Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88812
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    20351
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3125
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19667
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/05/24 in all areas

  1. முதல்தடவையாக மனைவியும் நானும் தபால் மூலமாக வாக்களித்தோம். கிழக்குக் கரையோரங்களில் இரவு 8 -9 மணிக்கு முடிவுகள் வெளியாகத் தொடங்கிவிடும். மேற்குக்கரைகளில் உங்கள் நேரம் நாளைக் காலை 6 மணிக்கு தான் முடிவுகள் சொல்வார்கள். பல மாநிலங்களில் சமபலம் உள்ளதால் நீண்ட நேரமோ காலமோ எடுக்கலாம்.
  2. போட்டு புளந்துட்டானுவோ…🤣 ஆனால் சங்கவியோ, அங்கவியோ, இங்கவியோ…. எந்த பெண்ணும் அவராக வந்து விஜை, உதய், ஸ்டாலின் மீது பொது வெளியில் புகார் சொன்னதில்லை. அப்படி சொல்லாதவரை, இந்த மாரிதாஸ் (இவர் வண்டவாளம் தண்டவாளம் ஏறி ரொம்ப நாளாச்சு) சைக்கோ கிஷோர் போன்ற முத்திரை குத்தப்பட்ட சங்கிகளின் வீடியோக்கள் எல்லாம் வெறும் கிசு கிசு….அவ்வளவே. நம்ம அண்ணனுக்கு என்ன பிரச்சனைன்னா விஜி அண்ணி நேரா களத்துக்கு வந்து…..அழகு தமிழில்.. டேய்… தே… பொ… என 🤣 ஆசையாய் பெயர் சொல்லி கூப்பிடுவதுதான்🤣. இந்தளவுக்கு வேறு எந்த சினிமாகாரரோ, அரசியல்வாதியோ அசிங்கபட்டதில்லை. தமிழகத்தில் மட்டும் அல்ல, நானறிய உலகில் எந்த நாட்டிலும் ஒரு தமிழ் அரசியல்வாதி இப்படி நாறியதில்லை🤣. இதுவரை தமிழ் நாட்டில் ஒரு பெண் வந்து என்னை சீரழித்து விட்டார் என கண்ணை கசக்கவிலை. சீமானைத்தவிர. மூப்பனார் பண்ணாத சோக்கா🤣. தீப்பொறி ஆறுமுகம், சிவாஜி கிருஸ்ணமூர்த்தி, இப்படி ஆபாசபேச்சாளர்கள் முன்னர் இருந்தார்கள், அவர்களின் இன்றைய சமூக வலை கால வடிவம்தான், மாரிதாஸ், சாட்டை, மைனர், கிசோர் போன்றோர். கொஞ்சம் மட்டமான ரசனை உள்ளவர்களை கிளுகிளுப்பாக்கும், அவ்வளவுதான்.
  3. காணொளியை முழுமையாகப் பார்த்தேன். இவர் எம்மைப்போல் ஒரு சாமான்யன் அல்ல. நீண்ட காலம் இவ்வாறான அரசியல் ஆய்வுகளை செய்பவர். புலம் பெயர் அரசியல் அமைப்புகளுடன் நீண்டகாலமாக தொடர்சசியான தொடர்புகளை பேணுபவர். ஆகவே இவர் கூறியவற்றை நடைமுறைப்படுத்துவதானால் இவரும், இவரது புலம் பெயர் அமைப்புக்களும் கூட்டாக தாயகம் சென்று, இதை மக்களுக்கு புரியவைத்து மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்று இவர் இப்போது கூறியவற்றை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான குறைந்த பட்ச முயற்சிகளையாவது எடுத்திருக்க வேண்டும். புலம் பெயர் தமிழ் அரசியல் அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பவராதலால் இதற்குத்தேவையான நிதிவளத்தையும் கொண்டவராகவே இருப்பார். ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கு இந்த ஞானோதயம் வந்திருந்தாலும் தாயகம் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்து மக்களைச்சந்தித்து இக் காணொளியில் கூறிய விடயங்களை மக்களுக்கு கூறி இவர் குறை கூறும் அரசியல்வாதிகளை தோற்கடித்து பாராளுமன்றம் சென்று இதை நடைமுறைப்படுத்த முயற்சிதிருக்கலாம். அதை விடுத்து எங்கோ ஒரு மூலையில் இருந்து கற்பனை குதிரையில் ஏறி போகமுடியாத ஊருக்கு வழி சொல்லி பொழுது போக்குவதில் அர்ததம் இல்லை. தாயக அரசியல்வாதிகள் மோசமானவர்கள் தான். ஆனால், அவர்களை குறை சொல்ல இந்த கற்பனாவாதிக்கு எந்த அருகதையும் இல்லை. சுமந்திரனாவது இப்போதைய அரசியலமைப்பை விட மேம்பட்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்க பல முயற்சிகளை செய்துள்ளார். இவர் எதையும் செய்யாது வெறும் இவ்வாறான அலசல்கள் மட்டும் தான். இப்போதைய ground reality என்ன என்பதைப்பற்றி எந்த அக்கறையுமற்று மாய உலகில் வாழ்பவர்களுக்கு வெறும் வாயை மெல்லும் இவர் சொல்வது இனிக்கலாம்.
  4. சில மாதங்கள் முன்பு பொதுவெளியில் ஹிஜாப் அணியாததால் ஒரு மாணவியை காவல்துறை அடித்தே கொன்றார்கள் பின்பு அது ஈரான் முழுவதும் பெரும் கலவரமானது. அதுக்கே அப்படியென்றால் அரை நிர்வாணமாக நின்றதுக்கு பொதுவெளியில் தூக்கிலிடுவார்களா, அல்லது தலையை வெட்டுவார்களா, இல்லை ஏற்கனவே வெட்டிவிட்டார்களா என்றே தோன்றும். ஐரோப்பா அமெரிக்கா பக்கம் அகதியா வரும் இஸ்லாமிய ஆண்கள் வந்து முதல் வேலையாக ஒரு வெள்ளைக்கார பெண்ணை பிடிப்பதுக்கு அவர்கள் மதத்தில் ஹராம் என்று சொல்லப்படும் பப் கிளப், பார், மேற்கத்திய இசை நிகழ்ச்சி என்று முழுமூச்சாக அலைவார்கள், ஆனால் அவர்களின் பெண்கள் கண்களைகூட தெளிவாக பார்க்க முடியாதபடி கறுப்பு உடையினால் மூடவேண்டுமென்றும் குரானை படித்தபடி அறைக்குள் முடங்கி கிடக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். ஆண்களை ஊர்மேய விட்டுவிட்டு பெண்களை மட்டும் மதத்துக்காக ஆயிரம் கட்டுப்பாடுகள் விதித்து கொல்வது எந்தவகை இறைநம்பிக்கை என்று எழுத்துகூட்டி படிச்சாலும் புரியாது. உடை என்பது மதத்தை கொண்டோ கலாச்சாரத்தை கொண்டோ எவர்மீதும் திணிக்கப்படுவது ஏற்புடையதல்ல, உடைகள் கண்ணியமானதாக இருந்தாலே போதுமானது. பெரும்பாலான ஈரான் ஈராக், ஆப்கான் பெண்கள் மேற்கத்தைய நாடுகளுக்கு வந்ததும் ஜீன்ஸ் ரீஷேர்ட்ட்க்கு மாறிவிடுகிறார்கள், ஒரு சிலர் மூடிக்கொண்டு திரிகிறார்கள் என்றால் அது அவர்கள் சுயவிருப்பு கிடையாது மதவெறியினால் வீட்டில் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்திலேயே தம் விருப்பை வேறு வழியின்று வெளிக்காட்ட முடியாமல் வாழ்கிறார்கள். ஏற்கனவே பலரை சொந்த அம்மா அப்பா சகோதரர்களே கொன்றும் இருக்கிறார்கள், பெரும்பாலான ஈரான் ஈராக் ஆப்கான் நாட்டு மக்கள் பிறருடன் நட்பாக பழக கூடியவர்கள், உலக நாகரிகத்துடன் சேர்ந்து கல்வி தொழில் என்று தமதுபாட்டில் நிம்மதியாக வாழகூடியவர்கள், அவர்களை மதவெறியூட்டி நாசமாக்குவதே இந்த பள்ளிவாசல் தொழுகைகளில்தான், இஸ்லாமியர்கள் அனைவருமே தமது மதம்தான் பெரியது என்பதில் மாற்றுக் கருத்தில்லாதவர்கள்,தமது மதம்தான் உலகத்தை ஆளனும் என்று மனசுக்குள் நினைப்பவர்கள் ஆனால் எல்லோருமே அதை பிற சமூகத்தில் திணிக்க நேரடியாக முயற்சிக்காதவர்கள். நம்மில் அல்லுலூயோ கோஷ்டி என்று ஒரு கூட்டம் நல்லாயிருக்குறவனை பிடிச்சு ஆண்டவர் வருகிறார் அடுத்த பஸ்ஸில எண்டு சொல்லி தண்ணிக்குள்ள தலையை முக்கியும் மேளங்களை அதிக ஒலியில் காதுக்கு கிட்ட கொண்டுப்போய் அறைந்தும் மனநோயாளி ஆக்குவார்கள், ஆனால் ஒரிஜினல் கத்தோலிக்கர்கள் எந்த மதவெறியுமில்லாது அவர்கள் வழிபாடு வாழ்க்கை, நட்புறவு என்று இருப்பார்கள். அதேபோல்தான் இந்த கூட்டமும் பலவீனமானவர்களை மதவெறியூட்டி மண்டையை கழுவி அடுத்த மதக்காரனை கொல்லவும், சக உயிர் என்று சிந்திக்காமல் தமது உறவு பெண்களை ஆயிரம் கட்டுப்பாடுகள் போட்டு கொல்லவும் செய்கிறார்கள். ஈரானை பொறுத்தவரை கொமேனி எனும் மதவெறி தலைவன் காலமாகும்வரை அடிப்படைவாதத்தில் சிக்கி தவிக்கும் பெண்கள் நிலமை கவலைக்கிடம்தான், அவரின் காலத்தின் பின்னர் ஓரளவாவது குறையும் வாய்ப்பு உண்டு என்பதே உலக மக்கள் எண்ணம்.
  5. இங்கே இந்துக் கோவிலோ, மத நம்பிக்கைக்கு எதிராகவோ அல்லது அதன் உடமைக்கோ எதிராக எந்தவிதமான தாக்குதலும் இடம்பெறவில்லை. அங்கே இடம்பெற்றது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் இந்திய ஆதரவாளர்களுக்குமிடையிலான அடிதடி. இது புரியாமல் மனம்போனபோக்கில் இந்து, அடிதடி, அன்பே சிவம் என்று அவிழ்த்து விடுதல் நன்மையானதல்ல. (-1 போட்டதற்குக் காரணம் என்ன? அல்லது அதுவும் மனம் போன போக்கில்தானா? 😏)
  6. இந்த தோல்விக்கு ரி20 போல் விளையாடியதுதான் காரணம் என குற்றம் சாட்டும் இவர்கள்தான் வங்க தேசத்துடனான போட்டியினை இந்தியா; கிரிக்கட் உலகிற்கு ஒரு புதிய அத்தியாயத்தினை தோற்றுவித்தாக தமதணியின் வெற்றியினை மிகைப்படுத்தி கொண்டாடினார்கள், தற்போது தோல்வி ஏற்பட்டவுடன் எதனை மெச்சி புகழ்ந்தார்களோ இப்போது அதனை குற்றம் கூறுகிறார்கள். அதே போல கம்பீர் மீதான குற்றச்சாட்டும். டெஸ்ட் போட்டியில் இப்படித்தான் விளையாடவேண்டும் என கூறுவதற்கு சில காரணம் இருக்கும் ஆனால் தனிப்பட்ட ரீதியில் ஒவொரு வீரருக்கும் இயல்பான ஆட்டம் இருக்கும் சிலருக்கு டெஸ்டில் விளையாடுவது போல லெக் ஸ்டம்பிற்கு வெளியே போகும் பந்துகளைத்தான் சுவீப் விளையாட வேண்டும் என்றோ அல்லது சுழலுக்கு எதிராக விளையாட கூடாது எனும் வழமையான மாதிரியினைத்தான் பின் பற்ற வேண்டும் என்றில்லாமல் தமது இயல்பான ஆட்டத்தினை விளையாடினால் போதும்., முதல் இனிங்ஸில் 400 ஓட்டங்களை (குறைந்தது) எடுப்பதுதான் இலக்கு . நியுசிலாந்து முதலாம் தர சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக (இந்தியா எதிர் கொண்டதனை போல இரண்டாம் மூன்றாம் தர சுழல் பந்து வீச்சாளர்கள் அல்ல) சுவீப், ரிவர்ஸ் சுவீப்களை விளையாடித்தான் வென்றுள்ளது. அதனை எவ்வாறெடுத்தால் என்ன? இதே போல் விளையாடி வென்றிருந்தால் இதனைப்பற்றி கதைக்கமாட்டார்கள்,தோற்றபின் இவ்வாறன இவ்வாறான காரணங்கள் கூறுவதனை நொண்டிக்குதிரைக்கு சறுக்கியதுதான் சாட்டு என்பார்கள்.
  7. உண்மை தான் ஆனா கடைசில அவங்க ரெண்டு பேருக்கும் நடந்த முடிவை நினைக்கத்தான் பக்கின்னு இருக்கு. Prashanthan Navaratnam
  8. இதுபற்றி நானுட்பட பலரும் பல தடவை கருத்து பகிர்ந்ததுதான், தமிழ்சிறி நீங்கள் Mention பண்ணியதால் சொல்கிறேன். சுமந்திரனை தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதியாக தமிழர்களும் ஏற்றுக்கொண்டதில்லை சிங்களவர்களும் ஏற்றுக்கொண்டதில்லை அப்படியிருக்கும்போது இவர்களின் தீர்மானங்கள் ஆலோசனைகள் எந்த வகையில் செல்லுபடியாகும்? இவர் பற்றி ஒருமணிநேரமாக இவர்கள் உரையாடுவது அநாவசியமற்ற ஒன்றாகவே பலருக்கு படும், அடுத்து எமது அரசியல் தேர்வுகளாக எது இருக்க வேண்டும் யார் இருக்க வேண்டும் தலைமை தாங்கவேண்டும் என்பதை கற்றறிந்த இவர்கள் கை நீட்டி காட்டினால் அல்லது அடையாள படுத்தினால் அதில் ஒரு பயன் இருக்கும். சுமந்திரன் முன்னைய ஆட்சிகள்போல் சிங்களவர்களுடன் ஒட்டிக்கொண்டு பதவிகளை பெற்று இந்த ஆட்சியிலும் வண்டியோட்டலாம் என்று நினைக்கிறார் போலும், ஆனால் நேற்று கிளிநொச்சியில் நடந்த கூட்டத்தில் இலங்கை பிரதமர் ஹரிணி , தமது கட்சியை சாராதர்களுக்கும் உங்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் எவருக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்திருக்கிறார், இந்த காணொலியில் 31:57 நிமிடத்திலிருந்து அவர் கருத்துக்கள் உள்ளன. ஒருவேளை தென்பகுதி கட்சிகள் மட்டுமல்ல ,கடந்தகால தமிழ்கட்சிகள் மற்றும் சுமந்திரன் வகையறாக்கள் பற்றி யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் மக்கள் மனநிலையை நாடி பிடித்து பார்த்தும் இந்த கருத்தை சொல்லியிருக்கலாம். தேர்தலின் பின்னரே சிங்களத்தின் முகங்கள் தெளிவாகும். தமிழர் தேசியத்தை உறுதியாக நகர்த்த வேண்டுமென்றால், புலத்திலும் நிலத்திலும் உள்ள தமிழர்கள் ஒரே கோட்டில் பயணிக்க வேண்டும், துரதிர்ஷ்டவசமாக புலத்திலும் பல பிரிவு தாயகத்திலும் பல பிரிவு , சிங்களவனிடம் உரிமை கேட்கபோக அரசியல் பேரம் பேச ஓரணி, ஒரே குரல் ஒற்றுமை வேண்டும் அது எங்கே வாழ்கிறது? அதனால்தான் இதுவரை தமிழர் தேசியம் பெயரில் குப்பை கொட்டிய அனைத்து கட்சிகளும் இந்த பொது தேர்தலில் ஓரம் கட்டப்படவேண்டும், நேர்மையும் திறமையுமுள்ள புதியவர்கள் தமிழர் பிரதிநிதிகளாக வேண்டும், தாயகத்தில் அரசியலும், புலத்தில் பொருளாதாரம் ஆலோசனைகள் , சர்வதேச தொடர்புகள் என்றும் ஒன்று சேர்ந்து ஒரேகோட்டில் நகர வேண்டும் என்பதே அங்கலாய்ப்பு இதெல்லாம் எந்தளவில் சாத்தியமாகும் என்பது காலத்தின் முடிவு., இந்த பொது தேர்தலில் தமிழர் அரசியலில் பெரும் மாற்றம் வேண்டும் புதியவர்களின் கையில் மக்கள் ப்ரதிநிதித்துவம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்பதே அங்குள்ள பெரும்பாலான மக்களின் விருப்பாக இருப்பதாகவும் தெரிகிறது. அப்படி புதியவர்களின் கையில் பொறுப்புகள் போனாலும் இந்த தேர்தல் அவர்களை இனம் காண மட்டுமே உதவி செய்யும், அடுத்த தேர்தலில்தான் அவர்களின் ஒற்றுமையும் அர்ப்பணிபும் நேர்மையும் கொண்டு ஒரு உறுதியான தமிழர் தலைமையாக தேர்தலை தமிழர் பகுதியிலிருந்து தேர்தலை எதிர்கொள்ள பயன்படும். ஒரே தலைமைத்துவமாக சிங்களத்துடன் பேரம் பேச தகுதி பெறும். இது எல்லாம் நக்கவேண்டும் நடந்தால் நல்லாயிருக்கும் ,அதுவரை எங்கே செல்லும் இந்த பாதை கேஸ்தான்.
  9. அவர் பஸ்சில் வரமாட்டார் ....... நண்பர் பாஞ்ச்சுடன் காரில் வருவார் . ......கொண்டுவருவது தூள் தூளா பறக்கும் வெடிப் பக்கட்டுடன் ........கொண்டு போவது பலகாரப் பெட்டியுடன் . ........! 😂
  10. @goshan_che, @nedukkalapoovan, @valavan, @kandiah Thillaivinayagalingam, @satan, @Kapithan, @Kandiah57, @விசுகு, @நிழலி, @குமாரசாமி, @ரஞ்சித், @கிருபன் ஆகியோர் இந்தக் காணொளியை நேரம் ஒதுக்கி பார்க்க வேண்டும்.
  11. வரலாற்றில் இருந்த எல்லா வல்லாதிக்கங்களும் போலவே இந்த நாடும், அண்ணை............... காலமாற்றத்தில் இன்றைய உலகில் சில விடயங்களை வெளிப்படையாக செய்ய முடியாது என்பதே உண்மை...............
  12. ராமதாசை பெரிய மாங்கா என்றும் அன்புமணியை சின்ன மாங்கா என்றும் குறிப்பிடுவது என் வழக்கம்!😂
  13. உங்க‌ட‌ பார்ட்டில‌ நானும் வாறேன் ஒட்டு மொத்த‌ யாழ்க‌ள‌மே எங்க‌ட‌ பார்ட்டிய‌ பார்த்து அதிர்ந்து போகும் அள‌வுக்கு இருக்கனும் மைக்ஜ‌க்ச‌ன் இல்லாத‌து குறை தான்...... அவ‌ருக்கு ப‌தில் 50ரிசென்ட‌ பாட்டுக்கு அழைப்போம் அமெரிக்காவில் இருந்து..................................... தென் ஆபிரிக்காவில் இருந்து மொட‌ல் அழ‌கிய‌லை வ‌ர‌ வைப்போம் அவேன்ட‌ ஆட்ட‌த்தை பார்த்து பாட்டிக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் அச‌ந்து போக‌னும் ஓக்கே தாத்தா செய்யிறோம் அச‌த்துகிறோம்😁👍...........................
  14. 'பத்திற்குள்ள நம்பர் ஒன்று சொல்லு..................' என்று கோலி பாடிப் பாடி விளையாடி இருக்கின்றார் போல........ கோலிபாய் எம்பிபிஎஸ்........... அந்த நாளில், 80, 90 களில், எவ்வளவு மோசமான இந்திய அணிகளை பார்த்திருக்கின்றேன்............. ஆனாலும் இது வேற லெவல் அணி.......... மகா கேவலம்............ வீட்டிலிருக்கும் நால்வருடன் இன்னும் ஒரு எட்டுப் பேரை அக்கம்பக்கத்தில் கூட்டி அள்ளிக் கொண்டு போய் நானும் ஒரு மாட்ச் கேட்கலாம் என்றிருக்கின்றேன்..........
  15. ஒரு கூட்டம் அரசியலில் வெறி நாய். மற்ற கூட்டம் சினிமாவில் வெறிநாய். அரசியலில் இதை சாதுவாக இருக்க அதன் ஓனர் முயற்சிப்பதாக படுகிறது. அந்தப்பயம் இருக்கணும்🤣
  16. அப்படி எல்லாம் அவர் நினைத்தபடி அவர் ஓய்வை அறிவிக்க நாங்கள் விடமாட்டோம்............. இவர் ஓய்விற்கு போய் விட்டால், மற்ற அணிகள் சிரமப்படுமே............🤣. ரோகித்தை தீக்குளிக்க வைத்தாவது கோலியை தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும்............. கோலியை தீக்குளிக்க வைத்து ரோகித்தை விளையாட வைத்தாலும் பரவாயில்லை தான்.........😜.
  17. குருநாதா என்றாலும் உங்க‌ளுக்கு ந‌க்க‌ல் கூட‌த் தான் கோலிய‌ ஒரு கால‌ க‌ட்ட‌த்தில் ர‌ன்ஸ் மிசின் என்று தான் அழைத்த‌வை..................ந‌ல்லா விளையாட‌க் கூட‌ய‌ ர‌ல‌ன்டான‌ வீர‌ர் அன்மைக் கால‌மாய் கோலின்ட‌ விளையாட்டு ச‌ரியே இல்லை இன்னும் இர‌ண்டு வ‌ருட‌ம் விளையாடி விட்டு எல்லா வித‌ கிரிக்கேட்டில் இருந்தும் கோலி ஓய்வை அறிவிக்க‌ இருப்ப‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருது...................கூட்டி க‌ழிச்சு பார்த்தால் எல்லாம் ச‌ரியாக‌ தான் வ‌ருது ச‌ர்வ‌தேச‌ 20ஓவ‌ர் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார்................அடுத்த‌து டெஸ்ட் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார் அத‌ற்க்கு பிற‌க்கு ஒரு நாள் தொட‌ரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் 2027உல‌க‌ கோப்பையோட‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இருந்து ஓய்வுவை அறிவிப்பார்..................................................
  18. இவருக்கு சிங்களம் புரியவில்லை என நாளைக்கு ஜெ.வி.பி யின் சந்திரசேகரம் தமிழ ஊடகங்களில் விளக்கம் கொடுப்பார்...அணுராவும்,ஹாரணியும் சொல்வதை தமிழ் ஊடகங்களும் தமிழர்களும் தப்பாக புரிந்து கொள்கின்ற்னர் என்பார்..
  19. எல்லா கட்சிகளின் ஐடி விங்குகளும் இப்பொழுது சாக்கடைக்குள் மூக்கை மூடி இறங்கி துழாவித் தேடிக் கொண்டிருப்பார்கள். விஜய் களத்தில் புதுசு தானே............... இவருடையது நிறையவே சாக்கடைக்குள் கிடைக்கும்......... ஆந்திராவில் சிரஞ்சீவி 'அய்யோ...........சாமீ..............' என்று அரசியலை விட்டுவிட்டு ஓடியது இதனால் தான்............ தமிழ்நாட்டில் எம்ஜிஆர், விஜய் உட்பட இதுவரை 13 நடிகர்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்திருப்பதாக ஒரு தகவலில் இருந்தது. ஆனால் எவரும் இந்த சாக்கடை சலசலப்புகளுக்கு பயந்து ஓடவில்லை, தேர்தலில் தோற்றுத்தான் ஒதுங்கினார்கள்...........
  20. இப்ப நபிகள் நாயகம் தரவழிகளுக்கு காலம் சரியில்லை. நபிகள் நாயகத்தின் தற்கால version தான் செந்தமிழன் சீமான் அண்ணா. அதனால் செந்தமிழன் அண்ணாவுக்கும் காலம் சரியில்லை. நபிகள் நாயகத்துக்கு சஹாபாக்கள் போல அண்ணுக்குத் தம்பிமார் உள்ளார்கள். இன்னும் கனக்க ஒப்பீடுகள் இருக்கு.
  21. ஆம் இதுக்கு முதலும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது பக்கத்து வீட்டுக்காரி நடத்திய பாரிய ராணுவ தாக்குதல் அது, இப்போ இது இரண்டாவது தாக்குதல் , அவர் யாருக்கு என்ன தீங்கு செய்தார் அந்த சொக்கநாதரின் திருவிளையாடலை ரவிராஜின் மனைவிமீதா காட்டணும்? இப்படிப்பட்ட கொலைவெறி தாக்குதல் கண்ணாடிக்கு பக்கத்தில நடந்தும் கண்ணாடில சிறுவெடிப்புகூட ஏற்படேல்ல போல? இது ஒரு மெடிக்கல் மிராகிள், நம்ம காரில எல்லாம் ஒரு கல்லு குறுணி பட்டானே வெடிப்பு விழுது.
  22. இது இந்திய உளவு அமைப்பின் தொலைநோக்கு திட்டமோ யார் அறிவார்.
  23. நீலன், சுமந்திரன் போன்றோர் அரசியலமைப்பை மாற்றச் செய்த முயற்சிகளில் தனிநாடாக உருவாவது உள்ளடக்கப் படவில்லை. ஆனால், ஒற்றையாட்சிக்குள் சில உரிமைகளைப் பெறும் அம்சங்கள் இருந்தன. தமிழ்நெற் ஆசிரியர் தமிழ் தேசியத்தின் ஆதர்சமான (ideal) விடயங்களை மட்டும் முன்வைத்துப் பேசுவது அதியசமோ, "அதிரடிச் செய்தியோ" அல்ல! ஆனால், ஆதர்சமான விடயங்கள், அப்படியே ஆதர்சமாக மட்டும் தான் இருக்கும். மணிக்கணக்காகப் பேசலாம், பந்தி பந்தியாக எழுதலாம். தாயகத்தில் ஒரு துரும்பையும் இந்த ஆதர்ச நிலைப்பாடுகள் அசைக்க உதவாது. எப்படி ஆதர்ச நிலைப்பாடுகளை தாயகத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்கக் கூடிய தொட்டுணரக் கூடிய (tangible) விடயங்களாக மாற்றுவது என ஒரு திரியை கோசான் ஆரம்பித்து, இறுதியில் பலருக்கு ஆர்வம் இல்லாமையால் அது அணைந்து போயிருக்கிறது. அந்தத் திரியிலே கூட தீவிர தமிழ் தேசியர்கள் சிலர் வந்து எழுதினார்கள், "இது கடைசியில் எங்கே போகுமென்று தெரியும், எனவே இதில் நாம் பேச ஒன்றுமில்லை" என. பாவனைப் பயனைப் பார்ப்பதை விட மேலாக, பகட்டைப் பார்த்து கார், வீடு, உடை, நகைகள் வாங்குவது போலவே, தீவிர தமிழ் தேசியர்களும் வெளியில் என்ன தோற்றமென்று பார்த்துத் தான் தீர்வை எடை போடுகிறார்கள். உள்ளடக்கம், நடைமுறை நன்மைகள் என்னவென்று யோசிப்பது குறைவு.
  24. பட மூலாதாரம்,NTK/TVK எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்குப் பிறகு, திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றா, இல்லையா என்பது குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தமிழக அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்த இரு தத்துவங்களின் துவக்கம் என்ன? தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், 'திராவிடமும் தமிழ்த் தேசியமும்' எனது இரு கண்கள் எனக் குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு, நாம் தமிழர் கட்சியின் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. இதற்கு உடனடியாக பதிலடி தந்த சீமான், "திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றல்ல" என்று குறிப்பிட்டார். இதையடுத்து, பல தரப்பினரும் இந்த இரு தத்துவங்கள் குறித்தும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். 'திராவிடம்' என்ற சொல்லின் பின்னணி என்ன? இதில், திராவிடம் என்ற சொல் நீண்ட காலமாகவே இலக்கியங்களில், ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இருந்த சமணர்களில் நந்தி கணம் என்ற பிரிவினர், திரமிள சங்கம் அல்லது திராவிட சங்கம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தியதாகத் தன்னுடைய 'சமணமும் தமிழும்' நூலில் குறிப்பிடுகிறார் மயிலை. சீனி. வேங்கடசாமி. "வச்சிரநந்தி என்பவர் விக்கிரம ஆண்டு 526இல் (கி.பி. 470 திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார்" என தேவசேனர் எழுதிய தர்சனசாரம் என்ற புத்தகத்தை மேற்கோள்காட்டி குறிப்பிடுகிறார் வேங்கடசாமி. இந்த சங்கம் மதுரையில் ஏற்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு, எட்டு - ஒன்பதாம் நூற்றாண்டுகளில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி, 'திராவிட வேதம்' எனக் குறிப்பிடப்பட்டது. வைணவ முன்னோடிகளில் ஒருவரான நாதமுனிகள் நம்மாழ்வார் குறித்த தனிப் பாடல் ஒன்றில், 'திராவிட வேத சாகரம்' என்ற சொற்களைப் பயன்படுத்தினார். ஆதிசங்கரர் தான் இயற்றிய சௌந்தர்ய லஹரியில் திருஞானசம்பந்தரைக் குறிப்பிட, 'திராவிட சிசு' என்ற சொற்களைப் பயன்படுத்தினார். ஆனால், இந்தக் காலகட்டங்களில் திராவிட என்ற சொல், தமிழைக் குறிக்கப் பயன்பட்டதா அல்லது தென்னிந்தியா என்ற பொருள்படப் பயன்படுத்தப்பட்டதா என்பது தெளிவாக இல்லை. இப்படி திராவிடம் என்ற சொல் நீண்ட காலமாகவே புழக்கத்தில் இருந்தாலும், நவீன காலத்தில் திராவிடம் என்ற சொல்லின் பயன்பாடு 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் செயல்பட்ட கிறிஸ்தவ சமயப் பரப்பாளரான கால்டுவெல்லிடம் (1814 – 1891) இருந்துதான் துவங்குகிறது என்கிறார் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு. "கால்டுவெல் ஒரு மொழிக் குடும்பத்தின் பெயராக 'திராவிடம்' என்ற சொல்லை முன்வைத்தார். A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages என்ற அவரது புகழ்பெற்ற நூலில், சமஸ்கிருதத்தின் துணையின்றி இயங்கும் வல்லமை கொண்ட ஆற்றல் தமிழுக்கு உண்டு எனக் குறிப்பிட்டதோடு, அதேபோல, சமஸ்கிருதத்தின் ஆதரவின்றி இயங்கக்கூடிய மேலும் ஐந்து மொழிகளை அடையாளம் கண்டு, அவற்றை திராவிட மொழிக் குடும்பமாக அடையாளப்படுத்தினார்" என்கிறார் தியாகு. 'திராவிட' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கான காரணத்தை அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் ராபர்ட் கால்ட்வெல். "இந்தப் புத்தகத்தில் திராவிடம் என்ற சொற்றொடரின் கீழ் சேர்க்கப்பட்ட சொற்கள், தென்னிந்தியாவின் பெரும்பான்மை மக்களால் பேசக்கூடிய மொழிகளைக் குறிக்கிறது. ஒரிசா, மேற்கிந்திய மாவட்டங்கள், குஜராத்தியும் மராத்தியும் பேசப்படும் தக்காணம் ஆகிய பகுதிகளைத் தவிர்த்து விந்திய மலைகள், நர்மதா நதியிலிருந்து கன்னியாகுமரி வரை தீபகற்ப இந்தியா முழுவதும் ஒரே இனத்தைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களே வசிக்கிறார்கள். ஒரே மொழியின் பல்வேறு வழக்குகளையே அவர்கள் பேசுகிறார்கள். அந்த மொழிக்கு ‘திராவிட (Dravidian)’ என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடுகிறார் ராபர்ட் கால்ட்வெல். திராவிடம் அரசியலாக்கப்பட்டது எப்போது? நவீன காலத்தில் மொழிகளின் தொகுப்பை, நிலப்பகுதியை திராவிடம் என்ற சொல்லால் குறிப்பிடுவது அப்போதுதான் துவங்கியது என்கிறார் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு. "ராபர்ட் கால்ட்வெல் நூலுக்குப் பிறகுதான், இந்த மொழிகள் பேசப்படக் கூடிய பகுதிகள் திராவிட நாடு எனக் குறிப்பிடப்படுவது அதிகரித்தது. இந்தப் பகுதிகளும், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணம் எனக் குறிப்பிடப்பட்ட பகுதிகளும் கிட்டத்தட்ட நிலவியல் ரீதியாக ஒன்றாக இருந்தன. ஆகவே அதை திராவிட நாடு எனக் கருதுவதும் இயல்பாக இருந்தது" என்கிறார் தியாகு. கடந்த 1892 செப்டம்பரில் சென்னையில் இருந்த பட்டியலினத்தினர், ஆதிதிராவிட ஜன சபா என்ற அமைப்பைத் துவங்கினர். 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரிட்டிஷ் நிர்வாகத்தில், இந்தியர்களுக்கு வேலைகள் அளிக்கப்பட ஆரம்பித்தபோது, பிராமணர்களே எல்லா வாய்ப்புகளையும் பெறுவதாகவும் பிராமணரல்லாதார் புறக்கணிக்கப்படுவதாகவும் குரல்கள் எழுந்தன. இந்தக் காலகட்டத்தில் 'திராவிடன்' என்ற சொல் கூடுதல் கவனம் பெற ஆரம்பித்தது. "அதே தருணத்தில் டாக்டர் சி. நடேசனார், பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க, 'திராவிடன் இல்லம்' என்ற இல்லத்தை உருவாக்கினார். பிறகு, 'தி திராவிடியன் அசோசியேஷனும்' உருவாக்கப்பட்டது. இதற்குப் பிறகு, பிராமணர் அல்லாதோருக்கான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உருவானது. இதற்கென வெளியிடப்பட்ட ஆங்கில இதழ் Justice என்ற பெயரிலும் தமிழ் நாளிதழ் திராவிடன் என்ற பெயரிலும் வெளியானது" என்கிறார் தி டிரவிடியன் மூவ்மென்ட் (The Dravidian Movement) என்ற நூலை எழுதிய ராபர்ட் எல். ஹார்ட்க்ரேவ். "இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் திராவிடன் என்ற சொல், இனம் மற்றும் மொழியியல் சார்ந்த பொருளில் வழங்கப்பட்டது. நீதிக் கட்சி உருவாக்கப்பட்ட நேரத்தில் தென்னிந்தியாவில் உள்ள பிராமணரல்லாத வகுப்புகளை திராவிடன் என்ற ஒரே சொல்லைக் கொண்டு குறிப்பிட்டனர். இவ்வாறு பண்பாட்டு மறுசீரமைப்பு அடையாளத்தை உறுதிப்படுத்தவும் பிராமணர் அல்லாத வகுப்புகள் தம்மைத் தற்காத்துக் கொள்ளவும் திராவிட தேசியம் உருவானது. யார் திராவிட மொழிகளில் ஒன்றைப் பேசுகிறார்களோ, அவர்கள் பொதுவாக திராவிடர்கள் என்ற மரபுரிமையைப் பெறுகிறார்கள்" என்று தனது 'தமிழ் மறுமலர்ச்சியும் திராவிட தேசியமும்' நூலில் குறிப்பிடுகிறார் கு. நம்பி ஆரூரன். இதற்குப் பிறகு, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக மாறியது. அதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக, திராவிடம் என்ற சொல், அரசியல் ரீதியாக தமிழ்நாட்டில் நிலைபெற ஆரம்பித்தது. 'தமிழ்த் தேசியம்' என்ற சொல்லின் பின்னணி என்ன? இதேபோல, தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கமும் நீண்ட காலமாகவே இருக்கிறது என்கிறார் தியாகு. "சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு என்ற சொல் இரு இடங்களில் இடம் பெறுகிறது. பரிபாடலிலும் 'தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்' எனத் தமிழ்நாடு குறிப்பிடப்படுகிறது. தொல்காப்பியத்திற்கு 11ஆம் நூற்றாண்டில் உரையெழுதிய இளம்பூரணாரும் 'நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்' என்று குறிப்பிடுகிறார். இதற்குப் பிறகு, தமிழ் பேசும் நிலப்பரப்பை தமிழ்நாடு எனத் தனியாகப் பார்க்கும் போக்கு 1930களின் பிற்பகுதியில் உருவாகிறது. ராஜாஜி முதலமைச்சார் ஆனபோது, இந்தி கட்டாயப்பாடமாக்கப்பட்டது. அதை எதிர்த்து, கி.அ.பெ. விசுவநாதம், கருமுத்து தியாகராசர் உள்ளிட்டோர் கூட்டம் நடத்தினர். பெரியாரும் இதில் தீவிரமாகக் களமிறங்கினார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இதை தமிழ்த் தேசியத்தின் துவக்கமாகச் சொல்லலாம்," என்கிறார் தியாகு. தமிழ்த் தேசியம், திராவிடம் இரண்டும் ஒன்றா? கடந்த 1938 செப்டம்பர் 11ஆம் தேதி சென்னை கடற்கரையில் நடந்த ஒரு கூட்டத்தில் சோமசுந்தர பாரதியார், பெரியார் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகவும், அவர்கள் முதல் முறையாக தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்ததாகவும் குறிப்பிடுகிறார் தியாகு. "மொழிவழி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, பெரியார் தொடர்ந்து 'தமிழ்நாடு' என்ற கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த சி.என். அண்ணாதுரை தென்னிந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தார். அண்ணாவைப் பொறுத்தவரை, 'மொழிவழி பிரிந்து இனவழி ஒன்று சேர்வோம்' என்றார். பல திராவிட அரசுகளுடன் சேர்ந்து திராவிட கூட்டமைப்பை உருவாக்குவோம் என்றார். 1960களில்தான் இந்தக் கோரிக்கையை அவர் கைவிட்டார். அதற்குப் பிறகு, தமிழ்நாட்டை முன்னிறுத்தியே திராவிடக் கட்சிகள் செயல்படுகின்றன" என்கிறார் தியாகு. கடந்த 1930களில் மட்டுமின்றி, அதற்குப் பின்வந்த காலங்களிலும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கத்தைப் பல தலைவர்கள் உயர்த்திப் பிடித்தனர். "தமிழர் ஒரு தனி தேசிய இனம், தமிழ்நாடு தமிழர்களின் தாயகம்" என்ற முழக்கத்துடன் செயல்பட்ட ம.பொ.சிவஞானம், மாநிலங்கள் மொழிவழியில் பிரிக்கப்பட்டபோது, எல்லைகளைக் காப்பதற்காகப் போராட்டங்களை நடத்தினார். அதேபோல, சி.பா. ஆதித்தனாரும் நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கி, தனித் தமிழ்நாடு வரை பேசினார். இவர்கள் இருவரும் பிற்காலங்களில் திராவிடக் கட்சிகளோடு இணைந்து செயல்பட்டனர். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த ஈ.வெ.கி. சம்பத், 1961இல் திராவிட நாடு கொள்கையில் சி.என். அண்ணாதுரையுடன் முரண்பட்டு, அக்கட்சியிலிருந்து பிரிந்து தமிழ்த் தேசியக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிச் செயல்பட்டார். பிறகு இவர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். நக்சல்பாரி இயக்கத்தின் தாக்கத்தில் செயல்பட்ட தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் தமிழரசன் போன்றவர்கள் திராவிட இயக்கம் முன்வைத்த சாதி ஒழிப்பை ஏற்றுக்கொண்டர். ஆனால், அதை தனித் தமிழ்நாடு மூலமே அடையமுடியுமெனக் கருதினர். தியாகுவைப் பொறுத்தவரை, திராவிடக் கொள்கையும் தமிழ்த் தேசியக் கொள்கையும் ஒன்றுக்கொன்டு இசைவானவை. "திராவிடத்தின் சமூக நீதி கொள்கை இல்லாமல் தமிழ்த் தேசியம் வெற்றி பெற முடியாது. தமிழ்நாடு சுயநிர்ணய உரிமையை அடைந்தால் சாதியை ஒழிக்க முடியும். ஆகவே, ஒன்றை வைத்துதான் மற்றொன்று இருக்கிறது" என்கிறார் அவர். 'தமிழ்த் தேசியமும் திராவிடமும் ஒன்றல்ல' பட மூலாதாரம்,GNANAM ஆனால், திராவிடமும் தமிழ்த் தேசியமும் முற்றிலும் வேறானவை என்றும் ஆரியக் கருத்தியலின் துணை சக்திதான் திராவிடம் என்றும் குறிப்பிடுகிறார் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் அருணபாரதி. "திராவிடம் என்றால் என்ன என்று இப்போதுவரை அவர்களாலேயே வரையறுக்க முடியவில்லை. சிலர் இனம் என்கிறார்கள், சிலர் நிலப்பகுதி என்கிறார்கள். சிலர் வாழ்வியல் என்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டைக் குறிக்க தமிழ் என்ற சொல்லையே பயன்படுத்துங்கள் என்கிறோம்." "திராவிடர் என்று சொன்னால், தமிழர்களிடம் ஓர் உளவியல் ஊனம் ஏற்படுகிறது. அக்கம்பக்கத்து மாநிலங்களுடன் உரிமைகளுக்காகப் போராட முடியவில்லை. தமிழ்நாடு என்று பேசியிருந்தால், தீவிரமாகப் போராடியிருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை திராவிடம் என்பதும் தமிழ்த் தேசியம் என்பதும் ஒன்றல்ல. திராவிடம் என்பதை ஆரியத்தின் துணை சக்தியாகவே கருதுகிறோம்" என்கிறார் அருணபாரதி. பெரியார் திராவிடம் எனக் குறிப்பிட்டது, தான் பிற மொழி பேசக் கூடியவர் என்ற சங்கடத்தால் வந்தது, அதை நாம் ஏற்கத் தேவையில்லை என்கிறார் அவர். "நீதிக் கட்சி பெரியாரின் பொறுப்பில் வந்தபோது, அதில் தெலுங்கு ஜமீன்தார்கள் அதிகம் இருந்தனர். ஆகவேதான், இயக்கத்தின் பெயரை மாற்றும்போது தமிழர் கழகம் என்பதற்குப் பதிலாக திராவிடர் கழகம் எனப் பெயர் சூட்டினார். தமிழ்நாடு தமிழருக்கே என்பதை மாற்றி, திராவிட நாடு திராவிடருக்கே எனப் பேச ஆரம்பித்தார். தான் சார்ந்திருக்கும் சமூகத்தால், தன்னைப் பிறர் புறக்கணித்துவிடலாம் எனக் கருதி அவர் அப்படிச் செய்தார்" என்கிறார் அருணபாரதி. ஆனால், இதை மறுக்கிறார் தியாகு. "அந்தத் தருணத்தில் சென்னை மாகாண அரசு என்பது, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. ஆகவேதான் அதற்குப் பொருத்தமாக, 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று பெரியார் சொல்ல ஆரம்பித்தார்," என்கிறார் அவர். ஆனால், மொழி வழியில் மாநிலங்கள் பிரிந்தபோது, தமிழ்நாடு தமிழருக்கே என்பதைத்தான் அவர் முன்வைத்தார். கடைசி பொதுக் கூட்டம் வரை அதை வலியுறுத்தினார். அண்ணா திராவிட நாடு கேட்டபோதுகூட அதை பெரியார் விமர்சித்தார்" என்கிறார் அவர். திராவிட இயக்கங்களைப் பொருத்தவரை, திராவிடத்திற்கு எதிராக ஆரியம் என்ற கருத்தாக்கத்தை முன்வைப்பதோடு, பிராமணர்களையும் ஆரியர்களாகச் சொல்கிறது. ஆனால், நாங்கள் சொல்லக்கூடிய தமிழ்த் தேசியத்தில் பிராமணர்களும் அடங்குவார்கள் என்கிறார் அருணபாரதி. "தமிழை ஏற்கக்கூடிய பிராமணர்களும் தமிழ்த் தேசியத்தில் அடங்குவார்கள். ஆனால், அவர்கள் தமிழை ஆட்சி மொழி, வழிபாட்டு மொழியாக ஏற்க வேண்டும். 1956இல் மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, இங்கு வசிக்கும் பிற மொழியினரும் இதில் அடக்கம்தான்" என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c62l9y59re6o
  25. ஏராளன், பராளுமன்ற உறுப்பினர்கள் விலகுவது புதியவர்கள் வருவது வரவேற்கத்தக்கதே. ஆனால் அதுவல்ல இங்கு பிரச்சசனை. இந்த தமிழ் நெற் ஜெயா கூறுவதை போன்ற பிரிந்து போகக்கூடிய இணைப்பாட்சியை ( Confederation) அரசியலமைப்பை உருவாக்கக் கூடிய வலு இப்போது தமிழர் தரப்பில் உள்ளதா? பாரிய அரசியல் பலமும் சக்திவாய்ந்த உலக நாடுகளின் அபரிமிதமான ஆதரவும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அதல பாதாளத்தில் இருக்கும் தமிழர் அரசியல் பலத்தையும் ஏறெடுத்து கூட பார்ககாத உலநாடுகளின் தற்போதைய நிலையில் இது சாத்தியமா? சாத்தியமான சந்தர்ப்பங்களைப் பாவித்து இன்றைய நிலையை விட மேம்பட்ட அதிகார பரவலாக்கத்துடன் கூடிய அரசியலமைப்பை உருவாக்க முற்படுவதே புத்திசாலித்தனமான செயல் என்பது எனது கருத்து.
  26. 2 தடவைக்கு மேல் பா.உ களாக இருந்தவர்கள் தாங்களாகவே விலகி இளையோருக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும்.
  27. வழமையில் எமது வீட்டிலிருந்து 100 யார் தூரத்திலுள்ள பாடசாலையில் 11 மணிபோல் வாக்குப் போட போவோம். காலை 6 மணிக்கே வாக்குச் சாவடிகள் திறந்திருக்கும்.வேலைக்குப் போகிறவர்கள் அவசரப்பட்டு 9 மணிவரை வாக்களிப்பார்கள்.அதன் பிற்பாடு 10-20 பேரே நிற்பார்கள். அதே மாதிரி பிற்பகல் 4-9 கொஞ்சம் கூடுதலானவர்கள் வாக்களிப்பார்கள். வழமையில் Early Votes குறைவாகவே இருக்கும்.இந்த தடவை ஏறத்தாள 80 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர்.
  28. பையன் சார், இங்கு சில மாநிலங்களில் மிகச் சிறிய பிரிவு மக்களிடையே தனிநாட்டு கோரிக்கை இருக்கின்றது. கலிஃபோர்னியாவில் இருக்கின்றது, டெக்சாஸில் இருக்கின்றது.............. தங்களை மேட்டுக்குடிகள் என்று நினைப்போர் எல்லா நாடுகளிலும் இருக்கின்றனர் தானே. இலங்கையில் கூட, தமிழர்கள் மத்தியில் கூட, பிரதேசம் - ஊர் - பரம்பரை இப்படி ஏதாவது ஒரு வகையில் தங்களை சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் என்று எண்ணுவோர் இருக்கின்றார்கள். அது போலவே இங்கும். அவர்கள் பிரிந்து போக விரும்புகின்றனர். வேறு சிலருக்கு குடியேறிகள் என்றாலே ஒரு விதத்தில் தீண்டத்தகாதவர்கள் போல, அவர்களும் தனியே போக விரும்புகின்றனர். இப்படி பிரிந்து போக வேண்டும் என்று விரும்புவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனாலும் இவை மொத்தமும் சேர்ந்தாலும், ஒரு நகத்தில் விழுந்த ஒரு சிறு கீறல் அளவில் கூட வருமா என்று தெரியவில்லை. இங்கு மாநிலங்களுக்கு உச்சபட்சமான அதிகாரங்களும், சுதந்திரமும் இருக்கின்றன. அவை எந்த முயற்சிகளும் இன்றி தாராளமாகக் கிடைப்பதால், அவற்றை எவருமே பெரிதாக எடுப்பதில்லை, உணர்வதில்லை. உப்பு இல்லாவிட்டால் தான் உப்பின் அருமை தெரியும் என்று சொல்வார்களே.........
  29. அதே போல எமது கோயில்களிலும் ஆண்கள் அரை நிர்வாணமாக செல்வதனை யாரும் கண்டு கொள்வது கூட இல்லை.😁
  30. இரவு மூன்று மணிக்குத்தான் படுக்கப் போகின்றவர்கள் என்ற படியால், இரவு 7 மணிக்கு ஒரு சாப்பாடும், இரவு 2 மணிக்கு ஒரு சாப்பாடுமாக இருட்டில்... இரண்டு நேரம் சாப்பிடுகின்றார்கள். 😂
  31. உண்மைதான். பிரதம மந்திரிக்கு உரிய ஆடம்பரம் இல்லாமல், அன்றாடம் வீதியில் காணும் சாதாரண பெண் போல் Denim கால்சட்டையுடன் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்டது ஆச்சரியமாகவும் மனதிற்கு பிடித்தும் இருந்தது. மற்றைய ஆசிய நாட்டு பெண் பிரதமர்களை விட… இவர் வித்தியாசமாக பொது வெளியில் வந்தது சிறப்பு.
  32. ஒரே ஒரு வழிதான் இருக்கு, கட்சி பெயரை மாற்ற வேண்டியதில்லை. சீமானை பழையபடி செபஸ்டியன் என மாற்றி விட்டு, ஸ்டாலினின் பெயரை சீமான் என மாற்றிவிட்டால் போதும்🤣.
  33. வேலைக்கு ஆட்க்கள எடுப்பது இங்கு பாடு.அதை வைத்துத்தான சொன்னேன்.நீங்கள சொல்வது மாதிரி பெரும் பாலானோர் உழைப்பாளிகளதான் ஆனால் ஒரு பகுதியினர் லோனையும் இலவசங்களையும் நம்பி காலத்தை ஓட்டுகின்றனர்.லோன் காசு கட்ட மட்டும் உழைக்கின்றனர்.
  34. என்னப்பா இது ஒருத்தரையும் காணம்? எல்லாரும் நிறைமாதக் கர்ப்பம் போல😎?
  35. அப்ப‌டியா 2002 ஆர‌ம்ப‌ கால‌த்தில் ந‌ல்லா தானே இருந்தார் பாட‌லில் க‌ல‌க்கிறார் நிறைய‌ ப‌ண‌ ம‌ழையில் ந‌னைந்தார் இப்போது சிறையா இவ‌ர் 2pacக்க‌ பார்த்து வ‌ள‌ந்த‌வ‌ர் 2Pacக்கின் இழ‌ப்பு த‌ன‌க்கு வேத‌னை அளிப்ப‌தாக‌ 2002க‌ளில் சொல்லி இருந்தார்............................
  36. வன்னி என்னும் எங்களின் நிலப்பரப்பிற்கும் தங்களுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக மருத்துவர் ஐயாவின் மக்கள் சிலர் ஏற்கனவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பண்டார வன்னியன் வேற இருந்துவிட்டார்.............. இப்ப மாம்பழமும் உள்ளே வந்ததால், அசைக்க முடியாத வரலாற்று உண்மை என்று கொண்டாடப் போகின்றார்களே...............🤣.
  37. அமரன்: ஒற்றைக் கதையாடலின் ஆபத்து இளங்கோ டிசே (முகநூலில் இருந்து) ************************ நான் அமரன் திரைப்படத்தின் கதைக்களத்துக்குள் போக விரும்பவில்லை. அது ஒரு உண்மையான மனிதனின் வாழ்க்கையைப் புனைவாகச் சொல்கின்ற திரைப்படம். எந்த ஒருவரினதும் இழப்பு என்பது துயரமானதே. அதுவும் இளம் வயது சடும் மரணமாயின், அவர்களைச் சுற்றியிருப்பவர்க்கு மனவடுக்களை நீண்டகாலத்துக் கொடுக்கக்கூடியது. அந்தவகையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணத்தின் பாதிப்பை நாம் எந்தவகையில் மறுக்கமுடியாது. ஆனால் 'அமரன்' திரைப்படத்தின் சிக்கல் என்னவென்றால் அது சாகசம் என்கின்ற பெயரில் இந்திய இராணுவத்தையும், இந்திய தேசப்பற்றையும் glorify செய்வதாகும். அப்படி மிகைப்படுத்தி மேன்மைப்படுத்துவதும்போது அது தன்னளவில் நின்று செய்யாமல், மற்றமையைக் கட்டியமைத்து அந்த மற்றமையை மிக மோசமான/கேவலமான எதிரிகளாகக் கட்டியமைப்பதாகும். இன்றைக்கு இந்தியாவில் (இலங்கையில் எப்போதும்) சிறுபான்மையினர் மீது அளவுக்கதிகமான வெறுப்பு எல்லாத் திசைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. இந்துக்கள் X முஸ்லிம்கள் என்கின்ற துவிதநிலைப் பிரிவினைகள் மிக மோசமாகக் கட்டியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் ஒரு இராணுவ வீரனின் தேசப்பற்றை காஷ்மீர் முஸ்லிம்கள் என்கின்ற மற்றமையை மிக மோசமாகச் சித்தரிப்பதன் மூலம் 'அமரன்' கட்டியமைப்பதே இங்கே சிக்கலாகின்றது. இனி முகுந்த் வரதராஜன் என்ற ஒரு இராணுவ மேஜரையும், அவரின் சாகசத்தையும், இழப்பையும் ஒருபுறம் வைத்துவிட்டு சிலவற்றை யோசித்துப் பார்ப்போம். எந்த நாட்டிலும் இராணுவம் என்பது அதிகார மையத்தின் உச்சியில் நின்று இயங்குவது என்பது நமக்குத் தெரியும். அதனால்தான் பல நாடுகளில் அரசியல் தளம்பல்கள் நிகழும்போது இராணுவமே ஆட்சியைக் கவிழ்த்து அரசாள்வதை -முக்கியமாக நமது தென்னாசியா/தெற்கிழக்காசியா நாடுகளின் வரலாற்றைப் பார்க்கும்போது அறிந்துகொள்ளலாம். அந்தவளவுக்கு அவர்களிடம் அதிகாரம் மிகுந்து இருக்கின்றது. எந்தவகை அதிகாரம் என்றாலும் அது மிகப்பெரும் துஷ்பிரயோகத்துக்கு இட்டுச் செல்லும் என்றாலும், ஆயுதங்கள் தாங்கும் ஓர் அமைப்பான இராணுவத்துக்கு அது இன்னும் பிறரை ஒடுக்கின்ற சக்தியை எளிதாகக் கொடுத்து விடுகின்றது. எனவே அந்த அதிகார மையத்தை தேசத்தை ஒன்றிணைக்கும் புள்ளியாக, தியாகிகளாக மட்டும் உருப்பெருக்கும்போதே சிக்கல்கள் வருகின்றன. அவ்வாறு அவர்கள் தேசப்பக்தியாளர்களாகவும், தியாகிகளாகவும் கட்டமைக்கும்போது அவர்களின் துஷ்பிரயோகம் பேசப்படாது போகின்றது. இங்கே அமரன் ஒற்றைக் கதையாடலை மட்டும் (Singular Narratives) முன்வைப்பதால்தான் இதைப் பேசவேண்டியிருக்கின்றது. ஒற்றைக் கதையாடல் எவ்வளவு ஆபத்தானது என்பதை சிமாண்டா அடிச்சியின் 'The Danger of a Single Story' உரையை வாசிப்பதன் மூலம் நாமின்னும் அறிந்து கொள்ளலாம். 'அமரன்' இந்திய இராணுவத்தினன் ஒருவனினது சாகசத்தையும் தியாகத்தையும் காட்டுவதற்கு காஷ்மீரின் சுயநிர்யண உரிமைகளுக்காகப் போராடுபவர்களை மட்டுமில்லை, இந்தியா-பாகிஸ்தான் அரசியல் சூதாட்டத்தில் பங்குபெறாத மக்களையும் எதிரிகளாகக் கட்டியமைக்கின்றது. இதைத்தான் சிமாண்டா அடிச்சி ஒற்றைக் கதையை (மட்டும்) சொல்வதால் வரும் ஆபத்து என்கின்றார். எப்படி வெள்ளையின ஐரோப்பா உலகம் ஆபிரிக்காவைச் சார்ந்தவர்களை ஒற்றைக் கதையாடல் மூலம் அவர்களின் தனித்துவங்களை அழித்து தனக்கான வரலாற்றை எழுதிக் கொண்டதோ அவ்வாறே அமரன் இந்திய இராணுவத்தின் சாகசத்தின் மூலம் மற்றமைகளை மூடி மறைத்திருக்கின்றது. உண்மையிலே இந்திய இராணுவம் இவ்வளவு புனிதமானதா? என்பதை நாம் கடந்தகாலத்தைப் படிப்பதன் மூலம் அறிந்து கொண்டால், இப்படி அமரனில் கட்டியமைக்கப்படும் விம்பம் நமக்கு மகிழ்ச்சியைத் தராது. மேலும் இங்கே இராணுவத்தினன் நாட்டுக்காக துச்சமாக மதிப்பவன் என்று புனிதமாக, தியாகியாக கட்டியமைத்தாலும் அவர்களும் அதைச் சம்பளம் பெறும் ஒரு அரச உத்தியோகத்தனாகவே இருக்கின்றார்கள் என்பதையும் நினைவில் வைக்கவேண்டும். எந்த ஒருவரும் நாட்டுக்காக, தாம் நம்புக் கொள்கைக்காக volunteer ஆகவோ தேசப்பக்தியின் நிமித்தமோ மட்டும் செல்வதில்லை. அந்தவகையில் பார்த்தால் போராளிகளோ அல்லது 'பயங்கரவாதிகள்' என்று கட்டியமைக்கப்படுபவர்களோ இந்த 'சம்பளம்' இல்லாது தன்னார்வளாகப் போகின்றவர்களாக, இனி இழப்பதற்கு உயிரைத் தவிர வேறெந்தத் தேர்வும் இல்லை என்ற நிலையில் போகின்றார்கள் என்று வைத்துக்கொண்டால், அவர்கள் அல்லவா இந்த 'சம்பளம்' பெறும் இராணுவத்தை விட மிகப்பெரும் தியாகிகளாக இருப்பார்கள்? மேலும் இந்திய இராணுவம் தனது நாட்டில் அரசியல் சிக்கல்கள் இருக்கும் காஷ்மீர்/அஸாம்/மணிப்பூர் போன்ற இடங்களில் மட்டுமில்லை, பஞ்சாப் காலிஸ்தான் பிரிவினையின்போதும், ஏன் வீரப்பன் வேட்டை என்கின்றபெயரில் அதிரடிப்படையினராக தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் செய்த அட்டூழியங்களும் மிக விரிவாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இங்கே இந்திய இராணுவம் இலங்கை, சூடான் (ஐ.நா.அமைதிப்படை) போன்ற பிற நாடுகளில் செய்த 'நல்ல விடயங்களை' பட்டியலிடப்போவதில்லை. இந்த விடயங்களை எல்லாம் அமரன் பேச வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் இந்தப் பின்னணியோடு ஒருவர் 'அமரனை'ப் பார்த்தால் இதில் கட்டியமைக்கப்படும் தேசப்பற்றும், புனிதமும் அவ்வளவு உண்மையல்ல என்பது புரிந்துவிடும். மேலும் காஷ்மீரிகளில் பெரும்பான்மையினர் இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம், ஆங்கிலேயர் வரமுன்னர் எப்படி இருந்தோமோ அப்படி அல்லது அதற்கு நிகரான சுயநிர்ணயமுள்ள மாகாணமாக இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றார்கள். ஆனால் 'அமரன்' கட்டியமைப்பதோ, அங்கே இருப்பவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தானின் செல்வாக்குக்கு உட்பட்ட 'பயங்கரவாதி'கள். ஆகவே அவர்கள் மிக மோசமாக அடக்கியொடுக்க வேண்டியவர்கள். இந்திய இராணுவம் செய்யும் ஒவ்வொரு தாக்குதல்களிலும் மக்கள் ஒன்றுகூடுகின்றார்கள். கற்களை எறிகின்றார்கள். ஆனால் இந்திய இராணுவம் ஒன்றுமே அவர்கள் மீது செய்யாத அப்பாவி/அருமையான இராணுவமாகக் கட்டியமைக்கப்படுகின்றார்கள். காஷ்மீரில் இந்திய இராணுவமும், இந்திய அரசும் செய்த அட்டூழியங்களை சும்மா இணையத்தில் தேடிப் பார்த்தாலே விபரங்கள் கொட்டும் என்பது ஒருபுறமிருக்க, சரி காஷ்மீரிகள் எதைச் சொன்னாலும் அது பக்கசார்பாக இருக்கும் என்று சொல்பவர்க்கு அருந்ததி ராயின் 'The Ministry of Utmost Happiness' வாசிக்கப் பரிந்துரைப்பேன். அது இரண்டு தரப்பினரைப் பற்றியும் பேசுகின்றது. அந்நாவல் மீது கூட விமர்சனம் இருந்தாலும், மேலும் அது இந்த இரண்டு தரப்பையும் தாண்டி முக்கியமான மூன்றாந்தரப்பான மக்களை, அவர்கள் படும் துயரங்களையும்/ சித்திரவதைகளையும் பேசுகின்றது. அமரனில் காட்டப்படும் இந்திய இராணுவம் இவ்வாறான இடங்களைக் கைப்பற்றும், தனது வீரர்களைக் காப்பாற்றும் தாக்குதல்கள் பற்றி எனது அனுபவம் ஒன்றைச் சொல்கின்றேன். யாழ்ப்பாணத்தை இந்திய இராணுவம் கைப்பற்றும் முயற்சியை செய்கின்றது. யாழ்ப்பாண நிலவியலையோ, புலிகளின் ஆயுதபலத்தையை அவ்வளவு அறியாது பாரசூட்கள் மூலம் இராணுவத்தை இறக்கி யாழ்நகரைக் கைப்பற்றலாம் என்று இந்திய இராணுவம் திட்டம் அமைக்கின்றது. அவ்வாறு ஓர் இரவில் இறக்கிய இராணுவத்தின் பெரும்பகுதியினரை புலிகள் தாக்கி அழிக்கின்றனர். இது இரண்டு ஆயுதத் தரப்புக்களின் போர் எனச் சொல்லலாம். ஆனால் அடுத்தநாள் இந்திய இராணுவம் என்ன செய்கின்றது? தனது கவச வாகனங்களைத் தெருவில் இறக்கி, வீதியில் நின்ற அப்பாவி மக்களை வகைதொகையின்றி தனது வெஞ்சினம் தீர்க்கச் சுட்டுக் கொன்றது. சுட்டுக் கொன்றது மட்டுமில்லை அப்படித் தப்பியவர்களையும், அரைகுறையாக காயங்களுடன் துடித்துக் கொண்டவர்களையும் தனது டாங்கிக்கு அடியில் போட்டு மேலே மிதித்துக் கொன்றது. இது கிட்டத்தட்ட 80களின் பிற்பகுதியில் நடந்த கோரதாண்டவம். அப்படி இருக்கின்ற இந்திய இராணுவத்தை ஒரு திரைப்படம் தனியே தேசப்பற்றாளர்களாவும், தியாகிகளாகவும், மக்களுக்காகப் போராடுபவர்களாகவும் காட்டுகின்றபோது ஒருவருக்கு நெருடல் வராதா என்ன? அதுவும் தனது இராணுவ காலத்தில் மிக மோசமாக காயப்பட்டு காப்பாற்றக்கூடிய 'பயங்கரவாதியைக் கூட' பக்கத்தில் வைத்து சுட்டு கொன்று தன்னை வீரனாகப் பெருமிதம் கொள்கின்ற (அமரனில் வரும் காட்சி) ஒருவனை, அவனது எதிர்த்தரப்பு கொல்கின்றபோது இதுவும் போரின் ஒரு எதிர்வினை என்றுதானே எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கும். நாமே தெருவில் போனால் ஒருவன் சீண்டினால் கோபப்படுவோம் என்றால், ஒருவனை மிலேச்சனத்தனமாக அதிகாரத்தின் நிமித்தம் கொன்றுவிட்டு 'வீரனாக'க் காட்டும்போது மறுதரப்பின் எதிர்வினைகளில் இருந்து ஒருவன் எப்படித் தப்பித்துக் கொள்ளமுடியும். மேலும் இந்திய இராணுவத்தின் புனிதத்தை குடும்பத்தின் பாசத்தைக் காட்டுவதன் மூலம் கட்டியமைப்பது இன்னும் மோசமானது. ஒரு இராணுவ வீரனுக்குப் பாசம் இருக்கக்கூடாதா என்று கேட்கலாம். இருக்கலாம். அது தவறே இல்லை. அப்படியாயின் 'பயங்கரவாதிகள்' என்று கட்டியமைக்கப்பவர்க்குக் குடும்பங்கள் இல்லையா? அவர்களுக்குப் பாசம் இல்லையா? அவர்கள் குடும்பம், இந்த இராணுவ சம்பளம், இறந்தால் கூட பெருமை மிகு 'அர்ஜூனா' விருதுக்கள் இல்லாது இப்படி ஏன் யுத்தம் செய்ய வருகின்றார்கள் என்று ஒருகணம் யோசித்துப் பார்த்திருக்கின்றோமா? இந்தளவு உணர்ச்சிவசப்படும் அவர்கள் ஒரு இராணுவத்தில் சேர்ந்து சம்பளம் பெற்று நிம்மதியாக வாழ முடியுமே? ஏன் இவற்றையெல்லாம் தவிர்த்து இப்படி ஒரு மோசமான உயிர் ஆபத்தான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதை நாம் ஒருபோதும் சிந்திக்கவிடாது, இவ்வாறான தேசப்பற்று/தியாக திரைப்படங்கள் நம்மைக் கட்டிப்போடுகின்றன. ஆகவேதான் இந்த ஒற்றைக் கதையாடல்கள் மிக ஆபத்தானவை என்கின்றேன். இந்தத் தேவையில்லாத தியாக/புனித கற்பிதங்களை நம்பி எந்த இராணுவத்தையும் மேன்மைப்படுத்தாதீர்கள் என்று மட்டுமில்லை, இராணுவத்துக்கு உங்கள் பிள்ளைகளைத் தயவு செய்து அனுப்பி வைத்துவிடாதீர்கள் என்றும் சொல்லவேண்டியிருக்கின்றது. இராணுவத்தில் இருந்து உயிர் திருப்பி வருபவர்களில் பெரும்பாலானோர் PTSD போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மனச்சிதை நோய்களால் பாதிக்கப்பட்டு தமது எஞ்சிய நாட்களையும் மிக மோசமாகக் கழிக்கின்றார்கள் என்பதை அமெரிக்க இராணுவ வரலாற்றைக் கற்பதன் மூலம் நாம் எளிதாக அறிந்துகொள்ள முடியும். ஒரு மனித உயிரின் இழப்பு என்றவகையில் முகுந்த வரதராஜனின் மரணம் ஈடுசெய்யமுடியாது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேபோல அது எந்த அரசியல் நோக்கம் என்றாலும் எதிர்த்தரப்பின் இழப்பும் ஈடுசெய்யமுடியாததே என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆகவேதான் எந்த மோசமான குற்றச்செயல் புரிந்திருந்தால் கூட, நாம் எல்லோருமே மரணதண்டனைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுக்கின்றோம். ஒரு உயிரைப் பறித்து நாம் எந்த பெரும் நீதியை இந்த உலகில் நிலைநாட்டிவிடப் போகின்றோம். அது எமக்கு மிக மோசமான எதிர்த்தரப்பாக இருந்தால் கூட எவருக்கும் அப்படியொரு தண்டனை வழங்கும் அதிகாரம் இருக்கக் கூடாது என்றுதான் விரும்புகின்றோம். அதுவும் காந்தி போன்ற ஒருவர் பிறந்த நாட்டில், ஒரு இராணுவத்தின் சாகசத்தை/பழிவாங்கலை தேசப்பக்தியாகவும்/ தியாகமாகவும் கட்டியமைக்கும்போது நாம் சற்று தலைகுனிந்து வெட்கப்படவும் அல்லவா வேண்டும்? ************ (இதை எழுத,, எனக்குப் பிரியமானவர் முகுந்த் வரதராஜன் காலமானபோது அவருக்காக எழுதப்பட்ட பாடல் ஒன்றை தான் எழுதிக் கொடுத்தேன் என்று சொன்னது ஒரு காரணமாக இருந்தது. அந்தவகையில் இந்தத் திரைப்படம் அவருக்கு நெருக்கமானதும் கூட. அவரின் சார்பு/உணர்ச்சி எல்லாவற்றையும் புரிந்துகொண்டே, ஒற்றைக் கதையாடலின் ஆபத்து இத்திரைப்படத்தில் இருக்கின்றது என்கின்ற உரையாடலின் நீட்சியிலே இதை எழுதினேன். அவருக்கும் நன்றி)
  38. இவர் சொல்வது முழுவதும் சரியான விளக்கம் கிடையாது. குறிப்பாகப் பனைமர வேர் ஆழமாகச் செல்வது நீரை ஆழத்துக்குக் கொண்டு செல்வதற்கல்ல. மாறாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்காகவே. வறண்ட நிலத்தில் பனை வேர் அதிக ஆழமாகவும் நீர்ப் பிடிப்பான நிலத்தில் ஆழம் குறைவாகவும் இருக்கும்.
  39. இணைப்புக்கு நன்றி சசி. இங்கு சிலர் கதிர்காமர் திருச்செல்வம் போன்றோரை புகழ்ந்தனர். அவர்கள் இதையும் கொஞ்சம் பார்க்க வேண்டும். இந்தக் காணொளியின்படி சுமந்திரனுக்கு ஏதாவது பெரிய பதவிகள் கிடைக்கலாம்.
  40. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் தோழ‌ரே...................
  41. தமிழ் நாட்டில் இருந்து... இலங்கை பாராளுமன்ற போட்டியில் கலந்து கொண்ட தோழர் புரட்சிகர தமிழ்தேசியனுக்கு பாராட்டுக்கள். 👍 🙂
  42. சுவைப்பிரியன், அவர்களுக்கு உழைத்தே ஆகவேண்டிய நிலை வந்தே தீரும், வெளிநாட்டிலிருந்து காசு அனுப்புகிறவர்களுக்கு வயசு போக அவர்களின் வாரிசுகள் இலங்கையிலிருப்பவர்களுக்கு பணம் அனுப்ப போவதில்லை, நான் கஷ்டப்பட்டு உழைக்கிற காசை இவர்களுக்கு அனுப்ப நான் என்ன லூசா என்றுதான் கேட்பார்கள், இனிவரும் சந்ததிக்கு வெளிநாடு வருவது எல்லாம் சாத்தியமில்லாத ஒன்று வந்தாலும் அகதி மனுவை ஏற்காமலே திருப்பி அனுப்புவான்,குளம் வற்றிவிட்டால் கொக்குகள் இரைதேடி பறந்தே ஆக வேண்டும், அதையும் மீறி இவர்கள் வேலைக்கு போகவில்லையென்றால் போரினால் வாழ்வாதாரமிழந்து தடுமாறும் பெண்கள் முன்னாள் போராளிகள் , எந்த வெளிநாட்டு உதவியும் இல்லாமல் வாடும் ஆயிரக்கணக்கான ஏழைகளும் அந்த இடத்தை நிரப்புவார்கள். புத்தன், யாதும் ஊரே யாவரும் Listen என்று அவர்களும் நினைத்திருந்தால் தரப்படுத்தல் வந்திருக்காது, கொழும்பிலிருந்து அடித்து கப்பலில் ஏற்றி அகதியாக, யாழ்ப்பாணத்துக்கு அனுப்பும் நிலமையும் வந்திருக்காது, சுனாமிக்கு அடுத்தவன் தந்த காசையே தமிழனுக்கு கொடுக்க கூடாது என்று நீதிமன்றம் செல்ல சொல்லியிருக்காது, ஒரேமொழி பேசும் மக்கள் கூட்டமுள்ல வடக்கு கிழக்கையும் பிரிச்சுவிட சதி பண்ணியிருக்காது. தகுதிகள் பார்த்து வேலைக்கமர்த்த தாய்வான்போல விமானம், தொலைபேசி,கார்கள் கம்பியூட்டர்களுக்கான மென்பொருள் தயாரிப்பில் ஈடுபடுவார்களென்று நினைக்கவில்லை, உள்ளூர் உற்பத்தியுடன் இணைந்து சந்தை வாய்ப்புக்களை கண்டறிவதும் இறக்கி ஏற்றும் வியாபார முயற்சிபோல் அங்கிருந்து இறக்கி மீள் உருவாக்கி மறுபடியும் ஏற்றுமதி செய்யும் தொழில் முயற்சிகளாகவே அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன். இவையெல்லாம் எந்தவேகத்தில் ஆரம்பிக்கப்பட போகின்றன நடைமுறைப்படுத்தப்பட போகின்றன என்பது வேறு விஷயம், மேற்குலகம்போல பலநூறு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட போவதும் இல்லை, அந்த பிராந்திய மக்களை பணிக்கமர்த்த ஒப்பந்தம் போடாமலிருந்தால் பிற இனத்தவர்கள் வேலைக்கு வந்து அங்கேயே நிரந்தரமாக குடியேறிவிடுவார்கள் , அரசும் அவர்கள் ஆட்களென்றால் அதற்கான தங்குமிடங்கள் வேலைதிட்டங்களை அசுர வேகத்தில் செய்யும். பிறகு அது ரோட்டால சும்மா போனா ஆசாரியை கூப்பிட்டு சார் பிளீஸ் எனக்கு ஒரு ஆப்பு அடிச்சிட்டு போங்க என்று சொன்ன கதையாகிவிடும், முதலீடுகள், தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் வரியே அரசுக்கும் பிற இனங்களுக்கும் ஒருவகை வருமானம்தானே அது போதும் அவர்களுக்கு. இது எல்லாம் சிங்களத்துடன் முதலீடுகளை ஆரம்பிக்கவேண்டுமென்ற அவசரம் அல்ல இப்படியாவது எந்த உதவிகளும் இல்லாத எம்மக்கள் கூட்டத்தின் வறுமை ஒழியாதா என்ற ஏக்கம்தான்.
  43. Global Tamil Diaspora's economy is US$100 Billion and Sri Lanka's current GDP is US$84.36 Billion. I think there is a lesson to be learnt by Sri Lanka. LEN - www.lankaenews.com | Sri Lankan Tamil Diaspora Commands Over $100 Billion in Global Businesses and Assets, Report Finds..!
  44. சிறியர், குருவி தலையில பணியாரம் வைக்கலாம் .. பனங்காய் வைக்கலாமா!! 😄 இந்த அரசியல் சாணக்கிய கேள்விகள் எல்லாம் 8ஆம் வகுப்பு பொடியனுக்கு A/L பேப்பர் தந்து, எக்ஸாம் எழுதச் சொன்னதை போல இருக்கு!!! சரி பார்ப்போம் ஒரு 5 கேள்வியாவது சரிவரும் தானே.
  45. பிற்சேர்க்கை பாடலின் இசை, குரல் எல்லாம் அற்புதமாக இருந்தாலும், மூன்றாம் பந்தியில் பாதி+இரெண்டாம் பந்தியில் மீதி என கொத்துப்பரோட்டா போட்டு பாடலில் உயிரையே சிதைத்து விட்டார்கள் 👎👎👎. —————- எனக்கு பிடித்த வர்ஷன் சஞ்சய் சுப்ரமணியத்தினுடையது👇.
  46. பாரதியார் பாடல் என்றாலே கற்கண்டு, அதிலும் இது தேனில் தோய்ந்த கற்கண்டு. பின்வரும் பந்தியை அல்சைமர் நோயுடன், வயோதிபத்துடன் பொருத்தி பார்த்தால் - பாரதி எப்பேற்பட்ட பெருங்கவி என்பது உறைக்கும். அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே அறிகிலாத போது - யாம் அறிகிலாத போது - தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ இயம்பிக் காட்ட மாட்டாயா?
  47. எது கோழைத்தனம்? பொது விடயங்கள் தொடர்பில் பேசப்படும் போது தனிப்பட்ட தனிநபர்கள் பற்றி பேசுவதா? அல்லது உயிரைக் கொடுத்து போராடிக் கொண்டு இருந்தபோது ஒளிந்திருந்து எல்லாம் வாங்கித் தருவோம் என்று முழங்கியதா? அழித்து விட்டும் மற்றவர்கள் மீது பழி போட்டு விட்டு வாழாதிருத்தலா?? நேர்மை என்றால் என்ன என்பது உங்கள் போன்ற பச்சோந்தி பரதேசிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது நெஞ்சை நிமிர்த்தி போராட்டத்தோடு நின்றவர்களுக்கு மட்டுமே உரித்தானது.
  48. புலிகள் ஆட்சியில் இருந்த போது காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு.... இப்போது அவர்கள் இருந்தால் நல்லம் என்பது போல் உள்ளது.
  49. https://irruppu.com/2022/11/01/முல்லைத்தீவு-பூனைத்தொடு/ கடற்புலிகளின் முல்லைத்தீவு பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த கடற்கண்காணிப்புத் தளம் அப்போது வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு இராணுவ கூட்டுதளத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. இதனை அழித்தொழிக்க சிங்களப்படை பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அவை வெற்றிபெறவில்லை. இருந்தும் சிங்களக் கடற்படை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் கடல்வழி மூலம் தரையிறங்கி தாக்குவற்காக அமெரிக்காவில் கடற்பயிற்சி பெற்று நாடுதிரும்பிய சிங்களக் கடற்படையை வைத்து சிறப்புப் படகு படை (Special Boat Squadron ) ஒன்றை உருவாக்கி அதன் முதலாவது தாக்குதலாக சிங்களக் கடற்படை முல்லைத்தீவு பூனைத்தொடுவாய் கடற்புலிகளின் கடற்கண்காணிப்புத்தளத்தை தெரிவு செய்தது. அதற்கமைவாக 20.10.1996 அன்று காலை வெற்றிலைக்கேணி முகாமிலிருந்து ஆட்லறி மற்றும் மோட்டார் சூட்டாதரவுடனும் கடற்படை மற்றும் விமானப்படையின் பலமான சூட்டாதரவு வழங்க தனது கன்னித்தரையிறக்கத்தை மேற்கொண்டது. இச் சிறப்புக் கடற்படை மீது கண்காணிப்புத்தளப் பாதுகாப்பிற்காக நின்ற கடற்புலிகளின் தரைத்தாக்குதற் படையணியான சூட்டி படையணியினர் சிங்களப்படைகளின் செறிவான தாக்குதலுக்கும் மத்தியில் ஒரு வீரம்செறிந்த மின்னல்வேக முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். இவ்வெற்றிகர முறியடிப்புத்தாக்குதலில் இரண்டு படகு மூழ்கடிக்கப்பட்டதுடன் பல கடற்படையினர் கொல்லப்பட்டனர் , பல நவீனரக ஆயுதங்களும் கைப்பற்றப்படன. இத் தாக்குதலிலிலேயே கடற்புலிகளால் இலகுவாகக் கையாளக்கூடிய அதி நவீன ஒட்டோ டொங்கான் முதன்முதலாகக் கைப்பற்றப்பட்டது. இந்த வெற்றிகர முறிப்புத்தாக்குதலில் நாற்பத்தியிரண்டு போராளிகள் பங்கேற்றனர். இத் தக்குதலில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர். இத்தாக்குதலில் அப்போதைய சூட்டி படையணித் தளபதி களத்தை வழிநடாத்த அனைத்து நடவடிக்கைளையும் ஒருங்கினைத்து கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தியிருந்தார். பல கற்பனைகளோடும் தொடர்ந்து கடல்வழிமூலம் தரையிறங்கி விடுதலைப்புலிகளுக்கு தொல்லை கொடுக்கலாம் என நினைத்த சிங்கள தலைமைக்கும் கடற்புலிகளின் தரைத்தாக்குதற் படையணியான லெப். கேணல் சூட்டி படையணிப் போராளிகள் கொடுத்த தக்க பதிலடியால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இனிமேல் தரையிறங்கித் தாக்க முடியாது என்பதால் சிங்களத்தின் சிறப்புப் படையணியும் கலைக்கப்பட்டது. இத்தாக்குதலில் பங்குபற்றியவரின் உறுதுணையுடன், எழுத்துருவாக்கம், சு,குணா,

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.