Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்15Points3054Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்14Points87988Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்12Points19122Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்11Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/19/25 in all areas
-
ஒரு முட்டை ஆயிரம் டாலர்
6 pointsஒரு முட்டை ஆயிரம் டாலர் ------------------------------------------ இப்ப இங்கே பல கடைகளில் முட்டை இல்லை சில கடைகளில் இருக்கின்றது ஆனால் எண்ணி எண்ணித்தான் வாங்கலாம் பலத்த கட்டுப்பாடு தட்டுப்பாட்டால் விலையும் பல மடங்காகிவிட்டது கோழிகளுக்கு காய்ச்சல் வந்தது என்று சும்மா சுகமாக நின்றவைகளையும் அழித்துப் போட்டார்கள் இப்ப புதுதாகக் குஞ்சுகளும் வேண்டாம் என்று அங்கே குடும்பக் கட்டுப்பாடு திட்டமும் வந்துள்ளது இது என்ன கலிகாலம் அமெரிக்காவில் முட்டைப் பொரியல் கூடக் கிடையாதா...... ஊரில் வீட்டில் கோழிகள் இருந்தன அப்பா முதன் முதல் ஒரு கோழி வாங்கித் தந்தார் ஒரு விதமான மஞ்சள் கலரில் வெள்ளைப் புள்ளிகள் போட்ட கோழி அது அது வீட்டுக்கு வரும் போது அதன் வயது நாலு மாதங்கள் இருக்கும் ஒரு நாள் முழுக்க கிளிசரியா மரத்தடியில் கட்டி வைத்து விட்டு அடுத்த நாள் அவிழ்த்துவிட்டேன் அப்படியே வீட்டை சுற்றிச் சுற்றியே நின்றது அடுத்த அடுத்த மாதம் முட்டை போட ஆரம்பித்தது முதல் முட்டை போடு முன் பெரிய எடுப்புகள் எல்லாம் எடுத்தது ஒரு அதிகாலையிலேயே தலைமாட்டில் வந்து பதுங்கியது அது கேரிக்கொண்டு திரியும் போதே முட்டை போடப் போகின்றது என்று ஆச்சி சொன்னார் அதைப் பிடித்து கடகத்தால் கவிழ்த்து வைக்க முட்டை போட்டது சுற்றி இருந்த மூன்று வீட்டுக்கும் அது முட்டை போட்ட விசயம் தெரிந்தது அப்படி ஒரு விடாத கொக்கரிப்பு பன்னிரண்டு முட்டை போட்டு விட்டு அது அடை என்று ஒரு மூலையில் குணுகிக்கொண்டு படுத்துவிட்டது பின்னர் அயலூரில் முட்டை வாங்கி அடை வைத்து குஞ்சுகள் வந்து வந்து அதன் குடும்பம் பெருகியது பின்னர் முட்டை நாங்கள் கடையில் வாங்கவே இல்லை சரி இங்கும் கோழி வளர்ப்போம் என்று விசாரித்தேன் அக்கம்பக்கத்தவர்கள் சம்மதம் சொல்லவேண்டும் முதலில் பின்னர் ஒரு பெரிய கூடு வேண்டும் கோழிகளுக்கு தீனி வாங்க வேண்டும் கடையில் மருத்துவரும் வந்து போவார் அப்பப்ப அந்த செலவும் இருக்கின்றது கோழிக் குஞ்சுகளும் வாங்க வேண்டும் அதை மறந்துவிட்டேன் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் முதல் முட்டை கிடைக்கும் போது செலவு ஆயிரம் டாலர்கள் ஆகி விடும் என்று கணக்கு காட்டுகின்றது கலிகாலம் தான்!6 points
-
சும்மா ஒர் பதிவு
4 pointsஒரு காலத்தில் எமது முன்னோர்கள் வயல்வெளிகளின் அருகாமையில் கோவில் கட்டி அதற்காக,குளங்களை வெட்டினார்கள்,கேணிகளை உருவாக்கினார்கள்..மன்னர்கள் ஆட்சியில் அல்லது வேளான்மை சமுகம் உருவான காலத்தில் இது ஒர் சமுக கட்டமைப்பு ..சகல கிராமங்களிலும் உள்ள பழைய கோவில்களில் இந்த டெம்பிளெட்டை அவதானிக்கலாம்.. இதற்கு பணம் எங்கிருந்து வந்திருக்கும்? ஊர்மக்கள் அல்லது மன்னர்கள் கொடுத்திருப்பார்கள் அநேகமாக பொதுமக்கள் பொதுநோக்குடன் கொடுத்த பணமாக த்தான் இருக்க வேண்டும் ...அந்த பணம் மக்களின் நலன் கருதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை . எமது கண் முன்னே குளங்கள்,கேணிகள்(மருதடி கேணி..காக்கா சுயா),கிணறுகள் இன்றும் சாட்சியாக இருக்கின்றது... இன்று புலம் பெயர் நாடுகளிலிருந்து கிடைக்கு பணம் போன்று அன்றைய காலத்தில் நிச்சயம் பணம் கிடைத்திருக்காது.இருந்தும் உள்ளூர் மக்கள் சொந்த வருமானத்தில் இப்படியான செயல்களை செய்து உள்ளனர் யாழ் மாவட்டம் ஆறுகள்,கங்கைகள்,அருவிகள் நிறைந்த மாவட்டம் அல்ல.... விவசாயத்திற்கு மழை நீரை பெரிதும் நம்பிருந்தார்கள்.மழையும் வருடத்தில் ஒர் குறிப்பிட்ட காலத்தில் தான் பெய்யும்..மழையும் சில நாட்களில் அடித்து பெய்யும் அந்த நீர் வீணாக கடலுக்கு சென்று கலந்து விடும்.இந்த நீரை சேமித்து விவசாயம் செய்யத்தான் குளங்கள்,கேணிகள்,கிணறுகள் கட்டினார்கள். இவை யாவும் பொது நோக்குடன் பொது இடத்தில் பொதுமக்களினால் பொது நன்மைக்கு ...பொது மக்கள் சேர்த்த பணத்தில் ...என நான் நினைக்கிறேன் ...நிச்சயமாக மருதடியான் தனிமனிதனாக இவற்றை(கேணி கட்டுதல்,கிணறு வெட்டுதல்,குளம் அமைத்தல்) செய்திருக்கமுடியாது....அவர் ஓரு சக்தியாக செயல் பட்டிருக்கலாம்...(ஏன் வீணாக் மருதடியானை எங்கன்ட அலட்டலுக்குள்ள பிறகு மனுசன் என்னோட கோபித்து கொண்டால்) ஊர் மக்கள் பணம் கொடுத்து,அந்த பணத்தில் ஊர்மக்கள் பயன் அடையும் வகையில் நல்ல திட்டங்களை அமுல் படுத்தியுள்ளார்கள்.அதற்கு பொதுக்கட்டமைப்பு (கோவில் சபை அல்லது கிராம சபை) துணை புரிந்திருக்கின்றது.. குளம் ... மழை நீர் சேர்ந்து நிற்கும் .நீண்ட நாட்களின் நீரோட்டத்தின் விளைவாக ஊரில் உள்ள மண்,கல்,சகதி மற்றும் கழிவுகள்(வாழைமரம்கள்,தடிகள்,மரங்கள்) யாவும் நீரோடு சென்று அடியில் படிந்து குளத்தின் ஆழத்தை குறைத்து விடும்..நீர் வற்றிய பின்பு, கழிவுகள்,மண் போன்றவற்றை அன்று வாழ்ந்த மக்கள் சிரமதான முறையில் துப்பரவு செய்தார்கள் ...தூர் வாருதல் என சொல்வார்கள் ...பொது நோக்குடன் (கிளீன் சிறிலங்கா 30 நாட்கள்.கிளீன் அப் அவுஸ்ரேலியா நாள் 30 வருடங்கள்)எங்கன்ட சனத்தின்ட கிளீன் அப் குளம் எப்பவோ தொடங்கிட்டுது ...(கிளீன் அப் செய்யும்பொழுது கள்,தேனீர்,வடை,மோதகம்..போன்றவற்றை ஊர்மக்கள் செய்து கொடுப்பார்கள் ஊர்மக்கள் கூடி சேர்த்த பணம்) கிளீன் அப் அவுஸ்ரேலியா செய்யும் பொழுதும் நாலு பேர் சேர்ந்து காசு போட்டு பியர் அடிக்கிறனாங்கள் ..,அதற்காக அவுஸ்ரேலியா அரசு எங்கள் மீது குற்றம் சாட்ட முடியாது , "அரசாங்க காசில பியர் குடிக்கிற எண்டு" இந்த குளங்கள் விவசாயத்துக்கு மட்டுமல்ல கால் நடைகளின் தாகத்தையும் தீர்க்க உதவியிருக்கு,இருக்கின்றது . கேணிகள் இவற்றில் அநேகமானவற்றுக்கு மூன்று பக்கமும் சுவர் கட்டியிருப்பார்கள் ஒரு பக்கம் திறந்த வாறு இருக்கும் படிகள் கட்டியிருக்கும் ,மழை நீர் ஒடிவந்தாலுமொரு பக்கத்தினால் மட்டுமே அடி தளத்துக்கு செல்ல முடியும் ஊர் கழிவுகள் குறைவாக அடித்தளத்திற்கு செல்லும் இதனால் நீண்ட நாட்களுக்கு தூர் வார வேண்டிய அவசியமில்லை ... இன்று கேணிகளை மூடிவிடுகிறார்கள் ,அல்லது தீர்த்தமாடுவதற்காக கேணிக்குள் சிறிய கட்டித்தை கட்டிவிடுகிறார்கள் ...இதை செய்வது ஊரில் உள்ள மேதாவிகள் .. கிணறு. முக்கியமாக தோட்ட கிணறுகள் அதிலும் யாழ் மாவட்ட கிணறுகள் மழை நீர் ஓடுவதற்கு ஏற்ற வகையில் ஒர் பாதை விட்டு கட்டியிருப்பார்கள் .தற்பொழுது இந்த கிணறுகள் முற்றாக மூடி கட்டப்பட்டிருக்கின்றது அதுபோக யாரும் கிணறு வெட்டுவதில்லை ,பணம் அதிகம் வேண்டும் வெட்டுவதற்கு. கேணிகளுக்கு பக்கத்தில் கிணறு வெட்டியிருப்பார்கள் ,முட்டாள்கள் தண்ணீர் கேணியில் இருக்கின்றது வீணாக கிணற்றையும் வெட்டி யிருக்கிறாங்கள் பழசுகள் என திட்டியும் இருக்கின்றேன் .ஆனால் அதன் முக்கியத்துவம் பின்பு தான் அறிந்து கொண்டேன்.கோயில்களுக்கு சற்று தொலைவில் இருக்கும் வீட்டு கிணற்று தண்ணீர் உவர் தன்மையுடன் இருக்கும் ஆனால் கோயில் கிணற்று தண்ணீர் நன்னீராக இருக்கும் .கேணிகளில் சேரும் மழைநீர் கிணற்றுக்கு உள்ளே மண்,சிறுகட்கள் ஊடாக வடிகட்டப்பட்டு ஊற்றாக உட்செல்வதனால் தான் என நினைக்கிறேன். மேலும் தோட்டங்கள் ,வயல்களுக்கு மத்தியில் கிணறுகள் வெட்டியிருப்பார்கள் அங்கும் நன்னீர் தான். குழாய் கிணறு பாவனைக்கு வந்துவிட்டது.அதிக இடம் தேவையில்லை .. மொத்தத்தில் மழை நீரை நிலத்தடியில் சேமித்து வைக்கும் சகல பொறிமுறைகளும் இல்லாமல் போகின்றது. அன்றைய ஊர்மக்கள்,மன்னர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) இருந்த அறிவு ,தற்பொழுது நூறு வீதம் கல்வியறிவு கொண்ட ஊர்மக்களுக்கும் இல்லை ,அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் இல்லை ,கோவில் நிர்வாக சபைக்கு போட்டி போட்டு கொண்டு வரும் தலைவர்கள்,உறுப்பினர்களுக்கும் இல்லை..... கோயில்கள்,பாடசாலைகள் எல்லாம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், தேவைகளை இப்பொழுது வாழும் மக்கள் மறந்துவிட்டனர் போல உள்ளது .4 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, வில் யங், ரொம் லதம் ஆகியோரின் சதங்களுடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 320 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 260 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 60 ஓட்டங்களால் வெற்றியீட்டியது நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய 8 பேருக்கும் புள்ளிகள் இல்லை! முதலாவது போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஏராளன் 2 2 வீரப் பையன்26 2 3 சுவி 2 4 அல்வாயன் 2 5 தமிழ் சிறி 2 6 நிலாமதி 2 7 வசீ 2 8 செம்பாட்டான் 2 9 குமாரசாமி 2 10 நியாயம் 2 11 சுவைப்பிரியன் 2 12 எப்போதும் தமிழன் 2 13 புலவர் 2 14 கோஷான் சே 2 15 நீர்வேலியான் 2 16 கந்தப்பு 2 17 ஈழப்பிரியன் 0 18 ரசோதரன் 0 19 நுணாவிலான் 0 20 வாத்தியார் 0 21 நந்தன் 0 22 வாதவூரான் 0 23 பிரபா 0 24 கிருபன் 0 கருத்துக்கள மாற்றம் வர்ணங்களைக் கொண்டுவரவில்லை!4 points
-
ஒரு முட்டை ஆயிரம் டாலர்
4 pointsஎனது நண்பர் ஒருவர் கோழி வளர்த்து அடிச்சுச் சாப்பிட ஆசைப் பட்டு (பெரிய வளவுடன் வீடு ) பக்கத்துக்கு கிராமத்துக்குள் சென்று அஞ்சாறு கோழி வாங்கிவந்து நிலத்தோடு கூடு செய்து விட்டு வளர்த்து வந்தார் . ...... முதல் கோழி சமைக்கும்போது எங்களுக்கும் சாப்பிட சந்தர்ப்பம் கிடைத்தது . .......ஒரு மாதம் வரை நன்றாகத்தான் போச்சு . ...... அன்று சமைப்பதற்கு கோழி பிடிக்க போயிருக்கிறார் ....... உள்ளே ஒரு பாம்பு இருந்து அவரை வரவேற்றிருக்கு . ........ பின் நாங்கள் எல்லாரும் சென்று ஒருமாதிரி அவரை வெளியேற்றி விட்டம் ....... மிச்ச கோழிகளை அன்றே உரித்து குளிர்பெட்டியில் அடக்கம் செய்தாயிற்று . .......!4 points
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
நீங்கள் மேலே குறிப்பிட்ட எதையும் நான் மறுக்கப்போவதில்லை. இவை நடந்தவை தான். ஆனால் நீங்கள் சாட்டும் குற்றச்சாட்டு அனைவரிலும். உங்களுக்கு அந்த நாலு பேரைத்தெரிவதும் எனக்கு மிச்ச நாலாயிரம் பேரை எனக்கு தெரிந்திருப்பதும் தான் வித்தியாசம். தம் வாழ்வையே அர்ப்பணித்து இன்றும் விசா இல்லாமல் வீடில்லாமல் வேலை கிடைக்காமல் எம்மவராலையே வேலை தடுக்கப்பட்டு பிள்ளைகளுக்கு கூட உயர் கல்வி மறுக்கப்பட்ட (பெற்றோர் சிவப்புக்குறி) இருக்கும் நாடுகளில் கூட அடுத்த நகரங்களுக்கு செல்லமுடியாமல் பக்கத்து நாடுகளுக்கு கூட குடும்பத்துடன் செல்ல முடியாமல் கணவன் ஒரு நாட்டிலும் மனைவி பிள்ளைகள் இன்னொரு நாட்டிலும் வாழ்ந்தபடி...... இப்படி பல நூறு பேர் இன்றும். வேண்டும் என்றால் வாருங்கள். சந்திக்க செய்கிறேன். இப்படியானவர்களின் தொடர்பில் நான் இருக்க இங்கே வந்து நாலு பேரை வைத்து அவ்வளவு பைரையும் நாறடிக்கும் போது என்ன பேச வரும்? கிட்டத்தட்ட உங்கள் செயல் முரளிதரன் தவறு செய்தது கிழக்கு மாகாணமே ஊத்தவாளிகள் என்று எழுதுவதற்கு சமன்.3 points
-
கோவையில் 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
பாரதிதாசன் தனது துன்பம் நேர்கையில் பாட்டில் இப்படி எழுதி இருப்பார்…. அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே அறிகிலாத போது - யாம் அறிகிலாத போது - தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ இயம்பிக் காட்ட மாட்டாயா? இது ஒரு பெண் குழந்தையை நோக்கி ஒரு வயதானவர் பாடும் பாட்டு. அறம் எது அறமில்லாதது எது? என தெரியாத மனநிலையில் இருக்கும் ஒரு வயதானவருக்கு, திருக்குறளை பாடிக்காட்டி அந்த பெண் பிள்ளை அறத்தை நினைவூட்டுவதாக இதை நான் விளங்கி கொள்வேன். சிலர் எழுதும் எழுத்துகள் அவர்களுக்கு பெண் பிள்ளைகள் இருக்க வாய்ப்பிலை என்றே நினைக்க வைக்கிறது (இந்த திரியிலும், ஏனையதொரு திரியிலும்). பராவாயில்லை - குறைந்த பட்சம் statutory rape என்றால் என்ன என்பதை கூகிள் பண்ணியாவது பாருங்கள். 👆 இங்கே சிவப்படித்திருக்க வேண்டியது இதற்கு மட்டுமே.3 points
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்காவிற்கு ரஷ்யாவிடமிருந்தூ ஏதோ சில பொருட்கள் மிகவும் மலிவு விலையில் அல்லது இலவசமாக கிடைக்கப் போகின்றன.............. ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போகமாட்டார்.... இது எல்லா நாடுகளுக்கும் ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும். ஒரு நாடு, ஒரு இனம் அதன் சுயநிர்ணய உரிமையை இழப்பது கொடுமையான, அநியாயமான ஒரு நிகழ்வு. எங்களுக்கு நடந்தது, இன்று உக்ரேனுக்கு நடக்கின்றது, இதே பலசாலிகளால் நாளை இன்னும் பலருக்கும் இதே நிலைமை வரும்................. பாதிக்கப்பட்டவர்களாவது பாதிக்கப்படுகின்றவர்களுக்கு ஒரு ஆதரவுக் குரலையாவது பதிவு செய்யவேண்டும்.3 points
-
நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் ஏமாற்றிவிட்டார்.. விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு
நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் இமான் ஏமாற்றிவிட்டார்.. பாடகி விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு V VasanthiUpdated: Wednesday, February 19, 2025, 17:01 [IST] ஒரு சில பாடல்கள் கேட்கும் போது நம்முடைய மனதிற்குள் இருக்கும் சந்தோஷங்கள், கவலைகள், பாசம் உட்பட எல்லா உணர்வுகளும் நம்மை மீறி வெளிப்படும் அதுபோல பாடல்களை பாடும் பாடகர்கள் மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் வைக்கம் விஜயலட்சுமியும் ஒருவர். இவர் தமிழில் வெளியான குக்கூ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "கோடை மழை போல" என்ற பாடல் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு கேட்பவர்களை ஆட வைக்கும் "சொப்பன சுந்தரி நான்தானே", "காக்...கா முட்டை... காக்கா முட்டை கண்ணால" என்ற பாடல்களை இவர் பாடி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. அதுபோல "மண்ணிலே ஈரம் உண்டு" என்ற பாடல் பலருடைய பெருந்தன்மையை பறைசாற்றும் இடமாக பாடியிருந்தார். அதற்கு பிறகு பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். வைக்கம் விஜயலட்சுமி பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பலருக்கும் முன்மாதிரியாக தன்னுடைய குரல் மூலம் தனித்து நிற்கிறார். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் ஆனது ஆனால் மாப்பிள்ளை வீட்டினர் போட்ட கண்டிஷன் தனக்கு செட் ஆகவில்லை என்று திருமணத்திற்கு மறுத்துவிட்டார். பிறகு குடும்பத்தினரின் வற்புறுத்தலினால் 2018 ஆம் ஆண்டு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண பங்க்ஷனில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர். ஆனாலும் இவர்களுடைய திருமண வாழ்க்கை சில வருடங்களில் முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது தன்னுடைய கணவர் குறித்து பல குற்றச்சாட்டுகளை விஜயலட்சுமி கூறியிருந்தார் அது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பிறகு தொடர்ந்து சினிமாக்களில் பாட்டு பாடி கொண்டிருக்கிறார். அதுபோல விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கெஸ்ட் ஆகவும் கலந்து கொண்டு வருகிறார். இதன் நிலையில் பேட்டி ஒன்றில் அவர் பேசும் போது தன்னுடைய வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை குறித்து பேசி இருக்கிறார். அதில் தனக்கு இளையராஜா, ஏ ஆர் ரகுமான், வித்யாசாகர் கூடவும் பாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார். அதோடு தன்னை பார்ப்பதற்காக ஜெயச்சந்திரன், மலையாள டைரக்டர் கமல் என பலர் வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதுபோல இமான் சார் தன்னை பார்க்க வருகிறேன் என்று சொன்னார் ஆனால் அவர் இப்போ வரைக்கும் என்னை பார்க்க வரவே இல்லை என்று ஏக்கமாகவும் பேசி இருக்கிறார். https://tamil.oneindia.com/television/singer-vaikom-vijayalakshmi-accuses-music-composer-iman-details-emerge-681381.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி ஓடியாந்திருப்பியளே 🤣2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்பிடி ஒருவரை விடமுடியாது. அது ஒரு பதினாறு தலை ராவணன். அது சேர்ந்து அந்த எட்டுக்கால் பூச்சிய நசிக்கிய தருணம் இது. போடுறா வெடிய. 😉2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்திரா பந்து வீச, ஷியா சென்சுரி அடிக்க… தேர்ட்மானில் விபி சிங் தலையை சொறிந்து கொண்டு நிற்பார்… அதெல்லாம் கிரிகெட்டின் பொற்காலம் அண்ணா🤣2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போகிற போக்கை பார்த்தால் இன்றைக்கு பாபர் விசேட பிரியாணி இருக்கும் போல. பாபரும் துரத்தி அடிப்பதில் வல்லவர். இன்று பிடிகளை தவறவிட்ட பாகிஸ்தான் வீரர்கள், கிளென் பிலிப்சிடம் பாடம் படிக்க போகலாம். ரிஷ்வான் விலக்கி அடித்த அந்தப் பந்தை காற்றில் பறந்து பிடித்தாரே ஒரு பிடி. இந்தச் சுற்றுப்போட்டியின் சிறந்த பிடியாக அது அமையப் போகிறது.2 points
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
நீங்கள் தேவையற்று இந்த மாபியாக்களை புனிதர்களாக்காட்டமுனைகின்றீர்கள். இதில் மறைப்பதற்கு என்ன உள்ளது. 2009 மே மாதம் வரை, மக்கள் சேகவர்கள் போல் வேஷமிட்டு மக்களிடம் நிதி சேகரிப்பதற்காக மக்களிடம் நெருங்கிய தொடர்பில் இருந்து விட்டு, 2009 மே மாதத்தின் பின்னர் சடுதியாக தொலைபேசிகளை கூட நிறுத்தி விட்டு மக்களிடம் இருந்து விலகினார்கள். இந்தத்திருட்டுத்தனத்தை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். மக்கள் ஒப்பு கொண்ட தொகையை விட மிக அதிகமாக மக்களுக்கு கூட தெரியாமல் அவர்கள் நம்பிக் கொடுத்த சம்பள படிவங்களில் மோசடியாக மாற்றங்களை செய்து வங்கிகளில் கடனாக பெற்று மக்களை வருமானத்துக்கு அதிகமாக கடனாளியாக்கிவிட்டு எந்த குற்றவுணர்சசியும் இன்றி அனைத்து பணத்தையும் தாயகத்துக்கு அனுபகி விட்டோம் என்று பொய்யுரைத்த இவர்கள் புனிதர்களா? இவர்களில் யாரும் அனேமதயங்கள் அல்ல. மிக நீண்ட காலமாக தேசிய செயற்பாடாளர்களாக வலம் வந்தவர்களே. தலைவரால் நேரடியாக அனுப்பியவர் என்று சிலரை இறுதி யுத்த காலப்பகுதியில் அறிமுகப்படுத்தி கடன் பெற்று விட்டு பின்னர் எல்லாம் முடிந்த பின்னர் அந்த நபர கள் தலைமறைவாகி விட, தமக்கு ஒன்றும் தெரியாது பணம் முழுவதும் அவர்களிடம் தான் என்று நடித்த இவர்களை நீங்கள் ஏன் புனிதராக்க முனைகின்றீர்கள்? இவர்கள் எல்லோரும் கூட்டு களவாணிகள் தானே! போரட்டத்தின் முடிவை ஏற்கனவே 2009 ன் ஆரம்பத்திலேயே கணிப்பிட்டு அறிந்தும் அதை மறைத்து திட்டமிட்டு மக்களிடம் கொள்ளையில் ஈடுபட்ட இவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதில் எந்த பிரயோசனமும் இல்லை. நீங்கள் என்னை கோடரிகாம்பு என்று திட்டியதை போலவே இந்த மாபியாக்களும் நிதி சேகரிக்கும் போது தர மறுத்த, கேள்வி கேட்ட மக்களை கோடரிகாம்புகள், துரோகிகள் என்று அவர்களுக்கு முத்திரை குத்தியவர்களே. இது இவ்வாறனவர்களின் பழக்க தோசம். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அப்படி தானே இருப்பர். துவாரகாவை அறிமுகப்படுத்தி மீண்டும் பணவேட்டையை நடத்த திட்டமிட்டு அதற்கு ஆதரவான பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்கள் அனைவருமே முன்னாள் பிரபலமான தேசிய செயற்பாட்டாளர்களே. இன்றும் இப்படியான வேலைகளில் பாதாள உலக கும்பல்கள் போல் ஈடுபட்டுக்கொண்டுள்ளார்கள். இத்திரியில் பேசப்பட்ட பொஸ்கோ என்ற நபரை பற்றி எனக்கு தெரியது. ஆனால் அவர் நிரபராதி என்றால் நிச்சயம் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- ஒரு முட்டை ஆயிரம் டாலர்
2 pointsசிட்னியியிலும் முட்டை வலு தட்டுப்பாடு தான்..! அண்டைக்கு ஒரு நாள் சுப்பர் மார்க்கட்டில முட்டையைக் கண்டு வாங்கியாச்சு. விலை போட்டிருக்கவில்லை. வீட்டை வந்து மனிசி விலையப் பார்த்தா வழக்கத்தை விடவும் இரண்டு டொலர் கூட. விசாரிச்சுப் பாத்தால் இந்தியாக் காறர் தான் இப்ப மனேச்சராம். எங்க போனாலும் எங்களைக் கலைக்கிறாங்கள் இவனுகள்…! எங்கட கோழிகளுக்கு பேர்ட் புளூவாம்🥱2 points- தேர்தலை புறக்கணித்து தனிநாடு கேட்பதுதான் உண்மையான தமிழ்தேசியம்.. சீமான் பேசுவது தமிழ் தேசியமே அல்ல..
தேர்தலை புறக்கணித்து தனிநாடு கேட்பதுதான் உண்மையான தமிழ்தேசியம்.. சீமான் பேசுவது தமிழ் தேசியமே அல்ல..
1 pointசீமானுக்கு எதிராக திமுக காழ்ப்புணர்வுடன் அவதூறைகளை பேசிக்கொண்டிருக்க இன்றைய திருமாவின் பேட்டி கருத்தியல் ரீதியான பேச்சாக மிகவும் கவனிக்ககூடியதாக நியாயமான கேள்விகளுடன் அமைந்தது.. பார்க்கலாம் நாளை சீமானின் பதிலை.. திருமா பேசியது 👇 சீமான் ரொம்ப குதர்க்கவாதம் பேசுறாரு.. ஒரு கருத்தியல் விவாதம்னா நம்ம வரவேற்கலாம்.. பெரியாரை வந்து விமர்சிக்க கூடாதுன்னு எல்லாம் கிடையாது.. பெரியாரே சொல்லி இருக்கிறாரு என் கருத்தை ஒருத்தன் வந்து மறுத்து பேசினான்னா அது முற்போக்கானதா இருந்தா அதை நான் வரவேற்கிறேன்னு சொல்லி இருக்கிறாரு..என்னுடைய கருத்தை நான் சொன்னேங்குறதுக்காக யாரும் ஏத்துக்க கூடாது அதுல எது சரின்னா ஏத்துக்கோ அப்படிங்கிறதுதான்… அது பெரியாரே ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் அது.. அதனால பெரியார் வந்து விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் கிடையாது.. அம்பேத்கரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் கிடையாது.. ஆனா சீமான் பேச்சு பெரியாரை கொச்சைப்படுத்துவதாகவும் அவதூறுபரப்புவதாகவும் தான் இருக்கு.. அவர் வந்து கருத்தியல் ரீதியா கடவுள் இல்லைன்னு ஏன் சொன்னாரு கடவுள் இருக்கிறார் அப்படின்னு பேசுங்க.. பார்ப்பன எதிர்ப்பு ஏன் வைத்தார்.. பார்ப்பன எதிர்ப்பு தப்பு.. அவங்க சிறுபான்மையினர்.. சிறுபான்மை துவேஷம் கூடாது.. பார்ப்பனர்கள் என்ன ஆதிக்கம் பண்ணிட்டாங்க இவர் வந்து பார்ப்பனர்களை எதிர்க்கிறார்.. இது ஒரு சமூகத்துக்கு எதிரான வெறுப்பு அரசியல் தானே.. அப்ப பெரியார் பேசுறது ஒரு துவேஷ அரசியல்.. அதனால நான் எதிர்க்கிறேன் அப்படின்னு பேசுங்க நம்ம விவாதிப்போம்.. ஆனா பெரியார் பேசின அரசியல்தான் தமிழ் தேசியத்திற்கு எதிராய் இருக்கு அப்படின்னு சொல்றதும் பிறமொழி வெறுப்பை வந்து விதைப்பதும் எல்லாம் டோட்டலா அவர் வந்து தமிழ் தேசியம் பேசல.. அவர் வந்து ஒரு வெறுப்பு அரசியலை பார்ப்பன அரசியலுக்கு அல்லது இந்த சனாதன அரசியலுக்கு துணை போகக்கூடிய ஒரு அஜெண்டாதான் அவர்கிட்ட இருக்குது.. அவர் பேசுறது தமிழ் தேசியமே கிடையாது..தேசியம்ங்கிற சொல்லே முதல்ல தமிழ் சொல் கிடையாது.. அப்படி பார்த்தா தூய தமிழ் வரணும்னா தேசியம்ங்கிற சொல்லே தமிழ் சொல் கிடையாது.. தமிழ் தேசம் அப்படிங்கறது தமிழரசன் பேசின அரசியல்.. அது தமிழ் தேசியம்.. எங்களுக்கு தனி தமிழ்நாடு வேணும்.. நாங்க இந்திய பேராதிக்கத்தின் கீழ இருக்க மாட்டோம்.. எங்களுக்கு இந்திய தேசியம் வேண்டாம்.. நாங்க வந்து தனி தமிழ்நாடு கோறுகிறோம் என்பதுதான் தமிழ்நாடு தமிழரசன் பேசின அரசியல்.. தனி தமிழ்நாடு கோரிக்கை தான் தமிழ் தேசியமா இருக்க முடியும்.. இப்ப நாம பேசுறது வந்து மொழி உரிமையும் இன உரிமையும் உள்ளடங்கிய இந்திய தேசத்திற்குள் கட்டுப்பட்ட ஒரு அரசியல்… இப்ப இவர் வந்து தேர்தல்ல நிக்கிறார்…அப்படின்னா இந்த எலக்டோரல் சிஸ்டத்தை ஏத்துக்கிறார்.. அப்படின்னா இந்த கான்ஸ்டிடியூஷன் ஏத்துக்கிறார்.. அப்படின்னா இந்த இந்தியாவையும் ஏத்துக்கிறாரு.. அப்ப இந்தியாவை ஏத்துக்கிட்டாருன்னா இந்திய தேசியத்தை ஏத்துக்கிட்டாருன்னா தமிழ் தேசியம் எங்க இருக்கும்..? தமிழ்தேசியம்ங்கிறது சிங்கள பேரினவாதத்தை மட்டுமே எதிர்க்கல.. எங்களுக்கு வெறும் எங்க தமிழ் மொழியையும் ஆட்சி மொழியா வச்சு அவங்க கோரிக்கை வைக்கல.. எங்களையும் ஒரு தேசிய இனமா அங்கீகரிச்சு எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுங்கன்னு அவரு கேக்கல..முதலமைச்சர் பதவி கொடுங்கன்னு கேக்கல.. முதலமைச்சர் தரேன்னு சொல்லவே வேணான்ட்டாருல.. அவரு அதை வடக்கு கிழக்கு மாகாணத்தை ஒரே ப்ராவின்ஸா மாற்றி அந்த ப்ராவின்ஸ்க்கு அவரை முதலமைச்சர் ஆக்குறோம்னு தானே சொன்னாங்க.. அதுதானே 13 அமெண்ட்மென்ட்.. அதை அவர் ஏத்துக்கல.. அப்ப அவருடைய கோரிக்கை என்ன..? நாங்க வேற நீங்க வேற.. எங்களுக்கு தனியா எங்க தாயகத்தை பிரிச்சு கொடுங்க.. அதான் தாயகம் தேசியம் தன்னுரிமைங்கிறது.. தன்னாட்சிங்கிறது.. தாயகம் தேசியம் தன்னாட்சி.. எங்கள் நிலப்பரப்பை எங்கள் தாயகமா ஏத்துக்குங்க.. எங்களுடைய அரசியல் எங்களை வந்து ஒரு தேசியமாகவும் தேசிய இனமாகவும் ஏத்துக்குங்க.. அதனால எங்களை நாங்களே ஆண்டுகொள்வதற்கான இறையாண்மையை எங்கள்ட்ட ஒப்படைங்க.. இதுதான் வந்து தமிழ் அரசியல்.. தமிழ் தேசிய அரசியல்.. இப்ப இவங்க அதை வைக்கிறாங்களா..? தாயகம் தேசியம் தன்னாட்சிங்கிறதை வைக்கிறாங்களா..? வெறும் மொழி உணர்வையும் இன உணர்வையும் பேசிட்டு இருக்காங்க.. தெலுங்கு எதிர்ப்பை முன் வைக்கிறாங்க தெலுங்கர்களால் தான் இங்க எல்லாமே போச்சுன்றாங்க.. அந்த வரிசையில பார்க்கும்போது பெரியார் வந்து ஒரு கன்னடர்.. அவரு அந்த கட்சியில இருந்தவங்க எல்லாம் தெலுங்கர்கள்.. அதனால இங்க தெலுங்கர்களால்தான் நாங்க அழிஞ்சு போயிட்டோம் அப்படிங்கிறார்கள்.. இது வந்து கருத்தியல் ரீதியாவே வரலாற்று தவறு.. வரலாற்றுப் பிழை இந்திய தேசியம் தான் தமிழ் தேசியத்திற்கு எதிரா இருக்க முடியும்.. தெலுங்கு தேசியம் தமிழ் தேசியத்திற்கு எதிரா இருக்க முடியாது.. டெல்லியில் இருக்கிறது ஹிந்தி பேசக்கூடிய ஆட்சியாளர்கள் தான் இருக்குறாங்க.. தெலுங்கு பேசக்கூடிய ஆட்சியாளர்கள் அங்க இல்லை.. எந்த வகையில வந்து தமிழ் தேசியத்திற்கு வந்து பெரியார் முட்டுக்கட்டையா இருந்துட்டாரு..? தமிழ்ங்கிற உணர்வையும் தமிழன் என்கிற உணர்வையும் அவர் சைமல்டேனியஸா சமகாலத்துல முன் வச்சிருக்கிறாரு.. தமிழை ஏன் பழிச்சாருன்னா தமிழ்ல வந்து அறிவார்ந்த செய்திகள் இல்லை.. எல்லாம் புராண குப்பைகள் இருக்குன்றதுனால ஆத்திரப்பட்டாரு..காட்டுமிராண்டி காலத்துல இருந்த அதே மொழியாதான் இது வளர்ச்சி இன்னும் வளர்ச்சி அடையல.. ஒரு நவீனமா அப்டேட் ஆகல சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இதுக்குள்ள வரல.. அதுக்கான டெர்மினாலஜி அதுக்கான சொல்லகராதிகள் இதுல இல்ல அப்படிங்கிற ஆத்திரத்துல அவர் சொன்னாரு.. ஒரு விரக்தியின் விளிம்புல இருந்து அதை சொன்னாரே தவிர கன்னட பற்று வைத்துக்கொண்டு தமிழை வந்து அவர் பழிக்கல.. சீமான் என்ன தோற்றத்தை உருவாக்குறாருன்னா அவர் கன்னடரா இருந்ததுனாலதான் தமிழர்களை கொச்சைப்படுத்தி இருக்கிறாருன்றாரு:: தமிழ் அறிஞர்கள் பங்களிப்புங்கிறது வேற..ஒரு அரசியல் களத்தில் நின்னு ஒருத்தர்செய்யக்கூடிய பங்களிப்புங்கிறது வேற.. அண்ணா பேசுனது எல்லாரும் தமிழறிஞர்கள் பேசி இருக்காங்க.. ஆனா அண்ணா ஏன் நம்ம ஒரு ஐக்கனா பார்க்கிறோம்னா அவர் அரசியல் களத்தில் நின்னு பேசினார்.. அதே மாதிரி அம்பேத்கர் பேசின அரசியலை அதுக்கு முன்னாடி எவ்வளவு பேர் பேசி இருக்காங்க.. ஆனா அம்பேத்கர் அரசியல் களத்தில் நின்று செஞ்சதுனால நம்ம வந்து தூக்கி பிடிக்கிறோம்.. அரசியல் களத்தில் நின்னு செய்யறவங்களுடைய பங்களிப்பையை நம்ம இலக்கிய தளத்தில் நின்னவங்கள கூட வந்து ஒப்பிடக்கூடாது.. மாபோசி காலத்துல பேசின அரசியல் வந்து அவங்களும் அன்னைக்கு வந்து திராவிட வெறுப்புங்கிறதை முன்னிறுத்தி தான் பேசுனாங்களே தவிர தனித்தமிழ்நாடு கோரிக்கை யாரும் வைக்கலையே.. மாபோசி தனி தமிழ்நாடு கோரிக்கை வச்சாரா அல்லது வேற யாராவது தனி தமிழ்நாடு கோரிக்கை வைக்கிறாங்களா இப்ப இவங்களே தனித்தமிழ்நாடு கோரிக்கை வைக்கிறாங்களா..? வைக்க முடியாது இல்லையா..? அப்ப முடியாதுன்னா நீ பேசுறது தமிழ் தேசியம் கிடையாது.. அது மொழி உரிமை.. இன உரிமை.. அவ்வளவுதான் நீங்க கான்ஸ்டிடியூஷன் ஏத்துக்கிட்டு எலக்சன்ல நிக்கிறீங்கன்னு சொன்னா நீங்க பேசுறது போலி.. அது தமிழ் தேசியமா இருக்க முடியாது.. நீங்க தமிழ் தேசியம் பேசுறதுனா இந்த கான்ஸ்டிடியூஷன் நான் ஏத்துக்கல இந்த எலக்சன்ல நான் நிக்க மாட்டேன் எங்க தமிழ்நாடு தனி நாடு.. எங்களை இந்த இந்தியாவுக்குள்ள வச்சிருக்காதீங்க நாங்க தனி தமிழ்நாடு வென்றெடுப்போம்னு சொல்லுங்க.. யாரும் சொல்ல முடியாது.. அப்படி வெளிப்படையா சொல்ல முடியாது அப்ப எதுக்காக நீங்க பெரியாரை கொச்சைப்படுத்துறீங்க..? பெரியார் எப்படி தமிழ் தேசத்துக்கு முட்டுக்கட்டையா இருக்க முடியும்..? பெரியாருடைய அரசியல் முழுக்க முழுக்க பார்ப்பனிய எதிர்ப்பு,பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு.. அதனாலதான் திராவிடம் என்கிற சொல்லாடலே வருது.. திராவிடத்தை பெரியார் கண்டுபிடிக்கல திராவிடம் என்கிற சொல் வந்து பண்டிதர் அயோத்தியதாசரால தான் இங்க முழக்கத்துக்கே வருது..அவர்தான் திராவிடம் என்கிற சொல்லை முதல்ல கையாளுறாரு அதுக்கு முன்னாடி எத்தனையோ பேர் பயன்படுத்தி இருக்கலாம் ஆனா ஆரியத்திற்கு எதிரான ஒரு சொல்லாடலா திராவிடத்தை கையாண்டவர் பண்டிதர் அயோத்தியதாசர்.. அப்படி துணிச்சல் இருந்தா நீங்க பண்டிதர் அயோத்திதாசர் விமர்சனம் பண்ணுங்க.. திராவிடத்தை அவர்தான் முதல்ல அறிமுகப்படுத்தினார்.. ஆதி திராவிடம் என்கிற சொல்லை இவர் இரட்டமலை சீனிவாசன் அறிமுகப்படுத்தினார்.. ரெவரன் ஜான் ரத்தினம் திராவிடர் கழகம் என்கிற பெயரிலேயே ஒரு அமைப்பு உருவாக்கினார் 1880களில் அல்லது 82, 83… அவர் இந்த அமைப்பை உருவாக்கும் போது பெரியாருக்கு மூணு வயசு நாலு வயசு.. திராவிடர் கழகம் என்கிற பெயரிலேயே ஒரு அமைப்பு உருவாக்கினார் அப்ப அவங்க எல்லாம் வந்து தமிழ் தேசியத்துக்கு எதிராக இருந்தாங்களா..? அன்னைக்கு மதராஸ் மாகாணத்துல எல்லா மொழியும் பேசக்கூடியவங்களா இருந்தாங்க அந்த காலத்துல நாம பிறந்திருந்தாலும் அப்படித்தான் இயக்கத்தை உருவாக்கி இருப்போம்.. இன்னைக்கு திராவிடர் என்கிற சொல்லு தேவையில்லை தமிழன்னு சொன்னா போதும் தமிழர் தேசியத்தை பேசினா போதும்னா அது ரைட்.. நமக்கு திராவிடம் என்கிற சொல் தேவையில்லைன்னா அத சொல்லலாம்.. ஆனா அதுதான் தமிழ் தேசிய தேசியத்தையே வந்து முட்டுக்கட்டையா இருந்துச்சு.. பெரியாரால தான் அங்க தமிழர்களே எழுச்சி பெறாமல் போனாங்க.. பெரியாரை ஒழிச்சாதான் தமிழ் தேசியத்தை கொண்டு வர முடியும்ங்கிறது தவறு.. மேலும் அவர் பேசியது 👇1 point- மாற்றி அடித்தார் அர்ச்சுனா எம்.பி
நீங்கள் சொல்லுறதும் சரி. ✅ நான் மேலே… பகிடிக்குத்தான் எழுதினேன், சீரியசாக எடுக்காதீர்கள். 🙂1 point- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
பாக்க நம்ம அர்ச்சனா மாதிரி இருக்கார் 🤣1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதிகமாக அலம்பித் தோற்றது என்ற வகையில் நான் தான் கடைசி...... ஆனால் போட்டியில் சேர்ந்த வரிசையிலேயே சமனானவர்களை வரிசைப்படுத்துவதால், இன்று நமக்கு கீழேயும் நட்புகள் இருக்கப் போகின்றார்கள்.................. ஆனால் பாகிஸ்தான் கிணத்துக்குள்ள தலைகீழாகப் பாயும் போல தெரியுதே, நம்மளையும் இழுத்துக் கொண்டு.............🤣.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நீங்கள் புள்ளி வைச்சாலே அண்ணை கோலம் போடுவார்!1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
🤣.............. என்னை விட உங்களுக்கு இன்றைய கிரிக்கெட் கொஞ்சம் கூடத் தெரிந்திருக்கின்றது.....................🤣.1 point- சும்மா ஒர் பதிவு
1 pointமழைநீரை அப்படியே கடலுக்குள் ஓடவிடும் பாதகமான நிலை இன்று பல நாடுகளிலும் நகர்ப்புற வளர்ர்சிகளின் பின் வந்துவிட்டது. நிலத்தடி நீரின் மட்டம் மிகவும் கீழே போய் சுத்தமான குடி தண்ணீருக்கு அலையும் மக்கள் தொகை ஒரு பெரிய தொகை என்ற தரவுகளும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஒரு ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மழை நீரை தேக்கி, நிலத்துக்குள் விடும் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது. இங்கு லாஸ் ஏஞ்சலீஸ்ஸில் பெரிய வெளிகளில் நீரைத் தேக்கி வைக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார்கள்................... அதை ஆரம்பித்த பின் மழை தான் பெய்யவில்லை............1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1 point- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
1 point- சும்மா ஒர் பதிவு
1 pointஅன்று எல்லோருடைய மனங்கள் விசாலமாக இருந்தது . ....... இன்று எல்லாம் சுருங்கி விட்டது ........அதுதான் உண்மை . ....... இன்று பொது தொண்டுகள் செய்யவும் அரசு நிதி தரவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றார்கள் . ........ !1 point- இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்?
இந்த விடயத்தில் யாரும் யாரையும் தேற்ற முடியாதுதான் .......... ஆயினும் நாங்கள் எங்கள் குடும்பம் என்று வாழவும் ஓடவேண்டி இருக்கிறதே , ஆகவே நாம்தான் எம்மைத் தேற்றிக்கொண்டு வாழ வேண்டும் . ...... எதோ எனது தாயாரும் மாமியாரும் இங்கு என்கூடவே இருந்ததால் அவர்களை நல்லபடியாக அனுப்பி வைக்க முடிந்தது . .......!1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நீங்கள் பெரியப்பு ஜிந்தாபாத் 🙏😁👍 குருநாதர் ரசோதரன் அல்லா அக்பட் 🙏😁👍...................1 point- 'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்காவும், ஐரோப்பாவும்….. உக்ரைனுக்கு ஆயுதத்தையும், பணத்தையும் கொடுத்து ரஷ்யாவுடன் தொடர்ந்து சண்டை பிடி என்று… கொம்பு சீவி விட்டு விட்டு, இப்ப ஒரேயடியடியாக உக்ரைனை மாட்டி விடுகின்றார்கள். சொந்தப் பலத்தை நம்பாமல், மற்றவனின் ஏவல் பேச்சைக் கேட்டு… போரில் குதித்த உக்ரைன் தனது நாட்டை… கற்குவியலாக மாற்றியதும் அல்லாமல், நாட்டின் பெரும் பகுதியை ரஷ்யாவிடம் இழந்து நடுத்தெருவில் நிற்கின்றது. செலன்ஸ்கியின் கோமாளித்தனத்துக்கு கிடைத்த விலை இதுதான்.1 point- ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவை வாரி வழங்கும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் ஆரம்பம் - சம்பியனுக்கான 71 கோடி ரூபாவுக்கு குறிவைத்துள்ள 8 அணிகள் 19 FEB, 2025 | 10:17 AM (நெவில் அன்தனி) மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவுக்கு மேல் வாரி வழங்கும் 9ஆவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் அத்தியாயம் கராச்சியில் புதன்கிழமை (19) நடைபெறவுள்ள நடப்பு சம்பியன் பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டியில் சம்பியன் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் கிடைக்கவுள்ள 71 கோடி ரூபாவுக்கு குறிவைத்து எட்டு முன்னணி அணிகள் இரண்டு குழுக்களில் போட்டியிடவுள்ளன. துரதிர்ஷ்டவசமாக முன்னாள் சம்பியன்களான இலங்கையும் மேற்கிந்தியத் தீவுகளும் இந்த வருட சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெறவில்லை. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் எட்டு இடங்களிலிருந்த அணிகளே சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான முதல் எட்டு அத்தியாயங்களில் விளையாட தகுதி பெற்றன. ஆனால், 2025 சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான தகுதிகாண் சுற்றாக 2023 உலகக் கிண்ணப் போட்டி அமையும் என திடீரென ஐசிசி அறிவித்தது. இதற்கு அமைய இந்தியா, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் முதல் எட்டு இடங்களைப் பெற்று சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. தனது கடைசி நான்கு போட்டிகளில் ஆப்கானிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், நியூஸிலாந்து ஆகிய அணிகளிடம் இலங்கை தோல்வி அடைந்ததால் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் தகுதியை இழந்தது. மேற்கிந்தியத் தீவுகள் 2023 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்கான தகுதியைப் பெற்றிருக்கவில்லை. இந்த சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் பங்களாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் அகிய அணிகள் ஏ குழுவிலும் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் பி குழுவிலும் பங்குபற்றுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் சுற்றில் தலா 6 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் முதல் சுற்று முடிவில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 4 அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும். இந்த வருடப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக நடப்பு சம்பியன் பாகிஸ்தான் விளங்குகிறது. ஆனால், இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் யாவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்த சுற்றுப் போட்டியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி முழு கிரிக்கெட் உலகினாலும் வெகுவாக கவரப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இந் நிலையில் பங்குபற்றும் அணிகளின் தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம். ஏ குழு நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (பங்களாதேஷ்) ஐசிசி போட்டி ஒன்றில் மூன்றாவது முறையாக பங்களாதேஷ் அணியை 26 வயதான ஷன்டோ வழிநடத்துகிறார். பங்களாதேஷ் தங்கள் முதலாவது சம்பியன் பட்டத்திற்கு குறிவைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னேற்றத்தை நோக்கி நகரும் அணி மீது நம்பிக்கையை ஷண்டோ வெளிப்படுத்தியதுடன் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் தமது அணி பலரை ஆச்சரியப்படுத்தும் எனவும் கூறினார். பங்காளதேஷுக்கு இந்தப் போட்டி எத்தகைய முக்கியம் வாய்ந்தது என்பதை விளக்கிய ஷன்டோ, 'இப் போட்டி மிகவும் முக்கியமானது. நாங்கள் இங்கு வருவதற்கு முன்னர் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடாததால் இந்த முறை கிண்ணத்தை வெல்ல விரும்புகிறோம். இந்த முறை எங்களுக்கு மிகச் சிறந்த அணி இருப்பதால் கிண்ணத்தை வென்றெடுக்க முடியும் என நினைக்கிறோம்'என்றார். 'அது கடினமானது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால். நாங்கள் எங்களது திட்டத்தை சரியாக செயற்படுத்தினால் உரிய தினத்தில் எங்களால் வெல்ல முடியும்' என ஷன்டோ மேலும் தெரிவித்தார். குழாம்: நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), சௌம்யா சர்க்கார், தன்ஸித் ஹசன், தௌஹித் ரிதோய், முஷ்பிக்குர் ரஹிம், மஹ்முத் உல்லா, ஜாக்கர் அலி ஆனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசெய்ன், தஸ்கின் அஹ்மத், முஷ்தாபிஸுர் ரஹ்மான், பர்வெஸ் ஹொசெய்ன் ஈமோன், நசும் அஹ்மத், தன்ஸிம் ஹசன் ஷக்கிப், நஹித் ராணா. ரோஹித் ஷர்மா (இந்தியா) தனது மூன்றாவது சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் விளையாடும் ரோஹித் ஷர்மா, முதல் தடவையாக இந்திய அணியின் தலைவராக விளையாடுகிறார். 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இறுதிப் போட்டிவரை சிறப்பாக வழிநடத்திய ரோஹித் ஷர்மா, கடந்த வருடம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவை உலக சம்பியனாக உயர்ந்த நிலையில் இட்டார். எட்டு அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டுவரும் சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் ஏற்கனவே ரோஹித் ஷர்மா வெற்றியை ருசித்துள்ளார். இந்தியா இரண்டாவது முறையாக 2013இல் சம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரித்தபோது இந்தியாவின் துணிச்சல்மிக்க ஆரம்ப வீரராக ரோஹித் தனது வருகையை வெளிப்படுத்தினார். இந்த சுற்றுப் போட்டியில் முன்னிலை அடைய அனுகூலமான அணியாக விளங்கும் இந்தியா, தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையான வெற்றியை ஈட்டியிருந்தது. அந்தத் தொடரில் ரோஹித் உட்பட மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை வேகமாகக் குவித்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர். 'ஆடுகளம் நுழைந்து தங்களது வழியில் விளையாடுவதற்கு தேவையான சிறிது சுதந்திரம் குழாத்திற்கு இருக்கிறது' என ரோஹித் ஷர்மா கூறினார். 'உலகக் கிண்ணம் அதற்கு ஒரு சரியான களமாக இருக்கும். அங்கு நாங்கள் அதைத் தொடர்ந்து செய்து அணியை கட்டியெழுப்ப விரும்புகிறோம். சில சமயங்களில் விஷயங்கள் சரியாக அமையாமல் போகலாம், ஆனால் அது பரவாயில்லை' என்றார் ரோஹித் ஷர்மா. குழாம்: ரோஹித் ஷர்மா (தலைவர்) ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல், ரிஷாப் பான்ட், ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, மொஹமத் ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவிந்த்ர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி. மிட்செல் சன்ட்னர் (நியூஸிலாந்து) மற்றுமொரு ஐ.சி.சி. போட்டியில் அணித் தலைவராக அறிமுகமாகிறார் சென்ட்னர். இந்த அனுபவம் வாய்ந்த சுழல்பந்துவீச்சாளர், ஏற்கனவே நேர்மறையான அறிகுறிகளை வெளிப்படுத்தி தலைமைப் பொறுப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்பதாக பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடையாத சம்பியன் அணியாக நியூஸிலாந்தை சென்ட்னர் வழிநடத்தியிருந்தார். சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதற்கு சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் வெற்றிபெறுவதற்கு நியூஸிலாந்து வீரர்கள் சிலர் சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தனர். இது அணிக்கு நல்ல சமிக்ஞையாகும். 'வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது' என மும்முனை தொடரில் நியூஸிலாந்து வெற்றிபெற்ற பின்னர் சன்ட்னர் கூறியிருந்தார். 'வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வீரர்கள் பிரகாசிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் முதலாவது ஆட்டத்தை விளையாடும் வரை அது ஒன்றுமில்லை' என்றார் மிச்செல் சென்ட்னர். குழாம்: மிச்செல் சென்ட்னர் (தலைவர்), மிச்செல் ப்றேஸ்வெல், மார்க் செப்மன், டெவன் கொன்வே, கய்ல் ஜெமிசன், மெட் ஹென்றி, டொம் லெதம், டெரில் மி ச்செல், வில் ஓ'ரூக், க்லென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்த்ரா, நேதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங், ஜேக்கப் டஃபி. மொஹம்மத் ரிஸ்வான் (பாகிஸ்தான்) சொந்த மண்ணில் சம்பியன் பட்டத்தை தக்கவைக்க முயற்சிக்கும் பாகிஸ்தான் அணியை ஐசிசி போட்டியில் முதல் முறையாக அணித் தலைவராக ரிஸ்வான் வழிநடத்தவுள்ளார். பாகிஸ்தான் அணித் தலைவராக கடந்த வருடம் பொறுப்பேற்ற ரிஸ்வான், ஏற்கனவே அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க ஒருநாள் தொடர் வெற்றிகளை ஈட்டிக்கொடுத்துள்ளார். சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்பதாக நடைபெற்ற மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை இறுதிப் போட்டிக்கு ரிஸ்வான் வழிநடத்தியிருந்தார். ஆனால், நியூஸிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட ரிஸ்வான், 'கிரிக்கெட்டை நேசிக்கும் நாடு என்ற வகையில் இந்த வருடம் ஐசிசி சம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். அண்மைக் காலத்தில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டது, இந்த மெகா போட்டியை நோக்கிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. மேலும் எங்கள் சொந்த மைதானத்தில் நடைபெறும் எட்டு அணிகள் கொண்ட இந்த போட்டியில் திறமையாக விளையாட நாங்கள் ஆவலுடன் உள்ளோம்' என்றார். குழாம்: மொஹமத் ரிஸ்வான் (தலைவர்) பாபர் அஸாம், பக்கார் ஸமான், கம்ரன் குலாம், சவூத் ஷக்கீல், தய்யப் தாஹிர், பாஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி அகா, உஸ்மான் கான், அப்ரார் அஹ்மத், ஹரிஸ் ரவூப், மொஹம்மத் ஹஸ்னைன், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி. பி குழு ஹஷ்மத்துல்லா ஷஹிதி (ஆப்கானிஸ்தான்) இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை வெற்றிகரமாக வழிநடத்திய அணித் தலைவர். அவரது வழிநடத்தலில் பலம்வாய்ந்த அணிகளான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகியவற்றை அதிரவைத்து ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகும் ஆப்கானிஸ்தானுக்கு கடந்த வருடம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரஙகு வெற்றிகரமாக அமைந்தது. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அறிமுக அணியாக பங்குபற்றுகின்றபோதிலும், நாங்கள் ஆதிக்கம் செலுத்தும் நாளில் எத்தகைய அணியையும் வெற்றிகொள்ளும் திறன் கொண்டது என்று ஷஹிதி நம்புகிறார். 'ஒவ்வொரு வடிவத்திலும் ஒவ்வொரு அணியையும் வெற்றிகொள்ளும் திறமை எங்களிடம் இருப்பதால் நாங்கள் முன்னேற முயற்சிப்போம்,' என்று அவர் அண்மையில் கூறினார், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்காக தங்களது திறமையை வளர்துக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 'எங்களது அடுத்த பெரிய சவால் சம்பியன்ஸ் கிண்ணம். இது எங்களுக்கு ஒரு பெரிய போட்டி. எனவே அதனை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்' என்றார் அவர். குழாம்: ஹஷ்மத்துல்லா ஷஹிதி (தலைவர்), இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், சிதிக்குல்லா அத்தல், ரஹ்மத் ஷா, இக்ரம் அலிகில், குல்பாதின் நய்ப், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், மொஹமத் நபி, ராஷித் கான், நங்கேயாலியா கரொத், நூர் அஹ்மத், பஸால்ஹக் பாறூக்கி, பரித் மாலிக், நவீத் ஸத்ரான். ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா) அவுஸ்திரேலிய அணியின் முழுநேர தலைவர் பெட் கமின்ஸுக்குப் பதிலாக, துடுப்பாட்ட நட்சத்திரம் ஸ்டீவன் ஸ்மித் நடப்பு ஒருநாள் உலக சம்பியன் அவுஸ்திரேலியாவை சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வழிநடத்துகிறார். சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் அவர் தலைமை வகிப்பது இது இரண்டாவது தடவையாகும். 2017 சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயற்பட்ட ஸ்மித், ஒரு தலைவராக ஏராளமான அனுபவங்களுடன் சம்பியன் கிண்ணத்தை எதிர்கொள்கிறார். அவுஸ்திரேலிய அணியில் பெட் கமின்ஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய முக்கிய வீரர்கள் இடம்பெறாதது அவ்வணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், அவர்களுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட வீரர்கள் மீது ஸ்மித் நம்பிக்கை கொண்டுள்ளார். 'அவர்கள் அனைவருக்கும் அவரவருக்கு ஏற்ற தனித்துவமான திறமைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். நான் அவர்களை வழிநடத்துவது, அவர்களுடன் கலந்துரையாடுவது, சரியான நேரத்தில் அவர்களிடமிருந்து சரியானவற்றைப் பெற முயற்சிப்பது என்பனவே எனது பணி ஆகும். எமது அணியில் அனுபவம்வாய்ந்த வீரர்கள் பலர் இடம்பெறுவதால் எங்களால் சாதிக்க முடியும் என நம்புகிறேன்' ஸ்மித் கூறினார். குழாம்: ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), சோன் அபொட், அலெக்ஸ் கேரி, பென் த்வாஷுய்ஸ், நேதன் எலிஸ், ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க், ஆரொன் ஹாடி, ட்ரவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜோன்சன், மானுஸ் லபுஷேன், க்லென் மெக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மெத்யூ ஷோர்ட், அடம் ஸம்ப்பா. ஜொஸ் பட்லர் (இங்கிலாந்து) 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்தை சம்பியனாக்கிய ஜொஸ் பட்லர், 2019 உலகக் கிண்ண வெற்றியில் ஒரு சிறந்த வீரராகத் திகழ்ந்தவர். அதிரடி ஆட்டக்காரரான பட்லர், தனது மூன்றாவது சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்கிறார். சம்பியன்ஸ் கிண்ணத்தில் முதல் முறையாக சம்பியனாகும் குறிக்கோளுடன் முழு வீச்சில் இங்கிலாந்து களம் இறங்கவுள்ளது. இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வியடைந்த போதிலும், இந்த சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வாய்ப்புகள் குறித்து பட்லர் நம்பிக்கையுடன் உள்ளார். 'நாங்கள் இன்னும் எங்களுக்கு இருக்க வேண்டிய திறமையை அண்மிக்கவில்லை. தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ திறமையாக விளையாடினால் எங்களால் சிறந்த இடத்தில் இருக்க முடியும் என்பதை அறிவோம். சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் நாங்கள் சவால் மிக்க அணியாக இருக்க முடியும் என்று நம்புகிறோம்' என இந்தியாவுக்கு எதிரான தொடருக்குப் பின்னர் பட்லர் கூறியிருந்தார். குழாம்: ஜொஸ் பட்லர் (தலைவர்), ஜொவ்ரா ஆச்சர், கஸ் அட்கின்சன், டொம் பென்டன், ஹரி ப்றூக், ப்றைடன் கார்ஸ், பென் டக்கட், ஜமி ஓவர்ட்டன், ஜமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், ஆதில் ராஷித், ஜோ ரூட், சக்கிப் மஹமூத், பில் சோல்ட், மார்க் வூட். டெம்பா பவுமா (தென் ஆபிரிக்கா) 2023 உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்காவை அரை இறுதிக்கு வழிநடத்திய டெம்பா பவுமா, அதனைத் தொடர்ந்து சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக விளையாடவுள்ளார். அங்குரார்ப்பண சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் 1998இல் சம்பியனான தென் ஆபிரிக்காவுக்கு 27 வருடங்களின் பின்னர் கிண்ணத்தை மீண்டும் வென்று கொடுக்க டெம்பா பவுமா முயற்சிக்கவுள்ளார். உலக கிரிக்கெட் அரங்கில் தென் ஆபிரிக்காவை புகழ்பெறச் செய்வதில் முக்கிய பங்காற்றியுள்ள பவுமா, ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தனது அணியை வழிநடத்தியுள்ளமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி சவால்மிக்கதாக இருந்தாலும், தென் ஆபிரிக்காவால் சம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்பதில் பவுமா நம்பிக்கையுடன் உள்ளார். 'உலகக் கிண்ணத்தில் போட்டிகள் அதிகம் என்பதால் திட்டங்களை வகுத்து முன்னேறுவதற்கு நேரம் இருக்கிறது. ஆனால், சம்பியன்ஸ் கிண்ணத்தில் முதல் சுற்றில் 3 போட்டிகள் மாத்திரம் இருப்பதால் அப்படி செய்ய முடியாது. எனினும், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் ஒரு படி முன்னே நகர்வோம் என நம்புகிறோம்' என்று தென் ஆபிரிக்க அணித் தலைவர் டெம்பா புவுமா தெரிவித்தார். குழாம்: டெம்பா பவுமா (தலைவர்), டோனி டி ஸோர்ஸி, மார்க்கோ ஜென்சன், ஹென்றிச் க்ளாசன், கேஷவ் மஹராஜ், ஏய்டன் மார்க்ராம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி நிகிடி, கெகிசோ ரபாடா, ரெயான் ரிக்ல்டன், தப்ரெய்ஸ் ஷம்சி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், ரசி வென் டேர் டுசென், கோபின் பொஷ் மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவை வாரி வழங்கும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் ஆரம்பம் - சம்பியனுக்கான 71 கோடி ரூபாவுக்கு குறிவைத்துள்ள 8 அணிகள்1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1 point- சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
இது நியாயம் அற்ற செயல். சீமான் மட்டும் வெளிநாடுகளில் இருந்து டொலர்களிலும் பவுண்ஸ்சிலும் பணத்தை அள்ளும் போது திமுக 200 ரூபாய்- 1பவுண்ஸ் 85 பென்ஸ் கோப்பி குடிக்கவும் காணாது. சம்பிரதாயபடி முதல் அண்ணியாக வந்தவர் விஜயலட்சுமி தானே மதிப்பு கூடியவர்1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பையன் சார், உங்களை இங்கு எல்லோரும் நன்கு அறிவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத, எந்த வித கணக்குகளும் போடாமல், அப்படியே நினைப்பதைச் சொல்லும், கள்ளம் கபடமற்ற ஒரு மனிதன் நீங்கள். என்னூரில் 'அவன் ஒரு அப்பிராணி......' என்று இப்படியானவர்களை சொல்லுவார்கள். ஒருவரை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் நல்ல நட்பின் அடிப்படையே. நீங்கள் நீங்களாகவே இருங்கள்.............. மற்றவர்களும் அப்படியே அவர்களாகவே இருந்து கொள்ளட்டும். மிகவும் முயன்று தமிழில் நீண்ட பந்திகள் எழுதுகின்றீர்கள்.......👍. சில சொற்களை தவிர்க்க முடிந்தால் தவிர்க்க முயலுங்கள்.....🙏. சிவப்பு புள்ளிகள் பற்றிக் கவலைப்பட ஒன்றுமேயில்லை, பையன் சார்............... ஒன்றை விரும்புவதை விட, வெறுப்பதற்கே மனிதனுக்கு அதிக வலு தேவைப்படுகின்றது. ஒரு மனிதன் வெறுக்கும் விடயங்களே அந்த மனிதனை அறியாமல் அந்த மனிதனை ஆட்கொள்கின்றது. வெறுப்பதனால் மனிதன் தன்னையே அழிக்கின்றான். 'விருப்பம்' அல்லது 'விருப்பம் இல்லை' என்று எதையும் சாதாரணமாக கடந்து போவது நல்ல ஒரு நிலை........ இல்லாவிட்டால் மற்றவர்கள் அவர்களின் செய்கைகளாலும், சொற்களாலும் எங்களை கட்டுப்படுத்துவது போலாகி விடும்.....🤝.1 point- மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
உங்களிடம் இந்த முரண்பாட்டை அடிக்கடி காண்கிறேன், எனவே மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. ஒரு பிழையைச் சுட்டிக் காட்டுவது எப்படி அழிவுக்கும், ஒற்றுமையின்மைக்கும் வழி வகுக்கும் என எனக்கு விளங்கவில்லை! புலிகள் பற்றி ஐலண்ட் எழுதவில்லை, புலிகளுக்கு பணம் சேகரித்த ஆட்கள் பின்னர் வழி தவறிப் போயிருப்பதைச் சொல்கிறார் (இதையே மேலே நானும் அமைப்புகளை உடைப்போருள் ஒரு தரப்பாகச் சுட்டியிருக்கிறேன்). இதற்கு, இல்லாத புலிகள் அமைப்பு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நீங்கள் ஐலண்ட் போன்றவர்களிடம் காட்டும் ஆத்திரத்தில் ஒரு துளியைத் தன்னும் உங்களுக்குத் தெரிந்த நேர்மையற்ற சேகரிப்பாளர்களிடம் காட்டுவதில்லை.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வணக்கம் பெரியப்பு இந்த போட்டி தொடங்க முதல் நீங்கள் என்னை தான் முதல் கேட்டிங்கள் இந்த போட்டிய நடத்துவோமா என்று நான் ஆம் சொன்னேன் நடுவில் விட்டு சென்றால் அது உங்களுக்கு நான் செய்யும் துரோகம் மாதிரி ஏதோ ஒரு குற்ற உனர்வு மாதிரி என் மனம் சொல்லுது இந்த போட்டி முடியும் வரை உங்களுடன் இணைந்து இருக்கிறேன் பெரியப்பு🙏👍................1 point- வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை மேலும் ஓரங்கட்டிவிடும் - ஐங்கரநேசன்
என்று நாம் எமது பாரம்பரிய உணவுப்பழக்கங்களை கை விட்டமோ அன்றிலிருந்து இனம் புரியாத நோய் நொடிகளும் எம்மை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டது. உணவே மருந்து எனும் காலம் போய் மருந்தே உணவு என்ற காலத்தில் நிற்கின்றோம். வெளிநாட்டவர்கள் கூட துரித உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டி வருகின்றனர்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- இனித்திடும் இனிய தமிழே....!
1 pointநல்ல அர்த்தமுள்ள தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு... 1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது. 2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது. 3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது. 4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம். 5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. 6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது. 7. கறந்த பால் காம்பில் ஏறாது. 8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை. 9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம். 10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான். 11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு. 12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா? 13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல, சில்லரைக் கடன் சீரழிக்கும். 14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா? 15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. (எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்). 16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா? (இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?) 17. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது.. (எல்லாம் காலத்தின் கோலம்.) 18. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான். (அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்). 19. உள்ளப் பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு மனம் ஏங்குதாம். 20. இறுகினால் களி. இளகினால் கூழ். 21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது. (யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்) 22. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு. (பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது) 23. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன? (எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது). 24. விசாரம் முற்றினால் வியாதி. (கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்). 25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம். (நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.) 26. காற்றில்லாமல் தூசி பறக்காது. (நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி) 27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும். (நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்). 28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது. (துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?) 29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது. (பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி) 30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது. 31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான். (தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது. 32. வாங்குகிற கை அலுக்காது. (வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது.) 33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும். (என்ன சாமர்த்தியம் பாருங்கள்!) 34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா? 35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு. 36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது. 37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி. 38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது. 39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான், அரைப்பணம் உடையான் ஆடி விழுவான். 40. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா? 41. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்? 42. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்? 43. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது. 44. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன? 45. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்படி எல்லாம் சொல்லிவிட்டுப் போனால் இந்தத் திரி சோர்ந்துபோய்விடும். எனக்கும் புள்ளிகள் போட மனம்வராது @வீரப் பையன்261 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
சரி, இதைத் தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறேன், மன்னியுங்கள்! ஆனால், இப்படி இருக்கும் அமைப்புகளில் பிளவுகள் ஏற்பட என்ன காரணங்கள் என்று பார்த்தால்: 1. இலக்கு மாறியமை. 2. இலக்கு மாறாமல், அதை அடையும் வழிகள் மாறியமை. 3. சொத்து/வருமானம் பற்றிய பிரச்சினைகள். 4. யார் தலை எனும் ஈகோ இவற்றுள், 1 இனை தனித்தனியாக துரோகமா அல்லது இலக்கு குறுக்கப் பட்டதா என்று ஆராய்ந்து தான் தீர்ப்பெழுத முடியும். எடுத்த வாக்கில் "துரோகி" என்று சொல்ல முடியாது. 2 வது காரணம், என் பார்வையில் துரோகம் அல்ல. சாத்தியமான வழிகள் வெளிச்சூழலுக்கேற்ப மாறிக் கொண்டிருக்கும். இதனை ஏற்றுக் கொள்ளா விட்டாலும், எதிரிகளாகப் பார்க்க வேண்டியதில்லை. சிறந்த உதாரணம், தாயகத்தில் தமிழரசுக்கும், தேசிய முன்னணிக்கும் இடையேயான வேறு பாடு. 3, 4: இது எங்கள் சமூகத்தில் இருந்து அகற்றப் பட வேண்டிய களைகள். இக்காரணங்களால் அமைப்புகளைப் பிரிப்போரை (இவர்களைத் தான் சாந்தி தன் பதிவில் சுட்டியிருந்தார் என நினைக்கிறேன்) ஒற்றுமை வேண்டுமென்பதற்காக சேர்த்து வைத்திருக்க வேண்டியதில்லை. அப்படி வைத்திருப்பது, மட்டத்தேள், கொடுக்கான், பாம்பு ஆகியவற்றை "இயற்கையை நேசிக்கிறோம்" என்ற பெயரில் வீட்டினுள் வைத்திருப்பது போல ஆகும். மேற்கூறிய காரணங்கள் தான் ஒருவரை தமிழ் தேசிய அமைப்புகளில் ஒற்றுமை கருதி வைத்திருப்பதா அல்லது அகற்றுவதா என்று தீர்மானிக்க வேண்டுமென நினைக்கிறேன்.1 point- வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு; முல்லை மக்களின் நீண்டகால பிரச்சினையை தீர்த்துவைப்பதில் மகிழ்ச்சி - ரவிகரன் எம்.பி
வட்டுவாகல் பாலம் சுமார் 600 மீட்டர் நீளமுடையது, மேலும் தினமும் 40,000க்கும் மேற்பட்ட மக்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பாலம் இல்லாத நிலையில், மக்கள் போக்குவரத்தில் பெரும் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர், குறிப்பாக மழைக்காலங்களில் நீரில் மூழ்கும் பாலம் காரணமாக பயணம் மிகவும் கடினமாகிறது. இந்தப் பாலம் வன்னி மக்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு முக்கியமானது. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் போன்றோர் தங்கள் பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதற்கு இந்தப் பாலம் தேவையானது. 2009 இறுதி யுத்தத்தின்போது இந்தப் பாலம் பெரும் சேதத்திற்கு உள்ளானது. அதன் பின்னர் இது முறையாக புதுப்பிக்கப்படவில்லை, இது மக்களின் துன்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. புதிய பாலம் அமைப்பது இந்தப் பகுதியின் மீளமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு தேவையானது.1 point- அறிவித்தல்: யாழ் இணைய பராமரிப்பு தடங்கல்
வணக்கம், யாழ் இணைய வழங்கி சில புதுப்பித்தல்களுக்கு உள்ளாவதால் யாழ் இணைய சேவைகள் செவ்வாய் 18 பெப் ஐரோப்பிய நேரம் 09:30 இலிருந்து அண்ணளவாக ஒரு மணித்தியாலத்திற்கு தடங்கலுக்கு உள்ளாகலாம்.1 point- இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்.
1 pointஇன்று பிறந்த நாள் காணும் நுணாவிலானுக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்.1 point- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் ஒரு பதிவு இட்டு வேறு யாரும் உங்களுக்கு விருப்பப்புள்ளி இடும்வரை உங்கள் பதிவில் விருப்பப்புள்ளித் தெரிவு உங்களுக்குக் காண்பிக்காது. மேலே கிருபன் குறிப்படும் ஏராளனினின் புரிதலும் சரியே.1 point- "கிளீன்......"
1 pointஎதிர்பார்ப்பும் வேண்டும்...உதவியும் செய்யவேண்டும் ..மறுப்பதற்கிலலை ...அது விழலுக்கு இறைத்த நீராகக் கூடாது... அதனைவிட....புலம்பெயர்ந்தவர்கள் ... அன்னிய இனமாமகப் பார்க்கின்ற சூழ்நிலையே அங்கு தோன்றுகின்றது...இது மிகவும் வருத்தப்படவேண்டிய விசயம்...என் அனுபவம் ...நாம் தேவையில்லை எனில் எம் பணம் அவைக்கு ஏன்...நடைமுறைகளைப் பார்க்கும்போது ...விரைவில் கைகழுவி விடப்படுவோம்...முதியோர் இல்லத்தில் வாழும் முதியவர்..நிலைதான் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்படும்1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- அறிவித்தல்: யாழ் இணைய பராமரிப்பு தடங்கல்
முன்னரே குறிப்பிட்டது போன்று இன்றிரவுடன் பழைய இணைய வழங்கிக்கு உரிய காலம் முடிவடைவதால் ஒரு வாரத்திற்கு முன்னரே சில ஆரம்பச் செயற்பாடுகளைச் செய்து ஆயத்தப்படுத்திக் கொண்டு, நேற்று முன்தினம் இரண்டு மணி நேரத்திற்குள் மாற்றி விட முடியும் என்று நம்பிக்கையுடன் இணைய வழங்கி மாற்றத்தைத் தொடங்கிய பின், தொடர் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலைவந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட அசெகரியங்களுக்கும் / தடங்கலுக்கும் வருத்தத்தினை யாழ் இணையம் தெரிவித்துக் கொள்கின்றது.1 point - ஒரு முட்டை ஆயிரம் டாலர்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.