Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    39311
    Posts
  2. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    1429
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33798
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20339
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/24/25 in all areas

  1. ஐபிஎல் 2025 இன் நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மிச்சல் மார்ஷினதும் நிக்கொலஸ் பூரனினதும் அதிரடியான அரைச் சதங்களுடன் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவும் நிலையில் இருந்தபோதும் இடைவரிசை வீரர்களான ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸ், விப்ரஜ் நிகம், ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களை எடுத்த அஷுரோஷ் சர்மா ஆகியோரின் அதிரடியான ஆட்டங்களால் வெற்றி இலக்கை 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட்டால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 8 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: ஐபிஎல் போட்டிகளை இரசிக்க ஆரம்பித்துள்ள @செம்பாட்டான் முதல்வராக அவையமைந்துள்ளார்!
  2. நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதிர் RCB 14 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்லும் எனக் கணித்திருந்தார்கள்! 09 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெல்லும் எனக் கணித்திருந்தார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் ரசோதரன் நந்தன் புலவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றியீட்டியதால் 09 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH எதிர் RR 19 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்லும் எனக் கணித்திருந்தார்கள்! 04 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் வெல்லும் எனக் கணித்திருந்தார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் சுவி சுவைப்பிரியன் வாதவூரான் ஏராளன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றியீட்டியதால் 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK எதிர் MI 19 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்திருந்தார்கள்! 04 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்திருந்தார்கள். மும்பை இந்தியன்ஸ் வாத்தியார் சுவி ரசோதரன் கோஷான் சே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியீட்டியதால் 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. முதல் மூன்று போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  3. உஷ் . ........டெல்லி வென்றதா இல்லையா . .......... வடக்கு வீதியில் தட்ஷணாமூர்த்தி + பழனி + சின்ராசு சமா எப்படி . .........! 😂
  4. முதல்வன் படத்தில கடைசியில அர்ஜுன் சொல்லுவார் " என்னையும் கடைசியில அரசியல்வாதி ஆக்கிவிட்டீங்களேடா" என்று. அதுமாதிரி, என்னையும் கடைசியில ஜபில் பாக்க வச்சிட்டீங்களே ஜயா. நான் ஒருமுறை கூட இவ்வளவு ஆர்வமாய்ப் பார்ததில்லை. @கிருபன் செய்த வேலை.
  5. ஓவியரே, இப்போது நாங்கள் என்னதான் செய்யவேண்டும்? பழசை எல்லாம் மறக்கலாம், மன்னிக்கலாம் ஒன்றாக கைகோர்த்து நடக்கலாமா? சைவ சமய பாடத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆரம்பம் தொட்டு இப்படி கதைகள் கூறித்தானே மண்டையை கழுவினார்கள்? எங்கள் கலாச்சாரம், வாழ்க்கை முறை அறிவை விட அதிகம் உணர்ச்சி - பற்றின் பாற்பட்டது. பக்தி வழிமுறையின் மூலம் கடவுளையே அடையலாம் என்று கற்பிக்கப்பட்டதே.
  6. நான் எதிர்பார்த்தேனே. இதில ஒரு அதிர்ச்சியும் இல்லையே. எல்லாம் முறைப்படி நடந்திருக்கு. அத்தனைக்கும் ராகுலும் விளையாடேல்ல. கருண் நாயரும் விளையாடேல்ல. பாவம் நம்ம @வீரப் பையன்26 நிலைமை. பார்த்தா, ஆறுதலா இரண்டு வார்த்தை சொல்லி விடுங்க. புலம்பிட்டு இருக்கார். தான் சொன்னதையே இப்ப மாற்றி சொல்லிட்டிருக்கார். இதுக்கு பதில் சொல்ல வேணுமா. அவசரப் பட்டுட்டீங்களே. அவளைத் தொடுவானேன். 🤣
  7. தோட்டம் செய்யிற புரோக்கிறாம் கேன்சல் பண்ணியாச்சு...
  8. உள்ளம் கொள்ளை போகுதே நீல மலை திருடனில் இருந்து.... அபூர்வ குரலாள் ஜிக்கி
  9. வரலாறுகள் சரியாக இருந்தாலும் ஏன் இப்போது விகாரைகளை கட்டி சிங்கள குடியேற்றங்களை செய்கின்றார்கள்? இலங்கையின் கிழக்கு பகுதிகளில் தமிழர் பிரதேசங்களாக இருந்த கந்தளாய் திருகோணமலை பறி போவதைப்பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை. கோண்டாவில கோண்டாவில் ஆக மாறியது கொக்குவில கொக்குவில் ஆக மாறியது இணுவில இணுவில் ஆக மாறியது யாப்பன யாழ்ப்பாணம் ஆக மாறியது கொடிகாம கொடிகாமம் ஆக மாறியது மிருசுவில மிருசுவில் ஆக மாறியது....இப்பிடியே சொல்லிக்கொண்டு போக வேண்டியதுதான்.🤣 கனக்க வேண்டாம் சும்மா இருந்த கதிர்காமத்தை எப்படி மாற்றி விட்டார்கள் என பாருங்கள்? சிங்களம் ஒரு சேர்ந்து வாழக்கூடிய இனமும் அல்ல. அதன் அரசியல் போக்கும் சேர்ந்து வாழ நினைக்கவில்லை. விட்டுக் கொடுத்த இராமநாதன் குணம் கொண்டவர்கள் இனியும் விட்டுக் கொடுத்துக்கொண்டே தான் இருக்கப்போகின்றார்கள்.
  10. ஜிக்கியின் குரலில் எனக்கு ஒரு மயக்கம் இருக்கிறது. தமிழ்ப் படங்களில் பாடுவதை கணவனுக்காக இடையில் நிறுத்திவிட்டார். “சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் தோகை விரித்தே வளர்ந்திடும் சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால் தாவி அணைத்தே படர்ந்திடும்….” பட்டுக்கோட்டையார் ஆரம்பத்தில் இசையில் மனம் துள்ளும் என்பார், இறுதியில் காதல், இன்பத் தேனையும் அள்ளும் என்பார். நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று. கணவர் ஏ.எம். ராஜா இறந்தபின் ஐரோப்பிய மேடைகளிலும் இவர் பாடியிருந்தார். அப்பொழுது இவர் பாடிய, “ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்…” பாடலைப் பாடும் போது அவர் உணர்ச்சி மிகுந்து உச்ச தொனியில் பாடிய இந்த வரிகள் கண்கலங்க வைத்தன “கைகொடுத்த தெய்வம் இன்று எங்கு சென்றதோ-என்னை காத்திருக்க வைத்துவிட்டு எங்கே நின்றதோ வாழ்கவென்று நீங்கள் சொன்னால் வாழும் என் மனம் இல்லை மறைக என்று வரம் கொடுத்தால் மறையச் சம்மதம்”
  11. செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் பூரானின் கேட்சை விட்டு போட்டியை சுறுசுறுப்பாகிய ரிஸ்விக்கும் ஒரு கேட்ச், ஒரு ஸ்டாம்பிங்க்கையும் கோட்டைவிட்டு தனது பழைய அணிக்கு வெற்றியை தேடிக்குடுத்த றிஷாப் பான்டிற்கும் நன்றிகள்!!
  12. நான் இப்ப‌ வாய் திற‌க்க‌ மாட்டேன் நாளைக்கு விளையாட்டு முடிந்த‌ பின் தான் வாய் திற‌ப்பேன்.................என்ர‌ நாற‌வாயால் எது சொன்னாலும் அது வினையா என‌க்கே அமையுது லொள்😁.......................................
  13. நீங்க நம்மாளு. யார் எந்த அணியில விளையாடினம் என்று பார்ப்பதே பெரிய வேலையாக் கிடக்கு. ஒண்ணுமே தெரியாம மேல வந்து இருக்கிறது எவ்வளவு பெரிய கஷ்டம்.
  14. இந்த பெயரைச் சொன்னாலே அதிருதில்ல. பிள்ளைகளுக்கு கூட இந்தப் பெயரை இனி வைக்க மாட்டார்கள்.
  15. 🤣.............. கெட்டது குடி...............🤣 KKR என்றால் கொல்கத்தா, DC என்றால் டெல்லி என்று பாடமாக்கிக் கொண்டு பாலர் வகுப்பில் நிற்கின்றேன்................. அதற்குள்ளே துணை முதல்வர் பதவியா.............. அமெரிக்காவில் கூட இந்த அநியாயம் நடக்காது.............🤣 வாழ்க்கையில் இன்று முதன்முதலாக ஐபிஎல் போட்டி ஒன்றை, முழுவதும் இல்லை என்றாலும், பார்த்தேன்................👍.
  16. "உயிருடன் விலகாத நட்பு, சில பொருளுடன் உறவாட கெடும்." சாமியார் புத்திசாலி.
  17. புதிய முதல்வர் செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் நான் வரேல்லை நான் வரேல்லை எண்டு இருந்த செம்பாட்டானை துணை மூத்தவர் தான் இழுத்துக் கொண்டு வந்தவர் 😂
  18. இது மறு பதிப்புத்தான்
  19. முடிச்சு விட்டான் விளையாட்டை ...........!
  20. இந்திய‌ தேசிய‌ அணியில் விளையாடின‌ வீர‌ர்க‌ள் ம‌ற்றும் வெளி நாட்டு ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் விளையாடின‌ வீர‌ர்க‌ளை பார்த்து தான் ல‌க்னோவை தெரிவு செய்தேன் இன்று டெல்லியின் வெற்றிக்கு பெரிய‌ அறிமுக‌ம் இல்லாத‌ இந்திய‌ மானில‌த்தை சேர்ந்த‌ வீர‌ர்க‌ள் தான் வெற்றிக்கு கார‌ன‌ம்.......................
  21. லக்னோ ஆதரவாளர்கள் யாராவது அவசரமாக ஆஸ்பத்திரிக்கு போக வேண்டுமா....................
  22. ரஸ்யாவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு மிக முக்கிய தகவல்களை வழங்கி பனிப்போரின் பாதையை மாற்றிய கோர்வ்டிஸ்கி காலமானார் - ரஸ்யா அணுவாயு தாக்குதலில் ஈடுபடலாம் என எச்சரித்தவர் Published By: RAJEEBAN 23 MAR, 2025 | 01:29 PM ரஸ்யாவின் புலனாய்வு பிரிவான கேஜிபிக்குள் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு மிகமுக்கியமான புலனாய்வு தகவல்களை வழங்கி பனிப்போரின் பாதையை மாற்றிய ஒலெக் கோர்வ்டிஸ்கி தனது 86 வயதில் காலமானார். 1985 இல் ரஸ்யாவிலிருந் தப்பிவந்து பிரிட்டனில் வாழ்ந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ள அவரின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளனர். பனிப்போர் யுத்த காலத்தின் மிக முக்கியமான உளவாளிகளில் ஒருவர் இவர் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். 1980களில் சோவித் யூனியனிற்கும் மேற்குலகிற்கும் இடையில் அணுவாயுத போர் வெடிக்கும் ஆபத்தான நிலையை தணித்தவர் இவரே. மொஸ்கோவில் 1938 இல் பிறந்த ஒலெக் கோர்வ்டிஸ்கி சோவியத் யூனியனின் கேஜபியில் 1960களில் இணைந்து கொண்ட பின்னர் லண்டன் கொப்பன்ஹேகன் உட்பட பல நாடுகளில் பணியாற்றினார். லண்டனிற்கான கேஜிபியின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். 1968 இல் பிராக்கின் சுதந்திர இயக்கத்தை சோவியத்யூனியனின் டாங்கிகள் நசுக்கி அழித்தது குறித்து சோவியத்தின் பல உளவாளிகள் அதிருப்தியடைந்தனர், இவர்களை பிரிட்டன் 1970களில் தனது எம்16 புலனாய்வு பிரிவிற்குள் உள்வாங்கியது. 1990 இல் ஒலெக் கோர்வ்டிஸ்கியும், பிரிட்டனின் புலனாய்வு வரலாற்றிசிரியர் கிறிஸ்டொபெர் அன்ரூவும் இணைந்து எழுதிய கேஜிபி ஒரு உள்கதை என்ற புத்தகம் பல விபரங்களை வெளிப்படுத்தியது.'' ஒரு கம்யுனிஸ்ட் கட்சி அரசாங்கம், தவிர்க்க முடியாமல் சகிப்புத்தன்மை, மனிதாபிமானமற்ற தன்மை போன்றவற்றை உருவாக்குகின்றது, சுதந்திரங்களை அழிப்பதற்கு வழிவகுக்கின்றது என கோர்வ்டிஸ்கி கருதினார் என அன்ரூ தெரிவித்திருந்தார். பனிப்போரின் மிகவும் அச்சமூட்டும் காலப்பகுதிகளில் ஒலெக் கோர்வ்டிஸ்கி பிரிட்டனிற்காக பணிபுரிந்தார். 1983ம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டனின் அணுவாயுத தாக்குதல் குறித்து சோவியத்யூனியனின் அரசியல் தலைமை மிகுந்த அச்சம் கொண்டுள்ளது, முன்கூட்டியே தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிடுகின்றது என கோர்வ்டிஸ்கி எச்சரித்தார். அவ்வேளை ஜேர்மனியில் இடம்பெற்ற நேட்டோவின் ஒத்திகையால் பதற்றநிலை உருவானது. எனினும் அது ஒரு அணுவாயுத தாக்குதலிற்கான ஒத்திகையல்ல என மொஸ்கோவின் அரசியல் தலைமைகளிற்கு தெளிவுபடுத்திய கோர்வ்டிஸ்கி பதற்ற நிலையை தணித்தார். அதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் சோவியத்யூனியனுடனான அணுவாயு பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1985 இல் கோர்வ்டிஸ்கியை மொஸ்கோ பிரிட்டனில் இருந்து கலந்தாலோசனைகளிற்காக அழைத்தது, தான் இரட்டை முகவர் என்பது தெரிந்துவிட்டது என்பதை அறிந்த அவர் அச்சத்துடன் ரஸயா சென்றார். அவர் விசாரிக்கப்பட்டார், ஆனால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை. இதன் பின்னர் இரகசிய நடவடிக்கையொன்றின் மூலம் அவரை பிரிட்டன் ரஸ்யாவிலிருந்து மீட்டுக்கொண்டுவந்தது. கெடுபிடி யுத்த காலத்தில் சோவியத்யூனியனில் இருந்து பிரிட்டனிற்கு தப்பிச்சென்ற சிரேஸ்ட உளவாளி இவர். பிரிட்டன் கோர்வ்டிஸ்கியை மிகவும் பெறுமதியானவராக கருதியது. இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் அவருடன் இணைவதற்கு அனுமதித்தால், அவர் அம்பலப்படுத்திய கேஜிபி உளவாளிகளை பிரிட்டன் நாடு கடத்தாது என மார்க்கிரட் தட்ச்சர் அறிவித்தார். எனினும் ரஸ்யா இந்த நிபந்தனையை ஏற்க மறுத்தது, இதன் காரணமாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சரின் அதிருப்தியையும் மீறி பிரதமர் மார்க்கிரட் தட்;ச்சர் 25 கேஜிபி உளவாளிகளை பிரிட்டனில் இருந்து நாடு கடத்தியது. மொஸ்கோ பதிலுக்கு 25 பிரிட்டிஸ் பிரஜைகளை நாடு கடத்தியது - இரண்டு நாடுளும் தொடர்ந்தும் பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டன, ஆனால் உறவுகள் பாதிக்கப்படவில்லை. ஆறுவருடங்கள் கோர்வ்டிஸ்கியின் குடும்பத்தை 24 மணிநேர கண்காணிப்பின் கீழ் வைத்திருந்த கேஜிபி 1991 இல் அவர்கள் அவருடன் இணைய அனுமதித்தது. https://www.virakesari.lk/article/209989
  23. பாருங்க பாருங்க மொட்டாக்குடன் போகும்போது பாருங்க.
  24. 65 வயதுவரை உழைத்தவர் பென்ஷனுக்கு விண்ணப்பிக்க கச்சேரிக்கு போகமுதல் மாச்சுவரிக்கு போயிடுவர் ....... அரசு நோகாமல் நுங்கெடுத்துக் கொண்டிருக்கும் . ..........! 😂
  25. இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான இருவரின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்! 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டுக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதிபெற்று மீள எடுக்கப்பட்டு நேற்று சமய முறைப்படி தகனக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் நோக்கி மேற்கொண்ட படை நடவடிக்கைகயில், கண்டி வீதியில் வீடொன்றில் இருந்த தாயும் அவரது மகனும் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தனர். உயிரிழந்தவர்களுக்கு சமய முறைப்படி கிரியைகள் செய்து தகனம் செய்வதற்கு அப்போது அனுமதி மறுக்கப்பட்டிருந்தநிலையில், கணவர் வேறு வழியின்றி தனது மனைவியினதும், மகனினதும் உடலை வீட்டு வளவிலேயே அடக்கம் செய்துள்ளார். பின்னர் அங்கு கல்லறை ஒன்றைக் கட்டிவிட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் ஏனைய பிள்ளைகளுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனது ஏனைய பிள்ளைகளுக்கு அவர் தெரிவித்திருந்ததுடன், மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு சமய முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவர் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நாடு திரும்பிய ஏனைய பிள்ளைகள் தாய் மற்றும் சகோதரனின் உடல்களை மீளத் தோண்டியெடுத்து கிரியைகள் செய்வதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்தனர். நீதிமன்று அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு இந்து சமயக் கிரியைகள் நடத்தப்பட்டு அவர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/இந்திய_இராணுவத்தின்_துப்பாக்கிச்_சூட்டில்_படுகொலையான_இருவரின்_உடல்கள்_38_ஆண்டுகளின்_பின்_தீயுடன்_சங்கமம்!
  26. உக்ரேன் போர்; அமெரிக்கா – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை ஆரம்பம்! உக்ரேனில் ஒரு பரந்த போர் நிறுத்தத்தை நோக்கி முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க, ரஷ்ய அதிகாரிகள் திங்களன்று (24) சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். கடந்த வாரம் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இருவருடனும் பேசிய பின்னர், மூன்று ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது முயற்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன. பேச்சுவார்த்தைகளுக்கான திட்டமிடல் குறித்து விளக்கப்பட்ட ஒரு வட்டாரம், அமெரிக்கத் தரப்பை வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த பணிப்பாளர் ஆண்ட்ரூ பீக் மற்றும் வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி மைக்கேல் ஆண்டன் ஆகியோர் வழிநடத்துவதாக உறுதிபடுத்தியுள்ளனர். கருங்கடலில் கடல்சார் போர் நிறுத்தத்தை எட்டுவதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம் என்று வெள்ளை மாளிகை கூறுகிறது. இது கப்பல் போக்குவரத்து சுதந்திரமாக நடைபெற அனுமதிக்கிறது. ரஷ்யாவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் முன்னாள் இராஜதந்திரி கிரிகோரி கராசின், தற்போது ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேல் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவராக உள்ளார். மேலும் சோவியத் சகாப்த கேஜிபியின் முக்கிய வாரிசு நிறுவனமான ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் பணிப்பாளரின் ஆலோசகர் செர்ஜி பெசெடா ஆகியோரும் உள்ளனர். உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பலமுறை அழைப்பு விடுத்த ட்ரம்ப், பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் விதம் குறித்து பரந்த திருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இதுவரை புட்டின் இந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஆனால், 2022 ஆம் ஆண்டில் உக்ரேனுக்கு பல்லாயிரக்கணக்கான வீரர்களை அனுப்பியதிலிருந்து மாறாத அவரது அதிகபட்ச கோரிக்கைகளாக புட்டின் அர்த்தமுள்ள விட்டுக்கொடுப்புகளைச் செய்யத் தயாரா அல்லது கடைப்பிடிப்பாரா என்பது குறித்து முக்கிய ஐரோப்பிய சக்திகளிடையே சந்தேகம் உள்ளது. அமைதியைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாக புட்டின் கூறுகிறார். ஆனால் உக்ரேன் அதிகாரப்பூர்வமாக அதன் நேட்டோ அபிலாஷைகளைக் கைவிட்டு, ரஷ்யாவால் உரிமை கோரப்பட்டு பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படும் நான்கு உக்ரேனியப் பகுதிகளின் முழுப் பகுதியிலிருந்தும் அதன் வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். https://athavannews.com/2025/1426285
  27. ரிசப் பாந்தும் ராகலும் இப்போது அணிகள் மாறி விளையாடுகினம். அவ்விரு அணிகளும் மோதுகின்றன. யார் தங்களின் பழைய அணிக்கு அடிப்பினம்.
  28. தந்தையின் எண்ணத்தை நிறைவேற்றி தாய் சகோதரத்தின் சிதைகளுக்கு கிரியைகள் செய்த பிள்ளைகள் பாராட்டுக்குரியவர்கள் . ........!
  29. ஒரேபோட்டியில் குவிக்கப்பட்ட 528 ரன்கள் ! இஷான் கிஷன் சதத்துடன் ஹைதராபாத் அமர்க்கள ஆரம்பம் பட மூலாதாரம்,SUNRISERSHYDERABAD/X PAGE படக்குறிப்பு, 45 பந்துகளில் முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார் இஷான் கிஷன் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 23 மார்ச் 2025 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2025 ஐபிஎல் சீசனையும் கடந்த சீசனைப் போல் அதிரடியாக தொடங்கி, சாதனை வெற்றியுடன் கணக்கைத் தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 2வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது. 287 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் சேர்த்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்து வெற்றி பெற்றது. ஏற்கெனவே 287 ரன்கள் எனும் சாதனை ஸ்கோரையும் சன்ரைசர்ஸ் அணிதான் அடித்திருந்தது. இன்றைய போட்டியில் 300 ரன்களை எட்டுவதற்கு 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டநிலையில் சன்ரைசர்ஸ் ஆட்டம் முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 2 புள்ளிகளுடன் 2.200 என்ற வலுவான நிகர ரன்ரேட்டுடன் ஆர்சிபியை பின்னுக்குத் தள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் இரு அணிகளிலும் சேர்த்து 51 பவுண்டரிகள், 30 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன, மொத்தம் 528 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஹைதராபாத்தில் ஆட்டத்தைக் காண வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் இரு அணியின் பேட்டர்களும் வானவேடிக்கை காண்பித்தனர். மோசமான சாதனை படைத்த பந்து வீச்சாளர்கள் Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு பேட்டிங்கில் சாதனைகள் படைக்கப்பட்டதால், பந்து வீச்சாளர்களுக்கு சோதனையான ஆட்டமாக இருந்தது. ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர், ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவராக மாறினார். கடந்த 2019, 2020 சீசன்களில் ஆர்ச்சரின் பந்துவீச்சு மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. 152 கி.மீ வேகத்தில் பந்துவீசி அச்சுறுத்தலாக திகழ்ந்த ஆர்ச்சர், இன்று 4 ஓவர்கள் வீசி 76 ரன்களை வாரிக்கொடுத்தார். மற்ற பந்துவீச்சாளர்களும் ஆர்ச்சருக்கு சற்றும் குறையவில்லை. தீக்சனா(52), பருக்கீ(49),சந்தீப் சர்மா(51), தேஷ்பாண்டே(44) என ரன்களை வாரிக்கொடுத்தனர். இவர்களில் 3 ஓவர்கள் மட்டுமே வீசிய பரூக்கி அரை சதம் ரன்களை வழங்குவதிலிருந்து 1 ரன்னில் தப்பினார். சன்ரைசர்ஸ் பேட்டர்கள் இந்த ஆட்டத்தில் 17 பந்துகளில் மட்டுமே ரன் ஏதும் எடுக்கவில்லை. ஆட்டநாயகனாக ஜொலித்த இஷான் கிஷன் பட மூலாதாரம்,SUNRISERSHYDERABAD/X PAGE 45 பந்துகளில் ஐபிஎல் போட்டிகளில் முதல் சதம் அடித்த இஷான் கிஷன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். சன்ரைசர்ஸ் அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருது வென்றார். சன்ரைசர்ஸ் அணியில் ஏற்கெனவே டிராவிஸ், அபிஷேக் என அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்குப் போட்டியாக இஷான் கிஷன் வந்துள்ளார். மைண்ட் கேமில் சன்ரைசர்ஸ் X பதிவை கடந்து செல்ல, 1 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு, 1 287 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் பிரமாண்ட இலக்கோடு ராஜஸ்தான் அணி களமிறங்கியது. இது போன்று இமாலய இலக்கை எடுத்துவிட்டாலே எதிரணி மனரீதியாக நம்பிக்கையிழந்து உடைந்து விடுவார்கள். இதன் பின்னர் எளிதாக பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி ஆட்டமிழக்கச் செய்து, நிகர ரன்ரேட்டை உயர்த்திக்கொள்வது கிரிக்கெட்டின் "உளவியல் ஆட்டத்தில்" முக்கியமான அஸ்திரமாகும். ஒருவரை மனரீதியாக வீழ்த்திவிட்டாலே பாதி வெற்றி கிடைத்ததுபோன்றது. இந்த கலையை சன்ரைசர்ஸ் அணி கடந்த சீசனில் இருந்து சிறப்பாகச் செய்து வருகிறது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் " 280 ரன்களுக்குமேல் அடிப்போம் என எதிர்பார்க்கவில்லை,வியப்பாக இருக்கிறது. ஏதாவது ஒரு அணி இதுபோன்று பெரிய ஸ்கோரை எடுத்துவிட்டாலே ஆட்டம் ஒருதரப்புதான் ரன்களை துரத்திச்செல்லும்போது, ஆட்டம் கடினமானதாக மாறிவிடும் . இஷான் ஆட்டம் அற்புதமாக இருந்தது. முதல் ஆட்டத்துக்கு தயாரானதே பிரமிப்பாக இருந்தது, எங்களின் பயிற்சியாளர்களும் அற்புதமானவர்கள், அனைத்து வீரர்களும் தயாராக இருந்ததால், சரியான நேரத்தில் திறமையை வெளிப்படுத்த முடிந்தது" எனத் தெரிவித்தார். அதிரடித் தொடக்கம் பட மூலாதாரம்,SUNRISERSHYDERABAD/X PAGE இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணிக்காக கடந்த சீசனில் பல சாதனைகளைச் செய்த டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா கூட்டணி இந்த முறையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதல் ஓவரிலிருந்து டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் சர்மாவும் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை வெளுத்து கட்டினர். ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் பரூக்கி, சந்தீப் சர்மா ஓவர்களை அபிஷேக், ஹெட் என இருவரும் துவம்சம் செய்தனர். பவுண்டரி, சிக்ஸர் என ஓவருக்கு 10 ரன்ரேட்டில் ஸ்கோர் உயர்ந்தது. இந்தப் போட்டியிலும் ஏதோ சம்பவம் செய்ய காத்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். 3.4 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 50 ரன்களை எட்டியது. இருவரின் பேட்டிங்கைப் பார்த்து மிரண்டு, சுழற்பந்துவீச்சாளர் தீக்சனாவை பந்துவீச அழைத்தார் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக். இது கைமேல் பலன் கொடுத்தது அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 11 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்த நிலையில் தீக்சனா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். முதல் விக்கெட்டுக்கு 19 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஹெட் அரைசதம் அடுத்ததாக சன்ரைசர்ஸ் அணிக்கு புதிதாக வந்துள்ள இஷான் கிஷன் களமிறங்கி டிராவிஸ் ஹெட்டுன் சேர்ந்தார். ஏற்கெனவே டிராவிஸ் ஹெட் ராட்சசத்தனமாக ஆடிவரும் நிலையில், அத்தோடு இஷான் கிஷனும் சேர்ந்து கொண்டு வெளுத்து வாங்கினார். ஆர்ச்சர் பந்துவீச அழைக்கப்பட்ட முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் சிக்ஸர், பவுண்டரி என 21 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே முடிவில் சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்து, ஐபிஎல் வரலாற்றில் 5வது அதிகபட்ச பவர்ப்ளே ரன்கள் என்ற சாதனை படைத்தது. பவுண்டரிகளாகப் பறக்கவிட்ட டிராவிஸ் ஹெட் 21 பந்துகளில் அரைசதம் எட்டினார். தேஷ்பாண்டே வீசிய 10-வது ஓவரில் ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து 31 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து(9பவுண்டரி, 3 சிக்ஸர்) ஹெட் ஆட்டமிழந்தார். இஷான், டிராவிஸ் கூட்டணி 38 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து பிரிந்தனர். 10 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. இஷான் சரவெடி ஆட்டம் X பதிவை கடந்து செல்ல, 2 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு, 2 அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷனுடன் சேர்ந்தார். ஹெட், அபிஷேக் ஆட்டமிழந்தால் என்ன நான் இருக்கிறேன் என்று ராஜஸ்தான் பந்துவீச்சை இஷான் கிஷன் வெளுக்கத் தொடங்கினார். ஆர்ச்சர் வீசிய 13வது ஓவரில் 3 சிக்ஸர்கள் உள்பட 22 ரன்கள் சேர்த்த இஷான் கிஷன் 25 பந்துகளில் அரைசதம் எட்டினார். தீக்சனா வீசிய 15-வது ஓவரில் நிதிஷ் குமார் 30 ரன்கள் சேர்த்தநிலையில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த கிளாசன், இஷானுடன் சேர்ந்தார். சந்தீப் சர்மா வீசிய 17-வது ஓவரில் சிக்ஸர் பவுண்டரி என 14 ரன்களை கிளாசன் எடுத்தார். ஆர்ச்சர் வீசிய 18-வதுஓவரை துவம்சம் செய்த கிளாசன் 4 பவுண்டரிகள் உள்பட 23 ரன்கள் சேர்த்தார். சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் ரியான் பராக்கிடம் கேட்ச் கொடுத்து கிளாசன் ஆட்டமிழந்தார். இவர் 14 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 34 ரன்கள் சேர்த்திருந்தார். அதே ஓவரில் இஷான் கிஷன் 2 சிக்ஸர்களை விளாசி 45 பந்துகளில் ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை நிறைவு செய்தார். 225 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய இஷான் கிஷன், 25 பந்துகளில் அரை சதம் அடித்தார். அடுத்த 50 ரன்களை வெறும் 20 பந்துகளில் விளாசி சதத்தைக் கடந்தார். தேஷ்பாண்டே வீசிய கடைசி ஓவரில் அங்கித்(7), அபினவ் மனோகர்(0) என விக்கெட்டை இழந்தனர். எனினும் இஷான் கிஷன் கடைசிப்பந்தில் பவுண்டரியுடன் இன்னிங்ஸை முடித்தார். 47 பந்துகளில் 106 ரன்களுடன்(11பவுண்டரி, 6 சிக்ஸர்) இஷான் கிஷன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இஷான் கிஷன் கடைசிவரை களத்தில் இருந்ததால்தான் சன்ரைசர்ஸ் அணியால் பெரியஸ்கோரைக் குவிக்க முடிந்தது. 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் தீக்சனா 52 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். விக்கெட் சரிவு 287 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கு இருந்த போதும், ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் நம்பிக்கையளிக்கும் விதத்தில் பேட்டிங்கை தொடங்கினார். ஷமி வீசிய முதல் ஓவரிலேயே சாம்ஸன் சிக்ஸர், 2 பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். சிமர்ஜித் வீசிய 2வது ஓவரில் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் மனோகரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த கேப்டன் பராக், ஒரு பவுண்டரி அடித்தநிலையில் அதே ஓவரின் 5வது பந்தில் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து 4ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது ஓவரிலேயே ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 3வது விக்கெட்டுக்கு சாம்ஸன், நிதிஷ் ராணா சேர்ந்தனர். சாம்ஸன் வழக்கம்போல் சிக்ஸர், பவுண்டரி என விளாசியதால் ரன்ரேட் குறையாமல் சென்றது. ராணா 11 ரன்னில் ஷமி பந்துவீச்சில் கம்மின்ஸிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்து ஜூரெல் களமிறங்கினார். கம்மின்ஸ் வீசிய 6வது ஓவரில் ஒரு சிக்ஸர் 3 பவுண்டரி என 20 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்தது. நம்பிக்கையளித்த சாம்ஸன், ஜூரெல் X பதிவை கடந்து செல்ல, 3 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு, 3 சாம்ஸனும், துருவ் ஜூரெலும் இணைந்து அதிரடியாக ஆடி சன்ரைசர்ஸ் அணிக்கு சவால் விடுக்கம் வகையில் ஸ்கோரை உயர்த்தினர். 9-வது ஓவரிலேயே ராஜஸ்தான் அணியும் 100 ரன்களை எட்டியது. 10ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தனர். சாம்ஸன் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிமர்ஜித் வீசிய 13-வது ஓவரில் ஜூரெல் 3 சிக்ஸர்களும், சாம்ஸன் ஒருபவுண்டரி என 26 ரன்கள்சேர்த்தனர். 28 பந்துகளில் ஜூரெல் அரைசதம் எட்டினார். ஹர்சல் படேல் வீசிய 14வது ஓவரில் விக்கெட் கீப்பர் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து சாம்ஸன் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 7பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். ஆடம் ஸம்பா வீசிய 15-வது ஓவரில் ஜூரெல் 35 பந்துகளில் 70 ரன்கள் (5பவுண்டரி, 6 சிக்ஸர்) சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து ஷுபம் துபே, ஹெட்மயர் அதிரடியால் ராஜஸ்தான் அணி 17.2 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. கடைசி இரு ஓவர்களில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு 70 ரன்கள் தேவைப்பட்டது. ஹெட்மயர், ஷுபம் துபே இருவரும் கடைசிவரை போராடியும் தோல்வியில் முடிந்தது. ஹெட்மயர் 42 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் ஹர்சல் படேலிடம் விக்கெட்டை இழந்தார். ஷுபம் துபே 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் சேர்த்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹர்ஷல் படேல், சிமர்ஜித் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq6y38n212ro
  30. சுவையான தகவல். கோலி ஒருவர்தான். எல்லா ஜபில் தொடர்களிலும் ஒரே அணிக்காக விளையாடிய வீரர். பிசிசிஜ அவரைக் கௌரவித்து 18 என்ள இலக்கம் படைத்த கேடயம் ஒன்றை வழங்கியுள்ளது. தோனி, ஜடேஜா மற்றும் மனிஷ் பாண்டேவும் எல்லா ஜபில் தொடர்களிலும் விளையாடியுள்ளனர். ஆனால் வேறு வேறு அணிகளிற்கு.
  31. // மற்றது, தையிட்டி விவகாரம், அங்கே பெளத்த வழிபாடு போன்றவை எப்போது தொடங்கியது என்று தெரியுமா உங்களுக்கு?// தையிட்டியில் பவுத்த வழிபாடு சரியாக 1345 ம் ஆண்டு , பங்குனி மாதம் இரண்டாம் திகதி தொடங்கியது . ஆனபடியால் , தையிட்டியில் , அங்கினேக்கு அக்கம் பக்கத்தில இருக்கிற உறுதிக்காணிகளையெல்லாம் பிடிச்சு , பன்சல , மண்டபம் , இத்தியாத்தி ஐடம்ஸை கட்டிக்கொள்வது சாலச்சிறந்ததவும் பொருத்தமானதும் ஆகி நிற்கின்றது
  32. கனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை சிவதாசன்இன்னும் 36 நாட்களில், ஏப்றில் 28 அன்று கனடிய பொதுத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கனடாவின் அதி குறைந்த ஆயுட்காலத்தைக்கொண்ட பிரதமர் என மார்க் கார்ணி வரலாற்றில் இடம்பெறுகிறார். அவரின் இன்றைய தேர்தல் அறிவிப்பை வானொலி மூலம் கேட்க முடிந்தது. அக்டோபர் 2025 மட்டும் அவகாசமிருக்க கார்ணி ஏந் இவ்வளவு அவசரமாகத் தேர்தலை அறிவித்தார் என ரொறோண்டோ ஸ்டார் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார். பதில் மழுப்புதலாக இருந்தாலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவின் ‘கீறல் விழுந்த ரெக்கோர்ட்’ பதிலாக இருக்காதது வித்தியாசமாக இருந்தது. கனடிய அரசியலில் மிகவும் அதிர்ஷ்டம் குறைந்தவர் என்றால் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவ் தான். இரண்டு, மூன்று தடவைகளில் சந்தித்துப் பேசும் சதர்ப்பமும் கிடைத்தது. ‘அவ்வளவு பிழையான ஆளில்லை’ என்று ஊர் சொல்லக்கூடிய ஒருவர் தான். இருப்பினும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை. அடுத்த 36 நாட்களுக்குள் கிரகங்கள் ஏதாவது சடுதியாக மாற்றப்பட்டாலே தவிர ராஜாவுக்குச் சாண்சே இல்லைப் போலிருக்கிறது. ட்றம்ப் உளறத் தொடங்கியவுடனே டக் ஃபோர்ட் கொடுக்கைக் கட்டியதை பொய்லியேவ் ந்திருப்பாரோ அல்லது அவரது வாய்க்குப் பூட்டுப் போடப்பட்டதோ தெரியாது. அன்றே அவரிடமிருந்த ஒரேயொரு நட்பான கிரகமும் வீடு மாறிவிட்டது. எல்லாம் இந்த கருத்துக் கணிப்பாளர்கள் செய்யும் வேலை. தெருவில் திரிந்த சாதாரண மனிதரைப் பாப்பாவில் ஏற்றிவிட்டு சனத்தை உசுப்பேத்திவிட அவரைச் சுற்றியிருந்த ஆலோசக சேனை அவரது கண்ணாடியைக் கழற்றிவிட்டு அப்பிளைக் கொடுத்து கடித்துக் கடித்து ஊடகருக்குப் பதில் சொல்ல வைக்க உசுப்பேத்தப்பட்ட மகாஜனங்கள் கைதட்டி ரசிக்க ஏறியவர் இறங்க மறுத்துவிட்டார் – அது ட்றம்ப் குளறும்வரை. பப்பா மரத்திலிருந்து இறங்கியபோது கைதட்டிய மகாஜனங்களில் பலபேர் துண்டைக் காணோம் துணியைக் காணோஈம் என்று ஓடிப்போய் எதிரியின் கூடாரத்துக்குள் ஒளிந்துகொண்டனர். கருத்துக்கணிப்பாளர் பாவம். அவர்கள் தமக்குக் கிடைத்த கட்டளைகளை நிறைவேற்றத்தானே வேண்டும். கார்ணியின் வரவு தற்செயலானதல்ல. தேவை கருதி அவசரமாகக் களமிறக்கப்பட்ட ஒருவர் அவர். அவரது வரவால் சிறகொடிக்கப்பட்ட கிறிஸ்டினா ஃபிறீலாண்ட் ஒரு திருப்பலி. இதுவரை மேற்கு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக இருந்து கோலோச்சிய அமெரிக்காவும் ஒரு நாள் தடம் புரளும் என்பதை ட்றம்ப் நிரூபித்த பிறகு, மேற்கு தனக்கான ஒரு புதிய தலைமையை உருவாக்கத் தீர்மானித்துவிட்டது. ஐரோப்பாவை மையமாகக் கொண்டிருக்கும் இப்புதிய தலைமையின் உருவாக்கத்தில் கனடாவுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அந்த அவசிய பயணத்தை முன்னெடுக்கக்கூடிய தலைமை பொய்லியேவுக்கு இல்லை. அதற்குத் தேவையான ‘ஆங்கிலோ சக்ஸன்’ மரபணு அவரிடம் இருப்பத் போலத் தெரியவில்லை. அந்த establishment இனால் முன்தள்ளப்பட்ட மாமணியே கார்ணி. கார்ணியின் முன்தள்ளலுக்குப் பின்னால் இருக்கும் establishment எனப்படும் இம்மர்ம விசையில் கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி பங்காளியாய் இல்லைப் போலத் தெரிகிறது. இதற்குக் காரணம் பொய்லியேவா அல்லது கட்சி இயந்திரமோ தெரியவில்லை. ஐரோப்பா தலைமையில் ஆரம்பமாகும் இப்புதிய ஒழுங்கிற்கான பின்னரங்கச் சந்திப்புகளில் பொய்லியேவ் ஒதுக்கப்பட்டு டக் ஃபோர்ட்டுக்கு உயரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளமை தெரிகிறது. இதற்கு ட்றூடோவின் பங்களிப்பும் இருந்திருக்கலாம். மாகாண பொதுத் தேர்தலில் டக் ஃபோர்ட் அமோக வெற்றி பெற்றதும் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அப்போதைய பிரதமர் ட்றூடோ தொலைபேசியில் அழைத்து டக் ஃபோர்ட்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியாகவிருந்தும் தன் சக கட்சித் தலைவருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்க பொய்லியேவுக்கு 18 நாட்கள் எடுத்திருக்கின்றது. ஃபோர்ட்டுக்கும் பொய்லியேவுக்குமிடையில் பனிப்போர் இருக்கிறதென்பது தெரிகிறது. ஆனால் அது எப்போ, எதற்காக அல்லது யாருக்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு விளக்கமில்லை. டுத்தார். இருவருக்கும் அதிக நேரம் பேசத் தேவை இருக்காதவாறு உறவு புளித்துப் போயிருந்தது. ஆனாலும் டக் ஃபோர்ட் தனது பழிவாங்கலை வேறு வடிவங்களில் கச்சிதமாக முடித்துவிட்டார். தனது முடிசூடலுக்கு கிறிஸ்டியா ஃபிறீலாண்டுக்கு அழைப்பு விடுத்ததுடன் கார்ணியுடன் காலையுணவுக்கும் ஒழுங்குசெய்து விட்டார். ஃபோர்ட்டுக்கு சில வேளை தூரப்பார்வை அதிகமாக இருக்கலாம். வரப்போகும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வி கண்டால் அதன் தலைமை ஆசனத்தில் அடுத்த தலைவராகத் தான் அமர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணமும் பொய்லியேவை உதாசீனம் செய்யக் காரணமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஃபோர்ட்டின் தேர்தல் வெற்றியை உடனடியாக வாழ்த்த விரும்பாத பொய்லியேவின் முடிவு சுயமானதா அல்லது தூண்டப்பட்டதா தெரியாது. ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலருக்கு இது அதிர்ச்சியானது என ரொறோண்டோ ஸ்டார் எழுதியிருக்கிறது. தூரத்தில் வைத்திருப்பது கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் புதிய விடயமல்ல. 2019 இல் ஃபோர்ட்டின் செல்வாக்கு சரிந்தபோது அப்போதைய மத்திய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அண்ட்றூ ஷியர் ஃபோர்ட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருந்தார். 6 வருடங்களில் இந்த வன்மம் வளர்ந்திருக்க வாய்ப்புண்டு. கனடாவின் 41 மில்லியன் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஒன்ராறியோவில் இருக்கிறது. மொத்தம் 343 ஆசனங்களில் 122 ஆசனங்கள் ஒன்ராறியோவில் மாத்திரம் இருக்கின்றன. அப்படியிருந்தும் ஃபோர்ட்டைப் புறந்தள்ளும் யோசனை கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வருகிறதென்றால் சாணக்கியம் என்பது இவர்களுக்கு அன்னியமானதொன்று என்றுதான் பார்க்க வேண்டும். இப்படியான ஒரு கட்சியால் ட்றம்ப் போன்றவர்களை எப்படிச் சமாளிக்க முடியும்? என வாக்காள மகாஜனங்கள் யோசித்து, தீர ஆலோசித்து வாக்குகளை அளிக்க கார்ணி அதிக அவகாசம் கொடுக்காமல் அவசர தேர்தலுக்கு – ஒரு வகையில் preemptive- அறிவிப்பை விடுத்திருக்கிறார். ட்றம்பின் பலத்தை முன்வைத்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டதை விட பொய்லியேவின் பலவீனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டதாகவே பார்க்கப்படவேண்டியிருக்கிறது. அடுத்த 36 நாட்களில் ட்றம்பின் சிறிய இரைச்சல்களையும் பெரிதாக amplify பண்ணுவதுதான் லிபரல் கட்சியின் strategy ஆகவிருக்குமென எதிர்பார்க்கலாம். நேரடடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஃபோர்ட் இதற்கு உதவி செய்வார். பொய்லியேவ் கட்சியில் ஊதுவதற்குப் புதிய விடயமுமில்லை. அதை முன்னெடுப்பதற்கான இரண்டாம் நிலை charismatic தலைவருமில்லை. லிபரல் கட்சியை அதிகமாக இடதுபக்கம் தள்ளிச்சென்ற ட்றூடோ கட்சியில் விட்டுச் சென்ற சிவப்புச் சாயத்தைக் கழுவி கொஞ்சமேனும் வலது பக்கம் நோக்கித் தள்ளும் முயற்சியை கார்ணி ஏற்கெனவே வெளிக்காட்டிவிட்டார். அதற்கு மாறாக வலது பக்கமிருந்த கன்சர்வேட்டிவ் கட்சியைக் கொஞ்சம் இடதுபக்கம் நகர்த்த பொய்லியேவ் முயற்சிப்பதும் தெரிகிறது. திடீரென அவர் தொழிலாளர்களைப் பின்வரிசையில் நிறுத்தி அவர்களின் தோழராகப் படம் காட்டுவது அப்பட்டமாகத் தெரிகிறது. அந்தளவிற்கு கட்சியில் மூளை வறுமை இருக்கிறது. பாவம் பொய்லியேவ். நல்ல மனிசன். சுற்றம் சரியில்லை. veedu.comகனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை -...சிவதாசன் இன்னும் 36 நாட்களில், ஏப்றில் 28 அன்று கனடிய பொதுத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கனடாவின் அதி குறைந்த ஆயுட்காலத்தைக்கொண்ட பிரதமர் என
  33. கை மட்டுமல்ல சகலதையும் கோர்த்து நடக்கலாம்🤣
  34. காதல் தோல்வியை தழுவியவர்கள் ரசித்து கண்ணீர் மல்கி இரத்தக் கண்ணீர் விட்ட காட்சி. 🙂 https://youtu.be/LOy6iA28XVc?si=McQzU0R77L2_nJpN
  35. முதல் மூன்று போட்டிகளையும் சரியாகத் தெரிவு செய்து போட்டேனே. பாத்து ஏதாவது போட்டுக் குடுங்க. அடுத்த அடி: டெல்லி குடுக்குறான் லக்னோவுக்கு. நான் வந்துகொண்டிருக்கிறன். விலகி நில்லுங்க. ஏடாகூடாம அங்கின இங்கின பட்டுடப் போது. 🫠😆
  36. போந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள் கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன் பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞாற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி - நீர்ப்படைக் காதை 130 நியாயத்தின் சாம்பல் மேற்குறிப்பிட்டநிகழ்வு சங்க காலத்தியது தான். பத்தினியின் பசி தீர ஆயிரம் பொற்கொல்லர்களை நரபலி கொடுத்தமை, சங்க காலத்தின் முதன்மைக்காப்பியாமாம் சிலப்பதிகாரத்தில் பச்சைத் தமிழன் பாண்டியன் செய்வித்ததாகத் தான் உள்ளது. பொதுவாக இறை வழிபாடுகள் நம்பிக்கை சார்ந்தவை, அதனால் எத்தனையோ மூடநம்பிக்கைகள் அதனுள்ளே இயல்பாக ஊடுருவ முடியும். பல காலங்களாகவே சமயக் கோட்பாடுகளை அறியாமலே மேலோட்டமாகவே சடங்குகள் சம்பிரதாயங்களைப் பின்பற்றியே அனேகமானோர் அவற்றைக் கைக்கொண்டு வருவதால், அச் (ச+ச) களைத் தாக்கி அவற்றிலிருக்கும் மூடப் பழக்கவழக்கங்களைத் தாக்கி அதன் மூலம் அவையைப் பிழை என நிறுவும் போக்கும் எதிர்க்கோட்பாடு கொண்டவர்களின் ஆயுதமாகும். இதைத் தேர்ந்து அறிவதே அறிவார்ந்தவர் கடமையாகும்.
  37. இவங்களை நம்பேலாது கண்டியளோ. நேரத்துக்கு நேரம் சட்டங்களை மாத்துவாங்கள்.😂 பென்சன் எடுக்கிற நேரம் வர கடிதம் போடுவாங்கள் தானே எண்டு பாத்துக்கொண்டிருக்கிறன்.எண்டாலும் எனக்கு முழங்கால் பிரச்சனை இருக்கிறபடியால முதலே பென்சன் எடுக்க வாய்ப்பிருக்கு......😎 கெதியாய் ஊருக்கு போறன்.....6 ஏக்கர் தோட்டக்காணிய துப்பவராக்கிறன்....ரஜினி மிளகாய்க்கண்டு வைக்கிறன். கோடி கோடியாய் சம்பாதிக்கிறன்.😁
  38. குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வர வேண்டும் ........! 😍
  39. யாழ்பாணத்தின் வரலாறு கூறும் நூலான “யாழ்பாண வைபவமாலை” என்னும் நூலில் புத்த கோவில்களை எல்லாம் இடித்து சிங்களவரை துரத்திய வரலாறு உள்ளது. மதம் மாறினார்கள் என்பதற்காக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராது அனைவரையும் சங்கிலியன் வெட்டி கொலை செய்த வரலாறும் உள்ளது. ஆகவே இனவாத விடயத்தில் நாமும் சிங்களவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர். இற்றைக்கு 250 வருடங்களுக்கு முன்பு 1750 களில் இந்நூல் எழுதப்பட்டது.
  40. வேட்புமனு தாக்கல் செய்த போது கெளசல்யா கையெழுத்திடவில்லையாம். இவர்களுக்கு உதவி செய்வதற்காக தனிஒரு மேசைபோட்டு ஒருவரை உட்கார வைத்துள்ளார்கள். கெளரவம் கருதி யாருமே இந்த மேசைப்பக்கம் போகவே இல்லையாம். ஒருஒருத்தர் டக்லஸ் மாத்திரம் இவரின் அறிவுரையைக் கேட்டு திருத்திய பின்பு வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். நானொரு வக்கீல் சாதாரண கிளாக்கிடம் போய் சரிபிழை பார்ப்பது அவமானம் இல்லையா? அத்துடன் முக்கியமாக யார்யார் வேட்பாளர்கள் என்பது பரமரகசியம். சரிபிழை பார்க்கப் போய் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் வெளிவந்துடுமே?
  41. மேலே படத்தில் உள்ளது Tags போன்று பந்தி பந்தியாக இணைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10000 Tags இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அதில் 80-90 வீதம் Tags அழித்தால் தான் சரிப்படுத்த முடியும். அழிப்பதும் இலகுவல்ல. பல நாள் வாரம் மினக்கிட வேணும்.
  42. இதற்கு திரைமறைவில் உழைத்தவர்கள் யாரோ? அயல்நாட்டு ராஜதந்திரிகள் தான் அண்மைக் காலங்களில் குறுக்கும் நெடுக்குமா ஓடுப்பட்டுத் திரிந்தார்கள்.
  43. முதல் qualifier இல் வெற்றிபெறும் அணி நேரடியாக பைனலுக்கு போய்விடும். அதே அணி இரண்டாவது qualifier இல் வெல்லமுடியாது!! இரண்டிற்கும் நீங்கள் SRH என்று தெரிவுசெய்திருக்கிறீர்கள்!! அதனால்தான் மாற்ற விரும்பினால் மாற்றும்படி சொன்னேன்! அகஸ்தியன் , கேள்விகள் 71 , 72 இற்கான விடைகளை சரிபார்க்கவும்!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.