Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20018
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38770
    Posts
  4. vasee

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3326
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/09/25 in Posts

  1. பத்து அடுத்தநாள் காலை வழமைபோல வீட்டுக்கு வரும் போது மருதனார் மடத்துக்கும் சுண்ணாகத்துக்கும் இடையே உள்ள பூங்கன்றுகள் விற்கும் கடைக்குச் சென்று விதவிதமாக பூத்திருந்த செவ்வரத்தங் கன்றுகளில் 15 ஐ வாங்கி ஓட்டோவில் அனுப்பிவிட்டு நானும் வீட்டுக்குப் போகிறேன். கன்றுகளை இறக்கி வைத்தவர் நீங்களோ நடப்போகிறீர்கள்? என்கிறார். எனக்கு ஏலாது இவ்வளவும் நட. வீட்டில் ஒருத்தர் இருக்கிறார். அவரைக்கொண்டுதான் நடவேணும் என்கிறேன். உங்களுக்கு உப்பிடியான வேலைகளுக்கு ஆரும் தேவை என்றால் சொல்லுங்கோ. தெரிந்த பெடியன் இருக்கிறான். நான் அனுப்பிவைக்கிறன் என்கிறார். தேவையென்றால் உங்களுக்கு போன் செய்யிறன் என்றுவிட்டு காலை உணவை உண்டு முடிய பத்து மணிக்கு இரண்டு பெண்களும் வருகின்றனர். அவர்களோடு கதைத்துப் பயன் இல்லை என்று புரிய, அடுத்த பக்கத்துப் புற்களைப் பிடுங்கும்படி கூறிவிட்டு கதிரையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். பதினொரு மணிக்கு ரஜிதன் வருகிறார். “என்னக்கா நிறையப் பூக்கண்டுகள் வாங்கிவந்திருக்கிறியள்” “நல்ல வித்தியாசமான நிறங்கள். அதுதான் நடுவம் என்று வாங்கினனான்” “நேற்றே வாங்கியிருந்தால் வேலை செய்தவங்களைக் கொண்டே நட்டிருக்கலாம் அக்கா” “அதனால என்ன? நான் கொண்டுவந்து தாறன். நீங்கள் நடுங்கோ” “நான் உந்தச் சேத்துக்குள்ள இறங்கமாட்டன் அக்கா. எனக்குக் காலில புண். அது பெருத்திடும் அக்கா” “என்ன சின்னப் பிள்ளைக்குக் கதை சொல்லுற மாதிரிச் சொல்லுறீர்” “என்னால கிடங்கு வெட்ட ஏலாது அக்கா” “சரி நீர் போய் உம்மடை அலுவலைப் பாரும்” நான் வீட்டுக்குள் சென்று புத்துவெட்டியை எடுக்கும்போது பார்த்தால் இரண்டு மண்வெட்டியையும் காணவில்லை. “ரஜிதன், மண்வெட்டியளை எங்க வச்சனீங்கள்” “நான் எடுக்கேல்லை அக்கா. நேற்று வேலை செய்தவங்கள் கொண்டுபோட்டாங்களோ” “ அவர்கள் எனக்கு நல்ல நம்பிக்கையான வேலையாட்கள். அவை கொண்டுபோகாயினை” “எனக்குத் தெரியாது அக்கா. அவங்கள் உங்கை எங்காலும் மறைச்சு வச்சிட்டு எடுத்துக்கொண்டு போயிருப்பங்கள்” “வாயை மூடும். அவை கழுவித் தர நான் மூன்றையும் குசினி மூலையில வச்சிட்டுப் போனனான். அதுக்குப் பிறகு நீர் மட்டும்தான் உள்ளுக்குள்ள வந்தனீர்” “நான் என் மண்வெட்டியைத்தான் விடிய வேலைக்குப் போக்கேக்குள்ள கொண்டுபோனனான்” “உம்மைத் தவிர மண்வெட்டியை ஆரும் எடுத்திருக்க முடியாது. மரியாதையா என் மண்வெட்டிகளைக் கொண்டுவாரும்” என்று கோபமாகச் சொல்லிவிட்டு வர, “அக்கா, ரதி அன்ரி உங்களில சரியான கோபத்தில இருக்கிறா” “என்ன கோபம் அவவுக்கு? “தான் தானாம் என்னைக் கூட்டிவந்தது. என்னை இருத்திறது பற்றி நீங்கள் அவவோடை ஒண்டுமே கதைக்கேல்லையாம்” “நான் ஒவ்வொருநாளும் அவவிட்டைக் கதைக்கிறன் தானே, என்னட்டையே சொல்லியிருக்கலாமே? எதுக்கு உம்மட்டைத் தூதுவிடுறா? நான் பிறகு அவவோடை கதைக்கிறன்” “அவ இனிமேல் உங்களோடை கதைக்கமாட்டாவாம். தன்னை மதிக்கேல்லையாம்” “கிரைண்டர் கப் தனக்குத் தரேல்லை எண்ட கோபமோ” “நீங்கள் வந்த நாள் தொடக்கம் நான் அவைக்குப் போய் உதவி ஒண்டும் செய்யேல்லை” “எனக்கு விளங்கேல்லை. என்ன உதவி செய்யிறனீர்? “அவையின்ர வாழைக் குலைகள் சந்தைக்குக் கொண்டுபோய் குடுப்பன், கறக்கிற பால் பண்ணைக்குக் கொண்டுபோறது, மில்லு க்குப் போறது எண்டு ஒவ்வொரு நாளும் ஏதாவது வேலை இருக்கும். நீங்கள் வந்தபிறகு நான் அங்க போறேல்லை. இண்டைக்கு நான் வாற நேரம் பாத்து றோட்டில வந்து மறிச்சு சப்பல் பேச்சுப் பேசிப்போட்டு இனி எனக்கும் உனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை எண்டு ஏசிப்போட்டுப் போட்டா” “நான் பிறகு போய் அவவோடை கதைக்கிறன். நீர் முதல்ல போய் என்ர மண்வெட்டிகளைக் கொண்டுவாரும்” நான் வீட்டை போட்டு வாறன் என்றபடி அவர் ஸ்கூட்டியக் கிளப்ப நான் ஓட்டோக்காரருக்கு போன் செய்து கன்றுகள் நட அந்தப் பையனை அனுப்பும்படி கூறுகிறேன். பதினைதே நிமிடங்களில் அந்தப் பையன் கேற்றைத் திறந்துகொண்டு சயிக்கிளில் வருகிறார். பார்த்தால் சிறிய வயது. நல்ல மொடேணாக ஆடை உடுத்தி, தலைவாரி பார்த்தால் பள்ளியில் படிக்கும் மாணவன் போல் தெரிய, பள்ளிக்கூடம் போறேல்லையோ என்கிறேன். இல்லை நான் பத்தாம் வகுப்போடை விட்டிட்டன் என்கிறார். உங்கடை வயதுக்குப் படிச்சா நல்ல வேலை செய்யலாமே என்றவுடன், என்ன அன்ரி நடவேணும் என்கிறார். நான் புத்துவெட்டியைக் கொடுத்து நல்ல ஆழமாக் கிண்டுங்கோ. நான் கன்றுகளை வைக்கிற இடத்தில கிடங்கு எடுத்து வையுங்கோ என்றபடி இடங்களைப் பார்த்துப் பார்த்துக் கொண்டுபோய் வைத்துவிட்டு திரும்பி வர நான்கு கன்றுகளை நட்டுமுடித்திருக்க, எனக்கோ இத்தனை விரைவாக வேலை செய்கிறாரே என்று ஆச்சரியம். பொலித்தீனை எங்கே போட்டீர்கள்? என்றபடி தேடினால் ஒன்றையும் காணவில்லை. நான் பொலித்தீனைக் கழட்டேல்லை. அப்பிடியே நட்டிட்டன் என்றவுடன் வந்த கோபத்தை அடிக்கியபடி நீங்கள் ஒருநாளும் கன்றுகள் நடேல்லையா என்று கேட்க இல்லை என்கிறார். பொலித்தீனுடன் நட்டால் வேரோட ஏலாமல் கன்று பெரிதாய் வளராது. திரும்பக் கன்றுகளை வெளியே எடுங்கோ என்று கூற திரும்ப வெளியே எடுக்கிறார். அவருடன் கூடவே நின்று அனைத்துக் கன்றுகளையும் நட்டு முடிய அவருக்குப் பணத்தைக் குடுத்து அனுப்பிவிட்டு பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கப் போனால் நின்று கதைத்துச் சிரிக்க, வேலையைப் பாருங்கோ என்று கூறிவிட்டு நகர, தேத்தண்ணி இன்னும் தரேல்லை என்று கூற, அட மறந்திட்டன் என்றபடி தேநீர் ஊற்றிக் கொடுத்து பாகோடாவும் கொடுக்க அவர்கள் மாமர நிழலில் அமர்ந்துகொள்கின்றனர். தன் வீட்டுக்குப் போன ரஜிதன் ஒரு மண்வெட்டியுடன் வந்கிறங்குகிறார். எங்கே மற்ற மண்வெட்டி என்றதற்கு இது என் மண்வெட்டி அக்கா. நீங்கள் என்னில சந்தேகப்படுறியள் என்று வீட்டை போய் எடுத்து வாறன் என்கிறார். நான் மண்வெட்டியைப் பார்த்தால் அது எனது மண்வெட்டிதான். ஒரு மூலை கல்லில் பட்டுச் சிறிது நெளிந்திருந்தது. நான் அதைக் கூறி இது என்னுடையதுதான் என்றாலும் அவர் விடுவதாக இல்லை. இரண்டாவதும் உம்மட்டைத்தான் கிடக்கு. நாளை அதையும் கொண்டுவாரும் என்றுவிட்டு அதை உள்ளே எடுத்துக்கொண்டு சென்று வைத்துப் பூட்டுகிறேன். “அக்கா எனக்கு 10 வருசத்துக்கு அக்றிமென்ற் போட்டுத் தாங்கோவன். நான் உங்கடை வீட்டையும் வளவையும் வடிவாப் பார்க்கிறன்” “நாங்களே 10 வருஷம் உயிரோடை இங்க இருப்பமோ தெரியாது. அதுக்குள்ள உமக்குப் பத்து வருஷம் எழுதி பிறகு வீடு உமக்கே சொந்தமாகவோ? “நீங்கள் மாதம் 10 ஆயிரம் எனக்குத் தாறன் எண்டு ரதி அன்ரிக்குச் சொன்னனீங்களோ? “எனக்கு என்ன விசரா? “அவ உங்களோடு கதைத்ததாகச் சொன்னாவே அக்கா” “நான் அப்பிடி ஒண்டும் கதைக்கவில்லை. நான் போக்கேக்குள்ள அவவிட்டை என்ன சுத்துமாத்துக் கதை என்று கேட்கிறன், நீர் போய் இவைக்கும் உமக்கும் எனக்கும் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு வாரும்” என்று பணத்தைக் கொடுக்கிறேன். உணவு வந்தவுடன் நான் உணவுகளைக் கொண்டுபோய் இரு பெண்களுக்கும் கொடுத்துவிட்டு நீரும் சாப்பிடும் என்று கூற, தாங்கோ அக்கா நான் ஃபிரிஜ் இல் வைத்து இரவு சாப்பிடுகிறேன். இப்ப பசிக்கவில்லை என்கிறார். அவரின் பொதியைக் கொடுத்துவிட்டு உள்ளே இருந்த சிறிய மேசை ஒன்றில் என் உணவுப்பொதியை கொண்டுசென்று வைக்கும்போது எனது சாச் செய்யும் டோச் லைற் மேசையில் கிடக்கிறது. ஒருபக்கம் மகிழ்ச்சியும் மறுபுறம் வியப்புமாக அதை எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறேன். அது என்னுடையதுதான். உடனே ரஜிதன், இது எனது லைற் எல்லோ. எங்க இருந்தது? என்கிறேன். இது நேற்று என்ர மாடு அறுத்துக்கொண்டு போட்டுது. இருட்டினதால அன்ரிதான் இதைத் தந்து தேடு எண்டவ என்கிறார். எதுக்கும் என்னட்டையே இருக்கட்டும். நான் அவவோடை கதைக்கிறேன் என்றவுடன் என் கையில் இருந்த டோச் லைற்றை லபக் என்று பறிக்கிறார். அன்ரி என்னட்டைத் தந்தவ. நான் அவவிட்டைக் குடுக்கிறன். நீங்கள் அவவிட்டை வாங்கிக்கொள்ளுங்கோ என்றபடி தன் ஸ்கூட்டியினுள் கொண்டுபோய் வைக்க, நான் அதிர்ந்துபோகிறேன். கோபத்தை வெளியே காட்டவில்லை. ரஜிதன் வேலைக்குப் போட்டு வாறன் என்று கிளம்ப பெண்களின் வேலைமுடியும் வரை பொறுமையாக இருந்துவிட்டு கதவு கேற் எல்லாம் பூட்டிவிட்டுக் கிளம்புகிறேன். ரதி அக்காவின் வீட்டுக்குச் சென்று அக்கா என்று கூப்பிட, கதிரையில் இருந்த அக்கா விசுக்கென எழுந்து உள்ளே போகிறார். எனக்கு முதலில் விளங்கவில்லை. ஏதோ எடுக்கப் போகிறார் என நினைத்து ஒரு இரண்டு நிமிடம் நிற்கிறேன். அவர் வரவேயில்லை. நான் என் ஸ்கூட்டியைத் திருப்பிக்கொண்டு இணுவிலுக்குச் சென்று கணவர், மச்சாள், அன்ரி எல்லோரிடமும் நடந்தவற்றைக் கூற உவை இருவரும் சேர்ந்துதான் பொருட்களை எடுத்திருக்கினம். அவ முதல் சில பொருட்களை எடுக்க பெடிப்பிள்ளை மிச்சத்தை எடுத்திருக்கிறார் என்கின்றனர். அடுத்தநாள் என் இரு அன்ரிமாரையும் ஓட்டோவில் வரும்படி கூறிவிட்டு நான் முன்னே செல்கிறேன். பதினொரு மணிக்கு ரஜிதன் சிரித்தபடி வருகிறார். ஆரிவை என்றதும் நான் என் சித்திமார். நாங்கள் இன்று இங்குதான் தங்கப்போறம். அதுதான் இவையும் வந்தவை என்கிறேன். நான் மனிசனோடை நேற்று உங்களை இருத்துவது பற்றிக் கதைச்சனான். அவர் தனிய ஒருவர் வேண்டாம். ஒரு குடும்பம் என்றால் இருத்திவிட்டு வா எண்டவர்” என்று கூற அவரின் முகம் இருண்டுபோகிறது. “என்னக்கா உப்பிடிச் சொல்லுறியள். நான் எல்லாச் சாமான்களையும் உங்களை நம்பிக் கொண்டுவந்திட்டன்” “நானும் உங்களை நம்பித்தானே மண்வெட்டிகளை வைத்துவிட்டுப் போனனான். முதல்நாள் வைச்சிட்டுப் போனதையே இல்லை எண்டு சொல்லுற உங்களை நம்பி எப்பிடி நான் வீட்டில வச்சிருக்கிறது? “அப்ப எத்தினை நாளில கிளம்பவேணும்” “இப்பவே கிளம்புங்கோ “ “இப்பவேவா? உவ்வளவு பொருட்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு போக வேணும். ஒரு மூண்டு நாள் எண்டாலும் வேணும்” “நீங்கள் ஒரு லாண்ட்மாஸ்டர் பிடிச்சு ஒரேயடியா எல்லாத்தையும் ஏற்றுங்கோ” “அதுக்கு 1500 ரூபா வேணும். என்னட்டை அது இல்லை” “அந்தக் காசை நான் தாறன்” “இரண்டு பேரும் சேர்ந்து என்னை நடுத்தெருவில விட்டிட்டியள்” “நீர் நடுத்தெருவில நிக்கிறதுக்குக் காரணம் நீர் தான். நான் நம்பி உம்மை வீட்டுக்குள்ள விட, என்ர வீட்டிலேயே களவெடுத்திட்டு என்னையே ஏமாத்தின உம்மடை எளிய புத்திதான் நீர் வெளிய போகக் காரணம்” முதல்ல போலீசுக்குப் போகத்தான் நினைச்சனான். பிறகும் அங்க இங்க எண்டு இழுபடப் பிடிக்காமல் தான் சும்மா விடுறன். அதன் பின்னர் அவர் எதுவும் பேசவில்லை. லாண்ட்மாஸ்டர் வந்தவுடன் பொருட்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு செல்ல என் மனம் நீண்ட பெருமூச்சுடன் நிம்மதி அடைகிறது. முடிந்தது
  2. 21 போட்டி….8 புள்ளிகள்….🤣 நம்ம மனநிலை எப்படி இருக்கும் என ஒரு செகண்ட் யோசிக்காமல் வார்த்தைய விட்டுடீங்க இல்ல ஜி🤣. யாழில் போட்டியை யார் வெல்வார்கள் என்பதை விட…. தொடர் முடிய முன்னம் கோஷான் double figures அடிப்பாரா என்பதே சுவாரசியமான கேள்வி🤣🤣🤣.
  3. சீமான் ப‌ற்றிய‌ அர‌சிய‌ல் திரிக‌ளுக்குள் என்னை அறியாம‌ ஏதோ எல்லாம் க‌ண்ட‌ மேனிக்கு எழுதின‌ நான்😋...................... விளையாட்டு திரியில் ப‌ம்ப‌லா தான் எழுதுவேன்..................என்னில் ஒரு பிழையும் இல்லை சுவி ஜ‌யா த‌ப்பு செய்தால் உண்மையை ஒத்துக் கொள்ளுவேன் , நான் விளையாட்டு திரிக‌ளில் வ‌ழ‌மை போல் எழுதுவ‌தையே க‌டை பிடித்து எழுதினேன்...................... இவ‌ள‌வு கால‌மும் விளையாட்டு திரியில் நீங்க‌ளும் நானும் எவ‌ள‌வ‌த்தை மாறி மாறி ப‌ம்ப‌லா எழுதி இருப்போம்................... க‌ட‌ந்த‌ கால‌ போட்டிக‌ளில் உங்க‌ள‌ சிரிக்க‌ வைக்க‌ நான் செய்த‌ மிம்ஸ் இப்ப‌வும் என‌து போனில் இருக்கு இதோ அந்த‌ மிம்ஸ் மீண்டும் உங்க‌ள் பார்வைக்கு............................. இப்ப‌டி ஏக‌ப் ப‌ட்ட‌ மிம்ஸ் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை வைச்சும் செய்து இருக்கிறேன்👍.......................
  4. இனமொன்றின் குரல்8h · பிள்ளையான் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டிய மிக மோசமான கிரிமினல் குற்றவாளி என்பதில் யாருக்கும் மாற்று கருத்திருக்க முடியாது ஆனால் பிள்ளையான் தென்னிலங்கை பயன்படுத்திய வெறும் கருவி மட்டுமே என்பதை நாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் பிள்ளையானை குற்றசெயல்களில் ஈடுபடுத்திய கோட்டாபய ராஜபக்சேவின் "Triploli Platoon" என்கிற புலனாய்வு வலையமைப்பிற்கு பொறுப்பாகவிருந்த மேஜர் பிரபாத் புலத்வத்தே இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றார் விசேடமாக பிள்ளையானுக்கு அடைக்கலம் வழங்கி ராஜபக்சே குடும்பத்தின் நலன்களுக்காக இயக்கிய மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண முதல் பிரிகேடியர் அமல் கருணாசேன வரையான பிரதானிகள் பாதுகாக்கப்படுகின்றார்கள் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காணப்படும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சுதந்திரமாக நடமாடுகின்றார் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என கத்தோலிக்க திருச்சபை அடையாளம் காட்டியுள்ள பிரிகேடியர் சூலா கொடிதுவாக்கு, கேணல் அன்சார், கேணல் கெலும் மத்துமகே உட்பட்ட பிரதானிகள் என யாரும் இதுவரை விசாரணை வலயத்திற்குள் கொண்டுவரப்படவில்லை தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் ஒன்றில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய லொறியொன்றை தடுக்காது விடுவித்தது தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்படவில்லை இந்த லொறியானது கோட்டாபய ராஜபக்சவிற்கு மிக நெருக்கமான அவன்ட் கார்ட் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமானதாக இருந்ததாக அடையாளம் காணப்பட்டு இருந்தது தொடர்பாக நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் விசாரிக்கவில்லை இதற்கிடையில் பாதுகாப்பு அமைச்சின் துணைப்படையாக மாதம்தோறும் 35 லட்சம் பிள்ளையானுக்கு அரச பொது நிதியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கின்றது கிழக்கின் இராணுவ முகாம்களான கபரண இராணுவ முகாம் , இருதயபுரம் இராணுவ முகாம் , வெலிங்கந்த இராணுவ முகாம் உட்பட பல முகாம்களிலிருந்து செயற்பட பிள்ளையானுக்கு அனுமதி வழங்கப்பட்டிருகின்றது தமிழ் வர்த்தகர்கள் உட்பட பொதுமக்களை கடத்தி பணம் வசூலிக்க கோட்டாபய ராஜபக்சே அவர்கள் பிள்ளையான் உட்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கியமையை அமெரிக்கா தூதுவராலயம் அம்பலப்படுத்திருக்கின்றது அதே போல கபரண உட்பட்ட இராணுவ முகாம்களில் இந்த பணம் இராணுவ அதிகாரிகளுக்கு மத்தியில் பகிரப்பட்டத்திற்கும் ஆதாரம் இருக்கின்றது விசேடமாக 'கன்சைட்-Gun Site’ வதை முகாம் பொறுப்பதிகாரியாக இருந்த சுமித் ரணசிங்க அவர்களுக்கு தமிழ் பெண்களை கடத்தி பிள்ளையான் வைத்த விருந்து வரை பொதுவெளியில் தரவுகள் உண்டு இது தவிர வெளிநாடுகளிருந்து இராணுவ புலனாய்வாளர்களுக்கு பணியாற்றும் புளொட் அமைப்பை சேர்ந்த ஸ்டாலின் ஞானம் உட்பட்ட இந்தியன் இராணுவ காலத்தின் ஒட்டு குழுக்களும் பிள்ளையானை பயன்படுத்திருக்கின்றன அதாவது இராணுவம் செய்ய முடியாத வேலைகளை செய்து முடிப்பதற்கு கோட்டாபய ராஜபக்சவின் ஒழுங்கமைப்பில் இராணுவ புலனாய்வு கட்டமைப்பு பிள்ளையானை பயன்படுத்திருக்கின்றது ஆனால் எந்த கிரிமினல் குற்ற செயல்கள் தொடர்பாகவும் கோட்டாபய ராஜபக்சே முதல் இராணுவ புலனாய்வு கட்டமைப்புயை சேர்ந்த யாரிடமும் வாக்கு மூலம் கூட பதிவு செய்யப்படவில்லை ஆனால் தேர்தலை முன்னிட்டு மிக தெளிவாக பிள்ளையான் பேரில் சகல கணக்குகளையும் எழுதி முடிக்க தென்னிலங்கை தயாராகி விட்டது சொந்த இலாபங்களுக்காக வேறு தரப்புகளிடம் தங்கள் சொந்த இனத்தை விலை பேசியவர்கள் அந்த தரப்புகளின் தேவைகள் முடிவடைய அவர்களாலேயே பலியிடப்படுவார்கள் என்பதற்கு பிள்ளையான் நவீன சான்றாகி இருக்கின்றார்
  5. சென்னையில் 6 பந்து வீச்சாளர்கள். இவர்களில் Khaleel Ahamed பவர் பிளே ஓவர்களில் சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். பெரும் பாலும் இவர் முதல் 6 ஓவர்களில் 3 ஓவர்கள் வீசுவார். மற்றைய 3 ஓவர்களில் ஜடேஜா, பதிரானா போன்றவர்கள் ப ந்து வீசுவதில்லை . முன்பு வீசி பல ஓட்டங்களை விட்டு கொடுத்திருக்கிறார்கள். பதிரானா இறுதி ஓவர்கள் சிறப்பாக வீசக்கூடிய death bowler. முன்பு மேற்கிந்தியா வீரர் பிராவோ சென்னை அணியின் death blower ஆக இருந்தார். பதிரனவுடன் பெரும்பாலும் கடைசி ஓவர்கள் வேகப்பந்து விச்சளார்கள்தான் பந்து வீசுவார்கள். சுழல் பந்து /மெதுவாக வீசுபவர்கள் வீச்சாளர்கள் வீசினால் எதிரணி வீரர்கள் பல ஓட்டங்கள் பெறுவார்கள். ( பங்களூர் அணியின் கருணால் பாண்டியா சில போட்டிகளுக்கு வீசி இருக்கிறார்.இதில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோனி கடைசி ஓவரில் இரண்டு 6 ஒட்டங்களும், 1 நான்கு ஓட்டமும் பெற்றார். ரித்து சிங் (KKR) நேற்று கடைசி ஓவரில் ரவி பிஷ்னோய்க்கு எதிராக 4,4,6 என ஓட்டங்கள் பெற்றார்). khaleel அஹமத் மிகுதியாக இருந்த 4 வது ஓவரையும் இறுதி ஓவர்களில் வீசினார் சென்னையின் Khaleel Ahamed பவர் பிளேயில் 3 ஓவர்கள் போட மிகுதி 3 ஓவர்களில் 2 ஓவர்கள் முகேஷ் சவுத்திரி வீசினார் . அவருடைய 2 வது ஓவரில் அதிக ஓட்டங்களை எதிர் அணியினர் எடுத்ததினாலே அஸ்வினை 6 ஓவருக்கு அழைக்கப்பட்டார். (பவர் பிளே ஓவரில் சுழல் பந்து வீச்சாளர்களில் முன்பு இலங்கை வீரர் திக்சனா பந்து வீசுபவர். அஸ்வினும் வேறு அணியில் இருந்தபோதும், முன்பு சென்னைக்காக விளையாடியபோதும் வீசியிருக்கிறார். அத்துடன் பவர் பிளே ஓவர்களில் ஜடேஜா, பத்திரான போன்றவர்கள் பந்துவீசுவதில்லை.) 6 ஓவரில் அஸ்வின் 20 க்கு மேற்பட்ட ஓட்டங்களை வழங்கினார். பவர் பிளே முடிந்த 8 வது ஓவரில் அஸ்வின் 2 விக்கேற்றுக்களை பெற்றார் . kahaleel ahamed, பத்திரனா தலா 4 ஓவர்கள் எல்லபோட்டிகளிலும் வீசுவார்கள். ஆக இவர்களின் 8 ஓவர்கள் பவர் பிளே, இறுதி ஓவர்களில் உபயோகிக்கப்படும். 2 ஓவர்கள் மகேஷ் சவுத்திரி வீசியதினால் மிகுதி 10 ஓவர்களில்தான் சென்னை அணி, சுழல் பந்து வீச்சாளர்களை பயன் படுத்தி இருக்கிறார்கள். இவர்களில் அஸ்வின் 4 ஓவர் வீசியதால் மற்றைய இருவருக்கும் தலா 3 ஓவர்கள் வழ்ங்கப்பட்டது . முன்பு சென்னை அணியில் தீக்சனா, மொயின் அலி, ஜடேஜா என இருந்தபோதும் ஒரு முறையும் 12 ஓவர்கள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சென்னை அணியில்தான் பிரபல்யமான 3 சுழல் பந்து விச்சளார்கள் இருக்கிறார்கள். மற்றைய அணியில் அதிக பட்சம் 2 பிரபல்யமான சுழல் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
  6. நாம ரணிலின் ஆட்கள். கண் வைத்தால் பிரித்தே விடுவம்.
  7. இலங்கை வரி இல்லை, இது அமெரிக்ககாவின் இலங்கை மீதான வரி, ஏற்றுமதி இறக்குமதி நிலுவையினடிப்படையில். அமெரிக்க இரண்டு வகையான வரிக்கொள்கையினை தற்போதய ட்ரம் அரசு பின்பற்றுகிறது. அனைத்து இறக்குமதிகளின் மீதும் 10% வரி மற்றது அதிகமாக அமெரிகாவிற்கு ஏற்றுமதி செய்வோருக்கு பிரத்தியேகமான வரி. இலங்கையின் அமெரிக்க இறக்குமதி $368 மில்லியன். இலங்கையின் அமெரிக்க ஏற்றுமதி $3000 மில்லியன். அமெரிகாவிற்கு இலங்கையினுடனான வர்த்தகத்தில் ஏற்படும் நட்டம் $2632 மில்லியன். வரி = (வர்த்தக நிலுவை 2632/ அமெரிக்காவின் மொத்த இறக்குமதி 3000)*100 இதன் பிரகாரம் 87.73% வரி, அதனுள் முறையற்ற நாணய கொள்கை என்பவற்றுடன் 88% வரியினை இலங்கை பெறுகிறது அதில் 50% தள்ளுபடியாக 44% வரியினை இலங்கை மீது அமெரிக்கா நிர்ணயித்துள்ளது.
  8. இது பழைய மேற்கிந்தியதீவுகள் அணி மாதிரி. சுவி நந்தன் ஆரம்பத் துடுப்பாட்டம் டெஸ்மன் கெயின்ஸ் கோர்டன் கிறீனிட்ச் மாதிரி. பின்னால ரசோதரன் விவியன் ரிச்சட்ஸ் மாதிரி. ஒருத்தரும் உடைக்கேலாது. ஏலுமென்டா பந்து போட்டுப் பாருங்க 😁
  9. சுவி ஐயா தலைமையில் இது நல்ல கூட்டு அண்ணா.............. ஆறும் அசல் தங்கங்கள் அண்ணா (நாளை இந்தப் போட்டி முடியும் வரை).............😜. மூன்று கூட்டாளிகள் அநேகமாக சேர்ந்து தான் வருவினம், போவினம்.......... நாங்கள் ஒன்று இரண்டு பேர்கள் அப்பப்ப அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றோம்..............🤣.
  10. முதல்வர் @suvy க்கு வாழ்த்துக்கள். இந்தக் கூட்டு சரியில்லையே?
  11. GMT நேரப்படி நாளை வியாழன் 10 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB எதிர் DC 17 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் 06 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் சுவி கந்தப்பு ஏராளன் ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  12. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 23வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சனின் அதிரடியான 82 ஒட்டங்களுடனும், வேகமாக அடித்தாடிய ஜொஸ் பட்லர், ஷாரூக் கான், ராகுல் தெவதியா, ரஷீட் கான் ஆகியோரின் பங்களிப்புடனும் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்களை எடுதது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களில் ஷிம்ரொன் ஹெட்மயரைத் தவிரப் பிறர் நிலைத்து ஆடமுடியாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @goshan_che இரட்டை இலக்கப் புள்ளிகளை எடுத்திருந்தாலும் முதல் எட்டு, கடைசி எட்டு நிலைகளில் மாற்றங்கள் இல்லை!
  13. சீமான் இப்படியான வழக்கை நிச்சயம் வித்தியாசமாகத் தான் கையாண்டிருப்பார். 1. வழக்கைப் போட்டிருக்க மாட்டார். 2. பின்கதவால் ஆளுனரிடம் டீல் பேசி, ஏதாவது செய்ய முயன்றிருப்பார். 3. ஆளுனர் அதை எதிர்த்து வழக்குப் போட்டிருப்பார். 4. நீதி மன்றம் அழைத்தால் போகாமல், ஊர் ஊராக சுற்றித் திரிவார். 5. அழைப்பாணையை வாங்காமையால் அவர்கள் கதவில் ஒட்டினால் "தூள் தூளாகக் கிழித்து" சீமான் குழு ஆணையை வாசிக்க முற்படும்😂. 6. பிறகு வழக்கைத் தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் போவார், யாராவது பிரபல வட இந்திய வழக்கறிஞர்கள் உதவுவர்! 7. கேஸ் ஓவர்! Trivia: இதே போல நடந்து கொள்ளும் இன்னொரு பிரபலம் மேற்குலகில் இருக்கிறார், யார் சொல்லுங்கோ பார்க்கலாம்😂?
  14. பையா அவர் வெல்லும் போது ஜாலியாக இருந்தார். நிலமை கொஞ்சம் கீழே இறங்கும் போது கடுப்பாகிவிட்டார். வீட்டில என்றால் மனைவியிடம் காட்டியிருப்பார்.சொறி சொறி பிள்ளைகளிடம் காட்டியிருப்பார். இதை நண்பர்களிடம் தானே இறக்கிவிடணும். எனவே நீங்க வழமை போலவே எழுதுங்கள். நீங்க தான் கட்டத்தையே தாங்க கூடிய ஆளாச்சே. டோன் வொறி
  15. வீரப்பையன் - நான் நகைச்சுவைக்காகவே எழுதினேன். நீங்கள் அழைத்தினால்தான் போட்டியில் கலந்து கொண்டேன். கலந்து கொண்டது மகிழ்ச்சி. போட்டியில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அடுத்தமுறையும் கட்டாயம் கூப்பிடுங்கோ. நிச்சயம் கலந்து கொள்வேன். நீங்கள் கருத்துகள் எழுதுவதினால்தான் இந்த திரி கலகலப்பாக இருக்கிறது. அவர் 8 புள்ளிகளுடன் இருப்பதினால்தான் 10 புள்ளிகளுடன் ஓரளவு நிம்மதியாக இருக்கிறேன் 😀
  16. எனது புரிதல்களில் அமெரிக்கா இரண்டு வகையான வரி விதிப்புகளை மேற்கொள்கிறது. அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களுக்கும் 10% வரிவிதிப்பது முதலாவது வகை(Non trade deficit). இரண்டாவது வகை அமெரிக்க ஒரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதனை விட இறக்குமதி அதிகமாக உள்ள நாடுகளின் மேல் விதிக்கப்படும் வரி இரண்டாவது வகைப்படும் (Trade deficit). அவுஸ்ரேலியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதனை விட பல மடங்கு இறக்குமதி செய்கின்றது, இருப்பினும் முதலாவது அடிப்படை வரி மூலம் அவுஸ்ரேலிய பொருள்களுக்கு 10% வரியினை அவுஸ்ரேலியா செலுத்துகிறது. இலஙையின் நிலவரம் வேறானது, இலங்கை அமெரிக்காவிற்கு $3000 மில்லியன் ஏற்றுமதி செய்கிறது, ஆனால் இறக்குமதி $368 மில்லியன் (கடந்த ஆண்டு) இந்த வர்த்தகத்தின் மூலம் அமெரிக்காவிற்கு $2632 மில்லியன் வர்த்தக நிலுவை ஏற்படுகிறது. வரி = (வர்த்தக நிலுவை 2632/ அமெரிக்காவின் மொத்த இறக்குமதி 3000)*100 இதன் பிரகாரம் 87.73% வரி, அதனுள் முறையற்ற நாணய கொள்கை என்பவற்றுடன் 88% வரியினை இலங்கை பெறுகிறது அதில் 50% தள்ளுபடியாக 44% வரியினை இலங்கை பெறுகிறது. இதில் இலங்கையினால் எதுவும் செய்ய முடியாது, இலங்கையின் பொருள்களின் ஏற்றுமதி பெருமளவிலான தாக்கம் ஏற்படும் ஆனால் அமெரிக்காவின் புதிய வரி கொள்கை அவர்கள் நாட்டில் நலிந்து போகும் உற்பத்தி துறையினை வளப்படுத்தும் முயற்சி என கூறுகின்ற நிலையில் இலங்கையின் பெருமளவான ஏற்றுமதி விவசாயதுறை ஏற்றுமதியாக இருக்கும் என கருதுகிறேன் அதனால் இந்த வரிகளால் உற்பத்தி துறைக்கு எந்த நலனும் இல்லை மறுவளமாக சாதாரண அமெரிக்க குடிமக்களின் வாழ்க்கை செலவு அதிகரிப்பே ஏற்படும், ஏனெனில் இந்த வகையான விவசாய பொருள்கள் பெருமளவான அத்தியாவசிய ஆனால் மாற்றீடற்ற பொருள்களாக இருக்கும். அத்தியாவசிய பொருள்களின் விலை மாற்றம் அதன் கேள்வியில் தாக்கம் செலுத்துவதில்லை (விலை நெகிழ்ச்சி தன்மை 1 குறைவாக இருக்கும்).
  17. அனுர… சிங்களவர். அவர் சிங்களத்தில் தான் மேலே கையெழுத்து வைத்துள்ளார். தமிழக, ஈழத் தமிழர்தான்… தாங்கள் பிரிட்டிஷ்காரர் என்ற நினைப்பில் ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடுவார்கள்.
  18. ஒன்பது உடனே ரதி அக்காவுக்கு போன் செய்து, “கிறைண்டரின் ஒரு கப் எமது படுக்கை அறையில் உள்ள அலுமாரியுள் கிடந்தது அக்கா” என்றுவிட்டு எடுத்துக்கொண்டு போனவர்கள் பற்றி அவருக்குத் திட்டுகிறேன். நீங்கள் டென்ஷன் ஆகாதேங்கோ நிவேதா. பிச்சைக்காரக் கூட்டத்தைக் கொண்டுவந்து இருத்தியிருக்கிறியள் என்கிறா. எப்பிடிக் கதவைத் திறந்ததுகள். நீங்கள் பூட்டாமல் போட்டியளோ என்கிறா. முதல் வந்து இருந்த சனங்கள் எந்தப் பொருளையுமே எடுத்துக்கொண்டு போகேல்லை என்றுவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டு மீண்டும் அந்த அறைக்குள் சென்று எப்படித் திறந்து எடுத்திருப்பார்கள் என்று ஆராய எனக்குப் புரிய ஆரம்பிக்க, கதவுகளை கொண்டியை எல்லாம் பூட்டிவிட்டு வெளியே வந்து கதிரை ஒன்றை எடுத்துக்கொண்டு போய் கதவுக்கு அருகில் வைக்கிறேன். கதவுக்கு அண்மையில் ஒரு காற்றோட்டமாக இருப்பதற்காக ஒரு சிறிய யன்னல் உயரத்தில் உண்டு. இரண்டு பக்கமும் திறக்கும்படியான ஒரு அமைப்பு உள்ள யன்னல். கதிரையில் ஏறி நின்று அதைத் திறக்கப் பார்க்கிறேன் எனக்கு எட்டவில்லை. அந்தநேரம் பார்த்துக் கணவர் போன் செய்கிறார். ஆரும் இல்லாதபோது ஏன் தேவையில்லாத வேலை பார்க்கிறாய். விழுந்தாலும் தூக்க ஆட்கள் இல்லை என்று திட்டுகிறார். நான் என் கண்டுபிடிப்பைச் சொல்ல கணவருக்கு விளங்குகிறது. கடந்த தடவை கணவருடன் சென்றபோது மூன்று அறைகளுக்கு மாபிள் பதித்திருந்தோம். இந்த அறைக்கு மேலே திறாங்கு இருந்ததுதான். கீழே புதிதாக ஓட்டை போடவேண்டும். அதைப் போடக் கணவர் மறந்துவிட்டார். அவர்கள் எனியை வைத்து மேலே உள்ள சிறிய யன்னலை எப்படியோ திறந்து கம்பியை விட்டுத் திறாங்கையும் மேலே இழுத்துவிட்டு கதவைத் தள்ள கதவு திறந்திருக்கும். பொருட்களை எடுத்துவிட்டு மீண்டும் பூட்டைப் பொருத்தி வைத்து இழுக்கக் கதவு பூட்டியிருக்கும் என்று கணவர் சொல்ல நானும் அப்படியே செய்து பார்க்க, பூட்டிய கதவு திறந்து மீண்டும் பூட்டு அதேபோல் நன்றாகப் பூட்டுகிறது. சரி இப்படித்தான் எடுத்திருப்பார்கள் என்று தெரிந்துவிட்டது. ஆனால் ஆர் எடுத்திருப்பினம் என்று நானும் கணவரும் கதைத்துக் களைத்து, வீட்டுக்குள்ள சரி வெளியில hose பைப் மூன்று வைத்துவிட்டுச் சென்றது. அதைவிட 25 ஆயிரம் பெறுமதியான முள்ளுக் கம்பி ரோள். அதுகள் இருக்கோ பார் என்கிறார். சென்று பார்த்தபோது ஒரு 12 மீற்றர் நீளமான பைப்பும் முள்ளுக்கம்பிகளும் இல்லை. கணவரிடம் சொல்ல “எல்லாம் எங்கடை பிழை. கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பெறுமதியான பொருட்கள் எடுத்திருக்கினம். போலீசில சொன்னாலும் அவங்கள் வெளிநாடு எண்டதும் எங்களிட்டைக் காசு கறக்கப் பார்ப்பார்கள். இனி என்ன செய்யிறது. பேசாமல் விடு. உடன அந்த தச்சப் பெடியைக் கூப்பிட்டு ஓட்டை போட்டுத் திறாங்கைப் போடு” என்றவுடன் அவருக்கு போன் செய்கிறேன். அடுத்தநாள் புல்லுப் பிடுங்க இருவர் வருகின்றனர். அதைவிட இன்னும் சில மரங்களும் நடுவோம் என்று முன்னர் எனக்கு அடிக்கடி வேலை செய்பவர்கள் இருவரையும் வரும்படி சொல்கிறேன். ஊரெழுவில் இருக்கும் லங்கா பார்மில் கொஞ்ச மரக் கன்றுகளையும் வாங்கி அவர்கள் அழைத்த ஓட்டோவில் கன்றுகளை கொண்டுவந்து வீட்டில் இறக்கிவிட்டு இணுவிலுக்குச் செல்கிறேன். அடுத்தநாள் காலை எழுந்து எனக்கும் அன்ரிக்கும் இடியப்பம், சொதி, சம்பல், பருப்பு சமைத்துவிட்டு சாப்பாட்டுப் பெட்டியில் கொண்டு செல்கிறேன். போகும் போது கடலை வடைகளும் றோள்ஸ்களும் எல்லாருக்கும் வாங்கிச் செல்கிறேன். ஒன்பதரை ஆகியும் யாருமே வேலைக்கு வந்து சேரவில்லை. ரஜிதனுக்கு போன் செய்ய அவை பத்து மணிக்குத்தான் வருவினம் அக்கா என்கிறார். தோட்ட வேலைக்கும் 10 மணிக்குத்தான் போறவையோ என்கிறேன். அவை வந்திடுவினம் அக்கா. நான் 11 இக்கு வந்திடுவன் என்கிறார். நான் போனை வைக்கவும் நான் வேலைக்கு அழைத்தவர்கள் வந்துவிட கன்றுகளைக் கொண்டுசென்று அந்த அந்த இடங்களில் வைத்துவிட்டு எப்படி நடுவது என்று மீண்டும் அவர்களுக்கு அறிவுறுத்த “ என்னம்மா எங்களுக்குச் சொல்லுறியள். எங்கள் வேலையே இதுதானே என்கின்றனர். அவர்கள் கேட்ட மண்வெட்டிகள் இரண்டைக் கொண்டுவந்து கொடுத்தபடி “உங்கள் வேலை உதுதான். ஆனால் கடந்த ஆண்டு நீங்கள் பின்பக்கக் கரையில் ஊன்றிய எந்தக் கிளுவையும் முளைக்கவில்லை. பார்த்தபோது எல்லாக் கிளுவையும் பட்டுப்போய் இருந்தது. ஒன்றை இழுத்துப் பார்க்க சும்மா கையோடை வருது. ஏனெண்டால் நீங்கள் ஆழமாய் கிடங்கு எடுத்து நடவில்லை. அதுதான் திருப்பவும் சொல்லுறன். எந்த நேரமும் பக்கத்தில நிண்டு சொல்ல ஏலாது. ஒழுங்காக நடுங்கோ” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு பக்கத்திலேயே நிற்க, அவர்கள் நான்கு கன்றுகளை நட்டு முடிக்க இரண்டு பெண்டுகள் வருகிறார்கள். எத்தினை மணிக்கு வரச் சொன்னது. ஆடிப்பாடி வருகிறீர்கள் என்றுவிட்டு அவர்களுக்குப் புற்களைப் பிடுங்கவேண்டிய இடங்களைக் காட்டுகிறேன். 11.15 இக்கு ரஜிதன் வருகிறார். அக்கா இவைக்குச் சமைக்க வேண்டாமே என்கிறார். எல்லாருக்கும் கடையில வாங்கிக் கொடுப்பதாகத்தானே கதைத்தது. பிறகென்ன என்று கொஞ்சம் காரமாகச் சொல்லிவிட்டு, பெரிய hose பைப்பைக் காணவில்லை. எங்கே என்கிறேன். எனக்குத் தெரியாது அக்கா என்கிறார். நான் லண்டனில் நின்றபோது நீங்கள் கேற் வரை கொண்டுபோய் தண்ணீர் விட்டீர்களே? இல்லை அக்கா அது சின்னனாலதான் விட்டனான் என்கிறார். அவர் பொய் சொல்கிறார் என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்தாலும் மேற்கொண்டு எதுவும் கதைக்காது அவர் சொன்னதை நம்பியதுபோல் அப்பால் சென்று மரங்கள் நடுபவர்களைப் பார்க்கிறேன். கன்றுகளை நட்டுவிட்டு வந்த ரங்கன் அம்மா ஒரு தேத்தண்ணி தாறியளே என்று கேட்க குசினிக்குச் சென்று எல்லாருக்கும் தேநீர் ஊற்றிவந்து ரோலஸ்சும் கொடுக்கிறேன். அம்மா பின்னால வேலை செய்யிறவையிலையும் ஒரு கண் வச்சிருங்கோ. ஒராள் பிடுங்க மற்றவ நிழலுக்குள்ள போய் நிக்கிறா என்று எனக்கு மட்டும் கேட்பதுபோல் சொல்கிறார். அதன்பின் அவர்கள் ஒரு பதினைந்து நிமிடத்தில் மீண்டும் வேலையை ஆரம்பிக்க இரண்டு பெண்டுகளும் எழும்பாது மரக் குற்றிமேல் இருக்க "என்ன வேலை செய்யிற நோக்கம் இல்லையா? எழும்புங்கோ" என்கிறேன். ஆடி அசைந்து அவர்கள் எழுந்து செல்ல சிறிதுநேரம் அவர்கள் வேலை செய்வதை நின்று பார்க்கிறேன். ரதியக்காவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வர அவவுடன் கதைத்தபடி முன்பக்கம் வர ரஜிதன் பின்பக்கமாகச் செல்கிறார். வேலை செய்ய வந்தவர்கள் பற்றிக் கூற வடிவா பாக்கவேணும் நிவேதா. சும்மா நேரத்தைக் கடத்துவினம் என்கிறா. எல்லாம் கதைத்து முடிய “ நிவேதா உங்களிட்டைக் கிடக்கிற கிறைண்டர் கப்பை எனக்குத் தாங்கோ. நான் ஒரு விலை போட்டு எடுக்கிறன்” என்கிறா. எனக்கு யோசனை ஓட அது எல்லாத்துக்கும் பொருந்தாதே அக்கா என்கிறேன். என்னட்டை இரண்டு பழைய கிறைண்டர் இருக்கு. ஏதாவது ஒன்றுக்குப் பொருந்தும் தானே என்கிறார். பார்ப்போம் அக்கா என்றபடி போனை வைக்க “அக்கா என்னவாம்” என்றபடி ரஜிதன் வருகிறார். கிறைண்டர் கப்பை அக்கா தனக்குத் தரட்டாம் என்றவுடன் “அப்ப அக்கா வீட்டினர் தான் எல்லாத்தையும் எடுத்தவையோ” என்கிறார். எனக்குத் தெரியேல்லை என்றுவிட்டு அப்பால் நகர்க்கிறேன். மதிய உணவு நேரம் வர முன்னரே ரங்கனிடம் உணவு வாங்கிவருமாறு கூற தான் சென்று வாங்குவதாக ரஜிதன் கூற அவரிடம் பணத்தைக் கொடுக்கிறேன். அவர் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு செல்ல பக்கத்தில் வந்த ரங்கன் “அம்மா குறை நினையாதேங்கோ, உவரைப் பார்த்ததால் சரியில்லைப் போலத் தெரியிது. உவரை இருத்திறதெண்டால் ஒண்டுக்கு இரண்டுதரம் யோசியுங்கோ என்கிறார். நானும் அதைத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறன் என்றுவிட்டு பெண்களைப் பார்க்கிறேன். அவர்கள் ஆடிப்பாடிப் புற்களைப் பிடுங்க, நான் எதுவும் கூறாது பார்த்துவிட்டு சாப்பாடு வாங்கப் போயிருக்கிறார். வந்ததும் கூப்பிடுறன் என்றுவிட்டு உள்ளே செல்கிறேன். உணவுப் பொதிகள் வந்ததும் எல்லோரும் உண்ண ஆரம்பிக்க, அவர்களுக்கு தண்ணீர் கொண்டுசென்று கொடுத்துவிட்டு நான் உள்ளே சென்று உண்ண ஆரம்பிக்கிறேன். ரஜிதனை உண்ணச் சொல்ல தனக்கு ரோள்ஸ் சாப்பிட்டது பசிக்கவில்லை என்கிறார். உங்கள் உணவு பழுதாகப் போகிறதே என்கிறேன். "அக்கா நீங்கள் ஃபிரிஜ் வாங்கேல்லையோ" என்கிறார். "எனக்கு எதற்கு இப்ப ஃபிரிஜ். நான் வந்து இருக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்" என்கிறேன். “அக்கா என்னட்டை வீட்டில ஒரு ஃபிரிஜ் இருக்கு. அதைக் கொண்டுவரட்டோ? “அதுக்கென்ன கொண்டுவாரும், ஆனால் எனக்குத் தேவை இல்லை” “லாண்ட் மாஸ்டருக்கு 1500 வேணுமக்கா” “சரி அதை நான் தாறன்” உடனேயே வீட்டுக்குச் சென்று ஃபிரிஜ்சைக் கொண்டுவந்து குசினியில் வைக்கிறார். “அக்கா விரும்பினதெல்லாம் நீங்கள் வைக்கலாம்” “எனக்கு அதற்குள் வைக்க ஒன்றும் இல்லை” “உங்களுக்காகத்தான் கொண்டுவந்தனான்” “நான் முதலே சொன்னானதானே எனக்கு வேண்டாம் என்று, பிறகென்ன புதுக் கதை. உம்மடை வீட்டில இருந்தால் ஆரும் களவெடுத்துக்கொண்டு போயிடுவினம் என்றுதானே இங்கு கொண்டுவந்தனீர், பிறகென்ன எனக்காக கொண்டு வந்தது என்ற கதை. உப்பிடியான கதையள் எனக்குப் பிடிக்காது என்றுவிட்டு எழுந்து வெளியே சென்றால் இன்னும் வேலையை ஆரம்பிக்காமல் திண்ணையில கதைத்துக்கொண்டு இருக்கினம் பெண்டுகள். வந்ததே பிந்தி. நான் சொல்லாட்டில் வேலை செய்ய மாட்டியளோ? சாப்பிட்டு முடிச்சு ஒரு மணித்தியாலமாப் போச்சு என்றவுடன் எழுந்து செல்கின்றனர். ரஜிதன், நான் தென்னைக்கு பொச்சுத் தாக்கிறவையை பார்த்திட்டு வாறன். உவையை ஒழுங்கா வேலை செய்யச் சொல்லுங்கோ என்றுவிட்டு சென்று அவர்களைக் கவனித்துவிட்டு வர பின்பக்கத்திலிருந்து வந்த ரஜிதன், அக்கா நீங்கள் இருக்க நிக்க விடாமல் வேலை வாங்கிறியளாம் என்றவுடன் “வாறது பத்து மணிக்கு. ரோஸ் சாப்பிட்டு தேத்தண்ணி குடிக்க அறை மணித்தியாலம், மத்தியானச் சாப்பாட்டுக்கு ஒரு மணித்தியாலம். உப்பிடித்தான் மற்ற இடங்களிலையும் வேலை செய்யிறவையாமோ? சம்பளத்தைக் குறைச்சுத் தரட்டோ என்று அவையைக் கேளுங்கோ என்று கோபமாகச் சொல்ல, சரி அக்கா விடுங்கோ என்றுவிட்டு நான் வேலைக்குப் போட்டுவாறன் அக்கா என்றுவிட்டுக் கிளம்ப நான் பின்னால் சென்று புல்லுப் பிடுங்குவதைக் கண்காணிக்கிறேன். இன்னும் கொஞ்ச இடத்துக்குப் புல் பிடுங்க இருக்கு. நான்கு மணியானதும் வீட்டுக்குச் செல்லக் கிளம்ப இன்னும் ஒரு மணிநேரத்தில இவ்வளவையும் பிடுங்கிவிட்டுப் போங்கோ என்று கண்டிப்புடன் சொல்ல வேண்டா வெறுப்பாக செய்கின்றனர். அவர்களுக்குத் தேனீரும் கடலைவடையும் கொடுக்க உண்டு விட்டு புல்லைப் பிடுங்க எழுகின்றனர். ஐந்து மணியானதும் கைகால்களைக் கழுவிக்கொண்டு வர நான் அவர்கள் சம்பளத்தைக் கொடுக்க நாளைக்கும் வாறதோ என்கின்றனர். நாளை வாறதெண்டால் ஒன்பது மணிக்கு நிக்கவேணும். இல்லை என்றால் வரவேண்டாம் என்கிறேன். மற்றவர்களின் வேலையும் முடிய இரண்டு மண்வெட்டிகளையும் புத்துவெட்டியையும் கழுவிக் கொண்டு வந்து தர, நான் உள்ளே எடுத்து குசினி மூலையில் வைத்துவிட்டு அவர்களுடனே கதவுகளைப் பூட்டிவிட்டு வெளியே வர, நான் ஸ்கூட்டியை எடுத்து வந்து கேற்றைப் பூட்டும் வரை என்னுடன் நின்று, நான் பிரதான பாதைக்கு வரும்வரை எனக்கு முன்னால் மெதுவாக ஸ்கூட்டியை ஒட்டிக்கொண்டுவந்து கவனமாப் போங்கோ என்று சொல்லிவிட்டு வேகமெடுக்கின்றனர்.
  19. தமிழ் நடிகைகள் சீக் சீக் .வத்தலும் சொத்தலுமா?...சிங்கள நடிகைகள், மலையாள நடிகைகள் போல இருப்பினம் 6 மாத பயிற்சியை ஒரு வருடம் நீடித்து படிக்கலாம்
  20. சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு 90 நாள் வரிகளை நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவிட்டார். சீனாவைத் தவிர, அனைத்து "பரஸ்பர" வரிகளிலும் 90 நாள் இடைநிறுத்தத்தை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார், இதன் மூலம் வரிகள் 125% ஆக அதிகரிக்கும். பெய்ஜிங் ஒரு உடன்பாட்டை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். "சீனா ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது. அதை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறினார். https://www.cnn.com/politics/live-news/trump-tariffs-cnn-town-hall-04-09-25/index.html
  21. இல்லை என நினைக்கிறேன். எத்தனையோ சிங்களவர்கள் கைது செய்யப்பட வேண்டிய நிலையில் வியாழேந்திரனும் பிள்ளையானும் தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  22. என்ன இப்படிக் கேட்டுட்டேள் ......... இப்பிடியான நடனங்கள்தான் பார்ப்பது . ......... ! 😂
  23. மத்தேயு 6 : 3 - சோம.அழகு “கயலு… உனக்கு சுண்டல் அவிச்சு வச்சிருக்கேன். அந்தச் சின்ன சம்படத்துல வடையும் வாங்கி வச்சிருக்கேன். பசிச்சா சாப்பிடு தங்கம். விளையாண்டு முடிச்சுட்டு எழில் அக்கா வீட்டுல இரு. நான் வந்து கூப்பிட்டுக்குறேன். சரியா?” – அவ்வளவு நேரம் தொடுத்த பூச்சரங்களையும் மாலைகளையும் கூடையினுள் எடுத்து வைத்து வழமையான மாலை வியாபரத்திற்குக் கிளம்பியவாறே தன் மகளிடம் வாஞ்சையாகக் கூறினாள் மலர். என்ன ஒரு பெயர் பொருத்தம்! “யம்மா… நானும் கூட வாரனே!” – கிட்டத்தட்டக் கெஞ்சினாள் கயல். இது வாராவாரம் நடக்கும் கதைதான். வார நாட்களில் கயலின் வீட்டுப் பாடத்தைக் காரணம் காட்டி உடன் அழைத்துச் செல்ல மறுத்துவிடுவாள் மலர். வார இறுதியில் சில சமயம் பிள்ளையின் ஆசைக்கு வளைந்து கொடுக்க வேண்டி வரும். “வேணாங்கண்ணு… படிக்குறதுனா படி; இல்லனா பக்கத்து வீட்டுக்குப் போய் விளையாடக் கூட செய். எதுக்குப் போட்டு அந்தக் கூட்டத்துல வந்து….?” “ம்மா… ப்ளீஸ் மா…” - மறுதலிக்கவே முடியாத ஒரு முகத்தை எங்கிருந்துதான் கொண்டு வருவாளோ? வேறு வழியில்லாமல் அந்த வெகு சில நாட்களில் இன்றும் ஒன்றாகிப் போனது. மிகவும் பொறுப்பாக ஒரு சிறிய கூடையைத் தானாக எடுத்து வந்து, “ம்ம்.. எனக்கும்” என்று மலரிடம் நீட்டினாள். “சொன்னா கேட்க மாட்டா… இந்தா.... ஆனா கொஞ்சந்தான் தருவேன்” என்றபடி வெறும் நான்கைந்து பூச்சரங்களை மட்டுமே அக்குட்டிக் கூடையினுள் இட்டாள். அம்மாவைப் போலவே கூடையை இடுப்புப் பக்கத்தில் வைத்துப் பிடித்தவள் தன் வயதிற்கே உரிய களிப்புடன் ஒவ்வொரு காலாக மாற்றி மாற்றி துள்ளிக் குதித்தவாறே தன் குதிரைவால் இடமும் வலமும் ஆட குதூகலமாகச் சென்றாள். தன் மகளைப் பார்த்துப் பார்த்துப் பூரிப்படைந்தவாறே மென்புன்னகையுடன் உடன் நடந்து வந்தாள் மலர். அந்தத் தெருமுனையில் வறுத்த கடலைப் பொட்டலங்களுடன் நின்று கொண்டிருந்த எழிலும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். மூவரும் கோவில் தெருவை நோக்கி நடந்தார்கள். கோயிலுக்கு வருபவர்கள், அதைச் சுற்றி இருக்கும் ஏராளமான கடைகளுக்கு வருபவர்கள் என மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மிக அகலமானதும் நீண்டதுமான ரத வீதி அது. எனவே ஆளுக்கு ஒரு புறமாக விற்பனை செய்து கொண்டிருப்பார்கள். “படிக்குற புள்ளைகள்லாம் என்னத்துக்கு என் கூட வாரீக?” என்று செல்லமாக அதட்டினாள் மலர். “சும்மா வா அக்கா” என்று சிரித்த எழில் இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படிப்பவள். “அம்மா! இப்பிடி ஏதாவது வெளிய வந்தாதான் உண்டு. நாங்க பாட்டுக்கு எங்க சோலிய பாக்கப் போறோம். உனக்கு என்ன எடைஞ்சலாம்?” – தனது அணியில் எழில் வந்துவிட்ட தைரியத்தில் கயலின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்தது. ஆளுக்கு ஒரு கடலைப் பொட்டலத்தைக் கையில் திணித்துத் தானும் ஒன்றைப் பிரித்துச் சாப்பிட்டவாறே நடந்தாள் எழில். கடைவீதியை வேடிக்கை பார்ப்பது பிடித்தமான பொழுதுபோக்கு கயலுக்கு. எல்லாவற்றையும் கண்கள் விரிய பார்ப்பளே தவிர ஒரு நாளும் அம்மாவிடம் எதையும் வாங்கித் தரச் சொல்லிக் கேட்கவே மாட்டாள். “நாங்கதான் படிக்கல. உங்களுக்கு இருக்குற ஒரே வேலை – படிக்குறது. அத மட்டும் பாக்குறதுதானே? அதுக்குத்தான கெடந்து இப்பிடி கஸ்டப்படுதோம் நாங்க” என்றள் மலர். வீட்டில் சில சமயம் பூ தொடுத்துக் கொண்டிருக்கும் போது கயல் படிப்பதை ஆசையாய்ப் பார்க்கையில் மலரின் கண்களே பூக்களாய் மாறிப் போகும். பத்தொன்பது வயதில் மணமாகி இருபது வயதிலேயே கயலுக்குத் தாயாகிவிட்டாள். நன்கு படிக்கும் ஆற்றல் பெற்றிருந்தாலும் கல்லூரியின் முதலாமாண்டோடு படிப்பைத் தூக்கிப் போட வேண்டிய குடும்பச் சூழல். இப்போது அவளது உலகம், உயிர், மூச்சுக்காற்று என எல்லாமே கயல்தான். ஆனாலும் உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும் வேகத்திற்கு முற்றிலும் ஈடு கொடுக்கும் வகையில் அனைத்து உலக நடப்புகளையும் அறிந்து கொள்ள முயல்வாள். கற்றுக் கொள்ளும் ஆர்வம் மட்டும் மலரை விட்டுப் போகவே இல்லை. கோயிலில் அம்மன் சன்னதிக்கென்று தனி நுழைவுவாயில் உண்டு. கயல் உடன் வரும் நாட்களில் மட்டும் உள்ளே செல்வாள். ஐயருக்காகக் காத்திருக்கவும் மாட்டாள். அர்ச்சனையும் செய்ய மாட்டாள். வேண்டிக்கொள்ளுதல் என்பதும் அவளுக்குத் தெரியாது. சாமி கும்பிடுதல் என்பது அவளைப் பொறுத்த வரை சில நொடிகள் அக்கற்சிலையைக் கூர்ந்து நோக்கியவாறு மனதினுள் கயல் படித்துப் பெரிய ஆளாக வருவாள் என தனக்குள் வைராக்கியமாக சொல்லிக் கொள்வது. சொல்லிக் கொள்வது என்பதையும் தாண்டி அம்மனிடம் கயலைப் பெரிய கெட்டிக்காரியாகக் கொண்டு வரப்போவதாகச் சூளுரைப்பது போல இருக்கும். அதன் வீரியம் எப்படி இருக்குமென்றால் அவளது மனதிற்குக் காலமே செவி சாய்த்து அதை நிகழ்த்தித் தரும் முயற்சியில் அர்ப்பணிப்போடு ஈடுபடத் துவங்கும் அளவிற்கு இருக்கும். பின்னர் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அந்த இசைத்தூணில் கொட்டப்பட்டிருக்கும் குங்குமத்தை மோதிர விரலால் எடுத்து கயலின் நெற்றியில் இருக்கும் சிறிய கருப்புப் பொட்டிற்கு மேல் மெலிதான கோடாக இடுவாள். சட்டென்று யாரும் நெட்டி முறிக்கும் அழகைப் பெற்றுவிடும் அம்முகம். உடனே கண்களை இறுக மூடி புருவங்களையும் மூக்கையும் சுருக்கிச் சுளித்தும் விரித்தும் இரண்டு மூன்று முறை வேண்டுமென்றே விளையாடுவாள் கயல். குங்குமம் லேசாக கண்களுக்குக் கீழேயும் மூக்கின் மேலேயும் மகரந்தத்தைப் போல் சிதறிப் படியும். அதைத் துடைத்து விட்டவாறே மலரிடம் இருந்து பரிசாகக் கிடைக்கும் ஒரு முத்தத்திற்குத்தான் இந்தக் குறும்பெல்லாம். “ரொம்ப தூரம் போய்டாதீங்க… நான் பாக்குற தூரத்துலயே இருங்க ரெண்டு பேரும்” – ரத வீதியை அடைந்ததும் இரண்டு பேரையும் பார்த்துச் சொன்னாள் மலர். சரியென்றவாறே கூட்டத்தினுள் பிரிந்து சென்றனர். கோயில் ஒலிப்பெருக்கியில் உரத்துப் பாடிக் கொண்டிருந்த எஸ்.பி.பி, ஒவ்வொரு கடை வாசலிலும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மக்கள், வாகன இரைச்சல்கள் ஆகியவற்றுடன் “பூவு… பூவு… மல்லிப் பூவு… அக்கா பூ வாங்கிக்கோங்க”, “கடல… கடல… வறுத்த கடல… அண்ணா ஒரு பொட்டலம் அஞ்சு ரூபாதான்… வாங்கிக்கோங்கண்ணா” ஆகியவையும் போட்டி போட்டன. அவ்வளவு கூட்டத்திலும் வேக வேகமாகத் தன் கண்களால் துழாவி அவ்வப்போது இருவரின் இருப்பையும் உறுதி செய்தவாறே பூ விற்றுக் கொண்டிருந்தாள் மலர். கயலை உடன் அழைத்து வரும் போதெல்லாம் ஒரு வித பதற்றத்திலேயேதான் பொழுது கழியும் மலருக்கு. “சீக்கிரம் பூக்கள் விற்றுத்தீர்ந்து விடாதா?” என்றிருக்கும். கண்ணை விட்டு கயல் ஒரு நொடி மறைந்து விட்டாலும் மீதமிருக்கும் மொத்தப் பூக்களையும் சட்டை செய்யாமல் கயலைத் தேடிக் கண்டடைந்து வீட்டிற்குக் கூட்டி வந்துவிடுவாள். கூடையில் இருக்கும் பூக்களையும் அவர்கள் வரும் நேரத்தையும் பார்த்து அக்கம்பக்கத்தினர், “ஏங் கயலு? அம்மைய விட்டுத் தள்ளிப் போனியோ?” என்று விளையாட்டாகக் கேட்டுச் சிரிக்கும் அளவிற்கு அத்தனை பேருக்கும் கயலின் மீதான மலரது பேரன்பு பரிச்சயம். “ஏஞ் சிரிக்க மாட்டீங்க? வச்சுருக்குறது ஒத்த புள்ள… அதைக் காணாம ஒரு நிமிசம் உசுரே போயிருது. இன்னைக்கு யாவாரத்துல கொட்டுனது போதும். இந்தப் பூவையெல்லாம் ஆளுக்கு ஒண்ணா எடுத்து வச்சுக்கிடுங்க” என்பாள். அன்று சனிக்கிழமை ஆதலால் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. விற்பனையும் நன்றாக நடந்தது மூவருக்கும். கிட்டத்தட்ட எல்லாமே விற்றுத் தீரப் போகும் சமயம். கயலைக் காணவில்லை. லேசான பதற்றம் தொற்றிக் கொண்ட போதிலும் ‘வழக்கம் போல் எங்கேனும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பாள்’ என மனம் ஆசுவாசப்படுத்த முயன்றது. கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் அவ்வீதியை இரண்டு முறை கால்களால் அளந்து அலசி விட்டாள். கண்கள் இருப்பு கொள்ளவில்லை. சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டே இருந்ததில் இப்போது நிஜமாகவே பீதியடையத் தொடங்கினாள். “மலரக்கா… என்னாச்சு? ஏன் இப்பிடி அங்கயும் இங்கயுமா ஓடிகிட்டு இருக்க? உன்ன தேடிக் கண்டுபிடிக்குறதே பெரும்பாடா போச்சு. கயல எங்க?” – எழில் “அவளதான் காணும்னு தேடிட்டு இருக்கேன்” “பயப்படாத… இங்கதான் எங்கயாவது வாய் பார்த்துட்டு நிப்பா. அடுத்த தெருவுல போய் பாப்போமா?” “இல்ல… கண்டிப்பா இந்த ரத வீதிய விட்டு எங்கயும் போகக்கூடாதுன்னு அவளுக்குத் தெரியும்” – பரபரத்தாள் மலர். “சரி. வா… தேடுவோம்” என்று எழிலும் மீண்டும் ஒரு முறை அத்தெரு முழுக்க சல்லடை இட்டுத் தேடினாள். யாரிடமேனும் விசாரிக்கத் துவங்கும் அளவிற்குச் சூழல் கையை மீறிச் சென்றுவிட்டதாக நம்பும் திராணி அற்றவளாக மாறிப் போயிருந்தாள் மலர். ஒவ்வொரு நொடியும் கொடூரமாகக் கழிந்தது. “வர வேண்டாம்னு சொன்னா எங்க கேக்குறா… கழுத” என்று கோபம் கோபமாக வந்தது மலருக்கு. நேரம் ஆக ஆக அழுகை வரும் போல் இருந்தது. இருவருக்கும் என்னென்னவெல்லாமோ தோன்றியது. ஆனால் வாய்விட்டுச் சொல்ல விரும்பாமல் எந்த அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது என மனதினுள் வேண்டிக்கொண்டிருந்தார்கள். “கோயில் வாசல்ல ட்ராஃபிக் போலீஸ் நிப்பாரு. அவர்கிட்ட சொல்லிப் பார்ப்போமா?” என்று கேட்டாள் எழில். நிலைமை மோசமடைந்து கொண்டிருப்பதை அவளது வார்த்தைகள் சட்டென வெளிச்சம் போட்டுக் காட்டியதைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. அதற்குப் பதில் கூறுவதற்குக் கூட பயந்து போனவளாக மருண்டு நின்றிருந்தாள் மலர். செய்வதறியாமல் இருவரும் தவித்துக் கொண்டிருந்தனர். கால்கள் நிலைகுத்தி நின்றன எனினும் கண்கள் ஓய்வொழிச்சல் இல்லாமல் கூட்டத்தினுள் ஊடுருவி அலைந்தபடியே இருந்தன. கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழிந்து விட்டது. திடீரென ஒரு இரு சக்கர வாகனத்திற்கும் சாலையைக் கடந்து சென்று கொண்டிருந்தவருக்கும் நடுவில் தென்பட்ட இடைவெளியில் பத்து வயதுப் பெண் குழந்தை ஒன்று அவ்வீதியில் இருந்த பெரிய ஓட்டல் ஒன்றின் உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது தெரிந்தது. மஞ்சள் பூ போட்ட சிகப்புச் சட்டை… கயலேதான்! “யக்கா… அங்க பாரு… கயலு!” கூட்டத்தைப் பிளந்து கயலை நோக்கிப் பாய்ந்து சென்றாள் மலர். கையில் ஒரு ஜிகிர்தண்டா கோப்பையுடன் சிரித்தவாறே அம்மாவைப் பார்த்ததும் ஓடி வந்தாள் கயல். “என்ன கயலு? எத்தன தடவ சொல்லிருக்கேன்? நீ பாட்டுக்கு எங்கயாவது போகாதன்னு” – பதற்றம் தணியாத குரலில் படபடத்தாள். “இங்கதாம்மா இருந்தேன். இந்த அண்ணாதான் வாங்கித் தந்தாங்க. சூப்பரா இருக்குமா. இந்தா நீ ஒரு வாய் சாப்பிட்டுப் பாரேன்” – கோப்பையைத் தூக்கிக் காண்பித்தாள். மகள் கிடைத்துவிட்ட ஆறுதலில் அந்த இளைஞனைப் பார்த்துப் புன்னகை புரிந்தவாறே நன்றி கூற வாய் எடுத்தாள். ஆனால் அவன் கைகளில் முளைத்திருந்த கண்கள் அவளைக் கொஞ்சம் உறுத்தின. “என்ன தம்பி பண்றீங்க?” “ஒண்ணும் இல்லையே” என்றவாறே தோள்களைக் குலுக்கினான். மலரது பார்வையில் கோபம் மெல்லமாக ஏறத் துவங்கியிருந்ததை அவளது நெரிந்த புருவங்கள் காட்டிக் கொடுத்தன. உடனே அவளைச் சமாதானப் படுத்தும் பொருட்டு, “அட! நெஜமாவே ஒண்ணும் இல்லீங்க. குழந்தை பூ வித்துட்டு இருந்தா. சும்மா பேசிட்டு இருந்தேன். ‘என்ன படிக்குற?’, ‘என்ன பாடம் பிடிக்கும்?’, ‘என்னவாகப் போற?’, ‘அம்மா என்ன பண்றாங்க?’… வழக்கமா கேக்குறதுதான். ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்னு தோணுச்சு… அதான்” “அதுக்கு எதுக்கு ஃபோன்ல படம் புடிக்கிறீங்க?” “என்னோட வலைதளத்துல போடுறதுக்கு” – இப்படிச் சொல்லும் போது அலைபேசியை அணைத்துச் சட்டைப் பையினுள் வைத்து விட்டிருந்தான். “அதான் எதுக்குன்னு கேக்கேன்” அவனிடம் சரியான பதில் இல்லை. அல்லது பளிச்சென உண்மையைப் போட்டு உடைக்க தைரியம் இல்லை. “அது… வந்து… நெறைய பேரு பாப்பாங்க” “பாத்து? ஆமா… நீங்க போடுற இந்த வீடியோவ எப்படி உண்மைன்னு நம்புவாங்க?” “அதுலாம் நம்புற மாதிரி பண்ணிடலாம்” – விளையாட்டாகச் சிரித்தான். “எப்படி? பிண்ணனியில ஒரு சோக பாட்டு இல்லேனா உத்வேகத்த கெளப்புற மாதிரியான பாட்ட சேர்த்தா?” – அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த எழில் கொஞ்சம் காட்டமாகக் கேட்டாள். “ஏதோ இந்தக் குழந்தைக்கு வாங்கிக் குடுக்கணும் போல இருந்துச்சு. அதுக்குப் போய் இவ்வளவு….” என்று பம்மினான். இதற்குள் அந்தச் சிறு சலசலப்புக்கு ஏற்ற சிறு கூட்டம் ஒன்று கூடிவிட்டது. அதில் ஒருவன் அந்த இளைஞனைப் பார்த்து, “டூட்! நீங்க… சமூக வலைதளத்துல… அந்த genz_idiots பக்கத்தோட…” என அடையாளம் கண்டு கொள்ள முனைய அவனுக்கு அது இன்னும் ஏந்தலாய் இருந்தது. அவனைப் பின் தொடரும் 2 மில்லியன் தலைகளும் அவனுக்காக அங்கு ஆஜர் ஆனதாகவே உணர்ந்தவன் தன் தொனியைச் சற்றே மாற்றினான். “நல்ல மனசோட உதவி பண்ண நெனச்சேன் பாருங்க. என்னைச் சொல்லணும். தெரியாம பண்ணிட்டேன். போதுமா? ஆள வுடுங்க. நல்லதுக்கே காலம் இல்ல” என்று எரிச்சலடைந்தான். “தம்பி! நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது. நான் உங்கிட்ட வந்து உதவியும் கேட்கல. நீங்க உதவி பண்ணனும்னு நெனச்சதயும் நான் தப்புன்னு சொல்லல. அத படம் புடிச்சு ஒளிபரப்பணும்ங்கிற ஈன புத்தியைத்தான் தப்புன்னு சொல்றேன்” – மலர் நிதானமாக சொல்ல முயன்றாலும் அந்த ஒரு வார்த்தையில் கோபம் கொப்பளிக்கத்தான் செய்தது. “ஈன புத்தியா? என்ன வாய்க்கு வந்தபடி பேசுற? Ungrateful bi**h” “ஏய்! இந்த புடுங்கித்தனத்தலாம் வேற யார்கிட்டயாவது காட்டு…. எங்களுக்கும் பேசத் தெரியும்… You imbecile ba****d” – எழிலும் பதிலுக்கு எகிறினாள். சண்டை முற்றத் துவங்க, யாரோ ஒருவர் அதைத் தன் கைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அதைக் கவனித்துவிட்ட அந்த இளைஞன் இணைய உலகில் தன் பிம்பம் கலைந்து விடுமோ என்று அஞ்சி, “ஹலோ! ஃபோன ஆஃப் பண்ணுங்க. யார கேட்டு ரெக்கார்டு பண்றீங்க? டெலீட் பண்ணுங்க. It’s an invasion of privacy” என்று குதித்தான். “ஹய்ய்ய்! உனக்கு வந்தா இரத்தம். எங்களுக்கு வந்தா மட்டும் தக்காளிச் சட்னியா? இல்லாதப்பட்டவங்கன்னா கேக்காம கொள்ளாம உன் இஷ்டத்துக்கு என்ன வேணா பண்ணுவியா? எங்க கூட பேசுறதயே ஏதோ தாராள மனசுக்காரன் மாதிரி எடுத்துப் போட்டுட்டு இருக்க?” என்று கடுகடுத்தாள் எழில். “நான் நல்லது பண்ணததான் வீடியோ எடுத்தேன். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு” “நல்லது பண்ணனும்னு நெனைக்குறவன் சத்தங்காட்டாம செஞ்சுட்டுப் போவான். இப்பிடி பெரும பீத்தீட்டு இருக்க மாட்டான். ஒரு 20 ரூபாய்க்கு ஜிகிர்தண்டா வாங்கி குடுத்தது நீ கட்டை விரல் பிச்சை எடுக்கத்தானே? நீ நோகாம சம்பாதிக்குறதுக்கு நாங்கதான் கெடைச்சோமா?” – தான் நினைப்பதை எவ்வாறு வார்த்தைகளில் வடிப்பது எனத் தெரியாமல் தவித்து நின்ற மலருக்கும் சேர்த்து எழிலே பேசினாள். “What nonsense? இதைப் பாத்து இன்னும் நெறைய பேருக்கு உதவணும்னு தோணும் இல்லையா?” “உதவி பண்ணனும்னு நினைக்குறதும் நீ பண்றதும் ஒன்னா? மனுசனா பொறந்த ஒவ்வொருத்தனும் தன்னால முடியும்னா கண்ணு முன்னால பசிச்சுக் கெடக்குறவனுக்குச் சாப்பாடு வாங்கிக் குடுக்கத்தான் செய்வான். நீதான் ஏதோ பெரிய சமூக சேவை செஞ்ச மாதிரி அனத்தீட்டு திரியுற” – அவ்வளவு பெரிய விஷயத்தை அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள் எழில். வசமாக மாட்டிக் கொண்டதாக உணர்ந்தவனிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. “வா எழிலு… போலாம்” என்று அவ்விடத்தை விட்டுக் கிளம்ப முயன்ற மலரின் கைப்பிடியிலிருந்து மெல்ல தன்னை விடுவித்துக் கொண்ட எழில், “இருக்கா… அதான் பேச்சு இவ்ளோ தூரம் வந்துட்டுல்ல… இரு, கொறையையும் பேசீட்டு வந்துருதேன்” என்றவாறு அவனை நோக்கித் திரும்பினாள். “நீ மலரு அக்காட்ட பேசிட்டு இருக்கும்போதுதான் உன் வீடியோல சிலத பாத்தேன். போன வாரம் ஒரு வீடியோ போட்டுருக்கியே? அவரு பிச்சைக்காரரா? சொல்லு?” என்று அவனைப் பார்த்துக் கத்தியவள், கூட்டத்தைப் பார்த்துச் சொன்னாள் – “நாலாவது தெருவுல இருக்க எங்க சித்தப்பா போன வாரம் மில்லு வேலை முடிஞ்சு களைப்பா இருக்குன்னு காட்சி மண்டபத்துல உட்கார்ந்து இருந்திருக்காங்க. இவன் ‘உங்கள ஆளையே மாத்துறோம்’னு சொல்லி சித்தப்பாவுக்கு முகச்சவரம் செய்து முடிவெட்டி குளிப்பாட்டி புதுத்துணி சாப்பாடுன்னு வாங்கி குடுத்து அனுப்பியிருக்கான். அவரும் ஏதோ ஷூட்டிங்னு நெனச்சுட்டு சிரிச்சுட்டே வந்துருக்கார். இப்போ பாத்தாதான் புரியுது”. மீண்டும் அவன் பக்கம் திரும்பி, “நேத்து கூட அந்த நாய்க்குட்டியையும் நீதான் வேணும்னு சாக்கடைக்குள்ள வீசிட்டு காப்பாத்துறாப்புல வீடியோ போட்டுருப்ப. இந்த லட்சணத்துல உன்ன நம்ப வேற செய்யணுமா?” என்றவள் ஒரு சிறிய இடைவெளி விட்டு தொடர்ந்தாள். “நீ பண்றது பேரு என்ன தெரியுமா? Pandering. Emotional Prostitution. You are just feeding your bloody ego” என்று முகத்திற் அறைந்தாற் போல் வார்த்தைகளை வீசினாள் எழில். அவற்றின் வெப்பம் பொறுக்க முடியாமல், சுற்றி நிற்பவர்களின் அருவருப்பான பார்வை தன் மீது நெளிவதைச் சகிக்க முடியாமல் நழுவப் பார்த்தான். இதற்குள் கூட்டத்தில் இருந்த ஒருவர் “சரி, விடும்மா! புள்ளைக்கு அவன் வாங்கிக் குடுத்ததுக்கு நன்றி சொல்லிட்டு அத அத்தோட விட்டுட்டுக் கலைஞ்சு போங்க” என பெரியதனமாகக் கூறவும், கோபம் பொத்துக் கொண்டு வந்தது எழிலுக்கு. “போன வருசம் அஞ்சு பேருக்கு அன்னதானம் பண்ணிட்டு அத அம்பது தெருவுக்கு போஸ்டர் அடிச்சு ஒட்டுன மகாபிரபுதானே நீங்க? நியாயம் சொல்ல வர்ற மூஞ்சியெல்லாம் பாரேன்” அதன் பிறகு ஒருவரும் வாயைத் திறக்கத் துணியவில்லை. “வீடியோவ டெலீட் பண்ணு” என்று மட்டும் சொன்னாள் மலர். அந்த இடத்தை விட்டுக் கிளம்பினால் போதும் என்ற மனநிலையில் அவசர அவசரமாக அலைபேசியைத் தட்டிக் கொண்டிருந்தான். சட்டென அவனிடம் இருந்து பிடுங்கி அந்தக் காணொளியை அழித்தாள் எழில். பின்னர் Recently deletedக்கும் சென்று அழித்துவிட்டுச் சொன்னாள், “இவ்வளவுக்கு அப்புறமும் இப்போ எடுத்தத மீட்டெடுத்து ஒளிபரப்புனேனா நீ மனுசனே இல்ல!” அலைபேசியைத் திரும்பப் பெற்றவன் தனது இருசக்கர வாகனத்தில் சிட்டாகப் பறந்தே விட்டான். மூவரும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். கடைத்தெருவின் அவ்வளவு சத்தமும் அவர்களது அமைதியில் அமிழ்ந்து போனது. ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை அவர்கள். என்ன பேசுவது என்று தெரியவில்லை. கயலுக்கு என்ன நடந்தது என்று சுத்தமாகப் புரியவில்லை. அவர்களின் கோபத்திற்குத் தான்தான் காரணமோ என்று அவள் வயதிற்கே உரிய யோசனையில் கொஞ்சம் பயந்து கூட போயிருந்தாள். அவர்களின் மௌனத்தில் கல் எறியும் பொருட்டு அருகில் வேகமாக வந்து நின்றது அவர்கள் தெருவில் வசிக்கும் இஸ்மாயிலின் சைக்கிள். சைக்கிளில் இருந்து இறங்கி அவர்களுக்கு நடைத்துணையாக சைக்கிளை உருட்டிக் கொண்டே வந்தவர் அந்த இறுக்கமான சூழலைத் தளர்த்த எண்ணி மெல்ல பேச்சை ஆரம்பித்தார். “எழிலு… ஏன்டா அவ்வளவு கோவம் உனக்கு?” “சும்மா இருங்க பெரியப்பா… அங்க என்ன நடந்துச்சுன்னு முழுசா தெரிஞ்சா இப்படிப் பேச மாட்டீங்க” என்று மலர் பதிலுரைத்தாள். “லாரில இருந்து மூட்டை எறக்கிட்டு அங்கனதான்டா இருந்தேன். முதலாளி இருந்தனால வர முடில. அதான் கேக்கேன்… அவன் ஏதோ இந்தக் காலத்து வழக்கத்துக்கு ஏத்தாப்புல… எல்லாரும் எங்கன பாத்தாலும் ஃபோனும் கையுமாத்தான் திரியுதாங்க. இப்போல்லாம் இது சகஜம்தான?” “என்ன பெரீப்பா நீங்களும்? அவன் செஞ்சது தப்பில்லையா? புள்ள ஏதோ பிச்சைக்கு நின்ன மாரியும் இவன் கொடை உள்ளத்தோட உதவுற மாரியும்… பெரிய வள்ளல்னு நெனப்பு. உணர்வுப்பூர்வமா உதவி பண்றவன், அவசர உதவி பண்றவன்… எல்லாவனுக்கும் அத ஆவணப்படுத்தியே ஆகணுமோ? அதெப்படி உதவி பண்ற இக்கட்டான நேரத்துலயும் வறட்டுத்தனமா பொறுமையா படம் பிடிக்க முடியுது? இது பேரு உதவிலாம் இல்ல. தன்னை எல்லோரிடமும் இரக்க குணமுள்ள நல்லவனாகக் காட்டிக் கொள்ள முனையும் அசட்டுத்தனம்” – எழில் “என்னமோ உலகத்துல ஒருத்தர் விடாம இதத்தான் பாத்துட்டு இருக்கப் போற மாதிரி… விட்டுத் தள்ளு கழுதைய!” என்று அவர்களை அதை உதாசீனப்படுத்த வைக்கும் எண்ணத்தில் கூறினார் இஸ்மாயில். “உலகத்துல ஏதோ ஒரு மூலையில கூட அவளைப் ‘பாவம்’ன்னு யாரும் பரிதாபப் பார்வை பார்த்துடக் கூடாதுன்னுதானே இப்பிடி ஓடி ஓடி ஓடா தேயுறேன்?” வழக்கமற்ற குரலில் கூறினாள் மலர். இதைச் சொல்கையில் அவள் குரல் தழுதழுத்திருந்ததா உடையத் துவங்கியிருந்ததா எனத் திருத்தமாகக் கூற இயலவில்லை. “இதுல இவ்ளோ உணர்ச்சிவசப்பட என்ன இருக்கு?” - இஸ்மாயில் “உணர்ச்சி வசப்படல பெரியப்பா. சரி - தப்பு பத்திதான் இங்க பேச்சே. இப்பவும் பெத்தவங்கள ‘அம்மா’, ‘அப்பா’ன்னுதானே கூப்பிடுறோம்? இரத்தல் இன்றைக்கும் பழிக்கக்கூடிய நாணக்கூடிய தொழிலாகத்தானே இருக்கு? சில விஷயங்கள் மாறாது; மாறவும் கூடாது. நாம ஒருத்தருக்கு உதவி பண்ணும் போது உதவி பெறுபவர் இரத்தல் தொழிலே செய்பவராயினும் அவர் கண்ணியத்தையும் தன்மானத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. நல்ல பெயர் எடுக்கணும்ங்கிறதுக்காக உலகின் கண்களில் ஒரு தனிமனிதரின் இயலாமையைச் சாதமாகப் பயன்படுத்தி அவரைக் கூனிக் குறுக வைக்கக் கூடாது. இதையெல்லாம் செய்யாமல் நல்ல பெயர் எடுத்து என்னத்துக்கு?” – தீர்க்கமாகப் பேசி முடித்தாள். எழில் பேசுவதையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு வந்தார் இஸ்மாயில். அவரது நரைத்துப் போன தாடிக்குள் இருந்து ஒரு புன்னகை, “யம்மாடி! எவ்ளோ வெவரமா பேசுதா?” என்ற ஆச்சரியத்துடன் வெளிப்பட்டது. வழியில் இருந்த தேவாலயத்தை அவர்கள் கடந்து செல்கையில் மிகச் சரியாக மத்தேயு 6 : 3 வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நன்றி 'திண்ணை' இணைய வார இதழ்.
  24. @நிலாமதி உங்கள் பதில்களை மீளவும் பார்த்தேன். சரியாகவே கூகிள் சீற்றில் தரவேற்றியுள்ளேன். நீலவர்ணப் பதில்களும், ஊதா வர்ணப் பதில்களும் இனி வரவுள்ள போட்டிகளுக்கான பதில்கள் 😄
  25. பையா சிற்சில சமயங்களில் உணர்ச்சி வசப்படுதல் மனிதர்க்கு இயல்பானதே ........ நீங்களும் அதிகம் குழப்பமடையாமல் மீண்டும் வழமைபோல் திரியைக் கலகலப்பாக்குங்கள் . ........ ! 😁
  26. உந்த விசயத்தில குளிர் காய்ஞ்சு ஜாலியா இருக்கிறது நம்ம ரஷ்ய அண்ணன் தான்.....சொல்லி வேலையில்லை.🤣
  27. எல்லாவற்றையும் எடுத்தமாம் கவுட்டமாம் செய்ய முடியாது தானே. அனுர இப்போது முள்ளின் மேல் நடக்கிறாராம். கொஞ்சம் சறுக்கினாலும் ஆளை தூக்கி விடுவார்களாம். ஒரு பக்கம் இந்தியாவ சமாளிக்கோணும்.அடுத்த பக்கம் சீனாவ சமாளிக்கோணும்.இன்னொரு பக்கம் பெரியண்ணை அமெரிக்கா.எல்லாத்தையும் விட மகிந்த பலம் இன்னும் இன்னும் இருக்கிறதாம்.😉
  28. இதுவே சென்னை, மும்பை என்றால் கலைத்து பிடிக்கின்றோம் என்று ஓட ஆரம்பித்து, எப்படியும் இடையில் களைத்துப் போய், சரி அடுத்த போட்டியில் பார்ப்போம் என்று விட்டு விடுவார்கள் என்று நம்பிக்கையாகச் சொல்லலாம்..................🤣.
  29. நாம் தமிழர் ஐடி விங் பொய் செய்தியை அப்பாவி போல் நீங்கள் பரப்புவது இதுதான் முதல் முறை அல்ல. அதை நான் வெளிகொணர்வதும் இதுதான் முதல் முறை அல்ல 🤣. பிகு இதை fact check பண்ணாமலே எழுதுகிறேன் - உங்கள் நம்பகதன்மை மீது அப்படி ஒரு நம்பிக்கை🤣.
  30. உங்க‌ளை ம‌ட்டும் அல்ல‌ இன்னும் ப‌ல‌ரை தொலைபேசி மூல‌ம் தொட‌ர்வு கொண்டு போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுங்க‌ என்று கேட்டு இருந்தேன் அவ‌ர்க‌ளும் என‌து அழைப்பை ஏற்று போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌வை................... வெறும‌ன‌ 13, 16 பேர் போட்டியில் க‌ல‌ந்து கொண்டால் போட்டியில் ப‌ம்ப‌ல் இருக்காது அத‌னால் கூடுத‌ல் உற‌வுக‌ளை நான் தான் இத‌ற்க்குள் கூட்டி வ‌ந்தேன், இந்த‌ எளிய‌ பிள்ளைய‌ ம‌ன்னித்துக் கொள்ளுங்கோ...............இனி நான் யாரையும் அழைத்து வ‌ர‌ மாட்டேன் ம‌ற்றும் யாழ் ஊடாக‌ ம‌ற்ற‌ உற‌வுக‌ளுக்கும் அழைப்பும் கொடுக்க‌ மாட்டேன்.................... நான் 14வ‌ருட‌மாய் விளையாட்டு திரியில் எப்ப‌டி எழுதி வ‌ந்தேனோ அப்ப‌டி தான் இப்ப‌ வ‌ரை எழுதுகிறேன்....................நேற்று வ‌ந்த‌வ‌ர் அது ச‌ரி இல்லை இது ச‌ரி இல்லை என்று ச‌ட்ட‌ம் போடும் போது , இது என‌க்கான‌ இட‌ம் இல்லை என‌ நினைத்து நானாக‌வே ஒதுங்கி நான்...................ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ப‌ற்றி தெரியாட்டி ப‌ல‌ விளையாட்டு போட்டி திரிக‌ள் யாழில் அப்ப‌டியே அழியாம‌ இருக்கு அதை பார்த்து தெரிந்து கொள்ள‌ட்டும் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் தொட‌ர்ந்து அந்த‌க் கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை எப்ப‌டி எழுதி இருக்கிறார்க‌ள் என்று......................உங்க‌ளுக்கு ஒன்றை நினைவு ப‌டுத்த‌ விரும்புகிறேன் க‌ந்த‌ப்பு அண்ணா 2012ம் ஆண்டு யாழில் நான் தான் முத‌ல் எழுதின‌து , அப்பாகிஸ்தான் அணிக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு அவ‌ர்க‌ள் மெது மெதுவாய் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருகின‌ம் என‌ அப்ப‌ ப‌ழைய‌ உற‌வுக‌ள் ப‌ம்ப‌லுக்கு என்னை பார்த்து ந‌க்க‌ல் அடிச்சின‌ம் த‌ம்பி உவ‌ங்க‌ள் ப‌ந்துக்கு ப‌தில் குண்டை கொண்டு வ‌ந்து விளையாட‌ மாட்டாங்க‌ள் தானே என்று😁👍.................அப்பாகிஸ்தான் அணி அப்போது சின்ன‌ அணி இப்போது பெரிய‌ அணிக‌ளை வென்று ப‌ல‌மான‌ அணியா வ‌ள‌ந்து விட்ட‌து என‌து க‌ணிப்பு பிழைக்க‌ வில்லை...................... அதே கால‌ப் ப‌குதியில் நீங்க‌ள் ந‌ட‌த்தின‌ உல‌க‌ கிண்ண‌ கிரிக்கேட் போட்டியில் நான் இர‌ண்டாம் இட‌ம் வ‌ந்தேன் , என‌து முக‌வ‌ரிக்கு நீங்க‌ள் அனுப்பி வைச்ச‌ ப‌ரிசு கிடைச்ச‌தையும் இந்த‌ திரியில் நினைவு ப‌டுத்த‌ விரும்புகிறேன் க‌ந்த‌ப்பு அண்ணா...................... ம‌ன‌ம் இட‌ம் கொடுத்தால் 2026 T20 உல‌க‌ கிண்ண‌ போட்டியில் ச‌ந்திப்போம் இதே மன‌ நிலையில் இருந்தால் சும்மா பார்வையாள‌ரா இருப்பேன்👍.............................. நேர‌த்துக்கு நேர‌ம் வ‌டிவாய் சாப்பிடுங்கோ சுவை அண்ணா................. உங்க‌ட‌ அன்புக்கு ந‌ன்றி நான் இனி இந்த‌ திரிக்குள் எழுத‌ மாட்டேன் , இது சும்மா பொழுது போக்கு திரி ஆனால் , ம‌ன‌ உளைச்ச‌ல் ஏற்ப்ப‌ட்டால் எல்லாமே என‌க்கு வெறுத்துப் போய் விடும்😞☹️......................... Take care Anna👍.....................
  31. மன்னாரில் காட்டில் "யார் விறகு " (யார் விறகு என்றால் மரத்தில் ஏறி இருந்து அளவான சைஸ் கிளைகளை வெட்டி விழுத்தி விட்டு அவற்றை ஒரு மீற்றர் அளவில் கொத்தி ஒருவர் உயரம் + நீளம் +அகலமாய் அடுக்கிவைக்க வேண்டும் ......அவை பக்டரி போறணைக்கு அனுப்பப் படும் ) ........ எங்கள் கணக்கர் விடுமுறையில் செல்வதால் அவர் வரும்வரை நான் அங்கு போயிருந்தேன் . ....... ஒரு கிழமையாய் அங்கு நடக்கும் வேலையை கணக்கர் எனக்கு காட்டித் தந்தார் ........ அங்கு 8 பேர் வேலையாட்கள் இருந்தனர் . .......ஒரு நாளைக்கு ஒராள் 2 மீற்றர் விறகு வெட்டி அடுக்க வேண்டும் ......... மாலையில் நாங்கள் போய் அளந்து கணக்கில் வைத்துக் கொள்வோம் . ......... நான் கவனித்தபோது ஒராள் ஒன்றரை மீற்றர் வரைதான் வெட்டி இருப்பார்கள் . ........ என்ன கணக்கர் விறகு குறைவாய் இருக்கு என்று சொன்னால் , அது தம்பி அந்த வேலை கடினம் எங்களுக்கு ஒன்றரை வந்தாலே காணும் ஆனால் இரண்டு என்று சொன்னால்தான் ஒன்றரையாவது வரும் என்றார் . ......... அடுத்தநாள் அவர் விடுமுறை சென்றதும் நான் அவர்களை ட்ரக்ட்டரில் கொண்டுபோய் காட்டில் இறக்கி விட்டுட்டு, நானும் இளந்தாரிப் பொடியன்தானே அவர்களிடம் , நீங்கள் எல்லோருமாய் சேர்ந்து பதினாறு மீற்றர் விறகு தறித்து அடுக்கி வைத்து விட்டு எந்த நேரமெண்டாலும் "வாடி"க்கு வாங்கோ என்று சொல்லி விட்டு வந்திட்டேன் ....... சுமார் மூன்று மூன்றரை மணியளவில் எல்லோரும் வாடிக்கு வந்து விட்டார்கள் . ......... பின்னேரம் நான் ஓராளுடன் சென்று அளக்க பதினாறு மீற்றர் விறகு சரியாக இருக்கு . ........ ! நீங்களும் புல்லு வெட்டுபவர்களிடம் இடத்தைக் காட்டிவிட்டு இவ்வளவும் செய்ய இவ்வளவு கூலி ........நீங்கள் இன்றைக்கு செய்து முடித்தாலும் சரி நாளைக்கு வந்து செய்து முடித்தாலும் சரி என்று சொல்லி இருக்க வேண்டும் ......... வேலை மின்னல் வேகத்தில் நடந்திருக்கும் . .......!
  32. குஜராத் அணி தொடராக சிறப்பாக செயல்படுவர், ராஜஸ்தான் அணி எப்படி இவர்களால் இப்படி சொதப்பமுடிகிறது என்பதனை கணிக்கவே முடியாத அணி, ராஜஸ்தான் அணி வெல்ல சுவியும், நந்தனும் நேரடியாக களத்தில் இறங்கினாலேயே வாய்ப்புள்ளது🤣 (நகைசுவகைக்காக கூறியது கோவிக்க வேண்டாம்).
  33. Husky Chukcha ۥۥ · Suivre Beautiful skies in Greenland❤" .........!
  34. தமிழ் மொழி .........யா. ?? உங்களுக்கு சிங்களமும் தெரியுமா ?? தமிழ் சிங்களம் ஜேர்மன் ....மூன்று மொழிகள் தெரியும்,......பல்மொழி புலமையாளன். தான் 😂 எனக்கு தமிழ் தவிர வேறு மொழிகள் தெரியாது ஜேர்மன் இல். Ja. Nein. மட்டுமே தெரியும் 🤪
  35. சென்னையை கலங்கடித்த 'தனி ஒருவன்': ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரியுடன் சதம் தொட்ட 'இடது கை சேவாக்' யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரியன்ஸ் ஆர்யா மற்றும் தோனி கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 9 ஏப்ரல் 2025, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐபிஎல் டி20 போட்டியின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவின அதிரடி சதம், சஷாங் சிங்கின் அரைசதம் ஆகியவை பஞ்சாப் அணி வெல்லக் காரணமாக அமைந்தன. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியால் பஞ்சாப் அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று 4வது இடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி 4 தோல்விகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணி சந்திக்கும் தொடர் 4வது தோல்வியாகும். வெறும் 39 பந்துகளில் சதம் அடித்து சாதனை ஏடுகளில் இடம் பிடித்த இளம் வீரரான பிரியான்ஷ் ஆர்யா யார்? சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்? ஆர்யா தனி ஆவர்த்தனம் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தநிலையில் பிரியான்ஷ் ஆர்யா மட்டும் தனது பேட்டிங் ஸ்டைலையும், அதிரடியையும் குறைக்கவில்லை. தொடக்கத்திலேயே ஆர்யா ஆட்டமிழக்க வேண்டிய நிலையில் கலீல் அகமது கேட்சை தவறவிட்டார், 35 ரன்களில் இருந்தபோது விஜய் சங்கர் கேட்சை கோட்டைவிட்டார். இதை சரியாகப் பயன்படுத்திய ஆர்யா சிஎஸ்கே பந்துவீச்சை காலி செய்தார். அஸ்வின் பந்துவீச்சையும் ஆர்யா விட்டுவைக்கவில்லை. பொதுவாக இடதுகை பேட்டர்களுக்கு அஸ்வின் பந்துவீச்சை ஆடுவது கடினம் . ஆனால், நேற்று அஸ்வின் ஓவரில் 10 பந்துகளில் 28 ரன்களை ஆர்யா விளாசினார். பவர்ப்ளேயில் பஞ்சாப் அணியின் ஸ்கோரை 3 விக்கெட்டுகளுக்கு 75 ரன்கள் வரை ஆர்யா உயர்த்தினார். பஞ்சாப் அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த போது ஆர்யா அரைசதம் அடித்திருந்தார். 5-வது விக்கெட்டுக்கு சஷாங் சிங்குடன் சேர்ந்து ஆர்யா அமைத்த 67 ரன் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. சிஎஸ்கே பந்துவீச்சை விளாசித் தள்ளிவிட்டார் ஆர்யா. குறிப்பாக சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 310 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆர்யா பேட் செய்தார். சிஎஸ்கே வேகப்பந்துவீச்சாளர்களின் 20 பந்துகளைச் சந்தித்து 62 ரன்களை ஆர்யா குவித்தார். அதிலும் பதிராணாவின் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள், பவுண்டரி அடித்து சதத்தை ஆர்யா நிறைவு செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சதம் அடித்த மகிழ்ச்சியில் பிரியான்ஷ் ஆர்யா 19 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஆர்யா, அடுத்த 20 பந்துகளில் சதத்தை எட்டினார், அதாவது 13-வது ஓவரில் பஞ்சாப் அணி 150 ரன்களைத் தொட்டபோது, ஆர்யா சதம் அடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் 5வது விக்கெட் விழுந்தபின் பஞ்சாப் அணி 136 ரன்கள் சேர்த்தது. ஐபிஎல் தொடரில் 5வது விக்கெட்டுக்குப் பின் சேர்க்கப்பட்ட 4வது அதிகபட்ச ஸ்கோராக இருந்தாலும், சிஎஸ்கேவுக்கு எதிராக இதுதான் அதிகபட்சமாகும். ஆர்யா ஆட்டமிழந்தபின் சஷாங் சிங் ஆட்டத்தை கையில் எடுத்து, யான்செனுடன் சேர்ந்து சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்துவாங்கினார். 36 பந்துகளில் அரைசதம் அடித்த சஷாங் சிங் 52 ரன்களுடனும், யான்சென் 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்க்க இருவரின் அதிரடி பேட்டிங் முக்கியக் காரணமாக இருந்தது. பஞ்சாப் அணியில் ஆர்யா(103), சஷாங் சிங்(52), யான்சென்(34) ஆகியோர் சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற பேட்டர்கள் ஸ்ரேயாஸ்(9), பிரப்சிம்ரன்(0), ஸ்டாய்னிஷ்(4), நேஹல் வதேரா(9), மேக்ஸ்வெல்(1) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சஷாங் சிங் கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 குடிநீர் பாட்டிலை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கழுவ வேண்டும்?7 ஏப்ரல் 2025 சிஎஸ்கே ஆட்டம் எப்படி? சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை கடந்த 4 போட்டிகளுடன் ஒப்பிடுகையில் பவர்ப்ளேயில் கான்வே, ரவீந்திரா இருவரும் விக்கெட்டை இழக்காமல் ஓரளவு நல்ல தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளேயில் சிஎஸ்கே விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கேவுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு என்ன, ஓவருக்கு எத்தனை ரன்கள் சேர்க்க வேண்டும், ரன்ரேட் என்ன என்பது குறித்து எந்த புரிதலும் இல்லாமல் ரவீந்திரா, கான்வே இருவரும் ஆடியது போல் இருந்தது. அதனால்தான் 10-வது ஓவர் வரை சிஎஸ்கே அணி ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. ஷிவம் துபே களத்துக்கு வந்த பின்புதான் சிஎஸ்கே அணி முதல் சிக்ஸரை அடித்தது. ரச்சின் ரவீந்திரா 36 ரன்களில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆகவே, அடுத்துவந்த கேப்டன் ருதுராஜ், ஒரு ரன்னில் பெர்குஷன் பந்துவீச்சில் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பெர்குஷன் பந்துவீச்சில் 42 ரன்னில் துவே க்ளீன் போல்டாகினார். நடுப்பகுதியில் சிஎஸ்கே அணிக்கு ஓவருக்கு 17 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நெருக்கடி ஏற்பட்டது. விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 கான்வே களத்தில் 49 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தாலும், கடைசி நேரத்தில் அவரால் ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் பெரிய ஷாட்களை ஆடமுடியவில்லை. இதனால் ரிட்டயர் அவுட் முறையில் கான்வேயை 69 ரன்னில் சிஎஸ்கே வெளியேற்றியது. தோனி 18-வது ஓவரில் வந்து 3 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தினார். யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் பைன் லெக் திசையில் சஹலிடம் கேட்ச் கொடுத்து தோனி 27 ரன்னில் ஆட்டமிழந்தவுடன் சிஎஸ்கே வெற்றிக் கனவு கலைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கான்வே சிஎஸ்கேவும், சிக்ஸரும் பஞ்சாப் அணியில் மட்டும் நேற்று 16 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன, அதாவது 16 பந்துகளில் 96 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சிஎஸ்கே அணி 10-வது ஓவரில்தான் முதல் சிக்ஸரை விளாசியது, ஒட்டுமொத்தமாக 8 சிக்ஸர் மட்டுமே அடித்தது அதாவது 48 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே அணியில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசும் பிக்ஹிட்டர்கள் யாரும் இல்லை. 200 ரன்களுக்கு மேல் சிஎஸ்கே அணி கடந்த காலங்களில் சேஸ் செய்திருந்தது, அதற்கு அப்போது சுரேஷ் ரெய்னா, ஹேடன், வாட்ஸன், ஹசி போன்ற பெரிய ஹிட்டர்கள் இருந்ததால், இலக்கை எளிதாக அடைந்தது. ஆனால், இப்போதிருக்கும் சிஎஸ்கே பேட்டர்களை வைத்து இதுபோன்ற பெரிய ஸ்கோரை இந்த சீசனில் சேஸ் செய்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு7 ஏப்ரல் 2025 கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனி சிஎஸ்கேவும் 180 ரன்கள் இலக்கும் 180 ரன்களுக்கு மேல் எதிரணி இலக்கு வைத்துவிட்டாலே சிஎஸ்கே சேஸ் செய்ய இயலாது என்பது இந்த முறையும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின் 11 முறை 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ய முடியாமல் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது. போட்டி நாயகன் ஆர்யா பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முழுமையான காரணம் அன்கேப்டு வீரர் பிரியான்ஷ் ஆர்யாவின் அச்சமில்லா, அற்புதமான ஆட்டம்தான். பிரியான்ஷ் ஆர்யாவின் பேட்டிங்கை நேற்று பார்த்தபோது, "வின்டேஜ் சேவாக்", இடதுகையில் பேட் செய்வது போல் இருந்தது. பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த பிரியன்ஸ் ஆர்யாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து (9 சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார். 245 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் பேட் செய்தார். 19 பந்துகளில் அரைசதம் அடித்த பிரியான்ஷ் ஆர்யாஸ், 39 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக சதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கெயில்(30பந்து), யூசுப் பதான்(37), டேவிட் மில்லர்(38) ஆகியோருக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் ஆர்யா வருகிறார். "ஒற்றை வீடியோவால் வீழ்ந்த தர்பூசணி விலை" - 2 ரூபாய்க்கு கேட்பதாக விவசாயிகள் வேதனை8 ஏப்ரல் 2025 'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள்8 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரியான்ஷ் ஆர்யா யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா? ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே பௌலர்கள் வயிற்றில் புளியை கரைத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம்பெற்று விட்டார் பிரியான்ஷ் ஆர்யா. அவருக்கு வயது வெறும் 24 தான். இன்று நடைபெற்ற ஆட்டத்தின் முதல் ஓவர் முதல் பந்தை டீப் பாக்வேர்டு பாயிண்டில் ஒரு அபாரமான சிக்ஸர் வைத்து ஆட்டத்தை துவங்கினார் பிரியான்ஷ் ஆர்யா. அவரை கட்டுப்படுத்த அடுத்த பந்தே வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோட்டை விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன் பின்னர் பிரியான்ஷ் ஆர்யா ஆடிய ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மற்றும் அந்த அணி நிர்வாகம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடவே முடியாது. அவர் ஆடிய ஆட்டம் கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு வான்கடே மைதானத்தில் பிளேஆஃபில் சிஎஸ்கேவின் கனவை சேவாக் நொறுக்கிய ஆட்டத்தை நினைவு படுத்தியது. ஆர்யா பேட்டிங் ஸ்டைலைப் பார்த்தால் சேவாக் இடதுகையில் பேட்டிங் செய்ததுபோல்தான் இருந்தது, அதாவது சேவாக் அதிரடியைப் போன்று ஆர்யாவின் அதிரடி ஆட்டமும் இருந்தது. பதிராணா வீசிய வைடு யார்கர், புல்டாஸ் என எது வீசினாலும் பந்து சிக்ஸருக்கு பறந்தவாறு இருந்தது. சிஎஸ்கே அணியில் நேற்று ஒரு பந்துவீச்சாளரையும் ஆர்யா விட்டுவைக்கவில்லை. பிரியான்ஷ் ஆர்யாவை எவ்வாறு அவுட் ஆக்குவது என தெரியாமல் சென்னை அணியினர் திணறி வந்தனர். பிரியான்ஷ் ஆர்யா டெல்லியைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர்கள் டெல்லியில் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள். கௌதம் கம்பீரின் முன்னாள் பயிற்சியாளரான சஞ்சய் பரத்வாஜிடம் பயிற்சி அவர் பெற்றார். டெல்லி பல்கலைகழகத்தில் பிஏ பட்டம் பெற்றுள்ளார். ஐபிஎல் டி20 வலைதள தகவல்படி, ஆர்யா 19 வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி அணியை வழிநடத்துகையில் தனது சிக்ஸர் அடிக்கும் திறனுக்காக பெரிதும் அறியப்பட்டவர். கடந்த ஆண்டு டெல்லி பிரிமியர் லீக்கில் அவர் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார். குறிப்பாக, தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய அவர் வடக்கு டெல்லிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் மனன் பரத்வாஜ் எனும் இடது கை சுழற்பந்து வீச்சாளரின் ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களுக்கு விரட்டி மிரட்டினார். அதனாலேயே ஆர்யாவை ஸ்பெஷல் ப்ளேயர் என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அழைத்துள்ளார். அந்த ஆட்டத்தில் அவரது அணி 20 ஓவர்களில் 308 ரன்கள் குவித்தது. அந்த போட்டியின் மூலம் கவனம் பெற்றவருக்கு சையது முஷ்டாக் அலி கோப்பையில் டெல்லி அணி சார்பாக விளையாட இடம் கிடைத்தது. அதில் உத்தரப் பிரதேசத்துக்கு எதிராக ஒரு மிரட்டல் ஆட்டம் ஆடினார். புவனேஷ்வர் குமார், பியூஷ் சாவ்லா உள்ளிட்ட நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருந்த அந்த அணிக்கு எதிராக, 43 பந்துகளில் 10 சிக்ஸர்கள் ஐந்து பவுண்டரிகளை அடித்து 103 ரன்கள் எடுத்தார். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு ஆட்டத்தை சென்னை அணிக்கு எதிராக தற்போது பிரியான்ஷ் ஆர்யா விளையாடியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் அநாயசமாக சிக்ஸர்களை விளாசி அதீத ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவித்து ஆர்யா கவனம் ஈர்த்தார். இதன் மூலம் ஐபிஎல் அணிகளின் பார்வை பட, கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஏலத்தில் பிரியான்ஷை எடுக்க டெல்லி, பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. 3 கோடியே 80 லட்சம் கொடுத்து அவரை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. பிரியான்ஷுக்கு ஐபிஎல் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சிஎஸ்கே தோல்விக்கான காரணங்கள் என்ன? சிஎஸ்கே அணியில் பெரிய இலக்கை துரத்திச் செல்லும்போது, அதிரடியாக பெரிய ஷாட்களை அடிக்கும் பிக் ஹிட்டர்கள் யாருமில்லை. ஷிவம் துபே தவிர மற்ற யாரையும் பிக்ஹிட்டர்கள் வரிசையில் சேர்க்கமுடியாது. பீல்டிங், பந்துவீச்சு, பேட்டிங் படுமோசமாக இருந்தது. 200 ரன்களை சிஎஸ்கே தொட்டது பெரிதாக இருந்தாலும், கடந்த போட்டிகளைவிட இதில் பரவாயில்லை என ஆறுதல்படலாம். மற்றவகையில் சிஎஸ்கே பந்துவீச்சும், பீல்டிங்கும் சுமார் ரகத்துக்கும் குறைவுதான் என்று பயிற்சியாளர் பிளெம்மிங் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த ஆட்டத்தில் மட்டும் நேற்று 9 கேட்சுகளை இரு அணி வீரர்களும் நழுவவிட்டனர். கேட்சை நழுவவிட்டாலும் பஞ்சாப் வெற்றியை தவறவிடவில்லை. ஆனால் சிஎஸ்கே அணி 5 கேட்சுகளை தவறவிட்டு ஆட்டத்தையும் கோட்டைவிட்டது. குறிப்பாக பிரியான்ஷ் ஆர்யாவுக்கு கலீல் அகமது, ரவீந்திரா, கேட்ச் பிடித்திருந்தாலே ஆட்டம் மாறியிருக்கும். சனிப் பெயர்ச்சி நிகழும் நாளை கணிப்பதில் ஜோதிடர்கள் முரண்படுவது ஏன்? அறிவியல் உண்மை என்ன?30 மார்ச் 2025 கோடையில் எந்தெந்த பாம்புகள் வீடுகளை நோக்கிப் படையெடுக்கும்? எப்படி தவிர்க்கலாம்?29 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனி, ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கேஅணியில் ஃபார்மில் இல்லாத வீரர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் ஏதேனும் ஒருபோட்டியில் சிறப்பாக ஆடினாலும், பல போட்டிகளில் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடுவார்கள். மோசமான கேப்டன்சியும், பேட்டிங்கும் தோல்விக்கு முக்கியக் காரணம். ஏனென்றால் சிஎஸ்கே அணி 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யாமல் போன பல போட்டிகளில் ருதுராஜ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். அந்த போட்டிகளில் ருதுராஜ் பேட்டிங் சராசரி 13 ரன்களுக்கும் குறைவாக இருக்கிறது, இந்த ஆட்டத்திலும் ருதுராஜ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் அதிகமான அழுத்தம், நெருக்கடியில் கேப்டன்சி பொறுப்பை ருதுராஜால் சரிவர செய்ய முடியவில்லை. சிஎஸ்கே பந்துவீச்சு நேற்று படுமோசமாக இருந்தது. ஜடேஜா மட்டும் 6 ரன்ரேட்டில் பந்துவீசியுள்ளார். ஆனால் மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 10 ரன்களுக்கும் குறைவில்லாமல் ரன்களை வாரி வழங்கி மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர் தோனியின் போராட்டம் வீண் - சென்னை அணி மீண்டும் தோல்வி ஹர்திக் தடாலடியால் மும்பைக்கு கிடைத்த சாதகத்தை ஒரே ஓவரில் காலி செய்த சகோதரர் க்ருணால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யான்சென் ஆட்டத்தை மாற்றிய 3 சிக்ஸர்கள் சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் " இந்த ஆட்டத்தில் பேட்டிங் மட்டுமே சற்று நேர்மறையாக இருந்தது. டாப் ஆர்டர் வலுவாகஇருந்த போதிலும் அதிலும் சின்ன தவறு நடந்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை. குறிப்பாக ரன்ரேட்டை சரியாகக் கொண்டு சென்றிருந்தாலே போட்டியை இன்னும் நெருக்கமாக வந்திருக்கலாம். களத்தில் நாங்கள் பீல்டிங், பந்துவீச்சில்தான் ஆட்டத்தை இழந்தோம். குறிப்பாக மந்தமான பீல்டிங், பந்துவீச்சில் பலமுறை லென்த்தை தவறவிட்டோம். ஆர்யாவின் அதிரடி ஆட்டம் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி தவறான லென்த்தில் பந்துவீச வைத்தது. அப்போதே ஆட்டம் எங்களைவிட்டு சென்றது. பெரிய ஸ்கோரை சேஸ் செய்யும் இந்த ஆட்டத்தில் 18 ரன்களில் தோல்வி அடைந்தோம், அதாவது 3 சிக்ஸர்கள். இந்த 3 சிக்ஸர்களை பேட்டர்கள் கூடுதலாக அடித்திருந்தால் ஆட்டம் வேறுமாதிரியாக இருக்கும், இந்த சீசன் மிகவும் வெறுப்படைய வைக்கிறது. கேட்ச் பிடிப்பது மோசமாக இருக்கிறது, பஞ்சாப் தரப்பிலும் பல கேட்சுகளை நழுவவிட்டனர். மின் ஒளியில் கேட்சை தவறவிட்டார்கள் என்று நான் நழுவவில்லை, உண்மையில் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம். அது கவலைக்குரியதுதான். ஐபிஎல் போட்டியில் வெல்ல வேண்டுமென்றால், டாப்3 பேட்டர்கள் பெரிய ஸ்கோர் செய்ய வேண்டும். ஆனால் நாங்கள் அவ்வாறு இல்லை. இன்னும் வலுவான தொடக்கத்தை எதிர்பார்க்கிறோம். அதே ஆட்டத்தை நடுப்பகுதிவரை கொண்டு வர வேண்டும். நல்ல பந்துவீச்சு இருந்தாலே பேட்டர்களுக்கு சுமை குறைந்துவிடும். அனைத்தையும் மறுஆய்வு செய்வோம். ஆனால் இது மோசமான ஆட்டமாக சேஸிங்காக இல்லை. 3 சிக்ஸர்கள்தான் எங்களை தோல்வியில் தள்ளியது" எனத் தெரிவித்தார் இன்றைய ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் இடம் - ஆகமதாபாத் நேரம் - இரவு 7.30 மணி சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் நாள் - ஏப்ரல் 11 இடம் - சென்னை சேப்பாக்கம் மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் நாள் - ஏப்ரல் 13 இடம் - டெல்லி ஆர்சிபி அணியின் அடுத்த ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ் அணி நாள் - ஏப்ரல் 10 இடம் - பெங்களூரு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிகோலஸ் பூரன் ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 288 (5 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 265 (5 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) - 199 (5 போட்டிகள்) நீலத் தொப்பி நூர் அகமது (சிஎஸ்கே) - 11 விக்கெட் (5 போட்டிகள்) கலீல் அகமது (சிஎஸ்கே) - 10 விக்கெட் (5 போட்டிகள்) ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்) - 10 விக்கெட் (5 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39jjkydlxdo
  36. கந்தப்பு நான் சொன்னது நேற்றய போட்டியில் மிகைத்திறம்பட பந்துவீசிய ஜடேஜாவிற்கும் வலதுகை ஆட்டக்காரர்களுக்கு நன்றாக பந்துவீசக்கூடிய நூர் அகமடிற்கும் ஏன் நான்கு ஓவர்களும் பந்துவீச கொடுக்கவில்லையென்றுதான்! அத்துடன் அஸ்ஹவினுக்கு தொடர்ந்து ஒவர்களை போடக்கொடுத்ததும் தவறு! மற்றய கப்டன்கள் எப்படி பந்துவீச்சாளர்களை கையாளுகிறார்கள் என்று கொஞ்சம் பாருங்கள்!
  37. அனுர திசநாயகக்க… ஜானாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது, கிழக்கு மாகாணத்தில் நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில்… பிள்ளையானிடம் சட்ட விரோத ஆயுதங்கள் உள்ளதாகவும் அதனை வைத்து மற்றவர்களை அச்சுறுத்தி அரசியல் செய்கின்றார் என்றும், தாம் ஆட்சிக்கு வந்தால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவார் என்றும் முன்பே கடுமையான தொனியில் கூறி இருந்தார். அந்தச் செய்தி யாழ். களத்திலும் வந்திருந்தது. ஜனாதிபதி தேர்தலில் அனுர வென்ற பின்…. பிள்ளையான் தலைமறைவாகி இருந்தமையும், அவர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார் என்றும்… சில செய்திகள் வந்திருந்தது. பின் பிள்ளையான் அசட்டு துணிச்சலில் வெளியே தலை காட்ட ஆரம்பித்து, அண்மையில் “கிழக்கு மாகாண தமிழ் கூட்டமைப்பு” என்ற கட்சி ஒன்றை… கருணா, வியாழேந்திரன் ஆகியோருடன் ஆரம்பித்து உள்ளூராட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகி வந்த நிலையில் பிள்ளையான் கைது செய்யப் பட்டுள்ளார். வியாழேந்திரன் ஏற்கெனவே கைது செய்யப் பட்டு விளக்க மறியலில் உள்ளார். தொடர்ச்சியாக கருணாவும் கைது செய்யப்படலாம். இப்போ… பிள்ளையானுக்கு ஏழரை ஆரம்பித்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.
  38. கதையின் கதாசிரியை ஏதோ மாஸ்டர் பிளானோட ஊருக்கு திரும்பி போயிருக்கிறார். ஆனால் எல்லாம் சறிக்கீட்டுது. கதை கரைச்சல் பட்ட கதையாய் போகுது. ஜேர்மனியிலையும் ஒழுங்காய் இருக்கேல்லை லண்டனிலையும் அப்பிடி தெரியேல்லை சொந்த இடத்துக்கு திருப்பி போய் சிக்கலை தவிர வேற ஒரு கோதாரியையும் காணேல்லை...😂
  39. காத்தான் குடியை பற்றித் தெரியாது. ஆனால் மாவட்ட ரீதியில் யாழ் மாவட்டம் சனத்தொகையில் மாபெரும் வீழ்சசியை கண்டுள்ளது. 1963 ல 612,596 ஆக இருந்தது. 1971 ல் 696,664 ஆக இருந்த யாழ் மாவட்ட சனத்தொகை 1981 ல் 830552 ஆக அதிகரித்தது. அதாவது 10 ஆண்டுகளில் 133,888 அதிகம். 34 ஆண்டுகளின் பின்னர் 2025 யாழ் மாவட்ட சனத்தொகை 594,333. கிளிநொச்சி மாவட்டம் 136,434. 1981 ல் மொத்த இலங்கையின் சனத்தொகையில் 5.59 வீதமாக இருந்த யாழ் மாவட்ட சனத்தொகை 2025 ம் ஆண்டு 2.7 வீதமாக குறைவடைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை 1963 ல் 196,189. 1971 ல் 256,721 ஆக இருந்த சனத்தொகை 1971 ல் 330,333 ஆக அதிகரித்து 2025 ல் 595,435 ஆக அதிகரித்துள்ளது. மாகாண ரீதியில பார்ததால் வட மாகாணத்தின் சனத்தொகை 1963 ல் 741,341. 1971 ல் இது 874626 ஆகவும் 1981 ல் 1109, 404 ஆக தொடர்ந்து அதிகரித்தது. 34 வருடத்தின் பின்னர் 2025 ல் வடமாகாணத்தின் குடித்தொகை 1149,240. வளர்சசி வீதம் கிட்டத்தட்ட பூச்சியம். கிழக்கு மாகாணத்தின் குடித்தொகை 1963 ல் 546,474. 1971 ல் 717,571. 1981 ல் 1081,481. 2025 ல் 1782,050. ( இந்த புள்ளிவிபரங்கள் அனைத்தும் ஶ்ரீலங்கா சனத்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரவியல் தினைக்களத்தின் (Department of census and statistics) இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டவை.
  40. ஆமாம் அதனை நானும் ஒத்துக் கொள்கிறேன்,...மோடி தமிழ் மொழியில் கையெழுத்து வைக்க கூடாது என்று சொல்லி இருப்பாராயின். ...தமிழர்கள் என்ன சொல்லி இருப்பார்கள் ??? இப்ப சொல்வதற்கு. நேர் எதிராக கருத்துகள் சொல்லி இருப்பார்கள் தமிழ் எங்கள் தாய் மொழி நாங்கள் தமிழில் தான் கையெழுத்து வைப்போம் மோடி தமிழ் மொழியை அளிக்கிறார். தமிழ் மொழி உலகத்தில் முதல் மொழி தமிழ் பழைமையானது தமிழ் முதல் தோண்றிய மொழி ...........இப்படி நிறைய சொல்லி இருப்பார்கள் அரசியல்வாதிகள் அரசியல் செய்வது இயல்பானது மோடி தமிழனை கொண்டு நாங்கள் தமிழில் கையெழுத்து இடமாட்டோம். என்று சொல்ல வைத்தது அரசியல் ....அது ஒரு சிறந்த அரசியல் இதோ மோடி தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் பல்கலைகழகத்தில் தமிழ் மொழியில் மருத்துவம் படிப்பிக்கும்படி தமிழ்நாடு அரசை கேட்டு உள்ளார் படிபிக்கலாம். இல்லையா?? ஏன் ஆங்கிலத்தில் படிபிக்க. வேண்டும் ?? அல்லது தமிழ் மொழியில் தமிழ்நாட்டில் மருத்துவம் படிப்பிக்கிறார்களா. ???
  41. அமெரிக்க பொருட்கள் இலங்கையில் குறைந்தளவே இறக்குமதியாகிறது. ஆனபடியால் அந்த இறக்குமதி வரியை 20-30 வீதமாக மாற்றினால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வீதத்தை அதன் அரைவாசியாக்குவார்கள். இதனால் இன்னும் இன்னும் ஆடைத்தொழிலை முன்னேற்றலாம். மற்றைய நாடுகளுடனும் போட்டி போடலாம். இப்போது இந்தியா பங்களாதேஸ் போன்ற நாடுகள் இலங்கையை விட குறைவான வரியே விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை தனது இறக்குமதி வரியை குறைக்காவிட்டால் ஆடைத்தொழில் மூடப்படும் அபாயம் இருக்கிறது. இதுபற்றி @vasee யின் கருத்துக்களை அறிய ஆவல்.
  42. இவரது தகவல்கள் சிலவற்றை இப்போது தேடி வாசித்தேன். அரசியலில் இறங்கியது தவறான முடிவு போல் தெரிகின்றது. ஆக 38 வயதுதான் இப்போது.
  43. சரி பார்த்ததற்கு நன்றி @vasee @கிருபன் இரு போட்டிகள் செவ்வாய்க் கிழமை நடக்க இருக்கின்றன. ஞாயிறு - ஒரு போட்டி SRH vs GT திங்கள் - ஒரு போட்டி RCB vs MI செவ்வாய் - இரு போட்டிகள் KKR vs LSG, PBKS vs CAK
  44. 🌾இயற்கையிலிருந்து ஒரு வேதனையான உண்மை. 🦂 பிரசவத்திற்குப் பிறகு, ஒரு தாய் தேள் தனது குழந்தைகளைப் பாதுகாக்க முதுகில் சுமந்து செல்கிறது. இந்த நேரத்தில், அது சாப்பிடுவதில்லை, ஆனால் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறது. நாட்கள் செல்லச் செல்ல, அது பலவீனமாகி, தனது குட்டிகள் உயிர்வாழ்வதை உறுதி செய்வதற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் அர்ப்பணிக்கிறது. குழந்தை தேள்கள் போதுமான அளவு வலிமையாக இருக்கும்போது, அவை தங்கள் தாயை விட்டு வெளியேறி தங்கள் சொந்த வாழ்க்கையைத் தொடங்குகின்றன. அதற்குள், அவள் பெரும்பாலும் சோர்வடைந்து பாதிக்கப்படக்கூடியவள் - அவர்களுக்காக தன்னை முழுமையாக தியாகம் செய்துவிட்டாள். அமைதியான தியாகத்தின் இந்த உருவம் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக என்ன செய்கிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது. நாம் பிறந்த தருணத்திலிருந்து, அவர்கள் நமக்கு எல்லாவற்றையும் தருகிறார்கள் - நேரம், சக்தி, ஆறுதல், கனவுகள் - பதிலுக்கு கொஞ்சம் கேட்கிறார்கள். இருப்பினும், அவர்கள் வயதாகி பலவீனமாகும்போது, பலர் பின்தங்குகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள் அல்லது மறக்கப்படுகிறார்கள். நாம் நமது சொந்த இலக்குகளைத் தொடர்கிறோம், பெரும்பாலும் அவற்றை சாத்தியமாக்கியவர்களை மறந்து விடுகிறோம். ஆனால் வாழ்க்கை எப்போதும் முழு வட்டத்தில் வருகிறது. ஒரு நாள், நாமும் அவர்கள் இப்போது இருக்கும் இடத்தில் இருப்போம். அவர்களை மதிக்க மிகவும் தாமதமாகும் வரை காத்திருக்க வேண்டாம். அவர்கள் நமக்குக் கொடுத்த அன்பையும் அக்கறையையும் அவர்களுக்குக் கொடுப்போம் - நம்மால் முடியும் வரை. Vincent Raj
  45. இது நடந்தது தமிழ்நாட்டில் அல்ல; அமெரிக்காவில் வாரத்தில் சுமார் ஒரு மணி நேரம் இயங்கும் ஒரு தமிழ்ப் பள்ளியில். ஆசிரியர் நான் அல்லன்; என் மகள் சோம.அழகு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.