Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. தப்பித்து வந்தானம்மா பாவம் தனியாக நின்றானம்மா .......! 👍
  2. வணக்கம் வாத்தியார்........! ஆண் : நீ போகாத என்ன விட்டு என் கண்ணே உன் முன்னே என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு ஆண் : { ஒரு மரம் அது வேறாக பொழப்புது போலிங்கு ஆனேனே உன்னால் பெண்ணே உயிர் வலி அது என்னென்று நான் கண்டுகொண்டேனே உன்னாலே பெண்ணே பெண்ணே } (2) பெண் : { முதல் முற ஒரு பிழ ஏனோ மாறி போனேன் நானும் உன்னவிட பூமியில எல்லாமுமே வீணோ வீணோ } (2) ஆண் : காலம் இங்க தீரும் வரை காக்க வச்சு போற ஆசை அத தந்துப்புட்டு ஏனோ தள்ளிப் போற பெண் : கொல்லாம கொல்லாம என்னக் கொல்லாத ஆண் : { உலுக்குற உரியுற தெனம் தெனம் பாக்கும் போதே எனக்குள்ள பொதையுற கேள்வி ஏதும் கேட்காமலே } (2) பெண் : ஆகாசமா ஆச கூடும் உன் கூட தான் சேர்ந்தா வானவில்லா வாழ்க்கை மாறும் உன் கூட நான் வாழ்ந்தா ஆண் : பெண்ணே நீ இல்லாம ஜென்மம் தீரவில்ல.......! --- நீ போகாத என்ன விட்டு ---
  3. மயிலிறகு.........02. இந்தப் பக்கம் அடுப்பின் மேல் புகட்டில் குளத்தில் பிடித்த பெரிய பெரிய யப்பான் மீன்கள் கீறி உப்பில் போட்டுப் பிரட்டி எடுத்து பனைநாரில் கோர்த்து தொங்குது. அங்கால வாழைத்தார் ஒன்றும் கயிற்றில் தொங்குது. அதி ஒரு எலி இடைப்பழம் ஒன்றை கொறித்து சுவைத்துக்கொண்டிருக்கு. அப்போது எவ்வித அசுமாத்தமும் இன்று ஒரு சாரைப் பாம்பு அந்த எலியைப் பார்த்துக் கொண்டு மெதுவாக நகருது. அதைக் கண்ட கனகம் அம்மாடி பாம்பு என்று கத்திக் கொண்டு மயிலம்மா அருகில் எட்டி அடியெடுத்து வருகிறாள். அந்த சலசலப்பு கேட்டு எலியும் திரும்பி பாம்பைப் பார்த்து வாழைத்தாரில் இருந்து எதிர் வளைக்குத் தாவ சடாரென பாம்பும் இரண்டு முழ நீளத்துக்கு தனது உடலை வீசி அந்தரத்தில் வைத்தே லபக்கென்று எலியைக் கவ்விப் பிடித்து சரசரவென பனைமட்டையில் சறுக்கி சுவரில் ஊர்ந்து குசினி மூளைக்குள் சுருண்டு கொள்கிறது. இவ்வளவும் ஒரு கனப் பொழுதுக்குள் நடந்து முடிகின்றது. காணக்கிடைக்காத காலமெல்லாம் மறக்க முடியாத ஒரு காட்சி அதுபாட்டுக்கு இயல்பாக நடந்து முடிந்தது. கனகம் ஒரு எட்டில் கதவால் பாய்ந்து முத்தத்துக்கு வர மயிலம்மா கேத்திலுக்குள் கொஞ்சம் தேயிலையும் போட்டு பனங்கருப்பட்டியையும் எடுத்துக் கொண்டு பதட்டமில்லாமல் வெளியே வருகிறாள். என்ன மயூரி மெதுவாக வருகிறாய், பாம்பு பாய்ந்து புடுங்கினால் அப்ப தெரியும் உனக்கு. பதறாத கனகம். அது குட்டியாய் இருந்து இங்கினதான் தெரியுது. முன்பு ஒருநாள் அதை உடும்போ பிராந்தோ கடித்து குற்றுயிரும் குலையுயிருமாய் இந்தத் தாழ்வாரத்தில் வந்து கிடந்தது நாய் குரைக்குது, பூனை சீறுது அப்போது நானும் வாமனும் ஓடிவந்து பார்த்தால் இது சுருண்டு கிடக்குது. எனக்கு அதை அடித்துக் கொல்ல மனம்வரவில்லை. வாமன் அதுக்கு ஒரு சிரட்டையில் பால் ஊத்தி வைக்க குடிச்சுது. பிறகு அதை ஒரு பெட்டியில் போட்டு நான் கொஞ்சம் சாம்பலும் மஞ்சலும் கலந்து கொட்டி விட்டன். சில நாட்களாக அதுக்கு வாமனும் நானும் தினம் ஒரு மீனும் ஒரு முட்டையும் குடுத்து வர அதுவும் தேறி வந்திட்டுது.என்ர மகன் சுந்து அதுக்கு கிட்டவும் வரமாட்டான் அவ்வளவு பயம்.பூவனம் அதைத் தொடமாட்டாள் ஆனால் பயமும் இல்லை.அது அவள் அருகாகப் போய் வரும்.எங்கட நாயும் பூனையும் கூட அதோடு சேட்டைகள் செய்வதில்லை. வாமு கண்டான் என்றால் அதோடு தூக்கி விளையாடாமல் போகமாட்டான். இந்தக் கூத்து எப்ப நடந்தது.எனக்குத் தெரியாதே. அது நீ கலியாணம் கட்டி புகுந்தவீடு போன நாட்களில் நடந்தது.. இப்ப நீ இங்கு வந்து ஒரு வருசம் இருக்குமா .....ம்.....இருக்கும். காலம் போற போக்கு....என்று சொன்ன கனகம் உனக்கு இரவில பயமில்லையா .....இல்லை. அது இரவில் வீடுகளில் தங்காது. மேலும் அதுக்கு இங்கு புழங்கும் ஆட்களையும் மிருகங்களையும் நன்றாதத தெரியும். நீ இந்த தேத்தண்ணியைக் குடி என்று குடுக்கிறாள். இவர்கள் கதைத்துக் கொண்டு தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது பாம்பும் குசினிக்குள் இருந்து வெளியேறி பின்னால் காட்டுக்குள் உள்ள புற்றுக்குப் போகிறது.........! மயில் ஆடும்........! 🦚
  4. எதற்கும் நீங்கள் எல்லோரும் கவனமாய் இருக்கவும்.......உணவுப்பொருட்கள் அவசியம்.....சேமித்து வைக்கவும்.....! 😁
  5. விடுமுறை நாட்களிலுமா .....அவை வித்தியாசமாக இருந்திருக்குமே......! 😁 உங்களின் முதற் படைப்பு சூப்பர்......!
  6. வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!
  7. எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துபவர்கள் யாராக இருந்தபோதும் அவர்கள் வரவேற்கப் படவேண்டியவர்களே.......! 👍 நன்றி விசுகர்.......!
  8. ஊர் உலகமே சேர்ந்து காறித் துப்பினாலும் விற்பனையை நிறுத்துவதில்லை........! 😂
  9. கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ ........! 😍
  10. உ மயிலம்மா. நினைத்தால் இனிக்கும் மோகனம் .....! மயிலிறகு ....... 01. அந்தக் இரும்பாலான வெளிக்கதவின் கொழுக்கியைத் தூக்கிவிட்டு வீதியில் இருந்து உள்ளே வருகின்றாள் கனகம். அவளுடன் சேர்ந்து வீட்டுக்குள் வர முன்டிய பசுமாட்டை மீண்டும் வீதியில் துரத்தி விட்டிட்டு படலையைக் கொழுவிக் கொண்டு வீட்டுக்குள் வருகிறாள். வரும்போதே மயிலம்மா மயிலம்மா என்று கூப்பிட்டுக் கொண்டு வீட்டின் பக்கவாட்டால் நடந்து குசினிக்கு வருகிறாள். அது ஒரு பழமையான பெரிய வீடு. ஆனால் வீட்டுக்குள் குசினி கிடையாது. அது மட்டும் தனியாக வீட்டின் பின் விறாந்தையில் இருந்து சிறிது தள்ளி இருக்கு. மண்சுவரும் பனைஓலைக் கூரையுமாக சுவருக்கும் கூரைக்கும் இடையில் வரிச்சுப்பிடித்த பனை மட்டைகளுடன் தனியாக இருக்கின்றது. குசினிக்கு முன்னால் ஒரு பெரிய மா மரமும் அதிலிருந்து சிறிது தூரத்தில் பெரிய குளம் ஒன்று முன்னால் உள்ள வீதியில் இருந்து வீட்டையும் கடந்து இருக்கின்றது. மழைக்காலத்தில் ஏராளமான பறவைகள் அங்கு வந்து தங்கிச் செல்வதைக் காணலாம். குசினியின் மறுபக்கத்தில் ஒரு எலுமிச்சை மரமும் அதன் கீழே மீன் இறைச்சி போன்றவை அறுத்துக் கழுவுவதற்குத் தோதாக அரிவாள் ஒன்றும் கிணறும் இருக்கின்றது. அதைத் தாண்டி சிறு பற்றைக் காடுகளும், பாம்புப் புற்றும் அடுத்து ஒரு பத்து ஏக்கர் நிலத்தில் நெல் வயல் இன்னும் சில மாதங்களில் அறுவடைக்குத் தயாராகி வருகின்றது. பனிக்காலத்தில் சமைக்கும் போது அடுப்பில் இருந்து மேல் எழும் புகை கூரைக்கு மேலால் பரந்து பனியை ஊடறுத்து செல்வதை தாய் வீட்டின் விறாந்தையில் இருந்து அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம் அப்படி ஒரு அழகு. உலை வைப்பதற்காக அடுப்பில் பானையை வைத்து தேவையான அளவு தண்ணீரை விட்டு காற்சட்டியால் மூடிவிட்டு, அடுப்புக்குள் ஈர விறகும் அதன்மேல் காய்ந்த சுள்ளிகளும் இடையிடையே பன்னாடைகளையும் செருகி தீக்குச்சியால் நெருப்பு மூட்டி ஊது குழலால் மயிலம்மா கண் எரிய ஊதிக்கொண்டிருக்கும்போது கனகத்தின் குரல் கேட்டதும் கனகம் நான் இஞ்ச இருக்கிறன் உள்ளே வா என்று குரல் குடுக்க கனகமும் உள்ளே வருகிறாள். அவளிடம் தேத்தண்ணி குடிக்கிறியே என்று கேட்டு அவள் பதிலை எதிர்பாராமல் கிளை அடுப்பில் கேத்திலையும் வைக்கிறாள். என்ன விஷயம் ஏதாவது அலுவலோ என்று மயிலம்மா கேட்க அதொன்றுமில்லை மயூரி ஆம் அவள் உண்மையான பெயர் "மயூரி"தான் கனகமும் அவளும் சிறுபிராயத்தில் இருந்தே தோழிகள் என்பதால் கனகம் அவளை மயூரி என்றுதான் அழைப்பது வழக்கம். ஆனால் மயிலம்மாவின் திமிரான நடையும் அதிகாரத் தொனியிலான பேச்சும் எடுப்பான அழகும், பின்னழகைத் தொடும் நீண்ட தோகை போன்ற அடர்த்தியான கூந்தலும் ஆண்கள் வட்டத்தில் மயிலு மயிலம்மா என்றே அழைத்துப் பிரபலமாகி விட்டிருந்தது. நான் சும்மா வந்தனான் என்று கனகம் சொல்ல, தண்ணி கொதித்ததும் மயிலம்மா உலையில் அரிசியை அரிக்கன் சட்டியில் இருந்து களைந்து போடுகிறாள். அப்போது கனகம் எங்கட வேலர் அப்பாவுக்கு சேடம் இழுக்குதாம் அநேகமாக இண்டைக்கு ஆள் முடிஞ்சிடும் என்று கதைக்கினம். அப்படியே மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து இன்று ஏகாதசி அப்படி நடந்தால் நல்லதுதான் அவரும் எவ்வளவு காலமாய் பாயும் நோயும் என்று துன்பப் படுகிறார் என்று சொல்லும் போது மேலே கூரையில் இருந்து ஓலை சரசரக்கும் சத்தம் கேட்டு இருவரும் மேலே பார்க்கின்றனர். மயில் ஆடும் .........🦚
  11. தனிக்காட்டு ராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....சீரும் சிறப்பும் பெற்று நீடூழி வாழ்க......! 💐
  12. சரவணப் பொய்கையில் நீராடி .......! 😍
  13. வணக்கம் வாத்தியார்.......! பெண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா பெண் : அவன் வாய் குழலில் அழகாக …. ஆஆஆ ஆஆஆ அமுதம் ததும்பும் இசையாக மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து பெண் : பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்து அந்த பாம்பறியும் பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்து அந்த பாம்பறியும் குழு : வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும் இசையின் பயனே இறைவன் தானே பெண் : ஆதார சுருதி அந்த அன்னை என்றேன் ஆண் : அதுகேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன் பெண் : சுதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம் ஆண் : உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம் குழு : திறந்த கதவு என்றும் மூடாது இங்கு சிறந்த இசை விருந்து குறையாது இது போல் இல்லம் எது சொல்லு தோழி .....! --- காற்றில் வரும் கீதமே---
  14. இதுதான் புகையிலைக் குடில்......! ஈழத்து வரலாறும் தொல்லியலும் · புகையிலைக் குடில் புகையிலை உலர்த்த பயன்படுகின்றது அநேகமாக யாழ்ப்பாணத்தின் கிராமப் புறங்களில் காணப்படுகிறது தற்போது வழக்கத்தில் இல்லை என நினைக்கின்றேன் விரல் விட்டு எண்ணக்கூடிய இடங்களில் இருக்கலாம் தோட்டத்தில் வெட்டிய புகையிலையை கட்டுக்கட்டாக கட்டி காய விடுவார்கள் பின்பு புகையிலை கிடங்கில் மூன்று நாட்களுக்கு போட்டு கறுப்பு பழுப்பு நிறம் வர அதை எடுத்து இத்தகைய குடிலில் ஐந்து ஐந்தாகக் கட்டி கட்டித் தூங்கவிட்டு கீழே தேங்காய் கோம்பை வைத்து பண்ணாடை கற்புரம் மூலம் நெருப்பூட்டி புகையூட்டுவார்கள் வாசலுக்கு உரச் சாக்கு ஈரச்சாக்கு போடுவார்கள் அந்த சீசனில் ஊரே புகையிலை மணம் தான் உலர்த்தி எடுத்த புகையிலை பாடம் பாடமாக அடுக்கப்பட்டு பின்பு தரகர் மூலம் சந்தைக்கு எடுத்துச் செல்லப்படும்.....!
  15. புராணங்களின் போர்க்களங்களை ரணகளமாக்கி நீதிதேவன் முன் நிறுத்தும் கட்டுரை.......நல்லா இருக்கு.....! 😂
  16. கதவு திறந்ததா காட்சி தெரிந்ததா ......... நடிப்பு : எஸ்.எஸ்.ஆர் & பத்மினி.....! 😍
  17. வணக்கம் வாத்தியார் .......! ஆண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன ஆண் : பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன ஆண் : அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில் காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார் பெண் : நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதற் பூவை யார் பறித்தார் ஆண் : காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை பெண் : இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை ஆண் : பனிதனில் குளித்த பால்மலர் காண இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன் பெண் : பசித்தவன் அமுதம் பருகிடத் தானே பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன் ஆண் : இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே பெண் : மலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே....! --- தொட தொட மலர்ந்ததென்ன ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.