Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    39336
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88812
    Posts
  3. villavan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    150
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33807
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/05/25 in Posts

  1. இவ்வளவு பெரிய நாயா? திடுக்கிட்டுப் போனேன். அது ரொம்ப சாது, சொன்னார்கள் உறவினர்கள், நண்பர்கள், பெரியவர்கள். எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. உது தற்செயலாய் மிதிச்சாலே ஆபத்து அல்லவா? சாச்சாய், அப்பிடி நடக்கவே நடக்காது அரசியல் வல்லுநர்கள் ராஜதந்திரிகள் பாடம் எடுத்தனர். அதற்கு ஒரு மணம் இருந்தது. அது எங்கு போனாலும் அதன் மணம் முன் தோன்றியது பிறகு அதன் பின்தொடர்ந்தது... ஒரு நாள் அதன் எசமான் சூக்காட்டியதும் பாய்ந்து விறாண்டியது கடித்துக் குதறியது மற்றும் பல சொல்ல முடியாத அவலங்களையும் அரங்கேற்றியது. அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது... இப்போதெல்லாம் அது உலா வரும்போது, ஊரடங்குது, கதவடைக்குது, மூச்சும் அடைக்குது. இது நடந்து 38 வருசமாச்சு ஆனா அந்த மணம் இருக்கே இப்பவும் மூச்சடைக்குது. @ரசோதரன் அண்ணனுடைய ராணுவ ரகசியத்தின் மூலமாய் உந்தப்பட்ட சிறு படைப்பு .
  2. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி ரச்சின் ரவிந்திராவினதும் கேன் வில்லியம்ஸினதும் செஞ்சுரிகளுடனும் க்ளென் பிலிப்ஸின் அதிரடியான 49 ஓட்டங்களுடனும் 6 விக்கெட் இழப்பிற்கு 362 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி சவாலான ஓட்ட இலக்கை அடித்தாட முடியாதவாறு நியூஸிலாந்து சுழல் பந்துவீச்சு இருந்தது. டேவிட் மில்லர் மாத்திரம் அடித்தாடி செஞ்சுரி அடித்தாலும் பிற வீரர்களின் ஒத்துழைப்பின்மையால் 312 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்திருந்த @சுவைப்பிரியன் க்கு மாத்திரம் மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  3. பாடும் போது நீ தென்றல் காற்று அவள் துன்பத்தின் குவியலாகக் காணப்பட்டாள். சீரற்ற முறையில் அள்ளிப் போடப்பட்டிருந்த போர்வைகளும், சில பைகளும் நிறைந்த ஒரு நீல நிற ஷொப்பிங் டிரொலிக்குப் பக்கத்தில் அவள் அமர்ந்திருந்தாள். அவளது உடலை ஒரு தடிமனான ஜக்கெட் மூடியிருந்தது. இத்தாலியின் தென் பகுதியில் உள்ள அவெலினோ நகரத்தின் வீதியில் யாருமற்று அவள் அநாதையாக இருந்தாள். என்ஸோ கோஸ்டான்சா என்பவர், வீதியில் வீடற்றவளாக அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை தற்செயலாகக் கண்டு கொண்டார். அவருக்கு அவளை யாரென்று தெரியாது. ஆனாலும் அவளுக்கு ஏதாவது வழியில் உதவ வேண்டுமென நினைத்தார். அவள் வீதி ஓரத்தில் அமர்ந்திருந்த கோலத்திலேயே ஒரு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டார். அவள் தெருவிலேயே தூங்கி அல்லல் படாமல் இருக்க, வீடற்றவர்களைப் பொறுப்பேற்று பராமரிக்கும் நிலையத்துக்கு அழைப்பை மேற்கொண்டு, அவளுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டார். அவர்களும் அவளுக்கு உதவ முன் வந்தார்கள். ஆனால் அவள் யாருடனும் தான் போக மாட்டேன் என பிடிவாதமாக மறுத்து விட்டாள். அவளிடம் பேச்சை வளர்த்ததில் அவள் நெதர்லாந்தைச் சேர்ந்தவள் என்ற விபரம் மட்டும் தெரிய வந்தது. வேறு வழிகளில் அவளுக்கு உதவலாமா என, என்ஸோ அவளிடம் கதைக்க எத்தனித்த போது, அவள் அந்த இடத்தைவிட்டு விலகி நடக்க ஆரம்பித்தாள். "இன்று காலையிலிருந்து இவள் இலக்கின்றி அலைந்து திரிந்து கொண்டு தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கிறாள். தெற்கு இத்தாலியில் கடும் குளிர் நிலவும் காலம் இது. குளிரைத் தாங்கப் போதுமான உடைகளை அவள் அணிந்திருக்கவில்லை. என்னைப் போன்று பலரும் அவளுக்கு உதவ முன் வந்தார்கள். எல்லாமே வீணாகிப் போனது. யாருடைய உதவியையும் அவள் ஏற்பதாக இல்லை. என்னுடைய நகரத்தில் ஒரு பலவீனமான பெண் இத்தகைய சூழ்நிலையில் பல நாட்கள் வாழ்வது வேதனையைத் தருகின்றது. எதுவுமே செய்ய முடியாத நிலையில் நான் இருக்கிறேன். என்னுடைய இந்த நிலையை நான் அவமானமாக உணர்கிறேன்” என்ற நிலைத்தகவலை, தான் எடுத்த அவளது புகைப்படத்துடன் என்ஸோ பிப்ரவரி 21 அன்று முகநூலில் பதிவிட்டார். என்ஸோ பதிவிட்ட அந்தத் தகவல் பலன் கொடுத்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ரொபின் என்பவர் நெதர்லாந்தில் இருந்து என்ஸோவின் முகநூல் பதிவுக்குப் பதில் போட்டிருந்தார். அந்தப் பதிவில், “அவளது பெயர் ராணியா ஜெரிரி (39). 2008இல் யேர்மனியத் தொலைக்காட்சி ஒன்றில், ’யேர்மனி சுப்பர்ஸ்ராரைத் தேடுகின்றது’ என்ற பாடகர் நிகழ்ச்சியில், தெரிவு செய்யப்பட்ட பத்துப் பேரில் ஐந்தாவதாக வந்திருந்தவள்தான் ராணியா ஜெரிரி. ராணியா பாடகி மட்டுமல்ல ஒரு வானொலித் தொகுப்பாளரும் கூட. ராணியாவின் தாய் பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட அவள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டாள். அவளுக்கு ஒரு சகோதரன் இருக்கின்றான். அவன் நெதர்லாந்தில் வசிக்கின்றான். அல்ஜீரியரான அவளது தந்தைக்கு அவளுடன் எந்த தொடர்பும் இல்லை. மனச்சோர்வில் அவள் உட்கொண்ட மாத்திரைகளே அவளது இந்த நிலைக்கு காரணம் எனக் கருதுகிறோம்” என்றிருந்தது. ராணியா ஜெரிரியின் நண்பர் ரொபின், என்ஸோவுக்கு ஒரு வீடியோ பதிவையும் அனுப்பியிருந்தார். அதில், “உன்னைப் பெரிதும் தவறவிட்டு விட்டோம். நாங்கள், உன்னை நெதர்லாந்தில் பெரிதாகத் தேடினோம். நீ கிடைக்கவில்லை. உனக்கு உதவி ஏதும் தேவையெனில் நாங்கள் அவற்றைத் தரத் தயாராக இருக்கின்றோம். உனக்கு எங்களது உதவி ஏதும் தேவையில்லை என்று நீ கருதினால் கூட அதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். நீ எங்களுடன் உரையாடினால் போதும். அதனால் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சி கொள்வோம். உனது குரலைக் கேட்க பெரிதும் விரும்புகின்றோம்” என்றிருந்தது. அந்த வீடியோவை ராணியாவி டம் என்ஸோ காட்டிய பொழுது அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் என்ஸோ, அந் நகர மேஜரைத் தொடர்பு கொண்டு அவளது நிலைக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார். மீண்டும் ராணியாவிடம் இருந்து மறுப்பு வந்தது. “நான் என் சுய விருப்பில்தான் தெருவில் வசிக்கிறேன்” என்பது அவளது பதிலாக இருந்தது. பெப்ரவரி 24,25 இல் இரவு மீண்டும் கடுமையான குளிர். ராணியா குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளது மோசமான நிலையைப் புகைப்படம் எடுத்து மீண்டும் என்ஸோ முகநூலில் பதிய, அவரது நட்பு வட்டங்கள் ஒன்று சேர்ந்து உதவ முன் வந்தார்கள். இந்தமுறை ராணியா அசைந்து கொடுத்தாள். அவளுக்கான மருத்துவ உதவிகள், சூடான உணவு, தங்குவதற்கு ஹோட்டல் வசதிகள் கிடைத்தன. ராணியாவின் நிலையில் இப்பொழுது நல்ல முன்னேற்றம் வந்திருக்கின்றது. மார்ச் 1இல் இருந்து தொழில் அதிபர் ஒருவரின் வீட்டைப் பராமரிக்கும் வேலையை அவள் ஏற்றிருக்கின்றாள். இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் அவள் பாடலாம், நல்லதொரு வாழ்வை அவள் தொடரலாம். வீதிகளில் வீழ்ந்திருப்போருக்குப் பின்னால் பல வலிமிக்க கதைகள் இருக்கும். நாங்கள் அவர்களைக் கடந்து போகும் போது, எங்கள் அவசரங்களில் இதை எல்லாம் எண்ணிப் பார்ப்பதில்லை. என்ஸோ போன்றவர்களால் மட்டும் அது முடிகிறது. படங்கள் விக்கிபீடியா, முகநூல்
  4. முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி வீரர்கள் தொடர்ந்து நிலைத்து ஆடமுடியாததால் 49.3 ஓவர்களில் 264 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி சாதாரணமான இலக்கை விராட் கோலியின் 84 ஓட்டங்களுடனும், கேஎல் ராகுலின் அதிரடியான 42 ஓட்டங்களுடனும் 48.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்களை எடுத்து எட்டியது. முடிவு: இந்திய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனக் கணித்திருந்த 17 பேருக்குத் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. முதலாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @Eppothum Thamizhan மீண்டும் முதல்வராகியுள்ளார்! நிலைத்து நிற்பாரா?
  5. இலண்டனைச் சேர்ந்த ஈழப்பற்றாளரும்.. மார்ஸல் ஆர்ட்ஸ் வீரருமான, கென் சுதாகரன் அண்மையில் ஐரோப்பாவில் நடைப்பெற்ற Fight Star Championship போட்டியின் இறுதி போட்டியில் மிகப் பலமாக விளையாடி வெற்றியீட்டி சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டார்! சகோதரருக்கு எமது வாழ்த்துகள் 👏 ஈழ மங்கை. -
  6. அண்ணனுக்குப் பின்புலம் பெரும்பலம் என்பதால் நிச்சயம் தமிழீழம் சாத்தியமாகும். அதனால்தானே அண்ணன் அறப்பிழை செய்தாலும் காணாமல் இருக்கின்றோம், முட்டுக்கொடுக்கின்றோம்..🤭 நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.. நம் கனவு அண்ணன் தயவால் பலிக்கும்🥳
  7. என்ன பொசுக்குன்னு இப்பிடி சொல்லி புட்டீக…. அண்ணைமார், தம்பி எல்லாம் ஆசுபத்திரி போகாத குறை🤣… மந்திரத்தை மறந்துட்டீங்க போல… “திராவிடத்தால் வீழ்ந்தோம்” எங்கே சொல்லு… திராவிடத்தால் வீழ்ந்தோம்… சிக்குமங்கு சிக்கு மங்கு சிக்கு பப்பா… உழைத்து வாழவேண்டும், திரள்நிதியில் வாழ்ந்திடாதே… யோவ் சும்மா இருங்கையா…ஒரு அளவுக்கு மேல நானே உண்மையை உளறிடுவேனோன்னு பயமா இருக்குயா…அவ்….
  8. இவர்களுக்கு இப்பதான் தெளிந்து இருக்கு. யாழ் இணையம் இதனை எப்பவோ வெளிப்படையாக அறிவித்து விட்டு ஒவ்வொரு வருடமும் மாவீரன் பிரபாகரன் அவர்களுக்கு அஞ்சலியும் செலுத்திக் கொண்டு வருகின்றது. போராடி வீழ்ந்த தலைவரின் மகள் துவரகாவினது சாவு பற்றியும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இல்லாவிடின் போலிகாக்களது பெருக்கம் கூடி விடும்.
  9. அந்த விளக்கத்தில் ஏதாவது உங்களுக்கு புரிஞ்சுதா? எனக்கு வாசித்ததும் சாக் அடிச்ச மாதிரி ஆச்சுது ........ கருத்துக்கு இத்தனை வறுமை இருக்கிறவர்கள் வேறு எதை எழுத முடியும்? இனி அப்பிடியே ஊரோடு சேர்த்து உள்ளே அடைக்க வேண்டியதுதான்
  10. ரசோவின் ராணுவ ரகசியத்தின் கசிவு வில்லவனையும் கவிதை புனையும் வல்லவன் ஆக்கி விட்டதை எண்ணி வியப்புறுகின்றேன் ....... இனியென்ன ஆரம்பம் நல்லா இருக்கு தொடருங்கள் ........! 👍
  11. ஏனய்யா..27ஆம் ஆண்டு சுய ஆக்கங்கள் பகுதிக்குள் பகிரலாம் தானேல.பரும் பார்ப்பார்கள் தானே.✍.,போற , வாற இடத்தில் யாரும் இப்படி நின்றால் யாரோடும் பேச மாட்டேன் ஆனால் வாத்தியங்கள் வாசித்துக் கொண்டு பக்கத்தில் ஏதாவது சின்ன பை வைத்திருந்தால் என்னிடம் எவ்வளவு இருக்கோ அவ்வளவையும் அவர்களது பைக்குள் வைத்து விட்டு போய் விடுவேன்.இது பொய், புரட்டு அல்ல உண்மை.
  12. ஆகஸ்ட் 2ம் திகதி அந்த நாள்.... எழுதி எழுதி தீராத ஒரு நாள் அது....... வள்ளங்கள் செய்யும் இடம், அங்கே மரம் அரியும் பெரிய கிடங்கு ஒன்று. சிறுவயதில் அங்கே தான் ஒளித்து பிடித்து விளையாடுவோம். மரம் அரியும் கிடங்கின் மேல் நீட்டுப் பக்கமாக பெரும் மரங்களைப் போட்டு, கிடங்குக்குள் ஒருவரும் மரத்தின் மேல் ஒருவரும் நின்று கொண்டு, பெரிய வாளால் மரங்களை நீண்ட பலகைகளாக அரிவார்கள். மரத்தூள் பல நிறங்களில் அந்தக் கிடங்குக்குள் அடுக்கு அடுக்காக படியும். அப்படியே கீழே நின்று வெட்டுபவரின் மீதும் அது படியும். படுத்திருக்கும் பெரிய வெட்டிய மரங்கள், பலகைகள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விறகுகள், செய்து கொண்டிருக்கப்படும் வள்ளங்கள், தளபாடங்கள், ஆயுதங்கள், கிடங்கு, கூரை என்று எல்லா இடங்களும் பதுங்க வசதியான ஒரு இடம் அது. அந்த மேத்திரியார்கள், அங்கு வேலை செய்பவர்கள் எங்களை தடுப்பதும் இல்லை. ......... கடைசியில், வேறு வழியே இல்லாமல், அந்த கிடங்குக்குள் கொல்லப்பட்ட சிலரை போட்டு எரித்தார்கள்...............
  13. எக்ஸ்யூஸ்மி விசுகர்😎? யாருக்கு, யார் உதவவில்லையென முறைப்பாடு செய்கிறீர்கள்? பிரபாகரன் படத்தை, புலிக்கொடியை வைத்து தனக்கு வாக்கு சேகரிக்கும், திரள் நிதி சேர்த்து தன் குடும்பத்திற்கு மாட மாளிகை கட்டும், பிள்ளைகளை ஆங்கில, தனியார் பாடசாலைகளில் படிப்பிக்கும் ஒரு தமிழக சராசரி அரசியல் வாதிக்கு உதவவில்லையென்கிறீர்களா? புலத்திலும், வெளிநாடுகளிலும் உதவி தேவையான எத்தனை ஈழமக்கள் இருக்க, பத்தோடு பதினொன்றாக இருக்கும் இன்னொரு தமிழக அரசியல் வாதிக்கு , அவரது குற்றங்களை நியாயம் செய்ய நாம் உதவ வேணுமா? ஏன்?
  14. அண்ணே நான் சொன்னது இந்த போராட்டங்களை அல்ல. தமிழ் நாட்டில் அரசியல் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களின் இவ்வாறான பிரச்சனைகள் குறித்து இதை போன்ற பல போராட்டங்களை நடத்தி இருக்கு. அவை எல்லாம் அரசியல் கட்சிகளாக இயங்கின. ஆகவே அவர்கள் இப்படிபட்ட பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் உங்க நொண்ணன்னைப் போல நான் நாங்கள் பிரபாகரன் பிள்ளைகள். வீட்டை திருத்த நாம் வரவில்லை இடித்து புதிதாக கட்ட வந்த பிள்ளைகள் என று பீலா விடவில்லை. பிரபாகரன் பிள்ளைகள் நாம் என்று கூறிய வாயால் “எனது போராட்டம்” என்ற நூலை ஹிட்லர் எனக்காக தான்டா எழுதி வைத்துவிட்டு சென்றான் என்றும், முசோலினி இப்படி கூறினான் அப்படி கூறினான் என்று நரம்பு முறுக்கேற சீமானைப் போல் மற்றைய கட்சிகள் காட்டுக்கத்து கத்தவில்லை. நாங்கள் மாபெரும் புரட்சியை உருவாக்க வந்தவர்கள் என்று 15 வருடங்களாக மேடை மேடையாக காட்டுக்கத்திக்கொண்டிருப்பவர் சீமான். அதை நிலை நாட்டவேண்டுமானால் இந்திய தேசியத்தை எதிர்தது பல தொடர் போராட்டங்களை நடத்தி இருக்க வேண்டும். அதை செய்தாரா என்பது தான் எனது கேள்வி. மற்றப்படி அவரை யாரும் போராட சொல்லவில்லை. அப்படி போராடி தனது சுகவாழ்வை அவர் இழக்கமாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. அவர் தான் தன்னை மாபெரும் புரட்சியாளர் என்றும், ஒரு நாள் என் கையில் இந்த நிலம் சிக்கினா பாரு நீ செத்தாய் என்று காட்டு கத்து கத்துபவர். அப்படியாக தன்னை அரசியல் கட்சியாக இலாமல் மாபெரும் புரட்சிய நடத்த வந்த புரட்சியாளராக மேடைகளில் மட்டும் காட்டிக் கொண்டவர் அந்த புரட்சியை உருவாக்கக 15 வருடங்களில் செய்த போராட்டம் என்ன என்பதே கேள்வி. தமிழ் தேசியத்தை எதிர்தத இந்திய தேசிய தேசியத்திற்கு விசுவாசமாக இருந்த அனைவரையும் தனது வழிகாட்டிகளாக கொண்டாடுவது ஏன்? நீங்கள் மாற்றத்திற்கானவர்கள் என று நரம்பு முறுக்கேற கத்தினால் மட்டும் போதாது அதற்கான தொடர் போராட்டங்களையும் நடத்தி இருக்க வேண்டும். அதை நடத்தவில்லை என்றால் நானும் மற்றயவர்களை போல பத்தோடு பதினொன்றான அரசியல் கட்சி தான் என்பதை ஏற்று கொள்ள வேண்டும். சும்மா இளைஞர்களை உசுப்பேற்றி விட்டு ஆளும் தரப்போடு டீல் செய்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதியே இந்த சீமான் என்ற வெத்து வேட்டு ஆசாமி.
  15. நான் சுயநலம் என்று சொன்னது, ஒரே ஒரு ரிவியூ இருக்கும்போது அதை கடைசி recognize பாட்ஸ்மனுக்கு பயன்படுத்த விடாமல் தடுத்ததை! அத்துடன் ஒருவர் மிக மெதுவாக ஓட்டங்களை எடுக்கும்போது மற்றவர்கள் ரிஸ்க்கான அடிகளை அடித்து ஓட்டமெடுக்க முனைவர். அதுவே அவர்களின் ஆட்டமிழப்பிற்கு காரணமாகி விடுகிறது! அவர் அவுட் ஆனமுறையும் தேவையற்றது! அக்ஸாரின் கடைசிப்பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து அடுத்த ஓவரை ஆடியிருக்க வேண்டும்!!
  16. அங்கே போய் ஒளிந்துகொள்ளலாம் என்றால் ஏன் உச்ச நீதிமன்றம் என்று ஒன்று இருக்கவேண்டும். அதுவும் எல்லா நீதிமய்யங்களுக்கும் முதன்மையானதாக? சீமான் தான் இந்திய இராணுவ விங் என்று புதிதாக தொடங்கியிருப்பதாக சொன்னாரா? அல்லது அது NTK இணையதளத்தில் இருக்கிறதா? யாரோ ஐந்துபேர் சேர்ந்து வீடியோ போட்டால் அது NTK விங் ஆகி விடுமா? கோர்ட்டே அவரை பாலியல் குற்றவாளி என்று தீர்மானிக்க முடியாது என்றுவிட்டு அதைச்சொல்லி ஒரு தனி விங் தொடங்க போகிறேன் என்று சொல்லும் உங்கள் மனநிலை என்ன என்பது நன்றாகவே புரிகிறது. சீமானும் ஒரு தனி மனிதர் நீங்களும் ஒரு தனி மனிதர்தான்! ஏன் சீமானுக்கு குடும்பம் இல்லையா? உங்களுக்கு மட்டுந்தான் இருக்கிறதா? சீமானின் அரசியலை விமர்சியுங்கள் அதில் எந்த பிரச்சனையுமில்லை! மேலே சொல்லப்படும் பிரச்சனைகள் எல்லாம் நடந்தது அவர் கட்சி தொடங்க முன் நடந்தவை !! உங்கள் குடும்பம் என்று வரும்போது சுடுகிறதல்லவா? இதையே உங்கள் விஜி அண்ணி சீமானின் தாயாரை எவ்வளவு கேவலமாக பேசினார்? அப்போதெல்லாம் அவர் எதிர்வினையாற்றவில்லையே! பொறுமைக்கும் எல்லைகளுண்டு!! மற்றும்படி தமிழ் எனக்கு நன்றாகவே தெரியும்!!
  17. அன்று நியூஸிலாந்து தோற்றதற்கு காரணம் வில்லியம்சனின் சுயநலமான ஆட்டம். எல்லோருக்கும் ப்ரஸ்வெல்லின் lbw அவுட் இல்லை எனத்தெரியும்போது எதிர்புறத்தில் இருந்த அவர் அதனை ரிவியூ பண்ண விடவில்லை. அத்துடன் அவரது மிக மெதுவான ஆட்டம் மற்றவர்களை தேவையில்லாத ரிஸ்க் எடுக்கவைத்தது! விளையாட்டுத்திரியில் அரசியல் பேசக்கூடாது! 😜
  18. சுமந்திரன் என்பவர் மக்களின் ஆணையை மதித்து சிறிது ஓய்வெடுத்து, தனது செயலை மாற்றி, எல்லோரையும் மதித்து, கட்சியின் கொள்கைகளோடு சேர்ந்து செயற்பட்டிருந்தால்: பின்னாளில் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவரோ, மக்களின் ஆணைக்கு சவால் விடுவதுபோல், மக்களால் தெரிவு செய்யப்பட்டவரை வெளியே தள்ளி, சர்வாதிகாரிபோல் இல்லாத பதவிகளை உருவாக்கி கையகப்படுத்திக்கொண்டிருந்தால், என்ன அர்த்தம்? கடந்த தேர்தலுக்கு முந்திய தேர்தலில் மாவையர் தோற்றபோது என்ன நடந்தது? அவர்க்கு அறிவிக்காமல், அவரோடு கலந்து பேசாமல், அவருக்கெதிரான கருத்துக்களை ஊடகங்களில் தன்னிச்சையாக பகிரங்கமாக அறிவித்து, சிறிதரனை மாவைக்கெதிராக கொம்பு சீவி அவரை அவமானப்படுத்தவில்லையா? இப்போ இவர் தோற்றபோது எப்படி செயற்படுகிறார்? இதுதான் கட்சியின் கொள்கையா? சட்டத்தரணியின் சமநிலை பேணும் தன்மையா? இவரது சர்வாதிகார செயலெல்லாம் அவரது திறமையில் உள்ள பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறார், ஆனால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். தான் ஒருபோதுமே மக்களால் தெரிவு செய்யப்படமாட்டேன் என எண்ணுவதினாலேயே குறுக்கு வழிகளை அவசரமாக தேடுகிறார்.
  19. தென்னாபிரிக்கா கப் தூக்குது என்று எழுதியிருந்தேன். எல்லாம் தொப்பி தான். இனி எனக்கு புள்ளிகளுக்கே இடமில்லை. இந்தப் பெரிசின் @குமாரசாமி முகத்தில் எப்படி விழிப்பது என்று தான் யோசிக்கிறேன்.
  20. தென்னாப்பிரிக்கா வென்று இருந்தால் 3 புள்ளிகள் கிடைத்திருக்கும். அத்துடன் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்ற அணியாக தென்னாப்பிரிக்கா இருந்திருக்கும். நினைப்பதெல்லாம் நடந்திருந்தால் 🤔
  21. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வெல்ல வேண்டும். இந்தியா தோற்க வேண்டும் என்று எழுதினால் இந்தியா வெல்லுது. அதுதான் கொங்சம் மாத்தி யோசிப்பம்.
  22. @Eppothum Thamizhan தான் இப்போதும் முதல்வர். வாழ்த்துக்கள் சகோதரம்.
  23. பாருங்களன் ஒரு பாலியல் தொழிலாளியிடம் சென்று தன் காமவேட்கையினை தீர்த்துக்கொள்ளுமளவு அண்ணனின் பாலியல் ஒழுக்கம் இருந்திருக்கின்றது. அந்தளவு ஒழுக்கம் நிறைந்த மலையாள மேன்மக்கள் குடியில் இருந்து அண்ணண் வந்திருக்கின்றார். இதுகிள்ள பள்ளிக்கு கட்டடித்துவிட்டு கள்ளும் குடித்து வந்திருக்கின்றார். அந்தளவுக்கு ஒழுக்கமுள்ள மேன்மகன்!😂
  24. உக்ரைன் ரசிய போர் நடந்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நன்று என்றே நான் எண்ணுகிறேன். ஒன்று இதில் நேரடியாக எந்த ஆள் சேதமும் அமெரிக்காவிற்கு இல்லை. மற்றது அமெரிக்காவோ மற்ற மேற்கு நாடுகளோ உதவி என்று சொல்லி யாருக்கும் செக் எழுதி பணத்தை கொடுப்பதில்லை. மாறாக உள்ளூர் உற்பத்திகளைத்தான் கொடுக்கிறார்கள். இங்கே அமேரிக்கா இங்கே தயாரிக்கும் ஆயுதங்களைத்தான் கொடுக்க போகிறது உள்ளூர் ஆயுத உற்பத்தி தொழிவாய்ப்பு என்பன முன்னேற்றம் காணும். டிராம் இதை நிறுத்த முடிவெடுத்தது உக்ரைனில் இருக்கும் லித்தியத்தை பெற்றுக்கொள்ளவே அமெரிக்காவிற்கு லித்தியம் மற்றும் ரர் மெட்டல் இரண்டுக்கும் பாரிய தட்டுப்பாடு உள்ளது அதை சீனவிடம் இருந்தே பெற வேண்டி இருக்கிறது. அது தவிர இங்கு யாழ்களத்திலும் மற்றும் மேற்கு ஊடங்களிலும் வெற்றிவேல் வீரவேல் என்று படம் காட்டிக்கொண்டு இருக்க ... புட்டின் கைப்பற்றிய 20 வீத உக்ரைன் நிலப்பரப்பும் செழிமையான லித்தியம் மற்றும் தைத்தானியம் நிறைந்த நிலப்பரப்புகள் ஆகும் இப்படியே போனால் மிகுதியையும் புடின் கைப்பற்றலாம் எனும் எண்ணமாகவும் இருக்கலாம். அதுதான் இப்போ பிரிடிஷ் காரர் தாம் இராணுவத்தை அனுப்ப போவதாக கூறி இருக்கிறார். போனது போக மீதி லித்தியம் தைத்தானியத்தை அள்ளிக்கொண்டு வர வேண்டும் என்பதே இப்போதைய ( அப்போதைய திடடமும் அதுதான்) ட்ராமின் திடடம்
  25. அந்தார்டிக்கா வில் இருந்து சவூதி ஒரு பனிப்பாறையை இழுத்து செல்வதற்கு முயற்சி செய்வதாக எங்கோ செய்தி வாசித்த ஞாபகம்
  26. அநேகமாய் பலர் அந்தத் தெருவோர வாழ்க்கையையே விரும்புகின்றனர் . ........ இதற்கெல்லாம் காரண காரியங்கள் கிடையாது . ....... நம்மால் முடிந்த நேரம் உணவோ பணமோ குடுத்து விட்டு செல்வதுண்டு . ......... ! 😁
  27. சீமான் ஒரு வெத்து வேட்டு ஆசாமி என நீங்கள் சொல்ல, அதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறதா..? இருந்தால் ஆதாரங்களை கொடுங்கள்… அதுவுமில்லாமல் வெறும் உணர்ச்சி வெறி மற்றூம் காழ்ப்பின் அடிப்படையிலான விமர்சனங்கள் எதற்கும் பயன்படாது… மற்ற கட்சிகள் போராட்டம் செய்ததாக நீங்கள் சொல்கிறீர்கள்... அவர்களின் போராட்டங்கள் எங்கே? கூடவே மத்திய அரசை நேரடியாக எதிர்த்த எந்த கட்சி உண்மையாக போராடியது…? பாஜகவுடன் மறைமுக உடன்படிக்கையில், திமுக, அதிமுக, பாமக, விசிக உட்பட அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து செயல்படவில்லை என்று நிரூபிக்க முடியுமா..? தொடர் போராட்டங்கள் இல்லாமல் எப்படி ஒரு கட்சி தனது அடிப்படை நிலைப்பாட்டை நிலைநாட்ட முடியும்..? நீங்கள் கூறும் லாஜிக்கால், தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சியும் போராடவில்லை என்பது தான் முடிவு ஆகும்... அப்படி இருந்தால், அவர்கள் அனைவரும் வெத்து வேட்டு ஆசாமிகள் தான் அல்லவா…? சீமான் தான் ஒரு வெத்து வேட்டு அரசியல்வாதி என்றால், மத்திய அரசை நேரடியாக எதிர்த்த மற்ற கட்சிகள் யார்..? அவர்கள் எப்படி போராடினார்கள்..? அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக எந்த அளவுக்கு செயல்பட்டார்கள்..? உண்மையில் நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் இல்லாமல் ஒரு குற்றச்சாட்டு போடுவது, ஒரு அரசியல் ஆய்வை விட, ஒரு உணர்ச்சி வசப்பட்ட விமர்சனமாகவே தெரிகிறது… நீங்கள் சொன்னதற்கான ஆதாரங்களை கொடுங்கள்... அல்லது, ஒரு வெற்று விமர்சனமாக நீங்கள் எழுதியதை ஒப்புக்கொள்ளுங்கள்… அத்துடன் உங்கள் நாட்டில் ஒரு அஞ்சாறு தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கிறார்கள்.. சீமான் போல் தமிழ்தேசியம் பேசுகிறார்கள்.. அவர்கள் எதற்கு அரசியலில் இருக்கிறார்கள்..எத்ற்கு உங்கள் மக்கள் வாக்குப்போடுகிறார்கள் 95வீதத்துக்கும் அதிகமாக.. அரசியலில் சில நெளிவு சுழிவுகள் இருக்கத்தான் வேண்டும்.. அப்பத்தான் கொஞ்சமாவது இன அக்கறை உள்ள கட்சிகள் தன் மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும்.. இல்லை என்றால் இனத்தை அடைவைக்கும் கட்சிகள் வந்து கோவணத்தையும் உருவி விடுவார்கள்..
  28. 24 பந்துகளில் 104 ஓட்டங்களை தென்னாபிரிக்கா எடுக்குமா?
  29. நானும் தான். @கிருபன் ஐபிஎல் போட்டிகளுக்கான விளம்பரங்களைப் போட்டால் இப்போது போட்டியில் பங்கு கொண்டோரும் பார்த்து கலந்து கொள்ள இலகுவாக இருக்கும். படலைக்குப் படலை போய் தட்டத் தேலையில்லை.
  30. கொஞ்சம் பொறுத்திருங்கள்: போன கட்சிகள் எல்லாம் ஒத்துக் கொண்ட நிலைப்பாட்டை மத்திய அரசு நிராகரித்து அறிக்கை விட்டால், சீமான் முகாம் விடும் யூ ரியூப் காணொலியின் தலைப்பு: "பகிஷ்கரித்த நாதக, பிசுபிசுத்துப் போன தமிழக கட்சிகள் தீர்மானம்"😂
  31. தொகுதி பங்கீட்டில். எப்படி தொகுதிகள். குறையும் தமிழ்நாட்டில் மக்களின் எண்ணிக்கை குறைத்து விட்டதா.?? நாடு முழுவதும் ஒரே மாதிரி தானே தொகுதி பங்கீடு நடக்கும் அல்லது செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை குறைந்தால் தொகுதி எண்ணிக்கை குறையும் தானே ?? தமிழ்நாட்டு தமிழர்களின் குழந்தை பெறும் வீதம் குறைத்து விட்டாதா??? எனவே… எதிர்ப்புகள் நியாயம் அற்றது மக்கள் தொகை கூடினால். பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 விட கூட உதாரணமாக 45 கிடைக்குமென்றால். எதிர்க்க மாட்டார்கள் இல்லையா?? இந்த நேரத்தில் அயல் மாநிலத்தில் உள்ள தமிழ் கிராமங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும்படி கோரலாம். கோரிக்கை வைக்கலாம் ஆமாம் சரி தான் தொடர்ந்தும் இந்த நிலைப்பாட்டிலிருங்கள். 🤣
  32. இங்கே இருப்போர் எல்லோரும் கருத்தாளர்கள், தனி மனிதர்கள். ஒரு சிலர் , நான் "சத்தமாகக் கல் உடைத்தேன், தூணாக இருந்தேன்" 😎 என்று பிரபலம் தேடலாம், அது அவர்கள் உரிமை. ஆனால், ஏனையோர் சாதாரண கருத்தாளர்கள். எனவே, சீமான் போன்ற மக்களிடம் திரட்டிய பணத்தில் வாழும் அரசியல் வாதிகளோடு ஒப்பிட்டுப் பேச இயலாது. குறிப்பாக, இங்கே இருக்கும் கருத்தாளர்கள் மீது ஒரு பாலியல் சார்ந்த குற்றச் சாட்டும் இல்லாத போது, நிச்சயமாக சீமான் போன்ற ஒருவரோடு அவர்களை ஒப்பிட இயலாது. இதைத் தான் சரியாகச் சுட்டிக் காட்டினேன்: நீங்களும் சரி, உங்களுக்கு ஒழிந்து நின்று பச்சை போட்டு மகிழ்வோரும் சரி, மண்டை கழுவப் பட்ட சீமான் தம்பிகளின் இயல்புகளையே காட்டுகிறீர்கள் என! சீமான் என்ற குற்றசாட்டை எதிர்கொள்ளாமல் ஓடி ஒழிந்து கொள்ளும் (அதுவும் அவர் எதிர்ப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்தியத் தேசியத்தின் உச்ச கோர்ட்டில் ஒளிந்து கொள்ளும்😂) பிரபலத்தை தாக்கினால், நாம் தாக்குபவரின் குடும்பத்தைத் தாக்குவோம் என்ற சீமான் தம்பிகள் மன நிலையை - அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள்!
  33. அன்றைய நாடுகளின் போர் நிலைமைகளும் அதைப் போட்டவர்களின் மன நிலைமைகளும் ......... முழுக்க வரலாற்றுப் பதிவு . ....... இது இன்றும் வேறு ரூபத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது . ....... ஜப்பானில் நடந்தது போலவே ஈழத்திலும் அமைதிக்காகப் போர் என்று சொல்லி மனிதப் பேரழிவை ஏற்படுத்தினார்கள் ......... ஒருமுறை கேளுங்கள் ........! 😪 அணுகுண்டு தயாரித்தாலும் , அதைப் பாவித்தலும் ......!
  34. இந்த விளையாட்டை எவருமே கவனிப்பதில்லை.
  35. காசாவிலிருந்து மக்களை வெளியேற்றாமல் இரண்டு இலட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் - அராபிய நாடுகளின் தலைவர்கள் இணக்கம் Published By: Rajeeban 05 Mar, 2025 | 11:35 AM காசாவிலிருந்து மக்களை வெளியேற்றி அதனை புனர்நிர்மானம் செய்யும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்திற்கு பதில் காசாவில் இரண்டுலட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அராபிய தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். எகிப்திய தலைநகரில் இடம்பெற்ற அராபிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் இது குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. 53 பில்லியன் டொலர் செலவில் இரண்டுலட்சம் வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கே அராபிய தலைவர்கள் இணக்கம்தெரிவித்துள்ளனர். பொதுமக்களை காசாவிலிருந்து வெளியேற்றாமல் காசாவை புனரமைக்கும்திட்டத்தினை அராபிய தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எகிப்து இந்த திட்டத்தினை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. எகிப்தின் திட்டம் தற்போது அராபிய திட்டம் என அராபிய லீக்கின் செயலாளர் நாயகம் அஹமட் அபொல் கெய்ட் தெரிவித்துள்ளார். அராபிய உலகை அச்சத்திற்குள்ளாக்கிய அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்தினை எதிர்கொள்வதற்காக எகிப்து மரங்கள் நிறைந்த சுற்றுப்புறங்கள் மற்றும் பிரமாண்டமான பொதுகட்டிடங்கள்காணப்படும் காசாவை காண்பிக்கும் ; படங்களை உள்ளடக்கிய 91 பக்க வரைபடமொன்றை தயாரித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்த திட்;டம் குறித்து விபரங்கள்; வெளியாகலாம் என டெலிகிராவ் தெரிவித்துள்ளது. காசாவை புனரமைக்கும்திட்டத்தை முன்னெடுப்பதற்காக தொழில்நுட்ப வல்லுனர்களின் தற்காலிக குழுவொன்று நியமிக்கப்படலாம் என டெலிகிராவ் யுகே தெரிவித்துள்ளது. ஹமாசினை இந்த குழுவிற்குள் உள்வாங்குவது குறித்து அராபிய தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை பாலஸ்தீன அதிகார சபையின் கீழ் இந்த நிபுணர்கள் குழு செயற்படும் என டெலிகிராவ் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன அதிகாரசபை தற்போது மேற்குகரையை நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது. காசாவை அபிவிருத்தி செய்யும் திட்டம் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும்.முதல் கட்டம் ஆரம்ப மீட்பு நிலை என அழைக்கப்படுகின்றது இந்த கட்டத்தில் முதல் ஆறு மாதங்களிற்கு காசாவில் உள்ள மிகப்பெருமளவு இடிபாடுகளையும் வெடிக்காதவெடிபொருட்களையும் அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அடுத்த இரண்டு கட்டங்களும் பல வருடங்களிற்கு நீடிக்கும், இக்காலப்பகுதியில் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ள 15 மில்லியன் பாலஸ்தீனியர்கள் தற்காலிக கொள்களன்களில் குடியமர்த்தப்படுவார்கள். https://www.virakesari.lk/article/208328
  36. இது மிகவும் நல்லது ....இன்னும் ஒருமுறை வரவேண்டும் 9-. 2001. தாக்குதல் போல் ஒரு தாக்குதல் அமெரிக்காவில் ...இவர்கள் தனியாக ஈராக் போன்ற நாடுகளை எதிர் கொள்வார்களா. ??? முடியாது வியட்னாமில். 3000 வீரர்கள் இறந்துபோன போது வியட்னாமை விட்டுட்டு ஓடியது ஞாபகம் இருப்பது நல்லது ட்ரம்ப். ஒரு அரசியல் தலைவர் இல்லை ஒரு நாளில் நீங்கள் போரை ஆரம்பித்தது பிழை என்றார் உக்கிரேனுக்கு போராட. உரிமை உண்டு என்றார் ...உக்கிரேன். அதிபர. துணிவு உள்ளவர் என்றார் உங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தரமுடியாது ஆனால் உங்கள் பொக்கிஷங்களை அள்ளுகிறதுக்கு ஒப்பந்தம் போடு என்கிறார் எப்படி போட முடியும் ?? இவர் மற்றைய நாடுகள் பற்றி கதைப்பது அமெரிக்காவுக்கும். உலகத்துக்கும் கூடாது
  37. ட்ரம்பின் முன்மொழிவுக்கு மாறாக காசாவை கட்டியெழுப்ப அரபுத் தலைவர்களின் $53 பில்லியன் டொலர் திட்டம்! எகிப்திய தலைநகர் கெய்ரோவில் செவ்வாயன்று (04) நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் 53 பில்லியன் அமெரிக்க டொலர் (£41.4 பில்லியன்) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமெரிக்கா காசாவை “கையகப்படுத்தி” இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் யோசனைக்கு போட்டியாக இந்த ஒப்புதல் வந்துள்ளது. கெய்ரோவில் நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட 53 பில்லியன் டொலர் திட்டம், காசாவின் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களை அவர்களின் பிரதேசத்தில் தங்க அனுமதிக்கும். இந்த திட்டம் குறித்து கருத்து வெளியிட்ட அரபு லீக் தலைவர் அகமட் அபூல் கெய்ட், “எகிப்துத் திட்டம் இப்போது ஒரு அரபுத் திட்டமாகும்” என்று குறிப்பிட்டார். ஜனாதிபதி ட்ரம்பின் கருத்துக்களை குறிப்பிடாமல், “தன்னார்வமாகவோ அல்லது கட்டாயமாகவோ எந்தவொரு இடப்பெயர்ச்சியையும் நிராகரிப்பதே அரபு நிலைப்பாடு” என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அத்துடன், இந்தத் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கு சர்வதேச சமூகத்திடமிருந்து எந்தவொரு முன்மொழிவுகள் அல்லது யோசனைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இது அமைதிக்கான ஒரு பெரிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும் வலியுறுத்தினார். அரபுத் திட்டம் என்றும் அழைக்கப்படும் எகிப்தின் திட்டம், 2030 ஆம் ஆண்டுக்குள் காசாவை அதன் மக்கள்தொகையை அகற்றாமல் மீண்டும் கட்டியெழுப்புவதை முன்னறிவிக்கிறது. முதல் கட்டத்தில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களால் எஞ்சியிருக்கும் 50 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான குப்பைகளை அகற்றுவதும், வெடிக்காத குண்டுகளை செயலிழக்கம் செய்வதைத் தொடங்குவதும் அடங்கும். இந்தத் திட்டம், அடுத்த ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் “நிலையான, பசுமையான மற்றும் நடக்கக்கூடிய” வீடுகள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளை முழுமையாக மறுவடிவமைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இது விவசாய நிலங்களைப் புதுப்பித்து, தொழில்துறை மண்டலங்கள் மற்றும் பெரிய பூங்கா பகுதிகளை உருவாக்குகிறது. இது ஒரு விமான நிலையம், ஒரு மீன்பிடி துறைமுகம் மற்றும் ஒரு வணிகத் துறைமுகத்தைத் திறக்கவும் அழைப்பு விடுக்கிறது. 1990 களில் ஒஸ்லோ அமைதி ஒப்பந்தங்கள் காசாவில் ஒரு விமான நிலையம் மற்றும் ஒரு வணிகத் துறைமுகத்தைத் திறக்க அழைப்பு விடுத்தன, ஆனால் அமைதி செயல்முறை சரிந்ததால் திட்டங்கள் கைவிடப்பட்டன. காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களை அவர்களின் பிரதேசங்களிலிருந்து மாற்றுவதற்கான முயற்சிகளை அரபுத் தலைவர்கள் நிராகரிப்பதை மதிப்பதாகக் கூறி, ஹமாஸ் வரவேற்ற இந்தத் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தது. இதற்கிடையில், வெள்ளை மாளிகை அரபு நாடுகளின் உள்ளீடுகளை வரவேற்பதாகக் கூறியது, ஆனால் ஹமாஸ் பிரதேசத்தில் அதிகாரத்தில் இருக்க முடியாது என்றும் வலியுறுத்தியது. போருக்குப் பிந்தைய காசாவுக்கான தனது துணிச்சலான தொலைநோக்குப் பார்வையில் ஜனாதிபதி உறுதியாக நிற்கும் அதே வேளையில், பிராந்தியத்தில் உள்ள எங்கள் அரபு கூட்டாளிகளிடமிருந்து உள்ளீடுகளை அவர் வரவேற்கிறார். அவரது திட்டங்கள் இந்தப் பிரச்சினையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதற்குப் பதிலாக பிராந்தியத்தை பேச்சுவார்த்தைக்கு வரத் தூண்டியுள்ளன என்பது தெளிவாகிறது – என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளர் பிரையன் ஹியூஸ் கூறினார். அரபு நாடுகள் அங்கீகரித்த திட்டத்தில், சீர்திருத்தப்பட்ட பாலஸ்தீன ஆணையம் கட்டுப்பாட்டை ஏற்கும் வரை, ஹமாஸ் அரசியல் சுயேச்சைகளின் இடைக்கால நிர்வாகத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்கும். கடந்த மாதம், காசாவில் வசிக்கும் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களை வேறு நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என்று ட்ரம்ப் முன்மொழிந்து, பிராந்தியத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ட்ரம்ப்பின் கூற்றுப்படி, அமெரிக்கா அந்த நிலத்தை மீட்டு மத்திய கிழக்கில் ஒரு “ரிவியரா”வாக மாற்றும். பாலஸ்தீனியர்கள், அரபு நாடுகள் மற்றும் மனித உரிமை நிபுணர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட அவரது திட்டம், இது சர்வதேச சட்டத்திற்கு எதிரானதாக இருக்கும் என்று கூறியது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் அங்கீகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424051
  38. எங்களை சுற்றி இருந்த விளையாட்டு திடல்கள்/மைதானங்களுக்கு நெற்கொழு, தீருவில், சிதம்பரா, நெடியகாடு, எள்ளங்குளம் என்றெல்லாம் பெயர்களை வைத்த நாங்கள் இதற்கும் ஒரு நல்ல பெயராக அப்பவே வைத்திருக்க வேண்டும்................ 🤣......... உங்களுக்கு பனை ஓலை, எனக்கு பனம்பாத்தி............. பாடசாலையில் எனக்கு ஆங்கில வகுப்பில் ஆசிரியையாக வந்து இருந்து விட்டுப் போன குலசேகரம் டீச்சரே இதை மொழிபெயர்க்க கஷ்டப்பட்டிருப்பார்....................🤣.
  39. இலையான் இரையாகிறது ....
  40. இதிலிருந்து என்ன தெரிகிறது எந்த வகை பாத்திரமானாலும் உணவு வெந்தால் சரி ....பசிவந்தால் பண்டமென்ன பாத்திரமென்ன ?
  41. முதல்வர் @Eppothum Thamizhan க்கு வாழ்த்துக்கள். லண்டனில் உள்ளவர்கள் கிருபனின் மூக்கில் கை வைத்துப் பார்க்கவும்.
  42. இலையான் ஒன்று தவளைக்கு முத்தம் கொடுக்கிறது . ..........! 😂
  43. அரையிறுதிக்கு போகும் 4 அணிகளையும் சரியாக கணித்தும். ஓடர் மாறியதால் எனக்கு அரையிறுதியில் எந்த புள்ளிகளும் இல்லை. ஆனால் யாரும் 1,2 அணிகளை சரியான ஓடரில் கணித்தால் அவர்களுக்கு புள்ளிகள் கிடைக்கும். இதைதான் விதி விளையாடியது என்பார்கள் போலும் 🤣. எப்போதும் தமிழன் இப்போது வெல்லலாம்….ஆனால் 2026 இல் புலவர்தான் ஆட்சி அமைப்பார். பிகு T20 WC 2026 🤣
  44. அடுத்தவன் சொல்லைக் கேட்டு ஆடினால் இது தான் நடக்கும். இத்தோட விட மாட்டாங்கள். தேர்தல் வரும் நேரங்களில் ஏதாவது சொல்லி ஏமாற்றி கூட்டி வருவார்கள்.
  45. முதலில் விஜி அண்ணி பொலிஸ் முறைப்பாடு செய்ததும் சீமான் தன் அதிமுக மீதான செல்வாக்கை பாவித்து விசாரானையே இல்லாமல் பார்த்து கொண்டார், பின்னர் பலர் மூலம் தூது பேசினார், விஜிஅண்ணி கணக்கில் சீமான் சார்பில் பணம் கூட போட்டார் என்கிறார் விஜி அண்ணி. இப்போ வழக்கு விசாரணை ஆரம்பமானவுடன் டெல்லி போய், 2 மாதம் வாய்தா வாங்குகிறார். என் மீது எவராவது பொலிஸில் போய் பாலியல் குற்ற முறைப்பாட்டை செய்தால், நான் அந்த விசாரணைக்கு முகம் கொடுத்து, முடிந்த விரைவில் அதை கோர்ட்டுக்கு கொணர்ந்து, நான் குற்றம் அற்றவன் என நிரூபிப்பேன். எந்த நிரபராதியிம் இப்படித்தான் செய்வார்.
  46. நான் ஒரு சாத்வீகியாகத்தான் இருந்தேன்............. என்னை சரியாக நான்கு தடவைகள் மைனஸ் துப்பாக்கியால் சுட்டார்கள்................... 'நீங்கள் என்ன கிழித்தீர்கள்........ மூடிக் கொண்டு போங்கள்.........' என்றார் இன்னொருவர். இந்த அளவு மரியாதை கூட யாழ் களத்தில் நேரடியாக ஒருமையில் எழுதினால் கூண்டுக்குள் அடைத்து விடுவார்கள் என்ற பயத்தினால் மட்டுமே கிடைத்தது.............. இப்படித்தான் என்னிடம் விசயம் இருக்கின்றது என்ற விசயம் எனக்கு தெரிய வந்தது............😜.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.