Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    39322
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    88806
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    7136
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46969
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/03/25 in Posts

  1. அம்மா தாயே குஷ்பு! கொஞ்ச நாளாய் 24ம் இடத்திலையே அங்காலை இஞ்சாலை அரக்காமல் அரங்காமல் நிக்கிறவர் முற்பிறவியில என்னென்ன பாவங்களை செய்து தொலைச்சார் எண்டு சொல்லு தாயே...😎
  2. எனக்கு 2016 இல் ட்ரம்ப் ரீம் தந்த பாடம் தான் நான் சீமான் போன்றோரைத் துகிலுரியக் காரணம். அமெரிக்காவில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பெரிய காட்சிப் பலகைகளில் காட்டுவார்கள்: "If you see something, say something" "ஏதும் சந்தேகத்துக்கிடமாகக் கண்டால், உம்மென்றிருக்காமல் வாயைத் திறந்து சொல்லு" என்பது தான் தொனி. இதை அமெரிக்கர்கள் எல்லோரும், எல்லா சூழ்நிலைகளிலும் பின்பற்றியிருந்தால் இன்றைக்கு உலகம் தலைகீழாக மாறியிருக்காது! 2015 இலேயே வெட்டிப் போட்டிருக்க வேண்டிய விஷச் செடியை, சின்னச் சின்ன லாபங்கள், கோபங்களுக்காக சிலர் ஆதரிக்க, ஆதரிக்காதோர் மௌனமாக இருக்க, இன்று அந்த விஷச் செடியே உலகின் சக்தி மிக்க அரசைச் சுற்றி வளைத்திருக்கிறது. பாடம்? சிறிதோ, பெரிதோ - பிழையை, மொள்ளமாறித்தனத்தை சுட்டிக் காட்டவும், போட்டு மிதிக்கவும் வேண்டும்! நாம் மிதிப்பதால் உலகம் மாறிவிடுமா என்று தத்துவம் பேசிக் கொண்டிருக்காமல், அறரீதியில் சரியான பக்கம் நிற்கவும், பேசவும் வேண்டும்!
  3. என்னாலேயே நம்ப முடியவில்லை.இதுதான் முதல்தடவை இடைக்கால முதல்வராக வந்துள்ளேன்.இதுவரை காலமும் என் தெரிவுகளில் என் விருப்பத்துக்கு முன்னுரிமை கொடுத்து பின்வரிசை உறுப்பினராக இருந்தேன்.இம்முறை திறமை அடிப்படிடையில் யதார்த்தத்துக்கு முன்னுரிமைகொடுத்து தெரிவுகளைச்செய்திருந்தேன்.3 உறுப்பினர்களை வைத்திருந்த ஜேவிபி ஆட்சியைப் பிடித்த மாதிரி தேர்தலில் தோற்ற ரணில் ஜனாதிபதியாகிய மாதிரி ஒரு பீலிங்
  4. குழு நிலைப் போட்டிகளின் இறுதியான பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி கடினமான ஆடுதளத்தில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களை எடுத்திருந்தது. நியூஸிலாந்து பந்துவீச்சாளார் மாற் ஹென்றி 8 ஓவர்கள் பந்துவீசி 5 விக்கெட்டுகளை 42 ஓட்டங்கள் கொடுத்துச் சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, கேன் வில்லியம்ஸின் நிதானமான 81 ஓட்டங்களைத் தவிர பிறரின் ஒத்துழைப்புக் கிட்டாமையால் 45.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. வருண் சக்கரவர்த்தி பத்து ஓவர்கள் பந்து வீசி 42 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். முடிவு: இந்திய அணி 44 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் 20 பேருக்குத் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. நியூஸிலாந்து வெல்லும் எனக் கணித்த மற்றைய 04 பேருக்கும் புள்ளிகள் இல்லை. யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை:
  5. நான் ஒரு சாத்வீகியாகத்தான் இருந்தேன்............. என்னை சரியாக நான்கு தடவைகள் மைனஸ் துப்பாக்கியால் சுட்டார்கள்................... 'நீங்கள் என்ன கிழித்தீர்கள்........ மூடிக் கொண்டு போங்கள்.........' என்றார் இன்னொருவர். இந்த அளவு மரியாதை கூட யாழ் களத்தில் நேரடியாக ஒருமையில் எழுதினால் கூண்டுக்குள் அடைத்து விடுவார்கள் என்ற பயத்தினால் மட்டுமே கிடைத்தது.............. இப்படித்தான் என்னிடம் விசயம் இருக்கின்றது என்ற விசயம் எனக்கு தெரிய வந்தது............😜.
  6. உ்ங்களை தர்க்கத்தில் வெல்லும் நோக்கம் எனக்கில்லை அண்ணை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தகவல்களில் தவறு இருக்கலாம் என கருதியே கைத்துப்பாக்கி அனுமதி தொடர்பான விபரங்களை பகிர்ந்தேன். கைத்துப்பாக்கி அனுமதி உள்ள பாதுகாவலர்களுக்கு சம்பளம் அதிகமாம் என குறிப்பிடுகிறார்கள். சீமானுடைய பேச்சு, முன்னைய செயற்பாடுகளால் அவர் மீது உங்களுக்கு கடும் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது என எனக்கு புரிகிறது, ஆனால் எல்லோருக்கும் அந்த புரிதல் வருகையில் உங்கள் நிலைக்கு எல்லோரும் வருவார்கள். சில வேளைகளில் அவரை திட்டமிட்டு வீழ்த்த செய்கிறார்களோ என்ற எண்ணமும் வருகிறது. எல்லாவற்றையும் விட யாழ் இணையமும் இங்குள்ள ஒவ்வொருவரும் ஒற்றுமையோடு இருக்கவேண்டும். அதற்கு பாதகமாக எந்த ஒரு எழுத்தையும் எழுத விரும்பவில்லை. அளவுக்கு அதிகமாக சிதறிவிட்டோம்.
  7. யானையின் குடும்பம் ஒன்று, நித்திரை கொள்கின்றது.
  8. புலவர் எல்லோரையும் ஏப்பம்விட்டு, வந்துட்டாரையா முதல்வராக. மொத்தமாக 48 புள்ளிகளில் 39 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அவர் மட்டும்தான், இரு குழுக்களிலும் முதலாவது இரண்டாவது அணிகளைச் சரியாகக் கணித்தவர். இங்கிலாந்து இறுதியாக வரும் என்று கணித்தவர், பாகிஸ்தானுடன் கோட்டைவிட்டுவிட்டார் (அந்த ஒரு புள்ளிதான் அவருக்குக் கிடைக்கவில்லை). தரமான சம்பவம் புலவர். 🖖
  9. 18 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  10. 15 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  11. ஐந்து பெண்களுக்கு வாழ்க்கை( பராமரிப்பு ) கொடுத்து 14 குடிமக்களை உலகிற்கு தந்த மனிதரை பாராடட தானே வேண்டும். நம்ம நாட்டில் ஒருத்திக்கு வாழ்கை கொடுத்து 14 க்குமேல் பெற்றும் இருக்கிறார்கள் விண்ணர்கள். 😃
  12. கறுப்பன் குசும்பன்… இன்னொரு புது லுமாலா சைக்கிளுக்கு ரூட் போடுறான்🤣 Johnny English 🕵️‍♂️
  13. பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (04 மார்ச்) முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், இந்திய அணி (குழு A முதல் இடம்) எதிர் அவுஸ்திரேலியா அணி (குழு B இரண்டாவது இடம்) 17 பேர் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். மூவர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக்கணித்துள்ளனர். போட்டியில் இல்லாத வேறு அணிகளைக் கணித்த நான்கு பேருக்குப் புள்ளிகள் கிடையாது! நாளைய அரையிறுதிப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
  14. Arbitration வழி தீர்க்கும் படி சொல்லியிருக்கிறார்களா? இந்தக் கட்டளையின் எழுத்து வடிவத்தை தேடிப் பார்த்தேன், காணவில்லை! ட்ரம்பிற்கும் சீமானுக்கும் பல ஒற்றுமைகள். அவற்றுள் ஒன்று இவ்வாறு வழக்குகளை இழுத்து, தாமதமாக்கி சகல சந்து பொந்துகளுக்குள்ளாலும் பூந்து ஓடி, ஒழிந்து கொள்வது. இனி அமித்ஷாவின் அண்டர் வேயாருக்குள் இருந்து அடிக்கடி வெளியே வந்து "மானத்திற்காக இறந்தவர்களின் மகன் நான்" என்று வாய் வேட்டு விடுவார் என நினைக்கிறேன், ஆள் மானஸ்தன்😎!
  15. இளங்காத்து வீசுதே இசைஞானி இப்பாடலில் செய்த நுணுக்கங்களை மேற்படி கலைஞர் விளக்குகிறார்.
  16. ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்பு என்பது அவரவர் சொந்த விருப்பம். அதற்கு நீங்கள் இப்படி கதை கதையாக எழுதுவது உங்கள் அனுமானங்கள். அங்கே நிறுவினேன் இங்கே நிறுவினேன் என்பதெல்லாம் உங்கள் சொந்தக்கருத்துகள். எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இணைக்கப்படுவதில்லை எல்லோரும் அதை நம்பத்தான் வேண்டுமென்பது கொஞ்சம் அதிமேதாவித்தனம் என்பது எனது கருத்து!
  17. விதி வலியது.🤣 நான் தனியாள் இல்லை.🤣 கப்பல் மூழ்கும் போது தலைமை மாலுமி மற்றவர்களை அனுப்பிவிட்டு கடைசியாக கப்பலுடன் மூழ்குவாராம், இங்கு தலை அவர்தான் என நிரூபிக்கின்றார்.
  18. அப்படியே ....? அப்போ நாடு நாடாக போய் புலிகள் மீது விமர்சனம் மட்டும் வைத்த லக்ஷ்மன் கதிர்காமரை எதற்கு தலைவர் போட்டுத்தள்ளினார் ...? நானறிந்தவரை கதிர்காமர் எந்த முன்னரங்கிலும் நின்று தமிழர்களுடன் அடிபட்டதாக கேள்விப்படவில்லை. திரியை விட்டு விலகாமல் இருக்க நான் சொல்லவருவது என்னவென்றால் தர லோக்கல் பார்ட்டிக்கு தர லோக்கல் அளவுக்கு இறங்கி சீமான் வெளுப்பதில் எமக்கு பேரானந்தம். மற்றபடிக்கு இந்த கர்மா, மட்டன் குருமா எல்லாம் ஆண்களுக்கு மட்டும் இல்லை பெண்களுக்கும் உண்டு. தனி மனித ஒழுக்கம் என்பதும் ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. விஜயலக்ஸ்மிக்கு அண்ணன் சீமானை அடையவேண்டுமென்பதல்ல நோக்கம் அவருக்கு இந்த விடயத்தை வைத்து எல்லா பக்கமும் கறக்கவேண்டும் என்பது எப்போதோ வெளிவந்துவிட்ட உண்மை. இதிலும் அண்ணன் சீமான் விஜயலஷ்மியுடன் நிறுத்தியிருக்கிறார் விஜயலஷ்மியை போல் விஜயலட்சுமியின் அக்காவையும் இழுத்து தர லோக்கலுக்கு சாத்தியிருந்தால் விஜயலட்சுமியிற்கு குடும்பஉறவுகளையும் இழுத்து தரக்குறைவாக பேசினால் வலி எப்படியிருக்கும் என்று புரிந்திருக்கும்.
  19. @புலவர் என்னையா புலவர் இப்படி பண்ணீட்டீங்களே. வாழ்த்துக்கள். உங்களாலேயே நம்ப முடியலை இல்ல. தம்பீ @கிருபன் எல்லோரும் கைவிட்டுட்டாங்களா?
  20. பிசிறில்லாத லாண்டிங் .......! 😂
  21. ஏன் வீணா காசிப்புக்கு செலவு செய்யுறியள் ..?
  22. சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்! 15 ஆண்டுகளாக ஒரு பாலியல் புகார் இழுத்தடிக்கப்பட்டு வருவதே ஒரு அவலம். அதை கறாரான நடவடிக்கை இன்றி, மீண்டும், மீண்டும் சமூகத்தின் பேசு பொருளாக்குவது அதைவிட அவலம். ”நீதிமன்றம், சட்டம், சமூகத்தின் மனசாட்சி எதுவும் எனக்கு ஒரு பொருட்டல்ல..” என ஒரு அரசியல் தலைமை வலம் வருவது ஆட்சிக்கே பேரவலம்! சமூகத்திற்கு பயனற்ற இது போன்ற விவகாரங்களை எழுதுவதையும், பேசுவதையும் முடிந்த அளவு தவிர்த்தே வருகிறேன். அதை விரைந்து முடிவுக்கு கொண்டு வந்து உண்மையான குற்றவாளியை தண்டிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது? இந்த மாதிரி ஒரு விவகாரம் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு பேசப்படுவதற்கு இங்குள்ள ஆட்சியாளர்களின் நேர்மையின்மையும் ஒரு காரணமாகும். ஒரு பெண் நம்ப வைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு இருக்கிறாள். ஒருவனை தீவிரமாக காதலித்த காரணத்தால், அவன் விருப்பபடி மீண்டும், மீண்டும் கருக் கலைப்பு என்ற அவலத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறாள். பிறகு காதலித்தவளை கைவிட்டு , செல்வாக்கும், செல்வ வளமும் உள்ள அரசியல் குடும்பத்து பெண்ணை மணந்துள்ளார். சீமான் மண்ணும், மரபும் சார்ந்த தமிழ் தேசியம் என்னும் உன்னத அரசியலை பேசுகிறார்! ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்கிறார். அந்த வகையில் கணிசமான இளைஞர்களின் நம்பிக்கையை வென்று எடுத்துள்ளார். எனில், அவர்கள் பின்பற்றத் தக்க முன்னுதாரண வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவது தான் ஒரு தலைவனுக்கு அழகாகும். மற்றொரு கல்யாணம் செய்து கொண்ட பிறகும் காதலித்த பெண்ணை கைவிட முடியாமல் மாதாமாதம் ரூ50,000 தந்து தொடர்பை நீடித்துக் கொண்டே வந்துள்ளார். பிறகு அதையும் தராமல் அந்த பெண்ணை நட்டாற்றில் விடுகிறார். அவள் தெருவிற்கு வருகிறாள்! இவரும் மல்லு கட்டுகிறார். கவியரசர் கண்ணதாசன் மூன்று மனைவியரோடு வாழ்ந்திருக்கிறார். கருணாநிதி அவர்களும் இரு பெண்ணோடு வாழ்ந்திருக்கிறார். எம்.ஆர்.ராதாவும் மூன்று மனைவியரையும், ஏராளமான ஆசை நாயகிகளையும் கொண்டிருந்திருக்கிறார்! நிச்சயமாக இவை எதுவும் பின்பற்றத் தகுந்த முன் உதாரணங்கள் இல்லை. ஆனால், சம்பந்தப்பட்ட பெண்களை சமமாக நடத்தி, சந்தோசமாக வைத்துக் கொள்ளும் பக்குவப்பட்டவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள். சீமானால் அது முடியவில்லை. மாதம் வெறும் 50,000 அனுப்பி போனில் பேசக் கூட பயந்து வாழ்ந்த காலமும் முடிவுக்கு வந்து, முதல் மனைவியால் அவர் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து நிராதரவாக விட்டு விடுகிறார், விஜயலட்சுமியை! இந்தச் சூழலில் அந்தப் பெண் பல முறை ஆண்டுக்கணக்கில் போலீசில் புகார் தந்தும் எந்தப் பயனுமற்று தான் சில காலம் கிணற்றில் போட்ட கல்லானது, விவகாரம்! சீமான் குறைந்தபட்ச மனசாட்சி உள்ளவராக இருந்திருந்தால், இந்த பிரச்சினைக்கு என்றோ முற்றுபுள்ளி வைத்திருக்கலாம். பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு கெளரமான ஒரு நஷ்ட ஈட்டை தந்து, புதியதொரு வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்ள உதவி இருக்கலாம். ஆனால், அவர் எப்போதும் எளியவர்களோடு சமரசமாகமாட்டார். கட்சிக்காக உழைத்த எத்தனை பேரை அலட்சியப்படுத்தி வெளியே அனுப்பி உள்ளார்! அவரது அகங்கார மனோபாவமே இந்த பிரச்சினை நீடிப்பதற்கு முழு முதற் காரணம். இதற்கு தோதாக இவரது மனைவி கயல்விழியும் அமைந்துவிட்டார். முதன் முதலாக இது வெளியே தெரிய வந்த போது, ஜெயலலிதா ஆட்சியில் இந்த காரணத்தால், தன்னை தண்டித்துவிடக் கூடாதே என ”இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’’ என அரசியல் ஸ்டண்ட் அடித்தார் சீமான். அதன் பிறகும் அதிமுகவுடனும், பாஜகவுடனும் நல்லுறவு வைத்துக் கொண்ட நிலையில், தொடர்ந்து விஜயலட்சுமி புகார் தூங்கிக் கிடந்தது. பாஜகவினர் அன்று சீமானுக்கு ஆதரவாகத் தன்னை மிரட்டியதாக விஜயலட்சுமி கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனது புகார் கவனிக்கபடுமென்று நம்பிய விஜயலட்சுமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது…! கடந்த நான்காண்டுகளில் பல முறை விஜயலட்சுமி புகார் தந்து, பல முறை போலீசால் விசாரிக்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு முறை காவல்துறையினர் சீமானை அழைத்து விசாரித்ததோடு விவகாரத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். அந்த அளவுக்கு அரசியல் அழுத்தம் இருந்த காரணத்தால் சீமான் ஒருபோதும் தண்டிக்கப்பட முடிந்தவரல்ல… என்ற முடிவுக்கு தான் வந்ததை விஜயலட்சுமி வெளிப்படையாக அழுகையோடு அறிவித்து விட்டுத் தான் பெங்களூர் சென்றார். இந்தச் சூழலில் தான் வழக்கை நீதிமன்றம் விசாரித்ததில் விஜயலட்சுமியின் குற்றச்சாட்டில் உள்ள உண்மைத் தன்மையையும், இந்த புகார் தொடர்ந்து அலட்சியப்பட்டு வருவதையும் கவனத்தில் கொண்டு சீமானை விசாரித்து அறிக்கை தர நீதிபதி உத்தரவிடுகிறார். நீதிபதி விசாரிக்கத் தான் கூறியுள்ளார். தன் மீது தவறு இல்லாத பட்சத்தில் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறேன் என்றல்லவா சீமான் சொல்லி இருக்க வேண்டும். ஏற்கனவே 15 ஆண்டுகள் இழுத்தடித்தது போதாது என்று, தற்போது மீண்டும் வாய்தா கேட்பதும், விசாரணையை தள்ளிப் போட்டுக் கொண்டே போக நினைப்பதும் கோழைத்தனமின்றி வேறென்ன? வீட்டு வாசலில் அழைப்பாணை ஒட்டுவது என்பது ஒரு நடைமுறை தானே. அதை நான் தான் படிப்பதற்காக கிழித்து வரச் சொன்னேன் என்கிறார் சீமான் மனைவி. ஆனால், வாயிற்காவலர் அதை அக்குவேறு ஆணிவேராக கிழித்து போட்டாரே தவிர, படிக்கத் தோதாக கிழிக்கவில்லை என்பதே நிஜம். அதை செல்போனில் போட்டோ எடுத்து வரச் சொல்லி கூட சீமான் மனைவி கயல்விழி அம்மையார் படித்திருக்க வாய்ப்புள்ளது. கிழித்துப் போட்ட விவகாரத்தை அவமதிப்பாக கருதி காவல்துறை வருகின்றனர். கேட்டை திறந்து அவர்களை பார்த்தவுடன், சட்டென்று கேட்டை மீண்டும் சாத்த முயற்சிக்கிறார் அந்த செக்யூரிட்டி மனிதர். வந்த காவல்துறையினரிடம் இயல்பாக பேசி, விசாரணைக்கு தானே ஒத்துழைத்து அவர் சென்று இருக்க முடியும் தானே! இத்தனைக்கு பிறகும் சீமானும், அவர் மனைவியும் எந்தவிதக் குற்றவுணர்வுமின்றி, பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஆவேசம் காட்டுகின்றனர் என்றால், சட்டத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாக இவர்கள் தங்களை கருதுகிறார்கள் என்றே பொருளாகும். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சென்று விசாரிக்கவே தடை கேட்கிறார் சீமான் என்றால், இது தப்பிக்கும் முயற்சி தானே! எதிர்கொள்வதில் இருக்கும் கோழைத்தனம் தானே! ஒரு பாலியல் குற்றச் செயல் செய்தவர் 15 ஆண்டுகளாக வருங்கால முதல்வரை போல வலம் வருவதும், அரசியல் நியாயங்கள் பேசி அரசியல் நட்சத்திரமாக வலம் வருவதும் அவரது செல்வாக்கை மட்டும் காட்டவில்லை. தற்போதுள்ள ஆட்சியாளர்களின் ஆளுமை பற்றாகுறையையும் சேர்த்தே காட்டுகிறது. முதலமைச்சர் ஸ்டாலினால், சீமானை நியாயப்படி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி தண்டிக்க முடியாவிட்டால், அது அவரது திறமையின்மையை – உறுதிபாடற்ற நிர்வாக ஆளுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே அமைந்துவிடும். இத்தனைக்கு பிறகும் சீமானை தண்டிக்கவியலாமல் போனால் அது – சட்டம், நீதிமன்றம், காவல்துறை, ஆட்சி நிர்வாகம், சமூகம் போன்ற சகலத்தின் தோல்வியாக – வரலாற்றில் கரும்புள்ளியாகிவிடும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று…! லட்சிய நோக்கும், அர்ப்பணிப்பும் கொண்ட நாம் தமிழர் இயக்கத்தின் தம்பி, தங்கைகள் சீமானை புறக்கணித்து, தங்களில் இருந்து ஒரு புதிய தலைமையை கண்டடைய வேண்டும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/20907/seeman-vijayalaxmi-stalin/
  23. பையா இன்னும் போட்டிகள் முடியவில்லை.
  24. பெரிய‌ப்பு உங்க‌ளை நினைக்க‌ தான் க‌வ‌லையா இருக்கு ஆர‌ம்ப‌த்தில் அவுஸ்ரேலியாவை தெரிவு செய்து விட்டு இங்லாந்தை தெரிவு செய்த‌த‌ன் விலைவு 5 புள்ளி ப‌றி போக‌ கார‌ன‌ம் இங்லாந் அணி இப்ப‌டி ப‌டு கேவ‌லாமாய் விளையாடுவின‌ம் என்று நானும் நினைத்து கூட‌ பார்க்க‌ வில்லை..............இந்த‌ தொட‌ரில் ஏதாவ‌து ஒரு போட்டியில் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுத்த‌ அணியும் இங்லாந் தான்.................. ஏதாவ‌து ஒரு போட்டியில் அதிக‌ விக்கேட் எடுத்த‌ வீர‌ர்கள் மூன்று வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் முக‌மெட் சாமி ( இந்தியா ) ஹென்ரி ( நியுசிலாந் ) வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி ( இந்தியா ) குறைந்த‌ ர‌ன்ஸ் கொடுத்து 5 விக்கேட் எடுத்த‌து இர‌ண்டு வீர‌ர்க‌ளும் ச‌ம‌ நிலையில் ஹென்ரி ம‌ற்றும் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி , 42 / 42 ர‌ன்ஸ் தான் விட்டு கொடுத்து இருக்கின‌ம் ஹென்ரி 8ஓவ‌ர் போட்டு 42 ர‌ன்ஸ் விட்டு கொடுத்து 5 விக்கேட் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி 10 ஓவ‌ர் போட்டு 42 ர‌ன்ஸ் விட்டு கொடுத்து 5 விக்கேட் / இதில் யாருக்கு புள்ளி போடுவிங்க‌ள்.................நியுசிலாந் வீர‌ர் ஹென்ரி தான் குறைந்த‌ ஓவ‌ர் போட்டு 5 விக்கேட் எடுத்து இருக்கிறார்🤔😁......................
  25. அமெரிக்க உதவி இல்லையென்றால் இதுவரையிலும் இனிமேலும் ரசியாவை எதிர்த்து செலென்ஸ்கியால் போரிட முடியாது (செலென்ஸ்கி போரை முன்னெடுக்கலாம் உக்ரேய்ன் இராணுவத்தால் முடியாது) அமெரிக்காவை எந்த ஐரோப்பிய நாடும் எதிர்க்கப்போவதில்லை அதற்கு மேலால் பிரான்ஸ் மக்ரோன் செலென்ஸ்கிக்கு ஒரு கதை சொல்வார் ட்ராமை கண்டால் நீயும் நானும் சகோதரம் என்று கட்டி பிடித்து கொள்வார் போர் முடிந்தால் உக்ரேனில் தேர்தல் வரும் தேர்தல் வந்தால் செலென்ஸ்கி வெல்ல முடியாது அதனால் உக்ரைன் நாட்டு மக்களை அடகுவைத்து ஒரு ஒரு ஹீரோவிஷ்யத்தை உருவாக்க எண்ணி இருக்கிறாரார் ட்ரம் கேட்க்கும் மினரல் ஒப்பந்தத்தை வரும் வாரமோ அல்லது வரும் மாதமோ செலென்ஸ்கி கையெழுத்த்து இட்டுதான் ஆகுவார் முகத்தில் கரி பூசிக்கொண்டு கையெழுத்து இடுவதை விட அதை வெள்ளைமாளிகையில் செய்துவிட்டு கவுரமாக சென்று இருக்கலாம் கீரோயிச நாடகம் தேர்தலுக்கு பயன்படும் என்று செலென்ஸ்கி எண்ணி இருந்தால் அதுபோல ஒரு அடிமுடடாள் சிந்தனை வேறெதுவும் இருக்க முடியாது சில பண ஊழல் மோசடிகளை செலென்ஸ்கி ஒரு அமெரிக்கா நிறுவனத்துக்கு உள்ளலேயே செய்து இருக்கிறார் இதுவே ட்ரம்பிற்கு போதுமானது அதையும்தாண்டி செலென்ஸ்கி சில ஆயுதங்களை விற்று அவை காமாஸ் கைகளுக்கும் சென்று இருக்கிறது செலென்ஸ்கிக்கு எதிராக பிளேடடை மாற்ற இந்த இரண்டுமே அமேரிக்க அரசுக்கு போதுமானது. இதை வைத்தே ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டொவை ட்ரம் கையுக்குள் கொண்டுவந்து விடுவார் இப்போதே உக்ரைனில் செலென்ஸ்கியின் நடத்தைக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. போலந்து அரசுகள் கங்கேரிய அரசுகள் (இத்தாலி) ஏற்கனவே வலதுசாரி கொள்கை உடையவை டிரம்புடன் நெருக்கமானவை இவர்கள் செலென்ஸ்கிக்கு எதிராக திரும்பினால் அகதிகளாக இருக்கும் மில்லயன் கணக்கான உக்ரைன் மக்கள் நடு ரோட்டில் நிற்பார்கள். பூனை கவிதை அழகானது உலக நடைமுறை வேறானது நல்ல கற்பனை கதை நீளம் போதாது
  26. சீமான் என்டு எழுதி ஒரு துண்டை குடுத்தா நையிட்டு தின்னுட்டு.. காலைல... பஸ் புடிச்சி வந்துடுவாங்கள்... இன்னும் ஒன்டு தா எண்டு...🤣
  27. இரெண்டு விடயம். இங்கே சென்னை நீதிபதி எந்த விதத்திலும் அநியாயமாக நடக்கவில்லை. மிக நியாயமாக - வழக்கை இழுத்தடிக்காமல், 12 கிழமை அவகாசம் கொடுத்து பூர்வாங்க விசாரணையை முடிக்க சொல்லி உள்ளார். இந்த வழக்கு என்றாவது விசாரிக்கப்பட்டால் - அது சென்னை உயர் நீதி மன்றில்தான் விசாரிக்கப்படும். இங்கே சீமான் கூட சென்னை நீதிபதி மேல் புகார் ஏதும் கூறவில்லை. பொலிஸ் விசாரிக்கும் வேகத்தை பற்றியே புகார் கூறி உள்ளார். பிரதிவாதியாக தமிழ் நாடு அரசுதான் உள்ளது. உச்சநீதிமன்று அல்ல. சீமானே சொல்லாத விடயத்தை சீனியர் அட்வகேட் மருதும் அவரது ஜூனியர் லாயர் ஓணாண்டியும் சொல்லி அழுகிறீர்கள் 🤣. உங்களுக்கு விரைவில் டின்னு கட்ட போகிறார்கள் 🤣
  28. அப்ப இப்பவும் "அண்டர்கவர் ஒபரேசன்" தான் திட்டம்😂? நல்லது, நமக்கும் இப்ப ஜேம்ஸ் பொண்ட் 007 படங்கள் இல்லாமல் அலுப்படிக்கிறது! யாழ் கள 007 களையாவது பார்த்து பரவசமடைவோம்😎!
  29. இதெல்லாம் சுத்த அநியாயம்................... வெறும் ஆறே ஆறு மாத தொடர்பு....... தொடர்பு என்று கூட சொல்ல முடியாது, ஒரு சேவை கொடுக்கல் வாங்கல் என்று தானே அவர் சொன்னார்............ இதற்குப் போய் என்ன பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் நீதிமன்றின் வெளியே............. இந்த தடவை மதுரை செல்வம் பேச்சுவார்த்தையில் உசாராக இருக்கவேண்டும். விஜயலட்சுமி பல வருடங்களாக யார் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்று பட்டியலிட்டிருக்கின்றார்கள்......... என்ன, இந்தப் பக்கம் ஆறு மாதங்கள் மட்டுமே என்றவுடன் தான் கொஞ்சம் யோசனையாக இருக்கின்றது............. 'அண்ணனின் ஆறு மாதங்கள்.........' என்று இன்னொரு பட்டியலை அவரின் எதிரிகள் வெளியிட்டு விடுவார்களோ என்று............................ அரசியலிலும், சினிமாவிலும் இது எல்லாம் சகஜம் என்ற முடிவுக்கு வந்து விட்டதால், இனிமேல் பிரச்சனை ஒன்றுமே இல்லை, இப்படியான விசயங்களை இடதுகை புறங்கையால் ஒதுக்கி விட்டு முன்னர் போலவே போய்க் கொண்டேயிருக்கலாம்...............
  30. இன்னும் எந்த கோட்டிலும் எதுவும் நிரூபணம் ஆகவில்லை நீங்கள் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள்? சீமானுக்கு பக்கத்தில் படுத்து இருந்தீர்களா?
  31. சென்னை நீதிமன்றுக்கு........ தமிழ்நாட்டு காவல்துறைக்கு .......... மாமி வேலை என்ன என்றே தெரியாது பொதுவாவே இப்படியான காமெடிக்கு வெளியில் இருந்தே வாசிச்சு சிரித்துவிட்டுதான் செல்வேன் ...... வயிறு வலி தாங்கல
  32. களவிதிகளில் நீங்கள் திடீர் கரிசனை காட்டுவதால், கீழே விதிகளைத் தந்திருக்கிறேன். "....பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது: உயிரோடு வாழும்/மறைந்த பிரபலமானவர்களின் படங்கள். குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள். தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் படங்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்). மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்). பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள் இதில் எந்த விதி மீறப் பட்டிருக்கிறது என்கிறீர்கள்? படங்கள் அல்லாமல் சித்திரங்கள் (Artwork), கேலிச்சித்திரங்கள் (cartoon) ஏனையோரும் பயன்படுத்துகிறார்கள் (சசி வர்ணம் எஸ்பிபியின் சித்திரத்தைப் பயன்படுத்துகிறார்) தடை இல்லை! எனவே, கருத்துக்களை எழுதுவதை விட்டு விட்டு, நொய்மையான முறைப்பாடுகளோடு வராதீர்கள். ஒரு பாலியல் தொடர்பான குற்றச்சாட்டில் ஒழித்து ஓடும் ஒரு அரசியல்வாதியை எதிர்த்து, நக்கலடித்து 90% வீதம் கருத்துக்கள், அதுவும் 3 உறுப்பினர்களால் எழுதப் பட்டிருக்கின்றன. இடையிடையே வந்து "வுட்ரா, வுட்ரா" பாணியிலும், "இது சினிமாவில் சகஜம், எனவே ஓகே" என்ற பாணியிலும் எழுதிய 10% வெள்ளையடிப்புக் கருத்துக்கள் பற்றி உங்களுக்கு முறைப்பாடெதுவும் இல்லையா? இங்கே இது நடக்கவேயில்லையா? "கறுப்புத் தங்கம்" வைரமுத்துவுக்கும் இதே முட்டுக் கொடுத்தார்களே? இங்கே பொய் உரைப்பதும், மிகவும் தவறான கருத்துகளை உங்கள் "பக்தி" யின் காரணமாகப் பரப்புவதும் நீங்கள் மட்டும் தான்! அதற்கு புதிதாக நீங்கள் கோசானுக்குக் கொடுத்த விளக்கம் பார்த்துச் சிரித்தேன்: "அண்டர்கவர் Op செய்து பிடிக்க இருந்தேன், சத்தம் போட்டுக் கெடுத்து விட்டீர்கள்" என்று😂!
  33. உண்மை அண்ணை. கருத்து மோதல்கள் என்றால் மட்டும் ஏற்றுக்கொள்ளலாம். கருத்தாளர்களை சீண்டாமல் அவர்களின் கருத்துகள்/எழுத்துகளின் தவறை அவர்கள் விளங்கிக் கொள்ளும் வண்ணம் பதில் எழுதும் போது அவர்களே ஏற்றுக்கொள்ளும் நிலையை உருவாக்கலாம். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கருத்துகளை சொல்லலாம். இவ்வளவு காலமும் இங்கு வாசித்து புரிந்துகொண்டதின் அடிப்படையில் தலைவர் போல சீமான் அவர்கள் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோமோ?! ஒரு நாளும் அது சாத்தியமில்லை. நாம் எமது மக்களுக்கான பணிகள், சேவைகளில் ஒன்றுபட்டே ஆகவேண்டும்.
  34. இதற்கு இடையில் சஜித் மக்கள் மீண்டும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க இந்த அரசு காரணமாகி விட்டது என கூறியுள்ளார்.
  35. ஒரு சின்ன தன்னிலை விளக்கம் என்மீதான தனிமனித தாக்குதல்களின் இன்னொரு வடிவமாகவே நான் இந்த சதிகோட்பாடு, conspiracy theorist என்ற அவதூறையும் பார்க்கிறேன். சதி கோட்பாடு என்றால் ஒரு சிறு உண்மையை வைத்து ஒரு பொய்யை கட்டுவது. இங்கே அப்படி அல்ல, சுப முத்துகுமார் மரணம், அவர் இடுகல் உடைப்பு, சீமானின் மறுதலிப்பு தொட்டு, 15 வருடமாக, இப்போ army wing வரை சீமான் ரோவின் கையாள் என்பதற்கு நான் ஒரு சந்தர்ப சாட்சியங்களின் கோவையையே யாழில் பதிந்துள்ளேன் (வேறுபட்ட திரிகளில்) (dossier of circumstantial evidence). ஆனால் கோஷானை தர்க்கத்தில் வென்று விட வேண்டும், அல்லது சீமானை தப்பாக எண்ண முடியாமல் உள்ளது போன்ற காரணங்களால் இவற்றை எப்போ, புலவர், குசா அண்ணை, ஓணாண்டி, ஏராளன் என பலர் ஏற்க மறுக்கின்றனர். விசுகு அண்ணா ஒரு படி மேலே போய் கோஷான் சொல்வதால் சில உண்மையை கூட நான் ஏற்பதில்லை என எழுதுகிறார். அதன் தொடர்ச்சிதான் இந்த “சதிக்கோட்பாடு” சேறடிப்பும். என்றோ ஒரு நாள், அது சீமான் முதலமைச்சர் ஆன பின்பாக கூட இருக்கலாம், நான் சொன்னது உண்மை என நீங்கள் அனைவரும் உணர்ந்தே ஆவீர்கள். அப்போ, சீமான் என்ற நச்சை வளர நீங்கள் செய்த செயல்கள் இட்டு, ஒரு ஈழத்தமிழனாக உங்கள் மனச்சாட்சிக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும். ஆனால் நான் உங்கஊக்காக காத்திருக்க போவதில்லை. சீமான் வெளுப்பு தொடரும்.
  36. வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்: நியூசிலாந்தை வென்ற இந்தியாவுக்கு காத்திருக்கும் புதிய சவால்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,க.போத்திராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி 6-வது முறையாகத் தகுதி பெற்றுள்ளது. துபையில் நேற்று நடந்த குரூப் ஏ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்த்தது. 250 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்து 44 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று, முதலிடத்தைப் பிடித்தது. குரூப் பி பிரிவில் 2வது இடம் பெற்ற ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நாளை மோதுகிறது. விளம்பரம் தென் ஆப்ரிக்காவை வெளியேற்றி, ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுமா? சாம்பியன்ஸ் டிராபி: துபையில் அனைத்து போட்டிகளையும் விளையாடுவதன் மூலம் இந்தியா பயனடைகிறதா? சாம்பியன்ஸ் டிராஃபி: ஆப்கானிஸ்தான் திரில் வெற்றி, இங்கிலாந்து ஏமாற்றம் - சறுக்கியது எங்கே? கோலி சாதனை சதம்: இந்தியா பெற்ற வெற்றியால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தே வெளியேறுமா? டாப்ஆர்டர் தோல்வி இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சுப்மான் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நேற்று 7 வது ஓவருக்குள்ளேயே விரைவாக ஆட்டமிழந்தனர். 10 ஓவர்களுக்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளையும் இழந்தது. 2வது முறையாக டாப்ஆர்டர் பேட்டர்கள் இந்த 3 பேரும் விரைவாக ஆட்டமிழந்துள்ளனர். இதற்குமுன் 2023ல் ஈடன்கார்டனில் நடந்த ஆட்டத்திலும் இந்த 3 பேட்டர்களும் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்திருந்தனர். 15 ஓவர்களில் இந்திய அணி நேற்று 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்திருந்தது. 15 ஓவர்களில் இந்த அளவு குறைவாக ரன்கள் சேர்த்தது 2020ம் ஆண்டுக்குப்பின் இது2வது முறையாகும். 2022ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்களை இந்திய அணி சேர்த்தது. ஆனால் தொடக்கத்தில் மந்தமாக இந்திய அணி பேட் செய்தாலும், அடுத்த 25 ஓவர்களில் 139 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி பேட்டிங்கில் டாப் ஆர்டர் சொதப்பினாலும், நடுவரிசையில் அக்ஸர் படேல்(42), ஸ்ரேயாஸ் அய்யர்(79), ஹர்திக் (45) ஆகியோரின் சிறப்பான ஆட்டம் ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை பெற்றுக்கொடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆபத்பாந்தவன் ஸ்ரேயாஸ் இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங்கிற்கு தூணாக கிடைத்துள்ளார் ஸ்ரேயாஸ் அய்யர். சிறந்த பேட்டராக இருந்தபோதிலும் இன்னும் "அன்சங் ஹீரோவாகவே" இருந்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து, சாம்பியன்ஸ் டிராபி வரை இந்திய அணியின் டாப்ஆர்டர்கள் சறுக்கிய போதெல்லாம் அணியை தூக்கி நிறுத்தியது ஸ்ரேயாஸ் பேட்டிங்தான். எந்த நேரத்தில் எப்படிப்பட்ட பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கைதேர்ந்தவராகி, அதற்கேற்றபடி ஸ்ரேயாஸ் பேட் செய்வது சிறப்பாகும். ஆடுகளம் மெதுவாக இருக்கிறது, டாப் ஆர்டர்கள் வீழ்ந்துவிட்டார்கள் எனத் தெரிந்தவுடன் ரன் சேர்க்கும் வேகக்தைக் குறைத்து ஆங்கர் ரோல் எடுத்து ஸ்ரேயாஸ் பேட் செய்தார் அக்ஸர், ஸ்ரேயாஸ் இருவரும் 51 பந்துகளாக ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் இருந்தனர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 75 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அவரின் ஒருநாள் போட்டி வாழ்க்கையில் மெதுவாக அடிக்கப்பட்ட அரைசதமாகும், இதற்கு முன் 2022ல் அகமதாபாத்தில் 74 பந்துகளில் ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES நியூசிலாந்துக்கு எதிராக 8 ஒருநாள் போட்டிகளில் ஆடிய ஸ்ரேயாஸ் இதுவரை 4 அரைசதங்கள், 2 சதங்கள் என 563 ரன்கள் குவித்துள்ளார். வேகப்பந்துவீச்சைவிட சுழற்பந்துவீச்சை பிரமாதமாக ஆடக் கூடியவராக ஸ்ரேயாஸ் உள்ளார். 8 முறையுமே வேகப்பந்துவீச்சில் ஆட்டமிழந்த ஸ்ரேயாஸ் 394 ரன்களும், சுழற்பந்துவீச்சுக்கு ஆட்டமிழக்காத ஸ்ரேயாஸ் 175 பந்துகளில் 169 ரன்கள் சேர்த்துள்ளார். ஹர்ஷித் ராணாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் 2வது பிரதான பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியா பந்துவீசினார். தொடக்கத்திலேயே அப்பர் கட் ஷாட்டில் ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை சாய்த்து ஹர்திக் பலம் சேர்த்தரா். பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் களமிறங்கி 45 ரன்கள் சேர்த்து சிறந்த ஆல்ரவுண்டர் என்பதையும் நிரூபித்தார். பிளாஸ்டிக் தாளில் வேக வைத்த இட்லியால் என்ன ஆபத்து? மருத்துவர்கள் விளக்கம்2 மார்ச் 2025 இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்2 மார்ச் 2025 வில்லியம்ஸன் ஆறுதல் நியூசிலாந்து அணிக்கு நேற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் மாட் ஹென்றி எடுத்த 5 விக்கெட்டுகள், வில்லியம்ஸனின் போராட்ட பேட்டிங்தான். 120 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து வில்லியம்ஸன் ஆட்டமிழந்தார். வில்லியம்ஸன் தவிர வேறு எந்த பேட்டர்களும் 30 ரன்களைக் கடக்கவில்லை. அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பும் 43 ரன்களைக் கடக்காததும் நியூசிலாந்து தோல்விக்கு முக்கியக் காரணமாகும். எந்த பேட்டரும் நல்ல பார்ட்னர்ஷிப்பை வழங்காதது தோல்விக்கு பெரிய காரணம். இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நேற்று டேரல் மிட்ஷெல், லேதம், பிரேஸ்வெல், பிலிப்ஸ் ஆகியோர் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தனர். 30 ஓவர்கள் முடியும் வரை நியூசிலாந்து வெற்றிக்கான பாதி இலக்கை கடந்துவிட்டது, கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால், லேதம் ஆட்டமிழந்தபின் சீரான இடைவெளியில் நியூசிலாந்து பேட்டர்கள் விக்கெட்டை இழந்தவாறு இருந்தனர். சான்ட்னர் நேற்று வருண் சக்ரவர்த்தியின் அற்புதமான பந்தில் போல்டாகினார். ஆட்டமிழந்த பின் சில வினாடிகள் ஸ்டம்பையும், வருணையும் பிரமிப்புடன் பார்த்துவிட்டு சான்ட்னர் பெவிலியன் திரும்பினார். வருண் தனது 10-வது ஓவரில் சான்ட்னரையும், ஹென்றி விக்கெட்டையும் வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் ஆடுகளம் நேரம் செல்லச்செல்ல சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறியது. அங்கே, பனிப்பொழிவும் இல்லாமல் இருந்ததால், பந்துவீச்சாளர்களுக்கு நல்ல 'கிரிப்' கிடைத்தது. இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருந்ததாகவே தோன்றியது. அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ், வில்லியம்ஸன் இருவருமே அதிக பந்துகளை எதிர்கொண்டனர். நியூசிலாந்து அணி 133 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்ததால், ஆட்டம் அந்த அணிக்கு சாதகமாக இருப்பது போல் தோன்றியது. ஆனால், இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நடுப்பகுதியில் நெருக்கடி அளித்ததால், அடுத்த 72 ரன்களுக்குள் மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணி இழந்தது. இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிப்பது ஏன்? 8 கேள்விகளும் பதில்களும்2 மார்ச் 2025 இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்?21 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES 14 ஆண்டுகளுக்குப் பின்.. இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்களான ஷமி, ஹர்திக் பாண்டியா இருவருமே 8 ஓவர்கள் மட்டுமே வீசினர். ஆனால், சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் சேர்ந்து 37 ஓவர்கள் வீசி, 166 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். குல்தீப் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, அக்ஸர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து ஒரு போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 5-வது முறையாகும். 2011-ம் ஆண்டுக்குப்பின் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அதேபோல நியூசிலாந்து அணியும் சுழற்பந்துவீச்சாளர்களிடம் 9 விக்கெட்டுகளை இழப்பது 3வது முறை, இதற்கு முன் இலங்கை அணியிடம் 1998, 2001 ஆண்டுகளில் சுழற்பந்துவீச்சாளர்களிடம் 9 விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்திருந்தது. நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் 25 ஓவர்கள் வீசி 128 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர்.மாறாக, வேகப்பந்துவீச்சாளர் ஹென்றி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கடன் கொடுத்த இந்திய வணிகரைப் பற்றி தெரியுமா?2 மார்ச் 2025 உயிரை பணயம் வைத்து இந்தியா வந்து இவர்கள் சிறுநீரகங்களை விற்பது ஏன்?28 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES வருண் சக்ரவர்த்தி அறிமுகமே அசத்தல் ஐசிசி சாம்பியன்ஸ் போட்டித் தொடரில் முதல் முறையாக விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். சாம்பியன்ஸ் டிராபியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய பந்துவீச்சாளர் வருண், இதற்குமுன் ஜடேஜா, ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். அது மட்டுமல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி அறிமுக ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் வருண் பெற்றார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட், முகமது ஷமி ஆகியோர் இந்த பெருமையைப் பெற்றிருந்தனர் நடுப்பகுதி ஓவர்களில் நியூசிலாந்து பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த வருண் சக்வர்த்தி, அந்த அணியின் விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார். பாகிஸ்தானின் பலவீனம் இந்தியாவின் பலமாக மாறுமா? கோலி, ரோஹித் சரியாக பயன்படுத்துவார்களா?23 பிப்ரவரி 2025 குடல் ஆரோக்கியம்: ஒரு நாளில் எத்தனை முறை மலம் கழிப்பது ஆரோக்கியமானது?28 பிப்ரவரி 2025 அரையிறுதி புள்ளிவிவரங்கள் யாருக்கு சாதகம்? இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு 6-வது முறையாக முன்னேறியுள்ளது இதற்கு முன் 1998, 2000, 2002, 2013, 2017 ஆண்டுகளில் அரையிறுதி வரை இந்திய அணி வந்துள்ளது. இந்த முறை பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் இந்திய அணி எதிர்கொள்கிறது. துபை ஆடுகளம் இந்திய சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான அம்சம், ஆஸ்திரேலிய அணியில் 3 பிரதான வேகப்பந்துவீச்சாளர்களான கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் ஆகியோர் இல்லாதது சாதகமான அம்சமாகும். மற்ற வகையில் அனுபவம் குறைந்த வீரர்களை வைத்திருந்தாலும், கடுமையான சவால்களை அளிக்கிறது ஆஸ்திரேலியா. இங்கிலாந்துக்கு எதிராக 350 ரன்களை சேஸ் செய்து தனது பேட்டிங் வலிமையை வெளிப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியா. ஐசிசி தொடர்களில் நாக்அவுட் சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதினாலே கடுமையான போட்டியாகத்தான் இருக்கும். இரு அணிகளும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்றாலும், கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய அணியின் கைதான் ஓங்கியுள்ளது. ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் இதுவரை ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் 7 முறை மோதியுள்ளன. ஒருநாள் போட்டி உலகக் கோப்பைத் தொடரில் 4 முறை மோதியதில் ஆஸ்திரேலிய அணி 3 முறையும், இந்திய அணி ஒருமுறையும் வென்றது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் 6 போட்டிகளில் இந்திய அணி 4 வெற்றியும், ஆஸ்திரேலிய அணி 2 வெற்றியும் பெற்றுள்ளன. பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட 2024 YR4 விண்கல் நிலவில் மோதப் போகிறதா? நாசா புதிய தகவல்26 பிப்ரவரி 2025 ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?27 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை நாக்அவுட் சுற்றில் 2003 காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியும், 2011 காலிறுதியில் இந்திய அணியும் வென்றன. 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதியில் ஆஸ்திரேலிய அணி வென்றது. 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன்ஸ் டிராபியைப் பொருத்தவரை இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 2 முறை இந்திய அணியும், ஒருமுறை ஆஸ்திரேலிய அணியும் வென்றன. ஆனால் இந்திய அணி பெற்ற இரு வெற்றிகளும் காலிறுதியில் நாக்அவுட் சுற்றில் பெற்றதாகும், ஆஸ்திரேலியா லீக் சுற்றில்தான் இந்திய அணியை வென்றுள்ளது. புள்ளிவிவரங்களைப் பொருத்தவரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் ஆதிக்கமே ஓங்கியுள்ளது. ஒட்டுமொத்த ஐசிசியின் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 தொடர் , டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் என 4 வகையான தொடர்களிலும் இரு அணிகளும் ஏறக்குறைய சிறிய வித்தியாசத்தில்தான் உள்ளன. 38 போட்டிகளில் இரு அணிகளும் மோதிய நிலையில் அதில் இந்திய அணி 16 வெற்றிகளும், ஆஸ்திரேலிய அணி 18 வெற்றிகளும் பெற்றுள்ளன, 4 போட்டிகளில் முடிவில்லை. ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரை இரு அணிகளும் 151 போட்டிகளில் இதுவரை ஆடியுள்ளன அதில் ஆஸ்திரேலிய அணி 84 முறையும், இந்திய அணி 57 முறையும் வென்றுள்ளன, 10 போட்டிகளில் முடிவு ஏதும் இல்லை. இந்தியாவுக்கு காத்திருக்கும் புதிய சவால்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்தான் இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்கும். குறிப்பாக டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், மெக்ருக், ஸ்மித், அலெக்ஸ் கேரெ, ஹார்டி ஆகியோர் பெரிய தலைவலியாக இருப்பார்கள். ஹெட் இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என அனைத்திலுமே சிறப்பாக பேட் செய்யக்கூடியவர் டிராவிஸ் ஹெட். இவரின் விக்கெட்டை தொடக்கத்திலேயே எடுத்துவிட்டாலே பாதி வெற்றி கிடைத்தது போலத்தான். பந்துவீச்சில் அனுபவமான வீரர்கள் பெரிதாக யாருமில்லை. ஸ்பென்சர் ஜான்சன், நேதன் எல்லீஸ் தவிர மற்றவர்கள் பெரிதாக அச்சுறுத்தும் அளவுக்கு பந்துவீசுவதில்லை. சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் என்பதால் ஆடம் ஸம்பா, தன்வீர் சங்கா, மேக்ஸ்வெல் பலம் சேர்ப்பார்கள். ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை நம்புவதைவிட பேட்டர்களை நம்பியே களமிறங்குகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் உள்ள பேட்டர்களில் பெரும்பாலானவர்களுக்கு முறையான சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடி பழகியதில்லை என்பது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாகும். துபை ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் முதல்முறையாக ஆடுவதால், பிட்ச்சின் தன்மையை அறிந்து பந்துவீசுவது கடினம். ஆடுகளத்துக்கு ஏற்றபடி பேட்டிங்கையும், பந்துவீச்சையும் மாற்ற வேண்டிய சவால்கள் உள்ளன. அரையிறுதி ஆட்டம் துபையில் நடப்பது இந்திய அணிக்கு சாதகமான அம்சமாகும். இதுவரை 3 லீக் ஆட்டங்களையும் இதே மைதானத்தில் ஆடியுள்ளதால் ஆடுகளத்தின் தன்மை இந்திய அணிக்கு நன்கு தெரியும், இந்திய அணிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் பெரிய பலமாக உள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn52yqkkr2go
  37. அஜந்த மென்டிஷ் ஒரு தொடரில், இலங்கையில் வைத்து இந்தியாவ உருட்டு உருட்டென்று உருட்டினார். அடுத்த தொடரில் இந்தியாவில் வைத்து, இந்தியா வெளுத்துத் தள்ளிவிட்டுது. அதிலிருந்து அவரால் பெரிதாக ஷோபிக்க முடியவில்லை. எல்லோருக்கும் இந்தியா காட்டிக்குடுத்து விட்டுது. வருணுக்கும் அதேதான் நடக்கும். இப்போ சிறிய மாற்றங்களுடன் வந்திருக்கிறார். நீங்கள் சொன்னமாதிரி, வேகமாகவும் வீசுகிறார். ஆனால் டிராவிஷ் ஹெட்டுக்கும், மாக்ஸ்வெலுக்கும் எப்பிடிப் போடப்போகிறார் என்பத்தில்தான் எல்லாம் இருக்கிறது.
  38. ரோவின் ஈழத்தமிழர் விடய தலையீடுக்கு முடிவு திகதி என்று ஒன்றில்லை. யார் போலிகாவை இறக்கினார்கள் - அப்பட்டமான இந்தியன் டெலி டிராமா அது இதே யாழ்களத்தில் குசும்பை காட்டவில்லையா? நான் முன்பே பலதடவை மிக தெளிவாக எழுதிவிட்டேன், சுப முத்துகுமார் கொலை முதல் எப்படி சீமான் மிரட்டலுக்கு பயந்து ரோவின் கைக்கூலி ஆகினார் என்பதை. நான் இதுவரை எழுதிய அத்தனை சந்தர்ப சாட்சி கோர்வையையும் விட்டு விடுங்கள். நேற்று நாம் தமிழர் கட்சியில் Ex-Indian Army Wing என ஒரு விங் இருப்பதும், அவர்கள் சீமானுக்கு துப்பாக்கி பாதுகாப்பு வழங்குவதும், இப்படி வழங்க இந்திய சட்டத்தில் இடம் ஏதும் இல்லை என்பதையும் நான் ஆதாரபூர்வமாக எழுதினேன். ஒரு தமிழ் தேசிய கட்சியில் ஏன் Ex Indian Army Wing? அவர்களை பார்த்தால் எவரும் ரிட்டையர் ஆன ஆட்கள் இல்லை. முடி நரைக்காத கட்டுமஸ்தான ஆபீசார்கள். இராமதாஸ்களுக்கு, திருமாவுக்கு, இன்னும் எத்தனையோ பேருக்கு இல்லாத இந்த பாதுகாப்பு படை ஏன் சீமானுக்கு மட்டும்? ஏன் என்றால் சீமான் ரோவின் ஏஜெண்ட். ஒரு அளவுக்கு மேல் ஸ்டாலின் கூட சீமான் மீது கைவைக்காமைக்கு இதுவே காரணம். இதுமட்டும் அல்ல சுப முத்துகுமார் கொலையை ரோ செய்ய அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், சீமானும் அன்றை திமுக அரசும், குறிப்ப்பாக ஜாபர் சேட். இதுதான் சீமானின் ரோ பின்ணணி. 👆நாதகவின் ex Indian Army wing என்ற பெயரில் சீமான், வீடு, குடும்பத்தை சூழ நிறுத்தபட்டிருக்கும் “ ஆயுதம் தாங்கிய அதிகாரிகள்”
  39. இங்கே நீங்களும் ஒன்றை கவனிக்க தவறுகின்றீர்கள். அரசியல் பலம்,பண பலம்,அடியாட்கள் பலம் இங்கே முதலிடம் வகிக்கின்றது.நீதி நேர்மை இல்லாத கொலைகளும் மிரட்டல்களும் ஊடகங்களிலையே தினசரி வாசிக்க முடிகின்றது. சீமான் - விஜயலட்சுமி சம்பவங்கள் நடந்து நீண்டகாலமாகியும்,புகார் கொடுத்து நீண்ட காலமாகியும்.... தற்போது இந்த விவகாரத்தை தூக்கிபிடிப்பதன் மர்மம் எல்லோருக்கும் தெரியும். கருத்து வெற்றிக்காக இதை பலர் வெளியே சொல்வதில்லை. நியாயமான சட்டங்களும் அரசியல்துறையும் இருந்தால் விஜயலட்சுமி புகார் கொடுத்த சந்தர்ப்பத்திலேயே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா? "ரோ" ஏற்கனவே ஈழ விடயத்தில் செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டது.கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தில் நீங்கள் உணரவில்லையாயின்.......?????
  40. இப்ப உள்ள ஆண்களுக்கு இடுப்பில், பெலன் குறைவு. 😂 எலான் மஸ்க்… விதி விலக்கு. 🤣
  41. உங்களின் கோபம் எனக்கு முழுமையாக விளங்காவில்லை, கருத்தியல்ரீதயாக வேறுபாடு இருக்கலாம், நாம் வெவ்வேறு பாதையில் பயணிக்கலாம், அது அனைவரது உரிமை. ஆனால் அடிப்படை மனிதத்தன்மை என்பது பொதுவானது, நம் கொள்கைகளுக்கு என்ற தனி மனிததன்மை கிடையாது. பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை, அடக்குமுறை எவ்வித தயக்கமின்றி, வேறுபாடின்றி கண்டிக்கப்பட வேண்டும், அதை எக்காரணம் கொண்டு நியாயபடுத்த முடியாது. அதுவும் நம்மினம் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டு இன்னும் மீளாமல் இருக்கிறோம். நாம் இக்கொடுஞ்செயல் செய்கிறவன் நம்மொழி பேசுகிறான், நம் கொள்கையை தூக்கிபிடிக்கிறான் என்ற காரணத்திற்காக அவன் பின்னால் நின்றால் அது மனிததன்மையற்றது, நம் போராட்டத்தையும், அதன் நியாய குரலையும் நீர்த்து போக செய்வதேயாகும்.
  42. செலன்ஸ்கிக்கு அமெரிக்க மக்களிடையே ஆதரவு குறைந்திருப்பதாக எங்கே தரவு இருக்கிறது? ட்ரம்பின் கூல் எயிட்டை (அல்லது அவர் சொன்னால் பிளீச்சையும்) குடிக்கும் முட்டாள் கூட்டமொன்று இருக்கிறது, அது 2016 இல் இருந்த அதே சிறு எண்ணிக்கையில் தான் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான அமெரிக்கர்கள் - இரு கட்சிகளையும் சேர்ந்தோர்- செலன்ஸ்கி மீது மரியாதை வைத்திருக்கின்றனர். இன்று சில நகரங்களில் செலன்ஸ்கிக்கு ஆதரவாக சில ஆர்ப்பாட்டங்களும் நடக்கின்றன. வேர்மொன்ற் மாநிலத்திற்கு குடும்பத்தோடு விடுமுறை போயிருக்கும் புண்ணாக்குப் பயல் ஜேடி வான்சை, அங்கே நடக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வேறிடத்திற்கு மாற்றியிருக்கிறார்கள். செலன்ஸ்கி தலை நிமிர்ந்து உலக வலம் வரும் நிலையில், புண்ணாக்குப் பயல் ஜேடி சொந்த நாட்டிலேயே ஒழித்துத் திரிய வேண்டிய நிலை வந்திருக்கிறது😂.
  43. உண்மையில் நானும் அதை நினைத்தேன். தனக்கு லாபம் என்றால்.... எந்த ஊத்தைவாளி வேலையும் செய்யத் தயங்காதவர் தான், சுமந்திரன்.
  44. சத்தியமூர்த்தி விலகினால் ஒன்றும் கட்சி முழுகிப்போகாது, அவர் ஒரு வவ்வால். அவர் கட்சியில் இருந்து சுமந்திரனுக்கு ஏவல் வேலைதான் பார்ப்பார். ஆனால் சிறிதரன் இவரின் பேச்சுக்கு எடுபடுமளவுக்கு முட்டாளல்ல. ஏற்கெனவே மாவையரை தலைவர் பதவியிலிருந்து விரட்ட சிறிதரனை கையாளாக பாவித்தவர் சுமந்திரன். அதிலிருந்து பாடம் கற்றிருப்பார் சிறிதரன். அந்தப்பாவத்திற்குத்தான் இப்போ அனுபவிக்கிறார். இனி சுமந்திரனால் விரட்டப்படுவது சிவஞானம் அண்ட் சத்தியலிங்கம். வெறி பிடித்து அலைகிறார் என்றும் சொல்லலாம். அது நிறைவேறாவிடில் ஆளுக்கு விசர் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  45. அவர்(மயூரன்) தங்கம் அல்ல ..பித்தளை ... தங்கம் சென்றால் பாராளுமன்றம் சும்மா அதிருமல்ல‌
  46. வீதியில் வாகனங்களின் வேகத்தை படம் பிடிக்கும், ஒளிப்பட கருவியை... குப்பைவாளி மூடியால் மறைத்து.. பல வாகன ஓட்டிகளை காப்பாற்றிய உள்ளுர்வாசி ஒருவர். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.