Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    19670
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    3127
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88827
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33372
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/10/24 in all areas

  1. புல்லை வெட்டுங்கோ ---------------------------------- நாலு நாள் ஆகிவிட்டது ஒவ்வொரு குழாயின் கீழும் அண்டா குண்டா என்று வைத்து தேனும் பாலும் இனி வீடு தேடி வரும் என்றனர் வைத்த அண்டாவும் குண்டாவும் அப்படியே காத்து வாங்கிக் கொண்டு காத்துக் கிடக்கின்றன தேன் எப்ப வரும் பால் எப்ப வரும் என்று கொஞ்சம் முன்னரே சொன்னால் தனி தனியே பிடித்து வீடு முழுக்க வைத்துக் கொள்வேன் எட்டு வருடம் முந்தியும் வரும் வரும் என்றீர்கள் வரவே இல்லை கடைசி மட்டும் பின்னர் நீங்கள் போய் விட்டீர்கள் இப்ப வந்து விட்டீர்கள் இந்த தடவை என்றாலும் ஓட விடுங்கள் பாலையும் தேனையும் 'ரெண்டு கிழமையா புல்லு வெட்டல்ல புல்லை வெட்டுங்கோ...........' உள்ளிருந்து வந்தது எப்பவும் அன்பாக அதட்டும் ஒரே குரல் கற்பனை கலைந்தது.
  2. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஈழபிரியன். எனது திருமணம் நடந்து முடிந்து சில மாதங்களில் நிகழ்தது. அதனால் எனக்கு பையன் பிறந்தால் அப்பெயரை சூட்டுவது என்ற முடிவில் இருந்தேன். அப்படியே பெயரும் வைத்தேன்.💐 வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சிறீ.💐🙏 தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஏராளன்💐🙏 வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அம்மணி.💐🙏 தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வாதவூரான். 💐🙏
  3. நீங்கள் குறிப்பிடுவது புலிகளை என்றிருந்தால்.... பேச்சு பேச்சு என்று அழைத்து சென்று சர்வதேச நாடுகள் முன்னிலையில் புலிகளுடன் மேசைக்கு வந்து தனக்கிருக்கும் சர்வதேச ஆதரவை வைத்து புலிகளின் ஆயுத களைவையே முதலில் முன்னிறுத்தியும், மறுபக்கம் மறைவில் புலிகளின் சர்வதேச வலைபின்னலையும், ஆயுத கடத்தலையும் நிதி சேகரிப்பையும் முடக்கும் கைங்கரியங்களிலும், புலிகளை இரண்டாய் பிரிக்கும் ஒரு பொறியை வைத்தது இலங்கை அரசாங்கம், அதாவது உயிருக்கும்போதே உள்ளுக்குள் கைவிட்டு குடல்தொகுதியையே வெளியே பிடுங்கி எடுக்கும் நடவடிக்கை அது. அதிலிருந்து ஒவ்வொருமுறையும் விலகி சென்றார்கள் புலிகள் அதுவே உங்கள் கண்ணில் சர்வதேசத்தை புறக்கணித்ததாய் தோன்றியிருக்கலாம். ஆனால் புலிகளை நேசித்த மக்களுக்கு அன்றும் இன்றும் அது தவறானதாக இல்லை. அது தவறென்றால் முள்ளிவாய்க்காலில் இறுதிநாள்வரை நின்ற மக்களும் போராளிகளு,உறவுகளை இழந்த எம் பல லட்சம் மக்களும் ம் இன்றுவரை எம் தலைமை எமக்கு செய்தது தவறென்று சொன்னதில்லை, சொல்லும் ஒருசிலர் யாரென்பது யாவரும் அறிந்தவர்களே. முள்ளிவாய்க்கால் முடிவென்பது தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும்,சிங்களவர்களுக்கு ஒத்தூதிய டக்ளஸ்,கருணா,ஆனந்தசங்கரி உட்பட அனைவருமே எதிர்பார்த்திராதது. கடைசிவரை சிங்களவன் எம்மை வெல்லமுடியாது என்று நாம் நம்பினோம், கடைசிவரை சிங்களவனுடன் ஒட்டியிருந்து வண்டி ஓட்டிவிடலாம் என்று அவர்கள் நம்பினார்கள், இறுதியில் இருபகுதி நம்பிக்கையும் தோற்றுபோனது, அவர்களின் நம்பிக்கையில் ஈனம் இருந்தது, எம் நம்பிக்கையில் மானம் இருந்தது அவ்வளவுதான் வித்தியாசம். நாம் மொக்குதனமாய் தோத்தவர்களல்ல, இனவிடுதலைக்காய் முயன்று பார்த்து தோத்தவர்கள், முயற்சி செய்து தோற்பது பாவமும் அல்ல கேவலமும் அல்ல.
  4. யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு இவ்வாறான தளத்தில் இணைவது இதுவே முதல்முறை. என்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை, பலகோடி தமிழர்களில் ஒருவன் அவ்வள்ளவே!!!
  5. இவர் வென்றால் சுகாதாரத்துறை ஊழல்களுக்கு முடிவு கட்டலாம், அர்ச்சுனாவை விட இவர் பொருத்தமாயிருப்பார் என நம்புகிறேன். யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பதில் பணிப்பாளராகவும் கடமை ஆற்றியுள்ளார்.
  6. இங்கு பலரும், தாய்லாந்து மசாஜுக்கு இரகசியமாக போய் வந்தது தெரிய வந்துள்ளதால்... அவர்களுக்கு ஒரு மாற்றமாக இருக்கட்டுமே என்று, பிலிப்பைன்ஸ் மசாஜுக்கு "ரிக்கற்" போட்டுள்ளோம். அவர்களுக்கும், அனுபவம் புதுசா... இருக்கட்டுமன். 😂 🤣
  7. நல்ல கருத்துக்கள்.. உறவாடிக் கெடுக்கவேண்டும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.. சீமானும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்றால் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்து பின் தன் திட்டங்களை நிறைவேற்றலாம்.. சீமான் தமிழ்தேசியாதில் விடும் தவறுகளை தான் விடக்கூடாது எண்டு விஜய் வந்திருப்பதுபோல் தெரிகிறது.. மகிழ்ச்சி.. உறவாடித்தான் வெல்ல வைக்க வேண்டும் தமிழ்தேசியத்தை.. தமிழ்தேசியத்தில் நான் விரும்பும் ஒரு தமிழ்த்தேசியவாதி அண்ணன் காட்டூனிஸ்ட் பாலா.. தமிழ்தேசியவாதிகள் பிழை விட்டாலும் அதை விமர்சித்து திருத்தும்படி சொல்பவர்.. நீங்கள் எழுதிய கருத்தின் சாராம்சத்துடன் ஒத்துப்போகும் அவரின் இன்றைய பேட்டி..
  8. எந்த தலைப்பில் இணைப்பதென்று தெரியாது இந்த பகுதியில் இணைக்கிறேன் அதிவேகமுறையில் பயன் தரகூடிய பதிய முறைகள் என்று கரட், கற்றாழை, வாழைப்பழம், மஞ்சள்,உருளைகிழங்கு ஆகியவற்றை பயன்படுத்தி ... எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாசி போன்றவைபற்றி காணொலி இட்டிருக்கிறார்கள், இவை முழு சாத்தியமா என்பதற்கான ஆதாரங்களில்லை.இருந்தாலும் தகவலுக்காக பகிர்கிறேன் பெரும்பாலும் தேங்காய்நார் உரமே பதியத்திற்கு மிக சிறந்தது என்கிறார்கள். மா எலுமிச்சை அவகாடோ தக்காளி & கத்தரி ஒட்டுமுறை பப்பாசி கொய்யா
  9. 76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம் ஒரு சிறுகுறிப்பு - என் பார்வை (மட்டும்) அண்மையில் பரப்பாக பேசப்படும் இரெண்டு விடயங்களாவன: சுன்னாக தாக்குதலும், என்பிபி வேட்பாளரின் தலையீடும் பொலிஸ் அதிகாரிகளின் இடை நிறுத்தமும். அனுராவின் யாழ் உரை அதில் அவர் கூறிய அரசியல் கைதிகள் விடுதலை, தனியார் காணிகள் விடுவிப்பு சம்பந்தமான அறிவிப்பு. இவை மிகவும் வரவேற்க படவேண்டியவை என்பது சரியே. முதலாம் நிகழ்வு. உங்களுக்கு சுய ஆட்சி எல்லாம் கிடையாது ஆனால் சிங்களவர் போலவே உங்களுக்கும் ஒரு பிரசைக்குரிய பாதுகாப்பு கிடைக்கும் என்ற என்பிபி யின் கூற்றை நிருபிப்பது போல் உள்ளது. இரெண்டாவது - முன்னைய ஆட்சியாளர் போல அன்றி, இவர்கள் தரகர்கள் இன்றி நேரடியாக தமிழர்களோடு டீல் பண்ணுவது மட்டும் இல்லாமல், முன்னர் தரகர்களாக இருந்த தமிழ் தேசிய, அபிவிருத்தி அரசியல்வாதிகள் சாதிக்காத பலதை செய்து தரபோகிறனர் என்ற செய்தியையும் சொல்லி நிற்கிறது. யாழ்களத்தில் இந்த இரு நிகழ்வுகளும் பலரை கொஞ்சம் அல்ல நிறையவே நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது என்பது தெரிகிறது. எனக்கும் நம்பிக்கை துளிர்விடத்தான் செய்கிறது. களத்துக்கு வெளியிலும் இப்படியே இருக்கும் என ஊகிப்பது கடினம் அல்ல. ஆனால் இதற்கு இன்னொரு கோணமும் இருப்பதை நாம் மறக்க கூடாது. அது பற்றிய என் பார்வை கீழே. தமிழ் அரசியல்வாதிகள் கேட்டபோதெல்லாம் கொடுக்காததை - இப்போ எனக்கு வாக்கு போடுங்கள் தருவேன் என்கிறார் அனுரா. அதாவது, தமிழ் அரசியல்வாதிகளை காயடித்து, அவர்களால் எதுவும் முடியாது என்ற நிலையை வலிந்து உருவாக்கி விட்டு, அவர்களிடையே சுயநலமிகளை இறக்கி ஒற்றுமையை தூள் தூளாக்கி விட்டு, இப்போ தமிழ் மக்களிடம் தெற்கு நேரடியாக டீல் பேசுகிறது. சுயநிர்ணயம், 13+, இப்போ இருக்கும் மாகாணசபை கூட இல்லை, ஆனால் அரசியல் கைதிகளை, காணிகளை, விடுவிப்போம். உங்களை ஒரு சம பிரசையாக நடத்துவோம். எமக்கு வாக்களியுங்கள். இதுதான் தெற்கு, வடக்கு-கிழக்கு தமிழ் வாக்காளரோடு இப்போ போடுகிற டீல். இதை நான் ஒரு நெடிய, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட போரின், மூன்றாவதும், கடைசியும், வெற்றியை உறுதி செய்ய விழைவதுமான பகுதியாக பார்க்கிறேன். 50 களில் பேரினவாதம் எம்மீதான போரை தொடங்கிய போது தொட்டு இன்று வரை அதன் இலக்கு - எமக்கான குறைந்த பட்ச சுயாட்ச்சியை கூட தராமல், எமது நில, பொலிஸ் அதிகாரங்களை, பாரம்பரிய வாழிடம் மீதான எம் கோரிக்கையை, பின்னாளில் திம்பு கோட்பாடு வலியுறுத்திய அத்தனையையும் நிராகரித்து, அந்த நிராகரிப்பை நாமே ஏற்கும் அளவுக்கு எம்மை தோற்கடித்தல். நாம் இந்த நிலையை ஏற்கும் போதுதான் பேரினவாத்ததின் எம் மீதானா போர் வெற்றி முழுமை அடையும். இந்த வகையில்தான் எம்மீது போர் 3 பகுதிகளாக நடத்தப்பட்டது. பகுதி 1 -1948 முதல் 2009 வரை. பேரினவாதம் எம்மீது வன் போரை தொடுத்தது. நாமும் பாரிய தவறுகளை விட்டோம். முடிவு -பேரினவாதம் வன்போரில் வென்றது. பகுதி 2 -2009 முதல் 2024 வரை. இது மென்போர் காலம். எமது ஒற்றுமையை புலத்திலும், புலம்பெயர் நாட்டிலும் சிதைத்து, போலிகளை உள்ளிருத்தி, ஓர்மத்தை முனை மழுங்க வைத்து, ஆளை ஆள் சந்தேகபட வைத்து, தலைவர் இருக்கிறார், இன்னும் பல மாயக்கதைகளை, மாய மனிதர்களை எம்மை நம்பவைத்து, அல்லது நம்பாமல் அடிபட வைத்து, கூடவே ஊரில் உள்ள எமது தேசிய தலைமைகளுக்கு எதுவும் கொடாமல் (வடக்கு முதலமைச்சர் நிதியம்) அவர்களை காயடித்து, கேலிப்பொருளாக்கி, சுயநலமிகளை அவர்களாகவே அடையாளப்படுத்த விட்டு (கஜேஸ், சுமந்திரன், சிறி, சுரேஸ் இத்தியதிகள்), வினைத்திறன் அற்றோரை மேலும் வினைதிறனற்ரோர் ஆக்கி (விக்கி), அபிவிருத்தி அரசியல் காரர்களை கூட ஒரு அளவுக்குள் தட்டி வைத்து (டக்கிளஸ், அங்கயன், பிள்ளையான்), இவர்கள் மீதான மக்களின் நம்பிக்கையை முற்று முழுதாக துடைத்தெறித்தார்கள். இதையேதான் நாடுகடந்த அரசு இதர புலம் பெயர் தமிழ் அமைப்புகளிலும் செய்தார்கள். எனக்கு இதை எழுதும் போதே ஐலண்ட்டின் @island குரல் கேட்கிறது. இந்த பகுதி 1, 2 இல் நடந்தவைக்கு புலிகளும், நமது அரசியல்வாதிகளும், புலம்பெயர் பிரமுகர்களும் அல்லவா அல்லவா பொறுப்பு என்பார் அவர். அவர்களும் பொறுப்பு, மறுக்கமுடியாது. ஆனால் நான் மேலே விபரித்த வகையில் இந்த இரு காலப்பகுதிகளிலும் எம்மீது ஒரு நேரடி, பின் மறைமுகப்போரை நன்கு திட்டமிட்டு, இலங்கையின் ஆழ்-அரசு தொடுத்தது என்பது என் நம்பிக்கை. அதற்கு நாமும் அறிந்தோ அறியாமலோ துணை போனோம். இப்போ…. பகுதி 3 - போர் வெற்றியை நிரந்தரமாக்கும் காலம் -2024 முதல். மேலே நான் சொன்னதை போல - நாமாக “திம்பு”வை கைவிடும் காலம் வரும் வரை தெற்கின் எந்த வெற்றியும் நிரந்தரமானதல்ல (நாம் என்றால் வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளர்கள்). இப்போ இதை நோக்கித்தான் அதாவது தாம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக்கும் நகர்வைத்தான் தெற்கு எடுக்கிறது. ஒற்றை இலங்கையர் அடையாளம்+ மாகாணசபைகள் வெறும் விரய செலவுகள்,+தமிழ் கட்சிகள் எதுவும் செய்யாது+ஊழல் அற்ற அரசு+ எல்லோர்க்கும் ஒரே உரிமை +மேனாடுகள் போன்ற ஒரு இனவாதமற்ற நாடு = நீங்களாகவே “திம்பு” வை மறுதலித்தல், அதாவது தமிழ் தேசிய அரசியலை கைவிடல். இதை நோக்கி எம்மை உந்துவதுதான், இந்த கடைசி பகுதி போரின் நோக்கம். இதுதான் தெற்கு பெற்ற போரின் வெற்றியை நிரந்தரமக்கும் மூலோபாயம். இதன் முதல் படிதான் 2024 இன் இரு தேர்தல்களும். இதுதான் என் பார்வை. ———————————————— அடுத்து…… இங்கே சில கேள்விகளை ஊகித்து பதிலை தருகிறேன். கேள்வி1 அறகல, என்பிபி எழுச்சி, கோவிட், பொருளாதார நெருக்கடி எல்லாமும் random நிகழ்வுகளாக இருக்கும்போது , நீங்கள் சொல்லும் மூன்றாம் பகுதி ஏற்படவே இவைதான் காரணம் எனும் போது - இதை எப்படி ஒரு நீண்ட போரின், போர் இலக்கின் ஒரே பகுதி என்பீர்கள்? பதில் இவை எல்லாமுமே உண்மையில் random நிகழ்வுகளா என்பது கேள்வி குறி. அப்படியே random நிகழ்வுகளாக இருப்பினும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, ஒரு ஆழரசு (deep state) இலங்கையில் உள்ளது என்பதையும் அதன் முதல் இலக்கு பெளத்த-சிங்கள மேலாண்மையை பேணல் என்பதையும் இங்கே அநேகர் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். இந்த ஆள் அரசைத்தான் நாம் இலகு மொழியில் பிக்குகள் என்போம். நான் சொன்னபடி 1950 இல் இருந்து இவர்களின் நிகழ்ச்சி நிரலில்த்தான் இந்த யுத்தம் நடக்கிறது எனில், இப்போ நடக்கும் random நிகழ்வுகளை சுற்றி, இப்போரின் மூன்றாம் பகுதியை இவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்பது என் பதில்.
  10. வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் தமிழரல்லாதவர்களும் இவரது கட்சியில் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்களின் பெயர்கள் R.H. Upali Samarasinghe District Organizer S. Thilakanadan Veterinary A. Mailvaganam Jegadishwaran Teacher M.A. Pathima Hajistha Social Activist V.A. Don Priyankara Premarathne Student Scientist Mahaweli Authority Yogaraja Sivaruban Farmer J. Ragar Anton Kamalasragar Businessman A. Raizdin Principal Teacher Ramaiya Radha Krishnan Agricultural Insurance (Field Division Officer) திருகோணமலை மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் தமிழர் இல்லை Arun Hemachandra District Organizer M.A. Mohammed Rafique Teacher P. Indika Priyadarshana Paranawithana Farmer A.G. Roshan Priyanjana Teacher Karunanayakage Shila Social Activist M. Niyaz Mohammed Sabraan Assistant Manager Yevugan Irajendran Businessman அம்பாறை மாவட்ட தேர்தல் தொகுதி. L.P.G. Wasantha Piyathissa Full-Time Politician A.M.M. Muthumanike Rathwatte Retired Army Mohammed Sultan Saththar Teacher Abubakar Adambavah Teacher M. Meemana Sugath Ratnayake Teacher M.M. Priyantha Kumara Wijerathna Lawyer A. Muhaideen Rameesh Farmer S.M. Buhari Mohammed Rizad Teacher R. Morris Anton Retired Principal K.M. Tilak Kithsiri Regional Environment Officer
  11. உண்மைதான். நீங்களா அல்லது @தமிழ் சிறி அண்ணாவா தெரியவில்லை என் வாக்கு யாருக்கு என கேட்டார். அப்போ அருச்சுனா குழுவில் அவர் தவிர வேறு மூவருக்கு என சொன்னே. இன்று அருச்சுனா, திசைகாட்டி என்மனதில் 50:50. ஆனால் இதன் பின்னால் உள்ள பேரினவாதம் பற்றி ஒரு சிறு குறிப்பு யாழில் வரையலாம் என எண்ணியுள்ளேன். ஐலண்ட் - நீங்கள் எதிர்பார்க்கும் காலம் இலங்கைக்கு வருமோ என்ற சிறு நம்பிக்கை வரும். தேர்தலுக்கு முன் ஒரு தொகுதி கைதிகளாவது விடுவிக்கப்படின்.
  12. என்னைப் பொறுத்தவரை இம்முறை தமிழ் மக்களில் இருந்து பாராளுமன்றம் செல்பவர்கள் மக்கள் பிரச்சனைகளை உணர்நதவர்களாகவும், அதனை தீர்க்கும் ஆற்றல் மற்றும் விருப்பு மிகுந்தவர்களகவும், ஜதார்தத ரீதியில் சிந்தித்து நடைமுறை சாத்தியமான வழியில் ஒரு அரசியல் தீர்வுக்கு ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து புரிந்துணர்வை ஏற்படுத்தி அரசியலமைப்பு மாற்றங்களில் தமது பங்களிப்புகளையும் வழங்கி அதிகாரப்பரவலக்கலை ஏற்படுத்தி, அதனை நடைமுறைப்படுத்த அதில் முன்னேற்றம் காண தமது ஆற்றலையும் புத்திசாலித்தனத்தையும் பிரயோகப்படுத்துபவர்களாகவும், சில்லறை அரசியலுக்காக தம்முள் முரண்பாடுகளை மேற்கொள்ளாதவர்களாகவும் கட்சி வேறுபாடுகளை கடந்து புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுபவர்களாகவும் இருத்தல் வேண்டும். மக்களின் கலவி பொருளாதார மேம்பாட்டை ஆளும் அரசுகளுடன் கெளவரமான இணக்கப்பாட்டை மேற்கொண்டு வட கிழக்குல் தமிழரின் வாழ்ககை தரத்தை உயர்த்த முன்னுரிமை கொடுப்பவராக இருத்தல் வேண்டும். மக்கள் தமது பொருளாதார வாய்பபுகளை தேடி வெளிநாடு ஒடாது உள்நாட்டில் உரிய வருமானமீட்டி மகிழ்வுடன் வாழும் நிலையை சிறிது சிறிதாகவேனும் ஏற்படுத்துவது எமது மக்களின் மக்கள் செறிவை தாயகத்தில் பாதுகாக்கும். உனக்கு ஏன் இந்த பேராசை என்று உறவுகள் நினைக்கலாம். இருந்தாலும பேராசையை பதிவு செய்ததில் தவறில்லையே😂 தீவிர தமிழ் தேசிய வெறி நோய் முற்றி அதனை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் மரமண்டை அரசியல்வியாதிகள் கட்சி வேறுபாடு இன்றி முற்றாக தோற்கடிக்கப்படல் வேண்டும். ஏனெனில் எனது முதல் பந்தியில் கூறிய Eligibility யில் ஒன்று கூட இல்லாத வெறுமையாளர்கள் அவர்கள்.
  13. முக்கியமாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் . .......மக்களின் காணிகளும் வீதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் . ...... காணாமல் போன பிள்ளைகளின் பெற்றோர் விடயங்களிலும் கரிசனை கொள்ள வேண்டும் . ......! இப்பதானே வந்திருக்கிறார்கள் . ..... எல்லாவற்றையும் உடனே எதிர்பார்க்க முடியாதுதானே ........நல்லதே நடக்கட்டும், நல்லதே செய்யட்டும் . .......!
  14. அண்ணா, பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, இறக்குமதி வரிகளைக் கூட்டி அமெரிக்கப் பொருட்களின் சந்தையை அகலமாக்கி வேலை வாய்ப்புகளை வழங்குவது, பதிவுகள் இன்றி நாட்டில் தங்கியிருக்கும் பதினொரு மில்லியன் மக்களை வெளியேற்றி வீடுகளின் விலைகளை குறைப்பது, இன்னும் அதிக துளைகள் போட்டு மலிவு விலையில் எரிபொருட்கள் வழங்குவது, ........... இப்படியானவற்றை நம்பித்தான் இங்கு வாக்களிக்கப்பட்டது. நேட்டோ, ரஷ்யா, இஸ்ரேல் இவை போன்ற சமாச்சாரங்களுக்காக அல்ல. இங்கு உள்ளூரில் இவை போதைக்கு தேவையான ஊறுகாய்கள் போல மட்டுமே. எதுவும் முன்னரும் நடக்கவில்லை. எதுவும் இனியும் இவர்களால் நடக்கப் போவதில்லை. அதுவாக உலக ஒழுங்கில் நடந்தால், அவரவர் என்னால் தான் நடந்தது என்று சொல்லி பெருமைகளை அடுக்கிக் கொள்ளலாம். பில் கிளின்டனுக்கு கிடைக்காத பெருமைகளா............ எங்கள் வீட்டுப் புல்லை நாங்களே வெட்டினால் தான் உண்டு........ இங்கு அநேகமாக எல்லோரும் மாதம் 50 டாலர்கள் கொடுத்து புல்லு வெட்டிக் கொள்கின்றனர். வெளியேற்றப் போகின்றோம் என்று சொல்லப்படும் அந்த பதினொரு மில்லியன் மக்கள் தான் இவர்களின் புற்களை மாதம் 50 டாலருக்கு வெட்டிக் கொடுக்கின்றனர். திறமை அடிப்படையில் இங்கு முறையாகக் குடியேறியவர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்பவர்கள் புல்லு வெட்டும் மெஷினுடன் வெளியே வரட்டும்........எனக்கும் ஒரு கூட்டணி வேண்டும் தானே..........😜.
  15. இப்ப தாய்லாந்தை மறந்துட்டீங்களோ? மசாச் மசாச் சான்விச் மசாச்.
  16. பார்ப்பனர்களின் திட்டமிட்ட செயல் தான் ஆண்கள் கோவிலுக்கு மேலாடையில்லாமல் செல்லும் நடைமுறை. யார் பூநூல் போட்டவர் யார் பூநூல் போடாதவன் என்பதை கண்டு பிடிப்பதற்காக...... பூநூல் என்பது சாதி வேற்றுமையை விட மிக மோசமானது . அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. பார்ப்பனியன் தேரில் அமர்ந்திருக்க வெள்ளாளர் தேர் இழுக்க வேண்டும் என்றால் அந்த பார்பனியன் யார்? இதைப்பற்றி யாருமே கணக்கிலெடுக்க மாட்டார்கள்.😡
  17. வாழவேனும் என்று முடிவெடுத்தால் எந்த நிலையிலும் வாழலாம் ........! 👍
  18. நான் பிறந்த காலத்தில் அநேக ஊர்களில் வசித்த ஆண்களுக்கு சேர்ட் இல்லை.நாலு முழமும் சால்வையும் தான் அவர்கள் உடை. சாரம் அதுவும் நாகரீக உடைதான். ஆரம்ப காலங்களில் தமிழர்கள் சாரம் கூட உடுக்கவில்லை. இன்று ரவுசர் போட்டுக்கொண்டுதான் தோட்டமும் செய்கின்றார்கள். 😂
  19. இன்று ஆட்சியில் இருப்பவரே நேரடியாக வந்து நாங்கள் உங்கள் பிரச்சனைகளை தீர்க்கின்றோம் என சொல்ல்லும் போது தமிழ் தலைவர்களுக்கு தற்போது வேலையில்லாமல் போகின்றது. அவர்களும் எதை சொல்லி பிரச்சார மேடை அமைத்து வாக்கு கேட்பது? அதை விட பல இடங்களில் நாமல் ராஜபக்ச தமிழ் தலைவர்கள் கள்ளர்கள் என தொனிபட பேட்டியளித்துள்ளார்.கரடியே காறித்துப்பிய தருணம் அது. இருந்தாலும் தமிழர்களின் அடிப்படை பிரச்சனையை அனுர தீர்த்து வைப்பாரா என்பதுதான் கேள்விக்குறி? அவர் சொல்வது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும். நாடு அபிவிருத்தியடைய வேண்டும். வீதிகளை திறப்பேன். வீதிகளை திருத்துவேன்.கைதிகள் விடுதலை. என வாக்குறுதிகளை அடுக்கிக்கொண்டே போகின்றார்.2009க்கு பின்னர் வந்த பிரச்சனைகளை தமிழர்களின் பிரச்சனைகளாக்கி விட்டு அதை தீர்த்த விண்ணராகவும் அனுர சித்தரிக்கப்படக்கூடும். இனி வரும் மாதங்கள் எதிர்பார்ப்புகள் நிறைந்த மாதங்களாக இருக்கும்.
  20. தமிழன் அநியாயத்துக்கு நல்லவன்....சில சமயம் அணுராவுக்கு செம்பு தூக்க வேணும் என்று அடிபட்டு போய் சிங்கள வேட்பாளர்களை வடபகுதியில் நிறுத்துங்கோ ..தேசிய ஒருமைபாட்டுக்கு நல்லது என சொன்னாலும் சொல்லுவினம் அடுத்த தேர்தலில் நடந்தாலும் நடக்கலாம் ... நம்ம டக்கிளஸ் ஐயா பிக்குமார் இருவரை தன‌துகட்சி வேட்பாளராக கொழும்பில் நிறுத்தி உள்ளார் என நினைக்கிறேன் ....அதுபோல நல்லிணக்கம் என்று வரும்பொழுது ... சிங்கள வேட்பாளர் தமிழர் பகுதியில் அதிக வாக்கு பெற்று வெற்றியடைந்தால் அது நல்லிணக்கத்தின் உச்சம்,,கண்டியளோ அப்படி சொல்லப்படாது....தமிழ் தேசிய்த்தை கூறு போட்டு வித்து ....தமிழர் /சிங்கள பிரச்சனைக்கு டீர்வு கிடைக்க வழி விட்டவையள் அல்லோ
  21. அதுவும் அனுரகுமார திசநாயக்க தலைலையில் சிறிலங்கனாக எல்லோரும் மாறிவருகின்ற நேரத்தில்
  22. தமிழ் அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சார கூட்டம், இம்முறை பெரிய அளவில் நடைபெறவில்லைப் போல் தெரிகின்றது. வழமையாக புலம் பெயர் தேசங்களில் இருந்து பெருந்தொகைப் பணம் தேர்தல் நேரம் அங்கு ஆறாக பாயும். இம்முறை... அதிலும் துண்டு விழுந்து விட்டது என நினைக்கின்றேன். அல்லது... தோற்கிறதுக்கு, எதுக்கு வீணாக செலவழிப்பான் என நினைத்து விட்டார்களோ. 😂
  23. போற போக்கை பார்த்தா என் பி பி யாழில் 6/6 எடுக்கும் போல கிடக்கு🤣. தமிழ் அரசியல்வாதிகளுக்கு நிக்க வைத்து வேட்டியை உருவுகிறார் அனுரா.
  24. தேர்தல் முடிந்ததும் அவர்கள் மீண்டும் கடமைகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று நாட்டாண்மை தீர்ப்பளிக்கிறது.
  25. எட்டு வருடத்துக்குப் பிறகும் கூட இனியும் வரும் வரும் என்று எதிர்பார்ப்போடு இருப்பதுதான் பொறுமையின் உச்சம் ......! கவிதைக்கு நன்றி ரசோ . .........!
  26. நமக்காக நாம் என்பதை Dr சிறீ பவானந்தராஜா நிரூபித்துள்ளார். ——— நான் போலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டதன் பெயரில் சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிகமாக வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் https://www.facebook.com/share/1DgY8VzRdL/?mibextid=WC7FNe
  27. என்ன.... இன்றைக்கு சதிராடுறதெண்டே நிக்கிறியள் எல்லோரும். அவரவர் தங்கள் கவலையை மறைக்க, மறக்க பல விடயங்களில் கவனத்தை செலுத்துகிறார்கள், நீங்களும் விடுவதாயில்லை.
  28. வராமல் விட்டால் தப்பித்துவிட்டேன் என்று சொல்லாதீர்கள். என் கேள்விக்கென்ன பதில் என்று தேடிதேடியே கேள்விக்கணை தொடுப்பார். யாழையே கொஞ்ச நாளைக்கு திறவாதீர்கள். இன்னொரு விஷயம் ஆளுக்கு கிடைக்குமட்டும்.
  29. அப்படியானால் அப்படி முயன்று பார்த்து றிஸ்க் எடுத்தோம் அதனால் மக்கள் பேரழிவைச் சந்தித்தோம் என்பதை நேர்மையாக வெளிப்படையாக கூற வேண்டும். அதை வெளிப்படையாக கூறிய உங்களுக்கு நன்றி. அடுத்தவர் மீது முழு பழியையும் போட்டு தப்பிக்க நினைக்க கூடாது என்பதே எனது கருத்தின் சாராம்சம். உலக அரசியல் பிராந்திய அரசியல் என்பவை எமது தனி நாட்டுக்கு கோரிக்கைக்கு முழுமையாக எதிராக இருக்கிறது என்பது ஏதோ ஒன்றும் இரகசியம் அல்ல. அது வெளிப்படையானது என்பது, உலக அரசியலை நீண்ட காலமாக அவதானிக்கும் சாமான்யர்கள் கூட அறிந்த விடயம் தான்.
  30. சமய (மற்றும் வரலாற்று) அடிப்படையில் ஒரு துண்டு (வேட்டி, சேலை) உடை அது குறிப்பது எளிமை, சரணாகதி. (தைக்கப்பட்ட உடை பகட்டு, எளிமை இல்லை, கடவுளிடம் சரணாகதி கேட்டு வரவில்லை என்பவற்றை குறித்து தவிர்க்கப்பட்டது). சாதிகள் அடையாளம் காண்பதற்கும் இது பாவிக்கப்பட்டதாக கதை இருக்கிறது, அப்படி நடந்து இருந்தாலும் புதினம் ஒன்றும் அதில் இல்லை.
  31. இல்லை கந்தையர்! ஒரு மாற்றம் வராதா என்கிற ஏக்கம், எல்லோரும் மக்களை ஏமாளிகளாக பயன்படுத்துகிறார்கள் என்கிற வருத்தம், அதிலும் பலமிழந்த மக்களை ஏமாற்றும் சொந்த மனிதர்கள் மேல் உள்ள கோபம், இதுவரை ஆட்சி செய்யாத கட்சி, நம்மைப்போல் வருத்தங்களையும், தோல்விகளையும், இழப்புகளையும் சந்தித்த கட்சி. எனது தாயார் சொல்வார், இவர்கள் அனுபவித்த வேதனைகள் பற்றி, அங்கங்கு சடலங்கள் மிதந்ததும், வீட்டுக்கு அனுப்பி வைத்ததும். ஆகவே அவர்களுக்கு எங்கள் தாகம் வருத்தம் புரியும். உண்மையாகவே விடுதலைக்காக போராடியவர்களென்றால் எங்கள் உணர்வுகளை மதிப்பர், பாதிக்கப்பட்ட எங்களுக்கு தனது கரத்தை நீட்டுவார். இல்லை சர்வாதிகாரத்துக்கு போராடியவர்களென்றால் எந்த மாற்றமும் நிகழாது. ஆனால் அநுர மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது, எடுக்கவும் விட மாட்டார்கள், பொறுத்திருந்து பாப்போம்! எல்லோராலும் ஏமாற்றப்பட்டவர்கள் நாங்கள், இனியும் ஏமார இடமில்லை.
  32. இவ்வளவு நாளும் தமிழ் கட்சிகளிடம் ஏமாந்து விட்டார்களாம் தட்டி கேட்க ஆள் இல்லாமல் இருந்ததாம் இப்போது தட்டி கேட்க அனுரகுமார திசநாயக்க வந்துவிட்டாராம் 😒
  33. பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ அவர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்க வில்லை. உதாரணத்திற்கு உயர் கல்வி, பெருவீதிகள் அமைச்சு என்று ஒன்று இருந்தது. உயர் கல்விக்கும் பெரு வீதிக்கும் விஞ்ஞான ரீதியில் என்ன தொடர்பு எனக் கேட்டதற்கு உயர் கல்வி மாணவர்கள் எப்போதும் பெருவீதிகளில் இருந்து ஆர்பாட்டம் செய்கிறார்கள், எவேபொருத்தமானது எனக் கூறப்பட்டது. இவை நகைப்புக்கிடமான விடயங்கள். இப்படி யல்லாது எதிர்காலத்தில் கல்வியுடன் தொடர்புபட்ட சகல துறைகளையும் ஒன்றிணைத்த அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதாவது உயர் கல்வி, பாடசாலைக் கல்வி, பாலர் கல்வி, தொழில் நுற்பக் கல்வி,தொழிற் கல்வி,தொழில் நுட்பக்கல்லூரிகள், பல்லைக்கழகங்கள், பாசலைச்சவைகள் போன்ற கல்வியுடன் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும். மேலும் தற்போது பரீட்சையை மையமாகக் கொண் கல்வியே உள்ளது. 10 முதல் 12 வயது வரையானவர்கள் கூட புலமைப்பரிசில் என்று பரிட்சையை மையமாகக் கொண்டு போட்டிக்காகப் பயில் கின்றனர். இந்த வயதுப்பிரிவு போட்டிப் பரீட்சைக்குறிய வயதல்ல. எனவே நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகள் உருவாகும் கல்வித்திட்டமே தேவை என்றார். https://www.virakesari.lk/article/198152
  34. தமிழ் நாட்டில் யார் ஆட்சியில் இருந்திருந்தாலும் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்றே இருந்திருக்கும் என்பதை கூற பெரிய அரசியல் விற்பன்னராக இருந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. சாதாரண உலக அரசியலை அவதானிக்கும் ஒரு சாதாரண அவதானிப்பளரக இருந்தாலே போதும். சர்வதேச நாடுகள் அனைத்தையும் புறக்கணித்து எந்த பொறுப்புணர்சியும் இல்லாமல் தொடர்சசியாக தவறன அரசியல் தீர்மானங்களை எடுத்து இறுதி நிமிடம் வரை சென்றுவிட்டு அடுத்தவரை குற்றம் சாட்டுவதற்கு எமக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. தோல்வியால் ஏற்பட்ட கோபத்திலும் விரக்தியிலும் அவ்வாறு உடனடிக் கோபம் வந்ததில் தவறில்லை. அது இயல்பானது ஆனால் தொடர்சியாக எமது அரசியல் தவறுகளை மறைக்கும் நோக்கிலும், புலம் பெயர் நாடுகளில் இறுதி போருக்கு பணம் சேர்த்து அதை கொள்ளையிட்டதை மறைக்கும் நோக்கிலும், தமது பொறுப்பை முற்றாக தட்டிக்கழித்து தொடர்ச்யாக அடுத்தவரை குற்றம் சாட்டுவது தவறானது மட்டுமல்ல நேர்மையற்ற அயோக்கியத்தனமான செயலும் செயலும் ஆகும். இதனால் சம்பந்த பட்ட ஒரு சிலர் பலனடையலாம். ஆனால், மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதையே தாயகத்தின் இன்றைய அரசியல் நிலை உணர்ததி நிற்கின்றது. பிச்சை வேண்டாம் தாயை பிடி என்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள். எமக்கு தேவை வரும் போதெல்லாம் போராட்ட ஆரம்பத்தில் இருந்தே தம்மாலான எல்லா உதவிகளையும் கட்சி பேதமின்றி செய்தவர்கள் அவர்கள். சமீபத்தில் கூட நாட்டில் பொருளாதார பிரச்சனை ஏற்பட்ட போது தமிழ் நாடு அரசின் சார்பில் தம்மால் ஆன உதவிகளை செய்திருந்தார்கள். ஆனால், தமிழ் நாட்டில் வெள்ளப்பெருக்கு, சூறாவளி இயற்கை பேரிடர் ஏற்பட்ட ஒரு முறையாவது புலம் பெயர் தமிழரிடம் இருந்து தமிழ் நாடு மக்களுக்கு ஒரு சிறிய உதவியை தானும் வழங்கியுள்ளார்களா இந்த சுயநலவாதிகள்? மலையக தமிழர்களை கூட அரவணைக்காமல் தோட்டக்காட்டான் என று ஒதுக்கிய சுயநலக் கூட்டம் பேச்சுவழக்கில் சற்றே மலையக தமிழ் கொழும்பு தமிழ் வாடை இருந்தால் கூட மாற்றாந்தாய் மனப்பாங்கில் பார்ககும் கூட்டம் தனக்கு பிரச்சனை என்றால் மட்டும் அடுத்தவன் எல்லோரும் தனது வேலைகளை விட்டுவிட்டு தன்னை தூக்கி சுமக்க வேண்டும் என்ற எதிர்பார்க்கை தவறானது. நமது அரசியல் தவறுகளின் விளைவுகளை அனுபவித்தே தீரவேண்டும். அதனை நாமே திருத்தி முன்னேற வேண்டும். ( நான் கூறிய இந்த உண்மை உறைப்பதால் ஒருவர் சிறிது நேரத்தில் வந்து guilty கோபக் குறி இட்டு எனது கருத்தில் உள்ள உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திச் செல்வார், பொறுத்திருங்கள்😂)
  35. ஒரு வருடம் இல்லை தொடர்த்தும். நிற்க்கலாம். ஆனால் நான் வெல்லமாட்டேன் என்பது உறுதியாக தெரியும் 🤣. உங்களுக்கும் தெரியும் எனவே பரிசை இன்னும் கூட்டியிருக்கலாம் 🙏.
  36. 🤣.......... உங்களுக்கு கனடாவில் சூரனுடனும், ஐயருடனும் நின்ற சிலரை தெரிந்திருக்கும் என்றே நினைக்கின்றேன்............ நீங்கள் ஒரு பகுதிநேர துப்பறிவாளர்.........😜. முக்கியமாக ஐயர் விழும் போது ஐயருக்கு பக்கத்தில் நின்றவர்........ 'ஏண்டா, ஐயரை தள்ளி விட்டாய்.........' என்று இப்பொழுது சில இடங்களில் அந்த ஆளை பகிடி பண்ணுகின்றனர். 'அரை மண்டியில் ஆயத்தமாக நில்லுங்கோ...........' என்று செட்அப் வாலிபாலில் ஒரு நாள் நான் சொல்ல, 'இது என்ன இன்றைக்கு புதுசா ஒன்று..........' என்பது போல பல பார்வைகள் தான் பதிலாக வந்தது.............😄.
  37. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)ஆம் 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம் 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) இல்லை 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)ஆம் 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)ஆம் 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)தமிழ் தேசிய கட்சிகள் (தமிழரசு,) 28) வன்னிதமிழ் தேசிய கட்சிகள் (தமிழரசு,) 29) மட்டக்களப்பு தமிழ் தேசிய கட்சிகள் (தமிழரசு,) 30)திருமலைதமிழ் தேசிய கட்சிகள் (தமிழரசு,) 31)அம்பாறை NPP 32)நுவரெலியாSajith party 33)அம்பாந்தோட்டை NPP 34)கொழும்பு Sajith's party 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)1 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)மணிவண்ணன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் j(ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 39) உடுப்பிட்டி( தமிழ் மக்கள் கூட்டணி) 40) ஊர்காவற்றுறை( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) 41) கிளிநொச்சி(தமிழரசுக் கட்சி, 42) மன்னர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 44) வவுனியா ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 45) மட்டக்களப்பு(தமிழரசுக் கட்சி, 46) பட்டிருப்பு (தமிழரசுக் கட்சி, 47) திருகோணமலை(தமிழரசுக் கட்சி, 48) அம்பாறை(தமிழரசுக் கட்சி, 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)NPP 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)2 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி)2 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி2 54)தமிழரசு கட்சி5 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி)1 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி )10 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)80 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)114 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி)10 போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார் யாழ்ப்பாண தொகுதி,நல்லூர் தொகுதி இப்பொழுது இல்லையா? முன்னாள் பெண்போராளி ஒருவர் சில சம்யம் தெரிவு செய்யப்பட்டால் (ஐக்கிய தேசிய கூட்டமைப்பு) என்க்கு ஒரு புள்ளி தரும்படி கந்தப்புவை தாழமையாக கேட்டுக்கொள்கிறேன்
  38. நீண்ட பதிலுக்கு நன்றி. நீங்கள் சொல்லும் இந்த கருத்து பல வகைகளில் நடக்க கூடியதாகவே தெரிகிறது. எப்படி இந்துதுவா அரசியலை ஆர் எஸ் எஸ் திட்டமிட்டு வழி நடத்தியதோ, நடத்துகிறதோ அது போல் திக வும் செய்கிறது என்கிறீர்கள். தி க இப்படி செய்யும் ஓக்கே ஏற்கிறேன். ஆனால் திமுக? சித்தாந்தம் வாழ வேண்டும் என்பதற்காக விஜையை வளரவிடுமா?
  39. இராசவன்னியரின் மகன் திலீபனுக்கும் மருமகள் அருந்ததிக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் . ......... மணமக்கள் எல்லா நலனும் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்துகின்றோம் . .......!
  40. தீலிபன் அருந்ததி தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள் வாழக என்றும் வளம் நலத்துடன் 🙏🙏🙏
  41. மிக்க மகிழ்ச்சி! தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள்.
  42. யாழ்கள உறவு இராசவன்னியன் அண்ணாவின் மகன் செல்வன் திலீபன் B.E.,M.S.(Singapore) மருமகள் செல்வி அருந்ததி B.E., இருவருக்கும் திருமண வாழ்த்துகள்.
  43. இன்று திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும்... ராசவன்னியரின் மகனுக்கும், மருமகளுக்கும்... இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் 🙏
  44. பூசணிக்காயில் படகு சவாரி செய்து கின்னஸ் சாதனை பூசணிக்காய் என்ற உடன் கறி சமைக்கவும், ரசம் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்துக்கள் இறை வழிபாடுகளில் பயன்படுகிறது. ஹாலோவீன் தினத்திற்கு பயன்படுகிறது என்று தான் நாம் கேட்டு அறிந்து இருப்போம். ஆனால் எங்காவது பூசணிக்காயில் படகு சவாரி செய்த சம்பவம் குறித்து அறிந்து இருக்கிறோமா இல்லை. ஆனால் தற்போது அந்த சம்பவமும் பதிவாகியுள்ளது. பூசணிக்காய் மீது அலாதி பிரியம் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த கேரி கிறிஸ்டென்சன் 555 கிலோ பூசணிக்காய் வளர்த்து அதை படகாக பயன்படுத்தி 73.5 கிலோ மீற்றர் பயணித்துகின்னஸ் சாதனை படைத்துள்ளார். கேரி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பெரிய பூசணிக்காய்களை வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் பூசணிக்காய் படகில் பயணம் செய்ய வேண்டும் என்ற அவரது கனவு 2013 ஆம் ஆண்டு வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் நடத்தப்படும் பெரிய பூசணிக்காய் படகு போட்டி நிகழ்வில் (Giant Pumpkin Regatta-an event) கலந்து கொண்டபோது தோன்றியுள்ளது. இந்நிகழ்வில் கடந்த நான்கு ஆண்டுகளாக கலந்துகொண்டுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு இவ் ஆண்டு சரியான அளவில் பூசணிக்காயை வளர்த்து சாதனை புரிய தீர்மானித்தார். கடந்த ஜூலை மாதம் நடுப்பகுதியில் பூசணிக்காய் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுபத்தப்பட்டு அக்டோபர் தொடக்கத்தில் அறுவடை செய்யப்பட்டது. அதன் சுற்றளவு 429.26 சென்றி மீற்றரும் (169 அங்குலம்) நிறை 555.2 கிலோ கிராமும் இருந்துள்ளது. இது ஒரு பெரிய பெரிய பியானோ அல்லது ஒரு வயது ஒட்டகத்தின் நிறை என தெரிவிக்கப்படுகிறது. பூசணிக்காயை செதுக்கிய பின்னர் அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி அதற்கு "பங்கி லோப்ஸ்டர்" என்று பெயரிட்டார். பூசணிக்காயில் கமராவை பொருத்தி அவர் துடுப்பில் பயணம் செய்வதை காணொளியாக காட்டினார். கடந்த அக்டோபர் 12 முதல் 13 ஆம் திகதி வரை கொலம்பியா ஆற்றின் குறுக்கே 26 கடினமான மணிநேரங்களில் 73.50 கிலோ மீற்றர் தூரத்தை பூசணிக்காய் படகில் கடந்துள்ளார். அவருக்கு இந்த பயணம் மிகவும் கடினமாக இருந்தது. ஆரம்பத்தில் மணிக்கு 56 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதோடு, அலைகளிலும் சிக்குண்டுள்ளார். "பங்கி லோஃப்ஸ்டர்" நன்றாக மிதக்க வேண்டும் என்பதற்காக, கேரி இரவிலும் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார். பாதுகாப்பாக நங்கூரமிடக்கூடிய இடத்தைத் தேடி ஹேடன் தீவை நோக்கி செல்வதற்காக இரவுமழுவதும் பயணம் செய்ததாக தெரிவித்துள்ளார். இறுதியாக வொஷிங்டனின் வான்கூவரில் தனது பூசணிக்காய் படகை நங்கூரம் இட்டார். அங்கு அவரை பத்திரிக்கையாளர் வரவேற்றுள்ளார். இதன்போது, நான் சாதனையை முறியடிக்கவில்லை என்றால், நான் நான் ஒரு நம்பமுடியாத சாகசத்தை செய்தேன் என தெரிவித்திருந்தார். கேரி இதற்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட 63.04 கிலோமீட்டர் பூசணிக்காய் படகு பயண சாதனையை 73.50 கிலோமீட்டர் பயணத்தில் முறியடித்துள்ளார். ஆர்வம், விடாமுயற்சி மற்றும் பூசணியின் ஒரு சிறிய மாய சக்தி ஆகியன தனது வெற்றிக்கு காரணம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197963 இதனை வைத்து வேறு கற்பனைகளை வளர்க்கவேண்டாம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.