Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    26
    Points
    87988
    Posts
  2. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    5417
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38754
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    14675
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/28/25 in all areas

  1. ஐபிஎல் 2025 இன் 08வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பல வீரர்கள் பந்துகளை வீணாக்காமல் வேகமாக அடித்தாடியதால், ராஜட் படிதாரின் அரைச் சதத்துடன் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரச்சின் ரவீந்திராவையும் இறுதியில் வந்து வாணவேடிக்கை காட்டிய தோனியையும் தவிர மிகுதி அனைவரும் வேகமாக விக்கெட்டுகளை இழந்ததால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல்வராக @செம்பாட்டான் நீடிக்கின்றார். பதில் முதல்வராக @suvy ஐயா பறந்துவந்துள்ளார்!
  2. நான்கு அதன்பின்னர் கிணற்றுக்கு மேலே கம்பி வலை போட்டு குப்பைகள் விழாதவாறு மூட 10000 ரூபாய்கள். ஆனால் இரண்டு நாட்களில் தருவதாகக்கூறி ஒரு பத்துதடவை போன் செய்து, ஒருவாரத்தின் பின்னர் தான் கொண்டுவந்து பூட்டினார்கள். ஒரு பெண்ணைக் கூப்பிட்டு வீடு முழுதும் நன்றாகக் கழுவித் துடைத்து சுத்தம் செய்தபின்தான் மனம் நிம்மதியடைகிறது. அதன்பின்னர் மரங்கள் நடலாம் என எண்ணி கணவருக்கு போன் செய்ய சுற்றிவர கமுகை நடு. பார்க்க அழகாய் இருக்கும் என்கிறார். தேக்கு மரமும் நடுங்கோ அம்மா. காணி ஒருகாலத்தில விக்கிறது என்றாலும் பெறுமதி என்று வேலைக்கு வந்தவர்கள் கூற 100 கமுகுகள் மற்றும் ஐம்பது தேக்கமரம் என்று சுற்றிவர நட்டுவிட்டு கறுவா, ரமுட்டான்,மங்கோஸ்டீன், கசு, அவகாடோ மற்றும் மூலிகைக் கன்றுகள் பூங்கன்றுகள் என்று ஆசைப்பட்ட கன்றுகள் எல்லாம் வாங்கி நடுகிறேன். வெட்டிய தென்னைகளுக்குப் பதிலாக 15 தென்னங்கன்றுகளும் நாட்டபின்னும் எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. அதன்பின்னர் வளவைச் சுற்றி நான்கு புறமும் மரங்களுக்குத் தண்ணீர் விடுவதற்காக பைப்புகளைத் தாட்டு ஆசைதீரத் தண்ணீர் பாய்ச்சுகிறேன். எல்லாவற்றுக்கும் நீர் விட கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முடிகிறது. நான் வந்து நான்கு மாதங்கள் முடிந்து இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கு. காணியை சும்மா விட்டுவிட்டு வர முடியாது. ஆரையன் வீட்டில் வாடகைக்கு இருத்தப் பார் என்கிறார் மனிசன். என் வீடு மெயின் ரோட்டில் இருந்து கொஞ்சம் உள்ளுக்குள் இருக்கு. இரு பக்கம் 30 பரப்பு கலட்டுக் காணிகள். உரிமையாளர்கள் மூவர் ஒஸ்ரேலியாவில். அவர்களின் தொடர்பை எடுக்க முடியவில்லை இதுவரை. ஒருபுறம் தோட்டக்காணி. இருவர் குத்தகைக்குத் தோட்டம் செய்கின்றனர். பின்னால் நான்கு குடும்பங்கள். எனது வளவு பெரிது என்பதால் பலரும் வந்து பார்த்துவிட்டு அதிக வீடுகள் இல்லை. தனிய மனிசியையோ அல்லது அம்மாவை விட்டுவிட்டு வேலைக்குப் போக முடியாது. உந்த வளவைப் பாராமரிப்பதும் கஸ்டம் என்று செல்லி சாட்டுகளைச் சொன்னபடி போக, வீட்டில என்ன பெரிய பொருட்களா கிடக்கு. ஆட்களை வாடகைக்குப் போடுறதை விட பூட்டிப்போட்டு வாறன் என்றுசொல்ல, கணவர் பாதைப்புடன் கட்டாயம் ஆரையும் இருத்தாமல் வராதை என்று கண்டிப்புடன் கூற மீண்டும் ஆட்களைத் தேடுகிறேன். இன்னும் ஒன்றரை மாதமிருக்கே. இரண்டு அறைகளுக்கு அட்டாச் டொயிலற் கட்டவோ என்று கேட்க, அதற்கும் மனிசன் தடைபோடுகிறார். அது நானும் வந்து நிக்கும்போது கட்டலாம். உனக்கு சரிபிழை தெரியாது என்கிறார். அடுத்து இரண்டு நாட்களின் பின்னர் வெளியே உள்ள டொயிலற்றுக்கு போய் கதவைத் திறக்கமுதல் பார்த்தால் வெளியே ஊசி போன்று வால் ஒன்று தெரிகிறது. நீளமாக இருப்பதால் பாம்பாகத்தான் இருக்கும் என நினைத்து முன்பக்கமாக ஓடுகிறேன். வீட்டின் உள்ளே சென்று கதவைச் சாற்றிவிட்டு கடைசி அறையைத் திறந்து யன்னல் வழியாகப் பார்த்தால் எதையும் காணவில்லை. வீட்டில் என்னைத் தவிர யாரும் அந்த நேரம் இல்லை. வேலை செய்பவர்கள் வர இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது. அந்தப் பக்கம் இந்தப்பக்கம் பார்க்காது டொயிலற் வாசலையே பார்த்துக்கொண்டு நிற்க ஒரு பத்து நிமிடத்தின் பின்னர் ஒரு சிறிய பாம்பு வெளியே தலையை நீட்டுகிறது. ஒரு இரண்டு நிமிடமாக அங்குமிங்குமாக தலையைத் திருப்பிப் பார்த்துவிட்டு வெளியே வந்து பின்பக்கமாகப் போகிறது. அதன்பின் வேலை ஆட்கள் வரும்வரை நான் வெளியில் வரவேயில்லை. வண்டனில் அதிகாலை நேரம் என்பதால் கணவர் நித்திரையால் எழும்பியபின் கட்டாயம் அட்டாச் டொயிலற் கட்டியே தீரவேண்டும் என்கிறேன். கணவரும் வேறு வழியின்றிச் சம்மதிக்க இரண்டு மூன்று பேரைக் கூப்பிட்டு கதைத்தால் வெளிநாட்டுக்காரர் என்று தெரிந்து அதிகமாகச் சொல்கின்றனர். பின் வீட்டுக்கு வரும் வழியில் கல்லரியும் யாட் ஒன்று உண்டு. அந்தத் தம்பியுடன் கதைக்க நீங்கள் வெளிநாடு எண்டு எப்பிடியும் கண்டுபிடிச்சிடுவாங்கள். கூடத்தான் கேட்பார்கள். நான் உங்களுக்கு நல்ல மேசனைப் பிடித்துத் தருகிறேன். நாட்கூலி குடுத்துக் கட்டுங்கோ அக்கா என்று கூற நானும் சம்மதிக்கிறேன். அடுத்த நாளே மண், கல், சீமெந்து எல்லாம் அந்தத் தம்பியின் யாட்டில் இருந்தே வந்திறங்க, மற்ற இடங்களில் விசாரித்தால் அவர் கூட்டி வைக்காமல் தருவதை அறிய மனதில் நிம்மதி பிறக்கிறது. இரண்டு அறைகளுக்குத் தனித்தனியாக அட்டாச் டொயிலற். ஆனால் கட்டடம் ஒன்றாகக் கட்டி இடையில் சுவர் வைத்து பிரிப்பதான அமைப்பு இரு அறைகளுக்கிடையில் இருந்தது எமது அதிட்டமாகிறது. காலையில் நான்குபேர் வேலைக்கு வருவார்கள். சில நேரம் ஆறுபேர். மெயின் மேஷனுக்குக் கூலி 3500. மற்றவர்களுக்கு 3000. 10.30 க்கு மாப்பால் கரைத்து ஒரு தேநீர் மற்றும் ஏதாவது ஒரு சிற்றுண்டி. 11.30 வெறும் தேநீர். 12.30 இக்கு மதிய உணவு இடைவேளை. ஒருவர் சென்று எல்லோருக்கும் பக்கத்திலிருந்த கடையில் உணவுப் பொதிகள் வாங்கிவருவார். வீட்டுக்குச் சிறிது தள்ளி ஒரு கார் நிறுத்துவதற்குக் கட்டிய ஒரு ஓடு வேய்ந்த சீமெந்துக் கட்டிடம். அதற்குள் இருந்து உண்டு முடிய பாயைப் போட்டுச் சிலர் சாய சிலர் போனில் அல்லது நேரில் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு 1.30 அல்லது 2.00 மணிக்கு மீண்டும் வேலையை ஆரம்பிப்பார்கள். எனக்கும் மத்தியான வெயிலும் ஓடித் திரிந்ததும் அலுப்பாக இருக்க, நானும் வீட்டுக் கதவை உள்ளே பூட்டிக்கொண்டு மதிய உணவு உண்டு முடிய நான் வாங்கிப் போட்ட கட்டிலில் ஒரு மணி நேரத்துக்கு போனில் அலாம் செட் பண்ணி வைத்துவிட்டுத் தூங்கி எழுவேன். என் எலாம் அடிக்கமுதலே மனிசன் வேலைக்குப் போகமுதல் எழுந்து எனக்குப் போன்செய்து ஏதும் ஆலோசனை சொல்வதோடு நடப்பவை பற்றிக் கேட்பார். பின்னர் 3.30 இக்கு அவர்களுக்கு மீண்டும் ஒரு பால் தேநீர். ஐந்து மணிக்கு வேலைமுடிந்து போக நானும் கதவுகள் யன்னல்கள் எல்லாம் பூட்டிவிட்டு வெளியே வந்து இணுவிலுக்கு வந்துவிடுவேன். ஒரு மாதத்தில் இரு அட்டாச் டொயிலற்றும் கட்டி முடித்து மாபிள்கள் பதித்துமுடிய களைத்தே போய்விட்டேன். ஆனாலும் தனிய இந்தப்பெரிய வேலையைச் செய்து முடித்துவிட்டேன் என்னும் பெருமிதமும் கூடவே வர அடுத்தடுத்த நாட்களில் தேவையான பொருட்கள் பாத்திரங்கள் என்று வாங்கி காஸ் அடுப்பில் நானே தனியாகச் சமைத்து மிக நெருக்கமான உறவுகள் ஒரு இருபத்தைந்து பேர்களை அழைத்து என் கையால் அந்தாறு கறிகளுடன் உணவு சமைத்துக் கொடுத்தபின்தான் மனம் நிம்மதியானது. அதன் பின்னும் யாராவது வீட்டுக்கு வாடகைக்கு வரமாட்டார்களா என்று தேடியதில் ஒரு குடும்பம் இரண்டு வயதுக் குழந்தையுடன் வருகின்றது. எமக்காக இரண்டு அறைகளை வைத்துக்கொண்டு மிகுதியாய் அவர்கள் பயன்படுத்தலாம் என்று சொல்ல அவர்களும் சம்மதிக்கின்றனர். நீங்கள் வாடகை தரவேண்டாம். கரண்ட் காசு இந்த இரண்டு மாதங்களும் 1200 ரூபாய்தான் வந்தது. மூன்று நாட்களுக்கு ஒருக்கா நீங்கள் என் கன்றுகளுக்குத் தண்ணீர் திறந்து விட்டால் போதும். நானே உங்கள் கரண்ட் காசையும் கட்டுகிறேன் என்கிறேன். அவர்களும் சம்மதிக்கின்றனர். லோயரைக் கொண்டு ஒரு ஆண்டுக்கு வாடகை ஒப்பந்தம் எழுதி அவர்களுக்கு ஒருபிரதி எனக்கு ஒருபிரதி தர 2000 ரூபாய்கள் மட்டும் எடுக்கிறார் கோண்டாவிலில் உள்ள ஒரு லோயர். ஒருவித நிம்மதியுடன் இருக்க எனக்கோ திரும்ப போகவே மனமில்லை. கட்டடம் கட்டும் வேலை இழுபட்டாலும் என்று எனது விமான டிக்கற்றை மூன்று வாரங்களுக்குத் தள்ளிப் போட்டிருந்தேன். அடுத்தநாள் மதியம் என் கடைசி மகள் போன் செய்து “அம்மா உங்கள் கஸ்பண்டுக்குச் சமைத்துக் கொடுத்து நான் களைத்துவிட்டேன். நீங்கள் உடனே வாருங்கள். இனிமேல் போவதென்றால் அவரையும் அழைத்துக்கொண்டே செல்லுங்கள் என்கிறாள். எனக்கோ கணவரையும் பிள்ளைகளையும் நினைக்கப் பாவமாக இருக்கிறது. இன்னும் மூன்று வாரத்தில் வந்துவிடுவேன் என்கிறேன்.
  3. கருத்த உருவம் காவிப்பற்கள் தெரிய சிரிப்பு.. எண்ணெய் பூசிய உடல்போல் வழுவழுப்பான தேகம் கையில் இருக்கும் உருண்டைத்தடியில் உருட்டப்பட்ட ..இனிப்பு சுருள் அதற்கு ரெயின் கோட்டு வெள்ளை நிற பொலித்தீன் மடித்துக் கட்டிய சாரமும் அழுக்குத் துணியால் முண்டாசும் கட்டி மூக்குத் துடைக்கவும் முட்டாசு அழுக்கை துடைக்கவும் துணித்துண்டு ஒன்று இதுதான் ..அந்தக்கால இனிப்பு வண்டி... பம்பக் ..பம்பக் என்று கத்திக் கொண்டே வரு ம் அந்த வண்டி மனிதன் ஐந்துசதம் பத்து சதத்துடன் முட்டிமோதும் எம்மை ஆசை வார்த்தை கூறி இனிப்புச் சுருளை இழுத்து நீட்டி மடக்கி..நீட்ட இனிதாய் மகிழும்..எம்மனம் இப்படி... இந்த பம்பாய் மிட்டாசு தின்று மகிழ்ந்த அந்த இனிய நாட்களை ஊரில் நின்றபோது கற்பனையில்தான் காணமுடிந்தது.... எனினும் அது அழகான இனிமையான கற்பனைதான்
  4. கவலை தரும் விடயம் ....வட்சப்,முகப்புத்தகம்,இன்ரோகிராம்....போன்ற சமுக ஊடகங்களில் நேரத்தை வீணடிப்பதால் ...என நினைக்கிரேன்
  5. ஆயிரம் புடுங்குப்பாடு இருந்தாலும்.... நாம் பிறந்த நாடு... நமது நாடுதானே. 😂 🤣
  6. அப்ப... பிலிப்பைனுக்கு போங்கோ. அதுகும்... தாய்லாந்து மாதிரியான கலாச்சாரம் உள்ள இடம்தான். போன காசுக்கு, கைநிறைய பலன் கிடைக்கும். கை நடுக்கம் வந்தாலும்.... நிலநடுக்கம் வரவே... வராது. 😂
  7. சென்ற பாராளுமன்ற தேர்தலில்... உங்களுக்கு தந்த, பதிலடி மாதிரியா... சுமந்திரன். உள்ளுராட்சி தேர்தலில் உங்கள் எல்லாருக்கும்... நல்ல பதிலடி கிடைக்கும். கவலைப்படாதீங்க.
  8. அஞ்சுபேர் போட்டி முடிவிலும் வீர தீர சூரனோடு கூட்டமாகத்தான் நிற்பினம் 😜
  9. இவர் இலங்கை இராணுவத்துக்கு கொடுத்த நற்சான்ழிதளைப். பாருங்களேன் 🤣 அதாவது இலங்கை இராணுவம் இஸ்ரேல் இராணுவம் போன்றது தான்
  10. காலையில் எழுந்ததும் மைதிலி பர பர ப்பானாள். பிள்ளைகளை பள்ளிக்கு பஸ் வண்டியில் ஏற்றி விட்டு, அவசர அவசரமாக சமையலை முடித்து விட்டு அந்த தொடர் மாடிக் கட்டிடத்தின் நாலாம் மாடிக்கு செல்ல கையில் சொக்கலேருக்கள் அடங்கிய சிறு பையுடன் மின் தூக்கி முன் காத்திருந்தாள் . இரவு கணவரிடம் தனது இரண்டாவது அண்ணா இத்தாலியில் இருந்து வந்திருப்பதாகவும் (அண்ணாவின் மனைவி அண்ணி இவளது வகுப்பு த்தோழி ) அவரைப் பார்க்க செல்வதாகவும் கூறி இருந்தாள். மின் தூக்கி வரும் வரை காத்திருந்தாள் , மனமெல்லாம் பத்து வருடங்கள் பின்னாடி சென்றது. இரவிரவாக தலையணை நனைய உறக்கமற்று இருந்தவள், இன்று வாழ்க்கையின் ஒரு பெரும் திருப்பம் அந்த கட்டிட தொகுதியில் வாழும் அண்ணாவின் வகுப்பு தோழன் சென்ற வாரம் செய்தி சொல்லி இருந்தா. .நண்பன் விடுமுறைக்காக வரப்போவதாக , அவள் செய்த ஒரு பிழை இவ்வளவு பிரச்சனை வரும் என்று எண்ணவில்லை. அவள் பள்ளிக்கால காதல னை அந்தஸ்து வேறுபாட்டினால் வீட்டிற்கு தெரியாமல், பதிவு திருமணம் செய்து விட்டாள். விஷயம் ஊரில் தெரியவரவே வீட்டுப்பக்கம் வரக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டனர். அவளும் அதே ஊரில் வெளிநாட்டில் வந்த காதலனை முறைப்படி கோவிலில் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி பின்னும், அவளது பெற்றோர்களும் இப்படி செய்து விட்டால் எனும் கோபத்தில் , காலப் போக்கில் நாட்டு பிரச்சனையும் வரவே அண்ணா வேறு நாட்டுக்கு சென்றுவிட்டார். ஊர் எள்ளிநகையாடும் என எண்ணி இவளது உறவை பெற்றோர் தவிர்த்தாலும் இவள் அம்மா வீட்டுக்குபோய் வருவாள். தாயார் பேசுவார். பிறந்தநாளில் குழந்தைகளைக் கொண்டு போய்க் காட்டுவாள். ஊரில் மிகவும் பெரிய ராணுவ ஆக்கிரமிப்பால் ஊர் விட்டு ஊர் மாறிச் சென்ற போது கடைசியாக பெற்றோரைப் பார்த்து குழந்தைகளை காண்பித்து தாயருடன் கண்ணீரோடு விடை பெற்றுக் கொண்டாள். சில சமயம் அவசரப்பட்டு பதிவு திருமணம் செய்து விட்டோமோ என்று எண்ணியதுண்டு. மறுபக்கம் அவன் வெளிநாடு போக வேண்டிய நிர்பந்தம் அவளை அந்த முடிவு எடுக்க தூண்டியது . பின்னர் பெண்கள் விடுதியில் தங்கி ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். மின்தூக்கி வரவே நாலாம் மாடியை அடைந்து , அண்ணி வரவேற்றார். நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவர் கைகளைப் பற்றினாள் . . பொலபொலவென கண்கள் தாரையாக கொட்டியது. அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். எழு வயது ஐந்து வயது.சின்னவன் சொக்கலேற் பையை வாங்கி கொண்டு அத்தை மடியில் உட்கார்ந்து கொண்டான். எங்கிருந்து அவனுக்கு அந்த பாச உணர்வு வந்தது ?....சிலமணி நேரம் பேசிய பின் , அவர்களையும் வீட்டுகார அண்ணா குடும்பத்தினரையும் சனிக்கிழமை இரவு தன் வீட்டுக்கு வர அழைத்து விட்டு தன் இருப்பிடம் சென்றார் . மறுநாள் அவர்கள் வந்தது கணவனையும் தன் குழந்தைகளையும் பேச விட்டு விருந்துண்டு திங்கட்கிழமை அவர்கள் உறவுக்கார மூதாட்டியை பார்க்க நேசிங் ஹாம் க்கு செல்ல திட்டம் போட்டார்கள் . மைதிலியின் கணவனுக்கு உடனே லீவு எடுக்க முடியாது. குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல வேண்டும். அவர்கள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு இவளும் அவர்களுடன் இணைந்து. அது ஒரு முப்பது நிமிட பஸ் பயணம். பஸ் தரிப்பு அருகே உள்ள தமிழ்க்கடையில் கிறீம் கிரக்கர் பிஸ்கட்டும் நெஸ்டமோல்ட் டின் உம் அண்ணா வாங்கினார். நான் ஏதும் வாங்க என்று அவள் மணிபர்சை திறக்க " நாங்க வேறு நீ வேறா " என்றார் அண்ணா . பளீர் என முகத்தில் அறைந்தது வார்த்தைகள். பஸ் உம் வரவே முண்டியடித்து ஏறிக்கொண்டார்கள். சின்னவர் மீண்டும் அத்தை மடிக்கு வந்து உட்கார்ந்தான் சில நிமிடங்களில் இறங்கி அவ்விடத்தை அடைந்து மூதாட்டியைப் பார்த்தும் அவர் மிகவும் சந்தோஷப் பட டார். என்னிடம் திரும்ப திரும்ப உனக்கு எத்தனை பிள்ளைகள் என கேட்டுக் கொண்டிருந்தார். பேசிக்கொண்டு இருக்கும் போது அங்குள்ள ஒருவர் கா தில் கையை வைத்துக் கொண்டு " கலோ" "கலோ " என அழைத்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் "என்னை வீட்டுக்கு போக விடு" என தமிழில் ஆங்கில உதவியாளரிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.வயோதிபத்தில் வாழ்க்கை இப்படித்தான் போலும். தமிழ் தெரிந்த உதவி ஆல் சிறார்களை இங்கு கூடிக் கொண்டு வருவது நல்லதல்ல என்றார். அதற்கு அண்ணா சாகும் முன்னர் அவரை பார்த்துவிடவேண்டும். இவர்களை விட்டு விட்டு வர முடியாது ,எனவும் விடுமுறையில் வந்ததாகவும் சொல்லிக் கொண்டார். மீளவும் பஸ் பயணம். வரும் வழியெங்கும் " நான் வேறு நீ வேறா ? என ஒலித்து கொண்டே இருந்தது. மறுபடி வீட்டை அடைந்ததும் அன்று முழுவதும் என்ன இருந்தாலும் அண்ணாவின்" ரத்தபாசம் "மனம் முழுவதும் நிறைந்து கொண்டது. அண்ணவுடன் சொந்தம் கொண்டாடி ஆயிற்று. "நீரடித்து நீர் விலகுமா ? " இனி என் பெற்றோர் ஆன்மா மகிழ்வோடு நீள் துயில் கொள்ளும். Blood is thicker than Water
  11. யாழ்பாணத்திலோ கவரிமான் பரம்பரை என்று வீர வசனம் வெளிநாட்டில் தக்கன பிழைக்கும் என்று scientific theory யை தான் பவ்வியமாக தங்களுக்கு கடைபிடிப்பார்கள்
  12. Lakers வ‌ந்து Luka Doncic வாங்கி விட்டின‌ம் , நீங்க‌ள் போன‌ வ‌ருட‌ம் இவ‌ரின் விளையாட்டை பார்த்து விய‌ந்த‌தாக‌ எழுதி இருந்தீங்க‌ள்..............என‌க்கும் Lakers வெல்ல‌னும் என்று விருப்ப‌ம் , கார‌ண‌ம் Lebron Jamesக்கு இது தான் க‌ட‌சி NBA விளையாட்டு அடுத்த‌ சீச‌னில் விளையாட‌ வாய்ப்பு மிக‌ குறைவு வெற்றியுட‌ன் ஓய்வு பெற‌ட்டும் ஆனால் வெற்றிக்காக‌ க‌டின‌மாய் இவ‌ர்க‌ள் ஒருங்கினைந்து விளையாட‌னும்🙏👍💪....................................................
  13. எங்கள் தலைவர் தங்கத் தலைவர் தானைத் தலைவர் 😂 யாழ் களத்தின் முடி சூடா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் ❤️ சில காலம் துணை முதல்வர் பதவியை தானே கேட்டு வாங்கியுள்ளார். இன்றைய முதல்வர் செம்பாட்டான் மக்களின் நலன்களுக்கு மதிப்பளிக்கின்றாரா என ஒட்டுப் பார்க்கும் வேலையில் இறங்கியுள்ளார் 😅 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
  14. வாழ்த்துகள் செம்பாட்டான். இனி செம்பாட்டானை நெருங்க முடியாது. செம்பாட்டான் துல்லியமான கணிப்புக்ளைச் செய்திருக்கிறார்.துணைமுதல்வர் சுவி ஐயாவுக்கும் வாழ்த்துகள்.நம்ம அன்புத்தம்பி பையனை நினைத்தால் ரொம்ப பரிதாபக இருக்கிறது. அவரைப்பார்த்து கொப்பியடித்து இடைக்கிடை மாற்றங்களைச் செயதவர்கள் நான் உட்பட பாஸ்மார்க் எடுக்கப் பையன் பெயில் மார்க் எடுத்திருப்பது மிகவும் சோகம். இந்த நிலைமையிலும் களத்தைக் கலகலப்பாக வைத்திருக்க எங்கள் பையனால்தான் முடியும்.
  15. நான் அங்கேயெல்லாம் செல்லவில்லை செம்பாட்டானின் சாத்திரம் இப்போது உச்ச நிலையில் இருப்பதாக நினைத்தேன் 😂 எல்லாமே இதுவரை சரியான கணிப்பாக இருந்தது மீண்டும் நடந்து விட்டது
  16. என்ன தம்பி நீங்களும் சத்தமில்லாமல் விகாரைக்குள் மடம் கட்டியது போல ஏதேதோ நடக்குது.
  17. இரத்த பாசம் ...நல்ல கதை ... இன்றைய காதல் என்றால் முக்கியமாக வெளிநாடுகளில் வீட்டுக்கு காதலனை அழைத்து வந்து நான் இவரை லவ் பண்ணுகிறேன் ...என காதலர்கள் சொன்னால் l...பெற்றோர்கள் சொல்வார்கள் உனக்கு பிடிச்சிருந்தா சரி நீ தானே வாழப்போறவள் என டயலோக் பேசுவோர்கள் ..இடத்துக்கு ஏற்ற வகையில் கலாச்சாரம்,பண்பாடு, ஏற்ற தாழ்வுகள் எல்லாம் மாறுபடும்...🤣
  18. போட்டு ஒரு பக்க போட்டியாக சுவாரசியமில்லாமல் முடிந்துவிட்டது, ஆனால் கள உறவுகள் திரியினை சுவாரசியமாக வைத்திருக்கிறார்கள்.
  19. செம்மண்ணிலே தண்ணீரைப்போல் உண்டான சொந்தம் இது சிந்தாமணி ஜோதியைப்போல் ஒன்றான பந்தம் இது தங்கை அல்ல தாயானவள் கோடி பாடல் அண்ணன் பாட பொருளானாள் ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
  20. செம்பாட்டான் முதல்வர் ...கருணாநிதிபோல் அசையாமல் இருக்கிறார்...அவருக்கும் சுவி சார்.பிரதிமுதல்வர்...ரணில்போல் அதிர்ஸ்டத்தில் வந்தவர் (கோபம் வேண்டாமே ) அவருக்கும் எனது வாழ்த்துக்கள்
  21. GMT நேரப்படி நாளை சனி 29 மார்ச் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI 07 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் 16 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் வசீ அல்வாயன் பிரபா ஏராளன் நுணாவிலான் எப்போதும் தமிழன் அகஸ்தியன் மும்பை இந்தியன்ஸ் ஈழப்பிரியன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
  22. இலங்கை என்றால்... திரையில் பேசும் மொழி உச்சரிப்புகள், படப்பிடிப்பு நடத்திய இடங்கள், உடை அலங்காரங்கள், இசை... என்று ஒரு சில விடயங்களை உன்னிப்பாக கவனிக்க ஆசை.
  23. இரத்தம் நன்றாக அங்கு ஓடுவதற்கு... என்ன செய்ய வேண்டும். 😂
  24. ஒரு குழந்தைபிள்ளை சாத்திரி...உலகாழிவு ..கோரொனா அழிவு சொல்லி பிரபலமானவராம்.. எல்லோருக்கும் சேர்த்துப் போடுங்கோ ..நல்ல ருசியாய் இருக்கும்
  25. உப்பு, முட்டை... போன்றவற்றையே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து சாப்பிடும் நாட்டில்... மரக் கரண்டியை இறக்குமதி செய்வது, அவ்வளவு வெட்கக் கேடான விடயம் அல்ல. 😂 🤣
  26. குடிக்கும் நீரையே... காசுக்கு விற்கும் நிலை வந்து விட்டது என்றால்... காப்பரேட் கம்பனிகளின் செல்வாக்கை பாருங்கள். எமது தாத்தாவோ, பாட்டியோ... தண்ணீரை, விலைக்கு விற்பார்கள் என்று நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள். எதிர்காலத்தில்... சுவாசிக்கும் காற்றும் காசுக்கு வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
  27. ரபாடா நம்மாளு. நான் சொன்ன அதையேதான் அவரும் சொல்றார். நமக்கென்ன. அவங்க என்ன செய்தாலும், நமக்கு இங்க புள்ளியா இல்லையா என்பதுதான் பிரச்சினை. அந்த ஆறு சுமைதாங்கிகளின் நிலைமை என்ன என்பதுதான் எங்கள் கவலையே.
  28. உங்கள் நாடா.?? ...இப்ப ஒரு ஆறு மாதமாக நமது நாடு நமது பிரதமர் நமது ஐனதிபதி ....என்று அனைவரும் கூறுகிறார்கள் 🤣🤣🤣🤣 கேட்க இனிமையாக இருக்கிறது
  29. இப்போ கொஞ்சம் தளர்த்தி உள்ளார்களாம். அதுகும்... முன்பு பயிரிட்டவர்களுக்கு மட்டுமே அந்த அனுமதி கொடுத்துள்ளார்கள் என்று முகநூலில் ஒருவர் தெரிவித்து இருந்தார். இது நல்லது என்றே நினைக்கின்றேன். அந்த மண்ணுக்கே உரிய பாரம்பரிய பயிர்களை முற்றாக அழிய விடாமல் பாதுகாக்கப் படுவது நல்லது. குரோஷியா நண்பர் ஒருவர் தமது நாட்டில்... அரசாங்கம், சிகரெட் கொம்பனிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு... உள்ளூரில் புகையிலை பயிரிடுவதை தடை செய்து விட்டார்களாம். இப்போ... தமது நாட்டின் பாரம்பரிய புகையிலை கன்றுகள் முற்றாக அழிந்து விட்டது என்று கவலைப் பட்டார்.
  30. கேப்பாபிலவு ஊர் போல உங்கள் காணி இருக்கிறதே! ஒரு ரிசோர்ட்டாக மாத்தலாம்! எனக்குத் தெரிஞ்சவர் இருக்கின்றார் இப்படியான ஐடியாவில்.. உங்கள் காணியை லீஸுக்குத் தருவீங்களா?🤪
  31. பையா உங்களுக்கு எதிராக வாக்களித்த அண்ணனின் நிலமை எப்படி இருக்கு ........!
  32. அப்போ நல்லூர் திருவிழா நேரங்களில் நிறைய பம்பாய் மிட்டாசு விற்பவர்களை காண முடியும். அந்த இனிப்பின் சிகப்பு நிறத்திற்கும், பளபளப்பிற்கும் அதனை வாங்கி சாப்பிட ஆசை இருந்த போதும், அந்தத் தடியில் கட்டி இருந்த ஊத்தைத் துணி, அந்த ஆசையை குழி தோண்டிப் புதைத்து விட்டது. 🤮 நிறைவேறாத ஆசைகளில் இதுவும் ஒன்று. 😁
  33. அல்வாயன்… ஆழம் அறியாமல் காலை விடக் கூடாது. 😂 🤣 சுவி, ஈழப்பிரியன், நெடுக்காலை போவான், வாலி, கந்தையா அண்ணை எல்லாரும் இந்துக் கல்லூரிதான்.
  34. அதற்கும் இந்த தமிழ் இடதுசாரிகள் ஆப்பு வைத்து விடுவார்களோ ? என்ற பயம் வருகிறது
  35. அவரின் தற்போதைய பொலிசி இதுதானே...இதை வைத்தே அடித்து நொறுக்கிடுவார் நாடு எவரோடும் இருந்திட்டு போகட்டும். தமிழர் தேசம் என்றும் தமிழரசோடு இருக்கட்டும்!
  36. பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது... நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது... நல்ல நல்ல நேரம் நம்மை வந்து சேரும் முத்து முத்து தீபம் நித்தம் ஒளி வீசும் அந்த வானம் வாழ்த்தும் ``` கோடி கோடி கனவுகள் கண்டேன் கூடி வந்ததென்ன காலம் நேரம் வாழ்த்தும் போது இனிமேல் கவலையென்ன நினைத்தது நடக்கிறது என் நெஞ்சம் இனிக்கிறது ஆனந்த மழையினிலே என் கண்கள் நனைகிறது பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது... நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது. ஏணியாக ஏற்றி வைப்பேன் உலகில் நீ உயர மாலை போட காத்து நிற்பேன் மகனே நீ ஜெய்க்க கோபுரம் நீ யாக உனை தாங்கிடும் நிலமாவேன் வெளிச்சத்தில் நீ வாழ என் விழிகளில் விளக்கு வைப்பேன் பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது... நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது... ஒரு மகனின் /மகளின் வளர்ச்சி ஒரு அப்பாவின் வழிகாடடலில், கடின உழைப்பில்,பாடலில் அப்பாவின் பாசம் தெரிகிறது.( இன்று என்னைக் கவர்ந்த பாடல்)
  37. போனை நோண்டுவதால் வந்த வினை. தூங்குவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன் மேற்படி புத்தன் சொன்ன கருவிகளை (GADGETS)நிறுத்தி விட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது மருத்துவ உலகால்.
  38. போரின் போது உயிர் காக்க, கடன்பட்டு ஓடி வந்து ,அகதி கேட்டு. துன்பப்பட்டு வந்த இளையவர்களின் கடின உழைப்பு , தற்போதைய இளையவர்களுக்கு ,கஷ்டம் தெரியாதவர்களுக்கு, இருப்பதில்லை . அக்கரைக்கு இக்கரை பச்சை, இலகுவாக(நோகாமல்) உழைக்கலாம் எனும் போக்கு தான் காணப்படுகிறது .
  39. அங்கும் பெரும்பான்மையின குரங்குகள் ஆட்சிஅமைக்கும்...மாகாணசபை எலக்கசன் வைத்தால் ..முசுலிம் என்பிபி..ஒருசபையையும்...தமிழ் என்பி பி ஒருசபையையும் கைப்பற்றும்...ஊராட்ட்சி சபை தேர்தலும் நடக்கலாம் ..அதில் சுமந்திரனின் ஆட்கள் சிங்களத்துக்கு ..ஊர் நமகென்றூ.. கேட்பினமோ.. குரங்குக்கு எல்லை போட்டுக்குடுக்கிற இனம் என்பதை வரலாறும் பதிவு செய்யும்...என்ன் அவர்களுக்கு மாற்றுடுப்பு..எடுத்துக் கொடுக்கவில்லையோ...அல்லது பின்னர் ஒரு கோடி ஒதுக்குவினமோ..
  40. நன்றிகள் @suvy அண்ணை. எல்லாம் வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம் என்று ஊக்கப்படுத்தும் உங்களைப் போன்றவர்கள் தரும் உற்சாகம் தான்.
  41. அதை தான் நாங்களும் கேட்கிறோம் பட்டலந்த வதை முகாமுக்கு ஒர் நீதி, 72 வருடங்களாக இனவழிப்புக்கு உள்ளாகும் தமிழருக்கு ஓர் நீதியா?
  42. கண்ணிலே இருப்பதென்ன கன்னியிள மானே ........... ! 😍
  43. எங்கள்ஊ ரில்ஒரு மூதாட்டி இருந்தார் . கணவன் இறந்து விட அவரது பென்ஷன் காசில் வாழ்ந்து வந்தார். சங்க கடையில் நாலு மீற்றர் துணி வாங்கி மேற் சடடையும் லுங்கியும் (சாரம் போல ) தைத்த பின் ...பிள்ளை மிச்ச துணி இருந்த ஒரு கைப்பையும் (handbag )யும் அடிச்சு விடு பிள்ளை என்று எனது அயல் உள்ள அக்காவிடம் சொல்லுவார். அந்த நினைவு தான் உங்கள்பதிவை பார்க்க வந்தது .😁
  44. திருவாளர் வசி அவர்களே, தன்னடக்கம் இருக்கலாம் அதற்காக இவ்வளவு அடக்கம் தேவை இல்லை. தொழில்நுட்ப ரீதியாக மிகவும் நுட்பமாக அலசக்கூடியவர் நீங்கள். அதை விட்டு விடாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். குப்பை கொட்டுவதற்கு நாங்கள் கொஞ்சம் பேர் இங்கே இருக்கின்றோம். நாங்கள் அந்தத் திணைக்களத்தைப் பார்த்துக் கொள்கின்றோம்.
  45. மூன்று வீட்டில் இருப்பவர் இரண்டு வாரங்கள் வங்கி அலுவலாக வெளிமாவட்டம் சென்றதனால் உடனே வாடகை ஒப்பந்தம் எழுத முடியவில்லை. இரண்டு நாழின்பின் வந்துசேர அவரை வரச்சொல்லிவிட்டு மணிவண்ணனிடம் போகிறேன். ஒப்பந்தம் எல்லாம் எழுதி முடிந்து வெளியே வருகிறோம். “ஏனக்கா அந்தப் பலா மரத்தை வெட்டினீர்கள்? நல்ல பழம். காய்த்துக் கொட்டுற மரம். அதைவிட வீட்டுக்கு நல்ல குளிர்ச்சி” “உங்கள் தங்கைதான் அது பலவருடங்களாகக் காய்க்கவில்லை என்று கூறினா” “அவ என் தங்கை இல்லை. என் அம்மாவைப் பாராமரிப்பதற்கு நான் வைத்திருப்பவர், என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே. அவ வந்து இப்ப ஒரு வருடம்தான்” “நாம் முதல்முதல் வந்தபோது புரோக்கர் உங்கள் தங்கை என்று சொன்னார். அதன் பின்னும் அவ அண்ணா என்றுதான் சொன்னா. நான் நம்பிவிட்டேன்” சரியக்கா என்று அவர் கிளம்ப, அந்தப் பெண்ணுக்கு இரண்டு திட்டுத் திட்டவேணும் என்ற கோபம் எழுகிறது. தீர விசாரிக்காத என் அவசர புத்தியை எண்ணி என்னை நானே நொந்துகொள்கிறேன். அடுத்த நாளே வீட்டுக்குப் போகும்போது ஒரு மீற்றர் உயரமான பலாக்கன்று ஒன்றை வாங்கிச் சென்று வெட்டிய இடத்துக்குப் பக்கத்தில் நட்டு சுற்றிவர தடிகளை ஊன்றி ஆடு கடிக்காதவாறு பாதுகாப்புக் கொடுத்தபின் மனம் சிறிது ஆறுகிறது. அடுத்து வந்த நாட்களில் மிகுதி இடங்களில் இருந்த புற்களை ஆட்களைக் கொண்டு பிடுங்கிவித்து தென்னை மரங்களுக்குத் தாட்டு பாத்திகளையும் கட்டுவிக்கிறேன். ஓர் ஆணுக்கு ஒருநாள் கூலி 3000. பெண்ணுக்கு 2500. இது தோட்ட வேலையோ கடின வேலையோ செய்பவர்களுக்கு. சாதாரணமாகப் புல் புடுங்குபவர்களுக்கு 1400. அத்துடன் காலை 9 மணிக்குப் பின்னர்தான் வேலைக்கு வருவார்கள். அவர்களுக்கு 10.30 - 11.00 க்குள் ஏதும் வடை அல்லது மிக்சரோ முறுக்கோ ஏதோவொன்று கொடுத்து தேனீரும் கொடுக்கவேண்டும். மதியம் உணவையும் கேட்டார்கள். என்னால் சமைக்க முடியாது என்று 500 ரூபாய்கள் மேலதிகமாகக் கொடுத்து அவர்களே கொண்டுவரும்படி கூறிவிடுவேன். இப்படியே மூன்று மாதங்கள் முடிய அவர்கள் தாம் ஒரு வாரத்தில் எழுந்துவிடுவதாகக் கூற எனக்கோ அளவில்லா மகிழ்ச்சி. அதன்பின் இரண்டு மூன்று நாட்கள் தாம் நிற்கமாட்டோம் என்று கூறியதால் நான் வீட்டுப்பக்கம் செல்லவில்லை. நான்காம் நாள் போன் செய்தால் யாருமே போனை எடுக்கவில்லை. அடுத்தநாள் ஓட்டோ பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தால் வீட்டின் வெளிவாசலில் பூட்டுத் தொங்க, அதில் நின்றபடி அந்தப் பெடியனுக்குத் தொடர்ந்து போன் செய்தபடி இருக்க, என் வற்சப்புக்கு மெசேச் ஒன்று வந்து விழுகிறது. “வீட்டில் இருந்த பெண்ணின் தந்தை கிளிநொச்சியில் நோய் வாய்ப்பட்டு இருக்கிறார். அவர் அங்கே போய்விட்டார். மூன்று நாட்களின் பின்னர் திறப்புத் தருகிறேன்” முதலே எனக்கு அந்த செய்தியைச் சொல்லியிருந்தால் நான் தேவையில்லாமல் வந்திருக்கத் தேவை இல்லை என்று செய்தி அனுப்புகிறேன். அதன்பின் மூன்றாம் நாள் காலை மீண்டும் ஓட்டோக்காரருடன் வந்தால் அப்போதும் பூட்டுத்தான் தொங்குது. திரும்ப போன் செய்ய, திறப்பை இன்ன இடத்தில் வைத்திருக்கு, எடுங்கோ என்று செய்தி வற்சப்பில் வருகிறது. ஓட்டோக்காரர் தேடித் திறப்பை எடுத்து வருகிறார். திறந்துகொண்டு உள்ளே செல்ல, அக்கா மோட்டார் இருக்காது போய் பாருங்கோ என்கிறார். போய்ப் பார்த்தால் மோட்டார் கிடங்கினுள் இல்லை. “எப்பிடி உங்களுக்கு மோட்டர் இருக்காது எனத் தெரிந்தது தம்பி? “அவர்கள் இரண்டு நாட்களும் போன் எடுக்காது உங்களை அலைக்களித்தவுடன் எனக்கு விளங்கிவிட்டுது. பைப்பைத் திறந்து பார்த்தால் தண்ணீர் வருக்கிறதுதான். ஆனாலும் அது எப்ப முடியும் என்று தெரியாதுதானே. எம் மூரில் ஒரு தெரிந்த எலெக்ரீசியன் இருக்கிறார். அவருக்குத் தொலைபேசியில் விபரம் சொல்ல, இன்று வரமுடியாது அக்கா. நாளை வருகிறேன் என்கிறார். வீட்டை நன்றாகக் கழுவிவிட்டுத்தான் உள்ளே பயன்படுத்த வேண்டும். ஆனால் தண்ணீர் இல்லாது இன்று வீட்டில் நின்று பயனில்லை. ஆகவே ஓட்டோவில் உடனேயே திரும்ப வீடு செல்கிறேன். எப்ப வந்தாலும் இங்கு சாப்பிடலாம் என்று மச்சாள் கூறினாலும் சிலவேளைகளில் மட்டுமே நான் அங்கு உண்பது. உண்மையில் கொஞ்சம் சமையலில் இருந்து விடுதலை வரும் என்று நம்பித்தான் லண்டனில் இருந்து வரும்போது நினைத்தது. ஆனால் அன்ரியின் வயது காரணமாக அவர் சமைத்து நான் உண்பது ஏற்புடையதாக இல்லை. காலையில் எழுந்து குளித்துவிட்டு காலை உணவு சமைத்து மதியத்துக்கும் ஏதாவது இரண்டு கறிகளை வைத்துவிட்டு எனக்கு மதிய உணவையும் கட்டிக்கொண்டு சென்று உண்பது தொடர்ந்தது. பஞ்சி வரும் நேரங்களில் மட்டும் காலை உணவை மட்டும் செய்துவிட்டு எனக்கு மதிய உணவு வேண்டாம் என்று கூறிவிட்டு கடைகளில் வாங்கி உண்பதும் சிலவேளைகளில் நடந்ததுதான். அடுத்தநாள் வழமைபோல் எல்லாம் செய்துவிட்டு புதிய பூட்டுகள் மூன்றும் வாங்கிக்கொண்டு செல்கிறேன். எலெக்ரீசியன் தானே மோட்டரை வாங்கி வருவதாகக் கூறி வாங்கி வருகிறார். அவர் மோட்டரை மாற்றும்போது பார்த்தால் கிணற்றினுள் ஒரே பாசியும் தென்னோலைகளுமாக இருக்க, பக்கத்து வீட்டுக்குச் சென்று கிணறு கலக்கி இறைக்க யாரும் இருக்கிறார்களா என்று கேட்க ஒருவரின் தொலைபேசி இலக்கம் தருகிறார். அந்த வீட்டுக்காரியின் பெயர் ரதி. கணவனும் மனைவியும் மட்டுமே அங்கு இருக்கின்றனர். ஆண் பிள்ளைகள் மூவர். திருமானமாகிவிட்டது. இருவர் வெளிநாட்டில். கதைத்துக்கொண்டு போக யேர்மனியில் வசிக்கும் அவரின் உறவினர்கள் எமக்குத் தெரியவருகின்றனர். எனக்கு நல்ல ஒரு துணை அயலில் என்ற மகிழ்ச்சி. அதன்பின் அப்பப்ப அவருடன் சென்று கதைப்பதும் விபரங்களை அறிவதுமாகி நெருக்கமாகிவிடுகிறார் ரதி அக்கா. புதிய மோட்டார் போட்டபின் அடுத்த நாளே கிணற்றைக் கலக்கி இறைக்க இருவர் வருகின்றனர். முன்னர் பலா மரம் வெட்ட வந்தவர்களை தென்னைக்குப் பாத்தி கட்டவும் அழைத்திருந்தேன். அவர்களும் வந்தபடியால் புதியவர்களுடன் நிற்க பயம் ஏற்படவில்லை. முதலில் இரண்டு மணிநேரம் எமது மோட்டறினால் இறைத்துவிட்டு பின்னர் அவர்கள் கொண்டுவந்த மோட்டரைப் போட்டு கலக்கி இறக்கின்றனர். மூன்று பெரிய ஊற்றுகள் இருந்ததனால் மூண்டு வாழைக் குற்றிகளை வெட்டி ஊற்றை அடைத்தபின் பாசிகளை எல்லாம் அள்ளுகின்றனர். அக்கா கிணற்றுக்குள் இரண்டு பாம்பு இருக்கு என்றவுடன் நான் பாய்ந்து ஓடுகிறேன். “ஐய்யோ அக்கா பாம்பு செத்துப்போய் கிடக்கு” “தண்ணீர் குடிக்கத்தான் பாம்பு கிணற்றுள் வந்ததோ தம்பி” இல்லை அக்கா கிணற்றுள் ஒரு ஓட்டை இருக்கு. முட்டையும் இருக்கு. ஏதும் பறவைகள் வந்து இருந்திருக்கும். முட்டையைக் குடிக்கத்தான் பாம்பு வந்து தவறி விழுந்திருக்கும் என்கிறார். ஆக், உந்த செத்தபாம்பு கிடந்த தண்ணியில் தான் தேநீர் ஊற்றிக் குடிச்சதோ என்கிறேன். நல்லகாலம் நான் ஒரு போத்தலுக்குள் இணுவிலில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து குடித்ததில் மனம் நிம்மதியாகிறது. கிணறு கலக்கி இறைக்க மூன்று மணித்தியாலம். 3000 ரூபாய்கள் தான். அடுத்தடுத்த கிழமைகளில் ஸ்கூட்டியும் வாங்கி ஓடிப் பழகி விழுந்தெழும்பிய கதை முதலே எழுதியாச்சு.
  46. எங்கள் பின்னணி பற்றியே எங்களிடம் போதிய தகவல்/விளக்கம் இல்லை. உணர்ச்சியை முறுக்கேற்றி வைத்துள்ளோம். என்னிடம் பதில் இல்லை ஓவியர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.