Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    88793
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    3115
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20338
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19641
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/01/25 in all areas

  1. Paranji Sankar · மருத்துவமனையில் அப்பா கேட்கிறார் மகனிடம்: "என்னால் மறக்க முடியாத ஒன்று.. நீ ஒன்பதாவது படிக்கும்போது கணக்கு பரீட்சை மார்க்ன்னு 90 காண்பிச்சே.. எனக்கு நம்பிக்கையே இல்ல.. ஒன்பதுடன் நீ பூஜ்யத்தை சேர்த்து விட்டதாக குற்றம் சாட்டினேன்.. நீ உறுதியாக மறுத்தாய் ..." "அப்பா என்ன இதெல்லாம்? முப்பது வருஷ கதையை சொல்லிண்டு?" "இல்ல ரொம்ப நாளா என்னை உறுத்தற விஷயம் இது... நான் உன்னை அடிச்சு கேட்டும் நீ பூஜ்ஜியத்தை சேர்க்கலை என்ற சொல்லிண்டிருந்தே.. என்னால் அதை நம்பவும் முடியல.. இப்ப கேக்கறேன் உண்மையை சொல்லு? பூஜ்யத்தை சேர்த்தது நீ தானே?" "நீங்க எப்ப கேட்டாலும் என் பதில் ஒண்ணுதான்பா.. நான் பூஜ்யத்தை சேர்க்கவேயில்லை.." " ஆனா நீ 90 மார்க் வாங்கற மாணவன் இல்லையே?'" "சரிப்பா.. நீங்க நினைத்ததும் சரி.. நான் சொன்னதும் சரி" "அது எப்படி?' "நான் சேர்த்தது 9ஐ.........!"
  2. நான் இதை இப்போதைக்கு தரவிறக்கம் செய்யப் போவதில்லை. வேறு ஏதாவது வழிகளில் உபயோகித்து பார்க்க முடியும் என்றால் பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கின்றேன். ஆனால் இதன் source code ஐ எடுத்துப் பார்ப்பதாக உள்ளேன். சீனாவிற்கு என்னுடைய தகவல்கள் எல்லாம் போய்விடும் என்ற பயமில்லை.................. என்னிடம் எதுவுமே இல்லை என்ற விபரம் சீனாவிற்கு தெரிந்து போய் விடுமே என்ற கவலையில் தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை..................🤣.
  3. இந்தப் பாடல் சில நாட்களாகவே பின் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.......... ஏன் என்று இப்பொழுது காரணம் புரிகின்றது...................🤣. இங்கே களத்தில் இருந்த/இருக்கும் நட்புகள் சிலர், அதிலும் அவர்கள் செயற்பாட்டாளர்கள், இன்று நாங்கள் சொல்ல வருவதை களத்திலும், பொதுவெளியிலும் நீண்ட காலமாக சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள் என்பது ஆறுதல் தரும் ஒரு விடயம்..................👍. அறிந்ததும், தெரிந்ததும், அனுமானித்ததும், அனுபவமும் என்பவற்றைக் கொண்டு, இருக்கும் சிறிய நுண்ணுணர்வையும் உபயோகித்து, பொய்யை பொய்யென்று என்று கருத்துகளை எழுதினால், கடைசி ஆயுதமாக 'நீங்கள் என்ன பங்களிப்பு செய்தீர்கள்.................' என்று கேட்கப்படுகின்றது. சரி, என் போன்றோரின் கருத்துகளை விட்டு விடலாம்............. செயற்பாட்டாளர்களின் கருத்துகளையாவது கேட்டுப் பார்க்கலாம் தானே...............
  4. இதன் அர்த்தம் நமக்கு பெரியாரையும் தெரியல பிரபாகரனையும் தெரியல (அவரும் 8 தான்)☹️
  5. அண்ணா, இப்படி ஒன்றைச் சொல்லி திக்குமுக்காட வைத்து விட்டீர்களே............. எண் சாத்திரம் மட்டும் இல்லை, எல்லா சாத்திரங்களுமே இட்டுக்கட்டிய பொய்கள் அல்லவா..............
  6. யாழ் களத்தின் இன்னொரு உறவு சபேசன் விகடனுக்கு அளித்த பேட்டி. @goshan_che
  7. தேசிய ஒற்றுமை கருதி உங்களுக்கு இந்த நீதி வழங்கப்பட்டிருக்க வேணும்...ஆனால் அவர்களின் இடதுசாரி கொள்ளகையின்படி ஏனைய இனங்களுக்கு சலுகைகள் கொடுத்து எமது சிங்கள இனத்தை பகைத்து கொள்ள விரும்ப மாட்டார்கள்
  8. ஐ…சீண்டிப்பாக்கிறியள் போல🤣. எனக்கென்னமோ இந்த திமிர் வீரம் விளைந்த மண் வாழைச்சேனையில் புடம்போட பட்டதாகவே படுகிறது🤣
  9. கனகாலத்தின் பின் இந்தத் திரி வாசிக்க நன்றாக உள்ளது . ........ அடுத்த பாடலையும் அதன் பயனையும் தொடருங்கள் . ........! இன்னும் சிலர் யாழுக்கு வெளியேயும் அறியப்பட்ட எழுத்தாளர்களாக இருக்கின்றனர் . .......! --- வல்வை சகாரா ........! --- நெற்கொழுதாசன் . .....!
  10. 10 வீதம் வரி போடப் போகின்றோம் என்று ட்ரம்ப் சொன்னவுடனேயே, 'இங்கே பாருங்கோ............ பேச்சு வெறும் பேச்சாகவே இருக்க வேண்டும்..................' என்று பவ்வியமாக நிற்கிறவர்கள் குண்டு எல்லாம் அமெரிக்காவிற்கு போடமாட்டார்கள். அடக்க முடியாத கோபம் அவர்களுக்கு வந்தால், இந்திய எல்லைப் பகுதிக்கு போய், அங்கே போடுவார்கள்....................😜. தாவடியில் முதலாவது விமானக்குண்டு வீச்சு. இரண்டாவது குண்டு வீச்சு என் ஊரில். என் வீட்டிற்கு சில வீடுகள் பின்னால் இருந்த ஒரு வீட்டிற்கே குண்டு போட்டார்கள். என்னுடைய வீட்டின் மேலே விமானங்கள் இரண்டு குத்தி இறங்கின. 'இது என்ன, நல்ல சர்க்கஸ் ஆக இருக்குதே................' என்று நாங்கள் ஆவென்று பார்த்துக் கொண்டு நின்றோம். அப்படியே கழட்டி விட்டார்கள் குண்டுகளை..................... விழுந்தடிச்சு ஓடிப் போய் முற்றத்தில் நின்ற கறுத்த கொழும்பான் மாமரத்துக்கு கீழே பதுங்கினோம்..................🤣.
  11. அமெரிக்காவுக்கு குண்டு போடுகில் ...உங்கடை வீட்டை தவிர்த்தே போடுவார்கள்...☺️
  12. இவருக்கும் ஒரு காணி இருக்கிறது.அதற்குள் வீடு கட்டப் போகிறேன் என்றார். அந்தக் காணிக்குள் விகாரையை கட்டிவிட்டு 10 வருடத்தின் பின் அதற்கான நஸ்டஈடு வழங்க வேண்டும். காச்சலும் தலையிடியும் தனக்கு தனக்கு வந்தாலே தெரியும்.
  13. 06 JAN, 2025 | 10:24 PM இலங்கை ஆயுதப்படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான 33 வருடகாலப் போர் இப்போதெல்லாம் நினைவில் இருந்து மெதுவாக அருகிக் கொண்டு போகிறது. விடுதலை புலிகள் இயக்கம் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி முறைப்படி ஆரம்பிக்கப்பட்டது. மூன்று தசாப்தகால போருக்கு பிறகு விடுதலை புலிகள் முல்லைத்தீவின் நந்திக்கடல் ஏரியில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தங்களது தோல்வியைச் சந்தித்தார்கள். வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான அந்த இயக்கத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வரலாற்றில் முக்கியமான ஒரு பாகமாகும். மேலும் வாசிக்க https://www.virakesari.lk/article/203167
  14. யாழ் களத்தின் சக உறவான நேசக்கரம் சாந்தி அவர்கள் தமிழ் கேள்விக்கு பேட்டியளித்துள்ளார். புலம் பெயர் தமிழ் சமூகத்தில் சீமான் செய்த நாசகார செயல்களை விளகியதுடன் சீமானுக்கு துணையாக புலம் பெயர் நாடுகளில் இயங்கும் சிலரின் வண்டவாளங்களும் செவ்வியில் தெளிவாக எடுத்து கூறி உள்ளார்.
  15. IND vs ENG: இந்திய அணி டி20 தொடரை வென்றது எப்படி? ராணாவை களமிறக்கியது சர்ச்சையாவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் புனேவில் நேற்று நடந்த நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியது. சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியில் இதுவரை தொடரை இழக்காமல் இந்திய அணி பயனித்துள்ளது. அது மட்டுமின்றி 2019ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இரு நாடுகளுக்கு இடையிலான டி20 தொடரைத் தொடர்ந்து 17வது முறையாக இந்திய அணி வென்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய அணி ஒரு கட்டத்தில் 12 ரன்களுக்கு 3 விக்கெட், 79 ரன்களுக்கு 5 விக்கெட் என இக்கட்டான நிலையில் இருந்தபோது, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே இடையிலான பார்ட்னர்ஷிப்தான் அணியை பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றது. ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உள்பட 53 ரன்களும், ஷிவம் துபே 33 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உள்பட 53 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இருவரும் சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்து பெரிய ஸ்கோருக்கு உதவினர். பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்சித் ராணா, ரவி பிஸ்னோய் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர். குறிப்பாக களத்தில் வலுவாகக் காலூன்றிய ஹேரி ப்ரூக் ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்பியபோது, அவரின் விக்கெட்டை வருண் வீழ்த்தியதோடு, அதே ஓவரில் கார்ஸ் விக்கெட்டை சாய்த்து ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தியபோது இங்கிலாந்து தோல்விப் பாதைக்குள் பயணிக்கத் தொடங்கியது. மேலும், 19வது ஓவரின் இறுதிவரை களத்தில் நின்று 53 ரன்கள் சேர்த்த ஷிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விராட் கோலி: ரஞ்சி கோப்பை போட்டியில் க்ளீன் போல்ட் – சாம்பியன்ஸ் கோப்பையில் தொடர வேண்டுமா? ஜஸ்பிரித் பும்ரா வேகத்தில் எதிரணிகளை கலங்கடித்த மறக்க முடியாத 10 தருணங்கள் வருண் வித்தியாசமான சாதனை: இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியை பறித்த 'மோசமான முடிவுகள்' இந்தியா த்ரில் வெற்றி: ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய வாஷிங்டன் சுந்தர் விமர்சனத்திற்கு உள்ளாகும் இந்திய அணியின் வெற்றி ஆனால், இந்திய அணி வெற்றி பெற்றதில்தான் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஓவர்டன் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்டபோது, 143 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட 5வது பந்து ஷிவம் துபேவின் தலைக் கவசத்தில் பட்டு பந்து தெறித்தது. இதுபோன்ற நேரத்தில் உரிய முதலுதவியும், தேவைப்பட்டால் வீரரின் உடல்நிலைக்கு ஏற்ப மாற்று வீரர் விளையாடுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும் என்பது ஐசிசி விதி. இன்னிங்ஸ் முடிந்து பெவிலியன் சென்றபின் ஷிவம் துபேவுக்கு ஃபீல்டிங் செய்ய முடியாததால் அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா கன்கசன் மாற்றுவீரராகக் களமிறக்கப்பட்டு பந்துவீச வைக்கப்பட்டார். ராணா எடுத்துக் கொடுத்த 3 விக்கெட்டுகளும் வெற்றிக்கு முக்கியமானவையாக, திருப்புமுனையாக மாறின. ஐசிசி விதிப்படி, காயமடைந்த ஒரு வீரர் எந்தத் தகுதியில் இருக்கிறாரோ அதே தகுதியில்தான் கன்கசன் மாற்றுவீரரையும் களமிறக்க வேண்டும். ஒரு பேட்டர் கன்கசனில் வெளியேறினால் பேட்டரை களமிறக்கலாம், பந்துவீச்சால் காயமடைந்தால் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரையும், ஆல்ரவுண்டருக்கு பதிலாக ஆல்ரவுண்டரையும் களமிறக்கலாம். இந்நிலையில் ஷிவம் துபே ஒரு பேட்டர், ஆனால், அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரான ஹர்சித் ராணாவை களமிறக்கி விளையாட வைத்து இந்திய அணி பெற்ற வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என வர்ணனையாளர்களும், இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இங்கிலாந்து பயிற்சியாளர் பிரண்டென் மெக்கலமும் போட்டி முடிந்தபின் நடுவர்களுடன் மைதானத்தில் நீண்ட ஆலோசனை நடத்தினார். அமெரிக்கா: வெடித்துச் சிதறிய விமானம், குழந்தை நோயாளியுடன் சென்றபோது விபரீதம் - நிலவரம் என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று பட்ஜெட் தாக்கல்: வேலைவாய்ப்பு, பணவீக்கம் - இந்திய அரசு முன் உள்ள சவால்களும் எதிர்பார்ப்புகளும்6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "எங்கள் தோல்விக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், கன்கசனில் லைக் டூ லைக் மாற்றுவீரர் சரியானதாக எனக்குத் தெரியவில்லை, அதில் விருப்பமும் இல்லை," என்று தெரிவித்தார். அதோடு, "இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஷிவம் துபேவால் 25 கி.மீ வேகத்தில்கூட பந்துவீச முடியாது. ஆனால், ஹர்சித் ராணா 145 கி.மீ வேகத்தில் பந்துவீசக் கூடியவர், பேட்டிங் சரியாக வராது. ஆனால், துபே சிறந்த பேட்டர். எப்படி இது சரியான கன்கசன் மாற்று வீரராக இருக்கும். இந்த ஆட்டத்தில் நாங்கள் உண்மையாக வென்றிருக்க வேண்டும். கன்கசனில் மாற்று வீரராகச் சேர்க்கப்பட்ட முடிவை நாங்கள் ஏற்கவில்லை," என்றும் கூறினார். மாற்று வீரராக இதுபோன்ற வீரரைக் களமிறக்கும் முன்பாக எதிரணியிடம் ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் ஆனால் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை எனவும் ஜோஸ் பட்லர் குறிப்பிட்டார். "நான் பேட்டிங் செய்ய வந்தபோது, திடீரென ஹர்சித் ராணா பந்துவீச வருகிறார். இவர் எப்படி பந்து வீசுகிறார் என்று எனக்கு குழப்பம் ஏற்பட்டது. இது உண்மையில் ஏற்க முடியாத முடிவு. சரியான மாற்று வீரர் முடிவும் அல்ல. இது போட்டி நடுவர் ஸ்ரீநாத் எடுத்த முடிவு என்று இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் போட்டி நடுவரிடம் சில கேள்விகளை எழுப்பி நாங்கள் எங்கள் நிலையைத் தெளிவுபடுத்துவோம். எங்களுக்கு வெற்றி பெறுவதற்குப் பல வாய்ப்புகள் இந்த ஆட்டத்தில் இருந்தன. ஆனால், பயன்படுத்த முடியாததற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அதில் இதுவும் ஒன்று" எனத் தெரிவித்தார். மகாராஷ்டிரா: பெண்ணின் கருவில் இருந்த குழந்தை வயிற்றில் ஒரு கரு உருவானது எப்படி?8 மணி நேரங்களுக்கு முன்னர் கோவையில் ஒரே இமெயிலில் 3,000 பேரை வேலையை விட்டு நீக்கிய அமெரிக்க நிறுவனம் – என்ன நடந்தது?31 ஜனவரி 2025 இந்திய அணி கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் மோர்கல் கூறுகையில், "இது முற்றிலும் எங்களின் முடிவல்ல. கன்கசன் மாற்றுவீரராக ராமன்தீப் சிங், ஹர்சித் ராணா இருவர் பெயரைக் கொடுத்தபோது, போட்டி நடுவர் ஸ்ரீநாத் தேர்வு செய்ததுதான் இறுதி முடிவு. ராணாவின் பெயரைத் தேர்வு செய்தபோது, அவர் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார் உடனடியாகக் களமிறங்க அவரை அவசரப்படுத்தினோம். இந்த முடிவு எங்களை மீறியது, பெயரை மட்டுமே நாங்கள் அளிக்க முடியும், முடிவெடுப்பது போட்டி நடுவர்தான்" எனத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி வர்ணணனையாளர்களாக இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் கெவின் பீட்டர்சன், நிக் நைட் இருவரும், இந்திய அணி கன்கசன் மாற்றுவீரராக துபேவுக்கு பதிலாக ஹர்சித் ராணா களமிறங்கியது குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பி விமர்சித்தனர். கன்சனில் செல்லும் வீரரின் தகுதிக்கு நிகரான மாற்றுவீரரைக் களமிறக்க வேண்டும், மாற்றுவீரரை களமிறக்கும் முன் எதிரணியினரிடம் ஆலோசிக்கலாம் என்ற இரு ஐசிசி விதிகளுமே நேற்று கடைபிடிக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுகின்றன. ஒருவேளை ஐசிசி விதியின்படி துபேவுக்கு மாற்றாக ராமன்தீப் சிங் அல்லது பேட்டரை களமிறக்கி இருந்தால், நேற்றைய ஆட்டம் இங்கிலாந்து அணியின் பக்கம் திரும்பியிருக்கக் கூடும். ஏனென்றால், ஹர்சித் ராணா கடைசி நேரத்தில் எடுத்துக் கொடுத்த 3 விக்கெட்டுகள்தான் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தது. அப்படியிருக்கையில் ஹர்சித் ராணாவால் வெற்றி பறிபோனதை, இங்கிலாந்து வீரர்கள் ஏற்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்திய அணி வெற்றி பெற்ற விதம் சரியானதா, இது நேர்மையானதா என்ற கேள்விகள், விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் ரசிகர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆதவ் அர்ஜுனா: திமுக-வில் அரசியலை தொடங்கியவர் விஜய் உடன் இணைந்தது எப்படி?31 ஜனவரி 2025 சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை - ஈலோன் மஸ்க், டிரம்ப் கூறியது என்ன?31 ஜனவரி 2025 இந்திய அணியின் டாப் ஆர்டர் தோல்வி பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் பேட்டிங்கில் நேற்றும் வழக்கம்போல் டாப் ஆர்டர் தோல்வி அடைந்தனர். சாம்ஸன் தொடர்ந்து 4வது போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினாலும் 29 ரன்களில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடரில் இரண்டாவது முறையாக டக்அவுட்டில் வெளியேறினார், இவரின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. ரிங்கு சிங் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி, 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இழந்து மோசமான நிலையில் இருந்தது. 6வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே இருவரும் சேர்ந்து ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கி இருவரும், சரிந்திருந்த ரன்ரேட்டை உயர்த்தினர். ஹர்திக் 27 பந்துகளிலும், துபே 31 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தநிலையில் பாண்டியா 53 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிவரை களத்தில் இருந்த துபே 53 ரன்களில் ரன்அவுட் ஆனார். கடைசி ஓவரில் மட்டும் இந்திய அணி அக்ஸர் படேல், அர்ஷ்தீப், துபே ஆகிய 3 விக்கெட்டுகளை இழந்தது. 180 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என இருந்த இந்திய அணி ஒரு ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆட்டம் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து பக்கம் இருந்தது. 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என இக்கட்டான நிலையில் இருந்தபோது, ஹர்திக், துபேவின் ஆட்டம்தான் திருப்புமுனையாக மாறியது. அதேநேரம் இருவரும் பிரிந்த பிறகு களமிறங்கிய எந்த பேட்டரும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. இந்தத் தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட அக்ஸர் படேல் இதுவரை ஒரு போட்டியில்கூட பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. 'சரியான திசையில் செல்கிறோம்' வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், "அணியில் உள்ள ஒவ்வொருவரும் தொடக்கம் முதல் கடைசி வரை சிறப்பாகச் செயல்பட்டோம். 12 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த தருணத்தில்கூட நம்பிக்கையை இழக்காமல் அதிரடியாகவே பேட் செய்தோம். துபே, பாண்டியா தங்களின் அனுபவத்தை இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்தியது சிறப்பு. இதைத்தான் வலைப்பயிற்சியில் பேசினோம், அதைச் செய்துள்ளனர். சரியான திசையில் நாங்கள் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பவர்ப்ளேவுக்கு அடுத்து வரும் ஓவர்கள் முக்கியமானவை என்று எனக்குத் தெரியும், அந்த நேரத்தில் ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. சில விக்கெட்டுகளை வீழ்த்தினோம், ராணா 3வது பந்துவீச்சாளராக வந்து சிறப்பாகப் பந்துவீசினார்" எனத் தெரிவித்தார். உங்களால் இரவில் தூங்க முடியவில்லையா? - நீங்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் என்ன?31 ஜனவரி 2025 சியரா ஸ்பேஸ்: காற்றே இல்லாத நிலவில் ஆக்சிஜன் தயாரிக்க உதவும் கருவி - எப்படி செய்யும்?30 ஜனவரி 2025 இங்கிலாந்து தோல்விக்கு என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் அற்புதமாக இருந்தது, நடுவரிசையில் ஹேரி ப்ரூக்கின் ஆட்டமும் வெற்றியின் அருகே கொண்டு சென்றது. ஆனால், முக்கியமான தருணத்தை கைப்பற்றத் தவறியதே இங்கிலாந்து அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. பென் டக்கெட், பில் சால்ட் இருவரும் அருமையான தொடக்கத்தை அளித்தனர். இந்தத் தொடரில் இதுவரை அதிரடியாக ஆடாத சால்ட் இந்த ஆட்டத்தில் நிதானமாக ஆடி பவுண்டரிகளை அடித்தார். பவர்ப்ளே முடிவில் 62 ரன்கள் சேர்த்து ட்கெட்(39) விக்கெட்டை பிஸ்னாயிடம் இங்கிலாந்து இழந்திருந்தது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு 120 ரன்கள் தேவைப்பட்டது, 14 ஓவர்கள் இருந்தன, கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன. அந்த நிலையில், அக்ஸர் படேல் வீசிய 7வது ஓவரில் சால்ட்(23) போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பட்லர் 2 ரன்னில் பிஸ்னாய் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 62 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த இங்கிலாந்து 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. லிவிங்ஸ்டோன், ஹேரி ப்ரூக் இருவரும் களத்தில் நிலைக்கத் தொடங்கினர். ஹேரி பரூக் வழக்கத்துக்கு மாறாக இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக ராணா பந்துவீச்சில் சிக்ஸர்கள், பவுண்டரி என 18 ரன்கள் சேர்த்து, 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். ராணா பந்துவீச்சில் 9 ரன்னில் லிவிங்ஸ்டோன் ஆட்டமிழந்தார். விக்கெட் சரிந்தபோதிலும் இங்கிலாந்து அணியை ஹேரி ப்ரூக் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். வருண் 15-வது ஓவரை வீசினார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. களத்தில் செட்டில் ஆன பேட்டர் ஹேரி ப்ரூக்கை(51) வீழ்த்தி, அதே ஓவரில் பிரைடன் கார்ஸும் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து சற்று ஆட்டம் கண்டது. அதன் பிறகு கடைசி வரிசை வீரர்கள் பெரிதாக பேட்டிங்கில் பங்களிக்கவில்லை, ஓவர்டன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்த பின், யாரேனும் ஒரு பேட்டர் பொறுப்பெடுத்து பேட் செய்திருந்தால் வெற்றி இங்கிலாந்து அணியின் கையிலிருந்து நழுவிச் சென்றிருக்காது. கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 36 ரன்களும், கடைசி 2 ஓவர்களில் 25 ரன்களும் தேவைப்பட்டன. இது டி20 போட்டிகளில் நிச்சயமாக அடைந்துவிடக்கூடிய ஸ்கோர்தான். ஆனால், இங்கிலாந்து அணியில் கடைசி வரிசை பேட்டர்கள் பொறுப்பெடுத்து பேட் செய்யாமல் இருந்தது தோல்விக்கான காரணங்களில் ஒன்று. பந்துவீ்ச்சில் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணியின் 5 விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்திய நிலையில் அதன் பிறகு நெருக்கடி கொடுக்கத் தவறியதும் தோல்விக்கான காரணங்களில் ஒன்று. ஹர்திக் - துபே பார்ட்னர்ஷிப்பை தொடக்கத்திலேயே உடைத்திருந்தால், நிச்சயமாக இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c07k57l34l7o
  16. இதன்பொருள், அதாவது கழுவி, கழுவி ஊத்தினால் கழுவப்பட்ட பொருள் துலங்கும், கழுவி வந்ததும் பயிர்களுக்கு உரமாகும் ஐயா.🤪
  17. அவரை கேட்காமல், அவரின் பெயரை இங்கு சொல்வது சரியல்ல என்பதால் தவிர்த்துக் கொள்கின்றேன்.
  18. மூவினத்தவர்களும் கொண்டாட புதிய விழா! இலங்கையில் உள்ள அனைத்து இனங்களின் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் விழுமியங்களை குறிக்கும் வகையில் ஒக்டோபர் மாதம் விசேட தினமொன்று அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். “தமிழர்கள், சிங்களவர்கள், பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் என நாம் அனைவரும் ஒன்றாகக் கொண்டாடும் ஒரு நாள் நமக்கு வேண்டாமா? இந்த அனைத்து சமூகங்களின் கலாச்சாரங்கள், உணவு முறைகள், வாழ்க்கை முறைகள், ஆடை பாணிகள் மற்றும் இசை ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஒக்டோபரில் ஒரு பிரமாண்டமான தேசிய விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். நாம் பிரிந்திருந்தாலும் நம் குழந்தைகளை பிரிந்து இருப்பதற்கு இடமளிப்பது நல்லதல்ல. எங்கள் தலைமுறை யுத்தம் செய்ததிற்கு, எங்கள் குழந்தைகளின் தலைமுறை யுத்தம் செய்ய அனுமதிக்க மாட்டோம். “வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கின் அனைத்து குழந்தைகளும் ஒன்று சேரும் அரசாங்கமாக இந்த அரசாங்கத்தை நாங்கள் மாற்றுவோம்.” http://www.samakalam.com/மூவினத்தவர்களும்-கொண்டா/
  19. ஈழப்பிரியன்…. இந்தப் படங்களை, வேறு ஒரு யாழ். கள உறவு அனுப்பியிருந்தார். ஆகவே… நன்றி அவருக்குத்தான் சேர வேண்டும். 🙂
  20. நேற்று, மாவையரின் வீட்டில் கல்லுளி மங்கன் போல் அமர்ந்திருந்த அவரைப் பார்த்து நானும் அதைத்தான் நினைத்தேன். மாவையரின் இரத்த அழுத்தம் அதிகரித்ததற்கு இந்த பதவியாசை பிடித்த தலையாட்டிகளே காரணம். மாவையர் ஒன்றும் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேனென அடம் பிடிக்கவில்லையே. தர்மப்படி, கொள்கைப்படி, சட்டப்படி தலைவருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரை பதவியை பொறுப்பெடுக்கும்படியே கேட்டுக்கொண்டார். அதை மறுத்து காரணமில்லாமல் நீதிமன்றத்திற்கு கொண்டுசென்று முடக்கி வைத்திருப்பது யார்? அந்த தீர்ப்பு வரும்வரை மாவையர்தான் தலைமைபொறுப்புக்கு உரியவர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்தால்; கட்சியின் முடிவை ஏற்காமல், எதை எதிர்பார்த்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தீர்கள், என்று நீதிபதி கேட்டால்; சட்டமேதை என்று சொல்லிக்கொள்பவர் என்ன பதில் சொல்வார்? நான் தலைவனாகும்படி தீர்ப்பு சொல்லுங்கள் என்பாரா?
  21. இப்ப முள்ளம்பன்றி சிகைஅலங்காரிகள் சார்பாக ஒரு கொம்பிளைன்ட் வரும்🤣.
  22. டிரம்ப்பிற்கு தேவை popularity, மஸ்கிற்கு தேவை வியாபாரம. பிரத்தியோகமாக ஒரு விண்கலத்தை ஏவி அந்த விண்வெளிவீர்ர்களை பூமிக்கு கொண்டு வருவதென்பது மஸ்கிற்கு அதிக வருமானத்தை கொண்டுவரும், டிரம்பின் ஆதரவாளர்கள் நனைப்பார்கள் டிரம்ப் எவ்வளவு நல்லவர் வல்லவர் எல்லோரிலும் அக்கரையானவரென்று ஆனால் அந்த பயணம் ஒரு விரயாமன பயனம் ஏனேனில் Marchஇல் மற்ற வீர்ர்கள் திரும்பிவரும் போது இவர்களை அழைத்து வருவதுமான் cheapest option.
  23. அதாவது அல்லாவின் ஆணைபாடி அப்படி நடந்து விட்டால்...நான்தான் சனாதிபதி... நீங்கள் எல்லாம் பிரதி அமைச்சர்கள் ..என்பதை சொல்லாமல் சொல்கின்றார்...கேட்கிறவன் கேணையன் என்றால் ...எருமைகூட ஏரோப்பிளேண் ஓட்டுமாம்...
  24. ஓணாண்டியார், விடயம் மிகவும் எளிமையானது, இதைப் பெரிதாக்க வேண்டாம்! இதைப் பற்றி யாரும் இனிப் பேசப் போவதில்லை! ஒணாண்டியாரின் கருத்துக்கு எப்போதும் நம்பகத் தன்மை இருக்கும். தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும்.
  25. தமிழ் உயர் அதிகாரிகளை உருவாக்கி மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வையுங்கள் சுதந்திரமாக மக்களுடன் உரையாட விடுங்கள் ...
  26. நீங்கள் பதிந்ததை எம்மால் தேடி எடுக்க முடியவில்லை. உங்களாலும் முடியவில்லை. விடயம் அவ்வளவு தான். எழுதும் போது உங்களால் அதை நிரூபிக்க முடியும் என நினைத்து இருப்பீர்கள். இப்ப, அப்படி செய்வது சாத்தியமில்லை என தெரிந்து விட்டது. இப்படி எனக்கு உட்பட பலருக்கு யாழிலும், யாழுக்கு வெளியே எம் நாளாந்த வாழ்விலும் எத்தனை தரம் நிகழ்ந்து இருக்கும். உங்கள் முடிவை மீள் பரிசீலனை செய்யுங்கள். நன்றி
  27. அப்படிதான் நானும் நினைத்தேன், வாய் மூடி மௌனியாய் இருந்தேன், ஆனால் சீமான் போன்ற தகுதி அற்ற வாய்ச்சொல்லில் வீரர்கள் ஈழத்தமிழர் பெயரைச் சொல்லியே அங்கே அரசியல் செய்து எமது போராட்டம் மற்றும் எங்கள் மதிப்பை இழக்காரப்படுத்தும் பொழுதும், எங்களுக்காக உண்மையாகவே போராடிய வைகோ போன்ற தலைவர்களை விட தான் உயர்ந்தவர் என்று காட்டிக்கொள்ளும் பொழுதும் எப்படி இனிமேலும் அப்படியே இருப்பது? நாங்கள் இனியும் சீமான் போன்ற நாலாம்தர அரசியல் வாதிகளை எங்கள் பெயரைச் சொல்லி அங்கே கடிவாளம் அன்றி அரசியல் செய்ய அனுமதித்தால் அது அங்கே எங்களுக்காக மனமுவந்து போரடிய சிறை சென்ற,குடும்பத்தை கரை ஏற்ற முடியாமல்ப் போன,அரசியலில் தன் நிலையை இழந்த மனிதர்களுக்கும், தலைவர்களுக்கும் செய்யும் அவமரியாதை. இப்பொழுதும் நாம் அங்கே எந்த அரசியல் நிலைபாடும் எடுக்க வேண்டியதில்லை, ஆனால் அங்கே யார் எம்மை கேலிப்பொருள் ஆக்குகின்றார்களோ அவர்களின் உண்மை நிறத்தை வெளிக்கொணர வேண்டிய தேவை வந்துள்ளது
  28. யோவ், லூச்சா கதை எல்லாம் வேண்டாம். அதான் கூற்றை வாபஸ் வாங்கியாச்சே… நில்லும் ஐயா…. வெட்கெம் கெட்ட எத்தனையோ பேர் என்ன என்னமோ தில்லாலங்கிடி எல்லாம் செய்து போட்டு ஒண்டும் இல்லாதமாதிரி திரியும் போது … இதுக்காக யாழை விட்டு போறதெல்லாம் ஓவர். அதுவும் நான் ஆரம்பித்த திரி… போட்டோக்களை எடுத்து பகிர்ந்தது எல்லாம் பெரிய லெவல் ரிஸ்க். தயவு செய்து தொடரவும். நீங்கள் சொன்ன விளக்கம் நானுட்பட பலருக்கு ஏற்புடையதே.
  29. உதயன் பத்திரிகை வைத்த தலைப்பும், அனுரவின் இன்றைய நிகழ்ச்சி நிரல்களான…. மாவை வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி, யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டமை, வல்வெட்டித்துறையில் பெருந்திரளான மக்கள் மத்தியில் சந்திப்பும், தமிழ் ஆச்சிமாரை… எம். ஜி. ஆர். பாணியில் கட்டிப் பிடித்த்தையும் பார்த்து, தையிட்டி விகாரையை… அனுர, அத்திவாரத்துடன் கிளப்பப் போறார் என்று நம்பி ஏமாந்து போனன். 😂 உதயனுக்கு…. நெடுகவும், “ஏப்பிரல் பூல்” செய்யுறதே… வேலையாய் போச்சுதுது. 🤣
  30. ஓணாண்டியார், இதை ஒரு பக்கம் போட்டு விட்டு, தொடர்ந்து இதே பெயரிலேயே இணைந்து இருங்கள். தயவுடன் கேட்கின்றேன்.............. இதை எல்லாம் இவ்வளவு தீவிரமாக எடுக்காதீர்கள். நினைவுகள் தப்புவதும், தப்பாகப் போவதும் எல்லோருக்கும் வழமையே. எதுவும் பிழையாக சொல்லி இருந்தாலும், இருந்து விட்டுப் போகட்டுமே............. எவருமே இங்கு எந்தப் பிழைகளும் விடாதவர்களா...........🙏. நாங்கள் இங்கு எதையும் எழுதுவதாலோ அல்லது விவாதிப்பதாலோ மட்டுமே, களத்திற்கு வெளியே ஒரு துரும்பாவது அதன் இடத்தில் இருந்து அசைந்திருக்காது என்று நல்ல நம்பிக்கையுடன் சொல்லுகின்றேன். இதில் இவ்வளவு அவசரப்படாதீர்கள்......................🙏.
  31. யாழ்களத்தில் மூன்று அணிகள் உள்ளது வாஸ்தவம்தான். 1. சம்பளம் வாங்காமல் தமிழ் இனத்துக்காக வேறுபட்ட கருத்துக்களை எதிரும், புதிருமாக எழுதும் ஆட்கள். கிட்டதட்ட யாழில் அனைவரும் இந்த அணிதான். Team Tamils. 2. சம்பளம் வாங்கி கொண்டு றோவுக்கு ஆடும் one man army - Team India 3. சம்பளம் வாங்கியோ அல்லது சுயவிருப்பிலோ இலங்கைக்கு ஆடும் two men army - Team Sri Lanka. யாழில் நடப்பது பழைய பென்சன் அண்ட் ஹெஜ்டெஸ் கப் போல ஒரு முத்தரப்பு ஆட்டம்🤣. Team Tamils v Team India v Team Sri Lanka
  32. தேவையா இது? இப்போது இன்னுமொரு அறிக்கை வெளிவரும் நாம்தான் ஒரிஜினல் புலிகள். சீமானுக்கு பயிற்சி கொடுத்தோம். பாடம் எடுத்தோம் என்று கூறிக்கொண்டு. இதனால் யாருக்கு நன்மை? என்றோ ஒருநாள் சீமானும் உதயநிதியும் கைலாகு கொடுக்கத்தான் போகிறார்கள். அப்போது ஈழத் தமிழரில் ஒரு பகுதியினர் சீமானுக்கு எதிரியாகவும் இன்னொரு பகுதியினர் திமுகவுக்கு எதிரிகளாகவும் இருப்பர். யாழ் களத்தில், வேலை வெட்டி இல்லை என்பது போல எந்த நேரமும் எதையாவது ஒன்றை வைத்து சிரைச்சுக்கொண்டிருக்கிற புத்தியைச் சீவின ஆட்கள் பதில் கூறுவார்களா?
  33. Tirunelveli Pasanga La · ஆயிரம் பேரு வரலாம், போகலாம். ஆனால் காலத்துக்கும் அளவும் மாறாம, சுவையிலும் தனக்கு ஈடு இணை இல்லாத ஒருத்தன் உண்டு எனில் அவன் இவன் தான். இவன் முள்ளெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. வறுத்தா அப்படியே சாப்பிடலாம், குழம்புல போட்டா, கையை வச்சதும் தனியா வரும் சதை, முள்ளை பிரிச்சு முழுசா ரசிச்சு ருசிக்கலாம். கவளை, 4 மீனும் கொஞ்சம் குழம்பும் சட்டி சோறும் சட்டுனு மாயமாகும். இவன் கூட வெந்த ஒரு துண்டு மாங்காய்க்கு இன்னும் ஒரு சட்டி சோறு கேட்கும் மனசு. இவனை குளிப்பாட்டி அழக்காக்க கொஞ்சம் மெனக்கெடனும், ஆனால் சாப்பிடும்போது அத்தனை அலுப்பும் போய் ஆனந்த......! 😂
  34. இப்போ... மாவையரின் செத்த வீட்டுப் பக்கம், சுமந்திரனை, தலை வைத்தும் படுக்கக் கூடாது என்று, மாவையர் வீட்டில் இருந்து அறிவிக்கப் பட்டுள்ளது. அதனை திசை திருப்பி... தன்பக்கம் பத்திரிகைகளின் கவனத்தை ஈர்க்க, ஊசிப் போன அறிக்கைகளை வெளியிட்டு, தனது இருப்பை காட்டிக் கொள்கிறார். இவரின் சுத்துமாத்துக்கள் எல்லாம் பல் இளித்து கனகாலம் ஆகிவிட்டது. அது புரியாமல், தானும் ஒரு ஆள் எண்டு... முதுகெலும்பு, மீன் முள்ளு என்று அறிக்கை விடுகிறாராம்.
  35. யார் இவர்? புலிகளின் பொறுப்பாளர் என்ற பதவியை இவருக்கு யார் கொடுத்தது. புலிகள் ஆயுதங்களை மௌனித்தபின் இவர் தலைமையில் என்ன அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை இதை இணைத்தவர் தருவாரா??
  36. அப்படியென்றால் இலட்சிய நாவல்கள் எழுதிய நா. பார்த்தசாரதிதான் சிறந்த இலக்கியப் படைப்பாளி! சமூக சிந்தனை என்பதை விட பக்கச்சார்பின்றி பாத்திரங்களை படைக்கவேண்டும். ஒரு உலகத்தை கற்பனையில் கொண்டுவந்து வாசகனை உள்ளே இழுக்கவேண்டும்.. ஒருவரின் எழுத்து நூறாண்டுகளுக்கு மேல் விரும்பிப் படிக்கப்பட்டும் பேசப்பட்டும் இருந்தால் அவரது எழுத்து சிறந்ததாகத்தான் இருக்கும். புதுமைப்பித்தன் வறுமையில் வாடி எழுதிய கதைகள் இன்றும் நிலைத்துநிற்கின்றன. ஆனால் இலக்கியம் அவருக்கு சோறு போடவில்லை. அவரும் எதிர்பார்க்கவும் இல்லை.
  37. 🤣..................... காதல் கவிதைகள் என்றாலே அது வாசிப்பவருக்கான ஆக்கம் என்ற அறிதல், எல்லாம் கடந்து போன இந்த வயதில் இன்று தான் எனக்கு வந்திருக்கின்றது.......................😜. நான் படித்த பாடசாலையில் உயரத்தின் படியே முன்னிருந்து இருக்கவிடுவார்கள். இது ஒவ்வொரு வருடமும் பாடசாலை முதல் நாளில் நடக்கும். வரிசையில் எனக்கு பின்னல் பெரிய தள்ளுமுள்ளே நடக்கும். யார் உயரம் என்று................நான் எதுவுமே பேசாமல், வரிசையில் அமைதியாக முதல் ஆளாக நிற்பேன்...............🤣. ஆமாம், வில்லவன், அவர் இந்த இரு வகைக்குள்ளும் இல்லை. பெரிய இடைவெளி விட்டிருக்கின்றார் என்று தான் அவரின் விபரங்களில் இருக்கின்றது. அடுத்த சில நாட்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவரை வாசிப்பதாக உள்ளேன்.................
  38. சா…இப்படி ஒரு திரி யாழில் ஓடி கனகாலம்…. டிவி டெக் எடுத்து பார்த்த அதே சிறுவன் கோஷானாக பாதி விளங்கியும், பாதி விளங்காமலும் பார்த்துகொண்டிருக்கிறேன்🤣
  39. எனக்கும் இப்படியான எண்ணம் வந்தது. ரசோதரன் யாழுக்கு கிடைத் பொக்கிசம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.