Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. மெய்மறந்த காதல் .........! 😂
  2. வரவேற்கப்பட வேண்டிய செயல் .......... பாராட்டுக்கள் ......! 😄
  3. வாத்தியார் உங்களின் காதால புகை போறது தெரிகிறது .....எதற்கும் அந்த (8) நம்பர் ஆளையும் ஒருக்கால் பாருங்கோ ....அவர் இன்றுவரை ஒரு மகளிர் ஆட்டத்தைக் கூட பார்த்ததில்லை . ...... யாருடைய பெயரும் தெரியாது .......! 😂
  4. Bjp Eswaramoorthy Kannan · இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணை உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே கருப்பைக்கு அசோகுபட்டை களைப்பிற்கு சீந்திலுப்பு குருதிக்கு அத்திப்பழம் குரலுக்கு தேன்மிளகே! விந்திற்கு ஓரிதழ்தாமரை வெள்ளைக்கு கற்றாழை சிந்தைக்கு தாமரைப்பூ சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை கக்குவானுக்கு வசம்புத்தூள் காய்ச்சலுக்கு நிலவேம்பு விக்கலுக்கு மயிலிறகு வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர் நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர் வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ வெட்டைக்கு சிறுசெருப்படையே தீப்புண்ணா குங்கிலியவெண்ணை சீழ்காதுக்கு நிலவேம்பு நாப்புண்ணிற்கு திரிபலாவேலன் நஞ்செதிர்க்க அவரிஎட்டி குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான் குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர் பெரும்பாட்டிற்கு அத்திநாவல் பெருவயிறுக்கு மூக்கிரட்டை கக்கலுக்கு எலுமிச்சைஏலம் கழிச்சலுக்கு தயிர்சுண்டை அக்கிக்கு வெண்பூசனை ஆண்மைக்கு பூனைக்காலி வெண்படைக்கு பூவரசு கார்போகி விதைநோயா கழற்சிவிதை புண்படைக்கு புங்கன்சீமையகத்தி புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல் கரும்படை வெட்பாலைசிரட்டை கால்சொறிக்குவெங்காரபனிநீர் கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே உடல்பெருக்க உளுந்துஎள்ளு உளம்மயக்க கஞ்சாகள்ளு உடல்இளைக்க தேன்கொள்ளு உடல் மறக்க இலங்கநெய்யே அருந்தமிழர் வாழ்வியலில் அன்றாடம்சிறுபிணிக்கு அருமருந்தாய் வழங்கியதை அறிந்தவரை உரைத்தேனே!! Voir la traduction.....!
  5. 😂😂உருட்டுதான் எங்கள் சொத்து🤗🤗❤❤ · Sivasubramanian Sankaralinganadar ·osntSodpre2hihiH1hgaf8g 04r43132mu1 i5feu2:3u027l10a,9ammmcà · (அதனால்தான் டாடா பெரும் கோடீஸ்வரர்) JRD Tata விடமிருந்து அமிதாப் கற்றுக் கொண்டார் அமிதாப் சொல்கிறார்... எனது வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன். எனக்கு அருகில் இருந்த பயணி, ஒரு சாதாரண சட்டை,பேண்ட் அணிந்து அமர்ந்திருந்தார். வயதான மனிதர், நடுத்தர வர்க்கம், நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார். நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு கொண்டார்கள். என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி கை கொடுத்தனர். ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும் இல்லை. என்னை கண்டு கொள்ளவும் இல்லை. ஒருவேளை, அவர் நாளிதழை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்ததால், என்னை கவனிக்கவில்லையோ என எண்ணினேன். தேநீர் வழங்கப்பட்ட போது, அமைதியாக அதை எடுத்து, ரசித்து பருக ஆரம்பித்தார். என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா? என்னால் பொருத்து கொள்ள முடியாமல், அவருடன் ஒரு உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான் அவரை பார்த்து சிரித்தேன். அந்த மனிதரும் புன்னகை செய்து, 'ஹலோ' என்று சொன்னார். நாங்கள் பேச ஆரம்பித்தோம். சமூகம், பொருளாதாரம், அரசியல், என்று பல விஷயங்களை பற்றி பேசினோம். அவரின் பேச்சில், ஒரு லயிப்பும் ஈர்ப்பும், தேர்ந்த ஒரு நேர்த்தியும் இருந்ததை நான் உணர்ந்தேன். சினிமா மற்றும் திரைப் படங்கள் சம்பந்தமான விஷயங்களை நான் வேண்டுமென்றே கொண்டு வந்தேன். நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பீர்களா என வினவினேன். ஓ, மிக சில. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்திருக்கிறேன் என அந்த மனிதர் பதிலளித்தார். நான் திரைப்பட துறையில் தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டேன். அப்படியா? ரொம்ப நல்லது. நீங்கள் அந்த துறையில் என்ன செய்கிறீர்கள் என கேட்டார். நான் ஒரு நடிகர் என பதிலளித்தேன். அவரிடமிருந்து எந்த வித சலனமும் இல்லை. அதன் பின் நாங்கள் இறங்கி வெளியேறும் போது, உங்களுடன் பயணம் செய்தது மிக்க மகிழ்ச்சி. நல்லது, என் பெயர் அமிதாப் பச்சன் என்றேன். அந்த மனிதரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே, உங்களை சந்தித்த இந்த நாள், நல்ல நாளாக இருக்கட்டும் என கூறி: என் பெயர்: JRD டாட்டா. மோட்டார் தொழில் செய்கிறேன் என்றார் பணிவுடன். நான் விக்கித்து நின்று விட்டேன். அன்றுதான் நான் கற்றுக் கொண்டேன் பணிவை பற்றி. பேரையும், புகழையும் வைத்து, நாம் தான் பெரிய ஆள், என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நம்மை விட வசதியிலும், அறிவிலும், படிப்பிலும் உயர்ந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். எப்போதுமே பணிவாய் பேசுங்கள். நல்ல நடத்தை, பண்பு என்பது அறிவை விட மேலானது. வாழ்க்கையில் பல கால கட்டங்களில், அறிவு, பணிவிடம் தோற்றுப் போய் உள்ளது. பணிவும் நல்ல நடத்தையும், எல்லா இடத்திலும் வென்றுள்ளது. எந்த சூழ்நிலையிலும், பணிவுடனும், அடக்கத்துடனும் நடந்து கொள்ளுங்கள். அது உங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் கொண்டு போய் வைக்கும். Voir la traduction.......! "அடக்கம் அமரருள் உய்க்கும் " .......!
  6. நான் எப்போதும் நடுநிலை தவறாதவன் என்று புரிந்து கொண்டால் மகிழ்ச்சி .........! 😃
  7. வணக்கம் வாத்தியார் . ........! பாடகி : சுனிதா சாரதி இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா பாதி சொன்னதும் அது ஓடி விடுமா குழு : டியூரா பெண் : முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா குழு : டியூரா பெண் : பெண்ணோடு கொஞ்சி பேசவே வெட்கமா குழு : டியூரா பெண் : இதழோடு சோமபானம் தான் சுரந்து விட்டதா குழு : டியூரா பெண் : இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா பெண் : நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே பார்த்தேனே வீட்டின் உள்ளே பெண் : சிவப்பிலே டிராகன் படமும் சிரித்திடும் புத்தர் சிலையும் வைத்தேனே தெற்கு மூலையிலே பெண் : பல பல தடை தாண்டி வந்தாய் வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய் கொடிய சாத்தானே என்னை தூக்கி செல்லவா ஆ ஹோ குழு : தூது இல்லே தூது இல்லே தூது இல்லே தூது இல்லே பெண் : கருப்பிலே உடைகள் அணிந்தேன் இருட்டிலே காத்து கிடந்தேன் யட்சனை போல நீயும் வந்தாய் பெண் : சரசங்கள் செய்த படியே சவுக்கடி கொடுக்கும் யுவனே வலித்தாலும் சுகம் தந்து சென்றாய் பெண் : மறுபடி வருவாய் என்று துடித்தேன் நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன் பிரிய மனமில்லை இன்னும் ஒரு முறை வா நீ சொல்ல வந்ததை குழு : சொல்ல வந்ததை பெண் : சொல்லி விடுமா குழு : சொல்ல வந்ததை சொல்லி விடுமா பாதி சொன்னதும் அது ஓடி விடுமா ........! --- தூது வருமா தூது வருமா ---
  8. நீயே சொல்லு எங்கே என்று .......! 😍
  9. இவற்றுள் உங்களுக்குத் பிடித்தமான இனிப்பை தேர்ந்தெடுங்கள் ...... பின்பு அந்தப் பெயரை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் ..... பின்பு யூடியூப் பக்கத்தைத் திறந்து அதற்குரிய இடத்தில் அந்தப் பெயரை எழுதுங்கள் . .... பின்பு அதில் தேடும் இடத்தில் சுட்டியை அழுத்துங்கள் ....... உடனே அதை எப்படி செய்வதென்று காட்டித்தர பலர் உதவிக்கு ஓடி வருவார்கள் . .......! 😂
  10. தினமும் ஒரு வரி தத்துவம் · காலம் மாறும் போது.. சிறுகதை. அரசன் ஒருவன் அமைச்சனோடு தனது நாட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தான். அங்கே ஓரிடத்தில் உழவன் ஒருவன் மண்வெட்டியால் நிலத்தைக் கொத்திக் கொண்டிருந்தான். அவன் அருகே பாம்பு ஒன்று படம் எடுத்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த அரசன் “உழவனே! உன் அருகே பாம்பு. ஒடு, ஓடு” என்று குரல் கொடுத்தான். எதுவுமே நடவாதது போல இயல்பாகத் திரும்பிப் பார்த்த உழவன் எந்தப் பரபரப்பும் காட்டாமல் அந்தப் பாம்பைக் கையால் பிடித்துத் தூக்கி எறிந்தான். அதிர்ச்சி அடைந்த அரசன், “கொடிய பாம்பு அது. நீ பிடித்தபோது கொத்தி இருந்தால் உன் உயிர் போய் இருக்குமே” என்றான். “அரசே! இந்த நிலத்தில் வேலை செய்யும்போது இப்படி எத்தனையோ ஆபத்துகளைச் சந்திக்கிறேன். அவற்றிற்கு அஞ்சினால் நானும் என் குடும்பமும் பட்டினி கிடக்க வேண்டியதுதான்” என்றான் அவன். அந்த விவசாயிக்கு உதவி செய்ய நினைத்த அரசன் வளமான நிலங்களையும் பொற்காசுகளையும் அவனுக்கு வழங்கினான். செல்வந்தனாக ஆனான் அவன். ஆண்டுகள் பல கழிந்தன. அரசனும் அமைச்சனும் மீண்டும் அந்த வழியாக வந்தார்கள். அந்த உழவன் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து இருந்தான். அவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்று வணங்கிணான். அவன் கையில் பெரிய கட்டுப் போட்டிருநத்து: “கையில் என்ன கட்டு?” என்று கேட்டான் அரசன். “அரசே! ஒரு முள் கீறி அது பெரிய புண்ணாகி விட்டது. அதற்குக் கட்டுப் போட்ட மருத்துவர் ஒரு வாரம் ஓய்வு எடுக்கச் சொன்னார். இங்கே அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் உழவன். ‘ இதைக் கேட்டு வியப்படைந்த அரசன், “அப்படியா உன் உடம்பைப் பார்த்துக்கொள்” என்று அவனிடம் சொல்லிவிட்டு அகன்றான். வழியில், “அமைச்சரே! அன்று இவன் கொடிய பாம்பைத் தூக்கி எறிந்தான். இன்றோ முள் குத்தியதற்குக் கையில் கட்டுப் போட்டுக் கொண்டு ஓய்வு எடுக்கிறான். தலை கீழ் மாற்ற மாக உள்ளதே” என்று கேட்டான். “அரசே! அன்று அவன் ஏழை. உழைத்துப் பிழைத்ததால் எதற்கும் அஞ்சவில்லை. இன்றோ செல்வந்தனாகி உழைப்பே இல்லாமல் இன்பத்தை அனுபவிக்கிறான். “காலமும் சூழ்நிலையும் மாறும் போது எல்லாம் மாறத்தானே செய்யும்” என்றார் அமைச்சர்........! 😃 Voir la traduction
  11. சுட்டிபெண் நிலா · ஆண்களுக்கும் அழுகை வரும்... தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டாலும் ஆண் அழுவான்... தன் மகள் திருமணம் ஆகி பிரியும் போது ஆண் அழுவான்... அவன் பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்காது நன்றியியில்லாமல் ஆணவத்துடன் நடக்கும் போது வெளியில் சொல்ல முடியாமல் அழுவான்... காதல் கொண்ட மனைவி தன்னை ஏமாற்றுவதை அறிந்தால் அந்த ஆண் அழுவான்... தங்கள் குழந்தைகளுக்கான உணவு போன்றவற்றை அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்க முடியாமல் போனால் ஆண் அழுவான்... பிழைப்பை தேடி கடன் சுமைக்காக தாயகத்தைப் பிரிந்து செல்லும் போது, தான் நேசிக்கும் அன்பானவர்கள் தன் அருகே இல்லையென ஒவ்வொரு இரவிலும் ஆண் அழுவான்... ஆண்கள் அழுகிறார்கள்... ஆனால் எப்படி? இருட்டில்... பிறர் அறியாவண்ணம்... தலையணைகளில் முகத்தைப் புதைத்து... கழிவறையில் தண்ணீரை திறந்து அவன் அழுகையின் கண்ணீரை யாரும் பார்த்து விடக்கூடாது என நினைப்பான்... அவன் அழுது கொண்டு இருக்கிறான் என்பதை அவன் சங்கடத்தில் விடும் பெருமூச்சு , அதற்கு சாட்சியாகும்... கண்களில் வெளிப்படும் ஏக்கம், நடுங்கும் கைகள், வார்த்தையில் தடுமாற்றம்... பெரும்பாலான ஆண்கள் குடும்ப சூழல், போதிய வருமானம் இல்லாதது, ஏமாற்றும் மற்றும் தேவைக்கு தேடிவரும் உறவுகள், உறவுகளின் துரோகம், போன்ற மனசு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில்தான் நிறைய ஆண்கள் வெளியில் சொல்ல முடியாமல் அழுகிறார்கள்... இவன் குழப்பத்தில் இருக்கிறான், பைத்தியக்காரன், என மற்றவர் நினைக்க அது அவனுக்கு மட்டும்தான் தெரியும் உள்ளுக்குள் அவன் அழுதுகொண்டு இருக்கிறான் என... ஒரு விஷயத்தில் இந்த ஆண் வர்க்கம் மிகவும் கெட்டிக்காரர்கள் உள்ளுக்குள்ளே அழுதுகொண்டு வெளியில் சிரிப்பது இந்த வித்தையில் ஆண் சமூகம் எப்போதுமே தேர்ச்சிப்பெற்றவையே... ஆண்கள் இப்படித்தான் அழுகிறார்கள். (படித்ததில் பிடித்தது)
  12. Ammu Dilaxshi · தீபிகா படுகோன், ஆலியா பட் உள்ளிட்ட நடிகைகள் பாலிவுட்டை கலக்கி வரும் நிலையில், டோலிவுட், கோலிவுட் ஆகியவற்றை ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா ஆகியோர் அதிக சம்பளம் பெறும் நடிகைகளாக உள்ளனர். ஆனால், இவர்களைவிட பல ஆண்டுகளாக சினிமாவில் கலக்கி வரும் நடிகை ஒருவர் அதிக சம்பளம் வாங்குகிறார். மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று சினிமா. அத்தகைய சினிமா ரசிகர்களால் நாள்தோறும் கொண்டாடப்படுகிறது. நடிகர்களுக்கு சமமாக நடிகைகளும் தங்களின் அபார நடிப்பு திறனால் அசத்தி வருகின்றனர். இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் எனத் தெரியுமா?. தீபிகா படுகோனே, ஆலியா பட் என நீங்கள் நினைத்திருந்தால் அது முற்றிலும் தவறு. ஒரு திரைப்படத்திற்கு ரூ.40 கோடி சம்பளம் வாங்கும் இந்த நடிகையே முதன் முதலில் கோடிகளில் சம்பளம் வாங்கியவர். பிகார் மாநிலத்தில் பிறந்து, உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்தவர் தான் அந்த நடிகை. அவர் வேறு யாருமல்ல, உலக அழகியான பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் ஹீரோயின்களின் சம்பளத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்த பிரியங்கா சோப்ரா, பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார். ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு ரூ. 40 கோடி சம்பளம் வாங்குகிறார். அதாவது 5 மில்லியன் டாலர்கள். ஆனால் இந்த தொகை ஹாலிவுட்டுக்கானது மட்டுமே. இருப்பினும், அவர் இந்திய படங்களில் நடிக்கும்போது ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு ரூ.14-ரூ.20 கோடிகள் வாங்குகிறார். என்னதான் பாலிவுட், ஹாலிவுட் என பிரியங்கா சோப்ரா நடித்தாலும், அவரின் சினிமா கேரியருக்கு விதைபோட்டது தமிழ் சினிமாதான். 2002 ஆம் ஆண்டில் தமிழில் 'தமிழன்' திரைப்படம் மூலம் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இதுவே பிரியங்காவின் முதல் திரைப்படம். அதன்பிறகு வரிசையாக இந்தி படங்களில் நடித்தார். 'பர்ஃபி', 'மேரி கோம்', 'பாஜிராவ் மஸ்தானி', 'தில் தடக்னே தோ' போன்ற படங்களில் ஒவ்வொன்றாக ஹிட் அடித்தார். ஹாலிவுட்டுக்கு சென்ற அவர், இந்தி படங்களை குறைத்துக் கொண்டு ஹாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வருகிறார். பிரியங்கா நடித்த முதல் ஹாலிவுட் படமான 'பேவாட்ச்' மாபெரும் வெற்றி பெற்றது. அது 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பிறகு அவர் 'எ கிட் லைக் ஜேக்', 'இஸ்னாண்ட் இட் ரொமான்டிக்', 'வீ ஆர் ஹீரோஸ்', 'தி மேட்ரிக்ஸ் ரிசர்ரக்ஷன்', 'லவ் அகெய்ன்' போன்ற படங்களில் நடித்தார். இவர் தன்னைவிட வயதில் இளையவரான பிரபல பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் முடித்தார். இவர்களது திருமணம் உமைத் பவன் என்ற அரண்மனையில் நடைபெற்றது. தற்போது சுமார் 650 கோடிக்கு சொத்துக்கு அதிபதியாக, பிரைவேட் ஜெட், அமெரிக்காவில் இரண்டு பங்களா, விதவிதமான சொகுசு கார் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இந்நிலையில் இவரது சிறிய வயது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. Voir la traduction பிரியங்கா சோப்ரா .......! 🙂
  13. இவ்வளவு பாதுகாப்பும் நல்லதுதான் என்ன ஒன்று நெல் அறுவடைபோல்தான் இதுவும் . .......! 🙂
  14. அவர் சுகமாகி நலமாக வரட்டும் . ........!
  15. எனக்கும்தான் விளங்கவில்லை , நான் கேட்டேனா .......! 😂
  16. தினமும் ஒரு வரி தத்துவம் · வக்கீல் ஒருவர் ரயில்ல சென்று கொண்டு இருந்தார்... அப்போ சூப்பர் பிகர் ஒன்னு அவருக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து உட்கார்ந்தால்.. நம்மாளுக்கு செம குஷி... அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லைன்றதால லைட்டா நம்மாளு அந்த சூப்பர் பொண்ண நோட்டம் உட்டார்... அந்த பொண்ணும் மெதுவா அப்பப்போ இவர பாக்க... இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க அப்டியே வானத்துல பறக்கற பீலிங்ல இருந்தார்... கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணு இவர் இருந்த சீட் பக்கம் வந்து ஒக்கார... நம்மாளுக்கு சும்மா ஜிவ்வுனு இருந்தார்... அந்த பொண்ணு இவர்கிட்ட... ஒழுங்கு மரியாதையா உங்கிட்ட இருக்ற வாட்ச், மோதிரம், செயினு, பர்ஸ், கிரடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்துடு....இல்லேனா நீ என்னை பலவந்தமா பலாத்காரம் பண்ண ட்ரை பண்றேனு கத்தி சத்தம்போட்டு எல்லாரையும் கூப்டுருவேனு சொல்லிச்சாம் அந்த சூப்பர் பிகர்... அவர் தான் வக்கீல் ஆச்சே... அதுக்கு நம்ம வக்கீல்.. பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர எடுத்து, எனக்கு காது கேக்காது, வாய் பேச வராது... நீங்க என்ன சொல்றிங்கனே எனக்கு புரில... நீங்க சொன்னத இதுல எழுதி காட்டுங்கனு எழுதி காட்டினார்... அந்த பொண்ணும் பேப்பர வாங்கி அவ என்ன சொன்னாலோ.... அதே மாதிரி அப்படியே எழுதி காட்டினாளாம்... அத வாங்கி பாக்கெட்ல வச்ச பின்னாடி நம்மாளு மெதுவா சொன்னாரு.... இப்போ கத்துடி பாக்கலாம்...!!! 😜" நீதி:" *PROOF OF DOCUMENTATION IS VERY VERY IMPORTENT*" எதுக்குமே ரெக்கார்டு தான் ரொம்ப முக்கியம். படித்ததில் பிடித்தது. Voir la traduction
  17. வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று .......! 😍
  18. வணக்கம் வாத்தியார் . ........! தமிழ் பாடகி : சின்மயி பாடகா் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் பெண் : வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு பேசாத காற்று இல்ல ஏன் இந்த காதலும் நேற்று இல்ல நீயே சொல் மனமே ஆண் : வாராயோ வாராயோ மோனலிஸா பேசாமல் பேசுதே கண்கள் லேசா நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா என்னோடு வா தினமே பெண் : இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான் உன்கையின் காம்பில் பூ நான் நம் காதல் யாவும் தேன்தான் ஆண் : பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம் மனம் காற்றைப்போல ஓடும் உன்னை காதல் கண்கள் தேடும் பெண் : ஹோ ஹோ ஹோ லைலைலைலை காதல் லீலை செய்செய்செய்செய் காலை மாலை ஆண் : உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன் இவனுடன் சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா ஆண் : நீயே நீயே அந்த ஜூலியட்டின் சாயல் உன் தேகம் எந்தன் கூடல் இனி தேவை இல்லை ஊடல் பெண் : தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே எனை முத்தமிடுவாயே இதழ் முத்துக்குளிப்பாயே ஆண் : நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி வா வா வா வா என் காதல் ஜோடி பெண் : நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ ......! --- வாராயோ வாராயோ ---
  19. பூனைகளுக்கு மட்டும் வீட்டினுள் செல்லும் வழி .........! 😂
  20. இந்த அவதார்தான் சிறியரின் பதிவுகளுக்கு அழகு . ...... எங்கே இசகு பிசகாய் நடந்துபோய் எழாத்துப் பிரிவுக்குள் போட்டுதோ என நினைத்தேன் ..........! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.