Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    3054
    Posts
  2. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    5417
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38756
    Posts
  4. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1223
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/03/25 in all areas

  1. ஐபிஎல் 2025 இன் 15வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை 16 ஓட்டங்களிலேயே இழந்திருந்தாலும் பின்னர் வந்த வீரர்களாக அய்ங்கியா ரஹானே, அரைச் சதங்களை எடுத்த அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டங்களால் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர்கள் எல்லோரும் மிகவும் குறைந்த ஓட்டங்களிலேயே விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பவிலியனுக்குத் திரும்பியதால் 16.4 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 120 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 80 ஓட்டங்களால் வெற்றியீட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. நெருப்புடா.. நெருங்குடா.. பார்ப்போம்… நெருங்கினா… பொசுக்கிற கூட்டம்… முடியுமா 💪💪💪🤣
  3. நாளைக்கு 17 கட்சிகள் சேர்ந்த மெகா கூட்டணியோடு களத்தில் இறங்குகின்றோம்............. லக்னோவை உண்டு இல்லை என்று செய்கின்றோம்.............. இந்த மும்பை இன்டியன்ஸூம், சென்னை சூப்பர் கிங்ஸ்ஸும் கிரிக்கெட் விளையாடுவதை விட படம் காட்டுவதில் தான் முன்னுக்கு நிற்கின்றார்கள்........... அது தான் ஒரு சின்ன யோசனை............🙂. யார் கண் பட்டதோ, இன்றைக்கு கதையை ஹைட்ராபாத் முடிச்சிட்டார்களே.............🤣. நாக்கில் கறுப்பு இருக்கும் சில உறவுகள் இங்கு களத்தில் இருக்கின்றார்கள்............😜.
  4. இந்த வருடம் ஒவ்வொரு அணியும் முதலில் தக்கவைக்கிற வீரருக்கு 18 கோடியும், 2 வது வீரருக்கு 14 கோடியும், 3 வது வீரருக்கு 11 கோடியும், 4 வது வீரருக்கு 18 கோடியும் 5 வது வீரருக்கு 14 கோடியும் வழங்க வேண்டும் என விதி இருந்தது. சென்னை அணி 4 capped players தக்கவைத்தார்கள். 4 பேரை தக்கவைப்பதினால் 18+ 14 +11+ 18 = 61 கோடிகளை சென்னை செலவு செய்தது. 18 , 18 கோடிகளுக்கு ஜடேஜா, கைக்வார்ட் ஆகியோரையும், மிகுதி 25 கோடிக்கு ( 14+11) பதிரானா, துபேயினை தக்கவைத்தார்கள். மற்றைய அணிகளில் பல இவ்வாறே வீரர்களை தெரிவு செய்தார்கள். ஆனால் கொல்கத்தா அணி தெரிவு செய்த 4 capped வீரர்களுக்கு 49 கோடி மட்டுமே செலவு செய்ய முன் வந்தது. மிகுதி 12 கோடி ( 61- 49) அவர்கள் செலவு செய்யவில்லை. உபயோகிக்காத 12 கோடியும் ஏலத்திலும் செலவு செய்ய முடியாது . 49 கோடியில் 4 வீரர்களை (13,12,12,12) ரிங்கு சிங், ரசல், சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தியினை வாங்குவதற்கு செலவு செய்தார்கள். இந்த 4 வீரர்களும்தான் இந்த விலையை ஏற்றுக்கொண்டார்கள். சென்னை, மும்பாய், ராஜஸ்தான், SRH போல வீரர்களை தக்கவைக்க செலவு செய்திருந்தால் ஷிரேயாஸ் அய்யர், மிச்சல் சார்க், குல்தீப் ஜாதவ் போன்றவர்களை தக்க வைத்திருக்கலாம். 2022 இல் நடந்த மெகா ஏலத்திலும் இவ்வாறே தக்க வைத்த வீரர்களுக்கு குறைந்த பணத்தினையே KKR செலவு செய்தது. குறைந்த பணத்துக்கு ஏற்று கொண்டவர்கள் தக்கவைக்கபட்டார்கள்.
  5. K என்ற வார்த்தை நாம் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றிப் பல விஷயங்கள் நடந்தாலும் அதனைக் கவனிக்காமல் கடந்து செல்கிறோம். உதாரணத்திற்குப் புதிதாக கார் ஓட்ட கற்று கொள்வார்கள் வண்டியின் பின்னாடி 'L' என்று சிவப்பு நிறத்தில் போர்டு ஒட்டப்பட்டு இருக்கும். அதற்கு என்ன அர்த்தம் என்று நம்மில் பலருக்குத் தெரியாது. ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க! | அதனை அறிந்து கொள்ளவும் விரும்புவதும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மையும் கூட. அதுபோன்று 1000 என்ற எண்ணிற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த தொகுப்பில் பார்க்கலாம். பொதுவாகவே சமூக வலைத்தளங்களிலும் சரி பணத்திலும் சரி, மில்லியன் என்ற எண்ணிற்கு 'M' என்ற எழுத்தும், பில்லியன்-க்கு 'B என்ற குறியீடும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ‘1000’ என்ற எண்ணிற்கு மட்டும், ஏன் 'K' பயன்படுத்தப்படுகிறது. சரியாகச் சொல்லப்போனால் ஆயிரம் (Thousand) என்பதன் சுருக்கத்தை T என்று தானே குறிப்பிட வேண்டும். ஆனால் ஏன் ‘K’ என்று குறிப்பிடுகின்றோம்.இதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கிரேக்கம் மொழியில் 'chilioi' என்றால் ஆயிரம் (1000) என்று பொருள். கிரேக்க வார்த்தையான Chilioi என்பது பிரெஞ்சுக்காரர்களால் கிலோ(Kilo) என்று சுருக்கப்பட்டது. அதன் பின் கிலோ மீட்டர், கிலோ கிராம் போன்றவை கணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கணிதத்தில் "K" என்ற எழுத்து ஆயிரத்தைக் குறிக்கிறது. எனவே, "1K" என்பது 1,000 க்கு சமம் ஆகும். இதன் காரணமாகத் தான் 'Kilo' என்பதற்காகத் தான் ‘K' என்ற குறியீடு கொடுக்கப்படுகிறது. எனவே ஆயிரம் என்பதற்கு 'T' என்ற எழுத்து பயன்படுத்துவதில்லை படித்ததில் பிடித்தது
  6. தனிய அதுமட்டும் குற்றமில்லையாம் ..வாழ் வெடூகுழுவுடன் தொடர்பு..மோசடி.பிரபலமான வக்கீல்கள் வைத்தும் முடியவில்லை என்று வேறு வேறு செய்திகள் சொல்கின்றன ..அரசியல் காரணம் இருக்காது
  7. பஞ்சபாண்டவர்கள் போல நாங்கள் ஐந்தே ஐந்து பேர்கள் தான்............ அந்தப் பக்கம் பெரிய சேனையே நிற்குது போல............... தர்மம் வெல்லும்............😜.
  8. 🤣 இன்னும் நிறைய போட்டிகள் இருக்குது தானே........... எல்லோரும் மேலே போய், கீழேயும் வருவோம்......... சாம்பியன் ட்ராபி போட்டிகளில் பாகிஸ்தானை நம்பி இறங்கி, முதலாவதாக நட்டாற்றில் மூழ்கியதற்கு இது பரவாயில்லை....................🤣. முதலமைச்சர் தான் வேண்டும் என்றில்லை, அண்ணா............ உள்துறை, நிதித்துறை என்று கிடைத்தாலும் சந்தோசமே..............🤣.
  9. என்ன நீங்களும் கட்சி மாறீட்டீங்கள். எல்லாத் தடைகளையும் உடைத்து வெல்லுவம். @alvayan கவனம். இப்ப உங்களை ஏத்தி விடுவினம். பிறகு எப்பிடி கவுக்கிறது என்று பார்ப்பினம். ஒருத்தரையும் விடுகிற மாதிரித் தெரியேல.
  10. அதுதான் எனக்கும் ஆசை.லக்னோ வெல்லும் @alvayan முதலமைச்சரென்ன பிரதமரே ஆகலாம் ஆக்குவோம். அதுசரி பாதயாத்திரை போகலையோ? செருப்பு என்ன மாதிரி? அல்வாயன் உங்க காலைகாலையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
  11. முதல்வர் செம்பாட்டானுக்கும் துணை முதல்வர் alvayan அவர்களுக்கும் வாழ்த்துக்கள் அமெரிக்கன் ஐயா உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகின்றது😇 சபையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தால் 🤣 எனது ஆதரவு துணை முதல்வருக்கே 😅
  12. முதல்வர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.
  13. இவர் ஏதோ புதுசா கணடு பிடிச்ச மாதிரி அரசியல் பேசுகிறார் ...எல்லாரும் சிறிலங்கன் என அரசியல் பேசி ஒர் இனத்தின் இருப்பை கேள்விகுறியாக்கும் உங்களை விட அவர்கள் திறம் சிங்கள அர்சுகள் தமிழர்களை கடற்றொழில் அமைச்சாராக அமர்த்தி தமிழர்களை தமிழக/ஈழத்தமிழர்களை பிரிவினை செய்வது போல... கச்சதீவு இந்தியாவின் தூர நோக்கு அரசியல் சார்ந்து விடயம் ...அதை வைத்து சிங்களமும் இந்தியாவும் அரசியல் செய்யினம் ...அதில நீங்கள் சிங்களத்தின் தேவையை நன்றாகவே செய்கின்றீர்கள் ...
  14. நம்ம அமைச்சர் ..யூடுயூபர் கிருஸ்ணாவின் டைப்பு மாதிரித்தான்....நல்லது செய்யிறமாதிரி செய்து....மிரட்டல் விட்டு அடாவடி செய்து நம்ம சனத்துக்கு அரசியல் செய்கின்றார்...இது நம்ம சனத்துக்கு விளங்கினால்தானே....கிராமசபைத் தேர்தலை பார்லிமெந்து...தேர்தல்போல் பார்க்கும் சனம் இருக்கும்போது...இன்ம் என்னவென்று உருப்படும்
  15. இல்லை குரு KKR அணி தான் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ குறைந்த‌ ர‌ன்ஸ் எடுத்து இருக்கின‌ம் 116..................................
  16. டக்கியும் இப்படித்தான் ஓடாத பஸ்களை கொண்டு போய் கடலில் பேருக்கு கொட்டி விட்டு இந்திய ரோலர் முதலாளி களின் பண பெட்டியை வாங்கி கொண்டு அமைதியாகினார் . அனுரா அரசு சொல்லிக்கொண்டு இருக்குதே தவிர செயலில் பின்னுக்கு இருக்கினம் அப்படி கொண்டு போய் கடலில் போடுவதுக்கு முன் இஞ்சின் பகுதிகளில் உள்ள கழிவு ஒயில் களை எடுத்து விட்டு போடட்டும் .
  17. அதென்னன்னாக்க, திராவிடம் இலக்கை அடையவில்லையாம்! அதனால் "திராவிடத்தை வெறுக்கிறோம், அதை சங்கிகளோடு கூட்டுச் சேர்ந்து அழிப்போம்" என்கிறார்கள். தாயகத்தில் 30 வருடம் கோலோச்சிய ஆயுதம் தரித்த தமிழ் தேசியம் சாதியையும் ஒழிக்கவில்லை, பெண் வெறுப்பையும் ஒழிக்கவில்லை, சிறு பான்மை மதங்கள் மீதான வெறுப்பையும் ஒழிக்கவில்லை. அப்படியானால் ஈழ தமிழ் தேசியத்தை ஏன் இன்னும் தலையில் தூக்கித் திரியுறம்? அதுவும் பெய்லியர் தானே😎?
  18. மனிதப் பாலில் இருக்கும் புரதத்தின் வகை மட்டுமே ஏனைய பாலூட்டிகளினுடையதை விட வேறு, ஆனால், இருக்கும் மொத்தப் புரதத்தின் செறிவு பசுப்பாலில் மனிதப் பாலை விட அதிகம்! இந்த அடிப்படை "பொடியை" மட்டும் பில்ட் செய்யும் பொடி பில்டர்களுக்குத் தெரியாது, ஆனால் மருத்துவருக்குமா தெரியவில்லை? இதே போல இன்னொரு அநியாயமும் நடக்கிறது. பசு கன்று போட்டு முதல் இரு நாட்களில் வரும் பால், கொழுப்பு மிக அதிகமாக இருப்பதால் சுவையாக இருக்கும். ஊரில் கடும்புப் பால் (colostrum) என்பார்கள். காய்ச்சினால் கட்டியாக வரும். உண்மையில், இந்த முதல் 48 மணி நேரப் பாலை கன்று குடிக்க அனுமதிக்க வேண்டும். இந்த 48 மணி நேரத்தினுள் தான் பசுவில் இருந்து கன்றுக்கு நோயெதிர்ப்பு சக்தி கடும்புப் பாலினூடாகக் கடத்தப் படும். இதைக் குடித்தால் கன்று தொற்றுக்கள் இல்லாமல் வளரும். ஆனால், ஊரில் கன்றுக்குக் கொஞ்சமாகக் கொடுத்து விட்டு கடும்புப் பாலை மனிதர்கள் கறந்து காய்ச்சிக் குடிப்பார்கள். கன்று நோய் வாய்ப்பாட்டு அல்லல் படும்!
  19. ரசல் நம்மைப்போல் விளையாட்டை ரசித்து விட்டார் அட அப்படியா பிழைவிட்டிட்ட்டன்..அவ்வளவு சந்தோசத்தில் இருக்கிறனாக்கும்
  20. 🤣.............. இது இராமாயாணக் கதை........... இன்று போய் நாளை வருவோம்...........🤣.
  21. தயவு செய்து பாதணியை விட்டு விட்டு போகச் சோல்லவும் ...பின்னர் அதனை தேடுவது சிரமம் ரசோ
  22. அம்பி என்று நினைத்தன்.............. ஐயர் அந்நியனாக நிற்கின்றார்...........🤣.
  23. நீங்கள் ஜயருட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே. அவசரப் பட்டுட்டிங்களே.
  24. வலி. இது கூட தெரியாத ?? பெடி ஆண்சாதி பெட்டை பெண்சாதி 🤣🤣 ஒருபோதும் மறக்க கூடாது
  25. நீங்கள் பஞ்ச பாண்டவர்களாய் இருந்திட்டுப் போங்கள் ....... அதுக்காக எங்களை கௌரவர்கள் என்கிறதுக்கு நன்றி ........ கண்ணனின் தோளில் சவாரி செய்யும் சவலைப் பிள்ளைகளான பாண்டவர்களை விட சுயமாக நின்று போர் புரிந்த கௌரவர்கள் சிறந்தவர்கள் ............!
  26. மனம் ஆடுது பாடுது பூவைத் தேடி ..........! 😍
  27. உண்மைதான். 27 கோடி என்றால் சும்மாவா. அவரின் விளையாட்டு அப்பிடித்தான். இன்னும் பொறுப்பு வரவில்லை. எல்லாப் பந்தையும் சுத்துறார். எப்பத்தான் அணியின் நிலை அறிஞ்சு விளையாடப் போறாரோ. அதுக்காக இப்பிடி பொது இடத்தில கதைக்கிறது நல்லாயில்லை.
  28. இது அனுரவுக்கு சாமரம் வீசும் குழு... அப்ப இனி வாரத்தில் 5 நாளும் ஐ. பி. எல் பார்க்கலாம் என்கிறியள்
  29. கிருஷ்ணா மறியலில் இருக்க வேண்டிய ஆள். அவனுக்கு 10 வருசம், கடூழிய சிறை கொடுக்கப் பட வேண்டும். ஊரான் பணத்தில்… உல்லாசம் அனுபவித்தவனை, மறியலில் வைத்து நொங்கு எடுக்க வேண்டும். 😂
  30. நன்றீங்க. இப்ப நீங்களும் கதவைத் தட்டத் தொடங்கிட்டீங்க. தொடக்கத்தில ஒருத்தர் முன்னுக்கு நிண்டார். அவரப் போட்டுத்தான் மேலே வந்தேன். பிறகும் இரண்டு நாள் பின்னாலேயே நன்று தட்டிக் கொண்டு இருந்தார். இப்ப எங்க இருக்கிறார் என்று தேடி கழுத்து வலிதான் வருகுது. அவ்வளவு கீழே. 🤣 வாங்க சேர்ந்தே போவம். கவனம். உங்களுக்குப் பின்னாலும் மூவர் நிக்கினம். 😁 உண்மைதான். ஜபில் கழிச்சு விட்ட ஆக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் குடுக்குது. அவ்வளவுதான். PSLலால நினைத்துக்கூட பார்க்க முடியாது. பணம் எடுக்கினமா, இழக்கினமா. சரியாச் சொன்னீங்க. நான் இப்போ அடுத்தடுத்து இரண்டு தோத்துவிட்டேன். என் "அதிஷ்டம்" எங்கே போச்சுதோ.
  31. வெளிநாடு வந்த போது அவன் முதன் முதலாக வெளிநாடு வந்த போது (துபாய்) அங்கிருந்த ஊரவர் கேடடார் . துபாய் எப்படி இருக்கு? என்று ....இவன் சொன்னான் "பெரிய பெரிய கட்டிடங்களுக்கு முன்னும் , வேறு ஒருவரின் காருக்கு முன்னும் நின்று படங்கள் எடுத்து போட்டிராவிடால் என்னைபோன்றவர்கள் இங்கு வந்திருக்க மாடடார்கள். நீங்கள் தங்கியிருக்கும் இடத்தையும் அடிப்படை வசதிகளையும் படம் பிடித்து இருந்தால் பலரின் சிந்தனையை அது மாற்றி இருக்கும். ஒரு சமுதாயத்தையே " படங்காட்டி " வெளிநாட்டு வாழ்க்கை என குட்டிச்சுவராய் ஆக்கி இருக்கிறீர்கள்.
  32. இவரைப் போன்ற மோசடிவாதிகளும்,நம்பிக்கை துரோகம் செய்தவர்களும்,ஏழைகளின் மடியில் கை வைத்தவர்களும் உள்ளே இருப்பதுதான் சமூகத்திற்கு செய்யும் நல்ல செயல். அது யாராக இருந்தாலும் குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். இப்படியான தண்டனைகளை பார்த்துத்தான் ஏனையவர்கள் திருந்த வாய்ப்புகள் உண்டு. அல்லது தவறுகள் செய்யாமல் இருக்க ஒரு முன்னுதாரணம். யதார்த்தமும் கூட.
  33. ஐபிஎல் 2025 இன் 14வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக விக்கெடுக்களை இழந்து வெளியேறியதால், பின்னர் ஆடவந்த லியம் லிவிங்ஸ்டனின் அரைச் சதத்துடனும், ஜிதேஷ் ஷர்மா, ரிம் டேவிட் போன்றோரின் அதிரடி ஆட்டத்துடன் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன், ஷேர்ஃபான் ரதஃபோர்ட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்துடனும், ஜொஸ் பட்லரின் மின்னல் அடியுடன் ஆட்டமிழக்காமல் எடுத்த 73 ஓட்டங்களுடனும் 17.5 ஓவர்களில் இரு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  34. இல்லை! இத்தகைய "பகிடிவதைகள்" என்ற பெயரில் நிகழும் வக்கிரங்களுக்கு போதை அவசியமில்லை. புதிய மாணவர்களை பகிடியாகக் கலாய்த்து வரவேற்று அவர்களை சமூகத்தினுள் உள்வாங்க என்று மேற்கு நாடுகளில் உருவான முறைகளை, எங்களுடைய ஆசியத் தரத்திற்கு மாற்றி உள்வாங்கியிருக்கிறார்கள். இந்த இடத்தில் பேச்சு வாங்கினாலும் பரவாயில்லையென்று ஒன்று சொல்ல வேண்டும்: நான் அவதானித்த வரையில், சிங்களப் பகுதிகளில் சிங்கள மாணவர்கள் செய்யும் பகிடிவதையை விட தமிழ் மாணவர்கள் செய்யும் பகிடி வதைகள் மிகக் கேவலமானவையாக இருக்கும். இப்படியான ஒரு வன்முறை கலந்த பகிடிவதையின் போது தான் வரப்பிரகாஷ் என்ற பேராதனை மாணவன் சிறு நீரகம் செயலிழந்து இறந்தான். அந்தப் பகிடி வதை செய்த பிரதான நபர், வரப்பிரகாஷின் நிலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மோசமாகிறது என்று தெரிந்த காலையிலேயே சிங்கப்பூர் சென்று அங்கிருந்து பின்னர் கனடா குடிபெயர்ந்து இப்போது அங்கே பெரிய முதலாளியாக இருக்கிறார். பக்கத்தில் வேடிக்கை பார்த்து நின்ற சிலர் (இவர்கள் தடுத்திருக்க வேண்டும், எனவே கூட்டுப் பொறுப்பாளிகள் தான்!), வரப்பிரகாஷ் கொலைக்காக சிறை சென்று வந்தனர். இந்த வன்முறையாளர்களை பல்கலையை விட்டு நீக்கி விடுவது தான் ஏனையோர் இத்தகைய வன்முறைகளை நினைத்தும் பார்க்க இயலாமல் செய்யும் ஒரே வழி!
  35. எவ்வளவோ சவால்களுக்கு மத்தியில் படித்து, பல்கலைக்கழக அனுமதி பெற்று படிக்க வரும் சக மாணவர்களை பகிடிவதை எனும் பெயரில் சித்திரவதை செய்யும் இந்த காட்டுமிராண்டிகள் தான் நாளைக்கு மருத்துவர்களாகவோ, வழக்கறிஞர்களாகவோ, ஆசிரியர்களாகவோ சமூகத்தில் வலம்வரப் போகின்றனர். அல்லது, அரச வேலை தா என்று அரசிடம் பிச்சை எடுக்க போகின்றனர். எத்தனை அரசுகள், கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் திருந்தாத காட்டுமிராண்டிக் கூட்டங்களைத் தான் இலங்கை கல்வி அமைப்பு உற்பத்தி செய்து அனுப்புகின்றது.
  36. ImgBBbeachroad-bali hosted at ImgBBImage beachroad-bali hosted in ImgBB கடற்கரை சாலை - பாலி
  37. விஜய் தணிகாசலத்திற்கு… வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.
  38. தனியார் பள்ளிகளில் (மாநில) அரசு உதவி பெறும் பள்ளிகள் உண்டு. சுயநிதிப் பள்ளிகளும் உண்டு (அதாவது, உயரிய கல்விக் கட்டணம் வசூலித்து நடைபெறுவன. எனவே சுயநிதி என்பது மாணவர் தம் சுயநிதி எனக் கொள்க; பள்ளியை நடத்துவோரின் நிதி அல்ல). அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழிகள் மட்டுமே. இந்த இரண்டு மொழிப் பாடங்கள் தவிர ஏனைய பாடங்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ நடைபெறும். சுயநிதிப் பள்ளிகளை நடத்தும் தனியார் பெரும்பாலும் CBSE (ஒன்றிய அரசின் Central Board for Secondary Education) பாடத்திட்டத்திலேயே நடத்துகின்றனர். அங்கே மும்மொழி என்ற பெயரில் தமிழ், ஆங்கிலம், இந்தி சொல்லித் தரப் படுகின்றன. சில இடங்களில் சமஸ்கிருதமும் (!!!), ஃபிரெஞ்சும் இருக்கலாம். ஏனைய பாடங்கள் ஆங்கிலத்தில் நடைபெறும். வேடிக்கை என்னவென்றால், எங்கெல்லாம் மூன்றுக்கு மேற்பட்ட மொழிகள் உள்ளனவோ, அங்கே பெரும்பாலான பெற்றோர் தமிழை விடுத்து மூன்று மொழிகள் தேர்ந்தெடுப்பர். கேட்டால், "தமிழ்தான் வீட்டில் பேசுகிறார்களே !" என்ற அறிவார்ந்த பதில் வரும். எந்த மக்கள் திரளிலும் பெரும்பாலானோர்க்குத் தாய்மொழி கூட ஒரு தகவல் பரிமாற்ற ஊடகமே ! சமீப காலத்தில் அரசுப் பணிக்கு - குறிப்பாக அரசு மருத்துவர் பணிக்கு - தமிழ்த் தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்பதால், போனால் போகிறது என்று தனியார் பள்ளிகளிலும் தமிழ் மொழி கற்போர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாகக் கேள்வி. இந்த லட்சணத்தில் ஒன்றிய அரசுப் பள்ளிகளும் சிலவுண்டு. அவற்றில் தமிழ் ஆசிரியர்களே இல்லை என்பது கூடுதல் தகவல். இதற்கு அந்த அரசை மட்டும் குறை சொல்வானேன் ? பெரும்பாலான பெற்றோர் தமிழை விரும்பத் தயாரில்லையே ! சுருக்கமாகச் சொல்வதானால், மாநில அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் மட்டுமே தமிழ்நாட்டில் தமிழ் உயிர்ப்புடன் இருக்கும் (மற்றபடி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் தமிழ் வாழும். எதையோ இழந்தவன்தான் அந்தப் பொருளுக்காக ஏங்குவானோ !) மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தொழில் சார்ந்து அடுத்து வரும் படிப்புகளுக்கான தயாரிப்பிலேயே கவனம் செலுத்துவதால், பெரும்பாலானோர் எந்த மொழியையும் உருப்படியாகப் படிப்பதில்லை. எனவே அந்த வேற்று மொழிகளின் தாக்கத்தினால் தமிழ் தேய்ந்து விடப் போவதில்லை என்ற அற்ப மகிழ்ச்சியுண்டு. தாய்மொழி குறித்த சாமானியரின் மனநிலையை வைத்து முன்னர் ஒரு கட்டுரை எழுதியதுண்டு. இங்கு அது ஓரளவு பொருந்தி வரலாம் :
  39. ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே! நண்பர் @பாலபத்ர ஓணாண்டி எனக்கு மிகவும் பிடித்த கருத்தாளர். அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். என்னை யாழில் வா தல, போ தல என உரிமையோடு ஒருமையில் எழுதும் ஒரே ஒருவர், நான் அப்படி ஒருமையில் விளிக்கும் ஒரே ஒருவர். அண்மையில் ஒரு கருத்தை சொல்லி விட்டு அதை நிறுவ முடியாமல் போய் விட, தன் credibility உடைந்து விட்டதென கூறி யாழில் கருத்து எழுதுவதை விட்டு விட்டார் (படங்கள் இணைக்கிறார்). இதெல்லாம் சப்பை மேட்டர், எல்லோருக்கும் நடந்ததுதான் என அவருக்கு நன்கு தெரியும். அத்தோடு என்னை போலவே குப்புற படுத்து கிடந்து இந்த பெரும் பிரபஞ்சத்தில் நாம் ஒரு தூசு கூட இல்லை என அடிக்கடி உணர்பவர் ஓணாண்டி. ஆகவே இந்த சப்ப மேட்டரை தூக்கி போட்டு விட்டு ஓணாண்டி மீண்டும் கருத்துகளம் மீள வேண்டும் என்பதை வலியிறுத்தி…. குணா பட பாடலை உல்டாவாக்கி கீழே வெளியிடுகிறேன். பாடல் பெற்ற தலம் போல், பாடல் பெற்ற கருத்தாளர் ஆகிறார் ஓணாண்டி. பாடலை ஒரிஜினல் மெட்டில் வாசிக்கவும்/பாடவும். ———— ஓணாண்டி அன்போட கோஷான் நான்… நான்… எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசி வெச்சிக்கலாமா? வேணா கடிதமே இருக்கட்டும், படி…. ஓணாண்டி அன்போடு கோஷான் நான் எழுதும் கடிதமே… ஹ்ஹ பாட்டாவே படிச்சிட்டியா அப்ப நானும்…. மொதல்ல ஓணாண்டி சொன்னேன் இல்ல.. இங்க பேராண்டி போட்டுக்க…. பேராண்டி சாவச்சேரியில் சௌக்கியமா நான் இங்க சௌக்கியம்… பேராண்டி சாவச்சேரியில்… சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே….. ஆஹ… உன்ன நினைச்சு பாக்கும் போது வாண்டை, வாண்டையா…கெட்டவார்த்தை கொட்டுது… ஆனா அத எழுதனும்னு உக்காந்தா…. அந்த எழுத்து தான், ஹும் வார்த்த ஹு… உன்னை எண்ணி பார்க்கையில் வார்த்தை கெட்டது (அதான்)… அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது… அதே தான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை, படி…. ஓணாண்டி அன்போடு கோஷான் நான் எழுதும் கடிதமே…. பேராண்டி சாவச்சேரியில் சௌக்கியமா…. நான் இங்கு சௌக்கியமே… உன்னை எண்ணி பார்க்கையில் வார்த்தை கெட்டது… அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது…. ————————— ம், என்னை யாழ்களத்தில பிராண்டுற காயம் அது தன்னால ஆறிடும்….. அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல…. எனக்கு ஒண்ணுமே ஆவரது இல்ல, இதையும் எழுதிக்க…. நடுவுல நடுவுல மாப்பு, ஆப்பு, கொய்யாலா. யோவ்…. இதெல்லாம் போட்டுக்கணும் ஹும்….. தோ பாரு என்னை கும்பலா சேர்ந்து கும்மினாலும் உடம்பு தாங்கிடும் உன் மனசு தாங்குமா? தாங்காது. ஓணாண்டி, ஓணாண்டி, ஓணாண்டி…. (அதையும் எழுதனுமா?) ஹ்-ஹ்ன், அது நட்பு ஹஹ், என் நட்பு என்னன்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது… ஆனா நான் அழுது அதனால சீமான் குரூப் சந்தோசப்பட்டிடுமோ அப்படின்னு நினைக்கும் போது வர்ற அழுக கூட நின்னுடுது….. ஹ்-ஹஹ-ஹ-ஹஹ-ஹ மனிதர் உணர்ந்து கொள்ள யாழ் சாதாரண கருத்துக்களம் அல்ல…. கருத்துக்களம் அல்ல….(4 எக்ஹோ) அதையும் தாண்டி புனிதமானது புனிதமானது புனிதமானது புனிதமானது.. பிராண்டி வைத்த காயம் இங்கு தன்னாலே மாறிப் போன மாயம் என்ன கொய்யால, கொய்யால… என்ன காயம் ஆனபோதும் என் மேனி தாங்கி கொள்ளும் உந்தன் மேனி தாங்காது மாப்புள்ள… எந்தன் நட்பு என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது…. சீமான் குருப் சந்தோசப்படும் என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது… மனிதர் உணர்ந்து கொள்ள யாழ் கருத்து களம் அல்ல…. அதையும் தாண்டி புனிதமானது…. ஓணாண்டியே நீ மீண்டும் வாடியேய், என் பாட்டு உனக்கு கேட்குதா… ஓணாண்டியே யாழில் நீ பேராண்டியே… அதுவும் உனக்கு புரியுமா…. சுபலாலி லாலியே லாலி லாலியே லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா லால-லால-லால-லா, லால-லால-லா லல-லால-லால-லா-லால-லால-லா ஓஹோ லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா
  40. "ஏனிந்தக் கோலம்" "ஏனிந்தக் கோலம் வாலைக் குமரியே ஏமாற்றிப் பிழைப்பதும் ஒரு வாழ்க்கையா ஏராளம் வேடம் ஏன் உனக்கு ஏக்கத்தில் இனியும் தவறு செய்யலாமா?" "பெண்ணியம் சொல்லுவது எல்லோரும் சமம் கண்ணியம் காக்கும் செயல் பாடுகளே மண்ணும் பெண்ணும் இயல்பில் ஒன்றே எண்ணமும் கருத்தும் ஒன்றாய் இருக்கட்டும்!" "அன்பும் நீதியும் ஒருங்கே நின்றால் அழகு பெண்ணும் மகிழ்ச்சி அடைவாள் அடிமைச் சங்கிலியை உடைத்து எறிந்து அச்சம் மடம் நாணம் ஒழியட்டும்!" "உண்மையை உணர்ந்து உலகை அறிந்து பண்பாட்டு நிலையில் சமநிலை போற்றி கண்கள் போகும் வழிகளில் போகாமல் பெண்ணே உங்கள் கைகள் சேரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  41. இன்னொன்று👇😂 ” யமனாக நிழலியும், சித்திரகுப்தனாக தமிழ் சிறியும், யமதூதர்களாக தூயவன்,நிர்மலன்,புத்தன்,தும்பளையான்,ஜீவா ஆகியோரும் நந்தனாக நந்தனும் கலந்து சிறப்பிக்கும்... எமலோகத்தில் நந்தன் நாடகம் இதோ...[/size] ______________________________________________________________________________________________________________________________ 2054 ஆம் வருடம்,மார்கழி மாதம்,அதிகாலையில் தூக்கத்தில் ஆழ்ந்துருந்திருக்கிறார் நந்தன்.அப்போது பார்க்க பயங்கரமான,விகாரமான தோற்றம் உடைய சிலர் அவரிடம் வருகிறார்கள். அவர்கள் "வா எங்களுடன்", என்று கூறி நந்தனை தர தரவென இழுத்துச் செல்கிறார்கள். (உரையாடல் முழுதும் வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்). காட்சி௧ள் (வானவீதியில்) நந்தன்: ஆமாஆஆஆ நீங்கெல்லாம் யாருப்பா..? யமதூதர்கள்: நாங்கள் யமதூதர்கள். உன் உயிரைப் பறித்துப் போகின்றேம். நந்தன் : என்னாது... என் உயிரை எடுத்துட்டீங்களா,சொல்லவேயில்லை. யமதூதர்கள்: சொல்லிட்டுச் செய்ய நாங்க என்ன தமிழ் சினிமா ஹீரோவா, பஞ்ச் டயாலக் பேசி உயிரை எடுக்க...பொத்திக்கொண்டு இருடா டுபாக்கு... நந்தன் : ஆமா யமதூதா..., ரம்பா,ஊர்வசி,மேனகா எல்லாம் அங்கிட்டு நல்லா இருக்காங்களா. யமதூதர்கள் : நீ கொஞ்ச நேரம் வாயை அடைத்துக் கொண்டு வருகின்றாயா கிராதகா..? நந்தன் : என்னது நீங்க மட்டும் வந்துருக்கிங்க, தேவதூதர்கள்,புஷ்பக விமானம் எல்லாம் நமக்கு வராதா? யமதூதர்கள்: அடேய் நீ பண்ணிய பாவங்களுக்கு,கெட்ட கேட்டுக்கு அவங்க எல்லாம் வரனுமா?.சும்மா பிணாத்தாம வாடா. நந்தன்: ஆமா எவ்வளவு தூரம் போகனும்?...இப்பிடி ரொம்பத்தூரமின்னு தெரிஞ்சிருந்தா வரும்போது வீட்டிலிருந்து கொஞ்சம் வொட்காவை எடுத்துவந்திருப்பனே.. யமதூதர்கள்: அடேய்,எங்க பொறுமையை சோதிக்காதே. பேசாம வருகிறாயா நரனே. நந்தன்: இங்கை திண்ணையும் இல்லை..போகின்ற வழிக்கு பொழுது போகனும் இல்லை... யமதூதர்கள்: சூலாயுத்தால் வாயில் இடித்து,இப்ப நீ வாயை மூடலைன்னா,அடிச்சே கிழிச்சுடுவேம்.எப்பிடி வசதி. நந்தன் : அய்யோ, ஆத்தாடி, என்று கப்சிப். காட்சி - 2 (எமலோகத்தில் எமனது இறுதி தீர்ப்பு வாசிக்கப்படுகின்றது). சித்ரகுப்தன்: மன்னா,இவன் ஒரு ஜெகஜாலக் கில்லாடி, நல்லவன் போல நடிப்பவன். இவனை எமலோகத்தில் விட்டு அனைத்து தண்டனைகளும் தரவேண்டும். யமன்: அது என் வேலை, நீ முதலில் இவனது குற்றங்களைப் படி. நந்தன் : அடப்பாவிகளா, இங்கனயும் பதவிப் போட்டியா?. யமதூதர்கள்:உஷ் வாயை மூடிக்கொள். இல்லை என்றால் உன் தண்டனை இரு மடங்கு ஆகிவிடும். நந்தன் : சரி அப்பு. சித்ரகுப்தன்: மன்னா சொல்ல அசிங்கம், இவன் பள்ளியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது..... யமன் : சரி,சரி, இரகஸ்யங்களை சப்தம் போடாதே. வாலிபக் குறும்பு. இதுக்கு தண்டனையா, இவனை தகிக்கும் தங்க பதுமையைக் கட்டி அனைக்கச் சொல்லி வறுத்து எடுப்போம். நந்தன் : அடப்பாவமே, நான் எப்பவும் தங்கம் என் உடம்பில் கூடப் போட்டதே கிடையாது. கட்டிக்க தங்கப் பதுமையா?. பூலோகத்தில் அப்புறம் ஏன் தங்கம் விலை ஏறாது. சரி இங்கனயாவது போட்டுக்குவேம். யமதூதர்கள்: அடேய் அது சூடான கொதிக்கும் தங்கப் பதுமைடா. சித்ரகுப்தன்:அதுமட்டும் இல்லை இவன் திண்ணையில் குடித்துவிட்டு, ஒருமுறை....... யமன்: அடேய்,கஸ்மாலம், கேப்மாரி,முடிச்சவிக்கி, உன்னை.... சித்ரகுப்தன்: மன்னாஆஆஆ.. என்ன ஆச்சு தங்களுக்கு உளறுகின்றீர்கள். யமன்(சுதாரித்து): ஒன்றுமில்லை,திண்ணை என்றவுடன் அங்கு இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் வெறியில் பேசிக்கொள்ளும் பாசை ஒட்டிக் கொண்டது.இதுக்கு தண்டனையாக இவனை நாலு யமதூதர்களை விட்டு முள்ளுச் சவுக்கால் பரேட்டாவைப் போல அடித்து புரட்டி எடுங்கள். சித்ரகுப்தன்: மன்னா இதையும் கேளுங்கள்,லண்டனில் இவன்........ யமன்: அடேய் போதும், போதும் இந்தக் குற்றத்திக்கே இவன் நரகத்தில் பல ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.இதுக்கு தண்டனையாக இவனை எண்ணைச் சட்டியில் போட்டுப் பொறிக்க வேண்டும். சித்ரகுப்தன்:இது மட்டும் அல்ல மன்னா, யாழில் இவன் பதில் எழுதுறன் எண்ட பெயரில் கண்டதையும் எழுதி,தானும் குழம்பி,மற்றவர்களையும் குழப்பி உள்ளான்.ஒரு முறை இவன் களௌறவுகளிடம்...... யமன் : அடேய்ய்ய், மேலே சொல்லதே,என் வாயில் கெட்ட வார்த்தை வந்துவிடும்,இதுக்கு இவன் நாவை அறுத்துச் வறுவல் பண்ணுங்கள். நந்தன்: என்னது இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு. இதுக்கு முன்னால இவரு புரோட்டாக் கடையில் மாஸ்டரா இருந்தாரா?. வறுக்கனும்,பொறிக்கனும்,வடகம் போடனும்,வறுவல் போடனும் அப்படின்னு தீர்ப்பு சொல்றார்....? யமன் : அடேய் நரனே. என்ன தைரியம் இருந்தால் என்னை புரோட்டா மாஸ்டர் என்பாய். இதுக்கு உனக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். யமதூதன்: கேட்டாயா, வாயை வைச்சுக் கிட்டு சும்மாயிருந்தா,இப்படி நடக்குமா? நந்தன் : இல்லைனாலும்,அடப்போய்யா.. நாங்க எல்லாம் எத்தனை பேரைப் பார்த்துருக்கேம். சித்ரகுப்தன்: மன்னா,என்ன ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்து விட்டீர்கள். யமன்: இந்த நரனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும், என்ன தண்டனை என்ற குழப்பத்தில் உள்ளேன். நந்தன்: அப்பாடா, வந்த வேலை முடிஞ்சது. எதே நம்மளால முடிஞ்சது. குழம்பி தீர்வதுக்குள் எஸ் ஆகனும். எப்படிய்ய்ய். சித்ரகுப்தன்: மன்னா, இந்த மூன்று தண்டனைகளும் ஒரே காலத்தில் கொடுப்போம். அல்லது தண்டனைக் காலத்தை இன்னமும் அதிகரிப்போம். நந்தன்: அடடா, மன்னர் குழம்பினாலும் இந்த அல்லக்கைகள் விடாது போல இருக்கே. சரி சமாளிப்போம். எவ்வளவோ பார்த்துட்டேம்,இது என்ன.. யமன்: மிக மிக கடுமையான தண்டனையாக இருக்கவேண்டும்,அதைப் பார்த்து எவனும் என் முன் வாயைத் திறக்கக் கூடாது. நந்தன் : பேசாமல் எல்லாரையும் மன்மோகன் ஆக்கிடுங்க...யாரும் வாயைத் தொறக்க மாட்டாங்க... யமதூதன்: அடேய் உன் தப்புக்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகின்றது.வாயை மூடு. யமன்: ஆகா கண்டுபிடித்து விட்டேன், மிக கொடுமையான தண்டனை, யாரும் வழங்காத தண்டனை. அற்புதமான, ஆளைப் பையித்தியம் பிடிக்க வைக்கும் தண்டனை. சித்ரகுப்தன் : ஆவலுடன் மன்னா என்ன அது மன்னா, சொல்லுங்கள். நந்தன்: அடாடா,வில்லங்கமா இருக்கும் போல, சரி பொறிக்கறது வீட பெரிசா என்ன தண்டனையைத் தரப்போறானுங்க. யமன்: டேய் நரனே, அடுக்கடுக்காய் பாவங்கள் பண்ணியது இல்லாமல்,என்னையே கிண்டல் பண்ணத் துனிந்த உனக்கு அதிக பட்ச தண்டனை வழங்குகின்றேன். இதை அனுபவித்து நீ பைத்தியம் பிடித்து அனு அனுவாய் சித்தரவதைப் படுவாய். நந்தன் : என்ன தண்டனைன்னு சொல்லாம, புதிர் போட்டா எனக்கு என்ன ஜோசியமா தெரியும். யமன்: கோபமாக,சத்தமாக எழுந்து நின்று, அடேய் நரனே, உனக்கு இந்த தண்டனைதான் பொருத்தம். நீ இங்கு இருக்கும் காலம் எல்லாம் தினமும், நீ நெடுக்காலபோவான் எழுதிய பதிவுகள் எல்லாத்தையும் நீயே உக்காந்து படிக்க வேண்டும். இதுதான் நான் உனக்கு வழங்கும் தண்டனை. நந்தன் : பதட்டமாக, சத்தம் போடத்துவங்கியபடி....அய்யோ அய்யோ அது மட்டும் வேண்டாம், நீங்க சொன்ன எல்லா தண்டனைகளும் ஒட்டு மொத்தமாக தாருங்கள், ஆனா இந்த தண்டனை மட்டும் வேண்டாம் என்று கத்திக்கொண்டு கண்விழிக்கிறார்.... _____________________________________________________________________________________[size=6] [/size] [size=6]நந்தன் கண்விழிக்கவும்..நாடகம் இனிதே நிறைவேறுகிறது...நன்றி வணக்கம் உறவுகளே..நிழலி மட்டும் தான் போட்டிருக்கும் வாடக்கைக்கு எடுத்த எமதர்மன் உடுப்புகளை தரமாட்டன் என்டு மண்டபத்தின் பின்னால் அடம்பிடிக்கிறார்..இப்பிடியே இருந்து யாழுக்கை வெட்டப்போறாராம்... [/size] “
  42. நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடித்தது.. வேலை வாழ்க்கை என்று எல்லா துன்பங்களிலும் உழன்றுவிட்டு எனக்கென்று இருக்கும் கொஞ்ச நேரத்தில் மனதை இறுக்கத்தை போக்கி சந்தோசமாக இருக்க கிடைத்த இடம் யாழ்.. அதில் கிடைக்கும் நேரம் எல்லாம் இனிமேல் நெடுகமூஞ்சைய தூக்கிகொண்டு இருக்காமல் சந்தோசமா இருப்பம் எண்டு அப்பப்ப நகைச்சுவையாக எழுதுவன்.. அதுவும் எனது பழைய ஜடியில் என்ன கூத்து எல்லாம் அடிச்சு இருப்பன்.. உதாரணதூக்கு ஒண்டு..👇 // நெடுக்ஸ் நிகழ்ச்சியில் வாசித்த உரை...[/size] [size=4]அனைவருக்கும் வணக்கம்.[/size] [size=4]பெண்கள் பக்கம் இருந்து வணக்கம் சுணக்கமாக வருவதை கண்டித்துக்கொண்டு நான் எனதிந்த சிற்றுரையை ஆரம்பிக்கிறேன்.[/size] [size=4]பெண்கள் என்றால் யார்..? சாறி உடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..? சட்டை போட்டால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..? தோடு குத்தினால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வளையல் போட்டால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வகுடெடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வாய்க்கால் கட்டினால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வரப்பெடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?நாத்து நட்டால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?இல்லை [size=4]வயலில் களை எடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..? [/size][/size] [size=4][size=4]மானங்கெட்டவளவையே..உங்களுக்கு மஞ்சல் அரைத்து கொடுப்பது யார்..? அஞ்சு முளத்தில் பூ வாங்கிக்கொடுப்பது யார்..? பிஞ்சிலையே உங்களால் வெம்பிப் பழுப்பது யார்..?கெஞ்சவும் கொஞ்சவும் கடையில் நல்லாய்த் திங்கவும் வைப்பது யார்..?திண்ட பின் உங்கள் நண்பிகளுக்கும் சேத்து பில் கட்டுவது யார்..?இதையெல்லாம் செய்வது யார்..? யார்..? யார்...? [/size][/size] [size=4][size=4]( என்று நெடுக்ஸ் உணர்ச்சிவசப்பட்டு எப்பவோ கேட்ட கட்டபொம்மன் வசனங்களை எல்லாம் பிளைபிளையாய் பேசி முடிக்க பெண்களால் நொந்து போய் இருந்த சுண்டால் கூட்டத்தில் இருந்து பாய்ஞ்சு வந்து மேடையில் ஏறி நெடுக்ஸை கட்டிப்பிடித்து எங்கள் தன்மான சிங்கம்,எங்கள் அடிமைத்தனம் ஒளிக்க வந்த கட்டப்பொம்மன் 2 வாழ்க வாழ்க என்று கத்துகிறார்.. இவற்ரை அவதானித்துக்கொண்டிருந்த கனடா மகளீர் அணித்தலைவி சகாற கடும் சினத்துடன் தன் தலையில் குத்தியிருந்த கிளிப்பை கழட்டி நியக்கிளிப்பை எறிவதாக நினைத்துக்கொண்டு வாயால் டமார் எண்டு சத்தம்போட்டபடி சுண்டலை நோக்கி எறிகிறார்.. [/size][/size] [size=4][size=4]சகாறாவை பின்பற்றி பெண் உறுப்பினர்கள் எல்லாம் தங்கள் கொண்டையில் குத்தியிருந்த கிளிப்பையும் கொண்டை வைக்காத இளம்பெண்கள் தங்கள் கைகளில் போட்டிருந்த வளையல்களையும் சுண்டலையும் நெடுக்ஸையும் நோக்கி கூச்சல் இட்டபடி வீசி எறிகின்றனர்.. [/size][/size] [size=4][size=4]நெடுக்ஸ் தான் பேசிக்கொண்டிருந்த மைக் இருந்த ரேபிலுக்கு பின்னால் நிலையெடுத்து இந்த தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள சுண்டலோ இவற்றை பற்றி எல்லாம் கவலைப்படாமல் வந்து விழுந்த கிளிப்புகளுக்கும்,வளையல் துண்டுகளுக்கும் நடுவே இளம்பெண்களின் வளையல்களை மட்டும் முமுரமாக பொறுக்கி சேகரித்துக்கொண்டிருக்கார்.. [/size][/size] [size=4][size=4]நிலமை கட்டுக்கடங்காமல் போவதை அவதானித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ்சிறி மைக்கை கையில் எடுத்து பெண்கள் அனைவரும் நிகழ்ச்சி முடியும் வரை அமைதியாக இருந்தால் போகும்போது எல்லாருக்கும் ஏசியன் கடையில் எடுத்த சாறியும் யன்னல் வைத்த பிளவுசும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்க பெண்கள் பக்கம் இருந்து குண்டூசி விழுந்தால் கூட கேட்கும அளவுக்கு அமைதி நிலவுகிறது... [/size][/size] [size=4][size=4]இதனால் சந்தோசம் அடைந்த தமிழ்சிறி நெடுக்ஸ் பக்கம் திரும்பி "இப்பதாண்ட ஒருமாதிரி நிலமையை கட்டுக்கை கொண்டுவந்திருக்கன் அதைக்கெடுத்துப்போடதையெடாப்பா"என்ன்று கெஞ்சுவது போல் பார்க்கிறார்..எதைப்பற்றியும் கவலைப்படாமல் நெடுக்ஸ் மைக்கை எடுத்து தொடர்கிறார்..)[/size] [/size] [size=4]நண்பர்களே,தோழர்களே...இந்தப் பெண்களைப் பேய்கள் என்றும் சொல்லலாம்..பெண்களை பேய்கள் இல்லை என்றும் சொல்லலாம்..பேய் என்று சொல்வதெல்லாம் பேயாகிவிடாது..அங்கு பெண்களும் இருக்கின்றனர்..அதே போல் பெண் என்று சொல்வதெல்லாம் பெண் ஆகிவிடாது..அங்கு பேய்களும் இருக்கின்றன..பேய்களிடம் இருந்து ஆண்களை காப்பாற்றுவதே தற்பொழுது எனது முதல் பணியாக எடுத்து செய்து கொண்டிருக்கிறேன்.. [/size] [size=4]இந்தப் பணியில் நான் பல சவால்களையும்,தடைகளையும் எதிர்கொண்டாலும் முருங்கை மரத்தில் இருந்து விழுந்த விக்கிரமாதித்தன் போல பேய்களை எதிர்த்து யாழ் உள்ளவரை நான் கீ போட்டில் போராடிக்கொண்டிருப்பேன்..இது என் கீபோட்டின் மேல் சத்தியம்..சத்தியம்..சத்தியம் [/size] [size=4]( எண்டு ஆவேசம் கொண்டவரைப் போல் நெடுக்ஸ் ஒலிவாங்கி மேசையில் கையால் அடித்துக் கத்துகிறார்.. ஆண்கள் பக்கம் இருந்து பலத்த கரகோசமும் விசில் சத்தமும் வானைப்பிளக்கிறது..[/size] [size=4]சுண்டல் பொறுக்கமுடியாமல் கூட்டத்தின் நடுவே தான் மட்டும் தனிய எழுந்து நிண்டு கைதட்டுகிறார்..இதை தூரத்தே மேடையின் பின்னால் இருந்து அவதானித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ்சிறி குறுக்காலபோவான் திரும்ப கூட்டத்தை குழப்பபோறான் போல கிடகே எண்டு பதற்றத்துடன் காணப்படுகிறார்.. [/size] [size=4]ஆனால் ஏசியன் சாறியையும் யன்னல் வைத்த யாக்கெட்டையும் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்த பெண்கள் அணி இவற்றினால் எந்த சலனமுமடையாமால் சாறியே குறி என்று அமைதியாக இருக்கின்றனர்.. நெடுக்ஸ் இந்த அமைதியை வாய்ப்பாக பயன்படுத்தி தொடர்கிறார்..) [/size] [size=4]நாங்கள் கேட்கிறோம்..தெளிவாகக் கேட்கிறோம்...பெண்களை ஏன் இந்த மூடர்கள் கண்கள் என்கிறார்கள்..? ஆண்களுக்கும் கண்கள் இருக்குத்தானே..? எங்கள் கண்கள் மிக அழகானவை..அவற்றின் மூலமே நாம் வண்டுகளையும் பூக்களையும் பார்க்கிறோம்..[/size] [size=4]நான் பல காலத்துக்கு முன்னரே பூக்களை நின்று பார்க்க வெளிக்கிட்டிட்டன்.ஆனால் என்னைப் பிடிக்காத எனது எதிரிகள் சிலர் நான பூக்களை பார்க்கும் சாட்டில் பெண்களையும் பார்ப்பதாக அபாண்டமாக சொல்லித்திரிகிறார்கள்..!அவர்களின் கண்கள் அழுகிப்போக..[/size] [size=4]பூக்களைத்தான் பறிக்காதீங்க[/size] [size=4]என் பூக்காதலைத்தான் பிரிக்கதீங்க..[/size] [size=4](என்று கோரசாக இழுத்து பாடுகிறார்.. அப்பொழுது அவர் கண்ணில் இருந்து சிலதுளிகள் விழுகின்றன..எல்லோரும் பார்க்கும் வகையில் கைக்குட்டையை எடுத்து தன் கண்ணீரை துடைத்துவிட்டு நான் யாரும் பார்க்க என் கவலைகளை நினைத்து அழுவதில்லை என்று சொல்லிவிட்டு தன் பேச்சை தொடர்கிறார்.. ) [/size] [size=4]பூக்கள் அழகானவை..பூக்களைமொய்க்கும் வண்டுகள் அதைவிட அழகானவை..ஆகையால் பூக்களை இந்தக்கண்களலேயே ரசிக்கிறோம்..பிறகெதற்கு இந்த மாங்காய் மடையர்கள் கவிதை என்ற பேரில் பெண்களை மட்டும் கண்கள் என்கிறார்கள்..?இது சுத்த ஆணடிமைத்தனமே அன்றி வேறுதுவும் இல்லை.. ஆகையால் இனிமேல் கவிஞர்கள் ஆண்களையும் கண்கள் என்று சொல்லவேண்டும் என்று ஆண்களின் சார்பில் இந்த இடத்தில் வன்மையாகக் கேட்டுகொள்கிறேன்.. [/size] [size=4]சிலபலவருடங்களுக்கு முன்னர் நானும் ஓடினேன்.. பெண்கள் இருகண்கள் என்று பாடினேன்..அவள் ஒரு ரோசாப்பூ..வாடாத ரோசாப்பூ..எங்கள் காதல் ஒரு கைபடாத சீடி.. ஆனால் கடைசியில் போடா போடி.. ஆதலால் சொல்கிறேன் ஆண்களே கரண்டுக்காரன் வெட்டி வைத்த குழியில் விழுந்தாலும் காதலில் விழுந்துவிடாதீர்கள்.. [/size] [size=4]உங்களுக்கு காதலிக்கவேண்டுமென்றால் என்னைப்போல் பூக்களை கதலியுங்கள்..இல்லையெண்டால் புழுவையெண்டாலும் காதலியுங்கள்.. ஆனால் பெண்களை மட்டும் காதலித்துவிடாதீர்கள்..காதலித்துவிடாதீர்கள்..காதலி....த்..து(எனும்போது நெடுக்ஸிற்கு உணர்ச்சிவசப்பட்டதால் பேச்சுவருகிறது இல்லை..கூட்டத்தில் எல்லாரும் அமைதியாக இருப்பதை அவதானித்த குட்டி உடனே எழுந்து நின்று நான் இதை லைக் பட்டினை அமத்தி லைக் பண்னுறன் எண்டு பெரிதாக சொல்லவும் நெடுக்ஸ் உற்சாகம் அடைந்தவராக தொன்டையை சரி செய்துகொடு மீண்டும் பேசத் தொடங்குகிறார்..) [/size] [size=4]நண்பர்களே..எனக்கு நீண்டகாலமாக ஒரு சந்தேகம் இருக்கிறது..சோத்து ஆன்ரிகள் சோத்தை சாப்பிட்டதால் அன்ரிகள் ஆனார்களா இல்லை அன்ரிகள் ஆனதால்தான் சோற்ரை சாப்பிடுகிறார்களா என்பதுதான் அது... இதை நான் எங்கள் யூனியில் இருந்த எல்லாப் புத்தகங்களிலும் தேடிப்பார்த்துவிட்டேன்..ஆன்ரிகள் நிறையப்பேர் சிக்கிவிட்டனர்.. ஆனால் விடைதான் சிக்கவில்லை...என் தலையில் இருக்கும் முடி எல்லாம் போனாலும் இதற்கு நான் விடைகாணாமல் ஓயமாட்டேன்.. [/size] [size=4](அப்பொழுது ரதி தன் கான்ட் பாக்கில் இருந்த உதட்டுச்சாயத்தை எடுத்து உதட்டில் நன்றாக அப்பிவிட்டு எழுந்து நின்று நெடுக்சின் கருத்துக்கு தான் சிவப்பு புள்ளி குத்துவதாகவும் இதை யாழின் பதிவில் இருந்து தூக்கும்படி இணையவனுக்கு றிப்போட் பட்டினை அமத்தி றிப்போட் பண்ணுவதாகவும் தெரிவிக்கிறார்.. அப்பொழுது பக்கத்தில் இருந்த அலைமகள் ரதியை இழுத்துப்பிடிச்சு கீழே இருத்தி அநியாயமாக ஏசியன் கடை சாறியை மிஸ்பண்ணவேணுமோ எண்டு கேட்க ரதி நான் சாறி கட்டுவதில்லை ஒன்லி குட்டைப்பாவாடைதான் அதாலை தனக்கு கவலை இல்லை எண்டு கூறி மீண்டும் உதட்டு சாயத்தை சரிபார்க்கிரார்.. [/size] [size=4]ரதியைக் கண்ட உற்சாகத்தில் கிருபன் பக்கத்தில் இருந்த இன்னுமொருவனின் காதில் "நட்பார்க்கும் நட்பாய நட்பல்ல நட்பாகும் நிப்பார்க்கும் போவார்க்கும் நடுவில் போகாமல் எப்போதும் நிண்டு" என்று புதுக்கவிதை சொல்கிறார். .ரதியைக் கன்ட நெடுக்காலபோவானுக்கும் புது வேகம் பிறக்க தன் சிற்ருரையை தொடர்கிறார்..) [/size] [size=4]என்னைப்பொறுத்தளவில் பெண்கள் பாதிக்கண்கூட இல்லை..பிறகு எதற்கு வெட்டியாக இருகண்கள் மூண்டு கண்கள் எண்டு பேசிக்கொண்டு..கண்கள் எப்பவும் நாங்கள்தான்..நாங்கள் கண்ணெடுத்து சுட்டால் பெண்கள் காணாமல் போய்விடுவார்கள்..எப்பவும் பேரில் முன்னெழுத்து நாங்கள்தான்..பெண்கள் கார் போல..அதை ஓட்ட எப்பவும் ஒரு ட்ரைவர் வேணும்..அதுதான் நாங்கள்..எங்களின் துணையில்லாமல் பெண்களால் வாழவும் முடியாது சாகவும் முடியாது..ஆனால் நாங்கள் தனியே வாழமுடியும் [/size] [size=4]( என்று நெடுக்ஸ் சொல்லவும் ஆத்திரம் கொண்ட சகாரா ஏசியன் சாறியும் மயிரும் என்று கத்தியபடி எழும்பி தன்ர குதி உயர்ந்த செருப்பை கழட்டி கையில் எடுத்துகொண்டு மேடையை நோக்கி ஓடிவரவும் மற்ர பெண்களும் சகாறாவை பின் தொடர்ந்து மேடைக்கு ஓடுகின்றனர்.. [/size] [size=4]இதைக்கண்ட தமிழ் சிறி அப்படியே பாய்ந்து வந்து நெடுக்ஸை பிடித்து இழுத்துக்கொண்டு மேடைக்கு பின்னால் ஒடுகிறார்...நெடுக்ஸ் கையில் அகப்படாத ஏமாற்றத்துடன் பெண்கள் அணி திரும்பிச்செல்ல தமிழ் சிறி நெடுக்ஸை பாதுகாப்பாக ஒருகாரின் பின்னால் ஒளித்துவைத்துவிட்டு வந்து மைக்கை பிடித்து இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்..நிகழ்ச்சிகள் சிறிய இடைவேளையின் பின் அறிவித்தபடி தொடரும் என்று சொல்லிவிட்டு பெல்ற்றை அவிட்டுக்கொண்டு பல்லை நெருமியபடி மேடையை விட்டு விறுக்கு விறுக்கெண்டு இறங்கி நெடுக்ஸிடம் செல்கிறார்.. ) [/size] // அது ஒரு காலம்.. ஒரே பகிடிதான்.. இனிமேல் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் இயன்றளவு அரசியலை விட்டு யாழில் நகைச்சுவையாக எழுதவேணும் எண்டு முடிவெடுத்திருக்கிறன்.. அதுகும் உந்த கோதாரிவிழுவான் அர்ச்சுனாவை ஏன்ரா ஆதரிச்சன் எண்டுற அளவுக்கு ஆனதுக்கு பிறகு அரசியலே வேண்டாம் எண்டாகிப்போச்சு.. விழுவான் அண்மையில் மலையக மக்களை பற்றி சொன்ன கருத்துக்கு பிறகு அந்த பரதேசியை இனிமேல் ஆதரிப்பது இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்கிறேன்.. இந்த வருசம் பிறந்தது எனக்கு அரசியல் விடயங்கள் சரிவராது போல கிடக்கு.. ஒரே அசிங்கமா இருக்கு.. இனி காமெடிதான் இயன்றளவு.. எனிவே.. என்றைக்கும் என்னை மறக்காமல் நியாபகம் வைத்திருக்கும் தலைவர் கோசானுக்கு என்ன கைமாறு செய்வனோ தெரியா.. அந்த அன்புக்கு என்றும் நன்றியும் பாசமும்.. அதேபோல் ரசோ அண்ணாவுக்கும் சுவி அண்ணவுக்கும்.. ஜ லவ்யூ..
  43. "மனமே கலங்காதே!" & "இயற்கையின் இன்ப அழகில்" "மனமே கலங்காதே!" "மனமே கலங்காதே உறுதியாக இருந்திடு தினமும் நடப்பதை விழிப்புடன் கவனித்திடு! ஈனப் பிறவிகளென யாரும் இல்லை இனம் சார்ந்த நடவடிக்கைகள் ஒழியட்டும்!" "குணம் நாடிக் குற்றமும் ஆராய்ந்து மணம் வீசும் செயல்கள் தொடரட்டும்! எண்ணம் எல்லாம் மனிதம் வளர்க்க பண்பாடு நிலைத்து மனது மலரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ..................................................................... "இயற்கையின் இன்ப அழகில்" "இயற்கையின் இன்ப அழகில் மலர்ந்தவளே மயக்கத்தின் பிடியில் உலகை மறந்தவளே தயக்கம் கொண்டு வெட்கப் படுபவளே அயலவர் உள்ளங்களில் அன்பு விதைத்தவளே வியக்க வைக்கும் விழிகள் கொண்டவளே பயம் வேண்டாம் மனம் கலங்காதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  44. இன்னொரு சக்கரவர்த்தி --------------------------------------- அற்புதமான ஆடை என்று கொடுக்க அதை உடுத்து ஆடம்பரமாக நிமிர்ந்து நடந்து வந்தார் ஒரு சக்கரவர்த்தி என்னே ஆடை இது எப்படி மின்னுது இது இதுவல்லவோ அழகு எங்கள் ராசா என்ன கம்பீரம் என்று கூட்டம் குரல் எழுப்பியது இன்னும் பெருமைப்பட்ட சக்கரவர்த்தி இன்னும் இன்னும் கைகளை நீட்டி கம்பீரமாக நடந்தார் சின்னப் பயல் ஒருவன் திடீரென 'ஐயே................ ராசா அம்மணமாக வருகிறாரே.....' என்று கத்திச் சொல்லி அவன் கண்களையும் மூடினான் சக்கரவர்த்தி வெட்கத்தில் பொத்திக் கொண்டு ஓட கூட்டமும் ஆடை நெய்தவரும் உயிர் தப்ப ஓடினார்கள் என்னைப் பார் என்னைப் பார் என்று இன்று இன்னொரு சக்கரவர்த்தி இப்பொழுது நடந்து வருகின்றார் அழகோ அழகு என்று சுற்றி நிற்கும் கூட்டமும் கைதட்டுகின்றது பின்னர் வரலாறு சொல்லும் 'ஐயே................... இந்த ராசாவும் இவரின் கூட்டமும் ஆடை அணிந்திருக்கவில்லை.................' என்று.
  45. "கலாச்சாரம்" & "துடிக்கும் இதயங்கள்" "கலாச்சாரம் தமிழா தலைசுத்துது எனக்கு கலப்பு இல்லா ஆதி மொழியே கலை மூன்றும் தந்த பெருமையே!" "பகலோனாக உலகிற்கு ஒளி ஏற்றிவவனே பகுத்தறிவு சித்தர்களின் பிறப்பு இடமே பண்பு என்பது பாடறிந்து ஒழுகுதலே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................ "துடிக்கும் இதயங்கள்" "துடிக்கும் இதயங்கள் தேடுது அன்பு அடிக்கும் கைகள் அணைக்குது பாசம் இடிக்கும் வார்த்தைகள் வாட்டுது நெஞ்சம் குடிக்கும் மதுபானம் சிதைக்குது உடலை கெடுக்கும் செயல்கள் குறைக்குது நற்பெயரை!" "உள்ளம் மலர்ந்தால் மகிழ்வு பிறக்கும் கள்ள நட்பு மானம் கெடும் பள்ளிப் படிப்பு அறிவை வளர்க்கும் குள்ளப் புத்தி அநியாயம் செய்யும் துள்ளும் ஆசை வெட்கம் அறியாது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.