Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19109
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87988
    Posts
  3. putthan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    14675
    Posts
  4. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    12678
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/11/25 in all areas

  1. நான் ஒரு இந்து. எனக்கு முஸ்லிம்களை பிடியாது எனவே: எப்படியாவது இந்து இந்தியாவுக்கு முஸ்லிம் பாகிஸ்தானை எதிர்த்து முண்டு கொடுப்பேன். இதுவே உங்கள் எழுத்தின் ஊக்கியாக எனக்கு படுகிறது. அதை அப்படி சொல்லி விட்டு போனால் உங்கள் நம்பகதன்மையாவது மிஞ்சும். விளங்க (சில சமயம் வில்லங்கமாக) நினைபவருக்கும் இந்த முஸ்லிம் வெறுப்புத்தான் சிந்தனையின் ஊக்கி. சுயநிர்ணயம் என்பது தேசிய இனங்களின் உரிமை. கஸ்மீரிகள் தனி நாடாக இருந்தவர்கள். அவர்கள் தலைவிதியை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதை இந்தியாவே ஐநாவில் ஏற்று கொண்டுள்ளது. ஆகவே எம்மை விட சுயநிர்ணயத்துக்கு / வாக்கெடுபுக்கு உரிதானவர்கள் அவர்கள். அவர்கள் உலக யதார்த்தத்தை எதிர்த்து போராட கூடாது என்றால், நாமும் சிங்களவன் கொடுத்த வெளுவையை வாங்கி கொண்டு சும்மா இருந்திருக்க வேண்டும். இந்த சண்டையின் அடிப்படை ஒன்றேதான். நீர்… இண்டஸ், ஜீலம், செனாப், நீலம், றவி என பல நீர்வாழ்வாதார நதிகள் காச்மீரினூடு பாய்கிறன. அதனால்தான் இரு நாடுகளும் கஸ்மீரை குறிவைக்கிறன. உலகம் வல்லாதிக்கத்தின், அதாவது உங்கள் பாசையில் இறைமையில் கைவைக்காது என்பது நடைமுறையாக இருக்கலாம்…ஆனால் இங்கே சாமானியகள் நாம் நடைமுறை பற்றி கதைக்கவில்லை. யார் பக்கம் நியாயம் என்பதையே கதைக்கிறோம். நியாயம் இந்தியாவிடமோ பாகிஸ்தானிடமோ இல்லை. நியாயம் எம்மை போல ஒடுக்கப்படும் சக தேசிய இனமான காஸ்மீரிகளிடமே உள்ளது.
  2. தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்களை திரும்பி வர தயாராக இருக்கும் படி ஒவ்வொரு அணியும் கேட்டு வருகுகிறது. யுத்த நிறுத்தம் தொடர்ந்தால் சிலவேளை போட்டி மே 15 ஆம் திகதி அளவில் ஆரம்பிக்கலாம். சிலவேளை சென்னை, பங்களூர், ஹைதராபாத் போன்ற தென்னிந்தியா நகரில் மட்டுமே போட்டிகள் நடைபெறும் எனவும் சொல்லப்படுகிறது. இடைநிறுத்தப்பட்ட டெல்லி, பஞ்சாப் போட்டி மறுபடியும் நடைபெறுமா என்பதும் இன்னும் முடிவெடுக்கவில்லை. இன்று ஞாயிறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
  3. இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Patrick Brown) தெரிவித்துள்ளார். கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் மீதான தாக்குதல் நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது. இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள். ஆனால், இலங்கை அரசாங்கம் தவறான தகவல்களை பரப்பி வருகின்றது என தெரிவித்த பிரம்டன் முதல்வர், உண்மைக்காகவும் நீதிக்காவும் குரல்கொடுத்த தமிழர்களை இழிவுபடுத்தவும் தாக்கவும் அவர்கள் முயன்றனர். இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழர் படுகொலை நினைவுதூபி என நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Tamilwinதமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்ட...இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Pa...
  4. பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பி விட்டார்கள். உலக டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி யூன் 11 இலண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையில் நடைபெறவுள்ளது. சென்னை, SRH அணிகள் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்புகளை இழந்துள்ளார்கள் . இதனால் அவுஸ்திரேலியா SRH வீரர்கள் கமின்ஸ், டிர்வர் ஹெட், சென்னை வேகப்பந்து வீச்சளார் நேதன் எலிஸ் போன்றவர்கள் இந்தியாவுக்கு வருவார்களா என்பது கேள்விக்குரிய இருக்குறது. பங்களூர் அணியின் ஹேசில்வுட் காயம் காரணமாக சென்னைக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. இன்னும் காயத்தில் இருப்பதினால் அவரும் இந்தியா வருவது சந்தேகமாக இருக்கிறது. டெல்லி அணிக்கு இன்னும் இறுதி போட்டிக்கு வருவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் மிச்சல் சார்க் பெரும்பாலும் வரமாட்டார். உலக டெஸ்ட் இறுதி போட்டிக்கு தயார் படுத்த வேண்டிய தேவையும் அவருக்கு இருக்கிறது. பஞ்சாப் அணியின் முதன்மை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறார். அவர் பஞ்சாப் அணியின் வெளிநாட்டு வீரர்களை இந்தியாவில் நிற்கும் படி கேட்டுள்ளார். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியின் மார்கோ ஜான்சன் தாயகம் திரும்பி விட்டார். போட்டிகள் தொடங்க சில நேரம் அவர் திரும்பி வரலாம் . ( தென்னாப்பிரிக்கா அணியினர் சிம்பாவே அணியுடன் பயிற்சி போட்டிகள், உலக டெஸ்ட் இறுதி போட்டிக்கு தயார்படுத்த யூன் 1 ம் திகதி சிம்பாபே செல்லுகிறார்கள். ஐபிஎல் வீரர்களும் செல்வார்களா என்பதனை இன்னும் தென்னாப்பிரிக்கா அணி தெரிவிக்கவில்லை). மற்றவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். குஜராத் அணி அகமதாபாத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வணியின் ஜோஸ் பட்லர், ஜெரால்ட் கோட்ஸே தாயகம் திரும்பி விட்டார்கள்
  5. Mohan Ramakrishnan 13h · Tamil Genocide Education Week is at Chinguacousy Park, Brampton. 14h · Mississauga · A historic moment for the Tamil people in Canada and around the world as the Tamil Genocide Monument was inaugurated in Brampton, Canada. The Tamil Genocide Monument is constructed in remembrance of the victims of the Tamil Genocide being committed by the Sri Lankan state. The Tamil Genocide Monument not only honours the innocent lives lost —it speaks to resilience. It is a place for education, reflection, and resistance against denial of the Tamil Genocide.
  6. இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும் வணக்கம். ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கும் இந்தியர்களாகிய உங்களுக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு வரலாற்றுக்கும் முந்தியது. நீங்களும் நாமும் ஒரு பொது மரபுரிமைக்கு சொந்தமானவர்கள். ஆங்கிலத்தில் long lost cousins என்பார்களே…அதைப்போல் இந்தியர்களின் long lost cousins இந்த உலகில் யார் எனப்பார்த்தால் அது நாமும், சிங்கப்பூர், மலேசியா, ரியூனியன், பர்மா, கயான, டிரினிடாட், தென்னாபிரிக்கா மற்றும் மேற்குலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் வம்சாவழியினருமே ஆகும். நம்மை இணைக்கும் மிக பெரும் பொதுக்காரணி இந்து சமயம் ஆகும்; அதில் எங்களில் பெரும்பான்மையானோர் சைவ உட் பிரிவைச் சார்ந்தோர் எனிலும் எம்மை இந்துக்கள் என்றே அடையாளம் செய்வதோடு வைஸ்ணவம், சாக்தம் உட்பட இதர தெய்வ வழிபாடும், பிரசித்தமான கோவில்களும் எம் வாழ்வியலோடு பின்னிபிணைந்தவையாகும். இது மட்டும் அல்ல. இராமகிருஸ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றைய பிந்தைய இந்திய ஆன்மீகவாதிகளும் எம்மண்ணில் மிகபெரும் செல்வாக்கு கொண்டிருந்தனர். இலங்கை எங்கனும் இராமகிருஸ்ண மடங்களை நிறுவி இந்து மதத்தை முன்னிறுத்தியவர் எமது மட்டகளப்பு மண் தந்த சுவாமி விபுலந்த அடிகள். அதேபோல் கிறிஸ்தவ மிசனரி பள்ளிகளுக்கு மாற்றாக ஈழத்தமிழர் நாம் கல்லூரிகளை உருவாக்கியபோது அவற்றை இந்து மத அடிப்படையில் “இந்து கல்லூரிகள்” என்றே உருவாக்கினோம். இன்றும் தமிழர் பகுதிகளில் ஊருக்கு ஒரு இந்து கல்லூரி இருப்பதை நீங்கள் காணலாம். இது மட்டுமா, இந்திய சுதந்திர போரை எமது போராகவே வரித்து கொண்டவர்கள் ஈழத்தமிழர். யாழ்பாணத்தின் முதல் அரசியல் இயக்கமான “Jaffna Youth Congress” காந்தியடிகளையே தமது வழிகாட்டியாக நிலை நிறுத்தியது. 1987 வரைக்கும் எமது வீடுகளில் காந்தி, நேரு, நேதாஜி படங்கள் தொங்குவதே வழமை. எந்த இலங்கை தலைவர் படமும் இராது. அதேபோல் கிரிகெட் என வந்துவிட்டால், கபில்தேவ், கவாஸ்கரின் இந்திய அணியை எமது அணி போலவே எமது மக்கள் கொண்டாடினார். இலங்கை-இந்திய போட்டிகளில் கூட, இந்திய அணியையே பெரும்பாலான எம்மக்கள் ஆதரித்தனர். இந்தியா-சீனா, இந்தியா-பாகிஸ்தான் போர்களில் இலங்கை நடுநிலை நாடகம் ஆடியது. ஆனால் பாகிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்ப வழி கொடுத்தது. ஆனால் ஈழத்தமிழர்கள் இந்த போர்களில் எல்லாம் இந்தியாவுக்கு ஆதரவாக பேரணிகள், கூட்டங்கள் நடத்தி தம் ஆதரவை வெளிக்காட்டினர். இவ்வாறு எமக்குள் இருந்த பிணைப்பு, தந்திரமான இலங்கையின் செயல்பாட்டால், 1987க்கு பின் உடைந்து போனது ஒரு வரலாற்று சோகம். இதில் இருபகுதியிலும் தப்பு உள்ளதை என்னால் மறுக்க முடியாது. குறிப்பாக பாரத முன்னாள் பிரதமர் ரஜீவ் கொலை ஒரு மன்னிக்க முடியாத செயல் என்பதில் நானும் உடன்படுகிறேன். ஆனாலும் புலிகள் மீது இந்தியாவுக்கு தனிப்பட்ட கோவம் இருப்பினும், ஈழத்தமிழரை இந்தியா கைவிடாது என நாம் கடைசி வரை நம்பினோம். ஆனால் ஈழப்போரின் போது எம்மக்களுக்கு இந்தியா துணையாக நிற்கவில்லை. எங்களை இனப்படுகொலைக்காளாக்கினீர்கள்; சிங்களவருக்கும் படைக்கலன்களையும் கலங்களையும் வழங்கி கொல்லவும் துணை நின்றீர்கள். இதனை நாங்கள் மறக்கவில்லை. அதேபோல் ரஜிவ் கொலை உட்பட்ட விடயங்களை நீங்கள் மறக்க வேண்டும் என்பதும் என் கோரிக்கை அல்ல. ஆனாலும் பழையதை இருதரப்பும் மன்னித்து, அதை வரலறாக்கி விட்டு, புதியதோர் அத்தியாத்தை எம் உறவில் ஆரம்பிக்க முடியும் என நான் நம்புகிறேன். இதனடிப்படையில் தற்போதுநடந்துகொண்டிருக்கும் சமரில், உங்களுக்கு பாக்கிஸ்தான் மீதான பரப்புரை போரிற்கோ இல்லை அவர்கள் ஊக்குவிக்கும் நாடுகடந்த எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை வெளிச்சம் போட்டு காட்ட நான் உங்களுக்கு ஓர் ஆயுதத்தை வழங்குகிறேன். இது பன்னாட்டளவில் நீங்கள் செய்து வரும் பாக்கிஸ்தான் பயங்கரவாத நாடு என்ற உங்களின் கூற்றுக்கு வலுச்சேர்க்கும். ஆயுதம் யாதெனில், பல்லாண்டுகளாக தமிழீழத்தின் புலனாய்வுத்துறையின் முகவர்களால் மேற்கொள்ளப்பட்ட கமுக்க வேவு மற்றும் உளவு நடவடிக்கைகளின் பெறுபேறாய் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பாக்கிஸ்தான் நாட்டின் புலனாய்வு அமைப்பு தமிழீழத்தின் எல்லைக்குள் செய்துவந்த எல்லைகடந்த பயங்கரவாதம் தொடர்பான தகவல்கள் ஓர் அறிக்கையாக்கப்பட்டது. பின்னர் அதனை "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 2006ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஜெனிவாவில் வைத்து சிறிலங்கா அரசாங்கத்திடமும் இணைத்தலைமை நாடுகளிடத்திலும் கையளித்தார். எனினும் இது ஊடகங்களிற்கு வழங்கப்படவில்லை என்றே என்னால் அறியமுடிகிறது. ஊடகங்களில் வெளியாகவில்லையாதலால் இவ்வாயுதம் என்னிடத்தில் இல்லை. ஆயினும் உங்களின் எதேனும் ஒரு புலனாய்வு முகவரகத்திடமோ இல்லை சிங்களப் புலனாய்வுத்துறையிடமோ இருக்கக்கூடும். அல்லது 2002ம் ஆண்டில் ஈழத்தில் நடந்த அமைதி உடன்படிக்கையில் பங்கேற்ற இணைத்தலைமை நாடுகளிடமோ இருக்கக்கூடும். இவ்வறிக்கையிலிருந்து என்னால் தேடியெடுக்கக்கூடிய தகவல்களை என்னுடைய "ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள்" என்ற ஆவணக்கட்டின் முன்னுரையில் பாவித்துள்ளேன். அவை பின்வருமாறு: இதனைக் கொண்டு நீங்கள் பாக்கிஸ்தான் மீதான உங்களின் எல்லைதாண்டிய பயங்கரவாதம் என்ற கூற்றை இந்தியாவிற்குள் மட்டுமின்றி இந்தியாவிற்கு வெளியிலும் நிலைநாட்டலாம். அதனை பொது வெளியில் வெளியிட்டால் நாங்களும் ஈழத்தமிழர்கள் மீது முஸ்லிம் பயங்கரவாதிகள் மேற்கொண்ட அட்டூழியங்கள் தொடர்பிலான தகவல்களுக்கு அதை உபயோகிப்போம். இலங்கை இஸ்லாமிய வன்போக்காளருக்கும், பாகிஸ்தானியருக்கும் மதத்தை தவிர வேறு எந்த ஒருமையும் இல்லை. ஆயினும் ஈழத்தமிழர்களையும், இந்தியாவையும் அவர்கள் ஒரு சேர எதிர்க நாம் இந்துக்கள் என்பதும், ஈழத்தமிழர்களை அவர்கள் இந்தியாவின் தொடர்ச்சி என காண்பதுமே காரணம் ஆகிறது. ஆனால் ஈழத்தமிழருக்கு, புலம்பெயர் ஈழதமிழருக்கு இந்தியாவுடன் மதம் மட்டும் அன்றி பல்வேறு தொடர்புகள் உள. இந்தியாவை ஒரு காலம் வரை தம் தந்தையர் நாடு என கருதிய ஈழத்தமிழரே இந்தியாவின் ஒரே இயற்கையான நண்பர்கள் (natural allies). மேற்கு நாடுகளில் பலம்பெற்று வரும், அரசியல் அதிகாரத்தை நோக்கி மெல்ல நகரும் ஒரு இனக்குழு ஈழத்தமிழராகிய நாம். இந்தியாவுக்கு வெளியே, இந்தியர் அல்லாத - ஆனால் இந்தியாவுக்கு ஆதரவு குரல் கொடுக்க கூடிய, மனதார இந்தியாவை நேசிக்க கூடிய ஒரே இனக்கூட்டம் நாம் மட்டுமே. இதை இந்தியா உணர்ந்து எம்மை அரவணைக்க வேண்டும். இலங்கையில் எமது வடக்கு-கிழக்கு தாயக பகுதிகளில், குறைந்த பட்சம், இலங்கையில் இருந்து பிரிந்து போக முடியாத ஆனால் மாநில சுயாட்சி உள்ள சமஸ்டி அரசு ஒன்றை நிறுவ இந்தியா முன்னின்று உழைக்க வேண்டும். இந்த தீர்வை, இலங்கையை நெருக்கி பெற்று கொடுக்க வேண்டும். இப்படி இந்தியா செய்யின் ஒரு மிகபெரும் பலம் பொருந்திய நட்பு சக்தியை உலகெங்கும் இந்தியா பெறும். ஐக்கிய அமெரிக்காவும், யூதர்/இஸ்ரேலும் போல, இந்தியாவும் ஈழத்தமிழரும் ஒரு பரஸ்பர நல்லுறவுக்கு வரவேண்டும் என்பதே என் அவா. இதன் ஒரு அங்கமாகவே நான் இந்த அரிய தகவலை உங்களுக்கு வழங்குகிறேன். நன்றி
  7. நீங்கள் கூறுவது சரி ஆனால் நடமுறை அதுவல்ல ...எல்லாம் சும்மா சட்ட வல்லுனர்களின் எழுத்து மட்டுமே ...நடைமுறைக்கு பய்ன்படுத்த மாட்டார்கள் ..அதை நடைமுறைபடுத்த சகல் அதிகாரம் கொண்ட ஒர் உலக அமைப்பு இன்று வரை இல்லை ...இனி வரும் காலங்கலிலும் சாதியப்பட போவதுமில்லை.. இன்றைய உலக சூழலில்/அரசியல் நடைமுறையில் வாக்கு எடுப்பு நடத்தி தேசிய இனங்களின் நிலங்களை/ உரிமைகளை பாதுகாத்து கொள்ள முடியும் என நான் நம்பவில்லை... இறையாண்மை உள்ள தேசிய நாடு என்ற சொற்பதம் வன்முறை ஆட்சியாளர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கின்றது..., .. இங்கு தாக்குதலை செய்தது கஸ்மீரிகள் அல்ல ...ஒர் இறையான்மை உடைய பாகிஸ்தான் என்ற நாட்டின் உதவியுடன் இன்னுமொரு இறையாண்மை கொண்ட‌ இந்தியாவின் கஸ்மீர் மக்களின் மீது ... சிறிலங்காவின் இறையாண்மையை பாதுகாக்க இன அழிப்பு செய்த நாடுகள் உள்ள உலகம் இது...எவ்வளவு சாட்சிகள் இருந்தாலும் தேசிய நாடுகளின் இறையாண்மையை தான் பாதுகாப்பார்கள். தேசிய இனங்களின் வாழ்வுரிமையை நசுக்குவதில் ஐ.நா.சபை முதல்,இடது ,வலது ஆட்சியாளர்கள் முன் நிற்பார்கள் ,நிற்கின்றனர்..
  8. உந்த யூடியுப் காரர்,சமுகவலை கருத்தாளர்களை விடுங்கோ ...உவங்களின்ட தலைப்பை பார்த்து இரத்த கொதிப்பு வந்தது தான் மிச்சம் எங்களுக்கு....,அவங்களுக்கு நல்ல காசு வந்து உலகம் சுற்றுறாங்கள் ...நாங்கள் இரண்டுவருசத்திற்கு ஒருக்கா சிறிலங்கா போறது என்றால் நாலுதடவை வங்கி கணக்கை பார்க்க வேண்டியிருக்கு ... நான் அரசாங்கங்கள் சொல்லுவினம் ஜனநாயக்த்தின் தூண் எண்டு...பிறகு பார்த்த அவையளே பேனா போய் துப்பாக்கி நீட்டிகொண்டு நிற்கும் அதை போட்டவர்களின் மன‌தின் உள்ளே ..."ஹ","சஹா","மொ""இஸ்"🤣 போன்ற பூனைக்குட்டி மறைந்திருக்கிமோ?
  9. 1948 இல் கஸ்மீரிகளிடம் முடிவு வாக்கெடுப்பில் கேட்கப்பட வேண்டும் என ஐநா தீர்மானம் நிறைவேறியது. ஆம் ஆனால் வெளியார் வெளியேறியபின்பே தேர்தல் என இந்தியா பின்னடித்தது. இன்னும் அடிக்கிறது. ஆர்ட்டிகல் 370 இது கஸ்மீர் இந்தியாவுடன் சேரும் போது ஒரு “தற்காலிக” சரத்தாகவே உருவானது. கஸ்மீரின் மாநில கருவாக்க அசெம்பிளி அமைந்த பின் அது இந்திய குடியுரிமை சட்டத்தின் எந்த பிரிவுகள் கஸ்மீருக்கும் அமலாக கூடியன என்பதை தீர்மானிக்கும். அதன் பின் மாநில கருவாக்க அசெம்பிளியே 370 வதை நீட்டிப்பதா இல்லையா என தீர்மானிக்கும். அதேபோல் இதை நீக்கும் அதிகாரம் மத்திய நாடாளுமன்றுக்கும் உள்ளது என சொன்னது இந்த ஆர்டிக்கில். மாநில கருவாக்க அசெம்பிளி அமைந்து, அது இந்திய அரசியல் சட்டத்தில் சில தமக்கு சேராது என தீர்மானித்தது. இதைத்தான் கஸ்மீர் சிறப்புரிமை என்பார்கள். இதன் உத்தியோக பூர்வ பெயர் 1954 ஆம் ஆண்டின் ஜனாதிபதி உத்தரவு. இதன் அடிப்படையில்தான் நீங்கள் மேலே சொன்ன காணி விடயங்கள் இருந்தன. மாநில கருவாக்க அசெம்பிளி 370 ஐ நீக்காமலே கலைந்து விட்டது. இந்திய பாராளுமன்றமும் அதை நீக்கவில்லை. 70+ வருடமாக அது ஒரு நிரந்தர சரத்து என்றே கருதப்பட்டது. ஆனால் அதன் இயல்பை பின்னாளில் வந்த பல ஜனாதிபதி உத்தரவுகள் குறைத்தன. 2019 இல் பிஜேபி இந்த சிறப்பு அந்தஸ்து முழுவதையும் நீக்கி, ஏனைய இந்திய மாநிலங்கள் போல் ஜம்மு கஸ்மீருக்கும் அரசியலமைப்பின் அத்தனை சரத்துகளும் பொருந்தும் என மாற்றினர். அத்தோடு, ஒரு காலத்தில் நாடாக இருந்த மாநிலத்தை, யூனியன் பிரதேசமாக தரம் இறக்கி, அதில் இருந்து லடாக் பகுதியை பிரித்து அநியாயம் செய்தனர்.
  10. என்னண்ணை அதிசயமாக கேக்கிறியள்?! இப்ப இவர்கள் தானே கதாநாயகர்கள்!
  11. தமிழினப்படுகொலை நினைவகத் திறப்பு நிகழ்வு https://www.facebook.com/uthayan.s.pillai/videos/1053096896714981
  12. தெளிவான ரபேல் பாகாத்தின் காணொளியாம்.
  13. Nadarajah Kuruparan is with Ramalingam Chandrasegar. கொட்டாஞ்சேனை மாணவியும் பிந்திய நீதியும்… ஆணையிறவு உப்பில் சுறணை வந்தது போல் சொன்னதை செய்யுங்கள். சில தமிழ் பண்டிதர்கள் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்கள் என நினைத்திருந்தேன். ஆனால் ஹீரோயிசத்தை ஆராதிப்பதை தவிர, அரசியல் புரியவில்லை, குறிப்பாக தமிழும் புரியுதில்லை என்பதுதான் துர்ப்பாக்கியம். சரி அவர்கள் அப்படியே இருக்கட்டும். என்னுடன் உரையாடிய நண்பர் ஒருவர் சொன்னர் “இவங்களை ஒருவரும் அனுப்பத் தேவையில்லை தாங்களாகவே போய்விடுவாங்கள் போல இருக்கு என்று“ (அநுர குறித்து ஒரு மென்போக்கு அவரிடமும் உண்டு) நாடு அநுரவோடு இருக்க வேண்டும் வடக்கு கிழக்கு மலையகம் ஊரோடு இருக்க வேண்டும் என நினைப்பவன் நான் என்று தெரிந்தே அவர் என்னிடம் இதனை வலியுறுத்தினார். இன்னுமொரு நண்பர் சொன்னார் இப்பவும் நீங்கள் அந்த நிலைப்பாடோடுதான் இருக்கிறியல் போல கிடக்கு, கவனம் உங்களை அவங்கட ஆட்கள் என்று சீல்குத்திப்போடுவாங்கள் என்று. வெளிப்பார்வை எப்படி இருந்தாலும் அதுபற்றிய கவலை என்னிடம் இல்லை. உண்மை எது என்பதனை எனது கடந்தகாலம் கூறும். காரணம் தமிழ் சிங்களம் என வேறுபாடு இல்லாமல் அதிகாரத்தை அவ்வப்போது கையில் எடுத்த அனைத்து தரப்பினாலும், நான் உடலளவிலும் மனதளவிலும் கடுமையாகபாதிக்கப்பட்டு இருக்கிறேன். சரி விடயத்திற்கு வருவோம். கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் குறித்து அண்மைய நாட்களாக பாரிய போராட்டங்கள், சர்ச்சைகள், சமூகவலைத்தள விவாதங்கள் தொடர்கிறது. நாடாளுமன்றிலும் இது குறித்த விவாதங்கள் கடுமையாக இடம்பெற்றன. இதில் ஆளும் அரசாங்கம் என்ற அடிப்படையில், ஜனாதிபதியும், பிரதமரும், மகளீர்விவகார அமைச்சரும் ஆளும்தரப்பினரதும் பொறுப்புக் கூறல் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர் – மகளீர் அதிகார சபையில் தமது முறைப்பாட்டை முறைப்படி பதிவுசெய்யவில்லை. காவற்துறையில் முறையிடவில்லை, பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியரிடம் மனநல சிகிச்சை பெற்றிருக்கிறார் என கூறுவது ஆட்சியாளரின் பொறுப்பற்ற செயற்பாடாகும். தற்கொலை செய்துகொண்ட மாணவி ஏன் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார் (மனநல பாதிப்பு அல்ல மன அழுத்தத்திற்கு உட்பட்டிருந்தார்) ஏன் தற்கொலை செய்துகொண்டார்? தற்கொலைக்கு தூண்டியவர் யார்? என்ற விடயங்கள் வெளிவந்தவுடனேயே அது குறித்து கல்வி அமைச்சும், மகளீர் விவகார அமைச்சும், சிறுவர் பாதுகாப்புச் சபையும், சட்டத்துறை – நீதித் துறை என்பனவும் தாமாகவே களத்தில் இறங்கி செயற்பட்டு இருக்க வேண்டும். தற்கொலைக்கு காரணமான ஆசிரியரையும், தற்கொலைக்கு துண்டிய ஆசரியரையும், விசாரணை முடியும் வரை தற்காலிக பணி நீக்கம் செய்திருக்க வெண்டும். பதிலாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுதலிக்கும், அல்லது தம்மை பாதுகாக்க (defend பண்ண) முனைவதும், விமர்சனங்களை ஏற்க மறுப்பதும், இடது மைய அரசாங்கத்தின் பண்பாக இருக்க முடியாது. கடுமையான அழுத்தங்களின் பின் விமர்சனங்களின் பின் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரதமர் ஹரினி பெற்றோரை அழைத்து பேசியிருக்கிறார். நடவடிக்கைகளை துரிதப்படுத்த காவற்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஆசிரியர் ஒருவர் கட்டாய விடுவிப்பில் அனுப்பப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த நடவடிக்கைகள் முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கடந்த காலங்களில் ஆட்சி புரிந்த ஏனைய அரசாங்கங்களை விடவும், ஆட்சியாளர்களை விடவும் நேர்மையாக ஆட்சியை தொடர்வதென்றால் கிளீன் சிறிலங்காவை உருவாக்க வேண்டும் என்றால் தவறுகளை தவறு என ஏற்றுக்கொள்ளும் பண்பு உருவாக வேண்டும். விமர்சனம் சுயவிமர்சனம் என்பவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் NPP அரசாங்கம் பத்தோடு பதினொன்று அல்ல என்பதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ரணில் கூறிய L Board Board ("L plates" (red L on a white background) are mandatory for learner drivers to display on their vehicles.) அரசாங்கமாக தொடர்ந்தும் இருக்க முடியாது. அவ்வாறே பயிற்சி முடிவடைந்து ஓட்டுனர் உரிமம் பெற்றபின்னான 3 மாத கால ஓட்டுனர் அனுபவமும் கிடைத்து விட்டது. ஆதாவது P Board காலமும் நிறைவடைந்துள்ளது. ( Green P "P plates" (green P on a white background) are optional and are used by newly qualified drivers to indicate that they are relatively inexperienced.) இனிவரும் காலம் அனைத்து விடயங்களிலும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய காலம். குறிப்பாக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக காலம் தாழ்த்தாது நிறைவேற்ற வேண்டும். இந்தப்பதிவை இறுதி செய்யும் போது ஆணையிறவு உப்பு (Elephant pass Salt) என்ற பெயர் உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் சொன்னதை செய்தது போல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். 1) பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் 2) புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். 3) மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 4) தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும். 5) வலிந்து காணாமல் ஆக்கப்ட்டோர் விடயம், அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணி விடுவிப்பு, காணிகளை கையகப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வுகாணப்பட வேண்டும். 6) இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி, அரசியல் பாகுபாடுகள் இன்றி அனைத்து குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வெண்டும். 7) சட்டத்தின் ஆட்சியை உருவாக்க வேண்டும். 8 சட்டத் துறை, நிர்வாகத் துறை, நீதித்துறைகள் சுயாதீனமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் 9) லஞ்சம் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். 10) நாடுபூராகவும் சம வளப்பங்கீட்டையும் அபிவிருத்தியையும் உறுதிப்படுத்த வேண்டும். இவற்றில் உடனடியாக கவனம் செலுத்தப்படல் வேண்டும். இல்லாவிடின் கோட்டாபயவை நீங்கள் வீட்டுக்கு அனுப்பினீர்கள். மாறாக உங்கள் பொறுப்பீனங்கள் தொடர்ந்தால் உங்களை நீங்களே வீட்டுக்கு அனுப்பிவிடுவீர்கள். 76 வருடங்களுக்கு பின் கிடைத்த அரிய சந்தர்ப்பம் இழக்கப்பட்டு நாடு மீண்டும் அதள பாதாளாத்தை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கும். கிளீன் சிறீலங்காவா? அதளபாதாளமா? நாடு அநுரவிடமா? கொள்ளையர்களிடமா? என்பதனை நீங்களே தீர்மானியுங்கள். “கோட்டாவை வீட்டுக்கு அனுப்பியது அறகலய!” உங்களை நீங்களே வீட்டுக்கு அனுப்பிவிடுவீர்களோ என பயமாய் இருக்கிறது!” #ஞாபகங்கள்
  14. யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட காரியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை சரிந்து வீழ்ந்தது. ###################### மன்னிக்கவும்: இந்தப் பதிவு இங்கு தவறுதலாக பதியப் பட்டு விட்டது.
  15. நீங்கள் கொஞ்சம் “கடந்த காலத்தின் சிறையில்” இருந்து மீண்டு வர வேண்டும் என்பது என் நயமான வேண்டுகோள். இன்றைக்கு பொதுவெளியில் தீவிர தமிழ் தேசியம் பேசுவோர் எண்ணிக்கை, குறிப்பாக புலம்பெயர் சமூகத்தில், அரிது என்றே நினைக்கிறேன். தமது உள்ளக அரசியலுக்காக உதாரணமாக சுமந்திரனை தாக்க, அல்லது சிறிதரனை பாதுகாக்க, அல்லது சம்பந்தமே இல்லாமல் தமிழ்நாட்டு அரசியலில் தலையை போடும் ஒரு காவாலிக்கூட்டமே நீங்கள் சொல்லும் ஆட்கள். ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களில் இந்த காவாலிகள் மிக, மிக சொற்பமானவர்கள். இவர்களிடம் எந்த புலம்பெயர் அமைப்பும் இல்லை. இவர்கள் புலம்பெயர் நாடுகலில் உயர் நிலைகள் நோக்கி போவோரும் இல்லை. கரி ஆனந்தசங்கரிகளுக்கும், உமா குமரனுகளுக்கும் மட்டும் அல்ல, பல அறியப்பட்ட தமிழ் அமைப்புகள், செயல்பாட்டாளர்களுக்கும் கூட இந்த காவாலிகளிடம் எந்த தொடர்பும் இல்லை. இந்த காவாலிகளிடம் சிறிய தொடர்பை வைத்திருப்பது யார் எனில், தாம்தான் இப்போ புலிகள் என சொல்லி, பல்வேறு பெயர்களில் கொள்ளை அடிக்கும் முன்னாள் புலிவால்கள், இந்நாள் மாபியாக்கள். ஆனால் இவர்களுக்கும் புலம்பெயர் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. மாவீரர்தின மக்கள் கூட்டம், போக இடம் இன்றி, வேறுவழியில்லாமல் போகும் கூட்டம். அது மாவீரர்களுக்கானது, அவர்களுக்காக போவது. புலம்பெயர் தேசத்திலாவது கொஞ்சம் இந்த காவாலிகள், மாபியாக்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. இலங்கையில் அறவே இல்லை. அங்கே இவர்கள் போனால் தமிழ் மக்களே செருப்பை சாணியில் முக்கி அடிப்பார்கள். ஆகவேதான் சொல்கிறேன். இந்தியாவுக்கு ஈழத்தமிழ் அரசியல்வாதிகள், புலம்பெயர் அமைப்புகள், எவரும் தேவையில்லை. நான் சொன்ன வகையில் ஒரு தீர்வை இலங்கையை நெருக்கி இந்தியாவே கொண்டு வர செய்யலாம். இதற்கு ஓம் படுங்கள் என சொன்னால் - இலங்கை தமிழ் எம்பிகள் பலர் ஓம் என்றே சொல்வாகள். சில நேரம் தன் ஒரு எம்பி சீட் பதவி கருதி பொன்னம்பலம் எதிர்க்கலாம். ஆனால் உண்மையில் தீர்வு காத்திரமானது எனில் - நாட்டில் வாழும் மக்கள், புலம்பெயர் மக்கள் - அதற்கு அமோக ஆதரவு கொடுப்பர். காவாலிகள்+மாபியாக்கள்+ கஜன் எதிர்ப்பு எடுபடாது.
  16. என்னை பொறுத்தவரை இந்தியா தனது நலன் கருதி நேரடியாக ஈழத்தமிழரை அரவணைக்க வேண்டும். அதற்கான காலம் வந்தே விட்டது. அதாவது ஈழதமிழ் தலைவர்கள் எவருக்கும் எந்த வகிபாகமும் தேவையில்லை. நான் மேலே சொன்னது போல குறைந்த பட்சம் தமிழ்நாட்டுக்கு இருக்கும் அதிகாரங்களை ஒத்த ஒரு தீர்வை இந்தியாவே தயாரித்து விட்டு. இலங்கையிடம் அதை கொடுத்து… குறித்த கால அவகாசத்தில் அதை நடைமுறைபடுத்தும் படி சொல்ல வேண்டும். இலங்கையில் வரவிருக்கும் அரசியல் அமைப்பு மாற்றம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அண்மைய சண்டையில் பாகிஸ்தான் சீன ஆயுதங்களை பாவித்து, பொருளாதார அசமநிலையையும் மீறி இந்தியாவை சவாலுக்கு உள்ளாக்கியதை பார்கிறோம். இதே ஒரு நிலை இலங்கையில் வர அதிக காலம் எடுக்காது. பாகிஸ்தான் உதாரணத்தை இலங்கை கையில் எடுக்கும் காலம் அதிக தொலைவில் இல்லை. புலிகளை பயங்கரவாதிகள் என இலங்கை தோற்கடிக்க இந்தியா செய்த இத்தனை உதவிக்கு பின்னும், இன்று இலங்கை இந்தியாவுக்கு ஆதரவாக ஒரு சொல்கூட சொல்லவில்லை. கஸ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை கூட கண்டிக்கவில்லை. ஆனாலும் இன்றும் மெலிதாகவேனும் இந்தியாவுக்கு ஆதரவு குரல் எங்கே இருந்து வருகிறது எனபார்ப்பின் அது ஈழதமிழரிடம் இருந்தே. அதற்கு யாழ்கள கருத்துக்களே சாட்சி. சர்வதேச அரங்கில் இந்தியா தனிமைப்பட்டுள்ளது வெள்ளிடமலை. கேந்திர ரீதியாக சீனாவும், மத அடிப்படையில் துருக்கி, பங்களாதேஷ், நாடுகளும் பாக்கிஸ்தான் பின்னால் நின்றன. இந்தியாவுக்கு யாரும் இல்லை, இஸ்ரேலின் வெறும் சந்தர்ப்பவாத, ஆயுத விற்பனையின் பால்பட்ட ஆதரவு கூட மிகவும் சுரத்தில்லாமலே இருந்தது. எங்கே நேபாளம்? எங்கே ஈழத்தமிழர்கள்? இந்தியா இழந்த நண்பர்களை மீள அரவணைக்க வேண்டியது, அவர்களை விட இந்தியாவுக்கு மிக அவசியமாகிறது. தன் வடக்கு, தெற்கு வாசல்களில் அசைக்க முடியாத நட்புசக்திகளை உருவாக்குவது இந்தியாவுக்கு இன்றி அமையாதது. அதன் முதல்படியாக இலங்கையை பிரிக்காத, ஆனால் காத்திரமான ஒரு தீர்வை தமிழருக்கு கொடுப்பது அமையும். இப்படி ஒன்று நடக்குமாயின் உலகலாவிய தமிழ் இனமும், இலங்கை வாழ் தமிழரும், குறிப்பாக புலம்பெயர் ஈழத்தமிழரும் இந்தியாவின் பின் பெரும் அளவில் அணி திரள சில மாதங்கள் கூட எடாது.
  17. ஆபிரஹாம் சுமந்திரனுக்கு.... சேர்ந்து இருக்கின்றவர்களை அரவணைத்து போகத் தெரியாது, கட்சியில் இருப்பவர்களை விளக்கம் கோரி கடிதம் அனுப்புவது, தன்னுடன் நாலு அல்லக்கைகளை வைத்துக் கொண்டு தலைகால் புரியாமல் ஆடுவது, தமிழரசு கட்சி மேல் மூன்று வழக்குகளை போட்டு... நீதிமன்றில் நிறுத்துவது போன்ற கேவலம் கெட்ட வேலைகளை செய்து விட்டு... வெட்கம், ரோசம், மானம் கெட்டு... மற்ற தமிழ்க் கட்சிகளிடம் அதுகும் விநயமாக ஆதரவு கோருகிறாராம். காரியம் ஆகும் மட்டும் காலை பிடித்து கெஞ்சுவது, அது கை கூடியபின்... தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது. இப்படி சுத்துமாத்துகள் செய்த படியால்தானே போன தேர்தலில், மக்கள் வேண்டாம் என்று அடித்து திரத்தியவர்கள். பிறகு என்ன முகத்துடன்... மக்கள் முன்னால் வந்து நிற்கிறார். சுத்துமாத்து சுமந்திரனின் செயல் முழுக்க... பச்சோந்தி தனமானது என்பதை மக்கள் புரிந்து விட்டார்கள். இனி என்ன வேஷம் போட்டாலும் மக்களிடம் எடுபடாது.
  18. எப்படி சீன தயாரிப்பான, புதியவகை ஏ ஐ சேர் இலத்திரனியல் ராடார் கூட்டமைப்பால் ரபேல் வீழ்த்தப்பட்டது என விபரிக்கும் வீடியோ. சீனானிம் உளவியல் யுத்தமாகவும் இருக்கலாம்.
  19. பாலமுரளி கிருஸ்ணா அநேகமாக அன்றைய இசையமைப்பாளர்களின் இசையில் குறைந்தது ஒரு பாடலையாவது பாடியிருப்பார். நான் முதலில் கேட்டது பாலமுரளி கிருஸ்ணாவின் , கலைக்கோயில் திரைப்படத்தில் இடம் பெற்ற “தங்கரதம் வந்தது வீதியிலே…” என்ற இந்தப் பாடலைத்தான். கே.வி.மகாதேவன் இசையில் திருவிளையாடல் படத்தில் பாலமுரளி கிருஸ்ணா பாடிய“ஒருநாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?” பாடல் அதிகம் இரசிக்கப்பட்ட பாடல். பாடலின் இசை, பாலமுரளி கிருஸ்ணாவின் குரல், அத்துடன் பாலையாவின் நடிப்பு என்று எல்லாமே அற்புதம்.
  20. 11 MAY, 2025 | 11:52 AM யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனை ஆகியவற்றின் அனுசரணையுடன், அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய முகாம் சனிக்கிழமை (10) நடைபெற்றது. அதன் போது, நூற்றுக்கணக்கானவர்கள் விசேட வைத்திய நிபுணர்களை சந்தித்து, தங்களுடைய நோய் நிலைகளுக்கான சிகிச்சைகளையும், தொடர்ந்து மேலதிக சிகிச்சை பெறுவதற்கான வழிமுறைகளையும் பெற்றுள்ளனர். இந்த மருத்துவ முகாமிற்கு யாழ் பிராந்திய கடற்படை தலைமையகம், கனடா அனலைதீவு ஒன்றியம் மற்றும் பல அமைப்புகள் அனுசரணை வழங்கியிருந்தன. https://www.virakesari.lk/article/214419
  21. உண்மையா எல்லா சிறைகளிலும் இருந்து நன்நடத்தை அடிப்படையில் விடவேண்டும் அண்ணை, விடுகிறார்களா என்பது சந்தேகமே?!
  22. பெனடிக்ட் - ஆசீர்வாதப்பர் பிரான்ஸிஸ் - பிரான்சிஸியார்
  23. சண்டையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு... நான் பஸ் டிரைவர் சார்.. பைலட் இல்ல 😁
  24. ஓம் ஆனால் இங்கே கலககுழுவின் பின்னால் இருந்தது பாக்கிஸ்தான். இந்தியா அல்ல. ஆனால் 80% முஸ்லிம்களின் இடமான கஸ்மீரை இந்தியா உரிமை கோருவதும் நியாயமான விடயம் இல்லை. இதே போல் தெலுங்கானாவில் இப்போ இருக்கும் ஹதரபாத் நிஜாம் பாக்கிஸ்தானிடம் சேர. விரும்பியபோது இந்தியா இராணுவத்தை அனுப்பி அடக்கியது. அதே சமன்பாட்டை பாவித்தால் கஸ்மீரை பாகிஸ்தானிடம்தான் கொடுத்திருக்க வேண்டும்.
  25. நானும் தான்... இந்தியா எமக்கு செய்திடில் வாழ்நாள் முழுக்க இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பேன். எனது தலைமுறைகளுக்கும் இதைச் சொல்லி வளர்ப்பேன்!
  26. பாகிஸ்தான் 25 நகரங்களில் ட்ரான் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறதாம். அவர்கள் போர்நிறுத்தத்தை மீறிவிட்டதாகள் சீன அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளதாம் இந்தியா! வடிவேலுவின் பகிடிதான் ஞாபகம் வருகிறது! பேச்சு பேச்சாத்தான் இருக்கோணும். இந்த எல்லையை தாண்டி நீயும் வரக்க்கூடாது! நாங்களும் வரமாட்டோம்!
  27. கள்ளர்களுக்குள் பெரிய கள்ளன் தலைவன் தானே. என்ன செய்வது இதைத்தான் சொல்வது காலத்தின் கோலம் என.... சில வேளைகளில் மண்டபம் எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினாலும் நடத்துவார்கள். மக்கள் நலம்புரி மன்னன் மக்களுக்காக சிறை சென்று வந்துளார் வாழ்க வளர்க என நோட்டீஸ்ம் சுவர்களில் ஒட்டப்படலாம்.
  28. பாகிஸ்தான் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக எந்த பெரிய இராணுவ தாக்குதலையும் செய்யவில்லை...பல பயங்கரவாத தாக்குதல்களை செய்திருக்கின்றது ..ஒர் இறையாண்மையுள்ள நாட்டின் இராணுவம் செய்வது போன்ற செயல்களை செய்யவில்லை... ஈரானில் இராணுவம் இருக்கின்றது ஆனால் அதை நடத்துவது மத தலைவர்கள்...ஆட்சியும் மததலைவர்களினது...இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாத குழுக்களை உருவாக்கி பயிற்சியளித்து பயங்கரவாதிகள் ஊடாக‌ பெரும் இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேலுக்கு எதிராக நடத்துவது.. பாகிஸ்தானில் இராணுவம் ஆட்சி நடத்துகின்றது ,அரசியல்வாதிகள் அவர்களின் அடிமைகள்.மதவாதிகளை பயங்கரவாதிகளாக உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக தாக்குதலை செய்கின்றது .. இஸ்லாமிய உலகின் இரண்டு கண்கள் ...
  29. காலையில் எழுந்து இரவு நித்திரை செல்லும் வரை நாங்கள் பின்பற்றுவது இந்தியா கலாச்சாரம் ..இதை நாம் மறுக்க முடியாது ...விரும்பியோ விரும்பாமலோ இது தான் ஜதார்த்தம்... டச்சுக்காரங்கள்,போர்த்துகீஸ்காரங்கள்,வெள்ளைக்காரங்கள் தாயகத்தில் செய்த அட்டுழியங்களை எமது (ஜெனரேசன் ) தலைமுறை மறந்து விட்டது ...இந்தியா செய்த அதே அட்டுழியங்களை செய்திருப்பார்கள் தங்கள் தங்கள் அதிகாரங்களை நிலைநாட்ட ....இன்று சிங்கள அதிகார மையங்களும் அதைத்தான் செய்கின்றனர்..
  30. காவலரணொன்றில் கொல்லப்பட்ட 22 இந்திய வீரர்கள்... 😢 (காணொளி இணைக்கப்பட்டுள்ளது) https://x.com/TecTaco/status/1921093835205046287 அமெரிக்காவின் வேண்டுகோளிற்கிணங்க இந்தியாவில் உள்ளுக்கிருந்து ஏற்படும் கேவலத்தை தடுக்க பெண் வானோடியை வெளிக்காட்ட விரும்பவில்லையாம், பாக். அரசு.
  31. இந்தியாவுக்கும், ஈழத்தமிழருக்கும் - காலத்துக்கு தேவையான வேண்டுகோள் இது. தேவையானோர் கண்ணில் படுமா? காதில் ஏறுமா? பிகு இலங்கையின் வடக்கு-கிழக்கில், எமக்கு குறைந்தபட்சம் இந்திய மாநிலங்களின் உரிமையை ஒத்த ஒரு அலகை இந்தியா பெற்றுதருமாயின் இந்தியாவை நான் வாழ்நாள் பூராவும் கண் மூடித்தனமாக ஆதரிக்க தயாராக உள்ளேன். என்னை போலவே 90 விடுக்காடு ஈழத்தமிழரின் சிந்தனையும் என்பது என்கணிப்பு. இந்தியா இனியாவது தன் நண்பர்கள் யார் என உணர்ந்து செயல்படவேண்டும். நடந்தைவை நடந்தையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
  32. கம்பிய அவ இங்க எண்ணிட்டா அவங்க அங்க எண்ணுறாங்க 😀
  33. 🤣 ஆரம்பிக்கிறது நீயா இருக்கலாம்… ஆனால் முடிக்கிறது நான் ஆகவே இருக்க வேணும் என சொல்லி அடிக்கிறான் பாக். கடைசி அடி தன்னுடையது என சொல்லும்படி இருக்க வேண்டும் என்பதால்தான் இந்த அடி. இந்தியா அடியை வாங்கி கொண்டு மூடி கொண்டு இருந்தால் போர் நிறுத்தம் நிலைக்கும். பாகிஸ்தானின் பொருளாதார சரிவு நிலைக்கும் அவர்களின் போரிடும் இயலுமைக்கும் சம்பந்தமில்லை. அவர்களின் போரை bankroll செய்வது சீனா. சீனா இருக்கும் வரை போர் தளபாடத்துக்கு பஞ்சம் வராது.
  34. சர்வதேச நாணய நிதியத்தின் கடனில் மட்டும் தங்கியிருக்கும் பாகிஸ்தானால் ஒரு வார யுத்தத்தை நடத்துவதே முடியாத காரியம். அவர்களின் உள்நாட்டு அரசியல் நிலையும் மிகவும் தளம்பலாகவே தொடர்ந்தும் இருக்கின்றது. ஓரிரு வருடங்களின் முன் இலங்கையில் இருந்த அதே பொருளாதார நெருக்கடி பாகிஸ்தானில் சில வருடங்களாகவே இருந்து வருகின்றது. இம்ரானை சிறையில் அடைத்து விட்டு, பாகிஸ்தானில் ஒரு நிழல் இராணுவ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இராணுவத் தளபதி அசீம் முனீர் தனது நிலையை தக்கவைக்க அங்கிருக்கும் தீவிரவாதக் குழுக்களின் தயவை நாடிக் கொண்டிருக்கின்றார். இது இந்தியாவிற்கு கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பம். ஆனால் வழமை போலவே இந்தியா இந்தத் தடவையும் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியக் குடியரசு தினத்தன்று டெல்லியின் வீதிகளில் தங்களின் இராணுவ பலத்தை ஊர்வலமாகக் காட்டுவதை விட வேறு எதையும் இந்திய இராணுவத்தால் சாதிக்க முடியுமா என்று தோன்றுகின்றது. நவீன ஆயுதங்கள் மட்டும் போதாது, அதை இயக்குபவர்களும் அதே அளவிற்கு முக்கியமானவர்கள் என்று தோன்றுகின்றது. இப்பொழுது சீனா இலகுவாக அப்படியே அருணாச்சல் பிரதேசத்தை இரவோடு இரவாக கைப்பற்றலாம். இந்தியாவில் யூடியூப்புகளும், சமூக ஊடகங்களும் மட்டும் சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளை நடத்தும். எந்தப் போரும் அழிவைக் கொண்டுவரும். அத்துடன் சம்பந்தப்பட்ட நாடுகளை சில பல வருடங்கள் பின்னுக்கும் கொண்டு செல்லும். ஆனாலும் சில போர்கள் தவிர்க்கப்படக்கூடாதவை. கடந்த 2000 ஆண்டுகளில் 1500 வருடங்களுக்கு மேல் அந்நிய ஆட்சிகளின் கீழ் இருந்ததாலோ என்னவோ, இந்திய, இலங்கைச் சமூகங்களின் சுயமரியாதை சில இடங்களில் கேள்விக்குறியாக இருக்கின்றது. ஓரிருவர்களும், வெகு சில சந்தர்ப்பங்களும் மட்டுமே விதிவிலக்கு, உதாரணம்: எங்களின் தலைவரும் அவருடைய போராட்டமும். இந்தப் போர்நிறுத்த அறிவிப்பால் இந்திய, பாகிஸ்தான், ஈழத்தமிழ் யூடியூப்காரர்கள் வருமானத்தை இழக்கப் போகின்றார்கள். யூடியூப் நான் இதுவரை காலமும் நினைத்திருந்ததை விட மிகப் பெரும் ஒரு வியாதி என்று தெரிகின்றது. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இப்படியான பலவும் வந்து போயிருக்கின்றன. ஆதலால் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. வரும் சந்ததிகள் இதிலிருந்து பிழைத்துக்கொள்ளும்.
  35. சரி சரி சட்டு புட்டென்று ஐபிஎல்லை தொடங்குங்கோ. எனக்கு ஏதாவது ஒரு ஸ்கோரை பார்த்துக் கொண்டே இருக்கணும்.
  36. இவ்வளவு கெதியாய் ஏன் போர் நிறுத்தம் வந்தது. வாங்கி வைத்த “பொப் கோன்” எல்லாம் வீணாய் போகப் போகுதே. 😂
  37. இதற்குள்... சினிமாக்காரர்களின் தொல்லை வேறு. 😂
  38. ஈழப்பிரியன்.... உங்களது படத்தையும், புதிய பாப்பரசரின் படத்தையும் நான் ஒப்பிட்டுப் பார்த்தபோது... உங்கள் முகத்தில் இளமையும், உற்சாகமும் தெரிகின்றது. ஆனபடியால்... பாப்பாரசருக்குப் பிறகுதான் நீங்கள். 😂
  39. தங்கரதம் வந்தது வீதியிலே . .......... முத்துராமன் & சந்திரகாந்தா .......... பாலமுரளி கிருஷ்ணா & பீ.சுசீலா .......! 😍
  40. புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பிரான்ஸிஸ் பிரீவோஸ்ட் தெரிவு : பாப்பரசர் 14 ஆம் லியோ என அழைக்கப்படுவார் Published By: VISHNU 09 MAY, 2025 | 11:12 AM புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த கார்தினால் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ள முதல் அமெரிக்கர் இவராவர். புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ள கர்தினால் ரொபர்ட் பிரீவோஸ்ட் பாப்பரசர் 14 ஆம் லியோ (14 ஆம் சிங்கராயர்) என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 267 ஆவது பாப்பரசராக 69 வயதுடைய பாப்பரசர் 14 ஆம் லியோ தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/214242 அப்ப புரியல இப்ப புரியுது!
  41. உங்களது கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன், சில வேளை நாங்கள் அதிகமான நலன் விரும்பிகளாக இருப்பதால் மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் விட்டு விடுகிறோமோ என தோன்றுகிறது. எமது நாட்டில் உள்ள இயலாத மக்களை மட்டுமல்ல வந்தேறிய நாடுகளிலேயே உள்ள இயலாத மக்களையும் எமது செய்கைகளால் பாதிப்புள்ளாக்குகிறோம். கோவிட் சீனாவில் இருந்து பரவிக்க்கொண்டிருந்த காலகட்டத்தில் மலிவாக கிடைத்த ஐரோப்பிய உல்லாச பிரயாணத்தினை தொடர்வதா அப்படி பிரயாணம் செய்தால் எமக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என இணையத்தில் ஆலோசனை கேட்பதில் காட்டும் அக்கறையினை, அப்படி ஒரு பிரயாணத்தின் மூலம் நாம் காவி வரும் நோய் நாம் வாழும் நாட்டில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், வயோதிகர்களை தடுப்பூசி அற்ற காலத்தில் கொல்லும் என தெரிந்தும் அதனை பற்றி கவலைப்படாமல் மலிவான டிக்கெட்டிற்காக மற்றவர்களை கொல்லும் மனிதர்களாக எமது நலன் உயரத்தில் நிற்கிறோம். நாம் மட்டுமல்ல உலகே இப்படித்தான் இயங்குகிறது, அதனால் எங்களில் மட்டும் தப்பில்லை.
  42. நல்லதொரு செயல், அவர்கள் நீடூழி வாழ வேண்டும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.