குங்கள்.
  27. "வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதானடா." தமிழ் பொதுவேட்பாளர் தேர்தலில் நின்றபோதும் குறை கூறினார்கள். இப்போ பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் குறை கூறுகிறார்கள். கழுதை வியாபாரியின் கதைதான் இது.
  28. செலஸ்ரீன் என்பது தமிழ் கிறிஸ்தவ பெயர். ஜனநாயக தேசிய கூட்டணி, அங்கயன் இராமநாதன். செலஸ் ரீன்
  29. யாழ். கள தேர்தல் போட்டியை ஆரம்பித்து வைத்தமைக்கு மிக்க நன்றி கந்தப்பு. 👍🏽 நல்ல கேள்விகள். நன்றாக யோசித்து பதில் சொல்ல வேண்டும். நிச்சயம் நானும் போட்டியில் கலந்து கொள்வேன். மற்றவர்களையும் போட்டியில் கலந்து கொள்ள ஊக்கப் படுத்துகின்றேன். மீண்டும் நன்றிகள் கந்தப்பு. 🙏
  30. நன்றி அண்மையில் நான் ஒரு கட்டுரை ஒன்றை வாசித்தேன். Noyal நடேசன் எழுதியது. உங்கள் கேள்விக்கு அது பதிலாக அமையலாம். // சிங்கள மக்கள் விடயத்தில் உண்மையான யதார்த்தமுள்ளது. அவர்களது 2500 வருட இந்திய எதிர்ப்பு உண்மையானது. சேர சோழ பாண்டிய நாயக்க அரசுகளின் படையெடுப்பால் காலம் காலமாக இலங்கை மக்கள் அழிந்தது உண்மை . அதேபோல் அவர்கள் தங்களது பவுத்த மதத்திற்கு இந்தியாவால் ஆபத்துவருமென்று எண்ணியதால் மகாவம்சம் உருவாகியது. அதையும் பொய் எனச் சொல்லமுடியாது. தென்னிந்தியாவில் இருந்து பவுத்த மதம் அழிந்துபோனதை அவர்கள் கண்டார்கள். அப்படி தங்களுக்கு வரலாம் என நினைக்கிறார்கள் . அந்தப் பயம் உண்மையா என்பது விவாதமில்லை போராட்ட இயக்கங்களுக்கு போர் பயிற்சி இந்தியாவில் நடந்தது உண்மையானது பின்பு ராஜீவ் – ஜேஆர் ஒப்பந்தம் என்பன இந்தியாவின் திணிப்பு நடவடிக்கையே. பிற்காலத்தில் விடுதலைப்புலிகளைத் தேவையற்றபோது ஒடுக்குவதற்கு உதவினார்கள் என்பது அவர்களுக்கு வசதியானபோதே செய்தார்கள் . தற்போது தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் கூட ஒருகாலத்தில் இலங்கைமீதான இந்தியாவின் ஆதிக்கத்தில் பணயக் கைதிகளாக முடியும். இப்படியான தன்மைகளால் சிங்கள மக்கள் கிராமத்திற்குள் வழிதவறி வந்து மூலைக்குள் ஒதுங்கிய காட்டு மிருகத்தின் நிலைக்கு தள்ளப்படுகிறாரகள். இதுபோதாதென்று இலங்கையில் நடந்த இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஈஸ்டர்குண்டு வெடிப்பும் அவர்களை மேலும் பல பக்கங்களிலுமிருந்து வரும் அபாயமெனப் பயமுறுத்துகிறது. கடைசியாக நடந்த தேர்தல்களின் தெரிவுகள் இதையே காட்டுகின்றன. 75 வீதமான சிங்கள பவுத்த மத மக்கள் கொண்ட இலங்கையில் சமாதானம், இனங்களின் பரஸ்பர நல்லிணக்கத்தாலேதான் உருவாகமுடியும். மற்றைய தீர்வுகள் எந்த உருவில் வந்தாலும் எதுவும் நடைமுறைச்சாத்தியமற்றது. இதுவரை வட கிழக்கு தமிழருக்கு மட்டும் இருந்த நூடில்ஸ் போன்ற சிக்கல் இஸ்லாமியர்களும் இந்த விடயத்தில் சேர்ந்து இடியப்ப சிக்கலாகிறார்கள். நடைமுறைச்சாத்தியமற்றது. இதுவரை வட கிழக்கு தமிழருக்கு மட்டும் இருந்த நூடில்ஸ் போன்ற சிக்கல் இஸ்லாமியர்களும் இந்த விடயத்தில் சேர்ந்து இடியப்ப சிக்கலாகிறார்கள். தமிழர்களுக்கு, அரசியல்வாதிகளின் மடியைத் தடவி பால்கறக்க 20 வருடம் தேவைப்பட்டது. ஆனால் இஸ்லாமியரைப் பொறுத்தவரையில் இந்த வேகத்தில் போனால் பாதிக்காலம்தேவைப்படாது. மூன்று இனங்களும் இனவாதத்தால் கூர்மையாக்கப்படும்போது யாருக்கும் நன்மை வராது தொடர்ச்சியான முறுகல் நிலை ஏற்பட்டால் பாதிப்புகள்தான் தொடரும் . இலங்கை மீதோ அல்லது சிங்கள மக்கள் மீதோ உலக நாடுகளால் எந்த முடிவையும் திணிக்கமுடியாது. ஆனால், இலங்கையை ஒரு ஏமன் அல்லது சோமாலியாவாக்க முடியும்.//
  31. தமிழர்களுக்கு தனித்துவம் தேவையில்லை என கூறுபவர்கள் அன்று தொடக்கம் இன்று வரை தமிழர் தரப்பிலும் உண்டு ...சிங்கள தரப்பிலும் உண்டு இதன் விகிதாசாரம் காலத்துக்கு காலம் மாறு படுகின்றது..வெள்ளைகள்(துதரக அதிகாரிகள்) தங்கள் நலன் கருதி சில கருத்துக்களை வெளியிடுதுகள் அல்லோ அதை பார்த்திட்டு இந்த புலம்பெயர்ஸும் ஏக்க ராஜ்ய கொண்சப்ட்டுக்குள்ள மூக்கை நுழைக்கினம்... எது எப்படியோ அனுராவின் ஆட்சி 5 வருடங்களின் பின் நிலைத்து நிற்காவிடில் என்ன நடக்கும் தமிழர் நிலை?என சிந்திக்க தவறுகின்றனர் சில எம்மவர்கள்... சிறிலங்காவில் ஒர் ஸ்தீரனமான ஆட்சி வேணும் என இன்றைய வெளிநாட்டு சக்திகள் விரும்புகின்றது..அது அணுராவுக்கு ஒர் வரப்பிரசாதமாகிவிட்டது...அமெரிக்காவுக்கு நிரந்தர தளம் இந்து சமுத்திரத்தில் தேவைப்படுகிறது .....
  32. இங்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் பலர் அநுரகுமாரவை வானளவாகப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இதுவரை வந்த சிங்களத் தலைவர்களை விடவும் இவர் தமிழர்களைப் பொறுத்தவரை சிறப்பானவர் என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால் அநுர பேசும் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சி என்பது தனியே தமிழருக்கு மட்டுமே பொருந்துவதில்லை. ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொருந்துவது, குறிப்பாக 80 வீதமாக சனத்தொகையில் இருக்கும் சிங்களவர்களுக்கானது. டில்வின் சில்வாவின் கூற்றில் இருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களின் "புலம்பெயர் உறவுகள்" என்பதனூடாக அவர் யாழ்ப்பாணத்தவர்களுக்கு அதிகம் பிரச்சினை இருப்பதாக ஒத்துக்கொள்ளவில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம். வன்னியிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் டில்வின் சில்வா கூறுவது போல கஸ்ட்டத்திலேயே வாழ்கிறார்கள். அது உண்மைதான். அதுசரி, அநுரவுக்குச் செம்புதூக்கும் அடிவருடிகளும், பக்தகோடிகளும் தமிழரின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு அவர் என்ன தீர்வு வைத்திருக்கிறார் என்பதையாவது இதுவரை கேட்டார்களா? அல்லது தமிழர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகளைக் காட்டிலும் வேறு பிரச்சினைகளும் இருக்கின்றனவா? இன்று அநுரவைத் தூக்கிக் கொண்டாடும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்பிரச்சினைகள் குறித்து என்ன முடிவில் இருக்கிறார்கள்? ஒன்றில் அவர்கள் தமிழர்களுக்கு வேறு பிரச்சினைகள் இல்லை என்கிற முடிவிற்கு வந்திருக்க வேண்டும் அல்லது அப்பிரச்சினைகளைக் கடந்து சென்றுவிடலாம், இனி அதுகுறித்துப் பேசத் தேவையில்லை என்கிற முடிவிற்கு வந்திருக்க வேண்டும். இவற்றுள் எதனை அவர்கள் தெரிவுசெய்தாலும் தமிழர்களின் நிலை ஒரு இனமாகப் பலவீனப்படப் போகின்றதே ஒழிய பலமடையப்போவதில்லை. சிங்களவருக்கு இருப்பதைப் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்காகத்தான் தமிழர்கள் சுதந்திர காலத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் உறவுகளைக் காவுகொடுத்து போரிட்டார்களா என்று இன்று அநுரவுக்கு விசுவாசம் காட்டும் புலம்பெயர் தமிழர்களைக் கேட்கத் தோன்றுகின்றது.
  33. தமிழருக்கு எப்படி?? நன்மையா ?? தீமையா.?? தீமை எனில் ஜேர்மனியில் இருக்கும் யாழ் கள உறுப்பினர்கள் ஒப்பந்தம் கையெழுத்திட விடமாட்டோம். 🤣🤣🤣
  34. இந்தியா கிரிக்கெட்டில் சாதித்துக் கொண்டிருக்கின்றது என்ற தலைப்பில் ஒரு கட்டுரை போன வாரம் அல்லது அதற்கு முதல் ஏதோ ஒரு பக்கத்தில் இருந்தது. ம்ம்ம்...........இதுவும் ஒரு சாதனை தான்....... மழை பெய்து முதல் நாள் குழம்பி போட்டி தடைப்பட்டுப் போனால், அடுத்த நாள் துடுப்பாட்டத்தை தெரிவு செய்யவே கூடாது என்ற புள்ளிவிபரத்தை இன்று விலாவாரியாக உதாரணங்களுடன் எழுதுகின்றார்கள். இதையே ஒரு நாளுக்கு முன்னால் இந்திய அணிக்கு சொல்வதற்கு ஒரு ஆள் கூட இல்லாமல் போய் விட்டது இந்தப் பெரிய இந்தியாவில்..........🫣.
  35. மணிவண்ணன் பதவிக்காக யார்காலையும் பிடிப்பார். கட்சித்தலைமையை மீறி ஈபிடிபியுடன் நகூட்டுச்சேர்ந்து மாநகரசபை மமேயரான கதை எல்லோருக்கும் தெரியும்
  36. தந்தை செல்வா அவர்களின் ஆத்மா இந்தப் புகைப்படத்தையும், இப்ப உள்ள டமிழரசுக் கட்சியையும் பார்க்க நேர்ந்தால், அவரது ஆத்மாவும் தற்கொலை செய்துகொள்ளும். பெற்றோரது பெயரைக் கெடுக்கவென்றே.. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி யாழிலே ''டமிழ்,டமிழ்'' என்று வாசித்து அப்படியே கை தட்டிவிட்டுட்டுது. அது 'டமிழரசு, இல்லை தமிழரசு என்று வாசியுங்கள் உறவுகளே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  37. உங்களது கருத்துகள் தான் குழந்தைப்பிள்ளைத்தானமாக இருக்கிறது ஆனால் நீங்கள் குழந்தை இல்லை
  38. போராட்ட பின்னனி கொண்ட மொழித்திறன் உடைய,எழுத்தாளன் .... ஆங்கில பத்திரிகைக்கு எழுதும் பொழுது அதை தூதரக அதிகாரிகள் வாசிப்பார்கள்... ஜோசப் பரராஜ சிங்கம் ,ரவிராஜ் போன்றவ்ர்கள் கொலை செய்தமைக்கும் இதே காரணம் தான் ...அவர்கள் ஏனைய பா.உ. (முன்னாள் ஆயுதமேந்திய் பா.உ உட்பட ) அரசுடன் சேர்ந்து அரசுக்கு ஆமா போட்டு பேசிகொண்டிருந்தமையால் உயிர் தப்பி வாழ்கின்றனர்...
  39. தெட‌ரை வென்ற‌து இல‌ங்கை அணி இல‌ங்கை அணிக்கு வாழ்த்துக்க‌ள்🙏😍................................
  40. முத‌ல் முறை தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணி அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணிய‌ வென்று பின‌லுக்கு போய் இருக்கு🙏😍 வாழ்த்துக்க‌ள் தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணிக்கு..........................
  41. கிளிநொச்சியில் பாடசாலையொன்றின் பெயர் திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது: சுகாஷ் கருத்து (Photos) 10 months ago கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவரது முகநூல் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மோசடியான பெயர்ப்பலகை "கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 1955களில் சின்னத்தம்பி ஆசிரியர் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. தற்சமயம் 55% தமிழ் மாணவர்களும் 45% முஸ்லிம் மாணவர்களும் கற்று வருகின்றனர். இது யுத்த காலம்வரை குறித்த பெயரிலேயே இயங்கி வந்துள்ளது. ஆனால் அதன் பின் சில பிரகிருதிகளால் அ.த.மு.க (அரசினர் தமிழ் முஸ்லிம் கலவன்) பாடசாலை என்றும் தற்சமயம் அ.மு.க (அரசினர் முஸ்லிம் கலவன்) பாடசாலை என்றும் மோசடியாகப் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுத் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது, மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை குறித்த பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயர் கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையே ஆகும். இதற்கு ஆதாரமாக இம்முறை வெளியாகிய க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேற்றில் பாடசாலையின் பெயர் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே பாடசாலையில் திட்டமிட்டுக் கடந்த சில ஆண்டுகளாக மோசடியாகப் பெயர்ப்பலகை வைத்துத் தமிழின அடையாளங்களை அழித்து வருபவர்கள் யார்? இந்தச் சதிக்கு உடந்தையாக இருந்தோர் - இருப்போர் யாவர்? உடனடியாகப் பாடசாலையின் பெயர்ப்பலகையை கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை (அ.த.க) என்று மாற்றுமாறு கோருகின்றோம். உங்கள் தமிழின அழிப்பிற்கு அப்பாவித் தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பலிக்கடா ஆக்காதீர்கள். உண்மை நிலைநாட்டப்படாவிட்டால் சதிக்கு உடந்தையாக இருந்த அத்தனை நபர்களின் விபரங்களும் வெளியிடப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/the-name-of-kilinochchi-school-changed-by-planning-1702327869#google_vignette
  42. கபிதான் நானும் செய்திகளையும் முகப்புத்தகத்தில் இருந்தும் பிடித்ததை இணைக்கிறேன். நீங்களும் நல்லது கெட்டதை பிடித்ததை இணைக்கலாம். வாசித்து முடிவெடுப்பது வாசகர்களே. செய்தி எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பதிந்தவர்களை ஒருபோதும் குறை கூறுவதில்லை.
  43. எமது வாழ்வும் பதின்ம வயது காதலாகி திருமணத்தில் முடிந்தது. பதின்ம வயதில் இருந்தது போலவே இப்போதும் உணர்கிறேன் வாழ்கிறேன்.
  44. சந்திரகாசன் பற்றி யாருக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் அவரது மகன்பற்றி இதுவரை வெளஜவந்ததாக தெரியவில்லை. வரும்போது தெரிந்து கொள்வோம். சிறி தானாக எதுவும் எழுதலையே. செய்திகளாக வருவதை இணைக்கிறார்.
  45. ரில்வினின் கட்சி, தமிழர்களுக்கு அரசியல் தீர்வாக எதையும் தருவோம் என்று ஒரு போதும் சொன்னது இல்லை. அத்துடன் அது அதிகாரபரவலாக்கத்துக்கு என்றுமே எதிர்ப்பை காட்டிக் கொள்ளும் கட்சி, எனவே ரில்வினின் இந்த பேச்சு ஒன்றும் அதிசயமும் இல்லை, அதிர்ச்சிக்குரியதும் இல்லை. ஆனால் ரில்வின் கூறிய வடக்கைப் பற்றிய விடயங்கள் முற்றிலும் உண்மையானவை. இங்கு எவராலும் அவற்றை மறுக்க முடியாது. ஏ9 வீதியின் ஒரு பக்கங்களையும் கடந்து உள்ளே சென்றால் பார்க்க முடியும் வடக்கின் வறுமையை. அதே போன்று யாழ்பாணத்தில் நாகர்கோவில் மற்றும் அதை அண்டிய பகுதிகளில் கரும்பலகைகள் கூட இல்லாத பாடசாலைகளை காண முடியும். இந்த 15 வருடங்களில் தமிழ் கட்சிகள் இந்த பிரதேசங்களின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்திருக்கவில்லை. வெறுமனே தமிழ் தேசியம், சுய நிர்ணயம், தாயகம் என்று தேர்தல் வேளைகளிலும், பத்திரிகை பேட்டிகளிலும் வாய் உளைய உரக்க பேசி மக்களை முட்டாள்களாக ஆக்கியதை தவிர வேறு எதையும் இவர்கள் செய்ய எத்தனித்ததும் இல்லை. புலம்பெயர் தமிழ் தேசிய அமைப்புகளுக்கும் இது பற்றிய எந்த அக்கறையும் இல்லை. தம்மை பிரமுகர்களாக காட்டிக் கொள்வதற்கும், தம்மை முன்னிலைப்படுத்துவதற்கும் மட்டுமே இவ் அமைப்புகள் உள்ளன. ரில்வினும் அவர் கட்சியும், ஆட்சியும் அவர் குறிப்பிட்ட பிரதேசங்களின், சமூகங்களின் பொருளாதார நிலையை மாற்ற ஏதேனும் முயற்சிகள் செய்து இப் பகுதி மக்களை முன்னேறினால் மிக்க மகிழ்ச்சி.
  46. வக்கீல்மாருக்கு வாக்கு போட்டு சனம் வெறுப்படைந்துவிட்டனர் ....அது தான் மருத்துவர்,கணக்கு மேதை என பலரை அறிமுகபடுத்தியினம்... மத்தியில் சிவப்பு ஆட்சி...மாகாணத்தில் வெள்ளை ஆட்சி என சொல்ல வருயினமோ

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.