Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    3061
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    38770
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19129
    Posts
  4. அக்னியஷ்த்ரா

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1962
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/25/25 in all areas

  1. மூன்று கோழிக்குஞ்சுகள் -------------------------------------- 'பாடசாலை நாட்களில் உனக்கு எத்தனை பெண் நண்பிகள் இருந்தார்கள்?' 'அப்படி ஒருவருமே இருக்கவில்லை............' கொஞ்சம் திடுக்கிட்ட அவன் என்னைக் கூர்ந்து பார்த்தான். 'ஏன்.......... உன்னுடைய வகுப்பில் பெண் பிள்ளைகள் எவரும் படிக்கவில்லையா............' 'இல்லை.......நான் ஒரு ஆண்கள் பள்ளியில் படித்தேன்.' 'அது என்ன ஆண்கள் பள்ளி என்றால்...........' 'ஆண்கள் பள்ளி என்றால் அங்கே ஆண்பிள்ளைகள் மட்டுமே படிப்பார்கள். பெண்கள் இருக்கமாட்டார்கள்...........' அப்படியான பாடசாலைகளும் உலகில் இருக்கின்றனவா என்று கேட்டுவிட்டு, அவன் இதுவரை கேட்டிராத ஒரு புது நகைச்சுவைக்கு சிரிப்பது போல சத்தமாகச் சிரித்தான். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த எல்லோரும் திரும்பி எங்களையே பார்த்தனர். எனக்குத் தான் அது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அவன் அதைப் பொருட்படுத்தவே இல்லை. அவன் சிரித்து முடித்து விட்டு, 'பெண்கள் பாடசாலை என்றும் உங்கள் நாட்டில் இருக்கின்றதா............' என்று கேட்டான். இன்னும் அதிகமாகச் சிரிப்பானோ, நிலத்தில் விழுந்து உருளப் போகிறானோ என்ற தயக்கத்தில் பதில் சொல்லாமல் இருந்தேன். ஆனால் அவன் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 'ஆ................. பெண்கள் பாடசாலைகளும் இருக்கின்றன...........' இந்த தடவை அவன் சிரிக்கவில்லை. அவன் கடுமையாக யோசிப்பது தெரிந்தது. நான் அவனுடன் வேலை செய்ய ஆரம்பித்து ஆறு மாதங்களே ஆகியிருந்தன. அவன் கடுமையாக யோசிக்கின்றான் என்பதை என்னால் கண்டுபிடித்துவிடமுடியும். அவன் வேலையில் அடிக்கடி யோசிப்பான். அவன் அவனுடைய நாட்டிலிருக்கும் பல்கலையில் மிகச் சிறப்பான சித்தி பெற்று, பின்னர் மேற்படிப்பிற்காக அமெரிக்கா வந்தவன். அப்படியே இங்கேயே தங்கிவிட்டான். எங்களுடன் வேலை செய்த பலரும் அவன் கொஞ்சம் மந்தமானவன் என்றே நினைத்திருந்தனர். ஆனால் உண்மையில் அவன் ஒரு அதிபுத்திசாலி. ஓரளவு உயரமான அவன் மெல்லிதாக இருந்தான். முதுகு கொஞ்சம் வளைந்து இருந்தது. அதனால் அவனது தோற்றத்தில் ஒரு பலவீனம் தெரிந்தது. அந்தப் பலவீனத் தோற்றத்தை வைத்தே அவனைப் பற்றிய கணிப்புகள் உருவாகி இருந்தன. அவன் தனக்கு தன் நாட்டில் பாடசாலை நாட்களில் ஒரு பெண் நண்பி இருந்ததாகச் சொன்னான். அவர் தான் இன்று உன்னுடைய மனைவியா என்ற என் கேள்வியை காதில் வாங்காதது போல யன்னல்களுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். சிறிய மௌனத்தின் பின், தான் ஒரு கோழிக்குஞ்சு வளர்த்தேன் என்று ஆரம்பித்தான். 'ஒரேயொரு கோழிக் குஞ்சா, ஏன் கூட்டமாக வளர்ப்பது தானே.....' என்று நான் ஆச்சரியப்பட்டேன். அவனுடைய நாட்டில் செல்லப் பிராணியாக ஒன்றே ஒன்றைத்தான் வளர்க்கலாமாம். அவனுடைய பெற்றோர்கள் ஒரு உயர் தொடர்மாடிக் குடியிருப்பில் 25 வது தளத்தில் இருக்கும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். அந்த நாட்களில் அவனுடைய நாட்டில் ஒரு குடும்பத்துக்கு ஒரேயொரு பிள்ளை, ஒரேயொரு செல்லப்பிராணி என்று அந்த அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் கொஞ்சம் சிக்கனமானவை. 25 வது தளத்தில், ஒரு பூட்டிய வீட்டுக்குள் ஒரு கோழிக்குஞ்சு நாள் முழுக்க, அதன் வாழ்க்கை முழுக்க என்ன செய்யும். அவன் பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் கோழிக்குஞ்சை கையில் கொண்டு கீழே வந்துவிடுவான். கோழிக்குஞ்சு அங்கே தரையில் மேயும், சுற்றுத்திரியும். பின்னர் அவனின் பெற்றோர்கள் வேலையால் வரும் நேரத்தில் நால்வரும் ஒன்றாக வீட்டிற்குள் போவார்கள். அவனுடைய பெண் நண்பி பின்னர் ஒரு நாள் அவன் வகுப்பில் இருந்த சிறந்த விளையாட்டு வீரனின் தோழியாக ஆகினார் என்று நான் முன்னர் கேட்ட கேள்விக்கு இப்பொழுது பதில் சொன்னான். நான் ஏற்கனவே அந்தப் பெண்ணை மறந்து விட்டு, அவனின் ஒற்றைக் கோழிக்குஞ்சை பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தேன். 'உன்னுடைய கோழிக்குஞ்சு ஆணா அல்லது பெண்ணா........' என்று கேட்டேன். 'குஞ்சாக இருக்கும் போது எப்படித் தெரியும்..................' நாலு நாட்களிலேயே ஒரு குஞ்சு பேட்டுக்குஞ்சா அல்லது சேவல்க்குஞ்சா என்று தெரிந்துவிடும். ஆனால் ஒரேயொரு குஞ்சை 25 வது மாடியில் வளர்ப்பவர்களுக்கு இந்த அனுபவம் கைவர எத்தனை வருடங்கள் தேவைப்படும் என்று தெரியவில்லை. 'அது வளர்ந்திருக்கும் தானே...............' 'நீ பெண்களுடன் ஒரே வகுப்பில் படிக்கவே இல்லையா................' என்று கேட்டான். கோழிக்குஞ்சுக்கு என்ன ஆகியிருக்கும் என்ற என் நினைப்பை ஓரமாக தள்ளிவிட்டு, பெண்களுடன் ஒரே வகுப்பில் இருந்திருக்கின்றேனா என்று கணக்குப் பார்க்க ஆரம்பித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கின்றேன். ஆனால் அதை எல்லாம் கணக்கில் சேர்க்கமுடியாது. கோழிக்குஞ்சு என்ன குஞ்சு என்று தெரியாமல் அதை வளர்ப்பது போல அந்த சின்ன வகுப்புகள். பின்னர் 11 ம், 12 ம் வகுப்புகளில் தனியார் கல்வி நிலையங்களில் பெண் பிள்ளைகள் இருந்திருக்கின்றார்கள். சமீபத்தில் அவர்களில் ஒருவரை இன்னொரு நாட்டில் ஒரு குடும்ப விழாவில் சந்தித்தேன். அவர் என்னைத் தெரியவே தெரியாது, நாங்கள் ஒன்றாகப் படிக்கவேயில்லை என்று பலர் முன்னிலையில் சொன்னார். இனிமேல் எவரையும் என்னுடன் ஒரே வகுப்பில் படித்ததாக சொல்லுவதில்லை என்ற முடிவை அன்று எடுத்திருந்தேன். பல்கலை வகுப்புகளில் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் முன் வரிசைகளில் இருப்பார்கள். நானும், என் நண்பன் ஒருவனும் எப்போதும் கடைசி வரிசை. அது பருத்தித்துறையும், காலியும் போல. ஒன்றுக்கு இன்னொன்று என்னவென்றே தெரியாது. 'இல்லை..................... நான் பெண்களுடன் படிக்கவேயில்லை..............' அவன் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டான். வெள்ளைச் சோற்றின் மேல் அவித்த பச்சைக் கீரையும், ஏதோ ஒரு அவித்த மாமிசமும் அன்று கொண்டு வந்திருந்தான். அநேக நாட்களில் அப்படித்தான் வெறும் அவியல்களாக மட்டுமே கொண்டுவருவான். 'ஒரு நாள் கோழிக்குஞ்சும், நானும் கீழே போயிருந்த பொழுது, சிறிது நேரத்தில் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது................' அது அப்படியே பெரிய மழையாக கொட்ட ஆரம்பித்தது என்றான். அவன் ஒரு வீட்டின் முன்னால் போய் ஒதுங்கி நின்றிருக்கின்றான். மழை விட்டதும், அவனின் கோழிக்குஞ்சை தேடி ஓடினான். 'மழையில் கோழிக்குஞ்சுகள் என்ன செய்யும்...............' என்று கேட்டான் அவன். 'அவைகள் மழை படாத இடமாக ஒதுங்கும்..............' 'ம்ம்............ நான் எல்லா இடமும் தேடினேன்...............' மீண்டும் யன்னலுக்கு வெளியே பார்த்தான். அவனின் கண்களில் விழுந்த வெளிச்சத்தில் கண்கள் ஈரத்துடன் பளபளத்தன.
  2. அவள் லண்டன் வந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டதுதான். போர் முடிந்தும் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் வதனி வந்ததுக்கு இன்னும் இலங்கை போகவில்லை. ஆறு வயதிலும் நான்கு வயதிலும் கொண்டுவந்த பிள்ளைகள் இருவருமே படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் அவள் இலங்கைக்குப் போகும் ஆசையை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறாள். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. கணவன் நோயில் இறந்தபின் கணவனின்றி எங்குமே அவள் செல்வதை நிறுத்திவிட்டிருந்தாள். வாரம் ஒருதடவை மகனை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்தால் பிறகு அடுத்த வாரம்தான். பிள்ளைகளும் ஆண் பிள்ளைகள் என்பதால் அவர்களைக் கூட்டிக்கொண்டு செல்லவேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னர் தாய்க்குப் புற்றுநோய் என்று தம்பியார் அறிவித்ததில் இருந்து அவள் மாதாமாதம் பணத்தை அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறாள். “தெல்லிப்பளையில் மருத்துவம் எல்லாம் இலவசம் அக்கா. எதுக்கு அவைக்கு மாதாமாதம் காசு அனுப்புறியள்” என்று நண்பி மலர் கூறினாலும் “தம்பி பொய்யோ சொல்லப்போறான்” என்று இவள் மலரின் கதையை காதிலும் எடுக்கவில்லை. இவள் கணவன் செய்த ஸ்பொன்சரில் எப்பிடியோ லண்டனுக்கு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டாளாயினும் வந்து சேர்ந்ததை நினைக்க இப்ப நினைத்தாலும் பெரும் மலைப்பாகவே இருக்கும். இவளுக்கு ஆங்கிலமும் சுட்டுப் போட்டாலும் வரவில்லை. ஆனாலும் தட்டுத் தடுமாறி ஏதோ விளங்கிக் கொண்டாலும் கணவரும் இவளை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததில் மொழி தெரியாததும் ஒரு பிரச்சனையாகப் படவில்லைத்தான். கணவன் இறந்தபின் இரு மாதங்கள் திண்டாடித்தான் போனாள். அந்தநேரம் கணவனின் அண்ணன் தான் கைகொடுத்தது. வேலைக்கு லீவு சொல்லிவிட்டு இவர்களுடன் வந்து ஒருமாதம் நின்று எல்லா உதவிகளும் செய்து இவர்களின் அலுவல்கள் எல்லாம் பார்த்தது. கணவன் ஆயுட்காப்புறுதி செய்து வைத்திருந்ததில் வீட்டுக்குக் கட்டவேண்டிய பணம் முழுதும் கட்டப்பட்டுவிட, மூத்த மகனுக்கும் உடனேயே வேலை கிடைத்ததில் இவள் நிம்மதியாய் தொடர்ந்தும் இருக்க முடிந்தது. இரண்டு ஆண்டுகளாக மூத்தமகனின் சம்பளம் மொத்தமாக இவள் கைகளுக்கு வர, சீட்டுப் பிடிக்கிறேன் என்று பத்தாயிரத்தைத் தொலைத்தபின் மகனும் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் இவளுக்குக் கொடுத்துவிட்டுத் தானே சேர்த்து வைக்க ஆரம்பிக்க, பிள்ளை தன் கைவிட்டுப் போய்விட்டாதே என்ற ஆதங்கம் எழுகிறது. “உன் அப்பா இருந்திருந்தால் என்னை இப்படி உங்களிட்டைக் கையேந்த வீட்டிருப்பாரே” என்று அழுது பார்த்தும் மகன் முழுச் சம்பளத்தையும் அதன்பின் கொடுக்கவே இல்லை. இப்ப இரண்டு வாரங்களாக தம்பியாரின் போன் “வந்து அம்மாவைப் பார் அக்கா. சரியான சீரியஸ் என்று சொல்லிப் போட்டினம்” என்று ஒரே தொல்லை. அம்மாவைப் போய்ப் பார்க்கவேணும் என்று இவளுக்கு அத்தனை பாசம் ஒன்றும் இல்லை. இவள் காதலித்து வண்ணனைக் கலியாணம் செய்யப் போகிறேன் என்றதும் தந்தையிலும் பார்க்க தாய்தான் குதியோ குதி என்று குதித்தது. இவள் வீட்டுக்குத் தெரியாமல் கலியாணம் கட்டிக்கொண்டு வந்தபிறகும் “நீ செத்திட்டாய் எண்டு நினைச்சுக்கொள்ளுறன். இனிமேல் இந்த வீட்டில உனக்கு இடமில்லை” என்று கதவை அடிச்சுச் சாத்தினபிறகு, பேரப் பிள்ளைகள் பிறந்தபிறகும் கூட தாய் வதனியையோ பேரப் பிள்ளைகளையோ பார்க்க வரவே இல்லை. வெளிநாடு போக முதல் ஒருக்காச் சொல்லிப்போட்டுப் போவம் என்று பிள்ளைகளுடன் போனவளை நிமிர்ந்துகூடத் தாய் பார்க்கவில்லை. அந்தத் தாயின் மகள்தானே இவளும். ஆனால் தம்பியில் உள்ள பாசம் இவளுக்குக் குறையவே இல்லை. தம்பியும் இவளின் கணவர் இருக்கும் வரை இவளோடு தொடர்பு கொள்ளவில்லைத்தான். கணவர் இறந்தபின் வாரம் ஒருதடவை போன் எடுத்துக் கதைப்பது வழமையாகியது. இவளுக்கும் வேறு என்ன வேலை. தம்பியின் பிள்ளைகளும் அத்தை அத்தை என்று ஒரே வாரப்பாடுதான். ஆனால் பெடியள் இருவரும் “உங்கடை சொந்தத்திலை நாங்கள் கலியாணம் செய்யவே மாட்டம்” என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள். அது இவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான் என்றாலும் பிள்ளைகளின் மனதை மாற்ற முடியாது என்பதால் இவளும் தான் ஆசையை அடக்கிக் கொண்டாள். நேற்றுப் போனில் கதைக்கும்போதும் “அக்கா ஒருக்கா வந்திட்டுப் போங்கோ, அம்மா இண்டைக்கோ நாளைக்கோ என்று இருக்கிறா” என்றதில் பிள்ளைகள் இருவரிடமும் கதைத்ததில் “நினைவே இல்லாமல் கிடக்கிறவவைப் போய் பார்த்து என்ன பிரயோசனம் அம்மா” என்கிறான் மூத்தவன். புதிதாக வேலைக்குச் சேர்ந்து இரண்டாம் மாதச் சம்பளம் பெற்றுக்கொண்ட துணிவில் இரண்டாவது மகன் “அண்ணா நான் அம்மாவுக்கு டிக்கற் போட்டு அனுப்புறன். செலவுக்கு மட்டும் நீங்கள் காசு குடுங்கோ என்றதில் சரி போனால் போகட்டும் என்று ஆயிரம் பவுண்டஸ் தாறன் என்று மூத்தவன் சொல்ல, இப்ப விடுமுறை காலமாதலால் இரு மடங்கு விலையில் டிக்கட் புக் செய்து தாயை நேரடியாகப் போகும் விமானத்தில் ஏற்றிவிடுகிறார்கள். கொழும்பு வந்து அக்காவைக் கூட்டிவர வானுக்கு 70,000 ரூபாய் என்கிறான் வதனியின் தம்பி குகன். மூத்தவன் விசாரித்ததில் கொழும்பிலிருந்து போக 35 ஆயிரம்தான். ஆனால் அம்மா தனியப் போறபடியால் மாமாவே கொழும்புக்கு வந்து கூப்பிடட்டும். காசு போனால் போகிறது என்கிறான் இளைய மகன். விமான நிலையத்துக்கு வதனியின் தம்பியார் மட்டுமன்றி மனைவி பிள்ளைகள் என்று அனைவரும் அக்காவை அழைத்துப்போக வந்திருக்க வதனிக்கும் மகிழ்வாகவே இருக்கிறது. இருபது ஆண்டுகளின் பின்னர் வருவதில் எல்லாமே புதிதாய் இருக்கிறது. ஏன் அக்கா பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே என்கிறான் தம்பி. அவங்களுக்கு வேலையில லீவு குடாங்கள் இந்த நேரம். ரிக்கற்றும் விலைதானே என்று சமாளிக்கிறாள் வதனி. காலையில் வந்தபடியால் இடையில் ஒரு உணவகத்தில் நிறுத்தி உண்டபின் பயணம் தொடர்கிறது. வீதி எங்கும் கடைகள் மாடிக் கட்டடங்கள் எனப் பார்க்க மலைப்பாக இருக்கிறது வதனிக்கு. ஆறு மணிநேரப் பயணத்தின் பின் அவள் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு வர அழுகை வருகிறது. தாயை நினைத்துத்தான் அவள் அழுவதாக எல்லோரும் நினைத்துக்கொள்கின்றனர். கணவர் பிள்ளைகளுடன் வர முடியவில்லையே என்பதில் வந்த அழுகையே அது. அக்கம் பக்கத்தவர்கள் சிலர் வந்து விசாரித்துவிட்டுப் போக நேரம் மாலை ஐந்து மணியாகிவிட்டதில், தம்பி ஒழுங்கு செய்த காரில் தம்பி குடும்பமும் இவளும் போய்த் தாயைப் பார்க்கின்றனர். நினைவின்றிக் கிடக்கும் தாயைப் பார்க்க இவளை அறியாமலே கண்ணீர் வருகிறது. இரண்டு நாட்களின் பின் “எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். இங்கே வைத்திருந்து பிரயோசனமில்லை. நீங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகலாம்” என வைத்தியர் கூற அடுத்த நாள் தாயை வீட்டுக்குக் கூட்டிவருவதாக ஏற்பாடு. தாயை வீட்டில் வைத்துப் பராமரிக்க ஒருவரை ஒழுங்கு செய்யலாம் என்றால் ஒரு நாளைக்கு மூவாயிரம் என்கின்றனர். ஆனாலும் அக்கா இருக்கும் துணிவில் சரி என்கின்றனர். உயர்த்திப் பதிக்கும் பிரத்தியேக கட்டில் ஒன்றரை இலட்சம் ரூபாய்கள். எந்த நேரமும் சாகத் தயாராக இருக்கும் அம்மாவுக்கு இத்தனை செலவில் கட்டில் வாங்கத்தான் வேணுமா என்று யோசித்தவளின் கௌரவம் வெற்றிபெற, வாங்கு தம்பி என்று பணத்தைப் பவுண்ஸ்சாகவே தம்பியிடம் கொடுக்கிறாள். தாயை வீட்டுக்குக் கொண்டு வந்தபின் அயலட்டைச் சனம் தொடங்கி சொந்தக்காரர் எல்லாம் தாயாரின் சாட்டில் வதனியையும் பார்த்துப் புதினங்கள் கேட்டுவிட்டுப் போகின்றனர். வீடு எந்தநேரமும் கலகலப்பாக இருக்கிறது. ஆட்கள் அடிக்கடி வந்து போவதனால் அப்பப்ப கடையில் இருந்தும் உணவு எடுக்கின்றனர். வடை, முறுக்கு, ரோள்ஸ் என்று வதனியையும் தாயையும் பார்க்க வருபவர்களுக்கு உபசரிப்பும் நடக்கிறது. தாயில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. மின் விசிறி இல்லாமல் முதல் நாள் இரவு வியர்வையில் குளித்ததில் காலை எழுதவுடனேயே “தம்பி பான் இல்லாமல் படுக்கேலாதடா என்றது மட்டுமன்றி உங்களுக்கும் சேர்த்துப் பான் வாங்குங்கோ என்றதில் எல்லாமாக நான்கு பான்கள் வந்திறங்க, வதனிக்கு நெஞ்சுக்குள் ஏதோ செய்கிறது. அம்மா படுத்திருக்கும் வராந்தாவுக்கு ஒன்று. உங்கள் அறைக்கு ஒன்று. பிள்ளைகள் படுக்கும் அறைக்கும் எங்கடை அறைக்குமாக நான்கு வாங்கினது. சரிதானே அக்கா என்று தம்பி கேட்க ஓம் என்று தலையாட்டுவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும் வதனியால். இவள் வந்து இருவாரங்களில் தாயில் எந்த வித மாற்றமும் இல்லாவிட்டாலும் ஆட்கள் வந்துபோவது குறைகிறது. நல்லூர் திருவிழாவும் ஆரம்பித்துவிட்டதில் “அம்மாவைப் பார்த்துக்கொள்ள ஆள் இருக்குத் தானே அக்கா, நல்லூருக்குப் போட்டு வருவம் என்று தொடங்கி ரிச்சா பாம் வரை ஒவ்வொருநாளும் ஒரு இடமாக தம்பி குடும்பம் வதனியை ஊர் சுற்றிக் காட்டியதில் வதனி பிள்ளைகளுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்துக் கொண்டுவந்த பணமும் மொத்தமாகக் கரைந்து போக, மூன்று வாரங்களில் இத்தனை செலவா என மலைத்துப்போகிறாள் வதனி. கிடந்த மிச்சப் பயணத்தில் லண்டன் நண்பிகள் சொல்லிவிட்ட பற்றிக் நைட்டி முதற்கொண்டு அவர்கள் பிள்ளைகளுக்கு உடைகள், கோப்பித்தூள், அரிசிமா, மிளகாய்த்தூள் என வாங்கி முடிய இவளுக்குத் தாயைப் பார்க்கத்தான் தான் வந்தது என்பதே மறந்து போகிறது. இவள் வெளிக்கிடும் நாள் நெருங்க தம்பி குடும்பமே அதிகம் கவலை கொள்கிறது. மீண்டும் எழுபதாயிரம் ரூபாய்களுக்கு வான் ஒழுங்கு செய்து அக்கம்பக்கம் சொல்லிக்கொண்டு தம்பி குடும்பத்துடன் விமானநிலையம் வந்து சேர ஒருவித நிம்மதி பிறக்கிறது வதனிக்கு. தம்பி குடும்பம் கொழும்பிலிருந்து கிளம்பி நான்கு மணி நேரம் ஆகியிருக்கும். தாய் இறந்துவிட்டதாக தாயைப் பார்ப்பவரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புச் சொல்ல, “ஐயோ அக்கா உனக்கு விதியில்லாமல் போச்சே” என அழும் தம்பியைப் பார்க்க முடியாத தூரத்தில் பறந்துகொண்டிருக்கிறது வதனியின் விமானம்.
  3. அவுஸ்திரேலியாவுக்கும் தென்னாபிரிக்காவும் இடையேயான ஏழாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டது. எனவே யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை): தொடர்ந்தும் @alvayan முதல்வராக நிலைக்கின்றார்!
  4. என்ன செம்பாட்டான், இதுக்கே இவ்வளவு ஆச்சரியப்பட்டால்? நானெல்லாம் ஜெயசூரியா, களுவித்தாரன, டான் அனுராசிரி, ரஸ்ஸல் ஆர்னோல்ட், அவிஷ்கா குணவர்தானா, போன்றோருடன் எதிரணியில் கிரிக்கெட் விளையாடியே இருக்கிறேன். அதெல்லாம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்தபோது!!
  5. ஏன் இவர்களே பெரிய ஆளுமைகள் தானே தனி கட்சி தொடங்கி தமிழ் தேசியத்தை அப்படியே தூக்கி நிறுத்தியிருக்கலாமே. பெயின்டு கண்ட்ரக்டர் இப்ப கழகத்திற்கு நாதகவில் இருந்து உருவி கமிஷன் பார்ப்பது போல் தனது சொந்த கட்சிக்கு தரமான தலைகளை உருவி தமிழ் தேசியத்தை நிலை நாட்டி திராவிடத்திற்கு தர்ம அடி கொடுத்திருக்கலாம். அதற்கு பசை வேணும். இங்கே ஒரு தூய எண்ணமும் இல்லை, தமிழ் தேசிய சிந்தனையும் இல்லை. நாதக மேடையில் காட்டுக்கத்து கத்தி ஊடக வெளிச்சம் பெற்று தன்னை வெளிக்காட்டிக் கொண்டால் டீல் பேசி நல்ல கொழுத்த அமெளண்டை வாங்கிக்கொண்டு செட்டில் ஆக வேண்டியதுதான். தமிழ் தேசியம் என்பது இப்போது அது வேற வாய் இது நாற வாய் என்பதிலே தான் வந்து நிக்கிறது. தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் இதுதான் தற்போதைய தமிழ் தேசியம்.
  6. அதுவே தான் நிழலி..................... இதை நீங்கள் சொன்னவுடன் ஒரு சம்பவம் நினைவிற்கு வருகின்றது. எனக்கு கனடாவில் நடந்தது. மிகச் சாதாரண ஒரு சந்தர்ப்பத்திலேயே நாங்கள் எப்படி திக்குமுக்காடிப் போகின்றோம் என்பதிற்கு அந்த சம்பவம் ஒரு உதாரணம். பின்னர் அதையே ஒரு கதையாக எழுதுகின்றேன். 🤣.............. அதற்குப் பின்னர் ஒரே ஒரு தடவை மட்டுமே அந்த பஸ்ஸில் எங்களை ஏற்றினார்கள் என்று ஞாபகம். நாங்கள் முன்னெச்சரிக்கையாக 'நாங்கள் வேலாயுதம் ஸ்கூல்........' என்று சொன்னோம். எங்களை எவரும் கவனிக்கவேயில்லை..................🤣.
  7. மெல்லிய குளிர் காலத்தில் ஒரு பிறாற் வூஸ்ட்டும் (சென்வ் அல்லது கெச்சப்) உடன் சாப்பிட கொண்டெழுப்பும்.😋
  8. பிறகு ஏன் இவருக்கு இந்தக்கேள்வி, இரட்டை நிலைப்பாடு? நீங்கள் தமிழரை என்ன செய்தீர்கள்? அது என்ன திடீரென்று தமிழர்மேல் இவ்வளவு பாசம், கரிசனை, கவலை, முதலைக்கண்ணீர்? அனுரவை பிழையானவர் என விமர்சித்தால், நீங்கள் செய்தவைகள் மறந்து, மறைந்து விடும் என்கிற நினைப்போ? அனுரா தமிழருக்கு அதிகாரம் கொடுக்கப்போகிறேன் என்று சொன்னால் அல்லது திஸ்ஸ விகாரையை எடுக்கப்போகிறேன் என்று சொன்னால் போதும், உங்கள் சுய ரூபம் வெளிப்படும். அதுவரை நீலிக்கண்ணீர் வடியுங்கள், நாங்கள் அதை நம்பப்போவதில்லை.
  9. ம் குஞ்சையாவது வளர்த்திருக்கலாம்
  10. அமைச்சர் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றார். இதற்கு முதல் இருந்தவர்கள் எல்லாம் இந்த விடயத்திலும் இந்தியாவிடம் பம்மிக் கொண்டே இருந்தவர்கள். இந்த மீனவர் பிரச்சினைக்கு ஒரே ஒரு தீர்வு, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வராமல் விடுவதே ஆகும்.
  11. இன்னும் வயது போகப் போக, அப்பாக்கள் மீது பெரிய அபிமானமே பிறக்கும் என்கின்றார்கள். 'என்னுடைய அப்பாவிற்கு எல்லாமே தெரியும்.......' என்ற ஒரு சிறுபராயம், பின்னர் 'அவருக்கு ஒன்றுமே தெரியாது..........' என்ற இளையபராயம், கடைசியில் 'அவருக்கு என்னை நல்லாவே தெரிந்திருந்தது........' என்று ஒரு சுற்று சுற்றி வந்து விடுவோம் போல......... ஆனாலும், ஊரிலேயே மட்டுமே வாழ்ந்த என்னைப் போன்றவர்களின் நிலைமை கொஞ்சம் வேறுபட்டும் இருந்தது. நான் விளையாடுவேன் என்றே வீட்டில் தெரிந்திருக்கவில்லை. ஆனால் நான் எந்நேரமும் கிரவுண்டிலேயே இருந்தேன். வீட்டில் அதைக் கவனிக்கவில்லை. பின்னர், உதைபந்தாட்டக் கழகங்களுக்கிடையில் ஒரு தகராறு வந்து, வீடு வரை விசயம் போன பின் தான், 'அட................. இவனும் விளையாடுகின்றானா...........' என்று முழித்தார்கள்................ அந்தப் பிரச்சனையிலும் 'என்னவோ................... உன் இஷ்டம்..........' என்று விட்டுவிட்டார், அப்பா......... அவருக்கு என்னை நல்லாவே தெரிந்திருக்கின்றது............🤣.
  12. புலிகளும் முஸ்லிம்களும் 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு தனி பண்பாடு உள்ளதை புலிகள் ஏற்றதோடு அவர்கள் தனி இனம் என்பதையும் ஏற்றுக்கொண்டனர்.
  13. கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மாதிரித்தான். இலங்கையில் அரச செலவில் அல்லது மக்கள் வரிப்பணத்தில் நல்லா படிச்ச என்னைப் போன்றவர்களை (அடப்பாவி நீயுமா என உங்கள் Mind Voice சொல்வது கேட்குது 😆 ) தங்கள் நாட்டுக்கு கவர்ந்து இழுத்து இறங்கியவுடனேயே நிரந்தரவதிவுடமை கொடுப்பது போலத்தான் இதுவும். நாங்களும் படிச்ச பிறகு, உந்த நாடு சரிவராது என்று இலங்கையை விட்டு கிளம்பி போனது போலத்தான் காளியம்மா மற்றும் மிச்ச ஆட்களும்.
  14. மழை குழப்பியதால் இரண்டில் ஒன்று வெளியே போகும் ஏனெனில் இங்கிலாந்து தென்னாபிரிக்காவையும், ஆப்கானிச்தானையும் வெல்லும்💪🦾 அல்வாயனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு! கீழே இறங்காமல் சறுக்குமரத்தில் பணமுடியை எடுக்கப்பார்க்கின்றார்🤣
  15. பார்க்கலாம்.....காளியாத்தாவாக தொடர்கிறாரா இல்லை கழகத்தில் கரைகிறாரா என்று. அண்ணனுக்கு ஏற்ற தங்கை இனி தம்பிக்கேற்ற அக்கா
  16. இனப்பிரச்சனை வேறு பல தொல்லைகளை தந்தது ஆனால் விளையாட்டை விட அது காரணம் இல்லை. ஒரு கட்டத்தில் விளையாட்டுத்தான் வாழ்க்கை, ஓ எல் மட்டும் படித்தால் போதும், அதன் பின் விளையாட்டில் முழு நேரக்கவனம் - ஏதாவது ஒரு நிறுவனத்தில் சேர்வது மேர்கண்டையில் கிரிகெட், கிளப் கிரிகெட் ஆடுவது. என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தேன். இதோடு பேச்சு, விவாத போட்டிகள், புதிதாக ஆரம்பித்த அரசியல் என ஒரு 15/16 மாதம் புத்தகத்தை தொட்டு கூட பார்க்கவில்லை. ஆண்டு 11 முதல் தவணை பரிட்சையில் சராசரி 42%!!! கணிதத்துக்கு நூற்றுக்கு ஐந்து 😜. அப்போ யுத்த பகுதியில் இருந்த தந்தையார் உடனடியாக கொழும்பு வந்து வெள்ளவத்த கடற்கரையில் பாறைகளில் அமர்ந்து பேச்சுக்கள் ஆரம்பமாகின. அநேகமாக தன்னோடு ஊருக்கு கூட்டி போவதே அவர் தெரிவாக இருந்தது. பேச்சுவார்த்தை முடிவில், டிசெம்பர் சோதனை வரை கிரிகெட்டை தள்ளி வைப்பது என்றும் அதன் பின் மீள விளையாடுவது என்றும் முடிவாகியது. அடுத்து துரதிஸ்டவசமாக அல்லது அதிஸ்டவசமாக ஓ எல் பரிட்சையில் மிக திறமான பெறுபேறுகளை எடுத்தேன். தமிழ் பட ஹீரோ ஒருபாட்டில் பணக்காரன் ஆவது போல. பிறகென்ன..புறச்சூழல், நிலமையின் அழுத்தம், இன்னபல காரணிகள் சேர்ந்து, கிரிகெட்வீரனை அப்படியே அமிழ்த்தி ஏல் எல் டியூசன், பாஸ்பேப்பர், என வாழ்க்கையின் ஓட்டம் மாறி விட்டது. உண்மையை ஒத்து கொள்ளத்தான் வேண்டும் - ஆண்டு 11 முடிவில் எனக்கு கூட எனக்கு விளையாட்டை விட படிப்பு கொஞ்சம் இலகுவாக வருகிறது என்பதும், ஒரு சராசரிக்கும் மேலான வாழ்க்கையை அமைக்க படிப்பே இலகுவான வழி என்பதும் ஓரளவு புரியத்தொடங்கியது. ஆண்டு 12 இல் நான் கிளப்புக்கு திரும்பி போகவே இல்லை. வாவ்…நான் ஆர்னோல்டுடன் மென்பந்து விளையாடி இருக்கிறேன். தெகிவளை பிரேசர் கிரவுண்டிற்கு அருகில் அவர் வீடு, 1994 சென் பீட்டர்ஸ் கேப்டன் அவர். பிரெசிடென்ஸ் கப் வென்றார்கள். அப்போ, வார இறுதியில் அவர் விளையாடும் அணியில் ஆள் போதாது என்றால் சேர்த்துக் கொள்வார்கள்.
  17. நாட்டை பொறுப்பேற்க, எந்நேரமும் நான் தயார். - நாமல் ராஜபக்ச -
  18. என்ன இது எனது வாழ்க்கை போல உள்ளதே. எனக்கு வீட்டிலும் இல்லை. போன பாடசாலையிலும் இல்லை. நானும் ஒரு கோழிக்குஞ்சு வளர்த்திருக்கலாமோ?
  19. ஹி, ஹி. அதொன்றுமில்லை, சுமந்திரன் தமிழர்களால் ஒதுக்கப்பட்டு அதல பாதாளத்திற்கு போய் விட்டார். அதை தூக்கி நிறுத்த எடுக்கப்படும் முயற்சி. அப்படி தமிழருக்கு என்ன நன்மை செய்துவிட்டார் சுமந்திரன் மக்கள் அவரை தங்கள் பிரதிநிதியாக தெரிவதற்கு? அதற்கான கூலியை கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். அவரோ போக மாட்டேனென அடம்பிடித்து இனத்தை இரண்டு படுத்துகிறார். அவர் இனத்துக்கு எதிராக என்ன துரோகம் செய்கிறாரென அவருக்கும், நன்மை பெறுவோருக்கும் தெரியும். அதனால் அவர்கள் தாம் செய்வதை மற்றவர்மேல் பழிபோட்டு நிஞாயப்படுத்துகின்றனர். அவர் முறையிடவில்லையாம், பாதுகாப்பு கொடுத்தார்களாம். அவுஸ்ரேலியாவில் உள்ள ஒருவர் இதில் சம்பந்தப்பட்டுள்ளாராம், ஆனால் சுமந்து அங்கே எந்த பாதுகாப்புமில்லாமல் போய் வந்திருக்கிறார். அப்போ இந்த புலனாய்வு அவரை போகவேண்டாமென்று தடுக்கவில்லை. நாட்டிலே இனத்துக்கெதிரான கருத்துக்களை பகிரங்கமாக தெரிவிக்கிறார், கூட்டங்களில் கலந்துகொள்கிறார், தடுக்கவில்லை. ஏன் முஸ்லீம் படுகொலையாளிகள் சுட்டுக்கொன்ற போலீசாரை, புலிகள் சுட்டுக்கொன்றதாக அப்பாவி இளைஞரை கைது செய்தது புலனாய்வு. உயிர்த்த ஞாயிறு குண்டுச்சம்பவம் நடைபெறப்போகிறது என பல எச்சரிப்புகள் வந்தபோதும் தடுக்க முடியாத வகையறா புலனாய்வு, சுமந்திரனை பாதுகாக்கிறதாம். ஸீரோவான சுமந்திரனை கீரோவாக்க முயற்சிக்கிறார் பாவம் ஒருவர். சிங்களத்துக்கு கழுவ வேண்டும், அதற்கு தமிழர் வாக்களிக்க வேண்டும். அவர் வந்த வேலை, கொடுக்கப்பட்ட வேலை முடிந்து விட்டது, இனி ஓய்வு பெற வேண்டியவர் அவர். தமிழரசு, தமிழ்த்தேசியம் என்றால்: சிங்களவருக்கு பயம், வெறுப்பு வருகிறதாம் என்று சொல்லும் இவர், தமிழரசை தனது கைக்குள் கொண்டுவர ஏன் முண்டியடிக்கிறார்?
  20. கனக்க பிரபலங்கள் இந்தக் களத்தில இருக்கினம் போல. சச்சின் வந்தாக, குலுஸ்னரோட பாத்தாக, ஜெயசூரியாவோட கும்பிட்டாக..... இப்பிடிச் சொல்வி எங்களுக்கு எரிச்சலூட்டுறதே வேலையாப்போச்சு. 😛
  21. உண்மைதான். நேரில் பார்க்கும் போது வேறு விதமாக இருக்கும். இந்த இங்கிலாந்து வீரர் பென் டக்கட் - ஸ்டம்பசை விட கொஞ்சம் வளர்த்தி. அவ்வளவு உயரம் குறைவு. ஆனால் டிவியில் அப்படி தெரியாது. இப்படி பல சுவாரசியங்கள் உள்ளன. நான் இலங்கையில் ஒரு first class கிளப்பின் 17 வயதுக்கு கீழ் பட்ட அணியில் 1st change bowler. அப்போ எனக்கு 15+தான். இலங்கை அணி, இந்திய, மே.இ தீவுகள், தெ.ஆ, இங்கிலாந்து பயிற்சியின் போது, நெட்சில் இல்லாமல் சிலசமயம் கிரவுண்டில் பேட், போல் பண்ணுவார்கள் அப்போ பீல்டிங் நாங்கள்தான். அதே போல் மேட்சில் டிரெசிங் ரூமுக்கு அடுத்த வரிசையில் எங்களுக்கும் பேர்சிக்கும் இருக்கைகள் இருக்கும். அசாருதீனும் பேர்சியும் ஆளோடு ஆள் தனகுவார்கள். வூக்கேரி ராமன் என ஒரு தமிழக வீரர் இந்தியன் ஓப்னராக இருந்தார் - மேட்ச் நடக்கும் போதே டிரெசிங் ரூமில் இருந்து தொடர்ந்து சிகரெட் பத்தி கொண்டிருப்பார். இந்திய அணியின் ஸ்பொன்சரும் வில்ஸ் சிகெரெட். 1996 முந்தைய கிரிகெட்டில் பணம் பாயாத காலங்கள் அவை. வீரர்கள் மிக இயல்பாகவே இருந்தார்கள். தாஜ் சமுத்திரா ஹோட்டல் போனால் மிக சாதாரணமாக காணலாம். இலண்டன் வந்த பின், ஒரு நாள் அரவிந்தவை பவுண்ட இலாண்ட் எனும் மலிவு விலை கடையில் கண்டேன். கதைக்கவில்லை. ஆனால் எனது பகுதியில் குடியேறியுள்ளதாக சிலர் கூறினர். இதுதான் பைனலாக வரக்கூடிய மேட்ச்சாகவும் இருக்க கூடும். தெ. ஆ வெல்ல வாய்ப்புகள் உண்டு. உள்ளதில் அதிக மிரட்டல் உள்ளதும், balance உள்ளதும் அவர்கள்தான்.
  22. அன்றே விளக்கம் கொடுத்த சீமான்.
  23. அன்றைய திராவிட கழகத்திலிருந்து பல அறிவாற்றல் கொண்டவர்கள் வெளியேறினார்கள்.வைகோ வெளியேறினார். நெடுஞ்செழியன் வெளியேறினார்.எம்ஜிஆர் வெளியேறினார். அவர்கள் வெளியேறினாலும் அக்கட்சியை யாராலும் அசைக்க முடியவில்லை. திமுக எப்படி வலுவான கொள்கையோ.... அது போல் நாம் தமிழர் கட்சியும் வலுவான கோள்கையுடைய கட்சி. ஒரு காளியம்மாள் விலகினால் ஆயிரம் காளியம்மாக்கள் உருவாகுவர். ஆறு மாதத்திற்கு முதலே பிசுபிசுத்து போன காளியம்மாள் அண்மைய நாட்கள் வரைக்கும் கட்சி தாவல் சம்பந்தமாக யார் யாரோடெல்லாம் பேரம் பேசினாரோ யாருக்குத்தெரியும். கட்சியின் போக்கு பிடிக்கவில்லை என்றால் மாதக்கணக்கான தாமதம் ஏன்?
  24. கமலுக்கு தனக்கு எவை தெரியாது என்றே தெரியாது................🤣. நேற்று இங்கு Warren Buffett அவருடைய நிறுவன பங்குதாரர்களுக்கு வருட அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கடைசியில் இப்படி ஒன்றைச் சொல்லியிருந்தார்: என்னிடம் நல்ல விளையாட்டுத் திறமைகள் இல்லை. நல்ல குரல் எனக்கில்லை. மருத்துவம் சுத்தமாகத் தெரியாது. இப்படி எந்த விதமான தனித் திறமைகளும் என்னிடம் கிடையாது. அதனால் தான் இந்தப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டேன்..........................
  25. சிங்கம் என்று சொல்லி மானத்தைக் காப்பாற்றி விட்டியல். 😁
  26. உங்கள் உண்மையான நாம் தமிழர் வளர்ச்சி பற்றிய கவலையில் 😅 நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்
  27. நன்றி பிரியன் சார்...எப்ப விழுவான் என்று காத்திட்டிருக்காப்போல..😆 மச்சம் உண்மையாக இருக்குத்தான்...அந்த இந்த்ப் போட்டிக்குத்தான் வேலை செய்கிறது...மனிசிக்கு இந்தமச்சத்தைப்பற்றி..முன்னமேபுழுகித்தள்ளீனபடியால் இன்றுவரை நக்கல்.நின்ற பாடில்லை.. இப்ப நீங்க சொன்னதை மனிசியிடம் சொன்னால்...இன்ர நெட்டே ..கட்டாயிடும் நன்றி கிருபன் ஜீ.. உங்க தலீவருக்கு அவ்வளவு..காசுத்தட்டுப்பாடா....இது அவருக்கு ..மக்டோனால்ட்..ஒரு நேர பிறேக்பஸ்ட் ..காசுதானே..
  28. அல்வாயன் காட்டிலை மழை. அதிர்ஷ்டக்காரன்.
  29. நாளைக்கு எத்தை பேர் அப்பாகிஸ்தானை தெரிவு செய்து இருக்கின‌ம் என்ற‌தை பார்க்க‌ ஆவ‌லுட‌ன் இருக்கிறேன் பெரிய‌ப்பு.........................
  30. தமிழ் இந்து பாலர் பாடசாலையில் பெண் பிள்ளைகளுடன் அதுவும் தனித்தனி வகுப்புகளில் படித்தது . ..... அது கொஞ்சம் புரியும்போது இந்துக்கல்லூரிக்கு மாறியாச்சுது . ........ ம் ......... இது சாபமா வரமா இன்னும் புரியவில்லை . ...... இந்தக் கதை படிக்கும்போது . ......... ! 😇
  31. 🤣................ நீங்கள் பரவாயில்லை, அண்ணா.......... அக்காவை உங்களுக்கு முன்னரே தெரியும் தானே........ நாங்கள் பலர் உலகத்தின் ஒரு பக்கம் என்னவென்றே தெரியாமலேயே வளர்ந்தோம்..................
  32. செயற்கை நுண்ணறிவு செயலி DeekSeek இடம் நான் கீழ்வரும் வினாவை தொடுத்தேன். அதன் பதில் தொடர்கின்றது. ஒரு இனமாக அடையாளம் பெறவும், அங்கீகாரம் அடையவும் மக்கள் கூட்டம் ஒன்றில் காணப்படவேண்டிய தன்மைகள் எவை? ஒரு இனமாக அடையாளம் பெறவும், அங்கீகாரம் அடையவும் மக்கள் கூட்டம் ஒன்றில் காணப்பட வேண்டிய தன்மைகள் பின்வருமாறு: 1. பொதுவான வரலாறு மற்றும் பாரம்பரியம்: ஒரு இனம் பொதுவான வரலாறு, பண்பாடு, மொழி, மதம் மற்றும் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இவை அவர்களின் அடையாளத்தை வரையறுக்க உதவுகின்றன. 2. பொதுவான மொழி: ஒரு இனம் பொதுவாக ஒரு மொழியை பேசுவதோ அல்லது புரிந்து கொள்வதோ அவர்களின் அடையாளத்தை வலுப்படுத்துகிறது. 3. பொதுவான பண்பாடு மற்றும் சடங்குகள்: பண்டிகைகள், விழாக்கள், உணவு முறைகள், கலை மற்றும் இசை போன்றவை ஒரு இனத்தின் பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்துகின்றன. 4. பொதுவான புவியியல் பகுதி: ஒரு இனம் பொதுவாக ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் வாழ்வதோ அல்லது அந்த பகுதியுடன் தொடர்பு கொண்டிருப்பதோ அவர்களின் அடையாளத்தை வலுப்படுத்துகிறது. 5. சமூக ஒற்றுமை: ஒரு இனத்தின் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இருப்பதும், ஒரே குறிக்கோள்கள் மற்றும் மதிப்புகளை பகிர்ந்து கொள்வதும் அவர்களின் அங்கீகாரத்தை வலுப்படுத்துகிறது. 6. அரசியல் அங்கீகாரம்: ஒரு இனம் அரசியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இது அவர்களின் உரிமைகள் மற்றும் தன்னாட்சிக்கு உத்தரவாதம் அளிக்கிறது. 7. சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை: ஒரு இனத்தின் உறுப்பினர்கள் தங்கள் பண்பாடு மற்றும் அடையாளத்தைப் பற்றி பெருமைப்படுவதும், அதைப் பாதுகாப்பதற்கான உணர்வு கொண்டிருத்தல் அவசியம். 8. பொதுவான சவால்கள் மற்றும் போராட்டங்கள்: ஒரு இனம் பொதுவான சவால்கள், போராட்டங்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது அவர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. இந்த தன்மைகள் ஒரு இனத்தின் அடையாளத்தை வரையறுக்கவும், அங்கீகாரம் பெறவும் உதவுகின்றன.
  33. வரும் 27 இல் நடக்கவிருக்கும் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் லிபரலுக்கு கிடைக்க போகும் அடி கனடா பொதுத் தேர்தலிலும் எதிரொலிக்கும். லிபரல் கட்சி மத்திய, மாகாண அரசுகளில் இருந்து துடைத்தெறியப்படல் வேண்டும்.
  34. இலங்கையில் ஒரு மில்லியனுக்கு அரைவாசி Auto / 3 wheeler கூட வாங்க முடியாது. செவ்வந்தி தன்னை காட்டிக் கொடுக்காமல் இருக்க 10 மில்லியன் ரூபாவுக்கும் மேல் கொடுக்கும் அளவுக்கு போதைப் பொருள் விற்பனை மூலம் பணக்காரியாக இருப்பார் என நினைக்கின்றேன்.
  35. காளியம்மாளும் சீமானுக்கு இணையாக பொய்களை அடித்துவிடும் ஆள் தான். ஒரு பேச்சில் கூறினார் தான் டுபாய் ஏர்போட்டுக்கு சென்ற போது சேலை கட்டியிருப்பதை பார்தத ஒரு வெள்ளைக்காரர் தன்னை பார்தது ஓ நீங்க சிறீலங்கா, பிரபாகரன் என்று கூற, தான் உடனே நான் இந்தியா தமிழ் நாடு என்று கூறியவுடன் அந்த வெள்ளைக்காரர் ஓ அப்ப சீமான் நாட்டில் இருந்து வாறீங்களா என்று கூறினாராம். இவ்வாறு தற்குறிகள் கூட நம்பாத அளவுக்கு பொய்களை அடித்து விடுபவர்தான் காளியம்மாள். சேலையுடன் ஒருவரை கண்டாலே இந்தியா பொலிவூட் என்று கூறுவதே இயல்பு என்பது யாவரும் அறிந்த உண்மை. அதை கூட அறியாத தம்பிகள் அந்த பேச்சுக்கும் கைதட்டி மகிழ்ந்தனர். காளியம்மாளுக்கு இப்படியான தம்பிகளை விட்டு வெளியேறுவதில் தயக்கம் இருந்தது உண்மை.
  36. நீங்கள் சொல்வது மிக சரி. விகிதாசார பிரநிதிதுவத்தில் உள்ள பாதகங்களில் ஒன்று - இனவாதிகள், இதர சமூகவிரோதிகளுக்கும் ஒரு களம் அமைத்து கொடுக்கும்.
  37. சமூகச் சிந்தனையாளர் பெரியார் பற்றிப் பிரலாபம் செய்பவர்கள் யாராகினும், அவரின் வழியொற்றி நீங்கள் வாழாதிருப்பின் உங்களுக்கு ஒன்று சொல்வேன் உங்களது வேலிக்குள் உங்களது ஆட்டைக் கட்டிவைத்துவிட்டு எல்லா ஆடுகளுக்கும் சுதந்திரம் வேண்டி நீங்கள் ஆர்ப்பரிப்பதன் வஞ்சகம் எதுவென்பதை நானறிவேன். அவிழ்த்து விட்டேன் என் ஆட்டை அதுதான் அடைந்து கிடக்கிறது நான் என் செய்வேன் என்பவர்க்கு நானின்றொன்று சொல்வேன் உன் சொந்தப்பட்டியில் அடைபட்டுக் கிடக்கும் உன் ஆட்டுக்கு விடுதலை பற்றிய உபதேசம் நீ செய்யவில்லையெனில் வேறெந்த ஆட்டுக்கும் நீ விடுதலை உபதேசம் செய்யாதே. விடுதலை பெற எண்ணும் ஆடுகளை வேட்டையாடும் நோக்கம் மட்டுமே உன்னுடையது என்பதை எவரும் கண்டு கொள்வார்கள். . முதலில் உன்பட்டியின் ஆட்டை, ஆடுகளை விடுதலை செய். 20.02.2025 வாசு
  38. அருமை சிறந்த பதில் உண்மையும்கூட
  39. பங்களாதேஷை வீழ்த்திய நியூஸிலாந்துடன் ஏ குழுவிலிருந்து இந்தியாவும் அரை இறுதிக்கு முன்னேறியது; பாகிஸ்தானும் பங்களாதேஷும் முதல் சுற்றுடன் வெளியேற்றம் Published By: VISHNU 25 FEB, 2025 | 12:05 AM (நெவில் அன்தனி) ராவல்பிண்டி தேசிய விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஏ குழுவுக்கான 4ஆவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. இந்தப் போட்டி முடிவுடன் ஏ குழுவிலிருந்து இந்தியாவும் அரை இறுதிக்கு முன்னேறியதுடன் வரவேற்பு நாடனான பாகிஸ்தானுடன் பங்களாதேஷும் முதல் சுற்றுடன் வெளியேறுகின்றன. பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் மைக்கல் ப்றேஸ்வெல் பதிவுசெய்த 4 விக்கெட் குவியலும் ரச்சின் ரவிந்த்ரா குவித்த சதமும் நியூஸிலாந்தை இலகுவாக வெற்றி அடையச் செய்தன. பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 237 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 46.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. எவ்வாறாயினும் நியூஸிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. வில் யங் (9), கேன் வில்லியம்சன் (5) ஆகிய இருவரும் முதல் 4 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். (15 - 2 விக்.) இந் நிலையில் டெவன் கொன்வே (30), ரச்சின் ரவிந்த்ரா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை சீர் செய்தனர். தொடர்ந்து ரச்சின் ரவிந்த்ரா, டொம் லெதம் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 129 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர். ரச்சின் ரவிந்த்ரா 105 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 112 ஓட்டங்களைக் குவித்தார். இந்த வருடம் இதுவரை நடைபெற்ற 6 சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளிலும் சதம் குவிக்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும். ரவிந்த்ராவைத் தொடர்ந்து டொம் லெதம் 55 ஓட்டங்களுடன் வெளியேறினார். (214 - 5 விக்.) அதன் பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட 23 ஓட்டங்களை க்லென் பிலிப்ஸ் (21 ஆ.இ), மைக்கல் ப்றேஸ்வெல் (11 ஆ.இ.) ஆகிய இருவரும் பெற்றுக்கொடுத்தனர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. முன் வரிசையிலும் மத்திய வரிசையிலும் ஆறு வீரர்கள் துடுப்பாட்டத்தில் வழங்கிய சிறந்த பங்களிப்பு பங்களாதேஷுக்கு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவியது. தன்ஸித் ஹசன் (24), அணித் தலைவர் நஜ்முல் ஹசன் ஷன்டோ ஆகிய இருவரும் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தன்ஸித் ஹசன் ஆட்டம் இழந்ததுடன் சீரான இடைவெளியில் மெஹிதி ஹசன் மிராஸ் (13), தௌஹித் ரிதோய் (7), முஷ்பிக்குர் ரஹிம் (2) மஹ்முதுல்லா (4) ஆகியோர் ஆட்டம் இழந்தனர். இதனிடையே தௌஹித் ரிதோயுடன் 3ஆவது விக்கெட்டில் 33 ஓட்டங்ளையும் ஜாக்கர் அலியுடன் 6ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களையும் பகிர்ந்த ஷன்டோ 77 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மத்திய வரிசையில் ஜாக்கர் அலி 45 ஓட்டங்களையும் ரிஷாத் ஹொசெய்ன் 26 ஓட்டங்களையும் தஸ்கின் அஹ்மத் 10 ஓட்டங்களையும் பெற்றனர். ஜாக்கர் அலி 8ஆவது விக்கெட்டில் தஸ்கின் அஹ்மத்துடன் 35 ஓட்டங்களைப் பகிர்ந்தார். பந்துவீச்சில் மைக்கல் ப்றேஸ்வெல் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வில் ஓ'றூக் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மைக்கல் ப்றேஸ்வெல் https://www.virakesari.lk/article/207578
  40. பழசுகள் waiting 😁 @ரசோதரன் அண்ணை.
  41. பார்த்தியளே? காளியம்மா மீது "இருந்த மரியாதையும்" என்கிறார்கள்! எனக்கு விளங்கிய தமிழின் படி முன்னமே "அவ்வளவு பெரிய மரியாதை" அவரிடம் இருக்கவில்லைப் போல தெரிகிறது இதை வாசிக்கையில். என்ன காரணமாக இருக்குமென யோசிக்கிறேன்😎.
  42. மாற்றுத் திறனாளிகளா?மாற்றத்துக்கான திறனாளிகளா? இந்தக் கிழமை ஜீ தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியைப் பார்த்தேன். கண் தெரியாதவர்களும் அவர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர். மிக மிக ஆச்சரியமாகவும் எப்படி இவர்களுக்கு இத்தனை கெட்டித்தனம் கிடைக்கிறது என்று யோசிக்க வைத்துவிட்டார்கள். இதில் நடந்த சம்பவங்களை எழுதலாம் என்று எண்ணியே வந்தேன். இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு முதலே தெரிந்தால் ஒரு சுவாரசியம் இருக்காது என்பதற்காக நிகழ்ச்சி நடந்தவற்றை தவிர்க்கிறேன். நேரமிருந்தால் முடிந்தால் பாருங்கள். கனடிய உறவுகள் IPTV மூலம் பார்க்கலாம். மற்றைய நாடுகள் பற்றி தெரியவில்லை. நான் பார்ப்பது கீழே உள்ள இரண்டிலுமே. https://www.skytamil.net/ https://www.tamildhool.net/
  43. ஆறாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து சராசரியான 236 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, இலகுவான ஓட்ட இலக்கை ரச்சின் ரவிந்திராவின் சதத்துடன் 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 240 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணித்த @ஏராளன் க்குப் புள்ளிகள் இல்லை, மற்றைய அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  44. ஆஹா .......பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே .........! 😍
  45. நீங்கள் நாங்கள் எழுதும் கருத்துக்கள் போலத்தான் வீடியோக்களும்.. இதுகருத்துக்களம்.. கருத்தெழுத, பேச, வீடியோ மூலம், படம்மூலம் கருத்தை சொல்ல இருக்கும் களம்.. செய்தித்தளங்கள் வேறு இருக்கின்றன.. நீங்கள் பந்தியில் பொங்குவதை அவர்கள் வீடியோவில் பொங்குகிறார்கள்.. அவ்வளவுதான்.. வேணுமென்றால் பொறமைப்படாமல் ஒரு யூரியுப் திறந்து இங்கு பந்தியில் எழுதுவதை பேசிக்கொண்டுவந்து இணையுங்கள்.. யாழை மட்டுமல்ல யாழை பார்க்காதவர்களையும் அது சென்றடையும்.. அவர்களைப்பர்த்து பொறாமைப்படாமல் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.. இளைய தலைமுறையுடன் இணந்து பயணம் செய்ய பழகிக்கொள்ளுங்கள்.. இல்லை என்றால் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டவேண்டியதுதான்.. பொறாமை ஒரு பொல்லாத நோய்..
  46. ஜேர்மனியின் உண்மையான அரசியல் தெரியாத ஒருவரின் காணொளி தயாரிப்பு என நினைக்கின்றேன். இதன் பின் புலத்தில் உள்ளவர்களையும் ஊகிக்க முடிகின்றது. ஜெர்மனிக்கு அகதி அரசியல் நெருக்கடி இருப்பது உண்மைதான். ஆனால் வெளிநாட்டவர் பிரச்சனை அல்ல.CDU,Afd கட்சிகள் அகதிகளை பற்றித்தான் பேசு பொருளாக எடுத்துள்ளார்கள்.வெளிநாட்டு வேலையாட்களைப்பற்றி அல்ல....அகதிகளாக வந்து வேலை வெட்டிக்கு போகாமல் சோசல் காசு எடுத்துக்கொண்டு பிள்ளை குட்டிகளை டசின் கணக்கில் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் கவனிக்கவும். இந்த காணொளியில் பேட்டி கொடுக்கும் பெண் CDU,Afd கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் எனும் தொனியில் ஏதோவெல்லாம் கூறுகின்றார். ஆனால் எந்த கட்சிக்கு வாக்களியுங்கள் என சொல்லவில்லை.CDU கட்சிதான் என்றுமில்லதவாறு அகதிகளை உள்வாங்கியவர்கள்.அதனாலேயே ஜேர்மனிக்குள் அதிக பிரச்சனைகள் வந்தது.சிறுமிகள் பல்லியல் வன்கொடுமை,கத்திக்குத்துக்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை ஏன்?அகதிகள் பற்றி ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் வந்தது பற்றியும் இவர் ஒரு வார்த்தை கூறவில்லை.அது பற்றி அலசவுமில்லை. மொட்டையாக வெளிநாட்டவர்களை அடிக்கப்போகிறார்கள். துரத்தப்போகின்றார்கள் என ஏதோவெல்லாம் சொல்லி தான் சார்ந்த கட்சி பிரச்சாரம் செய்கின்றார்.அவ்வளவுதான். 80களில் SPD கட்சிதான் ஈவு இரக்கமில்லாமல் அன்றைய அகதிகளையும் அகதி தஞ்சம் கோரிய எம்மவர்களையும் இரவோடு இரவாக திருப்பி அனுப்பியவர்கள் இதெல்லாம் அந்த காணொளி தயாரித்தவர்களுக்கு தெரியுமா?படிக்கவும் விடாமல்,வேலை செய்யவும் விடாமல் இழுத்தடித்தவர்கள் எந்த கட்சியினர் என்றாவது இவர்களுக்கு தெரியுமா? தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். ஜேர்மனிக்கு வந்து அவர்கள் மண்ணில் இராஜ கோபுரம் கட்டி பந்தா காட்டும் நீங்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் புத்த விகாரை பற்றி கதைக்க அருகதை அற்றவர்கள். தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். ஜேர்மனிக்கு வந்து அவர்கள் மண்ணில் இராஜ கோபுரம் கட்டி பந்தா காட்டும் நீங்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் புத்த விகாரை பற்றி கதைக்க அருகதை அற்றவர்கள். ஊர் திருவிழாக்களில் பக்கத்து ஊர்க்காரன் வந்து பெண்களுடன் சேட்டை விட்டால் உயிருடன் விட்டுவைக்காத எமது சமூகம்.....👈 ஜேர்மனிக்கு அகதியாக வந்து பெண்கள்,சிறுமிகள் என பாரபட்சம் இல்லாமல் பாலியல் கொடுமை செய்தும் கொலை செய்தும்,அப்பாவி மக்களை கத்தியால் குத்தி கொலை செய்தும்......பொது வீதி விழாக்களில் மக்கள் கூட்டங்கள் மீது வாகனங்களால் மோதி கொலை செய்வதையும் ஒரு ஜேர்மன்காரனை பார்த்து சும்மா இரு என சொல்ல வருகின்றார்களா? இதே மாதிரி உங்கள் ஊர்களில் நடந்தால் வாய் மூடிக்கொண்டு சும்மா இருப்பீர்களா?
  47. எனக்கு ஒன்று மட்டும் புரிஞ்சு போச்சு ......இந்த இரண்டு பகிடிகளின் ஹீரோ சாட்சாத் பெருமாள்தான் . .....! 😂 நீங்கள் இணைக்கும் நகைச்சுவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசானவை பெருமாள் ....... தொடருங்கள் . ........!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.